“நான் கொன்று விடுவேன்!” – புத்தரின் பதில்!! (Post No.5424)

Written by S NAGARAJAN

Date: 13 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-48 AM (British Summer Time)

 

Post No. 5424

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

“நான் கொன்று விடுவேன்! – புத்தரின் பதில்!!

 

ச.நாகராஜன்

 

எல்லையற்ற தேஜஸுடனும், சாந்தத்துடனும், கருணையுடனும் புத்தர் தனது சிஷ்யர்களுக்கு,தேவையான அனைத்தையும் உபதேசித்து வந்தார்.

 

அவர்களுக்கு நல்ல பயிற்சி தந்து அவர்களை மேம்படுத்தும் ஒரு நல்ல பயிற்றுநராக (trainer) அவர் இருந்தார்.

கேசி என்று குதிரைகளைப் பழக்கும் பயிற்றுநர் ஒருவர் அவரிடம் சீடராக இருந்தார்.

 

அவரை புத்தர் அழைத்தார்.

 

“ஓ! கேசி! நீ குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஒரு நல்ல பயிற்றுநர். குதிரைகளை எப்படி நீ பழக்குகிறாய்? சொல்லேன்.”

கேசி பதில் கூறினார்: “ஐயனே! குதிரைகளை சில சமயம் மிருதுவாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.”

 

 

“கேசி! ஒரு வேளை அந்தக் குதிரை நீ சொல்கிற படி கேட்கவில்லை என்றால் அதை என்ன செய்வாய்?”

 

“ஐயனே! அதைக் கொன்று விடுவேன். ஏனெனில் அது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கே ஒரு களங்கத்தைத் தந்து விடுகிறது. ஐயனே! நீங்கள்  எல்லோருக்கும் சொல்லித் தருகிறீர்கள். நல்ல ஒரு பயிற்சியாளர். நீங்கள் எப்படிச் சொல்லித் தருகிறீர்கள்?”

 

“கேசி! நானும் கூட சில சமயம் அனைவரையும் மிருதுவாக நடத்திச் சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருகிறேன். இது தான் உடலால் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள். இப்படிச் செய்தால் இன்ன நல்ல பலன்கள் கிடைக்கும். இது தான் நல்ல முறையில் பேச வேண்டிய வழி. இதனால் வரும் நல்ல பலன்கள் இவை. இது தான் நல்ல சிந்தனை கொள்ளும் முறை. இதனால் அடையும் பலன்கள் இன்னின்னவை. இப்படி இருப்பவர்கள் தேவர்கள்; இப்படி இருப்பவர்கள் மனிதர்கள்.

 

இதோ பார்; இப்படி நடப்பது  உடலால் செய்யும் தவறான வழிகள்; இதனால் ஏற்படும் தீமைகள் இவை. இதோ பார்; இப்படிப் பேசுவது தவறான வழி; இதனால் ஏற்படும் தீய விளைவுகள் இவை;இதோ பார் இப்படி சிந்திப்பது தப்பான வழி; இதனால் வரும் தீய பயன்கள் இவை. இது தான் நரகத்திற்கு வழி. இதுவே மிருகங்களின் வழிமுறை; இதுவே பிசாசுகளின் நடத்தை. என்று இந்த விதமாக நான் மிருதுவாகவும் கடுமையாகவும் ஆக இருவிதமாகவும் சொல்லித் தருகிறேன்.”

 

“ஐயனே! இப்படி இரு விதமாகவும் சொல்லித் தந்தும் ஒருவன் நல்ல விதமாக நடக்கவில்லை எனில் அவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?”

 

“அப்போது அவனை நான் கொன்று விடுவேன்.”

 

“ஐயனே! நீங்கள் ததாகதர். உங்களை நீங்களே அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். அதன் அர்த்தம் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி சொல்வதையே வாழ்ந்து காட்டுபவர் என்பது தானே! நீங்கள் அஹிம்சையை உபதேசிப்பவர். உங்களால் கொல்வது என்பது இயலவே இயலாது. ஆனால் நீங்களே நான் கொன்று விடுவேன் என்று சொல்கிறீர்களே!”

 

புத்தர் புன்முறுவல் பூத்தார்.

 

ததாகதர் என்ற சொல்லுக்கு உண்மையின் வழி நிற்பவர் என்பதிலிருந்து அநேக அர்த்தங்கள் உண்டு. புத்தர் தன்னை எப்போது ததாகதர் என்றே சொல்லிக் கொள்வது வழக்கம். அதற்கு சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்து வாழ்பவர் என்ற பொருளும் உண்டு. அதைச் சுட்டிக் காட்டி கேசி கேட்ட கேள்விக்கு அவர் பதில் தந்தார் இப்படி:

 

“ கேசி! உண்மை தான். ததாகதர் இன்னொருவரின் உயிரை எடுக்க நினைக்கக் கூட மாட்டார். என்றபோதிலும் ஒருவருக்கு மிருதுவாகவும், கடுமையாகவும் இந்த இரு விதமாகவும் சொல்லித் தந்த பின்னரும் அவர் அதன் படி நடக்கவில்லையெனில் அவருடன் ததாகதரோ அல்லது அவருடன் சேர்ந்த பிக்ஷுக்களோ பேசவே மாட்டார்கள். நமது பண்பாட்டின் படி இப்படி பேசாமலிருப்பதே ஒருவனைக் கொல்வதற்குச் சமம். அவனை நல்வழிப் படுத்த முடியாது என்று ததாகதரும் அவருடன் இணைந்த மற்ற பிக்ஷுக்களும் நினைத்து விட்டால் அவ்வளவு தான், அவனுடன் பேச மாட்டார்கள்.”

 

 

புத்தர் பேசவில்லை என்றால் அவன் என்ன செய்வான்; திருந்தியே ஆவான் – உயிர் வாழ ஆசைப்பட்டால்!

