2900 ஆண்டுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை சிகிச்சை! (Post No.2754)

brain

Written  BY S NAGARAJAN

Date: 24 April 2016

 

Post No. 2754

 

 

Time uploaded in London :–  15-28

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 2016, ஏப்ரல் 22 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை!

 

ச.நாகராஜன்

brain stampr1

2900 ஆண்டுகளுக்கு முன்னரே திபெத்திய மருத்துவர்கள் மூளை அறுவை சிகிச்சை செய்தனர். அதை மிகவும் பிரமாதமான முறையில் செய்ய இந்திய மருத்துவர் ஒருவரே உதவி செய்தார் என்ற ஆய்வுச் செய்தி பரபரப்பூட்டும் ஒரு செய்தி!

லாஸாவில் உள்ள திபெத்திய பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் கர்மா ட்ரின்லே (Karma Trinley) திபெத்திய கலைக் களஞ்சியமான திரிபிடகத்தை ஆராயப் புகுந்த போது அவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

திரிபிடகம் என்பது  புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெரும் அறிவுக் களஞ்சிய நூல். அதில் சூத்ரங்கள், வினயா, அவி-தர்மா ஆகியவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. முதலில் வாய்வழியாக பரப்பப்பட்ட திரிபிடகம் பின்னால் கி,மு.மூன்றாம் நூற்றாண்டில் நூலாக எழுதப்பட்டது. சம்ஸ்கிருத திரிபிடகத்தை திபெத்திய மொழியில்  மொழியாக்கம் செய்தனர்.

 

 

இது இரு பகுதிகளைக் கொண்ட நூல்.முதல் பகுதி காங்யுர். அடுத்த பகுதி டாங்யுர். காங்யுர் புத்தரின் போதனைகளைத் தொகுத்துத் தருகிறது. டாங்யுர் காங்யுர் கூறும் புத்தரின் போதனையை விளக்குவதோடு விரிவுரையையும் தருகிறது. இதில் தத்துவம், தர்க்கம், இலக்கியம்,மொழியியல்,கலை, வானவியல், மருத்துவம், கட்டிடக்கலை, பஞ்சாங்க கணிதம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் அடங்கியுள்ளன.

 
இந்தியாவிலிருந்து மிகச் சிறந்த அறிவுத் தொகுதிகள் திபெத், சைனா, சிலோன்,பாலி, சுமத்ரா ஆகிய அண்டை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

brain stamps2 (2)

 

திபெத்தைச் சேர்ந்த கூர்மையான அறிவை உடைய ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் இந்திய தொழில்நுட்பத்தால் கவரப்பட்டு அவற்றை நன்கு கற்று தங்கள் நாட்டில் அதைப் பரப்ப ஆர்மபித்தனர். குறிப்பாக மருத்துவத் துறையில் மிகப் பெரும் விற்பன்னரான தன்வந்த்ரி மற்றும் அவரது சீடரான சுஸ்ருதர் ஆகியோர் மிக அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தனர். இவற்றைத் தொகுத்த சுஸ்ருதர்  சுஸ்ருத சம்ஹிதா என்ற நூலை இயற்றினார். அதில் அரிய மருத்துவ விஷயங்களை அவர் விளக்கியுள்ளார்.

 

 

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூலை கி.பி,ஐந்தாம் நூற்றாண்டில்  மிகப் பெரும் புத்த மத மேதையான நாகார்ஜுனர் திருத்திப் பதிப்பித்தார்.

 

சுஸ்ருதர் 127 விதமான அறுவைச் சிகிச்சைக்கான நுட்பமான கருவிகளைப் பற்றி விளக்குகிறார்.

 

மன்னர் பிம்பசாரனின் மருத்துவரான ஜீவகன் உலகின் அதி நவீனமான மூளை அறுவைச் சிகிச்சையைச் செய்து புகழ் பெற்றார். மண்டையோட்டில் துளையிட்டு  ஒரு புழுவை எடுத்து ஒரு மனிதனை அவர் குணப்படுத்தியது அனைவரையும் வியக்கச் செய்தது.

 

 

இது மட்டுமின்றி மிஸௌரி கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட டெலகிராப் இதழில் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்த பல் வைத்தியர்கள் பல்லில் துளையிட்டு அங்கு சொத்தையை அகற்றுவதில் நிபுணராக இருந்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர்.

 

brain2

அவர்களது ஆய்வு விவரமாக குழுவின் தலைவரான ஆண்ட்ரியா க்யூஸினாவால் (Andrea Cusino) எழுதப்பட்டு பிரப்ல அறிவியல் இதழான ‘நியூ ஸயிண்டிஸ்ட்’ இதழில் பிரசுரிக்கப்பட்டது. ம்ஹர்ஹர் என்ற இடத்தில் கிடைத்த தொல் படிமங்களை ஆராய்ந்த அவர்கள் இப்படிப் பல்லில் மிகச் சிறிய துளையைப் போட மிகவும் சிறந்த கருவியை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று வியப்புடன் தெரிவித்தனர்.

