Space Travel ‘ஸ்பேஸ் டிராவல்’ இரண்டு ஆழ்வார் பாடல்களுக்கு புதிய பொருள்! (Post.15,285)

Written by London Swaminathan

Post No. 15,285

Date uploaded in London –  18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விண்வெளிப்பயணம் “ஸ்பேஸ் டிராவல்” பற்றி நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் பாடினார்கள். ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை , அதாவது 48 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன் ஆனால் பெரியாழ்வார் பாடலில் ஒரு நொடிப்பொழுதில் விண்வெளிப்பயணம் முடிந்ததாக ஒரு பாடலில் கண்டவுடன் மீண்டும் சம்ஸ்க்ருத அகராதியை ஆராய்ந்தேன். புதிய உண்மை புலப்பட்டது; ரிக்வேதத்தில் முகூர்த்தம் என்பதை ஒரு நொடி என்றே ரிஷிகள் பாடியுள்ளனர் ஆகவே பெரியாழ்வார் சொன்னதும் சரி; நம்மாழ்வார் சொன்னதும் சரி. அதாவது ஒரு நொடிப்பொழுதில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்தில் யமலோகத்துக்குப் போய் இறந்த பிராமணச் சிறுவர்களை உயிரோடு பூமிக்குத் திரும்பி அழைத்து வந்துவிட்டனர் ஆகையால் ஐன்ஸ்டைன்  மற்றும் நாசா விஞ்ஞானிகள் சொன்னது எல்லாம் தப்பு !

(ஜெர்மன் மொழியில் அய்ன்- என்றால் ஒன்று ; ஸ்டைன் என்றால்  ஸ்டோன் ; ஆக அவர் பெயர் ஒற்றைக் கல் !)

****

Space Travel from Periyalvar poem

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
      தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
      நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
      
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.

70. You listened to the words of the strong cowherds,

fought and controlled seven strong bulls

and married the dark-haired Nappinnai, lovely as a peacock.

You went on a bright shining chariot,

searched for the lost children,

found them and brought them back to their mother.

O dear one, shake your head and crawl for me once.

You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

****

403:

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்

இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்

மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்

சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.

***

இறை = அணு , அற்பம், சிறுமை ; இன்னும் பல பொருள்களை அகராதி தருகிறது

403. The Thiruppadi of the lord

who brought the four children of his guru

back to life quickly

(Tamil Word IRAIP POZUTHU)

when they could not be alive as soon as they were born

is Srirangam where good Vediyars

skilled the Vedas live,

making sacrifices with fire

and receiving guests happily.

***

Muhurta in Sanskrit dictionary

[«previous (M) next»] — Muhurta in Sanskrit glossary

Muhūrta (मुहूर्त).—[hurch-kta dhātoḥ pūrvaṃ muṭ ca Tv.]

1) A moment, any short portion of time, an instant; नवाम्बुदानीकमुहूर्त– लाञ्छने (navāmbudānīkamuhūrta- lāñchane) R.3.53; संध्याभ्ररेखेव मुहूर्तरागाः (saṃdhyābhrarekheva muhūrtarāgāḥ) Pañcatantra (Bombay) 1.194; Me-ghadūta 19; Kumārasambhava 7.5.

2) A period, time (auspicious or otherwise).

3) A period of 48 minutes.

Muhūrta (मुहूर्त).—[masculine] [neuter] moment, instant; hour ( = 1/30 day); [instrumental] & [ablative] in a moment, after a little while, immediately, di-rectly.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dic-tionary

Muhūrta (मुहूर्तas mentioned in Aufrecht’s Catalogus Catalogorum:—jy. See Matsyendramuhūrta.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Aufrecht Catalogus Catalogorum

1)     Muhūrta (मुहूर्त):—[from muh] a m. n. a moment, instant, any short space of time, [Ṛg-veda] etc. etc. ([in the beginning of a compound], in a mo-ment; tena ind. after an instant, presently)

***

ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்

. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன்  நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !

மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான்  சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.

***

என்னுடைய பழைய கட்டுரைகள்

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு: நம்மாழ்வாரும் சொல்கிறார்! (Post 8687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8687

Date uploaded in London – –15 SEPTEMBER 2020  

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்

3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

      உலகும் கழிய

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற

      திண் தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

      வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி

      ஒன்றும் துயர் இலனே (5)                

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்று பொருள்.ஆகவே நாம் ஒளி ரூபத்தில் ஒளி வேகத்தில் அல்லது அதற்கும் மேல், மனோ வேகத்தில் பயணம் செய்யலாம் என்பது இந்தப்பாடலிலிருந்து விளங்குகின்றது

*****

நம்மாழ்வார் திருவாய் மொழியில் அற்புதமான கதை சொல்கிறார்

என்ன கதை ?

YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES

நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட  வெளிப் பயணம் –  பற்றி விவரம் உளது

இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது

ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN)  அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன  48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.

ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .

பரம பதம் எங்கே உள்ளது?

திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.

முடிவுரை என்ன?

YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !

ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.

அதில் 13 பேர் வரை செல்லலாம்.

உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.

இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே  தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .

இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.

இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்

ஐன்ஸ்டைன் (Albert Einstein)  என்னும் விஞ்ஞானி  சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY)  என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான்  அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும்  .

ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம்  பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.

*****

ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்.

ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட  மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.

ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS  மட்டும் எழுதி வருகின்றனர்.

ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்B LACK HOLE SECRETS  ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்

இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.

அது எப்படி?

ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”

என்ன அர்த்தம்?

 நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான்  அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.

ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.

இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர்,  கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .

எப்படி வந்தாள் ?

13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .

1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.

2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.

ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!

இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  கதை போகிறது!

இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?

காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப்   (TIME IS AN ILLUSION ) புகைதான்.

இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்

அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்.

“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)

இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.

இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து  ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.

இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA  , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று  வந்ததையும்  அறிகிறோம்.

******

TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA

ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை

இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை  வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.

எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை,  பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

60 விநாழிகை = 1 நாழிகை

60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்

30 நாள் = 1 மாதம்

12 மாதங்கள் = 1வருடம்

60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)

3000 சுழற்சிகள் = 1 யுகம்

4 யுகங்கள் = 1 சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்

14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்

18 சதுர் யுகம் = 1 மனு

இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.

*******

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்

உள்ளது போகாது, இல்லது வாராது .

அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ   போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்.

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.

–subham–

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

tamilandvedas.com › 2013/02/14உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

Feb 14, 2013 · அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார்.

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

முதல் முதலில் ஒரு விண்கலத்தில் இந்தப் பூமியை வலம் வந்தவர் யார்? என்று கேட்டால் பலரும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் என்றே சொல்லுவார்கள். கலைக் களஞ்சியங்களும் அப்படியே சொல்லும். அது சரியல்ல. த்ரிலோக சஞ்சரியான நாரதர் கிரஹங்களுக்கிடையே பயணம் செய்ய வல்லவர். ஆயினும் பூமியை வலம் வந்ததாக தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் முருகப் பெருமான பூமியை வலம் வந்த குறிப்பை  அருணகிரிநாதர் எழுதிய திருவகுப்பில் தெளிவாகக் காணலாம். அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார். இதை கற்பனை என்று யாராவது கருதுவார்களானால் குறைந்தது இந்தக் கொள்கையை முதலில் சொன்ன பெருமையையாவது அவருக்குக் கொடுக்க வேண்டும்.

