கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி!- Part 1 (Post No.4111)

Written by S NAGARAJAN

 

Date: 25 July 2017

 

Time uploaded in London:- 6-57 am

 

 

Post No.4111

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ராட்ஸசன் கஜினி

 

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள்

ச.நாகராஜன்

 

தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன்.

 

அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை.

வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட!

அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும்.

 

கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான்.

அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால்.

அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார்  The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894)

 

 

ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வனால் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றான்.

ஆனந்த் பால் என்ற தன் மகனிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான்.

 

பின்னர், ஒரு பெரிய சிதையைத் தயார் செய்து அதில் புகுந்து தனக்குத் தானே சிதைய்ல் தீ மூட்டிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தான்.

 

அற்புதமான இந்த உயிர்த் தியாகம் பற்றி இதுவரை ஹிந்து மக்கள் அறிந்திருக்கின்றனரா என்பது கேள்விக் குறி.

ஹிந்து தியாகங்களையும் இந்த தேசத்தைத் தற்காத்துப் போரிட்ட வீரச் செம்மல்களையும் பற்றி  பாடப் புத்தகங்களிலோ அல்லது இதர விதமாகவோ எழுத செகுலர் அரசு இடம் தரவில்லை.

 

 

ஜெயபாலின் சிதை பற்றிச்  சொல்பவர் ஃபெரிஷ்டா (Ferishta) என்ற யாத்ரீகர். வரலாற்று ஆசிரியர்.

காளிகட்டைச் சேர்ந்த ஜமீந்தார்கள் கூட இதே போல தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்துக் கொண்டு தங்கள் வாரிசுகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். இதை பயணம் செய்த பயணிகள் எழுதி வைத்துள்ளார்கள்.

Sanskrit in Gazni Mohammed Coins!

 

இரண்டு வருடம் கழித்து பாடியாவைச் சேர்ந்த ராஜாவைக் குறி வைத்தான் கஜினி. அவனை மதமாற்றுவதே அவன் முக்கியக் குறிக்கோள்.

 

ஆனால் தீரமிக்க ராஜா மூன்று நாட்கள் இடைவிடாமல் போரிட்டான்.

 

நான்காம் நாள் இரண்டு படை வீரர்களும் செய் அல்லது செத்து மடி என்ற விரதத்துடன் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர்.

திடீரென்று மெக்காவை நோக்கி விழுந்து வணங்கிய கஜினி முகமது” முன்னேறுங்கள்; கடவுள் நம் பக்கம் இருக்கிறார்” என்று கூவினான்.

 

தீவிரமான தாக்குதலை எதிர் கொண்ட ஹிந்து ராஜா தன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டை அடைந்து தன் வாளால் தன்னை முடித்துக் கொண்டான்.

முதல் மற்றும் இரண்டாம் படையெடுப்பில் அடித்த கொள்ளையைப் பார்த்த கஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு செல்வமா?

 

தனது மூன்றாம் படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து ஆசையுடன் ஆயத்தமானான்.

 

ஆனந்த் பாலுடன் போரிட்ட அபுல் ஃபட்டா லோடி ஆனந்த் பால் தோற்கவே, கஜினியிடம் சமாதானம் பேசினான். சமாதானம் உடனே ஏற்கப்பட்டது. ஏனெனில் காஸ்கர் அரசன் கோரஸ்ஸானின் தலை நகரான ஹெராத் என்ற நகரின் மீது படையெடுத்தான்.

 

மிகுந்த தந்திரசாலியான கஜினி இந்த அவசர நிலையில் தனது வெற்றிகளை எல்லாம் ஒரு இந்திய பிரதிநிதியிடம் ஒப்படைத்தான்.

 

அவனது முதல் வேலை ஹிந்துக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்ய வேண்டும், முகமதியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

 

தன் தேச மக்களுக்கு எதிராகத் தானே துரோகம் இழைக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.

1006இல் கஜினி நோக்கிச் சென்ற முகமது, பல்க் என்ற இடம் அருகே நடந்த பெரும் போரில் எலிக் கான் என்பவனை எதிர்த்தான்.

 

போரைப் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குதிரைகளின் ஓலமும் வீரர்களின் கைகலப்பு சத்தமும் வானை எட்டியது என்று எழுதியுள்ளனர்.

 

1008இல் லாகூர் மன்னனான ஆனந்த் பாலை ஒரேயடியாக அழிப்பது என்று கஜினி முகமது கங்கணம் பூண்டான்.

ஆனந்த் பாலோ முகமதியர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து ஹிந்து மன்னர்களின் உதவியையும் நாடினான். அனைவரும் உடன் பட்டனர்.

 

Ghazni in modern Afghanistan

வரலாறு காணாத அளவில் மிக பிரம்மாண்டமான ஹிந்து சேனை ஒன்று உருவானது.

இந்த சேனையின் பிரம்மாண்டம் எவ்வளவு பெரியது என்றால் பெஷாவர் அருகே அது கஜினி முகமதை நாற்பது நாட்கள் எதிர் கொண்டு போரிட்டது.

 

ஆனால் தந்திரக்காரனான முகமது மன்னனின் யானையைத் துரத்திக் கொண்டே செல்லவே ஹிந்து வீரர்கள் தலைவன் இல்லாத நிலையில் கலங்கி அசந்து நின்றனர்.இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முகமதுவின் சேனை ஹிந்து வீரர்களை கொன்று குவித்தது.

 

இருபதினாயிரம் பேர் போர்க்களத்திலிருந்து ஓடினர்.

அடுத்து, அமிர்த்ஸருக்கு வடகிழக்கில் இருந்த இமயமலை அடிவார நகரான நாகர்கோட்டின் மீது கஜினி முகமது பார்வையைச் செலுத்தினான்.

 

அங்கிருந்து தங்கம், விலை மதிப்புள்ள ரத்தினக்கற்கள், வெள்ளி உள்ளிட்ட ஏராளமான செல்வத்தைக் கொள்ளையடித்தான்.

அந்தக் கால மதிப்பின் படி இது 313,333 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்புடையதாகும்.

 

கஜினிக்குத் திரும்பிய முகமது தனது நகருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அங்கு தான் கொள்ளையடித்த அனைத்தையும் கண்காட்சியாக வைத்தான்.

 

தன் சேனையில் இருந்த படைப்பிரிவு தலைவர்களுக்கு பரிசுகளையும் வீர விருதுகளையும் அளித்தான்.

மக்களுக்கோ ஒரே விருந்து!

 

1011இல் டெல்லிக்கு மேற்குப் பக்கம் 30 மைல் தொலைவில் இருந்த தாணேஸ்வரத்தை நோக்கித் தனது ஆறாம் படையெடுப்பை எடுத்தான்.

