மஹாகவி காளிதாஸ்! – 2 (Post No.10,397)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,397

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி காளிதாஸ்! – 2

போஜ மஹாராஜனுக்கு ஒரு ஆசை வந்தது. தான் இறந்து விட்டால் அதற்கு சரம கவியை எப்படி காளிதாஸன் பாடுவான் என்று அவனுக்குத் தோன்ற தனக்கு ஒரு சரம கவியைப் பாடுமாறு போஜன் காளிதாஸனை வேண்டினான். ‘ஐயோ, இப்படிக் கேட்கலாமா என்று கண்ணீர் சிந்திய காளிதாஸன் மன்னனை விட்டு உடனே அகன்றான். சில நாட்கள் கழித்து போஜனே மாறு வேடம் பூண்டு காளிதாஸன் சென்ற இடத்தைக் கண்டு பிடித்து அவனைச் சந்தித்தான். ‘எங்கிருந்து வருகிறீர்? என்று மாறுவேடம் பூண்ட மன்னனைப் பார்த்து சகஜமாக காளிதாஸன் கேட்கவே, உடனே போஜன் ‘தாரா நகரிலிருந்து வருகிறேன் என்றான். மன்னரின் நினைவாகவே இருந்த காளிதாஸன் ‘மன்னர் போஜன் சௌக்கியமா என்று ஆவலுடன் கேட்டான். “ஐயோ, அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா? மன்னர் போஜன் இறந்து விட்டார் என்று ஒரு பொய்யைச் சொன்னான் போஜன்.

இதனைக் கேட்ட காளிதாஸன் தாங்க முடியாத துக்கத்தால் ஆவென்று அலறினான். அவன் வாயிலிருந்து துக்கம் தாளாமல் சரம கவி ஒன்று வந்தது இப்படி:                                                                      

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி |                       

 பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே||                                        

अद्य धारा निराधारा निरालम्बा सरस्वती।
पंडिताः खंडिताः सर्वे भोजराजे दिवंगते।।                                                                                                           

 “தாரா நகரம் நிராதரவாய் ஆகி விட்டது! கலைத் தெய்வமான சரஸ்வதி ஆதரவற்றவளானாள். போஜராஜன் ஸ்வர்க்கம் அடைந்து விட்டான் என்பதால் எல்லா பண்டிதர்களும் துக்கத்தால் துடிக்கின்றனர்.”

காளிதாஸன் வாக்கு சரஸ்வதி வாக்கு என்பதால் இதை மகிழ்ச்சியுடன் கேட்ட போஜ  மன்னன் உடனே கீழே விழுந்து இறந்து போனான். அனைத்து மக்களும் அங்கு கூடி, நடந்ததை உணர்ந்து காளிதாஸனிடம் கூற உடனே தான் பாடிய கவிதையைச் சற்று மாற்றிப் பாடினான் காளிதாஸன் இப்படி:                                                                          

அத்ய தாரா சதாதார் சதாலம்பா சரஸ்வதி|                           

பண்டிதா: மண்டிதா: சர்வே போஜராஜ்யே புவம் கதே ||                                                                                                                                                                       

अद्य धारा सदाधारा सदालम्बा सरस्वती।
पंडिताः मंडिताः सर्वे भोजराजे भुवंगते।।                                              

தாரா நகரம் ஆதரவுள்ளதாக ஆகி விட்டது. சரஸ்வதி தேவி ஆதரவுள்ளவளாகி விட்டாள். பண்டிதர்கள் போஜராஜன் பூமிக்கு வந்து விட்டதால் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர். இப்படிப் பாடியவுடனே போஜராஜன் உயிர் பெற்று எழ அனைவரும் மகிழ்ந்தனர்.

போஜன் என்னவெல்லாம் மனதில் நினைத்தானோ அதையெல்லாம் கண்டு பிடித்துக் கவிதையாக்கும் வல்லமை காளிதாஸன் ஒருவனுக்கே உண்டு. இதற்கு ஏராளமான சம்பவங்கள் உரிய கவிதையுடன்.சொல்லப்படுகின்றன –  எடுத்துக் காட்டாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் காணலாம்.

ஒரு முறை போஜனுடைய நாட்டில் காட்டு மிருகங்கள் பயிர்களை அழிக்க, குடி மக்கள் மன்னனிடம் வந்து முறையிட்டனர். உடனே போஜன் காடு நோக்கிச் சென்று கொடிய மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். நெடுநேரம் ஆன பின்னர் தாகம் அவனை வருத்த அவன் ஒரு சோலைக்குச் சென்று நீர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றான். அப்போது குரங்கு ஒன்று நாவல் மரம் ஒன்றின் மீது ஏறி கொம்புகளை அசைத்து சேஷ்டை செய்தது.கிளைகள் ஆடவே, பழுத்திருந்த சில நாவல் பழங்கள் அங்கிருந்த தடாகத்திலே விழுந்தன. அதனால் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற சப்தம் எழுந்தது. இந்த விந்தையான ஒலிக்குறிப்பை மனதில் கொண்ட போஜன் மறு நாள் அரசவை கூடியதும் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற ஒரு பாதத்தைச் சொல்லி மீதி கவிதையை முடிக்குமாறு கவிஞர்களிடம் கூறினான். அனைத்துக் கவிஞர்களும் இதென்ன ‘குளுகுக் குளுக்கு என்று நகைத்தனர். காளிதாஸன் மட்டும் உடனே ஒரு ஸ்லோகத்தை இயற்றினான்:

“ஜம்பூ பலானி பத்க்வாநி பதம்தி விமலே ஜலே                                          

கபி கம்பித சாகாப்யோ குளுகுக் குளுகுக் குளு”

என்று சொல்லி நாவல் மரக் கிளையை குரங்கு அசைக்க கொம்பில் பழுத்திருந்த நாவல் பழங்கள் தடாகத்தில் விழுந்த போது எழுந்த சப்தம் குளுகுக் குளுகுக் குளு என்றான். போஜன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தான். அனைத்துக் கவிஞர்களும் மக்களும் காளிதாஸரின் கவிதா சாமர்த்தியத்தை முற்றிலுமாக உணர்ந்தனர்.

உலகினர் காளிதாஸருக்கு அளித்த மரியாதையைக் கண்டு தண்டி முதலான பெரும் கவிஞர்கள் பொறாமை கொண்டனர். ஒரு முறை யார் பெரிய கவிஞர் என்ற பெரும் போட்டி ஏற்பட்டது. முடிவு எட்டாத நிலையில் அனைவரும் சரஸ்வதி தேவியின் முன் கூடினர். சரஸ்வதி தேவியை நடுவராகக் கொண்டு விவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் முனைந்தனர். சரஸ்வதியை வணங்கி யார் பெரிய கவிஞர் என்று கேட்க அசரீரி ஒன்று எழுந்தது. ‘கவிர் தண்டி கவிர் தண்டி! “தண்டியே கவிஞன் தண்டியே கவிஞன் – இந்த முடிவைக் கேட்ட அனைவரும்  ஆஹா ஆஹா என்று கூவினர். தண்டிக்கோ மிகுந்த சந்தோஷம். காளிதாஸர் திகைத்தார். “அப்போது நான்? என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் சரஸ்வதியைப் பார்த்துக் கேட்க அசரீரி ஒலி மீண்டும் எழுந்தது. ‘அஹம் த்வமேவ, அஹம் த்வமேவ் நானே நீ நானே நீஎன்ற இந்த ஒலியைக் கேட்டதும் தண்டி உட்பட்டோர் காளிதாஸரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். அப்படி சரஸ்வதியின் அருள் கடாக்ஷம் பெற்ற சரஸ்வதி தேவியின் அவதாரம் அவர் என்பது இந்தச் சம்பவத்தால் நிரூபிக்கப்பட்டது.

