குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் (Post No.5407)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 16-28 (British Summer Time)

 

Post No. 5407

 

பாரதியார் பிறந்த நாள்: டிசம்பர் 11, 1882

இறந்த நாள் செபடம்பர் 11, 1921

 

பறவைகளையும் மிருகங்களையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பது வேத காலம் முதல் இருந்து வருகிறது. இயற்கையிலிருந்து  தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை  முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம்.

பாரதிக்குக் குருவியும் காகங்களும் போதித்த விஷயங்கள் ஏராளம். இதனால்தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் போலும். குருவியின் விடுதலை உணர்வைக் கண்டவுடன் நாட்டு விடுதலை கூட அவருக்கு மற ந்து விட்டது. ஆன்ம விடுதலை பற்றிப் பாடத் துவங்கினார். அதையும் முன்னரே ‘விட்டு விடுதலையாகி’ என்ற பாடலில் கண்டோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாப்பா பாட்டில் எல்லா மிருகங்கள் மூலம் கற்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து அவைகளிடத்தில் இரக்கம் கொள்ள வேண்டும் பாப்பா என்கிறார்.

 

 

இது தவிர குயில் பாட்டு, கிளிப் பாட்டு என்று பறவைகளை வைத்து பல பாடல்கள் வேறு.

ஆயினும் நிறைய பேரை கவந் து ததி ஈர்க்காத பாடல் ஒன்றில் பெரிய பட்டியலே குருவியின் வாய் மூலமாக கேட்கிறார்.

 

பாரதியார் குருவியிடம் கேட்ட கேள்வி:

ஏ குருவியே நீ என்ன வேலை செய்கிறாய்?

எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?

 

உடனே குருவி சொன்ன பதிலைப் பாருங்கள்:

 

எங்களிடம், கீழ் ஜாதி , மேல் ஜாதி இல்லை;

அடிமைகளில்லை; எல்லோரும் மன்னர்!

 

 

மேலும் எங்களிடம் காசு பணம் கிடையாது.

ஆனால் எப்போதும், எங்கும் எங்களுக்கு உணவு கிடைக்கும்

 

சின்ன வயிற்றுக்காக ஆட்டுக் குட்டிகள் போல பிறரிடம் கட்டுப்பட்டிருக்க மாட்டோம்.

 

வீடு வாசல் தேவை இல்லை; ஆகாயமே கூரை!

 

உணவோ உயர்ந்த பொருள்கள்தான்.

 

எங்களிடம் ஏழை பணக்காரர் இல்லை.

ஏற்ற தாழ்வு இல்லை.

கள்ளம் கபடம் கிடையாது.

 

கொலை, களவு கிடையாது;

இளையோரை வலியோர் ஏறி மிதிப்பதும் இல்லை.

 

நீங்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்தாலும் துன்பத்தில் உழல்கிறீர்கள்; நாங்கள் அப்படித் துன்பப் படுவதில்லை.

 

மரம், செடி, மலர்கள், ஏரி, குளங்கள், மலை, குன்று, வீடுகள் ஆகியவற்றில் சுற்றிச் சுற்றி விளையாடுவோம்.

குடும்பக் கவலைகள் இல்லை.பந்தங்கள் கிடையா.

தீட்டு முதலியன இல்லை.

 

இன்பம்; எப்போதும் இன்பம்.

 

காலையில் எழுந்து கடவுளைத் தொழுவோம்.

மாலையிலும் கடவுளைத் தொழுவோம்.

 

துன்பத்தில் உழலும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன்.

 

மெய்ஞ் ஞானத்தைப் பெறுங்கள்;சிறுமைத் தனங்களை உதறி விடுங்கள். இதனால் தேவர் நிலை கிடைக்கும். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பான். இன்பம் கிட்டும்.

 

அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடியுங்கள்;

 

பொய் வேஷம் போடாதீர்கள்;

தர்மத்தைக் கைக்கொள்ளுங்கள்.

 

பயத்தை விட்டு துணிச்சலாக நில்லுங்கள்.

 

இப்படி வாழ்ந்தால் என்றும் இன்பம் என்று குருவி நல்ல யோசனை கூறுகிறது.

நல்ல யோசனைதான்; ஆனால்  பின்பற்றுவதோ எளிதல்ல.

குருவிகளைக் கவனித்தோருக்கு அவை எப்போதும் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரிந்து விளையாடுவது வியப்பை ஏற்படுத்தும். அவற்றின் ரஹஸியம் இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது. ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம்; அடிமை வேலை இல்லாத சமுதாயம்; காசு பணம் என்று திரியாத சமுதாயம் ; ஏழை பணக்காரர் இல்லாத எப்போதும் உணவு கிடைக்கும் வளமை! பெரிய பங்களாக்கள், மாட மாளிகைகள் இல்லாத எளிமையான வாழ்வு.

 

வாழ்க சிட்டுக் குருவிகள்!

 

 

 

பாரதி நாமம் வாழ்க

 

–சுபம்—

 

செம்பைப் பொன்னாக்கி தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5403

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

 

 

செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.

இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

 

இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.

சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.

இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.

கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.

கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.

அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-

பாத பத்திரம் பற்பல மூலி கொண்

டூது கற்புட முன்வலி யெய்திய

சூத வேதைசிந் தூரத் துகளினால்

வாத சித்தி கனகம் வழங்கினான்

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

 

கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:

 

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

ரந்திபக லற்றநிலை                        வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை

அன்பொடுது திக்கமன                   மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற

சந்திரவெ ளிக்குவழி                        யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

சம்ப்ரமவி தத்துடனே                       வருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன

முன்றனைநி னைத்தமைய                  அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி

வந்தனைய புந்தியினை                     யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.

***

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 6 September 2018

 

Time uploaded in London – 18-55  (British Summer Time)

 

Post No. 5399

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ்ப் பழமொழி. ஏன்?