 

இந்த ஒரு சம்பவமே புத்தர் எவ்வளவு கருணையுள்ளவர், அவர் எப்படி தன் சீடர்களை நல்வழிப் படுத்தி வந்தார் என்பதைப் புரிய வைக்கும்.

 

“ஓ! பிக்ஷுக்களே! தீமையை விட்டொழியுங்கள். தீமையை விட முடியாது என்றால் ததாகதர் இப்படிச் சொல்ல மாட்டார். அதை விட முடியும். ஆகவே தீமையை விட்டொழித்தால் நல்லதைக் கடைப்பிடித்தால் வளமும் செல்வமும் பெருகும்.”

என்று அவர் தன் சீடர்களை நோக்கிக் கூறி அருளினார்.

புத்தரின் வழி தனி வழி; அது கருணை வழி!

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சா

***

72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 8-29 AM (British Summer Time)

 

Post No. 5421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828  செய்யுட்களில் பாடிவிட்டார்.

 

 

‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.

 

 

இது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூய, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–

 

தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ்,  திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.

தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72  புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

இதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:

 

 

 

 

(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)

 

-சுபம்-

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்! (Post No.5417)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-24 AM (British Summer Time)

 

Post No. 5417

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சிறப்புக் கட்டுரை

செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

 

ச.நாகராஜன்

 

1

செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.

அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.

 

2

மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.

ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு  டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.

அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:

 

“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”

ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.

ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.

அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.

அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.

ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.

அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.

அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.

 

3

இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!

***

ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட  Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு  மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.

–subham–

மாக்ஸ்முல்லர் காலமானார்- 1900-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5409)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-27 (British Summer Time)

 

Post No. 5409

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மாக்ஸ்முல்லர் இறந்தவுடன் விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதோ அந்த இணைப்பு.

 

 

–xxx-xxx

மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி! ((Post No.5397)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-49 AM (British Summer Time)

 

Post No. 5397

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

போர் என்பது இனி தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற இறுதி முடிவுக்கு துரியோதனன் வந்து விட்டான்.

போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை.

 

‘,ஹூம், அவர்களிடம் வெறும் ஏழு அகக்ஷௌஹிணி சேனை மட்டும் தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.

ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் – வெற்றியுடன். அது மட்டுமா,  குடும்பத்தில் அனைவருக்கும் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்த துரோணர் என் பக்கம். ஆசார்ய கிருபர் என் பக்கம். அருமைத் தம்பிகள், மாமா சகுனி, இன்னும் ஏராளமான ராஜாக்கள்! அட,இது போதாதா, வெற்றிக்கு” என்று இவ்வாறு எண்ணி மகிழ்ந்தான் துரியோதனன்.

 

ஆனால் ஒரே ஒரு உறுத்தல்.

 

அந்த மாமாயக் கண்ணன் அவர்கள் பக்கம். அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ – துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது.

 

அவனுக்குப் பதில் தெரிய வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான்!

 

வெற்றி நிச்சயம் என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும், எத்தனை நாள் தான் நடக்கும்?

ஒரு நாள அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எண்ணினான். இரவு முழுவதும் சிந்தனை.

 

இரவு விடிந்ததும் பிதாமஹர் பீஷ்மரை நோக்கி துரியோதனன் வினவினான்: “இதோ பிரம்மாண்டமான இந்த பாண்டவ சேனையை எவ்வளவு காலத்தில் வெல்வீர்?”

 

இதைக் கேட்ட பீஷ்மர் பதில் அளித்தார்: “ பதினாயிரம் காலாட்கலையும், ஆயிரம் தேராளிகளையும் ஒரு பாகமாகச் செய்து பாண்டவர்களின் சேனையை நாள் தோறும் அழிப்பேன். இது எனது பாகமாகக் கொள்கிறேன். ஓ! பாரத! அல்லது யுத்தத்தில் நின்று கொண்டு லட்சம் பேர்களைக் கொல்கின்ற மஹாஸ்திரங்களை விடுவேன் என்றால் ஒரு மாதத்தில் கொல்லுவேன்”

 

துரியோதனன் இப்போது துரோணர் பக்கம் திரும்பினான்: “ஓ! ஆசார்யரே! நீர் பாண்டுபுத்திரர்களின் சேனைகளை எவ்வளவு காலத்தில் வெல்லுவீ ர்?”

 

துரோணர் அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்:” கிழவனாயிருக்கிறேன். சக்தியும் முயற்சியும் எனக்குக் குறைந்து விட்டன. பாண்டவ சேனையை பீஷ்மர் போல் ஒரு மாதத்தில் எரிப்பேன் என்பது என் எண்ணம். இது தான் என் சக்தியின் அளவு. இது தான் என் வலிமையின் அளவு”

துரியோதனன் கிருபரை நோக்க அவர், “இரண்டு மாதங்களில் கொல்வேன்” என்றார்.

 

அஸ்வத்தாமன் பத்து தினங்களில் பாண்டவ சேனையை வதம் செய்வதாக பிரதிக்ஞை செய்தார்.

கர்ணனோ ஐந்து தினங்களில் பாண்டவரை வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை செய்தான்.

உள்ளதிலேயே குறைந்த காலம்; ஐந்தே நாட்கள்! பாரதப் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன்! !கர்ணனின் வாக்கு!

கர்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட கங்காபுத்திரரான பீஷ்மர்  ஹாஹா என்று சப்தத்துடன் சிரித்தார்.

 

“ஓ! ராதையின் புத்திரா! கர்ணா! தேரில் ஏறி வருகின்ற அர்ஜுனனை நெருங்காத வரையில் நீ இவ்விதம் நினைப்பாய். உன்னாலே இப்படியும் இதற்கும் மேலும் இஷ்டப்படி சொல்லுவதற்கு முடியும்” என்றார் பீஷ்மர்.

