Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!
இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் புவி வெப்பம்!
ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
உயிர் காக்கும் ஓஸோன் மண்டலம்
பூமியைச் சுற்றி உள்ள ஓஸோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.
சூரிய மண்டலத்திலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பூமியை ஓஸோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.
சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓஸோன் மண்டலமே.
இந்த ஓஸோன் உறை மட்டும் இல்லாவிட்டால் இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட் போன்ற கண் நோய்களும ஏற்படும்.
ஓஸோனில் துளை
ஆனால் நகரங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓஸோன் உறை மீது பட்டுப் பட்டு அதில் அபாயகரமான அளவில் துளை
ஏற்பட்டுள்ளது; ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா விண்ணில் ஏவிய
சாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. அண்டார்டிகாவின் மேலே ஓஸோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள்.
அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!
1970ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் ஓஸோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீஸனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.
செப்டம்பர் 16 ஓஸோன் தினம்
1995ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓஸோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16ஆம் நாள் ஆண்டுதோறும் உலக ஓஸோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓஸோன் துளை
பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓஸோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.
1987ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓஸோன் துளை தெரிவிக்கிறது.
நச்சு வாயுக்களே காரணம்
நச்சு வாயுக்கள் பூமியிலிருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓஸோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத் தகுந்தது CFC எனப்படும் க்ளோரோ ஃப்ளோரா கார்பன் – Chloro Floro Carbon – ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் ஃபோமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும், இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.
இது மட்டுமன்றி அனேக ஆலைகள் கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பர்டிகுலேட் மேட்டர்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில்களும் , வட இந்தியாவில் பேட்டைக்குப் பேட்டை அனுமார் கோவிலும் இருப்பதைப் போல இலங்கை முழுதும் ஆங்காங்கே புத்தர் சிலைகளைக் கண்டேன். தலை நகரான கொழும்பில் குறிப்பிடத் தக்க இரண்டு பெளத்த விகாரங்களுக்கு வெளிநாட்டினரும் வருவதைக் கண்டேன். வெளியில் ஓரிரு பூக்கடைகள் இருக்கின்றன. அவை வெண் தாமரை மலர்களையும் அல்லி மலர்களையும் விலைக்கு விற்கின்றன . அவைகளை வாங்கும் பக்தர்கள், புத்தர் சிலையின் காலடிகளில் / பாதங்களில் அவைகளைப் பக்தியுடன் சமர்ப்பித்து ஓரிரு நிமிடங்களுக்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
முதலில் கங்காராமய ஆலயம் செல்வோம்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ்பெற்ற அறிஞர்-துறவி ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரோவால் ஆரம்பிக்கப்பட்ட கங்காராமய கொழும்பின் மிகவும் பிரபல பௌத்த ஆலயங்களில் ஒன்றாகும். அழகான எரிக் கரையில் அமைந்த இக்கோவிலில் தங்க நிறம் பூசப்பட்ட புத்தர்கள் வரிசையாக உள்ளன. அவைகளோடு நாமும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்துக் கோவில்களைப் போலவே எவரும் காலணிகளுடன் உள்ளே நுழைய முடியாது. பெளத்த உருவங்களுடன் பிள்ளையார், முருகன் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள், புத்தரையும் தசாவதாரங்களில் ஒன்றாகச் சேர்த்து பெளத்த மதத்தை ஜீரணம் செய்துவிட்டனர். ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்த அஷ் டபதிகளில் புத்தர் ஒன்பதாவது அவதாரம். இது போலவே பெளத்தர்களும் தற்கால விஹாரங்களில் இந்து தெய்வங்களை நிறுவியுள்ளனர்.
இலங்கைத் தீவுக்கு புத்தர். விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர் ராமாயண , மஹாபாரத கதாபாத்திரங்கள் நாடு முழுதும் விஜயம் செய்ததாகப் பல இடங்களை இந்துக்கள் காட்டுவது போல அவர்களும் புத்தர் விஜயம் செய்த இடங்களைக் காட்டுகின்றனர் .
பெய்ரா BEIRA ஏரிக்கரையில் அமைந்த இந்தக்கோவில் சீன, இந்திய, தாய்லாந்து கலை அம்ஸங்களைக் கொண்டது . வெசாக் (வைகாசி விசாகம்) விழாக் காலத்தில் ஏரியில் விளக்குகள் விடப்படுகின்றன . கோவிலுடன் இணைந்த நூலகம் புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருகிறது . பல கல்வி, சமூக சேவைகளை செய்யும் இந்த ஆலயத்தின் புத்த குருமார்கள், பெரிய அறிஞர்களாக இருந்தவர்கள். அமைதியான சூழ்நிலையில் பல சந்நிதிகளில் புத்தரை தரிசிக்கலாம். சுமார் 200 ஆண்டு வரலாறு உடைய நவீன கால கோவில் இது.
