A 400-year-old temple in Japan is attempting to hot-wire interest in Buddhism with a robotic priest it believes will change the face of the religion — despite critics comparing the android to “Frankenstein’s monster.”
A robot priest!
The android Kannon, based on the Buddhist deity of mercy, preaches sermons at Kodaiji temple in Kyoto, and its human colleagues predict that with artificial intelligence it could one day acquire unlimited wisdom. “This robot will never die, it will just keep updating itself and evolving,” priest Tensho Goto said.
Chants prayers
The adult-sized robot began service earlier this year and is able to move its torso, arms and head. But only its hands, face and shoulders are covered in silicone to replicate human skin. Clasping its hands together in prayer and speaking in soothing tones, the rest of the droid’s mechanical parts are clearly visible.
A gender-neutral robot
Wiring and blinking lights fill the cranial cavity of its open-top head and snake around its gender-neutral, aluminium body. A tiny video camera installed in the left eye completes an eerie, cyborg-like frame seemingly lifted straight out of a dystopian Hollywood sci-fi thriller.
The cost!
Developed at a cost of almost $1m in a joint project between the Zen temple and renowned robotics professor Hiroshi Ishiguro at Osaka University, the humanoid — called Mindar — teaches about compassion and of the dangers of desire, anger and ego.
Reaching younger generations
With religion’s influence on daily life flat-lining in Japan, Goto hopes Kodaiji’s robot priest will be able to reach younger generations in a way traditional monks can’t.
சுமார் 700 ஆண்டுகளுக்கு
முன்னர் சைவர்கள் கோயில் என்று போற்றும் தில்லைச் சிதம்பரத்தில் தில்லை வாழ்
அந்தணர் குலத்தில் அவதரித்த பெரியார் உமாபதி சிவாச்சார்யார். அவர் பல நூல்களை
இயற்றியுள்ளார். அவை சைவ சித்தாந்தத்தின் தூண்களாக விளங்க்குகின்றன. தமிழிலும்
ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை இருந்ததால் அவர் இரு மொழியிலும் புஸ்தகங்கள் இயற்றினார்.
அவற்றுள் ஒன்று நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம். அதில் தில்லையைச் சுற்றி வளரும் 75
தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். கோவில் அருகில் இத்தனை
மரம் செடி கொடிகள் பாதுகாக்கப்பட்டது இந்துக்களுக்கு இயற்கை மீது எவ்வளவு அன்பு
இருந்தது என்பதைக் காட்டுகிறது
தாவர இயல் அறிவும் பரிவும் அந்த
அளவுக்குப் பரவி இருந்தது.
அவ்வப்போது இது போன்ற அதிசயச்
செய்திகளை என்னுடன் பகிர்ந்து மகிழும் லண்டன் வாழ் திருச்சி கல்யாண சுந்தர
சிவாச்சாரியார் அனுப்பிய பக்கத்தில் 75 தாவரங்களின் பெயர்கள் உள்ளன. படித்தும் அவைகளை
வளர்த்தும் மகிழ்வோமாக:-
சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப்
பாட்டில் கபிலர் எனும் பிராமாணப்புலவர் ஒரே மூச்சில் 99
தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த சாதனை
உமாபதி சிவாச்சார்யாரததான் இருக்க வேண்டும்.
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-8-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு பதிமூன்றாம்)
கட்டுரை – அத்தியாயம் 429
நீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!
Face Drawing Robot
ச.நாகராஜன்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தரும் அதிசயங்களுக்கு முடிவே இல்லை.
இப்போது புதிய ஒரு கண்டுபிடிப்புச் செய்தி! நீங்கள் பேசினால் போதும். ஏஐ எனப்படும்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உங்களின் முகத்தை வரைந்து விடும்!
ஆணா,பெண்ணா, எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர், வயது என்ன என்பது உள்ளிட்ட
விவரங்களை முகம் காட்டி விடும்.