இந்த விஷயங்களை தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட தர்மர் தனது தம்பிகளை நோக்கி நடந்த விஷயங்களைச் சொன்னார்.

 

பின்னர் அர்ஜுனனை நோக்கி, “நீ எவ்வளவு காலத்தில் பகைவர்களை நாசம் செய்வாய்?” என்று கேட்டார்.

அர்ஜுனன், “ நான் சத்தியம் தவறாமல் சொல்கிறேன். கிருஷ்ணனின் சகாயத்துடன் தேவர்களோடு கூடிய மூவுலகங்களையும்  எல்லா சராசரங்களையும் சென்றதையும் இருப்பதையும் இனி உண்டானதையும் ஒரு நிமிஷத்தில் கொல்லுவேன்” கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதன் படியே ஆகும்! வேறு விதம் ஆகாது.  பாசுபதாஸ்திரம்  என்னிடம் இருக்கிறது. அதை பீஷ்மரும் அறியமாட்டார். துரோணருக்கு, அது தெரியாது. கிருபருக்கும் தெரியாது. அஸ்வத்தாமனும் அறியான்! எனில் கர்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

 

என்றாலும் திவ்ய அஸ்திரங்களினாலே  சாமான்ய மனிதர்களைக் கொல்வது உசிதமில்லை. ஓ! பாண்டவரே! ஒருவராலும் வெல்லப்படாத சிகண்டி, யுயுதானன், திருஷ்டத்யும்னன், பீமசேனன், நகுல ஸஹதேவர், யுதாமன்யு, உத்தமௌஜஸ், விராட துருபதர்கள், சங்கன், கடோத்கஜன், அவனது புத்திரனான் அஞ்சனபர்வா, சாத்யகி,அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் ஆகிய இவர்கள் தேவர்களுடைய சேனையைக் கூட வெல்வார்கள். அதே போல கோபத்தால் நீர் எந்த மனிதனைப் பார்ப்பீரோ அவன் சீக்கிரம் இல்லாமல் போய் விடுவான் என்பது நிச்சயம் என்று உம்மை நான் அறிகிறேன்.” என்று பதில் கூறினான்.

 

ஒரு மாதம் நடக்குமா, பத்து மாதம் நடக்குமா, அல்லது ஐந்து நாட்கள் நடக்குமா? அர்ஜுனன் கூறியது போல ஒரு நிமிடத்தில் முடியுமா? அல்லது தர்மரின் ஒரு கோபப் பார்வையே போதுமா?

அர்ஜுனன் கணித்த படி கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதுவே நடக்கும்!

 

மாமாயக் கண்ணன் முன்பே முடிவு செய்து விட்டான்.

படிப்படியாக பதினெட்டு நாட்களில் களை எடுத்து வேருடன் பகைவ்ரை அழிப்பதென்று! அவன் எடுத்த முடிவை யாரே மாற்ற வல்லார்?

 

அற்புதமான தர்ம யுத்தம் கோரமாக நடந்தது.

தர்மம் வென்றது. பாவம் தோற்றது.

போர் எனில் இது போர்! புண்ணியத் திருப் போர்!

பாவிகள் ஒழிந்தனர்; புண்ணியர் ஜெயித்தனர்!

 

***

குறிப்பு : –  வியாச பாரதம், உத்யோக பர்வம் 193, 194 அத்தியாயங்களின் சுருக்கத்தைத் தான் மேலே பார்த்தோம். விரிவாக படிக்க விரும்புவோர், ம.வீ.இராமானுஜாரியாரால் பதிப்பிக்க்ப் பெற்ற ம்ஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கலாம்.

-subham-

 

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! (Post No.5388)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-29 AM (British Summer Time)

 

Post No. 5388

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

 

“எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே” என்ற வாக்கால் கூறியுள்ளார்.

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் பாடல்களில் ஒன்று இதை வலியுறுத்துகிறது :

 

அருணகிரி நாதர்பதி னாறா யிரமென்

றுரைசெய் திருப்புகழை யோதீர் – பரகதிக்கஃ

தேணி யருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக்

காணி பிறவிக் கரம்

பதினாயிரம் திருப்புகழை ஓதி உணர்ந்தால், அது

பரகதிக்கு ஏணி

அருள் கடலுக்கு ஏற்றம்

மனத்தளர்ச்சிக்கு ஆணி

பிறவிக்கு அரம்.

அருணகிரிநாதரே திருப்புகழின் மஹிமையை இப்படி கூறியுள்ளார்:

 

சந்தம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்

தனத்தன தனத்தம் …… தனதான

பாடல்

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

 

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

 

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

 

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

 

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

 

ஆம்,   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு.

 

திருப்புகழ் நினைத்ததும் அளிக்கும்; மனத்தையும் உருக்கும்;

நிசிக் கருவறுக்கும் – பிறவாமல்

 

நெருப்பையும் எரிக்கும்;  பொருப்பையும் இடிக்கும்

நிறைப்புகழே திருப்புகழ்!

 

இது அருணகிரிநாதர் திருத்தணிகையில் அருளிய திருப்புகழ் வாக்கு.

கண்ட கண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யும் தமிழுலகில் உருப்படியான ஆராய்ச்சியைச் செய்துள்ளவர் முனைவர் திருமதி இ.அங்கயற்கண்ணி. திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை  பெற்றுள்ளார்.

 

திருப்புகழிசை என்ற நூலில் முதல் முயற்சியாக 51 திருப்புகழ் பாடல்களுக்கு சந்த அமைப்பிக்கேற்றவாறு தாளங்கள் அமைத்து  அவற்றிற்குச் சுரதாளக் குறிப்புகளையும் தந்துள்ளார்.

