GNANAMAYAM PROGRAMME ON 26 OCTOBER 2020 (Post.8863 a)

prayer by Ms Jayashree Umasankar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8863

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tevaram by Somasundaram 
Tevaram by Ramasubrahmanyam
Jayakanthan Sharma

FACEBOOK.COM/GNANAMAYAM PROGRAMME ON 26-10-20

1.PRAYER BY NEEDAMANGALAM MS. JEYASHREE UMASHANKAR

2.TEVARAM PRAYER BY SOMASUNDARAM AND RAMA SUBRAMANYAM- SONS OF NELLAI RAJA OF HEALTH CARE MAGAZINE

3.WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

4. WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

5. WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  MY MS VAISHNAVI ANAND

6. BENGALURU NEWS LETTER READ BY MS.BRAHANNAYAKI SATHYANARAYANAN

Ms Saraswathy Chandrasekaran

7.LISTENERS LETTERS READ BY MS.SARASWATHY CHANDRASEKARAN

8.Q AND A HINDUISM- ONE QUESTION ON BASKARARAYAR ANSWERED BY BENGALURU S NAGARAJAN

9.’ALVAR AMUTHAM’ BY DR. PROFESSOR NARAYANAN KANNAN

10.SONG BY MR.JAYAKANTHAN SHARMA OF AUSTRALIA

11.SONG BY MASTER SASWAT PRABHU OF LONDON

Dr N Kannan

12.PRODUCER – LONDON SWAINATHAN

Master Saswat Prabhu

tags – Gnanamayam 261020

–subham—

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு! (Post No.8862)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8862

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு!

ச.நாகராஜன்

தொடர்ந்து கொரானா காலத்தில் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

காலனுக்குக் கண் இல்லை என்பார்கள்; அதனால் தான் அவனுக்கு அந்தகன் என்று பெயர்!

நண்பர் திரு ராகவேந்திர ராவின் மறைவுச் செய்தியை 24-10-20 காலை கேட்டவுடன் மனம் துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. காலனுக்குக் கண் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க மனம் தூண்டியது!

மானனீய கோபால்ஜி மறைந்து சில நாட்களே ஆகி இருக்கின்றன; அதற்குள் இன்னுமொரு இழப்புச் செய்தி!

அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் மதுரை சிம்மக்கல் ஷாகாவைச் சேர்ந்த ராகவேந்திரனும் ஒருவர்.

ஆர் எஸ் எஸ் -இன் சிம்மக்கல் ஷாகா மதுரையில் விறுவிறுப்பாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியிலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் இயங்கிய போது ஏராளமான அரும் ஸ்வயம்சேவகர்கள் அதில் தினமும் தவறாமல் வருகை புரிவர். அவர்களில் பலரும் இன்று பெரிய நிலைகளில் உலகெங்கும் உள்ளனர்.

ராகவேந்திரன் சேதுபதி பள்ளியில் அப்போது மாணவர். திரு சிவராம்ஜியால் கண்டெடுக்கப்பட்ட அவர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் சங்க பிரசாரக்காகவே ஆகி விட்டார்.

இனிமையான முகம். கடுஞ்சொல்லே பேச முடியாத ஒருவரைப் பார்க்க முடியுமா? முடியும் – ராகவேந்திரனே அதற்கு உதாரணம்.

மெல்லிய குரலில் எளிமையுடனும் பணிவுடனும் அன்புடனும் அனைவரிடமும் பழகுவது அவரது இயல்பாக ஆகியிருந்தது.

தேனி உள்ளிட்ட வட்டாரங்களில் அவர் ஷாகாக்களைத் தொடங்கி அரும் பணி ஆற்றினார்.

பின்னர் ஐயப்பன் கோவிலில் பணி; அத்துடன் ஒரு அனாதை இல்லத்தையும் அவர் இயக்கிப் பாதுகாத்து வந்தார்.

அந்த அனாதை இல்லத்திற்குச் செல்லும் ஒரு நல் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

எங்கள் குடும்பத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்; கள்ளம் கபடில்லாமல் இயல்பாக குடும்பத்தில் ஒருவராக அவர் ஆகியிருந்தார்.

மிகப் பெரும் சாணக்யர் என்று மதிக்கப்பட்டவரும், பிரபல வக்கீலானவரும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கேரள, தமிழ்நாட்டுத் தூண்களில் பிரதானமானவருமான மானனீய அண்ணாஜியின் அபிமானம் பெற்றவர் ராகவேந்திர ராவ். வடக்கு வெளி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலும் மாலையிலும் அவரை தினசரி சந்திப்பது பாட்டரியை சார்ஜ் செய்வது போல இருக்கும்; அரும் ஆற்றலைப் பெறும் வாய்ப்பாக இருக்கும். இதில் முதல் ஆளாக இருப்பவர் ராகவேந்திர ராவ் அவர்களே!

எந்தப் பணி என்றாலும் களத்தில் முதல் ஆளாக இறங்குவது அவர் பழக்கம்.

அவர் சிரித்த முகத்தை இனிப் பார்க்க முடியாது; அவர் இனிமையான மென்மைக் குரலை இனி கேட்க முடியாது என்பது அவரை அறிந்திருக்கும் எல்லோருக்கும் ஆழ்ந்த துயரத்தைத் தரும். 

பிரம்மசாரியாக இருந்து தேசப்பணியில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் என்பதால் பாரத அன்னை ஒரு முழு அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட மகனையும் இழந்து விட்டாள் என்பதே உண்மை!

அவர் ஆன்மா சாந்தி அடைய அன்னை மீனாட்சியை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

tags —  ராகவேந்திரன், , MADURAI RSS

***

TAMIL WORDS IN ENGLISH – PART 12 (Post No.8861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8861

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 12

WORDS BEGINNING WITH ‘H’ ARE CONTINUED…………………….

