கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவதா? அப்பர் கேள்வி (Post No.4234)

Written by London Swaminathan

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 10-43 am

 

Post No. 4234

 

Pictures are taken from various sources; thanks.

 

 

தேவாரத்தில் (நாலாம் திருமுறை) அப்பர் என்னும் திருநாவுக்கரசர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். குருடனுக்கு ஊமை வழிகாட்ட முடியுமா? என்ன அருமையான கற்பனை.

நான் அமணருடன் (சமணர்) சேர்ந்தேனே! என்ன தவறு? இது குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது போலல்லவா இருக்கிறது- என்று அங்கலாய்க்கிறார்.

 

இதோ தேவாரப்பாடல்:

 

எத்தைக் கொண்டு எத்தகை யேழை

அமணொடு இசைவித்து எனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு

வித்துஎன்னக் கோகு செய்தாய்

முத்தின் திரளும் பளிங்கினிற்

சோதியும் மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும்படியாய்

பொழிற்கச்சி யேகம்பனே

பொருள்:

முத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் காஞ்சீபுரத்தில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே! எக்காரணத்தைக் கொண்டு அமணரொடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னை இழியுமாறு செய்தீர்?

 

கொத்தை= குருடு, மூங்கர் = ஊமை

கோகு = துன்புறும் பொருட்டுச் செல்லுவித்தல்.

அமணருக்கு மூங்கர் உவமை.

இரட்டைப் புலவரும் அந்தக் கவிராயரும்

 

இளஞ்சூரியர், முது சூரியர் என்னும் பெயர்கொண்ட இரண்டு கவிஞர்களை இரட்டையர் என்று அழைப்பர். இவர்களில் ஒருவர் காலில்லாத முடம் என்றும் மற்றொருவர் கண்பார்வையற்றவர் என்றும் சொல்லுவர். முடமானவரை, குருடர் தூக்கிக் கொண்டு போவார் என்றும் முடமானவர் மேலேயிருந்து வழி சொல்லுவார் என்றும் சொல்லுவர். இவர்கள் சோழ நாட்டில் ஆமிலந்துறையில் பிறந்தவர்கள். இருவரும் ஆளுக்குப் பாதிப்பாதி கவி பாடி பூர்த்தி செய்வராம். இது நம்பக்கூடியதே. இவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால், “கலம்பகத்திற்கிரட்டையர்கள்” என்று ஒரு பழம்பாடலும் சொல்லும். தில்லைக் கலம்பகம், திருவமாத்தூர் கலம்பகம் ,திருக்கச்சி தெய்வீக உலாக்கள் என்பன இவர்கள் இயற்றியவை, இது தவிர பல தனிப்பாடல்களுமிவர்களின் பெயரில் உள்ளன.

 

இது போல அந்தகக் கவிராயர் என்றொரு கண்பார்வையற்ற புலவரின் பாடல்களும் உள்ளன.

 

ஆனால்     அப்பர் பெருமான் சொல்லும் உவமை குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது என்பதாகும். அதாவது நடக்க முடியாத செயல். அப்பர் தான் வழிதவறிப்போனதால் தன்னை குருடாகவும் அமணர்களை ஊமையர்களாகவும் உவமிக்கிறார்.

நல்ல உவமை; அருமையான கற்பனை!

 

–சுபம்–

விபூதியின் மகிமை பற்றி நீதி வெண்பா! (Post No.4231)

Written by London Swaminathan

 

Date: 21 September 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4231

 

Pictures are taken from various sources; thanks.

 

நீதி வெண்பாவை யார் எழுதினார் என்பது எவருக்கும் தெரியாது. ஆயினும் இதில் அருமையான பாட்டுகள் உள. பல கட்டுரைகளில் இவற்றைக் கொடுத்து வருகிறேன். திரு நீறு பற்றி ஒரு நல்ல பாட்டு உள்ளது. இதை சம்பந்தர் தேவாரம், திருமூலரின் திரு மந்திரத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்.

 

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல் — ஆரமிர்த

சஞ்சீ வியைவிடுத்தே சாகா திருப்பதற்கு

நஞ்சே புசித்ததுபோ நாடு

 

பொருள்:

 

சீராம் வெண் ணீற்றுத் திரிபுண் டரம் விடுத்து – சிறப்பான வெண்ணீற்றினால் நெற்றிக்குத் திருக்குறி இடுதலை விட்டுவிட்டு

பேரான முத்தி பெறவிரும்பல்- மேன்மையாகிய வீடு பேற்றை அடைய ஆசைப்படுதல்

ஆரமிர்தசஞ்சீ வியைவிடுத்து – அருமையான அமிர்தம் என்னும் சஞ்சீவி மூலிகை போன்றதை விட்டுவிட்டு,

சாகா திருப்பதற்கு நஞ்சே புசித்ததுபோக- சாகாமல் இருப்பதற்கு நஞ்சையே உண்டது போலாகும்

நாடு – நீ ஆராய்ந்து பார்

 

கருத்து- கடவுளை வழிபட்டு வீடு பேறடைவதற்குச் சைவமும் திருநீறுமே தக்கனவாம்.

 

திரிபுண்டரம்=உயிர்களுக்குற்ற மூன்று மலங்களும் எரிக்கப்பட்டமைக்கு அறிகுறியாக நெற்றியில் மூன்று கோடாக இடப்படும் நீற்றுக்குறி.

திருமந்திரம்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

–திருமந்திரம் 1666

 

 

பொருள்:

எலும்பு மாலையை அணிந்த  சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒளியானது கெடாமல் பூசி மகிழ்வீரானால் முன் வினைகளும் உங்களிடம் தங்கா.

