கேளீக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும் கவிதை! (10,625)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,625

Date uploaded in London – –   4 FEBRUARY   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம்

கேளீக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும் கவிதை!

ச.நாகராஜன்

கேளீக்ருஹம், அது தான் அந்தரங்கமாக கணவனும் மனைவியும் விளையாடும் இடமான படுக்கை அறை, அது அருமையாக இருக்கிறது. 

அங்கே இளமை வாய்ந்த பேரழகி சற்று வளைந்து இருக்கிறாள். ஏன்? அவளது மார்பகங்களின் பாரம் அவளை அழுத்த அதனால் அவள் சற்றே ஒயிலாக வளைந்து இருக்கிறாள். 

அந்த அழகியின் ப்ராணேஸ்வரன் அதாவது அவளது உயிராக அமையும் அவள் கணவன் அவளோடு ஒன்றி விடுகிறான்.  அங்கே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தழுவி ஈருடல் என்பது போய் ஓருடலாக மாறி விட்ட காட்சி தோன்றுகிறது.  இப்படி அந்த ஆலிங்கனத்தில் ஒருவருக்குள் இன்னொருவர் மறைந்து விடும் அந்த வேளையில் யாரானாலும் அவர்களது தனி அடையாளத்தைக் காணவே முடியாது.

இருவர் ஒருவரான உன்னதமான காட்சி அது.

அதை புலவர் இப்படி வர்ணிக்கிறார்.

ஹரிகவியின் சுபாஷித ரத்னாவளியில் வரும் காட்சி இது. 

வஸந்த திலகா சந்தத்தில் அமைந்துள்ள கவிதை இது.

கேளீக்ருஹே வஸ்தனௌ ஷிஷுதா  நதாங்கி

      ப்ராணேஷ்வரஸ்தருணிமா ச பரஸ்பரேண |

ஆலிங்கச்ச காடமிதரேதரலோனதேஹௌ

     கஸ்யாபி நைகதரநிரஸ்யமாதகாதே ||

In the pleasure-house, there is the young girl with her frame slightly stooping (due to the weight of her bosom), and there is the lord of her life (husband) united with youth; these two mutually embracing warmly have entered into the body of each other and are thus concealed and to no one is their separate identity clearly discernible. (Translation by A.A.R)

இன்னொரு கவிதை.

இதுவும் கேளிக்ருஹக் காட்சி தான்!

காதலன் காதலி இருவரும் இணையும் படுக்கை அறைக் காட்சி. அவளது லீலா விளையாட்டில் அவளது வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி சண்டை இடுகின்றன. அவள் அணிந்துள்ள முத்து மாலை ஓசையை ஏற்படுத்துகிறது. அவள் அப்படியும் இப்படியும் அசைவதால் அவள் இடுப்பில் அணிந்துள்ள ஒட்டியாணமோ  கல கல என இனிய ஒலியை எழுப்புகிறது. அவள் கால்களில் அணிந்துள்ள கொலுசோ ஜல ஜல எனச் சத்தம் எழுப்புகிறது.

அழகிய நீண்ட கூந்தல் கலைந்து, கூந்தலானது அவள் உடலில் நிற்க அவள் உடல் வேர்த்து நீர் சொட்டுகிறது. அவளது அலங்காரத்தில் எஞ்சி நிற்பது அவள் திலகம் மட்டும் தான்! அது மட்டுமே நெற்றியில் இட்டது இட்டபடி அப்படியே இருக்கிறது.

கவிஞர் கடைசியில் அவள் பத்தினி என்பதை அவள் திலகம் அப்படியே இருக்கிறது என்பதன் மூலம் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்; அதே சமயம் அவள் கேளி கிருஹத்தில் என்னென்ன பாடு படுகிறாள் அல்லது படுத்துகிறாள் என்பதையும் அவள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் படும் பாடை வைத்துச் சொல்கிறார்.

இப்படி விவரிக்கும் போதே அங்கு நடக்கும் காட்சிகளை இதைக் கேட்பவர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறார்.

கவிதையைப் பாருங்கள் :

கேலௌபி: கலஹாயமானவலயம் சாராவஹாராவலி

   ப்ரேங்கஸ்சகலமேகலாகலகலம் ஷிஞ்ஞாநமஞ்சிரகம் |

வ்யாலோலாலகமவ்யலீகபுலகம் ஸ்வேதாம்பஸாம் ஜாலகைர்

  ஆமோலத்திலகம் கலேவரமலங்காராயதே கேவலம் ||

சார்தூல விக்ரிதா சந்தத்தில் அமைந்துள்ள கவிதை இது.

During her sports the bracelets are quarrelling with one another, the pearl- necklace is noisy, there is the confusing kala kala sound produced by the swinging girdle, the anklets jingle, the tresses are disheveled, and the hairs on the body stand on ends with drops of sweat; only the visible tilaka-mark on the fore-head adorns her body.  (Translation by A.A.R)

இப்படிப்பட்ட காதல் காட்சிகளைக் காட்டும் கவிதைகள் ஆயிரமாயிரம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்பதை சிருங்கார ரஸிக ப்ரியர்கள் அறிவார்களா?