XXXX
12. அசோகரமாய கோவில், கொழும்பு
Asokaramaya Buddhist Temple
இதே பெயரில் கொழும்புக்கு வெளியேயும் ஒரு கோவில் உண்டு. கொழும்பிலுள்ள கோவிலில் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. படிக்கட்டு வரிசையில் ஏராளமான புத்தர் சிலைகள் உள்ளன. நாங்கள் சென்றபோது கல்யாணத்துக்கு சிங்கள உடைகளுடன் வந்திருந்த பெண்களையும் கண்டோம். பழங்கால கடிகாரங்கள் , காமெராக்கள் முதலிய Antique ஆன்ட்டிக் – பழம் கலைப்பொருட்கள் ஒரு அறை முழுதும் நிரம்பி இருந்தது ; அதே போல பழைய நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் , வெண்தாமரை, அல்லி மலர்களை சிலைகளுக்கு சமர்ப்பித்தனர் .
இலங்கைத் தீவில் 3000–க்கும் மேலான புத்தர் கோவில்கள் உள்ளன. கொழும்பிலுள்ள புத்தர் கோவிலில் அசோகராமயா புத்தர் கோவிலை எளிதில் அடையலாம். புத்தரை பல்வேறு போஸ் Pose களில் பார்ப்பதோடு வண்ண ஓவியங்களையும், அருங்காட்சியகத்தையும் ஒருங்கே காணலாம்.
சிங்கள மக்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த ஒருபொருளை அல்லது புத்தர் சிலையை காணிக்கையாகக் கொடுப்பதாகச் சொல்லி விரதம் ஏற்பர் . அந்தக் காரியம் நிறைவேறினால் அதை ஆலயத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுவார்கள் ; அப்படிச் சேர்ந்த ஏராளமான பொருட்களையும் காணலாம்.
பெரிய போதி மரம் (அரச மரம்) பாதுகாப்பு வளையத்துடன் காணப்படுகிறது புத்தர் தவம் செய்த முதல் அரச மரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட மரங்களை, அசோகர் இலங்கைக்கு மகன் மூலமும், மகள் மூலமும் அனுப்பிவைத்தார். ஆகையால் மக்கள் அதை பய பக்தியுடன் போற்றி வழிபடுகின்றனர்,
இறந்து போன கோவில் யானையின் தோலை அப்படியே போர்த்தி உயிருள்ள யானை நிற்பதை போலவே அமைத்துள்ளனர்
ஒரு மூத்த புத்த குருமாரை சக்கர நாற்காலியில் வைத்து கோவிலின் நுழை வாயிலில் அமர்த்தி இருந்தனர். அனைவரும் அவரிடம் ஆசி வாங்கிச் சென்றனர்
xxxx
வஜ்ஜிராமாய பெளத்த கோவில் Vajiraramaya Temple
1901ம் ஆண்டில் வஜ்ஜிராமாய மஹா தேரோ துவக்கிய இந்தக் கோவில் உலகம் முழுதுமுள்ள புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருவதால் மிகவும் பிரபலம் அடைந்தது’.
இலங்கைத் தீவிலுள்ள கோவில்கள் பற்றி அறிய உதவும் புஸ்தகங்கள்:
Hundred Hindu Temples of Sri Lanka Ancient Medieval Modern by
Sanmugam Arumugam 1981, Colombo
To be continued………………………..
Tags- part 2, இலங்கை, 108 கோவில்கள், பெளத்த விகாரங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
SNR Article Index : AUGUST 2023
AUGUST 2023
1-8-23 12352 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! – அத் 14 – ஹிட்லரும் ஜோதிடமும்! 2-8-23 12356 SNR Article Index : JULY 2023 3-8-23 12361 மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
4-8-23 12367 வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை (முதல் பகுதி)2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. 5-8-23 12372 வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை (இரண்டாம் பகுதி)
2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. 6-8-23 12377 ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7 7-8-23 12382 கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை – 1 மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 8-8-23 12386 கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை – 2 மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 9-8-23 12391 நாரத பக்தி சூத்ரம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 8 10-8-23 12395 சாணக்ய நீதி! சம்ஸ்கிருத செல்வம் 11-8-23 12400 இரண்டாம் உலகப் போர் – அத் 15 ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹீமர் 12-8-23 12404 இதிஹாஸப் பெண்மணிகள்! (முதல் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 13-8-23 12409 இதிஹாஸப் பெண்மணிகள்! (இரண்டாம் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 14-8-23 12415 இதிஹாஸப் பெண்மணிகள்! (மூன்றாம் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 15-8-23 12419 இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவர், இனிய கீதங்கள் புனைந்தவர் : திரு வெ.சந்தானம்! 16-8-23 12424 நீதி சதகம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 9 17-8-23 12430 கொடுக்கல் வாங்கல் செய்ய உகந்த தினங்கள்! 18-8-23 12435 சகுனியின் மகனைக் கொல்லாத அர்ஜுனனின் கருணை! 19-8-23 12440 கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது? ஜப்பானிய நாடோடிக் கதை தரும் காரணம்! – ஜப்பானிய நாடோடிக் கதை! 20-8-23 12445 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8
21-8-23 12448 புத்தக அறிமுகம்திருஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள்
எழுதியுள்ளஇராமாயணம்அயோத்தியா காண்டம் –கம்பர்
முதல் பாகம்22-8-23 12452 சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! (முதல் பகுதி) 15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 23-8-23 12457 சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! (இரண்டாம் பகுதி) 15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை24-8-23 12461 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 7 – ஐந்தாம் ஜார்ஜ் பாராட்டிய எழுத்தாளர்!25-8-23 12465 எல்லாம் அறிந்த சர்வக்ஞரை மடக்கிய சிறுவன் யார்?