 

இதே வழியில் திரிபிடகத்தை இப்போது ஆராய்ந்த கர்மா ட்ரின்லே இந்திய மருத்துவரான ட்ஸோஜியல் (Tsogyel)  மூளை அறுவை சிகிச்சை நட்ந்த போது கூட இருக்க மட்டும் அனுமதிக்கப்பட்டர் என்னும் செய்தியைத் தருகிறார்.

 

 

திரிபிடகம் தரும் சுவையான ஆபரேஷன் தகவல்கள் விரிவாக அவரால் விளக்கப்படுகின்றன.

 

வலி தாங்காத நோயாளி தன் தலையை படார் படாரென்று வலிமை வாய்ந்த பொருள்களின் மீது மோத வைத்து வலியைத் தணித்துக் கொண்டாராம். இரண்டு ட்வீஸர்களை வைத்து மூளை அறுவைச் சிகிச்சையை திபெத்திய மருத்துவர்கள் ஆரம்பித்த போது இந்திய மருத்துவர் ஓவென்று அலறினாராம்.

முதலில் ட்வீஸர்களை சூடு படுத்தி அதைத் தூய்மைப் படுத்துங்கள் என்று கூற அவரது அறிவுரையைப் பின்பற்றி ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாம். இந்திய மருத்துவர்கள் செய்த மூளை அறுவைச் சிகிச்சைகள் பெரும் மருத்துவ முன்னேற்றத்தின் அறிகுறி.

 

 

இப்படி நாளுக்கு நாள் இப்போது நடந்து வரும் ஆய்வுகள் அதி நவீன உத்திகளையும் சாதனங்களையும் வைத்து செய்யப்படுபவை.

 

அறிவியல் பூர்வமாக இந்தியாவின் புராதன பெருமை இப்போது நிரூபிக்கப்பட்டு வருவதைப் பார்த்த ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல ராஜதந்திரி க்வுண்ட் ப்ஜோர்ண்ட்ஜெர்னா (Count Bjornstjerna) , “ஹிந்துக்களின் மிக உயரிய நாகரிகம் மேற்கே எதியோப்பியா,எகிப்து, போனீஷியாவிலும் கிழக்கே சயாம், சைனா, ஜ்ப்பானிலும் தெற்கே சிலோன், சுமத்ரா, ஜாவாவிலும் வடக்கே பெர்ஸியா, கால்டியா கால்ஸிஸ் வழியே கிரேக்கம் மற்றும் ரோமிற்கும் பரவின .பூவுலகில் உள்ள எந்த ஒரு நாடும் ஹிந்துக்களின் புராதனமான நாகரிகம் மற்றும் மதத்தைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டுகிறார்.

 

 

சுதந்திரம் பெற்ற இந்தியா அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பழைய பெருமையை மீண்டும் பெறும் என்று நம்பலாம்!

 

laser

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆண்ட்ரியாஸ் வெஸல்லஸ் (Andrea Vesallus 31-12-1514 –  15-10-1564) என்பவரே நவீன உடல்கூறியலின் தந்தை எனப்படுபவர். மனித உடலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானி இவர். பிரேதங்களை இவர் கூறிட்டுப் பார்க்கும் போது இவரது மாணவர்கள் அருகிலிருந்து பார்ப்பது வழக்கம்.

1564ஆம் ஆண்டு அவர் ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.  அங்குள்ளவர்கள் இவரை பேராசிரிய்ராகப் பணி புரியுமாறு வேண்டினர். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை.

 

 

கப்பலில் திரும்பிய அவர் கடல் புயலில் மாட்டிக் கொண்டார். அவரது கப்பல் உடைய, ஜகிந்தோஸ் என்ற தீவில் அவர் கரை ஒதுங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அங்கேயே இறந்தார். அங்கோ அவரிடம் பணமே இல்லை. கடனாளியானார். அந்தத் தீவின் வழக்கப்படி யார் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கு பணம் ஒதுக்கவில்லையோ அவரது சடலம் மிருகங்களிடம் வீசப்படும். ஐம்பதே வயதான அவர் பரிதாபகரமாக இறந்தார்.

 

அவர் புனிதப் ப்யணம் மேற்கொண்டதைக் கொச்சைப் படுத்தும் விதத்திலும் பல கதைகள் பரப்பப்பட்டன. அவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரை பிரேத பரிசோதனையின் போது அறுத்துப் பார்த்த போது அவரின் இதயம் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆகவே அவர் மீது விசாரணை கமிஷ்ன் நிறுவப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஆனால் மன்னர் இரண்டாம் பிலிப் அதை மாற்றி அவரை நாடு கடத்தியதாகவும் கதைகள் பரப்பப்பட்டன.

