Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மார்ச் மாதம் (2025) சென்னை முதல் கும்பகோணம் வரை பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
PART -4
This is the Fourth Part of pictures i took during my visit to India in March 2025.
I used to take photos from my car or on the roadside. These were taken with my I Pad and Samsung Phone between Swamimalai and Chennai in Tamil Nadu.
Please see the previous three parts as well.
During School Examination time, not only students but also parents and teachers frequent the temple for good results. Here we see school teachers coming in school uniform.
ALSO LOOK AT THE BOOKS SOLD INSIDE THE KANCHI SHANKARACHARYA MUTT; THEY ARE VERY GOOD.
—Subham—
Tags- சென்னை – சுவாமிமலை, சாலையோர, காட்சிகள் , Part 4, boons on Kancchi Sankaracharya, Kanchi Mutt
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
முன்னுரை
இந்தப் புஸ்தகத்தில் 38 சுவையான கட்டுரைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் .பொருளடக்கத்தைப் பாருங்கள் . உடனே பக்கத்தைப் புரட்டத் துவங்கி விடுவீர்கள்!
அவ்வையாரும் பாரதியாரும் பாடிய ஆத்திச்சூடிகளில் உள்ள மருத்துவ விஷயங்களை ஆராய்ச்சி செய்துவிட்டு, தமிழ் ஆசாரக்கோவை வரையும் மருத்துவ ஆராய்ச்சி நீடிக்கிறது. உலகையே வியக்கச் செய்த புத்தமத தத்துவ அறிஞரும் மந்திரவாதியுமான நாகார்ஜுனாவின் மந்திர தந்திர குளிகைளைப் படித்துவிட்டு, பாபா செய்த அற்புத ங்களுக்கான விளக்கத்தையும் படிக்கலாம்.
மூன்று விபசாரிகளுடன் பழகிய புத்தர், ஏசு, ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய கட்டுரை மனதை உருக்கக்கூடியது. வேசி மகளும் தெய்வ மகள் ஆக வாய்ப்பு உண்டு! இறுதியில் இந்துக்களின் கடல் அடி மலைகளை, யானைகளின் பெயர்களை ஆராய்ச்சி செய்து விட்டு மோடியின் பொன்மொழிச் சொற்பொழிவுடன் படித்து முடிக்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்துவிடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனேஎன்று புலம்புகிறார்அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
XXX
இந்தியாவுக்கு எப்போது போனாலும் குல தெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க மாயூரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்வோம்.. இந்த முறை 2025 மார்ச் மாத இந்திய விஜயத்தின்போது சுவாமி மலையும் தரிசனத்தில் இடம்பெற்றது .
என்னுடைய பெயருக்கு காரணமே சுவாமிமலை சுவாமிநாதன்தான்; அந்த சுவாமிமலையை எனது பயணத்திட்டத்தில் சேர்க்கவில்லை;. கும்பகோணம் ஸ்ரீவத்சம் கெ ஸ்ட் ஹவுசில் தங்கி, மதிய உணவு அருந்திய பின்னர் நண்பர் சீனிவாசனிடம் நீங்கள் இங்கேயே தங்குவதால் உங்களுக்குத்தான் ரூட் தெரியம்; மாலை 4 மணி முதல் இரவுச் சாப்பிடுவரை எங்கெங்கு போகலாம் என்று சொல்லுங்கள் என்றேன்.
முதலில் சுவாமிமலைக்குப் போவோம் என்று துவங்கினார்; உடனே எஸ் எஸ் YES, YES என்று சொன்னேன்.
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா என்ற சினிமா பாட்டுதான் நினைவுக்கு வந்தது இறைவனே இங்கே வா என்று சொல்லும் அசரீரிதான் வேறொரு ஒருவரின் வாய்ச் சொல் மூலம் வருகிறது போலும்!
