Tiruppavai in Pictures with Three English Translations- Part 8 (Post.15,603)

Written by London Swaminathan

Post No. 15,603

Date uploaded in London –10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

First translation by Ms Kausalya Hart, Second by PR Ramachander and the third by Dr Chenni Padmanabhan M D

Pictures were taken by London swaminathan from Uppiliappan Temple.

**** 

Verses 22, 23, 24

22

அங்கண் மாஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே,

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம் பாவாய். (22)

495. The girls coming to wake up the god say,
“We have come to you affectionately, all together
as if we were queens of this wide world,
and we stay by your bed and worship you.
Won’t your beautiful lotus eyes
bright as the sun and the moon,
show us even a little grace?
If you look at us, our karma will go away.
We are going to worship our Pāvai

Like all the famous kings
Of the wide World, that is pretty,
Have crowded near your cot,
After surrendering their ego,
We also have come near.
Will not the sight,
Of your red eyes which is like the lotus
Fall little by little on us?
If you see us using those eyes,
Which are like sun and the moon,
All the curse on us will vanish,
And we can worship our Goddess Pavai

Beneath Thy beside have we gathered

As kings on this large handsome earth

Would crowd around, sans ego;

Wouldst Thou glance at us , with Thy

Eye, a la trinket, lotus blooming,

Sun and moon awake at a time in mirth!

If Thou glimpse with eyes two beautiful

By little and little tarnished,

Sin and curse shall vanish

From we the girls vanquished;

Listen and consider our damsel.

*********

23

PICTURE NOT UPLOADING IN WORDPRESS; PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT. COM

FOR THIS PICTURE.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து,

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா!

உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக்

கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து

யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோர் எம் பாவாய். (23)

496. The girls coming to wake up the god say,
“As you, colored as dark as a kāyam flower, wake up
you are like a lion that has slept
in a mountain cave in the rainy season,
that opens its fiery eyes and roars, its mane hanging low.
You come from your temple and sit on your majestic throne.
Give us your grace, and help us.
We are going to worship our Pāvai

Like the majestic lion wakes up with ire,
From the mountain cave in the rainy season,
Looks with fiery sight,
And with deep angry sweat from all the hairs,
Turns up its head with awe,
And comes out making lots of din,
Hey Lord, who is the colour of the blue lotus,
Come from your temple to here,
And sit on the majestic royal throne,
And hear with compassion,
For why we have come here,

And help us to worship our Goddess Pavai.

Verse 23

As would a fierce lion in a mountain den

Stay along in winter, lie asleep gang with

Enlightened, open eye, emit fire, mane erect,

Stretch in all direction, Oh! Bilberry hued;

Thou shalt roar! Start with a bang,

This ward move from Thy temple forthwith

Settle on carved out throne exquisite

We have come unto Thee to woo;

Ponder over our requisite;

Bestow grace, the desire implicit

Listen and consider our damsel.

**********

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி,

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி,

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி,

என்றென்று ன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்று யாம் வந்தோம், இரங்கேலோர் எம் பாவாய். (24)

24

497. The girls come, praise the god and ask for the Paṛai,
“You once measured the world.
We praise your feet.
You went to southern Lanka and killed the Rakshasas.
We praise your strength.
You destroyed Sakaṭāsuran when he came as a cart.
We praise your fame.
When Vathsasuran came as a calf you threw him
at Kabithasuran who had taken the form of a vilam tree
and killed them both.
We worship your ankleted feet.
You carried Govardhana mountain to save the cows.
We praise your compassion.
We praise the spear in your hands that conquers your enemies.
We want to serve you always and have come to receive the Paṛai.
Give us your grace.
We are going to worship our Pāvai

We worship your feet which measured the world then,
We worship your fame of winning over the king of Southern Lanka,
We worship thine valour in breaking the ogre who came like a cart,
We worship thy strength which threw the calf on the tree,
We worship thine goodness in making the mountain as an umbrella
[34],
And we worship the great spear in your hand which led to your victory,
We have come hear to sing always for ever your praises,
And get as gift the drums to sing,
And worship our Goddess Pavai.

***

All hail, Thy foot meted this earth thence

All hail, Thy energy went thither, conquered Lanka South;

All hail, Thy glory kicked the wheel to ruins;

All hail, Thy foot the calf, as a throw stick tossed;

All hail, Thy generosity held the hillock an umbrella;

All hail, Thy spike won and shattered uncouth

And so on singing  Thy bravery,

Revering Thy laurel factual

To obtain the desire auspicious

Have come this day, we ambitious

Yield, listen and consider our damsel.

To be continued……………….

Tags-  Verses 22,23, 24, Tiruppavai in pictures, part 6, three English translations

, pictures, London swaminathan

ஹனுமனைப் பற்றி இராமன் : துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்   –ஓர் ஆய்வு – 10 (Post.15,602)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,602

Date uploaded in London –   10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

PART TEN

ஹனுமனைப் பற்றி இராமன்

ஹனுமனின் வீரத்தைக் கண்ட இராமன் ஹனுமனைப் புகழ்ந்து இலக்ஷ்மணனிடம் பேசுகிறான்.

HANUMAN IN BATU CAVES, MALAYSIA; PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN.

हाथिन सों हाथी मारेघोरेसों सँघारे घोरे,

रथनि सों रथ बिदरनि बलवानकी।।

चंचल चपेटचोट चरन चकोट चाहें,

हहरानी फौजें भहरानी जातुधानकी।।

बारबार सेवकसराहना करत रामु,

तुलसी’ सराहै रीति साहेब सुजानकी।

लाँबी लूम लसतलपेटि पटकत भट,

देखौ देखौ लखनहनुमानकी।40.

“இலங்கையின் போர்க்களம் முழுவதிலும் அவர் பார்க்கும் ஒரே ஒரு வீரன் மட்டுமே இருந்தான்.அவன்  அரக்கக் காளையின் கொம்புகளைப் பிடித்து இழுத்தான், அந்த வீரன் வேறு யாருமல்ல, ஹனுமன்தான். அவனது வாலைப் பார். அந்த அழகான வாலில்  அரக்கர்களை சுருட்டி தரையில் ஓங்கி அடிக்கிறான். யானைகள், குதிரைகளுடன் மோதுகிறான்.” இது கோஸ்வாமி துளசிதாசரின் கவிதாவளி ராமாயணத்தில், லங்கா காண்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,.   

இது மட்டுமல்லாமல், இராமன் ஹனுமன் மீது தனது பாசத்தை பகிரங்கமாகக் காட்டினான்.அவர் ஹனுமனை  அன்புடன் கட்டிப்பிடித்து, என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக அறிவித்தான் .இது சுந்தர காண்டத்தில் வருகிறது

सुनु कपि तोहि समान उपकारी। नहिं कोउ सुर नर मुनि तनुधारी॥

प्रति उपकार करौं का तोरा। सनमुख होइ  सकत मन मोरा॥3

सुनु सुत तोहि उरिन मैं नाहीं। देखेउँ करि बिचार मन माहीं॥

இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு கிஷ்கிந்தை வந்து இராமனிடம் சீதையைப் பார்த்த விவரங்களையும் சீதை படும் துன்பங்களையும் ஹனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். இராமனின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது. ஹனுமன் இராமனைச் சமாதானப்படுத்தி. “அங்குள்ள அரக்கர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் அவர்களை  எல்லாம் வென்று வருவீர்கள்” என்று சொல்கிறான். அதைக் கேட்ட இராமன் “ஹனுமனே! உன்னைப் போல் எனக்கு உதவி செய்தவர் தேவரோ, மனிதனோ, முனிவரோ, உடல் பெற்ற ஒருவர் கூட இல்லை. நான் உனக்கு பதில் உதவி என்ன செய்து விட முடியும்? என் மனது கூட உனது எதிரில் நிற்க முடியாது. உனது கடனைத் தீர்ப்பது முடியாத காரியம்”  என்று கூறுகிறான்.

புராணங்களில் ஹனுமனின் வரலாறு

புராணங்களின் (புராண வரலாறுகள்) படி, ஹனுமனின்  தாயாரின் பெயர் அஞ்சனா. அவள் குரங்கு மன்னன் கேசரியின் மனைவி. ஹனுமன் கடவுளின் அருளாகப் பிறந்தான்.காற்றுக் கடவுள், மருத் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அனுமன் ‘ஆஞ்சநேயர்’ அல்லது ‘மாருதி’. இருப்பினும், அவரது மிகவும் பொதுவான பெயர் ‘ஹனுமன்’ என்பது. ஒரு முறை அவர் தேவர்களின் அரசனான இந்திரனின் கடுமையான ஆயுதமான ‘வஜ்ரத்தால்’ தாக்கப்பட்டார்.. அதன் காரணம் என்ன?

