image of Maha Rana Pratap
Post No. 14,705
Date uploaded in London – –30 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 6
ச. நாகராஜன்
ஹிந்துத்வத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட வழிமுறை!
மௌலானா அபுல்கலாம் ஆஜாதும் அவருக்குப் பின்னால் வந்தோரும் ஹிந்துத்வத்தை அழிக்கவும் இஸ்லாமிய கொடுமைகளை பாடபுத்தகத்திலிருந்து நீக்கவும் செய்தனர் அல்லவா, அவற்றில் இவற்றையும் சேர்க்க வேண்டும்:
வரலாற்றுக்கு மறுப்பு
முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொலை செய்தது, கட்டாய மதமாற்றம் செய்தது, ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்தது, இவற்றால், ஹிந்துக்கள் பட்ட துயரம் அனைத்தும் பாடபுத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. நடப்பு கால வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள, காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஔரங்கசீப் அழித்த சம்பவம் கூட ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் கவிதைகளை ஆதரித்தது பெரிதாக முன்னிறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பாளர்களைப் புகழ்தல்
இந்தியாவை அழிக்க நினைத்த பாபர், அலாவுதீன் கில்ஜி உள்ளிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கொடுங்கோலர்களாகக் காட்டப்படாமல் சமரச ஆட்சியாளர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். சரிதிரத்தில் மிக முக்கியமாக இடம் பெற வேண்டிய ஒன்றான அயோத்யா ராமர் கோவிலை பாபர் அழித்தது பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் அவரது பாபர்நாமா இலக்கியச் சிறப்புக்காக போற்றப்பட்டது.
ஹிந்து ஹீரோக்களை மறைத்தது
கிருஷ்ணதேவராயர், ராணா பிரதாப், சிவாஜி, லச்சித் போர்புகான் ஆகியோர் இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்த வீரர்களாவர்.முகலாய அரசர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. ஹிந்துக்கள் தங்கள் கடந்த காலத்தை பாதுகாக்க முயன்றதைச் சித்தரிக்காமல் தோல்வியான ஒன்றாகப் பார்க்கும்படியும் நினைக்கும்படியும் இது சித்தரிக்கப்பட்டது.
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தல்
ஹிந்து மதம் மற்றும் பண்பாடானது பிற்போக்கானது என்று கல்வித் துறை அமைப்பு சித்தரித்தது. அதனுடைய ஆழ்ந்த தத்துவங்களை ஒதுக்கி விட்டு ஜாதி, மூடநம்பிக்கை ஆகியவற்றைப் பெரிதாகக் காட்டியது.
இஸ்லாமியப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான சித்தரிப்புக்கு முன்னர் இது ஒரு தாழ்வு மனப்பான்மையை ஹிந்துக்களிடையே தோற்றுவித்தது.
கல்வி அமைப்பைக் கட்டுக்குள் கொண்டு வருதல்
குறிப்பாக, மௌலானா அபுல் கலாம் ஆஜாத் NCERT , இந்திய பண்பாடு மற்றும் சரித்திர ஆய்வு ஆகிய நிறுவனங்களில் உள்ள ஹிந்து விரோதப் போக்கு கொண்டவர்களுடன் கூட்டாக இணைந்த வரலாற்று ஆசிரியர்கள் பணிபுரிந்த மத்திய பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் ஒருங்கு கூட்டினார்.
பல தலைமுறை மாணவர்கள், தவறாகச் சித்தரிக்கப்பட்ட வரலாற்றை உள்வாங்கும்படி இந்த நிறுவனங்கள் பாடபுத்தகங்களைத் தயாரித்தன!
தொடரும்,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025