கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7546
Date uploaded in London – – 7 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச் சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல் — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ முழு விவரம்-
இந்த வரலாற்று நிகழ்வினைச் சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !
கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள் அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம், குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன் இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.
மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-
“எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —
“கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள் அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டி, யது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும் கரும் பாம்பு போன்றவன் என்றான். கால யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச் சொல்லி அதை டப்பா முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .
எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800 மைல் பயணம் செய்து கடலோரப் பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக மதுரா புரிக்கு நடந்தே சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .
ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.
மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி. அவன் தேவாசுரப் போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள் என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும் குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில், தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து, உறங்கும் ஆசாமியை கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு ‘புத்திமான் பலவான் ஆவான்‘ என்ற பழமொழி பொருந்தும்.
இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச் செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.
xxx
என் கருத்து
பைபிளில் (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus) என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றான்என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும் வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .
1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.
3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.
5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev) என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை
6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.
7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.
பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம் நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.
xxx
Krishna appears in Yaga Fire
இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்
கால யவனன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com
எழுதலாம்.
இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச் சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.
இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains) இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .
Tags – துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கடந்த 67 ஆண்டுகளில் 300 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பாதைகளில் இறந்து போயினர். இதில் 100 பேருடைய சடலங்கள் இன்று வரை கிடைத்தில என்றும் இது நேபாள அரசுக்கு கவலை தருகிறது என்றும் 2019 ம் ஆண்டு மே மாதம் வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக் கட்டுரை கூறுகிறது. இப் போது இமயப்பனி , புவி வெப்பம் காரணமாக வேகமாக உருகத் துவங்கியதால் பல சடலங்கள் வெளிப்படலாம். ஒரு ஷெர்பா, தான் போகும் வழியில் மூன்று சடலங்களைக் கண்டதாகப் பேட்டி கொடுத்துள்ளார். நான் 1992ல் தினமணி கதிரில் எழுதிய கட்டுரையில் ஒரு சடலமும் அருகில் ஒரு டயரி (Diary) யும் கண்டு எடுக்கப்பட்டது பற்றி எழுதினேன். அக்கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Treasure Hunters Mr Mead and Mr Miles
நேற்றைய தினம் (3-2-2020) பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு சுவையான செய்தியை வெளியிட்டுள்ளன. அது பிரிட்டனின் மிகப்பெரிய புதையல் பற்றிய செய்தி .அதன் மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்கள். இந்தியக்கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய். இவை இரும்புக் கால நாணயங்கள் (Iron Age Coins)
பிரிட்டனில் புதையல் கண்டுபிடிக்கும் கருவி விலைக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கான சிறு பொம்மைக் கருவி முதல் மிகவும் சக்தி வாய்ந்த கருவி வரை யாரும் வாங்கலாம். இதை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) என்பர். அதாவது பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடித்து ஒலி எழுப்பும்.
பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வாரம் தோறும் புதையல் செய்திகள் வருகின்றன. இதற்காக மாதப் பத்திரிக்கைகளும் உள . இந்தியாவிலும் நிலத்துக்கடியில் நிறைய புதையல் உளது. அதைக் கண்டு பிடிப்போர் அதன் மதிப்பு தெரியாமல் உருக்கி உலோகத்தை மட்டும், குறிப்பாக தங்கம் வெள்ளியை மட்டும் , எடுத்துக்கொள்வர். உண்மையில் அதிலுள்ள உலோகத்துக்குக் கிடைக்கும் விலையைப் போல பத்து முதல் 100 மடங்கு விலை கிடைக்கும் என்பதை பாமரர்கள் அறியார். விஷயம் தெரிந்தோர் அதை வெளிநாட்டுக்க்குக் கடத்தி விடுகின்றனர். தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காதலன் காதலி ரோமானிய மோதிர உருவம் பத்திரிகைகளில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்து விட்டது. கரூரில் அமராவதி ஆற்றில் கிடைக்கும் புதையல்கள கள்ளத் தனமாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கங்கை நதியில் நவநந்தர்கள் ( Nava Nandas of Nanda Dynasty, 5th century BCE) தங்கக் கட்டிகளை ஒளித்து வைத்த செய்தியை சங்க புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் . நிற்க. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களில் (Treasure) இதுதான் மிகப்பெரியது என்று கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற இப் புதையலில் 69,347 தங்கம், வெள்ளி, இரும்பு நாணயங்கள் அடங்கும். இதன் எடை 1700 பவுண்டு.விலை மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன். இதில் பழைய காசு கி.மு. 50 காலத்தைச் சேர்ந்தது .
ரெக் மீட் மற்றும் ரிசர்ட் மைல்ஸ் (Reg Mead and Richard Miles) ஆகிய இருவர் இதை 2012ல் ஒரு வேலிக்கு அடியில் களிமண் மேட்டில் கண்டுபிடித்தனர் . ஆனால் இப்போதுதான் கின்னஸ் சாதனை நூல் இதை பெரும் புதையல் (Biggest Treasure) என்று அறிவித்துள்ளது. புதையலை யாராவது கண்டுபிடித்தால் அது மகாராணிக்குச் சொந்தம் என்பது பிரிட்டனில் உள்ள சட்டம். ஆயினும் கண்டுபிடித்தோருக்கு ஒரு பங்கு உண்டு.
‘கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல புதையல் தேடுவோருக்கு கையில் அரிக்கும். யாரோ ஒரு பெண்மணி இந்தப் பொட்டலில் ஒரு வெள்ளி பித்தா னை பார்த்தேன் என்றார். உடனே இவ்விருவரும் மம்மட்டி, கோடாரி , கத்தி, கபடா , மெ ட்டல் டிடெக்டர் சஹிதம் போய் வெற்றி கண்டனர்.
curator in the museum sorting out the coins
இவை கிடைத்த இடம் சானல் ஐலண்ட்ஸ் (Channel Islands) எனப்படும் ஜெர்சி, கேர்ன்சி ஆகும்.
ஜெர்சியில் உள்ள லா ஹோ க் பை மியூசியத்தில் (La Hogue Bie Museum, Grouville, Jersey) இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதையல் 1978ல் வில்ட்ஷைர் (Wiltshire) அருகில் கிடைத்த 54,951 நாணயங்கள் புதையல் ஆகும். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் கிடைத்த மிகப்பெரிய புதையல் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,50,000 பென்னி காசுகள் புதையல் ஆகும். அவை 1908ம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரில் கண்டெடுக்கப்பட்டன.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
மாமன்னன் போஜ மஹாராஜன் அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக இருந்தான். சிறந்த சிவபக்தன் என்பதாலும் அனைத்து நூல்களையும் ஆராய்ந்தவன் என்பதாலும் வாழ்வின் நிலையாமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான்.
அவனது அவையில் ஒரு நாள் நடந்த சமபவம் இது:
சிம்மாசனத்தில் போஜன் அமர்ந்திருக்க அருகில் இருந்த அடைப்பக்காரன் போஜனுக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்தான். அதற்குள் வைக்க வேண்டிய பாக்கு மற்றும் வாசனைப் பொருள்களை அவன் எடுத்துக் கொடுப்பதற்குள் போஜன் வெற்றிலையை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்ன ஆரம்பித்தான்.
