காளிதாசன் காவியங்களில் சிவபெருமான்- 3 (Post No.14,808)

Written by London Swaminathan

Post No. 14,808

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART THREE OF MY RESEARCH ARTICLE

காளிதாசன் பயன்படுத்திய அதே பெயர்களை சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியதை காண்போம்.

சங்கப் புலவர்களில் முக்கியமானவர்கள் அம்மூவன்உருத்திரங்கண்ணனார் ஆகிய இருவரர் ஆவர் . இவர்களுடைய பெயர்கள் சிவனின் பெயர்கள் ;அங்கயற்கண்ணி என்றால் அழகிய மீன்போன்ற கண்களை  உடையவள் என்று பொருள் அதே போல அம்மூவன் என்றால் அழகிய மூன்று கண்ணுடையோன் என்பது பொருள் இது  சிவனின் பெயர்!

MR RUDRAKSHA

ருத்ர- Rudra +கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்க நூல்கள் பெரும்பாணாற்றுப்படை  மற்றும் பட்டினப்பாலை ஆகியவற்றை  எழுதிய பிராமணப் புலவர் ஆவார் .

உமா அக்ஷ மாலையைக் கையில் அணிந்திருந்த செய்தி குமார சம்பவத்தில் 5-11 வருகிறது

   இதே போல சங்கப்புலவர் காமக்கண்ணியார் என்பது காமாக்ஷி என்பதன் தமிழ் வடிவம் என்பதை காஞ்சி மஹா சுவாமிகளும் உ.வே சாமிநாத அய்யரும் உறுதிப்படுத்தியுள்ளனர் . அங்கும் காம + அக்ஷி   வருவதைக் கவனிக்க வேண்டும் ஆக, சிவன் அவனது பெயர்களைக் கண்டுவிட்டாம் 

மதுரைக் கவுண்டின்ய கோத்ர கவுணியன் பூதனார்  உள்பட பல பெயர்கள் பூத என்ற சொல்லுடன் இருக்கின்னறன. இவர்கள் அனைவரும் சைவர்கள் ; சிவன் பெயரை உடையவர்கள்

பூத  நாதன் ,பெரும் பூதன் பூதன் இளநாகன் பூதப்பாண்டியன் ,கருவூர்  பூதன் சாத்தனார்    த்து  பூதன்  தேவன் வெண்  பூதன் சேந்தன் பூதன்  ,குன்றம் பூதநார்  ; பூத என்பது சிவனை வழிபடுவோருக்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

சங்க இலக்கிய நூல்களில் சிவன் பற்றி வரும் பாடல்களும் பாடியோரும்

பரணர் -அகம் 181 – முக்கட் செல்வன்; புறம்198;

புறம் — காரி கிழார் – முக்கட் செல்வர் நகர் வலம்

புறம் –  மஹாதேவன்

புறம் 55 — இளநாகன் – முப்புரம் எரித்தவன் –

புறம் 56 – நக்கீரன்– சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமன் கொடிகள் வாகனங்கள்

புறம் 91 – அவ்வையார்

அவ்வையார் பாடல்

பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

புறம் 198 – பேரி சாத்தனார் –ஆல் அமர் கடவுள் / தட்சிணாமூர்த்தி;  

புறம் 219 – பூதநாதனார்

புறம் 259 – பெரும்பூதன்

புறம்  276 – பூதன் இளநாகன்

ஐங்குறுநூறு 181 – சிவனும் நால்வேதமும்

கலித்தொகையில் எண்ணற்ற பாடல்களில் ராவணன் அடி  வாங்கியது
உமா தேவி
, ரிஷபக் கொடி முதலியன பாடப்பட்டுள்ளன.

முருகு256; சிறு.97  முதலிய நூல்களிலும் சிவன் பாடப்படுகிறார் ; இவை அனைத்தையும் ஒரே புலவரிடத்தில் காணவேண்டுமென்றால் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன் நூல்களில் மட்டுமே காண முடியும் ; சிவ புராணம் மற்றும் சைவம் சம்பந்தமான புராணங்களை அறிஞர்கள் குப்தர் காலத்துக்கும் பின்னுக்கு வைக்கின்றனர் . காளிதாசன் சொன்ன விஷயங்கள் குப்தர் கால கல்வெட்டுகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் காணப்படுவதால் காளிதாசன் அவைகளுக்கு முந்தியவன் என்பது கலை வரலாற்று மாபெரும் அறிஞர் சிவராம மூர்த்தியின் கருத்து. பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட காளிதாசனின் அத்தனை நூல்களையும் தற்கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சந்திரா ராஜனும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னரே வைத்து அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

e)      சூல ப்ருத் ,சூலின்  (Trident bearer)