அருணகிரிநாதர் 500 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது உலகம் உருண்டை என்பது கூட மேலை நாட்டினருக்குத் தெரியாது. நாமோ வட மொழியிலும் தமிழிலும் பூகோளம் முதலிய சொற்கள் மூலம் துவக்க காலத்திலிருந்தே இதை உருண்டையானது என்று சொல்லிவருகிறோம்.

இதோ திருவகுப்பு பாடல்:

“ ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பொழுதில்

ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்

இலகு கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும்

இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்

இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற

எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்”  (திருவகுப்பு)

ஒரே நொடியில் உலகம் முழுதையும் சுற்றி வந்தார் முருகன். 1961  ஆம் ஆண்டில் ககாரின் ஒரு முறை பூமியை வலம் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று!!

***

இசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்

ஐபாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் காதுகளில் இயர்போனை (ear phone) வைத்துக் கொண்டு இசை கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் காலத்தில் விமானத்தை ஓட்டும் பைலட்டுகள் இசைத்துறை இயக்குனர்கள் அல்லது டெலிபோன் துறையினர் பெரிய இயர் போன்களை காதுகளில் வைத்திருப்பதை பழைய திரைப்படங்களில் பார்த்தோம். இன்றோ இசைக் கருவி காதில் சொருகாத இளஞர்களே இல்லை.

சோனி நிறுவனத்தார் (Sony’s Walkman) வாக்மேன் கண்டுபிடித்த பின்னர் இப்படி எல்லோரும் இசைகருவியும் இயர் போனும் வாங்கினர். பின்னர் எம் பி 3 கருவிகள் ஐ-பாடுகள் வந்தன. உண்மையில் இந்தக் காதில் இசை கேட்கும் வழக்கத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சிவபெருமான் தான். சம்பந்தர் தேவாரத்தின் முதல் பாடலான ‘தோடுடைய செவியன்’ பாடல் உரையில் இச் செய்தி உள்ளது.

கிருபானந்தவாரியார் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்.:  அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். ஆனால் அவர்களுக்கு ரசிகர்களே இல்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்து சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவனோ வீணை வாசிப்பதிலும் சாம கானம் கேட்பதிலும் அதி சமர்த்தர்.  ஆகவே கந்தர்வர்கள் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க அவர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் எங்கள் இசையை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். சிவன் அதற்கு இசைந்தார். ஆனால் நடை முறையில் இவர்களோடு எப்போதும் இருக்க முடியாதே!

சிவனுக்கு ஒரு யோசனை உதித்தது. உங்கள் இருவரையும் தோடுகளாகச் செய்து காதில் அணிந்து கொள்கிறேன். பாடிக்கொண்டே இருங்கள் என்றார். அவர்களுக்கு எல்லை இலா மகிழ்ச்சி. இப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த எம் பி-3 பிளேயரையும் விட அதிக பேட்டரி அந்த தோடுகளில் இருக்கிறது. ஆண்டு முழுதும் சிவன் பாட்டுக் கேட்கிறார். இந்த ‘ஐடியா’தான் வாக் மேனாகவும் ஐ பாடாகவும் பிற்காலத்தில் பரிணமித்தது என்றால் பிழை ஏதும் இல்லையே!

உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி)  பேடண்ட் உரிமையும் கந்தனுக்கும் அவன் தந்தை முக் கண்ணனுக்குமே உரித்தானவை.

வாழ்க கந்தன்! வாழ்க சிவன்!

முந்தைய கட்டுரைகளில் லேசர் ஆயுதம் கண்டு பிடித்த பெருமையும் ஸ்டார் வார் ஆயுதங்கள் கண்டு பிடித்த பெருமையும் சிவனுக்கே உரித்தானவை என்று நிலை நாட்டி இருக்கிறேன். பறக்கும் செம்பு, வெள்ளி தங்கம் கோட்டைகளை நெற்றிக் கண்ணில் உள்ள லேசர் ஆயுதம் மூலம் தகர்த்தவர் சிவன்.. இதே போல பூமராங் ஐடியாவும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தில் இருந்தே வந்தது என்பதையும் நிலை நாட்டி இருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகளில் முழு விவரமும் காண்க.

–subham—

tags -Space Travel ‘ஸ்பேஸ் டிராவல்’ பெரியாழ்வார் , நம்மாழ்வார் , அந்தணர் பிள்ளைகள் 

Hinduism through 500 Pictures in Tamil and English-32; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 (Post.15,284)

Written by London Swaminathan

Post No. 15,284

Date uploaded in London –  18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION WAS POSTED YESTERDAY (17-12-2025)

துர்கா தேவி ( என் சுய புராணமும் உள்ளது)

சிற்ப சாஸ்திரத்தில் துர்க்கையின் வடிவம்

துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;

தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப்  பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !

****

துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி  சிற்பம்தான்  மிகவும் மனதில் பதியும் வடிவம். மகாபலிபுரத்தில் உள்ள இந்த மஹிஷாசுரமர்தனியின் சிலையைப் புகைப்படம் எடுக்காத வெளி நாட்டுக்காரர்  எவருமில்லை! யார் யாரெல்லாம் மாமல்லபுரத்துக்கு வந்தார்களோ அவர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சியை படம்பிடித்து புஸ்தகங்களில் வெளியிட்டுள்ளனர்; அவ்வளவு அற்புதமான சிலை!

மஹிஷ – எருமை.

மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிற்பம்

துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் ஜடா மகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று வளைவுகளை /நெளிவுளைக் (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கத்தி /கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.

விஷ்ணுதர்மோத்திரம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.

மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

Durga at Gangakondacholeeswaram

மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. சிவன் கோவில்களில் வடபுறச் சுவர்களில் உள்ள மாடங்களில் துர்க்கையைக் காணலாம் ; சில இடங்களில் எருமைத் தலை மீது அவள் காட்சி அளிக்கிறாள்.

மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று வணங்கப்பட்டாள். சிவபெருமான் திரிசூலத்தையும் விஷ்ணு  சுதர்சன சக்கரத்தையும் பிரம்மா தனது சக்தியையும் அளித்தார்கள்.

***

லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது .

தேவி மஹாத்ம்யம் என்னும் 700 ஸ்லோககங்களில் அவள் கதை முழுதும் சுருக்கமாக வருகிறது வங்காளி மக்களுக்கு இந்தத் துதி அத்துப்படி;.கோவில்களில் தினசரி பாராயணமும் நடக்கும்; காளி, துர்கா என்ற வடிவங்களில் அவளை ராம கிருஷ்ண பரமஹம்சர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கி அருள்பெற்றனர் .

சம்ஸ்கிருதத்தில் ‘நவ’ என்றால் ஒன்பது என பொருள். மந்திர சாஸ்திர நூல்கள்  துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் .

