ENGLISH AND TAMIL ARTICLES ON GREATEST MATHEMATICIAN RAMANUJAN

FROM INDIAN EXPRESS

The Hardy–Ramanujan number: What 1729 reveals about Srinivasa Ramanujan, even to non-mathematicians

National mathematics day: We explore the Hardy–Ramanujan number to explain two things about the legendary Indian mathematician Srinivasa Ramanujan, on his 138th birth anniversary.

Written by Yashee
New Delhi | Updated: December 22, 2025 07:20 PM IST

clock_logo5 min read

Print

Ramanujan birth anniversary: December 22 is observed as National Mathematics Day in honour of Srinivasa Ramanujan. (Photo: Wikimedia Commons)

National Mathematics Day: December 22 is observed as National Mathematics Day in India to honour Srinivasa Ramanujan, the man who seemingly knew infinity. While Ramanujan is celebrated as a genius and a legend, often, there is the danger of popular discourse around him stopping right there — celebrating him as an unknowable genius, and not making enough efforts to understand him.

Ramanujan is known for the many formulae he scribbled on pieces of paper — proved as correct by other scientists — without showing anything of the process he used to arrive at the formula. In mathematics, a discipline of order and method and patterns and connections, what Ramanujan did was highly unorthodox. There is the popular legend that once in England, when asked about his methods, Ramanujan said the deity Namagiri appeared to him in his dreams and explained the processes to him.

Read about Ramanujan’s impact | What is Ramanujan Machine, and why is it named after the Indian mathematician?

On his 138th birth anniversary, we discuss a number that bears his name, the Hardy–Ramanujan number, to explain two things about him: his innate genius for spotting rules and patterns, and yet the rigorous work that had trained his mind to work the way it did.

some basics about Srinivasa Ramanujan

Ramanujan was born in 1887 to a Tamil Brahmin Iyenger family. He died of ill health at just 32. But in those short years, he accomplished work that continues to fascinate modern scientists, and made him one of the youngest members of the Fellows of the Royal Society in England and the first Indian to be elected as a Fellow of Trinity College, Cambridge.

He grew up largely in the temple town of Kumbakonam in Tamil Nadu. Krishnaswami Alladi, an Indian-American professor of mathematics at the University of Florida, has written that Ramanujan’s family venerated the goddess Namagiri, worshipped at the Temple of Namakkal in the state. While his aptitude for mathematics was apparent early in life, for some years, Ramanujan worked alone. In 1913, he wrote two letters to the highly regarded English mathematician G H Hardy, who recognised his genius and called him to England.

Here, while his work got the necessary exposure, Ramanujan fell sick frequently, due to the cold and his inability to manage a sufficiently nutritious vegetarian diet, resulting in hospitalisations. It was during one such hospital visit that the Hardy–Ramanujan number came about.

What is the Hardy–Ramanujan number?

The Hardy-Ramanujan number is 1729, the smallest number that can be expressed as the sum of two cubes in two different ways: 1³ + 12³ = 1 + 1728 = 1729; and 9³ + 10³ = 729 + 1000 = 1729. While many readers can wonder, ‘okay, so what?’, it is the way Ramanujan saw the number that is interesting.

The anecdote goes thus: Ramanujan was hospitalised in Putney and Hardy came to see him in a taxicab. He remarked to the Indian that the vehicle that brought him here had a “dull” number, 1729, and “hopefully it is not unfavourable omen.”

Ramanujan replied, “No, Hardy, it is a very interesting number; it is the smallest number expressible as the sum of two cubes in two different ways.”

Thus, Ramanujan was instantly able to see a rare pattern in a number randomly thrown at him.

What does the Hardy–Ramanujan number reveal about Ramanujan?

So far, so good and so intuitive. But mathematicians have written about how this wasn’t a random divining of patterns by Ramanujan, but a result of his deep interest in numbers — he wasn’t just “unusually blessed”, but a rigorous and innovative thinker.

The 2016 book My Search for Ramanujan: How I Learned to Count, by mathematicians Ken Ono and Amir D Aczel, mentions the Putney hospital incident. The book adds, “Ramanujan was aware of this property of 1729 because of work he had done on a problem studied by Euler that can be found in his notebooks. The number 1729 appears in Ramanujan’s works in yet another context, this time related to Fermat’s last theorem. It appears that he was thinking about near misses to Fermat’s claim.”

The translation for non-mathematician readers is: Euler is the Swiss mathematician Leonhard Euler, who had worked on cubes. Fermat’s last theorem is French mathematician Pierre de Fermat’s 1637 theorem that there are no whole numbers x, y, z such that xⁿ + yⁿ = zⁿ where n is greater than 2, or, no two cubes can add up to another cube. Now if 9³ + 10³ had equalled 1728 and not 1729, it would violate Fermat’s theorem, because 1728 is 12³.

This shows Ramanujan’s deep fascination with numbers and the laws that govern them. He had spent time dwelling on “near misses”, a number that almost violated a centuries-old theorum, showing his preoccupation and deep study of numerical rules and patterns. Thus, his recognising the pattern at the Putney hospital was not just another instance of unexplained and lucky genius manifesting itself, but the result of a lifelong, if unconventional, study.