மஹாகவி காளிதாஸனைப் புகழ்வோர் அனைவரும் ‘உபமா காளிதாஸஸ்ய என்று உவமைக்கு ஒரு கவி காளிதாஸன் என்று கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம். ரகுவம்சத்தில் சுயம்வரத்தில் இந்துமதி தன் மணாளனை வரிப்பதற்காக வரிசையாக நின்றிருந்த ராஜகுமாரர்கள் அருகிலே செல்லும் போது ‘அவள் ஒளிச்சுடர் போல சென்றாள் (சஞ்சாரிணி தீப ஷிகேன ராத்ரௌ 6 -67) என்கிறார்.

சுடர் அருகே வந்தவுடன் நம்பிக்கையுடன் பிரகாசமாகும் மன்னர்களின் முகம் அவள் நகர்ந்தவுடன் இருண்டதாம்! அற்புதமான இந்த உவமையைப் பல வித அர்த்தங்களுடன் கூறி உலகம் கொண்டாடுகிறத்!                            ரகுவம்சத்தின் ஆரம்ப ஸ்லோகமே உலகைக் கவரும் ஒரு ஸ்லோகமாகும்.

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்யதே|                      

 ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!

ஜகத்தைப் பரிபாலிக்கும் பார்வதியும் பரமேஸ்வரனும் ‘சொல்லும் பொருளும் போல’ என்று இங்கு காளிதாஸர் குறிப்பிடுகிறார். இதை பிற்காலக் கவிஞர்கள் ஏராளமானோர் அப்படியே எடுத்தாள்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாக அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் 28ஆம் பாடலில் ‘சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ என்று கூறுவதைச் சொல்லலாம்.

**

to be continued…………..

tags மஹாகவி, காளிதாஸ்! – 2

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம்-1 (10,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,396

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகத்தில் ஈசாப் (Aesop)என்னும் கிரேக்கநாட்டு அடிமை எகிப்தில் இருந்தபோது இந்துக்கள் சொன்ன கதைகளை பிராணிகள், பட்சிகள் பற்றிய சிறுவர் கதைப் புஸ்தகமாக (Animal Fables) வெளியிட்டதை நாம் அறிவோம். அதற்கு முன்னரே மஹாபாரதத்தில் புறாக்கள், ஒரு அகதிக்காக, தீயில் விழுந்து தியாகம் செய்த கதை மஹாபாரதத்தில் உள்ளது . தர்ம புத்திரன் செய்த யாகத்தில் பாதிப் பொன்னிறத் தோலுடைய கீரிப்பிள்ளை (Mongoose) வந்து எல்லோரையும் அசத்தியதையும் நாம் அறிவோம். இலங்காபுரி ‘கிரிமினல்’ ராவணனை ஒழிக்க ஒரு அணிலும் மண் போட்டு அணை கட்டியதை ஆழ்வார் பாடல் மூலம் நாம் அறிவோம்.  அந்த .ராமாயணத்தில் பல பறவைகள், கரடி, குரங்குகள் அணை கட்ட உதவியதையும் நாம் அறிவோம். சிபிச் சக்ரவர்த்தியின் புகழை உலகிற்கு நிலை நாட்ட இந்திரனும் அக்கினியும் கழுகு , புறா வடிவில் வந்த கதையை நாம் சங்க இலக்கிய புறநானுற்றிலும், பிற்கால சிலப்பதிகாரத்திலும் பயிலுகிறோம். மனு நீதிச் சோழனிடம் நீதி கேட்ட பசுவின் கதையையும் அறிவோம். ஊருக்கு ஊர் யானையும் பசுவும் பாம்புகளும் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருப்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது.

பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மகரிஷி பறவை, பாம்பு முதல் பரத்தை ( Prostitute)  வரையுள்ள ஒவ்வொருவரிடமும் தான் கற்ற பாடத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன . நான் இதுவரை சொன்ன எல்லா விஷயங்களும் இந்த ‘பிளாக்’கிலேயே பத்து ஆண்டுகளாக வந்துள்ளன. இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று காண்போம்.

முதலில் இதில் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்கள் பட்டியலைப் பாருங்கள்; பின்னர் இதை ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் கொடுத்து ஒவ்வொரு விஷயம் பற்றியும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுக  என்று சொல்லுங்கள். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பதிவு செய்துகொண்ட ஒரு இளைஞனிடம் ஒரு ஆராய்சசிப் புஸ்தகம் எழுதுக என்று சொல்லி 22 பேரிடம் கொடுங்கள். ஆனால் எல்லாம் இந்துமதம் சம்பந்தப்பட்ட சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து மட்டுமே, வேத இதிஹாச புராணங்களில் இருந்து மட்டுமே கதைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . அதிசயப்படும் அளவுக்கு விஷயங்களைப் படிப்பீர்கள் .

பட்டியல்  இதோ:

சிங்கம் , புலி, பாம்பு, நெருப்பு,

பிராமணன், சூரியன், யானை, சிறுத்தை ,

தங்கம், தண்ணீர், பசு, ஆண்மகன்,

ரதத்தின் அச்சு, எருது, வாயு ,மழை

வருணன்  , அரச குமாரன், முரசு ,அம்பு,

குதிரை, மன்னன் சூளுரை 

இதில் சிலர் ரதம், அச்சு ஆகியவற்றை தனித்தனியேயும் பிரிப்பர். ஆயினும் 20க்கு மேலான விஷயங்களை சொல்லி அந்த பலம் அல்லது குணம், அல்லது புகழ் எனக்கு வரவேண்டும் என்று ஒரு ரிஷி பாடுகிறார்.

இதோ துதியும் அதிலுள்ள 4 மந்திரங்களும்

XXX

அதர்வண வேதம் ஆறாவது காண்டம்  துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு -பலம்

1.சிங்கம், புலி ,நெருப்பு, பாம்பு, பிராமணன், சூரியனில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

2.யானை, சிறுத்தை, பொன், புனல், பசு ,புருஷர்களில், எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

3.இரதம் , அச்சு, எருதின் பலம், வாயு, மழை  வருணனது  உக்கிரத்தில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

4.இராஜன்யன் துந்துபி சரம் அஸ்வ பலம் புருஷ கர்ஜனையில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

கருத்து- பலம், சக்தி ஆகியவற்றைப் பெற;

சுபகை யான தேவி – அதீதி

Xxx

எனது கருத்துக்கள்

முதலில் நாலு மந்திரங்களிலும் ‘பல்லவி’ (refrain) இருப்பதைக் காணுங்கள். ஆகையால் இது எல்லோரும் கூடி, கோஷ்டியாக (chorus)  பாடிய பாடல் என்று தெரிகிறது. அதாவது எழுத்து வடிவில் இலக்கியங்கள் வருவதற்கு முன்னர் இருந்த வாய் மொழி (oral literature)  இலக்கியம். அதர்வண வேதத்தை ‘தள்ளிப்போன, கோணல் பார்வை, காமாலைக் கண் உடைய’ வெள்ளைக்காரர்களும் கூட கி,மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளர். நாமோ கி.மு 3150ல் வியாசர் பிரித்த நாலு வேதத்தில் ஒன்று என்று நம்புகிறோம். எப்படியாகிலும் இப்படி 22 பொருட்கள் மூலம் பாடம் கற்பிப்பது உலகில், மனித வரலாற்றில் இதுவே முதல் தடவை .