தந்தத்திற்கு அவ்வளவு மதிப்பு. உலகெங்கிலும் இந்திய தந்தப் பொருட்கள் உள்ளன. இப்பொழுது இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும், மேலும் பல நாட்டு மியூஸியங்களிலும் இந்திய தந்தப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் பழங்கால எகிப்தில் இந்திய தந்தச் சிற்பங்கள் இருப்பது பற்றி எழுதியுள்ளேன். இதோ மேலும் சில சுவையான செய்திகள்.

இங்கிலாந்தில் இந்திய யானைத் தந்தம்

சென்னை அரும்பொருட் காட்சியகத்தின் சூபெரின்டெண்டாக இருந்த எட்வர்ட் தூர்ஸ்டன் ஒரு செய்தியைக் தெரிவித்ததார். கேரளத்தில் மன்னர் பரம்பரையில் வந்த ராம வர்மா ஒரு முறை ஐந்து அற்புதமான தந்தச் சிற்பங்களைப் பார்த்தார். அவற்றில் மனதைப் பறிகொடுத்து தந்த வேலை செய்யும் சிற்பிகளுக்கு பேராதரவு வழங்கினார். அவரை அடுத்து மன்னராக வந்த மார்த்தாண்ட வர்மா அதில் மேலும் ஈடுபட்டார். அவர் ஒரு பெரிய தந்த சிம்மாசனத்தைச் செய்து அதை  விக்டோரியா மாஹாராணிக்கு அனுப்பி வத்தை வைத்தார். உடனே பிரிட்டிஷார் அதை 1851 ஆம் ஆண்டு லண்டன் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு வின்ட்ஸர் அரண்மனைக்கு எடுத்துச் சென்றன்ர்.

லண்டனில் உள்ள மியூஸியங்களிலும் தனியாரிடமும் நிறைய தந்தக் கலைப் பொருட்கள் உள்ளன. மூக்குப்பொடி டப்பி முதல் ஆங்கில எழுத்துகளைச்  சிறுவர்களுக்கு கற்பிக்கும் அகரவரிசை வரை ஆயிரக்கணக்கான கலைப் பொருட்கள் இந்திய அரண்மனைகளிலும் இல்லங்களிலும் உள. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாஸ்கோவுக்குச் சென்ற பொழுது ஒரு பெரிய தந்த ஸ்க்ரீனை ரஷ்யாவுக்குப் பரிசாகக் கொடுத்தார். 1955ஆம் ஆண்டில் கொடுத்தது இப்பொழுதுஅங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுதுமுள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்து வந்த பிரிட்டிஷார், லண்டன் பிரிட்டிஷ் மியூஸியத்தில் அஸீரிய நாகரீக தந்த கலைப் பொக்கிஷத்தை வைத்துள்ளனர். ஹைதராபத்தில் சாலார் ஜங் மியூஸியத்தில் சிறப்புமிக்க கலை வேலைப்பாடுகள் மிகுந்த தந்த கைவினைப் பொருட்கள் காட்சியில் உள்ளன. பெரும் பணக்காரர்கள் சதுரங்கக் காய்களை தந்தத்தில் செய்தனர்.

மும்பையிலுள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூஸியத்தில் நிறைய தந்த கைவினைப் பொருட்கள் இருக்கின்றன. நாடு முழுதும், குறிப்பாக கேரளத்தில் நிறைய இடங்கள், தந்தச் சிற்பங்களுக்கு பெயர் போன ஊர்களாகும்.

சிந்து- ஸரஸ்வதி சம வெளி நாகரீக காலத்தில் பெண்கள் தந்தத்தினால் ஆன சீப்புகளைப் பயன்படுத்தியதும் தெரிகிறது.

அது மட்டுமல்ல தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் தந்தம் பற்றிய அரிய விஷயங்கள் இருப்பது எனது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

 

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் காளிதாசன் வாழ்ந்தான் என்று நான் சங்க இலக்கிய உவமைகள் மூலம் நிரூபித்தேன். உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாஸன் எழுதிய ரகுவம்ஸ காவியத்திலொரு அற்புதமான செய்தி வருகிறது:-

ரகு வம்ஸம் 17-21

மன்னன் அதிதி, நாற்கால் மண்டபத்தில் அமர்ந்து அபிஷேகம் செய்துகொண்டபின் உடை உடுப்பதாற்காக அருகிலோர் உள்ள மற்றோர் அறையில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்த ஆசனத்தில் உட்கார்ந்தான் (17-21, ரகு வம்சம்)

 

யானைத் தந்த ஆசனம்= கஜ தந்த ஆசனம்

 

இதே போன்ற ஒன்றைத் தான் கேரள மன்னர் , விக்டோரியா மஹா ராணியாருக்கு   செய்து அனுப்பினார். சிற்ப வேலைகள் அனைத்தும் பரம்பரையாக கற்பிக்கப்பட்டதால் நூற்றாண்டுக் காலத்திலும் அது பெரிதும் மாறி இருக்காது என்று நம்பலாம்.

 

கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடலில் (40-2) பாடுகிறார்,

“வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்

சாந்த மரத்தின் , இயன்ற உலக்கையால்

ஐவன வெண்ணெல் அறி உரலுள் பெய்து

புலியால் கொல்லப்பட்ட யானையின் தந்தத்தை எடுத்து வந்து செய்த உலக்கை, மற்றும் சந்தன உலக்கையால் மூங்கில் நெல்லைக் குத்தியதாக கபிலர் பாடுகிறார்.

