புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 2 (Post No.3320)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 6-00 AM

 

Post No.3320

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 5

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 15,26,166 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

 

     ச.நாகராஜன்

    

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு பெரும் மன்னனைப் பற்றிய சுவையான பல செய்திகளைத் தரும் பாடல் புறநானூறில் உள்ள 15ஆம் பாடல்.

பாடியவர் நெட்டிமையார்

பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ  மாமன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

பெயரே இம்மன்னனின் பெயரே புகழுக்கான காரணத்தை விளக்குகிறது.

பல யாகங்கள் செய்த அரும் புகழைப் பெற்ற பெரு வீரன் இவன். பாடலில் வரும் வரிகள் இவை:-

 

 

புரையில்
நற்பனுவ னால்வேதத் 
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை 
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல் ?  (வரிகள் 16 முதல் 21 வரை)

 

புரையில் நற் பனுவல் நால் வேதம் என்பதன் மூலம் ஒப்புயர்வில்லாத நல்ல அற நூலாகிய நான்கு வேதங்களாகிய ரிக். யஜுர், சாமம், அத்ர்வணம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டு  புகழப்படுகிறது

 

.

அருஞ்சீர்த்தி என்று  மீண்டும் சொல்லப்படுவதால் அருமை வாய்ந்த புகழுக்குரிய யாகங்கள் என்பது சொல்லப்படுகிறது.

யாகங்களின் பெருமையானது அடுத்து, “பெருங்கண்ணுறை நெய்ம்மலை ஆஹுதி பொங்க” என்பதால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி,கருங்காலி ஆகிய ஒன்பது வகை சுள்ளிகள் சமித் என்பப்படும். இவை நெய்யுடன் கூடி ஹோம குண்டத்தில் இடப்படும்.

பல மாண் என்பதால் பல மாட்சிமை உடைய என்பதும் வீயாச் சிறப்பு என்பதால்  குறைவில்லாத அழியாச் சிறப்புடன் கூடியது என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

 

வேள்வியில் யாக யூபங்கள் நடப்படுவது வழக்கம். அப்படிப்பட பல யாகங்களை நடத்திய யாகசாலைகள் பலவோ என புலவர் வியக்கிறார்.

அவனது வீரச் செயல்களை அடுக்கிய புலவர் தருமச் செயல்களை அடுக்கிக் கூறும் வகையில் இப்படிப் பொழிந்து தள்ளுகிறார்.

மிகுந்த புகழை உடைய நால் வகை வேதங்கள் கூறும் வேள்விகள் பலவற்றை நடத்தி முடித்து விட்டாயோ என புலவர் வியந்து பாடுகிறார். இந்த மன்னனின் புக்ழ எழுதி  மாள முடியாது.

 

 

யாகசாலைகள் பற்றிய விரிவான கட்டுரைகளை திரு ச.சுவாமிநாதன் எழுதியுள்ளார். அவற்றை மீண்டும் இங்கு விளக்கத் தேவை இல்லை. அதை இக்கட்டுரையின் தொடர்ச்சி விளக்கமாகப் படித்துணர்க.

 

 

இன்னொரு பாடல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனைப் போற்றி புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் இது.

பாடல் எண் 26.

 

அதில் வரும் வரிகள் இவை:
போர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.”                                                             (வரிகள் 11 முதல் 18  முடிய)

 

 

போர்ச் செழிய என்று மன்னனை விளிக்கும் புலவர் அவர் கடும் போரில் பகைவனை வாட்டுபவன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவனுக்குச் சுற்றம் யார்?

 

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையோர் தான் சுற்றம். மிகச் சிறப்பான வேதத்தில் உள்ள “அடங்கிய” – அனைத்தையும் கொண்டுள்ளவர்களை அவன் சுற்றமாகக் கொண்டவன்.

நான்மறை முதல்வர் என்பதால் நான்கு வேதங்களிலும் வ்ல்ல அந்தணர்கள் என்பது பெறப்படுகிறது.

 

மன்னர் ஏவல் செய்ய என்பதால் நெடுஞ்செழியனுக்கு ஏவலாளர்கள் பல  மன்னர்களே என்பது தெரிய வருகிறது.

வேள்வி முற்றியவன் அவன். பல யாகங்களைச் செய்து முடிந்த முடிபைக் கண்டவன் அவன்.

 

வாய் வாள் என்பதால் அவனது வாள் ஒரு நாளும் தோல்வியைக் காணாத வாள் என்பது சுட்டிக்  காட்டப்படுகிறது.

அப்படிப்பட்ட மன்னவனை எதிர்த்துத் தோற்ற பகைவரும் கூட, ‘உன்னிடம் பொருதி நிற்கும் பெருமை பெற்றதால் அவர்களும் நீடு வாழ்வர்’ என்று கூறி அற்புதமாகப் பாடலை முடிக்கிறார் புலவர்.

இன்னும் ஒரு அருமையான பாடல் 166ஆம் பாடல். இதைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார். பாட்டுடைத் தலைவன்  சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இந்தப் பாடலின் துறை: பார்ப்பன வாகை..

 

பார்ப்பன வாகையில் புறநானூற்றில் இரு பாடல்கள் உள்ளன. பாடல் 166-உடன் இதே வாகையில் உள்ள இன்னொரு பாடல் புறம் 305 ஆகும்.

 

இதில் பாடப்பட்டவன் பூணூலை அணிந்தவன்.

பார்ப்பான்.

வேதங்களைக் கற்றுணர்ந்தவன்.

நான்கு மறைக்ள ஆறு அங்கங்களைக் கொண்டது. ஷட் அங்கமே மருவி இங்கு நாம் தமிழ் நாட்டில் இன்றும் தினமும் கூறும் சடங்கு ஆக நிற்கிறது.

 

 

நன்று ஆராய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞான் மிசைப் பொலிய

                                                                                  ( 1 முதல் 12 வரிகள்)

 

மேற்கூறிய வரிகள் காழ்ப்புணர்ச்சி அற்ற ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய வரிகள்

 

பாடல் சுட்டிக் காட்டும் முது முதல்வன் யார்?சிவ் பிரான் என்பர் உரையாசிரியர்கள்.