இன்றும் கூட பஜனைப் பாடல்களிலும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிழும் ‘பல்லவி’ வருவதை பார்க்கிறோம்; வெள்ளைக்ககாரர்களுக்கு நோட்டு புஸ்தகம் இல்லாமல் பாட முடியாது. நம்மவரோ குரு -சிஷ்ய பாவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே மனப்பாடமாக மேடையில் பாடுவதை இன்றும் காணலாம். அதாவது இது வாய் மொழி  இலக்கியம்

மேலும் சாதாரணமாக “எனக்கு  பலத்தைக் கொடு , புகழைக் கொடு , சக்தியைக் கொடு” என்று கேட்கும் பாடல்களும் வேதத்தில் நிறையவே உள்ளன. இந்தப் புலவர் மட்டும் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, தங்கம் தண்ணீர், குதிரை பசு தேர் என்றெல்லாம் பாடுகிறார் !!

மிக முக்கியமான விஷயம் வெள்ளைக்காரர்கள் (male chauvinists) ஆண் ஆதிக்க வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய மதங்களில் பெண்களுக்கு இடமே இல்லை. ஆனால் நாமோ பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்த தாயைத்தான் முதலில் வணங்குவோம். எல்லா கடவுளையும் பெ  றெடுத்த அதிதி தேவியை வணங்கும் பாடல் இது. உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதம் முழுதும் ‘கடவுளரின் தாய்’ என்று அதிதி பாடப்படுகிறாள் .

இன்னும் ஒரு விந்தை, பழங்கால எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய மதங்களில் இருந்த அன்னைத் தெய்வங்களை இப்பொழுது மியூசியங்களில் மட்டுமே காணலாம். ஆனால் ‘அதிதி’ பெயரை எங்கள் லண்டனில் உள்ள பெண்களிடமும் காணலாம். அதாவது இந்து மதம் பெண்களை வணங்கும்  மதம்; வாழும் மதம்!. அதிதியை மியூசியத்துக்கு அனுப்பாத மதம்!

இப்பொழுது ‘சப்ஜெக்’டுக்கு வருகிறேன் ; ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு சில எடுத்துக் காட்டுகளைத் தொட்டுக் காட்டுவேன் வள்ளுவர் காப்பி அடித்த தேர் ‘அச்சு’ உவமையும் பின்னே வருகிறது !

xxxx

சிங்கம் Lion

1.சிங்கம் – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – என்பது ஸம்ஸ்க்ருதப் பழமொழி. ‘மிருகங்களின் இந்திரன் (ராஜா) நீயேதான்’ என்பது இதன் பொருள். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு. சிம்மாசனம்= அரியணை என்பது நமது சொற்றொடர் . கேஸ் +அரி கேசரி= ‘மயிர் மிருகம்’ என்பதை ரோமானியர் சீசர் என்று பயன்படுத்தினர் (கே =சே சர் ). நான் ரோம் நகரிலுள்ள வத்திக்கான் மியூசியத்தில் கல்லாலான மிகப்பெரிய சிம்மாசனத்தைக் கண்டேன். ‘அரிமா நோக்கு’ என்பதும் ஸம்ஸ்க்ருதப் பழ மொழி . அப்படித் திரும்பி ஒரு கம்பீரமான LOOK ‘லுக்’ விடுமாம் !அது போல எனக்கு பலம் தா என்று புலவர் வேண்டுகிறார்.

xxx

புலி Tiger

புலியைப் பற்றி இந்துக்கள் பாடியது போல வேறு எவரும் பாடவில்லை . வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் “புலி போன்ற வீரம் உடைய சின்னப் பையா! ராமா! எழுந்திருடா! என்று விசுவாமித்திரர் பாடுகிறார்- உத்திஷ்ட ! ‘நர’ ‘சார்தூல’ = ஆண்களில் புலி போன்றவனே! எழுந்திரடா மகனே! என்பது பொருள். புறநானூற்றிலும் புலி , வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே சாப்பிடும் என்று புலவர்கள் பாடுகின்றனர் ( இது உண்மையா என்று இயற்கை சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்துவருகிறேன் ); புலியின் வீரத்தை உணர்ந்த இந்துக்கள் குழந்தைகளுக்கு ‘புலிப்பல் தாலி’ அணிவித்தனர். கடவுளருக்கு புலியை வாகனமாகக் கொடுத்தனர் . சிந்து வெளி முத்திரைகளில் புலி தேவதை டான்ஸ் (dancing tigress in Indus valley Seals )ஆடுவதையும் பார்க்கிறோம்.

xxx

பாம்பு Snake

பாம்பு பற்றி பத்து புஸ்தகம் எழுதும் அளவுக்கு இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையில் கூட பாம்பினை நல்ல உதாரணத்துக்குப் பயன்படுத்துவார். காளீயன் போல ஒரு பாம்பு அட்டஹாசம் செய்துவந்தது  . ஒரு முனிவர் அதை ‘அடங்கி ந’ட என்று அதட்டினார். அதுவும் அப்படியே வாழ்ந்தது. அடுத்த முறை அதே முனிவர் அந்தப் பாம்பினைக் கண்டபோது அது குற்றுயிரும் கொலையுசிருமாக கிடந்தது. ஏ பாம்பே ! என்ன ஆயிற்று  உனக்கு? என்று வினவினார் முனிவர். “அட போங்க முனிவரே; எல்லாம் உம்மால் வந்ததுதான் ; நீங்கதான் ‘அ டங்கி இரு’ என்று சொன்னீங்க; இந்தப் பாவிப்பயங்க போற வரும்போதெல்லாம் என் மீது கற்களை வீசி அடிக்கிறாங்க”.

முனிவர் சொன்னார்- நான் உன்னை கடிக்காமல் அடங்கி இரு என்றுதான் சொன்னேன். உனது குணமான சீற்றத்தைக் காட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதது உன் தவறு என்றார் முனிவர். ஆக பாம்பு போல எதிரிகளைப் பயமுறுத்தும் குணத்தை எனக்குத் தா என்கிறார் இந்த மந்திரத்தில் . அதுமட்டுமல்ல ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. ‘நல்லார் அவையில் புகுந்த பாம்பினைக் கூட நல்லோர் கொல்ல மாட்டார்கள்’ என்ற சங்க இலக்கியப்  பாடல் , ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலுள்ள ‘பாம்பு ராணி’ பற்றி எல்லாம் இந்த பிளாக்கில் ஏராளமான கட்டுரைகள் உள ; படித்து  மகிழ்க

To be continued…..