 

சிவகதியும் உங்களை வந்தடையும்.  ஆனந்த மான திருவடியை அடையலாம்.

கங்காளன்= சிவன்; எலும்பு மாலையை அணிந்தவன்.

 

சம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை திரு ஆலவாய்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்  திருஆலவாயான் திருநீறே.

 

முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது  நீறு

சித்தி தருவது  நீறு திரு ஆலவாயான் திருநீறே

 

 

இந்தப் பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. இரண்டு மட்டும் மேலே உளது. எளிய தமிழில் இருப்பதால் பொருள் தேவை இல்லை.

 

-சுபம்–

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2 (Post No..4227)

Written by S.NAGARAJAN

 

Date: 20 September 2017

 

Time uploaded in London- 6-30 am

 

Post No. 4227

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2

 

ச.நாகராஜன்

3

 

மாக்ஸ்முல்லரைப் பற்றிய் இந்த ஆய்வைத் தொடர்வதற்கு முன்னர் சில முக்கியமான கால வரிசை அட்டவணையைத் தெரிந்து கொள்ளுவது இன்றியமையாதது.

மாக்ஸ்முல்லர் பிறந்த தேதி : 6-12-1823

மறைந்த  தேதி   28-10-1900

வயது 76

விவேகானந்தர் பிறந்த தேதி 12-1-1863

மறைந்த தேதி         4-7-1902

வயது 39

 

விவேகானந்தர் சிகாகோ கலைக் கழகத்தில் சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11ஆம் நாள் மாலையில் பேசி பெருத்த வரவேற்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 30.

 

விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்த தேதி 28-5-1896

அப்போது மாக்ஸ்முல்லருக்கு வயது 72

விவேகானந்தருக்கு வயது 33

 

மாக்ஸ்முல்லர் கேம்பிரிட்ஜில் 1883 ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதுவே India What It can Teach Us  – என்ற உரைத் தொகுப்பு  நூலாகப் பின்னர் வெளி வந்தது.

இந்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றும் போது அவருக்கு வயது 60. இதில் தான் அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 

.2 பிராங்கிற்கு சாக்லட் வாங்கினேன். இனி ஒரு போதும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்தேன். –

தன் கையில் பணமே இல்லை என்று இப்படி வருத்தப்பட்டு எழுதிய டயரி குறிப்பின் தேதி 10-4-1845 வயது 22.

 

தனது தாய்க்கு தான் எழுதும் ஒவ்வொரு பேப்பருக்கும் தான் 4 ஸ்டர்லிங் பவுண்ட் கேட்டிருப்பதாகக் கடிதம் எழுதிய தேதி 15-4-1847. வயது 24.

 

ஆக்ஸ்போர்டில் உள்ள செவாலியர் புன்சென்னுக்கு இந்தியாவை கிறிஸ்தவமயமாக்கத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக எழுதிய கடிதத்தின் தேதி 25-8-1856. வயது 33.

 

மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு தனது வேத மொழிபெயர்ப்பு இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று எழுதிய கடிதத்தின் தேதி 9-12-1867 .அவரது வயது 44.

 

இந்தியா ஒரு முறை ஜெயிக்கப்பட்டது; ஆனால் இன்னொரு முறை ஜெயிக்கப்பட வேண்டும். அது கல்வி மூலமாக. இந்த இரண்டாவ்து வெற்றி மேலை நாட்டுக் கருத்துக்களை அங்கு புகுத்தும் என்று டியூக் ஆஃப் அர்ஜிலுக்குக் கடிதம் எழுதிய தேதி 16-12-1868 வயது 45

 

ஆக கையில் காசே இல்லாமல் தவித்த மாக்ஸ்முல்லரின் இளமைப் பருவமும் இந்தியாவைக் கிறிஸ்தவ மயமாக்கத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக் இருந்த மாக்ஸ்முல்லரின் நடு வயதும் விவேகானந்தரிடம் என்னால் இந்தியாவிற்கு வர முடியாது; ஏனெனில் அங்கிருந்து நான் திரும்ப மாட்டேன். என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும் என்று நெகிழ்ந்து கூறிய மாக்ஸ்முல்லரின் முதுமைப் பருவமும் பல்வேறு உண்மைகளை உணர்த்துகின்றன.

ஆதாரத்துடன் இவை அமைவதால் அனைத்துமே உண்மைகளே!

 

இந்த காலவரிசை அட்டவணைப்படி அவர் வாழ்வையும் வாக்கையும் தொகுத்துப் பார்த்தால் மாக்ஸ்முல்லரின் மர்மம் ஓரளவு தெளிவாகக் கூடும்.

 

அவரை ஆட்டிப் படைத்த கிறிஸ்தவ சக்திகளும், அரசியல் சக்திகளும் அவரை எவ்வளவு தூரம் தம் செல்வாக்கிற்கு உட்படுத்தின என்பதையும் கால வரிசைப்படி உள்ள ஆவணங்கள் மூலம் ஆய்ந்து விடலாம்.

 

அவருக்கு சம்ஸ்கிருதமே தெரியாது; அதை அவருக்குச் சொல்லிக் கொடுத்தது சம்ஸ்கிருத எழுத்துக்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு வயது இந்தியப் பையன் போன்ற திடுக்கிடும் தகவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

பிழைகள் மலிந்த வேத மொழிபெயர்ப்பு என்று விமரிசனம் தந்திருக்கும் The Sacred Books of the Esat Sries – இன் ரஷியப் பதிப்பின் ஆசிரியரான போலாங்கர் (Boulanger) கூறுவதையும் ஆய்வுக்கு எடுத்துக்  கொள்ள வேண்டும்.

