உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

one man foresst

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th Nov.15;Part 2 posted on 7th ,Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov. and Part 6 on 12th Nov.2015

Radio Talk written by S NAGARAJAN

Date: 12 November 2015

POST No. 2322

 

Time uploaded in London :– 17-12

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

forest man

6.உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

 

மரங்களை மனம் போன போக்கில் வெட்டி வீழ்த்தி சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டைப் பலரும் ஏற்படுத்தும் இந்தக் காலத்தில் அனைவருக்கும் உத்வேகமூட்டும் விதத்தில் தனிநபராக இருந்து ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் ஒருவர் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே!

கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav ) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார்.550 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்த காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரங்கள் ஏதும் இல்லாததால் அவை மடிந்தன,இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்றை அமைப்பது என உறுதி பூண்டான்.

forest-man-jadav-rhino

இடைவிடாத உழைப்பினால் அங்கிருந்த, எதுவுமே விளையமுடியாத மணற்பரப்பை மாற்ற ஆரம்பித்தான். இதற்கென செவ்வெறும்புகளை தூரத்திலிருந்த கிராமங்களிலிருந்து கொண்டு வந்து அந்த மணற்பரப்பில் வாழ வைத்து செடிகளை வளர்க்கலானான். இன்றோ ஆயிரமாயிரம் மரங்களைக் கொண்டு அனைவரையும் அதிசயக்க வைக்கும் அடர்ந்த காடாக அது மலர்ந்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் அந்தக் காடு ஏராளமான பறவைகளுக்கு இருப்பிடமாக ஆகியுள்ளது. முதலில் சிறு பறவைகள் வர ஆரம்பிக்கவே பின்னால் பருந்துகள் போன்றவையும் அங்கே வர ஆரம்பித்து வாழ ஆரம்பித்தன.

அதுமட்டுமின்றி அருகி வரும் இனமான புலிகள் கூட சிறிய அளவில் அங்கே வசித்து வருகின்றன. யானைகளோ விரும்பி கூட்டம் கூட்டமாக அங்கே வசிப்பதற்கு வந்து விட்டன.இயற்கை எப்போதுமே தானாகவே ஒரு உணவுச் சங்கிலியை அமைக்கிறது என்கிறார் ஜாதவ்.

இந்த உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஏராளமான மிருகங்கள் அங்கே வந்து சேரவே அது இயற்கைக் காடு போல இப்போது திகழ்கிறது.  சீதோஷ்ண நிலையை அந்தப் பகுதியில் மேம்படுத்தியுள்ளது.

அற்புதமான காட்டை இவர் உருவாக்கியதால் அவரது செல்லப் பெயரான மொலாய் என்பதை அதற்குச் சூட்டி அதை “மொலாய்க் காடு” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

இந்த முயற்சியினால் ஏற்பட்ட வெற்றியைக் கவனித்த சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் இவரைப் பாராட்டியுள்ளனர். அரசும் பல்வேறு விதங்களில் உதவி புர முன் வந்துள்ளது.

Jadav-Payeng-from-India-spent-2505

தனி மனிதனாக இருந்து ஏழையான ஒருவர் இயற்கைச் செல்வத்தைக் காக்க ஒரு காட்டையே அமைத்திருக்கும் போது நாமும் நமது பங்கிற்கு இயற்கையைக் காக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கொள்வோம்; இயற்கை அன்னையைக் காப்போம்!

*****************

பசுமை இயக்கம் பரவட்டும்!

alapuza

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 11 November 2015

Post No:2319

Time uploaded in London :– காலை- 4-46

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th Nov.;Part 3 on 8th Nov. ;Part 4 on 9th nov.;Part 5 – 11th Nov.

crop

5.பசுமை இயக்கம் பரவட்டும்!

 

உலகெங்கும் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் விதமாக பசுமை இயக்கம் பரவி வருகிறது. பச்சை நிறம் பாரம்பரியம் பாரம்பரியமாக வளத்துடனும், செழிப்புடனும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் அனைத்து நாகரிகங்களினாலும் போற்றப்பட்டு வருகிறது. ஆகவே பூமியைப் பசுமையாக வைக்க எண்ணும் நல்ல நோக்கத்திற்கு பசுமை  இயக்கம் என்று சூட்டப்பட்டுள்ள பெயர் பொருத்தமானதே!

இந்தப் பசுமை இயக்கத்தின் அங்கமாக புதிதாகக் கட்டப்படும் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் பசுமைக் கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன. அதாவது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாவண்ணமும் தூய நீர் தூய காற்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமலும் ஆற்றலைச் சேமிக்கும் விதத்திலும் இவை அமைக்கப்படுகின்றன. காற்று நீர், ஆற்றல் இவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு இவற்றை அனாவசியமாக வீணாக்காமல் பாதுகாக்கும் நடைமுறைகளை பசுமைக் கட்டிடக் கலை கொண்டுள்ளது.

வானளாவ உயரும் கட்டிடங்கள் ஒரு புறம் இருக்க அருகில் திறந்தவெளியாக நிலப்பரப்பு அதிகம் உருவாக்கப்படுவதும் இதன் ஒரு அம்சம் தான்!