இப்போது  பழைய ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உடல் கூறியலின் தந்தையான அவருக்கா இந்த அவப்பெயர் என்று வியந்து உண்மையை உலகிற்கு முன் வைக்கின்றனர்.

********

 

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1 (Post No. 2747)

Hsu-Yun-

Compiled  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2747

 

 

Time uploaded in London :–  11-23  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது இன்னும் சிலர் பற்றி அறிவோம்.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1

 

.நாகராஜன்

ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன்!

 120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!

அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!

நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.

மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.

 

 

அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.

அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் ஆட்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.

இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.

ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.

இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.

 

1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார்.ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.

ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

hsu yun 2

இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.

ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.

ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த  இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.

அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!

அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.

                                        -தொடரும்

 

 

சந்திரன் உலகை அழிப்பானா? (Post No.2737)

Blood-Moon-350143

Written BY S NAGARAJAN
Date: 19 April 2016

 

Post No. 2737

 

Time uploaded in London :–  8-28  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

பாக்யா வார இதழில் 15 -4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

 

ச.நாகராஜன்

 

blood-moon-2014-2-537x405

“சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது” –அறிவியல் செய்தி

 

சூரிய கிரகணம் பற்றிப் பேசும் போது ஒரு முக்கியமான செய்தியை அறிவியல் தருகிறது.

 

 

இனி அடுத்து வரும் மிகப் பெரிய சூரிய கிரகணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அமெரிக்காவில் இதை நன்கு பார்க்க முடியும். அங்கு ஜனத்தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை பார்க்க முடியும் என்பதால் இதை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்க இருக்கிறது. இதையொட்டி என்னவெல்லாம் உற்பாதம் நிகழும் என்பதைக் குறித்து ஜோதிடர்கள் இப்போதே தங்கள் ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நிகழவிருக்கிறது.

 

 

இனி சந்திர கிரகணம் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்க்கலாம்.

 

 

பௌர்ணமி தினங்களில் நிகழும் சந்திர கிரகணத்தைப் பற்றி உலகின் எல்லா நாகரீகங்களும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.

 

முக்கியமாக செக்ஸ் உறவு தவிர்க்கப்பட வேண்டும். கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நம்பிக்கைகள் ஏராளம்.

 

 

சூரியனுக்கு எதிரில் சந்திரன் வரும் போது நடுவில் இருக்கும் பூமியின் நிழல் சந்திரனின் மிது பட சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் சுற்றுப் பாதை பூமியின் பாதையிலிருந்து  ஐந்து டிகிரி கோணத்தில் தள்ளி இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரகணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்  கோட்டில் வந்தால் அது Syzygy  என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் சேர்ந்து இணைக்கப்பட்டிருத்தல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

 

பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் அல்லது சிவப்பு நிலவு என்கிறோம். ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால்  உலகம் அழியவில்லை!

 

 

blood moon 3

அதிக பட்சமாக சந்திர கிரகணத்தின் நேரம் 220 நிமிடங்களே! இதில் பூரண சந்திர கிரகணம் என்பது அதிக பட்சமாக சுமார் நூறு நிமிடங்களே நீடிக்கும்.

 

இன்னும் நூறு கோடி வருடங்கள் கழித்து நிகழும் சந்திர கிரகணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இதற்கான காரணம் சந்திரன் பூமியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.6 அங்குலம் நகர்வதினால் தான்! கிரகணங்கள் நிகழும் போது விஞ்ஞானிகளுக்குக் கொண்டாட்டம் தான். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் தீவிரப் படுத்துவார்கள்.

 

ஆனால் உலக மக்களுக்கோ பல வித கவலைகள்! எஸ்கிமோக்கள் சந்திர கிரகணத்தின் போது பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இல்லையேல் வியாதி வந்து விடும் என்பது அவ்ர்களின் நம்பிக்கை.

 

தாய்லாந்திலோ கிரகணத்தின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். இதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக உலகின் முடிவைத் தெரிவிக்க ஏற்படுவதே கிரகணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி கிரகணத்தை ஏற்படுத்துவது கெட்ட ஆவிகளே என்று அவர்கள் நம்புவதால் பானைகளைத் தட்டி ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் ஆவிகளை அவர்கள் துரத்துவார்கள்.

 

 

இன்னும் யூதர்கள், மாயா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். கிரேக்கர்கள் என இப்படி ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகளையும் ஆராயப் புகுந்தால் பெரிய நூலையே தொகுக்க வேண்டியிருக்கும்.

 

ஆனால் கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு;  என்பது நபிகள் நாயகத்தின் அருளுரை!