 

ஆறுணர்ந்த என்பதால் ஆறு அங்கம் பெறப் படுகிறது. சிக்ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், கல்பம். ஜோதிடம் ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்களாகும்.

முது நூல் என்பது வேதம்.

 

பொய்களை அகற்றி மெய்யையே கொள்வார் பெரியோர்.

உரை சால் சிறப்பின் உரவோர் என்பதால் சொல்லற்கு அரிய புகழுடைய சிறந்த கற்றோர் என்பது சொல்லப்படுகிறது.

பாடலுக்குரிய தலைவன் ஆண் மானின் தோலை அணிந்தவன். (புலப் புல்வாய்க் க்லைப் பச்சை)

 

தோளில் பூணூலை அணிந்தவன்.(கவல் பூண் ஞான்)

இப்படி வேதமும் அதன் அங்கங்களும் அந்தண்ர் அணியும் பூணூல் உட்பட அனைத்தும் இந்தப் பாடலில் போற்றிப் புகழப்படுகிறது.

அடுத்து இடம் பெறும் வரிகள் (20,21) இவை:

 

ஈர் ஏழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்  

 

என்ற வரிகள் ஈரேழு அதாவது பதிநான்கு இடங்களில் நீரே வெட்கப்படும் வகையில் அதிக நெய்யைச் சொரிபவன் என்ற குறிப்பு பெறப்படுகிறது.

 

தண்ணீர் பட்ட பாடு என்று சொல்கிறோமே, அது அந்தத் தலைவனைப் பொருத்த ம்ட்டில் நெய் பட்ட பாடு.

எத்துணை வேள்விகளை, எத்துணை இடங்களில் நட்த்தி இருக்க வேண்டும்.

 

மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே.

 

என்று இந்தப் பாடல் முடிகிறது.மேக்ம் உயர்ந்து பார்க்கும் நீண்ட நெடும் மலையான இமயம் போல நீ நீடூழி வாழ்வாயாக என்று பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப் பாடல் முடிகிறது.

 

இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து மன்னர்களையும் – அதாவது 56 தேச மன்னர்களையும் – புலவர் பெருமக்கள் வாழ்த்தும் போது இமயம் போல வாழ்க என வாழ்த்துவது ஒன்றே ஒரே நாடு பாரதம் என்பதை உணர்த்துகிறது.

 

பொதுவான பண்பாடு, பொதுவான தொன்மம், பொதுவான நம்பிக்கை, பொதுவான பழக்க வழக்கங்கள், பொதுவான வாழ்க்கை மதிப்புகள், ஒரு  குறிப்பிட்ட பரந்து பட்ட எல்லைக்குள் இருக்கும் மக்களால் கடைப்பிடிக்கப்படும் போது அது தேசம் எனச் சொல்லப்படுகிறது. இதை ராஷ்ட்ரம் என்று அன்றே வேதம் வ்ரையறுத்துக் கூறி விட்டது!

 

இந்த வரையறைக்குள் பாரதத்தின் எந்த இலக்கியத்தையும் வைத்து உரசிப் பாருங்கள்.

ஒரே விதமான தங்கம் தான் தெரியும்.

அது பத்தரை மாத்துத் தங்கமே!

 

**************   தொடரும்

 

குறிப்பு: இந்த ஐந்தாம் கட்டுரை படிப்பவர்கள்  முதல் நான்கு கட்டுரைகளையும் தவறாமல் படித்தால் தொடர்பு நன்கு விளங்கும்..

5 மஹா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக யக்ஞங்கள் (Post No.3312)

யாகத்தீயில் ராதாகிருஷ்ணன்

 

Written  by London Swaminathan

 

Date:2  November 2016

 

Time uploaded in London: 15-11

 

Post No.3312

 

 

Pictures are taken from various sources; thanks.

 

இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —

1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,

2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,

3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,

4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,

5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.

 

எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.

 
யாகத் தீயில் அனுமார்

 

வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—

 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

 

ஏழு பாக யக்ஞங்கள்

 

பாக யக்ஞங்கள் ஏழு வகை; பாக என்றால்  சமைக்கப்பட்ட என்று பொருள்; பல வேள்விகளுக்குப் பலருக்கும் பொருள்கூடத் தெரியாது. நானும் அனுபவத்திலன்றி நூல்களில் படித்ததையே எழுதுகிறேன். முதல் இரண்டும் நீத்தார் நினைவாக செய்யப்படுபவை. இப்போதும் பழக்கத்தில் உள. மற்றவை அபூர்வம்

 

1.பித்ரு  சிராத்தம்

2.பார்வண சிராத்தம்

3.அஷ்டகா

4.சிராவணீ

5.அஸ்வயுஜி

6.ஆக்ரஹாயணீ

7.சைத்ரீ

வேள்வித் தீயில் கிருஷ்ணன்

 

14 ச்ரௌத யக்ஞங்கள்

இந்த 14 வேள்விகளும் 7 ஹவிர் யக்ஞங்கள், 7 சோம யக்ஞங்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஏழு ஹவிர் யக்ஞங்கள்

ஏழு ஹவிர் யக்ஞங்களில் பால், நெய், பல வகை தானியங்கள், அப்பம் முதலியன தீயில் இடப்படும். பிராமணர்கள் தினமும் காலையிலும்மா லையிலும் அக்னி ஹோத்ரம் செய்ய வேண்டும் என்கிறார். ஒவ்வொரு பக்ஷத்தின் முடிவிலும் தர்ச, பூர்ணமாச செய்யவேண்டும் என்று மனு பகர்வார். ஆக்ராயன என்பது புது தானியம் அறுவடையாகும் போது செய்யப்பட வேண்டும். சாதுர்மாஸ்யம் என்பது மழைக்காலத்தில் செய்யப்படுவது. நிரூட பசு பந்த யக்ஞம் என்பது தட்சினாயண, உத்தராயண புண்யகாலங்களில் (ஜூன் 21, டிசம்பர் 22) செய்யப்படவேண்டும்.