இப்படிப்பட்ட பசுமைப் புரட்சியில் அனைவரும் பங்கு பெறலாம்; தன் அளவு முடிந்தவரை இயற்கை ஆதாரங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாம்.

தேவையற்றபோதெல்லாம் விளக்குகளை அணைப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, குழாயைத் திறந்து விட்டு வேலைகளைச் செய்யாமல் அளவோடு நீரைப் பயன்படுத்துவது,காம்பாக்ட் ப்ளோரஸண்ட் பல்புகளை வாங்கி வீட்டில் பொருத்துவது, நாம் அன்றாடம் வாங்கிப் படிக்கும் செய்தித் தாள்களை மறுசுழற்சிக்கு உரிய முறையில் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான எளிய பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகும்; ஆதார வளங்கள் வீணாவது குறைவாகும்!

தகவல் புரட்சி ஏற்பட்டு கணினி மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் அடுத்த பெரும் புரட்சியாக பசுமை இயக்கப் புரட்சி ஏற்படப்போவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உலகைப் பசுமைத் தாயகமாகக் காப்பதற்கெனவே புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் அவை சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உலகமெங்கும் வேலை வழங்கும் என்ற நல்ல செய்தியையும் அறிவிக்கின்றனர்.

இந்தப் பசுமைப் புரட்சியின் பெருமை வாய்ந்த ஒரு அங்கமாக நம்மில் ஒவ்வொருவரும் ஆவோமாக!

to be continued………………………….

காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

car-batteries

Radio Talk written by S NAGARAJAN

Date: 9 November 2015

Post No:2313

Time uploaded in London :– 7-50  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

By .நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015

Part 2 posted on 7th November 2015

Part 3 on 8th nov. & Part 4 on 9th nov.15

4.காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

மின்வெட்டு அதிகம் உள்ள இந்த நாட்களில் நமது அன்றாட தேவைகளுக்காக பாட்டரிகளை அதாவது மின்கலங்களை அதிகமதிகம் பயன்படுத்தும் வழக்கம் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பயன்படுத்தப்பட்ட பின்னர் இந்த மின்கலங்களை அறிவியல் பூர்வமான வழிகளில் அல்லாமல் மனம் போன போக்கில் கழிவாகத் தூக்கி எறிவது  சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கிறது! கூடவே ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மின்கலங்களில் காரீயம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 14.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு காரின் மின்கலத்தில் 8.7 கிலோகிராம் அளவு ஈயம் உள்ளது. இதை விடப் பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளில் உள்ள இன்வர்டர்களில் சுமார் 16 கிலோ எடையுள்ள ஈயம் உள்ளது.

பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் இவைகளைத்  துண்டு துண்டுகளாக்கித் தூக்கி எறியும் போது வெளிப்படும் ஈயத் தூசு, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த ஈயத்திலிருந்து வெளிப்படும் நச்சு இரத்த ஓட்டத்தில் உயர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.அத்தோடு சிறுநீரகத்தைப் பழுதடையச் செய்யும்.சிறுவர்கள் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நடத்தையில் மாறுபாடும் ஏற்படும்.

batteries_mixed_2

இப்படி பல்வேறு மனித அங்கங்களைப் பாதிக்கும் ஈயக் கழிவை உரிய முறையில்  அப்புறப்படுத்த வேண்டும்.

ஈயம் சில அழகு சாதனங்களிலும் சேர்க்கப்படுகிறது. பெயிண்டுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள்,சில வகை மண்பாண்டங்கள் ஆகியவற்றிலும் ஈயம் கலக்கப்படுவதால் இவை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் போது நீரும்   நிலமும் காற்றும் மாசுபட வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே ஈயம் எதிலெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவைப் பெறுவதோடு அதைக் கழிவாக அப்புறப்படுத்தும் போது உரிய முறையில் நிபுணர்களின் துணையோடு அப்புறப்படுத்துவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.

இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்; சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்!

****************

அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

globe india

Radio Talk written by S NAGARAJAN

Date: 8 November 2015

Post No:2310

Time uploaded in London :– 7-05  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மனித குலம்  முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் ஒரு அடையாளமாக பொலிவியா நாட்டின் அன்னைபூமி சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்குள்ள உரிமைகள் போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை அன்னை பூமி சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை,மனிதனின் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை,சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை,இயற்கையின் சமச்சீரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசை தடுப்பதற்கான உரிமை,மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு.

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்!” என்பது தான்! அன்னை பூமி தன்னுள் ஆயிரக்கணக்கான உயிர்களை உருவாக்கி அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறாள். பிரபஞ்ச அமைப்புடன் ஒன்றி இணக்கமுடன் சமச்சீரைப் பாதுகாத்து வருகிறாள்! எல்லாவித சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அவற்றின் சுய நிர்வாகத்தையும் அவள் கொண்டிருக்கிறாள் என்ற பெரு நோக்கத்தின் அடிப்படையில் அன்னை பூமியின் உரிமைகளுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டு, அன்னை பூமியும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள மனிதர்களைப் போலவே சட்டபூர்வமாகப்  பாதுகாக்கப்பட்டவள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சட்டங்களை உலகின் பல நாடுகளும், பல நாடுகளில் உள்ள மாநிலங்களும் இப்போது இயற்றி வருவது ஒரு நல்ல செய்தி!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் நகரசபைகள் அன்னை பூமியின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.