புனிதமான யமுனை நதியோ அருகில் இருந்தது. மன்னன் ஆனந்த் பால் தனது சகோதரனை அனுப்பினான்.

 

தாணேஸ்வரத்தை விட்டு விடுவதாயிருந்தால் அந்தப் படையெடுப்பில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரனான கஜினி முகமது வழக்கமாக எதிர் பார்க்கும் கொள்ளையைத் தந்து விடுவதாக சொல்லி அனுப்பினான்.

 

ஆனால் கோவில் சிலைகளை உடைப்பதையே நோக்கமாகக் கொண்ட கஜினி முகமது அந்த கோரிக்கையை நிராகரித்தான்.

கோவில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

இரண்டு லட்சம் பேரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்.

 

இதனால் ஒவ்வொரு முகமதிய வீரனுக்கும் ஏராளமான அடிமைகள் கிடைத்தனர்.

 

 

தனது ஏழாம் படையெடுப்பில் அந்தப் பாவி எதிர் கொண்டது ஆனந்த் பாலை அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ஜெய்பாலை! காஷ்மீரில் இருந்த அனைவரையும் முஸ்லீம்களாக மாறக் கட்டாயப் படுத்தினான்.

 

மாற மறுத்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

அவனது எட்டாம் படையெடுப்பும் காஷ்மீரின் மீது தான்.

தன்னை எதிர்த்த படைத்தலைவர்களைத் தண்டிப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக அவன் கொண்டிருந்தான்.

கங்கைக் கரையில் அமைந்திருந்த கனௌஜ் நகரின் மீது அவன் பார்வை விழுந்தது.

 

அந்த அழகிய நகரம் செல்வச் செழிப்பிற்கு பெயர் பெற்றது. உலக அளவில் அது ஒரு உன்னதமான நகரம்.

ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அங்கிருந்த வெற்றிலைபாக்கு கடைகள் மட்டும் 30000 என்ற எண்ணிக்கையைத் தொட்டதாம்.

 

அந்த நாட்களில் உலகின் எந்த நாட்டிலும் இந்த எண்ணிக்கையில் வெற்றிலை பாக்கு கடைகள் இல்லை என்றால் இதர கடைகளைப் பற்றியும் கனௌஜின் செல்வச் செழிப்பையும் யாரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

கஜினியின் படையில் ஒரு லட்சம் குதிரைகள் இருந்தன. 20000 போர் வீரர்கள் இருந்தனர்.

 

ஆனால் ராஜாவோ எதிர்ப்பே தெரிவிக்காமல் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

மதுராவில் அடித்த கொள்ளை சொல்லத்தரமன்று. அனைத்துக் கோவில்களும் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

தப்பியது மதுரா கோவில் மட்டுமே. ஏன்? அது அவ்வளவு வலுவாக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.

 

 

அதை கஜினி முகமதாலும் கூட இடிக்க முடியவில்லை.

மஹாபன் ராஜா கஜினி தன் மக்களை கொன்று குவிக்கும் கோரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டான்.

 

தன் மனைவி மக்களுடன் நதியினுள் சென்றான்.

இதே போல ரஜபுதன ராஜாவும் தங்கள் மனைவி மகன்களுடன் தீயை எரியூட்டி அதில் விழுந்து உயிர் துறந்தனர்.

தோல்வியை ஏற்க அவர்கள் மனம் ஒப்பவில்லை.

இப்போது கஜினி அடித்த கொள்ளையின் மதிப்பு அந்தக் கால பண மதிப்பீட்டில் 416000 ஸ்டர்லிங் பவுண்டாகும்!!

 

5300 அடிமைகள், 350 யானைகள் , இது தவிர சிலைகளின் கண்களில் இருந்த விலையே மதிக்க முடியாத மாணிக்கக் கற்கள், முத்துக்கள் பதித்த நெக்லேஸ்கள், நீலக்கற்கள் ஆகியவையும் கொள்ளையில் அடக்கம்.

 

இந்தக் கொள்ளையால் மகிழ்ச்சி அடைந்த கஜினி  ஊருக்குத் திரும்பியவுடன் அங்கு சலவைக் கற்களால் ஒரு பெரிய மசூதியைக் கட்டினான். அதில் இருந்த கம்பளங்களில் விதவிதமான நவரத்தினக் கற்களை இழைத்தான்.

 

அவன் செய்த கொள்ளையையும் கொலையையும் நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும்.

 

அந்த பாப ராட்ஸசன் செய்த இன்னும் பல கொடுமைகளை இன்னொரு கட்டுரையில் காணலாம்

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்.

 

 

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)


Written by London Swaminathan


Date: 20 July 2017


Time uploaded in London- 13-50


Post No. 4098


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பவர்மன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னன். கி.பி.900 வாக்கில் ஆட்சி செய்தவன். அவனது பல கல்வெட்டுகள், நடுகல் கல்வெட்டுகளாகும். உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு ஊர் மக்களும் அந்தப் பக்கம் போய்வரும் யாத்ரீகர்களும் வழிபாடு செய்வதை சங்க இலக்கிய நூல்கள் செப்புகின்றன.

 

போர்க்காலங்களில் தாமாக முன்வந்து களபலி கொடுக்கும் வழக்கம் மஹாபாரத காலம் முதல் இருந்து வருகிறது. இதை நவகண்டம் பற்றிய எனது கட்டுரையில் காண்க. அப்படிப்பட்ட நவகண்டம் ஒன்று நடந்த பின்னர் நட்ட கம்பவர்மன் நடுகல்லில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன:-

 

  1. இந்த நாடு கங்கை தோன்றும் கங்கோத்ரி இருக்கும் இமயம் முதல் குமரி வரை ஒன்று!

2.போருக்கு முன், ஒருவன் உயிர்ப்பலி கொடுத்து நாட்டைக் காக்க மக்களுக்கு வீரம் ஊட்டும் வழக்கம் மகாபராத காலம் முதல் — அஸ்தினாபுரம் முதல் — குமரி வரை – இருந்துள்ளது!

 

  1. கல்வெட்டுகளுக்கு தீங்கிழைப்போருக்கு பாவம் வரும்; அவைகளைக் காப்போருக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

உதவிய நூல்; கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பாவ புண்ணியங்களுக்குப் பயந்ததால்தான் நமக்குப் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இன்றோ கோவில் சிலைகளையே திருடி விடுகின்றனர்.