 

கிரகணங்கள் வருகின்றன, போகின்றன; உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

 

விஞ்ஞானிகள் தரும் அறிவுரைகளை மனதில் கொண்டு பாதுகாப்பாக கிரகணங்களைப் பார்த்தால் பல இயற்கை விந்தைகளைக் கண்டு மகிழலாம் என்பது உறுதி.

 

marconi

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

 

1902ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று முதல் தொலைத் தொடர்புச் செய்தி மார்கோனி ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்பப்பட்டது.  1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரிட்டன் மன்னர் ஏழாம் ஹென்றிக்கு தொலைதூரச் செய்தியை முதலில் அனுப்பினார். இதிலிருந்தே உலகம் சுருங்கிப் போனது. உடனடிச் செய்திப் பரிமாற்றம் அமுலுக்கு வந்தது.

 

 

உலகின் பெரிய கடல் விபத்தான டைடானிக் நிகழ்வில் மார்கோனியின் கண்டுபிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் பிரபலமான ஒன்று.

 

 

டைடானிக் மூழ்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கர்பதீயா என்னும் கப்பல் நியூயார்க்கிலிருந்து ரிஜேகா என்னும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  அந்தக் கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் ஹரால்ட் காட்டம் டைட்டானிக்கின் அவசர செய்தியை முதலில் கேட்கவில்லை. பின்னர் டைடானிக் மூழ்கும் செய்தி அவருக்குக் கிடைத்தவுடன் வேகமாகச் சென்று காப்டன் ஆர்தர் ஹென்றியை எழுப்பினார். அவர் உடனே 58 மைல் தொலைவில் தள்ளி இருந்த டைடானிக் நோக்கி கப்பலை விரைந்து ஓட்டிச் சென்றார். உரிய தருணத்தில் அங்கு சேர்ந்த காப்டன் 705 பேரைக் காப்பாற்றினார்.

 

 

விபத்து பற்றி மார்கோனி கோர்ட்டில் தனது சாட்சியத்தை அளிக்கும் போது கடலிலிருந்து எப்படி செய்திகளை ஆபத்துக் காலத்தில் அனுப்ப முடியும் என்பது பற்றி விளக்கினார். பிரிட்டனின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும் டைடானிக் விபத்து பற்றிய தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில்,” காப்பாற்றப்பட்ட அனைவரும் ஒரே ஒருவரால் காப்பாற்றப்பட்டனர், அவர் தான் மார்கோனி, அவரது கண்டுபிடிப்பே இப்படி அனைவரையும் காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டு அவர் மார்கோனியைப் பாராட்டினார்.

அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்பால் மகிழ்ந்தனர்.

******

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5 (Post No 2732)

happy_birthday_100_years_old_card-

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 April 2016

 

Post No. 2732

 

Time uploaded in London :–  6-59  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

இதற்கு முந்தைய நான்கு கட்டுரைகளைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் வெளியாகும்  இறுதிக் கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்)

 

.நாகராஜன்

 

 

FTSHappyBirthday

மஹரிஷி அரவிந்தர் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதைத் தாண்டிய பெரியார் ஸ்ரீ நிரோத்பரன்.

 

ஒரு பெரும் மஹாபுருஷருடன் நெருக்கமானத் தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்ததால் இவர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

மேலும் அரவிந்தர் சாதாரணமாக யாருடனும் பேசுவதுமில்லை; பேட்டி கொடுப்பதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டும் ஆசிரமத்தில் வருகை புரிந்தோருக்கு அவரது தரிசனம் கிடைக்கப் பெறும். அந்த நிலையில் அவருடன் நெருக்கம் கொள்ளும் அபூர்வ பாக்கியத்தைக் கொண்டவர் நிரோத்.

 

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

 

 

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்பட, அரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

 

 

இப்படி சுமார் 4000 கடிதங்களை அவர் எழுதி இருக்கிறார் என்றால் அவரது அருமையை நாம் எளிதில் உணரலாம்.

 

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு  மஞ்சரியாக ‘12 இயர்ஸ் விந்த் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindo) என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

 

 

அரவிந்தரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களைக் கூட அவர் அவரிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறார்.

ஒரு முறை அவர் அரவிந்தரிடம்,“ஏன் கன்பூஷியஸ், அரவிந்தர் போன்றோர் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்?” என்று கேட்ட போது அரவிந்தர், “அது இயல்பானதே! ஆன்மீக மாறுதலுக்கு முன்னர் அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். மாற்றம் வந்த பிறகு திருமணம் பழைய ஆன்மாவிடம் இருந்தது. புதிய ஆளுக்கு இல்லை” என்று பதிலிறுத்தார்.

 

 

 

ஆன்மீக வாழ்க்கையின் இரகசியத்தை அரவிந்தர் ஒரு முறை இப்படி விளக்கினார்: “அதற்கு இரண்டு படிகள் உள்ளன”

முதல் படி என்ன என்பதை அரவிந்தர் பாசு என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,“அன்னையிடம் சரணாகதி அடைவதே முதல் படி”

 (“One of the two great steps in this yoga is to take refuge in the Mother”) என் று விளக்கினார்.

