தாய்தன்னை அறியாத கன்று இல்லை! கம்பன் உவமை நயம்!! (Post No 3079)

 

pasuvum kandrum

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 7-53 AM

Post No.3079

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

கம்ப ராமாயணம் ஒரு இனிய நீர் ஊற்று; தோண்டத் தோண்ட இனிய நீர் சுரக்கும். தொட்டனைத்தூறும் மணற் கேணி அது; படிக்கப் படிக்க கற்றனைத்தூறும் அறிவு.

 

சின்ன வயதில் எனக்கு ஒரு வியப்பு! நான் மதுரையில் வடக்கு மாசி வீதியில் யாதவர் (கோனார்கள் ) இடையே வாழ்ந்தேன். அந்தக் காலத்தில் மதுரையில் வைகை நதியில் தண்ணீர் ஓடும். ஆகையால் யாதவ இளைஞர்கள் தினமும் மாடுகளை எங்கள் தெரு வழியாக ஆற்றங்கரைக்கு நடத்திச் செல்லுவர். அந்த மாட்டுக் கூட்டம் வரும்போது வீட்டு வாசலில் உள்ள சைக்கிள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக சுவற்றை ஒட்டி நிறுத்துவோம் அல்லது ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு இடிததுச் சென்று விடும். அந்த மாட்டுக் கூட்டம் வரும் முன்னே, “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளும் தகர டப்பிகளும் (ஏழைகளின் மணி!) சப்தம் போடும்.

 

அப்பொழுது ஒவ்வொரு மாடும் அதன் கன்றுடன் செல்லும். கூட்டத்தில் அது அது அதனதன் தாய்ப் பசுவுடன் செல்லும்.  நானோ பள்ளிக் கூடப் பையன். அட, எல்லா மாடுகளும் ஒரே மதிரியாக இருக்கிற தே, எல்லா கன்றுகளும் ஒரே மதிரியாகத் தெரிகின்றனவே. எப்படி அது அது அதனதன் தாயாரை அறிகிறது என்று வியந்து நிற்பேன்.

pasu cow claf kandru

கம்பனும் இப்படி ஒரு காட்சியைக் கண்டான் போலும்! அவனது உவமைகளில் ஒன்று — “தாய்தன்னை அறியாத கன்று இல்லை”.

 

வேதத்திலும் தாய்ப் பசு -கன்றின் அன்பு அடிக்கடி உவமையாகக் கையாளப்படுகிறது. இந்துக்களின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் இரண்டு:

  1. காடுகளில் திரிந்த பல விலங்குகளில் மாட்டின் பால்தான் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கண்டுபிடித்து அதை நாட்டு விலங்காக மாற்றி (DOMESTICATION) உலகம் முழுதும் விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் கற்றுக் கொடுத்தான்.
  2. இரண்டாவது கண்டு பிடிப்பு– டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM (தசாம்ச முறை). இந்த இரண்டையும் இந்துக்கள் கற்பிக்காவிடில் உலகில் நாகரீகம் என்பதோ விஞ்ஞானம் என்பதோ வளர்ந்திரா. நிற்க.

 

கம்பன் உவமை நயத்தைக் காண்போம்:-

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத

ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய

நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா

மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்

 

பொருள்:–

“தலைவனே! பக்தர்களிடம் வருவதற்கு அரியவன்போல் தோன்றி, பிறகு எளிதாக வந்து காட்சி தரும் வல்லமை உள்ளவனே! தன்னைப் பெற்ற தாயைத் தெரிந்து கொள்ளாத கன்றுகள் இல்லை. தான் பெற்ற கன்றுகளை தாயும் அறிந்து கொள்ளும். உன்னிடமிருந்தே உலகம் தோன்றியதால் நீ உலகத்தின் தாயாக விளங்கி, எல்லாப் பொருள்களையும் அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் எல்லாம் உனது தனிமையான நிலையை அறிய மாட்டா.”

 

எனது கருத்து:–

இதைப் படிக்கையில் பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த உண்மையும் நினைவுக்கு வருகிறது.

 

வாத்சல்யம் (தாய்ப் பசு – கன்று (வத்ஸ) இடையிலுள்ள அன்பும் நினைவுக்கு வருகிறது.

 

ஒவ்வொரு பசுவும் அதன் கன்றை அறியும். அது போல ஒவ்வொரு கன்றும் அதன் தாயை அறியும்.

இதே போல தாயாகிய இறைவனே நீ எங்கள் எல்லாரையும் அறிவாய். நாங்கள் உன்னை அறியும் பக்குவம் பெறவில்லையே. இது என்ன மாயமோ என்று கம்பன் வியக்கிறான்.

கன்று எப்படி தன் தாயை அறிகிறதோ அது போல நாமும் இறைவனை  அறிய வேண்டுமானால் அது போலப் பாசம் (பக்தி) வேண்டும். இறைவனோ எப்போதுமே தாய்ப்பசு போல நம் மீது அன்பைப் பொழிந்துகொண்டிருக்கிறான்.

எது எப்படியாகிலும் வேதத்தில் காணும் இந்த உவமை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது சிறப்புடைத்து.

வேத கால உவமை சைவ சித்தாந்தத்துக்கும் வித்திட்டது!

hi-620-emperor-penguins-on-the-sea-ice-close-to-halley-research-station-credit-british-antarctic-survey

இன்னும் வியப்பு நீங்கவில்லை

 

டெலிவிஷனில் இயற்கை பற்றி வரும் ‘டாகுமெண்டரி’களைப் (Documentary ) பார்ப்பேன். அதில் ஒன்று அண்டார்ட்டிகா என்னும் தென் துருவப் பகுதியில் வாழும் பெங்குவின் பறவைகளைப் பற்றியது. அவை கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் அப்படிப் பெரிய கூட்டம்! திருவிழாக் கூட்டம்!!! ஆண் பெங்குவின்கள், கடலில் குதித்து நீந்திவிட்டுக் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் திரும்பி வரும். ஒவ்வொன்றும் அதன் பெண்சாதியைக் கண்டுபிடித்து அதன் அருகி ல் போய் நிற்கும். குட்டிகளும் அதன் அருகே நிற்கும். இதைக் கண்டு எல்லோரும் வியப்பர். எப்படி பல்லாயிரம் பெங்குவின்கள் இடையே ஒவ்வொன்றும் தன் மனைவியைக் கண்டு பிடிக்கின்றன என்று. ஆக , கம்பனின் உவமையை இப்பொழுது நாம் பெக்குவினுக்கும் மாற்றலாம்!

penguin kuuttam

–subham–

 

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–

இமயமலையில் அதிசய ஏரி: கம்பனும் பாடிய புகழ்மிகு ஏரி (Post No.2911)

12-gurla-mandhata-and-lake-manasarovar-from-seralung-gompa

Research Article written by London swaminathan

 

Date: 21 June 2016

 

Post No. 2911

 

Time uploaded in London :– 13-53

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இமயமலையிலுள்ள அதிசய ஏரி பற்றி கம்பனும் பாடியிருக்கிறான்! இன்று You Tube யூ ட்யூப், Whats up வாட்ஸ் அப், Facebook Fபேஸ் புக், Google கூகுள் மூலம் அரை நொடியில் பார்க்கக்கூடிய இமய மலை அதிசய ஏரி பற்றி தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாகத் தெரியும்! ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத, காட்டு மிருகங்கள் நிறைந்த பாதை வழியாக அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரரும் சாது சந்யாசிகளும் சென்ற புனித மலை இமய மலை. அதிலுள்ள கயிலை மலைக்கு நம்மவர் 2000 ஆண்டுகளாகச் செல்வது தேவாரம், திருவாசகம் மூலம் தெள்ளிதின் விளங்கும்.