சிறிது நேரம் பேசினால் போதும். ஸ்பீச் 2 ஃபேஸ் (Speech2face) என்று பெயரிடப்பட்டிருக்கும்
கம்ப்யூட்டர் மனித மூளை எப்படிச் செயல்பட்டு சிந்திக்குமோ அதே போல
சிந்தித்துச் செயல்படுகிறது. பல லட்சம் என்ற கணக்கில் கல்வி
புகட்டும் வீடியோக்களின் மூலமாக இந்தக் கம்ப்யூட்டருக்கு விஞ்ஞானிகள் பயிற்சி
தந்துள்ளனர்.இந்த வீடியோக்களில்
இண்டர்நெட்டில் ஒரு லட்சம் பேர்கள் பேசுவது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தரவுகளின் மூலமாக கம்ப்யூட்டர் ஸ்பீச் 2 ஃபேஸ், குரல் நாண்களுக்கும் மனித
முகத்தில் உள்ள சில அம்சங்களுக்கும் இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்து முகத்தை
வரைந்து விடுகிறது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
arXiv என்ற
அறிவியல் பத்திரிகையில் 23-5-19 இதழில் இந்த அதிசயச் செய்தி வெளியாகியுள்ளது.
மூளை அமைப்பானது பேச்சில் உள்ள சில குறியீட்டு அம்சங்களை உணர்ந்து கொண்டு பேசுவது ஆணா அல்லது பெண்ணா, அவரது வயது என்ன, அவர் எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து தனது அறிக்கையை வழங்குகிறது.
Robot Waiters in Bangalore Restaurant
இந்த கம்ப்யூட்டர் நுண்ணறிவு இன்னும்
முழுமையானதாக ஆகி விடவில்லை என்பதால் சாதாரணமாக ஒரு முகம் எப்படி இருக்கும் என்பதையே
சுட்டிக் காட்டுகிறது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் முகத்தையும் சுட்டிக் காட்ட இன்னும்
அதிக காலம் ஆகலாம்.
ஏற்கனவே நடைபெற்ற ஏராளமான சோதனைகளில்
நுண்ணறிவு இப்படி முகம் காட்டும் வல்லமை படைத்தது என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளது.
Alogrithm
எனப்படும் விதிமுறை
சில கோளாறுகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் சீன மொழியைப் பேசும்
போது அது ஆசியாவைச் சேர்ந்தவரின் முகத் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அவரே இன்னொரு வீடியோவில்
ஆங்கில மொழியைப் பேசினால் அது வெள்ளைக்காரரின் முகத்தோற்றத்தைக் காண்பிக்கிறது.
உலக மக்களின் ஜனத்தொகையோ 750 கோடி.
ஆனால் கம்ப்யூட்டர் அறிந்து கொண்ட அறிவோ ஒரு லட்சம் வீடியோக்கள் மூலமாகத் தான். ஆகவே
இது 750 கோடி பேரையும் துல்லியமாகக் கணிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது என ஆய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி செயற்கை நுண்ணறிவின் இந்தச்
செயல்பாட்டைக் கண்டு விஞ்ஞானிகள் ஆரவாரிக்கையில்
இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் செயற்கை நுண்ணறிவு ஒரு காலத்தில் மனித
இனத்தையே அழித்து விடும் என்று கடுமையாக எச்சரித்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
செயற்கை நுண்ணறிவிற்கு ஆதரவாகப் பேசுவோரோ
அதன் சில அபூர்வ உபயோகங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
உலகில் எத்தனை மிருகங்கள் உள்ளன, அவை
எங்கெங்கு உள்ளன என்பதை விஞ்ஞானிகள் அறிய முடியாமல் தவித்தனர். சாடலைட்டுகளும் ஜிபிஎஸ்
சாதனங்களும் இதைக் கண்டுபிடிக்க போதுமான அளவில் இல்லை. இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த பெர்ஜெர் உல்ப் (Bergr
Wolf), AI – செயற்கை நுண்ணறிவின் – மூலமாக ஒரு
வழிமுறையைக் கண்டுபிடித்தார். மிருகங்களின்
பிரத்யேகமான தடங்களை வைத்து அது இருக்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, ஆணா, பெண்ணா உள்ளிட்ட
அனைத்து விவரங்களையும், ஏ-ஐ தந்து விட்டது!
2015இல் மேற்கொண்ட ஒரு பிரம்மாண்டமான
போட்டோ பிடிக்கும் இயக்கத்தின் மூலமாக ஆப்பிரிக்க சிங்கங்கள் கென்யாவில் ஏராளமான குட்டி
வரிக்குதிரைகளைக் கொல்வது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் காப்பாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலமாக வெறும் போட்டோக்களை வைத்தே மிருகங்கள்
செல்லும் பாதை, அவற்றின் எண்ணிக்கை இப்போது அறியப்படுகிறது!