அகநானூற்றில் தொல்கபிலர் பாடிய பாடலில் (282), ஒரு வேடன் காட்டிலே யானையைக் கொன்று கொண்டு வந்த தந்தத்தால் தங்கத்தைத் தோண்டி எடுக்க முயன்றான். ரத்தினக் கற்களுடன் தங்கமும் வந்தது. அந்த நேரத்தில் கோடாரி போல பயன்பட்ட யானைத் தந்தம் ஒடியவே அதிருந்து முத்துக்களும் சிதறின என்கிறார் ( யானையின் மருப்பில்முத்துக்கள் இருப்பதாக , காளிதாசனும் தமிழ்ப் புலவர்களும் நம்பினர்)

 

“பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்

கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப

வைத்துதி வால் மருப்பு ஒடிய உக்க

தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு”

 

நல்ல கற்பனை! ஆயினும் அக்காலத்தில் வேடுவர்க்கு யானைத் தந்தம் கிடைத்ததால் அதைக் கொண்டு பல்வேறு பண்டமாற்றம் செய்த தகவல்களுமுள.

பாலி என்ற நகரில் ஒரு தெரு முழுதும் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தனர்.

 

சாஞ்சியில் கிடைத்த 2200 ஆண்டுப் பழமையான கல்வெட்டு விதிசா நகரில் இருந்த தந்த வேலை சிற்பிகள் பற்றி செப்புகிறது.

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் கட்டில் கால்கள் தந்தத்தால் செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கெல்லாம் முன்னதாக வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அயோத்தியில் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தது பற்றிச் சொல்கிறார்.

 

சூத்ரகர் எழுதிய ‘மிருச்ச கடிகம்’ நாடகத்தில் ஒரு நாட்டிய மாதின் முற்றம் தந்தத்தால் ஆனதாகச் சொல்கிறார்.

 

ஹெர்குலேயம், பெக்ராம் (Herculeum, Begram) போன்ற வெளிநாட்டு நகரங்களில் இந்திய தந்தப் பொருட்கள் கிடைத்தன. சிந்துவில் பிராமணாபாத் நகரில் சதுரங்கக் காய்கள் கிடைத்தன.

 

ஆக இலக்கியமும் கல்வெட்டும் தொல்பொருத் துறை அகழ்வும் தந்தம் பற்றிப் பேசுவதால் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தந்த வேலையில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

போர்ச்சுகீஸிய, ஆங்கில வரலாற்று ஆய்வாளர்களும் நமது தந்த வேலை பற்றிப் பகர்ந்தனர்.

வெளிநாட்டு தந்தப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் எனது நேற்றைய ஆங்கிலக் கட்டுரையில் காண்க

–subham–

ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்! (Post No.5353)

WRITTEN BY S NAGARAJAN

Date: 23 August 2018

 

Time uploaded in London – 5-39 AM (British Summer Time)

 

Post No. 5353

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற எட்டாவது உரை.

 

தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில  இளம் பெண்கள்!

 

சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதில் இன்றைய உலகில் இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இளம் மங்கையர்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயல்களைச் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக சில இளம் பெண்களைப் பற்றிச் சொல்லலாம்.

 

கனடாவைச் சேர்ந்த பதினெட்டே வயதான ஆன் மகோசின்ஸ்கி (Ann Makosinski) என்ற இளம் பெண் இரண்டு புது விதக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். ஹாலோ ஃப்ளாஷ் லைட் (Hallow Flash light) என்ற இந்த விளக்கு உடலில் உள்ள வெப்பத்தால் எரியக்கூடிய ஒன்று. அவரது இன்னொரு கண்டுபிடிப்பு இ- ட் ரிங்க் (e-drink) என்பதாகும். இது ஐ- போனை சார்ஜ் செய்யும் ஒரு கோப்பையாகும். அதிலிருக்கும் பொருளின் அதிக வெப்பமானது மின்சாரமாக மாறும். இப்படி நாம் அறியாமல் நம்மைச் சுற்றியுள்ள ஆற்றலைப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதே இவரது பொழுது போக்கு. இவரது கண்டுபிடிப்புகளை கண்டு வியப்போர் இவரை ஆங்காங்கே அழைப்பதால் உலகெங்கும் சுற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் Times 30 Under 30 World Changers- அதாவது 30 வயதுக்குக் கீழேயுள்ள 30 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பிரபல டைம்ஸ் பத்திரிகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

 

 

சிகாகோவைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஜெண்டயி ஜோன்ஸ் (Jendayi Jones) இளமையிலிருந்தே சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவர். மறு சுழற்சி, நல்ல உரங்களை உருவாக்கல், ஆற்றலைச் சேமிக்கும் பல்புகளின் பயன்பாடு, கழிவுகளைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட இவர் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கினார். இவரால் ஏராளமானோர் உத்வேகம் பெற்று சுற்றுப்புறச் சூழலைக் காப்பதில் இவருடன் இணைந்து தன்னார்வத் தொண்டைச் செய்து வருகின்றனர்.


இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்ணான பதினேழே வயதான தீபிகா குருப் (Deepika kurup) தனது கோடைக்கால பயணங்களில் ஆங்காங்கே குழந்தைகள் அழுக்கு நீரைக் குடிப்பதைக் கண்டு மனம் நொந்தார். உடனடியாக சூரிய சக்தியால் நீரை அசுத்தமாக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் ஒரு புது வழியைக் கண்டு பிடித்தார். இது ஏழைக் குழந்தைகளுக்கு சுத்த நீரைத் தரும் வரபிரசாதமான கண்டுபிடிப்பாக அமைந்து விட்டது.

 

இருபத்தேழே வயதான இளம் மங்கை ஷானா மஹாஜன் (Shauna Mahajan) சிறுவயதிலிருந்தே உலகம் எப்படி இயங்குகிறது என்று அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே விஞ்ஞானத்தை தனது பாடமாக எடுத்துக் கொண்டு இயற்கையுடன் மனிதர்கள் பழகும் விதத்தை ஆராயலானார். பார்படோஸில் உள்ள பவழப் பாறைகளை ஆராய்ந்தார்.கென்யாவில் உள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும் தெற்கு க்யூபெக்கில் விவசாயம் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார். தனது நீண்ட ஆய்வுகளின் முடிவில் இவர் கண்டுபிடித்தது இயற்கையுடன் மனிதன் நன்கு லயத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதைத் தான். இதன் மூலமாக சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும் என்பதை பிரசாரம் செய்து வருகிறார்.

