திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2

Written by London Swaminathan

Post No. 15,365

Date uploaded in Sydney, Australia –  27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்

(திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்ப் பாடல்கள்)

நான்கு வகைக் கவி பாடிய ஞான சம்பந்தர் = முருகப் பெருமான்

மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார … மிகுந்த

பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்துதேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே,

தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு – எதுகை மோனையுடன் கூடியது,

மதுரம் – இனிமை வாய்ந்தது,

சித்திரம் – கற்பனையும் அழகும் மிக்கது,

வித்தாரம் – வர்ணனை மிக்கது.

***

மக்கள் பற்றி அருணகிரிநாதருக்கு வியப்பு!

காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே … காமத்தாலும்,

கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின்

சேஷ்டைகளாலும்

அழிகின்ற மாயா காயத்தே … அழிகின்ற மாயையான இந்த

உடல் மீதும்,

பசு பாசத்தே … இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப்

பற்றுக்களின் மீதும்

சிலர் காமுற்றேயும் அதென்கொலோதான் … சிலர் ஆசைகொண்டு

இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை!!

***

ஹோமம் செய்தால் சிவலோகம் கிட்டும் !

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே … வேள்வித்தீயை

தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே

தரு மங்கைபாலா … தருகின்ற உமாதேவியின் குமாரனே,

யோகத்து ஆறு உபதேசத் தேசிக … யோகவழிகளை உபதேசிக்கும்

குருமூர்த்தியே,

ஊமைத் தேவர்கள் தம்பிரானே. … உன் முன்னே வாயில்லா

ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.

***

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது உண்மையே !

புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்

புவி அதனில் வாழ்ந்து … சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ்

நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில்

வாழ்ந்தும்,

வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ்

பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு

வந்தித்திடுவேனோ … பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,

பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்)

புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி

மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ?

***

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. … அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.

***

மனிதர்களைப்பாடும் புலவர்கள் மீது கண்டனம்

சிறு தமிழ்த்தென்றலினுடனே … மெல்லிய இனியதமிழ்த் தென்றல் காற்றினுடன் வந்து

நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் … சந்திரன் நின்று

கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,

எனப்புன்கவி சிலபாடி … என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி

இருக்குஞ்சிலர் … சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே … திருச்செந்தூரில்

எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?

***

செல்வந்தர்களைப் புகழ வேண்டாம்

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து … பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து,

பாருளோரை நூறு செஞ்சொல் கூறி … உலகில் உள்ள

செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி,

மாறி விளைதீமை … புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து,

நோய்கலந்த வாழ்வுறாமல் … பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல்,

நீகலந்து … நீ எனது அறிவில் கலந்து

உள் ஆகு ஞான நூல் அ டங்க … உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும்

ஓத வாழ்வு தருவாயே … ஓதி உணரக் கூடிய வாழ்வைத்

தந்தருள்வாயாக.

***

கண்டவர்களைப் பார்த்து  நீயே இந்திரன், நீ தான் குபேரன் என்று பாடும் நிலை வேண்டாம்

நிதிக்குப் பிங்கலன் … செல்வத்துக்கு குபேரன் என்றும்,

பதத்துக்கு இந்திரன் … நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,

நிறத்திற் கந்தனென்று … பொன் போன்ற நிறத்துக்கு

கந்தப்பெருமான் என்றும்

இனைவொரை … கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,

நிலத்திற் றன்பெரும் பசிக்கு … இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு

தஞ்சமென்றரற்றி … நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

துன்பநெஞ்சினில் … துயரம் மிகுந்த மனதில்

நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து … தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,

சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் … சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற

புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு … புலன்களால் வரும்

துன்பங்களைத் தொலைத்து,

உன்பதம் புணர்க்கைக்கு … உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய

அன்புதந்தருள்வாயே … அன்பினை வழங்கி அருள்வாயாக.

***

அனுமார் , நாரதர் பற்றி

பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடி …

முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து,

பாவியி ராவணனார்தலை சிந்தி … பாவியாம் ராவணனுடைய

தலைகள் சிதறவும்,

சீரிய வீடணர் வாழ்வுற … உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும்

செய்து,

மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு

இனியோனே … மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய

மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே,

சீலமு லாவிய நாரதர் வந்துற்று … நல்ல குணங்கள் நிறைந்த

நாரத முநிவர் உன்னிடம் வந்து,

ஈதவள் வாழ்புன மாமென முந்தி … இதுதான் அவ்வள்ளி வாழும்

தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று,

***

ஆறே எழுத்து போதும் (சரவணபவ)

உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம்

தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில்

நினைந்திட அருள்வாயே … அழிவில்லாத (சரவணபவ என்னும்)

ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும்,

திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக்

கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக.

***

சிவ பெருமானுக்கும் துளசி உண்டு !

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம்

சடா பஞ்சரத்து உறு தோகை சிந்தையே … நிலவு, ஆத்தி,

கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே,

–subham—

Tags- அருணகிரி நாதர் சொல் அழகு, பொருள் வளம், Part 2, அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள், துளசி, நாரதர், புலவர்கள் மீது கண்டனம் , நான்கு வகை கவிதைகள், அனுமார்

இல்லறத்தான் சிறப்பு! (Post No.15,364)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,364

Date uploaded in London – 26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

இல்லறத்தான் சிறப்பு!

ச. நாகராஜன் 

வீடு என்பதன் இலக்கணம்! 

யத்ர நாஸ்தி ததிமந்தநகோஷோ யத்ர நோ லகுலகூனி சிசூனி |

யத்ர நாஸ்தி குருகௌரவபூஜா தானி கிம் பத் க்ருஹாணி

வனானி ||

எங்கே தயிரை மத்தால் கடையும் ஓசை எழவில்லையோ,

எங்கே சின்னக் குழந்தைகள் இல்லையோ,

எங்கே குருவைக் கௌரவித்து பூஜை நடைபெறவில்லையோ,

அது வீடா அல்லது காடா?! 

வளம் ஓங்கும் குடும்பம் எது?