***

tags-  அந்தரங்கக் காட்சி, கேளீக்ருஹம் , படுக்கை அறை

பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக : புலவன் வேண்டுகோள் (Post 10,624)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,624

Date uploaded in London – –    3 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 14

3000 ஆண்டுகளுக்கு முன்னர் வேத காலப் புலவன் ஒருவன் பூமியைக் குறித்து பாடிய அதர்வண  வேத ‘பூமி சூக்த’ துதியில் 43 பாடல்களைக் கண்டோம். 44 முதல் உள்ள பாடல்களில் காணும் சுவையான செய்திகள் இதோ:

பொருள் 44

எந்த பூமியானது பல ரஹசிய இடங்களில் செல்வத்தை மறைத்து வைத்திருக்கிறதோ அந்த பூமா தேவியானவள் தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் பிற செல்வங்களையும் எனக்கு அளிக்கட்டும். தயாள குணமுள்ள அவள் அன்புடனும் கருணையுடனும் எங்களுக்குச் செல்வத்தை அளிப்பாள் ஆகுக.-44

இந்தப் பாடல், பூமியின் சுரங்க வளத்தை ( Mineral wealth) வேத கால இந்துக்கள் நன்றாக அறிந்து இருந்ததைக் காட்டுகிறது. இதற்கு முந்தைய ரிக் வேத துதிகளிலேயே தங்க இரத்தின நகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். உலகில் பழங்கால நாகரீகங்களில் எகிப்திலும் இந்தியாவிலும் மட்டுமே நகைகளைக் (Jewellery)  காண முடிகிறது . அதிலும் குறிப்பாக உடல் முழுதும் ‘முடி முதல் அடி’ Head to foot Jewels வரையுள்ள நகைகளின் படங்களும் வருணனைகளும் நம்மிடம் மட்டுமே உள்ளன. துருக்கி முதலிய இடங்களில் நகைகளுடன் பெண்கள் இருந்தால், அவர்கள் இந்திய பெண்களாகவே உள்ளனர் . பூமாதேவி தங்கத்தையும் வைரத்தையும் வாரி வழங்குவதால் அவளை தயாள குணம் மிக்கவளே என்று புலவர் புகழ்கிறார்.

நிதிம் பிப்ரதீ பஹுதா குஹா வசும் மணிம் ஹிரண்யம் ப்ருதிவீ ததாது மே

வஸூனி நோ வஸுதா ராஸமாநா தேவி ததாது – 44

XXXX

பொருள் 45

பல்வேறு மொழிகளைப்  பேசும் மக்கள் வாழும் பூமி இது. பல்வேறு தர்மங்களைப் பின்பற்றுவோர் வாழும் இடம் இது . அவரவர் வசிக்குமிடங்களுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது . அப்படிப்பட்ட  சிறப்புடைய பூமா தேவியானவள் நல்ல பசு மாடு அளிக்கும் பால் போல ஆயிரம் தாரைகளாக — அருவிகளாக – எனக்கு செல்வத்தைப் பொழிவாள் ஆகுக

இந்தப் பாடல் நமக்கு பல விஷயங்களைத் தெரிவிக்கிறது .முதலில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இடம் இந்தப் பூமி. வேத கால மக்களுக்கு வேற்று மொழி பேசுவோர் பற்றியும் தெரிந்துள்ளது. சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒருவர் பாபிலோனியாவில் காணப்படுகிறார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இருக்கிறார். இதை பார்க்கையில் வேதகால இந்து ஒருவரே அங்கு சென்றதையும், அவர் சென்ற பாபிலோனியாவில் வேற்று மொழி பேசப்பட்டதையும் அறிகிறோம்.

பாணி என்று ரிக்வேதம் முதலிய வேதங்கள் குறிப்பிடும் மிலேச்சர்கள் Phoenecians = Panis பீனீஷியன்கள் ஆவர். அவர்களை பணத்தாசை கொண்ட (niggards)  பேய்கள் என்று வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

மேலும் பலவகை தர்மங்களைக் கடைப்பிடித்தவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. யாகம் செய்யாத ஒரு கும்பல் (Vratya, Dasyu) பற்றி வேதம் தொடர்ந்து குறிப்பிடுகிறது. இந்துக்களுக்குள்  இருந்த 90-க்கும் அதிகமான பிரிவுகள் ஆதிசங்கரர் காலம் வரை நீடித்தது. அவர்தான் பல விரும்பத் தகாத சடங்குகளை ஒழித்து இந்து மதத்தை ஆறு வகை வழிப்பாட்டுடையதாகச் செய்தார் .

மேலும் யார் யார் எப்படி எப்படி வணங்குகிறார்க்ளோ அவரவர்களுக்கு அப்படியே அருள் பாலிக்கிறேன் என்று கண்ணா பிரானே பகவத் கீதையிலும் நமக்கு உ று தி கூறுகிறார்.

இது பகவத் கீதையிலும் (4-11 மற்றும் 7-21)நம்மாழ்வார் பாசுரத்திலு ம் வருகிறது

அவரவர் தமதம தறிவறி வகை வகை

அவரவரிறையவ ரெனவடி யடைவர்கள் — நம்மாழ்வார்

முதல் திருவந்தாதியிலும் ஒரு பாசுரத்தில் இக்கருத்து வருகிறது ..

தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே

தமர் உகந்த தெப்பேர்  மற்றப் பேர் – தமர் உகந்தது

எவ்வண்ணம் சிந்தித் திமையாதிருப்பரேல்

அவ்வண்ணம் ஆழியானாம் –

திவ்யப் பிரபந்தம் , முதல்திருவந்தாதி 44

ராமகிருஷ்ண பரம ஹம்சரும் இதை ‘யதா மத் ததா பத்’ – என்பார். ‘மதி எப்படியோ அப்படியே பாதை/ வழி’ என்பது இதன் பொருள்.

பகவத் கீதையில் (7-21) கிருஷ்ணன் கூறுகிறார் – ‘யார் யார் எந்தெந்த கடவுள் உருவத்தை  சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ  அவரவர்க்கு அந்த அந்த நம்பிக்கையே அசையாத படி செய்கிறேன்’ என்கிறார்.

