HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

Wigs of British Judges! Seven Step Good-bye! Purananuru wonders-60 (Post.16,138)

Written by London Swaminathan

Post No. 16,138

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-60;Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100

***

Item 841

Let me give you wonders from one more book. The name of the book is Porunar Atruppadai (aatruppadai).

Author- Mr or Miss Mudaththama Kanniyar (mudaththaama kanniyaar); some people think she is a oman because of the spelling Kanni; but it may mean garland as well; so maybe a man!

Lines-248; Hero of the poem- Karikal Choza (we have already  seen him in Paaatinappaalai)

This book Porunaratruppadai is one of the Ten Idylls known as Paththuppaattu, which is part of 2000 year old Sangam Tamil Literature. Porunan = a bard; aatruppadai = giving guidance.

The poet imagined himself/herself as a bard receiving a bounty from the famous king.

Summary of Wonders:

Robbers stopped robbery after listening to music;

Judgement with White Wig; British judges follow Karikal Choza!

Chariot with Four White Horses like Chariot of Krishna in Bhagavad Gita;

Karikal Choza walked Seven Steps following Rig Veda;

Bali offering to Crow; (also seen in Kuruntokai);

Seven stringed Yaaz (lyre or lute);

Description of a woman from Foot to Head;

Cloth looking as thin and as transparent as snakeskin;

Karma Theory; Rebirth; effect of fate;

9 flowers, 12 trees, 5 animals.

***

item 842

in the first 22 lines poet compared the lute to a pregnant woman. He also described how the lute was played. Robbers dropped their weapons as soon as they listened to it. Earlier we saw how even wild elephants stopped damaging d crops after listening to songs.

Nationalist poet Subramaniya Bhratiyar described  Kannamma in the lines “Veenaiyadi Nee Enakku, Mevum Viral Naan Unakku”; Oh Kannamma, You are the Veena/ I am the fingers that play on you. Probably he got it after reading these 20 ++ lines!

***

item 843

Kesaati paata Description (Head to Foot Description)

Hindus start describing a Goddess from Foot to Head and the reverse is followed for humans.

Because Goddess Eyes are powerful a devote can’t look at her radiance; so, they always pray for her side glance (Kadaik Kan in Tamil) only!

Here the description shows as if the poet saw a naked woman!

Here is what he/she described:

The singer woman had

Her tresses= as black as sand (if you go to a river you may see the black, smooth sediment)

Her eye brows= killing bows of warriors (beauties ‘Killing’ men is a phrase in Tamil);

Forehead= crescent moon;

Lips = utter sweet words; red in colour like Bombax malabarica flowers; silk cotton tree in Tamil is Ilavam maram.

Her teeth= shiny pearls;

Ears with pendants = looked like scissors that trim hair;

Her shoulders= like bamboo;

Fingers= kanthal flowers;

Finger nails= parrot beaks;

Voluptuous Breasts = so tight that you can’t insert even a thin rib or nib;

Navel= water ripple or whirlpool;

Waist = scarcely visible;

Her belt with beads=  like beehive with bees;

Thighs = trunks of huge female elephants;

Small feet= tongues of panting dogs;

Look= pea hen look.

We may wonder whether the poet saw a naked beauty or she was wearing a nylon transparent sari!

***

Item 844

Most of the above comparison is a cliché in Tamil and Sanskrit literature. You can read almost the same in Kalidasa.

But here is a word the poet coined for SCISSORS!

He says MAYIR KURAI KARUVI= Instrument that trims hair!

No shoes! She walked without shoes, so poor!

Poet says she developed red blisters in her feet when she walked on stones.

***

Item 845

Offers prayers to Forest God, says the poet (line 52).

Poet probably meant Goddess Durga, who is called Kaadukizaal (goddees of forest in other poems)

This shows Hindus worship Gods and Goddesses all along their way. We saw it in Paatinappalai and Perumpanatruppadai.

***

Item 846 Karma Theory

Sangam Tamils were Puka Hindus who saw god everywhere and belived in Karma Theory ; if you do something good that will have its effect in the following seven births . if you have already done good things in your previous birth something good will happen unexpectedly.

Here the poet adds,

O chief of bards whose songs have value great!

It is the fruit of good deeds done by thee

In a former birth that made thee meet me here

Nor miss the proper way in ignorance (line 59)

(J V Chelliah, year 1946, followed Nachinarkkiniyrar commentary).

***

Item 847  Master of Seven Stringed Yaz! (line 63)

ஏழிசை (Ēḻicai) translates to “The Seven Musical Notes” or “The Seven Swaras” in English.

In Tamil music tradition, it refers to the seven basic notes of a musical scale, which correspond directly to the Carnatic and Hindustani classical music notes (Swaras), as well as the Western musical notes.

  • Kural (குரல்) – Sa (Shadjama) – Do / C
  • Thuttham (துத்தம்) – Ri (Rishabha) – Re / D
  • Kaikkilai (கைக்கிளை) – Ga (Gandhara) – Mi / E
  • Uzhai (உழை) – Ma (Madhyama) – Fa / F
  • Ili (இளி) – Pa (Panchama) – Sol / G
  • Vilari (விளரி) – Dha (Dhaivata) – La / A
  • Tharam (தாரம்) – Ni (Nishadha) – Ti / B

Seven strings for playing Seven Notes

***

Item 848 n Nice clothes like Snakeskin

The singing bard wore rags teemed with nits and lice and wet with sweat.lines 79-81

When he met the great king he treated the bard like a friend and gave

Clothes whose texture was so fine

Its threads could not be easily traced, and worked

With floral forms resembling skins of snakes.

In the halls bejwelled, smiling, comely maids

Pored out from spotless golden vessels full

Like cheering rain much stupefying drink

Repeatedly…………………………… lines 82-88

***

Item 849 Reference to great rishis/ ascetics

Lines 91-93

I drank that I might sooth my weariness

And rested in the wealthy palace here and

With joy at eve. Like rishis that enjoy

Devotion’s fruits by taking proper care

Of their own body’s health. I took good care

To rid me of journey’s weariness

Sangam poets were great Hindus! They tried their best o teach the tenets of Hindu religion at every available opportunity.

Even when the poet wanted to show the anger of Karikal Choza the poet compared him to Lord Muruga/Skanda/Kartikeya.line 131

***

Item 850 reference Good bye by walking Seven Steps

Line 166

After spending many days when the bard expressed his desire to return home, Karikalan showed his disapproval but at the end he gave the bard many gifts and walked seven steps with the leaving guest.

We see this Seven Step Walk before saying good bye even in Paranjothi Munivar’s Tiruvilaiyadal Puranam, just a 300 year old book.

This custom originated in the Rig Veda, oldest book in the world. Brahmins and other communities do this in Weddings. Rig Veda’s last book, tenth mandala. has a beautiful Wedding Song. A Hindu marriage is solemnised only when the bride and bridegroom walk around fire doing Seven Steps called Saptapadi. At each step they take a vow. This type of wedding was done by Vaisya community according to Silappadikaram.

  First Step (Nourishment): A promise to provide food, share household responsibilities, and nurture one another.

  Second Step (Strength): A vow to grow together in physical, mental, and emotional strength.

  Third Step (Prosperity): A commitment to share wealth, work for financial stability, and prosper together.

  Fourth Step (Family): A pledge to build a joyful home, raise children with love, and respect each other’s families.

  Fifth Step (Health): A promise to care for each other’s health, well-being, and happiness.

  Sixth Step (Companionship): A vow to remain lifelong best friends and walk as equals through all seasons of life.

  Seventh Step (Loyalty and Friendship): A final pledge of eternal love, loyalty, trust, and spiritual union through every lifetime.