 

மேலும் கங்கையையும் குமரியையும் குறிப்பிட்டதன் காரணம் இவ்விரண்டும் புனித நீர்த்துறைகளாகும். இதன் பொருள் என்ன வென்றால் சாதாரண இடத்தில் பாவம் செய்வதைவிட புனித இடத்தில் பாவம் செய்வது பல மடங்கு கொடியது என்பது தமிழரின் நம்பிக்கை.

 

கல்வெட்டின் பொருள்:-

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் 20-ஆவது ஆட்சி ஆண்டில் இது பொறிக்கப்பட்டது. பட்டை பொத்தன் என்பவனின் வெற்றிக்காக ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் என்பவன் தன்னுடைய தலையை அறுத்து பிடாரியின் பீடத்தில் வைத்தான். அவனுக்கு திருவான்மூர் மக்கள் பறைகொட்டி , கல் நட்டு சிறப்பு செய்தார்கள். நிலமும் கொடையாக அளிக்கப்பட்டது.

 

இக்கொடைக்கு ஊறு செய்வோர் கங்கைக்கரை முதல் குமரி வரையுள்ள மக்கள் செய்த அனைத்து பாவங்களையும் பெறுவார்கள். மேலும் மன்னனுக்கு கால் பொன் அபராதமும் கட்ட வேண்டும்.

 

நாகர்கள் பெயர்கள் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இருபது பேர் வரை உள்ளனர். குபதர் கால கல்வெட்டுகளிலும் பலர் நாகன் என்ற பெயர் உடையவர்கள் ஆவர்.

TAGS: கம்பவர்மன், நவகண்டம்,  கங்கை குமரி, பாவம்

–subham–

சத்ரபதி சிவாஜி: சத்ய சாயிபாபா அருளுரை! (Post No.4097)

Written by S NAGARAJAN

 

Date: 20 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4097

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பெரியோரின் ஆசி

சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்!-ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

ச.நாகராஜன்

 

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா 24-7-2002 அன்று நிகழ்த்திய குரு பூர்ணிமா உரை குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

அதில் அணு ரகசியத்தை விளக்கிய கணாதரைப் பற்றிய அனைத்தையும் விவரிக்கிறார்.

 

அந்த உரையில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு அருமையான சம்பவத்தை எடுத்துரைக்கிறார்.

ஒருமுறை சத்ரபதி சிவாஜி மஹாராஜாவும் அவரது மந்திரியும் மாலை நேரத்தில் உலா சென்று கொண்டிருந்தனர்.  அப்போது எதிரில் ஒரு புத்த துறவி வந்து கொண்டிருந்தார். சிவாஜி தனது மகுடத்தைக் கழட்டி விட்டு அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். மந்திரிக்கோ இது பிடிக்கவில்லை.

 

ஒரு சாதாரண துறவியின் பாதங்களில் மாமன்னனான சாம்ராட் சிவாஜி அடி பணிந்து வணங்குவதா? அவர் மனம் இதை ஏற்கவில்லை.

 

மந்திரியின் மன ஓட்டத்தை சிவாஜி ஒரு கணத்தில் புரிந்து கொண்டார். மந்திரிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

 

சிவாஜி மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக தர்ம வழியில் நின்றவர்; தனது சகலத்தையும் தியாகம் செய்தவர்.

 

ஒரு நாள் தனது மந்திரியை சிவாஜி அழைத்தார். உடனடியாக ஒரு வெள்ளாட்டின் தலை, ஒரு செம்மறி ஆட்டின் தலை, ஒரு மனிதனின் தலை ஆகிய மூன்றையும் கொண்டு வருமாறு உத்தரவு பிறப்பித்தார்.

 

மந்திரிக்கு வெள்ளாட்டின் தலையையும் செம்மறி ஆட்டின் தலையையும் கொண்டு வருவதில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை.

 

ஆனால் மனிதனின் தலை?!!!

சுடுகாட்டிற்குச் சென்று அங்கு ஒரு சவமாக இருந்த மனிதனின் தலையை வெட்டி அதைக் கொண்டு வந்தார்.

மந்திரி கொண்டு வந்த மூன்று தலைகளையும் சிவாஜி பார்த்தார். உடனடியாக சந்தைக்குக் கொண்டு சென்று அவற்றை விற்குமாறு மந்திரியிடம் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

 

வெள்ளாட்டின் தலை மற்றும் செம்மறி ஆட்டின் தலை ஆகிய இரண்டையும் மந்திரியால் உடனடியாக விற்க முடிந்தது.

ஆனால் மனிதனின் தலை? அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

 

இரண்டு நாட்கள் மந்திரி முயன்று பார்த்தார், ஊஹூம், பயனில்லை.

 

யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் சத்ரபதியிடம் சென்று தன் இயலாமையை மந்திரி கூறினார்.

 

உடனே சிவாஜி, “ மந்திரி அவர்களே! பார்த்தீர்களா?  ஒரு துறவியின் பாதங்களில் என் சிரத்தை வைத்து வணங்கிய போது நீங்கள் வெகுவாக வருத்தப்பட்டீர்கள். உடலை விட்டு உயிர் பிரிந்த போது செத்த மனிதனின் தலைக்கு என்ன நேர்கிறது என்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். அதை நிலை தான் ஒவ்வொருவனுக்கும் நேரும். அதற்கு மதிப்பே இருக்காது. ஆகவே உயிருடன் இருக்கும் போது மிகப் பெரும் ஆத்மாக்களின் முன்னர் பணிந்து வணங்கி நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றார்.

 

தர்ம நெறி வாழ்வும் சத்தியமுமே மனிதனுடன் எப்போதும் கூட வந்து அவனைக் காப்பாற்றும்.

 

மந்திரி இதைப் புரிந்து கொண்டார்.

தனது உரையின் இறுதியில் மீண்டும் சிவாஜியைக் குறிப்பிட்ட பாபா, துரியோதனனையும் எடுத்துக் காட்டாகக் கூறினார்.

துரியோதனனின் கடைசி விநாடிகளில் அவன் கூறினான்: “ நான் உயிருட்ன இருந்த வரை மிகவும் மரியாதையுடன் மதிக்கப்பட்டேன். நாளை இந்த உடல் காக்கைகளுக்கும் நரிகளுக்கும் தான் விருந்தாக ஆகப் போகிறது”

இதை உணர்ந்து தர்ம நெறியுடன் வாழ வேண்டும் என்றார் பாபா.

அருளாளர்கள் அனைவருமே பெரியோரைப் பணிந்து அவர்கள் ஆசியைப் பெறுதல் வேண்டு என்பதைத் தங்கள் வாழ்வில் வற்புறுத்தி வந்துள்ளனர்.

