வாழ்க்கைக்கு உதவும் சுபாஷிதப் பொன்மொழிகள்! (Post.15,524)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,524

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வாழ்க்கைக்கு உதவும் சுபாஷிதப் பொன்மொழிகள்!

 ச. நாகராஜன் 

1.ராஜா பஷ்யதி கர்ணாப்யாம் யுக்த்யா பஷ்யதி பண்டிதா: |

 ராஜா காதால் கேட்டதை வைத்து எதையும் பார்க்கிறார்; ஆனால் பண்டிதரோ தர்க்கரீதியாக எதையும் பார்த்து நிர்ணயிக்கிறார்.

2. ரஸமூலா ஹி வ்யாத்ய:|

உணவின் சுவையை வைத்தே வியாதிகள் உருவாகின்றன. 

3. யேன கேன ப்ரகாரேண ப்ரஸித்த: புருஷோ பவேத் | 

எந்த வழியினாலாவது ஒருவன் புகழை அடைய வேண்டும்.

4. யாத்ருஷி பாவனா யஸ்ய சித்திர்பவதி தாத்ருஷி| 

எதை ஒருவன் மனதில் நினைத்துத் திட்டமிடுகிறானோ அதற்கேற்பவே

விளைவு அமைகிறது.

5. முராரே த்ரூதிய பந்தா: | 

முராரிக்கு மூன்றாவது வழி உண்டு!

6. கா ப்ராஞோ வாஞ்சதி ஸ்நேகம் வேஷ்யாஸு சிகத்ஹாஸு ச | 

யார் வேசிகளிடத்தும் பாம்புப் புற்றுகளிடத்தும் வாஞ்சை கொள்வார்?

7. தன்யோ க்ருஹஸ்தாஸ்ரம:| 

க்ருஹஸ்தாஸ்ரமே சிறந்தது.

8. தர்மசாரவிஹீனானாம் த் ரவ்யம் மலசஞ்சய: | 

தர்மவழியில் அல்லாது ஒருவனிடம் இருக்கும் பணம் மலத்திற்குச் சமமாமும்.

9. திக்தானம் ச் ரத்தயா ஹீனம். 

சிரத்தையில்லாமல் தரப்படும் தானம் இழிவானதே.

10. தூர்த்தே: கோ நஹி வஞ்சயதே | 

தூர்த்தனால் வஞ்சிக்கப்படாதவர் யார் தான் உண்டு? 

11. ப்ரக்ஷாலநாத்தி பங்கஸ்ய தூராதஸ்பர்ஷணம் வரம்| 

சகதியைத் தவிர்ப்பதானது அதைக் கழுவுவதை விடச் சிறந்தது. 

12. பதிரான்மந்தகர்ண ;ஸ்ரேயான் |   

செவிடனாயிருப்பதை விட மந்தமாகக் காது கேட்க வல்லவன் சிறந்தவன்.

**

Leave a comment

Leave a comment