கொடு,பகிர், கொடு, பகிர்- அதர்வ வேதம் (Post No.7413)


Written by London Swaminathan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7413

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 1 (Post No.7412)

                                                             ச.நாகராஜன்                           


Written by S Nagarajan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7412

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை (Post 7406)

Greek Sphinx
Marble capital and finial in the form of a sphinx, ca. 530 B.C. Greek, Attic, Archaic Marble, Parian; H. with akroterion 56 1/8 in. (142.6 cm) The Metropolitan Museum of Art, New York, Munsey Fund, 1936, 1938 (11.185d, x) http://www.metmuseum.org/Collections/search-the-collections/248501

ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை (Post 7406)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 1 JANUARY 2020

Post No.7406

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Xxxx சுபம் xxxxx

Tags –ரிக் வேதம் , கிரேக்க புதிர், விடுகதை, உணவு பகிர் , தானம்,  தயாள குணம், 10-117, துதி

Egyptian sphinx

கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாடுவேனோ? (Post No.7405)

Written by S NAGARAJAN

Uploaded in London on  – 1 JANUARY 2020

Post No.7405

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் சிறந்த தமிழ்ப் புலவர். வள்ளல் சீதக்காதி காலத்தவர். சிறந்த முருக பக்தர்.

கந்தனைப் பாடுவது அவருக்குப் பிடித்த ஒன்று. கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாட முடியுமா என்பது அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்வி.

இதை அப்படியே ஒரு பாடலாகப் பாடி விட்டார்.

பாட்டு இதோ:

கல்லடிக்கு முளியிரண்டு காதடிக்கு ளடிப்பதெனக் கவிதை கேட்டுப்

பல்லடிக்குக் கிடுகிடெனப் பறையடிக்கு நெஞ்சர்தமைப் பாடுவேனோ

வில்லடிக்கும் பிரம்படிக்குங் கல்லடிக்கும் விரும்பி நின்ற மெய்ய னீன்ற

செல்லடிக்குந் தடவரையிற் சேறடிக்க வலையடிக்குஞ் செந்தி லானே

பாடலின் பொருள் :

வில் அடிக்கும் – அர்ஜுனனது வில் அடிக்கும்

பிரம்பு அடிக்கும் – பாண்டியனது பிரம்பு அடிக்கும்

கல் அடிக்கும் – சாக்கிய நாயனாரது கல் அடிக்கும்

விரும்பி நின்ற – விரும்பி இருந்த

மெய்யன் – மெய்ப்பொருளான சிவபிரான்

ஈன்ற – பெற்ற

செல் அடிக்கும் தடவரை மேல் சேறடிக்கும் – மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலை மீது சேறு படும்படி

அலை அடிக்கும் – அலைகள் மோதுகின்ற

செந்திலானே – திருச்செந்தூரில் உறைந்திருக்கும் முருகப் பெருமானே

கல் அடிக்கும் உளி – கல்லை வெட்டுகின்ற உளியானது

இரண்டு காது அடிக்குள் அடிப்பது என – இரண்டு காதுகளின் அடியில் அடிப்பது போல

கவிதை கேட்டு – புலவர்களின் கவிதையைக் கேட்டு

பல் கிடுகிடு என அடிக்க – பற்கள் ஒன்றோடொன்று பட்டு கிடுகிடு என அடிக்க

பறையடிக்கும் நெஞ்சர் தமை – நடுங்குகின்ற மனத்தை உடையவரை

பாடுவேனோ – நான் பாடுவேனோ

திரண்ட பொருள் :  திருச்செந்திலானே! என் கவிகளைக் கேட்டு மகிழும் உன்னப் பாடாமல் அவற்றை காதடியில் உளி வைத்து அடித்தாற் போல வெறுப்பாய்க் கேட்கும்  உலோபரைப் பாடுவேனோ? மாட்டேன்.

பல புலவர்களும் இப்படி மனம் நொந்து கண்டவரைப் பாடாமல் கந்தனைப் பாட விழைந்ததுண்டு.

