நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post No.14,578) Part one

Goddess Meenakshi of Madurai Temple in Wedding pose.

Written by London Swaminathan

Post No. 14,578

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்பியை  நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8

வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!

World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.

சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர்  என்பவர்கள் திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.

புதிர் என்ன?

பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய  மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ?  அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை?  அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை  

இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  ஏனெனில் மாணிக்கவாசகருடைய  காலம் நமக்குத் தெரியவேண்டும் .

 ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle   ஜிக் சா பசில் போன்றது; ஒரு  சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !

இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத  திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் ம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.

இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?

அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி  எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் !  கி பி 75 CE  வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE  என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.

Goddess Meenakshi of Madurai Temple.

பரிபாடல் போன்ற சங்க நூல்கள்  மதுரை,  தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர்  என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள்  சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.

கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32  திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது

நம்பி என்ன தப்பு செய்தார் ?

தொடரும்…………………… to be continued

Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part One

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! (Post No.14,577)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,577

Date uploaded in London – –1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! 

ச. நாகராஜன்        

தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு:9-9-1899 மறைவு 5-12-1954)  மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.

 கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம் 10-12-1878 மறைவு 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்..

 பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.

 திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.

 விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.

 கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.

டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.

 ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

 சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.

ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.

 ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.

 ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளி வந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.

அவற்றில் சில கருத்துக்கள்:

 ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:

இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.

 திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.

“மனனக மலமற மலர்மிசை

எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.

 நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:

மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை அழகுமல்ல புகழுமல்ல என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.

அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:

 “கவலைக்கு மருந்திது பயமின்றி

அருந்தென்று தருவது பாபமாச்சே

நண்பனாகச் சொல்லுகிறேன்

நல்லதுக்குச் சொல்லுகிறேன்

பாபத்தைச் செய்யாதே!”

 ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.

அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:

 கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.

அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்

 மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:

“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும்  என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

 கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:

 “தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன…. அவற்றில் ஒன்று ….

எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”

 தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில்  ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது! 

என்ன சரிதானே! நண்பர்களே!!

***

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி3152025 ( Post No.14,576)

Written by London Swaminathan

Post No. 14,576

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. –பெண்களுக்கு மிகவும் பிடித்தது;

2. –,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்;

 3. — ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4. அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; ,

 5. — முத்து மாலை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்;

 6. தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்;

7. –அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு;

8. ஷேவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கி ருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும்  

31-5-2025

1    2    3
           
           
           
           
8    ம்    4
           
           
           
           
7    6    5

31-5-2025

1    2    3ரா
       மே 
  ங்  ம்  ஸ்  
   கா பா    
        
8டிகாம்காங்4
        
   து தா ஹா   
    ந்    
 தி   கா   க் 
7    6    மு5

விடைகள்

1.அலங்காரம் 2.அம்பாரம், 3.ராமேஸ்வரம், 4.சங்காரம்5.முக்தஹாரம்6.கா ந் தாரம், 7.அதிமதுரம் 8.படிகாரம்

1.அலங்காரம் –பெண்களுக்கு மிகவும் பிடித்தது; 2.அம்பாரம்–,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்; 3.ராமேஸ்வரம்– ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4.சங்காரம்– அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; , 5.முக்தஹாரம்– முத்து மாலைஎன்ற ஸம்ஸ்க்ருதச் சொல்; , 6.கா ந் தாரம்– தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்; , 7.அதிமதுரம்–அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு; 8.படிகாரம்–  ஷேவ் ஹீவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கிருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும் .

—subham—

Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,3152025

Hindu  Crossword  31525 (Post No.14,575)


Tamils Ritual Suicide

Written by London Swaminathan

Post No. 14,575

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Find words ending ANDA; though they are Sanskrit words they are used and understood through Hindu hymns in many Indian languages including Tamil.

1. – Universe ; literally big egg or globe.

2. – Sun; a temple for sun in Kashmir and a town in Tamil Nadu.

3. – Ascetics carry this stick according to Tolkappiam, the oldest book in Tamil (Mukkol Anthanar).