H.31.HOT- SHOT= SHUUTU IN TAMIL; H=S சூடு

H.32.SHOOT, SHOT – SUDU WITH A GUN; H=S சுடு

H.33.HANG/HUNG – THONGU; THUUKKU தொங்கு, தூக்கு

H.34.HEAR – KEL; R=L கேள்

H.35.HOOM – HUM-KAR IN ANSKRIT; UUUU SOUND ஹும் – கார , ஊஊ ,

H.36.HOWL- UUUULAI ஊளை

H.37.HOROSCOPE – ORAI FOR HOUR; HORA SASTRA CHART ஓரை ; ஹோரா சாஸ்திரம்

H.38.H/OLE – TOLAI/ TULAI ALSO OOTTAI தொளை , துளை

H.39.HUBRI – KUPPAI; ALSO UPAI = EVRYTHING EXTRA; OR IN EXCESS குப்பை, உபரிப் பொருள்

H.40.HAM – GRAAMAM IN SANSKRIT; USED IN ALL INDIAN LANGUAGES FROM RIG VEDIC DAYS; HAM IS IN ENGLAND AS BIRMING/HAM, EAST/HAM, NOTTING/HAM ETC. GRAMANI- VILLAGE OFFICIAL IS ALSO IN VEDAS கிராம், கிராமம், ஹாம், பர்மிங்ஹாம், நாட்டிங்ஹாம்

H.41.HELLO – ALAA IN SANGAM TAMIL LITERATURE; AALOLAM, HALA, HELA, ELA, EDI IN SANSKRIT ALSO ஹலோ, எலா , ஏலா , ஏடி

H.42.HAWK/ HORUS – KALUGU; KAZULGU= GARUDAN IN SANSKRIT ; R=L

ALSO KARULAN, KALULAN IN , 1300 YEARS OLD DEVOTIONAL VERSES கரு-டன் , கரு-ளன் , கலுழன் (ஆழ்வார் பாடல்கள்), கழுகு ; ஹோரஸ் /எகிப்திய தெய்வம்

H.43.HUNCH – KUUN; KOONI கூன் , கூனி ,

H.49.H/OLD – UDAIYA உடைய, உடையார்,

H.50.HARAKIRI/JAPANESE – KIIRI ARU கீறி அறு

H.51.HELL – ALARU அளறு ,

H.52.HILL – GIRI; R=L கிரி /ஹிரி

H.53.HOOK- UUKKU, KOKKI ஊக்கு , கொக்கி

H.54. HIP- IDUPPU, இடுப்பு

H.55. HECKLE- KELI, EKKAALAM, ELANAM, கேலி/செய் ,கெக்கலி, கொக்கரி, எக்காளம் , ஏளனம்

H.56. HANDSOME- AMSAMAANA ; SANSKRIY WOD GREEVA, அம்சம்/ அம்சமான

HORSE IS ASVA; ANOTHER  DERIVATION HORSE- HAYA AS IN HAYA

அஸ்வ= ஹய

–subham—

TAGS – TAMIL WORDS -12 

KNIFE AND WIFE பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை…… நம்பாதே! (Post.8860)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8860

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Compiled by Kattukutty

கணவனின் வாயைப் பூட்டி அதன் சாவியை வைத்திருப்பவளின்

பெயர் மனைவி!!!

XXX

பேன்களின் குடியிருப்பான கூந்தலைப் பிடித்துக் கொண்டு

இயற்கை மணம் உண்டு தானே இதில் என்று  அதட்டிக்

கேட்பவளே மனைவி !!!

XXXXX

பணத்தைச் செலவழிப்பது எப்படி என்ற கேள்விக்கு

இலக்கணமாவாள் மனைவி!!!

XXXX

ஒரு பொய் உண்மையாக வேண்டுமா? மனைவியிடம் அதை

ரகசியம் வெளியே சொல்லிவிடாதே என்று சொன்னாலே போதும்

XXX

கணவன் என்ற போட்டோவிற்கு மனைவியே நான்கு பக்கமும்

சட்டமாவாள்!!!

XXXX

மனைவி என்பவள் சுவற்றில் ஆணியில்லாமல் தொங்கும்

கேலண்டர்!!!

XXXX

மனைவியிடம் அதிக உண்மையும் சொல்லக் கூடாது

அதிக பொய்யும் சொல்லக் கூடாது

XXX

மனைவி என்பவள் நான்கு பக்கமும் வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட உருவம்

உண்மை வீரன் யார் தெரியுமா???

மனைவியின் பீரோவை அவள் முன்பே திறப்பவன்!!!

நல்ல கணவன் யார்????

சரி, சரி, சரி, சரி, சரி, சரி…………….(என்பவனே!)

XXXX

வாஷிங் கம்பெனிகாரர்கள் சர்வே எடுக்க வந்தார்கள்

மனைவியைக் கேட்ட கேள்வி – நீங்கள் துணி துவைக்க எதை உபயோகிக்கிறீர்கள்????

பதில் – என் கணவனை!!!

XXXX

மனைவி ஒரு மந்திரி

என்ன நான் சொன்னது சரியா???

மந்திரியை அடிக்கடி மாற்றலாமே???

XXXX

உன்னைப் பற்றித் தெரியவேண்டுமா???

உன் மனைவிடம் கேட்டுப்பார் உன் யோக்யதையை….

உன் மனைவியைப் பற்றித் தெரிய வேண்டுமா???

பக்கத்து வீட்டுக்காரியிடம் கேட்டுப்பார் அவள் யோக்யதையை!!!

XXXX

மனைவி புரட்டிப் புரட்டி செலக்ட் பண்ணினா புடவை

செலக்ட் பண்ணிட்டு புரட்டி புரட்டி எடுத்தா புருஷன்!!!

XXXX

நீ மனைவி வேணும்ன்னு நினைச்சா அது ஆசை

அதற்கு பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா

அது பேராசை!!!!

XXXX

மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து

சமாளிப்பவன் புத்திசாலி !!!

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே

சமாளிப்பவன் திறமைசாலி!!!

XXXX

அரசன் அன்று கொல்வான்!

தெய்வம் நின்று கொல்லும்!

மனைவி பேசியே கொல்வாள்!!!

XXXX

கல்யாணம் ஆகி மனைவி வந்த பின்

ஒண்ணு அடி விழும்,

இல்லேன்னா முடி விழும்…..

அவ்வளவுதாங்க வாழ்க்கை……..

XXXX

மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி,

கணவன் சொன்னால் மனைவிக்கு ருத்தம்

“ஊரிலிருந்து என் தங்கச்சி வரா”

XXX

பட்டுச்சேலை கட்டினா மனைவி உள்பட

எல்லா பெண்களுக்கும் எடுப்பாத்தான் இருக்கும்,

அதை வாங்கித்தர புருஷனுக்கு கடுப்பாத்தான் இருக்கும்

XXX

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணை விட,

நாக்குக்கு நயமா சமைக்கற பொண்ணுங்க தான்

ஆண்களுக்குத் தேவையாம் !!!

