விதிக்கு பாரபட்சம் கிடையாது! கர்மபலனை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும்! (Post.15,560)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,560

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

விதிக்கு பாரபட்சம் கிடையாது! கர்மபலனை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும்!

ச. நாகராஜன் 

கர்மபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டும்! 

உத்தானமபிஜானந்தி சர்வபூதானி பாரத |

ப்ரத்யக்ஷம் பலமஷ்னந்தி கர்மணாம் லோகசாக்ஷிகம் ||

மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது.

முந்தைய ஜென்மத்தின் உத்வேகத்தின் தூண்டுதலால், எல்ல உயிர்களும் இந்த உலகத்தில் தங்களது கர்மத்தின் பலனை ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கின்றன.

 மாக கவியின் சிறப்பு! 

உபமா காளிதாஸஸ்ய பாரவேர்த்தகௌரவம் |

தண்டின: பதலாலித்யம் மாகே சந்தி த்ரயோ குணா: || 

உவமை சொல்வதில் திறமை பெற்றவர் காளிதாஸர்.

ஆழ்ந்த அர்த்தம் சொல்வதில் வல்லவர் பாரவி.

சொற்களின் இனிமையால் – பத லாலித்யத்தால் – தண்டி புகழ் பெறுகிறார்.

ஆனால் இந்த மூன்றும் இணைந்து மாக கவியிடம் காணப்படுகின்றன.

தேன் துளியைப் பருகலாமா? 

ஏகைகோசங்க்யஜீவானாம் தாததோ மதுன: கண:|

நிஷ்பத்யதே யதஸ்தேன மத்வஷ்னாதி கதம் புத: || 

ஏராளமான உயிர்களை அழித்தே ஒவ்வொரு தேன் துளியும் பெறப்படுகிறது. இப்படி இருக்கும் போது அறிவாளியான ஒருவன் எப்படி தேனைப் பருகுவான்!

சிங்கம் சிங்கம் தான்! 

ஏன: க்ரீடதி ஷூகரஸ்ச கனதி த்வீபி ச கர்வாயதே

  கோஷ்டா: கந்ததி வல்கதே ச ஷஷ்கோ வேகாத் ருருதார்வதி |

நிஸ் ஷங்க: கரிபோதகஸ்தருலதாமுன்மோடதே லீலயா

   ஹம்ஹோ சிம்ஹ வினா த்வயாத்ய விபினே கீத்ருக்தஷா வர்ததே ||

மான் விளையாடுகிறது. கரடி (இரை தேடி) குழி தோண்டுகிறது.

சிறுத்தை கர்வம் கொள்கிறது. நரி ஊளையிடுகிறது. முயல் துள்ளிக் குதிக்கிறது. ருரு மான்கள் வேகமாக ஓடுகின்றன. எதிர்க்க யாருமின்றி யானைகள் தனது இஷ்டப்படி பயமின்றி மரங்களையும் கொடிகளையும் முறிக்கின்றன; அறுக்கின்றன.

உண்மையாகச் சொல்லப் போனால், ஓ! சிங்கமே! காட்டில் நீ இல்லையென்றால் எந்த மாதிரி நிலைமை இருக்கிறது! 

பாரபட்சம் காட்டாத விதி! 

ஐஸ்வர்யே வா சுவிஸ்தீனே வ்யஸனே வா சுதாருணே |

ரஜ்ஜவேவ புருஷம் பதத்வா க்ருதாந்த: பரிஜர்ஷதி || 

சந்தோஷமாக இருக்கும் பணக்காரர்களையும், துன்பத்தை அனுபவிக்கும் ஏழைகளையும் விதியானது பாரபட்சம் பார்க்காது.  ஒரு கயிறினால் கட்டி இழுப்பது போல அனைவரையும் அது அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது.

 **

Leave a comment

Leave a comment