****
புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில்
அப்பர் பாடிய பாடலில் வைத்தீஸ்வரன்கோவில் பற்றிய எல்லா அரிய செய்திகளும் வந்துவிட்டன. இங்குள்ள தனிச் சிறப்புகள் மூன்று :
முதல் சிறப்பு தன்வந்திரி சிலை இருப்பதாகும்; அது தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது உலகில் முதல் முதலில் மருத்துவத்தைப் போதித்தவர் தன்வந்திரி.
இரண்டாவது தனிச் சிறப்பு இது செவாய் தோஷ பரிகாரத் தலம் ஆகும் அங்காரகன்/ செவ்வாய் சந்நிதியும் உளது
மூன்றாவது சிறப்பு — பாடல் பெற்ற முருகன்– செல்வமுத்து குமார சுவாமி இருப்பதாகும்.
இந்தக் காரணங்களால் நாங்கள் கணேசர் தொடங்கி, முருகன், சிவன், அம்பாள் அஃகாரகன், தன்வந்திரி என்று ஆறு அர்ச்சனைகள் செய்வது வழக்கம் இந்த முறையும் அப்படியே செய்தோம். மாலை நேரம் ஆனதால் அதிக கூட்டம் இருக்கவில்லை.
இங்கு குளத்தில் வெல்லம் கரைப்பதும், அம்பாள் சந்நிதிக்கு அருகில் உப்பு -மிளகு போட்டு மருந்து உருண்டை பெறுவதும் வழக்கம்.
****
சுவாமி மலையில் மகன்
சுவாமிமலை முருகனுக்கு வேறு எங்கும் இல்லாத சிறப்பு உண்டு. தந்தையான சிவபிரானுக்கே ஓம்காரத்தின் உட்பொருளை விளக்கிய பெருமை உடையவன்!
கோவிலுக்குள் மாலையில் சென்றோம் படிகள் ஏறித்தான் இறைவனைத் தரிசிக்க வேண்டும் ஆனாலும் பழனி மலை போல அதிகப் படிகள் கிடையாது; எவரும் ஏறிவிடலாம்.
உள்ளே நுழையும்போதே அசரீரி ஒலித்தது!
சார்! நூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு போங்கள்; சுவாமிக்கு முன்னால் அரை மணி நேரம் கூட நிற்கலாம் என்றது அந்தக் குரல்; அவர் கட்டாயம் கோவில் ஊழியர் அல்ல ;எப்போதும் டிக்கெட் வாங்க மறுக்கும் அல்லது தயங்கும் நான் உடனே எனக்கும் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினேன். திவ்ய தரிசனம்தான்; சுவாமிநாதனுக்கு மிக அருகில் இருபது நிமிடம் நின்று நல்ல தரிசனம் கிடைத்தது
எங்கு போனாலும் நேரம் ,காலம், சூழ்நிலை ,அறிந்து சிறிது விசாரித்துச் சென்றால் முழுப்பலனையும் அடையலாம்; எல்லாவற்றுக்கும் மேலாக அவன் அருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும். சும்மாவா சொன்னார் மாணிக்கவாசகர்
சுவாமி மலைக்குப் போனது இது முதல் தடவை அல்ல; ஆயினும் இந்த தரிசனம் மனதில் நீங்காது நிற்கிறது .
முக்கியக் குறிப்புகள்
முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது.
கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோவி ல் என்றும் அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன் சுவாமி’ எனப் புகழ் பெற்று விளங்குகிறார். இக்கோவி லின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மூன்று கண் படைத்த நேத்திர விநாயகரும் புகழ்பெற்ற பிள்ளையார் ஆவார்
****
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல …… பெருமாளே.
****
Vaitheeswaran Koil Entrance
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.