 

 

அடுத்த இரண்டாம் படி?

 

அதை நிரோத்பரனிடம் அவர் விளக்கினார்: “தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற சாதகனின் துடிப்பான ஆர்வம் (“Aspiration of the sadhak for the divine life.”)

 

 

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த பொக்கிஷம் போன்ற ஆன்மீக ரகசியங்களை அவர் வெளியிட்டது தான்!

 

அவரது நினைவலைகள், கடிதங்கள், அரவிந்தர் வரலாறு, அரவிந்தருடனான அவரது சம்பாஷணைகள் ஆகியவை எந்தவொரு ஆன்மீக சாதகருக்கும் கிடைத்தற்கரிய ஒரு அரும் பொக்கிஷமாகும்.

 

***********                                                       இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது பண்டிட் ஸ்ரீ சாதவலேகர், காஞ்சி பெரியவாள், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, ஸ்ரீ நிரோத்பரன் ஆகியோரின் நூல்களையும் அவர்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களையும் படித்து அனைவரும் உத்வேகம் பெறலாம். ஹிந்து  மதத்தின் வாழ்க்கை முறைக்கான நேரடிப் பலனை நிரூபித்தவர்கள் அண்மையில், சமகாலத்தில் வாழ்ந்த இவர்கள் என்பதே இவர்கள் அனைவரது பொதுவான தனிச் சிறப்பாகும்.

முற்றும்.

.

 

சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்! (Post No 2729)

A total solar eclipse – but cloud cover means Australia's best viewing area might get only a glimpse

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 April 2016

 

Post No. 2729

 

Time uploaded in London :–  6-34  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பாக்யா 8-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணமும்  மன்னர்கள் மரணமும்!

 

ச.நாகராஜன்

 

solar-eclipse

“சுக்கிரனின் சஞ்சாரம் என்பது பிரமாதமான ஒரு விஷயம் இல்லை. ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன்

 

 

பவேரியா மன்னனான லூயி 840ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்றைப் பார்த்தான். பின்னர் உடனே அவனது மரணம் சம்பவித்தது. அவனது மூன்று மகன்களும் அரசுரிமைக்காகச் சண்டையிட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமைப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் மூன்றாகப் பிரிந்தது. அந்த மூன்று நாடுகள் தான் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி!

 

 

1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் பார்க்கும்படி நிகழ்ந்தது. இங்கிலாந்து மன்னர்  முதலாம் ஹென்றி இந்த கிர்கணம் முடிந்தவுடன் நார்மண்டி என்னும் இடத்தில் இறந்து விட்டார். ஜெர்மானியிலோவெனில் அகஸ்பர்க் என்ற நகரில் வாழ்ந்து வந்தோரை ட்யூக் ஃப்ரடரிக் என்ற பிரபு கொலை செய்ததால் ஜெர்மனியே துயரில் ஆழ்ந்தது.

 

 

மன்னன்  மூன்றாம் ரிச்சர்டுக்கு சூரிய கிரகணம் என்றாலே பிடிக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரிட்டனில் 531 வருடங்களுக்கு முன்னர் 1485ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் முடிந்தவுடன் ரிச்சர்டின் மனைவி இறந்து விட்டார். ஐந்து மாதங்கள் கழித்து ரிச்சர்டும் போஸ்வொர்த் என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். கதை இத்துடன் முடியவில்லை. 527 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் உடல் 2012இல் மறுபடியும் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இள்வரசி டயானா பரிதாபகரமாக ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார்.  1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சூரிய் கிரகணம் நிகழ்ந்ததற்கு முதல் நாள்  இந்த விபத்து நேர்ந்தது.

 

வரலாற்று ஆசிரியரான யூயார்சுகியாடி சூரிய கிரகணமும் மன்னர்கள் ம்ரணமும் என்பது பற்றி ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார். தாய்லாந்து வரலாறு பற்றி இவர் ஆராய்ச்சி செய்ததால் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய சுவையான தகவல்களை இவர் தந்துள்ளார்.