 

1.அக்ன்யாதேயம்

2.அக்னிஹோத்ரம்

3.தர்ச பூரணமாசம்

4.ஆக்ரயணம்

5.சாதுர்மாஸ்யம்

6.நிரூட பசு பந்த:

7.சௌத்ராமணி

ஏழு சோம யக்ஞங்கள்

1.அக்னி ஷ்டோம:

2.அத்யக்னிடோம:

3.உக்த்ய:

4.ஷோடஷீ

5.வாஜபேய:

6.அதிராத்ர:

7.ஆப்தோயாம:

 

சோமயாகங்களில் சோம ரசம் பயன்படுத்தப்படும். எல்லா யாகங்களிலும் புரோகிதர்கள் இருப்பர். அவர்களின் எண்ணிக்கை சக்திக்கேற்பவும், வேள்விக்கேற்பவும் மாறுபடும். யாகத்தைச் செய்பவர் யஜமானன் எனப்படுவார்.

 

வீட்டில் மூன்றுவகை அக்னி இருக்க வேண்டும் ஆஹவனீயம் என்பது கிழக்கு திக்கிலும் (தேவ பூஜைக் கானது), தட்சிணாக்னி என்பது தெற்கு திக்கிலும் ( இறந்தோருக்கு கடன் செலுத்த), கார்ஹபத்யம் என்பதூ மேற்கு திக்கிலும் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கவேண்டும். இதில் 14 ச்ரௌத வேள்விகளும் செய்யப்படும். சங்க இலக்கியப் புலவர்கள் அந்தணர்களைப் போற்றுகையில் முத்தீ அந்தணர் என்று புகழ்வது இதனால்தான். இதுதவிர சில நூல்கள் நாலாவது தீ பற்றியும் கூறும்.

 

மனு தர்ம சாத்திரத்தில் 3-70/75; 3-80; 3-92/94;4-25/26 ஆகியவற்றில் இவற்றின் விவரங்களை காஅண்லாம்.

எனது பழைய கட்டுரையையும் படிக்கவும்:–

400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை

By London Swaminathan லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் — 890 தேதி 6 மார்ச் 2014

 

ஹோமத் தீயில் அரிசியையும் நெய்யையும் போட்டு வீணடிப்பது நியாயமா? (Post No.3307)

Written  by London Swaminathan

 

Date: 31 October 2016

 

Time uploaded in London:19-42

 

Post No.3307

 

 

 

Pictures are taken from various sources; thanks to Facebook friends.

 

 

அந்தக் காலத்தில் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் (ஆட்சியாளர்), வைஸ்யர்கள் (வணிகர், விவசாயிகள்) ஆகிய மூவர்ணத்தினரும் வேள்விகளைச் செய்தனர் அல்லது செய்வித்தனர். அப்போது வேள்வித் தீயில் சோறு, நெய், பால், மற்றும் பூர்ணாஹுதியின்போது வேஷ்டி, புடவை, தங்க காசுகள் முதலிய பயனுள்ள பொருட்களும் பலவகை மரக்குச்சிகள் (சமித்து) போன்றவையும் போடப்பட்டன. மனிதர்களுக்குப் பயன்படும் பொருட்களை இப்படி தீயில் போட்டு வீணடிக்கலாமா? என்று பலரும் எண்ணுவர். குறிப்பாக பகுத்தறிவு வா ((ந்)) திகள் கேள்வி கேட்பர்.

 

ஒவ்வொரு நிமிடமும் பல கோடி சிகரெட்கள் புகைக்கப்பட்டு காசை வீனடிக்கிறார்களே இது நியாயமா? அது மட்டுமல்ல இப்படி சிகரெட், பீடி, சுருட்டைக் குடித்து புறச்சுழலை மாசு படுத்துவதோடு மற்றவர்களுக்குப் புற்று நோயைத் தருகிறார்களே! இது நியாயமா? என்று எந்த பகுத்தறிவு வா ((ந்)) தியும் வாதாடி இது வரை பார்க்கவில்லை. நிற்க.

 

யாஹத்தில் போடுவது ஏன்? என்ற கேள்விக்கு விடை காண்போம்.

 

பிராமணர்கள் அந்தக் காலத்தில் தினமும் அக்னிஹோத்ரம் செய்துவந்தனர். அதில் அக்னி, பிரஜாபதி முதலிய கடவுளரின் பெயரைச் சொல்லி அக்னியில் — தீயில் — இப்படி பொருட்களைப் போடுவது வழக்கம் அப்போது அவர்கள் இதம் ந மம என்று சொல்லி அதைப் போடுவர். இது என்னுடையது அல்ல என்பது அதன் பொருள். அதாவது தியாக உணர்வை முதலில் இருந்தே வளர்க்க வேண்டும் என்பது இதன் தாத்பர்யம்– கருத்து- அது மட்டுமல்ல. எந்த இறைவன் நமக்கு இவை எல்லாவற்றையும் கொடுத்தானோ அவனுக்கு நன்றி காட்டும் முகத்தானும் இப்படி அளிப்பதாகக் கொள்ளலாம்.

பாரி என்ற தமிழ் மன்னன் ஒரு முல்லைக் கொடி காற்றில் பற்றுக் கொம்பு இல்லாமல் தத்தளித்தபோது அதற்கு தனது தேரையே ஈந்தான்/ எந்த பகுத்தறிவு வாந்தியும் பாரியை முட்டாள் பயல் என்று திட்டுவதில்லை. ஒரு மன்னனுக்கு பொது அறிவுகூட இல்லையா? காற்றில் முல்லைக் கொடி படபடப்பது நியாயம்தானே! என்று பகுத்தறிவு வாந்திகள் வசை பாடவில்லை. மயில் இயற்கையாக ஆடியதைப் பார்த்து ரசிக்கத் தெரியாத பேகன் அது குளிரில் நடுங்கியதாக எண்ணி தனது போர்வையையே அளி த்தானே! இவனுக்கு சின்னக் குழந்தைக்குத் தெரியும் விஷயம்கூடத் தெரியவில்லையா? பொது அறிவே இல்லாத மூடனா? என்று பகுத்தறிவு வாதிகள் கிண்டல் செய்வதில்லை! முன்னர் கூறியபடியே கோடிக்கணக்காண மக்கள் குடிக்கும் சிகரெட்டுகளையும் மதுபானக் குடியையும் பரிகசிப்பதில்லை. எங்காவது இவைகளுக்கு ஏஜன்ஸியோ காண்ட்ரா க்டோ கிடைத்தால் முதலில் கியூ வரிசையில் நின்று பணம் பண்ணுவதும்  பகுத்தறிவு வாந்திகள் என்பதை உலகறியும்.