ஸெப்ஸிஸ் () எனப்படும் இரத்த நச்சுப்பாட்டை ஆரம்பத்திலேயே
அறிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்றி விட முடியும். ஆனால்
இதை அறிவதற்கு இப்போது ஏஐ உதவுகிறது. இதனால் பல்வேறு கொடிய வியாதிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு
உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் பல நோயாளிகள் பிழைக்கின்றனர். ஏஐ மருத்துவத்தில்
இன்று ஒரு பெரும் புரட்சியையே செய்து வருகிறது!
வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் நேரிடும்
காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமாக காரியம் இல்லை. ட்ரோன்கள்
போன்ற நவீன் சாதனங்கள் கூட இடிபாடுகளைச் சிக்கிக் கொண்டவர்களைப் பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க
முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச்
சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு அவர்கள்
காப்பாற்றப் படுகின்றனர்.
‘கம்ப்யூட்டர் அட்டாக்’ எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு
புரொகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன; பல மென்பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதை எப்படி அறிவது? கணினி நிபுணர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்தக் காலத்தில் ஏஐ அவர்களுக்கு
உதவியாக செயல்பட ஆரம்பித்து விட்டது. பதினைந்தே நிமிடங்களில் தவறுகளை இனம் கண்டு உரிய
அறிவுரைகளை இப்போது ஏஐ தருகிறது!இதனால் க்ரிப்டோ செக்யூரிடி (Crypto Security – கம்ப்யூட்டர் பாதுகாப்பு) உறுதிப்படுத்தப்பட்டு விட்டது!
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு
உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது.
இப்படி பல அதிசய செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவே காரணம் என்பதால் அதன் ஆக்கபூர்வமான வழிமுறைகளுக்கு உலகெங்கும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இனி உலகம் செயற்கை நுண்ணறிவு மயம் தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ராபர்ட் வில்ஹெம் புன்சென் (Robert Wilhem
Bunsen (1811-1899)) ஜெர்மனியைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி.
கேஸ் பர்னரைக் கண்டுபிடித்ததால் அவரை கௌரவிக்கும் விதமாக அதற்கு புன்சென் பர்னர் என்றே
பெயரிடப்பட்டது. அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் – காப்புரிமை எடுக்க விரும்பவே
இல்லை. விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகக் கூடாது என்பது
அவரது கொள்கை.
தனது இளமைக் காலத்தில் அவர் மலையேறுவதை
ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வயதாகி விட்ட
காலத்தில் அவரால் இளமைத்துடிப்புடன் முன்பு ஏறியது போல ஏற முடியவில்லை. இதற்கு அவர்
ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தனது சக தோழர்களுடன் ஒரு சிகரத்தை நிர்ணயிப்பார். மலைச்
சிகரத்திற்கு ஏறும் வழியின் ஆரம்பத்தில் நல்ல நிழல் தரும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து
தன் சகாக்களை அங்கு வருமாறு அழைப்பார்.
நிழலில் நல்ல ஓய்வான இடத்தில் அமர்வார், ஒரு சிகாரைப் பற்ற வைப்பார். தனது கைக்குட்டையில் ஒரு துளையை சிகாரால் போடுவார். அந்த கைக்குட்டையை முகத்தில் மூடி பூச்சிகள் தன்னைக் கடிக்காதவாறு பாதுகாப்பு செய்து கொள்வார். பின்னர் தான் போட்ட துளையில் சிகாரை சொருகி அதன் மூலம் புகை பிடிக்க ஆரம்பிப்பார். மலை ஏறிவிட்டு அவரது சகாக்கள் திரும்பும் வரை அங்கேயே நன்கு ஓய்வெடுப்பார்; அவர்கள் வந்தவுடன் மலையேறி முடிந்து விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சியுடன் அவர்களுடன் திரும்புவார். வயதானாலும் பழைய பொழுதுபோக்கை அவர் இந்தவிதமாக விடவில்லை!
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் 14-8-2019 அன்று
காலை 10.45 மணிக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியை நிகழ்நிலையில் எங்கிருந்தாலும்
கேட்கலாம். கேட்க வேண்டுகிறேன்.
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும்
இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல்
10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 9-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஒன்பதாம் உரை இங்கு
தரப்படுகிறது.
