மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் (Post No.9013)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9013

Date uploaded in London – – 9 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!

ச.நாகராஜன்

மஹா பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுள் ஒருவர் கிருபர். அவரது சகோதரி கிருபி.

இவர்களது வரலாறு ஆச்சரியமூட்டும் ஒன்று.

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.

கிருபரின் தோற்றம் எப்படி? பார்ப்போம்.

கோதமா என்ற மஹரிஷிக்கு சரத்வத் என்ற ஒரு குமாரர் இருந்தார். அவர் கையில் வில் பிடித்தவராக இருந்தார். வில்வித்தையில் ஆர்வம் உள்ள அவர் அதில் மிகுந்த தேர்ச்சியையும் பெற்றார். தன்னுடைய தவ மகிமையினால் சகல சாஸ்திரங்களையும் உணர்ந்தார். அஸ்திர சஸ்திர வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். இப்படிப்பட்ட முனிவரின் தவ வலிமையைக் கண்டு இந்திரன் மிகவும் பயந்தான்.

ஜாலபதி என்ற அப்ஸரஸை அழைத்து, “சரத்வத் ரிஷியினுடைய தவத்தைக் கலை; அதை அழிப்பாயாக” என்று உத்தரவிட்டான்.

அந்த அப்ஸரஸ் பூலோகம் வந்து சரத்வத் மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தாள். வில் அம்புகளுடன் விளங்கும் அந்த தவ ரிஷியைத் தன் அங்க லாவண்யங்களால் மயக்க ஆரம்பித்தாள்.

ஒப்பில்லாத பேரழகியாக விளங்கிய அவள் காட்டில் ஏகாந்தமாய் ஒரே ஒரு ஆடையையும் உடுத்திக் கொண்டு அவர் முன்னால் சென்றாள். அவளைக் கண்ட சரத்வத் மோகவலையில் வீழ்ந்தார். அவரது கையில் இருந்த வில்லும் அம்பும் நழுவின. அவர் மனம் ஆசை வசப்பட்டது.

என்றாலும் கூட தவ மகிமையினாலும் மிகுந்த பொறுமையினாலும் ஆசையை அடக்கிக் கொண்டார்.

ஆனாலும் அவரது ரேதஸ் அவரை அறியாமல் வெளி வந்தது. தனது வில், அம்பு, மான் தோல் ஆகியவற்றை விட்டு விட்டு அந்த அப்ஸரஸிடமிருந்து அவர் விலகி வேகமாக ஓடினார்.

அவரது ரேதஸ் நாணல்களின் மத்தியில் விழுந்து இரு பாகங்களாகப் பிரிந்தது. அவை இரு குழந்தைகளாக ஆயின.

அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த சந்தனு மஹாராஜன் அப்போது வேட்டையாடச் சென்றிருந்தான். அவனுடைய படை வீரன் ஒருவன் அந்த இரு குழந்தைகளைக் கண்டான். வில்,அம்பு, மான் தோல் ஆகியவை குழந்தைகளுக்கு அருகில் இருப்பதையும அவன் பார்த்தான். வில் வித்தையில் தேர்ந்த ஒரு பிராமணருடைய குழந்தைகளாக அவை இருக்க வேண்டும் என்று ஊகித்த அவன் குழந்தைகளையும் வில், அம்பு, மான் தோலையும் எடுத்துக் கொண்டான்.

நேரடியாக அரசனிடம் சென்று குழந்தைகளை, வில் அம்புடன் காண்பித்தான்.

குழந்தைகளைப் பார்த்த அரசன் இரக்கம் கொண்டு இவைகள் என் குழந்தைகளாகவே இருக்கட்டும் என்று கூறி அவற்றைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தான். இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண்; இன்னொன்று பெண்.

சாஸ்திரப்படி அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஜாதக நாம ஸம்ஸ்காரங்களைச் செய்த சந்தனு அக்குழந்தைகளிடத்துத் தான் காட்டிய கிருபையினால் ஆண் குழந்தைக்கு கிருபன் என்றும் பெண்குழந்தைக்கு கிருபி என்றும் பெயர் சூட்டினான்.

சரத்வத் ரிஷி ஞான திருஷ்டியினால் தனது இரு குழந்தைகளும் சந்தனு மஹாராஜாவின் அரண்மனையில் வளர்ந்து வருவதை அறிந்து கொண்டார்.

அரசனிடம் சென்ற அவர் தனது வம்சம் உள்ளிட்டவற்றை விவரித்து அந்த இரு குழந்தைகளும் தனது குழந்தைகளே என்று கூறினார்.

தனது குமாரனான கிருபனுக்கு தனுர் வேத சாஸ்திரங்கள் மற்றும் வேத, வேதாங்கங்கள் ஆகிய அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கிருபர் அனைத்திலும் வல்லவரானார்.

கிருபரிடம் திருதராஷ்டிரனுடைய நூறு புத்திரர்களும் பாண்டவர்கள் ஐவரும், யாதவர்களும், விருஷ்ணிகளும் இன்னும் பல தேசங்களிலிருந்து வந்த ராஜ குமாரர்களும் வில் வித்தையைக் கற்றுக் கொண்டனர்.

கிருபி பரத்வாஜருடைய புத்திரராகிய துரோணாசாரியாருக்கு விவாகம் செய்து கொடுக்கப்பட்டாள். கிருபிக்கும் துரோணருக்கும் பிறந்த புத்திரனே அஸ்வத்தாமன். அஸ்வத்தாமனும் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவரானார்.