—SUBHAM—
TAGS- சுவாமி மலை , சுவாமிநாதன், முருகன், படைவீடு, ஓம்காரம், வைத்தீஸ்வரன்கோவில், அப்பர் தேவாரம், திருப்புகழ், புள்ளிருக்குவேளூர், அங்காரக க்ஷேத்திரம், தன்வந்திரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 2
ச. நாகராஜன்
ஒரு நாள் சிவாஜி மஹராஜ் தளர்ந்த உள்ளத்துடன் தனது படுக்கையில் இருந்த போது அவரிடம் அவரைப் பார்க்க சமர்த்த ராமதாஸர் வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
துள்ளி எழுந்த சிவாஜி அவரிடம் ஓடி அவரைப் பணிந்தார். அவருடன் பல நாட்கள் தங்கி இருந்த ராமதாஸர், சிவாஜி தனது மகன் சம்பாஜியைப் பற்றி எண்ணி வருத்தப்படுவதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் அளித்தார்.
“இந்த ஸ்வராஜ்யமே இறைவன் திட்டமிட்டு உருவாக்கிய திருப்பணி தான். ஆகவே சம்பாஜியைப் பற்றிக் கவலைப்படாதே. இதை நன்கு ஆள தகுதி உள்ள ஒருவன் நிச்சயம் வருவான். அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு” என்றார்.
இந்தச் சொற்களால் வருத்தம் நீங்கப் பெற்ற சிவாஜி அவரை விழுந்து வணங்கினார்.
“நான் உன் அருகிலேயே உள்ள பர்லி கோட்டையில் தான் தங்கி உள்ளேன்” என்றார் ராமதாஸர்.
அன்றிலிருந்து அந்தக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் என்று பெயர் சூட்டப்பட்டது. சஜ்ஜன் கர் என்றால் ஆண்ரோர்களின் உறைவிடம் என்று பொருளாகும்.
ஊர் ஊராகச் சென்ற ராமதாஸர் ஆங்காங்கே பதினோரு இடங்களில் அனுமாருக்காகக் கோவில்களை நிறுவினார்.
தல யாத்திரை சென்ற சமயத்தில் ஒரு நாள் அவரது தாயார் கண் பார்வை இழந்து வருந்துவதாகக் கேள்விப்பட்ட அவர் நேரடியாகத் தாயாரிடம் வந்தார். தனது தாயாரின் கண்களைத் தனது கரங்களால் தொட்டார்.
அவரது பார்வை மீண்டது.
அவரது கரத்தில் ஒரு சிறிய வில் இருக்கும். அருகிலிருக்கும் கற்களை எடுத்துத் தான் பார்க்கும் பொருள்களின் மீது வில்லால் கற்களை எறிவது அவர் பழக்கம்.
பெண்களை அவர் பெரிதும் மதித்துப் போற்றினார். அவரது சீடர்களாக 1100 பேர் சமர்த்த பிரிவில் இணைந்தனர். இவர்களில் 300 பேர்கள் பெண்களாவர்.
ராமதாஸரின் தர்ம பிரசாரத்தை இவர்கள் மேற்கொண்டு நாடு முழுவதும் அதைப் பரப்பலாயினர்.
சிவாஜியின் மகனான ராஜாராம் செஞ்சியின் மீது படைஎடுத்து ஔரங்கசீப்பின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயன்றார். ராமதாஸர் தனது தெற்கு நோக்கிய விஜயத்தின் போது சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரரான வெங்கோஜி அவரது சீடரானார். தஞ்சாவூரில் ஒரு மடத்தை நிறுவிய ராமதாஸர் அங்கு தனது நேரடி சீடரான பீமஸ்வாமியை அதை நிர்வகித்து வருமாறு கூறி அருளினார்.