அன்னை பூமியின் சட்ட ரீதியான உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து மனித குலம் இனியாவது தூய நீரையோ அல்லது தூய்மையான காற்றையோ இதர சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையோ மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்.  கூடாது.

நமக்கு வாழ்வளித்து நம்மைக் காக்கும் நம் அன்னை பூமியை நாம் காப்போமாக!

**************

தேனீக்களை அழிக்கும் பேப்பர் ‘கப்’புகள்!

Paper-Cups

Radio Talk written by S NAGARAJAN

Date: 7 November 2015

Post No:2307

Time uploaded in London :– 6-03  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

  

By ச.நாகராஜன்

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

((Part 1 was published yesterday))

flower and bee, IE

இயற்கை படைத்த அரிய உயிரினத்தில் ஒன்றான தேனீக்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மையான செய்தி! இதற்குக் காரணம் மனிதர்களாகிய நமது அஜாக்கிரதையான செயல் தான் என்பது இன்னும் அதிகத் துன்பமூட்டும் உண்மையாகிறது.

அன்றாடம் பேப்பர் ‘கப்’களில் (Paper Cups) அதாவது பேப்பரினால் செய்யப்பட்ட கோப்பைகளில் காப்பியையும் டீயையும் ஏந்திக் குடித்து அவற்றை வீசி எறிகிறோம். இந்த கப்களில் உள்ள காப்பி மற்றும் டீயின் எஞ்சிய இனிப்பை அருந்த வரும் தேனீக்கள் மீண்டும் பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

ஆலைகள் பெருகி வரும் இந்த நாட்களில் இயற்கையான மரங்களும் மரம் சார்ந்த சூழ்நிலையும் இல்லாததால் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தேனீக்கள் தள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் காப்பி மற்றும் டீயை விற்கும் விற்பனை நிலையங்களில் தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக  ஒரு நாளுக்கு 1225 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவற்றில் அன்றாடம் சுமார் 680 தேனீக்கள் சராசரியாக இறந்து கிடப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.

இயற்கையான சூழ்நிலையில் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரிக்கும் தேனீக்கள், இப்போது மலர்கள் அடங்கிய தோட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் தமது உணவுக்காக கழிவாகக் கிடக்கும் கப்களுக்கு வருகின்றன. இப்படி தேனீக்கள் இறப்பதற்கு காலனி கொலாப்ஸ் டிசீஸ் (Colony collapse disease) என்று பெயர்.இந்த தேனீக்களை அழிக்கும் நோய் பல நாடுகளிலும் பரவி தேனீக்களின் இனத்தையே அழித்து வருவது வருத்தமூட்டும் செய்தி.

இத்துடன் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொலைத் தொடர்புக்கான கோபுரங்களிலிருந்து வரும் மின் அலைகளாலும் தேனீக்கள் அல்லல்பட்டு அழிகின்றன.

honey bee

சுறுசுறுப்புக்கே உதாரணமாக விளங்கும் அற்புத தேனீக்களை அழிக்க நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இனி பேப்பர் கோப்பைகளில் காப்பி  மற்றும் டீ அருந்துவதில்லை என்ற நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்; அனைவருக்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அவர்களையும் பேப்பர் கோப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடச் செய்வோம்!

***************

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

plasticproducts

Article Written by S NAGARAJAN

Date: 6 November 2015

Post No:2305

Time uploaded in London :– 8-51  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

  1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

Yuenkong-ltd-plastic-injection-material

பிளாஸ்டிக் பொருள்களினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். சுமார் 250 டன்கள் வரை இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் ஏற்படுகிறது என்பது மலைக்க வைக்கும் ஒரு உண்மை. இவற்றில் 50 விழுக்காடு பிளாஸ்டிக் பைகள் என்பதை நாம் உணர்ந்தால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் நமது பொறுப்பு எத்தகையது என்பதை அறிய முடியும்.

பிளாஸ்டிக் பைகள் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை மட்காது அப்படியே இருக்கும் என்பதால் இது ஆயிரம் வருடம் நீடிக்கும் அபாயம் என்று கூறி விடலாம். கிழிந்த துணிகளும் காகிதங்களும் வெறும் ஐந்தே மாதங்களில் மட்கி விடும் போது குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் டயபர்கள் 500 முதல் 800 வருடங்கள் வரை மட்காது என்பதையும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அழியவே அழியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

மறு சுழற்சிக்கு உட்படும் பிளாஸ்டிக் பொருள்கள் வெறும் 7 சதவிகிதம் தான் என்பதால் இது பெரிய மாற்றத்தை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணரலாம்.

இந்தப் பெரும் அபாயத்திற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்ப்பது தான்!