 

இவை அனைத்தையும் சரியான நடுநிலைக் கண்ணோட்டத்துட்ன பார்த்தால் மாக்ஸ்முல்லர் கூறியதில் எது தவறு எது உண்மை என்ற முடிவுக்கு வந்து விடலாம்!

 

ஆய்வைத் தொடர்வோம்.

***

அஸ்வினி தேவர்கள் என்னும் அற்புதக் கடவுள்! ரிக் வேத மர்மம்!! (Post No.4226)

Written by London Swaminathan

 

Date: 19 September 2017

 

Time uploaded in London- 12-34

 

Post No. 4226

 

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வினி தேவர்கள் பற்றி ரிக் வேதத்தில் அற்புதமான கவிதைகள் உள்ளன. வெளிநாட்டோருக்கு இவை பெரும் வியப்பை அளிக்கின்றன. எல்லா வெளிநாட்டு “அறிஞர்களும்” இவர்கள் மர்மமானவர்கள் என்று சித்தரித்துள்ளனர். இவர்கள் இரட்டையர்; உலகில் எல்லா கலாசாரங்களிலும் இரட்டையர் உண்டு. ஆயினும் யாரையும் அஸ்வினி தேவர்களுடன் ஒப்பிட முடியவில்லை; ஆரியர்கள் வெளியேயிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று பேசும் அறிவிலிகளுக்கு ரிக் வேதம் பெரிய புதிர் போடுகிறது; இன்றுவரை எவரும் புதிருக்கு விடை காண இயலவில்லை. இத்ஹாச, புராணங்களில்  பல கதைகள் இருந்தாலும் ரிக் வேதம் கூறும் அஸ்வினி தேவர்கள் வியப்பான சுவையான செய்திகளை அளிக்கிறார்கள்; படித்து மகிழுங்கள்:-

 

நோயாளிகளைக் குணப்படுத்துவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

 

தொல்லையில் சிக்கியவர்களின் கஷ்டங்களை அகற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

அஸ்வினி தேவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய (அசத்தியம் இல்லாதவர்); மற்றொருவர் பெயர் தஸ்ரா (ஒளி வீசும்)

அஸ்வினி தேவர்கள் அவர்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றிச் செல்கின்றனராம்; தேனையும் கொண்டு செல்கின்றனராம். அவர்களுடைய தேரை குதிரை, கழுதைகள், கழுகு அன்னங்கள் செலுத்துவதாகவும் கவிகள் பாடியுள்ளனர் அவர்கள் இருக்கும் இடம் மலை உச்சி, ஆகாயம், அந்தர வானம், தாவரங்கள், வீடுகள் என்று பலவிதமாகச் சொல்லபட்டுள்ளன. சங்கத் தமிழ் இலக்கியத்தில் அணங்குகள் பற்றிய குறிப்புகளை இவைகளுடன் ஒப்பிடலாம்!

 

இவர்கள் மருத்துவர்கள், சர்ஜன்கள், வேத கால டாக்டர்கள்! கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்றினர்!

எரியும்  வீட்டில் இருந்தோரை மீட்டனர்!

உடைந்த காலை ஒட்ட வைத்தனர்!

வேத காலத்தில் மருத்துவத் துறை எவ்வளவு முன்னேறி இருந்தது, கடல் பயணம் எவ்வளவு முன்னேற்றம் கண்டது என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய துதிகள் காட்டுகின்றன.

வேத கால நாகரீகம், அக்காலத்தில் இருந்த ஏனைய நாகரீங்களை விட மிக மிக முன்னேறி இருந்ததை அஸ்வினி தேவர்கள் காட்டுவர்!

 

இவர்களை கிரேக்க புராணத்தின் கஸ்டோர், பாலிட்யூக்ஸ் ஆகியோருடனும், ரோமன் க லாசாரத்தில் காஸ்டர் பொல்லக்ஸ் (ஜெமினி) ஆகியோருடனும் பால்டிக்கில் உள்ள தீவஸ் என்னும் தேவர்களுடனும் மேல்நாட்டினர் ஒப்பிடுவர். ஆனால் இவற்றில் எல்லாம் எல்லாம் முழுமையான ஒற்றுமை எதுவும் இராது; ஒரு அம்சம் மட்டுமே இருக்கும். ஆயினும் இவை எல்லாம் கி.மு800-க்குப் பிற்பட்டவை. ஆனால் அஸ்வினி தேவர்களை இவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டு முன்னவர்கள்!

 

துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்படும் (கி.மு. 1380) கடவுளரில் அஸ்வினி தேவர்களும் இருக்கின்றனர்! மிட்டனி- ஹிட்டைட் உடன்படிக்கையில் மித்ர வருண இந்திரனுடன் இவர்களும் காணப்படுகின்றனர். ரிக் வேத துதி வரிசையில் இவர்கள் பெயர்கள் இருப்பதால் கி.மு 1400-க்கு முன்னரே ரிக்வேதம் சிரியா-துருக்கி பகுதிக்குச் சென்றுவிட்டது உறுதியாகிறது!

