ராமாயணத்தில் வரங்கள் (48) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! – 2 (Post.15,591)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,591

Date uploaded in London – 8 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ராமாயணத்தில் வரங்கள் (48) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! – 2

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘இந்திரனது தேரிலேறிக்கொண்டு போர் புரிவது’ என்ற நூற்றுமூன்றாவது அத்தியாயத்தில் ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் உள்ளிட்டவற்றைத் தந்து உதவியது பற்றியது பற்றிப் பார்த்தோம்.

இந்த விஷயம் மேலும் பல அத்தியாயங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

சீதா தேவியுடன் அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்கு ராமர் செல்கிறார்.

பரத்வாஜ மஹரிஷி ஶ்ரீ ராமர் வரம் பெற்றதை தனது தவத்தால் அறிந்ததாகக் கூறுகிறார்:-

யதா விநிஹத: சங்க்யே ராவணோ தேவகண்டக: |                சமாகமஸ்ச த்ரிதஷைர்யயா தத்தஸ்ச தே வர: ||

  யுத்தகாண்டம் அத்தியாயம் 127 ஸ்லோக எண் 26

யதா – எப்படி                                                           விநிஹத: – கொல்லப்பட்டானோ, அதுவும்                         த்ரிதஷை: – தேவர்களோடு                                           சமாகம: ச – கூடியதும்                                                தே – உனக்கு                                                         யயா – எப்படியாய்                                                    வர: – வரமானது                                                        தத்த ச – கொடுக்கப்பட்டதோ அதுவும் ஆகிய                           ஏதத் – இது                                                           சர்வம் – யாவும்                                                   தவஸா – தவத்தால்                                                   மம – எனக்கு                                                 விதிதம் – அறியப் பெற்றது

அடுத்து 128 அத்தியாயமான பரதரிடம் ஹனுமாரை அனுப்புவது என்ற அத்தியாயத்திலும் இந்த வரம் பற்றிச் சொல்லப்படுகிறது.

ராமர் தான் சீதையுடன் அயோத்தி வருவதை பரதனுக்குச் சென்று சொல்லுமாறு அனுமனிடம் கூறுகிறார்.  அதில் சுக்ரீவனுடனான நட்பு, வாலியின் வதம், சமுத்திரத்தைத் தாண்டுதல், அணை கட்டல் உள்ளிட்ட செய்திகளோடு தேவேந்திரன் வரம் தந்த விஷயத்தையும் குறிப்பிட்டு இவை அனைத்தையும் பரதனிடம் கூறுமாறு அனுமனிடம் கூறுகிறார்.

வரதான மஹேந்த்ரஸ்ச ப்ரஹ்மணா வருணேன ச |       மஹாதேவப்ரசாதாஸ்ச பின்னா மம சமாகம்ய ||

தேவேந்திரனாலும் பிரம்மதேவராலும் வருணதேவராலும் வரதானத்தையும் சிவபெருமானது அனுக்ரஹத்தால் தந்தையோடு சமாகமத்தையும் சொல் என்று இப்படிக் கூறுகிறார்.

அதன்படியே ஹனுமார் பரதனிடம் அனைத்து விவரங்களையும் கூறுகிறார்.

129வது அத்தியாயம் 43 மற்றும் 44வது ஸ்லோகங்களில் இந்த விவரம் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.

அந்த சத்ரு சம்ஹாரகாராகிய ஶ்ரீமானாரும் ஶ்ரீ ராமர் இந்திரரோடும் யமதர்மதேவரோடும் வருணதேவரோசும் அவ்வண்ணமே சிவபெருமானோடும் பிரம்மதேவரோடும் அவ்வாறே தசரதரோடும் ஒன்று சேர்ந்து அவர்களால் எழுந்தருளிய மஹரிஷிகளாலும் தேவரிஷிகளாலும் வரங்களைக் கொடுக்கப்பெற்று மனோரதங்களைப் பெற்றிருக்கின்றார்.

ச சங்கரேன சமாகம்ய யமேன வருணேன ச |   மஹேஸ்வர்ஸ்வயம்பூம்யாம் ததா தசரதேன ச ||

தைஸ்ச தத்தவர: ஶ்ரீமாந்ருபிபிஸ்ச சமாகதை: |                  சுரர்பிபிஸ்ச காகுத்சதோ வராம்லேபே பரந்தப: ||

அடுத்ததாக இதே விவரம் பால காண்டத்தில் முதல் அத்தியாயத்திலும் இப்படி குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

தேவர்களிடமிருந்து வரங்களைப் பெற்று யுத்தத்தில் உயிரிழந்த வானரவீரர்களை உயிர்ப்பித்து  தனது அனைத்து சகாக்களுடனும் அவர் புஷ்பகவிமானத்தில் ஏறி அயோத்தியா வந்தடைந்தார்.

ஆக பல தேவர்களிடம் ஶ்ரீ ராமர் வரம் பெற்ற செய்தியை வால்மீகி முனிவர் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.

**

Leave a comment

Leave a comment