Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 7- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் தேசீயச் செய்திகள்
அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி
இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
***
காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு விழா துவக்கம்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.. மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இதை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ‘ தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
துவக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக கவர்னர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியை கற்க உள்ளனர்.
***
வேத உலகில் சாதனை படைத்த இளைஞர்:
வேதமூர்த்தி தேவவ்ரத மகேஷ் ரேகே 19 வயது இளைஞர், காசியில் சுக்ல யஜுர் வேதத்தை தண்டக்ரம முறையில் பாராயணம் செய்து சாதனை புரிந்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கினார் ;பிரதமர் மோடியும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பாராட்டினார் .
தண்டக்ரம முறை பாராயணம் என்பது கடினமான முறை.
தண்டக்ரம பாராயணத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான ஸ்லோகங்களைத் நினைவில் கொண்டு பிழையின்றி தொடர்ந்து 50 நாள்களுக்கு மேல் முழுவதையும் சொல்லி முடித்துள்ளார்.
இது மாபெரும் சாதனையென்று வேதமறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். தெய்வீக திறமை, உண்மையான தபஸ், மற்றும் நமது குரு பரம்பரையின் காலத்தால் அழியாத வலிமைக்கு இது ஒரு சான்று. என்று அவர்கள் பாராட்டினர்.
***
Hindu Front Leader
Ram in Goa
19 year old Vedic Scholar
கோவிலில் தங்கப் பல்லியை திருட முயற்சி; ஐகோர்ட்டில் வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான தங்கப்பல்லி சிற்பத்தின் தங்கக் கவசத்தை திருட நடந்த முயற்சி தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில், தங்கப்பல்லி, தங்கச்சந்திரன், தங்கச்சூரியன், வெள்ளிப்பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
கோவிலில் பல நுாற்றாண்டுகளாக உள்ள இந்த சிற்பங்களின் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள், சிலைகளை கோவில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருட முயற்சித்துள்ளனர். ஏற்கனவே உள்ள சிலைகளை அகற்றிவிட்டு, அதே போன்ற சிலைகளை வைக்கவும் முயன்றுள்ளனர்.
Golden Lizard in Kanchii Temple Stolen
எவ்வித அனுமதியும் பெறாமல், இதுபோல சிலைகளை மாற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது. பழங்கால பொருட்களை, உரிய அனுமதியின்றி அகற்ற அறநிலையத்துறை சட்டம் தடை விதிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, “மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.
‘ ‘விசாரணையில், சிலை திருட்டு ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது. அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘முழு விசாரணை நடத்தாமல் புகாரை முடித்து வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.
அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, சிலைகளை மாற்றி உள்ளனர்’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
****
திருக்கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி புதன்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது . தீபத்திற்கான 300 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் 1500 மீட்டர் திரி,4500 கிலோ நெய் ஆகியவையும் மலை மீது முதல் நாளன்றே கொண்டு செல்லப்பட்டது.
.அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உண்டு. இவர்கள் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக இந்த புனிதமான பணியை செய்து வருகின்றனர். பர்வத ராஜகுலத்தினர் பார்வதி தேவி அவதரித்த மரபில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்பவர்கள். ஆகையால், இவர்கள் மீனவர்கள் என்றும் செம்படவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
****
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; டிசம்பர்.9 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
***
தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்த அரசு இப்படி செயல்படுகிறது.
மதசார்பற்ற அரசு என்று கூறுபவர்கள், தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தை எல்லாம் கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
*****
சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க தடை
சபரிமலையில் போட்டோ எடுக்கவும், அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்லவும் தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
***
இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.
வழக்கமான சோதனை எதுவும் இல்லாமல் விமானத்துக்குள் எடுத்து செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஜன. 20-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
****
பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள், குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: அதிர்ச்சி தரும் செய்தி
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். எனக்கூறினார்.
ரமேஷ்குமார் வன்க்வானி என்ற எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது. இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும். என்றார்.
கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி கூறுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன. உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்றார்.
***
சென்ற வாரச் செய்திகள்
சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலிபரப்பு நடக்காததால் அந்த வாரத்தில் நடந்த மூன்று முக்கிய விழாக்களை சுருக்கமாகக் காண்போம்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார்
22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.
****
குருக்ஷேத்ரத்தில் சங்கு சின்னம் திறப்பு
பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. அதே போல கிருஷ்ண பரமாத்மாவும் கையில் சங்கு வைத்திருப்பார் ; கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’
முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவுப்படி சிரச்சேதம் செய்யப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆம் ஆண்டு உயிா்த் தியாக நினைவு தினத்தையொட்டி, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
அப்போது மஹாபாரத வளாகத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்குச் சின்னதத்தைத் திறந்து வைத்தார் அதன் எடை சுமார் 5 டன். அது ஐந்து மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது;
மஹாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் புதிய வளாகம் குருக்ஷேத்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
***
77அடி வெண்கல ராமர் சிலை திறப்பு
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் 14 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-12-2025 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
மின் உலாவிய சடையினர், விடையினர்,
மிளிர்தரும் அரவோடும்
பன் உலாவிய மறை ஒலி நாவினர்,
கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர்,,
புகழ் மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை
ஓடிட, வீடு ஆமே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான கீழ் வேளூர் திருத்தலமாகும். இத்தலம் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வேளூர் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன. கிழக்கே இந்தத் தலம் அமைந்துள்ளதால், “கீழ் வேளூர்” என்ற பெயரைப் பெற்றது.
, இறைவன் : கேடிலியப்பர், அக்ஷயலிங்க ஸ்வாமி
அம்மன் – வனமுலை அம்மன், சுந்தர குஜாம்பாள்
தல விருக்ஷம் – பத்ரி, இலந்தை
தீர்த்தம் – சரவண பொய்கை, அக்னி தீர்த்தம்,, சேஷ தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம், சந்திர மற்றும் குபேர தீர்த்தங்கள்
புராதனமான இந்தக் கோவிலைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
படைப்பு தெய்வமான பிரம்மா தனது படைப்பாற்றல் குறைவுபட்டதால் இங்கு வடக்கு கோபுர வாயிலின் எதிரே பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி அக்ஷயலிங்க ஸ்வாமியை வேண்டி வழிபட்டார். உடனே அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் வந்தது.
இங்கு அமைந்துள்ள திருமஞ்சனக் குளம் தோஷ நிவர்த்தியை ஏற்படுத்தும் குளமாகும். நிருதி மூலையில் உள்ள இந்தக் குளத்தில் நீராடி இந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தீர்த்தம் தெற்கு மூலையில் உள்ளது. இதில் நீராடினால் சரும வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இன்னொரு புராண வரலாறும் உண்டு.
சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர் தனக்கு கொலையினால் ஏற்பட்ட பாவம் போவதற்காக சிவ பிரானை வழிபட்டார். கொலைபாதகங்கள் வீரஹத்தி என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தொல்லையிலிருந்து விடுபட சிவபிரான் முருகனை நோக்கி “நீ பத்ரிவனம் எனப்படும் கீழ்வேளூர் சென்று எம்மை வழிபடுக” என்று அருள் பாலித்தார். அப்படியே முருகபிரானும் கீழ்வேளூர் வந்தார். கோவிலின் முன்னால் தன் வேலாயுதத்தால் குத்த சரவண தீர்த்தம் என்ற குளம் உருவானது. அதில் நீராடி கேடிலியப்பர் என்னும் அக்ஷயலிங்க ஸ்வாமியை அவர் வழிபடலானார். ஆனால் அப்போதும் வீரஹத்திகள் அவரைச் சூழ்ந்து தொல்லை கொடுத்தன. அன்னை பராசக்தி முருகன் படும் கஷ்டத்தைக் கண்டு வீர ஹத்திகளின் மீது கோபம் கொண்டு அனைவரும் அஞ்சும்படியான கோர ரூபத்தை எடுத்தாள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுடன் ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து இடங்களிலும் வட்டமாகப் பரவி நின்றாள். அஞ்சுவட்டத்து அம்மன் ஆகி முருகனின் தவத்திற்கு
இடையூறு ஏற்படாத வண்ணம் காத்தாள்.
பார்வதியின் கோர உருவத்தைக் கண்ட வீர ஹத்திகள் அஞ்சி ஓடின. தவம் முற்றுப் பெறவே முருகபிரான் முன்னர் சிவன் காட்சி அளித்து ஆசி வழங்கினார். அவரது நெற்றிக் கண் சுடரினால் வீரஹத்திகள் அழிந்தனர்.
நிலையாக இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரிவாயாக என்ற சிவபிரானின் வாக்கை ஏற்று அம்மனும் அஞ்சுவட்டத்து அம்மன் என்ற பெயருடன் இங்கு நிலை பெற்று அனைவருக்கும் அருள்பாலிக்கலானாள்.
இந்த தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.
சிங்கத்வஜன் என்னும் ஒரு அரசன் காட்டில் வேட்டையாடி களைப்படைந்தான். தாகம் தணிப்பதற்காக ஒரு முனிவரது ஆசிரம் சென்று ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வருமாறு கத்தினான். தியானத்தில் இருந்த முனிவர் இதனால் கோபம் கொண்டு, “கழுதை போலக் கத்தும் நீ ஒரு கழுதை ஆகக் கடவது” என்று சபிக்க அவன் கழுதை ஆனான்.
இன்னொரு அரசன் விந்திய மலையில் தவம் புரிந்த அகத்திய முனிவரை தரிசனம் செய்யச் சென்றோரை துன்புறுத்தி வந்தான். இதனால் அவனை அகத்தியர் கழுதையாகும் படி சபித்தார்.
இந்த இரண்டு கழுதைகளையும் வணிகன் ஒருவன் துணி மூட்டைகளைச் சுமக்கப் பயன்படுத்தலானான். ஒரு நாள் இரு கழுதைகளும் அக்ஷயலிங்க கோவிலில் இருந்த பிரம்மதீர்த்தத்தில் நீரைப் பருகின. உடனே அக்ஷயலிங்க ஸ்வாமி அருளால் அவைகளுக்கு முந்தைய ஜன்மம் நினைவுக்கு வர அவைகள் மனிதர் பேசும் மொழியில் பேச ஆரம்பித்தன. இவை பேசுவதைக் கேட்ட வணிகன் அவற்றை விட்டு ஓடி விட்டான். இரு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. ஆடி மாதம் பௌர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தில் நீர் அருந்தினால் நீங்கள் மீண்டும் மனித உருவை அடைவீர்கள் என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அதன் படியே அவை நீர் அருந்த மனித வடிவத்தைப் பெற்றன.
இன்னொரு வரலாற்றின் படி மார்க்கண்டேயர் தம் நித்ய பூஜையைத் வழக்கம் போலத் தொடங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து கடல் பொங்கி அண்டங்கள் அழிய ஆரம்பித்தன. “என்றும் அழியாத தென் இலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாயாக” என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அவரும் உடனே அக்ஷயலிங்க ஸ்வாமியை வழிபட கீழ் வேளூர் வந்தார்; வழிபட்டார். ஆகவே உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலம் கீழ்வேளூர் என்பது விளங்குகிறது.
மூலவர் அக்ஷயலிங்க ஸ்வாமி என்ற கேடிலியப்பர் ஸ்வயம்பு மூர்த்தி. அம்மன் வனமுலை அம்மன் என்றும் சுந்தர குஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. சந்நிதி கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்கள் இங்கு உள்ளன. உள் பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, அகஸ்தியர், விஸ்வநாதர், கைலாஸநாதர், பிரஹதீஸ்வரர். அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
முருகப் பெருமானுக்கும் குபேரனுக்கும் தனித்தனியாக மிகப் பெரிய சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்தைக் கொண்டுள்ளார்.
இங்குள்ள நடராஜர் இடது பாதத்தை ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்திய முனிவருக்குக் காட்சி அளித்து அருள் பாலித்தார்.
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்று.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடி அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கேடிலியப்பரும் வனமுலை அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
மூளைக்கும் பிரார்த்தனைக்கும் உள்ள தொடர்பை நிரூபித்து பிரசாரம் செய்யும் அதிசய டாக்டர் ஆர்லீன் டெய்லர்!
ச.நாகராஜன்
“More Things Are Wrought by Prayer Than This World Dreams Of”
இந்த உலகம் கனவில் காண்பதை விட அதிகமதிகம் பிரார்த்தனையால்பெறப்படுகிறது – கவிஞர் டெனிஸன்
மூளைக்கும் பிரார்த்தனைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று தனது லாபரட்டரி சோதனைகளால் உறுதிப் படுத்தியிருக்கிறார் ஒரு மூளை இயல் நிபுணர் என்பதால் உலகம் சற்றுப் பரபரப்பை அடைந்திருக்கிறது.
ஆர்லீன் டெய்லர் (Arlene R. Taylor, PhD) என்ற அதிசயப் பெண்மணி ஒரு மூளை இயல் நிபுணர், எழுத்தாளர். ஆற்றல் மிகுந்த பேச்சாளர்.