 

 

துக்ரா என்பவன் அவனது மகன் பூஜ்யுவை கப்பலில் அனுப்பினான்; இறக்கும் மனிதன் எப்படிச் செல்வத்தை பூமியில் விட்டுப் பிரிவானோ அப்படி மகனை இழந்தான். அவன் கடலில் தத்தளித்தபோது அஸ்வினி தேவர்கள்தான் அவர்களை மூன்று பகல் மூன்று இரவுக்குப் பின்னர் கரை சேர்த்தார்கள். நூறு சக்கரம், ஆறு குதிரைகள் பூட்டிய தேரில் வேகமாக அழைத்துவந்தார்கள். பிடித்துக்கொள்ள ஆதாரமே இல்லாத கொழு கொம்பே இல்லாத நடுக்கடலில் அஸ்வினி தேவர்கள் இதைச் செய்தனர். 100 சக்ரம் என்பது 100 துடுப்புள்ள பெரிய கப்பலை குறிக்கும் (1-16-4) ரிக் வேதத்தில், இன்னொரு இடத்திலுமிக்கதை வருகிறது.

 

இதன் மூலம் 100 துடுப்பு கொண்ட பெரிய கப்பல்கள் இருந்ததையும் கடல் மீட்புப் படை  இருந்ததையும் அறிகிறோம்.(1-116-4)

 

“ஓ அஸ்வினி தேவர்களே! எனது இந்த துதி உங்களை கூர்மையாக்கட்டும்; ஒரு சாணைபிடிக்கும் கல் எப்படி கத்தியைக் கூர்மையாக்குமோ அப்படி கூர்மையாக்கட்டும் 3-39-2

 

அதாவது கூரான கத்தி   எவ்வளவு பலன் தருமோ அப்படி நீயும் எனக்கருள்வாயாக.

 

 

(வேத கால சமுதாயம் வீரர்களைக் கொண்டது என்பதை இந்த உவமை விளக்குகிறது. இது போல அவ்வையார் பாடிய கூர்மையான வாள் பற்றிய கவிதை சங்க இலக்கியத்தில் உள்ளது)

 

வேத கால மக்கள் மிக மிக நாகரீக முன்னேற்றம் கண்டவர்கள்! இரும்பைக் காய்ச்சி உருக்கும் தொழில் உவமையாக வருகிறது. தங்கம் பற்றி நூற்றுக் கணக்கான இடங்களில், ஆயிரக்கணக்கான இடங்களில் என்றும் சொல்லலாம்— உவமைகள் வருகின்றன. இது அவர்கள் இடையே இருந்த செல்வச் செழிப்பைக் காட்டுகிறது.

 

கிணற்றில் கிடந்த ரேபா என்பவனைக் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றுகின்றனர். இது எப்படி இருந்ததென்றால் பானைக்குள் இருந்த தங்கத்தைக் கண்டுபிடித்தது போல இருந்ததாம் (1-117-12)

 

பானைக்குள் தங்கத்தை வைத்து புதைத்து வைப்பது இந்துக்களிடையே உள்ள வழக்கம். தமிழன் புதைத்துக் கெட்டான் என்ற பழமொழியையும் ஒப்பிடலாம். பாடலிபுரத்தில் கங்கை நதிக்குள் நந்த வம்ச அரசர்கள் தங்கப் புதையலை ம றைத்து வைத்த சங்க இலக்கியப் பாடலையும் ஒப்பிடலாம் (கங்கை நதி தங்கம் பற்றிய எனது கட்டுரையில்  மேல்  விவரம் காண்க)

வேத கால இந்துக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய கவிதைகள் காட்டுகின்றன.

 

“யாகத்திற்கு இரண்டு பசுமாடுகள் போல, இரண்டு மான்கள் போல, இரண்டு அன்னங்கள் போல விரைந்து வாருங்கள் (5-78-1)” என்று வேத கால ரிஷிகள் துதிக்கின்றனர். இந்த உவமைகள் அஸ்வினி தேவர்களின் அழகையும் விரைவையும் காட்டுகின்றன. அதிகமாக அவர்கள் பறவைகளுடன் உவமிக்கப்படுகின்றனர் (8-35-7)

ஹம்ச (அன்னம்), ஸ்யேன (கழுகு) ஆகியவற்றுடனும் இரட்டைச் இ றகுகளுடனும் உவமைகள் உள்ளன.

அஸ்வினி தேவர்களுக்குப் பல விளக்கங்கள் இருப்பதை யாஸ்கர் நிருக்த்தத்தில் குறிப்பீட்டுள்ளர்:

இரவும் பகலும்

வானமும் பூமியும்

சூரியனும் சந்திரனும்

பழங்கால அரசர்கள் (என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவதாகவும் யாஸ்கர்  கூறுவார். அந்தக் காலத்திலேயே வரலாற்று அறிஞர்கள் இருந்தது யாஸ்கர் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. வேத கால மன்னர்கள் சகல கலா வல்லவர்கள்)

 

 

என்று அஸ்வினி தேவர்களுக்கு விளக்கங்கள்!

 

அஸ்வினௌ என்பதை குதிரை உடையோர் என்றும் மொழி பெயர்க்கலாம். அவர்கள் இருவரும் சகோதரர்களோ ,நண்பர்களோ

 

அவர்கள்தான் உலகில் முதல் முதலில் சமூக சேவை செய்த இரட்டையர். எல்லோருக்கும் உதவுவதே தொழில்!

 

அவர்கள் சோம பானத்தை மறுத்ததாகவும் குறிப்பு உள்ளது!

 

வேத கால மக்கள், கணக்கில் அசகாய சூரர்கள்! கணிதப் புலிகள்! யாப்பு இலக்கணத்தில் கூட எண் படி மீட்டர் அதிகரிக்கும் (காயத்திரி, உஷ்னிக், அனுஷ்டுப், பங்க்தி…….)

Image of Discouri

அஸ்வினுக்கு 2, பிருஹஸ்பதிக்கு 17!