பிறந்த சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹனுமனுக்கு அதிகமான பசி எடுத்தது/, சூரியன் உதிப்பதைப் பார்த்தான், அது ஏதோ பழுத்த சிவப்புப் பழம் வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான். உடனே ஒரே பாய்ச்சலாக அதைப் பிடிக்க ஆகாயத்திற்குத் தாவினான்.  தற்செயலாக, அது சூரிய கிரகணத்தின் நேரம். புராணங்களின்படி,  இராகு  சூரியனை விழுங்கச் சென்று கொண்டிருந்தான். ஹனுமன் விரைந்து வருவதைக் கண்டான்.. ஹனுமன் ஏதோ போட்டியாளன் என்று நினைத்துப் பயந்து ஓடிவிட்டான்.. உடனே  இராகு தேவர்களின் ராஜாவான இந்திரனிடம் தனது வழக்கமான உணவு மறுக்கப்படுகிறது என்று புகார் செய்தான். உடனே இந்திரன் இந்த விஷயத்தில் தலையிட எண்ணி தனது ஐராவதம் என்ற வெள்ளை நிற கம்பீரமான யானையின் மீது ஏறி விரைந்தான் .

உடனே ஹனுமன் அந்த அந்த யானையை ஏதோ வெள்ளைப் பழம் என்று நினைத்து சூரியனை விட்டு விட்டு அந்த யானையின் மீது குதித்தான். இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.

ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த   ஹனுமனுக்கு  நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர். அவர்களும் ஹனுமானுக்கு பல வரங்கள் அளித்து ஹனுமனை யாராலும் வெல்ல முடியாத நிலையை உருவாக்கி வாயு பகவானை சமாதானப்படுத்தினர்.

ஹனுமனின் முகம் சிகப்பாக இருப்பதைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. ஒன்று அவர் குழந்தையாய் இருக்கும் சமயம் சூரிய வெப்பத்தினால் அவரது முகம் சிவந்து போயிற்று என்று சொல்வர். இரண்டாவது  அன்னை சீதை அவரது வகிட்டில் சிந்தூரம் அணிந்து கொள்வாள். அது அவரது சிவந்த முகத்திற்கு இன்னும் அழகைக் கூட்டிற்று. ஹனுமான் அந்த சிந்தூரம் அணிவதற்கான காரணத்தைக் கேட்டபோது அது ஒரு மங்கலமான குறி என்றும் சீதை என்றென்றும் இராமனின் மனைவி என்பதைக் கட்டுவதற்காகவும் சீதையை இராமனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுவதையும் சொல்லப்பட்டது. வகிட்டில் உள்ள சிறிய போட்டு போன்ற சிந்தூரம் சீதையை இராமனுக்கு அதி ப்ரியமானவளாக செய்யுமானால் முகம் முழுவதும் அந்த சின்தூரத்தைப் பூசிக்கொண்டால் நாம் இராமனுக்கு எவ்வளவு பிரியமானவனாக ஆவோம் என்று நினைத்து முகம் முழுவதும் சிந்தூரம் பூசிக்கொண்டதாக ஒரு கதையும் உண்டு.

சிறிய வயதில் ஹனுமன் மிகவும் குறும்புக்காரனாக இருந்தான். முனிவர்களின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களை உடைத்தும், இலைகளை உதிர்த்தும், மரங்களின் பழங்களைத் தின்றும் கொட்டமடித்து அந்த இடங்களையே குப்பை மேடக்கினான்.  அதனால்  யாராவது ஒருவர் நினைவூட்டும் வரை அவன் தனது சக்தியை மறந்து விடுவான் என்று முனிவர்கள் சபித்தனர். சீதையைத் தேட இலங்கை செல்வதற்காக வானரங்களும் கரடிகளும் கடற்கரையை அடைந்த போது எல்லோருமே அந்தக் கடலைத் தாண்டும் சக்தி தங்களுக்கில்லை என்று சொன்னபோது முதியவரான ஜாம்பவான் ஹனுமனுக்கு அவனது சக்திகளை நினைவூட்டி கடலைத் தாண்டிச் செல்லும் சக்தி அவனுக்கு உள்ளது என்ற நம்பிக்கை அளித்தார். அதனால் ஹனுமான் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டதுமல்லாமல் இலங்கையையும் தீக்கிரையாக்கினார்.

சிரஞ்சீவி ஹனுமன்

ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். ன் நெருக்கமானவன்.  இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல   ஜபிப்பவர்களைப் பதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.

 र्कर्ञ्चदुत्तरों वायों त्वया मत्कृ तकारणात् 

एवों र्वभीषणों तूक्त्वा नूमन्तमथाब्रवीत्  ३४॥

मारते त्वों र्चरञ्जीव ममाज्ञाों मा मृषा कृ थाः 

जाम्बवन्तमथ प्रा र्तष्ठ त्वों िापरान्तरे  ३५॥

இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.

வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.

तथेति प्रतिजग्राह रामवाक्यं विभीषणः  राजा रा्तसय्ख्यानां राघवाज्ञामनुखरय्‌  २३२  तमेवुक्त्वा काकरख्यो हनूमन्तमथात्रवीत्‌  जीविते कृतवुद्विस््वं मा अ्रतिज्ञां विरोपय ।॥ ३२३  मत्कथाः भरचरिष्यन्ति यावछोके इरीश्वर  वैषद्रमख सुप्रीतो मदाक्यमदुपारुयन्‌  ३४  एषयुक्तस्तु हलमान्राववेण महात्मना  वाक्यं निज्ञोपयामास परं हर्षमवाप्य   

இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.

பிறகு ராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.

                   **                         தொடரும்

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)

Written by London Swaminathan

Post No. 15,601

Date uploaded in London –10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 71

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 71

உலகை அழிக்கும் வடவைத் தீ!

வடவாலும் வாராகர மேழுங் குடித்து … வடவாக்கினியையும்*,

நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து,

மாசூரொடு போரம் பறுத்து … பெரிய சூரனோடு செய்த போரிலே

அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து,

வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா … பாணங்கள் தங்கும்

இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே,

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து …

தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள்

என்று அழைத்து,

வானோர்பரிதாபந் தவிர்த்த பெருமாளே. … தேவர்களின்

பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.

பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வடக்கிலுள்ள கடலுக்கடியிலிருந்து வரும் நெருப்பு அலையை ‘வடவாக்கினி’ என்பர்.

இதையே சம்க்ருதத்தில் படவா என்று சொல்லி, பெண்குதிரை வடிவிலுள்ள தீ என்றும் செப்புவர். விளக்கம் கீழே உள்ளது

அற்புதத்த திருப்புகழ் தேன்!

அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி … மிக அற்புதமாக

அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி,

எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் …

எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ

ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும்,

இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய … துன்பக்

கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும்,

நானா விகார புற்புதம் பிறப்பு அற … பலவிதமான கலக்கங்கள்

(காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை

எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி

மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக

ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே … இன்பம்

தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி … வாசுகி என்னும் பெரிய

பாம்பாகிய கயிற்றை பலமாகக் கட்டியுள்ள

ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து … ஒப்பற்ற பெரிய மேரு

மலையாகிய வில்லைப் பிடித்து,

ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து … சிறந்த திருமாலாகிய

அம்பைச் செலுத்தி,

துவார பாலகர் யார்?


அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர்

தூளாகவே … அங்கிருந்த அசுரர்களில்மூன்று பேர்* மட்டும் இறந்து போகாமல், பாபச் செயலில் ஈடுபட்டிருந்த திரிபுரத்து அசுரர்கள் பொடியாய் விழ,

நுதல் சிரித்த வித்தகர் வாழ்வே … முன்பு புன்முறுவல் செய்து

எரித்த, பேரறிஞராகிய சிவபெருமான் பெற்ற செல்வமே,

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்— சுந்தரர் தேவாரம்.

***

அருணகிரிநாதர் குறிப்பிடும்

வடமுகாக்கினி என்றால் என்ன ?

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனிவடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும்பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

கடலுக்கடியில் எப்போதும் இருக்கும் வடவாக்கினிக்கும் ஜீரண சக்திக்கும் என்ன தொடர்பு ? புரியவில்லையே என்று யோசித்துப் பார்த்தேன்; பின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன்; எப்படி பூமிக்கடியிலுள்ள தீஇந்த உலகினை  நிலைநிறுத்திகிறதோ அல்லது அழிக்கிறதோ அதே போல நமது அடிவயிற்றில் ஜடராக்கினி உள்ளது ; இதை நாலு விதமாக ஆயுர்வேதம் பிரிக்கிறது; இந்த ஜடராக்கினி நன்றாக இருந்தால் ஜீரணம் நன்றாக இருக்கும் .