 

Shauna Mahajan

இவர்களைப் போல அனைத்துப் பெண்களும் முனைந்து நின்றால் பூலோகம் சொர்க்கமாகி விடும் இல்லையா?!

***

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும் (Post No.5349)

WRITTEN BY S NAGARAJAN

Date: 22 August 2018

 

Time uploaded in London – 6-57 AM (British Summer Time)

 

Post No. 5349

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஏழாவது உரை

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொருவரும் தான் வாழும் பகுதியில் உள்ள சமுதாயத்திற்கு இணங்கவும், தங்களது பொருளாதார வருமானத்திற்கு ஏற்றபடியும் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுற்றுப்புறத்தில் இருக்கும் இயற்கை ஆதார வளங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சேதப்படுத்தாமல் வாழ வேண்டும் என்ற அக்கறை நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வரவேற்கத்தக்க நல்ல ஒரு மாறுதல் இது.

நீடித்த வாழ்வைத் தமக்கும் தமது சந்ததியினருக்கும் வழங்கும் இந்த வாழ்க்கைமுறையில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்

 

மூன்று ஆர் கொள்கைகள் (3 R’s Principle – Reduce, Reuse, Recycle) எனப்படும் குறை, திருப்பிப் பயன்படுத்து, மறு சுழற்சி செய் என்ற மூன்று கொள்கைகள் பிரதானமானவை.

 

வாழ்கின்ற இடத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த மூன்று ஆர் கொள்கை முக்கியமானது.

 

இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் நமது தேவைகளை எவ்வளவு குறைந்த பட்ச தேவையோ அதற்குத் தக அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்வில் பல பொருள்கள், தயாரிப்புகள் திரும்பப் பயன்படுத்துவதற்கு உகந்தவை. மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடிபவை. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் மறுசுழற்சி செய்வதன் மூலமும் சுற்றுப்புறச் சூழல் மேம்படும்.

இன்னொரு அற்புதமான நடைமுறை நகரத்தில் பயிரிடுதல் (Urban Farming) என்பதாகும். மெட்ரோ நகரங்கள் எனப்படும் பெரு நகர்களில் இது இப்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீட்டு மாடிகளில் தோட்டத்தை அமைப்பது, சிறு குழுவாகச் சேர்ந்து சமுதாய அளவில் ஒரு பண்ணையை அமைத்துப் பயிரிடுவது ஆகியவை வரவேற்கத்தக்க இன்றைய நவீன வாழ்க்கைமுறையாக மாறி வருகிறது. இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவையாக அமைகின்றன. இப்படி வீட்டு மாடிகளில் தோட்டங்களை அமைப்பதானது விளைநிலங்களின் தேவையை கிராமப்புறத்தில் குறைக்கவும் செய்கிறது.

 

மும்பை போன்ற பெரு நகரங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் மாடித் தோட்டங்களில் கறிகாய்களைப் பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்வது சுவையான ஒரு செய்தியாகும். இதனால் உத்வேகம் பெறும் இதர பெரு நகர சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தாங்களும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கத் துவங்கி விட்டனர். இவற்றில் பல அரிய வகை மூலிகைகளும் வளர்க்கப்படுகின்றன. இதில் கிடைத்த வெற்றியால் இவர்கள் இதைப் பற்றிய கருத்தரங்கத்தையும், பயிற்சி முகாமையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதைப் பற்றி நன்கு அறிந்து நமது பகுதியில் நாமும் நகரில் பயிரிடுதல் என்னும் நல்ல திட்டத்தை ஆரம்பிக்கலாமே!

***

THE CHAMELEON பச்சோந்தி (Tamil and English) (Post NO.5340)

Compiled by london swaminathan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 18-08 (British Summer Time)

 

Post No. 5340

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

THE CHAMELEON was written by English poet and scholar James Merrick (1720-1769). He translated the chameleon from Greek. His poems are featured in Oxford Religious Poetry anthologies.

The verse is translated into Tamil by Pundit M Gopalakrishnan of Madurai, Tamil Nadu and was published in his anthology in 1915.

Following is the original poem in English and the translation in Tamil.

It is similar to the story of a five blind men and an elephant found in Hindu and Buddhist literature.

 

ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்று ட்ரினிட்டி கல்லூரியில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராக மாறியும் கடும் தலைவலி காரணமாக அந்தப் பணியை ஆற்ற முடியவில்லை. ஆனால் இவர் எழுதிய பச்சோந்தி என்னும் கவிதை மிகவும் கருத்தாழம் மிக்கது. அந்தக் கவிதையை அவர் கிரேக்க மொழியில் இருந்து மொழி பெயர்த்தார். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்டின் சமயக் கவிதைகள் தொகுப்பில் வெளியாகியுள்ளன.

 

இந்து மத, புத்த மதப் புஸ்தகங்களில் உள்ள அந்தகர்கள் யானையைக் கண்ட கதையுடன் இதை ஒப்பிடலாம். ஆங்கிலக் கவிதையை மதுரை பண்டிதர் கோபால கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்து 1915ம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டார்.

 

–subham–

ரமண பக்தையைக் காத்த நாகம்! (Post No.5337)

Written by S Nagarajan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-17 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

 

ச.நாகராஜன்

 

பகவான் ப்ரியா மா பிரோஜா தலயார்கான் (Ma Firoza Taleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

 

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

 

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

 

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாம்பு பாம்பு என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான்  ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.

திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் அவர்.

 

அவர் உடனடியாக ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

 

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

 

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

 

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

 

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும்  வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

 

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

 

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில்  நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

****

 

 

 

சுதந்திரம் பற்றி பாரதி (Post No.5321)

Compiled  by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –18-44 (British Summer Time)

 

Post No. 5321

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

ஏலு மனிதர் அறிவையடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே!பாரதி

 

வந்தே மாதரம் என்றுயிர் போகும் வரை

வாழ்த்துவோம்;- முடி தாழ்த்துவோம்

எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்

 ஈனமோ?- அவமானமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

ஒற்றுமை வழியொன்றே வழியென்பது

ஓர்ந்திட்டோம்;- நன்கு தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெல்லாம்

மலைவுறோம்; – சித்தம் கலைவுறோம் சுதந்திரம் பற்றி பாரதி

 

 

ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!

