என் கேள்விக்கு என்ன பதில்? புத்தரிடம் கேள்வி (Post No.6974)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 3 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –19-43

Post No. 6974

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

இந்து மதக் கதைகளை எல்லாம் காப்பிஅடித்து, ஜாதகக் கதைகளில் புத்த மதக் கதைகளாக்கிவிட்டனர். அதில் ராமாயணம், மஹாபாரதம் கூடப் போதிசத்துவ அவதாரத்தில் வந்ததாகக் கூறப்படும். இதே போல விஷ்ணு பத்து முதல் 24 அவதாரங்கள் எடுத்ததாக நமது புராணங்கள் கூறுவதற்குப் போட்டியாக போதிசத்துவர் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததாக எழுதிவிட்டனர். இது போல மற்றொரு காப்பிஅடித்த விஷயம் மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் பிரஸ்னம் ஆகும். தண்ணீர் எடுக்க குளத்துக்குப் போன  4 பாண்டவர்கள் இறந்துபோனவுடன், ஐந்தாவதாகப் போன தர்மபுத்திரன் (யுதிஷ்டிரன்) யக்ஷனின் கேள்விகளுக்குச் சரியான பதில்களைக் கூறுகிறான். இது மிக நீண்ட கேள்வி-பதில் பகுதி. இது மஹா பாரதத்தில் மிகவும் புகழ்பெற்ற சம்பவம். ஒவ்வொரு பதிலும் ஒரு பொன்மொழி.

இந்த மஹாபாரத யக்ஷப் பிரஸ்னத்துக்குப் போட்டியாக உள்ள பகுதியில் புத்தரை ஒரு தேவதை கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் சொன்னதாகவும் எழுதிவிட்டனர். புத்தர் உயிர்வாழ்ந்தவரை இப்படிச் செய்யவில்லை. அவர் இறந்தபின்னர் இப்படிக் கதை கட்டிவிட்டனர்.

இதோ புத்த மத யக்ஷப் பிரஸ்னம். இது மலேயாவில் இருந்து 1958ம் ஆண்டு வெளியான நவரசம் பகுதியில் வெளியானது-

xxx

பாரதியாரும் தமிழ் இசையும்

தமிழிசை இயக்காத்தை 1940களில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியார் முறையாகத் துவக்கிவைத்தார். அதற்கு முன்னதாகவே இது பற்றி கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி எழுதி வந்தார். ஆனால் அவர்களுக்கும் முன்னதாக பாரதியார் தமிழில் கீர்த்தனைகள் பாடுவது பற்றியும், மற்ற மொழி பாட்டுகளைப் பொருள் தெரிந்து பாடுவதையும் ஆதரித்து எழுதி வாந்தார். புத்தரின் கேள்வி பதிலுக்குக் கீழே (1958ல்) பாரதியாரின் மேற்கோளைப் படியுங்கள்.

Tags- புத்தரின் கேள்வி-பதில்

பாரதி, தமிழிசை

–subham–

அறிவியல் வியக்கும் கண் திருஷ்டி! (Post No.6971)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 3 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 6-08 AM

Post No. 6971

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்! (Post No.6948)

This image has an empty alt attribute; its file name is ganesh-gold.jpg

WRITTEN  by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-45 AM

Post No. 6948

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

முக்கிய தினங்கள் : விநாயக சதுர்த்தி : 2-9-2019 ரிஷி பஞ்சமி 3-9-2019

மாலை மலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகெங்கும் விநாயகர்!

விநாயக சதுர்த்தி வழிபாடு மிகுந்த கோலாகலத்துடன் காஷ்மீரிலிருது கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகை.

நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7வது வெண்பா,

“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.

இதில் ‘ஒரு கை  முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.

இன்றோ தமிழ் நாட்டில் பிள்ளையார் பட்டியில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருக்கும் பிள்ளையாரது வழிபாடும் பெயர்களும் நமக்குப் பிரமிப்பை ஊட்டுகின்றன.

திபெத்தில் அவர் ட்ஸோக்ஸ்டாக். பர்மாவில் அவர் மஹா பியன். மங்கோலியாவில் அவர் பெயர் டாட்கரௌர் காக்ஹன். கம்போடியாவிலோ அவர் ப்ரஹ் கெனெஸ் என வழிபடப்படுகிறார். ஜப்பானியர் அவர் வினாயக்ஸா அல்லது ஷோடென் என்று வழிபடுகின்றனர்.

பசிபிக் மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் கோனா கடற்கரையில் ஒரு சிறிய விநாயகர் விக்ரஹத்தை பக்தர்கள் கும்பிட்டு வருகின்றனர்.

உலகெங்கும் எதை ஆரம்பிக்கும் முன்னரும் விநாயகர் வழிபாடு தான்!

விநாயகரை வழிபடக் காரணம்!