போற்றப்பட வேண்டிய பெரிய முயற்சி. அரிய முயற்சி. வெற்றிகரமான முயற்சி.

திருப்புகழ் அமைப்பைப் பற்றித் தன் அரிய ஆராய்ச்சியின் வாயிலாக இவர் தரும் ஆய்வுத் தகவலில் ஒரு பகுதி இதோ:

 

 

“ திருப்புகழ்ப் பாடல்கள் கிருதி, கீர்த்தனை, பதம், ஜாவளி போன்ற இசை உருப்படிகளின் அமைப்பைப் போன்றல்லாது, பெரும்பான்மையான பாடல்கள் எட்டுப் பிரிவுகளைக் கொண்டதாக அமையக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் உறையும் முருகப் பெருமானை எட்டுப் பிரிவுகளில் புகழ்ந்து பாடப்பெறும் “பதிக” மரபினை இதில் காண முடிகிறது. இதைக் கண்டிகை என்றும், சரணங்கள் என்றும் கூறலாம். சாதாரணமாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வரிகள், மூன்று வரிகள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு, ஒன்பது மற்றும் 12 வரிகள் அமைந்துள்ளன.

 

 

சான்றுகள் :

விட மடைசு வேலை (4) ஒரு பிரிவில் இரண்டு வரிகள்

உனைத்தினந் தொழுதிலன் (7) ஒரு பிரிவில் மூன்று வரிகள்

சகடத்திற் குழையிட்டெற்றி (146) ஒரு பிரிவில் ஆறு வரிகள்

இதமுறு விரைபுனல் (353) ஒரு பிரிவில் ஒன்பது வரிகள்

விந்துப் புளகித (559) ஒரு பிரிவில் பன்னிரெண்டு வரிகள்

 

எட்டு வரி மற்றும் நான்கு வரிகளைக் கொண்ட சிறிய பாடல்களும் காண முடிகின்றது.

 

 

சான்றுகள் :

சந்ததம் பந்தத் (15)   – எட்டு வரிப்பாடல்

காலனிடத் தணுகாதே (388)  – நான்கு வரிப்பாடல்

 

திருப்புகழ்ப் பாடல்களில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வந்து இறுதியில், “தன தானா” என்னும் சந்த அமைப்புடைய தனிச் சொல்லுடன் முடிவுறுவதாக விளங்குகின்றது. இஃது தங்கப்பதக்கத்தில் அமைந்த ஒரு மதாணியைப் போல் விளங்குகின்றது. இசைமரபில் “தொங்கல்” என வழங்கப்படும்.

 

 

திருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்கு ‘தொங்கல்’ என்னும் இவ்வமைப்பே காரணமாகும். இவ்வாறான தொங்கலே திருப்புகழை மற்ற இசை இலக்கியப் பாடல்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்தத் தொங்கல் காணப்படும் இடத்தை வைத்தே பாடல்களில் பிரிவுகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறு கணக்கிடும்போது திருப்புகழில் எட்டுப் பிரிவுகளே வருகின்றன. பெரும்பான்மையான பாடல்கள், “பெருமாளே” என்ற தொங்கலுடன் முடிவுறுகின்றன.”

 

அடுத்து திருப்புகழில் உள்ள சந்த அமைப்புகளையும் தாள வகைகளையும் நுணுகி ஆராயும் அம்மையார் அங்கயற்கண்ணி தன் முடிவாகக் கூறுவது இது தான்:

“ இவ்வாறு திருப்புகழ்ப் பாடல்களை தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி, ஆராய்ந்ததன் மூலம் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.”

 

அருமையான இந்தத் தகவலை இவரது ஆய்வு தந்து விட்டது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

 

தமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பொருளாலும் சந்த அமைப்பினாலும், தாள வகைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் திருப்புகழுக்கு ஈடு இணை இல்லை!

 

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்

திருப்புகழைக் கேளீ ர் தினம்!

 

****

 

குறிப்பு: திருப்புகழிசை என்ற நூல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் பற்றி தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.

பாடல்களில் பிராக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பாடலின் எண்ணாகும்.

 

–subahm–

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி (Post No.5385)

WRITTEN BY S NAGARAJAN

Date: 2  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-45 AM (British Summer Time)

 

Post No. 5385

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

 

ச.நாகராஜன்

 

ரமண மஹரிஷியிடம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருவோர் ஏராளம். இடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற வைக்க வேண்டும் என்று வருவோரும் உண்டு.

அவரவர்க்கு அவரவர் பாணியில் பதில் தருவது பகவானின் விசேஷ சமத்கார திறன்.

 

இரு சம்பவங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர் இருவர் மஹரிஷியிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர் சம்பாஷணையைத் தொடங்கினார்.

இஸ்லாமியர் : கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி : அப்படி என்று யார் சொன்னது?

இஸ்: நல்லது, அப்படியானால் கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் சிலையை வைத்து வழிபடலாமா?

மஹ: கடவுளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் யாருக்கும் புலனாகாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

 

இஸ்: ஆம். என்னை இன்னார் என்று சொல்ல முடியும்.

மஹ: அப்படியானால் நீங்கள் அங்கங்களை எல்லாம் கொண்ட ஒரு மனிதர். ஆறடி உயரம் கொண்டவர், தாடி கொண்டவர், இல்லையா?

 

இஸ்: நிச்சயமாக.

 

மஹ: அப்படியானால் ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

 

இஸ்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கியதாக உணர்கிறேன். ஆகவே ஊகத்தின் அடிப்படையில் தூக்கத்திலும் நான் இருந்ததாக உணர்கிறேன்.

 

மஹ: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு உடலை ஏன் புதைக்க வேண்டும். உடல் தன்னை புதைப்பதை எதிர்த்து புதைக்கக் கூடாது என்று மறுக்க அல்லவா வேண்டும்?