ஜய ஜய மாதா! ஜய ஜய துர்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!  பாரதி

 

 

ஏழையென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே! பாரதி

 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பாட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத் திழிவுற்றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே சுதந்திரம் பற்றி பாரதி

 

 

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

 

ஓராயிர வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்

வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

வந்தே மாதரம் என்று வணங்கிய பின்

மாயத்தை வணங்குவாரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

என்பதை மறப்பாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

எல்லாரும் அமரநிலை எய்தும்நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க! பாரதி

 

 

 

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது  உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை- வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்- அதன்

உச்சியின்மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும்- செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் பாரதி

 

 

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்- மிடிப்

பயங்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்

 

ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே- பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே- இனி

நல்லோர் பெரியாரென்னும் காலம் வந்ததே – கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நரகம் வந்ததே

 

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்- இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்- பரி

பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்.

 

–subham–

நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்! (Post No.5312)

Written by S Nagarajan

Date: 12 August 2018

 

Time uploaded in London – 6-28 AM  (British Summer Time)

 

Post No. 5312

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிலிருந்து ஆர் சி ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் ஆரோக்கிய தமிழ் மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஆகஸ்ட் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்!

ச.நாகராஜன்

 

நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு கார்போஹைட்ரேட் இன்றியமையாதது. அது இனிப்பு, ஸ்டார்ச், ஃபைபர் ஆகிய மூன்றை உடலுக்கு வழங்குகிறது.

கார்போஹைட்ரேட்டை கடந்த பல ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் தவறான தகவல்களைத் தந்து நிந்திக்கிறார்கள்.

டயபடீஸை தரும் வில்லனாக அது சித்தரிக்கப்படுகிறது.

தேவைக்கு அதிகமாக அதை உண்டால் அது வில்லன் தான். இன்றைய நவீன உணவுப் பழக்கங்கள் கார்போஹைட்ரேட்டை அதிகமாக உடலில் சேர்க்கிறது என்பதும் உண்மை தான். ஆகவே அளவோடு அதைச் சேர்த்தால் வளமோடு வாழலாம்.

கார்போஹைட்ரேட் தரும் மூன்று சக்திகளைப் பார்க்கலாம்:-

இனிப்பு : இயற்கையாகக் கிடைக்கும் இனிப்பு உடலுக்கு மிகவும் நல்லது. கரும்பிலிருந்து கிடைக்கும் இனிப்பு ஆற்றலைத் தரும். பால், பழங்களிலும் இனிப்பு உண்டு. இது உடலில் எளிதில் ஜீரணமாகக்கூடியது. அளவோடு இனிப்பைச் சேர்க்க வேண்டும்.

 

ஸ்டார்ச் : மாவு, ரொட்டி, உருளைக்கிழங்கு, கிழங்கு வகைகள், அரிசி, பீன்ஸ் உள்ளிட்டவற்ற்றில் ஸ்டார்ச் கிடைக்கிறது. உடலுக்கு சக்தியைத் தரும் முக்கியமான ஒன்று ஸ்டார்ச். நீண்டகாலம் நிலைத்திருக்கும் சக்தியையும், உடல் வலிமையையும் ஸ்டார்ச் தருகிறது. உடலில் ஸ்டார்ச் மெதுவாகத் தான் ஜீரணிக்கப்படும். ஜீரணிக்கப்பட்டவுடன் இது க்ளுகோஸ் என்று அழைக்கப்படும் இனிப்பாக மாறுகிறது. அரிசியில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆனால் கார்போஹைட் ரேட் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. அரிசியில் புரோட்டின் குறைவு; பருப்பு வகைகள் தரும் நன்மையும் இதில் குறைவாகத் தான் கிடைக்கும். ஃபைபர், தாதுக்கள், விடமின் பி இதில் உள்ளது.

ஃபைபர் : பழங்கள், பருப்பு வகைகள், கறிகாய்கள் ஆகியவற்றிலிருந்து கிடைப்பது ஃபைபர். மிருகங்கள் ஃபைபரை எளிதில் ஜீரணித்து விடும். ஆனால் மனிதர்களோ ஃபைபரை எளிதில் ஜீரணிக்க முடியாது. ஆனால் உடலின் சக்திக்காக இதை நாம் சேர்த்துத் தான் ஆக வேண்டும். இது தேவையற்றவற்றைக் கழிவாக உடலிலிருந்து வெளியேற்றுவதால் இன்றியமையாததாக ஆகிறது.

கிழே உள்ள அட்டவணையில் வெவ்வேறு உணவு வகைகளில் உள்ள கார்போஹைட்ரேட் அளவைக் காணலாம்.

 

கார்போஹைட்ரேட் அளவு

நூறு கிராமில் உள்ள இனிப்பு மற்றும் ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் அளவை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

உணவு (100 கிராமில்)    இனிப்பு (கிராம்)   (ஸ்டார்ச் கிராம்)

வாழைப்பழம்               16                9

சாக்லேட்                  43               24

சோளம்                     7               78

தேன்                      76                0

ஐஸ்கிரீம்                  19                1

மாமிசம்                    0                0

பால்                       4                 0

ஆரஞ்சு                    26                0

உருளைக்கிழங்கு (வெந்தது)  1                17

அரிசி                       –                31

ஜீனி                      100                 0

தக்காளி கெட்ச்-அப்         23                 1

ஒய்ட் ப்ரட்                  3                46

கார்போஹைட்ரேட் தரும் நன்மைகளைக் கீழே காணலாம்:

மனநிலையைச் சீராக்குகிறது :-

பசி அதிகமாக இருக்கும் போது எரிச்சல் எரிச்சலாக வருகிறது, இல்லையா?காரணம் என்ன? உடலுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்படுவதால் தான்! இரத்தத்தில் இனிப்பு அளவு குறையும் போதும் எரிச்சல் வரும். மூட்  – மனநிலை மாறும். குறைந்த கார்போஹைட்ரேட் மனச்சோர்வைத் தரும். கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டவுடன் மனநிலை சீராகும்.