26-8-23 12468 மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர் யார்? 27-8-23 12471 உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்! ஹெல்த்கேர் மாத இதழில் ஆகஸ்ட் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 28-8-23 12475 மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்! -கொங்குமண்டல சதகம் பாடல் 54 29-8-23 12479 மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி (முதல் பகுதி) – 16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 30-8-23 12483 மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி (இரண்டாம் பகுதி) – 16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 31-8-23 12486 இரண்டாம் உலகப் போர் அத் 16 ஹிட்லரின் மண்டை ஓடு!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும் , கர்நாடக மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும் இந்த பிளாக்கில் ஏற்கனவே வெளியாகின. அவை இரண்டும் புத்தகங்களாக வெளி வருகின்றன . அதே ஜோரில் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதுவதற்காக குறிப்புகளை எடுக்கும் தருணத்தில் செப்டம்பர் 2023-ல் இலங்கைத் தீவுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதலில் இலங்கைத் தீவில் உள்ள 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் பற்றி எழுதிவிட்டு , பின்னர் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன் .
இதோ முதல் கட்டுரை.
கர்நாடகம் பற்றி எழுதியபோது அங்குள்ள முக்கிய சமணர் கோவில்களையும் சேர்த்துக்கொண்டேன் . ஏனெனில் அவைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். அதே போல சமணர்களும் இந்துக் கோவில்களுக்கு வந்து பய பக்தியுடன் தரிசனம் செய்கின்றனர். அதே போல இலங்கையிலும் சிங்களர்கள், தமிழர்கள் என்ற வேறுபாடின்றி , இந்துக்கள், பெளத்தர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரும் கோவில்களுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். இதற்கு பெரிய உதாரணம் கதிர்காமம் முருகன் ஆலயம் . கொழும்பிலுள்ள பிரபல பெளத்த வழிபாட்டுத்த தலங்களிலும் கூடப் பிள்ளையாரையும் முருகனையும் தரிசித்தேன் . கதிர்காமத்தில் கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டு இடங்களும் அண்மைக்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. .
இனி வரும் நாட்களில்…………………….
கதிர்காம முருகன் கோவில்
தெய்வந்துறை கோவில்
முன்னேஸ்வரம் கோவில், சிலாவம்
சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-
அசோகவனம்
ராவணன் மனைவியின் ஊர் மாந்தை
திருக்கேதீஸ்வரம் கோவில்
இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்
மிஹிந்தலை
தம்புல்ல குகைக் கோயில்
சிகிரியா குகை ஓவியம்
பொலன்னருவ
கல்விகாரை
மின்னேரி
ஸ்ரீபாதமலை (சிவனொளி பாதம் )7353 அடி உயரம்-
எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.
இரத்தினபுரி
கண்டி திருவிழா
தாலத மாளிகை/ புத்தர் பல் கோவில்
அமிர்தகழி
கொக்கட்டுச்சோலை
திருக்கோயில்
கல் ஓயா- கல் முனை
கண்ணகி வழிபாடு
திருகோணமலை கோவில்
கன்னியாய் வெந்நீர் ஊற்று
சிங்கை நகர்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்
புத்தூர் கோவில்
வல்லிபுரம்
மாவிட்டபுரம்
வல்வெட்டித்துறை
நகுலேஸ்வரம்
கிழாலி
நயினா தீவு
கொழும்பு (தலைநகர்) கோவில்கள்
விபீஷணன் ஆலயம், களனி கங்கை– உள்பட நூற்றுக்கும் மேலான இந்துக் கோவில்களையும் புத்த விஹாரங்களையும் பற்றி எழுத ஆசை. முடிந்தவரை முயல்கிறேன்.
xxxxxx
பிள்ளையார் கோவில்கள்:
கொழும்பு நகர பிள்ளையார் கோவில்கள்
இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரில் ஆறு பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. நான் அவற்றில் மூன்று கோவில்களுக்குச் சென்று வந்தேன். பம்பலபிட்டிய பகுதியில் வஜ்ரா ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வந்து சென்றனர் . அந்த வளாகத்திற்குள் சாய் பாபா கோவிலும் உள்ளது . வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்த பாலை எல்லோருக்கும் பாலிதீன் பைகளில் நிரப்பி விநியோகித்தனர். அத்துடன் அவல்- வெல்லப் பிரசாதமும், பாயசமும் கிடைத்தது .