இப்படி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னர் உலகெங்கும் முதல் தெய்வமாக  விநாயகரை வழிபடக் காரணம் என்ன?

எல்லா தெய்வங்களின் சிறந்த அம்சங்களின் பகுதி விநாயகரிடம் இருக்கின்றன.

அவரைத் தொழும்போது எல்லா தெய்வங்களும் திருப்தியுடன் அருளாசியை- அனுக்ரஹத்தை- வழங்குவதால் தான் தடை போக்கும் விக்னேஸ்வரராக அவர் மிளிர்கிறார். இது ஒரு  முக்கியமான இரகசியம்.

இப்படி அனைத்து தெய்வங்களின் அபார வலிமைகளைக் கொண்ட அவரை கணபதியாக – கணங்களின் அதிபதியாக சிவபிரான் ஆக்கியருளினார்.

‘பிடிச்சு வச்சா பிள்ளையாரு’ என்ற மொழிப்படி மஞ்சள் பொடியில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அங்கே அவர் எழுந்தருளுகிறார்.    

  களிமண்ணில் கூட அவர் திருவுருவம் படைக்கப்பட்டால் ஏற்கிறார்; எளியவர் தெய்வம் ஆகிறார்.

   அருகம்புல், எருக்கம் மாலை, மோதகம், கொழுக்கட்டை என நைவேத்தியத்தில் கூட அனைவரும் மனமுவந்து எளிதில் அளிக்கக்கூடிய பொருள்களே அவர் உகக்கும் பொருள்கள்.

     சிவனுக்கும் உமைக்கும் செல்லப் பிள்ளையானதால் பிள்ளையார் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவபிரான் ஒவ்வொரு சமயத்தில் அடியார் நிமித்தம் ஒவ்வொரு பெயரைக் கொண்டது போலவே, தன்னுடைய அடியார் நிமித்தம் வக்கிரதுண்ட விநாயகர், சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்கினராஜர், மயூரேசர், அபரமயூரேசர்,பாலசந்திரர், தூமகேது, கணபதி, மகோற்கடர், உந்தி விநாயகர், வல்லப விநாயகர் என இப்படி பன்னிரெண்டு மூர்த்தங்களைக் கொண்டிருக்கிறார். இப்பெயர்கள் விளக்கும் வரலாறுகள் அற்புதமானவை.

  விநாயகன் என்ற சொல்லின் சப்தார்த்தம் மூன்று 1) துட்டர்களை அடக்குபவன் 2) இடையூறுகளை நீக்குபவன் 3) சுந்தரமுள்ளவன்.

   வடலூர் வள்ளலார் பெருமான் கணபதி பூஜை செய்யும் விதத்தை நன்கு விளக்கி, கணபதியைத் துதி செய்பவன் அடையும் சிறந்த பேறுகள் இரண்டு என விளக்குகிறார் : 1) கணபதியை பூஜிப்பதால் பரமாசாரியர் கிடைப்பார் 2) சிவானுபவம் சித்திக்கும். நல்ல குரு வந்து வழிகாட்டி பேரின்பம் அடையச் செய்வார் என்பது அவரது அருள் வாக்கு.

கபிலர் கூறும் இரகசியங்கள்!

   சங்க கால மகானாக விளங்கிய கபில தேவ நாயனார் திரு இரட்டை மணி மாலை என்ற தனது அற்புதமான நூலில் பிரமிக்க வைக்கும் இரகசியங்களை விண்டுரைக்கிறார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரு செய்யுளை மட்டும் இங்கு பார்க்கலாம்:

திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால்  வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை

இந்தப் பாடல் சாதாரணப் பாடல் அல்ல.

“நுட்பம் என்பது நுழைபொருள் யாவும்

திட்ப மாகத் தெளியக் கூறல்” என்ற விதியின் படி ஏராளமான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள பாடல்.

 ஐஸ்வரியத்தைப் பெருக்கும்.

தொடங்கிய தொழில்களைத் தடையின்றி நிறைவேறச் செய்யும்.

நல்ல செல்வாக்கைப் பரவச் செய்யும்.பெருமையை அபிவிருத்தி அடையச் செய்யும்.

சாரூப பதவியை அளிக்கும்.

இப்படி தன்னை வணங்கியோருக்கு அனைத்தையும் அளிப்பதனால் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மிகுந்த விருப்பத்துடன், கணபதியைத் தங்கள் தங்கள் கைகளை கூப்பி வணங்குவர் என்பது பாடலின் பொருள்.