XXXX

யாரோ பெத்த பொண்ண மனைவியா த்துக்கிட்டு,

காலம் முழுவதும் சோறு போடும் உயர்ந்த உள்ளமே “ஆண்”

XXXX

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா KNIFE

இரு பக்கமும் ஷார்ப்பா இருந்தா WIFE!!!

(இத புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும் LIFE)

TAGS – KNIFE AND WIFE, பெண்களை நம்பாதே

                                 ***

பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1 (Post No.8859)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8859

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 26-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.  Facebook.com/gnanamayam

பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1

QUESTION ASKED BY MR SARAVANAN

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : பாஸ்கரராயரின் நூல்களின் சிறப்பு பற்றியும், அவை எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் தான்.

அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பெற்ற பெரிய மஹான் பாஸ்கர ராயர். மஹராஷ்டிரத்தில் பாகா என்ற ஊரில் இவர் அவதரித்தார். சிவதத்த சுக்லர் என்ற மகானிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசத்தை பெற்று அம்பிகையை நேரில் தரிசிக்கும் அளவு தவம் செய்தார்; அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து அருளினாள்.

அவர் வாழ்க்கையில் ஏராளமான மெய் சிலிர்க்கும் சம்பவங்கள் உண்டு. இரு சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒரு சமயம் அவர் மத்யார்ஜுனம் என்னும் திருவிடைமருதூரில் மஹாதானத் தெருவில் வசித்து வந்தார். அங்கு உள்ள தனது இல்லத்தில் தெருத்திண்ணையின்  மீது மாலை வேளைகளில் சாய்ந்து கொண்டு தனது பாதங்களை தூணிற்கு முட்டு வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது அவர் பழக்கம்.

ஒரு சமயம் அந்த ஊருக்கு அருகிலிருந்த வேப்பத்தூரிலிருந்து வந்த ஒரு சந்யாசி தினமும் பாஸ்கரராயரின் வீட்டு வழியே ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமியை தரிசிக்க கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாஸ்கரராயர் யதிகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதைப்படி அவர் வரும் போது எழுந்து நிற்பதில்லை. இதை தினமும் கவனித்து வந்த அந்த துறவிக்கு பாஸ்கரராயர் மீது கோபமும் துவேஷமும் ஏற்பட்டது.

ஒரு நாள் பிரதோஷ தினத்தன்று மாலை நேரத்தில் அந்த துறவியும் பாஸ்கரராயரும் நேருக்கு நேர் சந்திக்கும்படி நேரிட்டது. அப்போது துறவியார் பாஸ்கரராயரை இழித்துப் பேச ஆரம்பித்தார்.

பாஸ்கரராயர் அவரை அணுகி மிகவும் சாந்தமான குரலில், மற்ற இல்லறத்தாரைப் போலத் தாமும் அவரை நமஸ்கரித்திருந்தால் அவரது தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் அவரைக் காப்பாற்றவே தான் அப்படி நமஸ்கரிக்கவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.

அங்கிருந்தோர் அவர் சொல்வதை நம்பாமல் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அந்தத் துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் ஆகியவற்றை ஓரிடத்தில் வைக்கச் சொன்னார். பின்னர் அவற்றிற்கு அவர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். உடனே அந்த தண்ட, கமண்டலம், காஷாய வஸ்திரம் அனைத்தும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறின.

அனைவரும் பாஸ்கரராயரின் மஹிமையை உணர்ந்து அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிக்குமாறு வேண்டினர். துறவி அவரது மஹிமையை முற்றிலுமாக உணர்ந்தார்.

ஆனால் அன்று முதல் துறவி அந்தத் தெரு வழியே வரும் சமயம் பாஸ்கரராயர் அங்கு இருப்பதில்லை!

இன்னொரு சம்பவம் காசியில் அவர் இருந்த போது நடந்த ஒன்று. அவரது வித்வத் மஹிமையையும் தேவி அவர் மீது காட்டும் கருணையையும் அருளையும் புரிந்து கொள்ளாத சிலர் அவர் மீது மிகுந்த துவேஷம் கொண்டிருந்தனர்.

இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய பாஸ்கரராயர் தான் ஒரு பெரிய யாகம் செய்யப்போவதாகக் கூறி அதற்கு அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அங்கு சென்று அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிய த்வேஷிகள் குறித்த நாளில் யாகசாலையில் குழுமினர். ஆனால் யாகம் நடத்தப்பட்ட நேர்த்தியையும் அவரது தேஜஸையும் தபோபலத்தையும் கண்டு அவர்கள் வியந்து போயினர். என்றாலும் கூட இடக்கு மடக்காக கண்டபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

பாஸ்கரராயரோ மந்திர சாஸ்திர விற்பன்னராக இருந்ததால் கேட்ட கேள்விக்கெல்லாம் உடனுக்குடன் தக்க பதிலை அனைவரும் வியக்கும் படி கூறிக் கொண்டே வந்தார். இதையெல்லாம் உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற தேவி உபாஸகர் அனைவரையும் நோக்கி, “இங்கு இருக்கும் இவர் சாமான்யர் இல்லை. இவர் தோள்களில் அம்பாள் ஆரூடையாக அமர்ந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்றார்.

அங்கிருந்தவர்களில் நாராயண பட்டர் என்பவர் அப்படி அம்பாள் இருப்பது உண்மை எனில் தான் அம்பாளைத் தன் கண்களால் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். குங்குமானந்த ஸ்வாமி அவர் தரிசன பாக்கியத்திற்கு யோக்யதை கொண்டவர் என்பதையும் அவர் நோக்கம் தூய்மையானது தான் என்பதையும் நிச்சயித்துக் கொண்டார். பாஸ்கரராயரால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஜலத்தால் அவரது கண்களைத் துடைக்கச் சொல்லி விட்டு அவருக்கு சரியான திருஷ்டியை ஏற்படச் செய்தார். நாராயண பட்டர் பாஸ்கரராயர் தோளில் கிளியாய் அமர்ந்திருந்த அம்பாளைக் கண் குளிரக் கண்டு ஆனந்த பரவசம் அடைந்து கண்ணீர் விட்டார்.

பின்னர் அங்கிருந்த அனைவரும் பாஸ்கரராயரிடம் எதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று தமக்குள் விவாதித்தனர்.

எந்தப் புராணத்திலும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஒருமனதாக அவர்கள் முடிவு செய்தனர்.