எடை கூடுதலைத் தவிர்க்கும்:-

ஃபைபர் மிக மெதுவாகவே ஜீரணிக்கப்படும். ஆகவே பைபர் வகை உணவுகளைச் சாப்பிடுவோர் சீரான உடல் எடையைக் கொண்டிருப்பர். சிலரது எடை குறையக் கூடச் செய்யும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்: –

கார்போஹைட்ரேட் இதயத்தை மேம்படுத்தும் அல்லது மோசமாக்கும். எந்த வித கார்போஹைட்ரேட் உணவை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. சோடாவில் இருக்கும் கார்போஹைட்ரேட் மோசமான விளைவைத் தரும். ஓட்ஸோ வலிமையைத் தரும்.

மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் :-

கார்போஹைட் மனத்தின் ஆற்றலைக் கூர்மையாக்கும். குறைந்த கார்போஹைட் உணவு மூளை ஆற்றலை மேம்படுத்தும்.

கான்ஸர் அபாயம் குறையும் :-

சரியான கார்போஹைட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கான்ஸர் வரும் அபாயம் குறையும். கார்போஹைட்ரேட் என்றவுடன் உருளைக்கிழங்கை மட்டுமே அனைவரும் நினைப்பர். ஆனால் வெங்காயம், தக்காளி போன்ற நூற்றுக்கணக்கான கறிகாய்களில் நல்ல கார்போஹைட்ரேட் உள்ளது. அது கான்ஸர் அபாயத்தைத் தடுக்கும். ஆன்டி ஆக்ஸிடெண்ட் இவற்றில் இருப்பதால் நன்மை ஏற்படும். ஃபைபரை அதிகம் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அபாயமும் நீங்கும்.

நல்ல உறக்கம் வரும் :-

மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட் உணவு வகைகள் மன நிலையைச் சீராக்கும். நல்ல ஓய்வைத் தரும். அருமையான தூக்கத்தைத் தரும்.

ஜீரணம் நன்கு ஆவதால் ஆரோக்கியம் மேம்படும் :-

ஃபைபர் உணவு வகைகள் குடலின் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். கழிவுகளை உடலில் எங்கும் தேங்க விடாது உடனடியாக அப்புறப்படுத்தும். மலச்சிக்கல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும், கோலன் கான்ஸரை ஏற்படவிடாமல் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 

Metabolism எனப்படும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் :-

பசி எடுக்காமல் இருக்கும் போது உடல் நன்கு இயங்கும். கார்போஹட்ரேட் சரியான தைராட்ய்ட் ஹார்மோனுக்கு உதவியாக இருக்கும். உடல் முழுவதிலுமான மெடபாலிஸத்தைச் சீராக இருக்க வைக்கும்.

 

விளையாட்டில் மேம்பட்ட செயல்திறன் வரும் :-

கார்போஹைட்ரேட் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு அதிக செயல்திறனைத் தரும். ஏனெனில் விளையாட்டின் போது உடலின் அதிக பட்ச ஆற்றலைக் காண்பிக்க வேண்டியிருப்பதால் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. கொழுப்பு  சக்தி உதவும் என்றாலும் கூட கார்போஹைட்ரேட் தரும் சக்தி கொழுப்பு தருவதை விஞ்சும்.

 

சக்தியை அதிக அளவில் தரும் :

கார்போஹைட்ரேட், ‘எனர்ஜி கரன்ஸி எனப்படும் ஏடிபி ATP-யைத் தரும் க்ளூகோஸை உற்பத்தி செய்வதால் உடலின் சக்தி மேம்படும். சோம்பேறித்தனமாக இருப்பதாகத் தோன்றினால் தரமான கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பு தேடி வரும்.

 

தசை பொருள்திணிவை மேம்படுத்தும்

Muscle Mass என்பது க்ளைகோஜன் உள்ள தரமான புரோட்டினை உட்கொள்வதால் வரும். ஆக இதற்கும் கார்போஹைட்ரேட்

 இன்றியமையாததாக ஆகிறது.

 

ஆயுளை நீட்டிக்கும் :-  இரண்டு அனபாலிக் ஹார்மோன்களை கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவு வகைகள் ஊக்குவிக்கின்றன. இன்சுலின் மற்றும் இன்சுலின் லைக் க்ரோத் ஃபேக்டர் எனப்படும் IGF-1 ஆகிய இரண்டை கார்போஹைட்ரேட்

 ஊக்குவிப்பதால் செல்களின் ஆயுள் நீடிக்கிறது.

 

திருப்தியைத் தரும் :-

செரோடோனினின் இயக்கங்களாலும் கேஸ்ட்ரிக் என்ஜைம்களாலும் கார்போஹைட்ரேட் உணவு வகைகள் உங்களுக்கு நல்ல உணவை உண்ட திருப்தியை ஏற்படுத்தும்.

 

ஆகவே கார்போஹைட்ரேட் உணவுவகைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதை நமது உடல் ஆற்றலையும் ஆயுளை யும் கூட்டுவதற்காக முறையாப் பயன்படுத்திக் கொண்டால் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழலாம்!

***

 

 

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை (Post No.5297)

ஒட்டக மர்மம்-PART -2 (5297)


RESEARCH ARTICLE WRITTEN by London swaminathan

Date: 7 August 2018

 

Time uploaded in London – 12-20  (British Summer Time)

 

Post No. 5297

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரிக் வேதம் முதல் தமிழில் அகநானூறு வரை ஒட்டகம் பேசப்படுவது வியப்பான செய்தி

 

ரிக் வேதத்தில் ஒட்டகம் வரும் இடங்கள்  ஈரான் (பாரஸீக) பகுதி பாடல்களிலேயே வருகிறது. அதாவது எட்டாம் அத்தியாயத்தில்!