துரோணர் வில் வித்தையில் தேர்ந்து அவரும் ஆசாரியராகி பலருக்கும் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தார்.

இந்த வரலாறு பாரதத்தில் உள்ளது.

சரத்வத் பற்றிய இன்னொரு வரலாறு பாகவதத்தில் காணப்படுகிறது. சத்யத்ருதி என்பவருடைய புதல்வர் சரத்வத் என்றும் அவர் ஊர்வசியைப் பார்த்ததினால் அவரது ரேதஸ் வெளிப்பட்டது என்றும் அதிலிருந்து பிறந்தவர்களே கிருபர், கிருபி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி மாறுபட்ட சரித்திரத்திற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த சரித்திரம் இன்னொரு கல்பத்தைச் சேர்ந்தது என்பதாகும்.

கல்பம் மாறுபடும் போது சிறு சிறு வேறுபாடுகளும் ஏற்படுகின்றன என்பதை இதிலிருந்து அறிய  முடிகிறது.

நாம் இப்போது இருக்கும் கல்பம் ஸ்வேதவராஹ கல்பமாகும்.

***

tags– சரத்வத் ரிஷி, கிருபர், கிருபி ,

HINDU SPEAKER FROM SOUTH AFRICA IN GNANAMAYAM BROADCAST (Post Bo.9012)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9012

Date uploaded in London – –8 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Mr Angajan, from Durban, South Africa , spoke to day in Gnanamayam broadcast from London. He explained the way he is spreading the Vedanta philosophy. His speech was a good and short introduction to Vedanta and the resources available from him. He has travelled to London many times and delivered talks to London audiences. This time he spoke from Durban.Even within a short time he gave relevant examples like Bamboo trees. They keep all the developments inside the tree and suddenly shoot out after fives years of internal development. Then it grows higher and higher at an enormous speed. His trainings conducted around the world help one to succeed in that way.

For those who want to get the resources for self-improvement and spiritual development may visit the following sites:–

Mrs Annapurani Panchanathan who has attended his talks in London introduced him

PROFILE OF M. K. ANGAJAN

M. K. Angajan hails from Kerala, in India, currently based in Durban South Africa. Angajan spent 20 years in the study, research and assimilation of Vedanta, Management Philosophy, spiritual literatures of the east and west, human values and the human mind from an early age. He inspires thousands of large and distinguished audiences internationally, on Management and Leadership philosophy, the path of self-development, life-management and fulfillment.

Angajan is an accomplished management philosopher, behavioral scientist, corporate consultant, author and much sought-after speaker. He conducts value-based Executive Development Workshops and Seminars for senior corporate personnel, business executives, entrepreneurs, professionals, political leaders, scientists and other professional groups. His workshops are based on time-tested ancient spiritual wisdom, management principles, psychological laws, moral and spiritual values, and universal laws. They are content-rich, practically orientated, applicable to day-to-day life and management, while remaining simple, inspiring as well as entertaining. He succinctly synthesizes the highest tenets of ancient wisdom with modern management thoughts as well as scientific laws and principles.

By introducing Angajan’s Self-development courses businesses have reported a happier workplace, improved efficiency, effective communication, boost in sales and productivity, increased creativity and better team spirit, decrease in absenteeism, and a decrease in human resource turnover.

His scientific rationale, practical approaches and impassioned presentations, have earned him the patronage of many reputed corporations and organizations including fortune 500 companies and several Business Schools internationally. They include among others: IBM, Mercedes Benz, The TATA group of companies – India, Reserve Bank of India, Indian Institute of Management, Fujitsu Siemens, Emirates – Dubai, Toyota, VW SA, Eskom SA, Illovo Sugar SA, Old Mutual, South African Police Services, Legal Aid Board SA, Independent Newspapers SA, Department of Education SA, Chambers of Commerce, Management Associations – India, And various Business Schools and Universities internationally.

Angajan has also spoken at the MDRT (Million Dollar Round Table) Annual meeting 2009 and in 2013 in the USA.

Angajan has authored a book entitled “VALUE SYSTEMS FOR SUCCESS” and released a number of CDs on various topics. Both media have received overwhelming success.  Angajan founded the Vedanta Center for Management and Leadership, in Poona, India and in South Africa.

CONTACTS: +00 27 32 943 1060, FAX. +27 86 5157011, CELL: +00 27 83 77 888 68

E-mail: angajan@spiritualq.com  Website: www.spiritualq.com

1. Website: http://www.lifemastery.vision

Tel:  +27 31 566 3735

Cell: +27 83 77 888 68

www.angajan.com

7-12-2020 MONDAY TENTATIVE PROGRAMME

Earlier the meeting began with a PRAYER BY PAVITHRA MAHESH FROM CHENNAI .

 LONDON BALASUBRAHMANYAN sang Gayati Vanamali of Sadasiva Bramendral.

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH WAS DELIVERED BY MRS SUJATHA RENGANATHAN AND IN TAMIL BY MRS VAISHNAVI ANAND.

KATTUKUTY SRINIVASAN FROM CHENNAI explained in detail the influence of Planet Mars also known as Angarakan and Sevvay. He explained the meaning of Sevvay/Angaraka Dosha. It was part of his Navagraha Series of Talks.