 

இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது  ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன். அரைத்த மாவையே அரைக்காமல் கம்பன் சொன்னதைக் காண்பிக்கிறேன்.

கயிலை மலைபற்றியும், சிவபெருமான் பற்றியும் கம்ப ராமாயணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவன் உலக இயற்கை அதிசயங்களில் ஒன்றான மானச சரோவர் குறித்தும் பாடியது வியப்பை ஏற்படுத்தும்.

 

மானசமடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே

மேல்முறை அமரர் போற்றும் விழுநதி அதனினோடும்

ஆன கோமதிவந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்

போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்

-பால காண்டம், கம்ப ராமாயணம்

 

ராம லெட்சுமணர் ஆகிய இரண்டு டீன் ஏஜ் பாய்ஸ்களை “உலக நண்பன்” (விஸ்வாமித்ரன்) என்ற முனிவன் அழைத்து செல்கிறான். பெரிய இரைச்சல் கேட்டவுடன் இருவரும் அது என்ன சப்தம் என்று கேட்கின்றனர். விஸ்வாமித்ரர் (உலக நண்பன்) தனது பூகோள அறிவைக் காட்டுகிறான். ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டையே ஒன்றுபடுத்தினான், அவன் வந்தபிறகுதான் நாம் ‘டிராவல் செய்யவே துவங்கினோம் என்று பல அரைவேக்காடுகள் பிதற்றியதுக்கெல்லாம் கம்பன் பதில் சொல்கிறான்:–

பாடலின் பொருள்:–

மானஸம் என்னும் பொய்கையில் (மானஸ ஸரஸ்) உற்பத்தியாகிப் பாய்வதால் சரயூ நதி என்ற பெயரைப் பெற்று, மேன்மைமிகு வாழ்க்கை படைத்த தேவர்களால் போற்றப்பட்டது. அச்சிறந்த நதியோடு கோமதி நதி வந்து கலப்பதால் எழும் ஒலி இது – என்று உலகநண்பன்/விஸ்வாமித்ரன் செப்பினான். மூவரும் தொடர்ந்து சென்று, குளித்தவர்களின் பாவங்களையெல்லாம் போக்கும் நதியை (கங்கை) அடைந்தனர்.

 

அந்தக் காலத்தில் எவ்வளவு ஜியாக்ரபி/ புவியியல் அறிவு இருந்திருக்கிறது! வால்மீகி செப்பியதை கம்பனும் மொழிந்ததிலிருந்து அவர்களுடைய புவியியலறிவு புலப்படும்.

manasarowar-see

ஏரியின் அதிசயங்கள் பற்றிச் சொல்வதற்கு முன் இன்னும் இரண்டு பாடல்களைக் காண்போம்:-

அருவலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திவரும் மேருப்

பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்

இருவரையும் இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்.

 

இலக்குவன் (லெட்சுமணன்), சத்துருக்கனன் ஆகிய இருவரையும் சுமித்திரை பெற்றெடுத்த செய்தியைச் சொல்லும் பாடல் இது. ஒருவரை பொன் மயமான மேரு மலைக்கும், மற்றொருவரை வெள்ளி நிறத்துடைய கயிலை மலைக்கும் ஒப்ப்டுகிறான் கம்பன்.

 

இன்னொரு பாடலில் கங்கை, கயிலை மலை பற்றிப் பாடுகிறான்:–

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்

கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்

ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி

வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே

பொருள்:-

நிலவொளி பரவியதால், ஆறுகள் அனைத்தும் வெள்ளை நிறமுள்ள கங்கை ஆறுபோல் தோன்றின; கடல்கள் யாவும் பாற்கடலை ஒத்திருந்தன; மலைகள் எல்லாம் முடிவு என்று ஒன்றில்லாத சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் போலிருந்தன. இவற்றுக்கு மேலே சந்திரனின் மிகுதியைப் பற்றி நான் சொல்ல  என்ன இருக்கிறது?

pic-yatra-map

 

Lasha- Kailash 1400 kilometres by road

 

ஏரி பற்றிய அதிசயச் செய்திகள்:-

இந்த அதிசய ஏரியில் நிர்மலமான, மேகமற்ற வானத்திலிருந்து பனி பெய்வதால் இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு:-

மானஸரோவர் மைன் பரசே (முதல் ‘ப’)

பின் பாதல் ஹிம் பரசே (மூன்றாவது ‘ப’)

 

மேகமே இல்லாமல் பனி மழை பெய்யும் மானசரோவரை யார் அணுக முடியும்? என்பது இதன் பொருள்.

இரவு நேரத்தில் ஏரியில் நட்சத்திரங்கள் விழுவதூ போலத் தோன்றும். வானியல் அறிஞர்கள் இவைகளை விண்கற்கள் என்று சொல்வர். பக்தர்கள், புண்யாத்மாக்கள் பூமியில் இறங்குவதாகச் சொல்வர்.

1.மானச சரோவர் என்பது பிரம்மாவின் மனதில் தோன்றிய ஏரி என்னும் பொருளுடைத்து.

2.இந்தியாவின் இதய இரத்தக் குழாய் போன்ற கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய மூன்று ஜீவநதிகளும் இந்த ஏரிக்கு அருகில் அல்லது ஏரியில்தான் உற்பத்தியாகின்றன. அதாவது அந்த ஜீவநதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் உபநதிகள் இங்கேதான் தோன்றுகின்றன.

  1. இது 54 மைல் சுற்றளவும் 320 சதுர மைல் பரப்புமுடையது. 300 அடிவரை ஆழம் கொண்டது.

4.நிர்மலமான, ஸ்படிகம் போன்ற அமைதியான நீர்ப்பரப்பு. கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்ப்பதுபோல தண்ணீருக்கடியில் உள்ள மீன்களைப் பார்க்கலாம்.

  1. இந்த ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.
  2. உலகில் அதிகமான உயரத்திலுள்ள சுத்த நீர் ஏரிகளில் இது முதலிடத்தில் நிற்கிறது.

7.ஏரியைச் சுற்றி எட்டு பௌத்த துறவிகளின் மடாலயங்கள் இருக்கின்றன.

  1. இது திபெத் பிராந்தியத்தில் இருந்தாலும், அது இப்பொழுது சீனாவின் ஆக்ரமிப்பில் இருக்கிறது

9.இந்த ஏரி பனிக்காலத்தில் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கோடைகாலத்தில் அந்தப் பனி உடைவதன் பேரொலிகளைக் கேட்கலாம்.