Tags-  அதர்வண வேதம்,         பிராணிகள், கற்பிக்கும் பாடம், 

LONDON CALLING ‘GNANAMAYAM’ BROADCASTS ON 28th , 29th NOVEMBER 2021 (Post.10,395)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,395

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

28-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

xxx

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  MRS RANJANI DASARATHI, CHENNAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   KANJANUR TEMPLE 10 MTS

KANTHAR ANUBHUTHI– by MRS JAYANTHI SUNDAR’S GROUP  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

SONGS.

Talk by London swaminathan : SOMA BANAMUM SURA BANAMUM in Tamil – 10 mts

XXXX

APPR. 60 MINUTES

Xxxx

29 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  MRS RANJANI DASARATHI

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON POET KALIDAS

Talk by  DR CHITRA,BENGALURU

இலக்கியங்களில் தமிழனின் அறிவியல் திறன்

SONG BY Miss Keerthana (Pachai Mayil Vahanane)

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR. 50 MINUTES

— SUBHAM —-

 tags- broadcasts 28,29 nov.21

மஹாகவி காளிதாஸ்! – 1 (Post No.10,394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,394

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 29-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

மஹாகவி காளிதாஸ்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

மஹாகவி காளிதாஸ் என்றவுடனேயே இந்தியர்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். அப்படிப்பட்ட மாமேதை. உலகப் பெரும் கவி அவர். அவர் பிறப்பு பற்றிய பல்வேறு மாறுபட்ட வரலாறுகள் உள்ளன. அவருடைய தந்தையாரின் பெயர் சதாசிவம் என்றும் உஜ்ஜயினி நகருக்கு அருகில், சரஸ்வதி நதிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில்  பிராமண குலத்தில் அவர் பிறந்தார் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. இளம் வயதிலேயே அவரது பெற்றோர் இறக்க, அவரை ஒரு மாட்டிடையன் வளர்த்து வரலானான். காளிதாஸன் ஒன்றுமே அறியாத முழு மூடனாக  வளர்ந்து வந்தார். அந்தக் காலத்தில் காசி நகரை பீம சுல்கா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வசந்தி என்ற அற்புத அழகுடைய புத்திசாலியான பெண் ஒருத்தி இருந்தாள். சிலர் அவள் பெயரை பிரியகுண மஞ்சரி என்றும் கூறுவர்.

 அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் “எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளை சைகை மூலம் கேட்க நினைத்து ஒரு விரலைக் காட்டினாள். ஒன்றும் புரியாத காளிதாஸன் இரண்டு விரல்களைக் காட்டினான். ‘பிரபஞ்சத்திற்கு, ஒரு காரணம் தானே’ என்று ராஜ குமாரி கேட்க உடனே அரசவை பண்டிதர்கள் காளிதாஸன் இரண்டு விரல்களைக் காண்பித்தது பிரபஞ்சத்திற்கு இரு வித காரணங்கள் உண்டு என்று அற்புதமான வியாக்யானம் தந்தனர். இது இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. ராஜகுமாரி சக்தி ஒன்றே என்பதைக் குறிக்க ஒரு விரலைக் காட்ட காளிதாஸன் இரு விரலைக் காட்ட அதற்கு சக்தியானவள் சிவமாகவும் சக்தியாகவும் இரு விதமாக இருப்பதாக பண்டிதர்கள் வியாக்யானம் கூறினர். பின்னர் ராஜகுமாரி தனது உள்ளங்கையை விரல்கள் நீட்டி இருக்கும் படி காடட காளிதாஸன் அவளைக் குத்துவது போல முஷ்டியைக் காட்டினான். இதற்கு பண்டிதர்கள் பூதங்கள் ஐந்து என்பதைச் சுட்டிக் காட்டியதாக ராஜகுமாரி கூறியதற்கு ‘ஆமாம் அந்த ஐந்து பூதங்களே உடலை உருவாக்குகின்றன என்று தன் முஷ்டியைக் காண்பித்தான்’ என்று கூறி வியாக்யானம் செய்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணம் செய்து கொண்டாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது! தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. காளிதாஸனிடம் அவள் காசி நகரில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று வணங்குமாறு கூறினாள்.  மனம் நொந்த  காளிதாஸன் காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸர் கவி மழை பொழிய ஆரம்பித்தார். அது பாரதமெங்கும் பொழிந்து உலகெங்கும் விரிந்தது.

இந்தச் சம்பவத்தையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன.  காளி தேவி அனுக்ரஹத்தைப் பெற்ற காளிதாஸன் மீண்டும் ராஜகுமாரியைச் சந்திக்க, அவள், ‘அஸ்தி கஸ்சித் வாக் என்று கேட்டாள். அதாவது “இப்போது நீங்கள் வாக்வன்மையில் நிபுணரா என்று கேட்டாள். அவளை காளிதாஸன் வணங்கினான். ஆகவே, தான் தாரம் என்ற நிலையிலிருந்து தாயாக உயர்ந்துவிட்டதாக ராஜகுமாரி கூறி அவனை அனுப்பினாள். ராஜகுமாரி சொன்ன மூன்று வார்த்தைகளை முதலாகக் கொண்டு மூன்று காவியங்களைக் காளிதாஸன் அற்புதமாக இயற்றினான். அஸ்தி என்ற வார்த்தையைக் கொண்டு ‘அஸ்தி உத்தரஸ்யாம் திஷிஎன குமார சம்பவத்தையும் ‘கஸ்சித் என்ற வார்த்தையைக் கொண்டு ‘கஸ்சித் காந்தா என்று மேக தூதத்தையும் ‘வாக் என்ற வார்த்தையைக் கொண்டு ‘வாகர்த்தாவிவ என்று ரகு வம்சத்தையும் தொடங்கினான்.                                    இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸர் மனம்  நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழமழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.

காளிதாஸனின் காலத்தைப் பற்றி ஏராளமான விவாதங்களை சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பண்டிதர்களும் இன்றளவும் நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று பலரும் சொல்ல சிலர் கிறிஸ்துவுக்கு முன்பே அவரது காலம் என்கின்றனர். அத்துடன் காளிதாஸன் என்ற பெயரில் மூன்று கவிகள் இருப்பதையும் பலர் உறுதிப்படுத்துகின்றனர். காளிதாஸன் விக்ரமாதித்தன் சபையில் ஆஸ்தான கவியாக இருந்ததைப் பல நூல்கள் கூறுகின்றன.

தனது நகரத்திலிருந்து யாத்திரையாகச் சென்ற காளிதாஸன் தாரா நகரத்தை அடைந்தான். தாரா நகரத்தை அப்போது ஆண்டு வந்த போஜ மஹாராஜனுக்கும் காளிதாஸனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உருவானது; அது ஆத்மார்த்தமானது.      

ச்சதஸ் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வப்னோவாபி வா |                  மா பூன்மத: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே ||                      

 “ஓ! கவிஞரே! இருக்கும் போதும் நடக்கும் போதும் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் என்னுடைய மனம் உம்மை விட்டு அகலுவதே இல்லை என்று இப்படி போஜன் காளிதாஸரை நினைத்து உருகி ‘எப்போதும் உம்முடைய நினைவாகவே நான் இருக்கிறேன் என்கிறான்!