இல்லங்களில்
ஆற்றல் திறனைக் கூட்ட வழிகள்!
ச.நாகராஜன்
ஒவ்வொரு இல்லத்தில் வசிப்பவரும் பணத்தைச் சேமிக்க உரிய வழிகளைக்
காண விழைவது இயல்பு. சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், மின் கட்டண பில்லைக்
குறைப்பதற்கான வழியைக் காண்பது அவற்றுள் ஒன்று.
ஆற்றல் திறனைக் கூட்டும் வழிகளைக் கையாளுவதன் மூலமாக பணத்தையும்
சேமிக்க முடியும்; சுற்றுப்புறச் சூழலையும் நல்ல முறையில் காக்க முடியும். சில வழிகள்
இதோ:
வீட்டில் கோடைகாலத்தில் ஏர் கண்டிஷனர் எனப்படும் குளிர் சாதனங்களைப்
பயன்படுத்துவது இன்றியமையாத ஒரு பழக்கமாக இன்று ஆகி விட்டது. இதில் வெப்பநிலையில் ஒரு
டிகிரி மாறுபாடு கூட பெருமளவில் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான வழியைக் காட்டும். தேவையான
டெம்பரச்சரில் – வெப்பநிலையில் குளிர் சாதனங்களை அமைத்துக் கொள்வதோடு குறிப்பிட்ட நேரப்
பயன்பாட்டையும் நிர்ணயித்துக் கொள்வது பெரும் பலனைத் தரும்.
மின்னணு சாதனங்களை அவைப் பயன்பாட்டில் இல்லாத போது ப்ளக்கிலிருந்து
எடுத்து விடுதல் வேண்டும். இது ஆற்றலைச் சேமிக்க உள்ள வழிகளில் மிக முக்கியமானதாகும்
; எளிதானதும் கூட!
கணினிகள், போன்கள், டிஜிடல் கேமராக்கள் என இப்படிப்பட்ட மின்னணு
சாதனங்களின் பட்டியல் நீளும். ஆனால் இவற்றை அவ்வப்பொழுது ப்ளக்கிலிருந்து எடுத்து விட்டால்
மாத முடிவில் நம்ப முடியாத அளவு சேமிப்பு ஏற்படும். மின்னாற்றலும் மிகக் குறைவாகவே
பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்கூடாகப் பார்த்து அறியலாம்.
மின்னணு சாதனங்களைப் புதிதாக வாங்கும் போது அவை ஆற்றலுக்கான
தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சரி பார்த்து வாங்க வேண்டும்.
வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் (Refrigerator) மிக அதிகமாக மின்னாற்றலைப் பயன்படுத்தும் ஒரு சாதனமாகும். இதன் கதவை அழுத்தமாக
மூடுவது இன்றியமையாதது. அத்துடன் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் ரப்பர் சீலை (Rubber Seal) அடிக்கடி
சரிபார்த்து மாற்ற வேண்டியிருப்பின் உடனே மாற்றி விட வேண்டும். ஃபிரிட்ஜின் வெப்பநிலையைச்
சரியாக இருக்கும் படி அமைத்துக் கொள்வதோடு அவ்வப்பொழுது அதைச் சரி பார்க்கவும் வேண்டும்;
அதைச் சுத்தப்படுத்தவும் வேண்டும்.
வாழ்க்கை முறையை எளிதாக மாற்றிக் கொள்வதன் மூலம் வாஷிங் மெஷின்,
டிஷ் வாஷர் உள்ளிட்ட ஏராளமான மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம் அல்லது
தவிர்க்கலாம்.
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும்
இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல்
10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத்
தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 8-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட எட்டாம் உரை இங்கு
தரப்படுகிறது.
காற்றின்
தரம் பற்றிய குறியீட்டு எண்!
நாளுக்கு நாள் உலகம் வெப்பமயமாவதாலும் காற்றின் தரம் குறைந்து
கொண்டே போவதாலும் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலை மாற ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது. காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண் Air Quality Index என அழைக்கப்படுகிறது.
இது 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்கப்படக் கூடிய சூழ்நிலையைக்
குறிக்கிறது. 201 முதல் 300 வரை இருப்பின் அது அபாயகரமான சூழ்நிலை இருப்பதையும் தரமற்ற
காற்றை சுவாசிக்கும் நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
காற்றின் தரம் குறைவதற்கான மிக முக்கிய காரணம் வாகனங்களிலிலிருந்து
வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களே.
நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாத தரம் வாய்ந்த வாகன எஞ்ஜின்கள்,
வாகனங்களின் தரமான பராமரிப்பு, வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்தல் ஆகியவை பெரு நகரங்களின்
காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்துவதற்கான சில வழிகளாகும்.
ஒவ்வொரு வாகனத்திற்குமான, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்பதற்கான
தரச் சான்றிதழ் பெறுவதும், இன்றியமையாத ஒன்றாகும். அத்துடன் சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்தும்
வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதும் ஒரு நல்ல வழி!
ஒவ்வொருவரும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தனித்தனியே காரில் செல்வதைத்
தவிர்த்து பலரும் இணைந்து ஒரு வாகனத்தில் செல்லும் பழக்கத்தையோ அல்லது மெட்ரோ ரெயில்
பயன்பாடு அல்லது அலுவலகம் ஏற்பாடு செய்யும் பஸ்ஸில் பயணம் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால்
நச்சுப் புகை வெளியேற்றம் நிச்சயம் குறைவு படும்.
பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter – PM) எனப்படும் துகள்மப் பொருள்கள்
குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது, அவற்றை சுவாசிப்பவருக்கு
ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன.
அன்றாட காற்றின் தரக் குறியீட்டு எண்ணை அறிவது இன்றைய வாழ்க்கையில்
ஒரு மிக முக்கியமான அம்சமாகி விட்டது.
மிக மோசமான குறியீட்டு எண் இருப்பதை அறிந்து கொண்டால் வெளியில்
செல்லாமல் இருப்பது, அவசியம் நேர்கையில் வெளியில் செல்லும் போது முகத்திற்கு காப்புறை
அணிவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
ஒரு நகரின் ஆரோக்கியமான
வளி மண்டலத்தை அந்த நகரைச் சேர்ந்தவர்களே நிச்சயமாக உருவாக்க முடியும்!
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 16-7-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள
(ஒன்பதாம் ஆண்டு பன்னிரெண்டாம்) கட்டுரை – அத்தியாயம் 428
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 6
சுறா மீன்களைக்
கண்டு அஞ்சாத மைக்
ரட்ஸன்
சுறாமீன்கள் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம் ஏற்படும்.
ஆனால் மைக் ரட்ஸன் (Mike Rutzen) அவற்றிற்கு பயப்படாததோடு பார்வையாளர்களையும் பாதுகாப்பான ஒரு கூண்டில் வைத்து
அவற்றிற்கு நடுவே நிற்க வைத்து அற்புதமான அனுபவத்தை வழங்குகிறார் நடுக்கடலில்!
1970, அக்டோபர் 11ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் பிறந்த ரட்ஸன்
ஒரு இயற்கை வளப் பாதுகாப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர். சுறாமீன்களின் இனம் அருகி
வருவதை எண்ணி மனம் வருந்திய இவர் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பெரும்
புகழ் பெற்றார். 2007இல் எடுக்கப்பட்ட இவரது ஷார்க் மேன் (Sharkman)
பிரபலமான டாகுமெண்டரி படம். வெள்ளைச் சுறாக்களைப் (White Sharks) பற்றி
அதிகம் கவலைப்படும் இவரது சாகஸங்களை யூ டியூபில் உடனே காணலாம். உலகெங்கும் ஷார்க் கேஜ்
டைவிங் (Cage diving) பிரபலமாக இவரே
முக்கிய காரணம்!
ஓடும் காரின்
முன் குட்டிக்கரணம் அடிக்கும் ஆரான் இவான்ஸ்
31 வயதே ஆகும் ஆரான் இவான்ஸ் (Aaron Evans) ஒரு அபூர்வப் பிறவி. 30 மைல் வேகத்தில் வரும் காரின் முன்னர் குட்டிக்கரணம் அடித்து அனைவரையும் அசர வைப்பவர் இவர். இப்படி மூன்று கார்கள் படு வேகத்தில் வர அவற்றின் முன் குட்டிக்கரணம் அடித்ததால் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் இவரை படுவேகமாகக் குட்டிக்கரணம் அடிப்பவர் என அங்கீகரித்துள்ளது. இவருக்கு ஸ்பிரிங் என்ற செல்லப் பெயரும் உண்டு. ப்ரூஸ் லீயின் திரைப்படத்தைப் பார்த்து தான் உத்வேகம் பெற்றதாக இவர் கூறுகிறார். தான் செய்வதை அனைவரும் செய்ய முடியும் என்று கூறும் இவர், அதற்கென தனக்கு உள்ளிருக்கும் ஆற்றலைப் பயிற்சி செய்து வெளிக் கொணரலாம் என்கிறார். தனது ஸ்டண்ட் சாகஸங்களை இவர் இப்போது உலகெங்கும் நிகழ்த்தி வருகிறார்.
