புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்! (Post No. 2618)

london-double-electric-bus

Picture:- Electric Bus in London.

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 11 March 2016

 

Post No. 2618

 

Time uploaded in London :–  7-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

  1. சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!

 

       உலகெங்கும் சுற்றுப்புறச் சூழல் சம்பந்தமாக எழுந்துள்ள விழிப்புணர்ச்சியின் காரணமாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக நவீனக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அறிவியல் வல்லுநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொது மக்கள் இவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தால் உலகின் சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும்.

 

 

இந்த நவீன கண்டுபிடிப்புகளுள் ஒன்றான எலக்ட்ரிக் பஸ் மின் சக்தியால் இயக்கப்படும் ஒன்று.

 

      உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படும் இந்த மின்சார பஸ்களில் டீஸல் போன்ற எரிபொருள் இல்லை என்பதால் நச்சுப் புகை வெளியேறும் என்ற பயமே இல்லை. ஆரம்ப காலத்தில் பேட்டரிகளின் எண்ணிக்கையும் அவற்றின் அதிகரித்த எடையும் அடிக்கடி அவற்றை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருந்ததால் அவற்றைப் பயன்படுத்துவதில் சற்று தயக்கம் இருந்தது. ஆனால் இன்றோ வயர்லெஸ் சார்ஜிங் என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டு இந்தக் குறைபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆகவே அமெரிக்கா தொடங்கி உருகுவே போன்ற நாடுகள் வரை மின்  பஸ்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக பள்ளிக்கூட பஸ்கள் மின்சக்தி பஸ்களாக மாறி வருகின்றன.

 

 riser-pipe-cut2

      அறிவியலின் இன்னொரு கண்டுபிடிப்பு கடலில் சிந்தும் எண்ணையை அகற்றும் ரொபாட் ஆகும். ரொபாட்டுகளின் குழு கடலை அலசி ஆராய்ந்து எங்கெல்லாம் எண்ணை சிந்தப்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றை ஒரு பையில் சேகரிக்கும் அல்லது சிறிய அளவில் எண்ணை சிந்தி இருந்தால் அந்த சிந்தலை அதே இடத்தில் எரித்து விடும். குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் மூலமாக ரொபாட்டுகள் ஒன்றுக்கொன்று தகவல் தொடர்பு கொண்டு இணைந்து பணியாற்றும் என்பது இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு அம்சமாகும்.

 

 

       புவியில் சுற்றுப்புறச் சூழல் கேடுகளைப் பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள் அந்தக் கேடுகளைத் தவிர்க்க புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!

 

 

      நமது கடமை சுற்றுப்புறச் சூழலை நன்கு பாதுகாக்கும் நவீன சாதனங்களைப் பற்றி அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதேயாகும்.

 

********

 

 

 

 

தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்! (Post No.2609)

drought,HT

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 8 March 2016

 

Post No. 2609

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Part 38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

 

 wrestling 4

     உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு பத்து மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

 

 

   இதே வேகத்தில் மாறுதல் தொடர்ந்தால் வெகு சீக்கிரமே சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பல்வேறு பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

டைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று  ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 

     இது ஒரு புறமிருக்க, இப்படி தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் முடிவில் கூறியுள்ளது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

 

Wrestling Stamp

Wrestling Stamp

 

   அதிகமான வெப்பத்தால் ஆங்காங்கே ஏற்படும் பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.

 

 

     ஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.

 

 wrestling 3

    பல நாடுகள் வழியே பாயும் நதிகளும்,  ஒரே நாட்டில் பல மாநிலங்களின் வழியே பாயும் நதிகளும் வறண்டு போனால் நதிநீர்ப் பங்கீட்டில் சச்சரவுகள் ஏற்படுவதை உலகெங்கும் பல பகுதிகளில் இப்போதே பார்க்கிறோம். இந்த நிலை மோசமடையாமல் தவிர்க்க புவி வெப்பம் உயர்வதைத் தடுத்தல் வேண்டும். இதற்கான முதற்படி வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகையை கட்டுப் படுத்துவதே ஆகும். வாகனப் பயன்பாட்டைக் குறைப்பது, வாகனங்களைச் சரியாகப் பராமரிப்பது, தனித் தனியே அவரவர் வாகனங்களைப் பயன்படுத்தாமல் குழுவாக இணைந்து பயணிப்பது உள்ளிட்ட ஏராளமான வழிகளின் மூலமாக சாமான்யரும் வெப்பம் அதிகமாவதைத் தடுக்க முடியும்; உலகைக் காப்பாற்ற முடியும். செய்வோமா?!