இந்தச் செய்கையைக் கண்ட அரசவை அறிஞர்கள் சற்று வியப்படைந்தனர். அவர்களில் ஒருவர் இதற்கான காரணத்தைக் கேட்க போஜன் கூறினான்: “ மனிதன் மரணத்தின் பற்களில் எப்போதும் சிக்கி இருப்பவன். அவன் எப்போது பிறருக்குக் கொடுக்கிறானோ, அவன் எப்போது ஒரு பொருளை அனுபவிக்கிறானோ அப்போது மட்டும் தான் – அந்தக் கணம் தான் அவனுக்குச் சொந்தம். அடுத்து வருவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமானது தான்.”
இதைக் கூறி விட்டுப் போஜன் தொடர்ந்தான்:
“ஆகவே ஒவ்வொரு நாளும் மனிதன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது தனக்குத் தானே. ‘இன்று நான் எந்த நல்ல காரியத்தைச் செய்ய முடியும்’ என்று கேட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் மாலையில் மேற்கே அஸ்தமிக்கும் போது ஒருவனது வாழ்க்கையின் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு செல்கிறான். பலரும் என்னைக் கேட்கிறார்கள் :” இன்று என்ன செய்தி? நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா” என்று.
உடலின் ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா? ஆகவே நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். மதியம் செய்ய வேண்டியதை அதற்கு முன்பே செய். மரணம் நீ பகலில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தாயா, முடிக்கவில்லையா என்று பார்க்காது. மரணம் என்ன, மரணம் அடைந்து விட்டதா? ஒருவனது ஆபத்துக்கள் எல்லாம் அழிந்து விட்டனவா? உடலை நோக்கிப் பாய்ந்து வரும் வியாதிகள் தடுக்கப்பட்டனவா? அனைவரும் உல்லாசத்தில் திளைக்கின்றனரா?”
போஜன் இப்படிக் கூறி முடித்தவுடன் அவனது மனதை நன்கு அறிந்த ஒரு கவிஞர் அவனை நோக்கி, “ விரைந்து செல்லும் போர்க்குதிரையின் மீது அமர்ந்த மரண தேவன் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆகவே மன்னர் மன்னா, நீ எப்போதுமே தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.
மன்னன் மகிழ்ந்தான். அனைவரும் போஜனின் மனப்போக்கையும் அவனது அறம் சார்ந்த வாழ்க்கையையும் போற்றிப் புகழ்ந்தனர்.
போஜராஜன் பெரிய கொடை வள்ளல். இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியதைத் தருபவன்.
தனது வாயிலில் காத்திருப்போர்க்குத் தங்கக் காசுகளைத் தருவது அவன் வழக்கம். அவனது காவலாளிகள் ஒவ்வொருவரையும் வரிசையாக அனுமதிக்க ஒவ்வொருவராக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
அவனது கையில் அணியும் கங்கணத்தில் அவன் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைத்திருந்தான்.
அதன் பொருள் : “ மனிதனின் செல்வம் இயற்கையாகவே நிலையில்லாதது. துரதிர்ஷ்டம் உன்னை சீக்கிரமே அடைவது நிச்சயம். நல்லதைச் செய்ய உள்ள வாய்ப்பைக் காண்பதற்கு நேரம் கடந்து விட்டது. ஓ! பௌர்ணமி நிலவே! உன்னிடம் இருக்கும் செல்வத்தால் உலகெங்கும் வெண்மையான பிரகாசமான கிரணங்களை அள்ளி வீசு!
உனது செல்வ வளத்தால் பாதிக்கப்படாதவன் விதி! அது நீடித்து நிலைத்து இருக்காது!
ஓ! ஏரியே! உனது பாய்ந்து செல்லும் அழகிய நீரைப் பாய்ச்ச இதுவே தகுந்த தருணம்! மேலும் இப்போது நீர சுலபமாகக் கிடைக்கிறது. சுவர்க்கத்தில் மேகங்கள் நெடுநேரம் மிதக்காது.கொஞ்ச நேரம் தான் நீர் வெள்ளமெனச் செல்லும் -அதன் வேகம் நீரை உயரத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் கூட! அந்த வெள்ளத்தின் குறும்பு நீண்ட காலம் இருக்காது. நதியின் இரு புறமும் உள்ள உயரமான மரங்களை அது தாழ வளைத்து வைத்திருக்கிறது.”
இந்த ஸ்லோகத்தின் மூலமாக நிலையாக இருக்காத செல்வத்தை அது இருக்கும் போதே பிறருக்குக் கொடுத்து விடு என்று அவன் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான்.
போஜன் ஒரு தாயத்தை வேறு தன் கழுத்தில் அணிந்திருந்தான்.
அதில் உள்ள பதக்கத்தில் அவனே இயற்றிய ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டிருந்தது.
அதன் பொருள் : “பிரகாசமான சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் இரப்போர்க்கு நான் என் செல்வத்தைக் கொடுக்காவிடில், இந்தச் செல்வம் நாளைக்கு யாருக்குச் சொந்தமாகும் என்பதை யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?”
இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் போஜனின் கஜானா என்ன ஆவது?
அது குறைந்து கொண்டே போனது.
இதைப் பார்த்தார் அவனது அமைச்சர் ரொஹக். அதிர்ந்து போனார் அவர். ஆனால் அதை போஜனிடம் நேரடியாகச் சொல்ல அவருக்குத் துணிச்சலும் இல்லை.
ஆகவே போஜன் தானம் வழங்கும் கூடத்தில் ஒரு நாள் இரவு சென்று அங்கிருந்த ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தார் இப்படி:
“தேவையான காலத்திற்கு உதவும் வகையில் ஒருவன் செல்வத்தைக் காத்து வைக்க வேண்டும்.”
இதை மறுநாள் காலை பார்த்தான் போஜன். சிரித்தான்.
அதன் அடியில் எழுதினான் இப்படி:
“நல்லவனுக்குத் தீங்கு எப்படி வரும்?”
அன்று இரவு அமைச்சர் போஜன் எழுதியதற்குக் கீழாக இப்படி எழுதினார்:
“சில சமயம் உண்மையிலேயே விதி கோபத்துடன் எழும்”
மறுநாள் காலை இதைப் பார்த்த போஜன் தனது அமைச்சருக்கு முன்னாலேயே இப்படி எழுதினான்:
“அப்படியெனில் குவித்து வைத்திருக்கும் பொற்குவியல்கள் உண்மையிலே மறைந்து போகும்.”
இப்படி எழுதி விட்டுத் தன் அமைச்சரை நோக்கிய போஜன், “ மதியில் சிறந்த பிரதம மந்திரியினால் கூட எனது யானை போன்ற உறுதி மொழியை அவரது அங்குசத்தினால் மாற்ற முடியாது.”
நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய ஆடையை அணிந்த போதும் கூட போஜனின் மனம் எளியவர் பால் எப்போதும் இருந்தது.
இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இன்னும் போஜனின் வாழ்க்கையில் உண்டு.
King Bhoja’s Coin with Varaha Avatara of Vishnu.
இப்படிப்பட்ட ஒரு மன்னனை உலகின் எந்த நாடேனும் கண்டதுண்டா?
ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள் (Post No.7525)
WRITTEN BY London Swaminathan
Post No.7525
Date uploaded in London – – 2 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிராகிருதம் வந்ததா அல்லது பிராக்ருதத்தில் இருந்து சம்ஸ்க்ருதம் வந்ததா என்று வாத ப் பிரதிவாதங்கள் வருவதுண்டு. அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தனவா என்று கேட் போரும் உளர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கவிஞர்கள், சம்ஸ்க்ருதம் மூல மொழி என்று கவி பாடிவிட்டுச் சென்றனர் (மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்)
ப்ரக்ருதி என்பது இயற்கையில் உளது . அதிலிருந்த வந்தது பிராகிருதம் என்பர் சிலர். இல்லை, இல்லை புரா + க்ருதம் =முன்னரே இருந்தது ப்ராக்ருதம் . பின்னர் செம்மை செய்யப்பட்டது சம்ஸ்க்ருதம் என்பர் வேறு சிலர். பழைய கவிஞர்கள் சம்ஸ்க்ருதம்தான் முதலில் இருந்தது என்று சொல்லிவிட்டனர்.
இன்னும் சில அரை வேக்காடுகள் சம்ஸ்க்ருதம் என்ற பெயரையே பழைய இலக்கண வித்தகர்கள் செப்பவில்லையே என்று அங்கலாய்ப்பர். அத்தகைய அறிவிலிகளிடம் கேளுங்கள் செந்தமிழ் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உள்ளதா? என்று.
இன்னும் சிலர் கேட்பர். அது சரி. பிராகிருதம் என்று சொல்கிறீர்களே. எந்தப் பிராக்ருதத்தை ? என்று கேட்பர் . இன்று அதை ஆராய்வோம்.
எது ஒரிஜினல் பிராகிருதம்? எது உண்மையில் பிராகிருதம் அல்லது அபப்ராம்ஹஸம் என்பதிலும் பிராகிருத அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. சுருக்கமாய் சொல்கிறேன்.
முக்கிய ப்ராக்ருதங்கள் ஆறு. அவை திரிந்தால் வருவது அபப்பிராம்சம்; ஆக மொத்தம் ஏழு.
தமிழர்கள் சொல்வார்கள் நாநிலம் ; அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று. ஐயா! பின்னர் பாலை நிலம் பற்றியும் பாடிவிட்டு 4 என்று சொல்கிறீர்களே என்றால், நாலு நிலமும் இயல்பு கெட்டுத் திரிந்து போனால் கிடைப்பது– மிஞ்சுவது — பாலை என்று பகர்வர். அதுபோலத்தான் அபப்ராஹ்ம்ஸம் .
மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில் தோன்றிய மொழி – மராட்டி.
அர்த்த மாகதியில் இருந்து பிறந்தவை – குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, மேற்குப் பகுதியில் பேசும் ஹிந்தி.
பைசாசி வகை பிராக்ருதத்தில் இருந்து பிறந்த மொழிகள் – வங்காளி , ஒரியா , பிஹாரி, அஸ்ஸாமிய மொழிகள். இதிலிருந்தே நேபாளி மற்றும் இமயமலை மொழிகள் பிறந்திருக்கலாம் என்றும் சிலர் உரைப்பர் .
பாலி
த்ரி பிடகம் (மூன்று பெட்டிகள் ) என்ற புத்த மத புனித நூல்களும் ஜாதகக் கதைகளும் இலங்கை வரலாறு விளம்பும் மஹாவம்சம், தீப வம்சம் முதலியனவும் பாலி வகை பிராக்ருதத்தில் உள்ளன.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது; 14ம் நூற்றா ண்டுவரை இலக்கியம் படைத்த மொழி இது.
அர்த்தமாகதி
ஸ்வேதாம்பர பிரிவு , அதாவது வெள்ளாடை உடுத்தும் — சமணர் பிரிவின் ஆகமங்கள் , அர்த்தமாகதி ப்ராக்ருதத்துள் உள . இரண்டாம் நூற்றாண்டு முதல் இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றது. நீதிகளை போதிக்கும் 115 நூல்கள் இருக்கின்றன .
சௌரசேனி
கிருஷ்ண பரமாத்மா உலவிய மதுராபுரியைத் தலை நகராகக் கொண்ட தேசம் சூரசேனம் . அங்கே பிறந்தது இது. சம்ஸ்க்ருத நாடகங்களில் விதூஷகர்களும் பெண்களும் இதில் கதைப்பர் . விதூஷகர் என்னும் நகைச் சுவை நடிகராக பிராமணர் வேடம் போடுவோர் நடிப்பர் .
இங்கே இரண்டு கருத்துக்களைச் சொல்கிறேன். திரைப்படங்களில் என் பிரமணர்களைக் கிண்டல் செய்யும் பாத்திரங்களில் போட்டுவிக்கிறார்கள் என்று சிறு வயதில் நான் வியந்ததுண்டு . இது 2300 ஆண்டுகளாக நாடகத்தில் பின்பற்றப்படும் உத்தி என்பது சம்ஸ்கிருதம் கற்ற பின்னரே என் புத்திக்கு எட்டியது .
இரண்டாவது கருத்து இந்துக்களின் அபார அறிவு பற்றியது. ஒரு கேளிக்கை என்றால் – திரைப்படம் , நாடகம் என்றால் — அதில் காமெடியும் இருக்க வேண்டும் என்பதை சம்ஸ்கிருத நாடகம் உலகிற்கு கற்பித்தது. தமிழில் – பழந் தமிழில்– எழுதப்பட்ட நாடகம் எதுவும் நமக்கு கிடைத்தில.
கேரளத்தில் கோட்டயம் தம்புரான் எழுதிய கதகளி நாடக வசனத்தில் சௌரசேனி பிராக்ருதத்தில் ஊர்வசியின் அழகை வருணித்துள்ளார் என்று எல்.சுதர்மணி எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
நாடகத்தின் பெயர்- நிவாட கவச காலகேய வைபவ. இந்தப் பிரிவில் சத்தகம் என்று அழைக்கப்படும் இலக்கியம் வரும். முக்கிய படைப்புகள் – ராஜசேகர எழுதிய கற்பூர மஞ்சரி, கேரள கவிஞர் ஸ்ரீகண்ட கவி எழுதிய சந்திரலேகா, கண ஷியாம எழுதிய ஆனந்த சுந்தரி, விஸ்வேஸ்வர எழுதிய சிருங்கார மஞ்சரி , நய சந்திர எழுதிய ரம்பா மஞ்சரி .
மஹாராஷ்ட்ரி
இந்த வகை பிராகிருதம் கொஞ்சம் கடினமானது மகாராஷ்ட்ர மாநிலப் பகுதியில் பேசப்பட்டது. இலக்கண கர்த்தாக்கள் பிராகிருதம் என்று சொல்லும்போது அது மஹாராஷ்ட்ரியை மட்டுமே குறித்தது.மிகவும் இனிமையான மொழி என்பதால் சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள் பாடுவது மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில்தான் .
மிகவும் புகழ்பெற்ற ஹாலன் என்ற மன்னன் தொகுத்த காதா சப்த சதி , சமய சுந்தராகினி எழுதிய காதா சஹஸ்ரி, பிரவரசேனா எழுதிய சேது பந்தன என்பன இதிலுள்ள முக்கிய படைப்புகள். வரருசி படைத்த பிராகிருத பிரகாச, வாக்பதிராஜனின் கௌடவாஹோ முதலியனவும் புகழ்பெற்ற நூல்கள் .