*** தொடரும்

S NAGARAJAN OF BENGALURU ANSWERING QUESTIONS ON HINDUISM 

TAGS  பாஸ்கரராய-1 

TAMIL WORDS IN ENGLISH – PART 11 (Post No.8858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8858

Date uploaded in London – –26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

H SOUND DOESN’T EXIST IN MANY LANGUAGES INCLUDING TAMIL. SOFT SOUNDED TAMIL WORDS HAVE THESE H SOUND IN ENGLISH; IT MAY BE DUE TO THE ROOT WORD HAVING H SOUND OR THE SPEAKERS OF CERTAIN LANGUAGES USE H SOUND LIKE ARABIC

EXAMPLE-

HORSE- ASVA IN SANSKRIT

HARVEST – ARUVADAI IN TAMIL

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 11

WORDS BEGINNING WITH ‘H’ ARE GIVEN BELOW

H.1.HICCUP – VIKKAL; H=V விக்கல்,

H.2.HEA/VEN- VAANAM; H=V வானம்,

H.3.HALO- SALTY- KALAR NILAM களர் நிலம்

H.4.HERO – VEERA; SANSKRIT WORD; H=V வீரன்

H.5.HEURISKEIN- ARI/KNOW- GERMANஅறி ,

H.6.HORROR ;HORRENDUOS –  ARANDAN; ARATRUஅரண்டான் ,

H.7.HUM/ERE, HUMIDITY – IIRA- ஈர

H.8.HOLO/ WHOLE – MUZU/MULU முழு ,

H.9.HOLLOW- PALLAM; பள்ளம்,OOTTAIதுளை,

H.10.HORTARI; HOST –  AATHARI/SUPPORT ஆதரி/ ஹோதா  /யாகத்தில்

H.11.HONEY / BEE– THEN, THENEE தேனீதேன் தொல்காப்பியம்

H.12.H/ALF- ARAI அரை

H.13.H/ARD – ARITHU அரிதுஅரிஷ்ட/ அரில்

H.14.HARD/SHIP – ARIL IN TOLKAPPIAM; ARISHTA IN SANSKRITகரடு /முரடு

HARD/SURFACE- KARADU கரடு /முரடு

H.15.H/INDU – INDU; HINDU=SINDHU; H=S ஹிந்து=சிந்து= இந்து

H.16.HYPNO – SWAPNA/SOMNAMBULISM- H=S; SWAPNA IS SANSKRIT ஹிப்னோஸ்வப்ன சோம்னாம்புலிசம்;/தூக்க மின்மை 

H.17.HIGGELY PIGGELY – ESAGU, PISAGU இசகு/எசகு/பிசகு

H.18.H/AIR – MAYIR IN TAMIL; H=M மயிர்,

H.19.HONOUR – MAANAM;  H=M மானம் ,

H.20.H/EINOUS – EENATHTHANAM ஈனத்தனம்

H.21.HAUL – IZU/ ILU இழு,

H.22.HOME- A/HOME = AHAM IN TAMIL; IT IS IN SANSKRIT AS WELL அகம்

H.23.((HORSE – HRASVA= ASVA IS IN SANSKRIT. அஸ்வ

H.24.HORA – HOUR = ORAI ஹோரா – ஓரை IN TAMIL AND GREEK; HORA SASTRA IN SANSKRIT

BOTH THESE HORSE/ASVA AND HORA ARE ACCEPTED BY LINGUISTS.

THIS I GIVE AS LOGIC TO DERIVE TAMIL WORDS- IN THE SAME WAY THEY DERIVE SINNDHU/INDUS/HINDU ; IN THE SAME WAY THEY DERIVE HERMES IN GREEK FROM H.25.SARAMA IN RIG VEDA சரமா /ரிக் வேத நாய்= கிரேக்க ஹெர்மிஸ். IF THEIR APPROACH IS RIGHT THEN MY APPRACK IS ALSO RIGHT; H=S.))

H.26.HISTORY- CHARITA; SARITHTHIRAM IN TAMIL)) சரிதசரித்திர

H.27.HARRY – HARI/ HARAN ஹரி ஹரன்

ஹ= ச

ஹ சொற்களும் ச சொற்களும் பழந் தமிழில் தடை செய்யப்பட்டுள்ளது. அவை அ  அல்லது ம / மா – ஆக மாறுவதைக்   காணலாம்

H.28.H/ILARIOUS – ILI/LAUGH இளி / இளிச்சவாயன்

H.29.HARM- HARAAM/ ABACHARAM/ BLASPHEMOUS ஹராம் =மறம் /அதர்மம்

HARAAM IS ACTUALLY MARAAM= ADHARMA= HARMFUL ACT; H=M

H.30.H/ARVEST – ARUVADAI அறுவடை

tags – Tamil words -11

(விஷக்) கடி ஜோக்ஸ் (Post No.8857)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8857

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குடும்பத்திலே குதிரைக்கு பிடித்தவர் யார்???

“கொள்ளு” தாத்தா!!!

Xxx

நிலம் பொய் பேசாது ஏன்???

ஏன்னா அது ரியல் Real எஸ்ட்டேட் !!!

Xxx

தாலிகட்டின நாடு எது ???

இத்தாலி

Xxx

சென்னையில் சூடான இடம் எது ???

சூளை !!!

Xxx

T V வியில் எறும்பு எப்படி வந்தது???

“ANT”TENNA வழியாக……

xxx

அழுமூஞ்சி நாடு எது ???

சிரியா

Xxx

வாசனையான ரயில்வே ஸ்டேஷன் எது???

“சென்ட்” scent ரல் !!!

Xxx

காலே இல்லாத டேபிள் எது???

TIME TABLE

Xxx

கையிலிருக்கிற “கை”எது ???

ரேகை!!!

Xxx

பசுமையான நாடு எது ???

கிரீன் லாந்து !!!

Xxx

இன்பம் எது???

அடுத்த வீட்டு ஜோடி அனுபவிப்பது !!!

Xxx

துன்பம் எது ???

என் மனைவியுடன் நான் அனுபவிப்பது

Xxx

சுகம் எது ???

அடுத்தவன் எனக்குச்செய்யும் வேலை…….

Xxx

சோகம் எது ???

அடுத்தவனுக்கு நான் செய்யும் வேலை….

xxx..

வளமை எது ???

பஸ் ஸ்டாண்டில் பார்த்த பெண்ணின் அழகான மேனி!!!!

Xxxx

வறுமை எது???

