.jpg)
.jpg)
Post No. 15,200
Date uploaded in London – 19 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபெருமானின் இரண்டு வடிவங்கள்: அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன்
.jpg)
Ardhanarishwara:
Long before feminist movements arose in the West to advocate for equality, Hindu philosophy had already acknowledged that man and woman share a deeply interdependent relationship, each fulfilling a vital role. Just as a balance scale is steady only when both sides are equal in weight, life attains balance when both genders enjoy equal respect and rights.
This truth was embodied by none other than Mahadev Himself when He manifested as Ardhanarishwara — one half Shiva and the other Devi Parvati (or Adi Shakti). Yet, this form represents far more than external gender equality. It teaches the importance of harmonizing the masculine and feminine energies within ourselves — not in the physical sense, but as spiritual and psychological principles that dwell in every being.
***
Harihar in Karnataka , Sankaranarayanan in Tamil Nadu
The god Harihareshwara is a combination of the gods Shiva and Vishnu. There is a story behind the avatar of this god. In ancient days this place was known as “Guharanya”, a dense jungle and habitat of a demon Guhasura. He had a gift that no human or Rakshasa or god can kill him. And he started harassing people around this place. Then Vishnu and Shiva came together in a new avatara called Hari – Hara (Harihara) – and killed demon Guhasura
Harihara is situated on the banks of the Tungabhadra River, 275 kilometres North of Bengaluru. Harihar and Davangere (14 km away) are referred as “twin cities”.
***
Tiruupaarkatal near Kanchipuram
Similar stories are behind two more famous temples.
Full name of Sankarankoil in Tirunelveli region is Sankara Narayanan Koil, where Shiva appeared as Sankara+Narayanan at the request of his wife Parvati.
In Tirupparkatal, we have slightly a different story. An ardent Vishnu devotee had a vow of having his food only after visiting a Vishnu temple every day. When he came to Tiruupaarkatal, he could not see any Vishnu temple. When he was starving and praying, an old man came and told that there was a Vishnu temple. When he took him into a Shiva temple, despite his protest, Lord Shiva appeared as Sankara and Narayana .
In many Tevara and Divya Prabantha poems we see verses in praise of this Hari Hara form. Several centuries ago, there was a conflict between Saivites and Vaishnavites and God himself settled that conflict by appearing in this combined form.
***
சிவபெருமானுடைய வடிவங்கள்
.jpg)
.jpg)
சிவபுராணத்தில் சிவனுக்கு 64 வடிவங்கள் கூறப்படுகின்றன அவற்றின் உருவமற்ற வழிபாட்டை குறிக்கும் சிவலிங்கத்தை காண்கிறோம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தையும் காண்கிறோம் மே லை உலகத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் கேட்டு இயக்கம் நடத்துவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களும் பெண்களும் சரி என்ற கருத்தினை விளக்கும் உருவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும் இதில் சிவனையும் சக்தியையும் பாதி பாதியாக காண்கின்றோம் ஆண்களோடு பெண்களும் சரி நிக்ர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே இன்று பாரதியார் பாடினார். அந்த பாட்டிற்கு காரணமே இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான்! சிவன் இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவன் இல்லை. இரண்டு சக்தி களும் கூடினால் தான் உலகம் நடைபெறும் என்ற பெரிய கருத்தினை இந்த வடிவம் காட்டுகிறது.
இதையே இன்னொரு விதமாகச் சொல்வது சங்கர நாராயணன் வடிவம் ஆகும்.
***
சங்கர நாராயணன் , ஹரிஹரன்
அர்த்த நாரீஸ்வரனில் பாதி சக்தி; அதே போல சங்கர நாராயணன் என்றா சிவனின் வடிவத்தில் பாதி நாராயணன் ; இதன் தத்துவம் என்னெவென்றால் சிவா சக்தி வடிவமே சங்கர நாராயணன்
நாராயணன்= சக்தி
சிவன் என்பது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல்
சக்தி என்பது செயல்படும்/ பயன்படும் ஆற்றல்.
****
Tirupparkadal story as told by Sri Kanchi Paramacharya (1894-1994)
சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:
திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.
அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.
“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.
“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.
கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்
வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.
கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!
திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.
****
சங்கரன் கோவில் ,கர்நாடகத்தில் உள்ள ஹரிஹர் (ஹரிஹரன்) நகராக கோவில்களிலும் கதைகள் உண்டு.
சங்கரன்கோவிலில் உமையம்மையின் நீண்ட தவத்துக்கு பின்னர் சிவபெருமானே ஹரி ஹரன் என்ற உருவத்தில் தோன்றினார் என்பது ஸ்தல புராணம்
ஹரிஹர் என்னுமிடத்தில் ஒரு அசுரன் மனிதனாலும் தெய்வத்தாலும் அசுரனாலும் சாகாமல் இருக்க வரம் பெற்றான் அவனது வரத்துக்கு அப்பாற்பட்டதே அரனும் அரியும் ஒன்றுபட்ட வடிவம். இந்த ஹரிஹர உருவத்தினால் குஹ்யாசுரன் என்ற அசு சுரன் கொல்லப்பட்டான்
–subham—
Tags– சங்கரன் கோவில், ஹரிஹர் , அர்த்த நாரீஸ்வரன், அரன், அரி, திருப்பாற்கடல் Harihar, Sankara Narayanan , Tirupparkatal, Ardhanareesvar, Combined form Siva Sakti, Hinduism through 500 Pictures in Tamil and English-27 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 27