பைசாசி
இலக்கண வித்தகர் அனைவரும் குறிப்பிடும் இம்மொழியில் உள்ள படைப்புகள் எதுவும் கிடைத்தில. குணாட்யர் என்பவர் எழுதிய பிருஹத் கதா — பெருங்கதை – இதில் இருந்ததாகவும் சொல்லுவர். போஜன் என்பவர் சிருங்கார ப்ரகாசாவில் கொடுத்த மேற்கோள்கள் மூலம் சில பகுதிகள் கிடைத்தன.
அபப்ராஹ்ம்ச
இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சை மொழியில் இருந்த எல்லா வகை பிராகிருத எழுத்துக்களும் இதில் அடங்கும். தண்டி என்ற புலவர் மொழிகளை பற்றிப் பேசுகையில் மொழிகளை நான்கு வகையாகப் பிரிப்பார் — சம்ஸ்க்ருதம், பிராகிருதம், அப பிராஹ்ம்சம் , மிஸ்ரம் என்று . இதை தற்கால வடஇந்திய மொழிகளின் ‘மூலம்’ எனலாம். இதிலும் கூட பின்னர் சில படைப்புகள் தோன்றின.
மஹாகவி ஸ்வயம்பூதேவ் , தேவசேன, புஷ்ப தந்த , ஹேமசந்திர, அப்துர் ரஹ்மான் முதலியோர் 17-ம் நூற்றாண்டு வரை இதில் எழுதினர் . இலக்கண வரம் பற்ற மொழி என்பதே இதன் பொருள். காட்டுவாசி ஒருவன் சொல்லும் பதில் விக்ரம ஊர்வசீயம் என்ற காளிதாசன் நாடகத்தில் வருகிறது. அந்தக் கொச்சை மொழி இவ்வகைத்தே. அப்துர் ரஹ்மான் என்பவர் மூல்டான் நகரைச் சேர்ந்தவர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
மாகதி
மகத தேசத்தில் பேசப்பட்ட பிராகிருதம். இப்போதும் பிஹாரில் ஏழு மாவட்டங்களில் மகதி பேசப்படுகிறது . ஜார்கண்ட் மாநிலத்தின் சோடா நாகபுரி பகுதியில் பழங்குடி மக்கள் கலப்பட மாகதி பேசுகின்றனர். எல்லாம் இந்தி போலவே இருக்கும். அத்துடன் ஒரு இயா , வா, ஈய என்பன சேரும். அசோகரின் கல்வெட்டுகள் உள்ள மொழி. மௌர்யர்களின் ராஜாங்க மொழி. புத்தர் பேசிய மொழி என்றும் மொழிவார்கள்.
xxx
நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனி சம்ஸ்க்ருதம், பிராக்ருதம் ஆகிய இரண்டையும் ‘ஆர்ய பாஷை’ என்பார் . ஆர்ய என்பது மாக்ஸ்முல்லர் வகையறா பயன்படுத்திய இனவெறிச் சொல் அல்ல. சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் கற்றோர், பண்புடையோர் மொழி என்பதாகும். பரத முனி இவ்விரு மொழிகளை அரசர் மொழி என்று சொல்லிவிட்டு, விபாஷா என்ற பட்டியலில் திராவிட, ஆந்திர, சண்டாள , சகர , சைபர், ஆபிர மொழிகளைச் சேர்க்கிறார். அபிநவ குப்தா என்பவர் இவைகளை ‘சிதைந்து போன பிராக்ருதங்கள்’ என்று சொல்லிவிட்டு , ‘காட்டுவாசிகளின் மொழி’ என்றும் செப்புவார்.
தொல்காப்பியர் கூட செந்தமிழ் பேசக்கூடிய சிறு பகுதியை வரையறை செய்துவிட்டு ஏனைய பகுதிகளைக் கொடுந்தமிழ் பகுதிகள் என்பார் . பரத முனி , அபிநவ குப்தர் ஆகியோர் கருத்துக்களையும் அப்படியே நோக்க வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டு ஆங்காங்கு பல நாடுகளையும் ஆண்ட மன்னர்களில் அறிவாளிகளாக இருந்த மன்னர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உயர்ந்த அறிவாளியாகவும் பல்வேறு துறைகளில் பல நூல்களை இயற்றிய அறிவாளியாகவும் மிளிரும் மன்னன் பாரதத்தைச் சேர்ந்த போஜ மஹாராஜனே! ( அரசாண்ட காலம் :கி.பி. 1010-1055)
போஜனின் பெயரால் வழங்கப்படும் நகரின் பெயர் போபால்.
போஜன் 84 நூல்களை இயற்றியதாகப் பலவேறு நூல்களின் அடிப்படையில் அறிகிறோம்.
இன்னும் சிலர் அவன் 104 நூல்களை இயற்றியதாகவும் 104 ஆலயங்களை அமைத்ததாகவும் கூறுகின்றனர்.
போஜன் சிறந்த சிவ பக்தன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு நாளையும் நன்கு அனுபவித்தவன்.
பெருத்த நீதிமான். ஏழைகளின் பால் இரக்கம் கொண்டவன்.
சிறந்த கவிஞன். பல் துறை நிபுணன். எப்போதும் அவனைச் சுற்றிப் பெரும் கவிஞர் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
ஏராளமான நுட்பமான கேள்விகளை அவர்களிடம் அவன் கேட்டுக் கொண்டே இருப்பான்.
அவர்களில் தலை சிறந்த கவிஞனாக மிளிர்ந்த காளிதாஸன் மன்னனின் மனதில் ஊடுருவி இருக்கும் ரகசியத்தை அறிந்து பளீர் பளீரென்று கவிதையாலேயே பதில் கொடுப்பான்.
போஜனையும் காளிதாஸனையும் இணைத்து பாரதத்தில் உலவி வரும் சம்பவங்கள் ஏராளம்; கதைகள் ஏராளம்.
துரதிர்ஷ்டவசமாக போஜனைப் பற்றிய முழு வரலாறு எழுதப்படவில்லை.
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நூல்களில் உள்ள சம்பவங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
அவனது 84 நூல்களில் இன்று கிடைத்திருப்பவை சொற்பமே. ஒரு வேளை முனைப்புடன் ஆராய்ந்தால் (4 லட்சம் சம்ஸ்கிருத சுவடிகள் திறந்து கூடப் பார்க்கப்படவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால்) அவனது நூல்கள் பல கிடைக்கக் கூடும்.