 

சத்ரபதி சிவாஜி துகாராம் மஹராஜைப் பார்த்து அவருடனேயே தங்கி விடுவதாகச் சொன்ன போது, “வேண்டாம். ஸ்வராஜ்யமே உனது பணி. அதை அடை” என்று அருளினார்.

சமர்த்த ராமதாஸரோ அவரது குருவாக ஒவ்வொரு விஷயத்திலும் சிவாஜிக்கு அருள் பாலித்தார்.

‘உனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்’ என்று ஆசீர்வதித்த ஸ்ரீ சமர்த்த ராமதாஸர், “நான் உன அருகிலேயே உள்ள பாலிக் கோட்டையில் தான் தங்கியுள்ளேன்” என்று அருளினார்.

அதன் பின் பாலிக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் – “ஆன்றோர் உறைவிடம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.

பெரியோரைப் பணிவது எவ்வளவு பயனைத் தரும் என்பதை சத்யசாயி பாபா சத்ரபதி சிவாஜியைச் சுட்டிக் காட்டிக் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்தது!

***

 

 

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

 

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-16-08


Post No. 4089


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.

கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார். ஆமுக்த மால்யதா என்ற காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அவர் ஒரு வீர வைஷ்ணவர்; திருப்பாவை மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.

ஆமுக்தமால்யதா என்பது ஆண்டாள்- விஷ்ணு கல்யாணம் பற்றிய கவிதை ஆகும்.

 

 

1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டார்; அதை விரிவாக்கினார். இவரது சபையில் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற இருவர் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராம (கிருஷ்ணா)

 

துளுவ வம்சத்தை ஸ்தாபித்தவர். திருப்பதி முதல் திருவண்ணாமலை வரை கோவில்களுக்கு தானம் வழங்கினார்.

 

திரு ஈங்கோய் மலை மீதுள்ள க்ருஷ்ண தேவ மகாராயரின் கல்வெட்டு அவருடைய வீரதீரச் செயல்களை விவரிக்கின்றது. அவருடைய பட்டங்கள் கம்பீரமான சொற்களை உடையது.

 

முதலில் கல்வெட்டின் சுவையான பகுதிகளைக் காண்போம்:

 

இந்தக் கல்வெட்டுக்குத் தீங்கு செய்வோருக்கு காசியில் பிராமணர்களையும் பசுக்களையும் கொன்ற பாவம் வரட்டும் என்று சாபம் தரும் பகுதியைக் கவனிக்கவும்.

பசுவுக்குத் தீங்கு செய்வோருக்கு, அதுவும் காசியில் தீங்கு செய்வோருக்கு வரும் பாபம்= அதாவது பல படங்கு பாவம்!!

 

கடைசியில் ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது; அதன் பொருள்:-

“தான், தானம் செய்வதைக் காட்டிலும் மற்றவர் கொடுத்ததைத் திறம்பட நிர்வகிப்பது இரு மடங்கு பலன் தரும்

பிறர் கொடுத்ததை அபகரித்தால், தான் செய்த புண்ணியங்களும் வீணாகிப் போய்விடும்” என்று கல்வெட்டு எச்சரிக்கிறது.

அருமையான எச்சரிக்கை.

இறை வணக்கமாகக் கல்வெட்டின் ஆரம்பத்திலுள்ள ஸ்லோகம் பரம சிவனின் அருளை வேண்டுகிறது.

இக் கல்வெட்டு கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் மகர சங்கராந்தித் திருநாளன்று (பொங்கல் திருநாள்) மன்னன் எழுந்தருளிய போது சோழ மண்டலத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்களுக்கு பத்தாயிரம் வராகன் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது

 

கோவில்களுக்கு சோடி, சூல வரி, புற வரி, அரச பேறு ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு விளம்புகிறது.

 

விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட மன்னர் எந்தெந்த மன்னரை வெற்றி கொண்டு உயிருடன் சிறைப்படுத்தினார் என்பதையும் இது குறிக்கிறது.

இந்த வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் பொட்டுனூரில் ஒரு வெற்றித் தூண் நிறுவியதையும் கல்வெட்டு சொல்கிறது.

இவைகளில் பெரும்பாலும் தெலுங்குதேச வெற்றிகளாகும். தென்னகத்தின் மிகப் பெரும்பகுதியை ஆண்டவர் ராயர். இவருடைய பொக்கிஷங்களை மதிப்பிட வந்த ஐரோப்பியர் இவைகளை மதிப்பிடவே முடியாது; அவ்வளவு விலைமிகுந்த ரத்தினங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.

 

திருச்சி மவட்டத்தில் திரு ஈங்கோய் மலை மீதுள்ள மரகதாசலேசுவரர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது; கல்வெட்டின் காலம் சக வருஷம் 1439, அதாவது கி.பி.1517.

இதோ அந்தக் கல்வெட்டு

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்துங்க சிரச்சும்பி

சந்த்ர சாமரசாரவே

த்ரைலோக்ய நகராரம்ப

மூலஸ்தம்பாய சம்பவே”

 

“ஸ்ரீ விசயாயாப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதின்மேல் செல்லாநின்ற ஈசுவர (பிலவங்க) சம்வத்சரம் (புஷ்ய மாசத்துப் பௌர்ணமி நாள்) ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வர,

அரியராய   ரவிபாடன்,

பாஷைக்குத் தப்புவராய கண்டன்,

கண்டநாடு கொண்டு,

கொண்டநாடு கொடாதான்

 

பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சதுச் சமுத்ராபதிபதி

(East, South, West, North நாற்கடலை எல்லையாக உடையவர்)

ஸ்ரீ வீரப்ரதாப, ஸ்ரீ வீரகிருஷ்ண தேவ மகாராயர்

சோழ மண்டலத்து விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம், முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூல வரி, புறவரி, அரசபேறு மற்றும் உண்டா னது எல்லாம் சர்வமானியமாக திருவுளம் பற்றின தர்மசாசன ராயசம்.

