அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 9 (Post No.3003)

$_35

Article Written S NAGARAJAN

Date: 25 July 2016

Post No. 3003

Time uploaded in London :– 5-49 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 9
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 65
க்வி மிங் ஆலயத்தில் இருந்தோர் அவரைத் தனிமைத் தவத்தை விட்டு விட்டுத் தங்களிடம் வருமாறு வேண்டினர். அங்கு அவர்கள் அழைப்புக்கு இணங்கிச் சென்ற அவர், சூத்திரங்களின் விளக்கங்களை சொல்ல ஆரம்பித்தார். இப்போது அவருக்கு சிஷ்யர்களாக 300 பேர் இருந்தனர்.
அடுத்து, யாங்-சு ஆலயம் அவரை அழைத்தது சுராங்கம சூத்திரங்களையும் .ஹான் –ஷான் எழுதிய கவிதைகளையும் ஆலயத்தில் அவர் ம்ரப் பலகைகளில் ஓவியமாக வரைய ஏற்பாடு செய்தார்.
அவற்றை விளக்குமாறு அனைவரும் அவரைக் கேட்டுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் லு பு சிங் மற்ற அதிகாரிகளுடன் வந்து ஸு யுன்னைத் தரிசித்தார்.
சான் டா ஆலயத்திற்கு வருமாறு பணிவுடன் அவர்கள் வேண்டினர்.
அங்கு சென்றார் ஸு யுன்.
நகரங்களில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய ஸு யுன் காக் ஃபுட் மலையில் உள்ள ஜிங்-டிங் மலை உச்சியில் உள்ள ஆலயத்தைத் தான் புனருத்தாரணம் செய்ய விரும்பியதையும் அங்குள்ளோர் அதைத் தடுத்ததையும் நினைவு கூர்ந்தார். (அத்தியாயம் 7இல் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது)
அந்த இடத்தில் சிறிது இடம் தந்தால் நன்றாக் இருக்கும் என்ற கருத்தை ஆள்வோரிம் அவர் கேட்டுக் கொள்ள அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
போ யு என்ற இடத்தில் ஒரு ஆலயம் இருந்தது. ஜியா குங் வமிசம் (1796-1820) ஆண்ட போது செழிப்பாக இருந்த ஆலயம் இப்போது பாழடைந்து கிடந்தது. ஏன் அதை விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டார்கள்?
ஆலயத்தின் வலது புறம் பெரிய ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையிலிருந்து ‘வெள்ளைப் புலி’ யின் செல்வாக்கு இருந்ததாம். மக்கள் பயந்து ஓடி விட்டனர்.
பாறையை உடைக்க விரும்பினார் ஸு யுன். பாறையோ மிகவும் பெரிது. ஒன்பது அடி நான்கு அங்குலம் உயரம். ஏழரை அடி குறுக்களவு.
பாறையை இடது புறமாக 280 அடி தள்ளி விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஸு யுன் ஒரு மேஸ்திரியைக் கூப்பிட்டு ஆள்களை அழைத்து வருமாறு கூறினார். 100 பேர்கள் குழுமினர். மூன்று நாட்கள் இடை விடாமல் உழைத்தனர். ஒரே சமயத்தில் அனைவரும் முயற்சி செய்தும் கூட பாறை அசையக் கூட இல்லை!
முயற்சியில் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ஸு யுன் அங்கு இருந்த காவல் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். மந்திரங்களை ஜெபித்தார்.
பின்னர் பத்து துறவிகளை அழைத்தார். இடது புறம் பாறையைத் தள்ளுங்கள் என்றார்.
பாறை நகர்ந்தது! அனைவரும் ஆரவாரித்தனர்.
ஒருவர் பாறையில் ‘யுன் யி ஷி’ என்று எழுதியே விட்டார். மேகத்தால் நகர்த்தப்பட்ட பாறை என்பது அதன் பொருள்.
(மேகம் என்பது இங்கு ஸு யுன்னைக் குறிக்கிறது)
அதிகாரிகளும் அறிஞர்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தனர். நடந்ததை பாறையில் கல்வெட்டாக்க முனைந்தனர்.
ஸு யுன் ஒரு கவிதையைப் புனைந்தார்.
அதன் சுருக்கம்:
“இந்த விசித்திரமான பாறை தைரியமாக நின்றது
புலிகள் நடமாடும் இடத்தில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்ய விரும்பினேன்
ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்து இந்த மலைக்கு வந்தேன்
அப்போது – பிரகாசமான சந்திர வெளிச்சம்
மீன்கள் விளையாடும் அழகிய நேரம்
மாயா உலகத்தை மேலிருந்து பார்க்கும் அவன்
இனி சுவர்க்கத் தென்றல் தவழ்ந்து வர
மணிகளின் ஓசையைக் கேட்பான்”
ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.எல்லா யாத்ரீகர்களும் அங்கு வருவதென்றால் அவர்களை நன்கு கவனிக்க பணம் வேண்டுமே
ஸு யுன் நிதி திரட்ட முனைந்தார்
– தொடரும்