No Hindi or Tamil Feature Film Song can beat the loving words in the Rig Veda Wedding Mantra.

***


Item 851 Bhagavad Gita Chariot line 165

I have a book of Tamil Bhagavad Gita in Tamil published by Ramakrishna Mutt where only for white horses pulling the Chariot of Arjuna with Krishna as the driver. Many pictures show only Four White Horses. Only with four horses one can have a smooth ride. Karikalan also gave the bard a chariot pulled by Four White Horses in addition to silk clothes, gold jewels, gold lotus hair pins for women.

***

Item 852 Balis to Crows

The non vegetarian food items and Karikalan’s  early life and how he got the crown etc are already explained in Pattinappalai.

Here the poet making a passing remark about the food given to crows by Hindus. But we get more details about religiously or ritually feeding crows by Hindus  in Kuruntokai poem 210.

***

Item 853  Origin of Wigs of Judges  (lines 187, 188)

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும்

நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

Why Do British Judges Follow a Tamil King?

By S Swaminathan November 13, 2011


Strange as it may look, British judges, magistrates and barristers follow a custom that was started by a Tamil king two thousand years ago. British judges and several others who preside over the courts of justice wear a white wig.

If we go to encyclopaedias, they don’t explain why they wear it or when it was exactly started. Ancient Egyptians wore wigs for protecting their heads from the scorching sun. Then Romans and others wore different types of wigs as symbols of aristocracy.

The British judiciary started wearing wigs from 17th century. Many of the commonwealth countries also followed it. Whenever the reason for the custom is asked many people say that it is the tradition or uniform for professional discipline or it shows experience. Actually it was started by the most famous Tamil king, Karikal Chola two thousand years ago. Crystal clear proof comes from the ancient Tamil Cankam (Sangam) literature.

Karikalan was the greatest of the Tamil kings for three reasons. He ruled vast areas of Tamil-speaking land, subjugating other Tamil kingdoms. He was the first Tamil king who went up to the Himalayas and carved his dynastic emblem there. Till today, there remains a Chola pass in the Himalayas. The second reason was he was a just king and his court of justice in Uraiyur became very famous. Tamil literature praises his justice and gives the story of wigs. And the third reason is the Grand Anaicut he built across the river Cauvery is one of the oldest dam s in the world. 

Though we did not have any historical records scholars have dated him around 1st century BC. He was a boy king – like the Egyptian Tutankhamen. He came to power while he was a teenager.

The Story of Wigs:

One day two elderly people came to his court seeking justice. They had a dispute among themselves. They decided that whatever the Uraiyur court says must be the final settlement. When they came in to royal court they were shocked to see a boy sitting as the judge. They were greatly disappointed – which Karikalan felt immediately by looking at their faces. Indeed the face is the index of the mind.

Karikalan politely asked the elders to take seats and told them to wait for the ‘judge’ and he went in. The entire assembly was puzzled. Then came an elderly person and sat on the chair. After carefully listening to the arguments of both the sides he gave his judgement. Both of them were immensely happy to hear a fair settlement. Now the assembly wanted to know who the elderly judge was. King Karikalan removed his white hair wig (Narai Mudi in Tamil) and revealed himself.  All applauded the Wisdom of the ‘Solomon of India’.

The proof for the anecdote is in three Tamil books:

1.      Porunar Atruppadai –lines 187-188. Porunar Atruppadai is one of the ten long poems of Tamil Cankam literature dated  between 1st to 3rd century AD

2.      Manimekalai- This is one of the five Tamil epics dated 3rd century AD  

3.      Pazamozi – poem 25 translation:

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

“The grey haired old men said the young man could not come to a decision about their case. They were delighted to find the Choza wore a grey wig and understood the case from listening to their statements”.

This proves that even before they learn the arts suited to their caste, men are “ripe for their duties” This book is dated around 5th century AD.

Nobody can deny the fact that Karikalan was the first one to use white wig in judiciary matters.

There are lot of interesting stories about Karikalan in Tamil literature. He had to fight his own relatives to get the throne after the death of his father Ilam Chet Senni. He escaped an arson attack, and his feet were charred and thus he got the name “Kari Kalan” (man with charred legs). The ancient custom in India is to select a king by the Royal elephant if nobody knew who the real heir apparent was. Karikalan was garlanded by the royal elephant when he was standing in the crowd. The episodes about his daughter Adi Mandi also formed the basis of several interesting stories.

–subham—

Tags–Purananuru wonders-60; Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100, Wigs of Judges, Item 853, seven steps, Karikal Choza 

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) Post No.16,115)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,115

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) 

ச. நாகராஜன்

பொன்மொழிகள் தொடர்கின்றன… 

161. I CAN

I Ought, Therefore I CAN.   – Kant

Politeness

An Englishman once said to the artist, James Mcnell Whistller, that the politeness of the French was ‘all on the surface’, to which he replied: ‘And a very good place for it to be’.

Professional Man – Amateur Man

A professional is a man who do is job when he doesn’t feel like it. An amateur is a man who can’t do his job when he does feel like it.     – James Agate

Immortal – Dream

If we are immortal souls, we are immortal here: death is but our great progression; let us begin to live as the immortals should.    – William Smith

Heart

My heart is wax to be moulded as she pleases, but enduring as marble to retain.   – Cervantes

Heart – Love

One loving heart sets another on fire.   – St Augastine

Gentleman

I would rather prove myself to be a gentleman by being learned and humble, valiant and inoffensive, virtuous and communicable, than by a fond ostentation of riches.   – Izaak Walton

Gentleman – Mind – Vigour – Softness

If you would fall into any extreme, let it be on the side of gentleness. The human mind is so constructed that it resists vigour and yields to softness.    – S. Francis de Sales

Fool – Life

Long is the night to him who is awake; long is a mile to him who is tired; and long is life to the fool who does not know the true law.     – Dhammapada

Futility

A constant smirk upon face and a whiffling activity of the body are strong indications of futility. Whoever is in a hurry, shows that the thing he is about is too big for him.   – Lord Chesterfield

171. Purpose – Wish

Great men have purposes: Others have wishes.

Revenge

It is certain that a man who studieth revenge, keeps his own wounds green, which would otherwise heal and do well.                                                                                                – Bacon

Reform – Public Opinion

It is not the many who reform the world; but the few who rise superior to that Public Opinion which crucified Our Lord many years ago.                – Charles Kingsley

Rich and Poor

There are two things needed in these days, first for rich men to find out how poor men live, and second, for poor men to know how rich men work.   

Routine

Routine as a law is deadly. Routine as a resource in the temporary exhaustion of impulse and suggestion is often our salvation.                – Phillips Brooks

Prupose

A man without a purpose is soon sown at zero.                    – Carlyle

நல்ல குறிக்கோள் நயவா மனிதனிலை

ஒல்லி யிழிந்து விழும்               –  உலக உள்ளங்கள் (484)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

You will find poetry nowhere, unless you bring some with you.    – Joubert

கவியின் கனிவெங்கும் காணாய் உனதுன்

கவியுணர்வில்லை எனின்                   –  உலக உள்ளங்கள் (243)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

Poetry is the record of the best and happiest moments of the happiest and best minds.  – Shelley

ஆன்ற பெரியோர் அனுபவ வாழ்வுகளின்

சான்றுகளே காவியங்கள்                 –  உலக உள்ளங்கள் (750)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetical Mind

A right moral state of heart is the formal and scientific condition of a poetical mind.  – Newman

நீதிநெறி நிறைந்த நெஞ்சமே நேரேசீர்

ஓது கவியின் உளம்                       –  உலக உள்ளங்கள்

                                         ஜெகவீரபாண்டியனார்

180. Idleness

Idleness is the key of beggary, and the roof of all evil.   – Purgeon

சிறுமைத் துயரெல்லாம் சேரவரும் சோம்பல்

வறுமைக் குரிய வழி                     –  உலக உள்ளங்கள் (134)

                                         ஜெகவீரபாண்டியனார்

***

மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112)

Written by London Swaminathan

Post No. 16,112

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மஹாபாரதப் போர் நடந்த தேதி பற்றி அறிஞர்கள் கூற்று என்ன ?