 

நாம் விசய நகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வ திக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்கமும் யிரிசிக் கொண்டு,

திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக்கொண்டு, வினி கொண்டை, வெல்லம கொண்டை, நாகார்ச்சுன கொண்டை,  கொண்டை வீடு, கொண்டை  பள்ளி ராசமகேந்திரவரம்,  முதலான துர்கங்களும் இரிசிக்கொண்டு,

 

பிரதாபருத்ர கசபதி பிரகலாதன், சிரச்சந்திரன், மல்லூகான், உத்தாண்டகான்,  முதலான பாத்திர சாமந்தரையும் சீவக்கிரகமாகப் பிடித்துக்கொண்டு, பிரதாபருத்திர கசபதியையும் முறியவெட்டி, சிங்காத்திரிக்கு எழுந்தருளி, பொட்டு நூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி,

 

சோள மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திரு ஈங்கோய்மலை, சந்தலைகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர் திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர்,  தாடலங்கோயில், சீர்காழி, ச்ரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீர்மை, புவனேகவீரன் பட்டனச் சீர்மை, ராசராசச்சுர சீர்மை, தஞ்சாவூர்ச் சீர்மை  , வீரமடக்குச் சீர்மை, வழுதலம்பட்டுச் சீர்மை, வழுவத்தூர்ச் சீர்மை பெரம்பூர்ச் சீர்மை,

குழித்தண்டலைச் சீர்மை,  உடபட விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில்  பூர்வம் அரண்மனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம் ஸ்தலயாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே

(அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகரசங்கராந்தி புண்ணியகாலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே)

உண்டவல்லி அநந்தசாயி சந்நிதியிலும்

விசயவாடை மல்லிகார்ச்சுன தேவர் ஆக

தாராபூர்வமாகச் சர்வமானியமாகவிட்டு (தர்மசாசன ராயசமும் பாவித்தோம். இந்த ராயசப்

பிரமணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும்)

சிலாசாசனம் எழுதிவிச்சு பூஜை புனஸ்கரமும் அங்கரங்க    வைபோகமும், திருப்பணிகளும் சாங்கோபாங்கமாக ஆசந்திராதித்த (Moon and Sun) ஸ்தாயியாக நடத்திகொண்டு சுகத்திலே இருக்கவும்

 

இந்த தர்மத்துக்கு அகிதம் (harm) நினைத்தவன் தங்கள் மாதா பிதாவையும் கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக்கடவராகவும்.

 

ஸ்வ  தத்தாத்   விகுணம் புண்யம் பர தத்தானுபாலனம்

பரதத்தாபராரேன ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது

     

Source: Kalvettu- An Intoduction, Archaological Department of Tamil Nadu, year 1976

 

–Subham–

 

அக்பர் பற்றிய 3 சுவையான சம்பவங்கள் (Post No.3989)

Translated by London Swaminathan

Date: 10 June 2017

Time uploaded in London- 14-58

Post No. 3989

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.

All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.

 

 

அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!

ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.

 

இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

அக்பரிடம் வந்த இந்துப் பேய்!

காலரா, அம்மை முதலிய நோய்கள்  தெய்வக் குற்றங்களால்தான்   வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.

 

பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர்,  ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.

 

காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;

“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.

ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்

திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப்  பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.

திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை  ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரப் பிரியன்!

அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)

 

காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.

 

-சுபம்–

சங்க இலக்கியத்தில் வறட்சி! (Post No.3955)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 9-58 am

 

Post No. 3955

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வறட்சி பற்றி பாரத நாட்டு இலக்கியங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கின்றன. மிகவும் அதிசயமான விஷயங்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிந்தது என்ற செய்தியும் வறட்சி பற்றிய மஹாபாரதக் குறிப்பால் தெரியவருகிறது.

மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி நதி வற்றிய செய்தி மஹாபாரதத்திலேயே பல இடங்களில் வருவதால் வேதங்கள் கி.மு 3102-க்கு முந்தையவை என்பது உறுதியாகிறது. வேதங்கள் ஜீவ நதியாக இருந்த சரஸ்வதி நதியை விதந்து ஓதுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருட் துறை அடிப்படையில், மஹாபாரத காலம் கி.மு .1500 என்று எழு தி  இருப்பதை ஏற்றுக் கொண்டாலும்  வேதங்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் என்பது உறுதி ஆகிறது. வேதங்களைத் தொகுத்து அளித்ததாலும் , மஹாபாரதத்தை தொகுத்து வழங்கியதாலும் தான் நாம் ‘கறுப்புத் தீவுக்காரனை’ (க்ருஷ்ண த்வைபாயன) ‘வியாசன்’ (கட்டுரையாளன், எழுத்தாளன்) என்று போற்றுகிறோம்.

 

(( நான் பள்ளியில் படித்த போது யானை பற்றி ஒரு வியாசம் எழுது என்றுதான் கேள்வித்தாளில் இருக்கும்! இப்பொழுது யானை பற்றி ஒரு கட்டுரை எழுது  என்று வருகிறது.))

 

பத்து பிரிவுகளைக் கொண்ட பிராமணர்கள் எப்படி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர் என்றும் தெரிகிறது

முதலில் தமிழில் உள்ள விஷயத்தைப் பார்ப்போம்.

நற்றிணையில் (230) ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

…………

முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தாஅங்கு

இனிதே தெய்ய நின் காணுங் காலே –230

 

பொருள்

பரத்தையிடம் (ப்ர ஸ்த்ரீ) சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து இருக்கிறது (அது போதும்)

 

இவ்வாறு வறண்ட நிலத்தில் பெய்த மழை (நீர், வெள்ளம்) என்ற உவமை சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் வருகிறது. புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் ரகுவம்ச காவியத்தில் இந்த உவமையைக் கையாளுகிறான்:

ராவணன் என்னும் வறட்சியை திருமால் என்னும் மழை போக்கியது- இதுதான் காளிதாசன் சொல்ல வந்த செய்தி (ரகுவம்ச காவியம் 10-48)

 

தேவர்கள் பயிர்கள்; ராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால்-மேகம்; அவர் உதிர்த்த வாக்கு அமிர்தம். பயிர்கள் வறட்சியால் வாடின; மழை பொழிந்தது; நீரால் அவ்வாட்டம் மறைந்தது.

 

மஹாபாரதத்தில் இரண்டு கதைகள்

அங்க தேச மன்னனான லோமபாதன், சில பிராமணர்களுக்கு தீங்கு செய்யவே அவர்கள், அந்த நாட்டில் நீண்ட காலம் வறட்சி ஏற்படட்டும் என்று சபித்தனர். “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை”– என்ற சான்றோர் வாக்கை அறிந்த லோமபாதன், மிகச் சிறந்த ரிஷ்ய ஸ்ருங்கர் என்ற முனிவரை தம் நாட்டுக்கு அழைக்க எண்ணினான். அவரை அழகான பெண்களை அனுப்பி தந்திரமாக அழைத்து வந்தான். நாட்டில் வறட்சி நீங்கியது. தன்னுடைய வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு திருமணமும் முடித்தான் (மஹா. 3-110)

இதில் அங்க தேச வறட்சி பற்றி நாம் அறிகிறோம்.

 

சாரஸ்வத பிராமணர்கள் என்போர் இப்போது கொங்கண தேசத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒருகாலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் வசித்தவர்களாவர். அங்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் வறட்சி நிலவவே இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பல திசைகளுக்கு ஏகினர்.