    ஆனால் திரு என்ற மங்கலச் சொல்லை முதலில் வைத்து கை கூட்டும் என்பதால் செல்வம் வந்தாலும் கூட, செய்ய முனையும் தொழில் சீருடன் வெற்றி பெற வேண்டும் என்பதையும், செஞ்சொல் என்பதால் செல்வாக்கும் அத்துடன் சேர வேண்டும் என்பதையும் பீடு என்பதால் அதில் பெருமையும் கூடவே சேர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, இந்த நான்கின் பயனை உருவாக்கும் தெய்வம் விநாயகரே என்பதையும் வலியுறுத்துகிறார் கபிலர்!

    சிறிது காலம் வாழ்ந்து மறையும் மானுடர் ஒரு புறம் இருக்க தேவர்களும் கூட காதலுடன் கை கூப்பித் தொழும் தெய்வம் விநாயகர் என்பதையும் சொல்லி அவர் வியக்கிறார்.

     அத்துடன் திரு ஆக்கும் என்பதை திரு, வாக்கு என்று பிரித்தால் மேலும் ஒரு பொருள் வரும்; அதே போல கூட்டும் பெருக்கும் என்ற சொற்களை மற்ற சொற்களுடன் சேர்த்துப் பார்த்து பல்வேறு சிறப்பு அர்த்தங்களையும் காணலாம்.

   அத்தோடு அனைவருக்கும் எப்பொழுதும் உற்சாகத்தைத் தருவதால் அவன் ‘களியான்’. அதிசயிக்கத் தக்க பிரகாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் ‘ செம்பொன் ஒளியான்’. பூவுலகில் வாழும் அனைவருக்கும் வித்தியாசமின்றி அருள் பாலித்து அனைத்தையும் வழங்குவதால் அவன் ‘பாரோர்க்கு உதவும் அளியான்’!

    இப்படிப்பட்டவனின் அடியைப் பற்றுவது நல்லார் கடமை எனக் கூறி மனிதர்களின் தலையாய கடமையை கபில தேவ நாயனார் விண்டுரைக்கிறார்.

பிரபஞ்சமே ஆற்றல், அதிர்வு, அலைஎண் மயம் தான்!

    ஆனைமுகத்தோன் என்று கூறி ஓங்காரத்தை நினைவு படுத்தி அவன் ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன் என்று முன்னோர்கள் கூறும் போது அதில் அதிசயமான பேருண்மையை வைத்திருக்கின்றனர். அவனை வணங்கினால் ஓம்கார சக்தியைப் பெறலாம் என்பதே அந்த உண்மை!

    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நிகோலா டெஸ்லா (தோற்றம் 10-7-1856 மறைவு 7-1-1943) என்ற பெரிய  விஞ்ஞானி, “பிரபஞ்சத்தின் ரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் ஆற்றல் அலைஎண், அதிர்வு என்ற அடிப்படையில் பாருங்கள்” (If you want to find the secrets of the Universe, think in terms of energy, frequency and vibration – Nikola Tesla) என்று வியக்கத்தக்க விதத்தில் ஒரு வரையறுப்பை நிர்ணயிக்கிறார்.

பெரும் ஆற்றலை உருவாக்கி ஒரு நொடிப் பொழுதில் பெரும் கட்டிடத்தை அழித்த, வல்லமை மிக்க விஞ்ஞானியான இவர் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பின் ரகசியத்தைக் கூறினால் தீயோர் அதை உலக அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடும் என எண்ணி அதைக் கூற மறுத்து விட்டார்.

   உலகத்தின் ஆதி நாதமாக அமைவது ஓம் என நம் முன்னோர்கள் உள்ளுணர்வால் கண்டு அதற்கு உரிய தெய்வமாக விநாயகனை ‘ஓம்’கார நாயகன் எனப் போற்றுகின்றனர்.

 அறிவியல் விளைவித்த அற்புதமாக விண்ணில் பறந்த நாஸா ஏவிய சாடலைட் விண்ணில் இடையறாது ஒலிக்கும் ஒலியைப் பதிவு செய்துள்ளது. அது ஓம்கார நாதமாகவும், கூட்டிசை (தேவாலயத்தில் இசைக்கப்படும் கூட்டிசை அல்லது பஜனையின் போது அனைவரும் சேர்ந்து பாடும் இசையொலி) போலவும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிசயத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஓங்காரம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விதங்களில் ஓதப்படுவதை எடுத்துரைக்கும்   அன்னிபெஸண்ட் அம்மையார் ஒவ்வொன்றிற்கும் அபூர்வப் பலன்கள் உண்டு என அதிசயித்துக் கூறுகிறார்.

வானில் விநாயகர் தோற்றம்!

  இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளின் உருவம் பெரு வயிறுடனும் தும்பிக்கையுடனும் இருக்க அவரது வாகனமாக மூஞ்சூறு அமைகிறது.  இவர் பிறந்த நாளை ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாம் கொண்டாடுகிறோம். இதன் காரணம் என்ன? இதில் பொதிந்துள்ள வானவியல் இரகசியம் பிரம்மாண்டமானது.