**

tags– மஹாகவி ,காளிதாஸ்,

Amazing Animal Lesson in Atharvana Veda (Post No.10,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,393

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In one hymn of the Atharvana Veda one seer/rishi is giving an amazing lesson about Nature, particularly animals.

I have already written about Wordsworth and Dattareya in Bhagavatha Purana using Nature to teach us different things. But thousands of years before the Bhagavatha Purana, and epics , Atharvana Veda use animals in a hymn to teach us certain virtues. Probably that is the first verse in human history using animals and their qualities to teach human beings.

We have already seen the pigeons sacrificing their lives to save a refugee (Mahabharata), eagle and dove showing the great qualities of Sibi Chakravarti (Sangam Tamil literature Purananuu and later epic Silappadikaram), squirrel helping Rama in building a bridge to Sri Lanka (Alvar Hymns) and monkeys, bears and eagle helping Rama to destroy demons (Ramayana). Hundreds of stories about snakes are also in the Hindu mythologies.

But look at this unique hymn:-

The saint has used at least 22 animals and objects. If you give the topics to a school student for essay writing exercise , he would write something good about each of the topics. Tamils have used them as well; though Tamil is at least 1000 year junior to Sanskrit, that is the second ancient language in India, probably in the whole world (I have shown through 150 articles that Tamil and Sanskrit are the mothers of all ancient languages)

1.Lion

2.Tiger

3.Adder /Snake

4.Fire

5.Brahmin

6.Sun

7.Elephant

8.Leopard

9.Gold

10.Waters

11.Kine/Cows

12.Men

13.Chariot

14.Dice

15.Bull

16.Wind

17.Rain God

18.Noble

19.Drum

20.Drawn arrow

21.Man’s roar

22.Horse’s vigour

38. For brilliance (AV. Book 6, hymn 38; sukta 211)

[Atharvan (varcashāmaḥ).—caturṛcam. bṛhaspatidevatyam uta tviṣidevatyam. trāiṣṭubham.]


1. What brilliancy (tvíṣi) is in lion, in tiger, and what in adder, in fire, in the Brāhman, what in the sun: the fortunate goddess that gave birth to Indra—let her come to us, in union with splendor.


2. What brilliancy is in elephant, in leopard, what in gold, in waters, in kine, what in men (púruṣa): the fortunate goddess etc. etc.


3. In chariot, in dice, in the bull’s strength (vā́ja), in wind, in rain-god, in Varuṇa’s vehemence (çúṣma): the fortunate goddess etc. etc.


4. In a noble (rājanyà), in the drum, in the drawn [arrow], in the horse’s vigor, in man’s roar (?): the fortunate goddess etc. etc.

xxxx

My comments

This is a Prayer for Strength, Energy and Glory

The beauty lies in the fact that the seer used only four mantras to give you 22 messages or more

You can see the refrain in all the four mantras. That means it was sung by the poets in chorus; all oral literature will have this refrain. We see it in bhajans and vocal music. Indian singers never use books or written scripts like westerners. They keep 100s of songs in their memory. A big difference between the westerners and Hindus.

Most important point is it is a prayer to the greatest Goddess Aditi; even I have a friend by name  Aditi in London. Aditi  is the mother of Gods including Indra. She is praised all through the Rig Veda, the oldest book in the world. Hindus are the only race in the world, who did not send their goddesses to Museums. All other Goddesses are in the Museums! Aditi is used through out South Asia and South East Asia in naming girls.

Now I am not going to write essays on 22 topics. Actually I can even write a book on each topic just by using the ancient Tamil Sanskrit literature . Here is only a sample

1.Lion- ‘Swayameva Mrgendratha’ is the Sanskrit saying. No one need to democratically elect lion as the King of the Forest. By its own virtue it is the king accepted by all animals. The word Caesar came from Kesa Ari (Hairy Animal) Cesa Ari= Caesar. I even saw stone Simhasana in Rome/  Museum. It is a typical Hindu concept.

2.Tiger- Valmiki praised Rama as a tiger. That formed the first sloka of famous Venkateswara Subrabatham of Tirupati Balaji. Narasardoola = manly tiger= Lord Rama

Sangam Tamil literature say, that the tiger wont eat its prey if it falls on its left side.

3.Adder /Snake- snake is used for good and bad things; even today we use snake poison as antidote. Ramakrishna Paramahamsa fable shows that snakes can still hiss to protect itself. Through snake he teaches us a lesson. Be good but don’t be timid.

4.Fire- Fire is used in 1000s of mantras in the Four Vedas. The main prayer  is “I should become bright as Light/Fire”. Everyday orthodox Brahmins use Fire for getting Varchas, Ojas, Tejas and Medhas

5.Brahmin- Brahmin stands for scholars. Buddha in his last chapter in “Dhammapada” explains the greatness of Brahmins. Tamil kings gave Brahmins land and gold. The lesson is scholars with character will be honoured. A Tamil verse says Fire and Brahmins are same. Don’t go too close or too far. Like getting the warmth of fire , stand at an optimum distance.

6.Sun- every culture has something good to say about Sun. Hindus pray to him for eye sight and general health; they sing the glory of sun as killing virus, germs and perhaps of giving Vitamin D. Hindus worship Sun every day.

7.Elephant- Mighty power of elephant and  good memory of elephant are praised. Using one elephant to catch another is used by Kautilya and Tiruvalluvar. Five blind men and the elephant is in Hindu, Buddhist and Jain literature. The elephant that sought help from Vishnu is a famous episode found in the sculptures of Gupta period.

8.Leopard- like tiger, its ferocious attack is praised and compared to the heroism of kings.

9.Gold- used for good and bad things. Gold (basma) is used as medicine; gold also stands for greediness. Ramakrishna Paramahamsa gives lot of quotations on Kamini Kanchana (Women and Gold) Bhagavad Gita and Tamil devotional hymns say Gold and  broken tile look the same for a saint. But the brightness of gold is praised even by Tamil Valluvar

10.Waters; Everyday Brahmins praise the magical and medical qualities  of water in their thrice a day Water oblation . Tamil poet Vallvular praised it as ‘Amrit’ using the same Sanskrit word.

11.Kine/Cows- Go matha/ Mother Cow is praised through out the Vedas. Cow dung is used as anti-bacterial stuff and fuel. Cow’s urine in small quantity is drunk by Hindus for maintaining health. Milk is one of the greatest Hindu discoveries. Throughout Vedas milk is praised. No other literature comes nearer to Vedas in praising Milk and Cows.

12.Men- Great men inspire all of us; we all follow in the foot prints of Great Men.

13.Chariot- Even Tamil Tiruvalluvar use the Axis of a chariot as a simile. (Achu/axis used by Tiru valluvar is a Sanskrit word);  don’t belittle short fellows; they are like axis of a chariot. So even chariot’s axis can teach you a lesson.

14.Dice- Playing with dice sung by Tamil Valluvar and Mahabharata show how bad is gambling. There is a beautiful poem on the evil of gambling in  the Rig Veda.

15.Bull- used through out Tamil and Sanskrit poems as symbol of heroism .