கீதையின் நாலாவது ( 4-11 ) அத்தியாயத்திலும் ‘எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை நான் அவ்வாறே அனுக்கிரஹிக்கிறேன்’ என்று உறுதி அளிக்கிறார் .

ஆக வேத காலத்திலேயே மனம் போனபடி வாழ்ந்த விராத்யர்கள் இருந்ததை ரிக் வேதம் மூலம் நாம் அறிகிறோம். இவர்கள் எல்லோரும் வாழும் பூமி என்று அதர்வண வேதப் புலவன் பாடுவது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது .

ஜனம் பிப்ரதீ  பஹுதா நிவாசராம் நாநாதர்மாணம் ப்ருதிவீ யதெள கசம்

சஹஸ்ரம் தாரா த்ரவிணஸ்ய மே துஹாம் த்ருவேவ தேனுரனபஸ்ப்ருவந்தீ -45

XXXX

46– ஆவது மந்திரத்தின் பொருள்

குளிர்காலத்தில் விஷக் கொடுக்குள்ள தேளும் விஷப் பாம்பும் குகை, பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்கின்றன.  மழை வந்தவுடன் கிருமிகளும் புழுக்களும் ஊர்ந்து வரத் தொடங்கும். அத்தகைய  விஷ ஜந்துக்கள் எங்கள் பாதையில் குறுக்கிடாவண்ணம் அருளுக தாயே.

இது இன்றும் கிராமப்புறங்களில், கானகங்களில் காணப்படும் உண்மை நிலை. மழைக்காலம் முதல் 4 மாதங்களுக்கு வணிகர்கள் வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதை சங்கத் தமிழ் அகத்திணைப் பாடல்கள் காட்டும். அதே போல சந்யாசிகள், 4 மாதங்களுக்கு ஒரே இடத்தில் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ அனுஷ்டிப்பர். நகர மக்களுக்கு இப்போது இது புரியாது; தெரியாது. ஒரு புறம் நன்மைகள் நிறைந்த பூமியில் இவையும் உள்ளன என்பதைப் புலவன் நினைவுபடுத்துகிறான்.

யஸ்தே ஸர்போ வ்ருஸ்சிகஸ்த்ருஷ்ட தம்ஸ்மா ஹேமந்த ஜப்தோ ப்ரு மலோ குஹா சயே

க்ரிமிர் ஜின்வத் ப்ருத்வி யத்யதேஜதி ப்ரா வ்ருஷி  தன்னஹ

ஸர்பன்மோப ஸ்ருபத் யச்சிவம் தேனை நோ ம்ருட -46 

Xxx

மந்திரத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் படிப்போருக்கு நிதி, மணி, தேவி, ஜனம், சஹஸ்ரம், நானாவித, தர்மம், தாரா , த்ரவிணம்/திரவியம் ,சர்ப்பம், விருச்சிகம், குகை, கிருமி, பிருதிவி  போன்றவை எளிதில் விளங்கும் .எளிய சொற்கள், பெரிய கருத்துக்கள்!!

தொடரும்

XXXX subham xxxx

tags- தங்கம் ,வைரம், தேளும் பாம்பும், அவரவர் தமதம ,தமர் உகந்த தெவ்வுருவம், பூமி சூக்த கட்டுரை 14, 

நான் யார்? ரமண மஹரிஷியின் நூல்! (Post No.10,623)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,623
Date uploaded in London – – 3 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் யார்? ரமண மஹரிஷியின் நூல்!
ச.நாகராஜன்

சிறிய புத்தகம்; ஆனால் பெரிய தத்துவம்; வாழ்க்கையின் பயனை எப்படிப் பெறுவது என்பதை விளக்கும் நூல்!
86 பக்கத்தில் ஒரு பெரும் மஹரிஷி தரும் அருளுரை – நான் யார் என்னும் பகவான் ரமண மஹரிஷியின் அரும் நூல்.
1901இல் ஒரு அறிஞர் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை திருவண்ணாமலையில் அரும் தவம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் கேட்டார்.
அந்த இளைஞனோ மௌன தவத்தை மேற்கொண்டிருந்தார் அப்போது.
ஆகவே அவர் கேள்விகளுக்கு மணலில் தன் பதிலை எழுதிக் காட்டினார்.
அந்த இளைஞர் தான் பகவான் ரமண மஹரிஷி.
அவரது அபூர்வ மணல் எழுத்துக்கள் பின்னால் புத்தகமாக வெளி வந்தது.
அந்த ஒரிஜினல் நூல் தான் இது. இந்த நூலின் சிறப்பே அவர் மணலில் எழுதியதை அப்படியே தருவது தான்!
பகவான் ரமண மஹரிஷியின் வரலாற்றுச் சுருக்கம், அவரது வாழ் நாள் சம்பவங்கள், நான் யார் என்ற 28 அத்தியாயங்கள் கொண்ட கேள்வி- பதில் நூல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த நூலை உடனடியாக ரமண அன்பர்களும் இதர ஆன்மீக கருத்துக்களில் நாட்டம் கொண்ட அன்பர்களும் வாங்கிப் படிக்கலாம்.
நான் யார் என்று ஆரம்பித்து முக்தி என்றால் என்ன என்பதில் முடிகிறது இந்த நூல்.
அறிவின் சொரூபமென்ன, சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும், மனதின் சொரூபமென்ன, மனம் எப்படி அடங்கும், விசாரணை எதுவரையில் வேண்டும் உள்ளிட்ட 28 கேள்விகளுக்குப் பதிலை பகவானின் கையெழுத்தால் எழுதிக் காண்பிக்கப்பட்ட விடைகளை உள்ளது உள்ளபடி காண்பதே ஒரு பெரும் பாக்கியமாகும்.
இதை வெளியிட்டிருப்பது ஓபன் ஸ்கை பிரஸ் (OPEN SKY PRESS) என்ற லண்டனை இயங்கு தளமாகக் கொண்ட பிரபலமான புத்தக வெளியீட்டு நிறுவனம்.


