Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உலகிற்கு ஜோதிடத்தையும் அது தொடர்பான வானவியலையும் கற்பித்தது இதுக்களே. இதற்கான சான்றுகள் ரிக் வேதத்தில் இருப்பதை ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் (HERMAN JACOBI AND B G TILAK) நிரூபித்துவிட்டனர்.உலகிலேயே ஜோதிடத்தை பாட திட்டத்தில் சிலபஸில் சேர்த்ததும் இந்தியாதான். வேதத்தைக் கற்போர் அதன் ஆறு அங்கங்களையும் கற்க வேண்டும் இந்த ஆறு ஷட் +
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 15-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன்
வணக்கம். இசையின் மஹிமை பற்றி உரைக்க வார்த்தைகள் போதாது; நாட்களும் போதாது. ஒசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் மஹாகவி பாரதியார். முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி, இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும், அவர்களின் இசைக்
HITLER AND MUSSOLINIBENITO MUSSOLINI
tags– இசையின் மஹிமை ,ஓம்கார்நாத் தாகூர், முஸோலினி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உலக இந்து சமய செய்தி மடல் 14-3-2021
இன்று மார்ச் 14-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxxx
பகவத் கீதை இ – புத்தகம்: பிரதமர் வெளியிட்டார்
:”பகவத் கீதையில் கூறியபடி, உலகளவில் மனித குலத்துக்கு, இந்தியா உதவி வருகிறது,” என, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பகவத் கீதை ஆங்கில பதிப்பின், ‘இ – புத்தகத்தை’ வெளியிட்டார்.
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர், பகவத் கீதைக்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதினார்.
இரண்டு புத்தகங்களும், 19 பதிப்புகளில் வெளியாகியுள்ளன. அவற்றில், ஆங்கில பதிப்பின் விளக்க உரை அடங்கிய, ‘டிஜிட்டல்’ வடிவிலான, இ – புத்தகத்தை, பிரதமர் மோடி, நேற்று டில்லியில் இருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, பொது மக்கள், மாணவியர் இணைய வழி வாயிலாக பார்க்கும் வகையில், கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலர் சத்யயானந்த மகராஜ், சாரதா மகளிர் கல்லுாரி செயலர் யதீஸ்வரி நீலகண்ட பிரியா உட்பட, பலர் பங்கேற்றனர்; இதில், பிரதமர் மோடி பேசியதாவது: பகவத் கீதை நம்மை சிந்திக்க துாண்டுகிறது. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க, நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும். நம் மனத்தை திறந்த நிலையில் வைத்திருக்க, கீதை உதவுகிறது.
கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும், இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும், ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பர்.கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்ட போது, இந்தியாவால் என்ன முடியுமோ, அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகம் முழுதும் சென்றுள்ளன.
நாம் மனித குலத்திற்கு உதவவும், குணமளிக்கவும் விரும்புகிறோம். இதையே கீதை, நமக்கு போதிக்கிறது. பகவத் கீதையின் முக்கிய தத்துவம், அனைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பது தான். 130 கோடி இந்திய மக்களும் தங்கள் கடமையை சரியாகச் செய்தால், சுயசார்பு இந்தியா உருவாகும்.
இ – புத்தகங்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன; இதை பயன்படுத்தி, கீதையை இளைஞர்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இந்த புத்தகம், பகவத் கீதையையும், பாரம்பரியமிக்க தமிழ் கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், இந்த புத்தகத்தை எளிதாக படிப்பர்.தமிழர்கள் எங்கு சென்றாலும், தங்கள் கலாசாரத்தை பரப்புவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். புதிய இந்தியா உருவாவதற்காக, உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்தவர் சுவாமி சித்பவானந்தா. இவ்வாறு பிரதமர் பேசினார்.
Xxxx
மகா சிவராத்திரி செய்திகள்
மார்ச் 11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இந்துக்கள் அதிகம் வாழும் மொரிஷியஸ் தீவு மற்றும் மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேபாளத்தில் ஒரே நாளில் பல லட்சம் மக்கள், பசுபதி நாதரை தரிசித்து வழிபட்டனர்.
