ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே! (Post.6330)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London – 8-28 AM

Post No. 6330

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!

ச.நாகராஜன்

ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.

ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய மன்னனே என்பதைத் தான்.

பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:

இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக் கொண்டிருந்தான்.

அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.

பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.

 ஒரு சமயம் அகஸ்தியர் தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில் இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.

இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.

“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம் போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.

அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால் பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.

விஷ்ணுவின் அருளால் அவன்  மோட்சத்தையும் அடைந்தான்.

ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும் கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!

 பாண்டிய நாட்டிற்கும் இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!

இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி வருகிறது.

அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.

ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.

ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர். வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.

மன்னன் திருப்தியுறவில்லை.

கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.

அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-

“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”

“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா? ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன் இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.

இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.

காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர மோக்ஷம் ஆகும்!

****

Gajendra Moksha in Africa !! | Tamil and Vedas

Gajendra Moksha in Africa !!

2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …

நெரூர் மஹான் சதாசிவ பிரம்மேந்திராள் செய்த அற்புதங்கள்! (Post No.6329)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London –  6-59 am

Post No. 6329

Pictures shown here are taken by london swaminathan

 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நெரூருக்குச் சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.

1957ல் வெளியான ஜகத்குரு திவ்ய சரித்திரம் புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.

நெருர் என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார் என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல் சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.

அங்கே நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும் காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன் கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.

அங்குள்ள சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.

சதாசிவ பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.

சதாசிவ பிரம்மேந்திராள்

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.

நீங்களும் அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல் வரிகள்:

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

  1.  

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

–subham–

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

1.      

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

subham

நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை! (6324)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 29 April 2019


British Summer Time uploaded in London – 13-09

Post No. 6324

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தேஷாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை!

ச.நாகராஜன்

இடம் புட்டபர்த்தி -பிரசாந்தி நிலையம்.

21-7-2002 அன்று ஆரம்பிக்கவிருந்த பன்னாட்டு சேவா மாநாடுகளின் ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.

அதைத் தொடக்கி வைக்க வேண்டியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.

ஆனால் அவரால் பேச முடியாதபடி அவரது தாடைகள் வீங்கி இருந்தன. உணவு உண்ண முடியாது, பேசவும் முடியாது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளரான திரு சீனிவாசனுக்கு பெரும் கவலை வந்து விட்டது.

ஆனால் பாபாவோ மாநாடு ஏற்பாட்டைத் தொடருமாறு கூறி விட்டார்.

மாநாட்டில் அவரது உரை பிரமாதமாக அமைந்தது. அதில் இறுதியில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

கழுத்து வீக்கத்தினால் ஒரு சிறுவன் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாங்க முடியாத வலி. டாக்டரோ அது தீர குறைந்த பட்சம் 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்று கூறி விட்டார்.

அவனை அழைத்த பாபா, ‘சாயி உன்னுடன் இருக்கையில் நீ ஏன் அழுகிறாய்’ என்று கூறி விட்டு ஒரு இனிப்பை தன் அங்கை அசைவினால் வரவழைத்தார். அதை அந்தப் பையன் வாங்கி உண்டான்.

வலியை பாபா ஏற்றுக் கொண்டார்.

சீனிவாசன் பாபாவை எப்படி நீங்கள் உரை ஆற்றப் போகிறீர்கள் என்று கேட்ட போது “இது உடல் என்ற உணர்வு இருந்தால் தானே வலியை நான் உணரப் போகிறேன். இது உனது உடல். அனைத்து உடல்களுமே என்னுடையவையே” என்று அருளினார்.

அவரது உரையின் ஒரு பகுதி இதோ:

திரு சீனிவாசனை நோக்கி அவர் கூறியது :“I feel the pain if I think that this is My body. But this is not My body, it is yours.”

பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோரை நோக்கி அவர் கூறினார்:

“All your Bodies are mine. Hence I take your suffering upon Myself. That is My duty. THIS is not My body, so I do not care for it. Not only now, at any point of time, I do not care for any suffering. I practise whatever I preach. That is why I say, My Life is My message. It is not possible for all to understand and realise My Divinity. I do not want to say it in public. I do not indulge in advertisement. All that is Mine is yours and vice-versa. I have no desires at all. All My desires  are meant to give you happiness. Greatness does not lie in preaching, it lies in practice. A true acharya (preceptor) is one who practises and then preaches.  That is what I am doing.”