உடலில் உள்ள நாலு அக்கினி / தீ

Jataragni is the primary “digestive fire” in Ayurveda, located in the abdomen and small intestine, responsible for breaking down food, absorbing nutrients, and metabolizing tissue. As the central metabolic force (or “fire of the belly”), its strength determines health or disease, requiring care for proper digestion.

Functions: It controls hunger, digestion, and assimilation, turning food into energy.

Health Impact: A strong jataragni ensures vitality and immunity, while a weak one (mandagni) leads to the accumulation of toxins.

Types: Ayurveda classifies digestion strength into four types based on the doshas: Samagni (balanced), Vishamagni (variable), Tikshanagni (sharp/intense), and Mandagni (slow).

சமாக்கினி  – சரி சமமமனது ;

விஷமாக்கினி – மாறுபடக் கூ டிய தீ ;

தீக்ஷனாக்கினி – தீவிரமானது;

மந்தாக்கினி – மந்தமானது ;

இவைகளில் மந்தமான மந்தாக்கினி அஜீரணத்தை உண்டாக்கும் என்கிறது ஆயுர்வேத சாஸ்திரம் ;

பூமிக்கடியில் — நடுப்பாகத்தில் பல்லாயிரக்கணக்கான டிகிரி வெப்பமுள்ள இரும்புக் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது அதன் விளைவு பற்றி இன்னும் விஞ்ஞானிகள்  கூட  அறியவில்லை ஏனெனில் பூமியின் நடுப்பாகத்தை அடைய 4000 மைல்கள் போக வேண்டும். மனிதன் இதுவரை தோண்டியதோ நூறு மைல் கூட இல்லை ! அதற்கு மேல் தோண்ட முடியவில்லை ஆக அங்குள்ள அக்கினிதான் பூமிக்கும் “ஜீரண சக்தியைத்” தருகிறதோ என்னவோ தெரியாது !

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

வடமுகாக்கினி

.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

ஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.

இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்

1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்)  கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.

2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.

பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:

“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”

பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.

கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர்.

வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். ஆனால் இது வடவைத் தீ அல்ல.

ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள்? இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.

—subham—

Tags- வடமுகாக்கினி ,அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 71, துவார பாலகர் யார்? ஜீரண சக்தி, வடவைத் தீ, “குதிரை முகம்” கொண்ட தீ

ராமாயணத்தில் வரங்கள் (50) ப்ரம்மா வைஸ்ரவணனுக்கு வரம் அளித்தது! (Post No.15,600)

Brahma in Kumbakonam and Punjai 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,600

Date uploaded in London – 10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (50) ப்ரம்மா வைஸ்ரவணனுக்கு  வரம் அளித்தது!

ச. நாகராஜன்

இதுவரை யுத்தகாண்டத்தில் அளிக்கப்பட்ட வரம் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இனி உத்தரகாண்டத்தில் வரும் வரம் பற்றிய விவரங்களைக் காண்போம்.

உத்தரகாண்டத்தில் 110 ஸர்க்கங்களில் 3276 ஸ்லோகங்கள் உள்ளன.

உத்தரகாண்டத்தில் 32 வரங்களைப் பற்றிய விவரங்களை வால்மீகி முனிவர் தந்துள்ளார்.

மூன்றாவது ஸர்க்கமான, “குபேரனது உத்பத்தியும் லங்கை முதலியனவற்றை அடைவதும்’ என்ற ஸர்க்கத்தில் வைஸ்ரவணனின் தவத்தை மெச்சி பிரம்மா கொடுத்த வரம் பற்றிய விவரங்களைக் காண்கிறோம்.

புலஸ்திய மஹரிஷியினுடைய புத்திரரான விச்ரவஸ் என்பருக்கு பரத்வாஜ மஹரிஷி தனது புத்திரியை விவாகம் செய்து வைத்தார். அந்த தம்பதியருக்கு வைஸ்ரவணன் என்ற மகன் பிறந்தான். வைஸ்ரவணன் இளமையிலிருந்தே தவம் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.

ஆயிரம் வருடங்கள் ஜலத்தை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் காற்றை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் ஆகாரமே இல்லாமலும் கடும் தவத்தைப் புரிந்தார் வைஸ்ரவணன். பிரம்மா இதனால் மகிழ்ச்சியுற்று வைஸ்ரவணன் முன் தோன்றி, “நீ வரம் பெற உரியவனாகி விட்டாய். உனக்கு வேண்டியதைக் கேள்” என்று அருள்கிறார்.

பரிதுஷ்டோஸ்மி தே வத்ஸ கர்மாணேன சுவ்ரத |                      வரம் வ்ருணீச்வ பத்ரம் தே வரார்ஹஸ்த்வம் மஹாமதே ||

  உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 14

மஹாமதே – மஹாபுத்திமானாய்                                     சுவ்ரத – உத்தம விரதங்களை அனுஷ்டித்து முடித்த                     வத்ஸ – என் செல்வனே!                                               தே – உனது                                                  அனேன – இப்படிப்பட்ட                                     கர்மணா – ஆசரணத்தால்                                         பரிதுஷ்ட: – பூரண திருப்தி அடைந்தவனாக                      அஸ்மி – ஆகிவிட்டேன்                                              தே – உனக்கு                                                       பத்ரம் – க்ஷேமம் உண்டாகட்டும்                                     த்வம் – நீ                                                          வரார்ஹ – கேட்கும் வரங்களைப் பெற உரியவனாகி விட்டாய்           வரே – வேண்டுவது எதுவோ                                    வ்ருணீஸ்வ – அதை வேண்டுக

இவ்வாறு பிரம்மா கூற வைஸ்ரவணன் தான் லோகபாலகர்களுள் ஒருவனாக இருக்க வரத்தை வேண்டுகிறார்.

பகவன்லோகபாலத்வமிச்சேயம் வித்தரக்ஷணம் |

  உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 15

பகவன் – பகவானே                                         வித்தரக்ஷணம் – தனாதிபத்தியத்தையும்                           லோகபாலத்வம் – லோகபாலகர்களுள் ஒருவனாய் இருத்தலையும்   இச்சேயம் – வரமாய் வேண்டுகிறேன்.

உடனே பிரம்மா வைஸ்ரவணனுக்கு வரத்தை அருள்கிறார் இப்படி:-

அதாவ்ரவீத்தைஸ்ரவணம் பரிதுஷ்டேன சேதஸா |                  ப்ரஹ்மா சுரகணை: சார்தம் பாஹமித்தேவ ஹஷ்டவத் அஹம் வை லோகபாலானாம் சதுர்தம் ஸ்ருஷ்டமுத்யத: ||

யமேந்த்ர வருணானாம் ச பதம் யத்தவ சேப்சிதம் |                   தத்கச்ச த்வம் ஹி தர்மக்ஞ நிதீஷ்த்வவ்ப்னுஹி ||   சக்ராம்புபதாமானாம் ச சதுர்தஸ்த்வம் பவிஷ்யஸி ||

ஏதச்ச புஷ்பகம் நாம விமானம் சூர்யசன்னிபம் |                ப்ரதிக்ரூஹ்ஸ்வ யானார்தம் த்ரிதஷை: சமதாம் வ்ரஜ ||            ஸ்வஸ்தி தேஸ்து கமிஷ்யாம: சர்வ ஏவ யயாகதம் |            க்ருதக்ருத்யா வயம் தாத தத்வா தவ வரத்வயம் ||