4. – Tamil’s heroic sacrifice before war; literally meaning Nine Cuts in the body; something like Japanese Harakiri.

5. – Whole, Uncut;Hindu Patriots pray for Undivided Bharat.

6. – Frivolous , fallacious argument.

7.– Name of women, Goddess meaning All Universe.

8. – Rama’s bow.Brahmanda – Universe ; literally big egg or globe.

2.Marthanda – Sun; a temple for sun in Kashmir and a town in Tamil Nadu.

3.Tridanda- Ascetics carry this stick according to Tolkappiam, the oldest book in Tamil (Mukkol Anthanar).

4.Navakandam- Tamil’s heroic sacrifice before war; literally meaning Nine Cuts in the body; something like Japanese Harakiri.

5.Akhanda- Whole, Uncut;Hindu Patriots pray for Undivided Bharat.

6.Vitanda- Frivolous , fallacious argument.

7.Akilanda – Name of women, Goddess meaning All Universe.

8.Kothanda- Rama’s bow. 

B1        M2        3
 R       A       T 
  A      R      R  
   H     T     I   
    M    H    D    
     A   A   A     
      N  N  N      
       D D D       
        AAA        
8KOTHANDA ADNAKAVAN4
        AAA        
       D D D       
      N  N  N      
     A   A   A     
    L    T    H    
   I     I     K   
  K      V      A  
 A7       6       5 

 —Subham—

Tags- Hindu  Crossword 31525

Pictures of 2500 Indian Stamps!- Part 49 (Post No.14,574)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,574

Date uploaded in London – –31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 49

Stamps posted today include 1997 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S  DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL

–subham—

Tags– BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S  DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL, 1997 STAMPA, PART 49

பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்? (Post No.14,573)

Written by London Swaminathan

Post No. 14,573

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வாதாபி கணபதிம் என்ற கர்நாடக சங்கீதப் பாடலை அறியாத இசை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது . அதில் வரும் ஒரு வரியை எல்லா பாடகர்களும் பத்து முதல் முப்பது முறை வரை திரும்பத் திரும்பப் பாடுவார்கள் ; அதுதான் பிள்ளையாரை அல்லது யானையை இந்துக்கள் வணங்குவதற்கு காரணம்..

அது என்ன வரி ?

வக்ர துண்டம் பிரணவ ஸ்வரூபம் என்னும் வரியாகும். அடுத்த முறை இந்தப் பாடலை கேட்கும்போது ஒவ்வொரு பாடகரும் எத்தனை முறை இந்த வரியைச் சொல்கிறார்கள் என்று கணக்குப் போடுங்கள் அப்போது தெரியும் ஏன் யானை முகத்தோனை முதலில் வழிபடுகிறார்கள் என்று.

இந்தப் பாடல், திருவாரூரில் உள்ள மூலாதார கணபதியின் பேரில் பாடப்பட்டது. அந்த கணபதியை ‘வாதாபி கணபதி’ என்றும் அழைப்பார்கள் .சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இந்தப் பாடலை இயற்றினார்.

பிள்ளையாரின் வளைந்த துதிக்கை பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்தின் வடிவத்தில் இருக்கிறது. அந்த ஓம்தான் எல்லா வேத மந்திரங்களுக்கும் முதல் எழுத்து; அந்த எழுத்தைப் பிரித்துப் பார்த்தால் அ +உ+ ம  என்று வரும் இதனால்தான் பகவத் கீதையில் கண்ணன் நான் எழுத்துக்களில் ‘அ’ என்னும் எழுத்தாக இருக்கிறேன் என்கிறார் ; அதையே வள்ளுவரும் முதல் குறளில்   ‘அ’கர முதல எழுத்து எல்லாம் என்று தமிழில் சொன்னார்  ஆக உலகமே ஓம் என்னும் எழுத்தில் இருக்கிறது!

