மார்ச் 2026 காலண்டர்- குமரேச சதகம் பொன்மொழிகள் (Post No.15,464)

Rama in ivory;picture by A Narayanan, Sydney, Australia.

Written by London Swaminathan

Post No. 15,464

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பொன்மொழிகள்

காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590) Date uploaded in London –  4 June 2025 என்ற கட்டுரையில் முதல் 24  பாடல்களில் உள்ள விஷயங்களை கண்டோம். இதோ மேலும் 31  பொன்மொழிகள்.

பண்டிகைகள் :-

மார்ச் 03 Tue சந்திர கிரஹணம், ஹோலி,/மாசி மகம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி; 08 Sun உலக மகளிர் தினம்; 14 Sat காரடையான் நோன்பு; 15 Sun                ஏகாதசி விரதம் , சபரிமலையில் நடை திறப்பு;  19 Thu  அமாவாசை , யுகாதி, தெலுங்கு வருஷப் பிறப்பு; 21 Sat          ரம்ஜான் ; 27 Fri     ஸ்ரீராமநவமி; 29 Sun ஏகாதசி விரதம் ; 31 Tue            மகாவீரர் ஜெயந்தி.

      மார்ச் சுப முகூர்த்தம்- 5,6, 8, 15 16, 25

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

அந்தணர்க்கு பலம் தருவது வேதம் .க்ஷத்ரியர்க்கு பலம் வீரம்.

வைச்யர்களுக்கு பலம் தருவது நிதி/ செல்வம் ; வேளாளர்க்கு பலம் என்பது உழவுத் தொழில்

***

மார்ச் 2 திங்கட் கிழமை

மந்திரிக்கு  பலம் தருவது சதுர் உபாயம், அதாவது சாம தான பேதா  தண்டம்;  நீதி மானுக்கு பலம் நாடு நிலைமை ஆகும்; சன்யாசிகளுக்குப் பலம் தவம் செய்வது ; பெண்களுக்குக் கற்பு பலம்.

***

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

சான்றோர்க்கு பொறுமை பலம்; புலவர்க்கு நல்ல கலவி அறிவு பலம்

***

மார்ச் 4 புதன் கிழமை

தக்க தருணத்தில் உதவி செய்யாத நபர்கள் இருந்தும் பயனில்லை; தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

***

மார்ச் 5 வியாழக் கிழமை

ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்

     பெற்றென பெறாமலென்ன! அன்பிலாதவர் நட்பும் பயனற்றதே.

***

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

மானமற்ற பிழைப்பு பிழைப்பே அல்ல ; கொடு என்று கெஞ்சுவோருக்குக் கொடுக்காத செல்வம் இருந்தென்ன போயென்ன

***

மார்ச் 7 சனிக் கிழமை

இளமைப் பருவத்தில் திருமணம ம்  செய்யாத பெண் பயனற்றவளே

***

Siva Linga, Lepakshi; picture by A Narayanan, Sydney.

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

கடல் நீரும், காட்டில் பூக்கும் மலரும் காட்டில் பெய்யும் மழையும் நாயின் பாலும், கருவேல மரத்தின் பழமும் பயனற்றவைதான்

***

மார்ச் 9 திங்கட் கிழமை

கழுதை லத்தி குவியல் குவியலாக கிடைத்தும் என்ன பயன்? அழகு இருந்து குணமில்லாத பெண்ணும் யாருக்கும் பயனில்லை; சபையில் பேச அஞ்சும் அறிஞனாலும் பயனில்லை.

***

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

பூதம் காத்திருக்கும் தங்கத்தால் பயன் உண்டா ? அடர்த்தியான கரடி மயிரினால் ஆடை நெய்ய முடியுமா?

***

மார்ச் 11 புதன் கிழமை

தற் பெருமை பேசி எப்போதும்  தன்னைப் புகல்பவன் நெல்லில் உள்ள பதர் போன்றவனே;  போர் என்றவுடன் பயந்து ஓடுபவனும், பெரி யோர்புத்தி கேளாதவானும் பதருக்குச் சமம்.

***

மார்ச் 12 வியாழக் கிழமை

பிறரைப் பற்றி அவர் போனவுடன் குறை கூ றுவோனும், பெற்றதாய் தந்தையரைத் துன்பத்தில் வாழ வைப்போனும், பெண்புத்தி கேட்டு  நடப்போனும் பதர்.

***

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

பணம் இருந்தும் பிறரிடம் யாசகம் கேட்போனும் பொய்ச்சாட்சி சொல்லும் மனிதர்களும் பதர் போன்றவர்களே.