   செப்டம்பர் துவக்கத்தில் தொடு வானத்தில் வட திசையில் ஊர்ஸா மேஜர் (Ursa Major) எனப்படும் சப்தரிஷி மண்டலம்  எழுகிறது. காஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர்,ஜமதக்னி, பாரத்வாஜர் என்ற ஏழு  பிரகாசமான நட்சத்திரங்கள் பூமியின் சுழற்சியால் தொடுவானில் காணப்படுகின்றன. ஆண்டில் முதன் முதலாகத் தோன்றப்படும் இந்த நாளை வானவியலார் ஹெலிகல் ரைஸிங் (Helical Rising) அல்லது வான்பொருள் எழுச்சி என்று கூறுகின்றனர். இதை ரிஷி பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். அன்று ஆண்களும் பெண்களும் புனித நீராடி சப்த ரிஷிகளைத் துதித்து தூய்மை பெறுகின்றனர்.

இதற்கு முந்தைய நாள் விநாயக சதுர்த்தியாக (அதாவது பஞ்சமிக்கு முதல் நாளாக அமையும் சதுர்த்தி நாளன்று) கொண்டாடப்படுகிறது.

அன்று வானில் தோன்றும் ‘கணேச நட்சத்திரங்களைக்’ கற்பனைக் கோடுகளால் இணைத்தால் தோன்றுவது பெரு வயிறும் தும்பிக்கையும் கொண்ட விநாயகர் திரு உருவம். அவர் அமர்ந்திருப்பது மூஞ்சூறு போன்ற உருவத்தின் மேல்! இதையே விநாயகர் பிறப்பாக நாம் கொண்டாடுகிறோம்.

அந்த ஒளியிலும் அதிர்விலும் (Vibration) ஆற்றலிலும் (Energy) அலைஎண்ணிலும் (Frequency) நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதன் சக்தியைப் பெறுகின்ற நாளாக அது அமைகிறது. ஓம் எனும் மந்திர ஒலி தரும் ஆற்றலையும் அன்று நாம் பெறுகிறோம்.

வானில் அமையும் ராசி, நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுத் தொகுத்தவர் வானியல் அறிஞரான ஏ.பி.கிரிமால்டி (A.B. Grimaldi) என்பவர். (A Catalogue of Zodiacs and Planisheres published by M/s Gall and Inglis of London). இவர் தனது நட்சத்திரத் தொகுப்பில் விருச்சிகம், துலாம் (தராசு) போன்ற பல்வேறு ராசிகளின் உருவ அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதில் யானை உருவமும் அதன் கீழ் இருக்கும் எலி உருவமும் விநாயகரையும் மூஞ்சூறையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது வியப்புற்குரியது.

இதைக் கற்பனைக் கோடுகளால் நட்சத்திரங்களை இணக்கும் போது தோன்றும் உருவத்தைப் படத்தில் காணலாம். வானியல் நிபுணருடன் இணைந்து அவர் உதவியுடன் வானத்திலும் பார்க்கலாம்!

தோப்புக்கரணம் போடுவதன் பயன்!

அடுத்து விநாயகரை வணங்கும்போதெல்லாம் இரு கைகளையும் மாற்றி வலது இடது காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதோடு நெற்றிப் பொட்டுகளையும் குட்டிக் கொள்கிறோம்.

இந்தப் பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சொல்லி வந்தவர் வியக்கும்படி அறிவியல் ஆய்வுகள் இதன் நன்மைகளை இப்போது எடுத்து வைக்கின்றன.

யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளைத் தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

இந்தப் பயிற்சியைச் செய்து  முடித்த பின்னர் எடுக்கப்பட்ட இசிஜி (எலக்ட்ரோ என்செபலோக்ராஃபி) முடிவுகளை டாக்டர் ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கிணையச் செய்கிறது.

இந்தப் பயிற்சியைப் புகழ்ந்து அவர் மேலும் கூறுகையில் மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது.

இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இதை இந்த காது மடல் பிடிக்கும் எளிய் பயிற்சி உறுதிப்படுத்துகிறது என்று கூறிப் புகழ்கிறார்.

    லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), “பாதங்களை நேராக வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொண்டு வலது காதை இடது கைக்கட்டை விரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும்.இதேபோல இடது காதை வலது கைக் கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி உட்கார்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் தொடர்ந்து திருப்பித் திருப்பிச் செய்தால் கூரிய மூளை ஆற்றலைப் பெறலாம்” என்கிறார்.

    நமது தோப்புக்கரணத்தை அப்படியே விவரிக்கும் இந்த அறிவியல் ஆய்வு நமது முன்னோர்களின் கூரிய அறிவுத் திறனையும் பிள்ளையார் வழிபாட்டையும் எண்ணி வியக்க வைக்கிறது.