என் மேலதிகாரியின் மன இறுக்கம்???

Xxx

எல்லா மொழியும் பேசக் கூடியது எது???

எதிரொலி!!

Xxx

வெய்யில்ல வெளியே வந்தா உருகிடறாரு இந்த மனுஷர்???

யாரு அது???

பெருமாள் “பட்டர்”

Xxxx

சொத்துக்கள் நிறைந்த நாடு எது ???

“ஆஸ்தி”ரேலியா!!!

Xxx

உட்கார முடியாத தரை???

புளியோதரை…….

Xxx

பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கிறார்கள்???

உயிரை !!!

Xxxx

இந்திய நாட்டில் ஜனத்தொகை நாளுக்குநாள் பெருகுவதேன்???

இந்தியா தீப ‘கற்ப’மாக இருப்பதால் !!!

Xxx

டாக்டர் ஏன் கோபமா இருக்கார்???

யாரோ அப்பரேஷன் தியேட்டர் வாசலில் “ஒன் வே” எவனோஎழுதி

வச்சிருக்கானாம்!!!

Xxx

tags- (விஷக்) , கடி  ஜோக்ஸ், 

–subham—-

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்! (Post No.8856)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8856

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்!

ச.நாகராஜன்

திருப்புகழ் 1324 பாடல்கள் நம்மிடையே இன்று உள்ளது. இது வரை வெளி வராத சில அரிய பாடல்கள் ஆறைச் சேர்த்து இதை சிலர் 1330 என்று குறள் எண்ணிக்கைக்கு நிகராகக் கொண்டு வருவதும் உண்டு. ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என அருணகிரிநாதரே கூறுவதால் அவர் வாக்கு முருகன் வாக்கே என ஆகிறது. ஆகவே இவை மந்திரப் பாடல்களாக அமைந்துள்ளன என்று சொல்வது சத்திய வாக்காகும்.

பல பாடல்களை தங்கள் அனுபவத்தால் கண்டறிந்த பெரியோர்கள், அவற்றின் பயனைத் தெளிவுறச் சொல்லி வைத்துள்ளனர்.

அவற்றில் வீர ஜெயத் திருப்புகழாக, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற பாடலும், மந்திரப் பாடலாக ‘இருமலு ரோக’ என்ற பாடலும் அமைந்துள்ளன.

வீர ஜெயத் திருப்புகழ் பகைவரை வென்று எந்தக் காரியத்திலும் வெற்றியைத் தரும் ஒரு அரிய திருப்புகழாகும்.

எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்க்க பாட வேண்டிய பாடலாக அமைகிறது

‘இருமலு ரோக’ எனத் தொடங்கும் பாடல்.

அவற்றைக் கீழே பார்க்கலாம்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

     தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

     தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

     சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

     திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

பொருள் : முருகனை வழிபடுவோர்களைக் கோபிப்பவர்கள் தலைக்கும், அவர்களைப் பகைத்து இருக்கும் குடும்பத்திற்கும், அவர்களைச் செகுக்கத் துணிபவர் உயிருக்கும், முருகன் அடியாரைக் கண்டு சினத்துடன் சிரிப்பவர்க்க்கும், பழிப்பவர்க்கும் திருப்புகழே நெருப்பாய் அமைந்து அவர்களை அடியோடு அழித்து விடும். இதை நன்கு அறிவோம் நாம்.

முருகனை வழிபடும் அடியவர் என்ன நினைத்து வேண்டுகிறார்களோ அதை அளிக்க வல்லது, மனத்தை உருக்குவது, மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற நிலையை இல்லாமல் செய்து இருள் நிறைந்த கருப்பையில் வராமல் செய்வது, நெருப்பையே எரிக்க வல்லது, மலைகளையே இடிக்க வல்லது, அனைத்துப் பொருள்களையும் தம்முள் உள்ளடக்கியது ஆகிய திருப்புகழை பாடுகின்ற நல்ல செயலை அருள்வாயாக. தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்த் தகுத்தகு தகுத்தந்தன என்ற ஒலியுடன் பேரிகைகள் முழங்க, தடுட்டுடு டுடுட்டுண் டென ஒலியுடன் உடுக்கை முழங்க, சேனைகளுடன் போருக்கு அணி வகுத்து வந்த கொடு சூரர் சினத்தையும் அவர்கள் தம் உடலைச் சங்கரித்த (அழித்த) பிண மலைகள் யாவையும் புன்னகை ஒன்றினாலேயே அதில் தோன்றிய அனல் பொறியால் சாம்பலாக்கிய கதிர் வேலா, தினைப்பயிரை விளைவிக்கும் மலைக் குற வள்ளியை மார்புற அனைத்து இன்புற்று எண்ணுகின்ற திருத்தணியில் அமர்ந்து அருள் புரியும்

வேலவனே!

 அநுஷ்டான திருப்புகழ் பாடல்கள் என்று சில திருப்புகழ் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நோய் வரின் அதைப் போக்க ‘இருமலு ரோக’ பாடல் பாடி துதிக்கப்படுகிறது.

நோய் வராமல் தடுக்கவும் அன்றாடம் அன்பர்களால் இது ஓதப்பட்டு வருகிறது.

பாடல் இதோ:

     இருமல்  உரோகம் முயலகன் வாதம்

     எரிகுண நாசி ……         விடமேநீர்

இழிவு விடாத தலைவலி சோகை

     எழுகள மாலை …… இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை

     பெருவலி வேறும் …… உளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத

     படி உன தாள்கள் …… அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி

     மடியஅ நேக …… இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட

     வடிசுடர் வேலை …… விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

     தருதிரு மாதின் …… மணவாளா

ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

     தணிமலை மேவு …… பெருமாளே.

இந்த மந்திரத் திருப்புகழைச் சொல்லி திருநீறு அணிந்து கொண்டால் நோய்கள் வராது; வந்த நோய்களும் போகும்.

இப்படி ஏராளமான பலன் தரும் திருப்புகழ் பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணை செய்வதை அன்பர்கள் காலம் காலமாக அனுபவித்து உணர்ந்து பயன் அடைந்துள்ளனர்.

நாமும் பயன் பெறலாமே!