பாபாவின் இந்தச் சொற்களிலிருந்து அவரது தெய்வீகத் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் கருத்துக்கள் சொல் ஜாலத்துடன் வெளி வந்தன; அனைவரையும் மகிழ்வித்தன.

 “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உடல் உண்டு. இயற்கை ஒரு கண்ணாடி. நீங்கள் இதில் பார்ப்பது உங்களது பிரதிபலிப்பையே அன்றி வேறல்ல. இன்று மனிதன் சுயநலத்துடனும் சுய தேவையுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். சுயநலம் சமூகத்தில் முற்றிலுமாகப் பரவி விட்டது. தேஹாபிமானம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  தேஷாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது. தேஹாபிமானத்தை ஒருவன் விடும் வரையில் அவன் தெய்வாபிமானத்தை விருத்தி செய்து கொள்ள முடியாது.” என்றார் அவர்.

உரையின் ஆரம்பத்தில் பாபா மனித வாழ்க்கையின் அஸ்திவாரங்களை விளக்கினார்.

“மனித வாழ்க்கையானது சமதா (Samata -Euality),

சமைக்யதா(Samaikyata – Unity),

சௌப்ரத்ருத்வம் (Saubhratrutvam – Fraternity),

சௌஜன்யம் (Saujanyam – Nobility)

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாழ்க்கை என்னும் மாளிகைக்கு இவையே அஸ்திவாரங்களாக அமைகின்றன. இதில் எந்த ஒன்று இல்லாத போனாலும் கூட வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். ஆகவே ஒவ்வொருவரும் இவற்றை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மனிதத் தன்மை என்றால் என்ன என்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

சத்யம் நீதியை போஷிக்கிறது (Truth fosters Neethi – Morality)

தர்மம் க்யாதியைத் தருகிறது (Righteousness confers Kyati – Reputation)

தியாகமே ஜோதி ஆகிறது (Thyaga (sacrifice) is the Jyothi)

மானவ ஜாதி இந்த மூன்றின் சேர்க்கையாக இருக்கிறது. (Mana jathi – human race- is the combination of these three – neetim kyathi and Jyoti.”

தொடர்ந்து தனது உரையில் மனிதன் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சேவாதள மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவாதளத் தொண்டர்கள் பரவசமடைந்தனர்; பாபாவைத் தொழுதனர்.

நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது.

***

முழு உரையையும் ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் SATHYA SAI SPEAKS – Volume 35  உரை எண் 11ஐப் படிக்கலாம்.

நூல் கிடைக்குமிடம் : Sri Sathya Sai Books & Publications Trust Prasanthi Nilayam – 515 134, Ananthapuram District, Andhra Pradesh, India

xxxx

உன்னை நீயே உயர்த்திக் கொள் : புத்தரின் இறுதி உபதேசம்! (Post No.6319)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 28 April 2019


British Summer Time uploaded in London – 12-50

Post No. 6319

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

உன்னை நீயே உயர்த்திக் கொள் : புத்தரின் இறுதி உபதேசம்!

ச.நாகராஜன்

கீதையில் கண்ணபிரான் கூறும் பெரிய அருளுரை – : ‘உன்னை நீயே உயர்த்திக் கொள்’ என்பது தான்!

ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தில் ஐந்தாவது ஸ்லோகம் இது:

உத்தரேதாத்மநாத்மாநம்  நாத்மாநமவஸாதயேத் |

ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: ||

ஆத்மாவிற்கு ஆத்மாவே பந்து.

ஆத்மாவிற்கு ஆத்மாவே எதிரி (ரிபு)

ஆத்மாவினாலேயே ஆத்மாவை உயர்த்திக் கொள்ள வேண்டும் (உத்தரேத் ஆத்மநாத்மாநம்)

ஆத்மாவைக் கீழ் நோக்கிச் செல்ல விடக் கூடாது.

இதையே தான் புத்தரும் கூறி வந்தார்.

உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது தான் அவரது முக்கிய உபதேசம்.

தன் இறுதி நேரத்தில் மரணப் படுக்கையில் அவர் இருந்த போது தனது பிரதம் சீடரான ஆனந்தரை அருகில் அழைத்தார்.

