பால் (MILK) வேண்டாம் சாவே மேல்! (Post No7642)

Written by London Swaminathan

Post No.7642

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஜான் டன் (John Donne 1572-1631) என்பவர் பிரபல ஆங்கிலக் கவிஞர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவருக்கு டாக்டர்  சைமன் பேக்ஸ் (Dr Simon Faxe)  சிகிச்சை அளித்து வந்தார் . இனிப்பு மருந்துகள் தருகிறேன். அத்துடன் 20 நாட்களுக்கு தொடர்ந்து பசும் பால் குடியுங்கள். உடம்பு தேறி விடும்  என்றார் . ஆனால் ஜானுக்கு பால் அறவே பிடிக்காது.கஷ்டப்பட்டு கொஞ்சம் குடித்துப் பார்த்தார். ஆயினும் முடியவில்லை. “டாக்டர்!  பால் குடிப்பதை விட எனக்கு மரணமே மேல். நான் சாவதற்குத் தயார்” என்று சொல்லிவிட்டார்.

(அவரது காலத்தில் பாலில் இப்போதுள்ள அசுத்தங்கள் கிடையாது. ஆயினும் அவர் மறுத்தார்.) இப்போது மேலை நாடுகளில் வேகன் VEGAN என்னும் பால் பொருள்  வெறுப்பு அணியினர் பெருகி வருகின்றனர். பிரபல உணவு விடுதிகளான கென்டகி ப்ரைட் சிக்கன், மேக் டொனால்ட் , சப் வே Mac Donald, Kentucky Fried Chicken, Sub Way) முதலியன vegan வேகன் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

காரணம் என்னவெனில் மேலை நாட்டிலுள்ள பெரும்பாலோருக்கு பாலில் உள்ள லாக்டோஸ்  (Lactose)  பொருட்கள் ஒத்துக் கொள்ளாது . மேலும் தேன், பால் முதலியன தேநீக்களையும் பசு மாடுகளையும் கொடுமைப்படுத்துவதாகும் என்றும் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால் வேத காலம் முதல் இன்று வரை ஆசாரமான ஹிந்துக்கள் கூட இவற்றைப் பூஜையிலும் பயன் படுத்தி உணவாகவும் சாப்பிடுகின்றனர்.

அந்தக் காலத்தில் பிராணிகளுக்கு மிஞ்சியது போக இருந்ததை இந்துக்கள் எடுத்தனர். இப்போதோ மேலை நாடுகளில் இயந்திரங்களை வைத்து மாடுகளில் இருந்து பாலை ஒட்டப்பிழிந்து விடுகின்றனர். யார் வீட்டிலாவது மைக்ராஸ்க்கோப் என்னும் கருவி இருந்தால் மேலை நாட்டுப் பாலில் மிதக்கும் மாட்டின் முடி, கொழுப்பு , ரத்தம் மிதப்பதைக் காணலாம்.இதனால்தான் மஹாத்மா காந்தி, ஆட்டுப் பாலுக்கு மாறினார் என்ற ஒரு தகவலும் உண்டு.

பால் மற்றும் பால் பொருட்களைத் தவிர்க்கும் ‘வேகன்’கள் இதையெல்லாம் அறிவர். மேலும் மேலை நாட்டு பசுமாடுகள் சித்திரவதை செய்யப்படுகின்றன. அவை தலையைக் கூட ஆட்டமுடியாத படி நெருக்கமாகக் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. கொழுப்புச் சத்தைக்கூட்டி மாமிசத்துக்கு வெட்டுவதற்காக பலவகை  ஊசி மருந்துகள் ஏற்றப்படுகின்றன. மாமிசப் பொடி கலந்த உணவு ஊட்டப்படுகின்றன. இந்தியாவில் ‘நாய்ப் பிழைப்பு’ என்று சொல்லுவர் . ஆனால் மேலை நாட்டில் ‘பசு மாட்டுப் பிழைப்பு’ என்றே   சொல்ல வேண்டும். அவ்வளவு கேவலமாக மாடுகள் வாழ்கின்றன. நாய்கள் ‘சோபா’ (Sofa) வில் தூங்குகின்றன . கார்களில் பவனி  வருகின்றன. மாடுகளோ அடைக்கப்பட்ட லாரிகளில் கசாப்புக்கு கடைக்குச் செல்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் ‘பால்’களுக்கு 15 நாளைக்குப் பின்னர் எக்ஸ்பைரி டேட்Expiry Date  (பயன்படுத்தக் கூடாது என்ற ) முத்திரை குத்துகின்றனர். இவ்வளவு காலம் இது கெடாமல் இருப்பதற்கு இதில் பல பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இப்பொழுது கொரோனா வைரஸ் (Corona Virus)  மக்கள் உயிரைப் பறிப்பது போல மாடுகளுக்கு பைத்திய நோய் (Mad Cow Disease) பரவியவுடன் லட்சக்கணக்கான மாடுகளை எரித்துப் புதைத்தனர். கொடுமைகளுக்கு அளவில்லை என்ற அளவுக்கு பால் பண்ணைத் தொழில் நடக்கிறது . இந்தியாவிலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் பாதுகாப்பது மக்களின் கடமை. மாட்டு மாமிசத்தை இந்துக்கள் தடை செய்ததற்கு இந்த MAD COW DISEASE ‘மேட் கவ் டிஸீஸ்’ ஒரு காரணம் போலும் . இது மனிதர்களுக்கும் பரவ முடியும் என்று மருத்துவர்கள் ஏசிசரித்தவுடன் அத்தனை பசுமாடுகளையும் கொட்டிலுடன் எரித்தனர். இது போல பல முறை கோடிக்கணக்கான கோழிக் குஞ்சுகளையும் முட்டைகளையும் அழித்தனர் சால்மோனெல்லா (SALMONELLA)  வைரஸ் பரவுகிறது என்று அச்சுறுத்தினர்.

இதன் ஆங்கில வடிவம் இந்த ‘பிளாக்’கில் வந்தவுடன் திரு நஞ்சப்பா என்ற நேயர் எழுதிய விமர்சனத்தில் எல்லா மிருகங்களும் குழந்தைப் பருவத்தில் மட்டும் பால் குடித்துவிட்டு பின்னர் நிறுத்திவிடுகின்றன. ஆ னால் மனிதன் மட்டும் தாய்ப்பாலை விட்டவுடன் பசும்பாலை குடிப்பது அவசியமில்லையே என்று எழுதினார். இந்து சிந்தனையைத் தூண்டும் பதில்; பாலில் உள்ள கால்சியம் போன்ற சத்துக்கள் நமக்குத் தேவை என்றாலும் பசு மாடுகளைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்பது நியாயமே.

tags — பால், வேண்டாம், ஜான் டன், வேகன், Vegan

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

Written by S Nagarajan

Post No.7637

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலிங் பெல் அடித்தது.கதவைத் திறந்தேன். திரு கணேஷ் கோபாலன் வந்திருந்தார். வரவேற்றேன்.

முன்பே வரப்போவதாகச் சொல்லி இருந்ததால் கணினியை (மாக் லேப்டாப் Mac LapTop) தயாராக வைத்திருந்தேன்.

அவரது மென்பொருளைக் காட்டினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று இருந்த பட்டியலிலிருந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுங்கள் என்றார். தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

பேசுங்கள் என்றார் அவர்.

திரு கணேஷ் அவர்களை வரவேற்கிறேன். நல்வரவு என்றேன்.