MRS DAYA NARAYANN SANG a  TIRUPPAVAI verse as part  of on coming Markazi Festival Period.

DR NARAYANAN  KANNAN CONTINUED HIS TALK  ON ALVARS AND TAMIL VAISHNAVAM.

Bharati song was delivered by S Suryanarayanan,  Former Principal of a college in Madurai.

—subham—-

tags- Angajan, 7-12-20 broadcast,

7-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post.9011-B)

Compiled BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 9011-B

Date uploaded in London – –8 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXXXX

Jagannath Temple administration filed FIR against Amazon for sale of  “Nirmalya Mahaprasad”

The Sri Jagannath Temple Administration in Puri on Thursday filed an FIR against Amazon India at Simhadwar police station for unauthorised sale of Nirmalya Mahaprasad on its shopping portal. 

Administrator AK Jena, in the FIRST INFORMATION REPORT, stated that the temple has not permitted anyone to sell the Mahaprasad online but the Nirmalya is found to be sold at an exorbitant rate on Amazon. Mahaprasad was available on Amazon for Rs 129. As per the record of rights, only the ‘temple cooks are authorised to sell the ‘Nirmalya Mahaprasad’ at the Aruna Stambha of the shrine.  

Nirmalya is the dried rice made in the temple. Unlike cooked Mahaprasad which can at best be preserved for a day, Nirmalya can be consumed for several days. When the cooked rice stock remains unutilised for the day, it is dried under the sun and made available to devotees in red cloth packets.

Xxxx

NEWS FROM ANDHRA PRADESH

KANCHI SHANKARACHRYA VISITED  TIRUPATI TEMPLE

Temple Honours accorded to Pujyashri Shankara Vijayendra Saraswati Shankaracharya Swamigal at Tirumala Sri Venkateswara Swamy Devasthanam on 2 Dec. 2020.

Acharya was received beneath the Ashwatta Vruksha at the Mettu Mandapam. Moving in a procession,Pujyashri Acharya  had darshan of Bedi Anjaneyaswami.

His Holiness rendered chamara Seva to Sri Venkateswara Swami at the sanctum sanctorum. Prasadams were offered. His Holiness accompanied Utsava murti procession around the main sannadhi. Acharya then went around the main Sannadhi in a procession with the temple umbrella and other honours.

Swamiji visited also the  Sampradaya Patashala and blessed the students. The Patashala is a unique institution that imparts traditional cultural education along with contemporary academics to girl students .

Xxxxx

MUSLIM GIRL OBTAINS Ph.D. IN SANSKRIT

A Muslim student has obtained a Ph.D. in the Sanskrit language from Gujarat University. Salma Qureshi chose to study the subject of the teacher-disciple tradition of India.

The 26-year-old woman was a student of Gujarat University‘s Sanskrit department and she had obtained her doctorate under the guidance of Atul Unagar. She was also the recipient of a gold medal during her MA from Bhavnagar University. She had graduated from Saurashtra University. Her doctoral research took almost three years as she had joined the Gujarat University PhD program in the year 2017.  

She said, “I was drawn to the Sanskrit language since I was in school. I liked studying the Vedas and the Puranas. My family did not have any objection to my taking up Sanskrit for my higher studies.”

Qureshi also said since Hindu religious scriptures are in Sanskrit, it is believed that it is the language of the gods. “I believe language has nothing to do with any religion. Students should have the freedom to choose in whatever language they want to study. I believe Sanskrit should be taught compulsorily. I want to become a teacher of Sanskrit “.

Xxxx

ONE MORE GOOD NEWS FOR HINDUS

The latest decision of Doordarshan to telecast a 15 minute  Sanskrit news bulletin  on its Tamil Channel  Podhigai,  is welcomed by all Hindus in Tamil Nadu.

Scholars point out that


Sanskrit   – is one of the scheduled languages in our Constitution
 – is one of the languages that news bulletins  on  DD/AIR for long  (on AIR since 1974 and on DD since 2016).
 – is the most ancient, perfect
 – is  mother of many languages

– is taught in UK’s  primary classes,

  • is taught in 14 universities across Germany
    and Sanskrit  has the most complete and systemized grammar among all classical languages.
  •  
  • XXX
  •  

ANOTHER INTERESTING NEWS HAS COME FROM UTTARKHAND

Superintendent of police of Bageshwar district in Uttarakhand administered a pledge in Sanskrit to guests at a wedding function to fight Covid-19 pandemic through adherence of disease containment guidelines.

SP Manikant Mishra arrived at the wedding to check if the Covid-19 guidelines issued by the administration for holding such functions were followed .

Since the wedding ceremony is an auspicious occasion and may convey the message deeply and effectively among the people, I chose the occasion to administer such a pledge to fight the pandemic in my area,” said Mishra.

Mishra said he had taken prior permission from the bride’s father who happily agreed and hailed the move.

XXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

—SUBHAM–

tags–  World Hindu News, 7-12–2020,

உலக இந்து சமய செய்தி மடல்7-12-2020 (Post.9011-A)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9011-A

Date uploaded in London – –8 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் ஏழாம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

தமிழகத்தில் உள்ள 35 கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு: ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை தகவல்

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் கடந்த 1970ம் ஆண்டு அரசாணைப்படி, அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவமனை பிரிவை ஏற்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

#இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் கணபதிசுப்ரமணியன் ஆஜராகி, ‘‘அரசாணைப்படி மக்கள் அதிகம் கூடும் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவ வசதி இருக்க வேண்டும்,’’ என்றார். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘தமிழகத்திலுள்ள முக்கியமான 35 கோயில்களில் முதல்கட்டமாக சித்த மருத்துவ பிரிவு துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்ததும், படிப்படியாக அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்,’’ என்றார். 