FROM INDIAN EXPRESS 22-12-2025

கணித மேதை சீனிவாச ராமானுஜர், FROM JANAM TV


கணித மேதை ராமானுஜரின் பிறந்தநாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சீனிவாச ராமானுஜர் பள்ளி படிப்பில் சுமாரான மாணவர். ஆங்கிலம், Physiology போன்ற பாடங்களில் எப்போதும் தோல்வியையே சந்தித்தவர். உயர்கல்விக்கு செல்ல எழுதப்படும் இண்டர்மீடியட் தேர்விலும் தோல்வி அடைந்தவர். தொடர் தோல்வியால் உதவித்தொகையையும் இழந்தவர்.எளிமையாகச் சொல்வதென்றால், பொது பார்வையில் அவர் ஒரு மக்கு மாணவர். ஆனால், இதே ராமானுஜர்தான், கணிதவியலில் இந்தியாவின் முகமாகத் திகழ்கிறார். லண்டன் ராயல் சொசைட்டியில் மிகவும் இளம் வயதில் உறுப்பினராகத் தேர்வானார். சுமார் 3,900 கணித சமன்பாடுகளையும், குறியீடுகளையும் கண்டுபிடித்தார். pi-இன் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடும் முடிவிலித் தொடர்களை உருவாக்கினார்.

அவரது கணித சூத்திரங்கள் 100 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை டி-கோட் செய்யப்பட்டபடியே உள்ளன. தமிழரான ராமானுஜனின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் படமாக எடுத்துள்ளார்கள் என்றால், அதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை உணரலாம். (ப்ரீத் – https://www.youtube.com/watch?v=YzCNegbL1Hw) 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன். சிறுவயதில் இருந்தே கணிதம்தான் அவரது உலகம். அனைத்து பாடங்களிலும் தோல்வியடையும் அவர், கணிதத்தில் மற்றும் முழு மதிப்பெண் பெற்றுவிடுவாஅவரை விட வயதில் மூத்த மாணவர்களுக்குக் கணித பாடம் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவரது கணித அறிவு இருந்தது. 1904ம் ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு அவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், கணிதம் தவிர்த்துப் பிற பாடங்களில் தேர்ச்சி பெறாததால் உதவித்தொகையை அவர் இழந்தார்.

பின்னர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்த ராமானுஜரால், அங்கும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், கடைசி வரை அவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இருந்தபோதும், வீட்டில் இருந்தபடியே கணித புத்தகங்களை அவர் படிக்கத் தொடங்கினார். முழு நேரமும் கணித ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தார். இதனிடையே, சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்த அவர், அங்கும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கணித ஆய்வில் ஈடுபட்டபடியே இருந்தார்.ராமானுஜரின் இந்தத் திறமை இங்கிலாந்தில் இருந்த பிரபல கணித ஆய்வாளரான G.H. Hardy-ன் காதிற்கு சென்றது. உடனடியாக, லண்டன் வரும்படி ராமானுஜருக்கு அவர் அழைப்பு விடுத்தார். அடிப்படையில் ராமானுஜர் ஒரு பிராமணர். எனவே, அவர் கடல் கடந்துசெல்ல கூடாது என, அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இருந்தபோதும், கணிதம் மீதான காதல் காரணமாக, அவர் கடல் தாண்டி லண்டன் சென்றடைந்தார்.

அங்கு ஜி.ஹெச். ஹார்டி, ஜான் இ. லிட்டில்வுட் போன்ற கணிதவியல் அறிஞர்களுடன் பணிபுரியத் தொடங்கினார். மேலும், Mock Theta Functions, Partition Theory, Modular Forms போன்ற முக்கிய கணித கோட்பாடுகளை உருவாக்கினார். பல நூற்றாண்டுகளாக விடை காணப்படாமல் இருந்த கணித சூத்திரங்களை விளக்கிக் கட்டுரைகளையும் வெளியிட்டார். குறுகிய காலத்திலேயே கணித உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தார் ராமானுஜர். அத்துடன், கணிதவியலில் புதிய அத்தியாயத்தையே அவர் தொடங்கி வைத்தார்.நாமக்கல்லில் உள்ள நாமகிரி தாயார்தான், ராமானுஜரின் குலதெய்வம். தாயார் மீது அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உறங்கும்போது தனது கனவில் நாமகிரி தாயார் கணித சூத்திரங்களுக்கான விடைகளை அளிப்பார் எனவும், அதனை காலை எழுந்தவுடன் குறித்து வைத்துகொள்வேன் எனவும் ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

தனது அனைத்து கணித சாதனைகளுக்கு காரணம் நாமகிரி தாயார்தான் என அவர் விளக்கம் அளிக்கிறார். இப்படி ஒரு புறம் கணிதவியலில் அடுத்தடுத்து பல சாதனைகளை அவர் படைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக தொடங்கியது.லண்டனின் சீதோஷன நிலை, உணவு உள்ளிட்டவை அதற்கான காரணமாக அமைந்தன. இதனால், அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப நேரிட்டது.

அப்போதும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. சிறுநீரக கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால், 1920ம் ஆண்டு கும்பகோணத்தில் அவரது உயிர் பிரிந்தது. இத்தனைக்கும் அவருக்கு அப்போது வெறும் 32 வயதுதான் ஆகியிருந்தது. அவர் இறந்து தற்போது 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனாலும், அவரது கணித கோட்பாடுகள், சூத்திரங்கள், சமன்பாடுகள் மீதான ஆய்வுகள் தொடர்ந்தபடியே உள்ளன.

இன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள பார் கோடுகளின் எண் அமைப்பு, ஏடிஎம் கார்டுகள், பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் புள்ளியியல் கோட்பாடு உள்ளிட்ட பலவற்றிலும் ராமானுஜனின் பங்களிப்பு உள்ளது. அவரது பிறந்தநாளான டிசம்பர் 22ம் தேதியை மத்திய அரசு, தேசிய கணித தினமாக கொண்டாடி வருகிறது. தொடக்கத்திலேயே கூறியதுபோல இந்தியாவின் கணிதவியல் முகமாக அவர் திகழ்ந்து வருகிறார். சீனிவாச ராமானுஜர், இந்தியாவின் பெருமிதம். சீனிவாச ராமானுஜர், இந்தியாவின் பொக்கிஷம்.