2

மஹாபாரதத்துக்கும் மர்ம எண் 18-க்கும் உள்ள தொடர்பு என்ன ?

3

சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இந்த இதிகாசம் குறித்து என்ன சொன்னார்கள் ?

4

உலக இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் மஹா பாரதத்தின் சிறப்பு என்ன ?

5

மஹாபாரதத்தை எழுதியர் யார் ? மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் யார் ?

6

மஹாபாரத யுத்தத்தில் எத்தனை டிவிஷன் படைகள் இருந்தன   ? அவைகளின் கமாண்டார்கள்/ தளபதிகள் யார் ?

7

பழங்காலத்தில் தமிழ்மொழியில் இதை மொழிபெயர்த்தர்களா ? அது பற்றிய செய்தி எந்தக் கல்வெட்டில் உள்ளது ?

8

பீஷ்மர் அக்குபங்க்சர் முறையை பயன்படுத்தி எத்தனை நாட்களுக்கு அம்புப் படுக்கையில் இருந்தார்; ஏன் ?

9

அர்ஜுனன் தன்னுடைய சொந்த மகனையே இழந்தான் ! அது எப்படி?

10

மறைந்து வாழவேண்டிய 13 ஆவது ஆண்டில் யார் யார் என்னென்ன வேஷம் போட்டார்கள் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

Sculpture of Chakra Vyuha- army formation– that caused the death of Arjuna’s son.

1.மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

**

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

**

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

**

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

***

2.மஹாபாரத்திலுள்ள 18 பருவங்கள்

சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக  விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, தமிழ் நாட்டுக்கு அகஸ்தியர் அழைத்து வந்தா குடிகள் 18,  சங்க இலக்கிய நூல்கள் 18, அதற்குப்பின் வந்த கீழ்க்கணக்கு நூல்களை 18, கணங்கள் 18, சைவத் திரு மடங்கள் 18…….இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது. மகாபாரதப் போரில் மொத்தம் 18 அட்சௌகிணி (11+7 Divisions) சேனை பங்கேற்றது. இதில் கௌரவர்களின் தரப்பில் 11 அட்சௌகிணி சேனைகளும், பாண்டவர்களின் தரப்பில் 7 அட்சௌகிணி சேனைகளும் சண்டையிட்டன.

 மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்

1.   ஆதிபர்வம்      

2.   சபாபர்வம்   

3.   வனபர்வம்    

4.   விராடபர்வம்                 

5.   உத்யோகபர்வம்                

6.   பீஷ்மபர்வம்                           

7.   துரோணபர்வம்                      

8.   கர்ணபர்வம்               

9.   சல்யபர்வம்                        

10. சௌப்திகபர்வம்                 

11. ஸ்த்ரீபர்வம்                       

12. சாந்திபர்வம்                       

13. அநுசாஸனபர்வம்                    

14. அஸ்வமேதிகபர்வம்             

15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    

16. மௌஸலபர்வம்                 

17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

****

பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள்

பகவத் கீதை 18 அத்தியாயங்களின் பெயர்கள்

  • அத்தியாயம் 1: அர்ஜுன விஷாத யோகம் (அருச்சுனின் கவலை மற்றும் ஏக்கம்)
  • அத்தியாயம் 2: சாங்கிய யோகம் (கீதையின் சாரம் மற்றும் ஆத்மாவின் தன்மை)
  • அத்தியாயம் 3: கர்ம யோகம் (செயல் மற்றும் கடமையின் வழி)
  • அத்தியாயம் 4: ஞான கர்ம சந்நியாச யோகம் (மெய்யறிவு மற்றும் தியாகம்)
  • அத்தியாயம் 5: கர்ம சந்நியாச யோகம் (செயல்களும் துறவும்)
  • அத்தியாயம் 6: த்யான யோகம் / ஆத்ம சம்யம யோகம் (தியானப் பயிற்சி)
  • அத்தியாயம் 7: ஞான விஞான யோகம் (இறைவனின் முழுமையான அறிவு)
  • அத்தியாயம் 8: அட்சர பிரம்ம யோகம் (எல்லையற்ற பிரம்மத்தை அடைதல்)
  • அத்தியாயம் 9: ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் (மிக இரகசியமான தூய அறிவு)
  • அத்தியாயம் 10: விபூதி யோகம் (இறைவனின் எல்லையற்ற பெருமைகள்)
  • அத்தியாயம் 11: விஸ்வரூப தர்சன யோகம் (இறைவனின் பேரருள் வடிவம்)
  • அத்தியாயம் 12: பக்தி யோகம் (இறைப்பற்றின் வழி)
  • அத்தியாயம் 13: சேத்ர சேத்ரக்ஞ விபாக யோகம் (உடலும் ஆன்மாவும்)
  • அத்தியாயம் 14: குணத்ரய விபாக யோகம் (இயற்கையின் மூன்று குணங்கள்)
  • அத்தியாயம் 15: புருஷோத்தம யோகம் (உயரிய பரம்பொருளின் நிலை)
  • அத்தியாயம் 16: தெய்வாசுர சம்பத் விபாக யோகம் (தெய்வ மற்றும் அசுர குணங்கள்)
  • அத்தியாயம் 17: ச்ரத்தாத்ரய விபாக யோகம் (நம்பிக்கையின் வகைகள்)
  • அத்தியாயம் 18: மோட்ச சந்நியாச யோகம் (முழுமையான துறவும் சரணடைதலும்

****

3.போரில் இறந்த பாண்டவர், கௌரவர், நினைவாக தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தான் . பெருஞ்சோறு என்பது போர் வீரர்களின் நினைவாக  திதி போல ஆண்டில் ஒரு தினத்தில் எல்லோருக்கும் விருந்து வைப்பதாகும் பெருஞ்சசோறு என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் வேறு இடங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = செத்த பின்னர் ;  வரையாது = அளவில்லாது)பெருஞ்சசோறு  படைத்த

xxx

பகவத் கீதை உபதேசத்தைக்  கூறியது

தொல் ஆணை நல் ஆசிரியர்

புணர்கூட்டு உண்ட  புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல — என்ற மதுரைக்கு காஞ்சி வரிகளில் உள்ளதை நச்சினார்க்கினியர் உரையில் காணலாம்.

xxxx

சிறுபாணாற்றுப்படை

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

(சிறுபாணாற்றுப்படை அடிகள்,  238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

xxx

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று,  அக்குரன் என்றபெயரைக் கூறுகிறது  ; தலை ஏழு வள்ளல்களில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது கர்ணன் ஆக இருக்கலாம்; ஆதாரம் கிடைக்கவில்லை என்று தமிழ் தாத்தா உ வே சா எழுதியுள்ளார்

போர்தலை மிகுத்த  ஈர் ஐம்பதின் மரோடு

துப்புத்துறை போக்கிய , துணிவுடை ஆண்மை

அக்குரல் அனைய கைவண்மையையே – 14-5/7  பதிற்றுப்பத்து.

xxx

கலித்தொகையில் நிறைய செய்திக ள் உள்ளன

திருதராட்டினை வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற முகத்தவன் – கலி25-1

என்று ஒரு புலவர்  குறிப்பிடுகிறார் 

கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பாடல் 25 வரிகள் 1-5

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,

பொருள்
வடமொழிப் பெயர்பெற்ற வயக்கறு மண்டிலம்போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகத்தார் புகழும் தன்மபுத்திரர் முதலியோர் உள்ளேயாகக் கையாலே புனையப்பட்ட அரக்கு மாளிகையை விரைந்து நெருப்பு சூழ்ந்தாற் போலக் களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிகள் உள்ளேயாக.