சீக்கியர்களின் குருவான ஹர்கோவிந்த சிங்கை ராமதாஸர் தனது ஶ்ரீ நகர் விஜயத்தின் போது சந்தித்தார். சந்திப்பின் போது ராமதாஸர் ஹர் கோவிந்த சிங்கிடம், “ நானக் வழியில் வந்த நீங்கள் உலகைத் துறந்தவர்கள் தாம். நீங்கள் அரசன் உடையை அணிந்து ஆயுதங்களைத் தரித்து உள்ளீர்கள். குதிரைப் படையைக் கொண்டு செல்கிறீர்கள். இது ஏன்? என்றார். உடனே ஹர்கோவிந்தசிங், “ நான் உள்ளே ஒரு துறவி. வெளியே ஒரு அரசன்” என்றார். “ஆயுதங்களைத் தரிப்பது ஏழைகளைப் பாதுகாக்கவும் கொடுங்கோலர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தான்” என்றார். உடனே ராமதாஸர், “இந்த பதில் என் மனதைக் கவர்கிறர்து” என்றார்.
தனது இறுதி காலத்தில் ராம நாமத்தை ஜெபித்தவாறே அவர் ஒரு வித உணவையும் எடுக்காமல் ராமனோடு ஒன்று கலந்தார். அவர் சமாதி நிலையை அடைந்த தருணத்தில் அவரது உடலிலிருந்து ஒரு பெரும் ஒளி வெளியில் கிளம்பியதை அனைவரும் பார்த்தனர்.
அவர் இறுதியாக தன் சீடர்களிடம் உபதேச உரை ஆற்றுகையில், “ஒரு போதும் உடல் தேவைகளைப் பற்றி அதிகம் நினைக்காதீர்கள். சத்சங்கத்தைக் கொள்ளுங்கள். ராமரை உங்கள் இதயத்தில் நிலை நிறுத்துங்கள். காம க்ரோத லோப மத மாத்ஸரியத்தை நீக்குங்கள். அனைவரின் மீதும் அன்பு கொள்ளுங்கள்’ என்றார்.
ராமதாஸரது இலக்கியம் பரந்துபட்ட ஒன்றாகும்.
அவரது இலக்கியமானது அவர் வடக்கிலும் தெற்கிலும் நிறுவிய அவரது மடங்களை ஏற்ற சீடர்களால் பரப்பபட்டு வந்தது.
தாஸ போதம் என்ற அவரது நூல் மிகவும் பிரபலமான நூலாகும்.
மானஸ ஸ்லோகம் என்ற அவரது மனதை நோக்கிக் கூறும் ஸ்லோகம் அனைவராலும் கூறப்பட்டு வரும் ஒரு ஸ்லோகமாகும்.
ராமர் ராவணனை வெற்றி கொண்டதை மட்டும் விவரிக்கும் அவரது ராமாயணம் பிரபலமான ஒன்று.
அவரது ஹனுமன் ஸ்தோத்திரம் இன்றும் கூட மஹராஷ்டிர பள்ளிக்கூடங்களில் மாணவர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
கருணாசதகம் உள்ளிட்ட பல நூல்கள் அவரால் இயற்றப்பட்டுள்ளன.
அனைத்திலும் வல்லவராக இருந்த காரணத்தினால் அவர் சமர்த்த ராமதாஸர் என்று அழைக்கப்பட்டார். அவரது சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டோர் சமர்த்த பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.
ராமதாஸரால் ஊக்கம் பெற்றோர் இன்று வரை ஏராளமானோர் உள்ளனர்; இனியும் இருப்பார்கள்.
ஸ்வாதந்திர வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் அவரது தாஸபோதத்தால் உத்வேகம் பெற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் ராமதாஸரின் பெரும் பக்தர். ராமதாஸரது பல உரைகளை அவர் தனது டயரியில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அவரால் உத்வேகம் பெற்றே அவர் ஆர் எஸ் எஸ்ஸை நிறுவினார்.
அவரது உபதேச உரைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை; அனைவருக்கும் வழிகாட்டுபவையாகும்.