அக்னிக்கு ஒரு அசை (சிலபிள்)

அஸ்வினிக்கு இரண்டு

விஷ்ணுக்கு மூன்று

சோமனுக்கு நான்கு

பூசனுக்கு ஐந்து

பிரஜாபதிக்கு 17

 

தத்யாங் என்ற முனிவர்தான் அஸ்வினி தேவர்களுக்கு தேனின் ரஹசியத்தைச் சொல்லிக் கொடுத்தனர். இது அதர்வ வேதத்தில் உள்ளது.

விவஸ்வான் சரண்யுவின் புதல்வர்கள் என்று பிற்கால நூல்கள் பகரும்.

 

அஸ்வின சாத்ர பரிசுக்கு நடந்த போட்டியில், கழுதைகளால் இழுத்துச் செல்லப்பட்ட அஸ்வினி தேவர்களின் தேரே வெற்றி பெற்றது. அவைகள் அதிகம் கஷ்டப்பட்டதால் கழுதைப் பால் அளவு குறைந்ததாகவும், அவைகள் மிகவும் மெதுவாக நடக்கத் துவங்கின என்றும் ஐதரேய பிராமணம் ஒரு கதை சொல்லும்.

 

அவர்கள் அழகானவர்கள்; இளமை மாறாத இளம் சிங்கங்கள்; பொன்னிறமானவர்கள்; தங்க ரதத் தில் பவனி வருபவர்கள் என்றெல்லாம் புகழப்படுகிறார்கள்.

அவர்கள் அதிகாலைப் பொழுதில் வெளிச்சத்தைக் கொணருவார்கள். உதயத்தை—உஷஸ்– வருவதை அறிவிப்பவர்கள். அவர்கள் குதிரையை விரட்ட சாட்டையைச் சொடுக்கினால் அதிலிருந்து தேன் சிந்தும். அபூர்வ சக்தி படைத்த சோமம் என்னும் கொடிகள் எங்கே வளருகின்றன என்ற ரஹசியத்தை கடவுளருக்குத் தெரிவிப்பதும் அஸ்வினி தேவர்களே!

சியவன மஹரிஷிக்கு இளமையைக் கொடுத்த வரலாறும் பிற்கால நூல்களில் இருக்கிறது.

OLD ARTICLES FROM MY BLOGS:

 

  1. அஸ்வினிநட்சத்திரக் கதை | Tamil and Vedas

tamilandvedas.com/tag/அஸ்வினி…

நட்சத்திர அதிசயங்கள் -Part 3. அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை …

  1. அஸ்வினி| Tamil and Vedas

tamilandvedas.com/tag/அஸ்வினி

Posts about அஸ்வினி … இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! … //tamilandvedas.com/2012/06/29 …

 

 

–SUBHAM–

விதுரர் கூறும் விதுர நீதி – 2 (Post No.4225)

Written by S.NAGARAJAN

 

Date: 19 September 2017

 

Time uploaded in London- 5-13 am

 

Post No. 4225

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விதுரர் கூறும் விதுர நீதி – 2

 

ச.நாகராஜன்

 

திருதராஷ்டிர மன்னனுக்கு விதுரர் கூறும் நீதிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை.

ஒன்று ஒன்றாகவும் இரண்டு இரண்டாகவும்  மூன்று மூன்றாகவும் இப்படி எண்ணிக்கை அடிப்படையில் சுலபமாக நினைவில் இருக்கும்படியாக ஒழுக்க விதிகளை அவர் தருவது வியக்கத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் வரும் நீதிகளை மட்டும் கீழே காண்லாம்.

(விதுர நீதி முழுவதையும் உத்யோக பர்வம், ப்ரஜாகர உப பர்வம்,முப்பத்துமூன்றாவது அத்தியாயம் (ம.வீ. ராமானுஜாசாரியார் பதிப்பில் படித்து மகிழலாம்.)

1

ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக ஒருவன் விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக வழி போகக் கூடாது.

 

தூங்குகிறவர்களின் நடுவில் ஒருவனாக விழித்திருக்கக் கூடாது.

 

சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது.

 

பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.

 

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை.

 

பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி.

 

வித்தை ஒன்றே மேலான திருப்தி.

 

அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.

 

 

2

எதிரிகளிடம் விரோதம் காட்டாத அரசன்,

தீர்த்த யாத்திரை போகாத அந்தணன்

இவ்விருவர்களையும் பாம்பானது எலிகளைத் தின்பது போல

பூமியானது தின்று விடுகிறது.

 

கடுமையாக ஒரு வார்த்தையையும் பேசாமல் இருத்தல்

துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல்

இவ்விரண்டையும் செய்பவன் உலகில் நன்கு விளங்குவான்.

 

பணமில்லாதவனின் ஆசையும்

சக்தியில்லாதவனுடைய கோபமும்

கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.

 

செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,

எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி

ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.

 

ச்க்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்

தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்

ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.

 

நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் த்குதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,

நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.

 

தானம் செய்யாத தனவானும்

தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்

கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.

 

 

3

பிறர் பொருளைக் கவர்தல்

பிறர் மனைவியை நேசித்தல்

நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்

ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.

 

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.

அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.

இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.

விதுர நீதி தொடரும்

***

வாஜபேய யக்ஞம் — இந்திய ஒலிம்பிக்ஸ்? (Post No.4223)

Written by London Swaminathan

 

Date: 18 September 2017

 

Time uploaded in London- 10-33 am

 

Post No. 4223

 

Pictures are taken from various sources; thanks.

 

 

What does Vajapeya yajna show?