16.Wind- used for speed as Vayu vegam; in Tamil and Sanskrit songs,  poets use Wind for its Speed. Many Tamil kings are praised possessing the qualities of Pancha Bhutas- Water, Fire, Earth, Wind and Sky/ether.

17.Rain God- Rain god is praised and prayed for rains.

18.Noble- they are the philanthropists. They support poets and singers.

19.Drum- Drum symbolises King in Tamil literature. Rig Veda describes the drumming that scares the enemies. Tamil literature says a king who is going to wage a war will move the White Umbrella and the Drum on an auspicious day.  The biggest drum called Bhumi Dundubhi is praised in the Rig Veda.

20.Drawn arrow-  there are a few proverbs and sayings about it. The meaning is It never stops; it must hit the target.

21.Man’s roar- This is what Hindu Kings do before go to war. They make war cries and vows to inspire their fellow fighters

22.Horse’s vigour – it is the basis of Asvameda Yaga. The speed of the horse as well as the sexual vigour of the horse are used as similes in the Vedas.

All these points are easily understood by the Hindus. In one hymn with only 4 mantras the seer teaches so much!

My old articles:-

The Connection between William Wordsworth and Dattatreya

https://tamilandvedas.com › 2011/11/10 › the-connecti…

10 Nov 2011 — Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from


Nature is our Teacher | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › nat…

7 Nov 2013 — The motto is LET NATURE BE YOUR TEACHER. … Sri Adi Shankara is the author of Viveka Chudamani in Sanskrit. He also gives lot of similes …

You’ve visited this page 3 times. Last visit: 12/06/21


Wordsworth | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › wordsworth

10 Nov 2018 — We see William Wordsworth and Oscar Wilde singing the beauty of forests in English. xxx. Now let us compare … Let Nature be your teacher.

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

https://tamilandvedas.com › 2014/11/02 › bhumi-dund…

2 Nov 2014 — The most interesting information comes from the Rig Veda about Bhumi Dundubhi! It means Earth Drum. jaffna. Temple Drum in Jaffna in Sri Lanka.

Xxx Subham xxx

tags – tags- animal lesson, Atharvana Veda, 22 things

பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24 (Post.10,392)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,392

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24

XXXX

சம்ஸ்க்ருத உயிர் எழுத்துக்கள்

ஸம்ஸ்க்ருத மொழியில் எ , ஒ என்ற இரண்டு குறில் எழுத்துக்கள் இல்லை

க்ரு – என்ற உயிர் எழுத்து உண்டு

: = இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இது முந்தைய உயிர் எழுத்துக்குத் தக்கவாறு

ஹ ஹா ; ஹி ஹீ , ஹு ,ஹூ என்றெல்லாம் ஒலிக்கும் /மாறும்.

XXXX

ஓ – வர்க்க சொற்கள்

ஓஜஸா  15-13  சக்தியால்

ஓஷதீஹி  15-13 பயிர்களை/தாவரங்களை

ஓம் 8-13  ஓம் என்னும் பிரணவ மந்திரம் ; அ  , உ, ம என்பது

விஷ்ணு , சிவன், பிரம்மாவைக் குறிக்கும்

ஓம்காரஹ 9-17 ஓம்காரம்

XXX

ஒள – வர்க்க சொற்கள்

ஒளஷதம் – 9-16 மருந்து

XXXX

க – வர்க்க சொற்கள்

கச்சித்  6-38 இல்லையா , அல்லவா

கட்வமல – லவணாத்யுஷ்ண –

தீஷ்ண – -ருக்ஷ -விதாஹினக 17-9 கசப்பு, புளிப்பு, உவர்ப்பு கடுஞ்சூடு உரைப்பு , எரிப்பு

கதரத் 2-6 எது

கதய 10-18 சொல், விவரி

கதயன்தஹ 10-9 அவன் விவரித்துச் சொல்லும்போது

கதயிஷ்யாந்தி  2-34 சொல்லுவான், பேசுவான்

கதயிஷ்யாமி  10-19  விவரிப்பேன்

கதம்  1-37 எப்படி, எவ்வாறு

கதாசன 2-47 ஒருபொழுதும்

கதாசித் 2-20 எந்த நேரத்திலும்

கபித்வஜஹ  1-20 குரங்குக் கொடி உடையவன் ; அர்ஜுனன்

கொடியில் அனுமன் சின்னம்

கபிலஹ 10-26 கபில ரிஷி/ முனிவர்

கமல பத்ராக்ஷ  11-2 தாமரை இதழ் வடிவ கண் உடையோன்

தாமரைக்கண்ணான் (திருக்குறள் 1103)

கமலாஸனஸ்சதம்  11-15 தாமரையில் அமர்ந்தவன்

கரணம் 18-18 கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள்

கரிஷ்யதி 3-33  செய்வான், செய்கிறான்

கரிஷ்யஸி  2-33 நீ செய்வாய்

கரிஷ்யே  18-73 செய்கிறேன்

கருணஹ  12-13 உயிர்களிடத்தில் கருணை/அன்பு உடையவன்

கரோதி  4-20 செய்கிறான்

கரோமி 5-8 செய்கிறேன்

கரோஷி 9-27 நீ செய்கிறாய்

கர்ணம்  11-34 கர்ணனை

கர்ணஹ  1-8 கர்ணன்

கர்தவ்யம்  3-22 கடமை

கர்தவ்யானி 18-6 செய்யவேண்டிய கடமை / கர்ம

கர்த்தா  3-24 செய்பவன், கர்த்தாவாய்  இருப்பினும்

கர்த்தாரம்  4-13 செய்பவனை

கருதும் 1-45 செய்வதற்கு

கர்த்ருத்வம் 5-14 கர்த்தாவாய் இருத்தலை

கர்ம  2-49 ஒருவனின் செய்கை, செயல்

36 WORDS ADDED FROM PART 24 OF GITA WORD INDEX

XXXX SUBHAM XXX

TAGS – பகவத், கீதை சொற்கள் -24, GITA INDEX 24

திருக்கஞ்சனூர் ஆலயம் அறிவோம்! (Post No.10,391)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,391

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருக்கஞ்சனூர்

மூவிலை நல்சூலம் வலன் ஏந்தினானை

      மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை

நாவலனை நரைவிடை ஒன்று ஏறுவானை

       நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை

ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை

      அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்

காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்

      கற்பகத்தை கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.   

 ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  நவகிரகங்களில் போககாரகனானத் திகழும் சுக்ர பகவானின் சிறப்புத் தலமான திருக்கஞ்சனூர் திருத்தலம் ஆகும். தமிழகத்தில், கும்பகோணத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் : ஸ்ரீ அக்னீஸ்வரர்     அம்மன் : கற்பகாம்பாள்

ஸ்தல வ்ருக்ஷம் : புரச மரம்        தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்து அமிர்தம் வந்த போது தங்களை ஏமாற்றித் தேவர்கள் அதை அடைந்ததால் கோபமுற்ற அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராசாரியரிடம் சென்று முறையிட அவர் தேவர்களை தங்கள் லோகத்தை விட்டு பூலோகம் செல்லுமாறு சபித்தார். தேவர்கள் அனைவரும் வியாச பகவானிடம் சென்று  சாப விமோசனம் அருளுமாறு கேட்க அவர் பூலோகத்தில் உத்தரவாஹினி எனப்படும் வட காவிரியில் நீராடி கற்பகாம்பாளையும் அக்னீஸ்வரரையும் வழிபட அவர்கள் சாப விமோசனம் அடைவர் என்று கூறி அருளினார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர்.