 உத்தரகாண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 16 முதல் 20 முடிய

பரிதுஷ்டேன – உவப்புற்ற                                              சேதஸா -மனத்தால்                                                 ப்ரஹ்ம – பிரம்மதேவர்                                                 சார்த ஏவ – கூடவே                                             வைஸ்ரவணம் – வைஸ்ரவணனைப் பார்த்து                            அத இதி – இப்படி                                                ஹஷ்டவத் – மிக சந்தோஷமாய்                                      அப்ரவீத் – வாக்களித்தார்                                        பாடம் – அப்படியே                                         தர்மக்ஞ – தர்மம் அறிந்தவனே                                அஹம் வை – நானும்                                      லோகபாலானாம் – லோகபாலகர்களில்                              சதுர்தம் – நான்காமவனை                                   ஸ்ருஷ்டம் – சிருஷ்டிக்க                                        உத்தத: – எண்ணியிருக்கிறேன்                     யமேந்த்ரவருணானாம் – யமன், இந்திரன், வருணன் ஆகியவர்களுடைய பதம் – ஸ்தானம்                                                  யத் ச – எதுவோ அதாகிறதும்                                        தவ – உன்னுடைய                                               இப்சிதம் ச – பிரார்த்தனையுமாய் இருக்கின்ற               நிதீஷத்வம் – நிதீசன் பதவியை                                      த்வம் – நீ                                                        அவாப்னுஹி – அடைவாய்                                       சக்ராம்புப யமானாம் ஹி – இந்திரன், வருணன், யமன் இவர்களுடனேயே                                               சதுர்தம் ச – நான்காவதாகவும்                                        த்வம் – நீ                                                 பவிஷ்யஸி – விளங்கக் கடவாயாக                      சூர்யசன்னிபம் – சூரியனுக்கு நிகராக                                  ஏதத் – இந்த                                                       புஷ்பகம் – புஷ்பகம்                                                      நாம – என்ற பெயரை உடைய                                 விமானம் ச – விமானத்தையும்                                              யானார்தம் – வாஹனத்திற்காக                                           ப்ரதிக்ருஹீஸ்வ – பெற்றுக்கொள்                               . த்ரிதஷை: – தேவர்களுடன்                                            சமதாம் – சமமாக இருக்கும் பதவியை                                    வ்ரஜ – அடைவாயாக                                                தே – உனக்கு                                                           ஸ்வஸ்தி – மங்களம்                                                   அஸ்து – உண்டாகுக                                             தாத – மிகுந்த நட்புக்குரியவனே                                             தவ – உனக்கு                                                        வரத்வயம் – வரம் இரண்டையும்                                   தத்வா – தந்து                                                           க்ருதக்ருத்யா – கிருதகிருத்தியர்களாகி                                    வயம் – நாங்கள்                                                  சர்வே – அனைவரும்                                              யதாகதம் ஏவ – வந்தபடியே                                                    கமிஷ்யாம: – செல்லுகின்றோம்                                    தத் – ஆதலால்                                                    கச்ச – நீயும் போ

இவ்வாறு கூறிவிட்டு பிரம்மா தேவர்களுடன் தனது இருப்பிடம் சென்றார்.

ஆக இந்த ஸர்க்கத்தில் இரு வரங்கள் பற்றிய விவரங்களை நாம் அறிகிறோம்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 49; இந்து மத கலைச்சொல் அகராதி-49 (Post No.15, 599)

Written by London Swaminathan

Post No. 15,599

Date uploaded in London –9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

KU words (Tamil Version )

குல தெய்வம்

ஒவ்வொரு குடும்பத்தினரும் பரம்பரை பரம்பரையாக வழிபடும் தெய்வம் ; பொதுவாக மூதாதையர் பிறந்த ஊரிலுள்ள தெய்வம் அந்தக் குடும்பத்தினரின் குலதெய்வமாக இருக்கும்; குடும்பத்தில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பெயரிலும் இதைக் காணலாம் . அந்தக் குடும்பத்தினர் உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது கல்யாணம் கார்த்திகை போன்றவைகளுக்கு முன்பாகவோ குலதெய்வத்தை வழிபடுவதற்கு வருவார்கள் ; சிறப்பான பூஜை  அபிஷேக ஆராதனைகளையும்  அப்போது செய்வார்கள்.

***

குமரிலபட்டர்

இந்து மத தத்துவங்களில் மீமாம்சகப் பிரிவு அறிஞர்களில் ஒருவர்; அவரை ஆதி சங்கரர்  , சந்திக்கச் சென்றபொழுது , அவர் உமிக்குவியலுக்கு தீ மூட்டி அதன் நடுவில் அமர்ந்து இறந்து கொண்டிருந்தார்;  புத்த மத குரு ஒருவரிடம் பொய் சொன்ன தவற்றுக்காக, பிராயசித்தமாகப் பிராணத் தியாகம் செய்த மாபெரும் இந்து அவர். தனது இறுதிக்காலம் வந்துவிட்டதால் மண்டனமிஸ்ரரைச் சந்தித்து அத்வைத தத்துவத்தை விவாதிக்கும்படியும் அனுப்பி வைத்தார் ; மீமாம்சகப் பிரிவு, வேதங்களின் கர்ம காண்டத்தில் நம்பிக்கை உடைய பிரிவு.

***

கும்பகர்ணன்

ராவணனின் சகோதரர்களில் ஒருவன்; உருவத்தில் மிகப்பெரியவன் ; ஒரு முனிவரின் சாபத்தால், ஒரு வருடத்தில் ஆறுமாதம் உறங்கு வதையே தொழிலாகக் கொண்டவன்; அவனை எழுப்புவதற்கு யானைகளும் பிரம்மாண்ட டமாரங்களும் தேவைப்பட்டன. சாப்பாட்டில் கடோத்கஜன் போல சாப்பிடுவான் ; இவனது வருணனை ராமாயணத்தில் வருகிறது ; இவனுடைய கதை மற்றும் வேதத்தில் வரும் , கட்டை விரல் அளவு மட்டுமேயுள்ள வாலகில்ய முனிவர்களின் கதை , விரலான் கதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட் என்பவர் கல்லிவர்ஸ் டிராவல்ஸ் கதையை எழுதினார் .

***

குமாரசம்பவம்

குமார சம்பவம், சம்ஸ்க்ருத மொழியி லுள்ள மஹா காவியங்களில் ஒன்று; இந்த நூலினை செய்யுள் வடிவில் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் இயற்றினான். முருகப்பெருமானின் அவதாரத்தை எழுத வந்த காளிதாசன் இதை முடிக்கும் முன்பாகவே இறந்துவிட்டார்; இப்போதுள்ள காவியத்தில் முதல் எட்டு சர்க்கங்கள் மட்டுமே காளிதாசரின் படைப்பு ; பிற்காலத்தில் யாரோ ஒரு புலவர் ஒன்பது சர்க்கங்களை சேர்த்துவிட்டார் ; முதலிலுள்ள எட்டு சர்க்கங்களில் கூட, எட் டாவது சர்க்கத்தில் அதிகமாக காம   விஷயங்கள் இருப்பதால் பெரும்பாலோர் அதைக் கற்பிப்பதில்லை; முதலாவது சர்க்கத்தில் வரும் இமயமலை வருணனையை சங்கப்புலவர்கள் தமிழில் வடித்துள்ளனர் ; காளிதாசன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த புலவர் ஆவார்.

***

கும்மி  –  கோலாட்டம்  பகுதியைக் காண்க  .

***

குறவஞ்சி

ஒரு குறத்தி, பெண்ணின் தாயாரிடமோ அல்லது  காதலியிடமோ வருங்கால கணவன் பற்றி குறி / ஜோதிடம் / ஆருடம் சொல்லும் சம்பவம் குறவஞ்சியில் இடம் பெறும்; இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று ; திரிகூட ராஜப்ப கவிராயர் இயற்றிய  திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் பாடல் நூல் மிகவும் சுவையானது; இதில் குற்றால மலையின் அழகு, மலையின் வளம் முதலியன பாடப்பட்டுள்ளது; நடன அரங்குகளில் ஆடுவோர் குற வஞ்சி நடனத்தைக் கடைசியில் சேர்ப்பது உண்டு ; இதில் வெறும்காதல் சுவை மட்டுமில்லாமல் பக்திக் சுவையும் இருக்கும். திரைப்படத்தில் குறவஞ்சி : 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த குறவஞ்சி திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

***

குசன் , லவன்

ராம பிரானின் இரண்டு புதல்வர்களை வடக்கில் குச லவன் என்றும் தெற்கில் லவ குசன் என்றும் சொல்லுவார்கள்  ; சீதா தேவி, வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இருவரும் ராம பிரானைச் சந்தித்தபோது அவர் மகிழ்ச்சியுடன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார் லவ குசன் பெயரில் திரைப்படங்களும் பாடல்களும் வந்துள்ளன. பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில் உண்மையான குசனை வனவிலங்கு விழுங்கியதாகவும் பின்னர் வால்மீகி  முனிவர் குச என்னும் புல்லைவைத்து உருவாக்கிய புதல்வனே குசன் என்றும் கற்பனைக்கதைகளைச் சேர்த்து மக்களைக் குழப்பியுள்ளனர்.

***

கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு

கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலைப்  புதுப்பித்து மீண்டும் மந்திர சக்தியை ஏற்றும் சடங்கு ஆகும். கட்டடங்கள் காலப்போக்கில் சிதிலமடைவதால் இந்துக்கள் இந்தச் சடங்கினைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர் .