பறவை மனிதன் ஜோக் சாமர்
ஜோக் சாமர் (Jokke
Sommer) உயரமான இடங்களிலிருந்து குதிப்பதில் வல்லவர். பேர்ட் மேன்
(Bird Man) என்ற செல்லப் பெயர் பெற்றவர். பிரான்ஸில் உள்ள 3842
மீட்டர் (12601 அடி) உயரமுள்ள அகுல்லி டு மிடி (Aguille du Midi) மலையிலிருந்து இவர் குதித்தது
உலகின் மிகப் பெரிய சாகஸம் என்ற புகழைப் பெற்றது. பல லட்சம் பேர்கள் இவரது யூ டியூப்
நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பரவசம் அடைகின்றனர்.
காலநிலையைச் சொல்லும்
ஆர்லாண்டோ செர்ரல்
ஆர்லாண்டோ செர்ரல்
(Orlando L. Serrell) 1968 ஆம் ஆண்டு பிறந்தவர்.1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
17ஆம் தேதி பந்து ஒன்று அவரது தலையின் இடது பக்கத்தில் வந்து அடிக்க அன்றிலிருந்து
அவருக்கு ஒரு விசேஷ திறமை உருவாயிற்று! அதாவது காலண்டரில் எந்த ஒரு தேதியைச் சொன்னாலும்
அன்று காலநிலை, (தட்ப வெப்ப நிலை) எப்படி இருந்தது என்று சொல்லும் அரிய திறமையைப் பெற்றார்.
அது மட்டுமல்ல, அந்த விபத்து நடந்த தினத்திலிருந்து எந்த நாளைக் குறிப்பிட்டுக் கேட்டாலும்
அன்று தான் என்ன செய்தேன் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். இந்தத் திறமை அவருக்கு எப்படி
ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. உலக விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
சாதாரணமாக ஒருவர் தனது வயிற்றில்
ஒரு லிட்டர் தண்ணீரைத் தான் கொண்டிருக்க முடியும். ஆனால் டிக்ஸன் ஆப்பாங் (Dickson
Oppong) தனது வயிற்றில் நாலரை லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறார். உலகின்
அதிசயமான வயிறைக் கொண்டவர் என்ற புகழையும் பெறுகிறார். 1967ஆம் ஆண்டு காணாவில்
பிறந்த இவர் தனது நிகழ்ச்சிகளை பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் நிகழ்த்தி வருகிறார்.
பீச்சி அடிக்கும் நீரூற்று நீரைப் போல ஒரே சமயத்தில் தன் வயிற்றில் உள்ள நாலரை லிட்டர் நீரையும் இவர் வாய் வழியே வெளியேற்றுவது அதிசய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது!
செங்குத்தான
சுவர்களில் ஏறும் ஜோதி ராஜு
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் ஜோதி ராஜு (Jyoti Raju).செங்குத்தான சுவர்களில் எந்த
வித உதவி சாதனமும் இன்றி வெறுங்கைகளாலேயே சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறார் இவர்.
சித்ரதுர்காவில் உள்ள கோட்டையில் இவர் ஏறியது இவருக்கு பெரும் புகழைத் தந்தது. குரங்கு
மனிதன் (Monkey Man) என்ற செல்லப் பெயர் இவருக்கு
உண்டு. எப்படி இந்த சாதனையைச் செய்ய உங்களால் முடிகிறது என்று கேட்ட போது, “குரங்குகளிடமிருந்து
இதைக் கற்றேன்” என்று
பதில் கூறினார் இவர்!