ஶ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராம ஓம் என்று தியானிப்பதோடு சமர்த்த ராமதாஸரின் அடி போற்றுவோம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
முன்னுரை
பஸ்,ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள் என்பது புஸ்தகத்தின் தலைப்பு. அது என்ன துக்கடா? என்று பலரும் வியக்கலாம். துக்கடா என்பது மராத்தி மொழிச் சொல். இதன் பொருள் துண்டுகள் ஆங்கிலத்தில் டிட்பிட்ஸ் TItbits என்றும் தமிழில் துணுக்குகள் என்றும் சொல்லலாம். இந்த தமிழ்த் துக்கடா நூலில் மறுபிறப்பு அதிசயம் , பல பிராமணர் கதைகள், பஞ்ச தந்திர நூல் தோன்றிய கதை, பரவிய கதை , பெண்கள் விஷயங்கள் மற்றும் பல குட்டிக்கதைகள் உள்ளன. பஸ், ரயில் பயணிகளுக்கு ஏற்ற துண்டு/ துக்கடா விஷயங்கள். எந்தத் தலைப்பிலும் படிக்கத் துவங்கலாம்; பொருளடக்கத்தைப் பார்த்தால் புஸ்தகம் என்ன என்பது புரிந்துவிடும், சப்ஜெக்ட் என்று சொல்லப்போனால் தமிழ், சம்ஸ்க்ருதம், சமயம், பண்பாடு, பொழுது போக்கு, மருத்துவம், ஜோக்குகள், எறும்பு, மருத மரம் முதலியன எல்லாம் வந்துவிடும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்கரதேவ் 1449–1568
1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?
சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர் சிரோமணி பூயன் ;
தாயின் பெய- சத்தியசந்த்யா
****
2.அவருடைய மனைவி பெயர் என்ன ?
அவர் ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.
****
3.அவர் போதித்த கொள்கை என்ன?
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொரு ள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.
****
4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?
சத்ரியா – நடனக்கலை
சங்கீதம் – போர் கீத்
நாடகம் – அங்கியா நாட், பவோனா
****
5.அவர் என்ன நூல்களை எழுதினார்
பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.
சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;
அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –
ருக்மிணி ஹரணம்
ராம விஜயம்
கேலி கோபாலன்
காளீய தமனம்
அஜாமிள உபாக்கியானம்
கஜேந்திர பக்திப் ப்ரதீபம்
****
6.வர கீதம் என்பது என்ன?
அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.
7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?
குரு– மஹேந்திர கண்டலி.
வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;
ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;
படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;
புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.
****
8.சங்கர தேவரின் சீடர் யார் ?
மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.
****
9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?
ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப் பாடினார்.
****
10.அவர் எப்போது இறந்தார் ?
அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
ஶ்ரீ ராமரை தரிசித்து ராம பக்தியைப் பரப்பியதோடு ஹனுமாருக்கென பல கோவில்களை நிறுவியவரும் ஹிந்து ஸ்வராஜ்யத்தை நிறுவ சத்ரபதி சிவாஜிக்கு ஊக்கமூட்டியவரும் பெரும் மகானுமான சமர்த்த ராமதாஸரைப் பற்றி இன்று சிந்திப்போம்.
மஹராஷ்டிர மாநிலத்தில் சூர்யாஜி பந்த் என்பவருக்கும் ரேணுகா பாய் அம்மையாருக்கும் ஜம்ப் என்ற இடத்தில் 1608ம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் அவதரித்தார்.
அவரது இயற்பெயர் நாராயணன். இளவயதிலேயே அவர் ஶ்ரீ ராமரையும் ஹனுமானையும் வழிபட்டுத் துதிக்க ஆரம்பித்தார்.
இளவயதிலேயே ராம தியானத்தில் ஊறிய அவர் ஒரு நாள் அறை ஒன்றில் ராம தியானத்தில் மூழ்கி இருந்தார். அவரது தாயார் அவரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போது ராமரை தியானிப்பதாகவும் உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். அவரது தாயார் இந்த பதிலைக் கேட்டு வியந்தார். இதுவே அவரது வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது.