அரவிந்த ரகசியம் (Post No.3001)

 

aravindarArticle Written by S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 6-32 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அரவிந்த இரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!
ச.நாகராஜன்

நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.
மஹாத்மா காந்தி
ஸ்ரீ சத்ய சாயிபாபா
அரவிந்தர்
அன்னை
இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்தார்.
இவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன.
ஆனால் அவை ஒரு பிருஹத் ஆரண்யத்தில் புகுவது போல.
பெரிய காட்டில் எது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியாது அல்லவா.
நல்ல வேளையாக அறிஞர்கள் பலர் அதில் சில முத்துக்களை இனம் கண்டு நமக்குச் சிறு சிறு கட்டுரைகளாகத் தந்துள்ள்னர். இன்னும் சிலரோ அவரது உரைகளில் முக்கியமானவற்றைத் தனியே பிரித்துத் தொகுத்துத் தந்துள்ளனர்.
இவற்றில் ‘A Practical Gudie to Integral Yoga’ என்ற நூல் அருமையான தொகுப்பு நூல். அதில் பல இரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கடவுளரின் அர்த்தங்களை அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.

 

ஒரு பிரம்மாண்டமான மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.
பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.
உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.
படைப்பவர் விஷ்ணு
தவத்திற்கு சிவன்
தெய்வீக சக்தியே தேவி
சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை
மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.
கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.
விக்கினங்களை நீக்க கணேசர்.
வெற்றியைத் தர முருகன்.
பக்திக்கு ஹனுமான்.
தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்
முழு அன்புமயத்திற்கு ராதை.
இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் கூறும் இரகசியத்தை ஆங்கிலத்தில் பார்ப்போம்:

 

IMG_3089
SYMBOLIC MEANING OF GODS
ADYA SHAKTI – Is the original Shakti, therefore, the highest form of the Mother
Brahma, Vishnu, Shiva – Are only three powers and personalities of the one Cosmic Godhead.
Brahma – Is the power of the Divine that stands behind formation and creation
Vishnu – Being the creator, all the three gods are often spoken of as creating the universe – even Shiva who is by tradition the Destroyer.
Shiva – is theLord of Tapas. The Power is the power of Tapas.
Devi – Is the Divine Shakti – the Consciousness and Power of the Divine, the Mother and Energy of the worlds.
Durga – The lion with Durga on it is the symbol of the Divine Consciousness acting through a divinized physical-vital and Vital-emotional force.
Kali and Mahakali – Are not the same. Kali is a lesser form. Mahakali in the higher planes appears usually with golden colour.
Gods – Are the powers that stand above the world and transmit the divine workings.
Ganesh – Is the power that removes obstacles by the force of Knowledge. He is a god of spiritual Knowledge.
Hanuman – Perfect Bhakti
Kartikeya – Represents victory over the hostile powers. He is also the leader of the divine forces.
Sri Krishna – Is the Lord of divine love and ananda – and his flute calls the physical being to awake out of the attachments of the physical world and turn to that love and ananda.
Radha – Is the personification of the absolute love for the Divine, total and integral in all parts of the being from the highest spiritual to the physical, bringing the absolute self-giving and total consecration of all the being and calling down into the body and the most material nature the supreme Ananda.

அரவிந்தர் நூல்களில் பொதிந்து கிடக்கும் ஏராளமான இரகசியங்களை அறிந்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைய முடியும்!
******

 

சந்தியா வந்தனம் – 2 பாகங்கள்- 24 பகுதிகள் (Post No.2984)

IMG_4222

Article Written S NAGARAJAN

Date: 19 July 2016

Post No. 2984

Time uploaded in London :– 5-34 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 ஒரு சிறிய அணுவில் பெரும் விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. பெரும் அழிவை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒரு அணுகுண்டில் உள்ளடங்கி இருக்கிறது. முறைப்படி அதை வெடிக்க வைத்தால் அதன் அழிவு சக்தி வெளிப்படுகிறது. இதை நாகசாகி, ஹிரோஷிமாவில் பார்த்தோம்.