 இதையடுத்து அறநிலையத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

xxxxxx

நாகரீகமாக உடை அணிந்து கோவிலுக்கு வாருங்கள்

நாகரீகமாக, அதாவது சம்பிரதாயத்தை மீறாதபடி, உடை அணிந்து கோவிலுக்கு வருமாறு க்ஷிரடியிலுள்ள சாய் பாபா கோவில் நிர்வாகம்  பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது..


மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மராட்டியம், வெளிமாநிலம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

XXXX

திருக்கோவில் டி .வி. TV  தடை கோரி வழக்கு

திருக்கோவில், TV ‘டிவி’ துவங்க தடை விதிக்க கோரிய வழக்கில், ‘உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத் துறையின் கீழ், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்கள் பாதுகாப்பு, பராமரிப்பின்றி உள்ளன. கோவில்களின் முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, 8.77 கோடி ரூபாயில் திருக்கோவில், ‘டிவி’ துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

முதல் கட்டமாக நம் பாரம்பரியம், கலாசாரத்திற்கு சான்றாக உள்ள கோவில்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட இதர பணியாளர்களை நியமித்து, குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.

அதுவரை திருக்கோவில், ‘டிவி’ TV  துவங்க மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, ‘உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்’ என்றது.

XXXX

சம்ஸ்கிருதத்தில் டாக்டர்  (பிஎச். டி ) பட்டம் பெற்ற முஸ்லீம் மாணவி

குஜராத் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை மாணவி சல்மா குரேஷி .   இவர் சம்ஸ்கிருதத்தில் டாக்டர்  பட்டம்.பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்தியாவில் குரு – சிஷ்ய முறையிலான பாரம்பரிய கல்வி முறை குறித்து இவர் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சல்மா கூறும்போது, “வேதங்கள், உபநிடதங்கள், புராணங்களில் குரு – சிஷ்ய முறை குறித்து நிறைய கூறப்பட்டுள்ளன. பள்ளி படிப்பில் இருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆர்வமாக இருந்தேன். வேதங்கள், புராணங்களைப் படிப்பது பிடிக்கும். இதற்கு எனது குடும்பத்தினர் யாரும் தடையாக இல்லை. இந்தமத தத்துவங்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் உள்ளதால், இது கடவுள் மொழி என்று நம்பப்படுகிறது. ஆனால், மதத்துக்கும் மொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எந்த மொழியையும் படிக்க மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.. என்னைப் பொறுத்தவரையில் சம்ஸ்கிருதத்தை எல்லோருக்கும் கட்டாயமாகக் கற்றுத் தரவேண்டும். சம்ஸ்கிருத ஆசிரியையாக வேண்டும் என்பது எனது விருப்பம் ” என்றார்.

 

Xxxxx

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி தொடங்குகிறது

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி விழா, வருகிற டிசம்பர் 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

டிசம்பர் 29-ந்தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது.

டிசம்பர் 30-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை கோவில் ராஜ சபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.

xxxx

மகாதீபம் 11 நாட்கள் காட்சி தரும்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி ஏற்றப்பட்ட தீபம் டிசம்பர் 9ம் தேதி வரை காட்சி தரும்.

அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்.

TAGS–    உலக , இந்து சமய ,செய்தி மடல்7-12-2020,

மங்களம் தரும் அங்காரகன் !!!- Part 1 (Post.9010)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9010

Date uploaded in London – – 8 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TALK  BY KATTUKUTY SRINIVASAN  IN FACEBOOK.COM/GNANAMAYAM ON 7-12-2020.

VOICE RECORDING IS AVAILABLE AT GNANAMAYAM AND YOUTUBE.COM/GNANAMAYAM

நவக் கிரகங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவரும், சக்தி வாய்ந்தவரும்,

ஆண்மகனுமான அங்காரகனை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

செவ்வாய் என்றவுடன் செவ்வாய் தோஷம் என நினைத்து

அலறிப் புடைத்துக்கொண்டு, முகத்தை சுளித்துக் கொண்டு ஓடும்

அன்பர்களுக்கே இந்த விளக்கம் சமர்ப்பணம்……

வீரத்தையும் மங்களத்தையும்,அளிக்கும்செவ்வாயின் நற்குணங்களையும்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கு பரிகாரம் என்ன என்பதன்

விளக்கத்தை தயவுசெய்து

“tamilandvedas“-ஐ  நாளை பார்த்து நன்றாகப் புரிந்து கொள்ள

வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்

செவ்வாயின் பிறப்பு

உஜ்ஜைனி என்ற நகரத்தில் அந்தகாசுரன் என்ற ஒருவன் சிவனை் நோக்கி தவம் புரிந்து

என் இரத்தம் பூமியில் விழுந்தால், ஒவ்வொரு சொட்டிலிருந்தும், என்னை மாதிரி அசுரர்

தோன்ற வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அன்றிலிருந்து அந்த நாட்டிலிருந்த

முனிவர்களுக்கும், மக்களுக்கும் பிடித்தது பீடை. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல்

சிவனிடம் முறையிட்டனர்.