இதே வளாகத்தில் கோவிலின் பின்பகுதியில் உள்ள சந்நிதி, பழைய கதிரேசன் கோவில் எனப்படுகிறது. இந்தப் பிள்ளையார் கோவிலில் நல்ல சாந்நித்தியம் உள்ளது . பிரதான சந்நிதியில் பிள்ளையாரும் இடது, வலது புற சந்நிதிதிகளில் சிவன், அம்பாள், சுப்பிரமணியரும் இருக்கின்றனர் ..
இதற்கு சற்று தொலைவில் புதிய கதிரேசன் கோவிலும் , அருகிலேயே மாணிக்க விநாயகர் கோவிலும் இருக்கின்றன . இங்கு குறிப்பிட்ட மூன்று கோவில்களும் கோபுரங்களுடன் காட்சி தருகின்றன .
Xxx
ஆறு கோவில்களின் பெயர்கள்
1.Pillayar Kovil பிள்ளையார் கோவில் පිල්ලෙයාර් කෝවිල – Kotahena, Address: WVW4+QWC, Colombo 01300, Sri Lanka
2.Visakha Pillaiyar Kovil | விசாக பிள்ளையார் கோவில், Address: VV95+PG6, International Buddhist Centre Rd, Colombo, Sri Lanka
3.Kathiresan Pillayar kovil | கதிரேசன் பிள்ளையார் கோயில், Address: 333 Galle Rd, Colombo 00500, Sri Lanka
4.Sri Manika Vinayagar Kovil | ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், Address: Sri Manika Vinayagar Kovil, Lorenz Rd, Colombo 00500, Sri Lanka
5.பம்பலபிட்டிய பிள்ளையார் கோவில், வஜ்ரா ரோடு,Pillayar Kovil, Bambalapitiya, Address: 12 Vajira Rd, Colombo 00400, Sri Lanka
6.ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் Sri Sithi Vinayagar Temple Annamalai
xxx
தேர்த் திருவிழா
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கதிர்வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து திருவிழா காலத்தில் தேர் புறப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு கொழும்பு நகரின் முக்கிய வீதிகளினூடாக இழுத்துவரப்படுகின்றது. இது கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் தேரோட்ட விழா ஆகும்.
xxxx
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஒரு கூட்டத்தில் சொன்ன விஷயம் :–
“தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகன் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு. சமகாலத்தில் தம்புள்ளையிலும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விபரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள். இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம்”–. என்று ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பேசியுள்ளார் . இது கடந்த கால நிலையை விளக்குகிறது.
XXXX
7.ஸ்ரீ பொன்னம்பலம் வாணேசர் கோவில்
கொழும்பு நகர சிவன் கோவில்கள்
7.Sri Ponnamabalam Vanesar Kovil , Shiva temple in Colombo
கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள Sri Ponnamabalam Vanesar Kovil ஸ்ரீ பொன்னம்பலம் வாணேசர் கோவில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது இந்த சிவன் கோவில் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோவில் அமைப்பில், வாஸ்து சாஸ்திர, ஆகம விதிகளின்படி, கட்டப்பட்டது ; கோவிலில், வெள்ளிக்கிழமைகளில் பெரும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம். கருங்கற்களாலலான அழகிய சிற்பங்களைக் காணலாம் . இரண்டு நுழை வாயில்கள் அமைந்த இந்தக் கோவிலில் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
1912ம் ஆண்ட்டில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோவிலில் கர்ப்பகிரகத்தில் மஹாலிங்கமும், இன்னும் ஒரு கருவறையில் அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர் . ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி வெகு சிறப்பாக நடை பெறுகிறது
XXX
8., ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவில்/ தேவஸ்தானம்
Sri Kailasanathar Temple, Colombo
ஸ்ரீ கயிலை ஈஸ்வரன் கோவில்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஸ்ரீ கைலேஸ்வரம் கோயில், சிவன் மற்றும் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். இது கொழும்பில் உள்ள பழமையான இந்துக் கோவிலாகும். அங்கே மிகவும் பிரபலமான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. இந்தக் கோவிலில் சிவன் மற்றும் விநாயகர் சந்நிதிகள் உண்டு
கோவில் கோபுரத்தில் நல்ல சிலைகளைக் காணலாம்.சிவன் , அம்பாள் சந்நிதிகளோடு பரிவார தேவதைகளுக்கும் கருவறைகள் இருக்கின்றன ; பழ மையான இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தைப்பொங்கல் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சிவன் கோவில் வரலாறு
கேப்டன் கார்டன் கோவில்/ தீவுக்கோவில் The Captain’s Garden Kovil, is located on Kovil Street
கொழும்பு -10 விஜயவர்த்தன மாவத்தையில் கோவில் தெருவில் கேப்டன் கார்டன் கோவில்/ தீவுக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலும் அருகில் பிள்ளையார் கோவிலும் உள்ளன. இவைதான் கொழும்பு நகரின் மிகப்பழைய கோவில்கள்
அங்கே பால விநாயகர் கோவிலும் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலும் இருக்கின்றன.