 

                                                         *********      

 

இமயமலைக் காடுகளைக் காப்போம்! (Post No. 2606)

forest_of_great_himalayan

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 7 March 2016

 

Post No. 2606

 

Time uploaded in London :–  8-44 AM

 

( Thanks for the Pictures;

படங்கள் வெவ்வேறு இடங்களிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

    உலகில் மாறி வரும் தட்பவெப்ப மாறுபாடுகள் அனைவருக்கும் கவலையளிக்கும் ஒரு பெரிய விஷயமாக ஆகி கொண்டு வரும் நேரத்தில் இமயமலைக் காடுகளைப் பற்றிய சமீபத்திய செய்தி ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 

 

   சமீபத்திய ஆய்வு ஒன்று  கிழக்கு இமாலயப் பகுதி  பழுப்பு நிறமாக ஆகிக் கொண்டு வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை முன் வைக்கிறது! அதாவது இமயமலைக் காடுகளில் பச்சைப் பசேலென அழகுடன் திகழ்ந்து வந்த மரங்கள் பழுப்பு நிறமாக மாறி வாடி வருகின்றன என்பதே இதன் பொருள்!

 

   சாதாரணமாக வளம் கொழிக்கும் நாட்களில் கூட இவை பசுமை இழந்து வருகின் என்பது ஆய்வு தரும் செய்தி!

 

    1982ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட சாடலைட் காட்சிச் சித்திரங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு வரை பசுமையாகக் காட்சி அளித்த இமயமலைக் காடுகளின் மரங்கள் திடீரெனத் தங்கள் பசுமையை இழந்து ஒளி இழந்து வாடும் காட்சிகளை அதற்குப் பின்னர் காண்பித்தன. இவை வறண்டு பட்டுப் போவதாலேயே பழுப்பு வர்ணமாக மாறி வருகின்றன.

 

     இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்திய க்ளோபல் சேஞ்ஜ் பயாலஜி ஜர்னலில் (Global Change Biology Journal) வெளியிடப்பட்டுள்ளன.

 Global Change 2008 Cover

    கிழக்கு இமாலப் பகுதி காடுகளில் உள்ள மரங்கள் ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாடுவதையே இது குறிக்கிறது. இதன் மூல காரணம் புவி வெப்பமயமாதலே ஆகும். நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே போவதால் அதன் நேரடி விளைவுகளில் ஒன்றாக நமதுக் காட்டுச் செல்வமும் அழிய ஆரம்பிப்பதையே இது காட்டுகிறது!

 

 

    வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே புவி அதிக வெப்பமயமாவதற்கான காரணம் என்பதால் உடனடியாக வாகன நச்சுப் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தல் நமது தலையாய கடமை ஆகும்!

 

********                

 

 

ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்! (Post No 2603)

54cb5304638ea_-_vuvuzela-decibel-chart-lg

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 6 March 2016

 

Post No. 2603

 

Time uploaded in London :–  6-52AM

 

( Thanks for the Pictures; pictures are taken from different sources. ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 decibel-chart-ear-plugs

 

 

  1. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!

 

    உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கானோர் இதய நோயால் இறப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒரு காரணம் அவர்கள் தொடர்ந்து அதீதமான ஓசையைக் கேட்க நேர்வதால் தான் என்று உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

    நியூ ஸயின்டிஸ்ட் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளி வந்துள்ள ஆய்வறிக்கையின் படி ஒலி மாசு ஆயுளைக் குறைக்கிறது என்பது தெரிய வருகிறது.

   2003ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் ஒலி மாசு பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது. இதய நோய்க்கும் ஒலி மாசிற்கும் உள்ள தொடர்பை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியதோடு இரண்டு சதவிகித ஐரோப்பியர்கள் தூங்காமல் அவதிப்படுவதற்கும் அதுவே காரணம் என்று அது கண்டறிந்துள்ளது.

 

 

     சமீபத்திய விஞ்ஞான சோதனைகள், அதிகமான ஒலியானது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் எனப்படும் கார்டிஸால் (COERTISOL), அட்ரினலின் (ADRENALINE), நொராட்ரெனாலின் (NORADRENALIN) ஆகியவற்றின் அளவுகளை உடலில் தூக்கத்தின் போது கூட அதிகமாக்குகிறது என்று நிரூபித்துள்ளன.

