திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

Written by London Swaminathan

Post No. 15,407

Date uploaded in Sydney, Australia –  9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 15

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 15

***

அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது

உறை சோதி … பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம

சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப்

பாகத்தில் உறைகின்ற ஜோதி,

அமை உமை டாகினி* திரி புரை நாரணி அழகிய மாது

அருள் புதல்வோனே … அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி

புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே,

குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி

அமரேசா … குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே,

சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு

ஈசனே,

குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய

பெருமாளே. … குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற)

யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.

***

DACCA- Capital of Bangladesh – This name is derived from the goddess temple. Dhakeshwari Temple: The name is derived from the Dhakeshwari temple (Goddess of Dhaka) built by King Ballal Sena in the 12th century.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் டாகினி, டாகேஷ்வரி  தேவியின் கோவிலால் ஏற்பட்ட பெயர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் டாக்கா 

டாகினீஸ்வரி – டாக்கா -484; நாமத்தின் எண்

டாக்கா நகர டாகேஸ்வரி கோவில் படங்கள்

For more please read my article- லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)

***

காக்கைக்கு ஏன் ஒரு கண் ?

பாதி மதிநதி போதும் … பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,கொன்றை மலரையும்

அணிசடை நாத ரருளிய குமரேசா … அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே,

பாகு கனிமொழி மாது … சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி,

குறமகள் … குறமகளாகிய வள்ளியின்

பாதம் வருடிய மணவாளா … பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,

காது மொருவிழி காகமுற அருள் … பிரிக்கப்பட்ட ஒரு விழியை*

காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய

மாயன் அரி திரு மருகோனே … ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,

லக்ஷ்மிக்கும் மருமகனே,

காலனெனை யணுகாமல் … யமன் என்னை அணுகாத வகைக்கு

உனதிரு காலில் வழிபட அருள்வாயே … உன் இரு திருவடிகளில்

வழிபடும் புத்தியை அருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் … ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா … தேவலோகத்தை

ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,

ஆடு மயிலினி லேறி … நடனம் ஆடும் மயில் மீது ஏறி

அமரர்கள் சூழ வர … தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர

வரும் இளையோனே … வருகின்ற இளையவனே,

சூத மிகவளர் சோலை … மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே … நிறைந்த

சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற … சூரனின் உடல் வீழ,

வாரி சுவறிட … கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. … வேலினைச் செலுத்தவல்ல

பெருமாளே.

***

சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி,ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.

ராமாயணத்தில் சுந்தர  காண்டத்தில் காகாசுரன் கதை

ராமாயணத்தில், சித்திரகூடத்தில் சீதையின் மார்பில் காக உருவில் வந்து அம்பு எய்த இந்திரனின் மகன் ஜெயந்தன் (காகாசுரன்), சீதையைத் துன்புறுத்தியதற்காக ராமர் தன் புல்லில் பிரம்மாஸ்திரம் ஏவி துரத்தினார். மூன்று உலகங்களிலும் உதவி கிடைக்காத ஜெயந்தன், ராமரிடமே சரணடைந்தான். கருணை கொண்ட ராமர், பிரம்மாஸ்திரத்தின் மூலம் அவனது ஒரு கண்ணை மட்டும் குருடாக்கி, அவனது உயிரைக் காப்பாற்றினார்.

சம்பவம்: ராமர், சீதையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இந்திரனின் மகனான ஜெயந்தன் காக்கை உருவம் எடுத்து, சீதையின் மார்பில் கொத்தி, குருதி சிந்த வைத்தான்.

ராமரின் கோபம்: இதனால் கோபமடைந்த ராமர், தர்ப்பைப் புல்லில் பிரம்மாஸ்திரத்தை மந்திரித்து, காகாசுரனின் மீது ஏவினார்.

சரண்: அந்த அம்பு காகாசுரனைத் துரத்தியது, அவன் தன் தந்தை இந்திரன், முனிவர்கள், தேவர்கள் என யாரிடமும் அடைக்கலம் கிடைக்காமல், இறுதியில் ராமரிடமே வந்து மன்னிப்பு கேட்டு சரணடைந்தான்.

தண்டனை: ராமர் அவனது உயிரைக் காப்பாற்றினாலும், அவனுக்குத் தண்டனையாக ஒரு கண்ணைக் குருடாக்கினார்.

சீதையின் நம்பிக்கை: இந்த சம்பவத்தைச் சீதை, அனுமனிடம் கூறி, ராமரின் கருணைத் தன்மையை விளக்குகிறார்.

இந்தக் கதை, சரணடைந்தவர்களைக் காக்கும் ராமரின் கருணையையும், தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

***

மீண்டும் வியாதிகள் பட்டியல்

அருணகிரி நாதர் பல பாடல்களில் நோய்களின் பட்டியலைத் தருகிறார். இதோ சுவாமிமலை திருப்புகழ்

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி

வியாதி குன்மமொடு காசம் … வாத நோய், வயிற்றுளைவு நோய்,

கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,

வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு

பூஷணங்கள் என ஆகும் … வாயுவினால் உண்டாகும் படர்தாமரை

போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட

விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள்

என்று சொல்லத்தக்க புண் வகைகள்,

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை

விடாது மங்க … பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே

என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல்

நலம் குறைந்து, இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே

மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி … இக்காரணத்தால்

உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம்

நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு

சாதியின் கண் அதிலே … குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான

வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்

தொழில்களிலே ஈடுபட்டு,

நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு

உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் … நான் வலிமை

அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர்.

(அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த

திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.

****

திருமாலின் வராக அவதாரக் கதை

சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு

இசைந்த மருகோனே … பன்றியின் உருக்கொண்டு (வராக

அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம்

வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே,

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க

வந்தது ஒரு சாலியே மிகுத்து உயர்ந்த மா வயற்கள்

மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே. … ஏர் எதிர்த்து வர

நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள்

இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே

பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள

சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:

இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான். திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.

***

லட்சுமியின் குணம் – ராஜஸ குணம்

ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி

சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம்

கொள்வோனே … அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும்

விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய

தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர்

குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை

மணம் கொண்டவனே,

ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப்

பதி நிற்கும் இலக்ஷண … திருவேரக மலை என்னும் அற்புதம்

மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே,

ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே. …

லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய

தம்பிரானே.

சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் – மனத்தைக் கொள்ளை கொள்பவன்.

** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.

***

ராமனின் சாகசங்கள்

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா

மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும்

கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும் … அழகுடைய

(மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும்

அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு

ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு

அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின்

படைகள் முழுதும்,

இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத

மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை

வலமும் மாள … இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும்,

அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க,

விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் அருள்

புனை முராரி மருக … ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத

மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் mபாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே,

(சுவாமி மலை திருப்புகழ் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகள்)

–subham—

Tags- திருப்புகழ் , பங்களாதேஷ், டாக்கா கோவில்,   டாகினி காகத்துக்கு ஏன் ஒரு கண்?-  Part 15 ,  அருணகிரிநாதர் , அரிய செய்திகள். சொல் அழகு, பொருள் வளம், டாக்கா,டாகேஸ்வரி கோவில் படங்கள்

Leave a comment

Leave a comment