என்ன ஆச்சரியம். நான் பேசப் பேச அப்படியே எழுத்துக்கள் கணினியில் தோன்ற ஆரம்பித்தன.

நல்ல ஒரு கண்டுபிடிப்பு.

இது எப்படி சாத்தியமானது என்று அவரைக் கேட்டேன்.

விவரித்தார்.

“ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இது சாத்தியமானது. பல ஆண்டுகள் டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் மற்றும் ஐ.பி.எம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய் அனுபவமும் எனது சகா அனந்த் நாகராஜ் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதும் தான்

இந்த மென்பொருள் உருவாகக் காரணம். தமிழில் பல்வேறு குரல்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் சேகரித்தோம். எந்தப் பிழையும் வந்து விடக் கூடாது என்பதால் பொறுமையுடனும் கவனத்துடனும் இதை உருவாக்கினோம். வெற்றி கிடைத்தது.”

“இதில் என்ன விசேஷ அம்சங்கள்?”

“முதலாவதாக துல்லியம். அப்படியே பேச்சு எழுத்தாக மாறுகிறது. இரண்டாவது விரைவு. பேசப் பேச எழுத்துக்கள் உருவாகும்.”

“இப்போது இது எங்கு பயன்பாட்டில் இருக்கிறது? யார் யாருக்கெல்லாம் இது உதவும்?”

“இப்போது போலீஸ் துறையில் இதைக் கொடுத்திருக்கிறோம்.

இதர பயன்பாடு பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்….”

சற்று யோசித்தேன். பிறகு சொல்ல ஆரம்பித்தேன். சாதாரண இல்லத்தரசி முதல் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரை இது பயன்படுமே. செய்ய வேண்டிய வேலைகளை நினைத்த போதெல்லாம் கம்ப்யூட்டரில் சொல்லி விட்டால் அது எழுத்தாக மாற்றுகிறது. அதை பிரிண்ட் எடுத்தால் போதுமே. எழுத்தாளர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்களுக்கு இது பெரிய உதவி சாதனமாக இருக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு, தான் எதைப் பேசினோம், எந்த இடத்தில் தவறு வந்துள்ளது என்பதை பிரிண்ட் அவுட் சுட்டிக் காட்டி விடும்.

போலீஸ் விசாரணை, கோர்ட் விசாரணையின் போது வக்கீல்கள், சாட்சிகள் பேசுவது துல்லியமாகப் பதிவு செய்யப்படும். ஆகவே யாரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேச முடியாது. உண்மைகள் விரைவில் வெளிப்படும். பேசியதை பதிவு செய்து உடனுக்குடன் கையெழுத்து வாங்கி விடலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

சி.இ.ஓக்கள் மற்றும் ஏராளமானோருக்கு வேலையைப் பங்கிட்டுத் தர வேண்டிய நிறுவன உரிமையாளர்கள் முன்பே பேசி அதை உதவியாளரிடம் தந்து விடலாம்.

எனது பேச்சைக் கேட்டு கணேஷ் புன்னகை பூத்தார்.

“இன்னும் டிடிபி பப்ளிஷர்கள், டைரக்டர்கள் போன்றோரை விட்டு விட்டீர்களே. நினைத்த படி காட்சியை விவரித்து அதை அஸிஸ்டண்ட் டைரக்டர்கள், காஸ்ட்யூம் டிசைனர், செட்டை நிர்மாணிப்பவர்கள், பாடலாசிரியர், வசனகர்த்தா ஆகியோருக்குக் கொடுத்து விட்டால் திட்டமிட்டு காட்சிகளைப் படம் பிடிக்கலாம்; மீண்டும் மீண்டும் டேக் எடுக்காமல் செலவு குறையும், இல்லையா?”

“சரி, இதை உருவாக்க எப்படி நிதி கிடைத்தது?”

“சாம்சங் வெஞ்சர்ஸ் (Samsung Ventures) இதை உருவாக்க உதவும் வகையில் போதுமான நிதியை அளித்து உதவியுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் 30 பேருக்கு மேல் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது போன்ற ஆய்வுகளைச் செய்து புதிய மென்பொருளை உருவாக்க வழி வகுக்கிறோம்.”

“சரி,முக்கியமான விஷயத்திற்கு வருவோம். உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன? உங்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது, அதைச் சொல்லுங்கள்”

“ எங்கள் நிறுவனத்தின் பெயர் ஞானி இன்னோவேஷன் பிரைவேட் லிமிடட். (Gnani Innovations Private Limited (gnani.ai)).

இதைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு வாரம் இலவசமாக இந்த மென்பொருளை அளிக்கிறோம். இதைப் பயன்படுத்தி திருப்தி அடைந்த பின்னர்  அவரவர் தேவைக்குத் தக்கபடி ஒரு வருடத்திற்கு 999 ரூபாயிலிருந்து பல்வேறு திட்டங்களின் படி அதற்குரிய தொகையில் இதைப் பெறலாம்.

இதைப் பெற விரும்புவோர் அணுக வேண்டிய எங்களது தளம் மற்றும் தொலைபேசி எண்ணைச் சொல்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்  : கணேஷ் கோபாலன் மற்றும் அனந்த் நாகராஜ் (நிறுவனர்கள்)

நிறுவனம் : gnanidhwani.com (part of Gnani Innovations Private Limited), பெங்களூரு, இந்தியா

Website Url : https://gnanidhwani.com.

மின்னஞ்சல் தொடர்பு முகவரி : support@gnanidhwani.com

தொலைபேசி எண் : 91 – 9342510660

திரு கணேஷ் கோபாலன்

திரு அனந்த் நாகராஜ்

அதிசயமான ஒரு கண்டுபிடிப்பின் டெமோவைப் பார்த்தபின் சொன்னேன் இப்படி:

“இந்த நல்ல கண்டுபிடிப்பிற்கு நாடு முழுவதும் அந்தந்த மொழி பேசுவோரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் ஃபாண்ட் பற்றிப் பல்வேறு சங்கடங்கள் உள்ளன. இப்படி பேசுவதை எழுத்து வடிவத்தில் மாற்றுவது பல புதிய பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”.

 “நன்றி” என்று சொல்லி கணேஷ் எழுந்து விடை பெற்றார்.

ஆர்வமுள்ளோர் இதைச் சற்றுப் பயன்படுத்திப் பார்க்கலாம்

கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்! (Post.7624)

WRITTEN BY S  NAGARAJAN

Post No.7624

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பாக்யா, 2020 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட இதழில், ‘அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 442

ஒன்பது ஆண்டுகள் இந்தக் கட்டுரையுடன் முடிந்து விட்ட நிலையில் அடுத்த இதழில் அறிவியல் துளிகள் தொடர் பத்தாம் ஆண்டை ஆரம்பிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென் கண்டுபிடிப்புகள்!

ச.நாகராஜன்

2020ஆம் ஆண்டு தோன்றி விட்டது. கடந்த பத்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அறிவியல் உலகை உற்று நோக்கினால் லட்சக் கணக்கில் அறிவியல் கட்டுரைகள் பல நூறு கண்டுபிடிப்புகளைப் பற்றி உலகெங்கும் உள்ள நாடுகளில் வெளியாகியுள்ளன. இவற்றில் ‘டாப் டென்’ – தலையாய பத்தைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான விஷயம் தான்.