இதன் தலைமை ஸ்தானத்தில் இருப்பவர் ஜான் டேவிட் என்னும் ரமண பக்தர்.
ஓபன் ஸ்கை பிரஸ் பற்றி இணைய தளத்தில் சென்று பார்த்தால் பிரமிக்க வைக்கும் தகவல்களைப் பெறலாம்.
இந்தப் புத்தகத்தை உருவாக்கும் பணியில் அடியேனும் ஈடுபட்டது ஒரு அபூர்வமான சம்பவம் தான்.
தமிழ் எழுத்துக்கள் – கணினியில் உள்ள FONT எழுத்துரு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வந்த மெயிலில் ஆரம்பித்து புத்தகம் இறுதியாக வெளி வரும் வரை ராம சேதுவிற்கு அணில் ஆற்றிய எளிய பணி போல என்னாலும் சிறிது உதவ முடிந்தது.
இதில் டிஸைன் பகுதியை – வடிவமைப்பை – இன்றைய நவீன வடிவமைப்புக்கான மென்பொருளைக் கொண்டு உதவி செய்ய முடியுமா என்று சென்னையில் உள்ள நண்பரைக் கேட்ட போது உடனடியாக அவர் உதவி செய்தார்.
அவர் தான் K G சீனிவாசன். பாக்யா வார இதழில் பணி புரிந்த காலத்திலிருந்து சுமார் 18 ஆண்டுகளாக இவரை எனக்குத் தெரியும்.
இவரது உதவியும் இதில் உள்ளது.
புத்தகத்தின் அச்சுத்தரம் மேலான ஒன்று. ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்திற்கான பல விளக்கங்களை என்னிடம் கேட்டவர்
Ole Kristian Myren என்பவர். அடுத்து இந்தப் புத்தகத்தின் வெளியிடுவதை நேரில் மேற்பார்வை பார்க்க இந்தியாவிற்கு வந்தவர் ஓம்.
இவர்கள் காட்டிய அக்கறைக்குத் தகுந்தவாறு அபூர்வமான இந்த நூல் வெளி வந்திருக்கிறது.

பகவான் ரமணரின் அருள் லீலைகள் காலம் காலமாகத் தொடரும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல சான்று.
இந்த நூலைப் பற்றி அறிய ஆர்வமுள்ள அன்பர்கள் HYPERLINK “http://www.openskypress.com/”www.openskypress.com இணையதளத்திற்கு வருகை புரிந்து நூல் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ரமண மஹரிஷி அடிகள் போற்றி!


tags- நான் யார் ? ரமணர்

GIVE US GEMS AND GOLD HIDDEN IN SECRET PLACES – VEDIC POET (Post.10,622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,622

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let us analyse more verses in the Hymn to Earth (Bhumi Sukta) of Atharvana Veda (AV.12-1)

We have covered up to 43 stanzas or Mantras so far.

44th Mantra talks about the hidden treasures such as gold and gemstones. This shows the Vedic poets were aware of the mineral wealth under the earth. It is corroborated by innumerable references to gem (Mani)  studded golden jewelleries; it was a wealthy society and they dug out gold and gems from under the earth.

45th verse is more interesting; the poet talks about people speaking different languages and people worshipping various gods with different rites. This shows the Vedic society was in touch with the Egyptian and Babylonian religions. We have a supporting proof. We have a man from Harappa speaking a different language with an interpreter. Moreover the Panis i.e. the Phoenicians traders were also mentioned frequently in the Rig Veda, the oldest book in the world. The Indus Valley man might have spoken Sanskrit or a proto Sanskrit language.

Verse 46 mentioned the poisonous creatures such as snakes and scorpions, centipedes and millepedes and the poet seeks protection from such creatures.

Let us pause here for a while and ponder over the many things, subjects, topics the poet remembers in one hymn. He talks about the happiest scenes on earth such as dancers and musicians, wealthiest treasures such as gold and gems and at the same time he remembers the dangers on earth.

Here in verse or stanza 47, we come across beautiful roads on which fast moving chariots ‘fly’. But like we see bad people on earth today, Vedic society also had robbers. If you see the jails around the world today, we see millions of criminals inside the prisons; leave alone the criminals still outside attending the courts in handcuffs. And yet we think we are far advanced in civilization! The poet warns us about such elements.

Stanza 48 talks about the fools and idiots, the burden of earth, along with intellectuals. it gives us a practical picture of earth. We live in the same condition today. When we see million scientists, we also see billion idiots and criminals.

Now the poet moves to dark tropical rain forests where tigers and lions roam.  And also the uncivilised, uncultured cannibals- the demons known as Rakshasas.

Verse 50 mentioned ghosts or demons unknown to us today- Arayas, Kimidins. We know the Picasas and Rakshas from later literature. Strangely the poet mentioned the Gandharvas and Apsaras in the hated list. It may be due to that they distract one from good path. They were the heavenly singers and dancers. Ancient people believed that they take various forms , come to earth and fool people or trap people into bad habits.

Stanza 51 described the beautiful birds and the stormy monsoon days. Rig Veda also referred to Forest fires. Here we see the flames in the sky- thunder and lightning – and flames on the earth, -the forest fires.

Along with some scenes from the civilized cities the poet shows us the tropical rain forests. A true picture of earth!

We will look at the last 12 stanzas in the next article. There are 63 verses or stanzas in the Bhumi Sukta.