முருகனைப் பற்றிப் பல புலவர்களும் அருளாளர்களும் தமிழில் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. பொருள் பொதிந்த அவற்றைப் படித்தால் முருகனின் அருள் நிச்சயம் உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

***

Skanda in Gandhara

Christian Blood Miracle கிறிஸ்தவ ரத்த அதிசயம் (Post No.7397)

Written  by london Swaminathan

Date – 29th December 2019

Post No.7397

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992 மார்ச் 15 தினமணியில் நான் எழுதிய இத்தாலி நாட்டு நேப்பிள்ஸ் நகர கத்தோலிக்க சாமியாரின் ரத்த அதிசயம் பற்றிய  கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன் . 2019 செப்டம்பரில் ரத்தம் இளகிய செய்தி கத்தோலிக்க பத்திரிகைகளில் வெளியானது. அதாவது ஆண்டு தோறும் அதிசயம் நிகழ்கிறது .

The blood was shown to have liquefied shortly after 10 a.m. during Mass in the Naples’ Cathedral (19 September 2019).

The miracle of the liquefiction of the blood of early Church martyr St. Januarius took place Thursday in Naples.

The blood was shown to have liquefied shortly after 10 a.m. during Mass in the Naples’ Cathedral of the Assumption of Mary.

The Mass was celebrated by Cardinal Crescenzio Sepe, Archbishop of Naples, who in his homily, strongly criticized the violent crime of Neapolitan streets.

Despite the city’s recurring miracle, “the evil that the hateful and violent killers commit in Naples is limitless,” he said.” In effect they try to kill at birth just the possibility of making a future…”

This, he noted, generates fear and insecurity, and goes against the common good.

“We must ask ourselves: does Naples still have a great and sincere heart? Us citizens of today’s Naples have to answer this question with truth, therefore, with realism, with honesty and courageously, without letting ourselves be taken by a false nostalgia of the times we once had,” he stated.

St. Januarius, or San Gennaro in Italian, the patron of Naples, was a bishop of the city in the third century, whose bones and blood are preserved in the cathedral as relics. He is believed to have been martyred during Diocletian persecution.

The reputed miracle is locally known and accepted, though has not been the subject of official Church recognition. The liquefaction usually happens at least three times a year: September 19, the saint’s feast day, the Saturday before the first Sunday of May, and December 16, the anniversary of the 1631 eruption of Mount Vesuvius.

During the miracle, the dried, red-colored mass confined to one side of the reliquary becomes blood that covers the entire glass. In local lore, the failure of the blood to liquefy signals war, famine, disease or other disaster.

The blood did not liquefy in December 2016, but Monsignor Vincenzo De Gregorio, abbot of the Chapel of the Treasure of San Gennaro, said it was a sign that Catholics should pray rather than worry about what the lack of miracle could mean.

“We must not think of disasters and calamities. We are men of faith and we must pray,” he said at the time.

The vial has sometimes changed upon the visit of a pope.

On March 21, 2015, Pope Francis met with priests, religious and seminarians at the cathedral and gave a blessing with the relic.

Sepe then received the vial back from the pope and noted that the blood had partially liquefied.

The last time blood liquefied in the presence of a pope was in 1848 when Bl. Pius IX visited. The phenomenon didn’t happen when St. John Paul II visited the city in October 1979, or when Benedict XVI visited in October 2007.

–subham–

அஸ்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்! (Post No.7386)

Written by london swaminathan

Date – 26th December 2019

Post No.7386

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

அஸ்தி கரைப்பதில் உள்ள விநோதங்கள் பற்றி 17-5-1992ல் தினமணியில் எழுதினேன்.

இந்தியாவிலேயே பல தலைவர்கள் தங்கள் அஸ்தியை என்ன செய்ய வேண்டும் என்று  சொன்னதை எல்லோரும் அறிவர்.அத்தலைவர்களின் அஸ்தி கலசங்கள் ஊர் ஊராக ஊர்வலம் விடப்பட்டதையும் அறிவர் . புத்தரின் அஸ்திக்கும் எலும்புக்கும், பல்லுக்கும் போட்டா போட்டி காட்டா குஸ்தி நடந்ததையும் படித்திருக்கிறோம். நேருஜியின் அஸ்தி அவரது விருப்பப்படி நாடு முழுதும் விமானத்திலிருந்து தூவப்பட்டது .

காந்திஜிதியின் அஸ்தி நாடு முழுதும் புனித நதிகளில் கரைக்கப்பட்டது.

அஸ்தி என்பது  இறந்தவரின் உடலை எரித்த பின்னர் கிடைக்கும் சாம்பலும்  எலும்பும் ஆகும்.

இந்தப் பின்னணியில் இந்தக் கட்டுரையும் இன்று  வரை சுவை குன்றவில்லை.