இந்தத் தலம் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு முறை பிரம்மா செய்த யாகம் ஒன்றில் தேவர்களுக்குச் சேர வேண்டியதைத் தராமல் அனைத்து ஆகுதிகளையும் தானே எடுத்துக் கொள்ள, அதனால் அவருக்கு பாண்டு ரோகம் என்ற கொடிய வியாதி பற்றியது. தனது வியாதியைப் போக்க அவர் இங்கு வந்து அக்னி தேவனால் ஏற்பட்ட நோயைத் தீர்க்க அக்னி தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி இறைவனை வழிபட்டார். இதனால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிரம்மாவும் தன் படைப்புத் தொழிலை மீண்டும் தொடங்கலானார். இதனால் இங்கு ஓடும் காவிரி நதி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

வட மதுரையை ஆண்டவன் கம்ஸ மஹராஜன். அவன் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடி இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டான். அதனால் இந்த ஊர் கம்ஸனூர் என்ற பெயரைப் பெற்றது. நாளடைவில் இது மருவி கஞ்சனூர் என்று அழைக்கப்படலாயிற்று.மாண்டவ்ய மஹரிஷியின் மாத்ருஹத்தி தோஷம் போக்கிய தலம் இதுவே. பராசர மஹரிஷிக்கு இறைவன் தனது முக்தி தாண்டவ நடனத்தை ஆடிக் காட்டிய தலமும் இதுவே தான்.

தெற்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் இருக்கும் இத்தலத்தில் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். கற்பகாம்பிகைக்குத் தனிப் பிரகாரம் உண்டு.உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், வாஹன மண்டபம், பதினாறு கால் மண்டபம் என ஒரு பெரிய பிரகாரம் உள்ளது. அக்னீஸ்வரரின் தெற்கில் சுக்கிர பகவானின் அருள் நல்கும் சிவபிரான் பார்வதி தேவியோடு கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சுக்கிர பகவான் அறுபத்திநான்கு கலைகளுக்கும் அதிபதி. ஜோதிட சாஸ்திரப்படி களத்திரகாரகன் சுக்ரனே. கிழக்குத் திசை சுக்ரனுக்கு உகந்த திசை. வைரம் சுக்கிரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம். ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்ரன். வெண்மை நிறம் கொண்டவர். மொச்சை தானியமும் வெண்தாமரை மலரும் அத்தி சமித்தும் இவருக்கு உகந்தவை. இல்லற சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது சுக்ர வழிபாடு. அனைத்துக் கலைகளிலும் ஏற்றம் பெறவும் சுக்ர பகவானின் வழிபாடு சிறந்தது.         

 இங்கு அவதரித்த ஹரதத்த சிவாசாரியாரின் சரிதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இத்தலத்தில் வைணவ மரபில் அவதரித்தவர் சுதர்ஸனன் என்பவர். இவர் விபூதி தரித்து ஸ்ரீ  அக்னீஸ்வரரைத் தினமும் வழிபடலானார். இதனால் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த பெற்றோர் அதிர்ச்சியுற்றனர். தந்தை வாசுதேவர் மிகவும் கோபம் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்த, சுதர்ஸனன் சிவபிரானைச் சரண் புகுந்தார். ஹரன் அவர் முன் காட்சி தந்து ‘உன் உடல் பொருள் ஆவி மூன்றையும் எனக்குத் தத்தம் செய்க என்று கூற அப்படியே செய்தார் சுதர்ஸனன். ‘மகனே! ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தந்தமையால் உனக்கு ‘ஹரதத்தன் என்ற தீக்ஷை நாமம் தந்தோம் என்று அருள் பாலிக்கிறார் சிவபிரான். ஊரில் உள்ள வைணவர்கள் வெகுண்டெழுந்து ‘சிவனே பரம்என்று பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து கொண்டு சொல்ல முடியுமா என்று ஹரதத்தரைக் கேட்டனர். அப்படியே செய்து காட்டினார் அவர். அனைவரும் பிரமித்தனர்.         

           ஒரு சமயம் அந்தணர் ஒருவர் புல்லுக் கட்டை ஒன்றைத் தெரியாமல் போட அதை உண்ட பசுக் கன்று இறந்து விட்டது. இதனால் அவரை ஊரார் ஒதுக்கி வைத்தனர். இதனால் மனம் வருந்திய அந்தணர் பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சொல்லியவாறே ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார். இதைக் கேட்ட ஹரதத்தர் எப்போது அவர் சிவ பஞ்சாக்ஷரத்தைக் கூறினாரோ அப்போதே அவர் பாவம் போய் விட்டது என்று கூறினார். ஆனால் ஊரார் இதை ஏற்காமல் இதை நிரூபிக்குமாறு ஹரதத்தரிடம் கூறினர். உடனே ஹரதத்தர் அந்த அந்தணரிடம் காவிரியில் நீராடிவிட்டு ஒரு கட்டு புல்லைக் கொண்டு வருமாறு கூறினார். அவரும் அப்படியே செய்தார். அதை அங்கு கோவிலில் கல் நந்தியிடம் தரச் சொன்னார். கல் நந்தி உண்ணுமானால் பஞ்க்ஷாரத்தால் அந்த தோஷம் நீங்கும் என்று சொல்லி சிவ் பஞ்க்ஷாரம் சொல்லிப் புல்லைத் தர அந்தக் கல் நந்தி அதை உண்டது. அதனாலேயே இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்காமல் இருக்கிறது என்பது ஐதீகம். ராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கி கற்பக விநாயகர் சந்நிதியும் சந்நிதி தெருவில் ஹரதத்தருக்கான கோவிலும் அமைந்துள்ளது.

கம்சபுரம், முக்தி புரி, பராசர புரம், பிரமபுரி எனப் பல பெயர்களைக் கொண்டுள்ள இந்தத் திருத்தலத்தில்

அப்பர் பிரான் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பகாம்பாளும் அக்னீஸ்வரரும், சுக்ர பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும்

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்|

பனி, முல்லை, தாமரை போன்ற  வெண்மையான நிறம் உடையவன். அசுரர்களின் குரு. எல்லா சாஸ்திரங்களையும் உரைப்பவன். ப்ருகுவின் புதல்வன். அந்த சுக்கிரனை நமஸ்கரிக்கிறேன்.         

நன்றி, வணக்கம்!                                 

***

tags. கஞ்சனூர்,சுக்கிரன்,ஹரதத்த சிவாசாரியா

ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை! (Post No.10,390)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,390

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.

19-11-2021 காலை ஒலிபரப்பான ஒன்பதாவது உரை கீழே தரப்படுகிறது. 

ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை!