    பிரபஞ்ச ஆற்றலையும் உடல் மற்றும் உள்ள ஆற்றலையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விநாயக சதுர்த்தி பூஜை எளியவரும் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆம், “பிடிச்சு வச்சா பிள்ளையாரு” தான்!

  அதிசய ஆற்றலைத் தரும் விநாயகரை வழிபடுவோம். வானத்து இரகசியங்களை வசமாக்குவோம்!

குறிப்பு : நாஸா பதிவு செய்த ஓம் பற்றிய பதிவை https://www.youtube.com/watch?v=hFdWxnPCvSs

என்ற தொடுப்பில் கேட்கலாம்.

–subham–

LONDON MAHALAKSHMI TEMPLE RATH YATRA (Post No.6932)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 25 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 16-44

Post No. 6932

 Pictures are taken BY LONDON SWAMINATHAN; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

East London came to vibrant life this Sunday morning (25-08-2019) because of the chariot procession of Goddess Mahalakshmi, Vishnu and Lord Ganesh. Of the 27 Tamil temples in and around London, two East London temples are run with Indian priests.

Not many people get up early in London on Sunday mornings. But  East London appeared like Mini India this morning with jasmine fragrance and colourful scenes. All the shops were decorated with festive festoons and flowers. In front of each shop and most of the houses were coconut, bananas, flowers with lighted Kuthuvilakku (traditional Hindu lamp). The two chariots stopped at each place and took nearly three hours to reach the destination.

The added attractions were Kerala drums and Indian Pipes and Tamil drums. Following the tradition devotees offered coconut and fruits in all the places.

To avoid the evil eye or part of a vow, people used to break  coconuts  on the roads. In one place a mat was spread and scores of coconuts were broken on the road. Lot of people took pictures. East London became a refugee camp after Second World War with the influx of Jewish refugees. Then came the Sikhs, Sri Lankan Tamils and Pakistanis. Now it has people of all ethnicities.

Free Coffee, Free Rose Milk, Free Sundal

Saravana Bhavan, the most famous vegetarian restaurant in the world, offered coffee, tea, Sundal (boiled Chick peas with added spices) and sweet pudding. Everything free. This is the first time I see free coffee and tea. Lyca mobile offered buttery Neer Mor (butter milk) and Sundal. Others gave Rose milk and bottled drinks free. Nowadays even before the full lunch meal (Maha Prasad), people get all types of snacks for breakfast.

As usual women came in colourful silk sarees and men came in silk dhotis in the tadeonal way. I went with the procession for an hour or so but did not stay for the tasty MAHA Prasad.

Two more Hindu temples did Rath Yatra today and unfortunately no one could cover all the three because they are miles apart.

Please see the attached pictures taken by me–

SARAVANA BHAVAN PRASAD
FREE COFFEE, TEA
TAMIL NAYANAM/PIPES
COCONUT BREAKING ON THE ROAD
LYCA MOBILE BUTTER MILK
SUNDAL
SARAVANA BHAVAN TEA, COFFEE, SAKKARAI PONGAL
KERALA JANDAI VADHYAM
MAHA LAKSHMI TEMPLE IN EAST LONDON
RICE PUDDING FROM SARAVAN A BHAVAN FREE
FREE ROSE MILK DRINK

–SUBHAM–

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-32 am

Post No. 6925

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

–subham–

ராமாயண வழிகாட்டி – 13 (Post No.6924)

WRITTEN BY  S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 6924

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

2013ஆம் ஆண்டில் ராமாயண வழிகாட்டி தொடரில் 12 அத்தியாயங்களில் வால்மீகி ராமாயணத்தில் உள்ள சில ஸ்லோகங்களைப் பற்றிப் பார்த்தோம். (www.tamilandvedas.com தளத்தில்) நெடுநாளைக்குப் பிறகு – இதோ, ராமாயணத்தின் இன்னும் சில ஸ்லோகங்களைப் பார்க்க விழைவோமா?

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 13

ச.நாகராஜன்

மனைவியாக சீதாதேவியின் பண்புகள்!

இந்தியாவின் இலட்சிய பெண்மணியாக ஹிந்து நாகரிகம் முன் வைக்கும் வனிதையர் திலகம் சீதா.