 

 

ரிக் வேத எட்டாம் அத்யாய (மண்டல விஷயங்கள்)

 

புரோகிதர்களுக்கு மன்னன் காஷு நூறு ஒட்டகங்களையும் 10,000 பசுக்களையும் பரிசாகக் கொடுத்தான் (8-5-37)

 

பல்பூதாவும் தாருக்ஷாவும் முனிவருக்கு 100 ஒட்டககங்களைப் பரிசாகக் கொடுத்தனர் (8-46-32)

 

பர்ஷுவும் த்ரீந்திராவும் ஒரு லக்ஷம் பரிசு/ தானம் கொடுத்தனர் (8-6-46)

 

இந் த மன்னர்களின் பெயர்கள் ஈரானிய அவெஸ்தன் இலக்கியத்திலும் வருவதால் எட்டாவது மண்டலம் ஈரானிய மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது.

சுமார் 20, 30 வெள்ளைக்கார்கள் ரிக் வேத த்தை மொழி பெயர்ப்பதாகச் சொல்லி குதறி இருக்கிறார்கள்; உளறிக் கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள் ஒட்டகம் என்றால் திமிலுள்ள மாடு என்பர். திமிலுள்ள மாடு என்றால் ஒட்டகம் என்பர். ஒருவருக்கொருவர் முரண்பாடாக “முழி” பெயர்த்து இருக்கின்றனர்.

 

ஆனால் இந்தோநேஷியாவில் உள்ள மூல வர்மனின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளிலும் பிராஹ்மணர்களுக்குக் கட்டித் தங்கமும் 10,000 பசுமாடுகளும் தானம் கொடுத்த செய்தி உள்ளதால் 10,000 பசுக்கள் 100 ஒட்டகங்கள் என்பதே பொருத்தம் என்பது எனது துணிபு.

 

ஒட்டகம் பற்றி உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் மேலும் பல பாடல்கள் உள.

 

சிந்து சமவெளியில் முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைத்தது. ஆனால் அது மேல்  மட்டத்தில் கிடைத்ததாகச் சொல்லி அது பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை. அது ஆராயப்படாத மர்மம் ஆகும். மற்ற அகழ்வராய்ச்சிகளிலும் ஒட்டக எலும்புகள் கிடைத்தன.

 

 

காளிதாசனில் ஒட்டகம்

 

காளிதாசன் படைப்பான ரகுவம்ச காவியத்தில்  (5-32) கௌத்சர் என்ற மஹரிஷிக்கு ரகு கொடுத்த 14 கோடிப் பொன்களை நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் மீது  வர் ஏற்றிக் கொண்டு சென்றார் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக் கடல்) ஆகிய நூல்களிலும் ஒட்டகம், ஒட்டகக் குரல், ஒட்டக வடிவ மட்பாண்டங்கள் பேசப்படுகின்றன.

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை

ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் என்று அழைப்பர்; இது கசப்புள்ள முள் செடிகளை விரும்பித் தின்னும். அரேபிய, இந்திய ஒட்டகங்களுக்கு ஒரு திமிலும், மத்திய ஆசிய, வட ஆப்ரிக்க ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்களும் உண்டு.

 

சோம்பலுள்ள ஒரு ஒட்டகம் இரை தேட விரும்பவில்லை. பிரம்மனை நோக்கி தவம் இருந்தது; பிரம்மன் அதற்கு இருந்த இடத்திலிருந்தே இழை, தழைக ளைச் சாப்பிட நீண்ட கழுத்தை அருளினன். ஒரு முறை மழை கொட்டியது. அதற்கு அஞ்சி ஒரு குகைக்குள் கழுத்தை விட்டது. அங்கேயுள்ள நரி அதைக் கடித்துக் குதறியதால் ஒட்டகம் இறந்தது– மஹாபாரதம்- சாந்தி பர்வம் (ஆதாரம் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி)

 

பைபிளில் ஒட்டகம்

ஊசியின் காதில் (ஊசித்வாரம்) ஒட்டகம் நுழைவதை விட பணக்கார்கள் கடவுளின் உலகத்தை அடைவது கடினம் என்று ஏசு கிறிஸ்து (மாத்யூ 19-24) சொன்னதாக பைபிள் கூறும். அதாவது ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையவும் முடியாது; பணக்காரர்கள் சொர்கத்துக்குச் செல்லவும் முடியாது என்பது பொருள்.

சிலர் இது தவறான மொழி பெயர்ப்பு என்று வாதிடுவர். ஏனெனில் ஏசு கிறிஸ்து பேசிய அராமிய மொழியில் ‘கம்லா’ என்றால் ஒட்டகம், கயிறு என்று இரண்டு பொருள் உண்டு. ஆகையால் ஊசியின் காதில் தடித்த கயிறு போவதைவிட என்றும் மொழி பெயர்ப்பர். (கம்லா= ஸMஸ்க்ருத க்ரமேல= ஆங்கில CAMEL ‘கேமல்’ தொடர்பைக் காண்க)

 

ஆனால் ஊசியின் காதில் ஒட்டகம் என்பதே சரி என்று வாதாடவும் ஆதாரமுண்டு. பபிலோனிய தால்முத் (BABYLONIAN TALMUD) தில் (யூதர்களின் மதப் புஸ்தகம்) இதே போல ஒரு வாசகம் வருகிறது. ஒரு ‘ஊசியின் காதில் யானை நுழைவதைப் போல கஷ்டமானது’ என்பது அந்த வாசகம். ஆக இப்படி அடைய முடியாத , நடக்க முடியாத விஷயங்களைக் குறிப்பிடுவது மேற்காசியாவில் இருந்தது என்பது உண்மையே..