அது மட்டுமல்ல உலகமே பிக் பேங் BIG BANG  என்னும் ஒலியில் துவங்கியதாக விஞ்ஞானிகள் சொல்வார்கள்; அது உபநிஷதம் சொல்லும் உண்மை. இந்தப் பிரபஞ்சமே ஓம்கார ஒலியிலிருந்து துவங்கியது என்று நமது உபநிஷதங்கள் சொல்கின்றன  இவ்வளவு பெருமை உடைய இந்த ஒரு ஸப்தத்தைத் தியானம் செய்தே இறைவனை அடையலாம் என்பதால் இந்தியாவில் உதித்த சனாதன மதம் முதல் சீக்கிய மதம் வரை எல்லோரும் ஓம்காரத்தைப் போற்றுகின்றனர் இதனால்தான்  பிள்ளையாரை முதலில் வணங்குகிறோம்.அடுத்த முறை பிள்ளையார் சிலைக்கு முன்னால் நிற்கும்போது இந்த ஓம்காரத்தையும் மனதில் தியானியுங்கள்

****

திருவாரூர் வாதாபி கணபதி– ஷோடச கணபதி கீர்த்தனை

இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்வார்.

‘ஷோடச கணபதி கீர்த்தனை’ என்றும் அந்தக் கீர்த்தனைக்குப் பெயர் என்று அருட்சக்தி என்ற ஒரு பெரியவர் எழுதியுள்ளார்.

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவர  ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் (பஜனை செய்கிறேன்).

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்ப சம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

Thanks to Arutsakti website.

****

நான் முன்னர் ஒரு கட்டுரையில் எழுதியது:–

பழைய கதையைச் சுருக்கமாகக் காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நரசிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது. எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

****

எனது மொழியியல் ஆராய்ச்சி 

கட்டுரையை முடிப்பதற்கு முன்னதாக கொஞ்சம லிங்குஸ்டிக்ஸ் / LINGUISTICS மொழியியல் ஆராய்ச்சியையும் காண்போம்.

வாதாபி என்னும் பெயரே பாதாமி என்று திரிந்தது

வா + தா+ பி = பா +தா+ மி

 என்பது ப ஆக மாறும் என்பது சங்கத் தமிழில் உள்ளது; சபை என்பதை அவை என்று எழுதுவர். இது அவஸ்தன் முதல் ஸ்லாவ்

மொழிவரை உலகம் முழுதும் உளது வருணன் என்னும் தெய்வத்தை ஸ்லாவ் மொழி பேசுவோர் பருண் என்று கும்பிட்டார்கள் இன்றும் வங்காளி, மொழி, அஸ்ஸாமிய மொழிபேசுவோர் நாம்   என்று சொன்னால்  என்பர்; நாம் வ என்று சொன்னால்  என்பார்கள் சிவ சாகர் என்ற ஊரின் பெயரை சிப் சாகர் என்றுதான் சொல்வார்கள் அதே போல மி  , 

என்பதும் வி ,  ஆக மாறும் நாமே பேச்சு வாக்கில் விழி என்பதை முழி என்கிறோம். இதற்கும் நிறைய ஆதாரம் உள்ளது ஆக வாதாபி என்பதே சரி; பாதாமி என்பது அதன் திரிபு; அதாவது பேச்சு வழக்கு.

இன்னும் ஒரு உதாரணம்

சா + ம+ ரி என்ற மானை வள்ளுவர் கவரி என்று சொன்னார்;  இதிலும்  என்னும் எழுத்து வ என்னும் எழுத்தாக மாறுகிறது. இந்த மானின் முடியை மன்னருக்கும் கடவுளுக்கும் வீசும்போது கவரி ஏந்தினர் அல்லது சாமரம் வீசினர் என்போம். இந்த மாற்றமும் உலகம் முழுதும் உள்ளது.

காரணம்?

உலகில் ஆதிகாலத்தில் சிவ பெருமானிடம் தோன்றிய தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும் மட்டுமே இருந்தன.

இந்துக்கள் உலகம் முழுதும் கலாசார தீபத்தை ஏந்திக்கொண்டு சென்று நாகரீகத்தைப் பரப்பியதால் இந்த மொழியியல் விஷயங்கள் உலகின் எல்லா பழைய மொழிகளிலும் இருப்பதைக் காண்கிறோம்.