நவதுர்க்கா வடிவங்கள்

பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்

திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம்

பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம்

சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம்

நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்

प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी ।

तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ॥

पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा ।

सप्तमं कालरात्रिश्च महागौरीति चाष्टमम् ॥

नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः ।

उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ॥

பிரதமம்  ஷைலபுத்ரிதி  த்வீதீயம் ப்ரஹ்மசாரிணீ |

திருதீயம் சந்திரகண்டேதி  கூஷ்மாண்டேதி  சதுர்த்தகம்  ||

பஞ்சமம்  ஸ்கந்தமாதேதி ஷஷ்டம்  காத்யாயணீ  ததா  |

சப்தமம்  காலராத்ரிஸ் -ச   மஹாகவுரிஇதி  ச  அஸ்டமம்  ||

நவமம்  சித்திதாத்திரீ   ச  நவதுர்காஹா  ப்ரகீர்த்தாஹா    ||

உக்தானி ஏதானி நாமானி  ப்ரஹ்மனைவ  மஹாத்மனா  ||

Meaning:

(These are the names of Nava Durgas)

1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),

2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,

3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),

4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,

5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),

6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.

Mahisasuramardini drawing

1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

2.பிரம்மசாரிணி

‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.

சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு கடும் தவம் புரிந்தார்.

3. சந்திரகண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘கண்டா’ என்றால் மணி என்று பொருள்.

 பத்து கைகளை கொண்டு  சிங்க வாகனத்துடன் காட்சி தருகின்றார்.

Durga statue

4. கூஷ்மாண்டா:

கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும்.

5. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்

நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.

6. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

7. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.

கால என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.

8. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.

நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு காளை வாகனமாக இருக்கின்றது.

9. சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.

மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகள் -குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம்.

***

விஷ்ணு துர்க்கை

மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை புடைப்புச்சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது.  பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி உள்ளது.

கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலமான , 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது

******

சுய புராணம் MY STORY  ALLOT LOT LUCKY PRIZE JOURNALIST QUOTA

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முதல் ‘லாட்’டிலேயே மதுரை எல்லிஸ் நகரில் ஒரு வீடு அல்லாட் ஆகியது ஏனெனில் ஜர்னலிஸ்ட் கோட்டாவில் நானும்தினமணி எடிட்டர்  ஏ என் சிவராமன் மகனும் மனுப்போட்டோம்; இரண்டே பேர்தான் மனு! இருவருக்கும் அடித்தது லக்கி பிரைஸ் ; ஆனால் என் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் சுடுகாடு!

நான் கிரஹப்பிரவேசம் செய்த நாளில் ஹோ வென்று ஒரு சடலம் எரிந்து கொ ண்டிருந்தது என் அம்மா கேட்டாள். என்னடா இது?  என்று; அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் பூஜைக்கு வேண்டியதைஎடுத்து வைப்போம் என்றேன்.

பின்னர் நீண்ட  போராட்டத்துக்குப் பின்னர், பெரும் ரகளை, கிளர்ச்சிக்குப் பின்னர் சுடுகாடு மூடப்பட்டது . நிற்க

சொல்ல வந்த விஷயம் வேறு; அந்த வீட்டில் குடிபுகுந்த பின்னர் என் மகனுக்கு நிற்காத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது  சீர் அடித்தது என்று சொன்னார்கள் மதுரை பழங்காநத்தத்தில் போய் மந்திரித்தும் நிற்கவில்லை.

எங்கள் எல்லோருக்கும் கணபதி மந்திரத்தை தென்காசி ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா உபதேசம் செய்தார்;  கணபதி ஹோமத்தை மட்டும் எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ.சந்தானம், எனது பெரிய அண்ணன் ஸ்ரீநிவாஸன், தினமணி சீனியர் சப் எடிட்டர் வெங்கடராமனுக்கு  உபதேசம் செய்தார்; அவரை தினமும் சந்திப்பதால் அவர் வீட்டுக்குப் போய் பிரச்சனையையும் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்; அவர் அலட்சியமாக

இதெல்லாம் புது வீட்டுக்குப்போனால் வரும் சாதாரண பிரச்சனை இதற்குப் போய் கவலைப்படாதே என்றார்

எனக்குப் பெரிய ஏமாற்றம். என்ன சார் ? உங்களிடம் வந்தால்  நீங்கள் ஏதோ மந்திரம் போட்டு பிரச்சனையை முடித்து வைப்பீர்கள் என்று வந்தேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? என்றேன் . சிறிது மெளனம் .

பின்னர், சரி ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்; கை, கால்களை அலம்பிக்  கொண்டு (கழுவிக்கொண்டு) வா என்றார் . பெரும்பாலோருக்குத் தெரிந்த துர்கா சூக்தத்தின் முதல் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அவர் சொன்னபடி 13 ஆவ்ருத்தி /தடவை சொல்லி வருகிறேன். துர்கா தேவி பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள்.

–subham —

Tags- விஷ்ணு துர்க்கை ,மாமல்லபுரம் ,மகிஷாசுரமர்த்தினி ,சிற்பம் , துர்கா தேவி, என் சுய புராணம், படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 , Hinduism through 500 Pictures in Tamil and English-32

டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு நேர்ந்த விபத்தும்! (Post.15,283)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,283

Date uploaded in London –   18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு நேர்ந்த விபத்தும்! 

ச. நாகராஜன் 

உலகின் மிக மிக மோசமான கப்பல் விபத்து என்று கூறப்படுவது டைட்டானிக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது தான்!

உலகின் பிரம்மாண்டமான இந்தக் கப்பலின் எடை 46328 டன்கள். இதன்  நீளம் 269 மீட்டர் அதாவது 882.5 அடி. 28.2 அடி அகலம் (92.5 அடி)

 மிகுந்த ஆரவாரத்துடன் கடலில் பயணித்த டைட்டானிக் 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி ஒரு பனிப்பாறையில் மோதி மூன்று மணி நேரத்தில் முற்றிலுமாக மூழ்கி விட்டது. சவுத் ஆம்ப்டனிலிருந்து கிளம்பிய இந்தக் கப்பல் நியூயார்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

2224 பயணிகளில் 1500 பேர்கள் இறந்தனர். ஆகவே உலகின் மிக மோசமான கப்பல் விபத்து என்ற பெயரைப் பெற்றது இது.

இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களுள் ஒருவர் டோராதி ஜிப்ஸன் (DOROTHY GIBSON) என்ற இருபத்தியிரண்டே வயதான திரைப்பட நடிகை ஆவார்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நியூயார்க் செல்வதற்காக இவர் டைட்டானிக் கப்பலில் ஏறினார்.

கப்பல் பனிப்பாறையின் மீது மோதுகின்ற சமயத்தில் இவர் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அவசரம் அவசரமாக லைஃப் போட்டுகள் கீழே இறக்கப்பட அதில் முதல் படகில் ஏறி இவர் உயிர் தப்பினார்.

 நியூயார்க்கிற்கு வந்த டோராதியை எக்லேர் பிலிம் கம்பெனியை நடத்தி வந்த அவரது முதலாளி உயிர் பிழைத்தமைக்காகப் பாராட்டினார். உடனடியாக ஒரு சின்ன படம் தயாரிக்க முடியுமா என்று கேட்டார் அவர். என்ன நடந்தது என்று டோராதி சொல்ல அவர் உதவியுடன் கதை வசனம் தயாரிக்கப்பட்டது.

