பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு! (Post No.15,400)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,400

Date uploaded in London – 6 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு! 

ச. நாகராஜன் 

பங்களா தேஷிலிருந்து வரும் செய்திகள் துயரத்தையும் கவலையையும் அளிக்கின்றன. 

ஹிந்துவான திபு சந்திர தாஸ் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார். பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 12-1-2026ல் வெளி வந்த ஒரு செய்தியின் படி பிரபல இசை வல்லுநரான பப்னா அவாமி லீகின் பண்பாட்டுச் செயலாளர் ப்ரளய் சாகி சிறையில் இறந்திருக்கிறார். 

இப்படிப் பல செய்திகள்! 

கர்னல் மயாங்க் சௌபே (Colonel Mayank Chaubey) ஸ்வராஜ்யாவின் 6-1-26 இதழில் தன் கவலையைத் தெரிவித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இந்திய அரசு எடுக்க வேண்டிய 10 நடவடுக்கைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். 

வன்முறை/கொலைகள் பற்றிய உண்மைகள் : வரும் செய்திகள் உண்மையானவையா, அதீதமாக மிகைப்படுத்தப்பட்டனவா என்று முதலில் கண்டறிய வேண்டும். 

எப்போதெல்லாம் அரசியல் நிலையான தன்மையை இழந்து ஆட்டம் காண்கிறதோ அப்போதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கிறது. அரசியலில் ஆட்சி மாற்றங்கள், தேர்தல் நேரங்கள் உள்ளிட்ட சமயங்களில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது. 

துர்கா பூஜைக்கான பந்தல்கள் கொளுத்தப்படுகின்றன. விக்ரஹங்கள் உடைக்கப்படுகின்றன. கோவில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. 

பொய்யாகப் பரப்பப்படும் வதந்திகளால் கொள்ளை, கொலை போன்ற கொடுமைகள் திரளான வன்முறைக் கூட்டங்களால் செய்யப்படுகின்றன. 

ஹிந்துக்களின் சொத்துக்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றன. சொந்த வீட்டிலிருந்து ஹிந்துக்கள் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்கு திரும்பி வரவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கற்பழிப்பு, கடத்தல், இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன.

 வன்முறையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.

பெயருக்கு மட்டுமே சிலர் கைது செய்யப்படுகின்றனர். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே ஆகி விட்டது. 

1951ல் இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சதவிகிதம் 85% ஆக இருந்தது. இப்போதோ 72% ஆக குறைந்து விட்டது. 

அடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் இது 60% சதவிகிதம் ஆகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

எப்போது நாங்கள் 51 % சதவிகிதம் ஆகிறோமோ அப்போது நாங்கள் 100% சதவிகிதம் தான் என்று வெளிப்படையாக இஸ்லாமிய தலைவர்களில் சிலர் தொடர்ந்து இந்திய நகரங்களில் கூறி வருவதை அனைவரும் அறிவோம். அதாவது 51% சதவிகிதம் ஆனவுடன் மற்றவர்கள் மதம் மாற்றப்படுவர் என்பதே இதன் உள்ளர்த்தம். 

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சமுதாயமாக ஹிந்து சமுதாயம் இருப்பதைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டியிருக்கிறது.

ஹிந்து சகோதர, சகோதரிகளை அவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் காக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை தானே!

செய்வோமா?

**

Leave a comment

Leave a comment