முன் காலத்தில் இந்தக் கோவில் நிலம் பெய்ரா ஏரியால சூழப்பட்டிருந்தது . பக்தர்கள் படகில் வந்து சாமி கும்பிட்டனர். டச்சுக் காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வியாபாரம் செய்ய வந்த வணிகர்கள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். ஒரு டச்சுக்கார அதிகாரிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டு வணங்கினார். அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன், அவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை தானம் செய்யவே, செட்டியார்கள் அங்கே கோவிலை எழுப்பினார்கள் . செட்டியார்கள் அந்த இடத்தில் மிளகு , பட்டை சோம்பு லவங்கம் ஆகியவற்றை சேமித்துவைக்கும் கிடங்கை வைத்திருந்தனர் .
பால விநாயகர் சந்நிதியும் , கைலாச நாரதர் சந்நிதியும் ஒரு தாழ்வாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன . கோவில் கூரை, வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது விநாயக சதுர்த்தி பெரிய அளவில் கொண்டாட்டப்படுகிறது. அப்போது கோவிலுக்குள் தேர், வலம் வரும்.
டச்சு கேப்டன் நில தானத்தால் எழுந்த கோவில் ஆதலால் கேப் டன்ஸ் கார்டன் கோவில் என்றும் அக்காலத்தில் ,தீவின் நடுவில் இருந்ததால் தீவுக் கோவில் என்றும் அழைக்கப்பட்டது.
கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கும் ரதங்கள் இருக்கின்றன — விநாயகர், சுப்பிரமணியர், சிவன், அம்பாள், சண்டிகேஸ்வரர் ரதங்கள் .
சிவன், நடராஜர், அம்பாள் , கொடி மரம், நந்தி , மஹாவிஷ்ணு நவக்கிரகங்கள் , சண்டிகேஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி பிரம்மா, துர்கா, காளி அம்மன் மூர்த்திகள் இருப்பதால் மதுரை மீனாட்சி கோவில் போலவே காட்சி தரும்.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும் .
கோவிலுடன் இணைந்த மடம் , கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு தங்கும் வசதியை அளிக்கிறது. கோவில் நடத்தும் பாடசாலை, கல்வி வசதியைத் தருகிறது
Manikka Vinayakar Temple, Colombo
New Kathiresan Temple, Colombo Bambalapittiya Area
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
(பகுதி 2)
ச.நாகராஜன்
மகாத்மாவிற்கு ஆசி!
1921க்கு முன்னமேயே அவர் நாட்டுத் தலைவர்கள் பலரையும் நன்கு இனம் கண்டு வாழ்த்திப் போற்றினார்.
இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட மஹாத்மா காந்தி அடிகள் சென்னைக்கு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் வந்தார். அவரைச் சந்தித்த மஹாகவி அவரை அன்று மாலை நடக்கும் தனது கூட்டத்திற்கு தலைமை வகிக்க அழைத்தார். ஆனால் மஹாத்மா அன்று மாலை தனக்கு உள்ள வேறு நிகழ்ச்சியைக் கருதி, ‘நாளை உங்கள் கூட்டத்தை வைத்துக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.
தன்னால் கூட்டத்தை ஒத்திப் போட முடியாது என்று பதில் கூறிய மகாகவி அவரது தொண்டுக்குத் தனது ஆசியை நல்கினார்.
வாழ்க நீ எம்மான்! என்ற தனது பாடலில் “தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!” என்று பாடி மஹாத்மாவை உரிய படி முதலிலேயே இனம் கண்டு போற்றி விட்டார் அவர்!
அரவிந்தரின் நட்பு!
புதுவை வாழ்க்கை பகுதி பாரதியாரின் கவிதா சக்தி உச்ச நிலை அடைந்த காலம். 1908ஆம் ஆண்டு புதுவை வந்த பாரதியார் 1918 நவம்பர் 20ஆம் தேதி வரை வரை புதுவை வாசத்தை மேற்கொண்டார்.
அரவிந்த மகரிஷி 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி புதுவைக்கு வந்தார். அவரை வரவேற்றார் பாரதியார். அரவிந்தருடனான பாரதியாரின் நட்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அரவிந்தருக்கு தமிழைக் கற்றுத் தந்து திருக்குறளை (கடவுள் வாழ்த்து) மொழிபெயர்க்க வழி வகை செய்தார் அவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூழ்கி தமிழின் அருமையை அரவிந்தர் வெகுவாகப் போற்றினார்.