இளவயதில அவருக்கு மணம் முடிக்க தீர்மானித்த அவரது பெற்றோர் அதற்கு ஏற்பாடு செய்தனர். திருமண சம்பிரதாயப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஒரு திரை தொங்க விடப்பட்டது. அப்போது திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசாரியர் ‘சாவ்தான்’ என்று கூறினார்.
‘சாவ்தான்’ என்ற சொல்லுக்கு ஜாக்கிரதை என்று பொருள்.
இதைக் கேட்ட ராமதாஸர் அந்த இடத்தை விட்டுக் கணப்பொழுதில் அகன்று ஓடினார்.
ராமதாஸர் பன்னிரெண்டு ஆண்டுகள் கோதாவரி நதிக் கரையில் நாசிக்கில் தங்கி இருந்தார். அதி காலையில் கோதாவரி நதியில் இடுப்பளவு நீரில் நின்று காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலானார்.
தினமும் வீதி வீதியாகச் சென்று பிட்சை கேட்டு அதை ஶ்ரீ ராமருக்கு முதலில் அர்ப்பணித்துப் பின்னர் தான் உண்பது அவரது வழக்கமானது.
வால்மீகி ராமாயணத்தை நன்கு கற்ற அவர் அதை முழுவதுமாக தன் கைப்பட எழுதினார். அந்த ஓலைச் சுவடிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜயஜய ராம் என்ற 13 எழுத்து மந்திரத்தை அவர் நாசிக்கில் உள்ள தபலி என்ற இடத்தில 13 லட்சம் தடவை ஜபித்து ராமரின் தரிசனத்தைப் பெற்றார்.
ராமரின் ஆணைப்படி எல்லா புனித தலங்களுக்கும் அவர் யாத்திரையை மேற்கொண்டார்.
ஒரு சமயம் விதவையான ஒரு பெண்மணியிடம், ‘நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று கூற அவளோ தனது கணவனின் இறந்த உடலைக் காண்பித்தாள். ராமதாஸர் அந்த உடலின் மீது நீரைத் தெளிக்க உடனே அவளது கணவன் உயிர் பெற்று எழுந்தான்.
இந்த சம்பவம் எங்கும் பரவி அவரது மகிமையை உலகெங்கும் பறை சாற்றியது.
பண்டரிபுரத்திற்கு அவர் விஜயம் செய்யாது இருந்த போது ஒரு நாள் ஒரு அந்தண வேடத்தில் பண்டரிபுர விட்டலன் தன் கூட 300 பேரை அழைத்து அவரிடம் வந்து, ‘பண்டரிபுர விட்டலனை தரிசிப்பதில் அவருக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா’ என்று கேட்டார்.
ராமதாஸ், ‘இல்லை’ என்று கூறி அவருடன் பண்டரிபுரத்திற்குப் புறப்பட்டார். கோவிலை நெருங்கும் போது அந்த அந்தணர் மறையவே இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராமதாஸர் விட்டலனை தரிசிக்கச் சென்றார். அங்கே செங்கல்லின் மீது ஶ்ரீ ராமர் நிற்பதைக் கண்டு அதிசயித்தார்.
கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட எல்லா அவதாரங்களும் ஒரே பரம்பொருளே என்று உணர்ந்த அவர் பாண்டுரெங்கனின் புகழ் பாடினார்.
அங்கு பண்டரிபுரத்தில் அவரது சமகாலத்தவரான பெரும் மகான் துகாராமை அவர் சந்தித்தார்.
ராமர் அவரை கிருஷ்ணா நதிக்குச் சென்று சத்ரபதி சிவாஜிக்கு உதவி புரியுமாறு ஆணையிட உடனே அவர் அங்கு சென்றார்.
சத்ரபதி சிவாஜி அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார்; உத்வேகமும் பெற்றார்.