 

பாரியும், பேகனும் , கர்ணனும் செய்தது மாபெரும் தியாகம். ஆகையால்தான் போற்றுகிறோம். அது போலவே தமக்கென்று வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு வாரி வழங வேண்டும்; குறிப்பாக இறைவனுக்கு நன்றிக்கடன் செய்ய வேண்டும்..

 

யாக யக்ஞங்களில் நெய்யை விடுவதாலும் சிலவகை மரக்குச்சிகளைப் போடுவதாலும் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை நமது இலக்கியம் முழுதும் இழையோடிச் செல்லும் விஷயமாகும். ஆனால் இதற்கு நேர்மாறாக இன்று உலக   எங்கும் நடக்கும் “சிகரெட் அக்னிஹோத்ரம்” புகைப்பவரை மட்டுமின்றி புகையை சுவாசிப்போருக்கும் புற்று நோயை உண்டாகும் என்பதை நாம் அறிவோம். அறிந்தும் தடுப்பதற்கு எவரும் முன் வருவதில்லை.

 

தியாக மனப்பான்மை பாரதம் முழுதும் உள்ளது. இந்த,” இதம் ந மம” ( என்னுடையது அல்ல) என்பது புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னர் பாடிய பாட்டிலும் வருகிறது:-

 

 

உண்டால் அம்ம, இவ் உலகம் — இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையர் ஆகி

தமக்கு என முயலா நோன் தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மையானே

–கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது (புறநானூறு 182)

 

 

இந்த உலகம் ஏன் நிலைபெற்று இருக்கிறது என்றால், இந்திரனின் அமிழ்தம் கிடைத்தாலும் தனியாக உண்ணமாட்டாதவர்கள் உள்ளதாலும், தர்ம விரோதச் செயல்களுக்கு பயப்பட்டு, புகழ் தரும் செயலுக்காக உயிரையும் கொடுப்பவர் இருப்பதாலும்தான்.

 

பழி வரும் பாபச் செயல் என்றால் உலகத்தையே தருகிறேன் என்று சொன்னாலும் வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடுவர். இப்படி தன்னலம் கருதாது பொது நலம் கருதும்  மக்களால்தான் இந்த உலகம் இன்னும் அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கிறது என்று பாண்டிய மன்னன் செப்புவான்.

 

இதில் இந்திரர் அமிழ்தம் என்னும் சொல் மிக முக்கியமானது. இத ஆரிய-திராவிடவாத நோய்க்காரர்களுக்கு செமை அடி கொடுப்பதாகும். சங்க இலக்கியத்திலும் திருவள்ளுவர் குறளிலும் இந்த இந்திரர் அமிழ்தம் நிறைய இடங்களில் வருகிறது. கடல் கடைந்து அமிழ்தம் எத்த கதையை தமிழர்கள் தம்முடைய கதையாகவே கொண்டு சங்க இலக்கியம் முழுதும் பாடி பரவியுள்ளது அடி மேல் அடி கோடுக்கும் ஆரிய-திராவிட இன வெறியர்களுக்கு.

வாழ்க இந்திரர் அமிழ்தம்; வளர்க “இதம் ந மம”!!

 

மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)

manu-book-3

Written by London Swaminathan

 

Date: 26 October 2016

 

Time uploaded in London: 20-23

 

Post No.3292

 

Pictures are taken from various sources;thanks

 

மனு தர்ம சாத்திரத்தில் ஏராளமான சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

manu-book-1

முன்னொரு கட்டுரையில் மனிதனுக்கு கிருத யுகத்தில் 400 வயது, பெண்ணின் வாய் எப்போதுமே சுத்தமானது, பெரிய ரிஷிகளைப் பார்த்து ஒருவர் என்னருமை சின்னப் பையன்களா என்று சொன்னது சரிதான், 36 ஆண்டு, 18 ஆண்டு பிரம்மச்சர்யம், திதியில் மாமிசம் சேர்ப்பது, பெண்களை நன்றாகக் கவனிக்காவிடில் அந்தக் குடும்பம் வேருடன் அழியும் , கீழ்ஜாதிக்காரன் படித்திருந்தால் அவனிடம் கைகட்டி வாய்பொத்தி கல்வி கற்க வேண்டும், ஆயிரம் தந்தைக்கு ஒரு தாய் சமம் — முதலிய பல விஷயங்களைக் கொடுத்திருந்தேன். அவைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம். இப்போது வேறு சில சுவையான  விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

யார் யாருக்கு விலகி வழிவிட வேண்டும் என்று மனு சொல்லுகிறார்:-

 

ஒருவனுடன் 10 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

ஒரு கலைஞனுடன் 5 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

வேதம் அறிந்த ஒருவனுடன் 3 ஆண்டு வசித்தால் அவனை நண்பனாகக் கருத வேண்டும்.

சொந்தக்காரர்களை சிறிது காலத்துக்குள்ளேயே நண்பனாகக் கருத வேண்டும்.

 

ஒருவனுக்கு மரியாதை கொடுக்க பின்வரும் விஷயங்களை கருத்திற்கொள்க:-பணமுள்ளவனுக்கு மரியாதை கொடு; அதைவிட நண்பனுக்கும்,அதைவிட வயதுக்கும், அதைவிட நல்ல பணிசெய்பவனுக்கும்,   அதைவிட கல்விகற்றவனுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

வேலைக்கரன் ஆனாலும் 90 வயதைக் கடந்து விட்டால் மரியாதை கொடுக்க வேண்டும்.