புதுவை வாசத்தில் வங்க மொழியைக் கற்றுக் கொண்டார் பாரதியார். வேத உபநிடத ஆராய்ச்சியில் ஈடுபட்டு அரவிந்தரிடமிருந்து அவர் கற்றதும் பெற்றதும் அதிகம்! கடைசியாக புதுவையிலிருந்து கிளம்பும் போது அரவிந்தரிடம் விடை பெற அவரது மாளிகைக்குச் சென்ற மகாகவி அவரைத் தனி அறையில் சந்தித்து விடை பெற்றார். பாரதியார் அங்கிருந்து கிளம்பும் போது எப்போதுமே உணர்ச்சி வசப்படாத மஹா யோகி அரவிந்தரின் கண்களில் நீர் அரும்பியது.
பாரதியாரின் பாடும் வல்லமை!
பாரதியார் பாடல்களை அவரே பாடக் கேட்டவர்கள் பிரமித்து பெரும் உந்து சக்தியைப் பெற்றுள்ளனர். அவரது புதுவை வாழ்க்கையில் அவரை நன்கு அறிந்த அமுதன் புதுவை வானொலி நிலையத்தின் வாயிலாக உரையாற்றும் போது, “பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம் தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பந்தமில்லையா?” என்று கூறுகிறார்.
பாரதியார் ஓர் இசை வல்லுநர். தனது பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
தெய்வீக சக்தி!
காளியின் அருள் பெற்ற வரகவியாகவே விளங்கினார் பாரதியார். அவருடைய வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் இதை விளக்கும் வகையில் அமைந்தன.
மனநிலை சரியில்லாத ஒரு இளைஞனைத் தன்னுடன் தன் வீட்டில் தங்க வைத்த கவிஞர் அவனுடன் பேசுவார்; அவனை அடிக்கடி தொடுவார். இதன் விளைவாக அவன் மனநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவனது தந்தையார் மனம் மிக மகிழ்ந்தார்.
பாரதியாரின் நண்பராகிய பொன்னு முருகேசம் பிள்ளை தன் மகன் திரும்பி வரும் கப்பல் உடைந்தது என்று செய்தி கேட்டவுடன் மனம் உடைந்தார். பாரதியார் அவரைத் தேற்றினார். மகன் வருவான் என்று கூறினார். அப்படியே நடந்தது. ராஜாபாதர் என்ற அந்த இளைஞர் உடைந்த கப்பலில் இருந்த ஒரு கட்டையைப் பிடித்தவாறே மிதந்து வந்து காப்பாற்றப்பட்டு உயிருடன் வந்தார்.
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் கவிஞர். 2023, ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் தென் துருவத்தில் நமது சந்த்ராயன் 3 விண்கலம் இறங்கி உலக சாதனை படைத்தது!
இப்படி விரிவாக பாரதியாரின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பாரதி நினைவு தினத்தில் கண்ணதாசனின் பொருத்தமான பாட்டு நினைவு கூரத்தக்கது.
சநாதனம் என்பதே இந்துமதம்; இந்து மதம் என்பதே சநாதனம் என்பது பாரதியாரின் முடிவான கருத்து. பாரதியார் பாடலைப் படிப்போர் இதை தெளிவாக உணரலாம்.; சனாதனம் பற்றி உளறும் , வசைபாடும் வாட்டிகன் பக்தர்களுக்கு VATICAN DEVOTEES பாரதியார் செமை அடி கொடுக்கிறார். நாத்திக வாதிகளை பேய்ப்பயல்கள் GHOSTS என்று வள்ளுவரும் மாணிக்க வாசகரும் திட்டுவதைப் போலவே பாரதியாரும் வசைபாடுகினார்.
சநாதனத்தை, இந்துமதத்தை எதிர்ப்போர் தமிழ் விரோதிகள் ; பாரதியாருக்கு எதிரானவர்கள் ; இதோ பாரதி பாட்டு :
பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,
நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
xxx
Sanātana (सनातन) is a Sanskrit word referring to eternal, having no beginning or end.
பாரதியார் பல மதங்களைக் குறிப்பிட்டபோதும் இந்துமதத்துக்கு மட்டும் சநாதனமாம் இந்துமதம் என்கிறார் .
சநாதனம் என்ற சொல்லுக்கு முடிவும் துவக்கமும் இல்லாத என்று பொருள். ஆதி அந்தம் இல்லாத என்று பொருள்; அதாவது இறைவன் எப்படியோ அப்படி. ஏனைய மதங்களுக்கு துவக்கமும் உண்டு; அழிவும் உண்டு என்பதால் பாரதியார் இந்து மதத்தை மட்டுமே இந்த அடை மொழியால் பாராட்டுகிறார்.
மேலும் சநாதன என்பதற்கு 19 பொருள்களை சம்ஸ்க்ருத நூல்கள் காட்டுகின்றன என்று விஸ்டம் லைப்ரரி வெப்சைட் WISDOM LIBRARY காட்டுகிறது .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கும் ஒரு முனிவருக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது ; மேலும் ‘என்றும் உளது ; அழிவே இல்லாதது ‘என்பதும் இதில் அடக்கம்
Xxxxx
Definition of Sanatan (from wisdom library website)
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
(-naḥ) 1. Vishnu. 2. Siva. 3. Brahma. 4. A guest of the Manes, or one who is to be fed whenever he chooses to attend the obsequial ceremonies or Shraddhas. f. (-nī) 1. The goddess Lakshmi. 2. A name of Durga. 3. Saraswati. E. sanā always, and dyu or dyut aff.; or sadā ṭhyul tuṭ ca ni0 dasya naḥ .