12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது . இதோ சிவ ராத்திரி செய்திகள்
மகா சிவராத்திரி தினத்தன்று நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலுள்ள பசுபதிநாத் பெருமானை தரிசிக்க காலை முதல் மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் ஐந்து லட்சம் பக்தர்கள் வந்தனர். பிரசித்திபெற்ற இந்த சிவன் கோவிலுக்கு இந்தியாவிலிருந்தும் ஏராளமானோர் வந்தனர் . இந்திய சாது சன்யாசிகளுக்கு கோவில் நிர்வாகம் பிரசாதம் கொடுத்து கவுரவித்தது
Xxx
ராமேசுவரம் கோவிலில் பகல், இரவு முழுவதும் நடை திறப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடந்தது.
கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தங்களது கைகளால் பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவகை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
சிவராத்திரியை முன்னிட்டு காலை துவங்கி அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி கோயில் பிரகாரங்களில் இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் விடிய விடிய நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் பங்கேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். இரவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சாதுக்களும், பக்தர்களும் அதிகாலை கங்கை நீருடன் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
XXXXXXXXXXXXXXXXXXXXX
சிவராத்திரி பண்டிகைக்கு நெய்வேதியம் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பங்கள்
சிவராத்திரி பண்டிகையின் போது சிவபெருமானுக்கு படைக்கும் நெய்வேதியங்களை தயாரித்து வழங்கும் பணியை காலம் காலமாக இஸ்லாமிய குடும்பங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் இந்துக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் சிவராத்திரி முக்கியமானதாக உள்ளது. இப்பண்டிகையின் போது விரதம் இருந்து, இரவில் கண் விழித்து மறுநாள் சிவனுக்கு சாமை, கேழ்வரகு, சோளம், நெல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் மாவு கொண்டு பல நெய்வேதியம் செய்து படைப்பார்கள். ஒவ்வொன்றும் தனி தனியாக வீட்டில் தயார் செய்ய முடியாமல் கடைகளில் வாங்குவார்கள்.
கர்நாடக மாநிலத்தின் கோலார் தாலுகாவில் உள்ள சுல்தான் திப்பசந்திரா மற்றும் ஜமால்ஷாநகர் ஆகிய பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நூறாண்டுக்கும் மேலாக சிவராத்திரி பண்டிகைக்கு நெய்வேதிய பொருட்கள் தயாரித்து கொடுக்கும் பணியை ேமற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்தில் இருந்து சாமை, நெல் ஆகியவற்றையும் கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா, பாகல்கோட்டை, ஹாவேரி மாவட்டங்களில் இருந்து சோளம், கேழ்வரகு கொண்டுவந்து அதை அறைத்து பதப்படுத்தி வைக்கிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஓருவாரமாக மாவட்டம் முழுவதும் இஸ்லாமிய குடும்பங்கள் தயாரித்துகொடுத்துள்ள நெய்வேதிய பொருட்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காலங்கள் மாறினாலும் கலாச்சார பின்னணியுடன் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் நெய்வேதிய பொருட்களை வாங்குவதை இந்து குடும்பங்கள் மறக்காமல் பின்பற்றி வருகிறார்கள். இந்த மனிதநேயம், ஒற்றுமை அனைத்து செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்
Xxxx
ராமராக பிரபாஸ் நடிக்கும் ராமாயண கதையில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்
ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் ஆதிபுருஷ் என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. ஓம் ராவத் இயக்குகிறார். இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர்.
வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்துக்கு பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை தேர்வு செய்துள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இந்தநிலையில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கீர்த்தி சனோன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன். ஆதிபுருஷ் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் ஆதிபுருஷ் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.
XXXXX
சபரிமலை பிரச்னை வருத்தமளிக்கிறது: கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தமளிக்கினறன,” என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2018ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து நடந்த போராட்டங்களை, கேரள அரசு கடுமையாக அடக்கியது.