சந்துஷ்டோ பார்யயா: பர்த்தா பர்த்ரா பார்யா ததைவ ச |

யஸ்மின்னேவ குலே நித்யம் கல்யாணாம் தத்ர வை த்ருவம் ||

எங்கே மனைவியால் கணவன் சந்தோஷமடைகிறானோ, கணவனால் மனைவி சந்தோஷமடைகிறாளோ, அப்படிப்பட்ட குடும்பத்தில் நிச்சயமாக வளமே ஓங்கும். 

இல்லறத்தான் சிறப்பு! 

யஸ்மாத்ரயோப்யாஸ்ரமிணோ தானேநான்னேன சாந்வஹம் |

க்ருஹஸ்தேனைவ தார்யந்தே தஸ்மாஜ்யேஷ்டாஸ்ரமீ க்ருஹி ||

(பிரமசர்யம், வானப்ரஸ்தம், சந்யாசம் ஆகிய) மூன்று நிலைகளில் உள்ளவர்கள் தானங்களாலும், உணவினாலும், மற்றவற்றினாலும் வழக்கமாக இல்லறத்தில் இருப்பவர்களால் ஆதரிக்கப்படுவதால் மற்றவர்களை விட அவர்களே உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

 சீலமுடைய மனைவி!

சீலபாரவதீ காந்தா புஷ்பபாரவதீ லதா |

அர்தபாரவதீ வாணீ பஜதே காமபி ஸ்ரியம் ||

அன்பிற்குரியவள் (மனைவியானவள்) ஒழுக்கமுடையவளாகவும் புஷ்பம் நிரம்பிய அழகிய கொடி போலவும், பேசுகின்ற வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியதாகவும் இருப்பின் அவை, வளம் பெற வழி வகுப்பவையாகும்.

 ஒழுக்கமான வாழ்க்கையே உயர்வைத் தரும்! 

சீலம் ரக்ஷது மேதாவீ ப்ராப்துமிச்சு: சுகத்ரயம் |

ப்ரஷம்ஸா வித்தலாபம் ச ப்ரேத்ய வர்கே ச மோதனம் ||

சுகத்தைத் தரும் மூன்று ஆதாரங்களான புகழ்செல்வம்இறப்பிற்குப் பின் சொர்க்க வாசம் ஆகிய மூன்றையும் விரும்பும் மேதாவியான ஒருவன் சீலமான வாழ்க்கையை நடத்துவான். 

சுத்தமான மூன்று! 

சுசி: பூமிகதம் தோயம் சுசிர்நாரீ பதிவ்ரதா |

சுசி: க்ஷேமகரோ ராஜா சந்துஷ்டோ ப்ராஹ்மண: சுசி: ||

பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நீர், பதிவ்ரதையான பெண்மணி, க்ஷேமத்தை நல்கும் அரசாட்சி செய்யும் ராஜா, திருப்தியுள்ள ஒரு பிராம்மணன் ஆகியோர் மிகவும் சுத்தமானவர்கள். 

தொடர்பினால் ஏற்படும் உயர்வும் தாழ்வும்! 

சந்தப்தாயஸி சம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ஜாயதே

முக்தாகாரதயா ததேவ நலிநீபத்ரஸ்திதம் ராஜதே |

ஸ்வாத்யாம் சாகரஷுக்திமத்யபதிதம் தஜ்ஜாயதே மௌக்திகம்

ப்ராயேணாத்யமமத்யமோத்தமகுண: சம்சர்கதோ ஜாயதே ||

சம்சர்கம் (தொடர்பு) 

சூடுபடுத்தப்பட்ட ஒரு இரும்பின் மீது விழுந்த நீர் காணப்படுவதே இல்லை. ஆனால் ஒரு தாமரை மலரின் மீது விழும் நீர் பிரகாசிக்கிறது. அதே நீர்த்துளி ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று கடலின் அடியில் உள்ள நத்தைக்குள் விழுந்தால் அது  முத்தாக மாறுகிறது.

இது தான் அதமர்கள், மத்யமர்கள், உயர்ந்தோர் ஆகியோருடனான தொடர்பில் விளையும் விளைவுகளாகும்.

**

Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38 (Post.15,363)

Written by London Swaminathan

Post No. 15,363

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Last Post-Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37 (Post.15,324);  Date uploaded in London –  30 December 2025)

சாமரமும் சடாரியும் Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

(English matter follows Tamil write up)

சாமரமும் சடாரியும்

பெருமாள் கோவில்களுக்குச் சென்றால் இரண்டு விஷயங்களைக் காணலாம் . ஒன்று சடாரி, இரண்டு சாமரம் ; இவைகளில் சாமரம் என்பது பொதுவானது. அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் இருபுறமும் சேவகர்கள் நின்று சாமரத்தை வீசுவார்கள் . சடாரி என்பது பெருமாள் கோவில்களில் பெருமாளைச் சேவித்த பின்னர் பக்தர்களின் தலையில் அர்ச்சகர்கள் வைப்பார்கள் .

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை வேண்டும்போது இறைவனின் திருப்பாதம் தங்கள் தலையின் மேல் பட வேண்டும் அல்லது பக்கதர்களின் காலிலிருந்து வரும் தூசி பாட வேண்டும் என்று வேண்டுகிறார்கள்; பக்தர்கள் காலில் உள்ள தூசி பாத தூளி எனப்படும்.

அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார் :

(அடியார்கள் தொழும் உன் பாதம் என் மீது பட வேண்டும்)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்

கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்

பதம் தந்து உனது அருள் தாராய்

***

ஆழ்வார்களில் நம்முடையவர் என்று நாம் உரிமை கொண்டாடும் ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். அவருடைய  உண்மைப் பெயர் சட கோபன் என்பதாகும்; இவரைத் தொடர்பு படுத்திச் சடாரிக்கு விளக்கம் தருகிறார்கள் ஆன்றோர்கள்.