இந்தச் சடங்கினை பேட்டரி ரீசார்ஜ்ஜிங்குடன் ஒப்பிடலாம் ; கட்டிடம் மட்டும் புதுப்பிதல்ல இது; உள்ளேயுள்ள விக்கிரகங்களுக்கும்  சக்தியை ஏற்றும் நிகழ்ச்சி இது

 கோவிலின் எல்லாப் பகுதிகளிலும் திருப்பணி செய்வார்கள்; தேவையானால் மூல விக்கிரகங்களை பாலாலயம் என்ற பெயரில் தனியாக வழிபாட்டுக்கு வைத்துவிட்டு 40 நாட்களுக்கு யாக சாலை பூஜைகளை முடித்துவிட்டு மந்திர உரு ஏற்றப்பட்ட புனித நீரை கோபுரத்தின் மீதுள்ள கலசங்களில் அபிஷேகம் செய்வார்கள்; இதைக் காண்பது புண்யம் என்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் கூடுவார்கள் . மடங்களுக்கும் இப்படிச் செய்வதுண்டு  மூலஸ்தானத்தில் விக்கிரகங்கள் அல்லது சிலைகளை வைக்கும் இடத்தில் அஷ்ட பந்தனம் என்னும் மருந்துக்கலவையை இட்டு தங்கம் மற்றும் இரத்தின கற்களால் அந்த இடத்தை நிரப்பி, சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்வார்கள் . அப்போதும் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படும்; தமிழில் குடமுழுக்கு என்ற சொல்லைக்  கல்வெட்டுகள் உபயோகித்துள்ளன .

****

குசத்வீபம்

இந்துக்கள் அபாரமான பூகோள அறிவு படைத்தவர்கள்! ஓரிடத்தில் முக்கியமாகவுள்ள தாவரம் அல்லது பறவை அல்லது விலங்கினை வைத்து அந்த இடத்துக்குப் பெயரிட்டனர்.  ஆசிய ஆப்ரிக்க நிலப்பரப்பினை புராணங்கள் ஏழு கண்டங்களாகப் பிரித்தனர்; தமிழ் இந்துக்கள் குறிஞ்சி, முல்லை நெய்தல் ,மருதம், பாலை என்று பிரித்தனர்; புராணத்திலுள்ள ஏழு கண்டங்களில் ஒன்று குசத்வீபம்.  புராண புவியியலின்படி, இது குச புற்கள் (Kusha grass) அதிகமாகக் காணப்படும் பகுதியாகும்.

விஷ்ணு புராணத்தின்படி, வபுஷ்மான்/ஜ்யோதிஷ்மான் குசத்வீபத்தை ஆட்சி செய்தார்.

சப்தத்வீபங்கள்: இது ஜம்புத்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் ஆகியவற்றுடன் சேர்த்து ஏழாவது கண்டமாகக் கருதப்படுகிறது. இந்த இடங்கள் புராண ரீதியானவை மற்றும் பூமியின் தற்போதைய புவியியல் வரைபடத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாதவை. GEOGRAPHY OF THE PURANAS புராண பூகோளம் என்ற பெயரில் பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. எவரும் ஒரே பெயரைச் சொலவதில்லை! பாரத நாட்டுக்கு மட்டும் ஜம்புத்வீபம்/ நாவலந்தீவு  என்பது சங்க இலக்கியத்திலும் புராணங்களிலும் உள்ளது .

****

குண்டலினி

குண்டலினி என்பது மனித முதுகெலும்பின் அடிப்பகுதியில் (மூலாதார சக்கரம்) உறங்கும் நிலையில் இருக்கும் ஒரு சக்தி ஆகும்.  சரியான யோகப் பயிற்சிகள், தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி (வாசி யோகம்) மூலம், இந்த ஆற்றல் எழுப்பப்பட்டு முதுகுத்தண்டின் வழியாக மேலேறி, தலை உச்சியில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது ஞானம் ஏற்படும்.

திருப்புகழ், திருமந்திரம், விநாயகர் அகவல் , பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் முதலியவற்றில் குண்டலினி வருகிறது; தற்காலத்தில்  இது பற்றி எழுதுவோர் எவரும் அந்தச் சக்தியை அடைந்தவர் அல்ல; இந்த சக்தியை எழுப்புவோர் சில அற்புத சக்திகளைப் பெறுவதால் பாதியில் தவறான செயல்களைச் செய்து சிறைக்குப் போய்விடுகிறார்கள்  . மீதிப்பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்; ஆகையால் இதை நல்ல குருநாதர் இல்லாமல் துவங்கக்கூடாது!

பாம்பு பற்றி இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

மூலாதாரத்தில் தொடங்கி, சுழுமுனை நாடி வழியாக, மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா போன்ற சக்கரங்களைக் கடந்து சஹஸ்ராரத்தை அடைகிறது.

சஹஸ்ராரம் (Sahasrara) என்பது மனித உடலின் ஏழாவது மற்றும் மிக உயர்ந்த சக்கரமாகும், இது தலை உச்சியில் அமைந்துள்ளது (Crown Chakra). ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகக் குறிக்கப்படும் இது, பிரபஞ்ச சக்தியுடன் ஆன்மா இணையும் இடம், பேரானந்தம், ஞானம் மற்றும் உச்சக்கட்ட ஆன்மீக உணர்தலை உணர்த்துகிறது.

குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.

to be continued………………………….

Tags—குல தேவதை, குண்டலினி, லவ குசன், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 49; இந்து மத கலைச்சொல் அகராதி-49, 

Tiruppavai in Pictures with Three English Translations- Part Seven (Post No.15,598)

Written by London Swaminathan

Post No. 15,598

Date uploaded in London –9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

First translation by Ms Kausalya Hart, Second by PR Ramachander and the third by Dr Chenni Padmanabhan M D

Verses 19, 20, 21

****

Verse 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;

மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை யேலும் துயில் எழ ஒட்டாய் காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவம் அன்று தகவேலோர் எம் பாவாய். (19)



492. The girls coming to wake up the god and Nappinnai say,
“O Thirumāl adorned with garlands,
you sleep on the breasts of Nappinnai,
adorned with beautiful flowers on her hair,
on a soft mattress on an ivory cot
and the room is bright with lights.
O Nappinnai with kohl-darkened eyes, open your mouth,
How could you not get up and want to see your beloved?
Surely you can understand
that you won’t be able to be away from him for long.
This isn’t good for you.
We are going to worship our Pāvai

In the light of the oil lamp,
On the ornamental four legged ivory cot,
On the soft bed filled with cotton,
Reclining on the busts of Nappinnai,
You sleep, Oh he who has a flower like heart,
Please open your mouth .
She who has, wide black eyes with collyrium.
We know that you will never allow him to wake up,
For you can never bear to be away from Him,
This is not that good,
And cannot be accepted by us.
Please allow us to worship our Goddess Pavai.

Kudos to Thee! Settled on a cot ivory footed

Soft silk cotton mattress with quality quintet

In  glimmering light of a metal lamp and

Inclined on the bosom of Nappinnai

Having flowerful locks bunch of blossoms bloomed;

Thy chest a flower bed, open Thy mouth instant;

Thy eye graced with

Eye liner black, a charm;

Let whatsoever time, wouldn’t arouse thy groom;

Not howsoever endure a moments separation this norm

In neither reality nor befitting, consider our damsel.


**************************

Verse 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்;

செப்பம் உடையாய்! திரள் உடையாய்!

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்;

செப்பன்ன மென் முலை செவ்வாய் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம் பாவாய். (20)


493. The girls coming to wake up the lord and Nappinnai say,
“O dear god, if any of the thirty-three crores of the gods
have troubles, you go and remove them.
Get up, faultless, strong one,
vex your enemies and take care of your devotees.
O beautiful young Nappinnai
with soft breasts like small cheppus,
a red mouth and a tiny waist, get up!
Give us fans and mirrors and send your husband with us
so that we can praise him and go to bathe.
We are going to worship our Pāvai


Who removed sorrow and fear,
From the thirty three sections of Devas
[33],
Even before they approached you,
Oh Lord, Who is glittering like gold,
Oh Lord, who has inimitable valour,
Please wake up,
Oh Lady Nappinnai,
Who has desirable busts like golden pots.
Who has little red mouth,
And who has thin narrow hips,
Please wake up, Oh Goddess of wealth.
Please give mirror and fan,
Just now to your consort,
And allow us to take bath,
And thus worship our Goddess Pavai.

Move ahead of thirty-three celestial beings

Thou forestall tremor, vanguard, Mighty, awake!

Righteous, energetic, immaculate, would persecute

Arrogance and subjugate, Thou shalt awake!