 

 dbcharttools

    இந்த ஹார்மோன்கள் ரத்த ஓட்டத்தில் அதிகமாக இருக்க இருக்க, அவை உயிருக்கே தீங்கு பயக்கும் விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாக உள்ளன. அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாகும் போது மாரடைப்பு வருவதோடு, பக்கவாதம் உள்ளிட்ட பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தும்.

 

 

    தொடர்ந்து கேட்பது எங்கள் வழக்கம் என்று ஒன்றுமே நடக்காத து போலச் சொன்னாலும், இந்த ஒலி மாசு உளவியல் மற்றும் உடலியல் ரீதியாகத் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆகவே வீட்டில் தொலைக்காட்சி, வானொலி சாதனங்களில் ஆரம்பித்து அனைத்திலுமே ஒலிக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, அமைதியான இல்லங்களை உருவாக்குவோம். சுற்றுப்புறத்தில் அதிகப்படியான ஒலியை ஏற்படுத்தும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவோரை அன்புரை கூறி அவர்களையும் மாற்றுவோமாக!

 

***********       

 

Part 36 of S Nagarajan’s AIR Radio Talk written for Pothikai

 

 

  1. அதிக ஒலியைக் கட்டுப்படுத்துவோம்!

DecibelHearingChart

    

     மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போது அதிகரித்து வரும் ஒரு தொல்லை ஒலி மாசு ஆகும்.

 

     சாதாரணமாக, வீடுகள் உள்ள பகுதிகளில் ஒலியானது பகலில் 55 டெசிபல்களுக்கும் இரவில் 45 டெசிபல்களுக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். ஆனால் இப்போது 65  டெசிபல்  என்ற அளவைச் சந்திக்க நேரும் பொது மக்கள் இதனால் தூக்கமிழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கான காரணங்கள் பல. அதிகமான போக்குவரத்து வாகனங்கள் எழுப்பும் சத்தம், பல்வேறு இடங்களில் அதிகமதிகம் கட்டிடங்கள் கட்டப்படுவதால் எழும் சத்தம், சாலைகளைப் பராமரிப்புப் பணிகளாலும், குடிநீர் மற்றும் கழிவு நீர் பராமரிப்பு பணிகளாலும் அதிக அளவு சத்தம் எழும்புகிறது. அத்தோடு வேகமாக வரும் லாரிகள் வேகத்தடையைக் கடக்க முற்படும்போது ப்ரேக்  போடுவதாலும், அதிக வேகத்தோடு வரும் வாகனங்கள் எழுப்பும் இரைச்சலாலும் ஒலியானது இருக்க வேண்டிய அளவை விட அதிகமாகி மக்களைத் தொல்லைப் படுத்துகிறது.

 

 

    வீட்டில் ஒலியைத் தடுக்கும் கண்ணாடிகளைப் பொருத்துவது, தரையில் கனமான தரை விரிப்பைப் பயன்படுத்துவது, சுவர்களிலும் ஜன்னல்களிலும் திரைச் சீலைகளைத் தொங்க விடுவது போன்ற வழிகளைக் கடைப்பிடித்தாலும் கூட ஒலியை ஒரு அளவிற்கே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.

 

 motorcyclenoiselaw

   ஆகவே சமூக ஆர்வலர்கள் இப்போது சவுண்ட் மேப்பிங் எனப்படும் ஒலி அளவு வரை படத்தை நகர் வாரியாகத் தயாரிக்க முன் வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு  செயலாகும். உரிய அதிகாரிகளிடம் இவற்றை முன் வைத்து ஒலியைக் குறைக்க அல்லது தடுக்க உள்ள வழிகளை மேற்கொள்ள இது உதவியாக இருக்கும்.

    வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைச் சரியாகப் பராமரிப்பதோடு உரிய வேகத்தில் மட்டுமே ஒட்ட முனைவது, வீடுகளில் தரை விரிப்புகள், திரைச் சீலைகளைப் பயன்படுத்துவதோடு மற்றவருக்குத் தொந்தரவு தராமல் தொலைக்காட்சிப் பெட்டி வானொலி ஆகியவற்றின் ஒலிகளைக் கட்டுப் படுத்துவது, இரவு நேரங்களில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களை இயக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன செயல்கள் கூட வரவேற்கப்படும் செயல்களாக அமையும். அதிக ஒலியைக் கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் என்பது அரிச்சுவடிப் பாடம் எனக் கொள்வோம்; ஒலி மாசு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவோம்.