இதற்கு முன் உதாரணமாக கன்யாகுமரி மாவட்டம் திகழ்கிறது. அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளுக்கு துணிப்பைகளையும் சணல் பைகளையும் கொண்டு சென்று தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அறவே குறைந்து சுற்றுப்புறச் சூழலில் அற்புதமான பெரும் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

நிலத்தில் மட்டுமின்றி நீரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் கழிவாக தூக்கி எறியப்படுகின்றன. கடலில் மிதக்கும் குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் தான்! இவற்றை உணவுப் பொருள் என நினைத்து உண்ணும் ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட மீன்களும், ஆமைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து படுகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு செய்தி!

சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக்கை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.கடைகளுக்கு துணிப்பை அல்லது சணல் பையை நிச்சயம் கொண்டு செல்வேன் என்று உறுதி பூண வேண்டும். இந்த நல்ல பழக்கத்தை நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லி இதை அவர்கள் மேற்கொள்ளுமாறு செய்தால் வருங்கால சந்ததியினர்க்கு வளமான பூமியை விட்டுச் செல்லும் நன்மையைச் செய்தவர்கள் ஆவோம்!

to be continued……………………..

லண்டனில் எல்லோருக்கும் 13 கிலோ தங்கம் கிடைக்கும்!

IMG_8016

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2302

Time uploaded in London :– 9-20 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7982

லண்டனுக்கு வருவோர் அதிர்ஷ்ட சாலிகள்! லட்சுமி கடாக்ஷம் நிறைந்தவர்கள்!. தங்கக் கட்டி கிடைக்கும்! அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல! 13 கிலோ தங்கம், அதாவது 13,000 கிராம் தங்கம்! தொடலாம், எடுக்கலாம், தூக்கலாம். ஆனால் வீட்டுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

லண்டனில் த்ரெட்நீடில் தெருவில் இங்கிலாந்து வங்கியின் காட்சியகம் (Bank of England Museum in Thread needle Street, London) உள்ளது. அங்கு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் 13 கிலோ தங்கக் கட்டியை வைத்துள்ளனர் அதன் கீழே ஒரு கை நுழையும் அளவுக்கு ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர். எல்லோரும் அதைத் தூக்கிப் பார்க்கலாம். நானும் முயன்றேன். ஒரு கையால் தூக்குவது கடினம்தாம். இவ்வளவுக்கும் அந்தக் கட்டி முக்கால் அடி நீளம் கூட இல்லை.

IMG_7992 IMG_7996

இதன் விலை என்ன?

இந்திய மார்க்கெட்டில் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை

ரூபாய் 2600. அப்படியானால் 13,000 கிராம் x ரூ 2600 = ???

நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள்!! இது உங்களுக்கு இன்றைய வீட்டுப் பாடம் (ஹோம் ஒர்க்).

மத்திய லண்டனில் பாங்க் ஸ்டேஷன் அருகில் இந்த மியூசியம் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் காப்பகத்தில் டன் கணக்கில் தங்கக் கட்டிகள் இருக்கின்றன. நமக்கு மாதிரிக்காக ஒரு சிறிய கட்டியை மேலே வைத்தூள்ளனர்.

இந்த மியூசியத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக வணிகவியல், வங்கிகள் பற்றிப் படிப்போருக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், விளையாட்டு மூலம் தெரிந்துகொள்ள பணவீக்கக் கருவி ஒன்று வைத்திருக்கிறார்கள். அதை நெம்புகோல் போல அழுத்தினால் பணவீக்கம் மேலே செல்லும். அருகிலேயே, பணவீக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இங்கிலாந்து வங்கி அதை இரண்டு சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவது எப்படி? என்று பல பெரிய போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

IMG_7991

இங்கிலாந்து வங்கி, இந்தியாவின் ரிசர்வ் பாங்கு போன்றது. 400 ஆண்டுகளுக்கு முன் வங்கி தோன்றியதிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி, மாற்றங்கள், கரன்ஸி, நாணயம் அச்சிடுவது எப்படி? என்பனவற்றை விளக்கி வீடியோ ஆடியோ காட்சிகள் அமைத்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக பல கரன்ஸி துண்டுகளை வெட்டி இணைக்கும் புதிர் வைத்து இருக்கிறார்கள். நான் திங்கட் கிழமை அங்கே போன போது எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள்.

பாலிமர் (Polymer Currency) கரன்ஸி வருகிறது!!

காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து சேதம் அடைவதால் உலகில் முப்பதுக்கும் மேலான நாடுகள் பாலிமர் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துப் பயன்படுத்துகின்றனர். இனி பிரிட்டனிலும் பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப் போகிறார்கள். கொஞ்ச காலத்தில் காகித கரன்ஸி நோட்டுகள் அரிய பொருள் ஆகி விடும்.

இந்த மியூசியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த தினசரி உபயோக நாணயங்கள், ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை விலைக்கும் விற்கிறார்கள். காசுள்ளவர்கள் வாங்கலாம்.