தனது பெற்றோருக்கும் காதலனுக்கும் நடந்ததைச் சொல்வது போல கதை அமைக்கப்பட்டது.

தான் விபத்து நடந்த சமயத்தில் என்ன ஆடை அணிந்திருந்தாரோ அதே ஆடையை டோராதி அணிந்து படத்தில் நடித்தார்.

படத்தின் பெயர் ‘ஸேவ்ட் ஃப்ரம் தி டைட்டானிக்” (SAVED FROM THE TITANIC)

 படம் ஓடிய மொத்த நேரம் பத்து நிமிடங்கள் தான். அந்தக் காலத்தில் தியேட்டர்களீல் இப்படி ‘ஒரு ரீல்’ படங்கள் ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன.

பனிப்பாறைகளைப் பற்றிய பல போட்டோ படங்களுடன்  இந்தப் படம் திரையிடப்படவே திரையரங்குகளில் கூட்டம் ஏராளமாக வந்து குவிந்தது.

நியூ ஜெர்ஸியில் ஒரு ஸ்டுடியோவிலும் நியூயார்க் துறைமுகத்திலும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

கடைசியில் டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதி தான் இந்தப் படத்திற்கும் நேர்ந்தது.

பாதுகாப்பாக ஒரு ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த  இந்தப் படத்தின் ஒரே ஒரு பிலிம் காப்பி அந்த ஸ்டுடியோ 1914ல் தீப்பற்றி எரிய அதில் அழிந்தது!

 டைட்டானிக் பற்றி இதுவரை 20 திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்டிருக்கின்றன.

28 டாகுமெண்டரி படங்கள் இந்த விபத்தைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

இன்னும் சுமார் 31 தொலைக்காட்சித் தொடர்கள் இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன! 

**

Tamil Poet Arunagirinathar used History sheeter in his poems! (Post No.15,282)

 Written by London Swaminathan

Post No. 15,282

Date uploaded in London –  17 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions. Arunagirinathar used this word.

Of late we find the word History sheeter in Indian English Newspapers almost every day. We have the headlines like

History sheeter arrested,

History sheeter shot dead in police encounter

History sheeter escaped from lock up etc.

It has become a journalist cliché.

Interestingly Tamil poet Arunagirinathar used the word in one of his Tiruppugaz songs about 500 years ago. He composed thousands of poems on Lord Skanda/Kartikeya/ Muruga in Tamil; we are fortunate to recover over 1300 of his pomes sung in 200 Muruga shrines in South India. A few are composed in Sri Lanka and North India. He even sang about the unknown Bhairavi Vana on the banks of Sarswati River. He also made a controversial statement that Tirupati Balaji is Lord Subrahmanya!

In the following song composed near Kumabakonam in Tamil Nadu, he listed 11 types of wicked people who will be reborn as low lives like dogs or worse than dogs.

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்

     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்

          ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் …… பரதாரம்

AchAra veenak kudharkka dhuttargaL

     mAthA pithAvaip pazhiththa dhuttargaL

          AmAvin Unaich cheguththa dhuttargaL …… paradhAram

AgAdh enAmaR posiththa duttargaL

     nAnA upAyach charithra dhuttargaL

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்

செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

          AvEsa neeRaik kudiththa dhuttargaL …… thamiyOrsong

……………………………………….

……… Meaning ………

AchAra veenak kudharkka dhuttargaL: Those despicable people lacking in discipline and engaging in controversial arguments;

mAthA pithAvaip pazhiththa dhuttargaL: those base people who abuse their parents;

AmAvin Unaich cheguththa dhuttargaL: those cruel ones who kill the cows for eating the beef;

paradhAram AgAdh enAmaR posiththa duttargaL: those depraved ones who cohabit with others’ wives without any pricking of conscience;

nAnA upAyach charithra dhuttargaL: those History Sheeters who are notorious for resorting to multiple trickeries;

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

AvEsa neeRaik kudiththa dhuttargaL: those immoral people getting intoxicated by cosuming alcohol;

thamiyOrsong kUsAdhu sErap paRiththa dhuttargaL: those thieves who usurp, without compunction, the entire wealth of helpless people;

UrArgaL Asaip pidhatru dhuttargaL: those blabbermouths who go on prattling that they possess all the avarices of the entire town;

kOlAla vALviR serukku dhuttargaL: those arrogant rogues brandishing swords and bows stridently;

gurusEvai kUdAdha pAvath thavaththa dhuttargaL: those sinful people who had not deserved to do any service to their masters and kept piling up sins and vices; and

eeyAdhu thEdip pudhaiththa dhuttargaL: those stingy people who amass wealth and hide it away. – all those wretched people

kOmALa nAyiR kadaip piRappinil uzhalvArE: will take a birth baser than that of a boisterous mad dog and suffer in that birth miserably.

………………………………………..

It was in praise of Shiva temple at Tiru Nageswaram.

* NagEsan is Lord SivA’s name in ThirunAgEswaram, 3 miles east of KumbakONam.

–Subham—

Tags. History sheeter, Tiruppugaz, Arunagirinathar , Journalist cliché, 11 types, wicked people, dog life

 BEAUTIFUL CARTOONS FROM DECCAN CHRONICLE NEWSPAER UP TO 17-12-2025.

FIFTEEN BEAUTIFUL CARTOONS FROM DECCAN CHRONICLE NEWSPAER UP TO 17-12-2025.

POSTED BY LONDON SWAMINATHAN.

–SUBHAM–

TAGS- CARTOONS, DECCAN CHRONICLE, 17 12 2025

நாயாகப் பிறக்கும்  11 துஷ்டர்கள்; திருப்புகழ் சொல்லும் அதிசய விஷயம்! (Post.15,281)

Written by London Swaminathan

Post No. 15,281

Date uploaded in London –  17 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முன்னர் ஒரு கட்டுரையில் நரகத்தில் விழும் 11  குண்டர்கள் யார் என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பட்டியலிட்டத்தைக் கண்டோம் இன்னும் ஒரு பாடலில் 11 துஷ்டர்கள் நாயாகப் பிறப்பார்கள் என்று அவர் சபிக்கிறார்.

A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions. Arunagirinathar used this word.

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்

     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்

          ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் …… பரதாரம்

ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்

     நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்

A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions.

          ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் …… தமியோர்சொங்

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்

     ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்

          கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் …… குருசேவை

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்

     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்

          கோமாள நாயிற் கடைப்பி றப்பினி …… லுழல்வாரே

வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி

     பேரார வாரச் சமுத்தி ரத்தினில்

          மீளாம லோடித் துரத்தி யுட்குறு …… மொருமாவை

வேரோடு வீழத் தறித்த டுக்கிய

     போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்

          வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு …… வயலூரா

நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்

     மாயாவி காரத் தியக்க றுத்தருள்

          ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு …… வடிவான

நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி

     யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்

          நாகேச நாமத் தகப்பன் மெச்சிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் … ஆசார ஒழுக்கங்களில்

குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள்,

மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள் … தாய் தந்தையரை இழிவு

செய்யும் துஷ்டர்கள்,

ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் … பசுவின் மாமிசத்துக்காக

அதைக் கொல்லும் துஷ்டர்கள்,

பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் … பிறர்

மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த துஷ்டர்கள்,

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்

செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள், A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions.