 

  1. ஏரியின் நீரில் கயிலை மலையின் பிம்பங்களைப் பார்த்து ஒரே நேரத்தில் இரண்டு கயிலை மலைகளை தரிசிக்கமுடியும்

11.ஏரிக்கரையில் அழகிய கூழாங்கற்களையும், வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகளையும் பார்க்கலாம்.

  1. உத்தரப்பிரதேசத்திலுள்ள அல்மோராவிலிருந்து 240 மைல் தூரத்திலும் திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து 800 மைல் தொலைவிலும் கயிலை மலையும் மானசரோவரும் உள்ளன. இமயமலையின் அற்புதமான இயற்கைக் காட்சி இது. கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிக்கு மேல் இது இருக்கிறது. ஒரு புறம் கைலாஷ் மறுபுறம் மாந்தாதா சிகரங்கள் காட்சி தரும்.

13.திபெத்திய பௌத்தர்களுக்கும் இந்த ஏரி முக்கியமானது. ட்சோ மவாங் என்று அழைப்பர். மன அமைதியையும், ஆன்மீக உணர்வையும் தூண்டும் இடம் இது.ஒரு மிகப்பெரிய நீலக்கல் ரத்தினம் அல்லது மரகதப்  பச்சைக் கல் போலத் தோன்றும்.

14.காங்ரி கஞ்சாக் என்ற பெயரில் திபெத்திய மொழியில் இரண்டு கைலாஷ் புராணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  1. மானச ஏரியின் நீர் சுவையானது. ஏரிக் கரையில் குகைகளும் உண்டு. சாது, சந்யாசிகள் தவம் செய்ய ஏற்ற இடம். ஏரிக்கரையில் வெப்ப நீர் ஊற்றுகளும் காணப்படுகின்றன.

15.ஒரு புத்த மடாலயத்திலிருந்து கயிலை மலையின் அற்புதமான தோற்றமும், மற்றொரு மடாலயத்திலிருந்து ராக்ஷச தல் ஏரியின் அழகிய தோற்றமும் கண்கொள்ளாக் காட்சி ஆகும்

16.காலை முதல் இரவு வரை வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு அழகில் தோன்றும். நிறமும் சூரிய வெளிச்சத்தில் வேறுபடும்.

17.மூன்று வகையான அன்னப் பறவைகள் இங்கே வசிக்கின்றன. அவைகளில் ஒன்று ஒரிஸ்ஸாவில் சில்கா ஏரி வரயும், மற்றொரு திசையில் மால்வா வரையும் பறந்து செல்லும். இன்னொரு வகை சதபத பிராமணம் என்னும் கி.மு எட்டாம் நூற்றாண்டு நூலில் காணப்படுகிறது. ஆகவே குறைந்தது 3000 ஆண்டுகளாக பறவைகள் பற்றிய அறிவு இருந்திருக்கிறது. காளிதாசனும் மேக தூதத்தில் இதுபற்றிக் கூறியுள்ளான்.

18.இங்கே நடக்கும் அற்புதங்களில் ஒன்று ஜனவரி முதல் நடக்கும் பனி வெடிப்புகளாகும். சில நேரங்களில் பெரிய பனிப்பாறைகள் கரையிலுருந்து 60 அடிக்கு அப்பால் விழுந்து கிடக்கும்.

திடீரென்று பனிக்கட்டிகளிடையே நீர் ஊற்றுகள் தோன்றும். ஏரிக் கரைக்கு அப்பால் சிலமைல் தொலைவில் மூன்று வெப்ப நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.

19.தூமா என்ற அற்புத மூலிகைக் கிழங்கு இங்கே கிடைக்கிறது. மலை எலிகள் இவற்றைச் சேமித்துவைக்கும். இது காமசுகம் தரும் செக்ஸ் மூலிகை.

simikot-to-kailash-manasarowar-trekking

20.ராக்ஷச தல்

ராக்ஷச தல் அல்லது ராவண ஹ்ருதா (லாங்காகி ட்ஸோ) என்னும் மற்றொரு ஏரி அருகில் இருக்கிறது. மானசரோவரிலிருந்து 2 முதல் 5 மைல் தொலைவில் ராக்ஷச ஏரி உள்ளது. லாங்காகி ட்சோ என்றால் ஐந்து மலைகளை உள்ளடக்கிய ஏரி என்று பொருளாம். (லா என்றால் மலை, ங்கா என்றால் ஐந்து, ட்ஸோ என்றால் ஏரி) இங்குதான் இலங்கை மன்னன் ராவணன், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். பூகம்பத்தில் ஐந்து மலை அடுக்குகள் உள்ளே சென்று இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இதன் சுற்றளவு 77 மைல். இதில் இரண்டு தீவுகளும் உண்டு. மானச ஏரியின் அதிகத் தண்ணீர் வழிந்தோடி இங்கே வந்துவிடும்.

கயிலை மலை பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம். 1949-ல் வெளியான ஒரு ஆங்கில நூலிலிருந்து தொகுத்த விஷயங்களிவை.

 

-சுபம்-

 

ஒரே சிந்தனை! கம்பன், பாரதி, கண்ணதாசன் மூவரும் பாடிய விஷயம்! (Post No.2604)

Kannadasan_stamp

Compiled by london swaminathan

Date: 6 March, 2016

 

Post No. 2604

 

Time uploaded in London :–  11-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை

மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”

 

–சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்

 

 

பொருள்:- வானளாவிய தோளை உடையவனே! மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், உமாதேவியை தன் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டான். திருமாலாகிய இன்னொருவன், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைத் தன் மார்பில்

வைத்துக்கொண்டான். பிரமன், சரசுவதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் தோன்றுகின்ற மின்னலை வென்ற நுண்ணிய இடையை உடைய சீதையை நீ அடைந்தால், அவளை எந்த இடத்தில் வைத்துகொண்டு வாழ்வாய்?

kambar

 

இது ராவணனிடம் சூர்ப்பநகை கேட்ட கேள்வி. அதாவது, அவன் சீதையை அபகரிக்க வேண்டும் என்பதும், அவளைக் காவலில் வைக்குமிடத்தை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டுமென்பதும் சூர்ப்பநகையின் சதித்திட்டம். அவளுக்குத் தெரியும் ரவணனின் மனிவியான மண்டோதரி, மஹா பதிவிரதை என்பது. ஆகையால் ராவணனை உளவியல் ரீதியாக (சைகலாஜிகல்) தயார்படுத்த இப்படிப் பல வசனங்களைக் கூறுகிறாள். இந்தப் பாடல் பாரதி, கண்ணதாசன் பாடல்களிலும் பிரதிபலிக்கிறது.

 

 

 

பாரதி பாடியது

 

பாரதியார் பாடல்களை நன்கு ஊன்றிப் படிப்போர்க்கு, ஆழ்வார் பாடல், தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியன,  அவர் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவர். கம்பனுடைய மேற்கூறிய பாடல்  கருத்தும் அப்படியே இடம் பெறுவதைக் காணலாம்.