***

தென் அமெரிக்காவில் புதிர், மர்மம்- மஹா பாரதத்தில் விடை! (Post.8855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8855

Date uploaded in London – –25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12 angled- 12 adityas

தென் அமெரிக்காவில் பெரு என்ற ஒரு நாடு உள்ளது. அங்குள்ள மர்மம் மீண்டும் பத்திரிகைகளில் அடிபடத் துவங்கிவிட்டது. சென்ற வாரம் ஒரு மிகப்பெரிய பூனை உருவமும் அதில் செல்லும் மலைப்பாதையும் கண்டு பிடிக்கப்பட்டது.. இது உலகம் முழுதும் பத்திரிக்கைகளில் வெளியானது . இது 2300 ஆண்டுகள் பழமை உடைத்து; ஆகையால் அனைவரும் இது எப்படி சாத்தியமானது என்று மீண்டும் வினவத்  துவங்கி விட்டனர் . ஏனெனில் ஏற்கனவே இது போல 300 விதமான உருவங்கள் பெரு நாட்டில் உள்ளன. இதற்கான விடை பாணினி எழுதிய இலக்கணப் புஸ்தக உரையிலும் மஹாபாரத படை ‘வியூஹ’ (Strategic Formations)  அமைப்புகளிலும் உளது.  இதோ முழு விவரம்:–

இதுபற்றி ஆங்கிலத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் நீண்ட கட்டுரைகளை வெளியிட்டேன். சுருக்கத்தை மட்டும் அளிக்கிறேன். லண்டன் பழைய புஸ்தக கடையில் 1994-ல் ஒரு புஸ்தகம் வாங்கினேன். அதில் ஆண்டிஸ் மலை அற்புத ஓவியங்கள்– சுவரில் அல்ல – துணியில் அல்ல –  150 சதுரமைல் பரப்பில்- தரையில் வரையப்பட்டது பற்றி நீண்ட ஆராய்சசி உளது. இதில்  படித்த அதிசய விஷயங்கள் :–

எங்கே  உள்ளது?

தென் அமெரிக்க கண்டம் வட அ மெரிக்காவுக்கு கீழே உள்ளது. அங்கும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் உள்ள மாயா (மயன் Mayan Civilization)  நாகரீக சின்னங்கள் மஹாபாரத கால இந்திய நாகர்களால் உருவாக்கப்பட்டது . இது பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ‘பிளாக்’கில் கட்டுரைகள் எழுதினேன். ஆகையால் பெரு நாட்டு அதிசயம் பற்றி மட்டும் சொல்கிறேன்

***

300 பிரம்மாண்டமான படங்கள்

பெரு நாட்டில் நாஸ்கா (Nazca Lines) என்ற பகுதியில் பல மைல்களுக்கு நேராகச் செல்லும் பாதைகளும் வட்டம், முக்கோணம் போன்ற கணித உருவ (geometrical shapes)  வடிவங்களும் , மீன் பறவை உருவ வடிவங்களும் உள்ளன. நாஸ்கா பகுதி மக்கள் இதைச் செய்ததால் இதை நாஸ்கா (Nazca Culture) கலாசாரம் என்பர்.

***

இதில் என்னஅதிசயம் ?

2300 ஆண்டுகளுக்கு முன் இவை வரையப்பட்டன என்பதை கார்பன் டேட்டிங் (Carbon Dating) முறை உறுதிப்படுத்தியது ; எப்படி ஒரு வித உபகரணமும் இல்லாமல் இப்படி பிரம்மாண்டமான உருவங்களை பூமியில் உண்டாக்கினார்? ஏன் உண்டாக்கினார்கள்?

வேற்று உலக வாசிகளின் (Extra Terrestrials)   விமானங்கள்  தரை இறங்குவதற்காக அயல் கிரக வாசிகளின் உதவியுடன் இதை வரைந்ததாக  ஒரு கொள்கை உண்டு. ஏனெனில் இந்த உருவங்களை விமானத்தில் இருந்து பார்த்தால்தான் காணமுடியும். விமானமும் அதி நவீன வண்டிகளும் இல்லாதபோது இதை எப்படி சாதித்தனர் ?

மற்றும் சிலர் இவை நட்சத்திரங்களுடன் தொடர்புடையவை; வான சாஸ்திர வரை படங்கள் (Astronomical)  இவை என்பர். ஆனால் இவைகளை எல்லாம் அழித்து ஒழித்து நிர்முலமாக்கிய ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ  வெறியர்கள், இவைகள் இந்திய பழங்குடி மக்களின்’ வழிபாட்டுத் தடங்கள்’ ( lines/ routesரூட்ஸ்)  என்று 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளனர் .

இந்த வரைபடக் கோடுகளில் ஆங்காங்கே வாகா (Waqa)  என்ற கற்களை அமைத்தனர். அந்த ‘வாகா’ கற்கள் இருக்கும் இடங்களில் அவர்கள் நின்று வழிபட்டு தியானித்து விட்டுச் செல்லுவார்கள், வீடுகளில் கோணபா (Conapas) என்ற கற்களை வைத்து வழிபடுவர். இவை எல்லாம் இந்துக்கள் வழிபடும் சாளக்கிராமம் , பஞ்சாயதன பூஜையில் வழி படும் பாணலிங்கம், ஸ்படிகலிங்கம் போன்றவை. இவர்களை கிறிஸ்தவ வெறியர்கள் இந்தியர்கள் என்றே 500 ஆண்டுப் புஸ்தகத்தில் எழுதிவைத்துள்ளனர். அசப்பில் பார்த்தால் அஸ்ஸாம் நாகாலாந்து, மணிப்பூர் திரிபுர மக்கள் என்றே நாம் சொல்லுவோம்.

இந்த கல் வழிபாடு இமய மாலையிலும் உண்டு. திபெத்தியர்கள் கருப்பு நிறக் கூழாங்கற்களை அடுக்கிவைத்து கர்மபா (Karmapa stones) என்று வழிபடுவர். சிவலிங்க வழிபாடோ இமயம் முதல் குமரி வரை பல்லாயிரம் கோவில்களில் உண்டு.

இவை அனைத்தும் இந்து மத தாக்கத்தைக் காட்டுகின்றன. இதைவிட பெரிய ஒற்றுமை மச்சுப் பிச்சு (Machu Pichu) வில் இருக்கிறது. உலகம் முழுதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் செல்லுவது மச்சுப் பிச்சு-வைப்  பார்க்கத்தான். மச்ச புச்சம் – மீன் வால் — என்ற ஸம்ஸ்க்ருதச் (Matsya  Pucha= Fish Tail)  சொல்லை இப்படி மச்சுப் பிச்சு- ஆக்கிவிட்டனர். இமயமலையில் மீன் வால் போன்ற மலைப் பகுதியை ‘மத்ஸ்ய புச்சம்’ (Matsya Pucham)  என்றே அழைப்பர்.