இஸ் : இல்லை, நான் நுண்மையான உயிராக பரு உடலில் இருக்கிறேன்.

 

மஹ: ஆகவே உண்மையில் நீங்கள் உருவமற்றவர் என்பதை அறிகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை உடலுடன் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் உருவமுடன் இருக்கும் வரையில்  உருவமற்ற கடவுளை உருவமுள்ளவராக ஏன் வழிபடக் கூடாது?

 

கேள்வி கேட்ட இஸ்லாமியர் விழித்தார். முழித்தார்.

29-12- 1935 தேதியிட்ட குறிப்பில் முனகல வேங்கடராமையா Talks with Sri Ramana Maharishi – Volume I  என்ற நூலில் முன்னர் நடந்த சம்பாஷணை ஒன்றைத் தந்துள்ளார் இப்படி.

ரமணரை மடக்க வேண்டும் என்று வருவோர் அவரது பதிலால்  திணறுவதும் திருப்தியுறுவதும் வழக்கம்.

*

 

இன்னொரு சுவையான சம்பவம்:

 

ஒருநாள் இளைஞன் ஒருவன் மஹரிஷியிடம் வந்தான்.

இளைஞன்: ஸ்வாமி! ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கச் செய்தது போல் மஹரிஷியும் நிர்விகல்ப சமாதியில் என்னை நிலைபெறச் செய்ய முடியுமோ?

இதைக் கேட்டவுடன் மஹரிஷி, “கேட்பது விவேகானந்தர் தானோ?” என்றார்.

 

கேள்வி கேட்ட இளைஞன் வாயடைத்து நின்று விட்டான். பின்னர் சென்று விட்டான்.

*

கேட்பவர்க்கு கேட்கும் பாணியில் பதில் தரும் மஹரிஷியின் Artless Art of Repartee – சுடச்சுட பதில் தரும் கலை – வியக்க வைக்கும் ஒன்று. இப்படி ஏராளமான பதில்களில் பெரிய ஆன்மீக விளக்கங்களும் இடம் பெறும்.

***

 

 

30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 13-02 (British Summer Time)

 

Post No. 5378

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

 

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

 

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;

5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

 

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20

முகூர்த்த நாட்கள்- 6, 12

 

செப்டம்பர் 1 சனிக்கிழமை

 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

 

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

 

கல்விக்கழகு கசடற மொழிதல்

 

செப்டம்பர் 3 திங்கட்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

 

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

 

செப்டம்பர் 5 புதன்கிழமை

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

 

செப்டம்பர் 6 வியாழக்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

 

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை

உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்

 

 

செப்டம்பர் 8 சனிக்கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

 

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை

 

 

செப்டம்பர் 10 திங்கட்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

 

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

 

செப்டம்பர் 12 புதன்கிழமை

குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

 

செப்டம்பர் 13 வியாழக்கிழமை

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

 

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

 

செப்டம்பர் 15 சனிக்கிழமை

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

 

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

 

செப்டம்பர் 17 திங்கட்கிழமை

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

 

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

 

செப்டம்பர் 19 புதன்கிழமை

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

 

 

செப்டம்பர் 20 வியாழக்கிழமை

கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

 

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை

அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

 

செப்டம்பர் 22 சனிக்கிழமை

 

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

 

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

 

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

 

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

 

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

 

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

 

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

செப்டம்பர் 26 புதன்கிழமை

அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

 

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

 

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

 

செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

 

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே

 

 

செப்டம்பர் 29 சனிக்கிழமை

 

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

 

 

செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயின் பொறுப்பது கடனே

–subham–

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா?- 4 (Post No.5376)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 6-37 AM (British Summer Time)

 

Post No. 5376

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 4

 

ச.நாகராஜன்

 

8

கிறிஸ்தவத்தின் எந்தப் பிரிவானாலும் சரி, ஒரு நாட்டிற்குள் நுழைந்தால் அந்த நாட்டின் கதி அதோகதி தான்.

 

கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”

(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)

 

ஐயான் ஸ்மித் என்ற வெள்ளைக்காரத் தலைவர் ரொடீஷியாவின் அதிகாரத்தை அங்குள்ள பூர்வ குடியினரிடம் தர மறுத்தார். ஏனெனில் அவர்கள் நாட்டை ஆளுகின்ற அளவு நாகரிகம் கொண்டவர்கள் இல்லை என்று அவர் சொன்னார்.

 

இதைக் கேட்ட ரொடீஷிய மக்கள், “கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம், ஓரினச் சேர்க்கை, பாவ காரியங்கள் ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் கொண்டு வந்ததே வெள்ளைக்கார இனம் தான். அதுவரை ஆப்பிரிக்கர்களுக்கு இந்த மாதிரி பாவச் செயல்கள் எதுவுமே தெரியாது” என்று கூறி பதிலடி கொடுத்தனர்.

எலும்புக்கூடு புன்சிரிப்பு சிரித்தாலும் அது பயத்தைத் தானே தரும்! கிறிஸ்தவ பிரார்த்தனை கூட இது போன்ற எலும்புக் கூட்டின் புன்னகைச் சிரிப்பு தான்!

 

செயிண்ட் இக்னேஷியஸ் லயோலாவும் செயிண்ட் சேவியரும் கோவாவிற்குள் நுழைந்தனர். அவ்வளவு தான், அதை மரண பூமியாக மாற்றினர்.லயோலோ சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அல்லது ஜெஸ்யூட் என்ற சங்கத்தை கி.பி. 1525ஆம் ஆண்டு அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிறுவினார். இந்த சங்கம் தீவிரவாதத்தைக் கிளப்பி விட்டது. அறக்கட்டளை மற்றும் கல்வியின் பேரால் இன்று வரை இவற்றின் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியைத் தான் காண்கிறோம்.செயிண்ட் சேவியர் பள்ளி, மற்றும் கல்லூரி மற்றும் மிஷனரிகளின் அறக்கட்டளைகள் இந்த நச்சு மரத்தின் கிளைகளே.