அதே பிரம்மாண்டமான ஆக்க சக்தியை- தெய்வீக சக்தியை – இறை சக்தியை ஒரு சிறிய அனுஷ்டானத்தில் முன்னோர் அடக்கி வைத்துள்ளனர்.
அது தான் சந்தியாவந்தனம்.
காலை, நடுப்ப்கல், மாலை ஆகிய வேளைகளில் செய்யப்பட வேண்டிய அனுஷ்டானம் இது. முறைப்படி செய்தால் செய்பவருக்கு பெரும் சக்தி உண்டாவதோடு உலகமும் நன்மையை அடைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!
இதில் இரு பாகங்கள் உள்ளன. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம்.
பூர்வபாகத்தில் 11 பகுதிகளும் உத்தரபாகத்தில் 13 பகுதிகளும் உள்ளன. அனைத்துமே முக்கியம் தான் என்றாலும் முக்கியத்தில் முக்கியம் அர்க்கியப்ரதானம், பிராணாயாமம் மற்றும் காயத்ரீ ஜபம் ஆகிய மூன்றாகும்.
இனி பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகத்தில் உள்ளனவற்றைப் பார்ப்போம்.
பூர்வ பாகம்
1) ஆசமனம்
2) கணபதி தியானம்
3) பிராணாயாமம்
4) ஸங்கல்பம்
5) மார்ஜனம்
6) ப்ராசனம்
7) புனர்மார்ஜனம்
8) அர்க்கியப்ரதானம்
9) பிராயசித்தார்க்கியம்
10) ஐக்கியானுஸந்தானம்
11) தேவ தர்ப்பணம்
உத்தர பாகம்
12) ஜப ஸங்கல்பம்
13) ப்ரணவ ஜப: ப்ராணாயாமம்
14) காயத்ரீ ஆவாஹனம் மற்றும் காயத்ரீ ந்யாஸம்
15) காயத்ரீ ஜபம்
16) காயத்ரீ உபஸ்தானம்
17) ஸூர்ய உபஸ்தானம்
18) ஸமஷ்டி அபிவாதனம்
19) திக்தேவதா வந்தனம்
20) யம வந்தனம்
21) ஹரிஹர வந்தனம்
22) ஸூர்யநாராயண வந்தனம்
23) ஸமர்ப்பணம்
24) இரக்ஷை
இந்த பகுதிகளில் உள்ள மந்திரங்களின் அர்த்தம் மகத்தானது. சிறிய செயல்கள் மூலம அரிய சக்தியைப் பெற வழி வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதைச் செய்வதால் ஏற்படும் மகத்தான பலன்களை ரிஷிகளும், மகான்களும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஹிந்து தர்மத்தில் உள்ள அநேக சாஸ்திரங்கள் மற்றும் நூல்கள் இந்த ஸந்தியா வந்தனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றன.
அவற்றைப் படித்தாலேயே இதன் அருமையை உணர்ந்து நாம் கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.

 

Previous Articles:

“Brahmins deserve an entry in to Guinness Book of Records”  (Posted in Tamilbrahmins.com and swamiindology.blogspot.com until 3rd December 2011 in 9 parts over nine days); written by London swaminathan
***

கர்ம பலன்கள்: சித்திர குப்தன் கரன்சி (Post No.2969)

ram sharma book

Article Written S NAGARAJAN

Date: 14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-20 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

இந்தக் கட்டுரையப் படிப்பதற்கு முன்னர் இதற்கு முந்தைய கட்டுரையான ‘கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!’ என்பதைப் படிக்கவும்.