இருப்பினும் நமக்கு முன்னால் வரும் பத்து கண்டுபிடிப்புகள் இதோ:

1) மனித குலத்தின் தோற்றம் : தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் படிமங்கள் ஒரு புதிய உண்மையை அறிவிக்கின்றன. அதாவது மனிதன் 3,35,000 இலிருந்து 2,36,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கிறான் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு! ரைஸிங் ஸ்டார் கேவ் என்னும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது இது. இதே போல மூன்று கண்டுபிடிப்புகள் 2010, 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மனித குல வரலாற்றில் பிரமிக்க வைக்கும் ஒரு செய்தியைத் தந்திருக்கிறது!

2) பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரம் :

2015 செப்டம்பரில் லிகோ மற்றும் வர்கோ ( LIGO and VIRGO) ஆகிய இரு நவீன சாதனங்கள் புவி ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்தன. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனே ப்ளாக் ஹோல் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்பட்டு வந்தார். 2017இல் ஈவண்ட் ஹொரைஸன் டெலஸ்கோப் என்ற பிரம்மாண்டமான ஒரு டெலஸ்கோப் உலகெங்குமுள்ள பல்வேறு ரேடியோ டெலஸ்கோப்புகளை இணைத்தது. இது ப்ளாக் ஹோலைப் படம் பிடித்தது; 2019இல் அந்தப் படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. ஆக ஐன்ஸ்டீன் சொன்னது சரி தான்!

3) உலகின் அதி வெப்பமான வருடம்

விஞ்ஞானிகள் 1912ஆம் ஆண்டிலேயே,” உலகில் இப்போது 2,000,000,000 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இப்படி இவை எரிக்கப்படும்போது 7,000,000,000 டன்கள் கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. காற்று இப்படி அசுத்தமாகிக் கொண்டே போனால் உலகின் வெப்ப நிலை கூடுதலாகி மனிதன் வாழ முடியாத நிலை ஏற்படும்” என்று எச்சரித்தனர்.

இது உண்மையாகி விட்டது. கடந்த நூற்றாண்டுகளில் அதிகமான வெப்பமுடைய ஐந்து வருடங்களாக 2014 முதல் 2018 முடிய உள்ள வருடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகத் திகழ்கிறது. ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் பெட்ரோலையும் டீஸலையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து நிறுத்த வேண்டும்.

4) மரபணு எடிட் செய்யப்பட்ட குழந்தைகள்

2018ஆம் ஆண்டில் சீன ஆராய்ச்சியாளரான ஹே ஜியான்குயி தாங்கள் மனித மரபணுவை எடிட் செய்து அதை ஒரு பெண்ணின் கருப்பையில் பதிய வைத்து இரு பெண் குழந்தைகளை உருவாக்கியதாக அறிவித்தார். உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ இந்தப் பெண்கள் ஹெச். ஐ. விக்கு கடும் எதிர்ப்பு சக்தியைத் தங்கள் உடலில் கொண்டுள்ளனர் என்றது. ஆனால் மற்ற விரும்பத்தகாத விளைவுகள் பற்றி ஒரு அறிவிப்புமில்லை. வேண்டாத இந்தக் கண்டு பிடிப்புக்கு உலகமே எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டது.

5) கோடிக் கணக்கில் உலகங்கள்

கோடிக் கணக்கில் உலகங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரபூர்வமாக அறிவியல் உலகம் கூறுகிறது. விண்வெளி டெலஸ்கோப்புகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் உலகங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.

2018இல் ஏவப்பட்ட டெஸ் (TESS) என்னும் விண்வெளி டெலஸ்கோப் ஏராளமான உலகங்களைப் “பார்த்து” விட்டது. தனது பணிக்காலத்திற்குள் இன்னும் ஒரு 20000 உலகங்களை அது “பார்த்துச் சொல்லும்” என்று விஞ்ஞானிகள் பிரமிப்புடன் கூறுகின்றனர்!

6) டைனோஸரின் நிறம் என்ன?

1100 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸர்களின் நிறம் என்ன? 2017இல் ஒரு டைனோஸரின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதன் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மனித குல பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தை ஆராய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் உதவுமாம்!

7) கிலோகிராம் பற்றிய துல்லியமான விளக்கம்

1000 கிராம் கொண்டது ஒரு கிலோ கிராம். இதைத் துல்லியமாக அளக்க வழியைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள். இது உலகெங்கும் மே, 2019 முதல் அமுலுக்கு வந்து விட்டது. இதே போல மின்சக்தி அளவீடான ஆம்பியர், உஷ்ணநிலை அளவீடான கெல்வின் ஆகியவையும் இனி துல்லியமாக அளக்கப்படும் முறையை விஞ்ஞானிகள் தெரிவித்து விட்டனர். இதனால் ஏற்படும் முதல் பயன் வியாதிகளுக்காகத் தயாரிக்கப்படும் மாத்திரைகள் இனி சரியான அளவில் துல்லியமாக உரிய உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும்.

 8) பழங்கால மனித மரபணுக்களின் தொகுப்பு

5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள் பல்வேறு விதத்தில் மாசுபடுத்தப்பட்டு இருந்திருக்கக் கூடும். இப்போது பழங்கால மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து முறையாக ஒரு தொகுப்பைச் செய்து விட்டனர். இந்த மரபணுக் களஞ்சியம் ஒரு அரிய அறிவியல் தொகுப்பாகத் திகழும்.

9) எபோலா வைரஸுக்கு தடுப்பூசி

கடந்த பத்தாண்டுகளில் அபாயகரமான வைரஸாக இருந்தது எபோலா. முதல் கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரண்டரை ஆண்டுகளுக்குள் இதனால் 28,600 பாதிக்கப்பட்டனர். அதில் 11,325 பேர் இறந்து விட்டனர். இந்த அபாயகரமான வைரஸுக்கு ஒரு புது தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது!

10) கடவுள் துகளின் கண்டுபிடிப்பு

கடவுள் துகள் என்று பரபரப்புடன் கூறப்பட்ட துகள் பற்றிய் ஆராய்ச்சி சி.இ.ஆர். என் சோதனைச் சாலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகமே அதைக் கொண்டாடியது.

2013இல் இதற்காக இரு அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் தொடர்ச்சி இன்னும் பல மர்மங்களை விளக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

லட்சக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களில் வெற்றிகரமான முதல் பத்தைக் கண்டோம். இன்னும் இதே போல சுவையான கண்டுபிடிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஹென்றி ஜார்ஜ் பெர்னார்ட் டான்ஜிக் (George Bernard Dantzig தோற்றம் 8-11-1914 மறைவு 13-5-2005) பிரபலமான அமெரிக்க கணித மேதை மற்றும் விஞ்ஞானி.

1939ஆம் வருடம் அவர் பெர்க்லியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறைக்குச் சற்று தாமதமாகச் சென்றார். அங்கு கரும்பலகையில் புள்ளியியல் சம்பந்தமான இரு பிரச்சினைகள் எழுதப்பட்டிருந்தன. அது ஹோம் ஒர்க்கிற்காகத் தரப்பட்டது என்று எண்ணிய டான்ஜிக் அதை சில நாட்களிலேயே முடித்து புரபஸர் ஜெர்ஸி நெய்மெனிடம் (Jerzy Neyman) தந்தார்.