 

இந்தியாவின் பத்தாவது பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாயீ பதவி ஏற்றவுடன் வாஜபேயம் என்பது ஒரு யாகம் என்பதும் அதைச் செய்த குடும்பத்தில் அவர் பிறந்ததால் அந்த துணைப்பெயர் அவர் பெயரில் ஒட்டிக்கொண்டது என்றும் பலருக்கும் தெரிய வந்தது.

யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அதில் சுக்ல (வெள்ளை) யஜூர் வேதத்தில் சதபத பிராமணம் என்ற உரை நடை நூல் இருக்கிறது. அதில் ராஜ சூயம், அஸ்வமேதம், வாஜபேயம் ஆகியன பற்றிய விரிவான விவரங்கள் இருக்கின்றன.

 

சதபத பிராமண நூலை நன்கு பயின்ற ஹில்ப்ராண்ட் (Hillebrandt) என்ற அறிஞர் இதை ஒலிம்பிக் விளையாட்டுடன் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளார். ஏனெனில் இதில் வெறும் யாகம் மட்டும் இல்லாமல் நிறைய விளையாட்டுகள் குறிப்பாக பெரிய குதிரை பூட்டிய தேர்ப் பந்தயம் இருக்கிறது. பென்ஹுர் (Benhur) போன்ற  திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது எவ்வளவு ரசிக்கக்கூடியது என்பது விளங்கும். ஊரே கூடி ஓ என்றும் ஆ என்றும் கூவி உற்சாகப்படுத்துவர். பெரிய பேரிகைகள் (Drums) முழங்கும்.

 

இந்துக்கள் செய்யும் 400-க்கும் அதிகமான யாக யக்ஞங்களில் இதுவும் ஒன்று. இந்த யாகம் எதைக்கட்டுகிறது?

 

வேத கால இந்துக்கள் மிகவும் நாகரீகம் அடைந்தவர்கள்; ஏனெனில் உலகிற்கே பசு மாடு, குதிரை, இரும்பு, தசாம்ச முறையைக் கற்பித்து உலகையே இன்பக்கேணியாக மாற்றியவர்கள். விளையாட்டு வீரர்கள்!

 

இன்று கோவில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உறியடி போன்றவை எல்லாம் இருக்கிறதென்றால், அதற்கு வேத கால இந்துக்களே முன்னோடிகள்! எகிப்தியர்களுக்கு தேர் பற்றியோ, குதிரை பற்றியோ, யானை பற்றியோ ஒன்றுமே தெரியாது; வெறும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி வந்தனர். அவர்களுக்கு கி.மு.1500  இந்தியர்கள் போய் (யக்ஷர்கள் HYKSOS) குதிரையை உபயோகப் படுத்துவது எப்படி என்று காட்டினர். யானைக ளைப் படைகளில் உபயோகப் படுத்தியதும் இந்துக்களே. அமெரிக்காவில் குதிரை புகுந்தவுடன் அதன் வரலாற்றே மாறியது. இந்தப் பசுமாட்டையும், குதிரையையும் யானையயும் புனித மிருகங்களாக உயர்த்திய பெருமை இந்துக்களுடையதே.

வேத கால இந்துக்கள் எதையுமே பாஸிட்டிவாக (ஆக்கபூர்வமாக) பார்த்தார்கள். ஆயிரம், கோடி லட்சம் என்று உயர்வாகவே எண்ணுவர்.

வாஜபேயம் என்பதை பிராணர்களும் அரசர்களும் செய்தனர். ஆயினும் அரசர்களுக்கு ராஜ சூயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு பிராணர்களுக்கு முக்கியமானது வாஜபேயம் என்று கருதுவர். வைஸ்யர்களும் கூட வாஜபேயம் செய்தனர். ஒரு பிராமணர் புரோகிதராக உயர வாஜபேயம் செய்வார்.

 

ஆயினும் சங்கத் தமிழ் நூல்களில் வாஜபேயம் பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால் சோழ மன்னர்கள் செய்த ராஜ சூயம் முதலான யக்ஞங்கள் பற்றித் தெளிவான பாடல்கள் புற நானூற்றில் இருக்கின்றன. பாண்டிய மன்னன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்யாத யாகங்களே இல்லை.

 

காளிதாசன், பாண்டிய மன்னர்களின் குல குரு அகத்தியன் என்று சொல்லிவிட்டு அவர்கள் எப்போதும் யாகத்துக்கான அவப்ருத ஸ்நானத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள் என்று புகழ்கிறான்.

 

2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இந்த யாக யக்ஞங்கள் புகழ் பெற்றுவிட்டன என்றால் அதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மாபெரும் சரஸ்வதி நதி தீரத்தில் யாகத் தீ எரிந்ததில் வியப்பில்லை.

வாஜ பேயம் என்றால் (உண்ணல்=வாஜ, குடித்தல் = பேயம்) பலத்துக்காக உண்ணுவது பானங்களைக் குடிப்பது என்று பொருள்;இதிலும் சோம ரசம் பருகுதல் உண்டு. ஆயினும் அதற்குப்பின்னர் நடக்கும் தேர்ப் பந்தயத்தில் யாகத்தைச் செய்தவர் வெற்றி பெறும் போட்டியும் இருக்கும்.

 

யார் ஒருவர் வாஜபேயம் செய்கின்றாரோ அவருக்கு உணவுப்பஞ்சம் என்பதே கிடையாது என்று ஸ்ரௌத சூத்ரங்கள் சொல்லுகின்றன.