Tags – அஸ்தி , கரைத்தல், விநோதங்கள்

New Delhi: Prime Minister Narendra Modi after paying tribute to the ashes (‘Asthi Kalash’) of former prime minister Atal Bihari Vajpayee, before their distribution to all BJP state presidents for immersion in their respective states, at the party headquarters in New Delhi on Wednesday, Aug. 22, 2018. BJP President Amit Shah, party leaders Rajnath Singh, Sushma Swaraj and Vajpayee’s foster son-in-law Ranjan Bhattacharya are also seen. (PTI Photo/Atul Yadav) (PTI8_22_2018_000068B)
train with Gandhi’s ash coming to Kanpur

எண் 14-ன் மஹிமை! (Post No.7384)

முருகனைப் புகழ்ந்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ! (Post No.7380)

Written by lodon swaminathan

Post No.7380

Date uploaded in London – 25-12-2019

Swami_48@yahoo.com

Pictures  are taken by London swaminathan

லண்டனில் டிசம்பர் 23ம் தேதி (2312-2019) சைவ ஆகம ஆய்வரங்கமும் ,ரௌரவ ஆகம புஸ்தக வெளியீடும் நடந்தது. லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலில் நடந்த

இந்த நிகழ்ச்சிக்கு கோவிலின் தலைமை குருக்களும் ஐரோப்பா முழுதும் புகழ்பெற்றவருமான திரு நாகநாத சிவம் தலைமை தாங்கினார். வேத ஆகம அகாடமி நிறுவனரும், உலக இந்து மகா சங்க ட்ரஸ்டியுமான திரு.கல்யாண சுந்தர குருக்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியின் முக்கியத்வத்தை விளக்கினார். அண்மையில் சென்னையில் காஞ்சி சங்கராச் சார்ய சுவாமிகளைச்  சந்தித்தபோது வெளிநாடு வாழ் குழந்தைகளுக்கு வேதம் , புராண, இதிஹாசம் ஆகியவற்றோடு நல்ல கடவுள் துதிகளைக் சொல்லித் தரும்படி சொன்னதாகவும் அதை அகாடமி செய்து வருவதாகவும் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கல்பகா, வேதாகம அகாடமி, சைவ வேதாகம ட்ரஸ்ட், உலக இந்து மகா சங்கம் இணைந்து நடத்தின.

திருமதிகள் கீதா கல்யாண சுந்தரம், ஸ்ரீதேவி சந்திரசேகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தனர். அகாடமியில் வேதம் பயிலும் மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்

தலைமை உரையில் திரு நாகநாத சிவம் பல சுவையான சம்பவங்களை எடுத்துரைத்தார்.

“நாங்கள் ஆண்டுதோறும்  பிரிட்டிஷ் ராணுவத்தின் அழைப்பின்பேரில் ராணுவ தலைமை அலுவலகத்துக்குச்

சென்று பிரார்த்தனை செய்வோம். நாங்களும் அவர்களைக் கோவிலுக்கு அழைப்போம். பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமை தளபதி (ஆங்கிலேயர்) கோவிலுக்கு வருகை தந்தார். பிரதான சந்நிதியில் உள்ள முருகனைப் பற்றி வினவியபோது அவர்தான் இந்து சேனாதிபதி, ராணுவத்தின் கமாண்டர் இந் ஸீFப்  Commander in Chief என்று சொன்னேன்.