பாடல் 52 வரிகள் 1 3
நூற்றுவர் தலைவனை துரியோதனனை பீமன் வெல்வதை குறிக்கிறது

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்

பொருள்
முறம் போலுஞ் செவியாகிய மறைப்பிமாக வந்து பாய்ந்து மாறுபாடு செய்த புலியைக் கோபித்து மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரை போக்குகின்ற பீமசேனனை போல் ……..

பாடல் 101 வரிகள் 15 – 20
பீமன் துரியோதனனின் மார்பை பிளந்து ரத்தம் குடித்தல்

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
பொருள்
உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தையொக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனைப்போலும்

அசுவத்தாமா சிகண்டியை கொன்றது
பாடல் 101 வரிகள் 30 – 32

ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!

பொருள்
வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலேவென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப்போலும்

பாடல் 104 வரிகள் 56 – 59

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ.

பொருள்
போரைவிரும்பி மேலே சென்று துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன்முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும்

xxx

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்

பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

 (பெரும்பாணாற்றுப்படை அடிகள்,  415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பாடியவரை  பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைத்தனர் . இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இதை பிற்கால பாண்டியர் சாசனமும் உறுதிப்படுத்துகிறது

****

4. இரண்டு சிறப்புகள் மகாபாரதத்துக்கு உண்டு ; உலகிலேயே மிக நீண்ட புஸ்தகம்;இதுதான்  ஒரு லட்சம் ஸ்லோகங்களை , அதாவது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வரிகளை, அதாவது குறைந்தபட்சம்  பத்து லட்சம் சொற்களை உடைய புஸ்தகம் !

இரண்டாவது சிறப்பு :–

அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

****

5.மஹாபாரதத்தை எழுதியர் பிள்ளையார்; மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் வியாசர். இதை அருணகிரிநாதர் சில திருப்புகளாகில் 500 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவைத்துள்ளார்.

***

6.மஹாபாரத யுத்தத்தில் கெளரவர் தரப்பில் 11 டிவிஷன் படைகளும் பாண்டவர் தரப்பில் 7 11 டிவிஷன் படைகளும் இருந்தன.  

மாபாரதப் போரில்  கமாண்டார்கள்/ தளபதிகள் :–

பாண்டவர் படையின் தலைமை தளபதிதிருஷ்டத்துயுணன் (Dhrishtadyumna): பாண்டவர்களின் முழு 18 நாள் போருக்கும் இவரே தலைமைத் தளபதியாக (Supreme Commander-in-Chief) செயல்பட்டார். பாண்டவர் படையின் முக்கிய தளபதிகள் மற்றும் மாவீரர்கள்:அர்ச்சுனன் மற்றும் பீமன்: போர்க்களத்தின் முக்கிய வியூகங்களை தாங்கிப் போராடிய முதன்மைக் கமாண்டர்கள்.  சாத்யகி (Satyaki): யாதவப் படைப்பிரிவின் முக்கிய வீராதிவீரன்.  அபிமன்யு: அருச்சுனனின் மகன்,.கடோற்கஜன்: பீமனின் அரக்க மகன்.விராடன் மற்றும் துருபதன்: பாண்டவர்களை ஆதரித்த நாட்டின் மன்னர்கள்.

கௌரவர் படையின் தலைமை தளபதிகள் (சேனாதிபதிகள்)கௌரவர் தரப்பில் 18 நாள் போரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஐந்து முக்கிய தளபதிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றனர்: பீஷ்மர் (Bhishma) – 1 முதல் 10 நாட்கள் வரை): போரின் முதல் பத்து நாட்கள் கௌரவப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து கடுமையாகப் போராடினார். துரோணாச்சாரியார் (Drona )- 11 முதல் 15 நாட்கள் வரை): பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு குருவான துரோணர் தளபதியாகப் பொறுப்பேற்றார்.கர்ணன் (Karna – )16 மற்றும் 17-வது நாள்): துரோணரின் மறைவுக்குக் பின் கர்ணன் தளபதியாக நியமிக்கப்பட்டார்.சல்லியன் (Shalya – 18-வது நாள்): கர்ணனின் மறைவுக்குப் பின் இறுதி நாள் போரில் மத்வதேச மன்னரான சல்லியன் தளபதியானார். அஸ்வத்தாமன் (Ashwatthama): துரியோதனன் வீழ்ந்தபின் இறுதி இரவில் கௌரவப் படையின் கடைசித் தளபதியாகப் பொறுப்பு வகித்தான்.

கௌரவர் படையின் மற்ற முக்கிய கமாண்டர்கள்:துரியோதனன் மற்றும் துச்சாதனன்: கிருபாச்சாரியார் (Kripacharya): போரில் உயிர் பிழைத்த முக்கிய குரு மற்றும் தளபதி.கிருதவர்மன் (Kritavarma).

***

7.பாரதம் பாடிய மிஸ்டர் மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) பாரதத்தை மொழிபெயர்த்ததை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் மூலம் அறிகிறோம்; மேலும் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி  சங்கம் வைத்தும் என்று சின்னமனூர் பெரிய சாசனமும் முன்னாள் பாண்டியர்களைப் பற்றி கூறுகிறது

***

8.பீஷ்மர் போரில் வீழ்ததப்பட்டவுடன் அக்குபங்க்சர் முறையைப் பயன்படுத்தி 58 நாட்கள் அம்ம்புப்படுக்கையில் இருந்தார் ; அவர் தன்னுடைய வாழ்நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்ட்டி ப்பதாக அற்புத சபதம் செய்த போது அவர் நினைத்த தருணத்தில் உயிர்விடலாம் என்ற வரம்   அவருக்குக் கி டைத்தது . உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விட்டால் நல்லது என்ற நம்பிக்கை காரணமாக சுமார் இரண்டு மாதங்களுக்கு உயிரோடு உருந்து பின்னர் மேலுலகம் சென்றார் . இன்று ம் கூட ஆண்டுதோறும் பீஷ்ம அஷ்டமி என்று எல்லோரும், குறிப்பாக பிராமணர்கள், அவருக்குத் தர்ப்பணம் செய் கின்றனர் தந்தையின் காதலி — மீனவப் பெண்மணி – தனக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசனாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தாள்; அப்போது பீஷ்மர் உலகம் வியக்கும் பிரம்மச்சர்ய விரதம் பற்றி அறிவித்தார்  வானஉலகம் முழுதும் Terrific! Terrific! Wonderful! Amazing!   பீஷ்ம பீஷ்ம என்று ஆரவாரம் செய்தது. அவரது உண்மைப்ப பெயர் தேவவிரதன் . சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா என்ற பெண்ணுக்கும் மகனாக அவதரித்தார்  .

***

9 அர்ஜுனன் மகன் அபிமன்யு , கெளரவர்களின் சக்ர வியூயூகத்தில் நுழைந்து சண்டையிட்டான் ; அதிலிருந்து வெளிவருவதை அவன் கற்றுக்கொள்ளவில்லை ; இதனால் மரணம் சம்பவித்தது.