–SUBHAM—

TAGS- MATHEMATICIAN, RAMANUJAN, கணித மேதை ,சீனிவாச ராமானுஜன்

GNANAMAYAM 21 December 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayathy Sundar Team AKASH RAMESH

***

Prayer

Dr Jaiganesh

News

AAlayam arivom

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Vallam Temple

****

Talk by Prof S Suryanarayanan, Chennai

Topic-Muthuswamy Diksitar Kritis- FOURTH PART

***

SPECIAL EVENT-

Talk on Glory of Tamil

By Dr Jai Ganesh (Ilamaran)

Tamil Scholar, Author, Speaker on Radio and TV.

He has received several awards; authored five books

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 21 December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் AKASH RAMESH

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு –திரு வல்லம் தலம்

****

சொற்பொழிவு

பேராசிரியர் சூரியநாராயணன்

தொடர்  சொற்பொழிவு

தலைப்பு – முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள்- FOURTH PART

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தலைப்பு – தலைநிமிரச் செய்த தமிழ்

சொற்பொழிவாளர்

முனைவர் பா ஜெய்கணேஷ்  (இளமாறன்)

முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா. இளமாறன்)  

*****

GNANAMAYAM 21 December 2025 BROADCAST PROGRAMME

Dr Jaiganesh

Dr Jaiganesh

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayathy Sundar Team

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Vallam Temple

****

Talk by Prof S Suryanarayanan, Chennai

Topic-Muthuswamy Diksitar Kritis

***

SPECIAL EVENT-

Talk on Glory of Tamil

By Dr Jai Ganesh (Ilamaran)

Tamil Scholar, Author, Speaker on Radio and TV.

He has received several awards; authored five books

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 21 December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு –திரு வல்லம் தலம்

****

சொற்பொழிவு

பேராசிரியர் சூரியநாராயணன்

தொடர்  சொற்பொழிவு

தலைப்பு – முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தலைப்பு – தலைநிமிரச் செய்த தமிழ்

சொற்பொழிவாளர்

முனைவர் பா ஜெய்கணேஷ்  (இளமாறன்)

முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா. இளமாறன்)  

இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்

எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும்தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம்,

காட்டாங்குளத்தூர் , செங்கல்பட்டு மாவட்டம்

    மயிலம் தமிழ்க்கல்லூரியில் இளங்கலையும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பயின்றவர். பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையோடு தமிழ் இலக்கண உரை வரலாறு: யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.

இலக்கணம், உரைகள், பதிப்புகள் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் 10 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 

இவரின் நூல்கள்: தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் – பன்முகவாசிப்பு, முதலானவை ஆகும். 

இதழ்களின் ஆசிரியர் குழு: புதிய புத்தகம் பேசுது, மாற்றுவெளி, காட்சிப்பிழை ஆகியவற்றில் இருந்ததோடு தற்போது வல்லமை, சான்லாக்ஸ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 

விருதுகள்:

1.    நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2013 ஆம் ஆண்டில் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றமை.

எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம் சிறந்த இளம் ஆய்வாளர்க்கான விருதினை 1,50,000 பொற்கிழியுடன் 2014ஆம் ஆண்டு வழங்கியமை.

இளம் ஆய்வறிஞர் விருது, குடியரசுத் தலைவர் விருது (செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் வழி) மே, 2015.

 தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்

ழகரம் – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை – 60 வாரங்கள்

தமிழோடு விளையாடு – தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை

வெளிநாட்டுப் பயணம்

 2016 ஆம்ஆண்டு அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து பயணம்செய்தமை.

2019 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேறக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தமை.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 21-12- 2025, programme,

Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34 (Post.15,298)

Written by London Swaminathan

Post No. 15,298

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION POSTED YESTERDAY WITH MORE PICTURES.

லிங்கோத்பவர்

லிங்கம் என்றால் அடையாளம், குறி என்று பொருள்; இறைவன் உருவமற்றவன் என்பதைக் காண இந்த உருவத்தை ஆன்றோர்கள் பயன்படுத்தினர் ; அதற்குள் இருப்பது என்ன என்று அறியாதோர் கேட்டால் அப்போது அதற்குள் உருவமுள்ள மூர்த்தியாக சிவன் வெளிப்படுவார்

ஆக உள்ளானும் அவன்! இல்லானும் அவன்! – என்பதைக் காட்டுவதே லிங்கமும் லிங்கோத்பவரும்  ஆவர் . கோவில்களில் சிவன் சந்நிதி பிரகாரத்தில், ஒரு மாட த்தில் லிங்கோத்பவரைக் காணலாம் .

என்ன கதை?

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது ;நீ பெரியவனா, நான் பெரியவனா என்று மோதினர்; நடுவர் சிவபெருமானிடம் கேட்டு விடுவோம் என்று பட்டி மண்டப மேடையை கைலாயத்துக்கு நகர்த்தினார்கள் ; அவர் சொன்னார்;  இருவருக்கும் ஒரு டெஸ்ட்’ வைக்கிறேன். என்னுடைய முடியை ஒருவர் தேடுங்கள், கால் அடியை ஒருவர் தேடுங்கள். யார் முதலாக வந்து கண்டதை  ரிப்போர்ட் செய்கிறீர்களாளோ அவரே பெரியவர் என்றார். உடனே பிரம்மா அன்னவாஹனத்தில் பறந்தார் ; ஏற்கனவே வராஹ அவதாரம் எடுத்துப் பழக்கப்பட்ட விஷ்ணு வராஹமாக மாறி பூமியைத் தோண்டினார். அப்போது சிவன் இருந்ததோ ஜோதி வடிவத்தில்; ஆண்டுகள் பல உருண்டோடின. .எவரும் கோல்’ போட முடியவில்லை ஆட்டம் டிராவில் முடியுமோ என்று பக்தர்கள் அ ஞ்சினர் . அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு தாழம் பூ கீழே விழுந்து கொண்டிருந்தது; ஏ பூவே எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார் பிரம்மா. நான் சிவன் முடியிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் விழத் துவங்கினேன் என்றது பூ;  எனக்கு ஒரு சின்ன உதவி செய்; சிவனிடம் அழைத்துச் செல்கிறேன்; நான் சிவன் முடியைத் தரிசித்ததாகச் சொல் என்று மன்றாடினார் ;தாழம்பூவும், இரக்கப்பட்டு  அப்படியே செய்தது.  இருவரும் திருட்டு முழி முழித்தவுடன் சிவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. பிரம்மாவுக்கு தண்டனை கொடுத்தார் அவருக்கிருந்த ஐந்து தலைகளில் பொய் சொன்ன வாயுடைய தலையைக் கிள்ளி எறிந்தார் இனி உனக்கு பூலோகத்தில் பூஜை, அர்ச்சனை இல்லை போ என்றார்; தாழம் பூவையும் சபித்தார் எந்த பூஜையிலும் உனக்கு இடமில்லை போ என்றார்