போராட்டம் தொடர்பாக, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடந்திருக்க கூடாத இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறி உள்ளார். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதி தீர்ப்புக்கு, கேரள அரசு தலைவணங்கும் என்றும், அவர் கூறியிருந்தார்.
இதற்கு, ”சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுக்காக, அமைச்சர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கங்கையில் குளித்தாலும், செய்த பாவம் போகாது,” என, கேரள பாரதீய ஜனதா தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
xxxxx
தாஜ்மஹாலில் பிரார்த்தனை -மூன்று இந்து மகாசபா உறுப்பினர் கைது
ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலில் பிரார்த்தனை நட த்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் பெண். இது மத்திய தொல்பொருட் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னம். இதில் மீனா திவாகர் என்ற பெண்மணி மேலும் இருவரை அழைத்து வந்து இந்து சமய பிரார்த்தனைகளை நடத்தினார் அவர்கள் மூவர் மீதும் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . தாஜ் மஹால் ஒரு காலத்தில் இந்துக்களின் அரண்மனையாக இருந்தது என்பது ஒரு சாராரின் வாதம். இது பற்றி பி.என் ஓக் மற்றும் பலர் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளனர்
Xxxx
முதியோருக்கு இலவச யாத்திரை உதவி
டில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மாநில சட்டசபையில் பேசுகையில் பென்சன் வயதுள்ள முதியோ ருக்கு இலவச யாத்திரை, உணவு, தங்கும் வசதிகள் செய்யப்படும் என்றார். மாநில கவர்னர் ஆற்றிய உரை மீதான விவாதத்தில் பேசுகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர், வயதான முதியோரை இலவசமாக அங்கே தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல தனது அரசு பணம் ஒதுக்கியுள்ளது என் றார் . தானும் ராமரையும் ஆஞ்சனேயரையும் வணங்கும் பக்தர் என்றும் ராமராஜ்யம் அமைப்பதே தனது கனவு என்றும் டில்லி அசெம்பிளியில் முதலைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார் .
xxxxxx
ஸ்ரீ ரவிசங்கருடன் மகா சிவராத்திரி விழா…
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் பெங்களூரில் விமரிசையாக நடைபெற்றது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட் டது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலை மகா ருத்ர பூஜையுடன் தொடங்கியது.
இரவு 11.45 மணிக்கு நள்ளிரவு தியானம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி உரை நிகழ்த்தினார் . ருத்ர ஹோமமும் செய்யப்பட்டது
XXXXXXXXXXXXXX
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஈஷாவின் 27-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு கொண்டாடப்பட் டது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ,தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. விடிய விடிய பிரபல கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழ் நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன், பிரபல தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய நாட்டுப் புற கலைஞர் குட்லே கான், பின்னணி பாடகர் பார்த்தீவ் கோஹில், கபீர் கபே இசை குழு, கர்நாடக இசை பாடகர் சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
அவர்களுடன் ‘சவுண்ட்ஸ் ஆப் ஈஷா’ மற்றும் ‘ஈஷா சமஸ்கிரிதி’ குழுவினரும் சேர்ந்தனர் . சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படது.
விழாவில் நடிகை சமந்தா பங்கேற்றார்.
மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் , பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரைவி மகா ஆரத்தி, ,நள்ளிரவு தியானம், ஆதியோகி திவ்ய தரிசனம், சத்குரு சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில், ஷம்போ தியானம், பிரம்ம முகூர்த்த மந்திரம் என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடந்தன
xxxx
கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி
கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள
தங்கவயலில் புகழ் பெற்ற கோடி லிங்கேஸ்வர் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்கவயல் தாலுகா கம்மசமுத்திரம் கிராமத்தில் கோடி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஒரு கோடி சில லிங்கங்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் காணும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான லிங்கங்கள் அணிவகுத்து அமைந்திருப்பதையும், அதற்கெல்லாம் மகுடமாக 108 அடி உயர பிரமாண்டமான சிவ லிங்கத்தையும்கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைகின்றனர்.
இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். காலை முதலே நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு , சாமி கும்பிட்டனர்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
14-3-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXX
Prime Minister Modi urges youth to read Bhagwad Gita, says it is ‘practical guide for life’
Prime Minister Modi also spoke about how philosophers and saints like Adi Shankaracharya, Ramanujacharya, and Swami Vivekananda perceived the Gita dynamically.
The Kindle version was launched to commemorate the sale of more than 500,000 copies of the Swami Chidbhavanandaji’s Bhagavad Gita.
Prime Minister Narendra Modi on Thursday urged the youth of the country to read the Bhagwad Gita as he launched an e-book version of Swami Chidbhavananda’s commentaries on the ancient Hindu scripture, which is a part of the epic Mahabharata.
“In the middle of the fast-paced life, the Gita will provide an oasis. It is a practical guide for several dimensions of life,” PM Modi said as he extending his congratulations on the launch.
The Prime Minister also said the Gita inspires us to question and makes us think. “It encourages debate and keeps our minds open. Anybody who is inspired by Gita will always be compassionate by nature and democratic in temperament,” he added.
Swami Chidbhavanandaji, the founder of Sri Ramakrishna Tapovanam Ashram, in Tamil Nadu has written 186 books in all genres of literary composition. However, his scholarly work on the Gita is one of the most celebrated ones.
The Tamil version of the Gita with his commentaries was published in 1951, followed by the English in 1965. Its translations into Telugu, Oriya, German and Japanese were undertaken by devotees.
ONE MORE BHAGAVAD GITA NEWS
Prime Minister Narendra Modi on Wednesday released 11 volumes of manuscripts with commentaries by 21 scholars on Srimad Bhagavad Gita shlokas, highlighting how the depth of the holy text was brought out through the different interpretations by the scholars.
“Today we are releasing 11 volumes bringing together 20 interpretations of Srimad Bhagavad Gita. I respectfully salute all the scholars who have tried for this pious work, every person associated with it, and every effort of theirs,” said PM Modi.
“These different interpretations on every verse of a single scripture, the expression of so many mystics, is a symbol of the depth of the Gita to which thousands of scholars have given their entire lives. It is also a symbol of the ideological freedom of India, which motivates every person to express his views. The Gita is for the whole world. It has been translated into many languages of the world, research on it is being done in many countries, he added.
xxxxx
Devotees throng Nepal’s Pashupatinath temple in lakhs on Maha Shivaratri
Over 5 lakh devotees, including thousands from India, thronged the iconic Pashupatinath Temple in KATHMANDU , capital city of Nepal on Thursday on the occasion of Maha Shivaratri.
Pilgrims were spaced evenly in the queues, donning of masks and sanitising of hands were made compulsory.
“Arrangements were done in such a manner that the visitors could view the presiding deity within half an hour,” the official said.
Strict security measures were also in place to control the large number of devotees.
Authorities said the temple gates were opened at 4 am and that about 5 lakh footfalls were recorded till about evening.
The number is set to rise as the temple will receive devotees till late night. The visiting devotees were mostly Hindus from Nepal and India.
Groups of Sadhus who arrived from India on the occasion have been provided with ‘prasadam’ and accommodation, the official said.
Pashupatinath Temple is the largest temple complex in Nepal and stretches on both sides of the Bagmati River and sees thousands of worshippers from Nepal and India daily.
Xxxxx
Haridwar Mahakumbh 2021: First holy bath on March 11
The first Shahi Snan or holy bath Of Mahakumbh 2021 at Haridwar was held on March 11, Thursday, on the occasion of Maha Shivratri.
It was one of the massive congregations of devotees during the ongoing Coronavirus pandemic. The mela, which will be a one-month affair this time owing to Covid-19, spans over Haridwar, Pauri Garhwal and Dehradun.
The second Shahi Snan is on April 12, the third on April 14 and the fourth on April 27.