 

solar britain

1699ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நராய் என்னும் மன்னன் பார்த்தான். அவன் சூரிய ராஜா என்று புகழப்பட்ட பதினான்காம் லூயியுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டிருந்தான்.பொழுதுபோக்காக வானியல் நிகழ்வுகளை ஆராய்வது நராயின் வழக்கம்.. அவன் நாட்டிற்கு வந்த பிரெஞ்சு மிஷனரிகள் கூறிய பீஜிங்கில் நிறுவப்பட்ட வானியல் ஆய்வுக் கூடம் பற்றிக் கேள்விப்பட்ட் அவன் தனது நகரிலும் அது போல ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பி லாப்பூரி என்ற இடத்தில் இருந்த தன் அரண்மனையில் அமைக்கச் சொன்னான். அங்கு அமைக்கப்பட்ட வானியல் கூடத்திலிருந்து தான் அவன் இந்த கிரகணத்தைப் பார்த்தான்.அவனுடன் கூட இருந்து கிரகணத்தை அவனது அரசவை பிரபுக்களில் ஒருவனான பெட்ராச்சாவும் பார்த்தான். பெட்ராச்சாவின் ஜோதிடர்கள் வானில் வரும் பெரிய அறிகுறி அவன் மன்னனாகப் போவதற்கான அறிகுறி என்று தெரிவித்திருந்தனர்.

 

 

 

இந்த நிகழ்வைப் பார்த்த பெட்ராச்சா, :’தனக்கான அறிகுறி’ அது தான் என்று நம்பினான். எங்கே மன்னன் நராய் மிஷனரிகளின் பேச்சைக் கேட்டு கிறிஸ்தவ மதத்திற்குத் தழுவி விடுவானோ என்று பயந்த பெட்ராச்சா நராயைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினான். மிஷனரிகள் உள்ளிட்ட அயல் நாட்டார் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஜோதிடர்கள் கூறிய படியே வானியல் நிகழ்வு ஒன்று அவன் மன்னனாக வழி வகுத்தது!

 

 

அடுத்து ஒரு சூரிய கிரகணம் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்தது. தாய்லாந்தில் அப்போது மன்னனாக இருந்தவன் சயாமைச் சேர்ந்த மாங்குட் என்பவன். இந்த கிரகணத்தைப் பார்க்க அவன் வா கோ என்ற கிராமத்திற்குச் சென்று அதைப் பார்த்தான். (இந்த மன்னனாக யூல் பிரின்னர் 1956ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி கிங் அண்ட் ஐ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்)

 

 

மன்னனாக ஆவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்குட் ஒரு பிட்சுவாக இருந்தான். ஐரோப்பிய வானவியலையும் கணிதத்தையும் அப்போது மாங்குட் நன்கு கற்றிருந்தான். தனது தேசத்திய சயாமிய வானவியலிலும் அவன் தேர்ந்திருந்தான். அது அவ்வளவு சரியாக இல்லை என்பதை உணர்ந்த அவன் அறிவியல் முறைப்படி காலண்டரையே மாற்றினான். தனது கணிதத்தின் படி சரியான நேரத்தைக் கணித்த அவன் கிரகணத்தைப் பார்க்க சிறந்த இடம் என்று வா கோ கிராமத்தையும் தேர்ந்தெடுத்து ஏராளமான அயல்நாட்டார், பிரெஞ்சு மிஷனரிகள் உள்ளிட்டோருடன் அங்கு முகாமிட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வா கோவில் மலேரியா ஜுரத்தினால் பீடிக்கப்பட்டு அவன் மரணமடைந்தான். இன்றும் தாய்லாந்து மக்கள் ம்ன்னன் மாங்குட்டை மறக்கவில்லை.

TSE99alderney1

 

 

அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இன்றும் கூட தாய்லாந்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசீய அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

சூரிய கிரகண நிகழ்வுகளையும் மன்னர்களையும் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்!

 

stamp alexis

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான அலெக்ஸி காரல் (தோற்றம் 28-6-1873 மறைவு 5-11-1944) Alexis Carrel மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1912ஆம் ஆண்டு பெற்றவர். பெரிய பகுத்தறிவுவாதியாக கடவுள் ந்மபிக்கையற்று இருந்த அவர் ஆத்திகவாதியாக மாறியது எப்படி? 1902ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் தான். அன்றைய தினம் அவர் ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்த ஒரு மேரி பெய்லி என்னும் பெண் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த் நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த அலெக்ஸி காரல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார்.

book alexis2

லூர்துவிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள ம்ருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துவின் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வ்யிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இதைப் பார்த்த அலெக்ஸி காரலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அநேகமாக இறந்து விட்ட ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது. பெரும் ஆத்திகராக் மாறிய் அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த க்ட்டுரைகளில் ஒன்றாக் அது இன்று வரை போற்றப்படுகிறது!

carel

*************
 

 

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–

 

கோடிக் கணக்கான டன் கழிவுப் பொருட்கள்! (Post No. 2704)

rubbish1

Written by S NAGARAJAN (வானொலி உரை)
Date: 8 April 2016

 

Post No. 2704

 

Time uploaded in London :–  8-57  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழல் பற்றிய சில சிந்தனைகள்

 

rubbish2

      ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் வீணாக்கும் பொருளின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் திகைத்து மலைக்க நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் மட்டும் 28 கோடி டன்கள் கழிவுகளாக உருவாகிறது. இதை எடுத்துச் செல்ல ஏழு லட்சம் விமானயகள் வேண்டும்.