அவனது நூல்களின் பட்டியலை ஒருவாறாக இன்றைய நிலையில் தொகுத்துப் பார்த்தால் வருவது கீழ்க்கண்ட நூல்கள்:
வானவியல் மற்றும் ஜோதிடம்
ராஜமார்த்தாண்டா
ராஜம்ருகங்கா
இட்வஜ்ஜனவல்லபா (ப்ரஸ்ன ஞானம்)
ஆதித்ய பிரதாப சித்தாந்தா
மருத்துவம்
ஆயுர்வேத சாரஸ்வம்
விஸ்ராந்தவித்யா விநோதம்
சாலைஹோத்ரம் (விலங்கிய கையேடு)
சில்ப சாஸ்திரம்
சமராங்கதஹன சூத்ரதாரா
இலக்கணம்
சப்தானு ஞானம்
தத்துவம்
ராஜமார்த்தாண்டம் (வேதாந்தம்)
பதஞ்சலி யோக சூத்ரம்
தத்வ ப்ரகாசம் (சைவம்)
சித்தாந்த சங்க்ரஹம்
சிவதத்வ ரத்ன காலிகா
யுக்தி கல்பதரு
பரம சாஸ்த்ரம்
வியவஹார சமுச்சயம்
சாருசர்யா
அர்த்த சாஸ்திரம்
அய்ஜக்ய நீதி (தண்ட நீதி) மற்றும் புத்ரமார்த்தாண்டம்
அலங்காரம்
சரஸ்வதி கண்டாபரணம்
ச்ருங்கார ப்ரகாஸம்
கவிதை மற்றும் உரைநடை
ரத்னாயன சம்பு
வித்யாமோத காவ்யம்
இரு பிராக்ருத நூல்கள் (சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை)
மஹா காளி விஜயம் (ஸ்தோத்ர நூல்)
ச்ருங்கார மஞ்சரி (உரைநடையில் கதைகள்)
சுபாஷித ப்ரபந்தம்
அகராதி
நாமமாலிகா
மேலே கண்டவை அனைத்தும் பிரபாவ சரித்ரம் என்ற (1450ஆம் ஆண்டு) நூலில் தரப்பட்டவையாகும்.
வழக்கம் போல ஆங்கில “அறிஞர்களால்” முட்டாள்தனமாக வைக்கப்படும் ஒரு வாதம் – இவ்வளவு நூல்களையும் ஒரே மன்னன் எழுதி இருக்க முடியுமா? என்பது தான்!
உடனேயே இவர்களின் முடிவு “முடியாது” என்பது தான்.
பல்வேறு அறிஞர்களை எழுத வைத்துத் தன் பெயரைப் போட்டுக் கொண்டான் போஜன் என்று கூறி இவர்கள் சந்தோஷப்படுகின்றனர் – பாரத அறிஞன் ஒருவனை மட்டம் தட்டி, அதை அப்படியே காலம் காலமாகச் சொல்ல வித்திட்டு விட்டோமே என்பது இவர்களின் சந்தோஷம். ஆகவே தான் இவர்களின் பெயர்களைக் கூட இங்கே குறிப்பிடவில்லை. வெற்று விளம்பரத்தைத் தேடும் அறிஞர்களுக்கு நாம் ஏன் அதைத் தர வேண்டும்.
இன்றைய உலகை எடுத்துக் கொண்டால் பல அறிஞர்கள் ஏராளமான நூல்களை எழுதிதைப் பார்க்கிறோம்; எழுத்தாளர்கள் பல நாவல்களை எழுதியதைப் பார்க்கிறோம்.
அவர்களை எல்லாம் ஏன் இந்த அறிஞர்கள் மட்டம் தட்டவில்லை? சந்தேகப்படவில்லை?!
காரணம் போஜன் ஒரு பாரத தேசத்து மாமன்னன்; பேரறிஞன் – அவனை அப்படி ஒப்புக் கொள்ளாமல் மட்டம் தட்ட வேண்டும்; அவ்வளவு தான்!
• I. Astronomy and Astrology (1) Rajamarttanda (2) Rajamrganka (3) Yidvajjanavallabha (pra§najnana) (4) Adityapratapasiddbanta II. Medicine (5) Ayurveda Sarvasvam (6) Visrantavidyavinoda (7) Salihotra (a Veterinary Manual) III. Silpaidstra (8) SamaranganaSutradbara IV. Grammar (9) Sabdanu6a3anam V. Philosophy (10) Rajamarttanda (Vedanta) (11) „ (acorn, on Patanjali’s Yoga Sutras) (12) Tatvaprakasa (Saivaism). (13) Siddhantasangraha, „ ( 14 ) Sivatatvaratna Kalika „ (15) Yukti Kalpataru „ VI. Pharma Sastra (16) Vyavabarasamuccaya. (17) Carucarya. VII. Arthasaitra (18) Caijakyaniti (Dandaniti) and Putramartanda. VIII. Alankdra (19) Sarasvati Kantbabharana (20) jSrngaraprakasa. IX. Poetry and Prose. (21) Ratnayana campu. (22) Vidyavmodakavyam. (23, 24) Two Prakrt poems (lately discovered at Dbar). (25) Mabakalivijayam (a stotra) (26) Srngaramanjari (prose tales) (27) Subbasitaprabandha. X. Lexicography (28) Namamalika. A list in the Prabhavaka Garitra (c. 1450 A. D.)
*
போஜன் எழுதிய நூல்களாக விக்கிபீடியா தரும் பட்டியல் இது:
According to Ajada, who wrote a commentary titled Padaka-prakasha on Sarasvati-Kanthabharana, Bhoja wrote 84 books. The surviving works attributed to Bhoja include the following Sanskrit-language texts (IAST titles in bracket)
Bhujabala-bhima (Bhujabalabhīma), a work on astrology
Champu-Ramayana or Bhoja-Champu (Campūrāmāyaṇa), a re-telling of the Ramayana in mixture of prose and poetry, which characterises the champu genre. The first five kandas (chapters) are attributed to Bhoja. The sixth and seventh chapters were completed by Lakshmana and Venkatadhvarin respectively.
Charucharya (Cārucārya), a treatise on personal hygiene
Raja-Martaṅda (Rājamārtanḍa) or Patanjali-Yogasutra-Bhashya, a major commentary on the Yoga Sutras of Patanjali; includes an explanation of various forms of meditations
Raja-Mriganka-Karana (Rājamrigankakaraṅa), a treatise on chemistry, especially dealing with the extraction of metals from ores, and production of various drugs.
Samarangana-Sutradhara (Samarāṇgaṇasūtradhāra), a treatise on architecture and iconography. It details construction of buildings, forts, temples, idols of deities and mechanical devices including a so-called flying machine or glider.
Sarasvati-Kanthabharana (Sarasvatīkaṇṭhabharaṇa), a treatise on Sanskrit grammar for poetic and rhetorical compositions. Most of it is a compilation of works by other writers. Some of the poetic examples provided by him in this work are still appreciated as the highest cream of Sanskrit poetry.
Shalihotra (Śālihotra), a book on horses, their diseases and the remedies
Shringara-Prakasha (Śṛṅgāraprakāśa), treatise on poetics and dramaturgy
Sringara-Manjari-Katha (Śṛṅgāramanjarīkathā), a poem composed in akhyayika form
Tattva-Prakasha (Tattvaprākaśa), a treatise on Shaivite philosophy. It provides a synthesis of the voluminous literature of the siddhanta tantras
Vidvajjana-Vallabha, treatise on astronomy
Vyavahara-Manjari (Vyavahāramanjarī), a work on dharmaśāstra or Hindu law
Yukti-Kalpataru, a work dealing with several topics including statecraft, politics, city-building, jewel-testing, characteristics of books, ship-building etc.
The Prakrit language poems Kodanda-Kavya and Kurma-Sataka are also attributed to Bhoja.[79] The Kodanda-Kavya (Kodaṅḍakāvya) was found inscribed on stone slab fragments at Mandu.[80] The Kurma-Sataka (Avanikūrmaśataka), which praises the Kurma (tortoise) incarnation of Vishnu, was found inscribed at the Bhoj Shala in Dhar.[81]
Sangitaraja, attributed to Kalasena or Kumbha, names Bhoja as an authority on music, which suggests that Bhoja also compiled or wrote a work on musi
***
போஜனின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
1.இந்தி, மராட்டி, குஜராத்தி, வங்காளி முதலிய வட இந்திய மொழிகள் பிராகிருத வடிவத்திருந்து பிறந்தன; இம்மொழி பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.