எங்கு நோக்கினும் சம்ஸ்க்ருத சொற்களையும் தமிழ் சொற்களையும் காணலாம். நாசுக்கா பகுதி முழுதும் வறண்ட பாலைப் பகுதி. இதை பம்பா (Pampas)  என்று அழைப்பர். தமிழிலும் பரந்து விரிந்த இடத்தை ‘பம்பை’ என்பர். இது தவிர பம்பா பெயரில் சபரிமலை முதல் இமயமலை வரை பல நதிகளும் உண்டு. நின்று வழிபடும் கற்குவியல் ஒன்றை அவர்கள் தியான (Theana)  என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லால்  அழைப்பர் ; இது போல மூன்று வகை கற்குவியல்கள் உண்டு . நீண்ட கோடுகளை சீக்ஸ் (Ceques)  என்று அழைப்பர். திபெத்திய கர்மபா கற்களை போல வீட்டில் வழிபடும் கற்களை கோனபா என்று அழைப்பதிலும் சப்த ஒற்றுமையைக் காணலாம் ; இப்படி நிறைய ஒற்றுமைகள் காணப்பட்டாலும் முக்கிய ஆராய்ச்ச்சிக்கு  வருவோம்.

மஹாபாரத மர்மம்

மஹாபாரதப் போரில் 18 நாட்களிலும் அமைத்த 18 வகை வியூகங்கள் (Strategic/ Army Formations) இருக்கின்றன. இவை அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரத பூமியில் நடந்தவை ; இவை பறவை, சக்கரம், முக்கோணம், சதுரம், மீன் வடிவில் அமைந்தவை. இது போல வருண பகவானின் வாகனமான மீன் உருவம் நாஸ்கா பகுதியிலும் உளது. பெரிய சிலந்தி வடிவமும் நாஸ்காவில் உண்டு.

மகாபாரத வியூஹ அமைப்பும் பிரம்மாண்டமானவை. விமானத்தில் இருந்து பார்த்தால்தான் அவை தெரியும். சக்கர வடிவ வியூகத்தில் அபிமன்யு புகுந்து  இறந்ததை உலகமே அறியும். கர்நாடக கோவில் சிற்பங்களிலிலும் உளது.

ஆனால் மஹாபாரதம் சொல்லும் 18 வியூகங்கள் மட்டும்தான் என்று நாம் கருதிவிடக்கூடாது. பாணினி எழுதிய உலகம் போற்றும் இலக்கண புஸ்தகத்துக்கு காத்யாயன வரருசி என்பவர் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் Marginal Notes நோட்ஸ் – வார்த்திகம் — எழுதினார். அதில் ஒரு இலக்கண விதிக்கு உதாரணம் தருகையில் ‘ஆந்தை வடிவ கட்டிடங்கள்’ , ‘ஆந்தை வடிவ வியூகங்கள்’ என்று எடுத்துக் காட்டுகிறார். ஆக, நாஸ்கா கலாசாரத்துக்கு முன்னரே இப்படி ஆந்தை வடிவ கட்டிடங்கள் இருந்ததையும் அணிவகுப்பு– வியூகங்கள் – இருந்ததையும் இலக்கணப் புஸ்தகத்தில் கூ  ட காண்கிறோம். இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் உள்ளது.

யாக குண்டங்களை பருந்து வடிவிலும் கொக்கு வடிவிலும் அமைப்பது எப்படி? 10,800 செங்கல்களை என்ன பெயரில் அழைக்க வேண்டும்? என்பனவெல்லாம் வேதத்தில் உள்ளது. கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டத்தில் யாகம் செய்ததை சங்க இலக்கியத்திலும் படிக்கிறோம். ஆக மஹாபாரத, வேத கால மக்கள் எப்படி பிரம்மாண்டமான உருவங்களை சமைத்தனர்? அவர்கள் ஒவ்வொரு முறையும் விமானத்தில் அல்லது ஹெலிகாப்டரில் சென்று இதைச் செய்யவில்லை. சிறிய வரைபடங்களில் மாதிரிகளை வரைந்து அதை பெரிய அளவில் செய்தனர். இன்றைய சிவில் எஞ்சினியர்கள் பிரம்மாண்டமான கட்டிடம் அணைகள் முதலியவற்றைக் கட்டுவதற்கு முன்னர் ப்ளூ பிரிண்ட் (Blue print Drawings) வரைபடம் வரைந்து அதை செயல்படுத்துவர். வேத நூல்களில்  பிரம்மாணடமான எண்கள் காணப்படுகின்றன. அவர்கள் உலக மஹா கணித மேதைகள். அவர்கள் சொல்லும் சுல்வ சூத்திர  (Sulva Sutra) சொற்களையே எகிப்தியர்களும் பயன்படுத்துவதால் பிரமிடுகள் கட்டவும் நாம்தான் உதவினோம் என்பதை முன்னரே எழுதியுள்ளேன்.

(சுல்வ சூத்ரன் – நூல் பிடிப்போன் . ஒரு நூலில் கீழே உலோக குண்டைக் கட்டி மேலிருந்து கோணங்களை அளப்பது.)

ஆக 10,800 செங்கற்களை பருந்து வடிவிலும் கொக்கு வடிவிலும் அடுக்கி, அடிக்கடி யாகம் செயதோர் தென் அமெரிக்க மக்களுக்கும் சொல்லிக் கொடுத்தனர். அதைக் கொண்டு அவர்கள் நாஸ்கா /பம்பைப் பகுதியில் பிரம்மாண்டமான உருவங்களைச் சமைத்தனர் என்பது என் துணிபு.

இதை உறுதிப் படுத்தும் வகையில் அங்கு சாளக்ராம, பாணலிங்க வழிபாடுகளையும் காண்கிறோம். ஆடு பலி  கொடுக்கும் சித்திரங்களைப் பார்க்கையில் கிராமத்து கோவில்களில் நடக்கும் காட்சிகளும் நம் மனக்கண் முன் வரும்.