“ஆனந்தா! எவர் ஒருவர் தனது வாழ்க்கையில் சரியாக தர்மத்தின் படி வாழ்கிறாரோ அவர் தான் ததாகதரைச் சரியாக மதிக்கிறார்கள்; போற்றுகிறார்கள். அதுவே அவரை மதிக்கும் விதம்! ஆகவே, ஆனந்தா, வாழ்க்கையில் தர்மத்தின் படி வாழ்! உன்னை நீயே இதற்காகப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.”

 உடலாலும், மனதாலும், மொழியாலும் புத்தரைப் போற்ற இதுவே வழியாகும்.

ஊதுபத்தியை ஏற்றுவது, மலர்களைச் சமர்ப்பிப்பது ஆகியன ததாகதரை – புத்தரைச் சரியானபடி வணங்கும் முறை அல்ல.

இதைத் தான் புத்த மத ஆசார்யர்களும் உபதேசித்து வந்தனர்.

புத்தரின் சிலையைப் பார்த்து வணங்குவது நமக்கு நாமே உத்வேகம் ஊட்டிக் கொள்ளத் தான். அந்த உத்வேகத்தால் நாம் உயர முடியும்.

உலகில் உள்ள தலை சிறந்த அறிஞர்களும், ராஜ தந்திரிகளும், அரசியல் தலைவர்களும் புத்தரின் திரு உருவத்தையோ அல்லது படத்தையோ தாங்கள் அடிக்கடி பார்க்கக் கூடிய இடத்தில் வைத்துக் கொள்வது வழக்கம்.

பாரதப் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது சுய சரிதத்தில் இப்படி எழுதுகிறார் :

“ At Anuradhapura, I liked greatly an old seated statue of the Buddha. A year later, when I was in Dehra Dun Gaol, a friend in Ceylon sent me a picture of this statue, and I kept it on my little table in my cell. It became a precious companion for me, and the strong, calm features of the Buddha’s nature soothed and gave me strength and helped at me to overcome many a period of depression.”

“இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் புத்தர் வீற்றிருந்த கோலத்தில் இருந்த ஒரு பழைய சிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு வருடம் கழித்து டேரா டூன் சிறையில் இருந்த போது இலங்கையில் இருந்த ஒரு நண்பர் அந்தச் சிலையின் ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பினார். அது எனக்கு விலை மதிக்க முடியா தோழனாயிற்று. புத்தரின் இயல்பான வலிமையான அமைதி வாய்ந்த அவரது கோலம் என்னை சாந்தப்படுத்தியது. எனக்கு வலிமையைத் தந்தது. மனச்சோர்வுக்குள்ளான பல சமயங்களிலும் அது என்னை மீட்க உதவியது.” – இப்படி எழுதியிருக்கிறார் தனது சுய சரிதையில் அவர்.

உலகின் மாபெரும் தலைவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் இப்படிப் பலரும் புத்தரால் உத்வேகம் பெற்றதைக் காண முடிகிறது.

புத்தரின் திருவுருவம் ஒவ்வொருவருக்கும் இன்று வரை உத்வேகம் தந்து உயர்த்துவது ஆச்சரியமூட்டும் ஒரு உண்மை!

***

பாண்டியன் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி! (6312)

WRITTEN  by S Nagarajan
swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 13-49

Post No. 6312

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

ச.நாகராஜன்

கொடும் பஞ்சம் நிலவிய காலம் அது. பாண்டிய நாட்டில் தன் சேனை வீரர்களுக்கு அன்னம் கொடுக்க முடியாமல் வருந்தினான் பாண்டிய மன்னன்.  தன் சேனையின் ஒரு பகுதியை முளசை வேலப்பன் என்பவரிடம் அனுப்பினான்.

வேலப்பனோ பெரு மகிழ்ச்சி எய்தினார். பாண்டிய நாட்டின் பஞ்சம் தீரும் வரையில் அந்தப் படைவீரர்களுக்கு அமுதூட்டி மகிழ்ந்தார். இயல்பு நிலை திரும்பியவுடன் படை வீரர்கள் பாண்டிய நாடு திரும்பினர்.

வேலப்பனின் இந்த அற்புதமான செயலைக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவருக்கு அன்னத்தியாகி என்ற பட்டத்தை அளித்தான்.

இந்தச் செய்தியை வரலாறு கூறுகிறது.

“தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையி

லன்ன மளித்த அன்னத் தியாகி”

என்று இவ்வாறு முளசையார் மெய்கீர்த்தி கூறுகிறது.

இந்த வரலாற்று வீரனை கொங்கு மண்டல சதகம் தனது 77ஆம் பாடலில் பாடிச் சிறப்பிக்கிறது.