சீதா தேவியைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுக்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். அவரது ராமாயணம் பற்றிய உரையில் ஒரு பகுதி இதோ:

Rama and Sita are the ideals of the Indian nation. All children, especially girls, worship Sita. The height of a woman’s ambition is to be like Sita, the pure, the devoted, the all-suffering! When you study these characters, you can at once find out how different is the ideal in India from that of the West. For the race, Sita stands as the ideal of suffering. The West says, “Do! Show your power by doing.” India says, “Show your power by suffering.” The West has solved the problem of how much a man can have: India has solved the problem of how little a man can have. The two extremes, you see. Sita is typical of India — the idealised India. The question is not whether she ever lived, whether the story is history or not, we know that the ideal is there. There is no other Paurânika story that has so permeated the whole nation, so entered into its very life, and has so tingled in every drop of blood of the race, as this ideal of Sita. Sita is the name in India for everything that is good, pure and holy — everything that in woman we call womanly. If a priest has to bless a woman he says, “Be Sita!” If he blesses a child, he says “Be Sita!” They are all children of Sita, and are struggling to be Sita, the patient, the all-suffering, the ever-faithful, the ever-pure wife. Through all this suffering she experiences, there is not one harsh word against Rama. She takes it as her own duty, and performs her own part in it. Think of the terrible injustice of her being exiled to the forest! But Sita knows no bitterness. That is, again, the Indian ideal. Says the ancient Buddha, “When a man hurts you, and you turn back to hurt him, that would not cure the first injury; it would only create in the world one more wickedness.” Sita was a true Indian by nature; she never returned injury.

MELUKOTTE

சீதா தேவியை கானகத்தில் இழந்த இராமபிரான் லக்ஷ்மணனிடம் சீதையின் குண நலன்களைப் பற்றிக் கூறியவாறே புலம்புகிறார்.

அதில் வரும் ஸ்லோகம் இது:

கார்யேஷு மந்த்ரி  கரணேஷு தாசி

   தர்மேஷு பத்னி க்ஷமயா தரித்ரி |

ஸ்னேஹேஷு மாதா சயனேஷு ரம்பா

    ராகே சகி லக்ஷ்மண் ஸா ப்ரியா மே ||

ஸ்லோகத்தின் பொருள் :-

ஆலோசனை கூறுவதில் அவள் மந்திரியைப் போல.

பணிவிடை செய்வதில் அவள் ஒரு வேலைக்காரி போல.

தர்ம காரியங்களில் செய்வதில் அவள் ஒரு பத்னியைப் போல.

பொறுமையிலோ அவள் பூமாதேவியைப் போல.

அன்பு பாராட்டுவதில் அவள் ஒரு அன்னையைப் போல.

படுக்கையிலோ அவள் ரம்பையைப் போல.

விளையாட்டில் அவள் ஒரு தோழியைப் போல.

லக்ஷ்மணா! அப்படிப்பட்ட பிரியை அவள்! (அந்த சீதா!)

இதை விட அற்புதமாக ஒரு பெண்மையின் இலக்கணம் இருக்க முடியாதல்லவா?!

நீதி வெண்பாவை இயற்றிய கவிஞர் பெண்ணுக்கான இலக்கணத்தைத் தருகிறார் இப்படி:

அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – வன்னமுலை 
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.    (நீதி வெண்பா பாடல் எண் 30)

அப்படியே ராமரின் கூற்றை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது அல்லவா?

ராமாயணம் ஹிந்துக்களின் ஜீவ நாடி. ராம பிரான் ஹிந்துக்களின் லட்சிய புருஷன். மரியாதா புருஷோத்தமனான ராமனையும் வனிதையர் திலகமான சீதையையும் போற்றுவோம்! வழிபடுவோம்!!

***

RAMAYANA IN THAILAND
–SUBHAM–

தமிழ் நாடு ரிஷிகள் பூமி! (Post No.6914)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-59 am

Post No. 6914

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

ஞான ஆலயம் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

ரிஷிகள் பூமி!

ச.நாகராஜன்

ரிஷி என்றால் சுயநலமின்றி தெளிவான திருஷ்டியுடன் உள்ளதை உள்ளபடி காண்பவர் என்று பொருள். த்ரஷ்டா என்று அவர்களைக் கூறுவது வழக்கம். சூஷ்ம திருஷ்டி மூலம் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்பதும், அந்தர்திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து அவரது நடத்தையின் ஆதிகாரணத்தை அறிவதும், திவ்யதிருஷ்டி மூலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தை அறிவதும் ரிஷிகளின் இயல்பு. மந்த்ர திருஷ்டா என்றால் என்றுமுள்ள மந்திரங்களைத் தங்கள் தவத்தால் கண்டு உலக நன்மைக்காகத் தருபவர் என்று பொருள்.

வசிஷ்டர் விஸ்வாமித்திரர், யாக்ஞவல்க்யர் உள்ளிட்டோர் ப்ரம்ம ரிஷிகள், ஜனகர் போன்ற அபூர்வமான பிரம்மஞானம் உடைய ராஜாக்கள் ராஜ ரிஷிகள் என்ற வரிசையில் சேர்வர். நாரதர் போன்றோர் தேவரிஷிகளாவர்.