அசந்து போன புரபஸர், “அந்த இரண்டும் யாராலும் தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்றல்லவா எழுதி வைத்தேன். அதற்கு தீர்வு கண்டு விட்டாயே” என டான்ஜிக்கைப் பாராட்டினார். பின்னால் ஆய்வுக்கான பட்டத்தைப் பெற தான் எந்த ப்ராஜக்டை எடுத்து ஆராய்வது என்று திகைத்திருந்த டான்ஜிக்கை, நீ ஏன் ஒரு ப்ராஜக்டை புதிதாக எடுத்து ஆராய வேண்டும். ஏற்கனவே தீர்த்திருக்கும் இரண்டு பிரச்சினைகளில் ஒன்றை எழுதிக் கொடு. அதையே ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டு உனக்கு டிகிரியைத் தந்து விடுகிறென் என்றார் புரபஸர் ஜெர்ஸி நெய்மேன்.

இந்த சம்பவம் பாஸிடிவ் எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படும் சம்பவமாக அறிஞர் உலகில் இன்றளவில் பெரிதாகப் பேசப்படும் ஒன்று.

****

பிராணிகளுக்குக் கடிகாரம் பார்க்கத் தெரியுமா? (Post No.7600)

WRITTEN BY London swaminathan

Post No.7600

Date uploaded in London – 21 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நேரம், காலம் (Notion of Time) பற்றிய உணர்வு உண்டா? என்ற கேள்வியை ஒரு நேயர் கேட்டவுடன், அதற்கு  லண்டன் (Daily Mail) டெயிலி மெயில் பத்திரிகை 1-4-2006ல் பதில் வெளியிட்டது. அந்த ‘பேப்பர் கட்டிங்’கை குப்பைத் தொட்டியில்   போடுவதற்கு முன்னர் மொழிபெயர்த்தால் என்ன? என்று தோன்றியது.அத்தோடு என் அனுபவத்தையும் சேர்த்துள்ளேன்; படியுங்கள்.

நாயின் மனது  (The Mind of the Dog by J R H Smythe) என்ற ஒரு புஸ்தகத்தை நாய்கள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஜே .ஆர் .எச் .ஸ்மித் எழுதினார். அதில் அவருடைய நாய் ‘பென்’ (Ben) னுக்கு கிழமைகள் கூட தெரியும் என்கிறார். காட்டு மிருகங்களை வளர்க்கும் ஒருவரிடம் அதை விலைக்கு வாங்கி இருந்தார். ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலையில் பென் (Ben) காணாமற்போய் விடும். மாலையில் திரும்பி வந்து விடும். ஸ்மித்துக்கு இந்த மர்மம் புரியவில்லை. ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்தபோது பஸ் கண்டக்டர் அந்த நாயை அடையாளம் கண்டுகொண்டு அதன் புதிய எஜமானரிடம் பழைய கதை ஒன்றைக் கூறினார். நாயை முதலில் வளர்த்தவர் அந்த பஸ்சில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 9 மணிக்கு நாயுடன் புறப்படுவாராம். பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் சென்றுவிட்டு  மாலை நேர பஸ்ஸில் சொந்த கிராமத்துக்குத் திரும்பி வருவாராம். ஏனெனில் பழைய மாஸ்டர் (Master)  வியாழக்கிழமை மட்டும் பறவைகளைச் சுடுவதற்கு இப்படிச் செல்வராம். வியாழக்கிழமைகளில் அந்த நாய் ‘நாயாக உழைத்து’ மாஸ்டருக்கு உதவி செய்யுமாம். புதிய எஜமானர் விலைக்கு வாங்கிய பின்னரும் அந்த நாய்க்கு வியாழக் கிழமை வந்தவுடன் வெளியே கிளம்பி விடுமாம். இதுதான் காலையில் போய் மாலையில் திரும்பி வருவதன் மர்மம்.

நாய்க்கு காலண்டரில் தேதி பார்க்கத் தெரியுமோ தெரியாதோ, ஆனால்  அதன் உடலுக்குள் உள்ள கடிகாரமும் காலண்டரும் வியாழக் கிழமை காலை ஒன்பது மணியை நினைவு படுத்துவது அதிசயமே.

டோக்கியோ நாய் ஹசிகோ Hachiko

ஹசிகோ என்ற உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய்க்கு ஏன் டோக்கியோவில் ரயில் நிலையத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த பிளாக்கில் பல முறை வெளி வந்து விட்டது. அதை வளர்த்தவர் இறந்த பின்னரும், ஒன்பது ஆண்டுகளுக்கு தன்னுடைய மாஸ்டருக்காக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்த கதை பலரும் அறிந்ததே.

நான் 1986 டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன். அத்தோடு என்னுடைய 16 ஆண்டு தினமணிப் பத்திரிக்கையின் சீனியர் சப் எடிட்டர் வேலை முடிந்து பி.பி.சியில் சேர்வதற்காக லண்டனு க்கு வந்தேன். மதுரையில் தினமணியில்  வேலை பார்க்கும்போது, வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் எல்லாம் இரவு ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன். இரவு எட்டு மணிக்கு எல்லோருக்கும் பெரிய பன் ரொட்டியும் தேநீரும் தருவார்கள். பெரிய பன் ரொட்டியை அலுவலத்தில் உள்ள பியூனுக்குகே கொடுத்து விடுவேன். இப்படிப் பலரும் கொடுக்க துவங்கியதால் அவனே வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டான். ஒரு நாள்

வீட்டில் மாடிக்குப் போய் காகங்களுக்கு அதை போடுவோமே என்று போட்டால், அதைச்  சாப்பிட்ட காகம் என்ன பாஷையில் பேசியதோ தெரியவில்லை ஏராளமான காகங்கள் வந்து விட்டன. நானோ பறவை பிரியன். தினமும் இதைத் தொடர்ந்தேன்  . நூற்றுக் கணக்கில் காலையில் காகங்கள் படை எடுக்கத் துவங்கிவிட்டன.

காலையில் நான் தாமதமாகப் போனால் அவை மொட்டை மாடியிலும் அருகிலுள்ள மரங்களிலும் காத்திருக்கும். நான் போன அடுத்த நிமிடத்தில் அவை அங்கே கூடிவிடும். இதை பார்க்கையில் அவைகளும் எதோ ஒரு வகை கடிகாரங்களை வைத்திருப்பதாகவே தோன்றுகிறது!! இப்பொழுதும் இது போல பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். சென்னை முதலி ய நகரங்களில் தானியத்தைச் சாப்பிட பல ஆயிரம் கிளிகள் வரும் அதிசயத்தைக் ( in You Tube)  காண்கிறோம். அவைகளும் அருகிலுள்ள மரங்களில் இதற்காக காத்து இருக்கின்றன.

இது போல வீடுகளில் நாய், பூனை வளர்ப்போரும் பல கதைகளைச் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வைக்காவிடில் நாம் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவை நம் அருகில் வந்து அன்பாக வாலை ஆட்டும். என்னை மறந்து விட்டாயா? என்று வாய் திறவாமலே கேட்கும்.