Nappinnai damsel ! wit breast a la copper, soft;

Rosy cheeks and tiny waist. Lakshmi ! Thou shalt awake!

Present us Thy groom,

Fan circular and optics;

And bathe us right now we derelicts

In His ocean compassion Thou mediatrix

Listen and consider our damsel.

********************

Verse 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்!

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்;

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம் பாவாய். (21)


494. The girls coming to wake up the god say,
“O son of Nandagopan, lord of fine cows
that yield milk generously and make the pots overflow,
you are wise, a bright light and our refuge.
Get up. We have come to your door
as if we were your enemies unable to fight with you.
We come and worship your feet,
praising you whose fame is abundant.
We are going to worship our Pāvai

Oh son of him,
Who owned several cows,
Which gave so much milk,
That always the milking vessel got overflowed,
Please wake up.
Oh Lord, who is full of mercy,
Oh Lord, who is better than the best,
Oh lord, who is the light that began the world,
Please wake up.
Like your flock of defeated enemies,
Falling at your feet in surrender,
We came praising you,
So that we get fame,
And worship our Goddess Pavai.


in vessels filled to brim, grand donor cows

issue incessant flow of milk to counter flow:

Oh! Son of Nandagopala! Owner of such immense;

Get enlightened! Thou resolute, magnanimous

Remain pre-eminent on this earth

 A beacon resplendent aglow

We have come lauding and hailing;

Forlorn sans energy, and assiduous;

As would foes, at Thy gate unanimous

Have gathered to surrender to Thy foot glorious;

Arise! Listen and consider, our damsel.

–subham—

tags- Tags-Tiruppavai in Pictures,  Three English Translations,Part Seven ,

Kausalya Hart, PR Ramachander , Dr Chenni Padmanabhan ,

Verses 19, 20, 21

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597)

Written by London Swaminathan

Post No. 15,597

Date uploaded in London –9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 70

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 70

***

ஐராவதம் யானைக்கு 4 தந்தங்கள்

கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும்

கொண்டல் … தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன்,

புலோமசையள் சங்க்ரம பார கும்ப(ம்) மால் வரை பொருந்து

இந்த்ர பூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும்

வீரா … இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம்

போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே,

அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச

வானவர் உறும் சிறை மீள … கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும்,

மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள்

அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும்,

அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து அம் கை

வேலு உற விடும் பெருமாளே. … அங்கங்களைக் கொண்ட நாலு

வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.

ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.

***

வள்ளிமலையில் வளரும் தாவரங்கள்

தாதகீ சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன(ம்)

நீடு சாம வேதண்டம் … தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை,

நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில்,

வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம்

மேவும் … கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும்

தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா … குற்றமே

இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த

திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே,

தண்டை அம் கழல் பேணி தேவி பாகம் பொருந்து ஆதி

நாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெருமாளே. … பார்வதி

தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான

சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை

விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே.

தாதகி =ஆத்தி, ஆத்திமரம்வாசந்தி= குருக்கத்தி

***

மெளனம் என்னும் கூண்டு !

மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே … மெளனம் என்னும்

கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக.

பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி

விதம் பெற ஆடல் பயில் பணா வனம் உகந்த குண மாசுண

கணம் … பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம்,

பனி நிலா உமிழும் அம்புலி தாளி குரவு கூவிளம் அரும்பு

இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் … குளிர்ந்த

ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின்

ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே

அமரர் தம் பெருமாளே. … உடலம் குழையும்படி அன்புடனே

தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.

**

ஆயிரம் மா முகம் கங்கை ; அப்பர் பாடலை ஒப்பிடுவோம் ;

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

முருகன் சேவிங்ஸ் டெபாசிட் Savings Deposit or Provident Fund

மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில்

மீது ஏறி வருவோனே … மக்களும், விண்ணோர்களும், பல

திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ … சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி,

வைத்த படி மாறாத பெருமாளே. … அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே.

வைத்த மாநிதி/ பிராவிடண்ட் பண்ட்

நான் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையிலிருந்து :

நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் சுவைப்போம்.

3410    வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி

கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன

பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே

சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே

    சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.

***

அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்

திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்- த்திலுள்ளது . இது மதுர கவி ஆழ்வார் பிறந்த திருத்தலம் . குபேரன் தன் செல்வத்தை வைத்த இடம் அல்லது இன்வெஸ்ட் INVEST – முதலீடு  செய்த இடமென்று சொல்லலாம்.

இந்தக் கட்டுரை இன்வெஸ்ட்மென்ட் – முதலீடு பற்றியது. வைத்த மாநிதி என்ற பெயர் மறக்க முடியாதது. நான் மதுரை தினமணிப் பத்திரிகையில் (1971-1986) சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியபோது ஒருநாள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் (ANS) சப் எடிட்டர் உள்ள மேஜைகள் அருகே வந்து “ஏய், வைத்த மாநி என்றால் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா ? ப்ராவிடென்ட் பண்ட் PROVIDENT FUND ( PF) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் சப் எடிட்டர் குரூப்பில் ஒருவர் மட்டுமே அய்யங்கார் ;  ஏனையோர் அய்யர், பிள்ளை, கோனார் (யாதவர்) ஜாதிகளை சேர்ந்தோர். அன்று அந்த அய்யங்கார் ‘ட்யூட்டி’யில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆகையால் திரு ஏ என் எஸ் சொன்னதன் பொருளை பாராட்டவோ மேலே விவாதிக்கவோ யாரும் இல்லை; அவரும் அதைச் சொல்லிவிட்டு அவர் உடகார்ந்துள்ள இடத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நம்மாழ்வார் பாசுரத்தைப் படிக்கும்போது அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருள் விளங்குகிறது!

  அவர் திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர்;ஆகையால் அவருக்கு வைத்தமாநிதி திடீரென்று நினைவுக்கு வைத்தது போலும் .

இப்போது பிராவிடண்ட் பண்டு என்பதை ‘வருங்காலச் சேமிப்பு நிதி’ என்கிறார்கள். அதில் ஊழியர் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளியும் போட வேண்டும்;  முதலாளி கூடுதலாகவும் போட்டு தொழிலாளிக்கு உதவ முடியும். அதை ஒரு தொழிலாளி வீடு கட்டவோ, வீட்டில் நடக்கும் கல்யாணம் முதலியவற்றுக்கோ பாதியில் எடுத்துக்கொள்ளவும் வழி உண்டு. இதை கடவுள் பெயருக்கு வைத்து  எண்ணி எண்ணி வியப்படைகிறேன். நீங்கள் எந்தளவுக்கு பக்தி செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குப் பெருமாளும் உங்கள் மீது முதலீடு செய்வார் அதாவது அருள் மழை பொழிவார்; எப்படி பி எப் -பில் முதலாளி கூடுதலாக உங்கள் பெயரில் பணம் போட முடியுமோ அது போல இறைவனும் உங்கள் பெயரில் அதிகம் அருள் மழை பொழிய- கருணை காட்ட -வாய்ப்பும் உண்டு. அதனால்தான்  மாணிக்க வாசகர் போன்ற மகான்கள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடினார்கள் போலும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; தொழிலாளி சம்பளத்தில் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளி உங்கள் பி.எப் பில்  பணம் போட்டாக வேண்டும் இது போலத்தான் இறைவனும்! சத்தியம் என்னும் விதிக்கு கட்டுப்பட்டவர். ராவணன் ஆனாலும் பஸ்மாசுரன் ஆனாலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற விகிதாசாரப்படி இறைவன் வரம் கொடுத்தே ஆக வேண்டும். எப்போது முதலாளி

 நாம் செலுத்தும் பங்கினை விட நமது பெயரில் கூடுதல் பணம் போடுவார்? அவர்கள் கம்பெனி மீது நமக்கு நல்ல எண்ணமும் நல்ல ஈடு பாடும் இருந்தால் மனம் மகிழ்ந்து கூடுதல் பணத்தை நமது அக்கவுண்டில் செலுத்துவார். அதே போல நாமும் இறைவனிடத்தில் அவரது கம்பெனி/ கோவிலில் அதிக ஈடுபாடு காட்டினால் முதலீடு பெருகும். இந்த முதலீட்டுக்கு வட்டியும் கிடைக்கும். அந்த வட்டி, குட்டியும் போடும் என்பதை நினைவிற்கொண்டு வைத்த மாநிதியை வணங்குவோம்.

வைத்த மாநிதி- ஆழ்ந்த பொருள் உள்ள நாமம் !