ரிஷிகள் எண்ணிலடங்கார். பாரத தேசம் முழுவதும் ரிஷிகளின் காலடித் தடம் படாத இடம் இல்லை எனலாம். அதிலும் தமிழகத்தை ரிஷிகளின் பூமி என்றே சொல்லலாம். இங்கு அடிக்கு அடி ஒரு ரிஷியின் அபூர்வமான அற்புதமோ அல்லது ரிஷி சம்பந்தப்பட்ட சம்பவமோ நடந்திருக்கிறது.

ஆதி காவ்யமான வால்மீகி முனிவரின் ஆசிரமம் இன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில் பண்டைய காலத்தில்  இருந்தது. அங்கு தான் சீதையும் லவ குசரும் வாழ்ந்தனர் என்பது எத்துணை அபூர்வமான செய்தி.

சென்னையில் உள்ள திருவான்மியூரில் வான்மீகி முனிவருக்கான சிறு ஆலயம் ஒன்று உள்ளது. மார்க்கண்டேய மஹரிஷியின் கட்டளையின் பேரில் வான்மீகர் இங்கு வந்து வழிபட்டமையால் வான்மியூர் என்ற திருநாமத்தைப் பெற்றது திருவான்மியூர்.

   திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற தலம். புரு என்னும் முனிவரின் யாகத்தின் பயனாகப் பிறந்த சாலிஹோத்ரர் என்னும் ரிஷி இங்கு தான் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு உணவு படைத்த பின்னரே தான் உண்ணும் பண்பைக் கொண்ட இந்த முனிவரிடம் பெருமாளே வயோதிகராக வந்து உணவு பெற்றார். பசி தீராமல் முனிவரின் பங்கையும் சேர்த்து உண்ட பெருமாள், படுக்க இடம் எது என்ற பொருளில்,’படுக்க எவ்வுள்’ என்று கேட்டதால் இந்த ஊரின் பெயர் எவ்வுள்ளூர் என்று ஆகி இப்போது திருவள்ளூர் ஆகி விட்டது.

     அகத்திய முனிவருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கத் தேவையே இல்லை.அகத்தியருடன் தொடர்பு கொண்ட திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!

மான் பூசித்த தலமான அகத்தியான் பள்ளியில் தான் அகத்தியர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். வேதாரண்யத்தில் ஈஸ்வரனின் கல்யாண கோலத்தைத் தரிசிக்க வந்த போது இங்கு இப்படி தங்கியதால் இந்த ஊருக்கு அகத்தியான் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அகத்தியர் மற்றும் 49 சங்கப் புலவர்களின் திருவுருவங்கள் உள்ளன. அகத்தியர் பளிங்குத் துண்டு ஒன்றைக் கலைப்பீடமாக இங்கு வைத்தார் என்று திருவையாற்றுப் புராணம் கூறுகிறது.

அகத்தியருக்குக் கல்யாண கோலமாக, ஸ்வாமி தரிசனம் தந்த தலங்களாக அமைந்துள்ளவை: நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமலை, ருத்திர கங்கை, அம்பல், திருமறைக்காடு, இடும்பாவனம், பாபவிநாசம் ஆகியவவை.

மார்க்கண்டேய மஹரிஷியின் ருத்ராக்ஷம் அழுந்தியுள்ள தலம் திருக்கடையூர். சிவனைத் தழுவிக் கொண்ட தலம் என்பதாலும் காலனைச் சிவபிரான் கடிந்து கொண்ட தலம் என்பதாலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

அத்திரி மஹரிஷி இருந்த தலம் இரும்பைமாகாளம். அவர் பூஜித்த தலம் சிவசைலம்.

    தப்பளாம்புலியூர் என்னும் மண்டூகவியாக்கிரபுரத்தில் தான் மாண்டூக ரிஷிக்கு தரிசனம் கொடுத்த நிகழ்வு நடந்தது.

வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய தலங்களாக விளமர், ருத்ரகங்கை, புலியூர் உள்ளிட்ட ஏராளமான தலங்கள் தமிழகத்தில் உள்ளன.வியாக்ரபாதருக்கு அருளிய தலம் திருவெண்காடு.

வியாக்ரபாதர் தமிழில் புலிக்கால் முனிவர் என்ற பெயரால் பெரிதும் போற்றப்படுகிறார். வண்டு முதலியன பூக்களிலிருந்து மதுவை எடுப்பதால் அதன் தூய்மை போய்விடுகிறது என்று கருதிய வியாக்ரபாதர் தூய்மையானவை தானா என்று மலர்களை நன்கு ஆராய கூர்மையான கண்களை வேண்டி புலிக் கண்களையும் மரங்களின் மீது ஏறிப் பறிக்க புலிக்கால்களையும் பெற்றார். ஆகவே வியாக்ரபாதர் என அழைக்கப்பட்டார்.

     ஒன்பது தலங்கள் நவவியாக்கிரபுரம் என அழைக்கப்படுகின்றன.