 

 

பாரதியார் தன் சுயசரிதையில், காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் என்று துவங்கும் பகுதியில் கம்பன் கூறியதை அப்படியே பயன்படுத்துகிறார்.

bharati-stamp

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்
: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

 

கண்ணதாசன் கவிதைகள்

 

கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் பாடல்களையும் தமிழ்ப் பாடல்களையும் அவரது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி… என்ற பாடல் பகவத் கீதை, பஜ கோவிந்தம் ஆகிய துதிகளிலிருப்பதையெல்லாம் முன்னரே கட்டுரைகளில் சுட்டிக்காட்டி விட்டோம்.

 

ஆனால் கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூவரும் ஒரே கருத்தை அதே வரிசையில் சொல்லுவதை இப்பொழுதுதான் காண்கிறேன்.

 

 

 

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் GREATMEN THINK ALIKE— அதாவது, “உயர்ந்த மனிதர்க்கு சிந்தனை ஒன்றே” – என்று

அது போல கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூன்று உயர்ந்த கவிஞர்களும் ஒன்றே நினைப்பர்! நன்றே நினைப்பர்.

 

–சுபம்-

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11 (Post No. 2380)

bharati drawing

Written by S NAGARAJAN

Date: 11 December 2015

Post No. 2380

 

Time uploaded in London :– 5-36 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி இயல்

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். உலக மகாகவியைப் போற்றுவோம்.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

 

 

பாரதி பிறந்தார்

 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.

மிக பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

 

 

இந்த அஸ்திவார விழாவுக்கு அஸ்திவாரம் போட்டது ஒரு கட்டுரை. அதை கல்கி எழுதியிருந்தார். இதைப் படித்த சி.ரகுநாதன் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தார். ஐந்து ரூபாயிலிருந்து ஆரம்பித்த நிதி சுமார் நாற்பதினாயிரம் ரூபாயைத் தாண்டியது அந்தக் கால அதிசயம்.

இந்தக் கட்டுரையையும் பொழுது புலர்ந்தது என்ற அஸ்திவார விழ பற்றிய கட்டுரையையும் இணைத்து இன்னும் ஏழு கட்டுரைகளுடன் பாரதி பிறந்தார் என்ற நூலை சின்ன அண்ணாம்லை தனது தமிழ்ப்பண்ணை வாயிலாக ஆகஸ்ட், 1945இல் (முதல் பதிப்பாக) வெளியிட்டார்.

 

பாரதி ஆர்வலர்களால் நினைவு கூர வேண்டிய ஒரு விழா கவிஞன் பிறந்த எட்டயபுரத்தில் நடந்த இந்த பாரதிப் பெருவிழாவாகும்.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் புத்தகம்.

நூலில் ஏராளமான சுவையான சம்ப்வங்களைப் படிக்கலாம் – கல்கியின் சுவாரசியமான தமிழ் நடையில். இரட்டிப்புச் சந்தோஷம் உருவாகும்.

 

சின்ன அண்ணாமலை தன் முன்னுரையில் இறுதியில் கூறுவது:-

“ ஒரு காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களிடையே தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் தொடுவதே கேவலமாகக் கருதப்பட்டது. அத்தகைய மனப்பான்மையைப் போக்கி இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழ் வெள்ளம் பரவும்படி செய்தவர் கல்கி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பாரதியார் கவிதைக்கு எப்படிப் புது மலர்ச்சியை அளித்தாரோ, அப்படித் தமிழ் வசனத்திற்கு மறு மலர்ச்சி உண்டாக்கியவர் கல்கி. எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த மண்டபத்தின் மூலம் அந்த இருவரின் பெயர்களும் ஒந்றாக இணைந்து விட்டன. ஸ்ரீ கல்கி அவர்களுக்குத் தமிழ் மக்களிந் சார்பாக நன்றி கூறுகிறோம்.”

 

ஆரம்ப காலத்தில் பாரதியாரை ஒரு கவிஞர் என்ற வகையில் கல்கி ஒப்புக் கொண்டதையும் உலக மகாகவி என்பதை ஏற்க மறுத்ததையும் இதற்கு முன் வெளி வந்த அத்தியாயத்தில் படித்தோம். ஆனால் பாரதியின் அற்புதமான கவிதைகளில் மனம் தோய்ந்து அவற்றை அனுபவித்த பின்னர் அவரை உலக மகாகவி என்று கூறுவது மிகவும் சரியே என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

 

அதன் வெளிப்பாடே அவர் முனைந்து நின்று திரட்டிய நிதியும் அதனால் உருவான மணி மண்டபமும் ஆகும். அத்துடன் அவரது கதைகள், நாவல்களில் பாரதி பாடல்களைத் தாராளமாக அவர் உலவ விட்டார்.

நூலில் சில சுவாரசியமான பகுதிகளைப் பார்ப்போம்.

 

பாரதி பிறந்தார் கட்டுரையிலிருந்து:

சந்து பொந்துகளின் வழியாகச் சென்று கடைசியில் பாரதியார் பிறந்த வீட்டை அடைந்தோம். வீட்டு வாசலில் ஒன்றுக்கு மேல் ஒன்று உயரமாக இரண்டு விசாலமான திண்ணைகள் இருக்கின்றன. மேல் திண்ணையின் ஓரத்தில் சுவரில் ஒரு குறுகலான வாசற்படி காண்கிறது. அதற்குள்ளே இருந்த அறையிலே தான் பாரதியார் பிறந்தார் என்று சொன்னார்கள். ஆகா! பிறந்த குழந்தை “குவா, குவா” என்று அழுத போது அந்தக் “குவா” சத்தத்தில், தேச வெறியும் தமிழ்ப் பண்பும் பொங்கித் ததும்பும் அழகிய தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

 

அந்த வாசற்படிக்கு வெளியே, திண்ணையில் பாரதியார் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் சொன்னார்கள். இப்போது இதே இடத்திலிருந்து தான் பாரதி திருநாளன்று அவருடைய திருவுருவப் பட ஊர்வலத்தை ஆரம்பித்து நடத்துகிறார்களாம் – இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.

 

பொழுது புலர்ந்தது கட்டுரையிலிருந்து:-

ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியாரின் கவிதைச் சிறப்பு 3) பாரதியாரை தமிழ்நாடு போற்ற வேண்டிய முறை

பின் வருமாறு பேச்சு ஆரம்ப்மாயிற்று:-

 

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லாரையும் விட எனக்கு வயது அதிகம் (சிரிப்பு) அவருடைய மாமாவைத் தவிரச் சொல்கிறேன். வயது எனக்கு அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்க வேணும்? 1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள்  வீ  சி எறியப்பட்டன. செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.எ. நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்களைப் போல் காரியங்களில் இறங்கி விட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

 

அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் சாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன சாதி என்பது கூட அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும் என் நண்பரு ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய்ப் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பாரதியார் என்ன சாதி என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கேட்டோம். அவர் பிராம்மண சாதி என்று அறிந்ததும், ‘பூணூல் எங்கே?’ என்று கேட்டோம். ‘அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?’ என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் எப்போதுமே கவிகளைப் போற்றும் விஷயத்தில் சாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத் தான்.”