பாடல் இதோ:

பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்

கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங் களித்தமுதிட்

டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்

வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் திரண்ட கருத்து : உண்ணுதற்குத் தண்ணீரும் கூட அகப்படாத கொடிய பஞ்ச காலத்தில் பாண்டியனின் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ் பெற்ற வேலன் என்பவனது முளசை நகரும் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.

மாசிவிழாப் பூசவிழா வைகாசித் திருநாண்மண் டபங்கடாமும்

பூசைபடி தினமாறு படிமாலை திருவிளக்கும் புரிந்தெந்நாளும்

தேசமது புகழ்ந்திடவே யேவைவளம் பதியன்னத் தியாகராசர்

நேசமுடன் பணிமலைவா ழுமைபாகர் தமைவணங்கி நிலைநின்றாரே

என்ற திருச் – திருப்பணிமாலைப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

    இந்த அன்னத்தியாகியின் மரபில் வந்த ஒருவன் அடங்காத ஒரு குதிரையின் மீது ஏறி அதை அடக்கிய ஆற்றலைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் பெருத்த வெகுமதியையும் அதிகாரத்தையும் கொடுத்தான் என்ற வரலாறும் உள்ளது.

    அன்னத்தியாக பட்டன் என்னும் ஒரு புலவர் குடும்பத்தார் இன்றும்  வாழ்ந்து வருவது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்.

     சின்னச் சின்ன சிறப்பான செய்திகளை இன்று நாம் மறந்து விட்டோம்.

இப்படிப்பட்ட பாடல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

***

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 25 April 2019


British Summer Time uploaded in London – 16-34

Post No. 6309

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2

ச.நாகராஜன்

ஒரு மனிதன் தான் எடுத்த பிறவியில் முயன்று அடைய வேண்டிய ஆத்ம குணங்கள் எட்டு. அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம் :

1)தயை

எட்டு ஆத்ம குணங்களில் முதலாவதாக் அமைவது தயை. எல்லா உயிர்களிடத்தும அன்பு பாராட்டி அவற்றிற்கு உதவும் குணம் மிக முக்கியமான ஒன்றாகும். பிறர் துன்பப்படுகையில் வருந்தி தன்னால் இயன்றவரை உதவி செய்யும் குணம் தயை. பிறர் வருந்தும் போது தான் வருந்துவது, பிறர் சந்தோஷப்படுகையில் தான் சந்தோஷப் படுவது என்பது அற்புதமான குணமாகும். அது தான் தயை.

2)க்ஷமா

நமக்கு யாரேனும் தீங்கு இழைத்து விட்டால் அதைப் பொறுத்து மன்னிக்கும் குணம் க்ஷமா. அப்படித் தீங்கு செய்தோர் மீது கோபம் கொள்ளாமை, அவர்களைத் திட்டாமை, அவர்களுக்கு உடனே தீங்கு செய்ய எண்ணாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல் அனைத்தும் க்ஷமா. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எண்ணி மற்றவரை மன்னித்தல் சிறந்த குணம்.

3) அநஸூயா

பொறாமைப் படாமல் இருப்பது அநஸூயா. பிறர் செல்வத்துடன் இருப்பது, பிறர் சந்தோஷத்துடன் இருப்பது, பிறர் நல்ல அதிகார பதவியில் இருப்பது என்பன போன்றவற்றைச் சகிக்காமல் தனக்கு அப்படி இல்லையே என்று மனம் பொங்கிப் புழுங்குவது பொறாமை. இதனால் தனக்கே தீங்கு தான் விளையுமே தவிர ஒரு நன்மையும் ஏற்படாது. பிறரது வளம் கண்டு வாழ்த்த வேண்டுமே தவிர மனம் பொங்காமல் புழுங்காமல் வாழ்வதே சாலச் சிறந்தது.

4)ஸௌஸம்

ஸௌஸம் என்றால் சுத்தம் என்று பொருள். உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றிலும் சுத்தம் வேண்டும். உடலில் உள்ள அழுக்கை நீக்கிச் சுத்தமாக இருப்பது உடல் சுத்தம். அதை துஷ்பிரயோகம் செய்யாமல் – குடி, அதிக போகம் போன்றவற்றை விலக்கி உடலை போஷிக்க சாத்விக உணவைத் தேவையான அளவு உண்ணுதல் உடலால் அடையும் சுத்தம். பிறரை தூஷிக்காமை, பொய் சொல்லாமை, சத்யம், ஹிதம், பிரியமான சொற்களைப் பேசுவது வாக் சுத்தம். பிறருக்கு மனதாலும் தீங்கு இழைக்காமல் இருத்தல், பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை மனதால் அடையும் சுத்தம். இந்த மூன்று சுத்தங்களையும் ஒருவன் அடைய வேண்டும்.