(உண்மையில் இந்தக் கதையின் உட்கருத்து: நீயா நானா என்ற வாதத்துக்கு முடிவே இல்லை அது விதண்டாவாதம் என்பதும் பொய்ச் சாட்சி சொன்னால் தண்டனை உண்டு என்பதும் கதையின் கருத்து ; அதை விளக்குவதற்கு ஆன்றோர்கள் எட்டுக்கட்டிய கதை இது என்பதே என் அபிப்ராயம்).

அத்தோடு லிங்கம் என்பது ஆதி அந்தமற்ற உருவமில்லாத கடவுள் என்பதை விளக்கவும் அதையே பாமர மக்கள் உருவத்துடனும் வணங்கலாம் என்பதை விளக்கவும் எழுந்த கதை இது;

லிங்கோத்பவர் சில இடங்களில் மனித முகம் உடைய அன்னத்தையும் பன்றியையும் காட்டுகிறது. பெரும்பாலான இடங்களில் சிவ பெருமானின் பாதி உருவம் மட்டும் லிங்கத்துக்குள் காட்டப்பட்டு இருக்கிறது.

***

ஏகபாத மூர்த்தி

ஒற்றைக்காலில் சிவபெருமான் நிற்கும் வடிவம் இது ; ஏக பாதம் என்றால் ஒரே கால்

ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது. ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர்.  இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் ஜடாமகுடமும் தரித்து இருப்பார் .

உலகம் அழியும் காலத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும்,  சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவார்கள். சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன ஒவ்வொரு சிவன் கோவிலிலும் பிரகார மாடத்தில் உள்ள இம்மூர்த்தி சில மாறுதல்களுடன் காணப்படுகிறார்.

***

ஊர்த்வ தாண்டவர்

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிநார். அதுவரை சிவனுக்குச் சரிசமம் ஆகிய தேவி, அம்பாள் காலைத்  தூக்கி ஆட முடியாமல் வெட்க்கித் தலை குனிந்தார்  சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.

***

காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தி

யமனின் வேறு  பெயர்கள்- காலன், அந்தகன்

காலன் என்னும் யமனைக் காலால் உதைத்துத் தள்ளிய சிவனின் வடிவம் காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தியாகும் . திருக்கடையூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.

மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16  வயதுதான் முழு ஆயுள் என்று பிறப்பதற்கு முன்னரே ரிஷிக்குத் தெரியும்; அதன்படி, 16 வயது முடியும்போது,  எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக்  காட்டி அனைத்துக் கொண்டிருந்த போது , எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான்.

–SUBHAM—

TAGS-Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34,லிங்கோத்பவர், கால சம்ஹார மூர்த்தி, ஏகபாத மூர்த்தி

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 21  12 2025 (Post.15,297)

Written by London Swaminathan

Post No. 15,297

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 21- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று 5 வது நாளாக நடந்தது.

மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

****

திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு

”சட்டம் – ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் – ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,” என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.’இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என, உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்

இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ‘தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார்.

***

ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்

மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று  ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில்  நடந்தது.

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தமானது.

மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனையையொட்டி தூண் உள்ளது. நெல்லித்தோப்பு, பாதைகள், படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட்டு வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை முழுவதும் உரிமையியல் கோர்ட்டு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

******

இன்று  சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி

சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, இன்று டிசம்பர்  21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன.

இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

உலகின் வெவ்வேறு பிரதேச நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.

***

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்தப் பிளேடுகள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். பிளேடுகள் திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.

கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடியை சேகரிக்க இந்த அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

****

சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு? 


கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் அவரிடமும் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளனர்.



கடிதத் தில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமானது, வெறும் திருட்டு சம்பவம் அல்ல.முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திரைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது.

இதில், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர், இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள்-; நம்பகமானவையும் கூட.


இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில், 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகியுள்ளது.


தங்கக்கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விபரங்களை அளிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கடிதத் தில் கூறியுள்ளார்

****

சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடத்தை இஸ்லாமியர்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்; .இஸ்லாமிய குழுக்களால் நிர்வாகிக்கப்படும் ஹஜ் விடுதிகளில் தேச விரோத சதிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹஜ் விடுதியால் தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

***

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர் ஸ்ரீபுரத்​திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார்.  திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், தங்​கக்​கோயி​லில் உள்ள ஸ்ரீநாராயணி அம்​மனை, குடியரசு தலைவர் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, ஆயிரத்து 800 கிலோ எடைக் கொண்ட வெள்ளி விநாயகர், சொர்​ணலட்​சுமி, பெரு​மாள் ஆகிய கோயில்களில் குடியரசு தலைவர் வழிபாடு நடத்தினார்.