 

 

வாஜ்பேயம் செய்பவர் பிரஜாபதியைத் துதி பாடுவர். அவருடைய சக்தி போலத் தனக்கும் எல்லாத் திசைகளிலும் வெற்றியும் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று உரைப்பர். பிரஜாபதிக்கு எப்படிப் புகழும் சக்தியும் வெற்றியும் உண்டோ அப்படித் தனக்கும் கிடைக்கும் என்று எண்ணுவர். எல்லாம் ஆ க்கபூர்வ சிந்தனைகளே!

எனது முந்தைய கட்டுரைகள்:

 

  1. 400 வகையாகங்கள் … – tamilandvedas.com

tamilandvedas.com/2014/03/06/400-வகை…

Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna By London Swaminathan லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் — 890 …

  1. 400 Types of Yagas (Fire Ceremonies) | Tamil and Vedas

tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…

400 types of Yagas. … https://tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas-fire-ceremonies/ Previous Post 400 வகை யாகங்கள்: …

  1. 5 மஹா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக யக்ஞங்கள் (Post No.3312 …

swamiindology.blogspot.com/2016/11/5-14-7-post-no3312.html

பாக யக்ஞங்கள் ஏழு வகை; … 400 வகை யாகங்கள்: காஞ்சி …

 


Tamil Olympics | Tamil and Vedas

tamilandvedas.com/tag/tamil-olympics

Posts about Tamil Olympics written by Tamil and Vedas

 

Tags: வாஜபேயம், இந்திய ஒலிம்பிக்ஸ்

 

 

விதுரர் கூறும் விதுர நீதி – 1 (Post No.4219)

Written by S.NAGARAJAN

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 5-01 am

 

Post No. 4219

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாபாரதம்

விதுரர் கூறும் விதுர நீதி – 1

ச.நாகராஜன்

 

மஹாபாரதம் ஒரு பெரிய நீதிக் களஞ்சியம்.

அதில் அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.

 

 

இந்த இருவருக்கும் இடையேயான உரையாடல் விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது; காலம் காலமாக பெரியோர்களால் வாழ்வாங்கு வாழும் வழியாக விதுர நீதி உபதேசிக்கப்பட்டு வருகிறது.

உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.

எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.

 

 

பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.

 

உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்.

 

அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.

 

 

காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.

எடுத்துக் காட்டாக ஒரு சுலோகத்தை இங்கே பார்க்கலாம்.

 

 

ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I

பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II

 

 

இதன் பொருள்:

ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

 

இங்கு ஒன்று, இரண்டு, மூன்று போன்றவற்றிற்கான பொருள் விளங்கவில்லை.

 

ஆனால் உரையாசிரியர்கள் தக்க விளக்கத்தைத் தந்துள்ளனர்.

ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்

இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது  இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’

 

 

மூன்றை – நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை

நான்கினால் – சாம், தான, பேத, தண்டத்தால்

ஐந்தை ஜயித்து  – ஐந்து புலன்களை ஜயித்து

 

ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து

 

ஏழை – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்

அறிந்து சுகமாக இரு.

 

 

இப்போது நன்கு பொருள் விளங்குகிறது.

இது போன்ற ஏராளமான நீதி மொழிகளை விதுரர் மனித குலத்தின் நன்மைக்காகத் தருகிறார்.

 

அதாவது மஹாபாரதத்தை இயற்றிய வியாசர் தருகிறார்.

இன்னும் சில விதுர நீதிகளை ப் பார்ப்போம்

****

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்! அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி! (Post No.4217)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 16-51

 

Post No. 4217

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம்  புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.

 

 

துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம்  சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.

 

மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.

அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில  இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!

 

மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்

 

கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.

 

இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.

 

போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.

 

 

வானவியல்

வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.

 

ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.

 

 

இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்

 

சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.

 

இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன

 

பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்

 

நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை  இழந்திருப்போம்.

 

மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா  என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.

 

 

உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!

 

இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக்  கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.

மார்கஸீயத் திருடர்கள்!

இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.

 

கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.

 

இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.

 

ராமாயாண  தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.

 

மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–

 

பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்

திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்

பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்

எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்

ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்

 

மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.

 

வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.

 

வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி

ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை

ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000

உ.வி.ராவ்- கி.மு.5000

 

வெளிநாட்டு அறிஞர்கள்

எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000

டி.பர்ரோ- கி.மு 1200

 

இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.

 

சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.

 

இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.

எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.

TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி

–சுபம்—

புலவர்கள் பல விதம்! (Post No.4210)

Written  by S.NAGARAJAN

 

Date: 14 September 2017

 

Time uploaded in London-5-01 am

 

Post No. 4210

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தனிப்பாடல்களில் புலவர்கள்

புலவர்கள் பல விதம்!

 

ச.நாகராஜன்

 

புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

 

பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

 

போற்றினும் போற்றுவர்  பொருள்கொ டாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

 

எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு – எமனே தேவலை!

 

இதைச் சோழ மன்னன் ஒருவன் பாடியதாகவும் பரம்ப்ரைக் கதை கூறும்.

 

இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-

 

கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

   போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

     வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

      யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!

 

 

 

நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

 

இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

சரி தானே!

 

தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

      நினைவினைத் திருடி வையோம்

நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

       நீள்வசைகள் பாட வறியோம்

பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

     பந்தங்கள் பாடிக் கொடோம்

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

      பேய்க்கிரந் தங்கள்  பேசோம்

 

இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

        தெங்கணுந் தீட்சை யேற்கோம்

இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

  டிடப்பெறோ மிறுமாந் திரோம்

தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

   சமுமுருகு கவிபா டுவோம்

சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே

 

பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

   பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

   தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

       திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே   

 

தத்துவப் பிரகாசர் மிகத் தெளிவாகத் தன் இயற்கை இயல்புகளைக் கூறி விட்டார்.