–சுபம்-

TAGS –வாதாபி கணபதிம் பாடல், பாதாமி, வாதாபி, வக்ர துண்டம் , பிள்ளையார் , முதல் வணக்கம், ஏன், மொழியியல் ஆராய்ச்சி கவரிமான் சாமரம்,

பாம்பிடமிருந்து பக்தரைக் காத்த ஷீர்டி சாயிபாபா! (Post No.14,572)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,572

Date uploaded in London – –31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

பாம்பிடமிருந்து பக்தரைக் காத்த ஷீர்டி சாயிபாபா! 

ச. நாகராஜன் 

ஒரு நாள் நாக்பூரிலிருந்து பாபாவின் பக்தரான பூடி (G.M.Buty) என்பவர்  ஷீர்டிக்கு வந்தார். (ஷீர்டி சாயிபாபா அவதாரம்: 28-9-2835 சமாதி:15-10-1918)

நானா சாஹப் டெங்க்லே (Nana Saheb Dengle) என்ற பக்தர் ஜோதிடத்தில் வல்லவர். அவர் பூடியைப் பார்த்து, அன்று அவரது உயிருக்கு ஆபத்து என்றும் பெரிய கண்டம் ஒன்று வருகிறது என்றும் கூறினார்.

சற்று நேரம் கழித்து இருவரும் ஷீர்டி பாபாவிடம் சென்று அமர்ந்தனர்.

பூடியைப் பார்த்த பாபா பேசலானார்.

பாபா – நானா என்ன சொன்னார்? உனக்கு சாவு வரும் என்று சொன்னாரா? பயப்படவே பயப்படாதே. அடி! எப்படி நீ அடித்து அதைக் கொல்கிறாய் என்று நான் பார்க்கிறேன்.

அன்று மாலை சற்று ஓய்வாக ஒதுக்குப்புறமாகச் சென்றார் பூடி. அங்கே அவர் அருகே ஒரு பாம்பு வந்தது. அதை அடிக்க தடியை எடுக்க பூடியும் அவரது வேலைக்காரரும் ஓடினர். ஆனால் அதற்குள் அது அங்கிருந்து சென்று விட்டது.

கண்டம் உண்மையிலேயே வந்தது. ஆனால் பாபாவின் அருளால் அது அகன்றது.

பூடி பாபாவிற்காக இன்னும் ஏகப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும். ஆகவே அவரை பாபா சாவதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குப் பின்னர் பல ஆண்டுகள் வரை -1921-ம் ஆண்டு வரை – அவர் உயிருடன் இருந்தார்.

சரி ஒரு கேள்வி எழுகிறது. பூச்சிகள், பாம்பு, தேள் ஆகியவற்றை அடித்துக் கொல்லலாமா?

துகாராம் மஹராஜ் கூடவே கூடாது; அவை கடவுளின் உருவமே என்கிறார். பரமஹம்ஸரும் பாம்பு, புலி பற்றி அப்படியே தான் சொல்கிறார். ஆனால் மூட்டைபூச்சிகளைக் கொல்லலாம் என்றார் அவர்.

ஶ்ரீமத் பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் வரும் ஒரு வாக்கியமானது பாம்பையும் தேளையும் அடிப்பதைப் பார்த்து ஒரு மகான் கூட சந்தோஷப்படுவார் என்கிறது.

இதையெல்லாம் படித்த பாபாவின் பக்தரான ஹெச்.எஸ். தீக்ஷித் என்பவர் பாபாவிடமே இது பற்றிக் கேட்டு விட்டார்.

தீக்ஷித்: தங்களை விஷப்பாம்புகளிடமிருந்து காத்துக் கொள்ள மக்கள் பாம்புகளைக் கொல்கிறார்களே, இது சரியா?

பாபா:  கூடாது. ஒரு பாம்பானது கடவுளின் ஆணையின்றி ஒருவரைக் கடிக்காது; கொல்லாது. விதி அப்படி இருக்கும் போது ஒரு மனிதனால் பாம்பை அடிப்பதோ தன் உயிரைக் காத்துக் கொள்வதோ முடியாது.

ஷீர்டியில் ஏராளமான பக்தர்கள் பாம்புகளை மிக அருகில் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பாம்பு கடிப்பதுமில்லை; அவர்கள் பாம்பை அடிப்பதுமில்லை! அவர்கள் பாம்புகளை பாபாவாகவே பார்த்தார்கள்!