 

நம்மையும் அறியாமல் நாம் உணவு, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், கேன்கள், புத்தக அட்டைகள், பேப்பர்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறோம்.

 

இவற்றில் பல இயற்கை ஆதார வளங்களினால் உருவாக்கப்படுகிறது என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறோம். நிலக்கரி, மரங்கள், எண்ணெய்கள், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப்படுவதை நாம் சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம்.

 

இந்த நிலை மாற மறு சுழற்சிக்குள்ளாக்குதல் என்ற புதிய உத்தியை உலகினர் அனைவரும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். நாம் தூக்கி எறிபவற்றில் பலவற்றை நல்ல உரமாக மாற்ற முடியும்.

 

ரீ சைக்கிள் வங்கி (Recycle Bank) என புதிய வங்கியை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இன்று உருவாக்கி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக், கார்ட் போர்டிலிருந்து அனைத்துப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களை இவை மறு சுழற்சிக்குள்ளாக்குகின்றன.

 

மரக் கன்றுகளை நடும் இயக்கம் உலகெங்கும் இன்று பரவலாக பரவி வருகிறது. மரங்களைக் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேப்பர்களும் கூட மறு சுழற்சிக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்ட பேப்பர்களை வீணாக்காது குறிப்பு எழுத உதவும் சிறு நோட்டுகளாக அவை மாற்றப்படுகின்றன.

நாம் பயன்படுத்தாத ஆடைகள் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் புதிய வழி உலகெங்கும் பரவி வருகிறது. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளை கட்டாயம் எடுத்துச் செல்வது பழக்கமாகி வருவதால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அருகி குறைந்து வருகிறது.

 

நண்பர்கள் மற்றும் உறவினரிடம் கலந்துரையாடும் போது சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் புதிய உத்திகளைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பயன்களைப் பற்றியும் சொல்வதும் இன்றைய நடைமுறை வழக்கமாக ஆகி வருகிறது. இந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில் நாமும் இணையலாமே!

xxxxx

ஏப்ரல் 22 – பூமி தினம் (Post No. 2701)

earth day 2

Written by S NAGARAJAN

Date: 7 April 2016

Post No. 2701

Time uploaded in London :–  9-27  AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Earth-Day (1)

சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

 

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

 

பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

 

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.

நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!

 earth-day

சுபம்–

லண்டனில் புறா விடு தூது! (Post No 2691)

pigeons 2

Compiled by london swaminathan

Date: 3 April, 2016

 

Post No. 2691

 

Time uploaded in London :–  16-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

pigeon monitors

ஆதி காலத்தில் தமயந்தியும் நளனும் அன்னப் பறவை மூலம் செய்தி பரிமாறிக்கொண்டார்கள். இதே போல புறாக்கள் மூலமும் செய்திப் பரிவர்த்தனை நடந்தது. இப்பொழுதும்கூட பூகம்பம், பெரு வெள்ளம் ஏற்பட்டுச் செய்தித் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் புறாக்கள் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. உலக மகா யுத்தங்களின் போது புறாக்கள் மூலம் சங்கேத மொழியில் ரஹசியங்களைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் லண்டனில் சென்ற வாரம், வேறு ஒரு புதிய பணியில் புறாக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

ஐரோப்பிய நகரங்களில் மிக மோசமான அசுத்தக் காற்றுடைய நகரம் லண்டன்தான். இதனால் 120 நிலையங்களை அமைத்து நவீன கருவிகளைக் கொண்டு அவ்வப்பொழுது காற்றின் தூய்மையை கணக்கிடுகின்றனர். ஆயினும் இந்த நிலையங்கள் அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதால், இவைகளின் வீச்சுக்குள் வராத பல பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்குள்ள காற்றின் சுத்தம் பற்றி அறிய ஒரு கம்பெனி ஒரு புது யோசனையைத் தெரிவித்தது.

pigeon 3

அமெரிக்காவில் யுடா பகுதி மலைகளில் சுற்றுலாச் சென்று வருவோரை புகைப்படமெடுக்க, பயிற்றுவிக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப் படுகின்றன. மலைகளில் ‘வாக்கிங்’ முடித்துவிட்டுத் திரும்புவதற்குள் நம்மை வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கும் புறாக்கள், அவைகளை தரை நிலயத்துக்கு அனுப்பும். அதை அங்குள்ளோர்  நாம் திரும்பிவந்தவுடன் புகைப்படமாகக் கொடுப்பர். இதே யோசனையை லண்டனில் பயன்படுத்த ஒரு கம்பெனி முன்வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் பத்து பந்தயப் புறாக்களின் முதுகில் 35 கிராம் மட்டுமே எடையுடைய கருவிகளைப் பொருத்தி பறக்கவிட்டனர். மூன்று நாட்களுக்குப் பறக்கும் இந்த புறாக்கள் கற்றிலுள்ள நைட்ரஜன் ஆக்ஸைட், ஓசோன் அளவுகளைப் பதிவு செய்யும். யார் ‘ட்வீட்” செய்தாலும் அந்த பகுதியிலுள்ள காற்றின் சுத்தத்தை உடனே ட்வீட் செய்துவிடும்.