2.பிராகிருதம் பற்றிய வியப்பான விஷயம் அதில் முதலில் கிடைப்பது உரை நடை (Prose) ஆகும். உலக மொழிகள் அனைத்திலும் முதலில் கிடைப்பது (Poetry) கவிதைகள். ஆனால் பிராக்ருதத்திலோ அசோகனின் கல்வெட்டு வாசகங்கள். அது கவிதை நடை இல்லை.
3.சமண மதம்
சமண தீர்த்தங்கரர்களின் போதனைகள் ப்ராக்ருதத்தில் உள்ளன. அவர்களுடைய முக்கிய மந்திரங்களும் இதே மொழியில் உள்ளன.
4.வாக்பதிராஜ என்ற புகழ்பெற்ற கவிஞர் கூறுகிறார் ,
“கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி மழையாகப் பொழி ந்து ஆறாக ஓடி கடலையே அடைவது போல எல்லா மொழிகளும் பிராக்ருதத்திலிருந்து தோன்றி பிராக்ருதத்திலேயே சங்கமம் ஆகின்றன”.
சயலாவோ இமாம் வாயா விசந்தி எத்தோ யா னேந்தி வாயாவோ
ஏந்தி சமுத்தம் ச்சிய னேந்தி சாயராவோ ச்சிய ஜலாயிம்
—-கௌடவாஹோ
5.மஹாவீரர் , மாமன்னன் அசோகன், காரவேலன் ஆகியோர் செய்திப் பரிமாற்றத்துக்கு பிராகிருத மொழியையே பயன்படுத்தினர்.
6.சமண ஆகமங்களும் அசோகர், காரவேலன் கல்வெட்டுகளும் இம்மொழியில் இருக்கின்றன. 2000 கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் உள்ளன. தமிழ் நாட்டின் பல பழைய பிராமி லிபி கல்வெட்டுகளும் இதில் அடக்கம்.
7.வியப்பான ஒரு விஷயம் பிராகிருத மொழி இலக்கணத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினர்
8.பிராக்ருதத்தில் பல வகைகள் உண்டு- மஹாராஷ்ட்ரீ , சூரசேனி ,மாகதி , பைசாசி , ஆபப்ராஹ்மச
பிராகிருத பல்கலைக்கழகம்
9.கர்நாடகத்திலுள்ள சிரவண பெலகோளாவில் மிகப்பெரிய பிராகிருத நூலகம் உள்ளது. அங்குதான் மௌர்ய சந்திரகுப்தர் தவம் செய்து உயிர்விட்டார். அவருடைய குருவின் பெயர் ஸ்ருதகேவலன் பத்ரபாஹு . ஆகவே இந்த இடம் 2500 ஆண்டு வரலாறு உடையது . அங்குள்ள கோமடேஸ்வரரின் பிரம்மாண்டமான ஒற்றைக் கல் சிலை , சமண மத நம்பிகை இல்லாதோரையும் ஈர்த்திழுக்கும். .அங்குள்ள மடத்தின் தலைவர் ஸ்வஸ்தி ஸ்ரீ சாரு கீர்த்தி பட்டாராக பட்டாச்சார்ய சுவாமிகள் பெரிய அறிஞர் ; பல் மொழி வித்தகர். அவர் போன்களையோ மொபைல் போன்களையோ பயன்படுத்தாத அதிசயப்பிறவி. பெரிய சொற்பொழிவாளர் ; நூலாசிரியர் அவருடைய முயற்சியின் பேரில் அங்கு பிராகிருத பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது.
10.தர்ம அறிவுரை
அசோகரின் கிர்னார் கல்வெட்டு எண் மூன்றில் காணப்படும் வாசகம்
அஹிம்சை என்பது எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும்.குறைவாக செலவு செய்வதும், குறைவாக சேர்த்துவைப்பதும் நன்மை பயக்கும்.
கிர்னார் மலையின் 12ஆவது கல்வெட்டில் அசோகன் சொல்கிறார்,
‘ஸவபாசந்தா பஹூசுதா வ அ சு , கலா னாகமா வ அசு’
எல்லா சமய பிரிவினரும் மற்றவர் சொல்வதையும் கேட்டு, பொது நல சேவை செய்ய வேண்டும் .
இவ்வாறு உயரிய கருத்துக்களை இம்மொழி பரப்பியதோடு வரலாற்றை அறியவும் உதவுகிறது.
11.பிராகிருத மொழி வளர்ச்சி
ஏழு வகை பிராக்ருதத்திலும் நிறைய நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டு இந்திய வரைபடத்தில் மொழிகளைக் குறித்து, இலக்கியப் படைப்புகளை எழுதினால், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் நூல்கள் அல்லது கல்வெட்டுகள் அல்லது ஓலைச் சுவடிகள் இருப்பதைக் காணலாம். அத்தனை பேரும் தர்ம, அர்த்த, காம , மோக்ஷத்தைப் போற்றி எழுதினர். ஒரே பண்பாடு, ஒரே நம்பிக்கைகள்!
xxx
பத்தாம் நூற்றாண்டு முதல் ஸுரசேனி வகையே கவிதையிலும் நாடகத்திலும் பயன்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை ‘சத்தக’ (SATTAKA) இலக்கியத்திலும் இதைக் காணலாம் . இதன் பிறப்பிடம் மத்திய இந்தியா என்றும் மற்ற கிளை மொழிகள் இதிலிருந்து உதித்ததாகவும் அறிஞர்கள் செப்புவர். இது திகம்பர பிரிவினரின் முக்கிய மொழியாகத் திகழ்ந்தது.
நாடகங்களில் பயன்பட்டது – ஸுரசேனி . காளிதாசர் முதலியோர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகங்களிலும் பிராகிருத வசனம் உண்டு. முக்கிய சில கதாபாத்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும், ஏனையோர் பிராக்ருதத்திலும் பேசுவதைக் காணலாம். சூத்ரகர் எழுதிய ம்ருச்சகடிக நாடகத்தில் இதைத் தெளிவாகக் காணலாம்
சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள், வேலைக்காரர்கள் இப்படி கொச்சை மொழியில் பேசுவர்.
18ம் நூற்றாண்டு வரை சம்ஸ்க்ருத நாடகங்களில் இந்தப் போக்கைப் பார்க்கிறோம்
சமணர்களின் புனித நூல்கள் பயன்படுத்துவது அர்த்தமாகதி ; பௌத்தர்கள் பயன்படுத்துவது மாகதி ; இலக்கண கர்த்தாக்கள் பின்பற்றுவது ஆர்ச ; ஒவ்வொருவரும் தங்கள் மொழியே மூல மொழி என்பர்.
இதற்கு இணையாக எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால் தமிழில் இப்போது வரும் கதைப் புத்தக நடையை பிராக்ருதத் தமிழ் என்றும், நாட்டுப்புறப் பாடல்களை பிராக்ருதத் தமிழ் கவிதைகள் என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பேச்சு மொழி பிராகிருதம்; இலக்கண /இலக்கிய மொழி சம்ஸ்கிருதம்.