 

9

ஜெஸ்யூட் பிரமாணம் என்று ஒன்று இருக்கிறது.இதை இணையதளத்திலிருந்து எடுத்துப் படிக்கலாம். (http:/ www.reformation.org/jesuitoathinaction.html/) கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு முன்வரும் ஜெஸ்யூட்கள் இந்த பிரமாணத்தை எடுக்க வேண்டும்.

 

இந்த பிரமாணத்தின் படி, தலைவராக ஆகும் ஒருவர் பிரமாணம் எடுக்கும் போது அவரைத் தவிர இன்னும் மூன்று பேர்கள் மட்டுமே இருப்பர்.

 

இவருக்கு இரு பக்கமும் இருப்பவர்களில் ஒருவர் மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய போப்பின் வண்ணம் ஏந்திய பதாகையை ஏந்தியிருப்பார்.இன்னொருவர்  ஒரு குத்தீட்டியும் சிவப்பு சிலுவையும் இருக்க மேலே மண்டைஓட்டுடன் இரு எலும்புகள் குறுக்காக இருப்பதையும் கொண்ட கறுப்பு பதாகையை ஏந்தியிருப்பார்.

 

இதன் கீழ் INRI என்று இருக்கும். அதன் கீழ் IUSTUM, NECAR, REGES, IMPIOUS என்ற வார்த்தைகள் இருக்கும்.

 

இதன் பொருள் : பரம்பரையாக அரசாளும் அரசர்கள், அரசுகளை ஒழித்துக் கட்டுவோம் என்பது தான்.

 

பிரமாணத்தை எடுத்து வைப்பவர் பிரமாணத்தைச் சொல்லச் சொல்ல அதை பிரமாணம் சொல்பவர் திருப்பிச் சொல்ல வேண்டும். பிரமாணத்தைக் கூறுபவர் சொல்வதில் ஒரு பகுதி இது:

 

“எனது மகனே! ஆகவே உனக்கு பொய்யாக நடித்து ஏமாற்றக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறாமை, வெறுப்பு ஆகியவற்றிற்கான செடியின் விதைகள் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவைகளால் அமைதியுடன் வாழும்  சமூகங்கள், ராஜ்யங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் இரத்தம் சிந்த வைத்து சுதந்திரம், அமைதி கொண்ட அவைகளை ஒன்றுடன் ஒன்று போரிடச் செய்து உள்நாட்டுக் குழப்பம் உண்டாக்கி புரட்சிகளை உருவாக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரணியில் இன்னொரு ஜெஸ்யூட் இருந்தாலும் சர்ச்சின் நன்மையே உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.

 

உளவாளியாக இருக்க உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான தகவல்கள், உண்மைகளை எல்லா விதங்களிலும் சேர்க்க வேண்டும்.

இரத்தம் சிந்தாமல் யாரும் “காப்பாற்றப் பட” முடியாது. நான் சொல்லும் பிரமாணத்தைத் திருப்பிச் சொல்லுங்கள்.

 

இதன் பின்னர் சொல்லப்படும் பிரமாணம் இது தான்: –

 

“I,…. now in the presence of Almighty God, the Blessed Virgin Mary, the Blessed Michael the Archangel, the Blessed St. John the Baptist, the holy Apostles St. Peter and St. Paul and all the saints and sacred hosts of heaven, and to you, my ghostly father, the Superior General of the Society of Jesus, founded by St. Ignatius Loyola in the Pontificate of Paul the Third, and continued to the present, do by the womb of the Virgin, the matrix of God, and the rod of Jesus Christ, declare and swear that his holiness the Pope is Christ’s Vice-regent and in the true and only head of the Catholic or Universal church throughout the earth… …

 

I furthermore promise and declare that I will, when opportunity present, make and wage relentless war, secretly or openly, against all heretics, Protestants and Liberals, as I am directed to do, to extirpate and exterminate them from the face of the whole earth; and that I shall spare neither age, sex or condition; and that I will hang, waste, boil, flay, strangle and bury alive these infamous heretics, rip up the stomachs and wombs of their women and crush their infants’ heads against the walls, in order to annihilate forever their execrable race….”

 

இந்த பிரமாணத்தைப் படிப்போர் மனம் திடுக்கிடும் என்பதில் ஐயமில்லை.

 

ஜூலியாக்கள் போன்ற செகுலரிஸ்டுகள் உண்மை தெரியாதவர்களா அல்லது ஜெஸ்யூட் கோஷ்டியில் ஒருவரா?

ஒன்றும் தெரியாத அப்பாவி போல நாளிதழ்களில் எதையேனும் எழுதி ஹிந்து ராஷ்டிரத்தில் எங்களை நாங்கள் வணங்கும் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா என்று கேள்வி கேட்கும் போது விஷயம் அறியாதவர்கள் அடடா, இவர் கேட்பது சரி தானோ என்று எண்ணுவர்.

 

ஆக, ஜுலியாக்களுக்கு உண்மை தெரிவதற்காவது கிறிஸ்தவ  மதம் இந்தியாவில் எப்படி பரப்பப் பட்டது அதற்கு எத்தனை ஆயிரம் அப்பாவிகள் பலி ஆகினர் என்ற வரலாறு வெளி வர வேண்டும்.

 

எவ்வளவு செல்வம் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, என்னென்ன இழி செயல்கள் இங்கு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வேண்டும்.

வரலாற்றை ஆராய்வோர் எழுதுவர்; படிப்போம்!

 

10

பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிந்து போவான் என்பது பைபிள் வாசகம்.

பட்டயம் என்றால் கத்தி. அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்.