அருச்சுனனை திசைதிருப்ப  கௌரவப் படைகள் சக்கரவியூகம் அமைத்தன. வியூகத்திற்குள் நுழையும் வழி அபிமன்யுவிற்குத் தெரியும். ஆனால் வெளியேறும் வழி அவனுக்குத் தெரியாது.அபிமன்யுவுடன் உள்ளே செல்ல முயன்ற மற்ற பாண்டவர்களை ஜெயத்திரதன் தடுத்து நிறுத்தினான். இதனால் அபிமன்யு மட்டும் தனியாக மாட்டிக்கொண்டான். துரியோதனனின் மகன் லட்சுமணன் உள்ளிட்ட பலரைக் கொன்றான்.போரின் நெறிமுறைகளுக்கு மாறாக, துரோணர், கர்ணன், கிருபர், துரியோதனன் உள்ளிட்ட பல முன்னணி கௌரவ வீரர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் அவனைத் தாக்கிக் கொன்றனர்.

***

10.பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் 12 ஆண்டுகள் முடிந்த பிறகு, 13-வது ஆண்டை அஞ்ஞாதவாசம் (யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் மறைந்து வாழும் காலம்) விராட மன்னனின் [விராட தேசம்] அரசவையில் பின்வரும் வேடங்களில் கழித்தனர்:

தருமபுத்திரர்: ‘கங்க பட்டர்’ (Kanka) என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை ஆலோசகராகவும், தாயம் விளையாடுபவராகவும் இருந்தார்.

பீமசேனன்: ‘வல்லவன்   (Vallava) என்ற பெயரில் அரச சமையலறைச் சமையற்காரராக (Cook) பணியாற்றினார்.

அருச்சுனன்: பிருஹன்னளை ‘ அல்லது ‘பேடி’ (Brihannala – அலியும் பெண்ணுமாக) என்ற உருவத்தில் விராட மன்னனின் மகளான உத்தரأவிற்குப் நடன மற்றும் இசை ஆசிரியராக இருந்தார்

.நகுலன்: ‘கிரந்திகன்’ (Damagranthi) என்ற பெயரில் குதிரை லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் வேலை செய்தான்.

சகாதேவன்: ‘தந்தபாலன்’ (Tantipala) என்ற பெயரில் பசுப் பட்டறையில் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணியை மேற்கொண்டான்.

திரௌபதி: ‘ சைரந்திரி  அல்லது ‘மாலினி’ (Sairandhri) என்ற பெயரில் விராட மன்னனின் மனைவி சுதேஷ்ணா தேவியின் அந்தப்புரத் தலைவியாக/சேவையாடியாகப் பணிபுரிந்தார்

–subham—

Tags- மஹாபாரதம் ,10 கேள்விகள்

Hindus knew about Rivers in the Sky! Purananuru wonders-54, Tamil Encyclopedia-94 (Post.16,094)

Written by London Swaminathan

Post No. 16,094

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, One Thousand Interesting Facts – Part 94. 

item 767 

Poets of Paripāṭal (prepared by me on 31-12-1995 in hand written paper)

From U VE SA edition, year 1948.

The classical Tamil Paripāṭal anthology—part of the Eight Anthologies (Eṭṭuttokai) of Sangam literature—is traditionally attributed to 13 different poets.

   Kīrantaiyār (கீரந்தையார்)

  • Kaduvan Ilaveyinanaar (கடுவன் இளவெயினனார்)
  • Maiyodak Kovanaar (மையோடக் கோவனார்)
  • Nallanthuvanaar (நல்லந்துவனார்)
  • Kundrumpoothanaar (குன்றம்பூதனார்)
  • Karumpillaip Poothanaar (கரும்பிள்ளைப் பூதனார்)
  • Nalvaludiyaar (நல்வழுதியார்)
  • Kesavanaar (கேசவனார்)
  • Ilamperuvaludiyaar (இளம்பெருவழுதியார்)
  • Nallazisiyaar (நல்லழிசியார்)
  • Nalleziniyaar
  • Nappannanaar (நப்பண்ணனார்)

Nallachuthanar நல்லச்சுதனார்

Total line approximately 2050 lines in 24 full poems and 9 fragments

***

item 768

Verse number– theme—lines — composer

Paripāṭal 1 on Tirumal- tirumaal -Vishnu- Lines 65 —composed by

Paripāṭal 2 on Tirumal- tirumaal -Vishnu- Lines 76 –compoed by Kīrantaiyār

Paripāṭal 3 on Tirumal- tirumaal -Vishnu- Lines 94  – composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 4 on Tirumal- tirumaal -Vishnu- Lines 73– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 5 on Murugan/ Skanda- Lines 81– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 6 on River Vaigai- Lines 106 –composed by Nallanthuvanaar

Paripāṭal 7 on River Vaigai- Lines 86—composed by Maiyodak Kovanaar

Paripāṭal 8 on Murugan/ Skanda- Lines  130 –composed by Nallanthuvanaar

Paripāṭal 9 on Murugan/ Skanda- Lines  85—composed by Kunrampoothanaar

Paripāṭal 10 on River Vaigai- Lines 131 – composed by Karumpillaip Poothanaar

Paripāṭal 11 on River Vaigai- Lines 140– composed by Nallanthuvanaar

Paripāṭal 12 on River Vaigai- Lines 102—composed by Nalvaludiyaar

Paripāṭal 13 on Tirumal- tirumaal -Vishnu- Lines 64 – NAL EZINI

Paripāṭal 14 on Murugan/ Skanda- Lines 32 – composed by Kesavanaar

Paripāṭal 15 on Tirumal- tirumaal -Vishnu- Lines 66—composed by Ilamperuvaludiyaar

Paripāṭal 16 on River Vaigai- Lines 55—composed by Nallazisiyaar

Paripāṭal 17 on Murugan/ Skanda- Lines 53—composed by Nallazisiyaar

Paripāṭal 18 on Murugan/ Skanda- Lines  56—composed by Kunrampoothanaar

Paripāṭal 19 on Murugan/ Skanda- Lines 105—composed by Nappannanaar

Paripāṭal 20 on River Vaigai- Lines 111- composed by Nallanthuvanaar

Paripāṭal 21 on Murugan/ Skanda- Lines 70—composed by Nallachuthanar

Paripāṭal 22 on River Vaigai- Lines 49—composed by???? Incomplete poem

***

Fragments = Thirattu in Tamil  (Fragments are from other Tamil works where the commentators  quoted them or used them)

Paripāṭal  on Tirumal- tirumaal -Vishnu- Lines 82—

Paripāṭal  on River Vaigai- Lines 96—

Paripāṭal Thirattu 1, 2 ,3, 4, 5, 6, 7, 8, 9

***

item 769 Music Composers

Paripāṭal Poets who set music to the above poems

Kannakanaar

For Paripāṭal verse 18; also contributed in puram 218; narrinai 79.

Kannanaaganaar

For verse 5;

Kesavanar

Verse 14;

Nannaaganaar

Verse 12; 2;

Nallachuthanar

Verses 16, 17, 18, 20.

Naaganaar

Verse 11;

Piththaamanthar

Verse 7;

Pettaganaar

Veres 3,4;

Maruththuvan nallachchuthanaar

Verses 6,8,9,10,1519;

***

Item 770 Madurai City is like Lotus Flower

In Paripāṭal fragment 1(thirattu in Tamil) we get the name of Naan Maadak Koodal;  the story behind this name is detailed in

Tiru vilaiyatal puranam . When there was heavy rain during the days of Abhiseka Pandya, Lord Siva protected Madurai on four sides.

Prof. Vaiyapuri Pillai says it must have happened during 3rd or 4th century CE. If it is correct, then we can calculate the periods of other kings.