(Please see the attachments)

To be continued ………………….

 tags- gems, gold, forest animals, demons, Bhumi Suktam

Q & A ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது? (Post.10,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,621

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Question

V. C.

To:swami_48@yahoo.com

Mon, Jan 31 at 3:29 PM

அப்பர் தரும் …

அதிசயத் தகவல்

[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.  

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். 

அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?  

கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]  

?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்

சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.  

எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்  

அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்  

“ஆயிரம் மாமுக கங்கை”  

என்று பாடி உள்ளார் என்பதய்த்   

தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.  

நன்றி, வணக்கம்.  

G.V.  

Answer given by London Swaminathan

ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?

அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)

Behold  His grace for His loving servitors

Behold  the moon on His flawless hirsutorufous crest

Behold  His receiving of alms , so natural to Him

Behold  His neck dark with the oceanic venom

Behold  the flow of Ganga .. the river of a thousand fords

That falls from the heaven like a downpour

Into His widely spread matted hair

With all its abundant and  rolling  kayal fish

Such is He , the holy One of Poovanam girt with gardens  

xxxx

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

பாடல் 909

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே

English translation by  DR T N RAMACHANDRAN

Beholding  Her concordantly concorporate with Him

She burst amain to devastate ( the earth)  with a thousand

Currents He caused her to flow in His matted hair

Where the opulent One sports a hooded serpent and a moist crescent

There are servitors ( of deluding senses )who do not

Rectify their mental kinks; yet if you before your bodies wilt

And you go about with a stick to walk with, but chant;

Poonthuruththi O Poonthuruththi , you can forever do away

With your cruel fleshy embodiment working like a bellows -909,

–Sixth Tirumurai of Appar Tevaram

Xx xxxx

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

Xxxxx

கங்கை காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

–subham—

Tags- ஆயிரம் மாமுக, கங்கை, அப்பர், தேவாரம் கோதாவரி ,  காவிரி

Also read

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

7 Oct 2017 — கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் … -நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்.

கல்யாணத்தின் நாலாவது நாள் என்ன நடக்கும்? (Post No.10,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,620

Date uploaded in London – –    2 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

அந்தக் காலத்தில் பிராமணர் கல்யாணங்கள் 4 நாட்கள் நடக்கும் மற்ற உயர் ஜாதியினரும் இவ்வாறு 4 நாள் கல்யாணம் செய்தனர்.இப்போது 4 நாள் கல்யாணம் அரை நாள் முதல் ஒன்றரை நாளுக்குள் சுருங்கிவிட்டது.

100 ஆண்டுக்கு முந்தைய ஒரு நாவலில் படித்த இரண்டு விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் ஒரு ஆண் வெளிநாட்டுக்குப் போனால் அவனை ஜாதிப்பிரஷ்டம் செய்துவைப்பார்கள். யாரும் பெண்ணும் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் வெளிநாடு போவது மிக மிக அபூர்வம். இவை எல்லாம் 100 அல்லது 125 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகள்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பெண்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியர் ஒரு விதி/ சூத்திரம் எழுதியுள்ளார் . அதற்கு முன்னர் பிராமணர்கள் வெளி நாடு செல்லக்கூடாது என்று மநு , தனது மானவ தர்ம சாஸ்திர புஸ்தகத்திலெழுதிவைத்துள்ளார் . இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. வெளிநாடு போனால்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஆணும் பெண்ணும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இதோ இத்துடன் உள்ள இணைப்பைப் படித்து மகிழுங்கள் .

அது மட்டுமல்ல அந்தக் கல்யாணத்தில் வெங்காய சாம்பார் போட்டது சாஸ்திர விரோதம் என்று பிராமணர்கள் பேசிக்கொள்வதும் பல பக்கங்களை எடுத்துக் கொள்கிறது.

நாவலின் பெயர் – கோவிந்தன் அல்லது மாயாஜெயம்

எழுதியவர்- ஒரு சம்ஸ்க்ருத பட்டதாரி ;ஆண்டு 1913.

வெங்காய சாம்பார் , சேமியா பாயசம்

நாலாவது நாளன்று புஷ்பப் பல்லக்கில் ஊர்வலம்

Five day marriage | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › five-day-marriage7 Nov 2016 — Five Day Hindu Marriage– Part 1(Post No.3329). Compiled and Edited by London Swaminathan. Date: 7 November 2016.
five day wedding | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › five-day-wedding
2 Oct 2015 — Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!! Compiled by London swaminathan. Post No.2209. Date: 2nd October 2015.
FIVE DAY HINDU WEDDING- Part 3 (Post No.3338) – Tamil …https://tamilandvedas.com › 2016/11/09 › five-day-hin…
9 Nov 2016 — Second Day of the Five Day Wedding. On the morning of the second day the bride is duly decorated and loaded with jewels, partly marriage …You visited this page on 02/02/22.
five day wedding-4 | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › five-day-wedding-4
10 Nov 2016 — FIVE DAY HINDU MARRIAGE– PART 4 (Post no.3340). COMPILED BY by London Swaminathan. Date: 10 November 2016. Time uploaded in London: 19-06.
FIVE DAY HINDU MARRIAGE – PART 2 (Post No.3334)https://tamilandvedas.com › 2016/11/08 › five-day-hin…
8 Nov 2016 — Compiled by London Swaminathan Date: 8 November 2016 Time uploaded in London: 21-12 Post No.3334 Pictures are taken from various sources; …
Hindu wedding | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › hindu-wedding
Five Day Hindu Marriage– Part 1(Post No.3329). Compiled and Edited by London Swaminathan. Date: 7 November 2016. Time uploaded in London: 14-30.
Vivaha | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › vivaha
6 Nov 2016 — He has described the five day marriage in Brahmins’ houses 100 yeaars ago in detail. I will post it tomorrow).
Similarities between Sumerian and Hindu Marriages (Post No …https://tamilandvedas.com › similariti…
· Translate this page15 Mar 2017 — The actual wedding lasted between five to seven days. Hindu weddings were held over a fiveday period. And then for one year there will be …
Culture | Tamil and Vedas | Page 53https://tamilandvedas.com › page › https: › category
8 Nov 2016 — FIVE DAY HINDU MARRIAGE – PART 2 (Post No.3334). Compiled by London Swaminathan. Date: 8 November 2016. Time uploaded in London: 21-12.