 

இது ஹிந்துவாகிய எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

ஏனெனில் உயரிய குணங்கள் என்று குணங்களை பகவத் கீதையும் மனு ஸ்மிருதியும் பட்டியலிடும் போது அதில் முதலிடம் பெறுவது அஹிம்ஸை. அடுத்து தான் சத்தியம் சொல்லப்படுகிறது.

அந்த அளவிற்கு அஹிம்ஸை ஹிந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதன் மஹிமையை எடுத்துக் காட்டியவர் மஹாத்மா காந்தி.

 

சிங்கத்தை அதன் குகையிலேயே பல்லைப் பிடித்து ஆட்டியவர்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியர்களை துரத்தியவர்.

ஆக அஹிம்ஸாவாதிகளான ஹிந்துக்கள், ‘கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்’ என்ற ஹிந்து தத்துவத்தை வலியுறுத்தும் பைபிள் வாசகத்தை நிச்சயம் விரும்புவார்கள்.

 

அப்பாவிகளாக வாழ்ந்து வந்த பல தேசத்து மக்களை மதமாற்றம் என்ற பெயரால் கொன்று குவிக்க கத்தியை எடுத்த கிறிஸ்தவ பாதிரிகள் கத்தியாலேயே அழிவர் என்பது உறுதி.

பைபிள் வாசகம் பலிக்குமானால், அஹிம்ஸையை விரும்பும் கிறிஸ்தவர்களில் மனம் மாறியவர்கள் போக, காலப் போக்கில் மீதியுள்ள கிறிஸ்தவராக ஏசு ஒருவர் தான் அதில் மிஞ்சுவாரோ?

பைபிளை ஹிந்து ராஷ்டிரத்தில் படிக்க விரும்பும் ஜூலியாக்கள் சிந்திக்கட்டும்!

 

*** தொடர் முற்றும்

தொடருக்கு உதவிய ஆதாரம் : Truth Volume 86 Issue 12 – 6-7-2018 இதழ்

நன்றி : Truth

 

 

 

தெய்வீ கக் குரல்! (Post No.5373)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 August 2018

 

Time uploaded in London – 8-37 AM (British Summer Time)

 

Post No. 5373

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

 

மிகப் பெரிய மகான்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இறைவன் அவர்களின் உள்ளிருந்தே பேசுகிறான்.

Inner Voice என்று குறிப்பிடப்படும் இந்த் தெய்வீகக் குரல் தான் அவர்களை வழி நடத்துகிறது.

மகாத்மா காந்திஜி தனது உள்ளிருந்து வந்த குரலின் படியே நடந்து சென்றார்; மக்களுக்கு வழி காட்டினார்.

 

 

உண்ணாவிரதம் இரு என்று உட் குரல் சொன்ன போது அவரே மலைத்திருக்கிறார்; எதற்காக என்று? ஆனால் பின்னால் நடந்த சம்பவங்கள் அந்த உண்ணாவிரதத்தை நியாயப் படுத்தின.

உப்பை எடுத்து சத்யாக்ரஹம் செய்வதா என்று பெரும் தலைவர்கள் உள்ளிட்டோர் சிரித்தனர்; ஆனால் மகாத்மாவை எதிர்க்க முடியுமா?

சந்தேகத்துடன் சத்யாக்ரஹத்தில் பங்கேற்றோர் அது தேச சரித்திரத்தில் ஏற்படுத்திய மாபெரும் எழுச்சியைக் கண்டு வியந்தனர்.

 

 

ஆக அந்த தெய்வீகக் குரல் பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதைக் கீழே உள்ள அவரது வார்த்தைகளே தெளிவாகத் தெரிவிக்கின்றன.

 

அவற்றைப் பார்க்கலாம்:

 

 

 The Inner Voice

There come to us moments in life when about some things we need no proof from without. A little voice within us tells us, ‘You are on the right track, move neither to your left nor right, but keep to the straight and narrow way. (L, 25-12-1916)

There are moments in your life when you must act, even though you cannot carry your best friends with you. The ‘still small voice’ within you must always be the final arbiter when there is a conflict of duty. (YI, 4-8-1920, p3)

Having made a ceaseless effort to attain self-purification, I have developed some little capacity to hear correctly and clearly the ‘still small voice within’. (EF, p34)

I shall lose my usefulness the moment I stifle the still small voice within. (YI, 3-12-1925, p422)

Penances with me are no mechanical acts. They are done in obedience to the inner voice. (YI, 2-4-1931, p60)

 

No False Claim

A person falsely claiming to act under divine inspiration or the promptings of the inner voice without having any such, will fare worse than the one falsely claiming to act under the authority of an earthly sovereign. Whereas the latter on being exposed will escape with injury to his body, the former may perish body and soul together.

You have to believe no one but yourselves. You must try to listen to the inner voice, but if you will not have the expression”inner voice”, you may use the expression “dictates of reason”, which you should obey, and if you will not parade God, I have no doubt you will parade something else which in the end will prove to be God, for, fortunately, there is no one and nothing else but God in this universe.

I would also submit that it is not everyone claiming to act on the urge of the inner voice [who] has that urge. Like every other faculty, this faculty for listening to the still small noise within requires previous effort and training, perhaps much greater than what is required for the acquisition of any other faculty, and even if out of thousands of claimants only a few succeed in establishing their claim, it is well worth running the risk of having and tolerating doubtful claimants.(M, III, p229)

Nobody has to my knowledge questioned the possibility of the inner voice speaking to some, and it is a gain to the world even if one person’s claim to speak under the authority of the inner voice can be really sustained. Many may make the claim, but not all will be able to substantiate it. But it cannot and ought not to be suppressed for the sake of preventing false claimants.

There is no danger whatsoever if many people could truthfully represent the inner voice. But, unfortunately, there is no remedy against hypocrisy. Virtue must not be suppressed because many will feign it. Men have always been found throughout the world claiming to speak for the inner voice. But no harm has yet overtaken the world through their short-lived activities.