இதனை அடுத்து, மகாலட்சுமி மற்றும் வைபவ லட்சுமிக்குப் பூஜை செய்த திரௌபதி முர்மு, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.

****

பெரிய சிவ லிங்கம் பீகாருக்கு புறப்பாடு

120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட்கல்லில் உருவான சிவலிங்கம்..இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணத்தைக் துவக்கியுள்ளது

ஒரே கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட மிக உயரமான சிவலிங்கம் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருக்கிறது. 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், மகாபலிபுரத்தில் திறமையான கைவினைஞர்களின் பல வருட உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது.

இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய வழிபாடாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  டிசம்பர் 28 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 21 12  2025, Vaishnavi

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 (Post No.15,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,296

Date uploaded in London –   22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி… 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 

ச. நாகராஜன்

இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயிண்ட் ஜார்ஜின் சிலுவையை அடிப்படையாகக் கொண்டதாகும். கிறிஸ்தவத்திற்காக உயிரைத் துறந்த ஒரு ராணுவ செயிண்ட் இவர். சிலுவைப் போர்களுக்கு  ஊக்கமூட்டும் நபராகத் திகழ்ந்தவர் இவர். சின்ன ஒரு கற்பனை செய்து பார்ப்போம் – இந்தியாவின் தேசீயக் கொடியில் ஓம் என்ற எழுத்தைச் சேர்த்தால் என்ன ஆகும்? ஐநாவிலிருந்து உலகில் உள்ள அனைத்து “முற்போக்கு நாடுகளூம்” களத்தில் இறங்கி நம்மைத் திட்டும்.

பாரம்பரியமான பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்து மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியவர்களை இன்றும் வணங்கும் இங்கிலாந்து இன்றும் கூட ராஜாக்களின் அரசியல் அமைப்பைத் தான் கொண்டிருக்கிறது! ராணி தான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  அவரே சர்ச்சுக்கும் தலைவி! அதாவது சர்ச் தான் அந்த நாட்டின் முக்கிய முதுகெலும்பு!

இந்தியாவில் ஒரு அரச வம்சமும் இப்போது அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 12 அரச பரம்பரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தாம் உலகின் முக்கால் பாகத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் பிபிசி ஒலிபரப்பின் படி இந்தியா ஒரு எதேச்சாதிகார நாடு; இங்கிலாந்தோ ஜனநாயக நாடு!

தேசீய கீதங்களை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதத்தில் ராணி 11 தடவை குறிப்பிடப்படுகிறார். அவர்கள் படையெடுத்து அடிமையாக்க முயலும் நாடுகளை வெற்றி கொள்ள இறைவனின் அருள் கோரப்படுகிறது. அமெரிக்க தேசீய கீதம் அடிமைத்தனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதை இன்னும் நீக்கியபாடில்லை. அதை இயற்றியவர் அடிமைகளை வைத்திருந்த ஒரு எஜமானர் தான்.  ஆனால் இந்திய தேசீய கீதமோ ஒரு மதத்தையும் ஒரு கடவுளையும் குறிப்பிடவில்லை; எவருக்கும் எதிரான கருத்து அதில் இல்லை.

அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 2006ம் ஆண்டு கிறிஸ்தவத்தைக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியது. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் சர்ச்சுகளுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டவையாகும். பிரான்ஸின் அரசியல் சட்டத்திலோ சர்ச்சையும் அரசையும் வேறுபடுத்தும் பகுதிகள் பல இடங்களில் இல்லை.

வட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கமே சர்ச்சுகளை நடத்துகின்றன; நிர்வகிக்கின்றன!

அராபிய நாடுகள் வெளிப்படையாகவே இஸ்லாமிய நாடுகள் தாம்!

ஐரோப்பாவோ கிறிஸ்தவத்தை மதசார்பின்மை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கடைப்பிடிக்கிறது. உலகளாவிய விதத்தில் ஒரு நல்ல பெயரை இது கொடுக்கும் அல்லவா! காகசீய கிறிஸ்தவ உணர்வைக் கொண்டுள்ள இதன் ஆழ்ந்த உணர்வை உக்ரேனியத்துடனான நட்பில் பார்க்க முடியும்.

 காலனிகளை அடிமைப்படுத்தும் இந்த கிறிஸ்தவ நாடுகள்

மூன்றாம் உலகநாடுகளை தங்கள் மதம், அடையாளம், பண்பாடு ஆகியவற்றை உதறக் கோருவது ஒரு இரட்டை வேடம் அல்லவா? உலகில் சமத்துவத்தைக் கோரும் இதன் வெளிவேஷம் வெளிப்படையாகத் தெரிகிறது.

இதை சுயமதிப்புள்ள எந்த நாடும் பொறுத்துக் கொண்டு அவற்றுடன் சேர முடியாதல்லவா!

–    முற்றும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)

ஆலயம் அறிவோம்! திருவல்லம்! (Post No.15,295)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,295

Date uploaded in London – –  22 December 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லண்டனிலிருந்து 21-12-2025 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

தாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இலாத

தூயவன், தூ மதி சூடி எல்லாம்

ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்

சேயவன், உறைவிடம் திருவல்லமே

                                                                                      – திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருவல்லம் திருத்தலமாகும். தமிழ்நாட்டில் வேலூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும் இராணிப்பேட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது.