தனது ராஜ்யம் முழுவதையும் சமர்த்த ராமதாஸரிடம் அர்ப்பணித்த சிவாஜி மஹராஜ் அவரது ஏவலனாகத் தான் இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒரு நாள் சிவாஜி ராமதாஸர் வீதி விதியாக பிட்சை எடுப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ,‘ஒரு ராஜ்யமே உங்களுடையதாக இருக்கும் போது வீதி வீதியாகச் செல்வது ஏன்’ என்று ஒரு சீட்டில் எழுதி அதை தனது படைவீரரான பாலாஜியிடம் கொடுத்து இதை ராமதாஸரிடம் சென்று கொடுங்கள் என்றார்.
அந்த சீட்டைப் படித்துப் பார்த்த ராமதாஸர் மறு நாள் சிவாஜியை அழைத்தார். தன்னுடைய திருவோட்டை அவரிடம் கொடுத்து, ‘வாருங்கள், நாம் வீதி வீதியாகச் செல்வோம்’ என்றார்.
சதாரா நகரின் தெருக்களில் ராமதாஸரையும் சிவாஜியையும் இப்படிக் கண்ட மக்கள் ஆச்சரியமுற்று அவர்களை வணங்கி தங்கள் பிட்சையை அளித்தனர். பின்னர் நதிக்கரைக்குச் சென்ற ராமதாஸர் தான் பெற்றதை அங்கு சமைத்து உண்டார். அவருடன் சிவாஜியும் அந்த உணவை உண்டார்.
தனது பெயரால் அந்த சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று கூறிய ராமதாஸர் பகவா த்வஜத்தை அரசின் கொடியாக ஏற்றி அதை என்றும் காத்து வரவேண்டும் என்று அருளினார்.
இந்த சம்பவத்தினால் தான் பகவா த்வஜம் சத்ரபதி சிவாஜியின் ஹிந்து ஸ்வராஜ்ய த்வஜமாக ஆனது.
அட்டைப்படம் : புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் யானை வந்தது ; விக்கி மீடியா காமன்ஸ் மற்றும் ஜார்ஜியா வெப்சைட் புத்தர் ஓவியம்; நன்றி
முன்னுரை
கனவுகள் பற்றிய இந்துக்களின் நம்பிக்கைக்கும் மேலை நாட்டு மன ஆராய்ச்சி நிபுணர்களான கார்ல் யங், சிக்மண்ட் பிராய்ட்( Carl Jung , Sigmund Freud ) ஆகியோரின் கொள்கைக்கும் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. இந்துக்களின் ஆராய்ச்சிகள் எப்படி அவர்களை பொய்யாக்குகின்றன என்பதை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காணலாம். இதற்கான ஆதாரங்களை சம்ஸ்க்ருத, மற்றும் சங்கத்தமிழ் இலக்கியத்திலிருந்தும் மக்களின் அனுபவங்களிலிருந்தும் கொடுத்துள்ளேன்.
கல்வெட்டுகளில் நாயின் பெயரை முதன் முதலில் பொறித்த பெருமை தமிழனுக்கு உண்டு. அது பற்றிய கட்டுரைகளையும் கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற இந்த நூலில் காணலாம். தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை மேலும் பல புதிய கட்டுரைகளை எனது ‘பிளாக்’குகளில் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் எழுதினேன். அவைகளையும் நீங்கள் இந்த நூலில் படிக்கலாம் . இப்படி விளக்கிக் கொண்டே போவதைவிட நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தாலே உள்ளடக்கம் புரிந்து விடும்.. இது தொடர் கதை அல்ல; ஆகையால் எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.
130 புத்தகங்களுக்கு மேல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பின்னரும் புதிய சுவையான விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் எழுதுவதை நிறுத்த மனம் வரமாட்டேன் என்கிறது. நீங்களும் படிப்பதை நிறுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் உளது.