***

Hindu Crossword 3052025 (Post No.14,571)

Written by London Swaminathan

Post No. 14,571

Date uploaded in London –  30 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.  – Largest story collection first written by Gunadhya and then by Kshemendra.

2. – The king who brought Ganga River to earth; symbol of perseverance; the fact is he diverted River Ganges into the plains of North India; he succeeded where previous engineers failed.

3. Goddess worshipped by Hindu Emperor Shivaji; also the name of a river and town in Tamil Nadu.

4. – The River that enters India from China and merges with Ganga River.

5. – Famous for its Lingaraja Temple in Odisha.

6. – Lord Krishna’s brother; anti war hero in Mahabharata; went on pilgrimage against Mahabharata war;  also associated with strength, agriculture, and the plough. 

7. – means earth; common name of Hindu women in India. 

8.  – He and his family of students were the authors of Mandala 6 in the Rigveda. His name is a Gotra name. He studied Veda for over 300 years; probably in three births.

         1         2
8                   
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
  7      B      3   
                    
                    
                    
                    
                    
                    
                    
 6                  
                    
         5         4

ANSWER

1.BRHATKATHA  – Largest story collection first written by Gunadhya and then by Kshemendra.

2.BAGHEERATHA- The king who brought Ganga River to earth; symbol of perseverance; the fact is he diverted River Ganges into the plains of North India; he succeeded where previous engineers failed.

3.BHAVANI- Goddess worshipped by Hindu Emperor Shivaji; also the name of a river and town in Tamil Nadu.

4.BRAHMAPUTRA- The River that enters India from China and merges with Ganga River.

5.BHUBANESWAR- Famous for its Lingaraja Temple in Odisha.

6.BALARAMA- Lord Krishna’s brother; anti war hero in Mahabharata; went on pilgrimage against Mahabharata war;  also associated with strength, agriculture, and the plough. 

7.BHUVANA- means earth; common name of Hindu women in India. 

8.BHARADWAJA  – He and his family of students were the authors of Mandala 6 in the Rigveda. His name is a Gotra name. He studied Veda for over 300 years; probably in three births.

—subham—

Tags- Hindu Crossword,3052025

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி3052025 (Post No.14,570)

Written by London Swaminathan

Post No. 14,570

Date uploaded in London –  30 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1. ஆற்றைக்கடக்க உதவும்,

2. காவிரி நதி உற்பத்தியாகும் இடம்,

3. அடுப்பெரிக்க உதவும் , 

4. கொடியாக வளரும்; கேரளத்தில் அதிகம்;

5. அழகு, இளமை, திருமுருகாற்றுப்படை என்பதன் சுருக்கம்;

6. நாம் வாழும் மாநிலப்பரப்பு,

7. புடைக்க உதவும் முறம்,

8. யமனின் திசை; 

Answer

 –subham—

Tags- லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி, 3052025

GNANAMAYAM First June 2025 SUNDAY BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London .

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – The Chintpurni Temple, – Sakthi Peetam – Himachal Pradesh

****

SPECIAL EVENT-

Talk by Isaikkavi Ramanan on His Contribution to Tamil Language and  Community

Isaikkavi Ramanan is a famous speaker, actor, playwright, author, composer  and a poet; won a number of awards.

He is saying about himself :

“Not special in any way. Fortunate in every way”.

Official Name T.A. Venkateswaran

Date of birth January 29, 1953, Tirunelveli

Married to Anuradha

Father of Anand and Vikram (Twins)

Education Commerce Graduate

Work Experience       

27 years in The Hindu, one of India’s leading national dailies. Joined as a Sales Representative, became Regional Manager at Visakhapatnam, and quit employment when I had 10 years to go, to pursue my personal dreams.

Gifts from Providence

A prolific poet in Tamil, composer and singer. Stage Actor. Acted in Televesion serials and presented about 1400 programmes as well in various channels. Author in Tamil and English.