 Noisedecibelchart

*************         

 

 

 

 

 

 

செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்; கிண்டலான பரபரப்புக் கட்டுரை!(Post No 2569)

Mars-NASA-Hunt-for-Fossils4

Written by S Nagarajan

 

Date: 24  February 2016

 

Post No. 2569

 

Time uploaded in London :–  6-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ச.நாகராஜன்

 

 

“மனித குலம் விண்வெளியைப் பயன்படுத்தவில்லை எனில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட நீடித்திருப்பது சந்தேகமே!” – ஸ்டீபன் ஹாகிங்

 

பூமியில் ஆதார வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு வருகின்றன; இன்னொரு புறம் வெப்பமயமாதல் என்ற க்ளோபல் வார்மிங் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரித்து ஏராளமான இன்னல்களை மனித குலம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. பல உயிரினங்கள் அருகி வருகின்றன. என்ன செய்வது?

 

ஒரே வழி; விண்ணில் குடியேறுவது தான்! அங்கு குடியேறுவதன் மூலம் மனித குலமும், அரிய உயிரினங்களும் நீண்ட காலம் வாழ வழி ஏற்படுவதோடு அங்கிருக்கும் விலை மதிப்பற்ற தாது வளத்தையும் ஆற்றலையும் பூமிக்குக் கொண்டு வந்து பூமியையும் செழிப்பாக்கலாம்.

 

பூமிக்கு வரும் ஆபத்துக்கள் பல; விண்கற்கள் மோதி டைனோஸர் இனம் அழிந்தது போலவும் லெமூரியா கண்டம் ஒழிந்தது போலவும் பல உயிரினங்களும், பகுதிகளும் அழியலாம். எரிமலை வெடித்தல், சுனாமி உருவாதல் போன்றவற்றால் பெரும் சேதம் ஏற்படலாம்.

 

இந்த இயற்கைச் சீற்றங்கள் ஒரு புறமிருக்க அணு ஆயுதங்களை  உபயோக்கிக்கும் போர் ஏற்பட்டால் ஒரு கணத்தில் பல கோடிப் பேர் அழியும் நிலை ஏற்படும். இப்படி போர் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமே இல்லை. ஒரு கிறுக்கு ஹிட்லர் தோன்றியதால் பல லட்சம் பேர் மாண்டதையும் ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டினால் பல லட்சம் பேர் சில விநாடிகளில் மாண்டதையும் சமீபத்திய சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. இது தவிர ரோபாட்டுகள் ராணுவங்களில் ஒரு படையாக செயல்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது. இந்த் ரொபாட்டுகளின் போர் நம்மை எங்கு கொண்டு போய் விடுமோ, அதுவும் தெரியவில்லை!

 

ஆகவே தான் சூரிய மண்டலத்தில் ki அருகில் உள்ள வால் நட்சத்திரம், விண்கற்கள், சந்திரன் ஆகிய இடங்களில் சிறு சிறு மனிதக் குடியிருப்புகளை முதலில் அமைத்துப் பின்னர், சூரிய மண்டலம் முழுவதுமாக ஆங்காங்கே மனிதப் பிரிவுகள் குடியேற வேண்டும் என்று விண்வெளி பற்றி நன்கு அறிந்த மேதைகள் விரும்புகின்றனர்.

 

ஆனால் சஹாரா பாலைவனத்தையே குடியிருப்பாக மாற்ற வழியில்லை, அண்டார்டிகா பிரதேசத்திலேயே குடியிருக்க ஏற்பாடு செய்ய முடிய்வில்லை; எதற்கு விண்வெளிக் குடியிருப்பு என்ற வெட்டிப் பேச்சு என்று பலரும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

mars

குறிப்பாக விண்வெளி ஆர்வலரும் கூகிள் எக்ஸ் லாப்ஸின் தலைவருமான அஸ்ட்ரோ டெல்லரும் அவரது மனைவியும் டாக்டருமான டேனியலும் இணைந்து க்வார்ட்ஸ் என்ற பத்திரிகையில் ஒரு கிண்டலான, பரபரப்புக் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளனர். அஸ்ட்ரோ டெல்லர் பெரிய விஞ்ஞானி. நுண்ணறிவுத் தொழில் நுட்பம் என்னும் இன்டெலிஜெண்ட் டெக்னாலஜியில் வல்லுநர்.