 
கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!
ச,நாகராஜன்

 
சித்திரகுப்தன் கணக்கு சற்று வேறு விதமாக வேலை செய்யும் ஒன்று.
அங்கு ஒரு செயல் எந்த நோக்கத்தில் (Motive) செய்யப்படுகிறது, அதில் உணர்ச்சிபூர்வமான அளவு எப்படி இருக்கிறது (Degree of emotional involvement) என்பதை வைத்தே நீதி வழங்கப்படுகிறது.
இக உலகத்தில் ஒரு ஏழை நல்ல காரியம் ஒன்றிற்கு ஒரு ரூபாயை தான் கடினமாக உழைத்த பணத்திலிருந்து மனமுவந்து கொடுக்கிறார்.
இன்னொரு பெரும் பணக்காரரோ லட்சம் ரூபாய் கொடுத்து அப்படிக் கொடுத்ததை நன்கு விளம்பரம் செய்யச் சொல்கிறார், தானும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
உலக நியதிப்படி அவர் பெரும் புகழை அடைகிறார். புண்ணியவான், தர்மஸ்தர் என்ற பெயர் அவருக்கு தரப்படுகிறது – பணத்தின் அளவை வைத்து! பணத்தின் மகிமையே மகிமை!
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் ஏழையின் மனோபாவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அங்கு அவன் தந்த ஒரு ரூபாய் பொருட்படுத்தப்படுவதில்லை. பணக்காரனின் விளம்பர மனப்பான்மையே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவனது லட்ச ரூபாய் பணம் அல்ல!
நாகரிகம் அதிகம் இல்லாத மலைப் பிரதேசங்களில் மக்கள் ஒரு தானியத்தைக் கொடுத்து இன்னொரு தேவையான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். சற்று நாகரிகம் உள்ள நகரங்களில் பணத்தைக் கொடுத்துப் பெயரும் புகழும் பெறுகின்றனர். தேவையானதை வாங்குகின்றனர். விளம்பரத்துக்கு உதவும் நல்ல பட்டங்கள், மற்றும் விருதுகளைக் கூட அவர்கள் “வாங்குகின்றனர்”.
ஆனால் இந்த கரன்ஸியெல்லாம் சித்திரகுப்தன் கணக்கில் இல்லை. அங்கு இந்த கரன்ஸி செல்லுபடியாகாது.
ஒருவனின் அடிப்படை நோக்கம். அதில் அவனது ஈடுபாடு (தன்னலமற்றதா அல்லது உள்நோக்கம் ஒன்றுடன் செயல்படுத்தப் படுகிறதா) என்பதே அங்குள்ள கரன்ஸியாகும்.
கீதையைப் பற்றிய அடிப்படையான சந்தேகம் ஒன்று அனைவருக்கும் எழும்.
அர்ஜுனன் ஆயிரக்கணக்கான பேர்களை பாரத யுத்தத்தில் கொல்கிறான். அதற்கு அவனை கண்ணபிரான் ஊக்குவிக்கிறான்.
அதே போல துரியோதனனும் பல்லாயிரக்கணக்கான பேர்களை அழிக்கிறான். அவனுடன் பெரிய வீரர்கள் போர் புரிகின்றனர். அவனுக்கு உதவுகின்றனர்.
அர்ஜுனன் சொர்க்கத்திற்குச் செல்ல அவனை எதிர்த்தோர் நரகத்திற்குச் செல்கின்றனர்.
ஏன் இப்படி? செயல் ஒன்று தான் (கொலை செய்வது) என்றாலும் அடிப்படை நோக்கம் என்ன?
அர்ஜுனன தர்மத்தைக் காக்கப் போரிடுகிறான். துரியன் அதர்மத்துடன் செயல் படுகிறான்.
ஆகவே அழிந்து படுகிறான்.
சுலபமான கணக்கு. தர்மத்தைக் காக்க கண்ணன் அவதாரம் எடுக்கிறான். அதர்மத்தை அழிக்கிறான்.
ஆக சித்திரகுப்தனின் கணக்கும் அதில் அவன் எந்த கரன்ஸிக்கு மதிப்புக் கொடுக்கிறான் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
சித்திர குப்தனின் கணக்கு தெய்வீகக் கணக்கு!

sriram sharma stamp sanskrit
அதை ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யர் அற்புதமாக மேற்கண்ட விதமாக விளக்குகிறார்.
சூட்சுமமான தர்மத்தை நமது அற நூல்கள் நுட்பமாக விளக்குகின்றன.
அதைப் பயிலுவதும் போற்றுவதும், அதன் படி நடப்பதும் நமது கடமை!
***********

கர்ம பலன்கள்: சித்திரகுப்தன் கணக்கு (Post No.2963)

laew of karma 2

 

Article Written S NAGARAJAN

Date: 12 July 2016

Post No. 2963

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!