இதை புரிந்து கொள்ள தமிழ்த் திரைப்பட மொழி உதவும். அரசர் வேடத்தில் வருவோர் பேசுவது இலக்கிய மொழி; ஆண்டி வேடத்தில் வருவோர் பேசுவது கொச்சை மொழி.
பாலி என்னும் பிராகிருத மொழியை பௌத்தர்கள் அதிகம் பயன்படுத்தினர். பிராக்ருதத்தை சமணர்கள் அதிகம் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் இதற்கெல்லாம் மூல மொழி. அதை இந்துக்கள் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் அறிந்தோர் இவ்விரு மொழிகளையும் புரிந்துகொள்ள முடியும்.
விற்றதே tamilandvedas.com, swamiindology.blogspot.com இதற்கு காரணம்.
இனி கொலையுண்ட போப்புகளின் பட்டியலைப் பாருங்கள் :–
List of popes who died violently
From Wikipedia, the free encyclopedia
A collection of popes who have had violent deaths through the centuries. The circumstances have ranged from martyrdom (Pope Stephen I)[1] to war (Lucius II),[2] to a beating by a jealous husband (Pope John XII). A number of other popes have died under circumstances that some believe to be murder, but for which definitive evidence has not been found.
Pope Caius (Saint) Elected 283-12-17 and martyred 296-4-22, but not at hands of his uncle, Diocletian[4]
Pope Marcellinus (Saint) Elected 296-6-30 and martyred 304-10-25 during persecution of Diocletian[4]
Pope Marcellus I (Saint) Elected 308-5-27 after 4-year vacancy and martyred 309-1-16.[4]
Pope Eusebius (Saint) Elected 309-4-18 and martyred in Sicily 309-8-17.[4][8]
Pope John I (Saint), Elected August 13, 523, during the Ostrogothic occupation of the Italian peninsula. Was sent as an envoy by Ostrogoth king Theodoric to Constantinople. Upon return, Theodoric accused John I of conspiracy with the Byzantine empire. Imprisoned and starved to death on 18 May 526.[4]
Pope Martin I (Saint) Elected in 649. Died in exile 655-9-16
Pope Pius I (Saint) (c.142-c.154), martyred by the sword according to old sources;[20] Claim of martyrdom removed from the 1969 General Roman Calendar after recent revisions[21]
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள் பல. கொஞ்சம் பட்டியலைப் பார்ப்போம்.
1. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்குக்கு கொண்டு சென்றனர். இந்தியாவின் புகழ் பெற்ற வைரங்கள், மரகதங்கள் , நீலக் கற்கள் இப்பொழுது பிரிட்டனில் உள்ளன. இதே காலத்தில் வங்காளத்திலும் பீஹாரிலும் மட்டும் பல லட்சம் பேர் பட்டினியாலும் பஞ்சத்தாலும் இறந்தனர்.
2. இந்தியாவை மூன்று துண்டாக போட்டு கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்க தேசம்), மேற்கு பாகிஸ்தான் என்று செய்து நிரந்தர தொல்லை கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
3. இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷமம் வரலாற்றைத் திருத்தி எழுதியதாகும் . எகிப்து, பாபிலோனியா, மாயன், கிரேக்க நாகரீகங்களில் 5000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியல் உண்டு. இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்கு முன்னர், ஆண்டவர் எவருமே இல்லை. புராணங்களில் இதிகாசங்களில் சொல்லும் மன்னர் பெயர்கள் எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி மன்னர்கள் பெயர் அத்தனையையும் அழித்தனர். அது மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டும் உலகில் பூர்வ குடியினர் இல்லை. திராவிடர்கள் மத்தியதரைப் பகுதியில் இருந்தும், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் வந்தனர் என்றும் கால்டுவெல் மூலமும்,மாக்ஸ்முல்லர் மூலமும் பரப்பினர். உண்மையில் நாம் வெளியே சென்று, உலகம் முழுதையும் நாகரீக மயமாக்கியதை மறைத்தனர்.
இந்தக் கட்டுரையில் இந்த மூன்றாவது விஷயத்தை எடுத்துக் கொள்வோம். பாஹியான், யுவாங் சுவாங், வராஹ மிஹிரர், கல்ஹணர் ஆகிய நால் வரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த நான்கு பே ர்களும் அரசியல் கட்சிக்காரர்கள் இல்லை. மத வெறியர்களும் இல்லை என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. ஆகையால் பொய் சொல்ல வாய்ப்புகள் குறைவு.
முதலில் இந்த 4 பேரும் யார் என்று தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.
பாஹியான் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீ கர்.
யுவாங் சுவாங் , பாஹியானுக்குப் பின்னர் சீன யாத்ரீகர் – 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இந்தோனேஷியா போன்றா நாடுகளுக்கு விஜயம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதி வைத்தார்.
வராஹமிஹிரர் என்பவர் கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்தவர்தான். பிருஹத் ஜாதகம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் வான சாஸ்திர,ஜோதிட மற்றும் கலாசார அறிவியல் விஷயங்களை எழுதியவர் .
கடைசியாக வாழ்ந்தவர் கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆவார் . ராஜ தாரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்தார். இவர் ஆண்டுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் இவரை முதல் இந்திய வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டுக்கார்கள் புகழ்வர் .
ஆயினும் வராஹ மிஹிரரும் கல்ஹணரும் இந்திய வரலாற்றில் ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.கலியுகம் என்பது கி.மு.3102ல் துவங்கவில்லை. அதற்குச் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் துவங்கியது என்கிறார்கள்.மற்றோர் புறம் கல்ஹணரும் யுவாங் சுவாங்கும் இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்கள். குஷான மன்னர்களான கனிஷ்கர் , ஹு விஸ்கர் எல்லோரும் மிகவும் முற்காலத்தில் ஆண்டதாகவும் , புத்தர் பெருமான் மிகவும் முற்காலத்தில் இருந்ததாகவும் சொல்கின்றனர் .
கல்ஹணரைப் புகழும் மேலை நாட்டினர் அவர் எழுதிய எட்டு அத்யாயங்களில் முதல் 4 அத்தியாயங்களை நம்பாதே என்கின்றனர். ஏனெனில் இதில் கி.மு.2000 முதலான மன்னர் பட்டியல் உளது!!
இதெல்லாம் ஒரு புறமிருக்க, பல வரலாற்று ஆசிரியர்கள் வெள்ளைக்காரர் எழுதிய இந்திய வரலாறு ஆயிரம் ஆண்டுகளை விழுங்கிவிட்டது, மறைத்துவிட்டது என்பர். அதாவது அசோகர் கல்வெட்டில் குறிப்பிடும் சந்திரகோட்டஸ் ( சந்திர குப்தர் என்பதன் மருவு) மௌர்ய சந்திர குப்தர் என்பது தவறு. உண்மையில் அது குப்த வம்சத்தைச் சேர்ந்த சந்திர குப்தர் என்பர். புத்தர் காலம் பற்றியும் இலங்கை , இந்தியா, திபெத், பர்மா, சீன வரலாறுகளில் குழ ப்பம் இருக்கிறது.
வெள்ளைக்காரர் எழுதிய வரலாற்றுப் புஸ்தகங்களை உலகம் முழுதும் திருத்திப் புதுப்புது புஸ்தகங்களை பாடத்திட்டங்களில் சேர்த்து வருகையில் நம் மட்டும் எம்.ஏ வரலாற்றுப் பாடம் வரை பழைய பல்லவியைப் பாடி வருகிறோம்!!