சடாரி என்னும் உலோகத்தினால் ஆன கிரீடத்தில் பெருமாளின்/ விஷ்ணுவின் திருப்பாதங்கள் இருக்கின்றன . கோவிலில் பெருமாளின் தரிசனம் முடிந்து துளசியையும் தீர்த்தத்தையும் நாம் பெற்ற பின்னர், இந்த சடாரி என்னும் திருப் பாதத்தைத் நம் தலை மீது பட்டர்கள் வைக்கும்போது நாம் பய பக்தியுடன் நம் வாயையும் மூக்கினையும் கையால் மறைத்து தலையைக் குனிந்து காட்டவேண்டும். நம்முடைய வாயிலிருந்தும் மூக்கிலிருலிருந்தும் வரும் காற்றும் எச்சிலும் சடாரி என்னும் கிரீடத்தின் மீது படாமலிருக்க இப்படிச் செய்கிறோம். சங்கராசார்யார்கள், ஜீயர் போன்றோரை வணங்கும் போதும் இப்படிச் செய்யவேண்டும்.

இறைவனின் பாதங்களுக்கு தனி மதிப்பு உண்டு; உலகம் முழுதும் இந்துக்கள் வணங்கும் இடங்களில் பாத சுவடுகள் பதித்திருப்பதைக் காண்கிறோம். அவைகளை சிவன் பாதம் அல்லது விஷ்ணு பாதம் என்கிறோம். சில இடங்களில் ஆஞ்சனேயர் பாதம் இருப்பதாகவும் சொல்கிறோம். இமயம் முதல் இலங்கை வரை இதைக் காணலாம் இத்தகைய பாதங்களை ராமனிடம் பெற்ற பரதன் அவைகளைத் தலைமேல் சுமந்து சென்று 14 ஆண்டுகள் பூஜித்ததை நாம் ஓவியங்களிலும் பாடல்களிலும் சிற்பங்களிலும் காண்கிறோம். . இவ்வளவு மகிமை வாய்ந்தது இறைவனின் திருப்பாதங்கள்

இந்தப் பாதங்கள் உடைய கிரீடத்துக்குப் பெருமாள் கோவில்களில் சடாரி என்று சொல்வதற்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது; சடம் என்றால் நமது பிறப்பு , உயிர்வாழ்தல் என்று பொருள்; கருப்பையில் இருக்கும்போதும் அதை ஜடம் என்கிறோம் . இதை பஜ கோவிந்தம் முதலிய துதிகளில் காணலாம்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே .21

—பஜ கோவிந்தம் துதி

ஜடமாகப் பிறந்த நம்மாழ்வார் அந்த ஜடத்துக்குப் — பிறப்புக்கு எதிரியாக — அரி– ஆக ஆனார் . அரி என்றால் எதிரி, விரோதி என்று பொருள் . அவரை நினைவு படுத்தும் வகையில் சடாரி வைக்கப்படுகிறது என்பது ஒரு விளக்கம்.

ஆயினும் தமிழ் அல்லது சம்ஸ்க்ருத இலக்கணப்படி இது சரியாகத் தோன்றவில்லை ; எது எப்படியாகிலும் பெருமாளின் பாதங்கள் நம் தலை மீது படுவதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் . இது நம் தலையின் மீது படும்போது நாம் நினைக்கும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை

நம் நாட்டின் வடக்கில் விஷ்ணு கோவில்களில் இந்த வழக்கம் இல்லை . இது தமிழ் நாட்டு வைணவர்களின் கண்டுபிடிப்பு! அதுவும் நம்மாழ்வாரைத் தொடர்பு படுத்துவதால் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத்தான் வழக்கில் இருந்திருக்க வேண்டும் . இறைவனின் பாதங்கள் பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும் சடாரி பற்றிய பாடல்களோ கல்வெட்டுக் குறிப்புகளோ இருக்கிறதா என்பதை ஆராய்வது நமது கடமை.

***

சாமரம்

சாமரம் என்பது கவரிமான் அல்லது இமயமலை மாடுகளின் முடியிலிருந்தது தயாரிக்கப்படுகிறது. அரசர்கள் அல்லது தெய்வங்களுக்கு இரு புறமும் நின்று இதை வீசுவார்கள், அத்தோடு விசிறியையும் வீசுவார்கள் . மன்னர்களுக்கு வியர்க்காமல் இருக்கவும் கொசு அல்லது ஈ மொய்க்காமல் இருக்கவும் இந்த வழக்கம் தோன்றியிருக்க வேண்டும் . இப்போதும் அமெரிக்காவில் கால்பந்து முதலிய போட்டிகளில் சியர் லீடர்ஸ் Cheer Leaders இது போல சாமரம் வீசுவதைக் காணலாம்.

கவரிமான் என்பதை சாமரி என்றும் சொல்வார்கள். திருவள்ளுவரும் இந்த மானைக் குறிப்பிடுகிறார்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.   ( 969)

***

Cataari and Caamaram (chaamaram)

Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

Catari is shaped like a metal crown with two feet figures on it. The two feet figures represent Lord Vishnu’s feet. Vaishnavite temples have this and bless the devotees with it. After worshipping God in the Garbhagriha Mandapa, the Bhattacharyas or priests serve Tulsi and Theertham (holy water) and then bless the devotees by placing it on the head of the devotees.

 This custom has been in vogue from the days of Nammalvar , a famous Tamil Vaishnavite saint. Scholars say he was the enemy (ARI) of Jatam (catam in Tamil) and hence it is called Catari . Though Tamil or Sanskrit grammar do not support it, this explanation is accepted by the devotees.

The meaning of Jatam/ catam is as follows:

According to Vedanta, Jatam is a term that signifies the material world or physical existence. We come across Jata in Bhaja Govindam too.

पुनरपि जननं पुनरपि मरणं

पुनरपि जननी जठरे शयनम् |

इह संसारे बहु दुस्तारे

कृपयाऽपारे पाहि मुरारे ‖ 22 ‖

punarapi jananaṃ punarapi maraṇaṃ

punarapi jananī jaṭhare śayanam |

iha saṃsāre bahu dustāre

kṛpayā’pāre pāhi murāre ‖ 22 ‖

Birth again, death again, again resting in the mother’s womb! It is indeed hard to cross this boundless ocean of saṁsāra (cycle of repeated birth and death). O Murāri! by your causeless mercy please protect me (from this transmigratory process).