***

Item 771

Another point is U Ve Sa says the town name IRUNTHAIYUR is important. Two Sangam poets are from Irunthaiyur. The present Perumal (Vishnu) temple in Madurai is believed to be Irunthaiyur

***

Item 772 River in the Sky

In Paripāṭal fragment 2 (thirattu in Tamil) on River Vaigai, there is an interesting comparison:

Pandya king bathed in River Vaigai along with others; it looked like Indra bathing in the Rive Aakaaya Ganga (Gages in the sky).

Nowadays scientists believe there is river like water flow in the sky too!

Yes, “rivers in the sky” is a true scientific concept. Scientists call them atmospheric rivers—massive, narrow bands of concentrated water vapor flowing through the Earth’s lower atmosphere. Though invisible to the naked eye, they act like flying rivers carrying immense amounts of fresh water across the globe.

Scientific Facts About Atmospheric Rivers

  • Enormous volume: A single atmospheric river can carry up to 15 to 27 times the water volume of the Mississippi River or rival the flow rate of the Amazon River.
  • Dimensions: They are typically thousands of kilometers long, but relatively narrow (hundreds of kilometers wide).
  • Water supply: According to the U.S. Geological Survey, these sky currents provide up to half of the annual precipitation and water supply for the U.S. West Coast (often called the Pineapple Express), parts of Europe, and New Zealand. [12]
  • Weather impacts: When these vapor streams hit coastal mountains, the air lifts, cools, and drops torrential rain or heavy snow, which can cause beneficial snowpacks or severe flooding and mudslides

***

Item 773

Marvellous City Madurai!

The last interesting point in Paripatal Thirattu (fragments) is the description of Madurai City. Even 2000 years ago the architects and engineers planned it well and constructed it beautifully. I have never read in any history book about such a planned construction. Paripatal poet compared it to the lotus flower that appeared from the navel of Lord Vishnu

The ancient city of Madurai was designed using traditional Shilpa Shastra (sacred Hindu town-planning texts). It is structured as a lotus-shaped, concentric layout with the Meenakshi Amman Temple at the exact geographic and spiritual center, and streets radiating outward in squares.

  Central Focus: The Meenakshi Amman Temple anchors the city plan, serving as the nucleus from which all civic life and urban geometry extend. [123]

  Concentric Streets: Streets are arranged in successive concentric rectangular/square axes (such as the outer Veli streets) that decrease or increase in width based on their proximity to the sacred core. [1]

I am from this great Madurai city. The streets are squares within squares. Each one is named after a Tamil month, because temple procession comes through that street in that particular month .

Perumpan lines 402-405 also refers to it. U Ve Sa adds another town named Rajagiri also had this type of construction according to Perunkathai. But it is a very late work without any historical proof. Madurai is a living proof for the planned construction of ancient times. Probably there is no such planned city 2000 years ago; I mean all the streets are in squares within squares.

To be continued……………………………………..

Tags- Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, item 773. Paripatal poets, Madurai is like lotus, Rivers in the Sky

Ancient Hindu Jewellery: You can get Ph.D.- part 1(Post No.15,867)

 Ornaments of Parvati as huntress, Madurai Temple

Ornaments of Lord Siva who appeared as hunter; Madurai Meenakshi Temple.

Written by London Swaminathan

Post No. 15,867

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Hindus are the only people in the world who wear ornaments from head to foot. Greeks have no ornaments on their statues in the ancient time. Egyptians had some jewellery  ut only kings and queens wore it around their necks. Where as all Hindus have been wearing it whether it is a king or a servant; our ancient statues and literature prove it. Until this day wedding pictures of brides also show this. We have copious references to these ornaments in the Rig Veda, the oldest book in the world. After Rig Veda, we see it in the necks of Mother Goddess in Harappan Civilization. Statues of Yakshis, Yakshas and devotees dated around second century BCE reveal all types of jewelleries.

***

Apart from Hindus, Mayans and Aztecs in South America wore almost similar ornaments like the Hindus. We know that Mayans migrated to South America after a big conflict with Lord Krishna and Arujana. Both wanted to cultivate in new areas and construct new houses. So, they declared that they are going to burn Khandava Vana (Gond Wana Land). Naga tribes in the forest objected to it. But Krishna went ahead igniting a long fight between Nagas and Rulers for a few centuries. They killed all Nagas when Parikshit was assassinated. Then Astika Rishi and Jaratkaru initiated a peace agreement. Brahmins recite this historical peace agreement in a mantra three times a day. They face towards north and recite Narmadaayai Namah mantra with full details. ( In my research article written a decade ago, I have given over sixty similarities between Mayan Civilization and Hindu Civilization).

***

You can get a doctorate if you do research in Hindu jewellery. Rig Veda, Harappan Civilization, Sangam Tamil literature gives us encyclopaedic information.

Here is the list of ornaments in the Rig Veda (2000 BCE according to Prof. Wilson who thrashed Max Muller and made him to withdraw his 1200 BCE dating)

List of Ornaments in the Rig Veda

Karna sosbhanaa- 8-78-3; ear stud; ear ring;

Khaadi-1-168-3, 5-54-11;brooch, ring, bracelet or anklet;

Khaadihasta- 5-58-2; wearing bracelets;

Khaadi-6-16-48; wearing bracelets and anklets;

Khaadi pada-5-54-11; decked with anklets;

Krsanam- 1-126-4; pearl;

Krisanaavat– 1-126-4; wearing pearls;

Candra- 3-3-5;4-2-13;silver;

Candravat-3-30-20; wearing silver ornaments; possessing silver;

Tamsa- 10-106-1; to decorate;

Niska-2-33-10;8-47-15;golden ornament for the neck;

Niskagriva-5-19-3; wearing a gold necklace;

Mani-1-33-8; globule, crystal, gem;

Manigriva- 1-122-14; wearing a necklace of beads /gems;

Rajata- 8-25-22- silver;

Ratna- 1-41-6; 2-38-1; 4-1-10; shell, gems, pearls;

Ratnadhaa- 4-34-6; 7-16-6;possessing , offering ratna; great wealth;

Ratnadheya- 4-13-1; distribution of ratna; great wealth;

Rukma- 1-88-2; 4-10-5; golden chain or ornament;rukmi-1-66-3-adorned with gold ornaments;

Rukmavaksha- 1-166-3; having golden ornaments on chest;

Vrsakhaadi-1-64-10-having long bracelets;

Hiranyaya- 1-7-2;4-58-4;7-69-1; abounding in gold;

Hiranyam- 1-46-10;3-34-9; gold; precious metal;

Hiranya pinda- 6-47-22; lump of gold;

Hiranya paani-1-35-9;3-54-11;7-38-9; wearing gold ring or bracelets on hand;

Hiranya baahu- 7-34-4; wearing gold armlets;

Hiranya karna- 1-122-14; wearing gold studs; rings;

Hiranya pesa- 8-8-2; 8-31-8- adorned with gold;

Puskarasraj- 10-184-2; lotus garland

This list in not comprehensive; silver is mentioned in a lot of places with the word candra in the Rig Veda.

(Mani, Pinda were used even in 2000-year-old Sangam Tamil literature).

After Rig Veda, we get more information from Atharvana Veda, Yajur Veda, Upanishads, Sangam Tamil literature, and historical Tamil and Sanskrit inscriptions. The full jewellery list of Padhmanabha swamy Temple in Thiruvanathapuram (Kerala), Jagannath temple at Puri (Orissa) are not made public yet; Tirupati Balaji temple jewellery is uncountable. India is the richest country in the world even today. Each item in the temple will get millions of dollars if it is auctioned today. Palaces of old kings have hidden treasures. They keep it a secret until this day.

To be continued………………..