இறைவன் : வல்ல நாதர், வில்வநாதேஸ்வரர்

இறைவி : வல்லாம்பிகை, ஜடகலாபாம்பாள் அல்லது தீக்காலி அம்பாள்

தல விருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம்: கௌரி தீர்த்தம், நீவா நதி

இத்தலத்திற்கு வில்வவனம், வில்வாரண்யம், தீக்காலி வல்லம் ஆகிய பெயர்களும் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

திருமாலாலும் பிரமனாலும் இங்கு சிவன் வலம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதால் இந்த ஊர் திருவலம் என்ற பெயரைப் பெற்றது/

விநாயகர் இங்கு சிவனை வலம் வந்து வழிபட்டதால் திருவலம் என்ற பெயரை இந்தத் தலம் பெற்றது என்றும் கூறுவர்..

ஒரு காலத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காடாக இது திகழ்ந்ததால் இதற்கு வில்வவனம் என்ற பெயர் உண்டு.

வில்வநாதேஸ்வரர் கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது.

கஞ்சனகிரி மலையிலிருந்து திருவல்லத்திற்கு அபிஷேக தீர்த்தத்தைக் கொண்டு வரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட சிவபிரானின் வாகனமான நந்தி தேவர் கஞ்சனை எட்டு பாகங்களாகக் கிழித்தார். சிவபிரானிடம் இறவாமல் இருக்கும் வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதைக் கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாயிலை நோக்கியவாறு இருக்கிறார்.

கஞ்சனின் எட்டு உடல் பாகங்கள் விழுந்த லாலாப்பேட்டை, சீகராஜபுரம், மாவேரி, வடகால், தென்கால், மணியம்பட்டு, குகைய நல்லூர், நரசிங்கபுரம், மருதம் பாக்கம் ஆகிய எட்டு ஊர்களில் சிவன் கோவில்கள் உள்ளன. கஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபிரான் தைப்பொங்கல் கழிந்த மூன்றாம் நாள் இந்த எட்டுக் கோவில்களுக்கு எழுந்தருளி கஞ்சனுக்கு மோக்ஷம் அளிக்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெறுகிறது.

கஞ்சனகிரி மலையில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுவதைக் கவனித்த பக்தர்கள் இப்போது கூட்டமாக அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இங்குள்ள நதியை “நீ வா” என்று இறைவன் அழைத்ததால் அது நீ வா என்ற பெயரைப் பெற்றது; காலப்போக்கில் நிவா நதி என்று அழைக்கப்படலாயிற்று.

இத்தலத்தில் தான் விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இதை உணர்த்தும் விதத்தில் துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அவர் காட்சி அளிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருக்கிறார்.

கோவிலில் மூலவர் சந்நிதியில் வில்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது ஸ்வயம்பு லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். கர்பக்ருஹம் அகழியின் அமைப்பை உடையது.

மூல ஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களின் திருவுருவங்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. ஒரு முகப்பு வாயில் மற்றும் முன்மண்டபத்தைக் கொண்டுள்ளது.

உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபமும் அருகில் காசி விஸ்வநாதர் சந்நிதியும் சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. அடுத்து அருணாசலேஸ்வரர் சந்நிதி அமைந்திள்ளது. இதையடுத்து பல சிவலிங்கங்கள் உள்ளன.

சுவாமி சந்நிதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

ஆறுமுகர் சந்நிதியில் வள்ளி தெய்வானையும் மூலையில் அருணகிரிநாதர் சிலையும் உள்ளன.

வெளி பிரகாரத்தில் கிழக்கில் கொடிமரம் மற்றும் பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

தக்ஷிணாமூர்த்தியின் சீடரான சனக முனிவரின் சமாதி வில்வநாதேஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் அமைந்துள்ளது. இங்கு வழிபாடு நடத்துவோருக்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சிவானந்த மௌன குரு ஸ்வாமிகள் என்னும் சித்தர் பலரின் நோய்களைத் தீர்த்து வந்த மகான் ஆவார். அவர் இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து வந்தார். இவருக்கு இக்கோயிலின் அருகே தனி மடம் உள்ளது. 1988 ஜனவரி முதல் தேதியன்று இவர் சமாதி அடைந்தார். இவரது சமாதி இங்கு உள்ளது.

 இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தின் சிறப்பை “நசையொடு தோலும்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில், “மாயன், திசைமுகனாரும், திசை புவி, வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்” என்று குறிப்பிட்டு அருளியுள்ளார். மாயனாகிய திருமாலும், நான்முகனும் பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுகலத்தில் உள்ளவர்களும், வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபிரானின் பழைய ஊர் என்பது இதன் பொருளாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வில்வநாதேஸ்வரரும் வல்லாம்பிகை அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

Hinduism through 500 Pictures in Tamil and English-33; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-33 (Post No.15,294)

Written by London Swaminathan

Post No. 15,294

Date uploaded in London –  21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிவபெருமானுடைய வடிவங்களில் வேறு சில மூர்த்திகளையும் காண்போம் :லிங்கோத்பவர் ஏகபாத மூர்த்தி , ஊர்த்வ தாண்டவர், கால சம்ஹார மூர்த்தி

***

LINGODBHAVA

Lingodbhava is a familiar figure of Siva on the west wall of the central shrine of Siva temples in tamil Nadu. As his name implies, he is represented within a huge linga, the portion of the feet below the ankles being hidden in the linga. Brahma in the form of a swan is seen soaring up on the left side of Siva; while on the right side, Vishnu is delving below into the depths of the earth in the form of a boar.

The swan and the boar are in some pictures found to be half man and half animal.

On the east main gopura/ tower of the Chidambaram temple is an image of Lingodbhava surrounded by flames of fire.

Also these gods, i.e. Brahma and Vishnu stand on either side of Siva with folded hands.

The figure emanating from the middle of the linga has four hands and hold in its back arms the axe and the antelope and in the front hands, the Abhaya and Varada postures.

In Thanjavur inscriptions Lingodbhava is mentioned by the name Lingapuranadeva.