இவரை உலகம் இப்போது ‘ப்ரெய்ன் குரு’ என்று பாராட்டுகிறது.
“நாம் பிரார்த்தனை செய்யும் போது மூளை மின்னலைத் துடிப்புகளை வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் கடவுள் இருப்பதை நான் நம்புகிறேன். அவரிடம் மிகப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று இருக்கிறது. பெரிய திரையும் இருக்கிறது. அவரால் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்க முடிகிறது. அவரால் என்னுடன் தொடர்பு கொள்ளவும் முடிகிறது” என்று கூறும் டெய்லர் மேலும் இது பற்றி விளக்குகிறார் இப்படி:
Arlene R. Taylor, PhD
“இவை எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்ன சிகிச்சை அல்லது மருந்துகளைப் பெறுகிறார் என்று அறிய முடியாதபடி செய்யும் ப்ளைண்ட் ஸ்டடி (BLIND STUDY) ஆகும். இதில் எலக்ட்ரோடுகளை உங்கள் தலையில் பொருத்தி ஆர்லாண்டோவில் உள்ள மருத்துவ மனையிலோ அல்லது வேறெங்கோ இருக்கும் ஒருவருக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். பிரக்ஞையற்று இருக்கும் அந்த நோயாளிக்கும் இது தெரியாது. உங்களுக்கும் நடப்பது என்ன என்று தெரியாது. ஆனால் பிரார்த்தனையைச் செய்ய ஆரம்பித்த அந்தக் கணமே அவருடைய மூளையில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்படுகிறது.
இது ஒரு மர்மமான சக்தி. இது தான் பிரார்த்தனையின் வலிமை.” என்கிறார் டெய்லர்.
ஒரு நாளைக்கு 12 நிமிடங்கள் வழக்கமாக விடாது பிரார்த்தனை செய்யும் ஒருவர் அல்ஜெமிர் வியாதியிலிருந்து மீண்டு வர முடியும் என்பது டெய்லரின் சோதனை முடிவுகளால் தெரிய வருகிறது. இது இப்போது அறிவியலால் ஆமோதிக்கப்பட்டு விட்டது.
உலகெங்கும் டெய்லரின் புத்தகங்கள் அமோக விற்பனையாகி சக்கைப் போடு போடுகின்றன.
இவர் சிறந்த பேச்சாளர் என்பதால் மீண்டும் மீண்டும் இவரைப் பேச அழைக்கின்றனர்.
மூளை என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்திற்குமான வன்பொருள் (Hardware); மனம் என்பது நுண்மையான மென்பொருள் (Software). நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், பார்வைகள், உணர்ச்சிகள் ஆகிய அனைத்தும் வன்பொருளில் ஓடுகிறதுஎன்று கணினி பாஷையில் விளக்குகிறார் டெய்லர்.
மூளையின் எச்சரிக்கை அமைப்பான அமிக்தலாவை பிரார்த்தனை அமைதிப்படுத்துவதால் மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவை பிரார்த்தனை செய்வோரைப் பாதிப்பதில்லை.
அது மட்டுமல்ல, நியூரோபிளாஸ்டிசிடி என்ற மூளையின் அதிசயிக்கத்தக்க தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் சக்தியை பிரார்த்தனை தருகிறது.
ஒருமுனைப்பட்ட கவனத்துடன் தீவிர தியானமானது, ப்ரீ ஃப்ரண்டல் கார்டெக்ஸ் என்னும் மூளைப் பகுதியை ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கிறது. இதைத் தொடர்ந்து ஊக்குவிப்பதால் அதிக கவனமும், அன்றாட வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடும் உண்டாகிறாது.
பிரார்த்தனை இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. வளர்சிதை மாற்றத்தை மெதுவாக ஆக்கி அமைதியையும் அதிகத் திறனையும் தருகிறது. வலி இருந்தால் அதைப் போக்குகிறது.
அமிக்தலா செயல்படுவதை மெதுவாக ஆக்குவதால் பயம், மன அழுத்தம் ஏற்படுவதில்லை.
எதிர்மறை எண்ணங்கள், மனச் சோர்வு ஆகியவை குறைகிறது.
நன்றி உணர்வு, இரக்கம் ஆகியவை மேம்படுகிறது.
பக்கம் பக்கமாக பிரார்த்தனையின் சக்தியை 32 புத்தகங்களில் டெய்லர் விளக்குகையில் நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.
அவரது உரைகள் பலவற்றை யூடியூபிலும் கேட்கலாம்.
அறிவியல் பூர்வமாக BLIND STUDY சோதனைகள் மூலம் பிரார்த்தனையின் பலன்கள் விளக்கப்படுவதால் இந்த பிரார்த்தனை டாக்டரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DISCUSSION ON DR JEYAMOHAN’S WORKS IN LONDON
London Swaminathan adorning Dr Jeyamohan with a shawl
Panelists
Welcome address by Prabhu
Giridharan
Krivisha
Dhanraj
Rajesh
Aditya
Ajeendran was adorned with a shawl
Ananya
Famous Tamil writer Dr Jeyamohan has visited Britain to attend many meetings and seminars organised to felicitate him and to discuss his translated stories and novels. His books have been translated into many South Indian languages. Recently he has been awarded an honorary doctorate for his contribution in literature.
The first meeting was held in London on sixth December 2025 at October Gallery in Central London. Over 100 people attended the meeting. His translated works in Malayalam, Telugu, and Kannada were taken for discussion. a panel of scholars including Dr Prameela, Pawan and Giridharan took part in the discussion. The panel discussion was coordinated by Dhanraj. Rajesh compered the whole programme. Meeting began with a prayer by little girl Krivisha.
Meeting was organised by Giridharan Rajagopalan, Dhanraj, Sivakumar, Muthu, Prabhu, Rajesh and many other volunteers.
Earlier young readers Aditya and Ananya analysed his works as found in translation. London Swaminathan former BBC broadcaster, former University Tamil Tutor and author of 154 books was invited to adorn Dr Jeyamohan with a shawl. He was presented a statue of Goddess Sarasvati Devi.
Following the panel discussion Dr Jeyamohan answered the questions from the audience. He dealt with problems in translations, and selling English books in Tamil Nadu. He felt that the South Indian authors are not given due importance in the western world. Their works are seldom translated. To redress such grievances, he is planning to bring together all the famous writers from South India. He said that two big conferences are planned for 2026 and 2027. First such conference of South Indian writers will be held in America next year and another conference in London in 2027. He also said translations of South Indian fiction will be done with the consultation of English writers to make it more appealing to the westerners. Already annual Vishnupuram meetings invite authors from Kannada, Telugu and Malayalam languages.