உடனே அவர் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து He is our man ‘ஹீ இஸ் அவர் மேன்’ – அவர் நம்ம ஆளு — என்று செப்பினார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நாம்  புராணக் கதைகளைச்  சொல்லுவதற்கு முன்னர், இக்கால மக்களுக்கு புரியுமாறு நாம் சொல்ல வேண்டும். கோவிலுக்கு இளைஞர்கள் வருவார்கள். இந்த சாமிகள்  (deities) யாரு?  என்று வினவுவர். நன் உடனேயே எத்தனை சாமிகள் இருக்கு? என்று கேட்பேன். அவர்கள் மூன்று என்பர். அவர்கள் தான்  இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி Thinking, Planning, and Doing (திங்கிங், பிளானிங், அண்ட் டூயிங்) என்பதன் அடையாளம் என்பேன். உடனே அவர்களுக்கு ஆர்வம் பிறக்கும் . காலத்துக்கு ஏற்றபடி நாம் இளைஞர்ளுக்குக் கற்பித்தல் அவசியம். மேலும் அவர் பேசுகையில் வேத, ஆகம ,திருமுறைகளை பிரித்து பார்க்க முடியாது. அண்மையில் சிவபதம் சேர்ந்த காலஞ்சென்ற தருமை ஆதீனகர்த்தர் அழகாக வரிசைப் படுத்துவார் .வேத, ஆகம, சாஸ்திர, திருமுறை என்பதில் முதலில் உள்ளதை அடுத்தது குறிப்பிடும். இதிலிருந்தே அதன் வரிசை  ஏற்றுக்கொள்வது புரிபடும் என்றார் . நகைச்  சுவை ததும்பப் பேசுகையில் கிறிஸ்தவர்கள் இன்று நாம் பயன்படுத்தும் வேத , ஆகம சொற்களை பயன்படுத்தி த்வஜ ஸ்தம்பம், உற்சவம் வரை வந்துவிட்டனர். ஆகையால் நம்மவர்களுக்கு சரியான பொருளைக் கற்பிப்பது இன்றியமையாத தேவை என்றார் . திரு கல்யாண சுந்தரம் ஆற்றிவரும் இடையறாத சேவையைக் குறிப்பிட்டு அவர் வெளியிடும் நூல்களை வாங்கி ஆதரவு தரவேண்டும் என்றார் . அண்மையில் வெளியான ருத்ராக்ஷ மஹிமை என்னும் நூல் அரிய பெரிய விஷயங்களை எடுத்து இயம்புவதையும் சுட்டிக்காட்டினார்.

திரு. வசந்தன் குருக்கள் எதையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைப்பதில் வல்லவர். அவர் தனக்கே உரிய பாணியில் ஆறு அத்வாக்களின் (ஷடாத்வா)  சிறப்புகளை விளக்கினார். அத்வா என்பது வழி , வழிமுறை எனப்பொருள் படும். இவை கும்பாபிஷேகம் மட்டுமின்றி அன்றாடச் சடங்குகளிலும் இடம்பெறுகின்றன. யாக யக்ஞங்களிலும் ‘அத்வர்யு’ என்பவர் வழிநடத்துவத்தைக் காண்கிறோம். சைவ சித்த்தாந்தம் என்ற பதமே அதுதான் “முடிவு, துணிபு” என்பதை ‘சித்தாந்தம்’ என்ற சொல் மூலம் காட்டும். ஆதற்கு மேல் எதுவும் இல்லை என்றார் . மந்திரம், பதம், வர்ணம் என்பதை சொல்லி, சொல்லுக்கு மேல் எதுவுமிலை , இறைவனையே நாம் ‘சொற்றுணை வேதியன்’ – சொல்லுக்குத் துணையானவர் என்போம் என்றார் . பஞ்ச பிரம்மம், ஷடங்க மந்திரம் ஆகிய 11-ன் சிறப்பை விளக்கிவிட்டு நியாசம் முதலியாவற்றையும் விளக்கினார். திருமந்திரத்தில் ஒரே பாட்டில் திருமூலர் தத்துவம் 36 முதலியனவற்றை அற்புதமாகப் பாடியிருப்பதை விளக்கினார். தத்துவம் இன்றி இறைவன் இல்லை. தத்துவம் இல்லாத இடத்துக்கு கடவுள் வருவதில்லை என்று சொல்லி முடித்தார்.

பர்மிங்ஹாம் நகரிலிருந்து வந்த காஞ்சிபுரம் திரு சந்திர சேகர குருக்கள் ‘சிவ தீக்ஷை’ பற்றி மிக விரிவாகப் பேசினார். சிவ தீக்ஷை பெறுவது எல்லா வர்ணத்தாருக்கும் பொதுவானது. இது மிகவும் விரிவானது. இதைப் பெற்ற பின்னர்தான் சிவாசார்யர்களுக்கு தகுதி வருகிறது. மற்ற பண்டிதர்களைப்  போலப் பயப்படாமல் எல்லோரையும் கைதூக்கி விடும் தன்மை  வருகிறது. சிவ தீக்ஷை பெற்றோருக்கு அச்சம் என்பதே இல்லை.