ஆனால் மியூசியத்தைப் பார்க்க கட்டணம் இல்லை. 13 கிலோ தங்கக் கட்டியைத் தொடவும் தூக்கவும் கட்டணம் இல்லை. அந்த ‘த்ரில்’ ஒன்றே போதுமே. லண்டனுக்கு வந்தால் கட்டாயம் பாருங்கள்.

IMG_7962

இந்தியாவில் உள்ள வங்கி மியூசியங்களிலும் இப்படிப் பல உத்திகளைக் கையாண்டால் மக்களின் பொது அறிவு மிகும்!

இங்கிலாந்து வங்கியில் லெட்சுமி!

பிரிட்டனின் செல்வச் செழிப்புக்கு என்ன காரணம்?

நம்முடைய கோஹினூர் வைரம் போன்ற பல அபூர்வ, அதிர்ஷ்டகரமான வைரங்களையும், செல்வம் கொடுக்கும் பல மர்ம சிலைகளையும் பிரிட்டிஷ்காரகள் வைத்திருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் பொம்மை போலத் தோன்றும். ஆனால் அதன் ரஹசியங்களைத் தக்கோரிடம் அறிந்து இதை வைத்துள்ளனர். இங்கிலாந்து வங்கி மியூசியத்தில் லெட்சுமியின் சிலை கிரேக்க பாணியில் இருக்கிறது. தான்ய லெட்சுமியை, கிரேக்கர்கள் செரிஸ் (Ceres= Sri) என்பர். ஸ்ரீ = திரு என்னும் லெட்சுமியின் பெயரே இப்படி செரி என்று மறுவியுள்ளது. நமது அருகிலுள்ள ஸ்ரீலங்காவில் கூட ஸ்ரீ என்பதை ‘சிரி’ என்பர். சிரிமாவோ பண்டாரநாயகெ (நாயக) என்பர்.

இந்த மியூசியத்தில் ஆடியோ, வீடியோ காட்சிகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். நான் போன போது பிரான்ஸ், ஜெர்மனியிருந்து வந்த பள்ளி மாணவ, மாணவியர் — பல கருவிகளை இயக்கி பல விஷயங்களைக் கற்பதைப் பார்த்தேன். 400 ஆண்டுகளுக்கு   முன் லண்டன் எப்படி இருந்தது, வங்கி எப்படி துவங்கியது போன்றவை பொம்மை உருவில் காட்டப்பட்டுள்ளன. ஹெண்டல் என்ற இசை மேதை ஒரு வங்கிக் கணக்கர் என்ற வியப்பான செய்தியும் படம் மூலம் அறிந்தேன்.

IMG_7984 IMG_7985

மாதத்துக்கு ஒரு வியாழக்கிழமையன்று வங்கியின் கவர்னர்கள் கூட்டம் நடைபெறும். அதை மக்கள் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து நிற்பர். காரணம் என்னவெனில் வங்கியின் வட்டி விகிதம் உயருமா, குறையுமா, அதேயளவு நீடிக்குமா என்று அக்கூட்டம் முடிவு செய்யும். வட்டி விகிதம் கூடினால், ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் கட்டும் வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயரும். இந்த முடிவு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மியூசியத்தில்  அறியலாம். சின்ன மியூசியம்தான். ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டால் பக்கத்திலுள்ள கில்ட் ஹால் ஆர்ட் காலரி (இலவசம்),  சாமுவேல் ஜான்சன் மியூசியம் (கட்டணம் உண்டு) ஆகியவற்றையும் பார்க்கலாம். அருகில் லண்டன் மியூசியமும் உளது.

IMG_7951 IMG_7976 IMG_8007 IMG_8013

மாணவர்கள் விளையாடுவதற்காக பண வீக்கக் கருவி, வெட்டி ஒட்டும் புதிரகள் முதலியன வைத்துள்ளனர்.

–சுபம்–

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

jeffrey book

Article Written by S NAGARAJAN

Date: 5 November 2015

Post No:2301

Time uploaded in London :–  8-06 AM

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

 

.நாகராஜன்

 

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் நீங்கள் இளமையோடு இருக்க முடியும். ஆனால் மனமுதிர்ச்சி இன்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” –ஆக்டன் நாஷ்

 

திருமணமாக இருக்கும் கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் இலவச ஆலோசனைடிப்ஸ் தர முன் வந்துள்ளது.

 

 

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே இளம் பெண்களின் எதிர்பார்ப்புகளும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

 

     இளமையாக, மிக அழகாக இருக்க வேண்டும், உயரமோ அதிகமாக இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் பல லகரமாக இருக்க வேண்டும், வீடு மற்றும் இதர சொத்துகள் தன் பெயரிலேயே இருக்கும் டாகுமெண்டைக் காண்பிக்க வேண்டும், முக்கியமாக லக்கேஜுகள் (மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட மூட்டைகள்) எதுவும் இருக்கக் கூடாது.. இத்யாதி, இத்யாதி நிபந்தனைகளை கன்னியர்கள் விதிக்கும் போது பெண்ணின் வீடியோ புரொஃபைலை பார்த்தால் தான் தங்களால் முடிவே எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்!