Prabhu welcomed the participants and Giridharan proposed a vote of thanks.
Towards the end of the meeting, the author was adorned with more shawls on behalf of many South Indian and Sri Lankan organisations based in London.
Ajithan, Dr Jayamohan’s son, who is also an author was felicitated. Both will be attending many more meetings in the north of England and Scotland.
–subham—
Tags – Tamil writer Jeyamohan, Panel discussion, Translated works, Giridharan., London meeting, 6 12 2025
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாயில் புல்லைத் திணியுங்கள்- பெரியாழ்வார் கோபம்
பெரியாழ்வார் பாசுரங்களில் இரண்டு அருமையான காட்சிகள் வருகின்றன; ஒன்று கோபக் காட்சி; இன்னும் ஒன்று கேலி, கிண்டல், பகடி செய்யும் காட்சி. அதை முதலில் காண்போம்.
இறக்கும் தருணம் வந்து விட்டது அப்போது யாரும் நாராயணா , ராமா, கிருஷ்ணா என்று உரக்கச் சொல்லி நமக்கு நல் வழி காட்ட மாட்டார்கள் . அல்லது சாகாதீர்கள் இந்த மருந்தைக் குடியுங்கள் அல்லது இதோ ஆக்சிஜன் சிலிண்டர்; இதிலிருந்து வரும் ஆக்சிஜனை சுவாசியுங்கள் என்றும் சொல்ல மாட்டார்கள் . அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா ?
“ஐயா; உயில் எங்கே இருக்கிறது? அல்லது இந்த வெற்றுத்தாளில் கையெழுத்துப் போடுங்கள். எங்காவது ‘லாக்க’ரில் பணம் வைத்திருந்தால் அந்த பாஸ்வோர்டினைச் சொல்லுங்கள் எங்கேயாவது தங்கம், வைரத்தைப் புதைத்து வைத்தால் சொல்லுங்கள்” என்றுதான் கேட்பார்கள்
சொல்லு சொல்லு என்று கத்துவார்கள்; இதை அழகாக்கப்படுகிறார் பெரியாழ்வார்
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லென்று, சுற்றும் இருந்து,
* ஆர்வினாவிலும் வாய் திறவாதே
அந்தக் காலம் அடைவதன் முன்னம்,
* மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி,
* ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
தமிழன் புதைத்துக் கெட்டான் என்பது பழமொழி; ஆகையால் உறவினர்கள் சொல்கிறார்கள்;
“மறைவிடத்தில் பொருளை சேமித்து வைத்திருந்தால் சொல்லுங்கள்; சொல்லுங்கள் என்று பல முறை கூச்சல் இடுவார்கள் அவர் வாயே திறக்க மாட்டார்; (அதாவது வாய்திறக்கும் நிலையில் இல்லை!) அவ்வாறு இறுதிக்காலத்தை அடைவதற்கு முன்னரே உள்ளத்தைக் கோவில் ஆக்குங்கள்; அதில் மாதவன் என்னும் சிலையை நிறுவுங்கள் ; அந்த தெய்வத்தின் மீது ஆர்வம் என்னும் மலரினைத் தூவி பூஜை செய்யுங்கள்; (அதாவது மானசீக பூஜை).இப்படிச் செய்தால் எம தூதர்களிடமிருந்து தப்பிக்கலாம்”.
பின்னர் எமதூதர்களைக் கண்டவுடன் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் பெரியாழ்வார் வருணிக்கிறார் அதற்கு முன்பாக உள்ளக் கோவில் பற்றி காண்போம்.
உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே
திருமந்திரம், பாடல் எண் 1823
பொருள்:-
மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் கருணைஅயை வாரி வழங்கும் கள்ளல்- கருணைக் கடல். சமய நூல்களைக் கற்றுத் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம். இந்தக் கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களாகும் எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் என்றார் திருமூலர்.
“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை நினைத்தே.
சுவரை வைத்துத்தான் சித்திரம் என்று தமிழில் ஒரு பழமொழி உள்லளது. ஆரோக்கியமான உடலின்றி மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியது. பலவீனமான உடலினால் ஆத்ம முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான், பகவத் கீதையைப் படிப்பதைவிட காலபந்து விளையாடுவது மேல் என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.
***
அப்பர் பெருமான் அருளுரை
அப்பரும் தேவாரத் திருப்பதிகத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்துவார்:
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே
-நாலாம் திருமுறை, தேவாரம்
பொருள்:
இவ்வுடம்பைக் கோயிலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும் பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.
***
‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’
காளிதாசனும் உடலைப் பராமரிக்கவேண்டியதன் அவசியத்தை ஒரு பொன்மொழியால் உணர்த்துகிறான்.
சரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3
சிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்த்தித்துச் சொல்கிறார்: உன் உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா? ஏனெனில் தர்ம காரியங்களைச் செய்வதற்கு மூல நம்முடைய உடல்தான் ;அதாவ்து உடலை வருத்தி தவம் இயற்றுதல் அவசியமன்று.
***
பெரியாழ்வார் பாசுரங்களைத் தொடர்ந்து காண்போம்
4.5.4 மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி, * காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் * மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி, * வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே.
***
எம தூதர்கள் அச்சுறுத்தல்
பெரியாழ்வார் திருமொழி 4.5.4
4.5.4 மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேல் மிடற்றினை உள் எழ வாங்கி,
* காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்
கண்ணுறக்கம் அதாவதன் முன்னம்
* மூலமாகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி,
* வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே.
மேல் பக்கம் எழுந்த ஒரு காற்று (வாயு) மேல் எழுந்து நெஞ்சு கீழே இடிய விழுந்து கால்களும் கைகளும் பதைபதைத்து தீர்க்க நித்திரை உண்டாவதற்கு முன் சகல வேதங்களுக்கும் காரணமான திரு மந்திரத்தில் உள்ள பிரணவத்தை அளவெடுத்து உச்சரித்து கடல் போன்ற வடிவை உடைய எம்பெருமானை அடைய வல்லீரகள் ஆகீல் பரமபதத்தை அடையலாம் மற்றும் அடியார் கூட்டங்களுடன் கூடலாம் .