5) அனாயாஸம்

சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். உடலுக்கு அதிக சிரமத்தைத் தரக் கூடாது. பொருளுக்காக மிகவும் அலையக் கூடாது. பிறருக்கும் சிரமத்தைத் தரக் கூடாது. உடலை மிகமிக வருத்தி உபவாஸம் இருப்பது, உடலை வருத்திப் பயிற்சிகள் செய்வது, கை கால் தளரும் படி வேலை செய்வது, ஓயாமல் உழைத்து மனதையும் உடலையும் வருத்துவது கூடாது. இந்த சிரமத்தை அளவோடு கொள்ளுதலே நலம் பயக்கும் வாழ்வாகும்.

6) மங்களம்

அழுக்கில்லாத, சுத்தமான, ஆடம்பரம் இல்லாத, பகட்டு இல்லாத ஆடை அணிதல், நெற்றிக்குத் திலகமிட்டு எப்போதும் மலர்ச்சியுடனும் சிரித்த முகத்துடனும் காட்சி அளிப்பது மங்களமாகும். கெட்ட சொற்களை மறந்தும் கூறாமல் நெகடிவ் சொற்களை விடுத்து பாஸிடிவ் சொற்களை மட்டுமே கூறுதல், சுப சொற்களைக் கூறுதல் மங்களமாகும்.ஐயோ, ஐயையோ, எழவு, சனியனே போன்ற அபஸ்வரமான அவலமான சொற்களை ஒருபோதும் கூறக் கூடாது. அவலமான காலங்களிலும் கூட சிவ சிவா, ராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா என்று கூறுவது மரபு. ஈர வேஷ்டியைத் தரிக்கக் கூடாது. அழுக்கை அப்புறப்படுத்த வேண்டும். அனாவசியமான சொற்களைப் பேசக் கூடாது. இது மங்களத்திற்கான வழி.

7)அகார்ப்பண்யம்

கார்ப்பண்யம் இல்லாதிருப்பது அகார்ப்பண்யம். அதாவது எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஏழ்மையிலும் பிறருக்கு உதவுவது, பிறரிடம் கை ஏந்தாமல் இருப்பது, எந்த நிலையையும் தர்ம வழியில் எதிர் கொள்வது – இது அகார்ப்பண்யம். எடுத்த இந்த ஜென்மத்தில் ஆத்ம விசாரம் செய்வது,  ஜீவனுக்கு  முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை தேடுவது தான் அகார்ப்பண்யம்.

8) அஸ்ப்ருஹா

ஸ்ப்ருஹை என்றால் பற்று என்று பொருள். அஸ்ப்ருஹா என்றால் பற்றில்லாமல் இருத்தல் என்று பொருள். தன் பொருளிலும் பிறர் பொருளிலும் தன் உடமையிலும் பிறர் உடமையிலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அடுத்தவரைப் பார்த்து அவரிடம் உள்ள அனைத்தும் தன்னிடம் இல்லையே என ஏங்குவது, அதற்காக ஆசைப்படுவது போன்றவற்றை விடுத்துத் தனக்கென உள்ளதை போதும் என்ற மனதுடன் அனுபவித்தல் அஸ்ப்ருஹா. தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பது அஸ்ப்ருஹா.

இந்த ஆத்ம குணங்களுடன் பகவத் கீதையில் பதினாறாம் அத்தியாயத்தில் தைவீக குணங்களாக கிருஷ்ணர் கூறும் குணங்களையும் இங்கு நினைவு கூறலாம்.

பயமில்லாமை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக இருத்தல், தானம், வெளியில் உள்ள புலன்களை அடக்குதல், வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், தவம் புரிதல், நேர்மை, அஹிம்ஸை, சத்யம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள் சொல்லாமை (புறங்கூறாமை), வஞ்சகமில்லாமை, தற்பெருமையில்லாமை, இவைகள் தெய்வ ஸம்பத்தை முன்னிட்டுப் பிறந்தவனுக்கு உடன் பிறந்த குணங்களாகும்.