காக்காய் பிடித்த கதை

இறுதியாக காக்காய் பிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.அந்தக் காலத்தில் பாட்டி, தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளைக் கூப்பிட்டு டேய்! கால், கைகளைப் பிடித்து விடடா! உனக்கு காலணா தரேன். மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு என்பர். இதன்  காரணமாக, நமக்கு சினிமா போகக்  காசு, ஹோட்டலில் சாப்பிட காசு என்று  காசு வேண்டிய நேரத்தில் எல்லாம் , நாமே அவர்களிடம் சென்று ‘பாட்டி கால், கை பிடித்து விடட்டுமா?’ என்று கேட்போம், அவர்களுக்கும் விளங்கி விடும். இதுதான் காக் காய்  (கால்+ கை ) பிடித்தல் என்பதாகும் . குல் லாப் போடுவது எப்படி என்பதை முன்னரே எழுதிவிட்டேன். ஞாபகம் இருக்கிறதா? ஒரு குல்லாய் வியா பாரி – குல்லா யுடன் மரத்தடியில் தூக்கம் – அவன் கூ டையில் இருந்த குல்லாய்களை குரங்குகளும் அணிந்தன ; அவன் குல்லாய் போட்டவுடன் அவைகளும் போட்டன. அவன் குல்லாயைத் தூக்கி எறிந்தவுடன் அவைகளும் தூக்கி எறிந்தன . அதாவது ‘ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் ,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்’ .

. –subham—

நமது மொபைல் போன்களுக்காக சூரியனை நோக்கி மேலும் ஒரு விண்கலம் (Post 7589)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7589

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

லண்டனுக்கு பக்கத்தில் உள்ளது ஸ்டிவனேஜ் (Stevenage)  என்னும் சின்ன நகரம்.  இதில் கட்டப்பட்ட ஒரு விண்கலம் பிப்ரவரி 9, 2020ல் சூரியனை நோக்கி புறப்பட்டுவிட்டது. இதன் பயண காலம் பத்து ஆண்டுகள். லண்டனுக்கு அருகில் வடிவமைப்பட்டாலும்  கேப் கெனவரால் (Cape Canaveral, Florida, USA) தளத்திலிருந்து இதை அமெரிக்கா ஏவியது. சூரியனிலிருந்து புறப்படும் காந்த அலைகள் மின்சாரக் கருவிகளையும் , மொபைல் போன் முதலியவற்றையும்  பாதிக்கிறது. இது குறித்து மேலும் தகவல் சேர்ப்பது இதன் முக்கிய குறிக்கோள். இது என்ன என்ன சாதிக்கப்போகிறது என்ற திட்டங்களைக் கேளுங்கள்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்திலுள்ள கனவரால் முனையிலிருந்து பிரம்மாண்டமான அட்லாஸ் (Atlas)  ராக்கெட் இதைச் சுமந்து சென்றது. இந்த விண்கலத்துக்கு சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter)  — அதாவது சூரியன் சுற்றி அல்லது ‘சூரிய வலன்’ என்று பெயர். ஊரைச் சுற்றித் திரியும் சோம்பேறிகளை ஊர் சுற்றி என்கிறோம்; அது போல சூரியனைச் சுற்றும் கத்தை ‘சூரிய சுற்றி’ என்பதே பொருத்தம். இதன் எடை 1-8 டன்  இதில் ஐரோப்பிய நாடுகளின் ஆராய்சசிக் கருவிகளும் இருக்கின்றன. சூரியனை நெருங்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.

எந்த ஒரு பொருளும் சூரியனுக்கு அருகில் போக முடியாது. அதற்கு முன்னரே எரிந்து சாம்பலாகிவிடும் . இது மிகவும் அருகில் போகாமல், எட்ட நின்று உளவு பார்க்கும். ஆனால் புதன் கிரகத்துக்கும் முன்னால்  போய் சுற்றும். இதுவரை நமக்குத் தெரிந்தசூரியனுக்கு அருகிலுள்ள கிரகம் புதன் (Mercury) .

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு பிரிட்டன் உள்பட பல நாடுகள் கொடுத்த நிதியில் ஆராயச்சித் திட்டங்களை வகுத்தது. இதன்படி சூரியனில் வீசும் காந்தப் புயல்களை இது வேவு பார்க்கும் நல்ல புகைப்படங்களை நமக்கு அனுப்பும். சூரியனுக்கு 2..6 கோடி மைல் அருகில் செல்லும். அப்போது அதி பயங்கர அனல் வீசும். 500 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கும் (Titanium) பூச்சு இந்த விண்கலம் மீது சந்தனம் போல தடவப்பட்டுள்ளது.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூரியனில் திடீர் திடீரென்று வீசும் மின் காந்தப் புயல்கள் (magnetic Storms) நம்முடைய மொபைல் போன்களையும், எலெக்ட்ரானிக் சாதனங்களையும், விண்ணில் வல ம் வரும்  விண் கங்களையும் பாதிக்கிறது.  பூமியை ச் சுற்றியுள்ள காந்த மண்டலத்தையும் விஞ்சும் பெரும் காந்தப் புயல் சூரியனிலிருந்து பீறிட்டெழுவதுண்டு என்று பிரிட்டிஷ் விண்வெளி அமைப்பின் தலைவர் டாக்டர் கிறிஸ் லீ கூ றினார்.

ஏற்கனவே நாஸா (NASA) எனப்படும் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் பார்க்கர் சோலார் ஆராய்ச்சிக்கலத்தை சூரியனுக்கு அனுப்பி இருக்கிறது. அது புறப்பட்டு 18 மாதங்கள்  ஆகிவிட்டன.

புதிய சோலார் ஆர்பிட்டர் கலத்துக்கு ஆன செலவு

130 கோடி ஸ்டெர்லிங் பவுன்கள். பத்து ஆண்டுக்குப் பின்னர்  இதிலுள்ள எரிபொருள் தீர்ந்துபோய் இது ‘புஸ் வாணம்’  ஆகி, புதன் கிரகத்துக்கும் வெள்ளி கிரகத்துக்கும் இடையே  சுற்றிவரும் .

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது தமிழ்ப் பழமொழி. இனிமேல் சூரியனுக்கும் இரண்டு விண்கலங்களில் இருந்து  இருமுனைத் தாக்குதல் நடைபெறும். இனி அது ரஹஸ்யங்களை மறைக்க முடியாது

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புதிய ராக்கெட் விண்ணில் பாய்வதைக் காண்பதற்காக 1000 விஞ்ஞானிகள் , எஞ்சினியர்கள் குழுமி இருந்தனர். நாலு நிமிடங்களுக்கு வானம் ஜெகஜ்ஜோதியாக இருந்தது. பின்னர் பிரம்மாண்டமான அட்லஸ், தனது முதுகின்மேல் உட்கார்ந்து இருந்த சோலார் ஆர்பிட்டரை அதற்குரிய பாதையில் விட்டுவிட்டு பூமியில் வந்து விழுந்தது.

புதிய செய்திகளை  பத்தாண்டு  வரை எதிர்பார்க்கலாம்.

–Subham–

பாம்புச் செடி உண்மையா? (Post No.7580)

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7580

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு  வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com

..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies)  வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக்  காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடனே ஸ்கைப் (Skype)  மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப்  படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.

முதலில் அகநாநூற்றுப்  பாடல்

அன்னாய்  !  வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்

……………………

……………………

வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்

அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்

பகலும் அஞ்சும்  பனி க்கு கடுஞ் சுரனே

—அகநானூறு பாடல் 68

– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.

பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி

இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச்  செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.

காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,

“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு  உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.

‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப்  பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.

ஆனால்………………………………

ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –

கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற  மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

எனது கருத்து

நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent)  ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons)  என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை  (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள்  முதலியவற்றை  அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால்  நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக்  கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ  டியூ ப்பில்  காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச்  செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல்  விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .

ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx

Snake Flowers of Himalayas and North America

ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள்  உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப்  பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ  வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.

xxxx

From Wikipedia

டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

common name of this plant is Snake Plant.

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்

–subham–

Not Intelligent Quotient; But Illumination Quotient! (Post No.7575)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7575

Date uploaded in London – – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உதவிக் குறிப்புகள்! – 6

Not Intelligent Quotient ; But Illumination Quotient!

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

குறிப்பு எண் 20 : From : The Law of Success by Napoleion Hill

Gather New Ideas!

குறிப்பு எண் 21 : From : Make the most of your Hidden Mind Power

Not Intelligent Quotient; But Illumination Quotient is important!

குறிப்பு எண் 22 : From Secrets of Mental Magic

Building Personality Power

Watch Results of Thoughts – Satisfactory :Note kind of Thoughts

Unsatisfactory : Note kind of Thoughts

குறிப்பு எண் 23 : From Secrets of Mental Magic (P 55)

Your first responsitility in life is towards your own Mental Advancement – First Things First

குறிப்பு எண் 24 : From Practical Psychology May 1991 issue – P-9

Work Hard – R.L.Stevonson

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறிப்பு எண் 25 : From Practical Psychology May 1991 issue – P-17

Negative Attitude to be changed to Positive Attitude (positive condition) and Optimistic Opinion

குறிப்பு எண் 26 : From : Thoughts to Remember (P1) by Kopmeyor

Stand Tall –PHYSICALLY

குறிப்பு எண் 27 : From : Thoughts to Remember (P1) by Kopmeyor

Stand Tall – MENTALLY

குறிப்பு எண் 28 : From : Thoughts to Remember (P1) by Kopmeyor

Stand Tall – SPRITUALLY

குறிப்பு எண் 29 :  From : Thoughts to Remember (P8) by Kopmeyor

DIVIDE AND CONQUER

Live one day at a time : Your personal Health – Physical, Mental, Emotional

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறிப்பு எண் 30 :  From : How to Live 365 Days a Year By John A.Schindler – P 115

IMPORTANT POINTS TO WATCH IN LIVING :-

1.Keep Life Simple

2. Avoid watching for a knock in your motor

3. Learn to like work

4. Have a good hobby

5. Learn to be satisfied

6. Like people

tamilandvedas.com, swamiindology.blogspot.com

7. Say the cheerful, pleasant thing

8. Turn the defeat of adversity into victory

9. Meet your problems with decision.

10. Make the present moment a success

11. Always be planning something

12. Say “NUTS” to irritations.

குறிப்பு எண் 31 :  From : How to Live 365 Days a Year By John A.Schindler – P 91

Practice thought control

When you catch yourself starting a stressing emotion like worry, anxiety, fear, apprehension or discouragement, STOP IT. SUBSTITUTE a healthy emotion like equanimity, courage, determination, resignation or cheerfulness.

குறிப்பு எண் 32 :  From : How to Live 365 Days a Year By John A.Schindler – P 91

Carry this idea every minute of every day :  I am going to keep my attitude and thinking calm and cheerful – right now.

குறிப்பு எண் 33 :  From : How to Live 365 Days a Year By John A.Schindler – P 91

When the going is good and smooth,allow yourself the delightful feeling of being happy.

குறிப்பு எண் 34 :  From : How to Live 365 Days a Year By John A.Schindler – P 91

When the going gets rough  :

  1. Stay outwardly as cheerful and as plesant as you possibly can. Lighten an awkward situation with a bit of humour wry though it may be.

Avoid running your misfortune through your mind like a repeating phonograph record. Above all do not let yourself get irritated, upset or hysterical.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  •  
  • Try to turn every defeat into a moral victory.
  • Run these flags up on your masthead and keep them flying:

EQUANIMITY : (“Let’s stay calm”)

RESIGNATION : (“Let’s accept this setback gracefully’)

COURAGE :  (“I can take all this and more”)

DETERMINATION : (“I will turn this defeat into victory”)

CHEERFULNESS : (“Really, I am holding my own or Bowed but not broken”)

PLESANTNESS : (“I will still have good will toward men”)

****

குங்குமப் பூ பாபா கதை (Post No.7573)

WRITTEN BY London Swaminathan

Post No.7573

Date uploaded in London – 14 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குங்குமப் பூவே கொஞ்சசும் புறாவே — என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இங்கே போஸ்ட் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் தினமணி கதிரில் 2-8-1992ல் வாசகர் கடிதப் பகுதியில் சென்னை தி.வி.கிருஷ்ணசாமி எழுதிய ஒரு கடிதம் கண்டேன். அதில் அவர் கூறுவதாவது-

“12-7-1992 தினமணி கதிரில் குங்குமப் பூ பற்றி இல்லந்தோறும் இயற்கை மருந்து பகுதியில் டாக்டர் கே. வெங்கடேசன் சிறப்பித்து எழுதியிருந்தது பாராட்டத் தக்கது. இதை பற்றி மேலும் சில தகவல்கள் :-

குங்குமப் பூவின் தாயகம் தென் ஐரோப்பா . இந்தியாவிலேயே ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் இது அதிகம் விளைகின்றது.பழங்காலத்தில் ஸ்ரீநகர் அருகில் பாம்பூரில் ஷேக் பாபா என்ற துறவிக்கு கண் நோய் ஏற்பட்டது; அவர் பல மூலிகைகளைப் பயன்படுத்தியும் குணமடையாமல் வருந்தினார்.

ஒருநாள் இறைவன் அவர் கனவில் தோன்றி , குங்குப் பூவின் நிறம், அமைப்பு, இருக்குமிடம் இவற்றைக் கூறியதோடு குங்குமப் பூவை, மை  போல அரைத்து கண் மீது பூசும்படி கூறியதும் , பாபாவும் அதன்படியே செய்ய, கண் நோய் வியக்கத்தக்க வகை யில் சீக்கிரமே மறைந்து, பூரண குணம் ஏற்பட்டது  . அங்கு வாழும் மக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு வியந்து குங்குமப் பூவை தெய்வ மூலிகையாக கருதினர். பாபாவின் அருள் கட்டளைக்கிணங்க அந்த செடியை பெருமளவில் வளர்த்தார்கள் .பாபா சமாதி அடைந்ததும் குங்குமப்பூ தோட்டத்துக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.

ஒவ்வொரு வருஷமும் பாம்பூர் வாசிகள் பாபா சமாதியடைந்த தினத்தில்  சமாதி இருக்கும் இடத்திற்குச்  சென்று  வழிபடுவார்கள்; அன்றய தினம் சைவ உணவையே ஆகாரமாகக் கொள்வார்கள். குங்குமப் பூவை உலகறியச்  செய்த பெருமை பாபாவையே சாரும் .

ஸ்பெயின் நாட்டில் விழாக்காலங்களில் அரிசியோடு குங்குமப் பூவை சேர்த்து சமைப்பதை கௌரவமாகக் கருதுகிறார்கள் .

ஈரம்  படாதபடி குங்குமப் பூவை வைத்திருந்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.

குங்குமப் பூவை வியாபாரிகள் தங்கத்திற்குச்  சமமாகக் கருதுகிறார்கள் . ஒரு கிலோ நல்ல தரமான குங்குமப் பூ விலை ரூ.20,000 வரை மதிப்பிடப் படுகிறது (12-7-1192)”.