Tags- Ancient Hindu Jewellery, you can get Ph.D., part 1, list of ornaments, Rig Veda, Mayan, Aztec, Greek, Egyptian, ornaments,

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**

India’s Contribution to the World in Mathematics! (Post No.15,751)

Written by London Swaminathan

Post No. 15,751

Date uploaded in London –17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Recently Organiser weekly magazine has quoted some lines from this film song in an article about mathematics. Then I listened to the song on You Tube. This is an echo of Bharatiyar’s songs. Almost all lines are in Bharatiyar poems. All Indian children must be taught it at school. When a song comes though films, it gets more attraction. Moreover, the video, audio and lyrics are available to all. Easily accessible, free of cost too!

Here is the Hindi and English version; don’t forget to listen to the song on You Tube.

Song- Hai preet jahan ki reet sada…..Bharat ka rahne waala hoon (Purab aur Paschhim) (1970) Singer-Mahendra Kapoor, Lyrics-Indeewar, MD-Kalyanji Anandji

Chorus

Lyrics

When my india gave zero

India my india

Then the world learned to count .

India taught the world the language of the stars first

F india has not given decimal, it was difficult to go to the moon like this

It was difficult to estimate the distance between the earth and the moon

Where civilization came first, where art was born first,

Our india is that india after which the world followed

The world went on and on , went on like this, kept on growing

God bless it grow more, keep on growing and flourish.

Where love is the tradition since always, I sing songs of there

I am a resident of India, I speak about India

Where love is the tradition

There is no difference between the black and white,

we have a relation with every heart

we don’t know anything else, we know how to live with love

what the whole world has accepted, I repeat the same thing

I am a resident of India

Someone might have won Someone’s country, we have won hearts

Where still ram is in the male,  goddess Sita still in the female

People are so pure  that I always bow my head

I am a resident of India

So much maternal love for even rivers, here they are called mother

So much respect for human beings, even stones are worshipped

I was born on this earth, I feel proud thinking about it

I am a resident of India.

***

Here is the Hindi Song from the film

Jab zero diya mere Bhaarat ne

Bhaarat ne mere Bhaarat ne

duniya ko tab ginti aayi

taaron ki bhaasha Bhaarat ne

duniya ko pehle sikhlaayi

deta na dashamlav Bhaarat to

Yoon chaand pe jaana mushkil thha

dharti aur Chaand ki doori ka

andaaza lagaana mushkil thha

Sabhyata jahaan pehle aayi

Sabhyata jahaan pehle aayi

pehle janmi hai jahaan pe kala

Apna Bhaarat wo Bhaarat hai

jiske peechhe sansaar chala

Sansaar chala aur aage badha

Yoon aage badha badhta hi gaya

Bhagwaan kare ye aur badhe

Badhta hi rahe aur phhoole phhale

Badhta hi rahe aur phhoole phhale

hmm hmm, hmm hmmm, ho ho ho ho ho ho ho ho

Hai preet jahan ki reet sada

hai preet jahaan ki reet sada aa aa

hai preet jahaan ki reet sada

main geet wahaan ke gaata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

Hai preet jahaan ki reet sada

ho ho ho ho ho ho ho ho

kaale gore ka bhed nahin

har dil se hamaara naata hai

ae ae ae ae ae ae

kuchh aur na aata ho hamko

hamen pyaar nibhaana aata hai

ae ae ae ae ae ae ae

Jise maan chuki saari duniya

ho Jise maan chuki saari duniya

main baat

main baat wohi dohraata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

hai preet jahaan ki reet sadaa

Jeete hon kisi ne desh to kya

hamne to dilon ko jeeta hai

ae ae ae ae ae ae ae

Jahaan Raam abhi tak hain nar mein

Nari mein abhi tak Seeta hai

ae ae ae ae ae ae ae

Itne paawan hain log jahan

ho itne paawan hain log jahan

main nit nit

main nit nit sheesh jhukaata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

ho ho,ho ho,ho ho

itni mamta nadiyon ko bhi

jahaan maata kehke bulaate hain

aen aen aen aen aen

ho ho

Itna aadar insaan to kya

patthar bhi poojee jaate hain

aen aen aen aen

Uss dharti pe maine janam liya

ho Uss dharti pe maine janam liya

Ye soch

Ye soch ke main itraata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

Hai preet jahaan ki reet sada

ho ho ho ho  ho ho ho ho ho ho ho ho

(Both English and Hindi versions are  taken from the websites;thanks)

–subham—

Tags- patriotic Hindi film song, India’s contribution, to the world , in mathematics , Hai preet jahan ki reet sada

Tamils have no Tamil Names for 12 Months:25-Purananuru wonders-25, Tamil Encyclopedia-65 (Post.15,729)

Written by London Swaminathan

Post No. 15,729

Date uploaded in London –12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 508 Poverty

Here in Puram verse 69 composed by Ālathūr Kizhār we get some interesting information about the appearance of a bard suffering from poverty. He is a musician with Yaaz (Veena like instrument). He is wearing torn clothes. The bards led a nomadic life.

***

Item 509 Wealth of Kings

In the next few lines, we see a quite contrasting scene with king wearing golden chains, sitting at Uraiyur with big shining mansions. Also bloddy scenes from battles are described. One more interesting point is kings saw saints and bards without waiting.

***

Item 510 Golden Lotus

Kings used to give Golden Lotus to bards. It is in other poems as well.

***

Puranānuru 69, Poet: Ālathūr Kizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

1
O bard who is sad!  You carry a yāzh used to playing perfect music.
Your body is hungry, since you do not have a patron.  The clothes
around your waist are darned and soaked in sweat.  You protect and
wear them.  You have a large family that is depressed like the body
of a man with no will.  Since you have travelled around the world
and you ask me gently, I will tell you.

2

The battle elephants of kings are in pain in a camp with flags,
while other elephants have been cut down and they lie in pools of
blood, his army has caused flesh to stink, the King of Uranthai with
shining mansions, who raises his spear against advancing warriors
and he is ready to march into the lands of his enemies!

If you go and see Killivalavan who wears a fine garland and lovely
gold ornaments that flash like fire, you will not have to wait at
his tall gate without seeing him donate chariots at harsh noon time

3
in his court.  You will not fail to gain a golden lotus flower upon
which bees that swarm on flowers do not buzz!

(Vaidehi Herbert’s translation is used; thanks

***

Notes:  Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king who wrote Puranānūru 173.  Ālathūr Kizhār who came from a town called Ālathūr, wrote Puranānūru 34, 36, 69, 225 and 324.  

****

புறநானூறு 69, பாடியவர்: ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், திணை: பாடாண், துறை: பாணாற்றுப்படை

1

கையது கடன் நிறை யாழே, மெய்யது
புரவலர் இன்மையின் பசியேஅரையது
வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்  5
பெரும் புல்லென்ற இரும்பேர் ஒக்கலை
வையகம் முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி ஆயின்,

2

மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறைக்
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்,  10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன், தகைத் தார்
ஒள் எரி புரையும் உருகெழு பசும்பூண்  15
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,

3
நெடுங்கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற்கண்ட பின்றைப் பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை  20
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

****

Item 511 Snskrit names for Tamil Months

Kōvūr Kizhār copied the greatest poet Kalidasa in Puram verse 70

Tamils have no names in Tamil for 12 months. All the names we use now for 12 so called Tamil months are Sanskrit names. In some cases they are Tamilized. Kanchi Shankaracharya (1894-1994) who was a great linguist, has explained the names of all the 12 months. No one could have any doubt because we get Panguni in Akananuru 137, Karthikai in other poems. Silappadikaram also used Sanskrit month. This shows ancient Tamils considered Tamil and Sanskrit as two eyes of a man. More over all the Tamil dictionaries and Nikandus have more Sanskrit words than Tamil.

***

Item 512 Bee= Six Legged Bird

This poem shows that Kovur Kizar as a great Sanskrit scholar. He not only used Sanskrit Thai, but also used Six Legged Bird (bee) of Kalidasa.