***

CAMARAM

Caamaram is fly whisk. It is used in the royal assemblies and temples. It is made up of the hair from a special type of deer or Tibetan Yak. Even Tiru Valluvar used it in his Tirukkural Couplet.

The yak, sheared of its hair, does not survive. The noble, stripped of their honour, prefer death – Tirukkural 969

or

Hair lost, the yak lives not. Honour lost, noble men leave their life-

Kural 969

On either side of a King on the throne or the god in the temple servants or devotees shake or show the fly whisks. Maybe it is to drive away the flies and mosquitoes. Even in America, we see cheer leaders showing something like fly whisks in sports matches.

In Hindu temples pair of Caamarams or fly whisks are used particularly during festival time. When the gods ae taken in procession, the devotees honour the god with the fly whisks.

–subham—

Tags -38Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38, சாமரம், நம்மாழ்வார், சடாரி, Catari, Caamaram, Fly whisk, Nammalvar,  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 

Written by London Swaminathan

Post No. 15,362

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1   (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் திருப்புகழ்)

Brahma, Somnathpur, Karnataka 

படைப்பவனும் துடைப்பவனும்!

படைக்கப் பங்கயன் … படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்

தாமரைமலர் மேவும் பிரமன்,

துடைக்கச் சங்கரன் … அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,

புரக்கக் கஞ்சைமன் … காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் – திருமால் 

***

முருகன் = திரு ஞான சம்பந்தர்

செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு

     மிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு

இடும் செம் தமிழ் அங்க வாயா … மிக்கு வந்த, வலிய சமணர்களை

பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே,

***

முருகனின் கொஞ்சும் தமிழ்

கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்

தமிழைப் பகர்வோனே … கொன்றை மலர் அணிந்த சடையுடைய

சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்

தெரியும்படி கொஞ்சு ம்  தமிழில் கூறியவனே,

***

அகஸ்தியன் = சிவபெருமான்

சிவனைநிகர் … சிவனுக்கு ஒப்பான

பொதியவரை முனிவன் … பொதியமலையைச் சார்ந்த முனிவன்

(அகத்தியன்)

அகமகிழ … உள்ளம் மகிழ

இரு செவிகுளிர … அவனது இரண்டு செவிகளும் குளிர,

இனியதமிழ் பகர்வோனே … இனிய தமிழை ஓதியவனே

***

கயிலை மலை = திருச்செந்தூர்

கயிலைமலை யனைய செந்தில் … திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில்

***

அலரிமதி,மகபதி,நிருதிநிதிபதி

அலரிமதி நடுவன் … சூரியன், சந்திரன், யமன்,

மகபதி முளரி … இந்திரன், அக்கினி,

நிருதி நிதிபதி … நிருதி, குபேரன்,

கரிய வனமாலி … கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,

நிலவுமறை … நிலைத்த பிரமன்,

***

நாரதர் புகழ்ந்த வள்ளி

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் … புலவர்கள் பாடிய

நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை … முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

****

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் = பிள்ளையார்

மூஷிகம் உந்திய ஐங்கர … மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து

கரத்தாரும்,

கணராயன் மம விநாயகன் … கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும்,

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி … விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த

கஜானன விம்பன் … யானை முகத்தை உடையவரும்,

ஒர் அம்புலி மவுலியான் … பிறைச் சந்திரனைத் தலைமுடியில்

தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி

உறு சிந்தை யுகந்தருள் இளையோனே … மிகவும் மனமகிழ்ந்து

அருளத் தக்க இளைய பெருமானே,

***

சங்கரன், சங்கரி, கங்கை–க்குப் புதல்வன்

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்

புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய் … உலகங்களை

எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு

இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே,

***

கண்ணன் குழல் இசைத்தால் புலியும் பசுவும் நட்பு பாராட்டும்! மலை உருகும்!!

Venu Gopala ,Somnathpur, Karnataka 

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை

முலை அமுது உ(ண்)ண … குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி

குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,

நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்

உருகா … பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்

பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,

நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட … நீண்ட

காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,

மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்

பறவைகள் நிலம் வர … மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,

விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய …

தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்

(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற

இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்

நெடியவன் மனமகிழ் மருகோனே … இசைகளால் பற்பல

நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்

பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,

***

பம்பரம் போல ஆடும் தேவி! 

Dancing Devi, Somnathpur, Karnataka 

பம்பரமேபோல ஆடிய சங்கரி … பம்பரம் போலவே சுழன்று

நடனம் ஆடும் சங்கரி,

வேதாள நாயகி … வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)

தலைவி,

பங்கய சீபாத நூபுரி கரசூலி … தாமரை போன்ற திரு நிறைந்த

பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்

தரித்தவள்,

பங்கமி லாநீலி மோடிபயங்கரி … குற்றமில்லாத கருநீல

நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்)

மாகாளி யோகினி … மகா காளி, யோகத்தின் தலைவியாகிய

அன்னை பார்வதி,

To be continued…………………………..

Tags- திருப்புகழில், அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளம்- Part 1   ,திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருப்புகழ்

நைமிசாரண்யமும், தண்டகாரண்யமும்! (Post No.15,361)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,361

Date uploaded in London – 25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நைமிசாரண்யமும், தண்டகாரண்யமும்! 

ச. நாகராஜன் 

தெய்வீக பாரத தேசத்தில் பல ஆரண்யங்கள் இதிஹாஸ புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஆரண்யங்களில் முனிவர்கள் தவம் புரிந்தனர். முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களுடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் இந்த வனங்களில் உள்ளன.

அவற்றில் நைமிசாரண்யம், தண்டகாரண்யம் ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.

 நைமிசாரண்யம்

நைமிசாரண்யத்திலேயே அனைத்து முனிவர்களும் தவம் செய்வதையும் பெரும்பாலான உரையாடல்கள் அங்கேயே நடைபெறுவதையும் பல்வேறு புராணங்களில் நாம் காண்கிறோம். நைமிசாரண்யம் ஏன் முனிவர்கள் அணுகும் இடமானது?