 

 1139-54aec479aaeec

 

      எல்லா பத்திரிக்கைகளும், இணையதளங்களும், ஜோதிட மற்றும் மேட்ச்மேகிங் நிலையங்களும் அலறுகின்றனஇந்த கண்டிஷன்களைப் பார்த்து. “எங்கள் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா? நாங்கள் எவ்வளவு படித்திருக்கிறோம் தெரியுமா? இப்போதே எங்கள் பெயரிலேயே த்ரீ பெட்ரூம் அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறோமேஎன்று புன்னகைக்கின்றனர், இளம் கன்னியர்கள்!! இளைஞர்களும் சளைக்கவில்லை, அவர்கள் இவ்வளவு எதிர்பார்க்கும்போது நாங்களும் அவர்களுடன் சாட் செய்து தானே முடிவெடுக்க முடியும் என்கின்றனர்.

 

 

      இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை உளவியலாளர் ஜெஃப்ரி ஜென்ஸன் ஆர்னெட் (Jeffrey Jensen Arnett) அழகாகத் தெரிவிக்கிறார்:” ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பெண்கள் வேலை பார்க்க அவ்வளவாகச் செல்லவில்லை; பெரும் பணமும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை; இன்றைய நிலையோ மாறுபட்ட ஒன்று. பொருளாதார மற்றும் உத்யோக அந்தஸ்து ரீதியாகவும் இளம் பெண்கள் இன்று மிக உயர்நிலையை அடைந்து விட்டனர். ஆகவே அவர்கள் மனைவி, தாய் என்ற நிலைகளோடு தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை விரும்புகின்றனர். இந்த அடையாளம் தேடும் முயற்சியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றனஎன்கிறார் அவர்!

Picture of Jeffrey Jensen Arnett

 

 jeefrey profile

      இவர்கள் இப்படி எதிர்பார்த்து தங்களின் திருமணத்தைத் தள்ளிக் கொண்டே போவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது விஞ்ஞானிகள் களத்தில் இறங்கி ஆய்வு நடத்தி முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

 

     தன்னுடையவனாக ஒருவனை ஏற்றுக் கொள்வதற்கு மிஸ்டர் பெர்ஃபெக்டை (Mr Perfect) எதிர்பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வின் முடிவு ஒன்று வலியுறுத்துகிறது. மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி பரிணாம தத்துவத்தின் படியும் கூட இது முடியாத ஒன்று என்பது தெரிய வருகிறது!

 

 

        ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் ஒரு கணினி மாடலை உருவாக்கினர். இந்த மாடல் அமைப்பு ஆயிரம் தலைமுறைகள் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. அபாயமுள்ள சூதாட்டம் போன்றவற்றில் அதிக ஆதாயம் தரும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்பை தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்யும்படி பணித்தனர்!

 

 

       ஆரம்பகால மனிதர்களை இந்த கணினி மூலமாகத் தங்களின் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும்படி செய்து பார்த்து அவர்கள் மிக மிக அருமையான துணைவன் அல்லது துணைவியைத் தேர்ந்தெடுத்தனரா என்பதே கேள்வி!

 

 

     ஆய்வை நடத்திய, மைக்ரோபயாலஜிஸ்டான கிறிஸ் அடாமி ((Chris Adami), “குறைந்த எதிர்பார்ப்புள்ள பார்ட்னரை அவர்கள் மணந்து கொள்ளலாம் அல்லது காத்திருந்துபெர்ஃபெக்டான பார்ட்னரைத்”  தேர்ந்தெடுக்கலாம் என்ற படி மாடல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மிஸ்டர் அல்லது மிஸ் பெர்ஃபெக்டை

 

விரும்பியோருக்கு அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறதுஎன்கிறார்.

 

 

     வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எடுக்கும் முக்கிய முடிவு தனது கணவரை அல்லது மனைவியைத் தேர்ந்தெடுப்பது. இதில் எந்த சூழ்நிலைகள் அவர்களின் முடிவைப் பாதிக்கிறது என்பதையும் பார்த்து விட்டோம் என்கிறார் அடாமி.

 

      ஒரு ஆணோ, பெண்ணோ எந்த சூழலில் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள் என்பது முடிவை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறதாம்! 150 பேருக்கு மேல் உள்ள சமுகச் சூழலில் வளர்க்கப்பட்டோர் உடனடி முடிவை மேற்கொள்கின்றனர். மிகச் சிறிய குழுவினருடன் இருப்பவர்கள் மிக மிக அதிக எதிர்பார்ப்புகளைக் கொள்கின்றனர். இவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழியில்லாமல் போய்விடுகிறது.

 

 

      ஆகவே இந்த ஆய்வின் முடிவின் படி இளம் பெண்கள் மிஸ்டர் ஓகேயை உடனடியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களின் குழந்தை பாக்கியம் உள்ளிட அம்சங்கள் சிறந்து விளங்கும். மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான் வேண்டுமெனில் அப்படிப்பட்டவர் கிடைக்க வாய்ப்பு மிகவும் அரிதே! இதே முடிவு

 

இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மிஸ் பெர்பெக்டை எதிர்பார்க்காமல் மிஸ் ஓகேக்கு ஓகே சொல்ல வேண்டும் என்கிறது ஆய்வின் முடிவு.

 naga katturai

      இந்த சமயத்தில் பழைய கால ஜோக் ஒன்றை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நினைத்துப் பார்த்துச் சற்று சிந்திக்கலாம்.