சிவ நாம உச்சாடனம் அவர்களுக்கு சக்தி அளிக்கிறது. வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் கற்று தருவது  இது. கடவுளுக்கு உஷத் காலம் முதல் பள்ளியறை  தீபாராதனை வரை நாம் செய்யும் சடங்குகள் நமக்கு பல விஷயங்களைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டவை. எடுத்துக் காட்டாக பள்ளியறையில் எந்தக் காலத்தில் இறைவன் இறைவிக்கு எந்த விதமான கட்டில்  அமைக்க வேண்டும் என்பதைக் கூட ஆகமங்கள் கற்பிக்கின்றன. உஷத் காலமான மார்கழியில் துவங்கி விளக்கு ஏற்றும்  கார்த்திகையில் எல்லாம் முடிவது சிறப்பானது. பல் தேய்ப்பது எப்படி எனபது முதல், மீண்டும் பிறவாமை வேண்டும் என்ற நிலை வரை அறிய உதவுவது தீக்ஷை முறை. சாயுஜ்ஜிய நிலையை அடைய உதவுவது. இதில் குருவுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். குருவுக்குப் பணி விடை செய்து திருப்தி செய்யவேண்டும் லிங்கம், அக்கினி, கலசம் முதலிய 4 ரூபங்களில் இறைவன் வெளிப்படுகிறார். பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்காகவும் ஒரு பூணுல் அணியும் வழக்கம் இருக்கிறது. அவர்களுடைய  மேம்பாட்டுக்கும் கணவன் இதன்முலம் உதவுகிறான். தீட்சைகள் நயன, ஸ்பர்ச, வாசக பாவனா, சாஸ்திர, யோக என்று பல வகைப்படும் என்று விரிவாக உரையாற்றினார் .

சென்னையிலிருந்து வந்த வேத பண்டிதர் திரு ராம் சாஸ்திரிகள் உரையாற்றுகையில் வேத ஆகம மந்திர தொடர்புகளை எடுத்துக் காட்டினார். மார்ச் மாதம் வரை  லண்டனில் இருப்பதால் முருகன் கோவிலில் வேத வகுப்புகளை நடத்தி சூக்தங்கள் முதலியவற்றைக் கற்பித்து இப்போது உதக சாந்தி பற்றி வகுப்பு நடத்துவதாகவும் அனைவரும் இதை பயன்படுத்தி பயனுற வேண்டும் என்றும் வேண்டினார். சந்துரு குருக்கள் சொன்ன சிவதீட் சைக்கு அபர காரியங்களிலும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டினார்.

வெளிநாட்டில் செய்யும் சிரார்த்தங்களுக்குப் பலன் உண்டா என்று ஒருவர தன்னிடம் கேட்டதாகவும் கட்டாயம் உண்டு. காலதேச வர்த்தமானத்தை அனுசரித்தே பலவகை சிரார்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. எங்கு அழைத்தாலும் அங்கு வந்து ஆசி வழங்குவோம் என்று பித்ருக்கள் சொல்கின்றனர். அவர்களை நினைத்து ஓ என்னு கதறும் இடத்துக்குக் கூட அவர்கள் வந்து ஆசி வழங்குவர் என்றும் ராம்  சாஸ்திரிகள் குறிப்பிட்டார்.

உடல் நலம் சரியில்லாதபோதும் கருமமே கண்ணாயினார் என்ற பொன்மொழிக்கேற்ப வந்திருந்த திரு கமலநாத குருக்கள் ஒரு சிற்றுரை ஆற்றினார். சிவகாம பத்ததிகள் என்ற தலைப்பில் பேசிய அவர் ஆபஸ்தம்ப சூத்திரம், சதபத பிராஹ்மணம் முதலியவற்றை எடுத்துக்காட்டி பெண்கள் சொல்வதையும் கருத்திற்கொள்க  என்பதை சூத்ரகாரர்கள் வலியுறுத்துவதை மேற்கோள் காட்டினார். 18 பத்ததிகள் தந்த சிவாகம மரபுகள் பற்றி பின்னொரு கருத்தரங்கில் விளக்குவதாவும் சொன்னார்.

பேச்சாளர்கள் அனைவரும், சிறுவர்களும் இளைஞர்களும் இந்த கருத்தரங்கு விஷயங்களை உன்னிப்பாகக் கேட்பது மகிழ்ச்சிக்குரியது என்று உரைத்தனர் .

திரு. கல்யாண சுந்தர குருக்கள் நன்றி உரையில் 28 ஆகமங்களின்  சிறப்பு 18 பத்ததிகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி, இது போன்ற கருத்தரங்குகளுக்கு ஆதரவு பெருகிவருகிறது என்றார். சிறுவர்கள் அதிக ஈடுபாட்டுடன் துதிகளைக் கற்பதை பாராட்டினார். வந்திருந்த சிவாச்சாரியார்கள் அனைவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்துவித்தார். லம்போதர குருக்கள், கோபி குருக்கள் முதலானோர் அவருக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். ரௌரவ ஆகம நூல் வெளியீட்டுடன் விழா நிறைவு பெற்றது. திரு. நாகநாத சிவம் எல்லோருக்கும் புதிய நூலை அளித்தார்.