 

பந்தயப் புறாக்கள், சாதாரணப் புறாக்கள் அல்ல. தெருக்களில் நாம் காணும் புறாக்கள் நாலு வருடம்தான் உயிர்வாழும். பந்தயப் புறாக்களோவெனில் 20 ஆண்டுகள் வரை வாழும். மேலும் மணிக்கு 60 முதல் 80 மைல் தூரம் பறக்கும்.

pigeonair_closeup-1200x800

லண்டன் அபாயம்

லண்டனில் காற்றின் அசுத்தம் மிகவும் மோசமாக இருப்பதால் ஆண்டுக்கு 9500 பேர் சாகின்றனர். டீசல் கார்களில் இருந்து வெளியாகும் விஷப் புகையே இதற்கு முக்கியக் காரணம். அருகாமை நாடுகளான, ஜெர்மனி, ஹாலந்து, போலந்து நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வரும் விஷத் துகள்கள், லண்டன் டீசல் புகையுடன் கலந்து, மேலும் விஷத் தன்மை அடைகின்றன. இதிலுள்ள பி.எம்2-5 என்னும் விஷத் துகள் நுரையீரலின் திசுக்களையும் தாண்டி உள்ளே புகுந்துவிடும். உடலிலுள்ள எந்தப் பொருளும் இதை வெளியே தள்ள முடியாது. இதில் எந்த அளவுக்குப் போனால் ஆபத்து என்பதும் தெரியாது. இதனால் நுரையீரல் புற்று நோய் வருவது மட்டும் தெரியும். இந்த ஆபத்துக் காரணமாக காற்றின் அசுத்தத்தை அவ்வப்போது அவதானித்து வருகிறனர்.

 

புறாக்கள் மூலம் லண்டனில் நடைபெறும் சோதனை மூன்றே நாட்கள்தான் நடந்தன. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியைப் போல கழுகுகளையும் பயன்படுத்தலாம் என்று லண்டன் மாநகரப் போலீசார் கருதுகின்றனர். ஜெர்மனியில் கூட்டத்தைக் கண்காணிக்க கழுகுகளின் மீது சென்ஸார் கருவிகளைப்  பொருத்திவிடுவர்.

 

லண்டனில் புறாக்களைப் பயன்படுத்தும் நிறுவனம், மனிதர்கள் மீதும் இவைகளைப் பொருத்தி, அவர்களைப் பல தெருக்களில் உலவவிட்டு, ஆராயலாமே என்று கூறினர். இதுவும் வரவேற்கத் தக்க யோசனையே.

லண்டன் புறாக்கள் – காற்றின் சுத்தத்தை அளக்கின்றனவோ, இல்லையோ! ஆனால் காற்றின் தூய்மை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.

புறா விடு தூது வெற்றி!!

–சுபம்–

அருகி வரும் அரிய உயிரினங்களைக் காப்போம்! (Post No.2689)

Sem-título-15

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 3 April 2016

 

Post No. 2689

 

Time uploaded in London :–  11-33  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 endangered_animals72

 

அருகிவரும் – உயிரினங்களின் படங்கள்

 

சுறுசுறுப்பான தேனீக்களிலிருந்து மனிதரைப் பயப்பட வைக்கும் புலிகள் வரை பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்!

பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.

 

இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிவது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும். தேசீய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முறை சென்றாலேயே போதும், அவை பற்றிய செய்திகள் நம் உள்ளத்தைக் கவரும்.

 

நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.

 

உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நலம்.

 

விலங்குகள் அதிகமுள்ள பகுதியில் வாகனங்களை ஓட்டுவோர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டியை ஓட்டுதல் வேண்டும். அதிவேக வாகனங்களால் அழிந்துபடும் விலங்குகள் அதிகம் என்பது கவலை அளிக்கும் ஒரு செய்தி.

         

மழைக்காடுகளை அழித்துச் செய்யப்படும் மரச் சாமான்களை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து மரங்களை அழிப்பதை நிறுத்தினால் எதிர்கால சமுதாயம் வளம் பெற வழி வகுத்தவர்களாவோம்.

 

புதிய பொருள்களை வாங்கும் போது இவற்றால் அருகி வரும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்து வாங்குதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் அனைத்து உயிரினங்களின் தோழன் என்ற நிலையில் வாழ்ந்தால் உயிரினங்கள் அருகிப் போகாது. வளமுடன் செழித்து வாழும்.

 

-Subham-