நானே வந்து அவனை ஹதம் செய்கிறேன் என வாக்களித்தார் சிவபிரான்.

சண்டையிடும்போது அவர் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத்

துளி அந்த அசுரன் உடலிலிருந்து விழுந்த ரத்தத்தை குடிக்க,

அசுரனைக் கொன்றார் சிவன். அந்த வியர்வைத்துளியை அவர் பூமா தேவியிடம்

ஒப்படைத்தார்.

அதுவே குழந்தையாக வளர்ந்தது.

குஜன் எனப் பெயர் பெற்றது.

செவ்வாய் பற்றிய மற்றொரு கதை

பரத்வாஜ முனிவர் நர்மதை ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஆற்றில்

குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகையின் மீது மோகம் கொண்டதால் ஒரு

குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தையை அப்படியே விட்டுச் செல்ல, அக்குழந்தையை

பூமா தேவி எடுத்து வளர்த்ததாகவும் ஒருகதை உண்டு.

#

பெயர் காரணம்

கு- என்றால் பூமி. ஜன்- என்றால் புத்திரன். ஆகையினால் குஜன்

எனப் பெயர் பெற்றார்.

சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார் குஜன்.உடல் நெருப்பாக

அனல் பறக்கவே, தவத்தை மெச்சி அவருக்கு நவக்கிரக பதவியை அளித்து

“சகோதரகாரகனாக” விளங்குவாய் என அவர் வரமளித்தார்.

அவர் தவத்தின் மகிமையால் உடல் நெருப்பான காரணத்தால் “அங்காரகன்” எனவும்

பெயர் பெற்றார்.

“அங்கார” என்றால் “தணல்” என அர்த்தம்…..

செவ்வாயின் வேறு பெயர்கள்

செந்தீ வண்ணன்,சேய், குருதி, வக்ரன்,பௌமன்,நில மகன்,அழலோன்,

ஆரல், உதிரோன், மங்களன், உக்கிரன், மகா காயன், அர்த்தன்,

சக்தி தரன்,த னப்ரதன், லோகிதாங்கன்

யுத்தக்கடவுள்!!!

கிரேக்கர்களும், ரோமானியர்களும் இவரை “GOD OF WARS”,

“ARIES” என்றும், மேலும் “விவசாயி” என்றும் கூறுகிறார்கள்.

செவ்வாயின் சிறப்பு

செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்,

ராணுவத்தில் உள்ள பெரிய அதிகாரிகள்

காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரிகள்

முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆவர்.

(சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று குரு கேந்திரத்தில் இருந்தால்

நாட்டை வழி நடத்திச் செல்லும் அசைக்க முடியாத தலைவராவார்.

சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று 6,7,9 க்குடையவர்கள் ஆட்சி

பெற்றிருந்தால், சிறுவயதிலேயே அரசியலில் புகுந்து அசைக்க

முடியாத தலைவராவார்……. இதை படிப்பவர்கள் உங்கள் பேரன் பேத்தி ஜாதகத்தை

உடனே பார்க்கவும் ஒருநாள் உங்கள் படமும்

பேப்பரிலும் T V யிலும் வரலாம்)

Top பொறியியல் (civil, elec, mech, electronics)வல்லுனர்கள்,

கண்டிப்பான நீதிபதிகள்,

முன்னிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள்,

எஸ்டேட் ஓனர்கள், விவசாயிகள்,

ரியல் எஸ்டேடில் முன்னிலை வகிப்பவர்கள்,

அறுவை சிகித்சை நிபுணர்கள்,

கால் நடை பராமரிப்பில் உள்ளவர்கள் (வெட்னரி டாக்டர்கள் உள்பட)

இவர்களின் யார் ஜாதகத்தை எடுத்துப் பர்த்தாலும் செவ்வாய்

மிக நல்ல நிலைமையில் இருப்பது தெரியும்!!!

சசிமங்கள யோகம்

மேலும், சந்திரனுக்கும் இவருக்கும் மிக நட்புண்டு.

சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தில்

இருந்தால் அதை “சசி மங்கள யோகம்” எனக் கூறுவார்கள்.

இடம், நிலம், வீடு, உடையவர்களாவர்கள். திருமணத்திற்குப் பிறகு

ராஜ யோகம்!!!

பெண்களுக்கே உண்டான “மாத விடாய்” யை தீர்மானப்பது செவ்வாயும் சந்திரனுமே……

சற்றேனும் மாறியிருந்தால் அதிக

ரத்தப் போக்கு, அல்லது குறைவாகுதல், முன் அல்லது பின் அல்லது விட்டு ஆதல்

எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறார்கள்.

(இதற்கும் பரிகாரம் உண்டு)

குரு மங்கள யோகம்

குருவுக்கும், செவ்வாய்க்கும் கூட மிக பரிச்சயம் உண்டு. இதை

“குரு மங்கள யோகம் “ என்று சொல்லுவார்கள். இந்த யோகம் உடையவர்கள்

பெரிய பெரிய கம்பேனி முதலாளிகள், தொழிற்சாலை அதிபர்கள், பல விதவருமானம்,

பலவித தொழில்கள் உடையவராய் இருப்பார்கள்.