ச,நாகராஜன்
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யா பெரும் காயத்ரி உபாசகர். அவர் ஏராளமான அற்புத நூல்களை எழுதியுள்ளார். அனைத்தும் பொக்கிஷம். அவற்றைப் படித்தவர்கள் பாக்கியவான்கள்.
இயற்கை மர்மத்தை ஹிந்து மதம் விளக்குவதை அவர் நூல்கள் தெளிவுற இன்றைய உலகிற்கு ஏற்றாற் போல விளக்கும்.
கர்ம பலன்களை எப்படி சித்திரகுப்தன் செயல்படுத்துகிறான் என்பதை அவர் விளக்கும் விதமே அலாதி!
ஒரு சிறிய விளக்கத்தைப் பார்ப்போம்.
மனித மனம் அக மனம் புற மனம் என இரு வகையாகச் செயல் படுகின்றன. புற மனம் புற உலகிற்கு ஏற்றாற் போல பகுத்தறிந்து செயல் படுகிறது. உள் மனமோ சின்னக் குழந்தை போல. கள்ளம் கபடம் அறியாதது. அது இறைத்தன்மையோடு இருப்பது. என்ன தான் சமாதானம் கூறிப் பல்வேறு செய்கைகளை ஒருவர் செய்தாலும் அது கண்டு கொள்ளாது. அதன் விதிகள் தனி. இறை விதிகள் அவை.
அந்த அக மனத்தின் கணக்கு அவ்வப்பொழுது எழுதி விடப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கணக்கு!
நல்லவை, அல்லாதவை அனைத்தும் அங்கே துல்லியமாக எழுதப் படுகின்றன.
இந்த மறைமுகக் கணக்கிற்கு – இரகசிய கணக்கிற்கு – குப்த கணக்கிற்கு – சித்திரகுப்தன் என்ற தெய்வம் அதிபதி.
சித்திரகுப்தனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் கிடையாது.
பாரபட்சமற்ற கணக்கன்!
உதாரணத்திற்கு இக உலக செயல்பாட்டிற்கு வருவோம்.
ஒருவன் குற்றம் இழைக்கிறான். அதை போலீஸ் – காவல் துறை கண்காணித்துக் கண்டு பிடித்து அவன் செய்த குற்றம், அதற்கான சாட்சியங்கள் ஆகியவற்றைத் தொகுத்து நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்கிறது. அங்கே நீதிபதி அனைத்தையும் பரிசீலித்து வாத பிரதிவாதங்களைக் கேட்டு முடிவை எடுக்கிறார்.
உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
மூன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர் தீவிரமாக விசாரிக்கிறார். மூன்று பேர்களும் ஒருவரைக் கொலை செய்தவர்கள் தான்!
முதல்வரை அவர் விடுதலை செய்து விடுகிறார்.அடுத்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறார். மூன்றாமவருக்கோ தூக்கு தண்டனை விதிக்கிறார்.
இவர்களது செயல்களால் தனித் தனியே ஒருவர் உயிர் இழந்திருக்கிறார்.
ஆனால் தண்டனை இப்படி பாரபட்சமாக இருக்கலாமா?
அவர் ஏன் அப்படித் தண்டனை கொடுத்தார்.
ஆராயலாம்.
முதலாமவர் ஒரு கட்டிட கொத்தனார். ஒரு பெரிய அடுக்கு மாடி வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த போது அகஸ்மாத்தாக ஒரு செங்கல்லை அவர் தவற விடுகிறார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒருவரின் தலை மீது விழ ஆள் காலி.
நடந்த விபத்தே அப்புறம் தான் கொத்தனாருக்குத் தெரியும். அவரும் சேர்ந்து இறந்தவருக்காகத் துக்கப்படுகிறார்.
தெரியாமல் செய்த குற்றம். அவரை நீதிபதி விடுதலை செய்கிறார்.
அடுத்தவர் ஒரு விவசாயி. கஷ்டப்பட்டு விதை விதைத்து, நீர் பாய்ச்சி, காவல் காத்து நெற்பயிரை வளர்த்து அறுவடை செய்யும் நாள் வரப் போகிறது. முதல் நாள் இரவு காவலுக்கென தன் நிலத்தில் படுத்திருக்கிறார். திடீரென சப்தம் கேட்டு எழுந்த அவர் பார்த்த காட்சி. திருவன் ஒருவன் பாடுபட்டு அவர் வளர்த்த பயிரை அறுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறார். அடங்காத கோபம் வருகிறது. அவனை விரட்டிச் சென்று அரிவாளால் ஒரு போடு போடுகிறார். திருடன் காலி.
நீதிபதி இனி இப்படி அதிகமாகக் கோபம் கொள்ளக் கூடாது என்று அவரை எச்சரித்து ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கிறார்.
திருடன் செய்தது குற்றம் தான் என்றாலும் அது அவன் உயிரைப் பறிக்கக் கூடிய அளவு கொடிதானதல்ல. ஆகவே விவசாயிக்கு சிறை தண்டனை.
மூன்றாமவர் ஒரு பக்காத் திருடன். வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கொலை செய்து அவர் வைத்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றிருக்கிறான் அவன்.
திட்டமிட்டு ஒன்றும் அறியாத ஒரு அப்பாவியைக் கொலை செய்த அவனுக்கு தூக்குத் தண்டனையை விதிக்கிறார் நீதிபதி.
செய்தது கொலை’ ஒருவர் உயிர் நீக்கப்பட்டது. என்றாலும் அதற்கான நோக்கம், குற்றம் நடந்த விதம் அனைத்தையும் ஆராய்ந்து தண்டனையைத் தருகிறார் நீதிபதி.
இனி சித்திரகுப்தன் செயலுக்கு வருவோம்.