 

நூலில் உள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு மட்டுமே பாரதியாரைப் பற்றியது என்றாலும் கூட அவை பாரதி இயல் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுபவை என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. (இதர ஏழு கட்டுரைகள் திரு.வி.க., தீரர் சத்தியமூர்த்தி, கம்பரும் நானும், தெய்வமானார், கிட்டப்பா ஞாபகம், வீ ழ்ந்த ஆலமரம், சாபம் நீக்கிய கவிஞர் ஆகிய தலைப்புகளில் உள்ளன.

 

நூலில் பாரதி விழாப் படங்களும் இடம் பெற்றுள்ளன.  நூலில் அந்தக் கால விலை நான்கு ரூபாய் எட்டணா!

******

 

பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ.

ப்ஹரடி2

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 10 November 2015

Post No:2316

Time uploaded in London :– காலை- 4-56

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்றவர்களின் ஒருவரான பி.ஶ்ரீ எழுதிய நூல் இது. 195ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதிப்பாக வெளி வந்த இந்த நூல் பின்னர் தொடர்ந்து 1963, 1966 என மேலும் பதிப்புகளைக் கண்ட சுவையான நூல்.

பி.ஶ்ரீ பற்றி அறியாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். கவிதைச் சுவையை ரஸித்து ரஸித்து அனுபவிப்பவர். மற்றவரை அனுபவிக்கச் செய்பவர்.

முத்தான பத்து அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள்:- கவிஞர் திரும்பினார், இதுவோ தமிழ், பாரதியின் நாட்டுப் பற்று, பாரதியாரின் தோழர்களுடன், கடைச் சங்கத்தில் புரட்சிக் கவிஞர், விருந்தும் மறு விருந்தும், பாரதியாரும் டாக்டர் நண்பரும், ஒரு நாளும் இல்லாத திருநாள், பாரதி சித்தாந்தம், மனம் வெளுக்கும் சாணை ஆகிய அருமையான பத்து அத்தியாயங்களை 116 பக்கங்களில் தருகிறது இந்த நூல்.

பாரதியார் பாடும் விதம்

முதல் கட்டுரையில் பாரதி பாடும் விதத்தை பி.ஶ்ரீ குறிப்பிடுகிறார் இப்படி: “இவர் பாட ஆரம்பித்து விட்டால் ஒரே வியப்பு – உணர்ச்சி மேலிட்டு நிற்கும். பாடப் பாட வசீகர சக்தி அதிகரித்துக் கொண்டே போகும். பராசக்தி வீர முரசு கொட்டிக் கோழைகளுக்குத் தைரியத்தை ஊட்டுவது போலவும், தரும முரசு கொட்டி அதருமத்தை வீழ்த்துவது போலவும் தோன்றும். பொதுவாகப் பாரதியாரின் தேசீய கீதங்களையெல்லாம் ஒரு வகையில் ’முரசுப் பாட;ல்கள்’ என்றே குறிப்பிடலாம்.

அடுத்த கட்டுரையில் அவர் பாரதியாரின் தமிழ் பற்றி ‘இதுவோ தமிழ்’ என வியக்கிறார். அவரது சொற்களைப் பார்ப்போம்: “பால கங்காதர திலகர், விபின சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரையும் தேசீய மும்மூர்த்திகளாகத் தமிழ் இளைருலகத்திற்குக் காட்டியவர் பாரதியார். லஜபதி ராய் ‘நாடு கடத்தப்பட்ட’தும் அது குறித்துப் பாரதியார் பாடிய பாட்டை ஒரு மாணாக்கன் இசையோடு உருக்கமாய்ப் பாடக் கேட்ட பின், ‘இதுவோ தமிழ்’ என்று வியந்து போனேன்.

தோழருடன் பாரதியார்

‘பாரதியாரின் தோழர்களுடன்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ வையாபுரி பிள்ளையின் அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலின் பதிப்புரையில் வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்… பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. பாரதியாருக்குத் தாகம் அதிகமாயிருக்கிறதென்பதைக் குறிப்பால் உணர்ந்தேன். உடனே ‘ஐஸ்’ இட்டு ஆரஞ்சு நீர் கொண்டு வரும்படியாக ஒருவனை அனுப்பினேன். இதைத் தெரிந்து கொண்டு, ‘தண்ணீர் போதுமானது’ என்று அவர் கூறினார். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அந்தணர்கள் அல்லரென்று சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய ஓர் அபூர்வமான ஒளி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைக் பாராட்டுவதில்லையென்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும் ‘எல்லோரும் ஒன்ரென்னும் காலம் வந்ததே’ என்றும் அவர் தமது சுதந்திரப் பள்ளிற் பாடியுள்ளமை என் நினைவிற்கு வந்தது. முடிவில் நான் கொண்டு வரச் சொன்ன பானத்தையே பருகி நீர் வேட்கையைத் தணித்துக் கொண்டார்.

பாரதியின் சித்தாந்தம்

இன்னொரு நிகழ்ச்சியை ‘பாரதி சித்தாந்தம்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ விவரிக்கிறார். அதில் முக்கியமான ஒரு பகுதி:-“கவிதை என்றால் என்ன? அதனால் என்ன பயன்?’ என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ‘ஜயமுண்டு, பயமில்லை’ என்று பாடத் தொடங்யே, ‘பயனுண்டு பக்தியினாலே’ என்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கி விட்டார்…

இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்தி விட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, ‘அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகிறோம். பாடுவீர்களா?” என்று வெகு வினயமாய்க் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. ‘இதை’ பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே!’ என்றார் டாக்டர் சஞ்சீவி.

‘ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர், அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்: தீமையுடன் போர் – இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக் கொண்டு போக வேண்டியிருக்கிறதே, அது தான் என் தொழில்!” என்றார் பாரதியார்.

இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளை பி.ஶ்ரீ தனக்கே உரித்தான பாணியில் அழகுறச் சொல்கிறார்.

பி.ஶ்ரீ. யார்?

இனி பி.ஶ்ரீயைப் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.

பி.ஶ்ரீயைப் பற்றி பிரபல எழுத்தாளர் தேவன் அவர்கள் பம்பாய் கோரேகான் தமிழ்ச் சங்க மலருக்காக எழுதிய ‘நான் கண்ட பி.ஶ்ரீ.’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது (இந்தக் கட்டுரையை, சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1959ஆம் ஆண்டு நடந்த மாநாட்டை ஒட்டி வெளியிட்ட சிறப்பிதழில் மறு பிரசுரம் செய்தது)

தமிழ் உலகத்திற்குக் கம்பன் கவிதா நயத்தை திராக்ஷா பாகமாக எடுத்துக் கொடுத்தவர் பி.ஶ்ரீ. அவர்கள் எத்தனை முறை கம்பனைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் தெவிட்டாத சுவையுள்ளது ராம காதை என்பதை இன்றும் எடுத்துக்காட்டி வருகிறவரும் அவர் தான்…..