 

எதிரே வண்டியில் வருபவர்களுக்கும், 90 வயதைக் கடந்தவர்களுக்கும், நோயாளிக்கும், சுமை  தூக்குவோருக்கும், பெண்களுக்கும், வேத பண்டிதனுக்கும், மாப்பிள்ளைக்கும், அரசனுக்கும் விலகி நின்று வழிவிட வேண்டும். இவர்கள் எல்லோரும் வந்தால், அரசனுக்கும் வேத பண்டிதனுக்குமே முதல் மரியாதை.

 

அரசனும் வேத பண்டிதனும் ஒரே நேரத்தில் எதிரே வந்து விட்டால், வேத பண்டிதனுக்கே முதலில் வழிவிட வேண்டும்.

 

பெண்களுக்கும் வயதானோருக்கும் ஜாதி வேறு பாடின்றி மரியாதை கொடுக்கப்படுவது அந்தக்காலத்தில் பெண்களுக்கும் வயதுக்கும் இருந்த மரியாதையைக் காட்டுகிறது. மனு எவ்வளவு அளவு மனிதபிமானம் உடையவர், நல்ல சிந்தனை உடையவர் என்பதை இந்த இரண்டாம் அத்தியாய ஸ்லோகங்கள் (133- 139) காட்டுகின்றன.

manu-book-2

 

வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் வைஸ்யர்கள், சூத்திரகளாக இருந்தாலும் அவர்களை விருந்தினராக கருதி உணவளிக்க வேண்டும்

 

நண்பர்கள் வந்தால் மனையுடன் உட்கார்ந்து சாப்பிடலாம். விருந்தினர்கள் சாப்பிட்டவுடன் கர்ப்பிணிப் பெண்களையும், சிறு பெண்களையும் , புதுமணத் தம்பதிகளையும், நோயாளிகளையும் சாப்பிடச் சொல்ல வேண்டும்.

குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் சாப்பிட்ட பின்னரே கணவனும் மனைவியும் சாப்பிடலாம். (Manu 3- 111 to 118)

 

கர்ப்பிணிப் பெண்கள், கன்யாப் பெண்கள் மீது மனுவுக்கு எவ்வளவு மதிப்பு பாருங்கள்.

 

–Subham–

 

 

பாத்திரம் அறிந்து தானம் செய்! (Post No.3282)

valluvar

Written  by London Swaminathan

 

Date: 24 October 2016

 

Time uploaded in London: 6-35 AM

 

Post No.3282

 

Pictures are taken from various sources; thanks. They are used for representational purpose. They may not have direct connection to the article below.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. பாத்திரம் அறிந்து தானம் செய்.

பாத்திரம் என்றால் நாம் உடனே எவர் சில்வர் பாத்திரம், அலுமினிய பாத்திரம், தாமிரப் பாத்திரம் என்று உலோகத்தால் ஆன பொருளை நினைப்போம். இதன் உண்மைப் பொருள் அதுவல்ல.

 

பாத்திரம் அறிந்து தானம் செய் என்பது பகவத் கீதையில் உள்ளது.

 

தானம் செய்வதிலுள்ள மூன்று வகைகளை கிருஷ்ணன் விவரிக்கிறான்.

இது புறநானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளது.

 krishnan-barbeque

நல்ல தானம் (சாத்விகம்) எது?

தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)

 

தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே

தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்

 

இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்

நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.

அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.

 

ராஜச தானம் எது?

 

 

யத் து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வாபுன:

தீயதே ச பரிக்லிஷ்டம் தத் தானம் ராஜசம் ஸ்ம்ருதம் —17-20

 

பின்னொரு காலத்தில் இவன் உதவி செய்வான் என்று கருதியோ பயனைக் கருதியோ செய்யப்படும் தானமும், மனவருத்தத்துடன் செய்யப்படும் தானமும் ராஜசம் என்று கூறப்படும்.

 

 

கடைசியாக மூன்றாவது  வகை தானத்தைப் பற்றி கூறுவார் கிருஷ்ணன்:-

 

அதேசகாலே யத்தானம் அபாத்ரேப்யஸ்ச தீயதே

அசத்க்ருதம் அவக்ஞாதம் தத்தாதமச உதாஹ்ருதம் (17-22)

 

தகுதியற்ற இடத்திலும் காலத்திலும் தகுதியற்றவர்களுக்கும் (அபாத்ரம்)

மதிப்பின்றி, அவமானப்படுத்தும் வகையிலும் எது கொடுக்கப்படுகிறதோ அது தாமசம் என்று கூறப்படும்.

 

சிலர் அரசியல் கட்சிகளுக்கும் சிலர் பயங்கரவாத இயக்கங்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பர். குடி போதைக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையானோர் பணம் கேட்பர். அவர்களுக்குக் கொடுப்பத எல்லாம் கொடை என்றாலும், கடைத்தரமான நன்கொடையாகும்.

 

இன்னும் சிலர் நல்ல காரியங்களுக்காக நன்கொடை வசூலிக்கப் போனால் நாக்கில் நரம்பின்றித்  தூற்றுவர். இன்னும் சிலர் “இன்று போய் நாளை வா” என்று தினமும் சொல்லி காலம் கடத்துவர். இறுதியில் நாமே போகாமல் இருப்போம். இவை எல்லாம் கடைத்தர தானம்.

வள்ளுவனும் அழகாகச் சொல்லுகிறான்:

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரதுரைத்து (குறள் 221)

 

வறுமையில் வாடுவோருக்குக் கொடுப்பதே தாஅனம். மற்ற தானங்கள் எல்லாம் பலனை எதிர் பார்த்துக் கொடுப்பதே ஆகும்.

cbe-peacocks-mayil

இப்பொழுது ஒருவருக்குக் கொடுத்தால் அது புண்ணியத்தைச் சேர்க்கும். அதுவே போகும் வழிக்குத் துணையாகும் என்று வேதம் சொல்லும். அதியே வள்ளுவனும் சொல்லுவான்:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

 

பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.

 

ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).

புறநானூற்றில் தானம்

 

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;

என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (பூரம் 184)

 

அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.