Xxxx

MY OLD ARTICLE

குங்குமப் பூவே கொஞ்சும் …

tamilandvedas.com › 2019/10/14 › குங்கு…

  1.  

14 Oct 2019 – குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே….. (Post No.7094). Written by London Swaminathan swami_48@yahoo.com. Date: 14 OCTOBER 2019. British Summer Time uploaded in London – 7-45 am

ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்! (Post No.7572)

Subash kak

WRITTEN BY S  NAGARAJAN

Post No.7572

Date uploaded in London – 14 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பாக்யா 1-2-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஐந்தாம் கட்டுரை -அத்தியாயம் 441

ஆங்கிலத்தில் திரு சுபாஷ் கக் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கச் சுருக்கம் இது. இதற்கு உடனே சில நிமிடங்களில் தமிழாக்கம் செய்து பிரசுரிக்க அனுமதி அளித்த அவருக்கு எனது நன்றி!

ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்!

ச.நாகராஜன்

அறிவியல் உலகிலும் ஹிந்து தத்துவம் பற்றிய ஆன்மீக உலகிலும் பேரறிஞராக இன்றைய நாளில் திகழ்பவர் அறிவியல் விஞ்ஞானி திரு சுபாஷ் கக். (பிறப்பு 26-3-1947; இப்போது வயது 73) அமெரிக்காவில் ஓக்லஹாமா பல்கலைக் கழகப் பேராசிரியரான இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்; பட்டங்களைப் பெற்றுள்ளார். ஹிந்து வேதம் உள்ளிட்ட நூல்களில் உள்ளவற்றை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு முக்கிய கொள்கைகள் பல எப்படி பழைய வேத காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளன என்பதை விளக்கி உலகையே பிரமிக்க வைக்கும் இந்த அறிஞர் சர் ஐஸக் நியூட்டனைப் பற்றிய பல உண்மைகளைத் தொகுத்து சமீபத்தில் எழுதியுள்ளார்.

அதை பாக்யா வாசகர்களுக்குத் தர வேண்டும் என்று அவரை மின்னஞ்சல் மூலமாக நாடிய போது சில நிமிடங்களிலேயே அனுமதியை வழங்கினார். அவருக்கு நமது நன்றியைத் தெரிவித்து இந்தச் செய்திகளை வழங்குகிறோம் இங்கு.

சர் ஐஸக் நியூட்டன்  (Sir Isaac Newton –  தோற்றம் 25-12-1642  மறைவு : 20-3-1726) இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி. கணித மேதை.

நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். பார்லிமெண்ட் மெம்பராக இரு முறை இருந்தார். பிரிட்டனின் கரன்ஸி மற்றும் நாணயம் தயாரிக்கும் மிண்ட் எனப்படும் நாணயசாலையின் தலைமை மாஸ்டராகவும் இருந்தார். புதிய நோட்டுகளை அச்சடிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்ததால் கள்ள நோட்டைத் தடுக்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. 24 கள்ளநோட்டுப் பேர்வழிகளைப் பிடித்து தூக்கிலிட அவர் வழி வகுத்தார். பிலாஸபி நேச்சுராலிஸ் பிரின்ஸிபா மேதமேடிகா என்ற அவரது நூல் 1687இல் பிரசுரிக்கப்பட்டு உலகப் புகழைப் பெற்றது.

புவி ஈர்ப்பு விசை பற்றி உலகிற்கு அறிவித்தவரும் அவரே தான். முதல் டெலஸ்கோப்பை உருவாக்கியதோடு வானில் நிகழும் கிரக சஞ்சாரங்களைக் கவனித்து ஆராய ஆரம்பித்தவரும அவரே.

எதையும் கொள்கை அளவில் சொல்வதோடு நிற்காமல் அவற்றைச் செயல்முறையில் நிரூபித்துக் காட்டியவர் நியூட்டன்.

சிலர் கடவுளின் இருப்பிடத்தை அவர் கண்டவர் என்று சொல்கின்றனர். உண்மையில் கடவுளின் தூதர் ஒருவர் குறுக்கிட்டு அனைத்தையும் தருவதாக அவர் நம்பினார்.

அவர் கூறினார் : “ஈர்ப்பு விசையின் மூலமாக கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறது. ஆனால் அந்த கிரகங்களை சஞ்சாரம் செய்ய வைத்தது யார் என்று சொல்ல முடியவில்லை. கடவுளே அனைத்தையும் நிரிவகிக்கிறார். அனைத்தும் அறிந்தவர் அவரே”

     அவர் இரஸவாதத்திலும் குப்த வித்தைகள் எனப்படும் அதிமானுட வித்தைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது கணிதத்தை விட இந்த இரகசிய வித்தைகள் மிக முக்கியமானவை என்று அவர் நம்பினார்.

நியூட்டனில் இரஸவாத ஆய்வையும் குறிப்புகளையும் ஆராய்ந்த பிரபல பொருளாதார நிபுணரான ஜான் மேநார்ட் கைனஸ் (John Maynard Keynes) 1942ஆம் ஆண்டு நியூட்டனின் முன்னூறாவது ஆண்டு நினைவு நாளில், “அவர் அறிவியல் உலக ஆரம்பத்தின் முதல் நபர் அல்ல; ஆனால் மாஜிக் நிபுணர்களின் வரிசையில் கடைசியாக வாழ்ந்தவர்” என்று குறிப்பிடுகிறார்.

இரஸவாதக் கல் எனப்படும் செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக்கி விடும் கல்லைத் தயாரிக்க தன்னால் முடியும் என்று அவர் திடமாக நம்பினார். அது மட்டுமல்ல மனிதர்கள் சாவே இல்லாமல் நிரந்தரமாக வாழத் தன்னால் உதவ முடியுமென்றும் நம்பினார். இரஸவாதக் கல் பூமியின் நடுவில் இருப்பதாக அவர் நினைத்தார். இதுவே ஆவிகள் போன்றவற்றைப் படைத்து விலைமதிப்புள்ள உலோகங்களை உருவாக்க வழி வகுத்தது என்று அவர் கூறினார்.

இந்த ஆவிகளே எதைத் தொட்டாலும் அதை மாற்றித் தன்னைப் போலத் திகழும் உருவங்களாக மாற்றி விடுகிறது என்று அவர் கூறினார்.

தேவதைகள் நம்முடன் பேச முடியும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது. இதனால், கடவுளால் அவர் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பைபிளில் கூறியுள்ளதைச் சரியாகப் புரிந்து கொள்பவராக ஆக்கப்பட்டதாக அவர் நம்பினார். பைபிளில் உள்ள ரகசிய சங்கேதங்களைத் தன்னால் புரிந்து கொள்ள முடியும் என நம்பியதோடு, “டே ஆஃப் ஜட்ஜ்மெண்ட் எனப்படும் இறுதித் தீர்ப்பு நாளில் உயிர்த்தெழும் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தமக்குள் பேசிக் கொள்வர்; மனிதர்களோவெனில் அவரவர் செயல்களுக்குத் தக தண்டனையையும் பரிசையும் அடைவர் -புனித புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதற்குத் தக்கபடி நடக்காதவர் அழியா நரகத் தீயில் தள்ளப்படுவர்” என்று அவர் எழுதினார்.

பழைய உலகமும் வானும் அழிந்து பட்டு புதிய வானும் உலகமும் மீண்டும் உருவாக்கப்படும் என்று அவர் எழுதியதோடு, அப்போது புதிய ஜெருசலம் உருவாகும் என்றும் அவர் நம்பினார். அப்போது அழியாத ரத்தினங்களால் உருவாகும் பல நகரங்கள் மின்னி ஜொலிக்கும். என்று அவர் கூறினார்.