இந்தக் கேள்விக்கு விடையை சௌனக முனிவர் சூதரைப் பார்த்துப் பேசும் போது அறிகிறோம்!

    சௌனகர் சூதரைப் பார்த்துச் சொன்னது:-

“பிரமதேவர் எங்களுக்கு மனோகரமாகிய சக்கரத்தைக் கொடுத்து ஆக்ஞை ஒன்று செய்தனர். அதாவது நீங்கள் யாவரும் புண்ணிய க்ஷேத்திரத்தை  உத்தேசித்து இந்தச் சக்கரத்தின் பின்னே செல்லுங்கள்.இது எவ்விடத்தில் சிதறி விழுகின்றதோ அந்த இடம் தான் புண்ணிய பூமி. அந்த இடத்தில் ஒரு போதும் கலி தோஷம் அணுகமாட்டாது. ஆகையால் கிருத யுகம் வரும் மட்டும் நீங்கள் யாவரும் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருங்கள் என்று கட்டளையிட்டனர் .நாங்களெல்லாம் சகல தேசங்களையும் பார்க்க வேண்டுமென்கிற இச்சையினால் அவரால் சொல்லப்பட்ட கட்டளையை அங்கீகரித்து வேகமாய்ச் சுழன்று போகிற அந்தச் சக்கரத்தின் பின்னால் சென்று கொண்டிருந்தோம்.சுழன்று கொண்டே வந்த அந்தச் சக்கரம் இவ்விடத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் அதைப் பார்த்தோம்.அதனால் இந்த க்ஷேத்திரம் நைமிசம் என்ற பெயரைப் பெற்றது.இது மகா பரிசுத்தமானது.இவ்விடத்தில் கலியின் பிரவேசமே இல்லை.அதனால் என்னாலும் முனிவர்களாலும் மகாத்மாக்களாகிய சித்தர்களாலும் வசிக்கும் இடமாகக் கொள்ளப்பட்டது.”

                                                 -தேவி பாகவதம், மூதல் ஸ்கந்தம், 2ஆம் அத்தியாயம்

நைமிசாரண்யம் எங்கு உள்ளது?

 நைமிசாரண்யம் உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது 108 வைணவ திவ்ய ஸ்தலங்களுள் ஒன்று. இது கோமதி நதிக்கரையில் உள்ளது.

நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் என்று பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் என்பதால் இது நைமிசாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.

இங்கு தான் சௌனகர் 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர யாகத்தைச் செய்தார்.

இங்கு தான் வியாஸர் மஹாபாரதத்தை இயற்றினார்.

இங்கு தான் சுகர் பாகவதத்தை இயற்றினார்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலம் நைமிசாரண்யம்.

 தண்டகாரண்யம்

 தண்டகாரண்யம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியாகும். 92200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ராமர் தனது 14 வருட வனவாசத்தின் போது சில காலம் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் இங்கு தங்கி இருந்தார். இங்கு அவர் அகஸ்திய முனிவரைச் சந்தித்தார். முனிவர்கள் தவம் புரிந்து வந்த இந்த இடத்தில் அவர்களை அவர் பாதுகாத்தார். கர தூஷணர்களை வதம் செய்தார். சூர்ப்பநகையின் அங்கங்களை அறுத்தது, மாரீசன் மாயமானாக வந்தது, சீதையை ராவணன் தூக்கிச் சென்றது போன்ற ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டது தண்டகாரண்யம்.

வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் முழு வரலாற்றையும் படிக்கலாம்.

 தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி வந்தது?

 இக்ஷ்வாகு வமிசத்தின் முதல்வனான் இக்ஷ்வாகுவின் புதல்வர்களுள் ஒருவன் தண்டகா என்ற பெயரைப் பெற்றவன். இக்ஷ்வாகுவிற்குப் பிறகு அவன் விந்தியம் முதல் இமாலயம் வரை உள்ள பகுதியை அரசாள ஆரம்பித்தான். ஒரு முறை அவன் வேட்டையாடச் செல்கையில் சுக்ராசாரியாரின் புதல்வியான அராஜஸின் அழகில் மயங்கி அவளைக் கற்பழித்தான். இதைத் தந்தையிடம் அரா கூற அவர் வெகுண்டார். தன் மகளிடம் தவம் செய்யுமாறு கூறிய அவர் தீமழை பொழிந்து தண்டகனின் ராஜ்யத்தை அழிப்பதாகக் கூறினார். அதன்படியே இந்திரன் தண்டகனின் ராஜ்யத்தின் மீது தீ மழை பொழிய அவன் அழிந்தான். அவனது ராஜ்யமும் ஆரண்யமானது. அதுவே தண்டகாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.

 உத்தர ராமாயணத்தில் இந்த சரித்திரத்தை முழுவதுமாகப் படிக்கலாம்.

 **

Purananuru Wonders 6- Ancient Tamil Encyclopaedia Part 46 (Post No.15,360)

Tamil bards received Chariots and elephants from the kings.

Written by London Swaminathan

Post No. 15,360

Date uploaded in Sydney, Australia –  25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Last Post- Part 45-Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314) Date uploaded in London –  27 December 2025. We have seen up to verse 9 in Purananuru)

***

Purananuru Wonders 6- Ancient Tamil Encyclopaedia Part 46 (Post No.15,360)

Item 301

புறநானூறு பாடல்:10

பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.

பாடப்பட்டோன்- சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.

In verse 10 of Purananuru sung by Unpothi pasunkudaiyar, Choza king Ilam setchenni was praised.

Dandam, Amilthu/ amrit , Sila are Sanskrit words used by him. He composed other verses in this anthology- 203, 370, 378.

அமிழ்துதண்டம்சிலை (rock, Stone)

In verse 378, he gives us a Ramayana anecdote.

***

302

The Tamil words used by the poet in this verse such as

Vazipadu

Theemai

Amilzthu / amrit are used by

Tolkappiar as well.

வழிபடுதீமைஅமிழ்து

***

303

Bhagavad Gita lines 

Parithraanaaya saadhoonaam vinaasaaya duskrthaam is echoed by the poet

If you find fault with someone, punish him; if he regrets for his mistake, reduce the punishment– is the advice given by the poet to the king.