 

 

பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் பாடிய பாடலிலும் (புறம் 141) இக்கருத்து எதிரொலிக்கிறது.

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே

 

மழை மேகத்தைக் கண்டு தோகை விரித்தாடிய மயில், குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி, மயிலுக்குக்குப் போர்வை அளித்தவன் பேகன்!

 

–subham–

 

 

தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! (Post No.3278)

adi-perukku-sri-rangam

Written by S. NAGARAJAN

Date: 23 October 2016

Time uploaded in London: 5-50 AM

Post No.3278

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.

 

இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!

சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.

1000-krishnas

அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

  • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
  • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

  • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
  • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

  • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

  • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

  • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
  • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
  • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
  • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

  • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!

**********

 

நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!! (Post No.3276)

elephant-srirangam-dinm

Written by London Swaminathan

 

Date: 22 October 2016

 

Time uploaded in London: 6-19 AM

 

Post No.3276

 

Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

desikar-bahavani2

நோய்களுக்கு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இடும் கட்டளை மிகவும் அதிகார தோரணையில் அமைந்திருக்கிறது.

 

‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று அப்பர் பாடும் பாடலையும் ஞான சம்பந்தர் பாடிய ‘கோளறு திருப்பதிக’த்தையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

 

உற்ற உறுபிணி நோய்காள்!

உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்

பேணும் திருக்கோயில் கண்டீர்

அற்றம் உரைக்கின்றேன் இன்னம்

ஆழ்வினைகாள்! உமக்கு இங்கோர்

பற்றில்லை கண்டீர் நடமின்

பண்டன்று பட்டினம் காப்பே!

பெரியாழ்வார் திருமொழி பாடல் 447

 

பொருள்:-

என்னைத் தொடர்ந்து வருத்தும் நோய்களே! உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்; கேளுங்கள். பசுக்களை மேய்த்த கண்ணபிரான் என் உடலைக் கோவிலாகக் கொண்டுவிட்டான். காணுங்கள். பிறவிக்கடலில் ஆழ்த்துகின்ற வினைகளே! இன்னும் உறுதியாகச் சொல்லுகிறேன் உங்களுக்கு இங்கு ஒரு வேலையும் கிடையாது. வெளியே போங்கள்.GET OUT! எம்பெருமானுடைய பட்டினமான இவ்வுயிர், அவனால் காக்கப்படுகிறது.

IMG_5160 (2).JPG

‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம்’ – என்று திருமூலர் சொன்னதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

 

பண்டன்று, பட்டினம் காப்பே என்ற தலைப்பில் பெரியாழ்வார் பாடிய பத்து பாசுரங்களும் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது.

 

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!

காலப் பெற உய்யப் போமின்

 

என்று பாசுரம் துவங்குகிறது.

 

அடுத்த பாடலில் எமனுடைய கணக்குப்பிள்ளைகளான சித்திரகுப்தனும் அவனது தூதர்களும் பாவ புண்ணியக் கணக்குப் புத்தகத்தையே கிழித்துப்போடுவிட்டு ஒளிந்துகொண்டனர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்:-

சித்திரகுத்தன் எழுத்தால்

தென்புலக்கோன் பொறி ஒற்றி

வைத்த இலச்சினை மாற்றித்

தூதுவர் ஓடி ஒளித்தார்

 

–என்கிறார்.

butter-stealing-krish

அதைத் தொடர்ந்து வரும் பாடல்களில் அவர் பயன்படுத்தும் மாணிக்கப்பண்டாரம், வங்கக் கடல் வண்ணன், பீதகவாடைப் பிரானார் என்ற சொற்றொடர்கள் ரசித்துப் படிக்க வேண்டிய சொற்றொடர்கள்.

 

பெரியாழ்வார் சொல்லும் நோய்கள் ‘பிறவிப்பிணி’ என்னும் “புனரபி மரணம் புனரபி ஜனனம்! புனரபி ஜனனி ஜடரே சயனம்” — ஆகியதாகவும் இருக்கலாம். அல்லது அப்பரைப் பற்றிய குடல் நோய் போன்று உடலை வருத்தும் நோய்களாகவும் இருக்கலாம். அதனாலன்றோ அப்பர் பிரானார் “கூற்றாயினவாறு” என்று பாடத் துவங்கி 4000 பாடல்களுக்கு மேல் பாடித்தீர்த்தார்.

நாள் என் செய்யும் வினைதான் என்செய்யும் என்று அருணகிரிநாதர் பாடினார். அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? என்று அப்பர் பிரான் பாடினார். இவற்றையெல்லாம் பெரியாழ்வார் பாசுரங்களுடன் ஒப்பிடுவது இன்பம் பயக்கும்.

krishna-saffron-2

–சுபம்–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 14 (Post No.3275)

buddha-lotus

Written by S. NAGARAJAN

Date: 22 October 2016

Time uploaded in London: 5-17 AM

Post No.3275

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 14

By ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 69. வருடம் முழுவதும்  சூத்ரங்களை விளக்குவதிலும் மக்களைச் சந்திப்பதிலும் அநேக இடங்களுக்குச் செல்வதுமாகக் கழிந்தது. சீடர்களாகத் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டவர்களின் எண்ணிக்கையோ கூடிக் கொண்டே போனது.  புது வருடத்தை மடாலயத்திலேயே அமைதியாகக் கழித்தார் ஸு யுன்.

 

 

ஒரு ஆண்டு வேகமாக ஓடி விட்டது. இப்போது ஸு யுன்னுக்கு வயது 70. ரங்கூனுக்கு அவர் வந்த போது உபாசகர் காவ் அவரை வரவேற்றுத் தன் வீட்டிலேயே ஒரு மாதம் தங்க அழைப்பு விடுத்தார். அவர் சாய்ந்த நிலையில் இருக்கும் ஒரு மரகத புத்தரைக் கொண்டு வந்து தந்து அதை ஷூ-ஷெங்

மடாலயத்திற்குக் கொண்டு சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

 

திரிபிடக சூத்ரங்களைக் கொண்டு செல்லும் அரிய பணிக்கு இப்போது ஸு யுன் தயார். திரிபிடகத்துடன் மரகத புத்தரையும் கூட பத்திரமாக காக்ஃபுட் மலைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்!