 

law-of-karma
சித்திரகுப்தனுக்கு போலீஸ், நீதிபதி ஆகிய துறைகள் கிடையாது. எல்லாவற்றையும் அவர் ஒருவரே பார்த்துக் கொள்வார். என்ன நோக்கம் ஏன் செய்யப்பட்டது என்பதை அவரது ரிகார்டுகள் துல்லியமாகக் காட்டும். இக உலகில் ஒரு வேளை நீதிபதி தவறான தண்டனையைக் கொடுத்து விடலாம்.
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் மதிப்பீடு செய்பவர் அந்தச் செயலைச் செய்தவரின் அக மனமே. அது அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அது தன் கணக்கையும் முடிவையும் எழுதி வைத்துக் கொள்கிறது.
செயலைச் செய்தவனே ‘ப்ளாக் பாக்ஸ்’ போல நடந்ததைக் காட்டும் அதிசயமே சித்திரகுப்தன் கணக்கு.
எப்படி, சுவாரசியமாக இருக்கிறது இல்லையா, விளக்கம்!
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யரின் ‘ தி அப்ஸொல்யூட் லா ஆஃப் கர்மா’ (The Absolute Law of Karma) என்ற நூலில் மேற் கண்ட விளக்கம் அற்புதமாகத் தரப்படுகிறது.
இந்த நூலை நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

*********

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940)

valluvar door

Written by London swaminathan

Date: 3 July 2016

Post No. 2940

Time uploaded in London :– 12-48

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

punul valluvar

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

 

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்

 

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

 

மாணிக்கவாசகரோ நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

manikkavasagar,US

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

 

XXX

 

 

மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)

 

வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:

தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்

மனு 12-31

வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்

XXX

 

ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:

விஷயோபசேவா ச அஜஸ்ரம்  ராஜசம் குணலக்ஷணம்.

தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.

XXX

 

இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.

 

தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.

தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே

சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்

மனு 12-38

 

 

-SUBAM-

 

எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938)

hindu wedding

Written by London swaminathan

 

Date: 3 July 2016

Post No. 2938

Time uploaded in London :– 6-38 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

egyptian

Egyptian Inscription

 

9 கர்ம சாக்ஷிகள்

சூர்ய: சோமோ யம: காலோமஹாபூதானி பஞ்ச ச

ஏதே சுப அசுபஸ்ய இஹ கர்மனோ நவ சாக்ஷிண:

 

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரஹசியம்” அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

 

யார் அந்த ஒன்பது பேர்?

 

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

 

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

 

யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.

 

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.

 

சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

nabonidus-praying-to-the-sun-moon-and-venus

Nabonidus praying to Sun, Moon and Venus

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.

 

நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

 

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.

 

கல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ இரண்டின் படங்களையோ காணலாம்.

 

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

 

persian 500 bce

Sun and Moon in Persian Inscription 500 BCE

விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

 

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

 

ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.