காளி : Ragu II 38, Kuma VII 40, III 57,IV 94 Mega 15, 19,

சங்கம்  : அகம்  1 (பாரதம்  பாடிய  மஹாதேவன் )

துர்கா தேவியை சூலி என்ற சொல்லால் குறுந்தொகை 218 குறிப்பிடுகிறது .சிவனுக்கும் துர்க்கைக்கு மட்டுமே சூலம் உண்டு

f)       Vrushanga (On the Bull mount, Bull flag)

Kali: Kuma III 23,14,62, VII 29,VIII 20, Ragu II 35, 36

Cankam : புறம் 56 ( நக்கீரன் ,  பிராமண  புலவர் )

g)      பார்வதி  பரமேஸ்வரன்

h)      Kali: Ragu I-1 = சங்கம்  அகம்  1, புறம்  166

i)        Purasasana

Kali :Kuma VII 30= புறம்  55 (மருதம்  இளநாகன் )

Tripura Thaganm (one who burnt three forts)

Kali :Mega 58= சங்கம் புறம்  55, பரி  5-2,கலி  2-1 to 8, 38-1,கலி  1

j)        Ardhanari (half siva half shakthi) அர்த்த நாரீ

Ragu 1, Kum VII 28 =Cankam : ‘மாதொரு பாதியான்  ’ (ஐங்குறுநூறு   கடவுள் வாழ்த்து r)

k)      Maheswaran (Great Lord)

Kali Ragu III 49= சங்கம்  புறம்  166, கலி  1

l)        ருத்ர  (angry towards bad)

Ragu II 54,Kuma II 26,III 76,Malavi I-4

சங்கம்  புறம்  56 (நக்கீரன் )

XXX

NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- பரிபாடல் 9

மணிமிடற்றண்ணற்கு

xxx

TRAYAMBAKA த்ரயம்பக-  முக்கண்ணான்.

xxx

ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon

xxx

MR RED

Lord Siva is RED like dusk

வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து

உரு உடன் இயைந்த தோற்றம் போல,

அந்தி (RED COLOUR) வானமொடு கடல் அணி கொளாஅ,

வந்த மாலை பெயரின், மற்று இவள்

அகநானூறு  360

The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)

அகநானுறு  கடவுள் வாழ்த்தில்  செவ்வான் அன்ன  மேனி– body like dusky red sky

புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை

****

பிறைநுதல்

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,

கலித்தொகை 104-11

***

ARUDRA –STAR GOD–

Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20

பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150

In Indian astronomy, the star Betelgeuse is known as Ardra (आर्द्रा) or Thiruvathirai. It is a prominent red supergiant star in the constellation Orion. Ardra is also the name of the sixth nakshatra (lunar mansion) in Hindu astrology, which corresponds to the region of the sky encompassing Betelgeuse

****

சப்தரிஷி URSA MAJOR CONSTELLATION

ஏழு ரிஷிகளை பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள் . அவர்கள் சொல்லும் அதே வரிசையில்  பாணினி  தனது சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார் . அந்த எழுவர்தான் சிவனிடம் உமாவின் சார்பில் தூது சென்றதாக குமார சமிபத்தில் காளிதாசன் குறிப்பிடுகிறான் ; அந்த எழுவரையும் தமிழர்கள் கும்பிடுவது நற்றிணைப் பாடலில் 231 உள்ளது

கைதொழு மரபின் எழுமீன் போலப்  — பாடியவர் இளநாகனார்

ஐந்தாவது பரிபாடலில் சப்த ரிஷிகள் மற்றும் வர்களுடைய மனைவிமார் பற்றிய குறிப்பும் சிவபெருமான் முப்புரங்களை எரித்த செய்தியும் வருகிறது.

SAPTA RISHI — URSA MAJOR– GREAT BEAR– DIPPER CONSTELLATION

வளர்க காளிதாசன் புகழ் ! வாழ்க சங்கத் தமிழ்ப் புலவர்கள்

–SUBHAM—

TAGS- சப்தரிஷிகாளிதாசன் காவியங்களில், சிவபெருமான்- PART 3

Leave a comment

Leave a comment