 

ஒரு இளைஞன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். ஏன் என்று அனைவரும் கேட்ட போது, ‘தான் மிஸ் பெர்ஃபெக்டை மட்டுமே எதிர்பார்ப்பதாகக்கூறினான்.

 

ஒரு நாள், அவன் சந்தோஷத்தால் துள்ளிக் குதிப்பதைக் கண்ட அவனது நண்பர்கள் சந்தோஷத்திற்கான காரணத்தைக் கேட்டனர்.

மிஸ் பெர்ஃபெக்டைக் கண்டு விட்டேன்!” என்றான் அவன்.

மறுநாள் அவன் மிகவும் சோகமாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்கள், அவனிடம்,”என்ன, இன்னுமா மிஸ் பெர்ஃபெக்டிடம் பேசவில்லை!” என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்:”நேற்றே பார்த்துப் பேசி விட்டேன். ஆனால் அவள் மிஸ்டர் பெர்ஃபெக்டை எதிர்பார்க்கிறாளாம்!”

இந்த ஜோக் இன்று நடைமுறை ஆகி விடக்கூடாது!

 

 

உரிய இளம் வயதில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றன அனைத்து அற நூல்களும் !இதையே இன்று அறிவியலும் வற்புறுத்துகிறது!

 

newton

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் ஐஸக் நியூட்டன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டால் அவருக்கு வெளி உலகமோ அல்லது தன்னைப் பற்றிய நினைவோ சிறிதும் இருக்காது. இதை விளக்கும் சம்பவங்களுள் ஒன்று இது.

 

 

ஒருநாள் டாக்டர் ஸ்டக்லி (Doctor Stukely)  என்ற நண்பர் ஒருவர் ஐஸக் நியூட்டனைப் பார்க்க முன்கூட்டியே அவரிடம் நேரம் நிர்ணயித்து விட்டு குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க வந்தார். நியூட்டனின் வேலையாள் அவர் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பதாகவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அது இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிடும் நேரமானதால் அந்த வேலைக்காரர் ஒரு சிக்கனைத் தயார் செய்து அவர் டேபிளின் மீது வைத்து அதை ஒரு மூடியால் மூடி வைத்தார். ஒரு மணி நேரம் ஆனது. நியூட்டன் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டாக்டர் ஸ்டக்லி  சிக்கனை எடுத்துச் சாப்பிட்டார். காலி பாத்திரத்தின் மீது மூடியைக் கவிழ்த்து வைத்தார். வேலையாளிடம் இன்னொரு சிக்கனைத் தயார் செய்யுமாறும் கூறி விட்டார். அது தயாராவதற்குள் நியூட்டன் டைனிங் டேபிளுக்கு வந்து விட்டார்.

ஸ்டக்லியை நோக்கி, “ தாமதம் ஆகி விட்டது. மன்னியுங்கள்.  களைப்பாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் உணவை முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறே மூடியைத் திறந்தார். தட்டில் ஒன்றுமே இல்லை. ஸ்டக்லியைப் பார்த்த நியூட்டன், “நான் எப்படிப்பட்ட ஆள் பாருங்கள்!  சாப்பிட்டு விட்டேன் என்பதையே மறந்துபோய் மறுபடியும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்து விட்டேன்!” என்று புன்னகை செய்தவாறே கூறினார்.

 

நடந்ததை ஸ்டக்லி சொன்னது தனிக் கதை!

 

ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் நியூட்டன்!

*******

 

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

sambadar

ஞான சம்பந்தர் சிலை

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

Research Article Written by London swaminathan

Date: 4 November 2015

Post No:2299

 Time uploaded in London :–  9-32 AM

(Thanks  for the pictures) 

ஞான சம்பந்தர் 16 வயதில் இறைவனடி சேர்ந்தார். அதற்குள் அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்து சைவ வரலாற்றில் அழியா இடம் பெற்றார். அவர் செய்த அற்புதங்களில் ஒன்று ஆண் பனை மரத்தைக் காய்க்க வைத்ததாகும். அதாவது ஆண்மரத்தின் ‘செக்ஸை’ மாற்றியதாகும்! இன்று காலையில் லண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் இதே போன்ற ஒரு அதிசயச் செய்தியை வெளியிட்டுள்ளன.