 

–சுபம்–

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள் (Post No.2929)

brahmin vaishnava

Compiled by london swaminathan

Date: 30 June 2016

Post No. 2929

Time uploaded in London :–  5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜூலை மாத (துன்முகி ஆனி-ஆடி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– 6-ரம்ஜான், 10-ஆனித் திருமஞ்சனம், 19-வியாச பூஜை/குரு பூஜா ( சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)

 

அமாவாசை – 4

பௌர்ணமி – 19

ஏகாதசி – 15

முகூர்த்த நாட்கள் – 6, 10, 11

brahmins, mylai

ஜூலை 1 வெள்ளிக்கிழமை

மனிதகுலத்தின் உதாரண புருஷன் பிராமணன். ஆகையால் எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்துவதே திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், இதற்கு முன்னரே இப்படிப் பலர் செய்திருப்பது புரியும்- சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 2 சனிக்கிழமை

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- புத்தர் கூறியது, தம்மபதம், 389

 

ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை

நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.புத்தர் கூறியது, தம்மபதம், 393

 

 

ஜூலை 4 திங்கட்கிழமை

யார் சமய சம்பந்தமில்லாத வேலைகளை எடுக்கவில்லையோ அவன் மட்டுமே பிராமணன். சமய சம்பந்தமற்ற வேலைகள் மற்ற ஜாதிகளுக்கானது. பிராமணத்துவம் என்பது என்ன என்பதை அவர்கள் உணர்வது அவசியம். நற்குணங்களின் உறைவிடமாகப் பிராமணன் திகழ்வதாலேயே அவனுக்கு இவ்வளவு சலுகைகளும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மனு கூறுகிறார் — சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 5 செவ்வாய்க்கிழமை

காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் -புத்தர் கூறியது, தம்மபதம், 387

 

 

ஜூலை 6 புதன்கிழமை

பிராமண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு உபநயன கருமம் இருப்பதால், அவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுவர். அது இல்லாதவன் சூத்திரன். ஐந்தாவது ஜாதி/பஞ்சமன் என்று எதுவும் இல்லை- மனு 10-4

 

ஜூலை 7 வியாழக்கிழமை

பிராமணனுக்கு ஞானத்தினாலும், க்ஷத்ரியர்களுக்கு வீரத்தினாலும், வைசியர்களுக்கு செல்வத்தினாலும், சூத்திரர்களுக்கு வயதினாலும் மதிப்பு தர வேண்டும் (Sanskrit Sloka)

brahmins vaishnavite

ஜூலை 8 வெள்ளிக்கிழமை

பிராமணனுக்கு பிழைப்புக்கே வழியில்லை என்றால் கெட்டவர்களிடம் தானம் வாங்கக்கூடாது; கீழே சிந்திய தனியக்கதிர்களையோ, தானிய மணிகளையோ சேகரித்து உண்ணலாம் –மனு 10-112

 

 

ஜூலை 9 சனிக்கிழமை

புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை

முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளரோடு பெருமலை அரசன் – சிலப்பதிகாரம், காட்சிக்காதை (இமயமலையில் அந்தணர்கள் குடுமியுடன், ஈரத்துணியுடன், மூன்று வகையான யாகத் தீயை வளர்த்துக்கொண்டு, முப்புரி நூலுடன் இருப்பர்)

 

ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினந் சிலப்பதிகாரம், கால்கோட்காதை (பிராமணர்களின் யாகப் புகை சேரன் செங்குட்டுவனின் மாலையின் நறுமணத்தையும் மிஞ்சிவிட்டது)

 

 

ஜூலை 11 திங்கட்கிழமை

முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி – சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)

 

 

ஜூலை 12 செவ்வாய்க்கிழமை

ஆவும், ஆன் இயற்  பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாதீரும்

என்அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் (புறம். 9)

 

 

ஜூலை 13 புதன்கிழமை

பார்ப்பனர் வீட்டுக்குப் போனால், அருந்ததி போன்ற கற்பு வாய்ந்த பெண்மணி உனக்கு மாதுளங்காயைப் பசு வெண்ணையில் பொறித்து, ராஜ அன்னம் என்ற உயர்ந்த அரிசியில் சமைத்த சோற்றை படைப்பாள். பார்ப்பனப் பெண்கள், விருந்தாளிகளுக்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறுவர். – பெரும்பாணாற்றுப்படை (சங்க இலக்கியம்)

 

 

ஜூலை 14  வியாழக்கிழமை

 

பார்ப்பனர் மனைகளில் நாயும் கோழியும் நுழைய முடியாது. கிளிகள் மட்டும், அந்தணர் ஓதும் வேதங்களைத் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கும் – சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுபடை

 

vedagama exam

ஜூலை 15 வெள்ளிக்கிழமை

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான் -திருக்குறள் 30 (எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதவர் அந்தணர்)

 

ஜூலை 16 சனிக்கிழமை

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் -திருக்குறள் 134 (பார்ப்பான், வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஒழுக்கம்போனால், அவனுக்கு விமோசனம் இல்லை)

 

 

ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்-திருக்குறள் 543 (அந்தணர்கள் முறையாக வேதம் ஓதுவதற்கும், முறையான அரசாட்சியே அடிப்படை ஆகும்.)