முதலில் வரலாற்றைத் திருத்தி எழுதவேண்டும். எதிரும் புதிருமான இரு வேறு கருத்துக்களையும் அருகருகே கொடுத்து ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும். பாஹியான்,யுவாங் சுவாங் -கல்ஹணர் சொல்லும் கருத்துக்களை மேலும் ஆராய வேண்டும். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுதி வைத்திருக்க காரணம் இல்லாமல் இருக்காது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த அல்பெரூனி கூட கலியுகம் முதலியவற்றில் சில மாறுபட்ட கணக்கீடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஷ் (Kush Kingdom of Egypt) என்னும் ஒரு வம்சத்தினர் எகிப்து நாட்டை ஆண்டனர். அவர்களுக்கும் நமது குஷானர்களுக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராயலாம். அவர்களும் கி.மு காலத்தை சேர்ந்தவர்கள்.
யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது சபதரிஷி சுழற்சி மக நட்சத்திரத்தில் இருந்ததாக வராஹ மிஹிரர் சொல்கிறார். இதனால்தான் ஏறத்தாழ 640 ஆண்டு வித்தியாசம். இரும்பு, குதிரை ஆகிய இரண்டின் குறிப்புகள் காரணாமாக மஹாபாரத காலத்தை கி.மு. 1500 என்று தொல்பொருட் துறையினர் கூறுவர்.
ஆக நமது பஞ்சாங்கம், வராஹ மிஹிரர்/கல்ஹணர் ஜோடி, தொல் பொருட் துறை சான்றுகள் ஆகியன வெவ்வேறு காலத்தைச் சொல்லுவதால் அறிஞர் மாநாட்டைக் கூட்டி அவ்வாப்பொழு து ஆராயவேண்டும். ஏனெனில் குதிரை, இரும்பு இரண்டின் காலமும் கி.மு.1500க்கும் முந்தையது என்று தற்காலச் சான்றுகள் கா ட்டுகின்றன.
புராணங்களில் உள்ள வரலாறு என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதிய டி .ஆர் .மங்கட் (D R MANKAD, PURANIC CHRONOLGY) , ஒரு பட்டியல் தருகிறார். அதன்படி
தற்போது இந்துக்கள் தினமும் பூஜையில் சொல்லும் ஏழாவது மநுவான வைவஸ்வத மனுவின் காலம் கி.மு 5976
மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது – கி.மு.3201
யுதிஷ்டிரர் இறந்தது – கி.மு. 3176
துவாபர யுகம் முடிவு – கி.மு .2976
இதை அப்படியே நம்பத் தேவையில்லை. இது ஒரு ஆராய்ச்ச்சிதான். ஆனால் இதில் பசையுள்ள பல வாதங்கள் இருக்கின்றன.
மெகஸ்தனீஸ் (Greek Ambassador) என்ற கிரேக்கரும் அரியான் (Arrian, Greek Historian) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரும் சந்திரகோட்டஸ் காலத்துக்கு முன்னால் 154 அரசர்கள் இந்தியாவை ஆண்டதாகவும் அவர்களுடைய காலம் 6000 ஆண்டுகளுக்கும் மேல் என்றும் எழுதி வைத்துள்ளனர். இந்த சந்திரகோட்டஸ், மௌர்ய சந்திர குப்தர் என்பது வெள்ளைக்காரர் வாதம். இல்லை இவர், குப்தப் பேரரசரான சந்திரகுப்தன்தான் என்பது மங்கட்டின் வாதம். இத்துடன் கல்ஹணர் சொன்ன விஷயங்களையும் யுவாங் சுவாங் சொன்ன விஷயங்களையும் இணைத்து ஆராய்தல் அவசியம்.
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம்
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம் உளது. ஆதி சங்கரர் காலம் பற்றியும் குழப்பம் உளது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்றோர் அவர் கிறிஸ்துவுக்கு முந்தைய காலம் என்பார். ஏனையோர் அது கி.பி.732 என்பர். அப்போது சங்கரரைப் போலவே எல்லா விதங்களிலும் அச்சு வார்த்த துபோல அபிநவ சங்கர் என்பவர் இருந்ததால் இப்படிக் குழப்பம்.
புத்தர் காலம் பற்றி புத்தமத நாடுகள் வெவ்வேறு கணக்கு கொடுக்கின்றன. இந்தக் கணக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யுவாங் சுவாங் எழுதிய புஸ்தகத்திலும் உளது. அட, காரணமே இல்லாமல் மெகஸ்தனிஸும், கல்ஹணரும் , யுவாங் சுவாங்கும் பொய் சொல்வார்களா ? சிந்தித்துப் பாருங்கள்.
பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எழுதிய குறிப்புகளில் தான் இந்தியாவுக்கு வந்தபோது புத்தர் இறந்து 1497 ஆண்டுகள் ஆனதாக எழுதுகிறார். அவர் கி.பி. 405 முதல் 411 வரை இந்தியாவில் இருந்தார். ஆகையால் அவருடைய கணக்குப்படி புத்தர் இறந்தது கி.மு 1086.
அவருக்கு சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் யுவாங் சுவாங் வந்தார். அவருடைய பெயருக்கு ‘தர்ம ஆசார்ய’ என்று அர்த்தம். அவர் எழுதிய சி யூ கி என்ற புஸ்தகத்தில் “புத்தரின் மரணம் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தை சொல்கிறார்கள். சிலர் 1300, 1200, 1500 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். சிலர் 900 ஆண்டுதான் ஆயிற்று என்பர்”.
அவருடைய கணக்குப் படி பார்த்தாலும், புத்தரின் மரணம் கி.மு.860 முதல் கி.மு.260 க்குள் இருந்திருக்க வேண்டும்.
சீ னர்கள் பொதுவாக நம்புவது கி.மு 638 (புத்தர் மரண ஆண்டு)
ஸ்ரீலங்கா, பர்மா, அஸ்ஸாம் – கி.மு.543
திபெத் – கி.மு.2422 முதல் கி.மு 546
காண்டன் புள்ளிக் கணக்கு புஸ்தகம் – கி.மு.543 அல்லது 487
வெள்ளைக்காரர்கள் இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு கி.மு 487ல் புத்தர் இறந்தார் என்று எழுதிவிட்டனர். அதாவது யுவாங் சுவாங், பாஹியான், கல்ஹணர் போன்ற வரலாற்று கதாநாயகர் சொன்னதும் பொய் மக்களின் நம்பிக்கையும் பொய் . நாங்கள் சொல்வதே மெய். என் று சொல்லி , அசோகர் கல்வெட்டு சொல்லும் சந்திர கோட்டஸ் தான் மௌர்ய சந்திர குப்தன் என்று எல்லோரையும் நம்பவைத்தனர். அதாவது கட்டைப் பஞ்சாயத்து முறையில் மற்றவற்றை மறுத்துவிட்டனர். இந்துக்களாகிய நாம் வரலாற்றைத் திருத்தி எழுதினால் தமிழர்கள் சொல்லும் 10,000 ஆண்டு தமிழ்ச் சங்க வரலாறும் உண்மையாகிவிடும்!
முதலில் எல்லா வரலாற்றுப் புஸ்தகங்களிலும் எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களைக் கொடுத்து புதிய முடிவுகள் வந்தவுடன் அவற்றை முழு அளவுக்கு மாற்றி எழுதலாம்.