***

மார்ச் 14 சனிக் கிழமை

சூரிய ஒளியே புகாத இருந்த காடு , மழையே பேயாத இடத்தில் உள்ள பயிர், அன்புடன் போடப்படும் உணவு ஆகியன விரும்பத் தக்கதல்ல.

***

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

தாயைக் காணாத குழந்தை, பசுவினைக் காணாத கன்று சோலைகள் இல்லாத இடத்திலுள்ள வந்து முதலியன பரிதாபத்துக்குரியவை ஆகும்.

***

மார்ச் 16 திங்கட் கிழமை

பெரியோர் இல்லாத சபையும், கணவர் இல்லாத பெண்களும் மேகமே காணாத மயில்களும், குழந்தை பெறாத மலடிகளும் ; வசந்தம் காணாத குயில்களும் ஒரே நிலையில் உள்ளவைதான்

***

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

வரவுக்கேற்ற செலவு செய்யாதவனும் இளமையில் நல்ல வாழ்வு அமையாதவனும் ஒரே நிலையில் உள்ளவர்களே.

***

மார்ச் 18 புதன் கிழமை

அதிக உணவு உண்ணுதலும், கவலையாலும், மலஜலத்தை அடக்குவதாலும் வியாதிகள் உண்டாகும்.

***

மார்ச் 19 வியாழக் கிழமை

சாப்பாட்டில் நெல்லும் உமியும் இருக்கக்கூடாது ; சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டும் ; தண்ணீரிலும் பனியிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடாது இவைகளை மீறுவது நோய்களுக்கு வழிவகுக்கும் .

*** 

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

அதிக உடலுறவு கொள்வதாலும் மலச் சிக்கலாலும் அதிக பாரத்தைச் சுமப்பதாலும் இளம் வெய்யிலில் உலவுவதாலும் உடல் நோக வேலை செய்வதாலும் நோய்கள் தோன்றும்.

***

மார்ச் 21 சனிக் கிழமை

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது ; ஜீரணமாகாத கடினமான பொருள்களைச்  சாப்பிடக்கூடாது ; இவைகளை நோய்களை உண்டாக்கும்.

***

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

எல்லோருக்கும் உதவி செய்தவரும், பொதுமக்களுக்கான கிணறு வெட்டியோரும் ஆலயங்கள் கட்டியோரும் இறந்தாலும் என்றும்  புகழோடு வாழ்பவர்களே.

***

மார்ச் 23 திங்கட் கிழமை

புகழ் பெற்ற புதல்வர்களைப்  பெற்றவர்களும் போரில் வெற்றிபெற்ற வீரர்களும் , பூமியில் அழியாத தருமங்கள் செய்தொரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

பெரிய கொடையாளர், காவியம் செய்த கவிஞர்கள் , பத்தினிப் பெண்களை மணந்தோர் ஆகியோரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 25 புதன் கிழமை

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர், மனைவியை வழங்கியே சீவனம் செய்குர் உயிருடன் செத்தசவம் ஆகி மாய்வர்..

***

மார்ச் 26 வியாழக் கிழமை

பல்லக்கு  சுமந்தே பிழைக்கின்றவர்கள், சொற்பிழை உடையோர் , மனையாள் தனக்கஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்துவிடுவோர், வீம்புடன் செல்லாத விஷயங்களுக்கு கோர்ட்டுக்குப் போவோர் இருந்தும் இறந்தவர்களே.

***

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

பணந் தேடிப் புதைத்துவைப்பார், நல்அமுது  செய்து  உண்ணாதவர்கள்  தருமம் செய்யாதவர்கள் கருமிகள் ஆவர்.

***

மார்ச் 28 சனிக் கிழமை

பொய்வார்த்தை சொல்லாத     நல்லோ ரிடந்தன்னிலும்

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்     ரணசுத்த வீரர்பாலும் லெட்சுமி வசிப்பாள்.

***

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

யானையிடத்திலும் கங்கா சலத்திலும், தாமரையிலும், விஷ்ணுவின்  மார்பிலும் அரசரிடத்திலும் லெட்சுமி தங்குவாள்.

***

மார்ச் 30 திங்கட் கிழமை

துளசியிலும்  வில்வத்திலும் கடப்பமலர் தனிலும், இரதத்திலும்,  குணம் உடைய பெண்ணிடத்திலும் ,திருமகள் வாழ்கிறாள்.

***

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

மனத்தில் கடும்பகை இருப்பதைக் கடுத்த முகத்தினால் அறியலாம்;     மாநிலப் பூடுகளெலாம் மழையினால் அறியலாம்; நல்லார்பொல்  லார்தமை அவர்கள் பெற்ற பிள்ளைகளால் அறியலாம்.

—subham—

Tags- மார்ச் 2026 காலண்டர், குமரேச சதகம், பொன்மொழிகள்

Leave a comment

Leave a comment