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் … வெறியேற்றும் கள்ளைக்

குடித்த துஷ்டர்கள்,

தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் … தனியாய்

அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி எடுத்த துஷ்டர்கள்,

ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் … ஊரில் எல்லாரின்

ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள்,

கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் … ஆரவாரத்துடன்

வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும்

துஷ்டர்கள்,

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் … குருவின்

சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள்,

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் … மற்றவர்க்குக் கொடுக்காமல்

பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள்,

கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே … இந்த

துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

வீசாவிசாலப் பொருப்பெடுத்து எறி … பெரிய மலை போன்ற

அலைகளை வீசி எடுத்து எறிகின்ற,

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில் … மிக்க ஓசையை உடைய கடலின்

மத்தியில்

மீளாமல் ஓடித் துரத்தி யுட்குறும் ஒருமாவை …

திரும்பிவரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக ஒளிந்த சூரனை

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய … வேருடன் விழும்படியாக

வெட்டிக் குவித்த

போராடு சாமர்த்தியத் திருக்கையில் வேலாயுதா … போரினைச்

செய்த திறமைவாய்ந்ததும், உன் திருக்கரத்தில் உள்ளதுமான

வேலாயுதனே,

மெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலூரா … உண்மை வாய்ந்த உனது

திருப்புகழை யான் ஓதி நீ பெற்றுக் கொண்ட வயலூர்ப்பதியின் இறைவா,

நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர் … கேடு முதலிய தீயன

விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில்

தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய

மாயாவிகாரத்து இயக்கு அ றுத்தருள் … மாயை சம்பந்தமான

துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும்

ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு வடிவான … ஞான உபதேசம்

செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான

நாதாவெனா முன் துதித்திட … நாதனே என்று முன்னொரு

காலத்தில் உன் தந்தை துதிசெய்ய

புவி ஆதார மாய்கைக்கு முட்ட முற்றருள் … உலகோருக்கு ஒரு

ஆதாரச் சாதனம் (ப்ரமாணம்) ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள்

முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி,

நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே. … நாகேசன்*

என்ற திருநாமத்தைக் கொண்ட உன் தந்தை சிவபெருமானால் மெச்சப் பெற்ற பெருமாளே.

(திரு கோபாலசுந்தரம் கொடுத்த விளக்கம்; கெளமாரம்.காம் )

* கும்பகோணத்துக்குக் கிழக்கில் 3 மைலில் உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானின் பெயர் நாகேசர்.

subham—

Tags- History sheeter, 11 துஷ்டர்கள், திருப்புகழ் , அருணகிரிநாதர், நாய் பிறப்பு

Hinduism through 500 Pictures in Tamil and English-31; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-31 (Post.15,280)

Written by London Swaminathan

Post No. 15,280

Date uploaded in London –  17 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Durga is a very popular deity. The general description of Durga given in Kashyapa silpa represents her as having four arms, two eyes, high hips, high breasts and all ornaments. She holds the conch and the discuss in her upper hands, while her right lower hand presents the Abhaya posture and the left lower hand rests the waist. She stands on a lotus pedestal and has a breast band of serpents and a red petticoat.

According to the Silparatna, Mula Durga holds in her lower hands the bow and the arrow.

From Mahabalipuram comes the figure of a Durga who stands on the buffalo’s head. She has eight arms, in the upper most of which are found the discuss and the conch. The other weapons held are the sword and the bell on the right side and the bow and the shield on the left. The lowest of the right hands holds evidently a Sriphala or the bel-fruit. And the corresponding left has a parrot perching on it and rests freely on the waist of the goddess. The necklace, breast band and the garment, hanging in folds down to her feet deserve to be  noticed. The absence of finger rings on eight hands of the goddess is peculiar.

The illustration shows also other figures surrounding the goddess, viz., two male devotees with peculiar head dress kneeling at her feet, two female attendants on either side holding the sword and the bow, two demi gods, one of whom is carrying a chauri, and a lion and a deer.

***

In another Mandapa at Mahabalipuram is a sculpture evidently of  the same goddess with the lion and the deer , pairs of demi gods on the sides and devotees at the feet, one of whom is either cutting off his hair or  his neck. The goddess has only four arms and stands on an ordinary pedestal but not on the buffalo’s head.

At Sri Mushnam in South Arcot is an image of Durga  with eight arms showing almost the same symbols as those of the figure at Mahabalipuram described above, the only exception being that instead of  the bell in one of the right hands , she is holding an arrow. The figure stands on the head of a buffalo without any other accompanying attendants and has an umbrella overhead.

Images of Durga with four or more arms standing on the head of a buffalo  are generally found placed on the niche of northern wall of the central shrines of Siva temples in south India.

Occasionally, however, they may stand on ordinary pedestal without the buffalo’s head, as at Tiruvotriyur near Chennai.

In the Vishnu temple at Tirumalisai is a similar image, which is said to be Lakshmi, but perhaps represents Durga without the buffalo head.

Mahisasuramardini is represented in the Nrisimhaprasada as the youthful but angry Parvati with three broad eyes , a slender waist, heaving breasts, one face and twenty hands. Below her is the buffalo demon with his hand cut off and rolling on the ground. A man emerging from the buffalo’s neck is seen holding a weapon in his hand, abject with fear. Pierced by the trident of the goddess, he is vomiting blood. The lion too on which the goddess rides attack the giant with its mouth while the noose held by the gooses is tightly fastened around his neck. The goddess’ right leg is placed on the lion while the other steps on the body of the demon. This form of Chandi is propitiated by those who wish to destroy their enemies. The ruling family of Mysore has Chamunda – Chandi for its tutelary deity.

***

Durga is Krishna’s sister

The puranas say that Durga was born of Yashoda in order to save the life of Krishna, who was just then  born to Devaki. The children were exchanged under divine intervention. Kamsa, the cruel brother of Devaki , who had vowed to kill all the children of his sister, thought that this female child was Devaki’s and dashed it against a stone. But, then, the child flew into air and assuming the form of Durga/ Maha Maya mocked him and went away. On account of this she is known as the sister of Vasudeva Krishna.

***

Durga , Chamunda and Mahishasuramardini are seen holding the Vaishnavite symbols of discuss and conch.

Mahisa asura = buffalo demon

It is stated that the active energy of Siva, which is Vishnu himself, receives the nameKkali while it assumes an energy mood, that in battles it is recognised as Durga and that in peace and pleasure it takes the form of Bhavani/ Parvati.

Chamunda is another form of Parvati when she killed the giant called Chanda – Munda

The Silpa sastra mentions a Chandika/ Chamunda of eighteen arms to whom God Siva presented trisula/trident Krishna, the conch, Agni, the weapon called Sakti.

According to Markandeya Purana, the goddess that killed the buffalo demon was made up of the fierce radiance of Siva, Vishnu and Brahma while all other gods contributed the powers peculiarly characteristic of them for the formation of her limbs and ornaments.

Chamunda may be represented with 8, 10, 12 or 16 arms made either of wood or of mortar. When in dancing posture she must have 8, 6 or 4 hands. She is known by name Karaali or Bhadrakaali when she has 8 arms, Kaala bhadraa when she has 6 arms, and Kaali when she has 4 arms.