***

Item 513 Interesting Folklore- Gold Diggers

Hindu folklore is full of finding gold in the middle of the forest. This is used as a simile here. They always add those gold are protected by snakes. There are two reasons for it:1. Gold is found as nuggets in many places in those days. Now they were all exploited by gold diggers. 2.Tamils have a proverb Tamilan puthithuk kettan—meaning Tamils spoiled themselves by burying (treasures). In those days there were no banks or lockers in villages So they buried the treasure and told no one. After their death, some lucky person stumble on it.

***

Item 514

Another notable point is the appearance of a drum held by the bards.

like a pond tortoise strung
on an iron rod

***

Puranānuru 70, Poet: Kōvūr Kizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan,

1

O bard with ancient wisdom carrying a small yāzh with
honey-sweet music!  You show me sweetly your clear-eyed
kinai drum tied with sticks like a pond tortoise strung
on an iron rod,
 and urge me strongly to rest here a little.

2

Killivalavan is the lord of a fine country with abundant
rice and water.  His huge city is filled with food
and there is constant abundance like a Thai month pond whose
level never goes down despite taking.  There are only kitchen
fires and no war fires.  Go to him thinking of his renown.

3

If you travel leisurely and quietly with your female dancer,
her forehead glowing, her smile sweet, adorned with pāthiri
flowers from Sirukudi of Pannan who gives very generously,
where six-legged bees buzz on small white waterlilies desiring
fragrance, you will become rich. 

4

Do not think that his
generosity is not a rare matter, like woodcutters going to the
forest to cut wood finding gold. 
  May his efforts prosper!

Notes:  Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 173, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king.   Kōvūr Kizhār wrote Puranānūru 31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386 and 400.  He hailed from Kōvūr town in Thondai Nadu.  It is presently in Chengalpattu district. 

****

புறநானூறு 70பாடியவர்: கோவூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: பாடாண்துறை: பாணாற்றுப்படை


தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க இவண் தணிக எனக் கூறி,
வினவல் ஆனா முதுவாய் இரவல!  5

1
தைத் திங்கள் தண் கயம் போலக்,
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியன் நகர்,
அடு தீ அல்லது சுடு தீ அறியாது,
இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி,  10

2
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறு குடிப்
பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்  15
செல்வை ஆயின் செல்வை ஆகுவை

3
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை,
நினைக்க வேண்டா, வாழ்க அவன் தாளே.

****

Item 515 Bhutapandyan

In Puranānūru 71, we come across the pandya king

Bhuta pandyan. This name is also found in alupa kings of Karnataka. Also we come across a queen, whose husband was Bhuta pandyan; see Puranānūru 246. This is a Sanskrit name. also note devi is used in verse 246.

Item 516 Names of dear friends

The king gives us a list of his dear friends that makes interesting reading.

May I lose the great joy in the company of my friends who
are as precious to me as my own eyes – Māvan who is the ruler
of Maiyal town and cities surrounded by the famous Vaiyai
River with abundant riches and unending prosperity, Ānthai
of long established Eyil town, Anthuvan Sāthan of great
renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage
and others!

Also we get the names of river and towns.

***

Item 517 Dhama Sabhai and rebirth and Patriotism

The king makes two more points. His assembly is a place of Justice. Rig Vedic Sanskrit word Sabha is used in the poem. All over India B=V are interchangeable and so we see Avai in Tirukkural and Sangam literature.

Another point is rebirth. He makes a vow that he would be born in a country that is not Pandya country. This shows his patriotism and loyalty towards his mother land. This shows his belief in rebirth as well.

***

Puranānūru 71, Poet: King Ollaiyur Thantha Poothappandiyan, Thinai: Kānji, Thurai: Vanjina Kānji


They say that kings enraged like lions and owning
armies that do not succumb have formed a federation,
and announced that they will go into battle against me.

If I do not assault them so that I can hear their scream
in harsh battles as they show their backs and flee in their
chariots, may I separate from my wife with large, calm
kohl-lined eyes!  And in my kind court that does not sway
from justice, let me install someone unworthy and rule with
a weak scepter, moving away from righteousness!

May I lose the great joy in the company of my friends who
are as precious to me as my own eyes – Māvan who is the ruler
of Maiyal town and cities surrounded by the famous Vaiyai
River with abundant riches and unending prosperity, Ānthai
of long established Eyil town, Anthuvan Sāthan of great
renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage
and others!

May I no longer reign as king of this southern land, known
for its ancient lineage and protection to its citizens!  May
I be born into a family that protects the dry lands of others!

*1**

புறநானூறு 71பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், திணை: காஞ்சிதுறை: வஞ்சினக் காஞ்சி


மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப, அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப் புறங்காணேன் ஆயின், சிறந்த  5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக,

2
அறன் நிலை திரியா அன்பின் அவையத்துத்
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலி கோல் செய்தேன் ஆகுக, மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்  10

3
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும்உரை சால்
அந்துவஞ்சாத்தனும் ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த  15
இன் களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇப்பிறர்

4
வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கே.

****

Item 518

Puram verse 72 was composed by a famous king called Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan. The battle of Thalaiyālankānam as famous as Venni Battle where Choza Karikalan defeated many kings and Velirs. Here the young Boy King defeated many kings.

His story is in Thiru Vilayadal Puranam which says Lord Siva helped him. I have pointed out in my research articles on Tiru Vilayadal Puranam of Madurai.

***

Item 519 Proof for Tamil Sangam

Sangam is a Sanskrit word which we see from Panini days to modern times. Arthasastra of Kautilya/ Chanakya also mentioned Sangam(Association). But Tamil Tolkappiar banned all Sa beginning words in Tamil. So scholars were wondering what the association was called in Sangam period. We can only guess. But Nedunchezian in this verses says there was a group of poets under the leadership of Mangdi Maruthan. He was the author of the longest Sangam poem Madurai Kanchi.

Puranānūru 72, Poet: King Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan, Thinai: Kānji, Thurai: Vanjina Kānji

1


They cause me anger, those who say, “They are laughable
who praise his land.  He is too young.” 

They also say,
“We have fine, tall elephants with wide feet and huge legs
that wear tinkling bells, chariots, horses and able warriors.”
They have no fear and they are filled with fury as they
utter disparaging words.

If I do not attack those enraged kings, who don’t fear my strength,
in harsh battles and ruin their drums, may my citizens who live under
the protection of my shadow no longer see any shade!  Let them cry and
and blame me as a cruel king and insult my office! 

3

 Poets with great skill,
their leader Mānkudi Maruthan with his vast and great learning, as well
as others firmly established in this earth, let them leave my
country and sing no more about it!  May I lose wealth and become
unable to help those who come to me in need, and remove their sorrow!

Notes:  This is the only poem written by this king.  Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king.   He defeated the Chera and Chozha kings along with five Vēlir kings in a battle at Thalaiyālankānam in the Chozha country.   

1

***

புறநானூறு 72பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்திணை: காஞ்சிதுறை: வஞ்சினக் காஞ்சி

2
“நகு தக்கனரே, நாடு மீக்கூறுநர்,
இளையன் இவன்” என உளையக் கூறிப்,
“படுமணி இரட்டும் பாவடிப் பணைத் தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம்” என்று   5
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,  10
“கொடியன் எம் இறை” எனக் கண்ணீர் பரப்பிக்
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக,

3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,

3உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்  15
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

To be continued

Tags- No name for months in Tamil, Sangam, Mangudi Maruthan, Item 519, Tamils have no Tamil Names for 12 Months:25Purananuru wonders-25, Tamil Encyclopedia-