கவி பாரதியாருடன் 1918ம் வருஷம் முதல் மூன்றாண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டு வந்தார். பாரதியார், பி.ஶ்ரீ அவர்களின் இல்லத்திற்கு வருவது வழக்கம் என்பதை நான் அவரிடமிருந்தே கேட்டறிந்திருக்கிறேன். தவிர, பாரதியாரின் இளமைப் பருவத் தோழரான வேதநாயகம் பிள்ளை இல்லத்திலும் வேறு பல இடங்களிலும், பாரதியாரே தம் பாடல்களைப் பாடக் கேட்டுக் கேட்டுப் பரவசமாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பி.ஶ்ரீ. தம்மை “தமிழின் ஆயுள் மாணவன்” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த திருப்தியும், பெருமையும் கொள்வார்.”

*

தேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய ரஸிகர், உலக மகாகவி ஒருவரைப் பற்றி எழுதி இருக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும்; தம் இல்லத்தில் உள்ள நூலகத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

*****************

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -10

Kaliya-Mardana-

Article Written by S NAGARAJAN

Date: 4 November 2015

Post No:2298

Time uploaded in London :–  8-35 AM

(Thanks  for the pictures) 

பாரதி இயல்

ச.நாகராஜன்

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் பாரதியார் எப்படி மிகப் பெரும் கவியாக அங்கீகரிக்கப்பட்டார், அதற்கு பாரதி ஆர்வலர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி மகத்தான முயற்சிகளை எடுத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் மிக முக்கியமான நூலும் இது தான்.

சுமார் 195 பக்கங்கள் உள்ள இந்த நூல் முதலில் 1937இல் வெளிவந்தது. நல்ல வேளையாக 2007இல் இது மீளவும் பதிப்பிக்கப்பட்டது.

நூலின் பின்னணி குறித்து 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் விவரிக்கிறது:

.ரா.வின் கடிதம்

அதில் சில பகுதிகள்:

“1935 டிசம்பர் மாதம். சென்னையில் மணிக்கொடிக் காரியாலயத்தில் தங்கி இருந்த சமயம். இரவில் ராமையா, கி.ரா. புதுமைப்பித்தன், ஆர்யா, சிட்டி ஆகியோரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சிட்டி ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார். வ.ரா.வின் கடிதம்.இலங்கையிலிருந்து எழுதி இருந்தார். “வீரகேசரி” ஆசிரியராக அப்போது அங்கே இருந்தார். பத்திரிகையில் ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யும் தானும் எழுதிக் கொண்ட பகிரங்க கடிதப் போக்குவரத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

1936 இல் தினமணி பத்திரிகை, ‘பாரதி மலர்’ என்று ஒரு அநுபந்தம் வெளியிட்டிருந்தது. அதில் முதல் கட்டுரை ‘நெல்லை நேசன்’ என்ற புனை பெயரால் பி.ஶ்ரீ. ஆசார்யா எழுதிய ‘வீர முரசு’ என்பது. அதில் கண்டிருந்த இரண்டு விஷயங்கள் பற்றித் தான் விவகாரம். ஒன்று, பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம், அல்லவா? என்பது. இரண்டாவது பாரதி ஒரு நல்ல கவி. மகா கவி அல்லர் என்பது.

kalki stamp

கல்கியின் விமரிசனம்

நெல்லை நேசனின் கட்டுரையைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுத, அதில் ஆசிரியர் குறிப்பாக கல்கி தன் பங்கிற்கு இப்படி எழுதி இருந்தார்:

“ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் தாகூரையும் காட்டிலும் பாரதியார் உயர்ந்தவர். அவர்களது கவிதைகள் எல்லாம் சேர்ந்து பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று யாராவது வெளியிட்டிருந்தால் (இப்படி எழுதியவர் வ.ரா. அவரைக் கல்கி தாக்கும் வகையில் இப்படி எழுதி இருந்தார்.) அவருக்கு இலக்கியம், கவிதை ஆகியவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது வெளிப்படை. அவர் நிரக்ஷரகுக்ஷி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று சந்தேகிப்பதற்கு இடம் உண்டு. அவர் ஷெல்லியையும் தாகூரையும் படித்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. ஒரு வேளை படித்திருந்தாலும் ஒரு வரி கூட அர்த்தமாகாமலே படித்திருக்க வேண்டும். அவர் பாரதியின் கவிதையைப் படித்து ரசித்தார் என்பதும் சந்தேகத்துக்கு இடமாகும். தேசாபிமானமும் பாஷாபிமானமும் பகுத்தறிவை மறைத்து விட இடம் கொடுக்காது. பாரதியை ஷெல்லியுடன் ஒப்பிடலாம். ஆனால் ஷேக்ஸ்பியருடனும் தாகூருடனும் ஒப்பிடுதல் கூட சரியல்ல. வால்மீகி, திருவள்வக்ளுவர், காளிதாசர், கம்பர், ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரு முறையே தோன்றி உலகத்துக்கே பொதுவாய் விளங்கும் கவிகள். ஷெல்லி, பாரதி போன்றவர்கள் அந்தந்த தேசத்திற்கே சிறப்பாக உரியவர்கள். இலக்கிய ஆராய்ச்சியும் கவிதை உணர்வும் சொற்ப அளவில் உள்ளவர்களுக்குக் கூட இவ்விஷயத்தில் சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லை.”

கல்கியின் மேற்படி குறிப்புக்கு வ.ரா. சுதேசமித்திரன் பத்திரிகையில் விரிவாக எதிர் பதில் எழுதினார்.

இப்படிப்பட்ட சூடான கவிதா விமரிசனப் போட்டியைத் தொடர்ந்து பாரதியாரின் இடத்தை உலக மகாகவிகளுள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமும் காலத்தின் கட்டாயமும் ஏற்பட்டது.

அதன் விளைவாக எழுந்ததே இந்த கண்ணன் என் கவி என்ற நூல்.

globe stamp

பாரதியாரின் உலக பரிமாணம்

ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கவிதைகளை எடுத்து அலசி ஆராய்ந்து பாரதியாரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுந்தது.

பல்வேறு ஒப்பீடுகளில் நூல் குறிப்பிடும் ஒரு ஒப்பீடு இது:

“ஷெல்லி, பைரன் முதலியவர்களைப் போல ஜெர்மனியில் கதேக்குப் பிறகு தோன்றிய ஹென்ரிக் ஹைன் என்ற சிறந்த சுதந்திரக் கவிஞர் தமது அபாரமான கவிதா திறமையைக் காட்டி தம் நாட்டாருக்குச் சில ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தார். சமீப காலத்தில் ஹைன் திறமைக்கு இணையான கவிஞன் ஜெர்மனியில் தோன்றியதில்லை. ஜெர்மானிய இலக்கியத்தில் மிகவும் எளிதான செய்யுள் முறையையே ஹைன் பெரும்பாலும் உபயோகித்தார். இந்த முறையை மிகவும் லகுவாய் கையாண்டு இதன் மூலம் மகத்தான உணர்ச்சிகளை வெளியிட்டார். பாரதியார் பழைய யாப்பு முறைகளைப் புறக்கணித்து தைரியமாய் எளிதான புது முறையில் பிரம்மாண்டமான கருத்துக்களை அமைத்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது. பாரதி சொந்த இடத்தை விட்டு பிரெஞ்சு நிலமாகிய புதுவையில் வசிக்க நேரிட்டது, ஹைன் பல வருஷங்களுக்கு முன்னால் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையின் பயனாகத் தன் சொந்த நாடாகிய ஜெர்மனியை விட்டு பிரெஞ்சு ஸ்தலமாகிய பாரிஸ் நகரத்தில் வசித்ததும் சிலருக்கு பிரமாத வியப்பாகத் தோன்றாது. ஆனால், கவிதைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளையும் கலை உணர்ச்சிகளையும் வெளியிட்டது, இருவருக்கும் பெரிய கவிகளின் லட்சணமாக அமைந்திருந்தது.”