Xxxxx
Sabarimala issue a closed chapter, says Kerala Devaswom Minister ahead of elections
Kerala State Devaswom Minister Kadakampally Surendran on Thursday said the incidents at the Sabarimala shrine in 2018 were saddening to all but a closed chapter now. “The issue at Sabarimala in 2018 is a closed chapter for Kerala. That was painful and saddening to all of us. It should not have happened,” he said referring to the controversial entry of women and the slew of protests at the shrine at that time.
The minister’s comments ahead of the assembly elections are viewed as an attempt by the LDF to prevent a repeat of the backlash it faced in the 2019 Lok Sabha elections. The minister said further actions by his government on the issue will be in consultation with believers.
“The government has clearly stated its stand. The case is under consideration of a larger bench of the Supreme Court. I repeat, whatever be the verdict, the government will take a decision on it after consultations with devotees, political parties and the general public,” he told media persons.
Xxxx
Three Hindu Mahasabha workers arrested for offering prayers to Shiva in Taj Mahal complex
Three members of the Hindu Mahasabha were arrested on Thursday for offering prayers to Lord Shiva inside the Taj Mahal compound, police said.
A case was registered against the trio, including a woman, after they were apprehended by Central Industrial Security Force personnel deployed at the monument and handed over to the police, Inspector Umesh Chandra Tripathi of Tajganj police station said.
Police said Meena Diwakar, the provincial president of the Hindu Mahasabha, started praying along with the other two on a bench near the central tank in the complex.
The Mughal-era monument is protected by the Archaeological Survey of India
Xxx
Thrissur Pooram gets political colour
With the Kerala assembly elections around the corner, organisers of the state’s most famous festival, Thrissur Pooram, have started mounting pressure on the government to take a final decision on allowing the full rituals and ceremonies this time. And the opposition Congress and BJP have extended their support to the demand.
Unlike last year when the festival was limited to temple rituals in view of the Covid restrictions, the organisers know that the LDF government cannot ignore their demand, especially in the backdrop of the Lok Sabha poll setback the front had suffered in 2019 because of the public anger over its Sabarimala gamble.
In a meeting with District Collector S Shanavas on Tuesday, representatives of Thiruvambady and Paramekkavu devaswoms sought a final decision on the matter so that arrangements can be made accordingly.
Both devaswoms have taken a stand to not compromise on the rituals and elephant parade of the pooram this time. At the meeting, the collector did not commit himself on this and left the decision to the state government
xxxxx
Arvind Kejriwal announces free visit for elderly to Ram temple once completed
DELHI Chief Minister Arvind Kejriwal on Wednesday announced facilitating free pilgrimage for Delhi’s senior citizens to the Ram temple in Ayodhya and asserted that his government follows 10 principles inspired by the concept of ‘Ram Rajya’ to the serve the people.
The 10 principles listed by him are providing food, education, medical care, electricity, water, employment, housing, security for women and honouring the elderly.
“I am a devotee of Lord Ram and Hanuman. We have been following 10 principles inspired by the concept of ‘Ram Rajya’ to serve the people of Delhi,” Kejriwal said during a discussion on the address to the Delhi Assembly by the Lieutenant Governor earlier this week.
“We have taken many steps to honour our elderly, the most important being sending them on free pilgrimages. I want to tell all senior citizens in Delhi that I will send you to Ram temple in Ayodhya once the construction work is completed.”
The construction of the Ram Temple in Ayodhya is expected to be completed in 36-40 months.
Xxxxx
Only 24,000 people got opportunity to perform ‘bali tharpanam’ at Aluva in Kerala
The Aluva Siva temple has made elaborate arrangements to during Sivaratri festival adhering to the Covid protocol. However, only 24,000 people were allowed to perform bali tharpanam (offering to propitiate their ancestors). The bali started at 4am on March 12 and finished at noon.