–subham—

Tags- இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் , நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும்,  அரிய செய்திகள் ,Part ௭௦, ஐராவதம் , 4 தந்தங்கள், வைத்த மாநிதி

ராமாயணத்தில் வரங்கள் (49) ஶ்ரீ ராமருக்கு பரத்வாஜர் வரம் அளித்தது!(Post No.15,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,596

Date uploaded in London – 9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (49) ஶ்ரீ ராமருக்கு பரத்வாஜர்  வரம் அளித்தது!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘பரத்வாஜ ஆசிரமத்தை அடைவது’ என்ற 127வது ஸர்க்கத்தில் ஶ்ரீ ராமருக்கு பரத்வாஜ மஹரிஷி வரம் அளிப்பது பற்றிய செய்தி காணப்படுகிறது. பரத்வாஜரை தரிசித்த ஶ்ரீ ராமர் அவர் தவத்தின் மூலமாக அயோத்யா நிலைமை பற்றி அறிய விரும்புகிறார்.

பரத்வாஜர், பரதன் பாதுகைகளை வைத்து பூஜை செய்வதையும் அதுவரை நடந்துள்ள அனைத்தையும் தான் அறிந்ததையும் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.

பின்னர் ரிஷி கூறுகிறார்:

அஹமப்யன்ன தே தத்தி வரம் சஸ்த்ரப்ருதாம் வர |

   யுத்தகாண்டம், 127ம் அத்தியாயம், ஸ்லோக எண் 18

சஸ்த்ரப்ருதாம் வர – சஸ்திரதாரிகளும் சிறந்தவரே!                     அத்ர – இப்பொழுது                                           அஹம் பி – நானும்                                                  தே – உனக்கு                                                    வரம் – வரமொன்றை                                                    தத்தி – அளிக்கிறேன்

இதைக் கேட்ட ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தான் விரும்பியதைக் கேட்கிறார்.

அகாலே பலினோ வ்ருக்ஷா: சர்வே சாபி மதுஸ்த்ரவா: |              பலான்யம்ருதகல்பானி பஹூனி விவிதானி ||                        பவந்து மார்கோ பகவன்னயோத்யாம் ப்ரதிகச்சத: ||

   யுத்தகாண்டம், 127ம் அத்தியாயம், ஸ்லோக எண் 21

பகவான் – பகவானே                                                 அயோத்யாம் – அயோத்திக்கு                                        ப்ரதிகச்சத: – திரும்பிச் செல்லும் எனது                              மார்கே – வழியில்                                                     வ்ருக்ஷா: – மரங்கள்                                                   சர்வ ச – எல்லாமும்                                            அகாலே அபி – காலமில்லாத காலத்திலும்                      பலின: – பழங்கள் செறிந்தனவும்                               மதுஸ்த்ரவா – தேனைப் பெருக்குவனவாவுமானவைகளாய்              விவிதானி – பல்வகை                                             பஹூனி – கணக்கற்ற                                       அம்ருதகல்பானி – அமிர்தத்திற்கொப்பான                               பலானி ச – பழங்களும்                                             பவந்து – இருக்க வேண்டும்.

“அயோத்திக்குத் திரும்பிச் செல்லும் எனது வழியில் காலமில்லாத காலத்திலும் கூட மரங்கள் அனைத்தும் பழங்கள் செறிந்தனவாகவும், தேனைப் பெருக்குபவையாகவும் அமிர்தத்திற்கு ஒப்பான பழங்களுடன் இருக்க வேண்டும்” என்று ராமர் வேண்ட, “ததா இதி” அப்படியே ஆகட்டும் என பரத்வாஜ மஹரிஷி வரத்தைத் தந்து அருள்கிறார்.

இப்படி ராமர் பரத்வாஜ மஹரிஷியிடம் பெற்ற இந்த வரம் இங்கு குறிப்பிடப்படுகிறது.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 48; இந்து மத கலைச்சொல் அகராதி-48 (Post No.15,595)

image of Kumbakarna

Written by London Swaminathan

Post No. 15,595

Date uploaded in London –8 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

KU words (Tamil Version will be posted tomorrow)

Kula devata

Kuladevatā (कुलदेवता) refers to the “tutelar family deity”. The family goes to the temple of Kula devata every year or before a wedding etc to do special pooja/ritual worship. They vsit the temple even if they mirate to another town or country. The picture or an idol of the goddess /god is kept in the house. At least one of the children or grandchildren is named after the Kula devata. Some families may have more than one Kula Devata.

Kuladevatā (कुलदेवता).—a tutelary deity; the guardian deity of a family; तामर्चिताभ्यः कुलदेवताभ्यः कुलप्रतिष्ठां प्रणमय्य माता (tāmarcitābhyaḥ kuladevatābhyaḥ kulapratiṣṭhāṃ praṇamayya mātā) Kumārasambhava 7.27

***

Kumarilabhatta

Kumārilabhaṭṭa (कुमारिलभट्ट).—[masculine] [Name] of a philosophical teacher.

Great Mimamsaka and senior contemporary of Adi Sankara. He is believed to have self-immolated himself in expiation of the sine of not revealing  his true identity to his Buddhist guru . during his last days Sankara met him to discuss the doctrine of Advaita.

***

Kumbhakarna

Kumbhakarna  is Ravana’s giant brother known for immense strength and insatiable hunger. Cursed to sleep for six months, he awakens to battle, symbolizing formidable power and valiant struggle against Rama’s forces Kumbhakarna was slain by the enraged Raghava, demonstrating Rama’s might in battle.

Often depicted as a fierce warrior and a key antagonist, Kumbhakarna is characterized by his long sleep due to a curse, from which he awakens to fight battles launched against Rama.

 ****

Kumarasambhava

One of the Maha Kavyas in Sanskrit language

Kumarasambhava is the second Mahakavya of Kalidasa, the earlier one being the Raghuvamsa. It is even considered as the last among all the works of Kalidasa. The reason for it is that the work, as it is available today, contains eight cantos and is incomplete. Later, about nine cantos were added by some unknown author in order to complete to complete the story  of the birth of Lord Subrahmanya and the accomplishment of his very purpose, viz. the killing of Tarakasura. But the well-known commentators like Mallinatha and Arunagirinatha have commented only up to eight cantos thereby substantiating the theory that the work could not be completed since Kalidasa died even befoe completing it.

 It is very  interesting to note that the theme of this work is the ‘Birth of Kumara’ or Lord Muruga . The story of Kumara is, in fact, found in the Ramayana itself where Sage Viswamitra narrates this story to Rama and Lakshmana, in the  Balakanda.

It has been called “the greatest long poem in classical Sanskrit.  Some manuscripts contain up to seventeen sargas, but only the first eight are commonly ascribed to be the work of Kālidāsa himself. The eighth sarga, a vivid description of long lovemaking between Śiva and Pārvatī, was sometimes omitted by medieval scribes due to its erotic content.

***

Kummi – see Kolattam above

***

Kuravanji


Kutrala Kuravanji Dance

A gypsy telling the heroine her fortune with reference to her lover.

A genre of tamil literature. It involves fortune telling. A female kuraththi goes round the town to attract customers. Sometimes mother of a girl calls her to ask about the future (wedding) of her daughter.Kutrala Kuravanji byTrikuda Rasappa Kavirayar is a famous work in Tamil Nadu. In dance shows this Kuvavanji dance comes at the end.

***

Kusa , Lava

Lava and Kusa are sons of Rama, representing the continuation of his lineage and the legacy of his reign. They were born when Sita was living in Valmiki Ashram.

Kusa- A son of Rāma, born in Vālmikī’s āśrama and brought up by the sage. Father of Atithi.1 Ruled over Kosala kingdom from its capital Kuśasthalī .

Kuśa (कुश) is the name of a person created out of kuśa grass by sage Vālmīki, according to in the Kathāsaritsāgara, chapter 51. It is a strange story saying that the real Kuda was devoured by an animal in the forest and Valmiki created the second Kusa with the Kusa grass. In botany, the kusa grass is Poa cynosuroides.

***

Kumbhabishekam

Sanctifying ceremony  connected with the building, renovation or reconstruction of a temple and the installation of a deity.

Kumbhabhishekam) is , derived from kumbha (pot) and abhishekam (pouring). It involves sprinkling consecrated holy water from pots over the temple’s kalashas (spires) to rejuvenate the deity’s power, usually performed once every 12 years.

In Siva temples, it refers to a ritual that completes the transference of Śiva as deity manifest in the image. Accordingly, a series of rituals that animate, consecrate and install the image in the sanctum of the temple takes place.

They circumambulate the temple as a procession, accompanied by colourful umbrellas and fly-whisks, amidst auspicious sounds made by musical instruments and pronouncements. Before the Kumbabishekam , Yaga Salas/Fire pits are constructed and fire ceremonies are performed. It is a 40 day ceremony in big temples.