திருஞான சம்பந்தரின் அடியாராகிய் அவர் தேவாரம் தவிர வேறு

பேய்க் கிரந்தங்களை ஓத மாட்டார். சமணரின் நூல்களைப் படிக்க மாட்டார். மனிதர்களைப் பாட மாட்டார். பல கவிதைகளை உடனடியாகப் பாடுவதாகக் கூறி நினைவில் வைத்திருக்கும் கவிதைகளைத் திருட்டுக் கவிதைகளாகக் கூற மாட்டார். ஊருக்கு ஒரு பெயர் வைத்து ஏமாற்ற மாட்டார்.

அவரின் திறமைகளோ எல்லையற்ற ஒன்று. பாம்பு கடித்தால் அந்த விஷத்தை இறக்க வல்லவர். பிசாசு பிடித்தால் அதைப் போக்க வல்லவர். வேம்பு போலக் கசப்பாக இருந்தாலும அதை நீக்கிச் சுவையான் கறி படைக்க வல்லவர். மதம் பிடித்த யானையைக் கூட அடக்க வல்லவர். இறக்கும் போது கூடத் திடமாக பயப்படாமல் பேச வல்லவர். அவர் கற்காத கலைகள் ஒன்றுமே இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட அறிவாளிக்கும் முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

தீயவர்களை நல்லவராக்கி அவரை குணவான்களாக ஆக்கும் திறமை மட்டும் அவருக்கு இல்லை. அதனால் அவர் திகைக்கின்றார்.

 

புலவர்கள் பல விதம்.

எப்படியும் பாடும் புலவர்களைக் கண்டு பாண்டிய மன்னனுக்குப் பயம். எப்படிப் புகழ்ந்தாலும் மசியாத கஞ்சனைப் பாடி நொந்து போன கவிஞருக்கு அப்படிப்பட்டவர்களைக் கண்டால் பயம். எதையும் சாதிக்க வல்ல இன்னொரு கவிஞருக்கோ தீயவர்களைக் கண்டால் பயம். அவர்களை நல்லவராக்கும் திறம் மட்டும் அவருக்கு இல்லை!

 

 

அதாவது வல்லவன் யாராக இருந்தாலும் அவர்கள் தீமையே உருவாக இருப்பவரைத் திருத்தல் அரிது.

ஒவ்வொரு புலவரையும் பற்றி அறியும் போது சுவையான தகவல்கள் பல வருகின்றன.

அனைவரையும் படித்தால் நமக்குத் தான் ஆதாயம்!

 

 

ஆதாரம் : தனிச் செய்யுள் சிந்தாமணி மற்றும் தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்கள்

 

(இவற்றில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளில் ஐந்தை மட்டும் மேலே பார்த்தோம்.)

***

 

ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள் (Post No.4208)

Written by London Swaminathan

 

Date: 13 September 2017

 

Time uploaded in London- 6-54 am

 

Post No. 4208

 

Pictures are taken from various sources; thanks.

 

மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா  பூ ஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆ த்ம  ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.

 

கிறிஸ்தவமதம் போன்றவற்றில் பாவ மன்னிப்பு இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு பக்கத்துப் பெட்டியில் நிற்கும் பாதிரிமாரிடம் சொல்லுவதோடு நின்றுவிடும். இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும்  “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.

 

ஆனால் இந்தக் கட்டுரையில் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் (கி.மு1500 முதல் கிமு.6000) உள்ள சில பாவ மன்னிப்பு துதிகளைக் காண்போம்.

 

நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்கு வாயாக.

 

விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ  அவற்றையும் நீக்குக

 

இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு; ஓ வருண பகவானே என்றைக்கும் உன் அன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்- 5-85-7/8

 

 

எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி.

 

நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – 7-86

 

 

அதிதி, மித்ரா, வருணா எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக 2-27-14

 

அஸ்வினி தேவர்களே! எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் 1-157-4

 

அழகிய இளம் கடவுள் அக்னி தேவனே! இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை

 

பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி 4-12-4

 

மற்றவர் செய்த பாவங்களுக்காக எங்க ளை  வருத்தாதீர்கள் வசுக்களே: எங்க ளைத் தண்டிக்காதீர்கள் 6-51-7

மருத் தேவதைகளே! நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக -7-58-5

அந்த எல்லையற்ற வ ளம்பெற்ற பிருஹஸ்பதி எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்யட்டும்; ஒரு தந்தை போல எங்களைக் கவனிக்கட்டும் 7-97-2

 

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள் விஸ்வே தேவர்களே! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக 10-63-8

 

 

எவ்வளவு நேர்மையான முறையீடுகள்!

எவ்வளவு அழகான சொற்கள்;

அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருந்தி வெளியிட்ட மனக்குமுறல்கள்!

 

உலகில் பாபிலோனிய, எகிப்திய கிரேக்க நாகரிகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவ மன்னிப்பு துதிகள் உண்டு.

 

ஆயினும் கி.மு 3100ல் வியாசரால் நான்காக வகுக்கப்பட்ட வேதங்களில் பழமையான ரிக் வேதத்தில் கோர்வையாக, தொகுப்பாக துதிகள் இருப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்கில!

 

 

சுபம்

 

TAGS: வேதம், பாவ மன்னிப்பு, துதிகள்