 

தங்கள் கட்டுரையில் செவ்வாய்க்கு நாம் எல்லோரும் குடியேறி நம் அழகிய பூமியைப் பாலைவனம் ஆக்கப் போகிறோமா என்ற கேள்வியை அவர்கள் கேட்டுள்ளனர்.

 

பூமியில் உள்ள 750 கோடி பேரும் குடியேற வேண்டும் என்று யார் சொன்னது, இவ்வள்வு பேர்களும் செவ்வாயில் குடியேற முடியும் என்று சொல்ல நாங்கள் என்ன பைத்தியங்களா என்று சூடாக விஞ்ஞானிகள் பதில் சொல்ல விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

 

முதலில் அண்டார்டிகாவில் சில பேரை அந்தக் கடுங் குளிரில் குடியிருக்க வைத்துக் காண்பியுங்கள் என்ற கட்டுரையின் சவாலுக்கு, எங்களிடம் புதிய தொழில் நுட்பம் உள்ளது என்ற பதிலை விஞ்ஞானிகள் தருவதோடு, முதலில் சந்திரக் குடியிருப்பை அமைப்பதே எங்களது பணியாக அமையும் என்கின்றனர்.

 

விண்வெளியில் உள்ள தாது வளங்கள், வைரம், டைட்டானியம் உள்ளிட்ட அரிய விலமதிப்பற்ற செல்வங்களை அள்ளிக் கொண்டு வருதல் என்பதே உடனடி பணி என்பதை அவர்கள் தெளிவாக்குகின்றனர்.

 

இதற்கு வழிவகை அமைக்கும் விதத்தில் 2015 நவம்பர் 23ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கமர்ஷியல் ஸ்பேஸ் லாஞ்ச் காம்பெடிடிவ்னெஸ் ஆக்ட் என்றபுதிய சட்டத்தைக் கொண்டுவர கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் விண்கற்களிலும் சந்திரனிலும் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அனைத்து வளங்களும் பூமிக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.

mars2

இதில் கூகிளில் வேலை பார்க்கும் கட்டுரையாளரை கேலி செய்யும் ஒரு அம்சமும் இருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள லாரி பேஜ் மற்றும் எரிக் ஷ்மிட் ஆகியோரே விண்கல் சுரங்க நிறுவனமான ப்ளானிடரி ரிசோர்ஸஸில் முதலீடு செய்துள்ளனர்!

 

முக்கியமான ஒரு விஷயம் சூரிய ஒளியை அபரிமிதமாக பூமி பெறுவது தான். இந்த சூரிய ஆற்றலை மட்டும் முழுவதுமாக நாம் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் பல லட்சம் வருடங்களுக்கு மனித குலத்திற்கு பயமே இல்லை. சோலார் எனர்ஜி மீது உலக விஞ்ஞானிகளின் முழு கவனமும் இப்போது திரும்பியுள்ளது ஒரு நல்ல அறிகுறி!

 

முதலில் சந்திரனையும் பூமியையும் இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதை நீடித்து இருக்கச் செய்யும் நிதித் திட்டம் சந்திர-பூமி பொருளாதாரம் எனக் கூறப்படுகிறது.

ஒரு நிரந்தரமான விண்வெளிக் குடியிருப்பை நாம் முதலில் ஆரம்பித்து விட்டால் பின்னர் விண்வெளிச் சாலை மூலமாகப் பல கிரகங்களுக்கும் விண்கற்களுக்கும் பயணம் மேற்கொள்ளலாம்!

 

இந்த வழியில் கூகிள் நிறுவனம் முதலில் சந்திரனில் இறங்கும் விண்கலங்களை அமைக்க உதவும் தனியார் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது. 900 மில்லியன் டாலர்கள் (54000 லட்சம் ரூபாய்கள்) இதற்கென கூகிள் நிறுவனம் ஒதுக்கி உள்ளது.

அடுத்த தலைமுறை விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்ற புதிய செய்தி விண்வெளி விஞ்ஞான சரித்திரத்தில் ஒரு புதிய மைல் கல்.

 

இனி வரும் புதிய தலைமுறையினரை நீ எங்கே அமெரிக்காவிலா அல்லது லண்டனில் இருக்கிறாயா என்று கேட்பது போய் நீ எங்கு இருக்கிறாய், சந்திரனிலா, அல்லது விண்கல்லிலா என்று கேள்வி கேட்கும் நாள் வரக் கூடும்.

புதிய விண்வெளிக் குடியிருப்புத் தலைமுறையினரை வாழ்த்தத் தயார் ஆவோம்!

Ramsden

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . .

இங்கிலாந்து மன்னரான மூன்றாம் ஜார்ஜின் (1738-1820) அரசவையில் கணித மேதை ராம்ஸ்டென் (RAMSDEN)  அங்கம் வகித்து வந்தார், கணிதக் கருவிகள் செய்வதில் அவர் பெரும் நிபுணர். ஆனால் குறித்த நேரத்தில் எதையும் தர மாட்டார். ஒரு முறை மன்னர் தனக்கு ஒரு கருவி வேண்டும் என்று அவரிடம் ஆணையிட்டார். ராம்ஸ்டென் குறித்த காலத்தில் எதையும் செய்ய மாட்டார் என்பதை அறிந்த மன்னர் ஒரு தேதியையும் குறிப்பிட்டு அந்த தேதிக்குள் கருவி வந்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.ஆனால் வழக்கம் போல மிகுந்த கால தாமதம் ஆனது; மன்னர் சொன்ன தேதி வந்தது, கருவி வந்தபாடில்லை!

 

இதனால் பெரும்கோபம் அடைந்த மன்னர் அவரை உடனே அரசவைக்கு வருமாறு உத்தரவிட்டார். “அரசவைக்கு வருகிறேன், ஆனால் மன்னர் என் மீது கோபம் கொள்ளக் கூடாது” என்ற செய்தியை அனுப்பினார் ராம்ஸ்டென்.

 

“சரி! அவரை வரச் சொல்” என்றார் மன்னர். கடைசியாக ஒரு நாள் கருவியுடன் வந்து சேர்ந்த ராம்ஸ்டென் தன்னை மன்னிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

 

கருவியைப் பார்த்து மகிழ்ந்த மன்னர், “அடடா! ராம்ஸ்டென்! என்ன ஆச்சரியம் நான் குறித்த அதே மாதம் அதே தேதியில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்களே” என்று பாராட்டி நிறுத்தினார்.

 

தான் தாமதமாக அல்லவா கருவியைத் தந்திருக்கிறோம் என்று குழம்பிப் போன ராம்ஸ்டெனை நோக்கி மன்னர் தொடர்ந்தார்: “ஒரு சின்ன மாறுதல் தான் இருக்கிறது. வருஷம் தான் மாறி இருக்கிறது” என்று கூறிச் சிரித்தார்.

சரியாக ஒரு வருடம் கழித்து ராம்ஸ்டென் அந்தக் கருவியைக் கொடுத்திருக்கிறார்.

 

கணித மேதையையே ஆளுகின்ற புத்திசாலி மன்னர் தன் கூரிய அறிவை அவரிடம் காட்டி விட்டார் அன்று!

*******

பாக்யா 26-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை. பாக்யா வார இதழ் டைரக்டர் திரு கே.பாக்யாராஜை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளியிடப்படுகிறது. எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

 

ஆர்டிக் பிரதேச பனிக்கட்டிக்கு அடியில் வைரக்கற்கள்! (Post No 2561)

canadian_diamonds

Research Article  by London swaminathan

 

Date: 21 February 2016

 

Post No. 2561

 

Time uploaded in London :–  7-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

For 2500 more articles and research papers.

 

diamonds

வடதுருவப் பிரதேசம் ஆர்க்டிக் வட்டத்துக்குள் இருக்கிறது. பூமியின் தென் கோளார்த்ததிலுள்ள அண்டார்ட்டிக் பிரதேசம் தென் துருவத்தில் உள்ளது. இந்த இரண்டு பனிக்கட்டிப் பிரதேசங்களிலும் பெட்ரோலியம் மற்றும் பல கனிம வளங்கள் இருக்கின்றன. ஆனால் அண்டார்ட்டிகாவின் இயற்கை அமைப்பைக் கெடுத்துவிடக் கூடாதென்பதற்காக எல்லா நாடுகளும்  சில கட்டுப்பாடுகளை ஏற்றுள்ளன. ஆர்டிக் பிரதேசத்தில் கட்டுப்பாடுகள் குறைவு. ஏனெனில் அது ஏற்கனவே, கனடா, அமெரிக்கா, நார்வே, பின்லாந்து, சுவீடன், ரஷ்யா முதலிய நாடுகளின் நில எல்கைக்குள் வந்துவிட்டது.