நீமெய் கண்ட தீமை காணின்,

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

வந்துஅடி பொருந்திமுந்தை நிற்பின்,

தண்டமும் தணிதி,

***

304

Sen vilangu is a cliché used by Nakkirar.

சேண்விளங்கு

***

305

புறநானூறு- பாடல்:11

Three interesting things are in this poem.

Pavai Figure made up of sand worshipped by girls on the river bank.

Jewellery made up of gold and silver

Name of the poetess having GHOST.

பாடல்:11

பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.

பாடப்பட்டோன்- சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

306

Name of the poetess is Ghost woman பேய்மகள். In the Bhakti / devotional poems we come across Peyaar Karaikkal Ammaiyar and Vaishnavite Alvar  Peyalvaar meaning ghost; we do not see such names for at least 1500 years. We don’t know why she got that epithet. This is a negative remark. Another poetess also has the name Ilaveyini. She has the prefix Kuramakal. This poetess is given the prefix  Peymakal/ Ghostwoman.

***

307

Paavai worship

We have two Bhakti poems Tiruppavai and Tiruvempavai. Tamil teenage girls go to rivers in the early morning and worship Kathyayani Devi to get good husbands. Paripatal poems also describe the PAVAI worship. Pavai means Doll or Figure. The girls make such figures in sand and worship them with flowers. Later they will be washed away by the river water. Tamil epic Silappdikaram also has a Pavai story. If it is made up of wood it is called Marappavai, colloquially Marappachchi.

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து

தண் பொருநைப் புனல் பாயும்

***

Jewellery

308

We find two references to jewellery. A woman singer (bard) was given golden jewellery to the weight of Kalanchu. Her husband was given golden lotus on a silver string.

வால் இழைமட மங்கையர்,

**

ஒள்அழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

***

309

More Jewelley

 Lotus neckace 

From this verse Puram 12 and the previous verse we get very precise information about the jewellery the bards received.  Poet Nettimaiyar is one of the oldest poets. Poet used a satire to praise the Pandya king Pal Yaka Salai Mudu Kudumi Peruvazuthi. The king harmed his enemies but gave joy to the bards by giving them jewellery. The king gave the bards Golden lotus and chariots and elephants with golden cloth on the forehead of the elephant

பாடல்:12

பாடியவர் : நெட்டிமையார்.

பாடப்பட்டோன்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

புறநானூறு 12பாடியவர் நெட்டிமையார்பாடப்பட்டோன் – பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

To be continued…………………

Tags – Bards, Jewellery, Pavai worship, Ghost woman, Sanskrit words, Lotus neckace

அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

ஹனுமார் படங்கள் 

Written by London Swaminathan

Post No. 15,359

Date uploaded in Sydney, Australia –  25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

திருப்புகழ் பாடலில் அனுமன் பற்றி நாம்  அறியாத விஷயம் ஒன்றை   அருணகிரிநாதர் சொல்கிறார். மேலும் அந்தப் பாடலில் வானர இனத்தின் ஒவ்வொரு தலைவரும் யார் என்ன அம்சம் உடையவர் என்ற தகவலையும் நமக்கு அளிக்கிறார் . இதோ திருப்பரங்குன்றத்தில் பாடிய திருப்புகழ் :

ஹனுமான் சிவ பெருமானின் அம்சம் உடையவர் என்பது புலவரின் துணிபு !

 : கருவடைந்து பத்துற்ற திங்கள்

     வயிறிருந்து முற்றிப்ப யின்று

          கடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

     முலையருந்து விக்கக்கி டந்து

          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து …… வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று …… பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் …… நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து …… புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் …… மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து

     உலகமும்ப டைத்துப்ப ரிந்து

          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த …… பெருமாளே.

***

கெளமாரம். காம் – இல் பொருள் எழுதியவர் திரு கோபால சுந்தரம் 

சூரியன் (ரவி)- சுக்ரீவன்

இந்திரன் – வாலி

பிரம்மன் – ஜாம்பவான்

நீலன்- அக்கினி

அனுமன் – ருத்திரன்

ஹரி, முகுந்தன் – ஸ்ரீ ராமன்

தேவர்கள்- வானர சேனை

***

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த

பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)

ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

***

பாடலின் முதல் பகுதி

பாடலின் முதல் பகுதியிலும் இப்போது வழக்கொழிந்த தகவலைத் தருகிறார் அருணகிரி;

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையைக் குளிப்பாட்டி காது குத்தி காதில் தோடும்/ கடுக்கனும்  இடுப்பில் ஐம்படைத் தாலி உடைய அரைஞாணும் கட்டுவது வழக்கம்; இப்போதெல்லாம் பிறந்தது முதல் ‘நாப்பி’யும் பின்னர் ‘ஜட்டி’யும் போடுவது வழக்கமாகிவிட்டது!

ராமாயணம், மஹாபாரதம் தொடர்பான பல அபூர்வ செய்திகளை நிறைய பாடல்களில் அள்ளித் தெரித்து இருக்கிறார் அருணகிரிநாதர்! !

–subham—

Tags- அனுமன் , அருணகிரிநாதர், அரிய தகவல், ஹனுமார் படங்கள் 

சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்! (Post.15,358)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,358

Date uploaded in London – 24 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்! 

ச. நாகராஜன் 

ஷீர்டிக்கு வருவதற்கு முன்னால் சாயிபாபா ஔரங்காபாத்திற்கு அருகில் உள்ள ஒரு காட்டில் வசித்து வந்தார். சாந்த்பாய் படேல் என்பவர் ஒரு சமயம் அவரைக் காட்டில் கண்டு பேயோ பிசாசோ என்று பயந்து விட்டார்.

பாபா, அவரை நோக்கி, “நான் பேயும் அல்ல, பிசாசும் அல்ல, வா, என் அருகில் வா” என்றார்.

சாந்த்பாய் பாபாவிடம், “எனது குதிரையை இழந்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. அதைத் தேடிக் கொண்டு வருகிறேன். அதைக் கண்டுபிடிக்காத வரை எனக்கு உணவே வேண்டாம்” என்றார்.