 இந்த குணங்கள் இல்லாதவர் இவற்றை முயன்று அடைதல் வேண்டும்.

ஆக நல்ல மனிதனாக வாழ ஹிந்து மதம் கூறும் குணங்களின் பட்டியல் மனித குலம் முழுமைக்கும் பொதுவானதாக அமைவதைக் கண்டு இன்புறலாம்.

***

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் -1 (Post No.6302)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 24 April 2019


British Summer Time uploaded in London – 8-28 am

Post No. 6302

Pictures shown here are take from various sources.

This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

to be continued…………………

எண் மூன்றின் மஹத்துவம் (Post No.6300)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 23 April 2019


British Summer Time uploaded in London – 14-14

Post No. 6300

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

லண்டனில் பஞ்சாங்க படனம்! பஞ்சாங்கம் ஒரு என்சைக்ளோபீடியா! (Post No.6266)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 15 April 2019


British Summer Time uploaded in London – 8-32 am

Post No. 6266

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி? (Post No.6262)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 April 2019


British Summer Time uploaded in London – 7-46 am

Post No. 6262

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?

ச.நாகராஜன்

நடராஜர் ஆனந்த தாண்டவம் புரியும் சிதம்பரத்தைக் கனக சபையாகச் செய்ய நினைத்த ஆதித்தன் என்னும்  அரசன் அதற்கான தங்கத்தை எங்கிருந்து, எப்படி பெற்றான்?

இதற்கான பதிலை கொங்கு மண்டல சதகத்தின் 29ஆம் பாடல் தருகிறது.

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்

சித்தம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்

முற்றிலுந் தன்னகத் தேவிளை வாவதை மொய்ம்பிறையுண்

மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் பொருள் : சிவபிரான் ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரத்தைக் கனகசபையாக்கத் தேவையான தங்கம் அனைத்தையும் தன்னிடத்தே விளைந்த பொன்னைக் கொடுத்து அரசனும் வியக்கப் புகழை அடைந்ததும் கொங்கு மண்டலமே.

இந்தப் பாடல் கூறும் வரலாறு சுவையான ஒன்று.

கீழ்க்கரை பூந்துறை நாட்டின் இணைநாடு பருத்திப் பள்ளி நாடு ஆகும். அந்த நாட்டில் கஞ்சமலையில் ஒரு சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அது மகடஞ்சாலை இரயில் நிலையம் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்லுகின்றது. அதனைப் பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன் சன்னம் எடுக்கிறார்கள். உழைப்புக்குத் தக்க கூலி போலப் பொன் கிடைக்கிறதாம். அது எட்டரை மாற்றுத் தங்கம் ஆகும். இதே போல கொங்கு  மண்டலத்தில் பொன் கிடைக்கும் இடம் பல உள்ளன என்பதால் ஆதித்த மன்னன் என்னும் சோழ மன்னன் சிதம்பரத்தைக் கனகசபையாக்க முயன்ற சமயத்தில் அதற்குத் தேவையான பொன் அனைத்தையும் கொடுத்தது கொங்கு மண்டலமே.

இதே வரலாற்றை நம்பியாண்டார் நம்பி திருவந்தாதியும் ஒரு பாடலில் குறிப்பிடுகிறது.

பாடல் வருமாறு :-

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு

கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்

திங்கட் சடையர் தமரதென் செல்லமெ னப்பறைபோக்

கெங்கட் கிறைவ னிருக்கும்வே ளூர்மன் னிடங்கழியே

கோனாட்டுக் கொடும்பாளூர் இருக்குவேளிர் குலத் தலைவரிடம் கழியார் கொங்கிற் செம்பொன்,

ஆனேற்றார் மன்றின்முக டம்பொன் வேய்ந்த வாதித்தன் மாபோர் நெற்கவர்ந்தோரன்பர்,

போனாப்ப ணிருளின்கட் காவலாளர் புரவலர்முன் கொணரவவர்

புகலக் கேட்டு,

மானேற்றாரடியாரே கொள்கவென்று வழங்கியர சாண்டருளின் மன்னினாரே

என்ற பாடலும் இந்த வரலாறை வலியுறுத்துகிறது.

ஆக சிதம்பரத்தின் கனகசபைக்குப் பொன் தந்து உதவியது கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய கார்மேகக் கவிஞர் புளகாங்கிதம் அடைந்து கொங்கு மண்டலப் பெருமையை இப்படி இந்தப் பாடலில் கூறுகிறார்.

***