Post No. 15,450
Date uploaded in London – 23 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
உண்மையான பந்து யார்?
ச. நாகராஜன்
சில அருமையான சுபாஷித ஸ்லோகங்கள் இதோ
உண்மையான பந்து யார்?
உத்ஸவே வ்யஸனே சைவ துர்பிக்ஷே சத்ருவிக்ரஹே |
ராஜத்வாரே ஸ்மஷானே ச யஸ்திஷ்டதி ச பாந்தவ: ||
உற்சவ காலங்களிலும், அபாயத்திலும், வறுமையிலும், எதிரிகளுடனான சண்டையிலும் அரண்மனை வாயிலிலும் சுடுகாட்டிலும் எவன் ஒருவன் விடாது கூட இருக்கிறானோ அவனே உண்மையான பந்து.
சூரியனும் பெரியோரும் ஒன்று போல ஜொலிப்பர்!
உதேதி சவிதா தாம்ரஸ்தாம்ர ஏவாஸ்தமேதி ச |
சம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா ||
சூரியன் உதிக்கும் போது செக்கச் சிவந்த வர்ணத்தில் இருக்கிறான். அவன் அஸ்தமிக்கும் போது மீண்டும் செக்கச் சிவந்த வர்ணத்தில் ஜொலிக்கிறான். அதே போலவே பெரியோர் வளமாக வாழும் காலத்திலும் வறுமையில் இருக்கும் போதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
பெரியோரின் குணம்!
விவேக: சஹ சம்பத்த்யா வினயோ வித்யயா சஹ |
ப்ரபுத்வம் ப்ரஸ்னயோபேதம் சின்ஹமேதன்மஹாத்மனாம் ||
இவை தான் உண்மையான பெரியோரின் குணமாகும்: செல்வத்துடன் கூடவே அறிவு; கல்வி அறிவுடன் பணிவடக்கம், , மேலாளுமையுடன் எளிமை
தாய், தந்தை, நண்பர் செய்யும் உதவி இயல்பானது!
மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவாதித்ரயம் ஹிதம் |
கார்யகாரணதஶ்சான்யே பவந்தி ஹிதபுத்தய: ||
தாயார், நண்பன், தந்தை ஆகிய மூவரும் ஒருவனுக்கு இயல்பாகவே இதம் (நன்மை) செய்பவராவர். இதே போல இதம் செய்யும் மற்றவர்களும் உண்டு என்றாலும் அவர்கள் காரண காரியத்திற்காகவே அதைச் செய்வர்.
இறந்தவர்க்குச் சமம் யார், யார்?
ம்ருதோ தரித்ர: புருதோ ம்ருதம் மைதுனம்பரஜம் |
ம்ருதம்ஸ்ரௌத்ரியம் ச்ராத்தம் ம்ருதோ யக்ஞஸ்த்வதக்ஷிண: |\
ஏழையாக இருக்கும் ஒருவன் இறந்தவனுக்குச் சமானம். குழந்தை இல்லாதவனும் இறந்தவனுக்கும் சமம் தான். இறந்தவர்களுக்குச் செய்யும் சிரார்த்த காரியத்தின் போது ஸ்ரோத்ரிய பிராமணன் இல்லை என்றால், அவனுக்கு தக்ஷிணையாக தானம் வழங்கப்படவில்லை என்றால் அதுவும் இறப்பிற்குச் சமம் தான்!
மணமில்லாத கிந்சுகா மலர் போல ஒருவன் சோபிக்கமாட்டான்!|\
ரூபயௌவனஸம்பன்னா விஷாலகுத்னசம்பதா: |
வித்யா ஹீனா ந ஷோபந்தே நிர்கந்தா இவ கிந்ஷுகா: |\
ஒருவன் அழகாக இளமையுடன் இருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் கூட கல்வி இல்லையென்றால் மணமின்றி இருக்கும் கிந்ஷுகா புஷ்பம் போல ஒருவன் சோபிப்பதில்லை.
**