Bhadrakaali has a terrible face, fat breasts, protruding teeth and a long tongue and wears a garland of skulls.

She rides on a lion and stamps under her foot the head of the buffalo demon.

Hemadri quoting the Vishnudharmottara says that Bhadrakali has 18 arms and is seated in the aalidha posture in a car drawn by four lions. When worshipped by Brahmanas she has 10 arms, Jatamakuta and all ornaments.

***

Kaalabhadraa has a beautiful white form but is fierce, being worshipped in burial grounds under the name of Karaala bhadraa, seated in the Viirasana posture with the foot placed over the head of the buffalo demon. The same goddess when worshipped by the Kshatriyas is called Kaali or Mahaa Kaali. In this form she ordinarily holds a trident or sword in one hand and a skull or a cup of wine or fire in the other, rides on a corpse and has a lean stomach.

The owl is her vehicle.

She wears the tiger skin, a scarf of elephant’s hide and a garland of heads; has three eyes and the ear ornaments are shaped like conches.; and is fond of flesh and blood. She is followed by evil spirits who fill the four quarters with their roar, and she roams about the earth riding on their shoulders.

Kali is represented sometimes with 12 or 16 arms and called Charcharaa and Bhairavi respectively.

–subham—

Tags-Hinduism through 500 Pictures in Tamil and English-31; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-31, Durga, Kali,Chamunda, Mahisauramardini

ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு?  பாபா கூறிய கதை! (Post.15,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,279

Date uploaded in London –   17 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கதை!

ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? ஶ்ரீ சத்யசாயிபாபா கூறிய கதை! 

ச. நாகராஜன்                      

ஶ்ரீ சத்யசாயிபாபா தெலுங்கு மொழியில் அருவியென அருளுரைகளைப் பொழிவது வழக்கம்.

‘ஒக சின்ன கதா’ என்று அவர் கூறினால் பக்தர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவர். ஒரு அற்புதமான கதையும் அத்துடன் அழகிய நீதியும் உபதேசமாகக் கிடைக்கும் என்பது அவர்களின் அனுபவம். 

பாபா கூறிய இரு கதைகளைப் பார்ப்போம்.

ரிஷியின் மதிப்பு!

பசுவைப் பராமரியுங்கள். ஏனெனில் அது தான் தன்னலமற்ற சேவையின் வடிவம். தர்மத்தின் உருவம்.

ஆகவே தான் புதிதாகக் கட்டிய வீட்டின் க்ரஹப்ரவேசத்தின் போது முதலில் பசுவை வீட்டிற்குள் செல்லச் செய்கிறோம்.

.

ஒரு சமயம் ஒரு ரிஷி திரிவேணி சங்கமமாக அமையும் கங்கா யமுனா சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தில் குளிக்கச் சென்றார். அவர் நதியில் அமுங்கிக் குளித்த சமயத்தில் சில மீனவர்கள் தங்கள் வலையை வீசினர். அவர்கள் வீசிய வலைக்குள் இந்த ரிஷி சிக்கினார்.

நல்ல பெரிதான ஒன்றைப் பிடித்திருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் வலையை மீனவர்கள் இழுக்க வலைக்குள்ளே பார்த்தால் அகட்டிருப்பது ரிஷி!

தங்கள் வலைக்குள் அகப்பட்டிருப்பதால் ரிஷி தங்களுக்குச் சொந்தம் என்று மீனவர்கள் வாதாடினர். வழக்கு அரசனிடம் சென்றது.

அரசனிடம் ரிஷி தன்னை விடுவிக்கும் முன்னர் தனக்கான விலையை முதலில் மீனவர்களிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? அரசன் திகைத்தான்.

ஆயிரம் வராகன் தருகிறேன் என்றான் அரசன். ரிஷி அது மிகவும் மலிவாகத் தன்னை நினைப்பதாகும் என்றார்.

ஐயாயிரம் வராகன் தருகிறேன் என்றான் அரசன். ரிஷி அதையும் மறுத்தார். அனைவரும் ஆளுக்கு ஒரு விலையைச் சொல்ல அவற்றை எல்லாம் ரிஷி மறுத்து விட்டார்.

அப்போது அரசவையில் இருந்த ஒரு யோகி தான் சரியான விலையைக் கூறுவதாகச் சொல்ல அனைவரும் அவரை ஆவலுடன் பார்த்தனர்.

யோகி, “ஒரு பசுவைக் கொடுங்கள். அதுவே ரிஷியின் மதிப்பிற்குச் சரி சமமானது” என்றார்.

ரிஷியும் அதை ஒப்புக் கொண்டார். பசு கொடுக்கப்பட்டது. ரிஷி விடுவிக்கப்பட்டார்.

அப்படி ஒரு மதிப்பைக் கொண்டது பசு. அதை போஷிக்க வேண்டும். ஆராதிக்க வேண்டும்.

     பாபா 19-8-1964 அன்று சென்னையில் ஆற்றிய உரையிலிருந்து

நல்ல நடத்தை தொடர்ந்து வரும்!

நல்ல நடத்தையும் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதுமே உலகியல் வாழ்விற்கு உகந்ததாகும்.

ஆன்மீக வாழ்வைப் பொருத்தமட்டில் இது மிகவும் அவசியம்.

ஒரு மனிதனை அவனது குணாதிசயத்தாலும் நடத்தையாலும் அவன் செய்கையாலுமே நாம் மதிப்பிட முடியும்.

ஒரு ஊரில் இரண்டு பெண்கள் இருந்தனர். இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்தனர். முதலாமவளிடம் ஐந்து பசுக்கள் இருந்தன. இன்னொருத்தியிடம் ஒரே ஒரு பசு தான் இருந்தது. ஐந்து பசுக்கள் வைத்திருந்தவள் ஒரு ஊதாரி. எதையும் வீணாக்குபவள். ஒரு பசு வைத்திருந்தவளோ சிக்கனமாகவும் தேவை அறிந்தும் செலவழிப்பவள்.

ஐந்து பசுக்களை வைத்திருந்தவள் ஒரு பசு வைத்திருந்தவளிடம் பாலை தினமும் கொஞ்சம் கடனாகப் பெற்று வந்தாள். ஏனெனில் அவளது ஊதாரித்தனத்தால் அவ்வளவு பால் அவளுக்குத் தேவையாக் இருந்தது. பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தாலும் ஒரு பசுவை வைத்திருந்தவள் உதவி புரியும் மனப்பான்மையுடன் பாலைக் கொடுத்து உதவி வந்தாள். ஒரு நாள் திடீரென்று அவளுடைய பசு இறந்தது.

அவள் தான் தந்த பால் ஐம்பது சேர் அளவு என்றும் தினமும் தனக்கு ஒரு சேர் பால் தரவேண்டும் என்று மற்றவளிடம் வேண்டினாள்.

ஆனால் ஐந்து பசு வைத்திருந்த பணக்காரிக்கோ கோபம் வந்தது.

தான் அவளிடம் ஒரு போதும் பாலைக் கடனாகப் பெற்றதில்லை என்று வாதித்தாள்.