FIVE DAY HINDU WEDDING- Part 3 (Post No.3338) – Tamil …

https://tamilandvedas.com › 2016/11/09 › five-day-hin…

9 Nov 2016 — Then seated in a marriage palanquin, and accompanied by dancing women and a band of music, she is taken in procession to the house where the …



Marriage Procession | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ma…

· 

24 Aug 2015 — On the day of the marriage, Nemi was taken in a big procession with music, elephants, camels and professional dancers. Nemi was travelling in a …

tags- கல்யாண ஊர்வலம், நாலாவது நாள், புஷ்பப் பல்லக்கு,

வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி! (10,619)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,619
Date uploaded in London – – 2 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!
நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி!
ச.நாகராஜன்

வள்ளுவரின் குறளை தினமும் ஓதி உணர்தல் வேண்டும். அப்போது
நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) என்பது என்ன என்று தெரியும்.
நல்ல செய்கை, தீய செய்கை பற்றிச் சொல்ல வருகிறார் வள்ளுவர்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை
(குறள் 469 – தெரிந்து செயல் வகை அதிகாரம்)
நன்று ஆற்றல் என்பது பொதுவாக எல்லோருக்கும் கொடுத்தலையும் எல்லோரிடமும் இன்சொல் பேசுவதையும் குறிக்கும்.
ஆனால் அதைக் கூடப் பார்த்துச் செய் என்கிறார் வள்ளுவர்.
ஒவ்வொருவருடைய பண்பு அறிந்து பின்னர் ‘நன்று ஆற்றலை’க் கடைப்பிடி என்கிறார் அவர்.
ஒருவர் பெறுவதற்கு உரியர் அல்லார் எனில் கொடுக்காதே; இன்சொல் பேசாதே என்பது அவரது அறிவுரை.
அப்படி நல்ல செய்கையிலும் கூட தவறு உண்டு – பார்த்துச் செய்யாவிட்டால்!
ஒவ்வொரு சிறு செய்கையிலும் கூட உன்னிப்பாக நமது கவனம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி!

ஆகவே இனிய உளவாக இன்னாத கூறல் (குறள் 100) கனி இருக்க காயை நுகர்வது போல என்று சொன்னாலும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும், எவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இரு என்கிறார் வள்ளுவர்.

இனி அடுத்து நல்ல செய்கையை விடுத்து கேட்டிற்கு வருவோம்.
இப்போது பார்க்க வேண்டிய குறள் 796. (நட்பு ஆராய்தல் அதிகாரம்)
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
கேடு என்பது அளக்கும் ஒரு கருவி என்கிறார் வள்ளுவர்.
கேட்டிலும் கூட பெறக் கூடிய ஒரு நல்லறிவு உண்டு.
நமது நண்பர்களை எப்போது அளப்பது? எப்படி அளப்பது?
கேடு வரும் காலை எவன் ஒருவன் நமக்கு உதவிக்கு வருகிறான் என்று பார்.
நல்ல காலத்தில் கூட இருப்பவர் ஆயிரம் பேர்.
ஆனால் கெட்ட காலத்தில் உடுக்கை இழந்தவன் கை போல எவன் வருகிறான் – அவனே நண்பன்!
ஆக கேடு கூட ஒருவகையில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு உதவி செய்யத் தான் செய்கிறது.

சரி, தவறு என்பதை எப்போதும் கவனிக்க வேண்டுமா?
இல்லை, ஐயா, கணவன் – மனைவி உறவு என்பது வேறு.
தலைவன் – தலைவி கூடும் போது உள்ள காதல் அகராதி வேறு.

வள்ளுவர் கூறுகிறார்:
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் குறள் 1286இல்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

கணவனைப் பார்க்கும் போது அவனிடம் ஒரு தவறு கூட இல்லை; தவறைப் பார்க்கவே முடியாது. அவனுடன் இன்பமாய் இருப்பது தவிர வேறொரு நினைப்பும் கிடையாது.
ஆனால் அவன் சற்று வேறிடம் சென்று விட்டால் அவனிடம் நினைப்பதற்கு ஒரு நல்லது கூட இல்லை. எல்லாம் தவறாய்த் தான் தெரிகிறது!
என்ன விசித்திரம்!!
தவறில் கூட அகராதியில் பொருள் வேறு படுகிறது.
உறவெல்லாம் கணவன்-மனைவி உறவு போல ஆகுமா?
இன்னும் 1154, 1321, 1325 ஆகிய குறள்களில் வரும் ‘தவறு’ குறள்களையும் ஒரு பார்வை பாருங்களேன்!

இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு (குறள் 1321 ஊடல் உவகை அதிகாரம்)
தோழி கேட்கிறாள் : ஏன் இப்படி உன்னவரை இப்படித் தவறாகச் சொல்கிறாய் என்று.
பதில் வருகிறது தலைவியிடமிருந்து : “அவரிடம் தவறு இல்லை. என்றாலும் கூட இப்படி தவறு என்று சொல்வதால் அவர் தரும் இன்பம் பேரின்பம் ஆக இருக்கிறதே” ஆகவே ஊடுதல் சரியே. அது பின்னால் கூடும் போது எல்லையற்ற இன்பத்தை அல்லவா அளிக்கிறது!” – இதுவே தலைவியின் பதில்!