Before one is able to listen to that voice, one has to go through a long and fairly serve course of training, and when it is the inner voice that speaks, it is unmistakable. The world cannot be successfully fooled for all time. There is, therefore, no danger of anarchy setting in because a humble man like me will not be suppressed and will dare to claim the authority of the inner voice, when he believes that he has heard it.(H, 18-3-1933, p8)

My claim to hear the voice of God is no new claim. Unfortunately, there is no way that I know of proving the claim except through results. God will not be God if He allowed Himself to be an object of proof by His creatures. But He does give His willing slave power to pass through the fiercest of ordeals.

I have been a willing slave to this most exacting Master for more than half a century. His voice has been increasingly audible, as years have rolled by. He has never forsaken me even in my darkest hour. He has saved me often against myself and left me not a vestige of independence. The greater the surrender to Him, the greater has been my joy.(H, 6-5-1933, p4)

 

Voice of God

For me the Voice of God, of Conscience, of Truth, or the Inner Voice or ‘the Still Small Voice’ mean one and the same thing. I saw no form. I have never tried, for I have always believed God to be without form. But what I did hear was like a Voice from afar and yet quite near. It was as unmistakable as some human voice definitely speaking to me, and irresistible. I was not dreaming at the time I heard the Voice. The hearing of the Voice was preceded by a terrific struggle within me. Suddenly the Voice came upon me. I listened, made certain it was the Voice, and the struggle ceased. I was calm. The determination was made accordingly, the date and the hour of the fast were fixed…

Could I give any further evidence that it was truly the Voice that I heard and that it was not an echo of my own heated imagination? I have no further evidence to convince the skeptic. He is free to say that it was all self-delusion or hallucination. It may well have been so. I can offer no proof to the contrary. But I can say this, that not the unanimous verdict of the whole world against me could shake me from the belief that what I heard was the true Voice of God.

But some think that God himself is a creation of our own imagination. If that view holds good, then nothing is real, everything is of our own imagination. Even so, whilst my imagination dominates, me I can only act under its spell. Realest things are only relatively so. For me the Voice was more real than my own existence. It has never failed me, or for that matter, anyone else. And everyone who wills can hear the Voice. It is within everyone. But like everything else, it requires previous and definite preparation.(H, 8-7-1933, p4)

Rightly or wrongly, I know that I have no other resource as a satyagrahi than the assistance of God in every conceivable difficulty, and I would like it to be believed that what may appear to be inexplicable actions of mine are really due to inner promptings.

It may be a product of my heated imagination. If it is so, I prize that imagination as it has served me for a chequered life extending over a period of now nearly over fifty-five years, because I learned to rely consciously upon God before I was fifteen years old. (H, 11-3-1939, p46)

இப்படி 15 வயது முதல் சுமார் 55 ஆண்டுகள் அந்தக் குரலில் வழி காட்டுதலின் பேரில் தான் நடந்து சென்றதை அவர் குறிப்பிட்டதிலிருந்தே அவரை வழி நடத்திய உள்ளிருந்து எழுந்த தெய்வீகக் குரலைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

*

இனி அரவிந்தர் Inner Voice பற்றிக் கூறுவதை அவரது சொற்களிலேயே  பார்ப்போம்:

அரவிந்தர் கூறுகிறார் :

“This inner voice does not give any reason: it only says, ‘do this; if you do not do bad results will follow’. Sometimes strangely enough bad results do follow if you don’t listen to them. Lele used to say that whenever he did not follow the inner voice, he had pain and suffering.

 

I also heard a voice which asked me to go to Pondicherry. Of course it was the inner voice. It was impossible to make a mistake about it or disobey that voice. There are some voices about which there can be no possibility of any doubt or  mistake. Charachandra Roy wanted me to go to France so that we may have no further trouble. When I arrived at Chandranagore he refused to receive me and shoved me on to Moti Roy.

 

ஆக தெய்வீகக் குரலே அரவிந்தரை வழி நடத்திச் சென்றது. அவரைப் பாண்டிச்சேரி செல்லுமாறு வழிகாட்டியது.

*

Rational Philosopher என்று அனைவராலும் போற்றப்படும் சாக்ரடீஸும் தான் ஒரு தெய்வீகக் குரல் சொல்வதைக் கேட்டு நடப்பதாக அடிக்கடி மக்களிடம் சொல்லி வந்தார். அவரை விசாரணைக்கு அழைத்து வந்த போதும் விசாரணையிலும் அவர் இதையே வலியுறுத்தினார். ஆனால் அவர் சொல்வதை நம்பாமல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் குற்றவாளிக் கூண்டில் கி.மு. 399ஆம் ஆண்டில் நின்ற போது கூறிய சொற்கள் இவை:

“I have a divine sign [daimonion] from the god which… began when I was a child. It is a voice, and whenever it speaks it turns me away from something I am about to do, but it never turns me towards anything. This is what has prevented me from taking part in public affairs, and I think it was quite right to prevent me. Be sure, gentlemen of the jury, I should have died long ago otherwise.” (Plato, Apology; quoted in Berman, 2014, p. 1676; the word daimonion in brackets added by Berman)

ஆக சாக்ரடீஸை தேவையான காலம் வரை வாழ வைத்ததும் தெய்வீகக் குரல் தான்!

*

மனித குலத்தை வழிகாட்ட வரும் பெரியோர்கள் இப்படி Inner Voice படி நடப்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளால் அறிய முடிகிறது.

இந்த Inner Voice  நிகழ்வுகள், தெய்வீக சக்தி ஒன்று அதன் திட்டப்படி உலகை வழி நடத்திச் செல்கிறது என்பதை அறிய  வைக்கின்றன, இல்லையா!

****