 

கனடா நாட்டின் எல்லைக்குட்பட்ட ஆர்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கடியில் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கின்றன. அதை வெட்டி எடுத்து பயன்படுத்தும் முறை பற்றிய சுவையான விவரங்கள் இதோ:–

 

கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் (Northwest Territories)  வெப்ப நிலை மைனஸ் 35 (செல்ஸியஸ்) டிகிரிக்குப் போய்விடுகிறது. குளிர்காற்று வீசுகையில் மைனஸ் 70 டிகிரிக்கும் கீழே போய்விடும். அதாவது மனிதர்கள் வேலையே செய்யமுடியாது. மைனஸ் 30 டிகிரியில் யாரும் ஐந்து நிமிடத்துக்கு மேல் வேலை செய்ய இயலாது. இதனால் இரண்டிரண்டு பேராக சுரங்கத்துக்குச் செல்லுவர். ஒரு சூப்பர்வைசர் ஸ்டாப் வாட்ச் (Stop watch) வைத்து ஐந்து நிமிடம் ஆனவுடன் வேலையை நிறுத்தச் சொல்லுவார். இந்த இடத்துக்குப் பெயர் ஸ்நாப் லேக் (Snap Lake Diamond mine) வைரச் சுரங்கம். இதை வைரத் தொழிலில் உலகில் முன்னணியில் நிற்கும் டிபியர்ஸ் நடத்துகிறது.

 

canada map

 

கனடாவின் ரியோ டிந்தோ (Rio Tinto) கம்பெனி வைத்திருக்கும் வைரச் சுரங்கம் நீருக்கடியில் இருக்கிறது. அக்டோபர் முதல் ஜூலை வரை பனிக்கட்டியால் சூழப்பட்டுவிடும். இந்தச் சுரங்கத்தின் பெயர் டையாவிக் (Diavik Mine) சுரங்கம். இது இருக்குமிடத்தில் மரங்களே இல்லாததால் அந்த இடத்தை (Barren Lands) பேர்ரன் லண்ட்ஸ் (வறட்டுப் பகுதி) என்பர்.

 

இந்த சுரங்கங்களுக்கு பக்கத்தில் ஊர்களே கிடையாது. நூறு மைலுக்கு அப்பால்தான் நகரங்கள் உள்ளன. அதாவது மனிதர்கள் வசிக்குமிடத்தில் வைரங்கள் கிடைப்பதில்லை!

 

வரவர வைரம் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் பிரபல வைரக் கம்பெனிகள் ஜிம்பாப்வே நாட்டில் (ஆப்பிரிக்க நாடு) வைர வியாபாரத்துக்கு மூடு விழா நடத்திவிட்டன.

 

வைரத்தைக் கண்டுபிடிக்க பல கோடி டாலர் செலவிட்டும் பயனில்லை. கிடைக்கும் என்று உத்தரவாதம் எதுவும் கிடையாது. கிடைத்தாலும் அது கட்டுபடியாகக் கூடிய செலவில் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

ekati-diamond-mine-nwt-

வைரக் கற்களுக்கு ஆசைப்பட்டு 2000 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 700 கோடி டாலரைப் பலரும் முதலீடு செய்தனர் என்றும் பெரிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழ்வில்லை என்றும் டி பியர்ஸ் ஆய்வு காட்டுகிறது.

 

கடந்த 140 வருடங்களில் வைரத்துக்கு ஆசைப்பட்டு 7000 இடங்களைத் தோண்டினரென்றும், அவைகளில் 1000ல் மட்டுமே வைரங்கள் இருந்தனவென்றும் டிபியர்ஸ் (De Beers) கூறுகிறது. அதிலும் 60 சுரங்கங்களே, கட்டுபடியாகக் கூடிய விலயில் வைரங்களை உற்பத்தி செய்தன (வைரக் கற்களில் தரம் குறைந்த வைரங்களே அதிகம் கிடைக்கின்றன. இவைகளைப் பல்வேறு கருவிகளில் பயன்படுத்துவர்; நல்ல ஜாதி வைரங்கள் மட்டுமே நகைகளுக்குகந்தவை.)

 

சில இடங்களில் வைரம் எடுப்பது கடினம்; செலவும் அதிகமாகும். டையாவிக் சுரங்கம், ஏரியின் தண்ணீருக்கடியில் இருப்பதால் மிகவும் கஷ்டபட்டு வைரத்தை எடுக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சுரங்கம் வருடத்தில் இரண்டு மாதம் (Ekati Diamond Mine) மட்டுமே திறந்திருக்கும்!

 

இரண்டு கம்பெனிகளும் சுமார் 1300 பேரை வேலைக்கு வைத்துள்ளன.