செவ்வாயின் தாக்கம் சற்று குறைந்தால், கசாப்பு கடையில்,

Non veg hotelலில், தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தில்

வேலை செய்வார்கள்.

மிக நீசமாகி கெட்ட இடத்தில் இருந்தால், வெட்டு ,குத்து,

திருட்டு, கொள்ளை, ரௌடித்தனம்,கொலை குற்றங்களிலில்

ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் ஆவார்கள்.

TO BE CONTINUED………….

TAGS- செவ்வாய், அங்காரகன், MARS

கோவில்களில் ராகங்கள்! (Post N0.9009)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9009

Date uploaded in London – – 8 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கோவில்களில் ராகங்கள்!

ச.நாகராஜன்

பாரத தேசத்தில் இசைக்குத் தனி இடம் உண்டு.

72 மேளாகர்த்தா ராகங்கள் அடிப்படையான ராகங்கள். இதிலிருந்து உதயமாகும் ஜன்ய ராகங்களுக்கு கணக்கே இல்லை. சுமார் 30000 ராகங்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட பெர்முடேஷன் காம்பினேஷன் படி பல லட்சம் ராகங்கள் உருவாகக் கூடும்.

இவற்றின் பயனையும் நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

வியாதி போக ஒரு ராகம், உடம்பின் வலி போக ஒரு ராகம், எழுந்திருக்கும் போது ஒரு ராகம், தூங்க வைக்க ஒரு ராகம், அழுகைக்கு ஒன்று, ஆனந்தத்திற்கு ஒன்று, சக்தி பெற ஒன்று என்று இப்படி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதற்குரிய ராகத்தை நமக்குத் தந்துள்ளனர்.

அதே போல கல்யாணத்தில் பாட வேண்டிய ராகங்கள் உண்டு; ஒப்பாரிக்கு ஒரு இசை உண்டு.

கோவில்களில் பாட வேண்டிய ராகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆறு கால பூஜை என்பது நமது ஆலயங்களில் ஆறு தடவைகள் நடக்கும் பூஜை நேரத்தைக் குறிக்கும்.

ஒவ்வொரு கால பூஜைக்கு உரித்த ராகங்கள் உண்டு.

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டு மணி நேரங்களாகப் பிரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பாட வேண்டிய ராகங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணலாம்.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி முடிய

பூபாளம்

பௌளி

மலயமாருதம்

வலசி

நாதநாமக்ரியை

மாயாமாளகௌளை

காலை 6 முதல் 8 மணி  முடிய

பிலஹரி

கேதாரம்

கௌளிபந்து

ஜகன்மோஹினி

சுத்த தன்யாசி

காலை 8 முதல் 10 மணி  முடிய

தன்யாசி

அஸாவேரி

சாவேரி

ஆரபி

தேவகாந்தாரி

தேவமனோகரி

காலை 10 முதல் 12 மணி  முடிய

சுருட்டி

ஸ்ரீராகம்

மத்தியமாவதி

மணிரங்கு

பிருந்தாவன சாரங்கா

தர்பார்

பகல் 12 முதல் 2 மணி  முடிய

சுத்தபங்காளா

பூர்ணசந்திரிகா

கோகிலதிலகம்

முகாரி

கௌடமல்லார்

பகல் 2 முதல் 4 மணி  முடிய

நாட்டைக் குறிஞ்சி

உசேனி

ரவிசந்திரிகா

வர்த்தனி

ஹம்ஸாநந்தி

மந்தாரி

மாலை 4 முதல் 6 மணி  முடிய

பூர்வி கல்யாணி

பந்துவராளி

வசந்தா

லலிதா

சரஸ்வதி

சீலாங்கி

கல்யாணி

மாலை 6 முதல் 8 மணி  முடிய

சங்கராபரணம்

பைரவி

கரகரப்ரியா

பைரவம்

நாராயணி

ஹம்ஸத்வனி

கௌளை

இரவு 8 மணி முதல் 10 முடிய

காம்போதி

ஷண்முகப்ரியா

தோடி

நடபைரவி

ஹரிகாம்போதி

கமாஸ்

ரஞ்சனி

இரவு 10 மணி முதல் 12 முடிய

சிம்மேந்திர மத்யமம்

சாருகேசி

கீரவாணி

ரீதிகௌளை

ஆனந்தபைரவி

நீலாம்பரி

யதுகுலகாம்போதி

இரவு 12 மணி முதல் 2 முடிய

அடாணா

கேதாரகௌளை

பியாகடை

சாமா

வராளி

தர்மவதி

இரவு 2 மணி முதல் அதிகாலை 4 முடிய

ஹேமாவதி

இந்தோளம்

கர்நாடக தேவகாந்தாரி

ரஸாவளி

பாகேஸ்வரி

மோஹனம்

இந்தப் பட்டியலை பழநி நாதசுர வகுப்பார் தொகுத்து அளித்துள்ளனர். இது 1958, டிசம்பர் திருக்கோயில் இதழில் வெளி வந்துள்ள தொகுப்பு. இதில் 74 ராகங்கள் இருப்பதைக் காணலாம்.