தவறு இலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து
(குறள் 1325 ஊடல் உவகை அதிகாரம்)

தலைவி வேண்டுமென்றே தலைவனிடம் சிறிதோ பெரிதோ ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகிறாள்.
தலைவன், அங்கு பேசவா முடியும்!
ஊடலுக்கு ஒரு காரணம்.
பேசாமல் இருப்பது மென் தோள் வீழ்வாரது வழி.

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு
(குறள் 1154 – பிரிவு ஆற்றாமை அதிகாரம்)

உன்னைப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்று பார்த்த முதல் நாளே சொன்னவர் தாமே பிரிந்து சென்றால், அவருக்குத் தான் தவறே அன்றி அதை உண்மை என்று நம்பியவர்க்கு தவறு (குற்றம்) உண்டோ?
யாரிடம் இருக்கிறது தவறு?

ஆக இப்படி வள்ளுவரை ஊன்றி அவர் சொல்லும் சொற்களின் கூடவே சென்றால் நாம் பெறுவது பேரின்பம்.
பல அகராதிகளை நாம் அவரிடம் காண்கிறோம். அத்தனையும் உண்மையான அகராதிகளே!


tags– வள்ளுவர் , ஊடல்-கூடல்,  அகராதி

சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2 (Post No.10,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,618

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2

நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் .  அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.

இதோ மேலும் சில மரம் விஷயங்கள்

காளிதாசன் நூல்கள்

மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_

காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.

இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது 

இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)

xxx

ரகு வம்சம் 17-12  பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–

மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.

“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார்.  இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.

சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்

XXX

வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்

சங்க இலக்கிய நூல்கள்

புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்

புற நானூறு   199  – மகா பத்மன் – கடவுள் ஆலம்

“காமர் நெஞ்சம்  ஏமாந்து உவப்ப

ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்

வேல் கெழு குருசில் “

பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,

“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..

என்று பாடுகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்

Xxxx

குறுந்தொகை 87- கபிலர் பாடியது  — மரத்திலுள்ள கடவுள் கொடியோருக்கு துன்பம் கொடு ப்பார்.

கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடலில்

“மன்ற மரா அத்த பே எ முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூ உ மென்ப யாவதும்

கொடியரல்ல ரெங்குன்று கெழு  நாடர்” — பாடல் 87

என்பார்

பொருள்-

பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை  வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்

கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்

அக நானூறு 70-  கடுவன் மள்ளனார் பாடல் – ஆல  மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.

xxx

நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்

நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது

இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’   உள்ளது

சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..

இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது

–subham—

tags- சங்க இலக்கியத்தில், மர வழிபாடு,

பகவத்கீதை சொற்கள் INDEX-41; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-41(Post No.10,617)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,617

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-41; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-41

நஹ  1-32  இல்லை

நாகானாம் 10-29  பாம்புகளுள்

நானா பாவான் 18-21 வெவ்வேறான ஆன்மாக்களை

நானாவர்ணா க்ருதீனி 11-5 பல நிறங்களும் வடிவங்களும் உடைய

நானாவிதானி  11-5  v பல வகையான

நானாசஸ்த்ர ப்ரஹரணாஹா 1-9 பல  ஆயுதங்களை ஏந்தியவர்

நான்யகாமினா 8-8 வேறு ஒன்றை நாடாத

நாமயக்ஞைஹி 16-17 பேர் மட்டில்

நாயகாஹா 1-7 நாயகர்கள், தலைவர்கள்

நாரதஹ 10-13    நாரத மஹரிஷி   —10 words

நாரீணாம்  10-34 – பெண்களுள்

நாவம்-  2-67  படகு

நாசனம் 16-21   நாசம் விளைவிக்கும்

நாசயாமி 10-11  அழிக்கிறேன்

நாசாய 11-29  நாசம் அடைவதற்கு

நாசிதம் 5-16 அழிந்ததோ

நாஸ அப்யந்தர சாரினவ் 5-27

நாசிகாக்ரம் 6-13  மூக்கின் நுனியில்

நிகச்சதி 9-31 அடைகின்றான்

நிக்ருஹீதானி  2-68  அடக்கப்பட்டிருக்கின்றதோ – 20 words

நிக்ருஹணாமி 9-19  தடுக்கிறேன்

நிக்ரஹம் 6-34  அடக்குவது

நிக்ரஹக   3-33 தடையானது

நித்யஜாதம்  2-26 மீண்டும் பிறப்பதாகவும்

நித்ய திருப்தஹ  4-20 எப்போதும் திருப்தி உடையவன்

நித்ய யுக்தஸ்ய 8-14 ஒருநிலைப்பட்ட யோகிக்கு

நித்ய யுக்தஹ 7-17   என்றும் வழுவாத யோகம் பூண்டு

நித்ய வைரிணா 3-39 நித்திய சத்ருவினால்

நித்யசஹ  8-14 நெடிது

நித்ய சத்வஸ்தஹ —2-45  எப்போதும் சத்துவத்தில் இருப்பவன்—- 30

நித்ய சந்யாசீ  5-3 நித்திய சந்யாசீ

நித்யஸ்ய 2-18 நித்தியத்தி னுடைய

நித்யம் 2-21  நித்யமானதாகவும், மாறுதல் இல்லாதது

நித்யஹ 2-20 நித்தியமானது; இறவாதது

நித்யாபியுக்தானாம் 9-22 நிலைபெற்ற யுக்தர்களுடைய

நித்ரா ஆலஸ்ய பிரமாத உத்தம் 18-39   தூக்கம், சோம்பல், மதியீனம் ஆகியவற்றிலிருந்து தோன்றும்