The banks of Periyar at Aluva has been divided into five sectors and only 200 people were allowed to offer bali in each sector at one time. There were 10 balithara or platforms to perform bali in each sector
Xxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4 கட்டுரை எண் 9293 வெளியான தேதி 22-2-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 5
ச.நாகராஜன்
15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை … என்றால் என்ன? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அருமையான உரையாடல் வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரின் கேள்விகளுக்கு
tags – உரையாடல், ஸ்ரீ கிருஷ்ணர், உத்தவர்,புராணத்துளிகள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 14-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
“வண்டு தன் தேனுண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலிமாலை
கொண்டு, தொண்டர் பாடி, ஆடக், கூடிடில் நீள் விசும்பில்
அண்ட மல்லால், மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறிவோமே”
திருமங்கை ஆழ்வார் திருநாமம் வாழியே!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான பத்ரிநாத் தலம் ஆகும்.
உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் ரிஷி கேசத்திலிருந்து 295 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10170 அடி உயரத்தில் இது உள்ளது.
சத்ய யுகத்தில் இதன் பெயர் முக்திப்ரதா; த்ரேதா யுகத்தில் இதன் பெயர் யோகசித்திகா. த்வாபர யுகத்தில் இதன் பெயர் மணிபத்ரிகா ஆஸ்ரமம். ஆகவே பல யுகம் கடந்த புண்ய ஸ்தலம் இது.
நரனும் நாராயணரும் தவம் செய்த இந்தத் தலத்தைப் பற்றிய சுவையான புராண வரலாறு ஒன்று உண்டு.
சஹஸ்ரகுண்டலன் என்று ஒரு கொடிய அசுரன் இருந்தான். மிகப் பெரும் வலிமை படைத்த அவனுக்கு ஆயிரம் குண்டலங்களும் ஆயிரம் கவசங்களும் இருந்தன. அவன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். பிரம்மா நேரில் தோன்ற, அவரிடம், “ பிரம்மதேவனே, எனக்கு இறப்பே இருக்கக் கூடாது” என்று சாகாமல் இருக்க அவன் ஒரு வரம் வேண்டினான். பிரம்மாவோ, “சஹஸ்ரகுண்டலா! பிறந்த உயிர் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கை நியதி. ஆகவே வேறு வரம் கேள், தருகிறேன்” என்றார்.
யோசித்த சஹஸ்ரகுண்டலன், “ஐயனே! என்னுடைய ஒரு குண்டலத்தையும் கவசத்தையும் அறுத்தவர்கள் உடனே இறக்க வேண்டும். ஆயிரம் கவசமும் ஆயிரம் குண்டலங்களும் அறுக்கப்பட்டால் நான் இறக்க வேண்டும். அதற்கான வரத்தை அருளுங்கள்” என சாமர்த்தியமாக இப்படி வரம் கேட்டான்.
பிரம்மா அப்படியே அந்த வரத்தை அவனுக்கு வழங்கினார். இப்படி ஒரு வரத்தைப் பெற்ற சஹஸ்ரகுண்டலன் முனிவர்களையும் தேவர்களையும் இன்னும் கொடிய முறையில் துன்புறுத்த ஆரம்பித்தான்.
இந்தக் கொடுமை அளவுக்கு மீறிப் போக அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர்களை நோக்கிய நாராயணர், “அஞ்ச வேண்டாம். நானே அவனை அழிக்கிறேன்” என்று உறுதி கூறி அருளினார். விஷ்ணு நரன் என்றும் நாராயணன் என்றும் தன்னை இரு மூர்த்திகளாகப் பிரித்துக் கொண்டார். இருவரும் இமயமலையில் பத்ரிகாஸ்ரமத்தில் வந்து தவம் புரிய ஆரம்பித்தனர். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின், நாராயணர் நரனை நோக்கி, “நரனே, நான் சென்று சஹஸ்ரகுண்டலனோடு போர் புரிந்து அவனது ஒரு கவசத்தையும் ஒரு குண்டலத்தையும் அறுப்பேன். பிரம்மாவின் வரத்தின் படி நான் இறப்பேன். அங்கு வந்து நீ என்னை உயிர்ப்பித்து விடு” என்றார்.