Madurai Meenakshi Temple Kumbabishekam, 1963.

***

Kusha-dvipa (Kuśadvīpa) is one of the seven cosmic continents (Dvīpas) in Hindu cosmology, often described in Puranic literature, including the Matsya-purana. It is characterized as a land filled with Kusha grass, surrounded by a sea of clarified butter (ghee), and inhabited by people who worship Vishnu in the form of Brahma.

Geography: It is named after the immense Kusa grass clump and is surrounded by the Ghṛtodam (ocean of ghee). It features seven prominent mountains (e.g., Vidruma, Hemasaila) and seven holy rivers (e.g., Dhutapapa, Siva).

Society: The inhabitants are divided into four classes: Damins, Susmins, Snehas, and Madahas.

Kings and Regions: The continent was ruled by Jyotisman, who had seven sons, giving rise to seven regions: Udbhid, Venumat, Svairatha, Randhana, Dhruti, Prabhakara, and Kapila.

Cultural Significance: It is described as a land of great beauty where the air is purified by the sacred grass, and the inhabitants are devoted to spiritual practices.

According to the Brahma Purana study on WisdomLib, it is the fourth continent in the Saptadvipa system, and its regions are often linked to interpretations of African and adjacent territories in some ancient geographic studies.

****

Kundalini

Kundalini is a form of dormant, primal energy located at the base of the spine, often described in Hinduism as a coiled serpent. Known as “Kundalini Shakti” or divine feminine energy, it represents creative potential that can be awakened through spiritual practices to travel up the spine, resulting in enhanced awareness, spiritual growth, and personal transformation.

Kuṇḍalinī (कुण्डलिनी) is explained in terms of kuṇḍalinīyoga by Lakṣmaṇadeśika in his 11th-century Śaradātilaka 25.64-65.—“(64) One should think of this kuṇḍalī, the chief queen of the great serpent awake in the root [cakra], as moving in the suṣumṇā, as quickly piercing through the group of ādhāras like a blazing lightning [bolt], as worshipping [her] husband with streams of divine nectar flowing from the lunar disc located in the etheric lotus, [and] as returning to [her] house.

Kuṇḍalini (कुण्डलिनि).— Tamil saint Pāmbāṭṭi Siddha, one of the most celebrated Tamil siddhas who largely deals with this Kuṇḍalini-yoga, refers the serpent to the Kuṇḍalini power, which passes one’s subtle body through six cakras. The serpent or Kuṇḍalini is also sometimes defined as ‘base fire’ (mūla kanal) in many of the Siddha’s songs.

Kuṇḍalinī (कुण्डलिनी).—How importance kuṇḍalinī is in the path or liberation is explained in Haṭhayoga Pradīpaka in the chapter samādhi. “When kuṇḍalinī is awakened through various means, one enters into the state of samādhi automatically. The one, who knows the path abandons all actions when his prāṇa enters into suṣumna (technically speaking it is through citriṇi-nāḍi, which is the inner most nāḍi in suṣumna. He is liberated when kuṇḍalinī enters into sahasrāra.”

Awakening Process: When awakened, this energy flows upward through the nadi channels and chakras, often feeling like liquid fire, electricity, or intense energy moving up the spine. It is a very risky procedure and those who do it without the guidance from a real enlightened soul, become mad.

to be continued………………………….

Tags—Kula devata, Kundalini, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 48; இந்து மத கலைச்சொல் அகராதி-48

Tiruppavai in Pictures with Three English Translations- Part Six (Post No.15,594)

Written by London Swaminathan

Post No. 15,594

Date uploaded in London –8 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

First translation by Ms Kausalya Hart, Second by PR Ramachander and the third by Dr Chenni Padmanabhan M D

Verses 16, 17, 18

****

Verse 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!

மணிக்கதவம் தாள் திறவாய்;

ஆயர்சிறுமியரோமுக்கு

அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்;

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!

நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம் பாவாய். (16)


The girls wake up the god and ask for the Paṛai.

489. The girls take to the guards of Nandagopan’s palace.
“You are the guard of the palace of the lord Nandagopan
who protect the doors that are decorated with flags and festoons.
The dark jewel-colored Māyavan
said yesterday that he would give
a sounding Paṛai to us, the cowherd girls.
We have bathed to make ourselves pure
and have come to sing and wake him up.
O guard! Don’t say this or that and make excuses.
Open the front door of this palace!
We are going to worship our Pāvai.”

Hey, He who guards the palace of Nanda Gopa
Hey, who gauards the ornamental door with flags,
Please be kind to open the door with bells,
For yesterday the enchanter Kannan,
Has promised to give beating drums,
To us the girls from the houses of cow herds.
We have come after purification,
To wake Him up with song,
So do not 
talk of this and that, Hey dear man,
And open the door with closed latches,
So that we can worship our Goddess Pavai.

Thou guarding the temple of Nandagopala

Who is supreme of our clan

Guard of entrance with flag staff ostensive

And festoon suspended across;

Open latch of jewel-studded door;

He Elusive gem coloured had plan

Vouched yesternight Ayarpadi lass, the drum to knock;

We have come immaculate to pray arouse;

Thou shalt not postpone and pronounce

Open the lovely, befit door at once.

Listen and consider our damsel.

**************

Verse 17

அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும்

எம் பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்;

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம் பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத்தோங்கி உலகளந்த

உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;

செம் பொற் கழல் அடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம் பாவாய். (17)



490. The girls come to wake up Nandagopan, Yashoda,
Baladevan and the gods, say,
“O Nandagopalan, dear lord of the cowherds
who give clothes, water and food to all, get up!
O Yashoda, tender shoot among all the women who are soft as vines,
the bright light of your family, and our dear one, get up.
O king of the gods with feet adorned with pure golden anklets.
You grew tall, split the sky and measured the world.
Dear one, do not sleep. Get up.
O Baladeva, don’t sleep with your little brother.
We are going to worship our Pāvai

Hey Nandagopa, who does good deeds and charity,
Who gives water, cloth and food to others,
Pleas wake up.
Our lady Yasodha, who is the light of the homes of cow herds,
She who is dear to all the ladies,
Please wake up.
Hey ,Krishna who is the king of Gods,
Who went up tearing th sky.
Please wake up, and do not sleep.

Hey Baladeva, who wears pure golden anklets,
Please wake up along with your brother,
So we can worship our Goddess Pavai.

Attire, water and food thou donate

Our patron Nandagopala arise!

Sprout of a creeping plant! Light of our clan!

Our patroness Yasoda, get enlightened!

Grown piercing the cosmos. Thou had meted this earth

King of Angels! Thou shalt arise!

Shed thy sleep, drowse no more,

Baladeva wealthy! Thy foot bright adorned

By gold anklet of a victor;

Junior and thyself our benefactor

Discard drowsing!

Arise and consider our damsel.

*********

Verse 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்,

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்;

மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட,

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம் பாவாய். (18)


491. The girls coming to wake up Nappinnai say,
“O, fragrant-haired Nappinnai,
daughter-in-law of strong-armed Nandagopan,
who own of many rutting elephants, open the door.
The roosters are calling to wake everyone
and the flock of cuckoo birds sitting on the vines
blooming with mādhavi flowers call out.
Come, your fingers are beautiful and soft,
open the door so the lovely bracelets
on your beautiful lotus hands jingle.
Come and join us to sing
and praise the name of your husband.
We are going to worship our Pāvai

Hey, Who is the fair daughter in law,
Of Nanda gopa, who has several elephants,
And who is a great hero who never ran away from his enemies,
Hey Lady Nappinnai
], who has hair surrounded by holy scent,
Please be kind to open the door.
The cocks are everywhere waking us up,
The koels flock on the jasmine Pandals,
And coo so that we all wake up,
Hey Lady who happily plays ball,
To help us sing your Lords fame,
With your hands with tingling bangles,
Please open the door with happiness,
So that we can worship our Goddess Pavai.

Oh! Daughter-in-law of Nandagopala

Who hath a shoulder mighty, never a fleer

A valiant tusker emitting vigour; atop jasmine arcade

Again ‘n’ gain flock of larks had cooed;

Nappinnai thy hair perfume fragrant , door thou open!

Cock come around, hath crowed with vigour;

Thou art asleep, ball agrip, as we sing thy groom;

Come along! Throw open delighted

To clang thy bangle bright,

In pinky lotus hand a sight;

Listen and consider our damsel.

–subham—

Tags- Tiruppavai, Three, English translations, Part 6, Verses 16, 17, 18