***
4.5.5 மடி வழி வந்து நீர் புலன்
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே,
* கடை வழிவாரக் கண்டம் அடைப்பக் கண் உறக்கம் ஆவதன் முன்னம்
* தொடை வழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
* இடை வழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்றேத்த வல்லீரே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.5
யம கிங்கரர்களை கண்ட பயத்தாலே, மடியில் உள்ள லிங்கத்தின் வழியே வந்து சிறுநீர் பெருகவும் வாயில் பெய்த பொரிக்கஞ்சியும் கழுத்தை அடைக்க மறுபடியும் கடை வழியாலே வழியவும் கண் உறக்கம் கொள்வதற்கு முன், ரிஷிகேசன் என்று துதிக்க வல்லீரகள் ஆனால், யமலோகத்தில், உங்களுடைய துடையில் செந்நாய்களானவை கவ்வ மாட்டாது; உங்களை சூலத்தால் யமகிங்கரர்கள் குத்தவும் மாட்டார்கள்; நீங்கள் நடுவழியிலே வஸ்திரத்தையும் இழக்க மாட்டீர்கள் .
****
வாயில் புல்லைத் திணியுங்கள்- பெரியாழ்வார் கோபம்
பெருமாளைத் தொழாதவர்கள், பெற்றதாய்க்கு நோய் போன்றவர்கள்
குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்
குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி
வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
நோய்செய்வான் பிறந்தார்களே
***
என்ன வியப்பு! இறைவனை எண்ணாமல் கவளம் கவளமாக சோற்றை ஊத்தை வாய்க்குள் போடுகிறார்களே
வண்ண நல் மணியும் மரகதமும்
அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
கவளம் உந்துகின்றார்களே
***
இறைவனை எண்ணாமல் சாப்பிடுவோர் பாவத்தை அல்லவா உண்ணுகிறார்கள்
உரக மெல் அணையான் கையில் உறை
சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
கமல வயற் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டு அழை
யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ
***
பெருமாளை வணங்காமல் உண்ணுவோர் இந்த பூமிக்குச் சுமை; அவர்கள் வாயிலிருந்து சோற்றினைப் புடுங்கி, வாயில் புல்லைத் திணியுங்கள்
ஆமையின் முதுகத்திடைக் குதி
கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே
****
ஐம்புலன்களில் தூய்மையுடைய வைணவர்களின் பாத தூளிகள் படுவதால் இந்த உலகம் சிறக்கிறது
வாகரேவாரேவா! (WHAKAREWAREWA) – உலகின் அதிசய வெந்நீர் ஊற்றுக்களும், புவி வெப்ப ஊற்றுக்களும்!
ச. நாகராஜன்
நியூஜிலாந்தின் வடக்கே உள்ள தீவில் உள்ள வெந்நீர் ஊற்றுக்கள் உலகத்தோரை பிரமிக்க வைப்பவை.
1886ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பக்கமாக ஏராளமான போர் படகுகள் வருவதை இங்குள்ள பழங்குடி இனத்தவரான மாவோரி மக்கள் கண்டு இது பழங்காலப் பிசாசுகள் எடுத்திருக்கின்ற வடிவம் என்று கூறினர். ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப் போவதற்கான அறிகுறி தான் இது என்றனர் அவர்கள்.
உள்ளூர் செய்தித்தாள்கள் இது போன்ற ஒரு காட்சியை இப்பகுதியில் யாரும் கண்டதே இல்லை என்று வியந்து செய்தி வெளியிட்டன.
மாவோரி மக்கள் பயந்தபடியே நடந்து விட்டது. அந்த வருடம் ஜூன் மாதம் பத்தாம் தேதி தராவேரா என்ற எரிமலை வெடித்து அந்த நிலப்பகுதியையே மாற்றி விட்டது.
ரோடோருவா என்ற நகரம் நியூஜிலாந்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள பெரிய நகரம். இதையொட்டி உள்ள பகுதியில் எரிமலைகள் வெடிக்கவே கந்தகம் கலந்த நீர் சுடச்சுட ஆங்காங்கே பீறிட்டு எழுந்தது.
ஏராளமான வெந்நீர் ஊற்றுக்கள் (HOT SPRINGS) பொங்கி எழுந்தன. புவி வெப்ப ஊற்றுக்களும் (GEOTHERMAL FOUNTAINS) உருவாகின.
பொஹோடூ என்ற வெந்நீர் ஊற்று ஆகாயத்தைத் தொடுவது போல எழுந்து பீறிட்டது. நூறு அடி உயரம் வெந்நீர் ஆவி பறக்கச் சுடச்சுட எழுந்த காட்சியைக் கண்ட மக்கள் மலைத்தனர்.
ரோடோருவா நகருக்கு அருகில் இருந்த வாகரேவாரேவா இந்த வெந்நீர் ஊற்றுக்களால் பிரபலமானது. இது பழங்குடியினரான மாவோரி மக்கள் வசித்து வரும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.
படீர் படீரென கந்தகக் குமிழிகள் புகையுடன் எழுந்து வரவே மக்கள் அரண்டு போயினர்.
ஏராளமான வெந்நீர் ஊற்றுக்கள் ஆங்காங்கே உருவாயின. இங்குள்ள ஏரி ஆழமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஆழம் 20 மடங்கு அதிகரித்து 700 அடி ஆழத்தைக் கொண்ட ஏரியாக மாறியது.
1934ம் ஆண்டு இந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த பிரபல எழுத்தாளரான பெர்னார்ட் ஷா, “ஐயோ! நான் பார்த்ததிலேயே மிக மோசமான பகுதி இது தான்” என்று கடுமையாக விமரிசித்தார்.
இயற்கையே உருவாக்கித் தந்த வெந்நீர் ஊற்றுக்களைப் பார்த்த நியூஜிலாந்து எஞ்ஜினியர்கள் 1961ம் ஆண்டு முதல் ஜியோதெர்மல் ஸ்டேஷனை உருவாக்கினர். இயற்கையின் இயல்பான வெப்பத்தால் மின்சாரத்தை உருவாக்கி அவர்கள் மகிழ்ந்தனர்.
வாகரேவாரேவாவில் சுமார் 500 குளங்கள் உள்ளன. எல்லாமே கொதிக்கும் குளங்கள் தாம். 65 கெய்ஸர் ஊற்றுக்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. இப்போது ஏழு கெய்ஸர்கள் மட்டும் இயக்கத்தில் உள்ளன.
1972ம் ஆண்டு முடிய இங்குள்ள டே ஹோரு கெய்ஸர் ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து தடவை 20 அடி உயரம் வரை பொங்கி எழுந்து வந்தது.
இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 873 தான்! இங்குள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் தான். 2025ம் ஆண்டின் புள்ளி விவரப்படி பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 108!