 

பிரமணர்களை பத்து பிரிவாகப் பிரிப்பர்: பஞ்ச கவுடா (வடக்கத்திய 5 பிரிவு); பஞ்ச திராவிடா =தெற்கத்திய 5 பிரிவு பிராமணர்கள். சாரஸ்வத பிராமணர்கள், கௌடா பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.

 

இரண்டாவது கதை

ததீசி மகரிஷியின் மகன் பெயர் சரச்வத. அவருடைய அம்மா பெயர் சரஸ்வதி. 12 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவியதால் எல்லா ரிஷிகளும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்துவிட்டன. “பசி வந்திடப் பத்தும் போம்” என்பது சரிதானே! அவர்கள் எல்லோரும் உணவைத் தேடி அலைந்தனர். சரஸ்வத மட்டும் வேதங்களைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் (மஹா.9-51)

இதில் பல உண்மைகள் பொதிந்துள்ளன:

  1. நீண்ட 12 ஆண்டுக்கால வறட்சி

2.இதனால் சிந்து சமவெளி காலியனது. சரஸ்வதி நதி வற்றியது. சாரஸ்வத முனிவரின்   தாய் போன்றது அந்த நதி என்ற பொருளிலேயே அவரது தாயார் சரஸ்வதி என்று கூறியதாக நான் நினைக்கிறேன்.

3.சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4.சாரஸ்வத பிராமணர்கள், தாங்கள், சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்ததாகச் சொல்வதற்கும் இந்த மஹாபாரத கதை உதவுகிறது.

 

சம்ஸ்கிருதத்தில் வற்கடம் என்றால் வறட்சி; தமிழ்ச் சொல்லுக்கும் அந்த சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.

 

வியாழன் கிரகமும், வெள்ளி கிரகமும்

 

குரு என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் பிடிக்கும். ஆகையால் 12 ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி  ஏற்படும் என்று சம்ஸ்கிருத நூல்கள் செப்பும் ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும்தான் தொடர்பு அதிகம் மூன்று சங்கப் பாடல்களில் இக்குறிப்பு வருகிறது:-

 

வெள்ளி கிரகம் தென் திசை ஏகியதால் வறட்சி வந்ததாக புற நானூறு 388, பதிற்றுப் பத்து 24; 69 பாடல்களில் வருகின்றது.

 

வெள்ளி தென் திசை சென்றாலும் சோழர் ஆட்சியில் வளம் கொழிக்கும்; வறட்சி வாலாட்டாது என்று மேலும் மூன்று புற நானூற்றுப் புலவர்கள் பாடுவர் ( புற.35, 386, 397)

 

ஆக வியாழன் , வெள்ளி கிரஹம் பற்றி அவ்வளவு கவலை! உலகில் வேறு எந்த நாட்டு விஞ்ஞானியும் கூறாத இக்கருத்துகளை பாரதீயர்கள் மட்டுமே புகன்றனர். வருங்காலத்தில் அவர்களும் கண்டு பிடிக்கும்போது நாம் முன்னரே

சொல்லிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

தேவாரத்தில் வறட்சி

 

தேவாரத்தில் இரண்டு அற்புதங்கள் வறட்சியுடன் தொடர்புடையவை. வறட்சியால் சோழ நாட்டு மக்கள் கஷ்டப் படவே அப்பரும் சம்பந்தரும் சிவபெருமனை வேண்ட அவர் வாசி தீர தங்கக் காசு நல்கினார். அதை வைத்து வயிற்றுக்குச் சோறிட்டனர் இரு பெரும் சைவப் பெரியார்கள். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சுந்தரருக்கு வறட்சி காலத்தில் சிவன் நெற்குவியலை மலை போலக் குவித்துக் கொடு  தார்.

 

சுந்தரருக்குப் படியளக்கும் கிழார், வறட்சி காரணமாக நெல அனுப்பவில்லை. சுந்தரருக்கும் வருத்தம்; நிலக்கிழாருக்கும் வருத்தம்.

இரவில் நிலக் கிழாரின் கனவில் வந்த சிவபெருமான் , நெற்குவியல் வரும் என்று சொல்லிப் போந்தர். மறு நாள் கிராமம் முழுத்ம் நெல். உடனே ஆரூரருக்கு செய்தி அனுப்பினார். ஆரூரர்– சுந்தரர் – – வந்து பார்த்து, இதை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வேன் என்று வழி தெரியாமல் வருந்தினார். சிவன், அவரது கனவில் தோன்றி சிவ கணங்கள் அப்பணியைச் செய்யும் என்று பகர்ந்தார். அவர் சொன்ன மாதிரியே மறு நாள் திரு ஆரூரில் வீடு தோறும் நெல் மலை!

ஆக அற்புதம் ஒரு புறம் இருக்க அதற்குக் காரணமான வறட்சி நமக்கு ஒரு செய்தியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் வறட்சி

 

மதுரையில் எழுந்தருளிய சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைச் சொல்லுவது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணமாகும்

அதில் உக்கிரகுமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கால வறட்சி  ஏற்பட்டது. உடனே முடியுடைய மூவேந்தரும் அகஸ்தியர் வழிகாட்டுதலில் இந்திரனைப் பார்த்து தீர்வு கண்டனர்.

 

ஆக வறட்சி பற்றி மஹாபாரதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை 4000 ஆண்டுகளுக்கான குறிப்புகள் உள்ளன. பிருஹத் சம்ஹிதா முதலிய நூல்களில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் உலகிற்கே நாம் வறட்சி  பற்றி கற்பிக்கலாம்.

–subham–

காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–

கிளியோபாட்ரா- எகிப்திய அதிசயங்கள் -27 (Post No.3820)

Written by London swaminathan

 

Date: 15 APRIL 2017

 

Time uploaded in London:- 8-18 am

 

Post No. 3820

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

உலகப் புகழ்பெற்ற கிளியோபாட்ரா ( Cleopatra VII) , உண்மையில் ஏழாவது கிளியோபாட்ரா. அவளுக்கு முன்னிருந்த ஆறு பேர் பற்றி அதிகம் பிரஸ்தாபிப்பதில்லை. ஏழாவது கிளியோபாட்ரா கி.மு.51 முதல்- கி.மு.30 வரை ஆண்டார். இவர் எகிப்தை டாலமி வம்ச மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் 12-ஆவது டாலமியின் (Ptolemy XII) மகளாகப் பிறந்தாள். கணவர் 13-ஆவது டாலமியுடனும், சகோதரனுடனும் சேர்ந்து சிறிது காலம் ஆண்டார். அவர்கள் கி.மு.48-ல் எகிப்திலிருந்து அவரை வெளியேற்றினர். அவர் உடனே ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசரிடம் (Julius Caesar)  உதவி கோரினார். அதில் பலன் கிடைத்தது. மீண்டும் பட்டமேறினார். மற்றொரு சகோதரரான 14-ஆவது டாலமி அவருடன் சேர்ந்து ஆண்டார். கிமு.47-ல் அவருக்கு சிசேரியன்(Caesarean) என்ற மகன் பிறந்தார். அந்தப் பிள்ளை சீசருடன் மகனே என்று அவர் சாதித்தார். அவரை எகிப்தின் 15-ஆவது டாலமியாக அறிவித்தனர்.