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary
Sanātana (सनातन).—[sanā + tana], I. adj., f. nī. 1. Perpetual, eternal, [Mānavadharmaśāstra] 1. 7; [Pañcatantra] ii. [distich] 112. 2. Firm, permanent. 3. Primeval, [Mānavadharmaśāstra] 1, 22 (ordained from the beginning); 3, 284. Ii. m. Viṣṇu, [Bhaṭṭikāvya, (ed. Calc.)] 1, 1; Śiva, Brahman. Iii. f. nī, Lakṣmī, Durgā, Sarasvatī.
— Cf. [Gothic.] sinteins, sinteino.
Xxxx
நாத்திகம் பேசுவோர் பேமானிப்பயல்கள் GHOSTS
பாரதி சுயசரிதை -யில் நாத்திகரின் இலக்கணத்தை வரையறுக்கிறார் :
விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாதகங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்
xxxxx
பேமானி = கேடு கெட்டவர்கள், நேர்மையற்றவர்கள், நாணயம் இல்லாதவர்கள் .
வள்ளுவரோ, நாத்திகவாதிகளை பேய்ப்பயல்கள் என்று திட்டுகிறார்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் (குறள் 850)
உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.
அலகை என்பது பேய். இதை அராபியரும் தோன்றி மறையும்algol என்ற நட்சத்திரத்துக்குப் பயன்படுத்துகின்றனர்
பேமானி என்பதன் சரியான பொருள் பேய்ப்பயல்கள் . அது உருது மொழிச் சொல் அல்ல.; அது நாத்திகரைக் (Ghost; Ghoul) குறிக்கும் சொல் .
அல்கால் = அலகை = ALGOL = a binary star in the constellation Perseus whose larger member orbits and eclipses the smaller, brighter star causing periodic variation in brightness.
Arabic got it from Tamil KOOLI
கூளி = Ghoul
கூளி(பெ). ஆண் பேய். அருத்தியிற் பிழைநினைத்த கூளியை யறுத்தவன் (கலிங்க.) கூட்டம் · குடும்பம் · உறவு · படைத்தலைவன் · சாத்தான் …
xxxxxxx
வள்ளலார் தாக்கு
அருட்பிரகாச வள்ளலார் நாத்திகர்களைப்ப போடா பிண்ணாக்கு என்று வசைபாடுகிறார்
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
நாத்திகம் பேசுவோரின் பேச்சு, முடை நாற்றம் வீசும் என்று தாக்குகிறார். அவர்கள் ருசிப்பது பிண்ணாக்கு என்றும் சாடுகிறார் இதற்கு நேர் மாறானது தெய்வீகப் பெரியோரின் திருவாக்கு என்றும் பாடுகிறார்.
நாத்திகம் பேசுவோர் நாக்கில் தழும்பு ஏற்படும்வரை அதை பேசிக்கொண்டே இருப்பர்; அதனால்தான் திருவாசகத்தில் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவர் என்று திட்டுகிறார் .
வள்ளுவரையும் வள்ளலாரையும் பாரதியாரையும் மாணிக்கவாசகரையும் நம்புவோர் சனாதன எதிரிகளை வேரறுக்க வேண்டும். அவர்களை அழி க்காவிடில் அவர்கள் இந்துக்களை அழித்துவிடுவார்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு தினம். இதையொட்டி மாலைமலர் நாளிதழ் 10-9-2023 அன்று வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை இது. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
பாரதியின் பன்முகத் திறன்!
(பகுதி 1)
ச.நாகராஜன்
உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன் புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
மகாகவி பாரதியார் (தோற்றம் டிசம்பர் 11, 1882 மறைவு செப்டம்பர் 11, 1921) பன்முகப் பரிமாணங்கள் கொண்ட உலக மகாகவி. காலம் செல்லச் செல்ல அவரது புகழ் மென்மேலும் ஓங்கி வளர்ந்து கொண்டே போகிறது. அவரது கவிதைத் திறனைக் கண்டு வியந்து கொண்டாடுவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
கவிதைத் திறம்
மகாகவி பாரதியாரின் கவிதைத் திறத்தைக் கண்டு நம் நாடு மட்டும் வியக்கவில்லை. அயல் நாட்டினரும் வியந்து போற்றினர்.