ஆனால் மாவோரி மக்களின் அனுபவம் வாய்ந்த நூற்றுக் கணக்கான பழமொழிகள் வியக்க வைப்பவை. அவர்களின் பண்பாடும் நடனமும் கூட வியக்க வைப்பவை. அனைத்தையும் இணையதளத்தில் காணலாம்.
‘வாகரேவாரேவா உல்லாசப் பயணம்’ என்ற சுற்றுலாவில் தேர்ந்த வழிகாட்டிகள் ஒவ்வொரு கெய்ஸரின் பெயரைச் சொல்லி அது எப்படி மற்ற கெய்ஸர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று விளக்கி வரலாறைக் கூறுகின்றனர். இதைப் பார்க்கவும் கேட்கவும் இப்போது இந்தப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
ஜில்லென்ற குளிர்ந்த நீர் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நதிகளைப் பார்க்கும் பயணம் வேறு; கந்தகப் புகை வீச அதனூடே சென்று வெந்நீராகக் கொப்பளிக்கும் நீரூற்றுகளைப் பார்க்கும் அனுபவம் வேறு!
உலகத்தினர் அனைவரையும் வாகரேவாரேவா வா, வா என்று அழைக்கிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Gaja Asura Samhara Murti கஜாசுர சம்ஹார மூர்த்தி
Images of Siva represented as the slayer of the elephant is common in south Indian temples. in this he receives the name Gajaha Murti or Gajasura Samhara Murti. The image has eight hands generally, but may occasionally have only four. The two upper most hands are stretched out and hold the hide of the elephant with its tail bent upwards in the form of an aureola, while on the sides of this aureola are seen the legs of the elephant hanging. In the three right hands are held the trident, the kettle drum or sword and the noose or the tusk of the elephant. Two of the three left hands hold the tusk or shield and the skull/Kapala, while the third exhibits the posture indicating astonishment/Vismaya or sometimes holds a bell.
The left leg is placed on the elephant head and the right is raised up so as to reach the left high. A good figure answering to this description comes from Perur near Coimbatore. The Valuvur image and the Tiruththurapoondi and the Dharasuram images show the contrary position of the legs.
The god has a terrible face with protruding teeth; and by his side seen standing the frightened goddess Uma with the young Skanda behind her. The Karanagama mentions the weapons tanka and deer and the pointing finger pose. This last posture of the hand is seen in the Tiruththurapoondi and the Dharasuram stone images. The former has perhaps five heads of which three alone are visible on the picture. It has ten hands and more attendant figures.
Story
A demonic tusker, Gaja Asura, attacked Siva’s devotees. Siva ripped the demon’s hide in one clean sweep from trunk to tail and flinging the Blood moist hide over his shoulders, danced in ecstasy.
In myth, Asuras or demons , represent brute power, energy running rampant, unguided and uncontrolled by any higher principle, which makes it evil and destructive.
***
கஜாசுர சம்ஹார மூர்த்தி
சிவா பெருமான் யானையின் உருவம் கொண்ட கஜ அசுரனை அழித்து அவன் தோலினை உரித்து ஆடையாகப் போர்த்திய வடிவம் கஜாசூரசம்ஹார மூர்த்தி வடிவமாகும். காசியில், யானை உருவம் கொண்ட கஜாசூரன், பிராமணர்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் பிராமணர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். கஜாசூரனின் அழிவுச் செயல்களை செவியுற்ற சிவன், கஜாசூரனின் தலையின் மீது கால்களை மிதித்து அழித்து அதன் தோலினைப் போர்வையாகக் கைகளால் தூக்கி அணிந்து கொண்டார். இச் செய்தி சில புராணங்களில் உள்ளது
கஜாசூரசம்ஹார மூர்த்தி படிமம் சதுர்புஜம் (நான்கு கரங்கள்) அல்லது அஷ்ட புஜங்களில் (எட்டு கரங்கள்) அமைக்கப்பட்டிருக்கும். நான்கு கரங்கள் பெற்றிருந்தால் தந்தம் மற்றும் பாசமும் இரண்டு கரங்களிலும், பின் இரண்டு கரங்கள் யானைத் தோலினைத் தூக்கிப் பிடித்தவாறு அமையப் பெற்றிருக்கும். சிவனின் இடது கால் யானை தலையில் ஊன்றியவாறு அமைத்து, வலது காலை வளைத்து இடது காலின் தொடையினளவு உயரத்திற்கு உயர்த்தியவாறு அமைந்திருக்கும். யானையின் வால் சிவனுடைய தலையில் அணிந்துள்ள மகுடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும். சிவனின் அருகில் பார்வதி தேவி மற்றும் பாலகன் முருகன் ஆகியோர் ஈசனின் அரிய செயலினை அச்சத்துடன் நோக்குவது போல அமைந்திருக்கும். சிவனின் முன்புறம் சிவகணங்கள் நின்று கொண்டு முரசு மற்றும் இசைக் கருவிகள் இசைப்பார்கள் பேரூர், திருத்துறைப்பூண்டி, தாராசுரம், எலிபெண்டா குகை முதலிய பல இடங்களில் இந்த மூர்த்தியைக் காணலாம்
சோழர் காலத்தில் திருவாலீசுரவம், திருச்செங்காட்டங்குடி, தாராசுரம் கோயில்களில் விக்கிரகங்களாகவும் வார்க்கப்பட்டன. வழுவூரில் உள்ள செப்புப் படிமம் மிகவும் அழகாக இருக்கிறது .
படிமங்களின் கைகளில் உள்ள பொருள்கள் இடத்திற்கு இடம் சிறிது மாறுபடும். தேவாரப்பாடல்களில் சிவனின் இந்த வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளனர்
–SUBHAM–
TAGS- Hinduism through 500 Pictures in Tamil and English-30, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 30, Gaja Samhara Murti, Murthy, கஜாசுர சம்ஹார மூர்த்தி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 39
ITEM 233
Kamakshi’s Name is Poetess Name
Akanānūru verse 22 was composed by Veri Pādiya Kāmakanniyār under Kurinji Thinai .
Kaamakkanni is the Goddess of Kanchipuram Kamakshi temple. This is confirmed by Kanchi Shankaracharya (1894-1994) and doyen of Tamil literature U VE Swaminatha Iyer.
***
234
Heroine is laughing at her mother who thought that her sickness is due to Lord Muruga/Skanda/Kartikeya . but it is simple love sickness. When some girl is possessed by Murugan spirit mothers followed a ritual called Veri Aaatal. This epithet is in the name of the poetess. During such Veriaatal a priest dances and drive away the spirit. They kill a goat and mix its blood with the grains and offer.