இதே போல ராகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து நோய் தீர உள்ள ராகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அடுத்துக் காண்போம்.

 tags–கோவில், ராகங்கள், 

***

‘NAMASKAR’ FROM LONDON 6-12-20 (Post No.9008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9008

Date uploaded in London – –7 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

6-12-2020 SUNDAY PROGRAMME ON THAMIZ MUZAKKAM  (TAMIL THUNDER FROM LONDON)

1.PRAYER BY  LALITHA MALAR MANIAM FROM KUALALUMPUR, MALAYSIA

2.TAMIL SONG FROM BHARATI POEMS BY PAVITRA FROM CHENNAI

3.THIRUPPUGAZ PRESENTATION BY MRS JAYANTHI SUNDAR GROUP

3.a.Kumari Vidula Natarajan & mother Smt Harini Natarajan 

3.b.Smt Latha Murthy  

3.c.Srinivasan family :– Kumari Shreya Srinivasan, Smt Aruna Srinivasan; Sri Srinivasan 

4.LIVE SPEECH PLUS VIDEO CLIP BY LATHA KUMAR FROM DETROIT TAMIL SANGAM, USA- SHE SPOKE ABOUT  VIPULANANDA’S  YAAZ NUL- BOOK ON TAMIL LYRE.

5.INTRO BY MURALI RAJAGOPAL FROM MISCHIGAN, USA

VAISHNAVI ANAND INTRODUCED S. NAGARAJAN

6.TALK BY BENGALURU S NAGARAJAN- ON BHARATI’S GREAT POEMS

7.TAMIL SONG BY SARASWATHI  CHANDRASEKARAN

8.MRS BRHANNAYAKI SATHYANARAYANAN TALK ON PUDUCHERY MANAKKULA VINAYAKAR TEMPLE.

9.VAAZKA NIRANTHARAM BY MRS HARINI RAGHU AND MRS  UMASHANKAR JEYASHREE

XXXXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ONE MORE DAY.

54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS  IN NEW RAGAS.

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL ND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

tags- namaskar 61220

Xxxx  subham xxxx

மணக்குள விநாயகர் ஆலயம் (Post No.9007)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9007

Date uploaded in London – –7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து 6-12-2020 தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட

உரை!

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு 

கணபதி சரணம்!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  புதுச்சேரி என்றும், பாண்டிச்சேரி என்றும், இன்று அழைக்கப்படும் வேதபுரியில் எழுந்தருளியுள்ள மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் புதுச்சேரி நகரிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இது சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மணல் குளத்தின் மீது அமைந்துள்ளதால் இந்த ஆலயத்திற்கு மணக்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் அமைந்தது.

பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பேயே இந்த ஆலயம் இருந்து வந்திருக்கிறது. ஆகவே சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறைக் கொண்டுள்ள ஆலயம் இது.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரின் முன்னிரு கரங்கள் அபயம் அளிக்கின்றன. பின்னால் உள்ள இரு கரங்கள் பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி உள்ளன.

பெயருக்கேற்றபடி விநாயகர் குளத்தின் மீது இருப்பதால் நீர் சுரக்கும் ஆலயமாக இது உள்ளது. விநாயகருக்கு அருகில் ஒரு குழி உள்ளது. இதன் ஆழத்தை யாராலும் காணமுடியவில்லை. தொடர்ந்து நீர் மட்டும் இங்கு வற்றிடாமல் சுரக்கிறது.

விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக இங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

பெரிய ராஜகோபுரம் முழுவதுமே தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. இந்தப் பிள்ளையாருக்கு ஏழரை கிலோ தங்கத்தால் ஆன தங்க ரதமும் உண்டு; வெள்ளி ரதமும் உண்டு. தங்கத்தினால் அமைந்த கோபுரமும், தங்கத் தேரும் கொண்டுள்ள விநாயகர் ஆலயம் பாரதத்திலேயே இது ஒன்று தான்.

இந்த ஆலயத்தில் பள்ளியறை ஒன்று உள்ளது. பள்ளியறையில் இரவு பூஜை முடிந்தவுடன் விநாயகரின் பாதம் மட்டுமே உள்ள உற்சவ விக்ரஹம் பள்ளியறைக்குள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது. பள்ளியறையின் உள்ளே விநாயகரின் தாயார் சக்தி தேவியார் எழுந்தருளி இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பையும் கொண்ட கோவில் இது ஒன்று தான்.

மேலும் விநாயகரின் மனைவிகளாக சித்தி, புத்தி ஆகிய இருவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவமும் இங்கு உண்டு.

பிரெஞ்சுக்காரர்கள்  ஆயிரத்தி அறுநூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இங்கு வந்தனர். அவர்களில் ஆளும் சில பிரபுக்களுக்கு விநாயகர் கோவில் அங்கு இருப்பது பிடிக்கவில்லை.

கோட்டை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்ட அவர்கள் கோவிலை அகற்ற முனைந்தனர். உடனடியாக அங்கு வாழ்ந்து வந்த பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள அங்கிருந்து செல்லப் போவதாக அறிவித்தனர். இதனால் அரண்டு போன பிரெஞ்சு தலைமை அந்த எண்ணத்தைக் கைவிட்டது.

இருந்த போதும் ஆட்சியாளர்கள் இந்தப் பிள்ளையாரை அருகிலுள்ள கடலில் தூக்கிப் போடுமாறு  பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அப்படியே அவர்களும் நள்ளிரவில் பிள்ளையாரைக் கடலில் தூக்கிப் போட்டனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் தனது வழக்கமான இருப்பிடத்தில், ஆலயத்தில் அமர்ந்து, காட்சி அளித்தார் மணக்குளத்து விநாயகர்.