 

புனித அகஸ்டின் (கிறிஸ்தவ அகஸ்த்யர்) ஒட்டகத்தை கிறிஸ்தவ கிரஹஸ்தர்களின் அடையாளமாக உருவகித்தார். ஏனெனில் அவர்களும் ஒட்டகம் மாதிரி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர்.

ஒட்டக வாஹனம்

அஷ்ட திக் தேவதைகளில் தென் மேற்கு திசைக்கு நைத்ருதி என்னும் தேவதை அதிபதி; அவளுக்கு ஒட்டகம் அல்லது கழுதை வாஹனம் என்பர்.

 

சில கோவில்களில் அனுமாருக்கும் ஒட்டகம் வாஹனமாகக் காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் சாஸ்திர ஆதாரமற்றவை. உள்ளூர் பக்தர்களின் அருட்கதைகளில் இருந்து பிறந்தவை.

 

பாணினியில் ஒட்டகம்

 

உலக மஹா இலக்கண வித்தகன் பாணினி. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தார். இன்றுள்ள உலக இலக்கண புஸ்தகங்களில் அவர் எழுதிய பாணீனீயம் அல்லது அஷ்டாத்யாயீ என்பதே பழையது. அவர் நால் வகைப் படைகளுடன் ஒட்டகப் படை இருந்ததையும் இலக்கண விதிகளைக் கற்பிக்கும்போது உதாரணம் காட்டுகிறார். பெரும்பாலும் சுமை தூக்க இவைகள் உதவி இருக்கலாம். மேலும் மலைக் கணவாய்களையும் பாலைவனங்களையும் கடக்கப் பயன்பட்டிருக்கலாம்.

 

 

ராஜஸ்தானில் (PUSHKAR IN RAJASTHAN) உலகின் மிகப் பெரிய ஒட்டகச் சந்தை ஆண்டுதோறும் நடை பெறுகிறது.

 

புத்தர் இறந்தவுடன் யானை, ஒட்டகம், நீர் எருமை, புலி ஆகியனவும் துக்கம் தெரிவித்ததாக புத்த மத நூல்களில் வருவதால் அவர்களும் ஒட்டகத்தை நன்கு அறிந்து இருந்தனர்.

 

மநு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சுமார் 18 இடங்களில் மநு, தனது சட்டப் புத்தகத்தில் ஒட்டகத்தைக் குறிப்பிடுகிறார்

 

MANU SMRTI: 2-204; 3-162; 4-115; , 120; 5-8, 18; 8-146, , 239, 296, 9-48, 11-69, 138, 155, 157, 200, 202; 12-55, 57.

 

அவர் சொல்லும் விஷயங்களின் சாராம்சம்:–

 

ஒட்டக வண்டி பற்றி சொல்கிறார். ஒட்டகப் பால் பற்றியும் பேசுகிறார். ஒட்டகத்தின் மீது சவாரி செய்துகொண்டு வேதம் சொல்லக் கூடாது என்கிறார். ஒட்டக மாமிசம் ஒட்டகக் கொலை ஆகியன பற்றியும் குறிப்பிடுகிறார். இவற்றைத் தனியே குறிப்பிடாமல் ஏனைய ஆடு மாடு குதிரை  ஆகியவற்றுடன் பேசுவதால் அந்தக் காலத்தில் ஒட்டகம் சர்வ சாதாரணமாக இருந்தது என்றும் அறியலாம்..

வயலுக்கு வேலி அமைப்போர் ஒட்டகம் எட்டிப் பார்க்காத உயரம் வரை அமைக்கலாம் என்பதால் அக்காலத்தில் ஒட்டகம் எல்லோருக்கும் தெரிந்த மிருகம். மேலும் ஸம்ஸ்க்ருத கதைப் புத்தகத்திலும் ஒட்டகக் கதைகள் உண்டு. அக நானூற்றில் குறிப்பிடப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.

 

 

எனது முடிபுகள்:

 

  1. ரிக் வேத காலம் முதல் இந்துக்களுக்கு ஒட்டகம் பற்றித் தெரியும்

2.பசுக்களைப் போல ஒட்டகங்களும் தானம் கொடுக்கப்பட்டதால் அவற்றின் புனிதம் புலப்படுகிறது

3.ஒட்டகங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது மநு நீதியில் தெளிவாக உளது.

  1. சங்க இலக்கியத்தோடு தமிழின் மிகப்பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்திலும் ஒட்டகம் உளதால் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலும் ஒட்டகங்கள் வளர்க்கப்பட்டன

5.’க்ரமேல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து அராபிய கமலாவும் ஆங்கில CAMEL கேமலும் வந்திருக்கலாம். ஸம்ஸ்க்ருத உஷ் ட் ர- வில் இருந்து ஒட்டகம் என்று வந்ததும் வெளிப்படை

 

6 சில இந்துக் கடவுளருக்கு ஒட்டகம் வாஹனம் என்பதாலும் இதன் புனிதம் விளங்குகிறது

 

7.பஞ்சதந்திரக் கதைகள், கதா சரித் சாகரம், நியாயக் களஞ்சியம் ஆகியவற்றிலும் ஒட்டகம் வருவதால் சிறுவர்கள் முதல் கிராம மக்கள் வரை ஒட்டகத்தை அறிவர்.

 

8.பாணிணி ஒட்டகப் படை பற்றிப் பேசுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன், முதல் ஒட்டகப் படையை அமைத்தது இந்துக்களே!

9.மஹாபாரத ஒட்டகக் கதை அதற்கு இதிஹாசச் சிறப்பையும் அளித்துவிட்டது. இதுபோல ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள ஒட்டைச் சிவிங்கி பற்றியும் ஒரு கதை சொல்லுவர்; ஒப்பிட்டு மகிழ வேண்டிய ஒன்று.

10.மநு ஒட்டகப் பால், ஒட்டக வண்டி, ஒட்டக சவாரி பற்றியெல்லாம் பேசுவது அவரது பரந்த அறிவினைக் காட்டுகிறது.

வாழ்க ஒட்டகம்!

-subham–