மின்சார மனிதன் ஸ்லாவிஷா பஜ்கிக்
ஸ்லாவிஷா பஜ்கிக் (Slavisha Pajkic) ஷாக்
அடிக்கும் மனிதர். ஆம், ஒரு அறையில் உள்ள குளிர்ந்த நீரை, கொதிக்க வைக்கும் 97 டிகிரி
செல்ஸியஸ் அளவு சூடாக்கி விடுவார். அதாவது அவரது உடம்பிலிருந்து மின்சாரம் நீரில் பாய்ந்து
அதைக் கொதிக்க வைக்கும். அவருக்கு எலக்ட்ரிக் மேன் , பேட்டரி மேன் என்றெல்லாம் பெயர்
உண்டு. தனது உடலில் மின்சாரத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு அதை நினைத்த நேரத்தில்
வெளியிடும் சக்தி கொண்ட அபூர்வ மனிதர் இவர். சாராயத்தில் நனைக்கப்பட்ட ஒரு துணி இவர்
உடம்பின் மீது பட்டால் போதும், அது பற்றி எரியும்!
இதுவரை ஏராளமான வித்தியாசமான வல்லுநர்களைப் பார்த்தோம். இவர்கள்
தாம் உலகை வியக்க வைக்கும் பெண்மணிகள்; வீரர்கள்!
இதே போல கைரேகையைப் பார்த்தவுடன் பிறந்த நாள், நட்சத்திரம் சொல்லும்
நாடி ஜோதிடர்கள், ஒரு கம்பத்தின் உச்சியில் ஒரு நொடியில் ஏறும் வீரர்கள், கரகாட்டம்,
ஒயிலாட்டம் ஆகியவற்றில் சாதாரண மனிதத் திறனையும் மீறி விந்தைகள் காட்டுவோர், வர்மப்புள்ளியால்
விந்தைகள் காட்டும் கரத்தாண்டக வீரர்கள் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகும் அளவு
விந்தை வீரர்களை தமிழகத்திலும், ஏன், இந்தியாவின் பல பகுதிகளிலும் காணலாம். ஆனால் அவர்களை
ஒருங்கிணைத்து அவர்கள் திறனைக் காட்டும் தொலைக்காட்சிகள் தான் இங்கு இல்லை போலும்!
இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தானே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான டாக்டர் ஸ்டோரி மஸ்க்ரேவ் (Dr.
Story Musgrave) ஆறு பட்டங்களைப் பெற்றவர்; ஒரு மருத்துவர், கணித மேதை. கப்பல் படையில் வேலை பார்த்தவரும்
கூட. அவர் நாஸா விண்ணில் ஏவிய விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரரும் கூட. அவர் 1994ஆம்
ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் விண்ணில் தான் பார்த்த ஒரு அதிசயத்தை விளக்கினார் இப்படி”
“இரண்டு விண்வெளிப் பயணங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு சரியான விளக்கமே
எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு பாம்பை நான் விண்வெளியில் பார்த்தேன்.ஏழு அல்லது எட்டு
அடி நீளம் இருக்கும், அது தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்தது. நீங்கள் விண்வெளியில்
அதிகமாகப் பறக்கப் பறக்க நம்ப முடியாத பலவற்றைக் காணலாம்.நிஜமாகவே ஏராளமான உயிரினங்கள்
விண்வெளியில் உள்ளன!”
இது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அவரைக் கேட்ட போது அவர், “உயிருள்ள பல
உயிரினங்கள் பெரும் நாகரிகம் போல வளர்ச்சி அடைந்துள்ளன. 1000 லட்சம் ஆண்டுகளாக அவை
அங்குள்ளன. அவை எவ்வளவு முன்னேற்றமடைந்த ஜந்துக்கள் என்பதையோ அவை அங்கு என்ன செய்கின்றன
எனபதையோ நம்மால் கணிக்கவே முடியாது. ஆகவே தான் அவற்றுடன் தொடர்பு கொள்ள நான் முயற்சிக்கிறேன்.
என்னை ஒரு கிறுக்கு என்று நினைக்கலாம். அவற்றிடம் என்னிடம் வாருங்கள் என நான் அழைக்கிறேன்” என்றார்.
இவர் மட்டுமல்ல, இன்னும் பல விண்வெளி வீரர்களும் இப்படி விண்வெளியில் தாங்கள் கண்ட
பல அற்புத பறக்கும் பொருள்கள் பற்றிக் கூறி உலக மக்களை வியப்படைய வைக்கின்றனர்!