 

 

ஜூலை 18 திங்கட்கிழமை

பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள் – துஷ்யந்தி போஜனே விப்ராஹா – சாணக்கிய நீதி 6-18

 

 

ஜூலை 19 செவ்வாய்க்கிழமை

க்ஷத்ரியர்களின் பலம்  எல்லாம் பலமே அல்ல; பிராமணர்களின்ம் தேஜஸ்தான் பெரும் பலம்; திக் பலம்  க்ஷத்ரிய பலம், பிரம்மதேஜோ பலம் பலம் – வால்மீகி ராமாயணம் 5-6-23

 

ஜூலை 20 புதன்கிழமை

அந்தணர் கருமங்குன்றில்  யாவரே வாழ்வர் மண்ணில்

–விவேகசிந்தாமணி

 

ஜூலை 21  வியாழக்கிழமை

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் –சைவத் திருமுறை

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

vedic brahmins

ஜூலை 22 வெள்ளிக்கிழமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுக – திரிகடுகம்

 

ஜூலை 23 சனிக்கிழமை

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! –விவேகசிந்தாமணி

 

 

ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை

பிரம்மத்தையே உணர்ந்த பிராமணன் மிகவும் பலம் பொருந்தியவன் – சாணக்கிய நீதி 8-10

 

 

ஜூலை 25 திங்கட்கிழமை

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பாரதியார்

 

ஜூலை 26 செவ்வாய்க்கிழமை

ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்

-தம்ம பதத்தில் புத்தர் – பாடல் 294

 

 

ஜூலை 27 புதன்கிழமை

 

பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் — சிறுபாணாற்றுப் படை

 

 

ஜூலை 28  வியாழக்கிழமை

செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை

அறுதொழிலாளர் அறம்புரித்தெடுத்த

தீயோடு விளங்கும் நாடன் (புறநானூறு  397)

school tree

 

ஜூலை 29 வெள்ளிக்கிழமை

 

ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383

 

 

ஜூலை 30 சனிக்கிழமை

எதைக் கொடுத்தாலும்ச் திருப்தியடையாத பிராமணன் அழிந்துபோகிறான்.  அசந்துஷ்டா த்விஜா நஷ்டா: – சாணக்ய நீதி 3-42

 

 

ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை

யாத்திரை செல்லும் பிராமணன் வணக்கத்துக்குரியவன் – சாணக்கிய நீதி 6-43

 

–SUBHAM-

 

 

 

 

 

 

 

 

லெட்சுமி தங்காத இடங்கள் (கட்டுரை எண். 2916)

THANGA LAKSHMI

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2916

 

Time uploaded in London :– காலை 8-34

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சிலாஸ்சகந்தலேபஸ்ச மார்ஜாரோச்சிஷ்ட போஜனம்

ப்ரதிபிம்பேக்ஷணம் நீரே சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்

சிலாஸ்சகந்தலேப: – கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்பவன்

மார்ஜார: உச்சிஷ்ட போஜனம் – பூனை சாப்பிட்ட மிச்சத்தை உண்பவன்

ப்ரதி பிம்பேக்ஷணம் நீரே – தண்ணீரில் தனது நிழலைப் பார்ப்பவன்

சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்- விஷ்ணுவாக இருந்தாலும் (அவனது) செல்வத்தை லெட்சுமி நீக்குகிறாள்.

Xxx

 

lakshmi in kshetras

குசேலினம் தந்த மலாபஹாரிணம் பஹ்வாசினம் நிஷ்டூரவாக்ய பாஷிணம்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம்

 

குசேலினம் – அழுக்காடை அணிபவன்

தந்த மலாபஹாரிணம் – பல்லை நோண்டி அழுக்கெடுப்பவன்

பஹ்வாசினம் – பெருந்தீனிக்காரன்

நிஷ்டூரவாக்ய பாஷிணம் – கடும்/ சுடு சொற்களைப் பேசுபவன்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம்- சூரியன் உதிக்கையிலும், அஸ்தமிக்கையிலும் படுக்கையில் இருப்பவன்

விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம் – விஷ்ணுவேயானாலும், லெட்சுமி விட்டுவிட்டுப் போய்விடுவாள்.

–சுபம்–