5000 year old yew tree

படம்:– யூ மரம்

பெர்த்ஷைர் வட்டத்தில் போர்டிங்கல் கிராமத்தில் ஒரு சர்ச்சில் ஒரு யூ மரம் இருக்கிறது. அது ஆண் மரம்; அது திடீரெனப் பழுக்கத் தொடங்கியது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர தாவரவியல் வல்லுநர்கள், அந்த மரத்தில் காய்த்த பழங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர்

5000 ஆண்டுகளாக உயிரோடு வளர்ந்து வரும் புகழ் பெற்ற யூ மரம் ஆண் மரம் என்பது தாவரவியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே. இவ்வாண்டு அதில் பழங்கள் தோன்றின. அதாவது ஆண் மரம், பெண் மரமாக மாறிவிட்டது! இது எப்படி என்பது தாவரவியல் அறிஞர்களுக்குப் புலப்படவில்லை. மிகவும் கீழ்நிலையிலுள்ள சில உயிரினங்களில் ஆண்—பெண் மாற்றம் ஏற்படுவதுண்டு. 5000 வயதுடைய மரம் இப்படி ‘செக்ஸ்’ மாற்றம் அடைந்தது அதிசயத்திலும் அதிசயமே என்று தாவரவியல் அறிஞர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளனர்.

ஞான சம்பந்தர் செய்த அற்புதத்தை சந்தேகித்தவர்களுக்கு இப்பொழுது பித்தம் தெளிந்துவிடும்.

palmyra-palm-fruit

சம்பந்தர் செய்த அற்புதம்!

சம்பந்தர் ஊர் ஊராக ஆலய தரிசனம் செய்துகொண்டு போகையில் திருவோத்தூர் கோவிலுக்கும் போனார். அங்கே ஒரு சிவனடியார் வருத்ததுடன் இருக்கக்கண்டார். காரணத்தை வினவிய போது அந்த பக்தர் சொன்னார்:–

“நான் நிறைய பனை மரங்களை வளர்த்தேன். அதன் காய்களை விற்று வரும் வருவாயில் கோவில் பணிகளைச் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் எல்லாப் பனை மரங்களும் ஆண் மரங்களாக இருப்பதால் காயே காய்க்கவில்லை. இந்த ஊரிலுள்ள நாத்தீகர்கள் என்னை எள்ளி நகையாடி வருகின்றனர். உன்னுடைய சிவனிடம் போய்க்கேள்; எல்லாவற்றையும் பெண் மரங்களாக்கி காய்க வைத்துவிடுவார் – என்று கிண்டல் செய்கின்றனர்” என்று சொல்லி அழுதார். உடனே சம்பந்தர் பத்து பாடல்கள் அடங்கிய ஒரு பதிகத்தைப் பாடினார். அடுத கணமே பனை மரம் காய்த்துக் குலுங்கியது!!

இப்படி ஆண் மரங்கள், பெண் மரங்களாக மாற முடியுமா? என்பதற்கு இப்பொழுது மேற்கூறிய யூ மரச் செய்தி பதில் கொடுத்துவிட்டது. ஒரே வித்தியாசம். சம்பந்தர் அதை நொடிப் பொழுதில் செய்தார். பிரிட்டனில் அது சில ஆயிரம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

தமிழ் முனிவர்கள் காலத்தை வென்றவர்கள்; காலம் கடந்தவர்கள்; த்ரி கால ஞானிகள். அவர்கள் நினைத்தால் காலத்தை மாற்றவும் முடியும், நிறுத்தவும் முடியும்; காலத்தைக் கடந்து வெளியே நின்று முக்காலத்தையும் காணவும் முடியும். இவைகளை சுந்தரர், அப்பர், சம்பந்தர் செய்த அற்புதங்களில் காணலாம்.

முன்னரே, இரண்டு தமிழ் முனிவர்களின் காலப் பயணம் குறித்துக் கட்டுரை எழுதி  இருக்கிறேன். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறிய சம்பவங்களையும் கொடுத்து இருக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டும் விஸ்வரூப தரிசனம், இப்பொழுது விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் கருந்துளை ( BLACK HOLE பிளாக் ஹோல்) போன்றதாகும். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவில் விஸ்வரூப தரிசனம் என்ன என்பது நமக்கு மேலும் தெள்ளிதின்  விளங்கும்!!!

-சுபம்-

மறு பிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

napoleon

Written  by  S NAGARAJAN

Date: 3 November 2015

Post No:2296

Time uploaded in London :–  8-11 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடர்

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.

மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!

 

.நாகராஜன்

வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி

உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.

 

நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்திநான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னேஎன்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!

 

 

அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.

 

 dante

இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.

 

 

எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

 

தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதியரீ இன்கார்னேஷன்என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

 Adolf_Hitler_42_Pfennig_stamp

ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.

 

 

ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.

 

ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனதுஆயோபயாக்ராபி ஆஃப் யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.

 

அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான்சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.

 yogananda

 

ஆனால் எங்குஎப்போது பிறக்கப் போகிறான்?

ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில்நான் காசி, இங்கு இருக்கிறேன்என்று தெளிவான குரல் ஒலித்தது.

 

காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.

 

 

இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!

 

 Benjamin-Franklin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:

 

The Body of B. Franklin, Printer                                                 

Like the Cover of an old book                                                         

Its contents worn out,                                                            

And Stripped of its Lettering and Gilding,                                           

Lies here, Food for Worms,                                                              

But the Work shall not be wholly lost:                                                     

  For it will, as he believed,                                                            

Appear once more                                                               

In a new and more elegant Edition                                                           

Corrected by the Author

 

 

இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும்அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.

 

இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.

*********