Story of Lingodbhava

A dispute arose between Brahma and Vishnu as to who is the greater of the two. Siva told them that whoever first saw the top or the bottom of his own fiery linga form and came back to report, he would be considered greater. Brahma soared on his swan to see the top of the Siva linga, while as a boar Vishnu dug down and down to see its bottom. Ages passed away and neither came to his goal.

At last Brahma saw one ketaki flower coming down; it had fallen from Siva’s head ages ago. Brahma suborned it to give false evidence and then came back  and uttered a lie that he had seen the top of the linga, citing the ketaki flower as its witness.  Sive knew the lie and cursed Brahma that he should thenceforward go without any worship in temples. Brahma had five heads at that time. Sive cut off the head that uttered a lie. The flower ketaki too, which abetted the crime, was excluded from the flowers dear to Siva.

***

EKAPADAMURTI

Images called Ekapadamurti or Ekapada Trimurti show gods Brahma and Vishnu , with folded hands and characteristic symbols,  are represented as proceeding out of the body of Siva at his waist as in the Tiruvotriyur sculpture or from behind his knee  as in the image of Tiruvanaikkaval;  they are either developments of Lingodbhava wherein the superiority of Siva over the two other members of the Hindu triad was established or an invention of the Hindu sculptor.

The Karanagama (kaarana aagama) mentions Ekapadamurti as one of the sportive forms of Siva and describes him as having one foot, three eyes and four arms in which are seen the tanka and deer and the Varada and Abhaya  postures..

On the right and left sides of Siva, almost touching his shoulders, are Brahma and Vishnu holding their symbolical weapons in two hands and worshipping Siva with the other two.

The single foot, which is the characteristic feature of these figures , is in the case of Tiruvanaikkaval image , placed on the back of the bull. in it are also seen the vehicle of bBahma, the swan, at the right bottom and at the corresponding left bottom , the standing Garuda vehicle of Vishnu and a sage, perhaps Narada.

Apparently Ekapadamurti has to be connected with Aja Ekapad, a name given in the Rig Veda to one of the Ekadasa Rudras

Tamil version follows

To be continued……………………..

Tags- Hinduism through 500 Pictures in Tamil and English-33; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-33, Lingodbhava, Ekapadamurti

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் திருவள்ளுவன்! (Post No.15,293)

Great Hindu Saint born in Tamil Nadu

Written by London Swaminathan

Post No. 15,293

Date uploaded in London –  21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வள்ளுவர் கண்டுபிடித்த சொல் ஆழ்வார், நாயன்மார்  பாடல்களில் !

பிறவிப்பிணி , பிறவிப் பெருங்கடல் என்ற சொற்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருத்திலிருந்து தமிழுக்கு வந்தவை; பவ சாகரம்,பவ ரோகம் என்பனவெல்லாம் கீதை, மஹாபாரதம் ஆதிசங்கரர் துதிகள், சங்கீத மும்மூர்த்தி கிருதிகள், கீர்த்தனைகளில் காணக்கிடக்கின்றன . ஆனால் பக்கா இந்துவான , சம்ஸ்க்ருத மன்னனான திருவள்ளுவன் கண்டுபிடித்த ஒரு சொல்லை நான் இதுவரை சம்ஸ்க்ருதத்தில் காணவில்லை ;உங்களில் எவரேனும் கண்டால் எனக்கு எழுத அன்புடன் வேண்டுகிறேன் . அது என்ன சொல்?

பிறப்பு  அறுத்தல்

அதாவது பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு – என்று நாம் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறோம்; இதை ஒரே வெட்டு வெட்டாக — அல்லது துண்டு துண்டாக- அறுக்க வேண்டும் என்கிறார் . இப்படி அறுத்தல்துண்டித்தல், வெட்டுதல் என்ற பொருளில் பிறவிப்பிணியை வள்ளுவர் ஒருவர்தான் அணுகியிருக்கிறார் .பிற்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதை மீண்டும் மீண்டும் பாடுகின்றனர். குறிப்பாக மாணிக்க வாசக ரின் திருவாசக சிவ புராணப் பாடலில்  மாயப்பிறப்பு அறுப்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

***

முதலில் வள்ளுவர் சொன்னதைக் காண்போம்.

துறவு அதிகாரம் திருக்குறள்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.-345

பொருள்

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ

English Couplet 345:

To those who sev’rance seek from being’s varied strife,

Flesh is burthen sore; what then other bonds of life?.

Couplet Explanation:

What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

***

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று

நிலையாமை காணப்படும்.-349

பொருள்

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும்.

English Couplet 349:

When that which clings falls off, severed is being’s tie;
All else will then be seen as instability.


Couplet Explanation:

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

Tamil Hindu Tiru Valluvar in Mauritius.

***

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலில் இந்தச்  சொல் காணப்படுகிறது . ஆயினும் வள்ளுவர், அதற்கும் முன்னால் திருக்குறளை எழுதினார் என்று நம்புகிறோம்.

***

1. சிவபுராணம்- மாணிக்கவாசகர்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

……………………………

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

என்று ஒரே பாட்டில் 4 முறை சொல்லிவிட்டார் மாணிக்கவாசகர்

***

திருஞான சம்பந்தர் பாடிய முதல் திருமுறையில் திருவாரூர் பதிகத்தில்

 1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள்    

    சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்    

    பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.    1.91.1

    பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை    

    மறவா தேத்துமின், துறவி யாகுமே.    1.91.2

    துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்    

    நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.    1.91.3

    உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்    

    கையி னால்தொழ, நையும் வினைதானே.    1.91.4

    பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்    

    கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே.    1.91.5

    பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்    

    வாச மலர்தூவ, நேச மாகுமே.    1.91.6

இதில் வியத்தகு ஒற்றுமை, இதையும் குறள் வடிவிலேயே சம்பந்தர் பாடியிருப்பதாகும் ; அவர் திருக்குறளை நன்கு அறிந்திருக்க வேண்டும்..