Namaalvaar of ninth century also described the ceremony in detail.
***
235
Psychological Treatment
We see this Veri Aatal ritual at least for 1000 years in ancient Tamil Nadu. Why did they do it when even the love sick girls knew it was a wasteful ceremony? The reason is that it is a Psychological Treatment.
1.Girl is happy that her mother knew she has a problem
2.Mother is happy that she is treating her daughter and showing interest in her health.
3.Lover is happy that something good will come out of it because the problem is known to the whole town.
4.Village Priest is happy that he is engaged and paid.
***
236
Lord Murugan Vs Young girls is recognised theoughout India. I have already explained that women are not allowed into Murugan/Skanda shrines in North India and Kalidasa also sang about it.
Veriyāttam ritual is performed when the Murukan temple priest vēlan is invited to heal love-sick young girls who appear sickly. The mother invites him to divine the reason for her daughter’s affliction, not aware of her love affair. The priest uses molucca beans (kazhangu) on freshly laid sand in the front yard of the house, and tells the mother that Murukan’s anger is the reason for her daughter’s affliction. He wears garlands, prays to Murukan, kills a goat and performs rituals. (from Vaidehi’s translation)
முதுவாய்ப் பெண்டிர் – female diviners, women with ancient wisdom, கட்டுவிச்சிகள், குறி சொல்லும் பெண்கள்,
***
237
Anangu- Divine Spirit
Ancient Hindus believed that all the natural spots such as rivers and seas, hills and lakes, trees and some animals (cows, elephants) are occupied by divine spirits. Here the poetess also says that in the very first line- He’s from the country where gods live in tall mountains (Vaidehi’s translation).
***
238
Interesting simile
The lover fools the guards in the mansion by hiding, like a tiger hiding in the bush to attack the elephants.
“slyly dodging the guards of our rich mansion,
like a tiger hiding to take down an elephant”.
***
Tamil Version
Akananuru Verse 22 அகநானூறு 22, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்,
“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5
நெடுவேள் பேண தணிகுவள் இவள்” என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற அரு விடர்த் ததைந்த
சாரல் பல் பூ வண்டுபடச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல 15
நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமை,
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே, எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு 20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21
***
239
Akanānūru verse 23 composed by Ōrōdakathu Kantharathanār in Pālai Thinai has one interesting detail about Weather Calendar and usual , beautiful description of nature.
Ancient Weather Calendar
People who lived long ago used weather changes as calendar. Also planets in the sky. Here oet speaks about blooming of jasmine flowers to indicate the time of hero’s arrival.
Before he left, he pointed to the huge branches
of the short nochi tree in our house and
told me that he would return after earning
wealth when the jasmine vine that twines on it
blooms. Has that time arrived?
In the palaces and town centres they used hourglass for finding the time. In capital cities the timekeepers rang the huge bell so that the whole town will know what time it is.
The Months: Poem by Sara Coleridge
Sara Coleridge (23 December 1802 – 3 May 1852) was an English author and translator. She was the third child and only daughter of the poet Samuel Taylor Coleridge and his wife Sara Fricker.
January brings the snow, makes our feet and fingers glow.
February brings the rain, Thaws the frozen lake again.
March brings breezes loud and shrill, stirs the dancing daffodil.
April brings the primrose sweet, Scatters daises at our feet.
May brings flocks of pretty lambs, Skipping by their fleecy damns.
June brings tulips, lilies, roses, Fills the children’s hand with posies.
Hot July brings cooling showers, Apricots and gillyflowers.
August brings the sheaves of corn, Then the harvest home is borne.
Warm September brings the fruit, Sportsmen then begin to shoot.
Fresh October brings the pheasants, Then to gather nuts is pleasant.
Dull November brings the blast, Then the leaves are whirling fast.
Chill December brings the sleet, Blazing fire, and Christmas treat.
***
240
One more point can be guessed
the jasmine vine that twines on it– indicates hugging. Earlier the poet mentioned
This shows the love and affection between the man and woman in the poem.
மதவு நடை அண்ணல் இரலை – a noble stag with arrogant walk, அமர் பிணை தழீஇ – embraced its loving
***
241
Akanānūru verse 24 by Āvūr Moolankizhār in Mullai Thinai has one interesting detail about Brahmins who did not practise the Six Duties they supposed to do. Literal translation of the word is Brahmin who does not do Yaga/Yajna/Homa/Havan daily.
Even Nakkirar, one of the famous and controversial poets of Sangam age, belonged to this category. When he argued with Lord Shiva over a ‘mistake’ in a poem, he pointed out that he has identity as Vela parppan, whereas Lord Shiva has no identity at all.
***
242
They bloom when the cool rain falls,
the tight pakandrai buds with swirls
that look like the remaining top parts
of conch shells, left over after a
Brahmin who does not perform rituals
cuts with his sharp saw, to make bangles.
அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார், முல்லைத் திணை – தலைவன் பருவங்கண்டு சொன்னது
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
…………………………………………….
Meanings: வேளாப் பார்ப்பான் – a Brahmin who does not perform rituals, வாள் அரம் துமித்த – cut with a sharp saw, வளை களைந்து – removed for bangles, cut conch shells
****
243
Akanānūru verse 25 by Ollaiyūr Thantha Poothappandiyan, in Pālai Thinai
Gives some interesting details about Gems and Jewels. Gold and gems like Sapphire and coral are used by the poet. And he adds Thithiyan has golden chariot. No we such gold chariots only in Hindu temples or with saints like Sathya Sai Baba .
A sapphire-colored dark kuyil pricks (cuckoo)
large mango buds and sings according
to tradition. Swarms of bees drop ilavam
pollen. The fine pollen of kōngam flowers
is like the gold
in the coral boxes of gold merchants.
……………………….
Your kohl-rimmed eyes shed tears (black colour)
………………
244
Historical details
We hear about Thithiyan of Western Ghats with a golden chariot .
roars of the drums of king Thithiyan of
Pothiyil Mountains, who owns a golden
chariot, who won battles against enemies,
and carries a bow in his large hands.
மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில் – sapphire colored dark cuckoo that pricks big mango buds, , பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன – like gold poured into a coral box, நின் பைதல் உண்கண் – your sad kohl-rimmed eyes,
, வில் கெழு தடக் கை – big hands with a bow, பொதியில் செல்வன் – the lord of Pothiyil mountains, பொலந்தேர்த் திதியன் – king Thithiyan with a gold chariot,
245
Poet’s name in Sanskrit
Bhuta Pandyan is Sanskrit பூதப்பாண்டியன். One queen , wife of Bhuta Pandyan committed SATi (jumping into husband’s funeral fire voluntarily) according to Pura Nanuru In Karnataka we have this name as well with Sanskrit spelling
நமது மூளை இயக்கம் நல்ல ஊக்கம் பெற்று இயங்கினால் நமது வாழ்வு இன்னும் சிறக்கும்.