Publications

About 15 books in Tamil comprising compilation of poems and articles

Wrote “Sikaram” the biography of Sri K. Balachandar, a doyen film maker

Three books in English, “Chips Down? Chin Up!” ; Business Mantras, a Pictorial on Sri N Mahalaingam and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.

Three translation works from English to Tamil and one from Tamil to English

Several CDs containing my poems and songs in my voice; also sung by my sons and sister.

CDs containing conversations with Dharma Raman in English and Tamil on Vedas, Aathi Chudi, Durga Sapta Sloki and my poems and songs with her introductions

Published 42 books so far

Media

Pothigai TV : Anchored about 200 epispdes of “Konjam Kavithai Konjam Thaeneer” for about two years

Acted in four Tamil serials, including one directed by the late K. Balachander

Sri Sankara TV : Spoke on “Kanchi Mahan: 501 episodes and On the path of Dharma 275 episodes. “Deivathin Kural” 56 episodes, “Kanchi Mamuniyin Kaaladiyil” 45 episodes.

MakkalTV : Spoke on ThirukkuraL in “Thamizh Amizdhu.” 165 episodes

Makkal TV : “Pannisai VithagargaL” 165 episodes

About 1400 episodes in all in various television channels

Public Speaking

Addressing varied age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs and motivational talks.

Wrote and has been acting in SB Creations’ “Bharathi Yaar?” Staged in Chennai, different parts of Tamilnadu and also in Muscat, Melbourne, Singapore and nine places in the USA.

Travel Abroad

Seven visits to parts of the U.S.A. and six Canada – lecture / stage play tour

Seven visits to Singapore – lecture tour

Sri Lanka, Malaysia, Abu Dhabi, Muscat, Australia, UK

Pilgrimage

Ardent pilgrim, visited several holy places in India

35 visits to different parts of the Himalayas so far

Other interests

A keen photographer

Awards: About 46, including Tamilnadu Govt’s Kalaimamani

Goal

Spiritual enlightenment and spreading cheer and positivity through cultural / literary programmes

Fortunate to come under the tutelage of Satguru Sivananda Murty, who lived in Bheemunipatnam, near Visakhapatnam

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

1-6-2025 ஞாயிற்றுக்கிழமை ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம்via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்:

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் .

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  ஹிமாச்சல பிரதேச  சக்தி பீடம்- சிந்த் பூரணி அம்மன் கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு:- இசைக்கவி ரமணன் .

தலைப்பு — நூல்கள் மூலமும் சொற்பொழிவு மூலமும் ஆற்றும் தமிழ்த் தொண்டு.

இசைக்கவி ரமணன் வாழ்க்கைக்குறிப்பு

பிறந்த இடம் திருநெல்வேலி / 30.03.1954

தமிழ்க்கவிஞன் என்னும் ஒரே அடையாளம். இசையோடு கவிதைகளைப் பாடுவது இயல்பு.

27 ஆண்டுகள் ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் பணிபுரிந்து முன்னோய்வு. சென்னை, பெங்களூரு, மதுரை, விசாகப்பட்டினம் கிளைகளில் பணி

37 முறை இமயத்தின் பல பகுதிகளுக்குப் பயணம்

புகைப்படக் கலையில் ஆர்வம்

கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, மஸ்கெட் (ஓமன்), ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆங்கிலச் சொற்பொழிவுகள்

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி, கொல்கத்தா, மணிப்பூர் போன்ற ஊர்களிலும் சொற்பொழிவுகள்

தொலைக்காட்சி : முடிந்த நிகழ்ச்சிகள் : பொதிகையில் இரண்டாண்டுகள், “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி (சுமார் 200) . மக்கள் தொலைக்காட்சியில், “பண்ணிசை வித்தகர்கள்” (165) “தமிழ் அமிழ்து´ (165) நிகழ்ச்சிகள். சங்கரா தொலைக்காட்சியில் “காஞ்சி மகான்” (501) நிகழ்ச்சி;

 “தர்மத்தின் பாதையில்” On the Path of Dharma என்ற தலைப்பில் தமிழ் / ஆங்கிலத்தில் தொடர் சொற்பொழிவு (275) / தெய்வத்தின் குரல் (60) “காஞ்சி மாமுனியின் காலடியில்” என்னும் தொடர் சொற்பொழிவு (50).