துறவறம் என்ற பகுதியில் வள்ளுவர் பிறப்பு  அறுத்தல்

பற்றிப் பாடினார் சம்பந்தரும்  துறவி என்றும் சொல்கிறார் .

****

திருமழிசை ஆழ்வார் பாசுரம்

காணிலும்மு ருப்பொலார்செ
      விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி
      டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும்
      ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும் பிறப்பெனும்பி
      
ணக்கறுக்க கிற்றிரே. (69)

****

திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்

நைமிசாரண்யம்

வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே

பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்  பிறவிநோயறுப்பான்,

ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை

நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1

**

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,

பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,

வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,

தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. (2) 1.8.9

****

பிறப்பு என்று சொல்லாவிடினும் பழவினையை அறுத்தாய் என்கிறார் திருநாவுக்கரசர்,

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்

  தேபடைத் தான்றலையைக்

காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று

  காமனைக் காலனையும்

பாய்ந்தறுத் தாய்பழ னத்தர

  சேயென் பழவினைநோய்

ஆய்ந்தறுத் தாயடி யேனைக்

  குறிக்கொண் டருளுவதே.  6

  – திருப்பழனம் அப்பர்- நாலாம் திருமுறை

VALLUVAR AND HIS WIFE VASUKI.

இது போல ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் பாடி இருக்கிறார்கள். படித்தும் சிந்தித்தும் அவனருள் பெறுவோமாக!

–subham—

tags பிறப்பு அறுத்தல்,  மாயப் பிறப்பு அறுக்கும், திருவள்ளுவன், திருமழிசை ஆழ்வார், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கை ஆழ்வார்

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 (Post No.15,292)

House of Lords in London

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,292

Date uploaded in London –   21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 

ச. நாகராஜன் 

பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களது வஞ்சகம், தந்திரம், பொய், புரட்டு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

 ஆனால் அவர்களது வஞ்சக புரட்டு புத்திமதியும் போலியான வாதங்களும் இன்னும் நீங்கியபாடில்லை.

இது பற்றி சுப்ரீம் கோர்ட் அட்வகேட் திரு டாக்டர் ஹரிபன்ஷ் மிஸ்ரா

Dupliticy of the West – Did you Know? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு நமது விழிப்புணர்வைத் தூண்டுகிறது.

அது அப்படியே கீழே தரப்படுகிறது. 

32 ஐரோப்பிய நாடுகள் அப்படியே வெவ்வேறு நிலைகளில் கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கின்றன. ஒன்று அதிகாரபூர்வமான அரசின் மதமாக அரசியல்சட்டபூர்வமாகவோ அல்லது வடிகனுடனான ஒரு சமய உடன்பாட்டின்படியோ இந்த அங்கீகாரம் உள்ளது. வட்டிகனுடனான பல நாடுகளின் சமய உடன்பாடுகள் அல்லது ஒப்பந்தங்கள் சர்ச்சுகளை நிர்வகிக்கவும் சர்ச்சின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவைகளாகும்.

இங்கிலாந்திற்கு அதிகாரபூர்வமான மதம் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கிறிஸ்தவ மதமே. அது ஏசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என்கிறது.

“இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏன் இன்னும் கிறிஸ்தவ நாடாகவே இருக்கிறது?” என்று  “பரந்த மனமுடைய” ஒரு மேலை நாடும் இங்கிலாந்தைக் கேட்கவில்லை. ஆனால் நான்கு உலக மதங்களைக் கொண்டுள்ள போதிலும் இந்தியா மட்டும் காலனி ஆட்சியின் எச்சமான செகுலரிஸத்தை – மதச் சார்பின்மையைக் கொண்டிருக்க வேண்டுமாம்!

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் பிஷப்புகளுக்காக யுனைடெட் கிங்டமின் பாரளுமன்றத்தின் 26 சீட்டுகள் ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு முடிய சுமார் நானூறு ஆண்டுகாலம் அந்தப் பாராளுமன்றத்தில் ஒரு பெண் பிஷப் கூட இடம் பெற்றிருக்கவில்லை. நான்கு நூற்றாண்டுகளாக வெள்ளை கிறிஸ்தவ ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக இடம் பெற்ற போது இங்கிலாந்தின் ஜனநாயகப் பண்பு பாதிக்கப்படவே இல்லை!!

 இந்தியாவில் சமயாசார்யர்களுக்கு இடங்கள் ரிஸர்வ் செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் யோசியுங்கள். மோடி அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது அவர்களின் கண்களை உறுத்துகிறது – அவர்கள் நாட்டில் சர்ச்சின் 26 பிஷப்புகள் நேரடியாக ரிஸர்வ் செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களின் தேசீய சட்டங்களை உருவாக்கும் போது!

என்ன ஒரு நேர்மையான வாதம் அவர்களுடையது?! செகுலரிஸம் என்ற சுமை இந்தியர்களுக்கு மட்டும் தானோ, என்னவோ!

 யுகே பாராளுமன்றத்தில் 92 சீட்டுகள் பரம்பரை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆமாம், பிறப்பின் அடிப்படையில் தான்! இந்த பரம்பரை சீட்டுகளின் பெயர் “Peers” என்பதாகும். இது யுகேயின் அரச பரம்பரையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதாகும். இந்திய ஜனநாயகத்திலோ ஒரு வார்டு கவுன்சிலர் சீட் கூட பிறப்பின் அடிப்படையில் சீட்டைப் பெற முடியாது. என்றாலும் கூட யுகே தான் முற்போக்கானது. இந்தியா பிற்போக்கானது!

–    தொடரும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)