அதற்கான சின்னச் சின்ன வழிகள் ஏராளம் உள்ளன.
முதலில் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அதுவே முதல் படியாகும்.
மூளை என்பது ஒரு அடர்ந்த காடு போல. அங்கே அபூர்வமான உயிர் காக்கும் மூலிகைகள் உள்ளன. ஆகவே அவற்றை முதலில் நாம் இனம் காண வேண்டும். பின்னர் அவற்றைப் பயன்படுத்தலாம்.
மூளையில் நூறாயிரம் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் …. எண்ணற்ற நியூரான்கள் உள்ளன. அவற்றின் செயல் திறம் மலைக்க வைக்கும். ஆகவே மூளையைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மூளை ஒருவரின் எடையில் சுமார் 2 விழுக்காடு அளவே தான் உள்ளது. ஆனால் அது 20 விழுக்காடு ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக் கொள்கிறது. ஆகவே அதை நலம் பெற இயங்க வைக்க இந்த ஊட்டச்சத்தைத் தவறாது அளிக்க வேண்டும்.
முதலில் தேவையற்ற உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அதை “நோக அடிக்கக்’ கூடாது. ஆகவே ஊட்டச்சத்து பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு அவற்றை நமது சமச்சீர் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை நமது உடல் அங்கங்களில் முக்கியமான பகுதி. ஆகவே உடல் பயிற்சி செய்யும் போது அதுவும் நன்மை அடைகிறது. ஆகவே உடல்பயிற்சியை ஒரு போதும் விடக்கூடாது. நடைப்பயிற்சியால் உடல் நலம் பெறும் என்றால் மூளையும் அதில் அடங்கியது என்பதால் மூளையும் வலிமை பெறும்,
ஒரு பெரிய ரகசியம் எண்ணங்களைப் பற்றியது. ஒரு நாளைக்கு சுமார் நாற்பதினாயிரம் எண்ணங்களை ஒவ்வொருவரும் எண்ணுகிறோம். இந்த எண்ணத்தில் பல தரங்கள் உண்டு. அனைத்துமே வலிமையானவை அல்ல. ஆகவே பாஸிடிவ் திங்கிங் எனப்படும் ஆக்கபூர்வ சிந்தனையை அதிகப்படுத்தல் வேண்டும். மன அழுத்தமும் கவலையும் நியூரான்களைக் கொல்வதால் எதிர்மறை எண்ணங்களை விலக்க வேண்டும். நியூரான்கள் அழிந்துபடும் போது புது நியூரான்கள்களை இந்த மன அழுத்தமும் கவலையும் உருவாக்க விடுவதில்லை.
மூளையில் புதிய நியூரான்கள் தோன்றும் போது அவற்றை நல்ல விதமாக உபயோகிப்பது நம் கையில் தான் இருக்கிறது. அதை எவ்வளவு காலம் நமது மூளையில் பாதுகாக்கிறோம் என்பதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆகவே பயனுள்ள புதிய நல்ல செயல்களைச் செய்து மூளைக்கான சவால் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். புதிய திட்டங்கள், புதிய செயல்பாடுகள் ஆகியவை வெற்றிக்கான வழிகளாகும்,
மனிதனின் இறுதி வரை கூட வருவது அவனது கல்வியே ஆகும். படிக்க வேண்டும். புதிதாக நிறையப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் மூளை ஆக்கபூர்வமாக வளர்கிறது. வயது ஒரு தடையல்ல. அந்தஸ்து, ஆண் பெண் என்பதெல்லாம் ஒரு தடையல்ல. புதியனவற்றைக் கற்பதால் நாளும் நாம் முன்னேறுகிறோம். இந்த அதிசயமான பூமியில் நம்மை நாமே வளர்த்துக் கொள்ளலாம் என்பது மறுக்க முடியாத ஒரு அதிசய உண்மை!
புதிய சூழ்நிலைகளை உற்றுப் பார்க்க வேண்டும். ஓர்ந்து தெளிய வேண்டும். பல புதிய இடங்களுக்குப் பயணப்படுவது புதிய சூழ்நிலைகளைப் பார்க்க உதவி செய்யும். எல்லாவற்றையும் அறிவால் ஆராய்ந்து உணர பயணம் ஒரு அபாரமான நல்ல வழி.
ஒருவர் தனது மூளையை ஒரு போதும் அடகு வைக்கக் கூடாது. அரசியல்வாதிகள், நல்லவர் போல நம்மிடையே நடமாடுவோர், தேவையற்று நேரத்தை வீணடிப்போர் ஆகியோரின் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க நேர்ந்தாலும் கூட அவற்றை நமது மூளைத் திறனால் ஆராய்ந்து தெளிய வேண்டும். ஒரு போதும் ஆமாம் சாமியாக ஆகி விடக் கூடாது. இது நமது மூளைக்கு மட்டும் கெடுதல் அல்ல, நாம் வாழும் சமூகத்திற்கே கூட கெடுதலாக அமையக் கூடும்.
நாம் சமூகத்தில் கூட்டாக இணைந்து வாழ்பவர்கள் என்பதால் நல்லோர் இணக்கத்தை நாட வேண்டும். இது ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தரும்; மூளையை வளர்க்கும். நல்லவர்களை நண்பர்களாகக் கொள்பவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமே இல்லை!
சிரியுங்கள், சிரித்து மகிழுங்கள். வாழ்க்கை என்னும் மஹா பயணத்தில் நாமும் சிரிப்போம்; நமது நல்ல பண்பாலும் நகைச்சுவை மனதாலும் அனைவரையும் சிரிக்க வைப்போம். மலர்ந்த மூளையை எப்போதும் கொண்டிருக்க இதுவே வழி.
இசை கேட்பது, இசைப்பது போன்ற பல நல்ல வழிகள் மனிதர்களுக்கே மட்டும் கிடைக்கக் கூடிய அரிய பேறுகளாகும். இதை நல்ல முறையில் பயன்படுத்தினால் மன நிம்மதியும் ஆரோக்கியமும் நீண்ட வாழ்நாளும் அடைவது திண்ணம்.
மூச்சுள்ளவரை மூளை இயக்கம் திறம்பட இருக்க இவை சின்னச் சின்ன வழிகள் தாம்! ஆனால் பலனோ பெரிய அளவில் இருக்கும்.