இந்த நூல் கண்ணம்மா பாடல்களை அலசி ஆராய்கிறது; பாரதியை நிகரற்ற உலக மகாகவிகள் வரிசையில் சேர்க்கிறது.

இப்போது எண்ணிப் பார்த்து வியப்படைகிறோம். பண்டிதர்களில் ஒரு சாராரும், படித்தவர்களின் ஒரு சாராரும், பத்திரிகைத் துறையினரில் ஒரு சாராரும், அரசியல் துறையில் ஒரு சாராரும் பாரதியாரை மூடி வைக்கப் பார்த்ததையும் அவரை அதிலிருந்து தக்க சான்றுகளைக் காட்டி பாரதி ஆர்வலர்கள் அவரை உலக மகாகவியாக மீட்டதையும் வரலாறு சொல்கிறது.

கு.ப.ரா. சிட்டி, வ.ரா போன்ற எண்ணற்றோர் இந்த பாரதி யாகத்தில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொண்டதால் அல்லவா உலக மகா கவியாக பாரதி ஒளிர்ந்தான். இந்த ஆரம்பகால பாரதி பக்தர்களுக்கு நம் சிரம் தாழ்த்திய அஞ்சலியைச் செய்து இந்த நூலை பல முறை படித்து மகிழலாம்!

**********

பாரதி சொன்ன ஜோதிடம் பலிக்கும்: பாகிஸ்தான் அழியும்!

akhand baharat 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 11 September  2015

Post No. 2147

Time uploaded in London: –   10-35 am

(Thanks to face book friends and others for the pictures)

“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” – பாரதி

“மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம்” – பாரதி

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது.பாரதி வாக்குகள் பொய்த்ததில்லை. அதுவும் வேதம் படித்த பிராமணனான பாரதி வாக்கு பொய்த்ததே இல்லை. அவன் சொன்ன மூன்று விஷயங்கள் – ஆரூடங்கள் பலிக்குமா?

முதல் ஆரூடம்

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

இரண்டாம் ஆரூடம்

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்

ஆம், ஆம், இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க.

மூன்றாம் ஆரூடம்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

இன்னும் பல விஷயங்களை அவன் சொல்லியிருக்கிறான். அவன் இந்தியாவின் நாத்ரதாமஸ் — மறைபொருளில்  அவன் சொன்ன விஷயங்களை நாம்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்!

bharathi-1

ஏன் “சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம்” என்று சொன்னான்? வந்தே மாதரம் என்ற சொல், அல்லாவைத் தவிர மற்றவர்களை வணங்குவதாகும் என்று சொல்லி, காந்திஜிக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுத்து இந்தியாவைத் துண்டாடினான் முகமது அலி ஜின்னா. இதன் காரணமாக பாகிஸ்தான் என்னும் குறைப் பிரசவ, அல்பாயுஸ் குழந்தை உருவானது. பின்னர் பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எண்ணி நாமே 1971-ல் அதை உடைத்து பங்களாதேஷை உருவாக்கினோம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க நமக்கு இப்போது இருபுறமும் எதிரிகள். ஆனால் பாரதி வாக்கு பொய்க்காது. பாகிஸ்தானும் பங்களாதேஷும் (வங்க தேசம்) உலக வரைபடத்திலிருந்து மறைந்து “சேதமில்லாத” ஹிந்துஸ்தானம் உருவாகும். அகண்ட பாரதம் உருவாகும். இது நித்திய சத்தியம்.

இந்தியா வல்லரசாகும்

எல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று பாரதி மும்முறை கூறுகிறான். இந்தியா வல்லரசாகும் என்பது மட்டும் இதன் பொருளல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தது போல இனி, இந்தியா எப்போதும் தலைமைப் பீடத்திலேயே இருக்கும். எல்லோரும் உலக நாடுகளின் பெயரைச் சொல் என்றால் இன்று அமெரிக்கா, ரஷ்யா ……… என்று வரிசைப் படுத்துவர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா……. என்று துவங்கி அடுத்த நாடுகளின் பெயர்களைச் சொல்லுவர். இது மூன்றாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் நிகழும். மூன்றாம் உலகப் போர் இந்திய மண்ணில் நடைபெறும் என்று இந்திய யோகி ஒருவர் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு ஸ்தாபனமும் இப்படியே கணித்திருப்பதை லண்டன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது கண்டு வியப்படைந்தேன்.

IMG_3754 (2)

இலங்கைக்குப் பாலம்

இலங்கையின் பெயரை சிங்களத் தீவு என்று பாரதி குறித்ததால், தனி நாடு வராது என்று நான் முன்னரே சொல்லி வந்தேன். அது போலவே விடுதலை இயக்கத்தினரும் வேருடன் சாய்ந்தனர். ஆனால் பாரதி சொல்லுவது புதுமையான விஷயம். இரண்டு நாட்டுக்கும் இடையே ஒரு பாலம் அமையப் போகிறது. அது சேதுவை மேடாக்கி அமைக்கப்படும் என்று. இதுவும் 50 ஆண்டுகளுக்குள் நிகழும் என்றே தோன்றுகிறது

இதுவரை சொன்னது பலித்ததா?

கவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:

கவிகள் எதைப் பார்ப்பதில்லை? கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ?

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான்  பஹுஞ்சே கவி =  சூரியன் புக முடியாத இடத்திலும் கவிஞன் நுழைந்து பார்க்க வல்லவன் என்று சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பழமொழிகள் உள்ளன. பாரதியும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகிவிட்டால் அவன் சொல்வதெல்லாம் மந்திரமாகும் என்கிறான். பாரதி ஒரு சித்தன்; பாரதி ஒரு ரிஷி; பாரதி ஒரு மந்த்ர த்ருஷ்டன்!

பாரதி சொன்னதெல்லாம் பலிக்கும் எனபதற்கு உரைகல் எது?

ஆடுவோமே, பள்ளுபாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று  நம் நாடு சுதந்திரமடைவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லிவிட்டு 1921 ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனான். அவன் சொன்னது பலித்தது.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து பி.பி.சி. தமிழோசை அந்தப் பணியைச் செய்கிறது. நானும் பிரிட்டிஷாரின் அழைப்பின் பேரில் 1987 முதல் 1992 வரை பி.பி.சி. தமிழோசை மூலம் இப்படி உலகம் முழுதும் தமிழ் முழக்கம் ஒலிக்கச்செய்தேன்.