விஷயம் நீதிபதியிடம் சென்றது. அவர் சற்று யோசித்தார்.

பிறகு இருவரிடமும் ஐந்து செம்பு நீரைத் தந்தார். உங்கள் கால்களை கழுவிக் கொண்டு சுத்தமாக வாருங்கள் என்றார்.

பணக்காரி ஐந்து செம்பு நீரையும் ஒரேயடியாகக் காலில் ஊற்றினாள். அழுக்கு அப்படியே இருக்க உள்ளே வந்தாள். ஏழையோ ஒரு செம்பு நீரால் தன் கால்களை முற்றிலும் கழுவி சுத்தமாக உள்ளே வந்தாள். நான்கு செம்பு நீர் பத்திரமாக அப்படியே இருந்தது.

நீதிபதி உண்மையை உணர்ந்தார். அவர் 50 சேர் பாலை ஏழைக்குத் தருமாறு தன் தீர்ப்பை அளித்தார்.

நல்ல நடத்தை என்பது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால் ஒருவரின் கூடவே வந்து தொடரும்.

                         பாபா 17-8-1964 அன்று சென்னையில் ஆற்றிய உரையிலிருந்து.

–subham—

Purananuru (Tamil Sangam Book) wonders -2; Upanishad and Kalidasa in verse Two! (Post.15,278)

Written by London Swaminathan

Post No. 15,278

Date uploaded in London –  16 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Item 260

Taittirīya Upaniṣad describes the five “sheaths” of a person (Sanskrit: puruṣa), starting with the grossest level of the five evolving great elements:

From this very self did aether come into being; from aether, air; from air, fire; from fire, water, from water, the earth; from the earth, organisms; from organisms, foods; and from foods, people. Different from and lying within this people formed from the essence of foods is the self consisting of lifebreath. Different from and lying within this self consisting of breath is the self consisting of mind. Different from and lying within this self consisting of mind is the self consisting of perception. Different from and lying within this self consisting of perception is the self consisting of bliss.[4]

In the Śvetāśvatara Upaniṣad, the deities is identified as the source of the great elements:

Some wise people say it is inherent nature, while others say it is time – all totally deluded. It is rather the greatness of deities present in the world by means of which this wheel of brahman goes around. Whom always encompass this whole world – the knowers, the architects of time, the ones with and without qualities, and the all-knowing ones – it is at their commands that the work of creation, to be conceived of as earth, water, fire, air, and aether, unfolds itself.[5]

The same Upanishad also mentions, “When earth, water, fire, air and aether arise, when the five attributes of the elements, mentioned in the books on yoga, become manifest then the yogi’s body becomes purified by the fire of yoga and they are free from illness, old age and death.” (Verse 2.12).

(from Wikipedia)

***

Tamil Sangam Book Purananuru Wonders- 2

Ancient Tamil Encyclopaedia -42; One Thousand Interesting Facts -Part 42

***

261

Purananuru verse two is very important from many angles. First and foremost is the science matter about five elements is from the Taittriya Upanishad. All the main Upanishads are written before Buddha (600 BCE). The same order of Five Elements is in modern science as well. First there was empty space (ether) a Big Bang (sound) happened billions of years ago. Then came the fire and water. Lastly the earth appeared and from water the living beings appeared. This order is seen in the Dasavatara stories as well.

262

Second important points is, Who is this Murinjiyur Mudi Nagarayar ?

His name is Mr Nagarajan. But if you give importance to Mudi (Crown or Hair), then it is Lord Siva who has a snake/Naga on his head. This was copied by Egyptian Pharaohs from the Hindus.

263

Third important point is NagaRAYar. We see the J is tamilized as Y. I have been arguing throughout my writings J was used only by Vedic Hindus. If one finds the migratory route of this letter J, one can easily find how Hindus spread their language throughout the earth. No ancient language has this J sound .

Another point is Western Scholars(??!!) have been arguing that letters J and Y were written in the same way and thus we get Yesu as Jesus, Yudha as Jew etc. I have shown this is absurd and here in the second verse also we see J becoming Y. This is Sanskrit grammar.

265

One more important point is look at the expressions

Three Fire of Brahmins

Four Vedas of Brahmins

Kanchana Srnga Himalaya (now they write it Kanchanjunga)= PorKottu imayam in Tamil.

Five Elements and Five Virtues

Each of the five elements has one power. That is compared with the powers of king which is also seen Sanskrit literature before Sangam literature.

266

Last but not the least The Big Controversy!

Here commentators wrongly suggested the Five and the Hundred mentioned in the verse refers to 5 Pancha Pandavas and Kauravas (100). And the lines say that the Chera king supplied food for both. Even scholars who don’t believe Kaliyuga date of 3102 BCE wrote that the Mahabharata war must have fought around 1500 BCE. This Chera king wont fit into that time frames.

According to historical scholars we need at least five kings for every century. For 1500 years in BCE period, we need at least 75 Chera Kings or at least Tamil kings. We don’t have any such thing in Sangam literature.

The word PERUNCHORU misinterpreted

The verse says that the Chera king gave both the Fives and the Hundreds (Pandavas and Kauravas) PERUNCHORU. Literal translation of this word is Big Cooked Rice (food).

267

The Hindu tradition is that if someone dies, they offer the Pitrs/ departed souls RICE BALLS on the death anniversary. This is called Perunchoru and Pindam in Sanskrit. I am not interpreting it out of my imagination. The same word PERUNCHORU occurs in (புறநானூற்றில் பெருஞ்சோறு 220, 235, 261) Puram 220,235,261 all these are elegy poem. Morever the Purapporul Venbamalai used the word Pindam which is food served in funeral rites.

Chera/Kerala King Uthiyan Cheralathan was praised as one “who provided BIG food” for the Pandavas and Kauravas (lot of people took it for actual feeding. But the word Big Food (Perunchoru பெருஞ்சோறு in Tamil) means big feast given in memory of the dead.

268

More Pancha Bhuta references:

Pari. 3-4; 3-66; 3-77. Pari.13-18; 24-15

Mathur. -line 453; Puram-2- 1; 20-1; 51-1;55-15

Pathitr- 14-1; Kurun.3-1.

Tol -305; Murukku. Line 254

The strange coincidence is, all the poets use the Pancha Bhuta matter in the very beginning of the poems.

Post Sangam book – Tiruk Kural 271

269

Earliest Anthathi

The first 5 lines gives us the first sample of Anthaathi genre (last word of the previous line should be the first word of the next line in Antham + Aathi. Both Sanskrit words!)

270

Kalidasa Echo

The poet is well versed in Kalidasa who lived in Second Century BCE. In his first ten verses of Kumarasambhava Kalidasa described the beautiful Golden Peaked Himalaya. And in the first ten verses of Raghuvansa described the glory of Raghu dynasty where he says they rule extended up to oceans.

***

மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும்என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வலியும், தெறலும், அணியும், உடையோய்!

நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்

யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!

வான வரம்பனை! நீயோ, பெரும!

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,

நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம்பதின் மரும்பொருது, களத்து ஒழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

பாஅல் புளிப்பினும், பகல்இருளினும்,

நாஅல் வேதநெறி திரியினும்

திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,

நடுக்கின்றி நிலியரோ வத்தை; அடுக்கத்துச்,

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கிற்றுஞ்சும்

பொற்கோட்டு இமயமும்பொதியமும்போன்றே!