 

“இயற்கை அன்னை தனது பொக்கிஷங்களை கண்காணாத இடத்தில், தொலைவில் ஒளித்து வைக்கிறாள்” என்று ரியோ டிண்டோ கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஜீன் மார்க் சொல்கிறார்.

 

டையாவிக் என்னுமிடத்தில் ஆண்டுக்கு  60 லட்சம் காரட் முதல் 70 லட்சம் காரட் வரை வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவைகளில் நிறைய வைரங்கள், நகைக்கு எற்ற உயர் ஜாதி வைரங்களாம்.

ekati-diamond-mine

இரண்டு கம்பெனிகளும் புறச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறாமலிருக்க கண்காணிப்புக் குழுக்கள் (Environmental Monitoring Agency) உள்ளன. அவ்வபோது நீர், மீன், கரடி இவைகளைப் பிடித்து விஞ்ஞான சோதனை நடத்தி ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

 

மேலும் பனிக்கட்டிப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சில இடங்களைப் புனிதமாகக் கருதுவதால் அங்கும் ஆராய்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சென்ற ஆண்டு டிபியர்ஸ் உற்பத்தி செய்த 36 மில்லியன் காரட் வைரத்தில் 2 மில்லியன் மட்டுமே கனடாவிலிருந்து வந்தன.

 

தென் ஆப்பிரிக்கா, பாட்ஸ்வானா ஆகிய நாடுகளின் வைர உற்பத்தி யைவிட கனடாவில் குறைவு என்றாலும், வைரத்தின் தரம் மிகவும் அதிகமென்று டிபியர்ஸ் அதிகாரி லைனட் கூல்ட் கூறினார். உலகின் மிகச் (Exquisite diamonds) சிறந்த, விலையுயர்ந்த வைரங்களில் பல, கனடிய ஆர்டிக் பிரதேசத்தில் கிடைத்தவைதான்” என்றும் கூல்ட் கூறினார்.

 

–சுபம்–

 

 

வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

உரத்தொழிற்சாலைக் கழிவுகள்! (Post No. 2552)

ammonia urea

Written by S Nagarajan

 

Date: 18  February 2016

 

Post No. 2552

 

Time uploaded in London :–  7-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

      ஒரு நாட்டின் வளத்திற்குத் தொழிற்சாலைகளின் பங்கு இன்றியமையாததாகும். தொழிற்சாலைகளின் வளத்திற்கும் உற்பத்திப்  பெருக்கத்திற்கும் அவற்றில் பணிபுரிவோரின் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று.தொழிலாளர்களின் ஆரோக்கியமான மனமும் ஆரோக்கியமான உடலும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே நலம் பயக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

   இந்தியாவில் உரத் தொழிற்சாலைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு ஒரு உரத் தொழிற்சாலை  300 டன்கள் அம்மோனியாவையும் 300 டன்கள் யூரியாவையும் 1100 டன்கள் காம்ப்ளெக்ஸ் பெர்டிலைஸர்களையும் (Complex Fertilisers) 130 டன்கள் மெதனாலையும் (Methanol) உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தியால் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் கனமீட்டர் அளவிற்கு திரவக் கழிவுகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. ஆக இவற்றில் இருக்கும் மாசுள்ள மற்றும் மாசற்ற பொருள்களின் எடை மட்டும் 50000 டன்கள் என்ற மாபெரும் அளவைக் கொண்டுள்ளது.

 

 

    இந்தக் கழிவுகளை உரிய முறையில் அகற்றவில்லை எனில் தொழிற்சாலைகளின் பணிபுரிவோருக்கும் தொழிற்சாலைகளின் அருகில் வசிப்போருக்கும் பல்வேறு விதமான ஆரோக்கியக் கேடுகளை அக்கழிவுகள் உருவாக்கும்.

 

 

 

    கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுகின்றனவா என்பதைத் தொழிலாளர் குழுக்களும் சமூக அக்கறையுள்ள பொதுமக்களும் அவ்வப்பொழுது கண்காணித்து வருதல்  இன்றியமையாத ஒன்று. 

 

 

    இதற்கெணன சமூக ஆர்வலர்கள் பொது மக்களிடம் இதற்கான விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருதல் வேண்டும். அத்தோடு பொதுமக்களும் தங்கள் அண்டை அயலாரிடம் இது பற்றிய சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். இது நமது தேசத்தை நோயற்ற நாடாக ஆக்கி உலக நலனுக்கும் வழி வகுக்கும்! 

 

 

********

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)