இதன் பிறகு சிங்களவர் தயவில் (அவர்களடித்த அடியில்)  இலங்கைத் தமிழினம் நார்வே முதல் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா வரை (வடதுருவம் முதல் – தென்  துருவம் வரை) பரவியது. உலக கம்ப்யூட்டர் தலைநகர் பங்களூராக மாறியதால் சென்னைத் தமிழர் உலகெங்கும் பரவி தமிழ் வளர்த்தும் வருகின்றனர். இன்று தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கோவில் இல்லாத நாடுகள் வெகு சிலவே. தொல்காப்பியப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் இன்று இருந்திருப்பாரானால் “வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” — என்று பாடியதை சிறிது மாற்றி “வடதுருவம் முதல் தென் துருவம் ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று பாடியிருப்பார். பாரதி சொன்னது உண்மையானது!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று கவிபாடினான் பாரதி. இன்று நம் தமிழ் – நற்றமிழ்—செம்மொழி உயர்வு பெற்றுவிட்டது. இப்படிப் பாரதி பாடிய எத்தனையோ விஷயங்கள் பலித்ததால், நான் சொன்ன மூன்றும் பலித்தே தீரும்.

1.இந்தியா வல்லரசாகும்

2.பாகிஸ்தானும் பங்களாதேஷும் அழிந்து அகண்ட பாரதம் உருவாகும்.

3.சிங்களத் தீவான இலங்கைக்கு சாலைப் பாலமும், ரயில் பாலமும் அமைக்கப்படும்.

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!

-சுபம்-

பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–

பாரதியார் கவசம் அணியுங்கள்!

IMG_3382

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

WRIITEN BY S.NAGARAJAN

Date : 10 September  2015

Post No. 2143

Time uploaded in London: –   8-03 am

 

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினம். பாரதியார் கவசம் அணிய உகந்த நாள். தினமும் பாரதியைப் படிப்போம். அந்த வழி நடப்போம்!

 

ச.நாகராஜன்

கவசம் ஒன்று வேண்டும்!

சார், கந்த ஷஷ்டி கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். மஹாபாரதத்தில் வரும் இந்திர கவசம் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன பாரதியார் கவசம்?பாரதியார் ஒரு கவசமும் பாடியதில்லையே!

தலைப்பைப் பார்த்து இப்படிக் கேட்பது நியாயம் தான்!

பாதுகாப்பைத் தருவது கவசம். விஷக் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு க்ரீம், நீரின் தீய தன்மையைப் போக்க ஒரு ஃபில்டர் என இப்படி ஆரம்பித்தால் நம் வாழ்க்கையில் நோய் நொடி அண்டாமல் இருக்க எத்தனை பாதுகாப்பு மருந்துகள், சாதனங்களை உபயோகிக்கிறோம். பிறப்பிலிருந்து இறப்பது வரை….. எண்ணி மாளா.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் உளவியல் ரீதியாகவும் தீய சக்திகளின் மூளைச் சலவையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது கவசம் இருக்கிறதா? சரியான நோக்குடன் வீறு நடை போட்டு நம்மையும் தேசத்தையும் முன்னேற்ற வழி உண்டா?

மனம் போன படி எழுதும் பத்திரிகைகள் ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்.

டிவி நிகழ்ச்சிகளோ பார்க்கக் கூடாதவற்றை பார்க்கக் கூடாத வயதில் பார்க்க வைக்கும்.

பாடம் சொல்லிக் கொடுக்க வைக்கும் வாத்தியார்களை நியமிக்கும் பல்கலைக்கழகமே படு ஊழலின் பட்டறையாக இருப்பதைப் பார்த்து அதிர்கிறோம்.

போலீஸ் லஞ்சம், அரசு நிர்வாக லஞ்சம், போக்கு வரத்தில் லஞ்சம், நீதித்துறையில் லஞ்சம் என்று எந்தத் துறையில் உள்ளே புகுந்தாலும் கவசமில்லா சாமான்யனை ஏகப்பட்ட வியாதிகள் பீடிக்கிறது.

இதைப் போக்க ஏதாவது நவீன கவசம் இருக்கிறதா! இருக்கிறது.

bharati, bharatamata

பாரதியார் கவசம்

அது தான் பாரதியார் கவசம். அவர் கவசம் ஒன்றையும் தனியாகப் பாடவில்லை. அவரது பாடல்களே கவசம்!

நம்மை இன்று இருக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரே அருமருந்து பாரதியார் பாடல்கள் தாம்!

எந்தத் துறையில் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள். பாரதியார் படைப்புகளில் சரியான பதில் இருக்கும்.

இதை சைவர்கள் அஞ்செழுத்தை ஓதுவது போல, வைணவர்கள் எட்டெழுத்தை ஓதுவது போல பாரதீயர்கள் தினமும் ஓதி வந்தால் பாடி வந்தால், படிப்பதை நடப்பில் கடைப்பிடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வித தீய சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆத்திசூடியிலிருந்து ஆரம்பிக்கலாம். ஔவையாரின் ஆத்திசூடி இல்லை. புதிய ஆத்திசூடியிலிருந்து!

அச்சம் தவிர்; ஆண்மைந் தவறேல்; குன்றென நிமிர்ந்து நில்; தோல்வியிற் கலங்கேல்; தவத்தினை நிதம் புரி பணத்தினைப் பெருக்கு; பாட்டினில் அன்பு செய்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திட வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(சமுதாயத்தில் வாழும் வழியைக் கவசம் தருகிறதா?)

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான் பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் – (கீதை இரு வரிகளில் கற்று விட்டோமா?)

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு

சக்திதனையே சரணம் கொள்ளு – என்றும்

சாவினுக்கோர் அச்சமில்லை தள்ளு

ஜயமுண்டு பயமில்லை மனமே…. பயனுண்டு பக்தியினாலே

ஜாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவிலும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி. (புதுமைப் பெண்ணிவள் பேச்சுகள் கேட்டீரோ?!)

காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே!

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்!

பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது!

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!

செய்தலுன் கடனே – அறம் செய்தலுன் கடனே அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – (கீதையின் சுருக்கம் கற்று விட்டோமா?)

கவலைப் படுதலே கரு நரகம்மா!

உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்!

மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாகி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடம்பை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே

ஏராளமான பாரதியாரின் முத்திரை வரிகளில் சிலவற்றை மேலே பார்த்தோம்!

பாரத நாட்டின் முன்னேற்றம், தமிழ் மொழியின் முன்னேற்றம், லஞ்ச லாவண்யம் ஒழிய வழி, ஹிந்து-முஸ்லீம்-கிறிஸ்தவ ஒற்றுமை, பெண் முன்னேற்றம்,விஞ்ஞான முன்னேற்றம், பழைய அறங்களின் ஏற்றம் – எந்த விஷயமென்றாலும் அதற்கு தெளிவான வரையறுப்பும் வழிகாட்டுதலும் பாரதியார் கவசத்தில் உண்டு.

எத்தனை எத்தனை பாடல்கள்; அத்தனை பிரச்சினைகளுக்கும் அதில் வழி காட்டுதல் உண்டு!

பாரதியார் நினைவு நாளில் நித்தமும் பாரதிப் பாடல்களைப் பாட உறுதி பூண்டு பாரதியார் கவசம் அணிவோம்; பாரையே சுவர்க்கமாக்குவோம்.

^^^^^^^^