****

Note Five Bhutas, For Vedas, Three Fires !

(Following is taken from Vaidehi Herberts translation)

Puranānūru 2, Poet Muranjiyur Mudinākanār sang to Cheraman Perunchōtru Uthiyan

Cheralathan

Your nature is like the five elements – the earth filled with sand,

the sky raised above the earth, wind that blows in the sky, fire that

sweeps up the wind, and water that differs from that fire.

You tolerate your enemies and your deliberation is broad.  You are

strong, destructive and merciful.  The sun rises from your ocean

and descends into your ocean in the west with waves topped with white surf.

………, or the four Vedas swerve from

………………

May you never be shaken like Mount Pothiyam, like the Himalayas with its

golden summits, where long-eyed does sleep on the slopes near their fawns

with tiny heads, at dusk, in the light of three fires lit by the Brahmins

who perform difficult rituals!

–Subham—

Tags- Tamil Sangam Book Purananuru Wonders- 2, Ancient Tamil Encyclopaedia -42; One Thousand Interesting Facts -Part 42, Upanishad, Kalidasa

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: பெரியாழ்வார், அருணகிரிநாதர், எம். ஜி.ஆர். பாடல்கள்! (Post.15,277)

Written by London Swaminathan

Post No. 15,277

Date uploaded in London –  16 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மூன்றெழுத்தில்

என் மூச்சிருக்கும் அது

முடிந்த பின்னாலும்

பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு

ஊர் இருக்கும் அந்த

ஊருக்குள் எனக்கொரு

பேர் இருக்கும்

கடமை அது கடமை

       (மூன்றெழுத்தில்…)

1964-ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத் தாய்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

***

புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர். தி மு க DMK கட்சியில் இருந்தபோது பாடிய இப்பாடல் சிலேடைப் பொருள் உடைத்து. அவர் குறிப்பிட்ட மூன்று எழுத்து கடமையா அல்லது தி முக வா ? என்பது சிலேடை. ஆனால் தி மு க ரசிகர்கள் அதைக் கேட்டவுடன் அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து, தியேட்டர் கூரை கீழே விழுமோ என்று அஞ்சும் அளவுக்கு கைதட்டி வரவேற்றனர்.  அவர்கள் நம்பிய மூன்று எழுத்தினை அவரே அழித்து நான்கு எழுத்துக் கட்சியை ADMK உண்டாக்கினார்; பின்னர் அது ஆறு எழுத்துக் கட்சியாக AIADMK மாறியது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ! இதை எழுதக் காரணம் அவர்கள் நம்பிய மூன்று எழுத்து அழியக்கூடியது; ஆனால் பெரியாழ்வாரும் , அருணகிரி நாதரும் மூன்று எழுத்து என்ற சொற்களை பயன்படுத்திப் பாடியுள்ளதைக் காணுங்கள் இவர்கள் சொல்லும் மூன்று எழுத்து சிந்து, கங்கை  நதிக்கரைகளிலும் இமய மலை உச்சியிலும் ஒலித்த, ஒலித்துக்கொண்டிருக்கிற ஓம்காரம்! அப்பர் தேவாரத்தில் ஓம்காரம் சென்ற சொல்லே எண்ணற்ற இடங்களில் வருகிறது.

***

எம பயம் நீக்கென அரங்கனை வேண்டுதல் ;பெரியாழ்வார் பாடல்கள்

ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே

முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா

அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற

அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

பொருள்

ஒப்பற்ற விடையேறும் ரிஷபம்/ காளை சிவபெருமானும்,  நான்முகனும் உன்னை (உள்ளபடி) அறியமுடியாத பெருமை உடையோனே !  யமகிங்கரர்கள் இவனுக்கு ஆயுள்காலம் முடிந்தது என்று நினைத்து வருகையில்  எல்லா உலகங்களும் நீயே ஆகி மூன்று எழுத்துக்களாலான பிரணவ ஸ்வரூபியானவனும்  ஆன முதல்வனே! திரு அரங்கத்து அரவு (பாம்பு) அணைப் பள்ளியானே!. (யமகிங்கரர்கள்) அஞ்சும்படி பிடிக்கப் போகும் நாளன்று நீ என்னை காக்கவேண்டும்.

***

அருணகிரி நாதர்

ஓம் என்று பல பாடல்களில் அருணகிரி நாதர் குறிப்பிவிட்டாலும் அ,  உ, ம, என்று குறிப்பாகக் குறிப்பிடும் இடங்களும் உள. 

இகல வருதிரை பெருகிய சலநிதி

     நிலவு முலகினி லிகமுறு பிறவியி

          னினிமை பெறவரு மிடருறு மிருவினை …… யதுதீர

இசையு முனதிரு பதமலர் தனைமன

     மிசைய நினைகிலி யிதமுற வுனதரு

          ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி …… உமைபாகர்

மகிழு மகவென அறைகிலி நிறைகிலி

     மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி

          வசன மறவுறு மவுனமொ டுறைகிலி …… மடமாதர்

மயம தடரிட இடருறு மடியனு

     மினிமை தருமுன தடியவ ருடனுற

          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ …… தொருநாளே

சிகர தனகிரி குறமக ளினிதுற

     சிலத நலமுறு சிலபல வசனமு

          திறைய அறைபயி லறுமுக நிறைதரு …… மருணீத

சிரண புரணவி தரணவி சிரவண

     சரணு சரவண பவகுக சயனொளி

          திரவ பரவதி சிரமறை முடிவுறு …… பொருணீத

அகர உகரதி மகரதி சிகரதி

     யகர அருளதி தெருளதி வலவல

          அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் …… விடுவோனே

அழகு மிலகிய புலமையு மகிமையும்

     வளமு முறைதிரு மயிலையி லநுதின

          மமரு மரகர சிவசுத அடியவர் …… பெருமாளே.

………………………………………..

சயனொளி திரவ பர … சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,

அதி சிர மறை முடிவுறு பொருள் நீத … அதிக மேன்மை

உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,

அகர உகரதி மகரதி சிகரதி … அகரம் போன்ற முதற்பொருளே,

உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,

யகர அருளதி தெருளதி … யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,

………………………..

திருவிடைக்கழியில் பாடிய திருப்புகழில்,

சிவனுக்கொரு சொற்பகர்வோனே  என்று ஓம் என்னும் ஓரெழுத்தை அல்லது ஒரு சொல்லைக் குறிப்பிடுகிறார்.

எட்டு குடியில் முருகனைப்பாடும்போது, ஓம்பெறும் ப்ரணவாதியுரைத்தெந்தனையாள்வாய் என்று வேண்டுகிறார்

சுவாமிமலையில் காமியத்தழுந்தி என்று தொடங்கும் திருப்புகழில் ஓமெழுத்தில் அன்புமிகவூறி ஓவியத்திலந்தமருள்வாயே — என்கிறார்  இப்படிக் கணக்கற்ற பாடல்களில் ஓம்காரத்தைக் காண்கிறோம்.

–subham—

Tags மூன்றெழுத்து என் மூச்சு பெரியாழ்வார், எம் ஜி ஆர் , அருணகிரிநாதர், பாடல்கள்!