 

சூத்திரங்களைக் கொண்டு செல்ல நல்ல குதிரைகளாக முந்நூறு குதிரைகள் தேவைப்பட்டன. ஆனால் செய்யப்பட்டிருந்த சிலையோ மிகவும் கனமாக இருந்தது. அதைக் கொண்டு செல்ல நல்ல் வலுவான ஆட்கள் இல்லாததால் அவலோகிதேஸ்வரா ஆலயத்திலேயே அதை விட்டுச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. இன்னும் சில வருடங்களில் அதை காக்ஃபுட் மலைக்கு ஒரு வேளை கொண்டு செல்ல முடியும்.

 

நாற்பது நாட்கள் இடைவிடாமல் உழைத்ததோடு அனைத்தையும் மேற்பார்வை பார்த்தார் காவ். ஆயிரம் பேர்களையும் முந்நூறு குதிரைகளையும் கொண்ட பெரும் படை தயாராகி விட்டது. காவ் போன்ற இன்னொருவரைக் காணவே முடியாது.

 

டெங்குயு மற்றும் ஜியாகுவான் மாகாணங்கள் வழியே சென்ற பெரும் ஊர்வலத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. அனைவரும் ஆங்காங்கே ஆரவாரத்துடன் திரிபிடகத்தை வரவேற்றனர். பல நாட்கள் பயணத்தில் கழிந்த போதும் கூட குதிரைகளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி களைப்பே ஏற்படவில்லை!

 

 

ஜியாகுவானிலிருந்து தலிக்குச் செல்லும் போது மழை இல்லையென்றாலும் பெருத்த இடியோசை கேட்க ஆரம்பித்தது.மேகங்களினூடே மின்னல் கீற்றுகள்! எர் ஹாய் ஏரியில் அலைகள் ஆர்ப்பரித்து உயர எழும்பின! ஒரு பனி மூட்டம் படர்ந்தது. பார்த்தவர்கள் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்கள்.

 

 

தலியில் மடாலயத்தின் வாசலை அடைந்த போது திரிபிடகத்தை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழையோ மழை. பின்னர் வானம் வெளுத்தது.  எர் ஹாய் ஏரியிலிருந்த பழைய டிராகன் திரிபிடகத்தை வரவேற்கத் தானே வந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.

 

வைசிராய் திரிபிடகத்தை வரவேற்கத் தலிக்குத் தனது முக்கியமான ஆட்களை அனுப்பினார். அனைவரும் புத்த தர்மரின் எல்லையற்ற கருணையைப் பற்றிப் பேசிப் பேசி ஆனந்தமடைந்தனர்.

 

 

தலியில் பத்து நாட்கள் தங்கிய பின் ஷூ செங் மடாலயம் நோக்கி ஊர்வலம் சென்றது.

buddha-1

வழியில் ஒரு வித தடையுமில்லை. திரிபிடகம் மடாலயத்தில் வைக்கப்பட்டது. மாதத்தின் இறுதி நாளில் ஊதுபத்தி ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.

 

மங்கலமான திரிபிடகம் வந்து சேர்ந்ததில் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. திரிபிடகம் நிறுவப்பட வேண்டும் என்ற சங்கல்பம் பூர்த்தியாகி விட்டது.

 

டெங்குயுவில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு சொல்லத்தான் வேண்டும்.

 

சாங் ஸ்ன் லின்னினிடம்  மடாலயத்தில் ஸு யுன் பேசிக் கொண்டிருந்த போது ப்சு ஒன்று அங்கே வந்தது. அது அதன் எஜமானரிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டதாம்!

அதைத் தொடர்ந்து அதன் எஜமானரான யாங்கும் ஓடி வந்தார்.

யாங் ஒரு கசாப்புக் கடைக்காரர்.

 

 

அவர் பசுவை நோக்கி, “நீ (தலை வெட்டுப்படாமல்) தப்பிக்க வேண்டுமென்றால்  மூன்று வைரங்களில் நம்பிக்கை வை. தப்பி ஓடு” என்று சொன்னாராம்.

பசுவும் தலை அசைத்ததாம்!

 

ஓடிவந்த பசு அங்கு கண்களில் நீர் மல்க மண்டியிட்டது.

உடனடியாக ஸு யுன் மூன்று சரணாகதி சூத்திரங்களை பசுவுக்கு ஓதினார்.அது ஒரு மனிதரைப் போலவே நடந்து கொண்டது.

ஸு யுன் சிறிது பணத்தை எடுத்து பசுவின் சொந்தக்காரரான யாங்கிற்கு அளித்தார். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்தார்.

நடந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.

 

 

தனது தொழிலை இனி மாற்றிக் கொள்வதாக சபதம் எடுத்தார். தன்னை தர்மத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு இறைஞ்சினார்.  அவர் சைவ உணவுக்கு  மாறியவுடன் கமாண்டர் ஜாங் அந்த கசாப்புக்கடைக்காரரின் மனமாற்றத்தைக் கண்டு வியந்தார். அத்துடன் ஒரு கடையில் அவருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார். இந்த அதிசய நிகழ்ச்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது!

-தொடரும்

 

பருப்பு இல்லாத கல்யாணமா? பட்டாசு இல்லாத தீபாவளியா? (Post No.3270)

bob-diwali

Written by London Swaminathan

 

Date: 20 October 2016

 

Time uploaded in London: 6-21

 

Post No.3270

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

deepavali-israel

காலையில் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். சில அப்பாவிப் பள்ளிக்கூட பெண்கள் கைகளில் சில அட்டைகள். அதில் “பட்டாசு வேண்டாம், புறச்சூழலைப் பாதுகாக்கும் தீபாவளியைக் கொண்டாடுவோம்! பச்சை நிற தீபாவளியைக் கொண்டாடுங்கள் “என்றெல்லாம் எழுதப் பட்டிருந்தது. உடனே சில எண்ணங்கள் மனதில் எழுந்தன. இது சரியான அணுகு முறை அல்ல. பருப்பு இல்லாத கல்யாண சாப்பாடு எப்படி இல்லையோ அப்படி பட்டாசு இல்லாத தீபாவளி சோபிக்காது!