‘குதிரை இந்தப் பக்கம் வந்ததா, அதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று சாந்த்பாய் கேட்க உடனே பாபா தாம் அதை விரட்டவில்லை என்றும் தூரத்தில் உள்ள ஒரு வேலியின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது  

என்றும் கூறினார். அவர் கையைக் காட்டிய திசையில் சென்ற சாந்த்ராம் தனது குதிரையைக் கண்டுபிடித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாபாவிடம் வந்தார்.

சாந்த்பாயுடன் தூப்கேடா என்ற கிராமத்திற்குச் சென்ற பாபா அவர் இல்லத்தில் வசிக்கலானார்.

ஷீர்டியில் சாந்த்பாயின் மனைவியின் தம்பி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்தது. அப்போது பாபா மாப்பிள்ளை வரிசையுடன் சேரந்து ஷீர்டிக்கு வந்தார்.

ஷீர்டி கிராமத்தின் ஆரம்பத்திலேயே கண்டோபா கோவில் இருக்கிறது.

அது கிராமத்தை விட்டுச் சற்று விலகியும் அடர்த்தியான மரங்களின் அருகேயும் உள்ள கோவில்.

அதைப் பார்த்த பாபா அது தான் வசிப்பதற்கு உகந்த இடம் என்று அதைத் தேர்ந்தெடுத்து அங்கே வசிக்கலாம் என்று அங்கே சென்றார்.

ஆனால் அதைக் கட்டிய மகல்ஸாபதி பாபாவை உள்ளே விடவில்லை.

உடனே பாபா ஷீரடி ஊருக்குள் சென்று கோட் நீம் என்ற தித்திக்கும் வேப்பமரத்தைத் தான் வசிக்கும் இடமாக ஆக்கிக் கொண்டார்.

இரவும் பகலும் அங்கேயே இருக்க ஆரம்பித்த அவர் உணவருந்தும் வேளையில் மட்டும் ஷீரடி ஊருக்குள் சென்று அங்கிருந்த குறிப்பிட்ட் ஐந்து வீடுகளில் எதிரில் நின்று பிக்ஷை கேட்கலானார். அவர்களும் பிக்ஷை அளித்தனர்.

பின்னர் பாபா மழைக்காலங்களில் அங்கிருந்த ஒரு பாழும் மசூதியில்

தங்க ஆரம்பித்தார்.  அங்கு ஒரு பள்ளத்தைத் தோண்டி அக்னியையும் கட்டைகளையும் போட்டு நிரந்தராக்னியை ஸ்தாபித்தார்.

அன்று அவர் ஆரம்பித்த அந்த அக்னி இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.

அதற்கு துனி என்று பெயர்.

ஊரில் அவர் யாருடனும் ஆரம்பகாலத்தில் பேசவில்லை. யாருக்கேனும் வியாதி என்றால் அவர்களின் வியாதியைக் குணப்படுத்தி வந்தார். பூச்செடிகளை நட்டு கிடைக்கும் பூக்களை கோவில்களுக்குக் கொடுத்து வந்தார்.

இவரது கீர்த்தி சிறிது சிறிதாகப் பரவ ஆரம்பித்தது.

அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டவர்கள் அவர் ஒரு பெரிய மகான் என்று உணர ஆரம்பித்து வணங்க ஆரம்பித்தனர்.

நாளடைவில் ஷீர்டியின் பெருமை உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது.

இன்று ஷீர்டிக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று பாபாவின் அருளைப் பெற்று வருகின்றனர்.

**

WARNING TO VEGETARIANS IN AUSTRALIA

WARNING TO VEGETARIANS IN AUSTRALIA 

FROM HINDU POST

Upset Hindus seek apology from Mondelēz Australia for non-disclosure of beef in its various snacks

Upset Hindus worldwide are seeking official apology from Mondelēz International, “one of Australia’s largest food manufacturers” with “125-year history in Australia”, for non-disclosure of beef in some of its products; and immediate recall of all such items.,

Distinguished Hindu statesman Rajan Zed, in a statement in Nevada today, said that it was shocking for Hindus to learn that majority of its Pascall and The Natural Confectionery Co. products, which they had been eating for years, reportedly contained beef, while beef was not explicitly mentioned under the ingredients listed on the packages/boxes.

Zed, who is President of Universal Society of Hinduism, stated that the majority of its Pascall and The Natural Confectionery Co. products contained gelatine, but the source of gelatine was not mentioned under the “Ingredients” on packages/boxes. In a response to Zed, Raymond Jerard, Consumer Care Consultant of Mondelēz International, wrote: “majority of our Pascall and The Natural Confectionery Co. products do contain gelatine” and we “can confirm that the gelatine we use in our products is derived from beef”.

Consumption of beef is highly conflicting to Hindu beliefs. Cow, the seat of many deities, is sacred and has long been venerated in Hinduism; Rajan Zed points out.

It was a very serious issue for the devotees in Australia and would severely hurt their feelings if they would come to know that they were unknowingly eating beef-laced popular snacks, Zed noted.

Is this how Mondelēz, which claims “We deeply know our consumers”, wanted to follow through its “ambition” of providing “consumers with the right snack, for the right moment, made in the right way”; Rajan Zed wondered.

Zed further said that it was hard to comprehend that why Mondelēz; whose claimed purpose is to “empower people to snack right” with “high-quality snacks that nourish life’s moments, that consumers can feel good about”; did not mention explicitly under the ingredients on the package/box the source of gelatine used in its products.

Now was the time for Mondelēz, whose tagline is “snacking made right” and whose

“Mindful Snacking” strategy included “Providing clear labeling” and “Marketing responsibly in line with ethical standards”; to admit their error of not being transparent enough to mention in clear and simple terms what was inside the package/box so that an ordinary consumer could make right and appropriate choices, Rajan Zed indicated. Moreover, in future, Mondelēz should explicitly list beef in the ingredients on the pack/box when beef was present in the product, Zed added.

Hinduism was the oldest and third largest religion of the world with about 1.2 billion adherents and a rich philosophical thought and it should not be taken frivolously. No faith, larger or smaller, should be mishandled; Zed remarked.