நான்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிப்பு

இதுவரை பங்குகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுமார் 1400 +

தினமலர், தமிழ் இந்துவின் யூடியூபுக்காக, சுய முன்னேற்றம் / கவியரசர் கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சிகள்.

தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள்: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திவரும் “காலங்களில் அவன் வசந்தம்” 100 நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.  

மதுரத்வனி மற்றும் இண்டேன் குருகேஸ் ஏஜென்சியின் ஆதரவில் சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் “இசைக்கவியின் இதயம்” ; மதுரத்வனி மற்றும் சேவாலயாவின் “மாதம் தோறும் மகாகவி” இவை தவிர, சென்னையிலும் வெளி ஊர்களிலும் சொற்பொழிவுகள் – கவிதைகள் பாடல்களோடு.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் என் நண்பன் திரு. மகேஷ் கிருஷ்ணன் வழங்கிய “இசைக்கவி” என்னும் விருதே அடையாளமாகத் தொடர்கிறது.

விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள பீமுனிப்பட்டினத்தில் வாழ்ந்த சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களிடம் தஞ்சம்.

தேசமே கோயில், தர்மமே தெய்வம், தமிழே சுவாசம் என்று வாழ முயலும் ஆன்மிகப் பயணி.

*****

எழுதிய நூல்கள்

கவிதை நூல்கள்: 13

01 கோடுகள் இல்லா உலகம்

02 அகத்தியர் அந்தாதி

03 பிள்ளைப் புலம்பல்

04 மனோன்மணி மாலை

05 ரமணனைக் கேளுங்கள் + குறுந்தகடு

06 வண்டி போய்க்கொண்டிருக்கிறது + குறுந்தகடு

07 மரியன்னை பதிகம்

08 அராளகேசி அருட்பாமாலை

09 ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்

10 துர்கா சப்தஸ்லோகி

11 நதியில் விழுந்த மலர் + குறுந்தகடு

12 அபிராமி அம்மை பதிகம்

13 என்னுயிர் மீனாட்சியே

உரைநடை நூல்கள்: 20

01 எந்த வானமும் உயரம் இல்லை

02 இமயம் : அந்தரங்கத்தின் பகிரங்கம்

03 எல்லோர்க்கும் தந்தை இறைவன்

04 மனம் செய விரும்பு

05 என் குருவே என் இறைவன்

06 எந்தத் திருமணம் வெற்றி பெறுகிறது? 

07 “சிகரம்” – இயக்குநர் “சிகரம்” – திரு, கே. பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு

08 பல முகங்கள் சில நினைவுகள்

09 ஒளிமயமான எதிர்காலம்

10 வெற்றி நிச்சயம்

11 காலங்களில் அவன் வசந்தம்

12 கண்ணதாசன் – இலக்கியத்தின் கண்ணாடி

13 தெய்வப் பிறவிகள் (தினமலர் வெளியீடு)

14 பாமரன் பார்வையில் பாரதி (தினமலர் வெளியீடு)

15 சேச்சு

16 ஈசாவாஸ்ய உபநிடத விளக்கம்

17 கம்ப தரிசனம்

18 பெரியவர்

19 பார்த்ததும் பதிந்ததும்

20 குரோம்பேட்டை ஞாபகங்கள்

இது தவிர மொழிபெயர்ப்பு நூல்கள், குறுந்தகடுகள் ஆகியவற்ரையும் வெளியிட்டுள்ளார் . மேடை நாடகங்கள் எழுதியும் நடித்தும் உள்ளார்.

2000 ஆண்டு, விசாகப்பட்டினத்தில், என் குருநாதர் சத்குரு ஶ்ரீ சிவானந்தமூர்த்தி அவர்களின் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் நான் அவருக்கு அளித்த வரவேற்புக் கவிதைக்கு மறுமொழியாக அளித்த “மதுரகவி” என்பதே நான் பெற்ற முதல் விருது. இது தவிர எண்ணற்ற விருதுகள்!

****

நேரம் இருப்பின் இடையே  பாடல்கள்!

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, June 1, 2025, Programme