 

காரணம் ?

தீபாவளிப் பட்டாசு தொழிலில் முன்னனியில் நிற்கும் மாநிலம் தமிழ் நாடு. வறண்ட சிவகாசி, ராமநாதபுரம் கோவில்பட்டி பகுதிகளில் மிளகாய் வற்றல் காயப்போடுதல், பட்டாசு செய்தல், தீப்பெட்டி செய்தல் முதலிய தொழில்கள் மட்டுமே செய்ய முடியும். தண்ணீர் என்பது அபூர்வமான பொருள். சூரிய ஒளிதான் செல்வம். அவர்கள் வயிற்றில் அடிக்கக்கூடாது. மேலும் எதிர்காலத்தில், நா ம் பட்டாசு செய்யாமல் போனால் அந்த இடத்தை சீனப் பட்டாசுகள் நிறைவு செய்யும் அபாயம் உள்ளது.

 

ஒருகாலத்தில் களி மண்ணில் பிள்ளையார் செய்து ஆற்றில் கரைத்தோம்; இப்பொழுது கலர் பிள்ளையார், பெரிய பிள்ளையார் செய்யக்கூடாதென்றால் அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பட்டாசே இல்லாமல் தீபாவளி வேண்டும் என்பதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கலாம். இரவு 11 மணிக்கு மேலாக சத்தம் கொடுக்கும் வெடிகளை வெடிக்காதீர்கள் என்று கேட்கலாம். அதுவும் இந்துக்களே முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டோ அரசாங்கமோ இதில் தலை இடக்கூடாது.

 

சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றுகின்றனர். பலருடைய

பகுத்தறிவுச் சமாதிகளில் ஜோதி எரிகிறது. இதெல்லாம் கூட புறச்சூழலைப் பாதிக்கக்கூடியதே. மரக்கறி உணவைவிட மாமிசம் உண்ணூவோரால் புறச்சூழல் பாதிப்படைவதாக விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதுகின்றன.

diwali-crackers

சிகரெட்டையும் பீடியையும் தடை செய்!

உலகில் ஒவ்வோரு நிமிடமும் பல கோடி சிகரெட்டுகளும் பீடிகளும் புகைக்கப்படுகின்றன. இவற்றால் புறச்சூழல் பாதிப்பதோடு புற்றுநோயும் பரவுகிறது. ஆகையால பீடிகளையும் சிகரெட்டுகளையும் தடை செய்க! மாமிச உணவுகளைத் தடை செய்க! என்றெல்லாம் கோஷம் எழுப்பினால் அதில் பசை இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாளோ, இரண்டே இரண்டு நாளோ வெடிக்கும் பட்டாசுகளுக்கு ‘நோ’ NO சொல்லுங்கள் என்பது மடமையிலும் மடமை.

 

ஒலிம்பிக் போட்டியின்போது வெடிக்கும் பட்டாசுகள், புத்தாண்டின்போது உலகெங்கிலும் வெடிக்கும் பட்டாசுகள் , அமெரிக்க சுதந்திர தினத்தின் போது வெடிக்கும் பட்டாசுகள் இவையெல்லாம் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி வெடிக்கிறார்கள். நாம் ஒரு நாள் வெடிப்பதை விட இவை எல்லாம் நூறு மடங்கு அதிகம்!

ஆகையால் குடிசைத் தொழிலான பட்டாசுத் தொழிலாளர்களின் வயிற்றிலும் வாயிலும் அடிக்காமல், பட்டாசு வாங்கிக் கொளுத்துங்கள் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். காசைக் கரியாக்குவதிலும் அர்த்தம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் சிறுவயதில் அனுபவித்த பட்டாசு மத்தாப்புகளை எதிர்கால சந்ததியும் அனுபவிக்கட்டும்.

diwali_in_mumbai_3498310k

நான், சிறுவயதில் ரசித்த பட்டாசுகளை, லண்டனில் வாழும் என் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்தி ஒவ்வொரு முறை இந்தியா வருகையிலும் எங்கேயாவது பட்டாசுகளைத் தேடிப்பிடித்தது வெடித்திருக்கிறோம் அதாவது தீபாவளி கழிந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர்!

 

இனிமேல் கல்யாணங்களில் 10,000 வாலா சீனி பட்டாசு வேண்டாம் என்று சொல்லுங்கள் அது நியாயமே. இனிமேல் தேர்தல் வெற்றிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள் அது நியாயமே.. பீடி, சிகரெட் குடிப்போரின் தலையில் அடித்து அதைப் பிடுங்கி எறியுங்கள் அது நியாயமே. பக்ரீத் பண்டிகயின்போது ஆயிரக்கணகான மிருகங்களைப் பலி கொடுப்பதை நிறுத்துங்கள் அது நியாயமே; எல்லாக் கசாப்புக் கடை வாசல்களிலும் ம,றியல் செய்யுங்கள் அது நியாயமே: பட்டாசு வெடிப்பதைவிட மாமிச உணவு, புறச்சுழலை அதிகம் பாதிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுங்கள் அது நியாமே.

 

முகமது நபி இஸ்லாமிய மத்ததைத் தோற்றுவித்தபோது ஒலிபெருக்கி ‘மைக்’ எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் தினமும் 5 முறை கூப்பாடு போடுவதை —- ஒலிபெருக்கிகளால் கூச்சல் போடுவதை —-அனுமதிக்கிறோம் அதுபோல நரகாசுரனை கிருஷ்ணன் வதை செய்தபோது பட்டாசு இருந்ததோ இல்லையோ கவலை வேண்டாம். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதை வரவேற்போம்.

 

மாமிசம் சாப்பிடுவோரும் சிகரெட் குடிப்போரும் புறச்சூழல் பாதிப்பு பற்றிப் பேச என்ன நியாயம் இருக்கிறது?

diwali-sparklers

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள்; சிறு தொழில்கள் சிறக்கட்டும்.

 

–SUBHAM—

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************