Besides apologizing, Zed urged Mondelēz Australia President Toby Smith and Mondelēz International CEO Dirk Van De Put to recall all food items containing gelatine where source of gelatine was not clearly mentioned; and later replace these with items which markedly declared source of gelatin under the ingredients label.

Gelatine/gelatin is procured from various animal body parts and is usually used as a gelling agent in food (also used for clarification of vinegar, juices and wine). It can be from cows, pigs, fish, chicken, etc.; but there are animal-free and plant-based alternatives to gelatine, like seaweed extracts.

Mondelēz International, Inc.; one of the world’s largest snacking companies, claims to empower “people to snack right in over 150 countries around the world”. With 2024 net revenues of approximately $36.4 billion, it claims to “hold the #1 global position in biscuits (cookies and crackers) and #2 in chocolate”.

Mondelēz Australia, headquartered in Melbourne, is the custodian of iconic brands including Cadbury Dairy Milk, The Natural Confectionery Company, Oreo, Pascall, Olina’s Bakehouse and Philadelphia Cream Cheese. It operates six manufacturing sites in Suttontown (South Australia); Ringwood, Scoresby, and Croydon (Victoria); and Claremont and Burnie (Tasmania).

— Rajan Zed

Subscribe to our channels on WhatsAppTelegram &  YouTube. Follow us on Twitter and Facebook

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)

Written by London Swaminathan

Post No. 15,357

Date uploaded in Sydney, Australia –  24 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)

சென்ற இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில் நான்டியன் புத்தர் கோவில் முதலியவற்றைத் தரிசித்து எழுதினேன். இப்போதைய விஜயம் மூன்றாவது விஜயம் ஆகும் . புதிய இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் நேற்று சிட்னி சக்தி கோவிலுக்கும் அதற்கு முதல் நாள் லிஸ்கார் கார்ட்னஸ் என்னும் தோட்டத்துக்கும்  சென்று வந்தோம் . இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள்; அந்த இடத்தை அடைந்துவிட்டால் அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதுமானதாகும் .

Lisgar Gardens லிஸ்கர் கார்ட்ன்ஸ் 

லிஸ்கார் கார்ட்ன்ஸ்  என்பது  ஆறரை  ஏக்கர் பரப்புள்ள மரங்கள், புதர்கள் நிறைந்த பகுதி ஆகும்  . பெரிய ஷாப்பிங் மால்  உள்ள இடத்திற்கு அருகில் இருந்தாலும் காட்டுப் பகுதி போலவே உள்ளது

சுமார் 150  ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் மாக்ஸ் காட்டன் என்பவர் இந்த நிலத்தை வாங்கினார் அவருக்கு கமில்லியா மலர்களை மிகவும் பிடிக்கும் ஆகையால் 70  வகை கமில்லியா மலர்ச் செடிகளை வளர்த்தார்.  இந்த இடம் சம தரை இல்லாமல்  மேடும் பள்ளமும் நிறைந்தது; கீழே ஓடைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன சிறிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது .

இந்த இடத்தின் சிறப்பு வெறும் மலர்ச் செடிகள் மட்டுமல்ல. பல்லி , ஒணான் வகைகளில் ஒன்று நீரில் வசிக்கும் வகை ஆகும். இதை கிழக்கத்திய வாட்டர் டிராகன் என்பார்கள் மூன்று அடி நீளம் வரை வளரும் ராட்சதப் பல்லி இது. நாங்கள் போனபோது குட்டிகளை மட்டும் கண்டோம்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சுற்றிப்பார்த்து விடலாம் கானக நடைப் பயணம்   செய்ய விரும்புவோருக்கு புதர் வழிப் பாதைகளும் உள்ளன.

 ***

சிட்னி சக்தி கோவில் மிகவும் சிறியது ; 150  பேர்தான் கோவிலுக்குள் எந்த ஒரு நேரத்திலும் இருக்கலாம். மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில்  கோவில் இருப்பதால் காலையிலும் மாலையிலும் இரண்டு மணி  நேரம்தான் கோவிலைத் திறக்க வேண்டும் என்று நகர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. விழா நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடுதல் நேரம் திறந்திருக்கும் 

***

பிஜி என்னும் நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் 1990 முதல் பிரார்த்தனைக்காக சந்தித்தனர் . 2010- ம் ஆண்டு முதல் தற்போதைய இடத்தில் கோவில் இருந்து வருகிறது .

இதை துர்கா கோவில் என்றும் அழைப்பார்கள் ; முக்கிய சந்நிதியில் சக்தி தேவியும் இரு புறமும் பிள்ளையார், முருகன் சந்நிதிகளும் உள்ளன . சக்திக்கு முன்னால்,மீனாட்சி , சிவலிங்கம் ஆகிய மூ ர்த்திகளும் இருக்கின்றனர் ; இவை உள்ள மண்டபத்துக்கு வெளியே நவக்கிரக சந்நிதி , சிவலிங்கம், அனுமார் சிலைகள் இருக்கின்றன.

பெரிய ம ண் டபம் ஒன்று அய்யப்பன் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது  கோவிலின் சுவர்களில் எல்லா தேவிமார்களும் சுதை உருவத்தில் காட்சி தருகின்றனர்

கோவில் திறக்கும்  நேரம் குறைவானபோதும் பக்தர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டேன்; பலரும் அர்ச்சனைத் தட்டுகளுடன் வந்து அர்ச்சனையும் செய்தனர் ; ஒரே ஒரு குருக்கள் இருந்தார்.

எல்லா முக்கியத் திருவிழாக்களையும் கோவில் கொண்டாடுகிறது .

கோவிலின் விலாசம் கீழே உள்ளது:

Sydney Shakti Temple

271, Old Windsor Road, Old Toongbbie, NSW 2146.

Telephone- o2 9636 1171

Website – www.sydneyshakti.org

–subham—

Tags- ஆஸ்திரேலியா, பார்க்க வேண்டிய இடங்கள், சிட்னி நகர சக்தி கோவில், லிஸ்கார் கார்ட்ன்ஸ்,