ஸ்பெயின் நாட்டு, போர்ச்சுகல் நாட்டு கிறிஸ்தவ வெறியர்கள் தென் அமெரிக்கா முழுதும் இந்திய நாகரிகத்தை அழித்துத் துடைத்து விட்டனர். ஆனால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் மன்னரிடமிருந்து  பணம் பெறுவதற்காக எத்தனை ஆயிரம் வழிபாட்டுத் தலங்களை ,சிலைகளை உடைத்தோம் என்று பெருமையாக புள்ளி விவரம் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த அட்டூழியங்களை அவர்கள்  வாய் மூலமாகவே அறிய முடிகிறது . இந்த புள்ளி விவரங்களை ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

கிறிஸ்தவர்கள் இப்படி அழித்தபோதிலும் காடுகளிலிலும் பூமிக்கடியிலும்  கிடைக்கும் கண்டுபிடிப்புகள் நமக்கு புதிய தகவல்களை அளிக்கின்றன . சென்ற வார பூனை உருவக் கண்டுபிடிப்பு இதை உறுதி செய்கிறது .

மதம்  மாறாத மக்களை எப்படிக் கொன்றோம், கொடுமைப்படுத்தினோம் என்றும் அந்த  மஹா பாவிகள் பட்டவர்த்தனமாக எழுதி வைத்து இருக்கிறார்கள். பெண்களை சூன்யக்காரிகள் என்னு முத்திரை குத்தி எரித்துவிட்டனர். உலகம் போற்றும் ஜோன் ஆப் ஆர்க் எறிந்த கதை அனைவரும் அறிந்ததே.

XXXX

Tags – பெரு, மச்சு பிச்சு, நாஸ்கா, வியூகங்கள், மஹா பாரதத்தில் விடை

Press cutting

2,000 ஆண்டுகள் பழமையான பூனை வடிவத்திலான மலைப்பாதை… பெரு நாட்டில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதை இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போயுள்ளது.

தெற்கு அமெரிக்காவில் உள்ள பெரு நாடு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களைக் கொண்ட நாடு, இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பெருவியன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் புகழ்பெற்ற நாஸ்கா லைன்ஸ் யுனெஸ்கோ பாரம்பரிய தளத்தின் ஒரு சிறிய ஆய்வு செய்யப்பட்ட பகுதியில் 37 மீட்டர் நீளமுள்ள பூனை வடிவிலான பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பானது எனக் கூறப்படுகிறது.

நீளமான உடல், கோடிட்ட வால் மற்றும் தலையில் தனித்துவமான கூர்மையான காதுகளால் ஆன இந்த உருவம், ஹம்மிங் பறவை, சிலந்தி மற்றும் மனிதனை உள்ளடக்கிய சில பிரபலமான புள்ளிவிவரங்களை முன்வைக்கிறது என்று நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள மலையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட அளவிலான பூனையின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதை இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போயுள்ளது. இதனை ஆராய்ச்சி ஒன்றிற்காகச் சுத்தம் செய்யும்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

–subham–

Tags – பெரு, மச்சு பிச்சு, நாஸ்கா, வியூகங்கள், மஹா பாரதத்தில் விடை

கடை – கண்ணி; நகை – நட்டு; ஈவு- இரக்கம் (Post.8854)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8854

Date uploaded in London – – 25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அர்த்தமும் அனர்த்தமும்  – அடுக்குத் தொடரும், இரட்டைக்கிளவியும்!-2

கிண்டலும் – கேலியும்

கிண்டல் – ஒருவர் மறைத்த செய்தியை அவன் வாயில் மூலமாகவே

வாங்குவது

கேலி – எள்ளி நகையாடுவது

xxx

ஒட்டு – உறவு

ஒட்டு – ரத்த சம்பந்தம் உடையவர்கள்

உறவு – கொடுக்கல் சம்பந்தமான வகையில் நெருக்கமானவர்கள்

xxx

பட்டி – தொட்டி

பட்டி – கால் நடைகள் வளர்க்கும் இடம் (ஆடுகள்)

தொட்டி – மாடுகள் வளர்க்கும் இடம்

xxx

கடை – கண்ணி

கடை – தனித் தனியாக உள்ள வியாபாரஸ்தலம்

கண்ணி – தொடர்ச்சியாக உள்ள கடைகள், கடை வீதிகள்.

Xxx

பேரும் – புகழும்

பேர் – வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை

புகழ் – வாழ்வுக்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

xxx

நேரம் – காலம்

நேரம் – ஒரு செயலை செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் – ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

xxx

பழி – பாவம்

பழி – நமக்கு தேவையில்லாத பொருத்தமில்லாத செயலைச செய்தால் இக்காலத்தில்

உண்டாகும் அவச்சொல்

பாவம் – தீயவை செய்து மறு பிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி

xxx

கூச்சல்– குழப்பம்

கூச்சல் – தன்பத்தில் வாடுவோர் போடும் சப்தம்( கூ- கூவுதல்)

குழப்பம் – துன்பத்தின் மத்தியில் உணடாகும் சத்ததைக்கேட்டு வந்தவர்கள் போடும் சத்தம்

xxx

நகை – நட்டு

நகை – பெரிய அணிகலன்கள்(அட்டியல்,ஒட்டியாணம்)

நட்டு – சிறிய அணிகலன்கள் (மெட்டி, தோடு, மூக்குத்தி)

xxxxx

பிள்ளை – குட்டி

பிள்ளை – பொதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்

குட்டி – பெண் குழந்தையைக குறிக்கும்

xxxx

பங்கு – பாகம்

பங்கு – கையிருப்பு, பணம், நகை, பாத்திரம் (அசையும் சொத்துக்கள்)

பாகம்- வீடு நிலம் போன்ற அசையா சொத்து

Xxxx

வாட்டம் – சாட்டம்

வாட்டம் – வளமான தோற்றம், வாளிப்பான உடல்

சாட்டம் – வளமுள்ள கனம், தோற்றப் பொலிவான முகம்

xxxxx

காய் – கறி

காய் – காய்களின் வகைகள்

கறி – சைவ உணவில் பயன்படுத்தப் படும் கிழங்கு வகைகள்

xxxx

ஈவு– இரக்கம்

ஈவு – கொடை கொடுத்தல் வறியவர்க்கு

இரக்கம் – பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்

Xxxx

பொய்யும் – புரட்டும்

பொய் – உண்மை இல்லாததைக் கூறுவது.

புரட்டு – ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை எனக் கூறி நடிப்பது

xxx

சூடு – சொரணை

சூடு. – ஒருவர் தகாத செயல் சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு

சொரணை – நமக்கு ஏற்படும் மான உணர்வு

                                   ***

tags– கடை – கண்ணி; நகை – நட்டு