அவையாவன : 1) பெரும்பற்றப்புலியூர் 2) திருப்பாதிரிப்புலியூர் 3) கானாட்டாம்புலியூர் 4) ஓமாம்புலியூர் 5) தப்பளாம்புலியூர் 6) அத்திப்புலியூர் 7) முனிபுலியூர் 8) சிறுபுலியூர் 9) பெரும்புலியூர். இந்த ஒன்பது புலியூர்த் தலங்களும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றவை.

பதஞ்சலி ரிஷியும் வியாக்ரபாதரும் சிதம்பரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவம் காணத் தவமிருந்தனர். அவர்களது தவத்தை மெச்சியே நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி அருள் பாலித்தார்.

வியாக்ரபாதரின் ஜீவ சமாதி திருப்பட்டூரில் உள்ளது.

ஸனகாதி நால்வர் பூஜித்த தலங்களோ ஏராளம் – திருவாவடுதுறை, திருக்கோழம்பம், திருநல்லம், திருக்கோகர்ணம் உள்ளிட்ட தலங்கள்.

தத்தாத்ரேய மஹரிஷி பூஜித்த தலங்கள் : திருவிடைமருதூர், சிவசைலம்.

48000 மஹரிஷிகள் ஒன்றாகச் சேர்ந்து பூஜை செய்த தலங்கள் : பெருஞ்சேரி, வழுவூர், தாருகாவனம்.

காளஹஸ்தி முதல் இராமேஸ்வரம் வரையும், காவேரி தீரத்தில் ஸமுத்ரம் முதலாக கரூர் வரையும், ஒவ்வொரு திடலிலும், தலங்களிலும் இருக்கும் லிங்கங்கள் எல்லாம் ரிஷிகளால் அவை ஆரண்யமாக இருந்தபோது ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டவை. காட்டுப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும்  அவ்வப்பொழுது கிடைக்கும் இவை இப்படி பூஜிக்கப்பட்டவையே. இவை இன்னும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்; அவ்வளவு சிவ லிங்கங்கள்!!

ஸப்தரிஷிகளும் சேர்ந்து பூஜித்த தலங்கள் :  திருத்தவத்துறை,ரிஷியூர், நல்லூர் ஆகிய தலங்கள்.

பழைய காலத்தில் தான் ரிஷிகள் இருந்தனர் என்பதில்லை; இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் அவர்கள் ஆங்காங்கே தோன்றி அதிசயிக்க வைக்கின்றனர்; அருள் பாலிக்கின்றனர்.

காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த மஹா பெரியவாள் இதற்குச் சிறந்த உதாரணம்; அடுத்து திருவண்ணாமலையில் ஆன்மீக அரசோச்சிய ரமண மஹரிஷி ரிஷிக்கான இலக்கணத்தை சம காலத்தவருக்குக் காண்பித்தவர்; இதே போல சேஷாத்ரி மஹரிஷி உள்ளிட்ட பலரையும் நாம் பட்டியலிடலாம். ஆக அருள் பூமிக்கு ரிஷிகள் பஞ்சமே இல்லை; நாம் தான் அவர்களைப் பக்தியுடன் வணங்கி அருள் பெற வேண்டும்.!

    ஆன்மீக பூமியாக விளங்கிய தமிழகத்திலேயே பக்தி பிறந்ததாக பக்தி தேவதை தானே கூறுவதை பாகவதம் தெரிவிக்கிறது.

   ஆக பக்தித் தாயகமான தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டம் கூட்டமாக ரிஷிகள் தவம் இருந்து அருள் பெற்ற வரலாறுகள் ஏராளமாக இருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தை ரிஷிகள் பூமி என்று சொல்லித் திருப்திப்படுவதோடல்லாமல் அவர்கள் எங்கெல்லாம் அருள் பெற்றார்களோ அந்த இடங்களில் எல்லாம் நாமும் வழிபட்டு உய்யலாம்; அவர்களின் ஆன்மீக சக்தி அங்கு இருப்பதால் சிறிய முயற்சிக்கும் நாம் பெரும் பயனை அடையலாம் என்பதே சத்தியமாகும்!

வாழ்க ரிஷிகள் பூமி; ரிஷிகளை வணங்கிப் பெரும் பேறு பெறுவோம்!

***

எனக்கு உதவும் சாமி யார்? (Post No.6890)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 17 AUGUST 2019  
British Summer Time uploaded in London – 7-16 am

Post No. 6890

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


picture posted by Lalgudi Veda

சுஜாதா கொடுத்த தங்கக் கிண்ணம் (Post No.6886)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 16 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-11 am

Post No. 6886

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

லண்டன் சாலைகளில் உருண்ட பக்தர்கள்; அதிசயக் காட்சி (Post No.6765)


Written by  London Swaminathan



swami_48@yahoo.com

 Date: 12 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-52 am

Post No. 6765

 Pictures are taken by London swaminathan.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–