 

 

ஜூலியஸ் சீசர் இறந்த பின்னர் ஆண்டனியுடன் (Antony) உறவு கொண்டு இரட்டைப் பிள்ளைகளைப் (Twins) பெற்றார். அவர் கிளியோபாட்ராவை ராணிகளுக்கெல்லாம் ராணி (Queen of Queens) என்று அறிவித்து தன்னை அரசர்க்கெல்லாம் அரசன் (King of Kings) என்றும் அறிவித்துக் கொண்டார்.

 

ஜூலியஸ் சீசரின் வாரிசான ஆக்டேவியஸ் சீசர் (Octavius Caesar) –கிளியோபாட்ரா ரோம சாம்ராஜ்யத்துக்கு எதிரி என்று கருதினார். கி.மு 30-ல் ஆக்டியம் (Actium)  போரில் ஆண்டனி தோற்கடிக்கப்பட்டார். அவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். கிளியோபாட்ராவும் ஒரு பாம்பைக் கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

  

Stamps on Cleopatra ( Statues in Museums)

இவருடைய அழகு பற்றி இலக்கியங்களில் எழுதப்பட்டபோதிலும் சிலையில் அவ்வளவு அழகு இல்லை. இவர் கறுப்பு நிறத்தவர் என்றும் சொல்லுவர். தான் தற்கொலை செய்யாவிடில் தன்னை ரோம் நகருக்குக் கொண்டுசென்று துன்புறுத்துவர் என்று அஞ்சியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பார் என்றும் சொல்லுவர்.

 

 

கிளியோபாட்ராவுடன் எகிப்தின் 5000 ஆண்டுக் கால ஆட்சி முடிவுற்றது. எகிப்து,  ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இதனாலும் எகிப்திய வரலாற்றில்  கிளியோபாட்ராவை ஒரு மைல் கல் (Mile Stone) என்று சொல்லலாம்.

 

ஏடி ராணி (யதி Queen Eti)

இவர் பண்ட் (Punt) என்னும் தேசத்தின் ராணி. கி.மு.1470 வாக்கில் இருந்தவர். பண்ட் என்னும் தேசம் எது என்பது பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அந்த தேசத்துக்குப் போன ஒரு பயணம் குறித்து எகிப்தில், ஹட்செப்சுட் Hatshepsut (சதாசிவ சுதா) கல்லறையி ல் ஒரு ஓவியம் உள்ளது அது தேர் எல் பஹரி என்னும் இடத்தில் இருக்கிறது. அதில் இந்த ராணி ஒரு கூனல் நோயுடன் காணப்படுகிறார். மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். அவர் பூதாஹார உடல் படைத்தவராக இருக்கிறார். அவருடைய கணவர் பெயர் பெரெக்.(Pereh).

 

 

பண்ட் என்னும் தேசம், எகிப்துக்கு தென் கிழக்கு திசையில் இருந்தது. அங்கிருந்து எகிப்துக்கு வாசனைத் திரவியங்களும் பலவகை மிருகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

ஹட்ஷெப்சுட் HATSHEPSUT (சத் சிவ சுதா)

ஆட்சி செய்த காலம் கி.மு.1473-1458.

 

எகிப்திய ராணிகளிலேயே மிகவும் கீர்த்தி பெற்றவர். திறமைசாலி. பெரிய நிர்வாகி. மன்னர் தத்மோசியின் (THUTMOSE I ) மகள்;  தனது ஒன்றுவிட்ட சகோதரனை மணந்து கொண்டாள்; எகிப்தில் சகோதர-சகோதரி மணம் மிகவும் பிரசித்தம். அவ்ர்களுக்கு ஒரே மகள் நெபரூரே ( NEFERURE நவரரி). ஆனால் ஒன்றுவிட்ட சகோதரர் வேறொரு பெண் மூலம் ஒரு ஆண் மகவை ஈன்றார். அவர் மூன்றாவது தத்மோசியாக பதவி ஏற்றபோது , சிறு பையன்   என்பதால் ஹ ட்ஷெப்சுட் (சத் சிவ சுதா), பதவிவகித்தார். தன்னை பெண் ஹோரஸ் ( Female Horus–சூர்ய தேவி என்னும் கடவுள்) அறிவித்துக் கொண்டார். எகிப்திய மன்னர்கள் இந்துக்களைப்போல மன்னரை கடவுளாகக் கருதினர் (தமிழில் இறைவன், கோ என்றால் அரசன், கடவுள்; கோவில்= கோ+ இல் என்றால் அரண்மனை, ஆண்டவன் குடிகொண்ட இடம்)

இந்த ராணியின் அதிர்ச்டம் எகிப்தில் வளம் கொழித்தது. நல்ல அதிகாரிகள் உதவினர். அவர்களில் ஒருவர் சேனென் முட் ( சேன முத்து).  அவர் பெரிய மேதாவி; கட்டிடக் கலை நிபுணன். கர்னாக் (Karnak) என்னும் இடத்திலுள்ள ராணியின் கட்டிடங்களும் தேர் எல் பஹ்ரி (Deir el Bahri) என்னும் இடத்திலுள்ள சமாதியும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இதில்தான் பண்ட் என்னும் தேசத்தின் கூனல் ராணி ஏட்டியின் (யதி) சித்திரம் உள்ளது.

–Subham–

கல்லீரல் மூலம் ஜோதிடம், ஆரூடம்!(Post No.3818)

Written by London swaminathan

 

Date: 14 APRIL 2017

 

Time uploaded in London:- 14-19

 

Post No. 3818

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால மற்றும் பழைய நாகரீகங்களைச் சேர்ந்தோர் எப்படி ஆரூடம் சொன்னார்கள் ஜோதிடம் பார்த்தார்கள் என்று (Please see below for the link) எழுதினேன். இன்று ஹிட்டைட்ஸ் (Hittites) மக்கள் ஜோதிட நம்பிக்கைகளைப் பார்ப்போம்.