Tags –   சைவ ஆகம கருத்தரங்கு, ரௌரவ ஆகமம், நூல் வெளியீட்டு விழா  

–subham–

கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி! (Post No.7379)

கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி! (Post No.7379)

written by S  Nagarajan

Post No.7379

Date uploaded in London- 25-12-2019

contact – swami_48@yahoo.com

pictures are used from various sources; thanks.

ச.நாகராஜன்

தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உலகோர் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டவை. சில சிற்பங்களைப் பார்க்கும் போது சிற்பிகளே வியந்து போற்றும் கோவில்கள் பல உள்ளன.

சிற்ப வேலைகளைச் செய்ய முன் வரும் சிற்பிகள் இந்தக் கோவில்களைத் தவிர வேறு எந்தக் கோவில் சிற்பமானாலும் செய்வோம் என்று சொல்லும்படியான கோவில்களில் தாரமங்கலம் – தாடிக்கொம்பு கோவில்களில் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை.

தாரமங்கலம் கோவிலின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் ராமரும் இன்னொரு தூணில் வாலியும் செதுக்கப்பட்டிருக்கின்றனர்.

வாலியின் சிலை அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் ராமர் தெரிவதில்லை.

ராமரின் சிலையின் அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் வாலி தெரிகிறான்.

மறைந்திருந்து ராமர் வாலியை வதம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்றே! அதை சிற்பக் கலையில் நிஜமாகவே வடித்துக் காட்டி இருப்பதை அதிசயத்துடன் இன்றும் பார்க்க முடிகிறது.

இதே போலத் திருச்செங்கோட்டிலும் (திருநண்ணா), பவானியிலும் பல கற்பணிகள் நடந்துள்ளன. அங்கு பல கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.அர்ச்சர்கர்களுக்குத் திருமடம் அளிக்கப்பட்டுள்ளது. வேதாகம பாடசாலை வைத்துக் கல்வி கற்பித்ததோடு அதில நன்கு படித்துத் தேறியவர்களுக்கு விசேஷ பரிசுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன; திருவிழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆற்றூர், அந்தியூர் ஆகிய இடங்களில் கோட்டைகள், ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வணங்காமுடிக் கட்டி முதலி, சீயாலகட்டி முதலி, இம்முடிக்கட்டி முதலி என பல தலைமுறையினர் தாரமங்கலம் முதலிய பல இடங்களைக் கட்டி ஆண்டிருக்கிறார்கள்.

பாண்டியர், நாயக்கர்,மைசூர் அரசர்கள் காலத்தில் இவர்கள் வீரத்துடன் திகழ்ந்து போற்றப்பட்டிருக்கின்றனர்.

வேளாள வகுப்பினரின் திருப்பணி பற்றி திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, சேலம் மானுவல் (Salem Manual), கெஜட், கோயமுத்தூர் மானுவல் ஆகியவற்றில் அவர்களது சரித்திரத்தைப் பார்க்கலாம்.

அவர்கள் பற்றிய கற்சாசனங்களும் கூட வெவ்வேறு இடங்களில் உள்ளன.

இப்படிப்பட்ட அரிய வீரர்களுள் கட்டி முதலியும் ஒருவர்.

கொங்கு மண்டல சதகம் தனது 74ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் இதோ:-

கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன் னீர்

வற்றா துயரட்டக் கோணக் குளமும் வகுத்ததன்றிச்

சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்

மற்றார்க் கிலையெனப் பெறுகட்டி யுங்கொங்கு மண்டலமே

                                                    -கொங்குமண்டல சதகம் பாடல் 74

பாடலின் பொருள் :- சிற்ப நூல் வல்லுநர்கள் வியப்புறும் வண்ணம் கற்பணிக் கோவிலும் எண்கோண வடிவில் குளமும் செய்ததோடு மட்டுமன்றி, சதுரங்கம், வில், மீன், புலி ஆகிய விருதுக் கொடிகளையும் மற்றவர்க்கு இல்லை என்னும்படியாக, சிறப்பாகக் கொண்ட கட்டி முதலியும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாகும்.

***

மஹரிஷி கார்க்கியர் (Post N0.7373)

Written  by S. Nagarajan

swami_48@yahoo.com

Date: 23 December 2019

Time in London – 7-22 am

Post No. 7373

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000