அப்படியே நாராயணர் சஹஸ்ரகுண்டலனின் ஒரு குண்டலம் மற்றும் ஒரு கவசத்தை அறுத்தார்; உயிரைத் துறந்தார். அங்கு சென்ற நரன், நாராயணரை உயிர்ப்பித்து தான் சஹஸ்ரகுண்டலனுடன் போரிட ஆரம்பித்தான். நாராயணர் தவம் செய்யச் சென்றார். இப்படியே ஆயிரம் ஆண்டுகள் மாறி மாறி ஒருவர் தவம் செய்ய இன்னொருவர் போர் புரிந்து இறக்க சஹஸ்ரகுண்டலனின் 999 குண்டலங்களும் கவசங்களும் அறுக்கப்பட்டன. இறுதியாக இருந்தது ஒரு குண்டலம்; ஒரு கவசம். தன் உயிருக்குப் பயந்த அசுரன் சூரிய பகவானிடம் ஓடி அவரிடம் தஞ்சம் புகுந்தான். சூரியன் அவனுக்கு அடைக்கலம் தந்து அவனைத் தன் உடலில் ஐக்கியம் செய்து கொண்டார். காலம் சென்றது. குந்தி தேவியானவள் துர்வாச முனிவருக்கு ஒராண்டு பணிவிடை செய்து பெற்ற மந்திரத்தை உச்சரிக்க, சூரிய பகவான் சஹஸ்ரகுண்டலனுடைய ஆவியை குந்தியின் உதரத்தில் வைத்து அருளினார். கவச குண்டலத்துடன் கர்ணன் பிறந்தான். நர நாராயணர்கள் இருவரும் அர்ஜுனன், கிருஷ்ணனாகத் தோன்றினர். அர்ஜுனன் கர்ணனைக் கொன்றான். இப்படி நரனும் நாராயணரும் பல்லாண்டுகள் தவம் புரிந்த க்ஷேத்திரமே பத்ரிகாஸ்ரமம். பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். பத்ரிகாஸ்ரமம் ஒரு இலந்தை வனம். அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது இது. அருகில் ரிஷிகங்கா அலக்நந்தா நதியுடன் கூடுகிறது.
இந்தத் தலம் நீலகண்ட மலைச் சிகரத்தின் கீழே அமைந்து கண்கொள்ளாக் காட்சியைத் தருகிறது. பத்ரிநாதரின் பாதத் தடங்கள் இங்குள்ள ஒரு பாறையில் பதிந்துள்ளதை இன்றும் தரிசிக்கலாம்.இங்குள்ள கோயில் கிழக்கு நோக்கியது. தெற்கில் அலக்நந்தா ஓடுகிறது. கோவில் ஆறு மாதம் மட்டுமே – வைகாசி முதல் ஐப்பசி முடிய – திறந்திருக்கும். இறைவர் :பத்ரி நாராயணர் தாயார்: மஹாலக்ஷ்மி. ஸ்தல விருக்ஷம் லக்ஷ்மி சொரூபமான இலந்தை மரம். தீர்த்தம் தப்த குண்டம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்று. விமானம் தப்த காஞ்சன விமானம். கிருஷ்ண பகவான் உத்தவருக்கு உபதேசித்த கீதை உத்தவ கீதையாகும். உபதேசமெல்லாம் முடிந்த பின்னர் உத்தவரை பத்ரிகாஸ்ரமம் சென்று தவம் புரியக் கூறியதால் அவர் இங்கு வந்து தவம் செய்தார். ஆதிசங்கரர் இங்கு வழிபாட்டை நடத்தியதோடு பூஜை கிரமங்களையும் வகுத்தார். இன்றும் கேரள நம்பூதிரிகளே இங்கு பூஜை வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
பத்ரிநாத்தின் தென்மேற்காக 10 கிலோமீட்டர் சென்று மலையைப் பார்த்தால் அது அப்படியே இந்திய வரைபடத்தைக் காட்டும் காட்சி அதிசயத்திலும் அதிசயமான ஒரு காட்சியாகும். இப்படி ஏராளமான சிறப்புகளும் வரலாறுகளும் உள்ள இந்தத் தலத்திற்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பத்ரிநாராயணரும் மஹாலக்ஷ்மியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
“வருந்திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்துள்ளானை
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலி செய்த பனுவல்