பிரம்மஞானசபை இயக்கத்தைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் பாரதியாரின் கவித்திறமையின் பால் அளவிலா ஈடுபாடு கொண்டார். அதை நேருக்கு நேர் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. ஆகவே சில கவிதைளை அயர்லாந்து கவிஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்ற கவிஞரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து படித்து மெச்சினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் கவிதைகள் பிரெஞ்சு மொழியிலும் ஆங்கில மொழியிலும், தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற் புதிது, சோதி மிக்க
நவ கவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை என்று நன்கு
பிரான்ஸென்னும் சிறந்த புகழ்நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவு புகழ் ஆங்கிலத்தில் கவியரசர்
தாமும் வியந்து கூறிப்
பராவி என்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்”
என்று அவர் தனது கவிதை உலகெங்கும் போற்றப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மரபு சார்ந்த அணிகளையும் உவமைகளையும் பயன்படுத்தியதோடு நாட்டு விடுதலை, பாரதத்தின் பெருமை, நல்லோர் பண்பு, பெண் விடுதலை, தமிழின் மாண்பு, இதிகாசப் பெருமை உள்ளிட்ட பல்வெறு பொருள்களில் புதிய உவமைகளையும் காலத்திற்கேற்றவாறு மாற்றி அவர் புதுமை புகுத்தியதையும் பார்த்தால் பெரும் வியப்பையும் பிரமிப்பையும் அடைகிறோம்.
சுமார் 850 உவமைகளை அவர் இப்படித் தன் கவிதைகளில் காட்டுகிறார். அணிகளில் சிறந்தது உவமை அணியே என்ற யாப்பிலக்கண நூலாரின் கருத்தை எடுத்துக் கொண்டால், பாரதியார் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் முதலிடத்தைப் பெறுவதை உறுதிப் படுத்தலாம்.
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வையம் முழுதும் இல்லை தோழி
ஆசை முகம் மறந்து போச்சே என்ற பாடலுக்கு ஈடு இணை இன்னொரு பாடல் உண்டா என்ன?
பொங்கி வரும் பெரு நிலவு, புன்னகையின் புது நிலவு, துங்கமணி மின் என்று இப்படி நூற்றுக்கணக்கான சுவை தரும் சொற்சேர்க்கைகளைத் தந்த புதுமைப் பாவலனாக அவர் மிளிர்கிறார்.
கற்பார்க்கு வாழ் நாள் முழுவதும் வேண்டிய சுவையைத் தரும் ‘கற்பகத் தரு கவிஞனாக’ அவரைக் காண முடிகிறது.
விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, பாரதி அறுபத்தாறு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்டவற்றைப் பாடி பிரபந்த வகைகளையும் காவியப் படைப்புகளையும் சற்று புதிய முறையில் காட்டி மகிழ்ந்தார்; தமிழரை மகிழ்வித்தார்!
தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று உரக்கக் கூவிய அவர் தமிழை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றார்.
ஆங்கிலத்தில் வல்லவர் அவர். ஆங்கிலம் மற்றும் வங்க மொழிக் கவிதைகள் ஒன்பதை அவர் மொழி பெயர்த்திருக்கிறார். காசியில் வடமொழியைப் பயின்று தேர்ந்தார். ஹிந்தியில் வல்லவர். புதுவையில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். பிரெஞ்சு தேசிய கீதத்தை அவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். தெலுங்கு அவருக்கு அத்துபடி. அரபி மொழியைக் கற்ற அவர் குர் ஆனை அப்படியே உரிய உச்சரிப்புடன் கூறுவதை புதுவை வாழ் இஸ்லாமியர் பாராட்டியதுண்டு.
நிவேதிதா தேவியின் ஆசி!
1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிராக வங்கம் பிரிக்கப்பட்டது. மக்கள் சீறி எழுந்தனர். சுதந்திர எழுச்சி நாடெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிறகு பாரதியார் கல்கத்தாவின் வட பகுதியில் இருந்த பாக்பஜாருக்குச் சென்று அங்கு போஸ்பரா தெருவில் வசித்து வந்த சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்தார். (தோற்றம் 28-10-1867 மறைவு 13-10-1911) அப்போது நிவேதிதா தேவிக்கு வயது 39. பாரதிக்கோ வயது 24 தான்.
பாரதிக்கு மணமாகி ஒரு பெண் குழந்தையும் இருப்பதை அறிந்த நிவேதிதா மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க பாரதியார், “பெண்களை வெளியில் அழைத்துச் செல்வது எங்கள் வழக்கம் இல்லை. காங்கிரஸ் பற்றி என் மனைவிக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட அவர் பாரதியாருக்கு பெண்மையைப் போற்ற வேண்டிய அவசியத்தை வெகுவாக எடுத்துரைத்தார். பாரதியார் அவரை குருவாக வரித்தார். பாரதியார் விடை பெறும் போது இமயமலைப் பயணத்தில் தனக்குக் கிடைத்த சருகு ஒன்றை நிவேதிதா பாரதியாருக்கு அளிக்க அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். நெடுங்காலம் அந்த சருகைப் போற்றிப் பாதுகாத்தார் அவர். தனது கவிதைப் படைப்பை நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்தார். ‘அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய்” என்று தொடங்கும் பாடலையும் பாடி ஞானகுருவிற்கு அர்ப்பணித்தார்.