திடுக்கிட்ட ஆட்சியாளர்கள் விநாயகரின் மஹிமையை உணர்ந்து அவரைச் சரணமடைந்தனர்!;

பாண்டிச்சேரியின் பிரபலமான, கவர்னர் ஜெனராலான, டூப்ளே விநாயகரின் பெரும் பக்தரானார். அவர் உள்ளிட்ட பல வெள்ளையருக்கும் அருள் பாலித்ததால் வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரையும் மணக்குள விநாயகர் பெற்றார்.

மாபெரும் சித்தர்கள் இங்கு வந்து வணங்குவது வழக்கம். அவர்களில் தொள்ளைக்காது சித்தர் என்பவரும் ஒருவர். விநாயகரின் பேரருளுக்குப் பாத்திரமான அவர், தான் சமாதி அடையும் சமயம் அங்கேயே இருக்க விரும்பியதால் அவரது சமாதி, ஆலயத்தின் அருகிலேயே பக்தர்களால அமைக்கப்பட்டது.

மஹரிஷி அரவிந்தர், மஹாகவி பாரதியார் உள்ளிட்ட பல பெரியார்கள் வணங்கிய பிள்ளையார் மணக்குளத்துப் பிள்ளையார்.

பாரதியார் இவர் மீது விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை இயற்றினார். அற்புதமான நாற்பது பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலில் தான், “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்ற தன் அமர வரிகளை வடித்தார் அவர். “புதுவை விநாயகனே” என்றும்  “மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே” என்றும் போற்றிய அவர், “மங்கள குணபதி மணக்குளக் கணபதி நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்” என்று வேண்டினார்.

காலம் காலமாக ஆயிரமாயிரம் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் மணக்குள விநாயகர் அனைவருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.    

திரு ஆக்கும்  செய் கருமம் கைகூட்டும் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர் தம் கை! 

நன்றி. வணக்கம்.

tags- மணக்குள விநாயகர் ஆலயம்

பாரதியார் பா நலம்! (Post No.9006)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9006

Date uploaded in London – – 7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 6-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பா நலம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!

பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.

ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.

முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்

சிறப்பை மறந்து விட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த

வையம் முழுதும் இல்லை தோழி!   ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.

இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத  சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,

தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!

ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:

வெய்யோன் ஒளி தன்  மேனியின் விரி ஜோதியின் மறையப்

பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.

பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!

கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்

சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை

எற்றே தமிழில் இசைத்திடுவேன்.

மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!

ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:

வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்

வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்

அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து

ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!

எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!

இப்படிப்பட்ட அரும் கவிஞனை எப்படிப் போற்றினாலும் தகும்!

இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!

ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி

Thy Deep Eyes a Double Planet

என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!

குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,

சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवा लाख से एक लड़ाऊं, चिड़ियन ते मैं बाज तुड़ाऊं, तबै गुरु गोबिंद सिंह नाम कहाऊं“)

என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!

சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.

இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.

இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.

‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’       என்கிறார் இராமர்.

இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.

வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.

அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.

இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்

விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே

என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.

பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.

‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!

ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.

ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.

மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்று விட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்து விட்டான்

இந்திர தேவரும் காலில் விழும்படி

  என்னென்ன பாடி விட்டான் – அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்

வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு

   வாரிக் கொணர் என்றான் – அந்த

வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட

  வாரும் தமிழரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

  சேரத்துத் தந்தமென்றான் – இந்த

தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித் தேவன் என்பான்!

பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு

நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்

நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.

பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:

பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன் புதிய

அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

என்கிறார்.

நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.

பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.

இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்.   நன்றி வணக்கம்!

 TAGS- பாரதியார்,  பா நலம், 

****

PLEASE JOIN US TODAY — MONDAY 7-12-2020

TODAY’S MENU ON ‘GNANA MAYAM’ BROADCAST 7-12-20

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH  BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL  BY MRS VAISHNAVI ANAND

XXX

SPEECH BY SRI ANGAJAN IN ENGLISH.

SRI ANGAJAN IS FROM DURBAN, SOUTH AFRICA

XXXX

MR BALASUBRAMANYAN  SINGS KRTIS BY SRI SADASIVA BRAHMENDRAL, THE GREAT SAINT WHO HAS COMPOSED KRTIS IN BEAUTIFUL SIMPLE SANSKRIT.

MR KATTUKUTY SRINIVASAN SPEAKS ON PLANET MARS/ ANGARAKA AS PART OF HIS NAVAGRAHA SERIES.

MRS DAYA NARAYANAN SINGS ALVAR PASURAMS/ TIRUPPAVAI

MRS ANNAPURANI PANCHA NATHAN INTODUCES SRI ANGAJAN, OUR CHIEF GUEST SPEAKER .

WE BEGIN WITH A PRAYER FROM MRS PAVITHRA MAHESH FROM CHENNAI

XXXX

DR NARAYANAN KANNAN TALKS ON ALVARS AND VAISHNAVAM

XXXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER, 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ANOTHER DAY.

54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS  IN NEW RAGAS.

XXXX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

PRODUCER- LONDON SWAMINATHAN

TAGS – PUBLICITY 71220

XXXX SUBHAM  XXXX