பைபிளில் குறிப்பிடப்படும் கால கட்டங்களை மிகத் தீவிரமாக நம்பிய பலர் அது பற்றி எழுதியுள்ளனர். குறிப்பாக பிஷப் ஜேம்ஸ் உஷர் ( Bishop James Ussher 1581- 1656) என்பவர் பைபிளை நன்கு ஆய்வு செய்து பிரபஞ்சம் உருவாகிய தேதியையும் நேரத்தையும் கிறிஸ்துவுக்கு முன்னர் 4004ஆம் ஆண்டில் அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6 மணி தான் என்று திடமாக நிர்ணயித்தார்.

நியூட்டன் இந்த பைபிள் ஆய்வுகளை மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டார். அவரது ‘தி க்ரானாலஜி ஆஃப் ஏன்சியண்ட் கிங்டம்ஸ் அமெண்டட்’ என்ற புத்தகம அவர் மறைவிற்குப் பின்னர் 1728இல் வெளியிடப்பட்டது. 1704இல் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தில் 2060ஆம் ஆண்டு இந்த உலகம் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்து எழுதினார்.

  இந்த முடிவிற்கு தான் வந்தததற்கான காரணங்களையும் விவரித்தார் அவர்

பின்னர் நன்றாக ஆராய்ந்த பின்னர் 2060இல் உலகம் முடிவுறும் என்ற தனது முடிவை மாற்றி 2016ஆம் ஆண்டிலேயே உலகம் அழிந்து விடும் என்று அறிவித்தார்.

பூகம்பங்கள் கடவுளின் ஒப்புதல் இல்லாமையின் அறிகுறிகள் என்றார் அவர். நாத்திகர்களின் வழிபாட்டுச் சிலைகளை ஒளித்து வைத்துக் கொள்ளவே கடவுள் மலையில் குகைகளை அமைத்துள்ளார் என்பது அவர் நம்பிக்கை.

நியூமராலஜி எனப்படும் எண் கணித சாஸ்திரத்தில் நியூட்டனுக்கு அபார நம்பிக்கை உண்டு. விலங்கின் எண் 666: கடவுளின் சேவகர்களின் எண்ணிக்கை 144000 என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கீழ் வர்க்கத்தினருக்கும் பிரபுக்களுக்கும் இடையே இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் இருப்பது போன்ற உறவு இருக்கும் என்ற நியூட்டனின் தத்துவமே கார்ல் மார்க்ஸ் தனது தத்துவத்தை அமைக்கப் பெரிதும் காரணமாக அமைந்தது.

உலகிற்குப் பொதுவான ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்று இந்தக் காலத்தில் வறுபுறுத்தப்படும் கருத்தும் நியூடன் வலியுறுத்திய கருத்து தான்.

 செயற்கை அறிவானது உணர்வுள்ள மெஷின்களை உருவாக்கும் என்று இன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதலில் இதைக் கூறியது நியூடன் தான்.

நியூட்டனின் வாழ்க்கை சுவாரசியமானது மட்டுமல்ல; பல சுவையான தகவல்ளைத் தருபவையும் கூட!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஹென்றி கேவண்டிஷ் (Henry Cavendish 1731-1810) இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் இரசாயன இயல் விஞ்ஞானி. அவருக்கு பரம்பரைச் சொத்தாக ஏராளமான பணம் இருந்தது. ஆனால் அதை அவர் மதிப்பதே இல்லை. அவரது வங்கி அதிகாரி அவரிடம் வந்து அவரது 

ஏராளமான பணம் அவரது கணக்கில் வெறுமனே முடங்கி இருக்கிறது என்றார். இதைக் கேட்ட கேவண்டிஷ் அந்தப் பணம் சும்மா இருப்பது அவரைப் பாதிக்கிறது என்றால் அந்தப் பணம் முழுவதையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவதாகச் சொன்னார். திடுக்கிட்டுப் போன வங்கி அதிகாரி, “அப்படியில்லை, அதை சற்று பாதுகாப்பான பத்திரங்களில் முதலீடு செய்யலாமே என்று சொன்னேன்” என்றார்.

எரிச்சலடைந்த கேவண்டிஷ், “என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் இன்னொரு முறை இந்த மாதிரி சில்லறை விஷயங்களுக்கு என்னைத் தொந்தரவு செய்ய மட்டும் வராதீர்கள். வந்தீர்கள் என்றால் எல்லாப் பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவேன்” என்றார்.

வங்கி அதிகாரியோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரிடம் ஒப்புதல் பெற்ற மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வேகமாக அகன்றார்.

கேவண்டிஷுக்குப் பெண்கள் என்றாலே பயம். தனது வீட்டில் வேலை செய்த வேலைக்காரிகள் தனது முகத்தில் ஒரு போதும் விழிக்கக் கூடாது என்று அவர் உத்தரவு போட்டிருந்தார். மீறி யாரேனும் அவரைப் பார்த்தால் அந்த வேலைக்காரியின் சீட்டு கிழிக்கப்படும். தனக்கு வேண்டியதை எல்லாம்  ஹாலில் இருந்த மேஜையில் ஒரு நோட்புத்தகத்தில் எழுதி வைத்து விடுவார் அவர். அதன்படி வேலைக்காரிகள் வேண்டியதைச் செய்ய வேண்டும்.

விஞ்ஞானிகளில் விசித்திரமானவர் கேவண்டிஷ்!

***

22 பிரதம மந்திரிகளைக் கண்டவர் (Post No.7571)

22 பிரதம மந்திரிகளைக் கண்டவர் (Post No.7571)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7571

Date uploaded in London – 13 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிரிட்டனில் 22 பிரதமர்களின்  ஆட் சியைக் கண்ட பெண்மணி சார்லோட் ஹ்யுஜஸ் .

அவரைப் பற்றி நான் எழுதிய செய்தி 13-9-1992ல் தினமணி கதிரில் வெளியானது. இணைப்பில் படியுங்கள். பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள பத்து கட்டளைகளை பின்பற்றியதே நீண்ட ஆயுளின் ரகசியம்  என்கிறார் .  பத்து கட்டளைகளில் பெரும்பாலானவை பைபிளில் வருவதற்கு முன்பாகவே வேத கால நூல்களில் உள்ளவைதான்.

அவர்  1993ஆம்  ஆண்டில் இறந்தார்.அதாவது தினமணி கதிர் செய்தி வந்த ஆறே மாதங்களில் 1993 மார் ச் 17ம் தேதி இறந்தார். வெப்சைட் செய்தி ஒன்றில் அவர் தேநீர் அருந்தியதே நீண்ட ஆயுளின் ரஹஸ்யம் என்றும்  காணப்படுகிறது.

Charlotte Marion Hughes (née Milburn; 1 August 1877 – 17 March 1993) is the longest-lived person ever documented in England and the United Kingdom overall, at 115 years 228 days. She is 220 days older than Annie Jennings, the next oldest British supercentenarian. She is among the 25 oldest people overall and was the 4th verified supercentenarian to turn 115. She drank tea and said it has helped with her longevity.

tags – 22 பிரதமர்கள் , சார்லோட் ஹ்யுஜஸ் , நீண்ட ஆயுள் , ரகசியம்