ச.நாகராஜன்

மனிதர்கள் மட்டுமே பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக்கூடும் என்ற உண்மையை அறிந்திருப்போருக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை இருக்கிறது. மரங்களும் கூடப் பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக் கூடும், அப்படிப்பட்ட நிலை பல இடங்களில் ஏற்படுவதால் அற்புதமான இயற்கைச் செல்வமான மரங்கள் அழிந்து வருகின்றன என்பதே அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

இது ஓரிடத்தில் மட்டும் ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. கனடா, ரஷியா, கிரீஸ், வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட நாடுகளில், பல பகுதிகளிலும் மரங்கள் இறந்து படுவதை விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.

இப்படி பல மரங்கள் அழிந்து படுவதற்கான காரணத்தை உடனே அவர்களால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் இதற்கென ஒரு (Intensive Care unit) தீவிர கவனிப்புப் பிரிவைப் போன்ற ஒரு பிரிவை தனது சோதனைச் சாலையில் அமைத்து மரங்களைக் கவனிக்கலானார் நேட் மக்டவல் (Nate Mcdowell) என்னும் நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த விஞ்ஞானி. ஆய்வின் முடிவில் தாகத்தினாலும் பசியினாலும் அவை இறப்பதை அவர் கண்டுபிடித்து உறுதி செய்தார். அதிகமான வெப்பம் உருவாகி நீரின் அளவு குறையும் போது “ஹைட்ராலிக் ஃபெயில்யூர்” (Hudraulic Failure) எனப்படும் நீர் குறைவுபடும் அல்லது நீர் இல்லாத சமயம், தாவரங்கள் சுருங்கி, ‘வாழ முடியாத நிலையை’ எய்துகின்றன. தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காத நிலையில் அவை பரிதாபமாக இறக்கின்றன. 

உலகெங்கும் 81 பகுதிகளில் 226 அரிய வகை தாவர இனங்கள் இப்படிப்பட்ட அபாயத்திற்கு உள்ளாகி வருகின்றன. நுண்மையான சென்ஸார்களை வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வு புவி வெப்பமயமாதலால் மரங்கள் அழிந்து படும் என்பதை உறுதி செய்கிறது. அத்துடன் மழைக் காடுகள் அழிக்கப்படாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மையையும் வலுப்படுத்துகிறது. இந்த  மரங்களைக் காக்கும் பணி உலகெங்கும் உள்ள மக்களால் ஒவ்வொருவர் வீட்டிலுமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான உண்மை.

     ஒவ்வொரு பேப்பரையும் உபயோகிக்கும் போது இது அவசியமா, இதைத் தவிர்த்தால் ஒரு மரம் சற்று நீடித்து வாழுமே என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும். நீரை அளவுக்கும், தேவைக்கும் அதிகமாக அனாவசியமாகப் பயன்படுத்தும் போது நாம் ஒரு மரத்தின் ஜீவனைப் பறிக்க உதவி செய்கிறோம் என்பதை உணர்தல் வேண்டும். ஆங்காங்கே நல்ல மழை வளத்துடனும் மண் வளத்துடனும் காடுகள் அழிக்கப்படாமல் – மரங்கள் வெட்டப்படாமல் – இருப்பின் பூமியின் மழை வளம் கூடும். நமது வாழ்வாதாரமான நீரும் நமக்குத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

மரங்களை நாம் பாதுகாத்தால் அவை நம்மைப் பாதுகாக்கும் என்பது ஒரு அபூர்வமான, அதிசயமான உண்மை. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம். மரங்களைக் காப்போமாக!

****

tags-அரிய வகை, தாவர இனங்கள், 

PLEASE JOIN US TODAY MONDAY 29-11-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

29 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON POET KALIDAS

Talk by  DR CHITRA,BENGALURU

இலக்கியங்களில் தமிழனின் அறிவியல் திறன்

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR. 50 MINUTES

— SUBHAM —-

tags – publicity29112021

உலக இந்து சமய செய்தி மடல் 28-11-2021 (Post No.10,389)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,389

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 28 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பேருக்கு அனுமதி

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ON LINE ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும். தற்போது பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பர் 13 ஆம் தேதி இதே அமைச்சர் சபரிமலை கோவிலில் கொடுக்கப்பட்ட தீர்த்தப்  பிரசாதத்தை கீழே சிந்தியும்  கையில் துடைத்தும் இந்து மதத்தை அவமதித்தது ஐயப்ப பக்தர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது  அவர் கடவுள நம்பிக்கையற்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

XXXX

சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

XXXX

மலைக்கோவில்களுக்கு ரோப் கார்; சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மலைக்கோவில்களுக்கு ROPE CAR ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கோயில்களில் ஆய்வு முடித்த பின், உலகத்தரத்தில் நவீன வசதியுடன் ரோப்கார் அமைக்க டெண்டர் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சோளிங்கா் நரசிம்ம சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில்களில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் நிலுவையில் இருக்கிறது. 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் காா் வசதி ஏற்படுத்துவது, இயக்குவதற்கான நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய் துறை, உள்துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பழனியில் ஒரு இடத்தில் தற்போது கேபிள் ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. சோளிங்கர், அய்யர்மலை கோயில்களில் கேபிள் ரோப் காா் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கேபிள் ரோப் காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றாா்.

இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரர் நேரடியாக அரசுக்கு இந்த விஷயங்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது

XXX

கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

‘கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.


இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை செலுத்தாமல், கோவில் சொத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.


அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. கோவில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர் உள்ளனர்.

எந்த அனுமதியும் பெறாமல், குத்தகைதாரர்கள் வசம் கோவில் சொத்துக்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் முழு திருப்தி இல்லை. துஷ்பிரயோகம் தனி நபர்களுடன், அதிகாரிகள் சிலர் கைகோர்த்து செயல்படுகின்றனர். கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது.

கோவிலில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரை, தற்போதைய நிலையில், மனுதாரர் குத்தகைதாரர் அல்ல. எனவே, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

XXXXX

சிறுவாச்சூரில் தொடர்ந்து 4-வது முறையாக உடைக்கப்பட்ட சாமி சிலைகள்

நான்காவது முறையாகப் பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன. இங்கு சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட சாமி பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்துக்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட கோவிலையும், சிலைகளையும் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் பார்த்துள்ளார்.


அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர். இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை.

செப்., 26ல் மீண்டும், அடுத்து நவ., 8ம் தேதி இரவும், நான்காவது முறையாகப் அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன.

சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார். அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.


. ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன.. அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

XXX

டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்டம்

டெல்லியின் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தின் கீழ், ஸ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்ய 1000 யாத்ரீகர்கள் அயோத்திக்கு அனுப்பப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று டெல்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பூரி, ராமேஸ்வரம், ஷீரடி, மதுரா, ஹரித்வார் மற்றும் திருப்பதி உட்பட 13 தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் மூத்த குடிமக்களின் புனித யாத்திரையின் முழுச் செலவையும் டெல்லி அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்ட புனித யாத்திரை பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியை சேர்க்க கடந்த மாதம் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் வயதான 1,000 யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் முதல் ரயில் டிசம்பர் 3-ம் தேதி அயோத்திக்கு புறப்படும் என்று டெல்லி அரசின் தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதியின் தலைவர் கமல் பன்சால் தெரிவித்தார்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags – Tamil Hindu, Newround up, 28112021