 

ஹிட்டைட்ஸ் என்போர் சம்ஸ்கிருதம் தொடர்புள்ள இந்திய- ஐரோப்பிய மொழி ஒன் றைப் பேசினர். கி.மு.1600 முதல் கி.மு. 1200 வரை 400 ஆண்டுகளுக்கு சிரியா-துருக்கி பகுதிகளை ஆண்டனர்,

 

பிராணிகளை அறுத்து அதன் உடலுறுப்புகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறை பாபிலோனியாவில் இருந்தது. இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்திலும் காணப்பட்டது அதிசயமானதே.

 

பாபிலோனிய முறையிலிருந்து சிறிது மாறுபட்ட முறையை இவர்கள் பின்பற்றினர். அதாவது நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்குப் பதிலை உடல் உறுப்பிலிருந்து பெறுவர். அதாவது வியாக்கியானம் செய்வர். பாபிலோனிய முறை சிக்கலானது ஆனால் ஹிட்டைட்ஸ் கேள்விகள் எளிமையானவை.

 

பாபிலோனியர்களோ, ஹிட்டைட்ஸ்களோ, காசுகொடுத்து ஜோதிடம் கேட்கும் வணிகம் நடத்தவில்லை; அதாவது சோதிடம் ஒரு தொழிலாக இல்லை. பறவைகள் (சகுனம்), பாம்பு ஜோதிடம் ஆகியன இருந்தன. கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்களைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

 

பிராணிகளை வெட்டி அதன் கல்லீரல் (liver), குடல் (Intestine) ஆகியவற்றில் அசாதரணமாக ஏதேனும் காணப்பட்டால் அதைக் கொண்டு ஆருடம் சொன்னார்கள். எண்ணையைக் கொட்டி அது எடுக்கும் வடிவத்தை வைத்தும் எதீர்காலத்தைக் கணித்தனர்.

 

பாம்பு, தேனீக்கள், பறவைகளின் போக்கு, கனவுகள், இரவு நேரத்தில் வாயிலிருந்து எச்சில் வடிதல் முதலியவற்றுக்கும் விளக்கம் கூறும் களிமண் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..

 

ஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர். போகஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய வடிவங்கள் எட்ருஸ்கன் (Etruscan)  நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் பழமையானவை. அதாவ இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முந்தையவை.

 

பாபிலோனிய சொற்கள், ஹிட்டைட்ஸ் ஜோதிடத்தில் காணப்பட்டாலும் அவர்கள் சொன்னதை இவர்கள் அப்படியே ஏற்கவில்லை. ஹிட்டைட்ஸ் மக்கள் மிகவும் சந்தேகப் பேர்வழிகள். ஆ கையால் ஒரே கேள்விக்குப் பல்வேறு சோதிட, ஆரூட முறைகளைப் பின்பற்றி விடைகண்டனர்.

 

சோதிடராகச் செயல்பட்டவர் ஒரு ஆட்டின்மீது கைவைத்து, “வாடிக்கையாளை பிரியப்பாட்டால் இதன் குடல்கள், உடல் உறுப்புகளைச் சோதிக்கட்டும்” என்பார். உடனே வாடிக்கையாளர் அந்த ஆட்டைப் பலி கொடுத்து அதன் உள் உறுப்புகளைப் பார்ப்பார்.

 

மக்களிடம் உடலூனம் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்ததால் அதையே மிருகங்களின் உடலுறுப்புகளுக்கும் பயன்படுத்தினர்.

 

ஒரு பெண்ணுக்கு கண் பார்வையற்ற குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்கு துரதிர்ஷ்டம்; ஒரு குழந்தை பிறந்தவுடன் வாயைத் திறந்து  பேசினால் நாட்டைப் புயல் தாக்கும்;  சிங்கம் போலத் தலையுடன் குழந்தை பிறந்தால் எதிரி மன்னர் தாக்குவார்  – என்றெல்லாம் நம்பினர்.

 

இதைத் தவிர கிரகணங்களால் வரும் தீமைகள் குறித்தும் எழுதிவைத்தனர்:

16 ஆம் தேதி கிரகணம் பிடித்தால், மன்னர், நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவார். அல்லது வேற்று நாட்டு மன்னர் ஆட்சியைக் கைப்பற்றுவார். 20 ஆம் தேதி கிரகஹணம் வந்தால், நாடு கடத்தப்பட்ட இளவரசன் திரும்பி வந்து தந்தையை விரட்டி ஆட்சியைக் கைப்பற்றுவான். இவ்வாறு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆருடம்! ஆக இந்த ஜோதிட (மூட) நம்பிக்கைகள் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே மத்தியக் கிழக்கில் இருந்தன!!!

 

From my old article posted on 19th April 2015:——-

 

பாபிலோனிய, சுமேரிய நம்பிக்கைகள்

 

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.

 

எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு,மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

 

மஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள்,படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா? அடிக்காதா? என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.

 

Read also my articles:

 

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்; posted on 19 April 2015

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

 

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

 

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

 

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

 

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

 

 

–Subham–

ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3790)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:-15-36

 

Post No. 3790

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மகரம் என்றால் சுறாமீன் , முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

 

வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட

உயிரொடு தடுமாறி

களம் தவா நெடுங்கருவியில்கைகளில்

செயிரியர் கலைக் கண்ணால்

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக

அலமரலுறுகின்றார்

பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம்,  இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

 

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

 

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

Elephant Crown of Demetrios

பல்லவ கீரிட அதிசயம்

பல்லவ சாம்ராஜ்யத்திலும் இப்படி ஒரு அதிசய மணிமுடி/ கிரீடம் பற்றிய குறிப்பு கிடைக்கிறது

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

எனது கருத்து:

கல்வெட்டிலுள்ள பல விஷயங்கள் சிற்பத்தில் இல்லை. சிற்பத் திலுள்ள பல விஷயங்கள் இலக்கியத்தில் இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

துர்கையின் மான் வாஹனம் பற்றி சிலப்பதிகாரம், தேவாரம் (கலையதூர்தி) போன்ற பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் நமது கோவில்களில் மான் வாஹன துர்கையைப் பார்க்க முடியாது. படங்களிலும் கூட மான் வாஹனம் கிடையாது. சிங்கம் அல்லது புலி வாஹனம்தான் இருக்கும். ஆனால் இராக், துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் மான் வாஹனத்தில் தேவியர் பவனி வரும் சிலைகள் உள்ளன. இது துர்கைதான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு பெயர்களால் அவளை அழைப்பர்.

 

ஆக, “கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற கதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் உளது. எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

 

–Subham—