நிதனம்   —  3-35   மரணம்

நிதானம் 9-18 களஞ்சியம் , பொக்கிஷம்

நிந்தன்தஹ 2-36 நிந்திப்பவர்களாய்

நிபத்தஹ  18-60 — கட்டுண்டவனாய் ———40

நிபத்னந்தி 4-41 கட்டுப்படுத்துதல்

நிபத்னாதி 14-7 கட்டுகிறது , பந்தத்தில் ஈடுபடுத்துகிறது

நிபந்தாய  16-5  பந்தத்திற்கும்

நிபந்த்யதே  4-22 கட்டுப்படுவது

நிபோத 1-7 கவனி

நிமித்தமாத்ரம் 11-33  ஒரு கருவியாக, ஒரு காரணமாக மட்டும்

நிமித்தானி 1-31 சகுனங்கள் , அறிகுறிகள்

நிமிஷன்  5-9  கண் மூடினாலும், இமைத்தாலும்

நியதாமானஸஹ  6-15  அடங்கிய மனமுடைய

நியதஸ்ய 18-7   நித்தியம், தினசரி  ……. 50 words

நியதம் 1-44   நிலையான

நியதாத்மபிஹி  8-2 தன்னடக்கம் பெற்றவரால்

நியதாஹாராஹா  4-30  அளவான உணவை உண்பவரா க

நியதாஹா 7-20   கட்டுண்டு, கட்டுப்பட்டு       –54 words

54 words are added in this part 41 of Gita Word Index in Tamil

Xxx subham xxx

Tags – Gita word index 41

14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில் (Post No.10,616)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,616
Date uploaded in London – – 1 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!
ச.நாகராஜன்

14 கேள்விகள்.
ஒரே ஒரு சொற்றொடரில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியுமா?
முடியும்.
சம்ஸ்கிருதம் என்னும் விந்தையால் மட்டுமே முடியும்!

ஒரே ஒரு கவிதையைப் பார்ப்போம்:

கிம் த்ருஷ்ணாகாரி கோத்க்ரயசரணமஹோ ரௌதி க: காந்திகாஞ்சி:
கோபஸ்மாரி புஜங்கே கிம் கலிஷமனம் த்வார்யசம்போதனம் கிம் |
கா சுந்தர்யாமபோந்து: கதமசலப்ருத: கா ச சம்புத்தரக்னேர்
பீஜ கிம் காவநீஜாரமணமதிஹரா ஹேம சாரங்க லீலா ||
இதில் 14 கேள்விகள் கேட்கப்பட்டு விடையாக கடைசியில் ‘ஹேம சாரங்க லீலா’ என்ற சொல் தொடர் வருகிறது.

கேள்வியையும் விடையையும் பார்ப்போம் :

பேராசை எதைப் பெற்றது? – ஹேம – தங்கத்தை
தேரின் சக்கரம் எப்படி இருக்கிறது? – சாரம் – சாரத்துடன் – சாரக் கம்பிகளுடன்
யார் அதிகமாகப் பேசுகிறார்? – கலி – தொண்டை கிழியப் பேசுபவர்
கடலைச் சுற்றி எது உள்ளது? – இலா – பூமி
வலிப்பு வந்தவனுக்கு என்ன வரும்? – லாலி – வாயிலிருந்து நுரை
பாம்பில் என்ன உள்ளது? – கரம் – விஷம்
சண்டையைத் தீர்ப்பது எது? -சமா – சமாதானம்
ஒரு பிரபு எப்படி அழைக்கப்படுகிறார் – ஹே – ஹே என்று
ஒரு அழகியிடம் என்ன இருக்கிறது? – லீலா- உல்லாச கேளிக்கைகள்
சந்திரன் எப்படி உள்ளது? – மாலி – கறுப்பு நிற களங்கத்துடன்
மலை எப்படி இருக்கிறது – சாக – மரங்களுடன்
அக்னி எப்படி அழைக்கப்படுகிறது – ராம்– தீ என்று
பீஜ மந்திரம் எது? – ராம
எது சீதையின் கணவனை ஈர்த்தது? – ஹேம- சாரங்க – லீலா – தங்க நிற மானின் விளையாட்டு
இதில் முக்கிய சொற்றொடர் ஹேம சாரங்க லீலா.
இது பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டு 14 கேள்விகளுக்கும் விடையை அளிக்கிறது.
என்ன ஒரு மொழி? எப்படிப்பட்ட விந்தை, ஜாலம்!

What has greed procured? – Hema – Gold
How is the wheel of the chariot? – Saram – With spokes
Who talks much – gali – full-throated one
What is the girdle of the sea? – ila – earth
What happens to one in epilepsy? – lali – froth in the mouth
What is in a snake? – garam – poison
What subdues quarrels? – sama – conciliatory conduct
How is a noble person addressed? – he, – oh
What is found in a charming woman? – hela – amorous sport
How is the moon? – mali – with black spot
How is a mountain? – Saga – with trees
How is fire addressed? – ram – fire
What is the Bijamantra – Rama
What captivated the mind of Sita’s husband? – hema – saranga – lila. -The sport of a golden deer
(ஆங்கில மொழியாக்கம் திரு A.A.R)

அருமையான இது போன்ற கவிதைகள் ஆயிரக்கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. படித்து ரசிப்போம்; சம்ஸ்கிருத விந்தையைப் போற்றுவோம்!


tags – 14 கேள்விகள், ஒரேபதில்,