Number Eight in Hinduism & other Cultures (Post No.7035)

Eight Immortals of Taiwan
ashta dikpalas

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-59

Post No. 7035

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

eight immortals from wikipedia

The Eight Immortals (Chinese: 八仙; pinyinBāxiānWade–GilesPa¹-hsien¹) are a group of legendary xian (“immortals”) in Chinese mythology. Each immortal’s power can be transferred to a vessel (法器) that can bestow life or destroy evil. Together, these eight vessels are called the “Covert Eight Immortals” (暗八仙). Most of them are said to have been born in the Tang or Shang Dynasty. They are revered by the Taoists and are also a popular element in the secular Chinese culture. They are said to live on a group of five islands in the Bohai Sea, which includes Mount Penglai.

The Immortals are:

In literature before the 1970s, they were sometimes translated as the Eight Genies. First described in the Yuan Dynasty, they were probably named after the Eight Immortal Scholars of the Han.

—subham —

மோசஸ் உடைத்த தங்க விக்ரகம்! (Post No.7023)


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 27 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-41 am

Post No. 7023

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

தசரதன் கடிதங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › தசரதன்-கடித…

1.      

12 Oct 2014 – அமர்னா கடிதங்கள் ( தசரதன் எழுதிய 13 கடிதங்கள் ) 2.பொகஸ்கோய் கல்வெட்டு 3.மிட்டன்னிய நாகரீகம் 4.கிக்குலி எழுதிய குதிரைப் …



—subham–

ஊதுபத்தி ஏற்றாதீர்கள்! (Post No.7022)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 27 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-06 am

Post No. 7022

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

–subham —

MY VISIT TO SELAIYUR SKANDASHRAMAM TEMPLE (Post No.7007)

Sri Santhanantha Swamiji

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-59

Post No. 7007


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

On 6th September 2019, I visited Sri Skandashramam Temple in Selaiyur, Chennai-73

The temple is situated near busy roads of East Tambaram. But inside the temple one could see a serene atmosphere. When I went there,  ladies were reciting slokas in the Bhuvaneshwari shrine. Since photography inside the temple is prohibited, I bought two books and reproduce some pictures here from the books. For some reason Sri Shanthanantha of Pudukkottai installed unusual and huge idols in two or three places in Tamil Nadu. He installed peaceful Bhuvaneswari idol along with the ferocious Ugra Prathyankara Devi and Sri Sarabeswarar. The reason for this, I believe, is to protect Hinduism and India from ‘adharmic’ (anti social, anti religious) forces. Because he used to tell us that he was doing all the Yajnas for the welfare of the society. Since Swamiji Krishna of Ayakkudi (Tenkasi), told us that he had seen him doing Tapas deep inside forest we believed in him completely.

Our family was associated with Sri Santhanantha from his early pubic appearance. When he organised Sahasra Chandi Mahayajnam in Pudukkottai, for the welfare of the world in 1963, my father and News Editor Sri V Santanam gave huge publicity in Dinamani News paper. I and my brother were students at the time and we ran the book shop at Adi Vethi of Sri Meenakshi Sundareswara Temple, Madurai where Sri Anantha Rama Deekshitar was doing Ramayana Upanyasa/discourse to raise funds for the Yajna. If I remember correct it was done for 40 days.

Whenever Sri Santhananda Swamigal visited Madurai, he used to visit my father and had Bikshai at our house. He was very tall and had rolling matted locks. He looked like a Vedic Rishi. His hair used to touch the ground. His cheeks were rosy like a young woman. He had Tejas (divine light, fire and brightness)  in his face. I have met so many matted lock swamijis, but I have never seen any one with such Tejas.

In his early days, he took three handful of food only. When my mother cooked all sorts of delicious dishes he just asked her to mix all together and give only three handful of food. When my mother did thi,s tears rolled down her cheeks. When she came out of the kitchen she told us that in spite of her serious , laborious, careful cooking, he just had thee handfuls only. He did mantra Upadesa to us. I met him again when I went to India in 2000 or 2001. Since he was very ill at that time he came out for a minute and accepted my pranams and offerings.

Since I visited Bhuvaneswari temple then, I made it a point to visit Skandashramam Temple in Chennai this time.

Following pictures will show what he established in Pudukkottai and Selaiyur, Chennai.

Full address of Selaiyur Temple

Chennai Om Sri Skandashramam

Kambar street,

Mahalakshmi Nagar,

Selaiyur post

Chennai – 600 073

Tel. 2229 0134, 2229 3388, 9444629570

E mail cossct@rediffmail.com

http://www.skandasramam.com

Sri Ugra Pathyankara Devi

–subham– lokas samasta sukino bhavanu —

உடுப்பி கிருஷ்ணன் பற்றிய அதிசயத் தகவல்கள் (Post No.6985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 11-53 AM

Post No. 6985

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக் கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன்  சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும் தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம் ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.

உங்களில் பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.

உடுப்பி எங்கே உள்ளது?

அரபிக் கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.

உடுப்பியில் என்ன பிரசித்தமானது?

த்வைத மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.

நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.

கோவிலுக்குச் சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக் கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள் புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது தெரியவந்தது. ‘ரிலே ரேஸ்’ (relay race) போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர் போலும்.

கோவிலுக்குள் போனால், கிருபானந்த  வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான கூட்டம்.

15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.

என்ன விநோதம்?

ஒவ்வொரு கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,  பழக்க வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும் அது உண்டு.

உடுப்பியில் ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர் கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள் எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.

இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.

கப்பல் கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக விளங்குகிறது..

மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில்  ஏற்கின்றனர்.

உடுப்பியைச் சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல் நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம் உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும் பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும் விருந்து அளிக்கும்.

கடைசியாக உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

கண்ணனின் நாமத்துக்கு  எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!

XXX SUBHAM XXX

கேட்பதைக் கொடுக்கும் காமதேனு! (Post No.6981)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 18 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –14-44

Post No. 6981

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

ச.நாகராஜன்

மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும் சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.

செல்வம் சேர வேண்டும், நல்ல உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.

அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும் கூட!

காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத் தரும் அற்புதமான தேவதை!

அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.

காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம்.

காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.

முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச் சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக இருப்பாய் என்று கூறி அருளினார்.

    பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து வருகின்றன.

         வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.

     உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால் நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன் ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.

    அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.

     காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

    பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :

பசுவின் பற்களில் (புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும்,  நாக்கில் சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின்  முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.

    நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும்,  லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.

   எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.

     அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”

பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது.

பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.

    குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.

காமதேனுவின் ஆலயங்கள் பல.

நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.

ஒரு முறை இமயமலையில் மான் போல வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.

பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான் ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.

இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப் பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.

காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.

அதன் வாலும் புனிதமானதே என்பதால் பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.

பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து. ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத் தலங்களாகும்.

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம் பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின் பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு அனுப்பியது.

   பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.

   எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.

விசுவாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.

கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர் எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட தலமாகும்.

   இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.

    காமதேனு வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம் ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள  இது தேவ கன்னியரும், காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.

   இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.

   இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை. இவற்றை விரிப்பின் பெருகும்.

    இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.

   வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும் காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.

    அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும் தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத் தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.

   கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.

   அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.

    இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின் அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.

    காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith),  காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.

    இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச் செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின் இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.

    பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம். நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

    பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.

     பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத் தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம் பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும் கதிரியக்கத்தை உண்டாக்குபவை.

    ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும் கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.

    ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும் தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.

    காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும், தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப் பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!

***

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்! (Post No.6948)

This image has an empty alt attribute; its file name is ganesh-gold.jpg

WRITTEN  by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-45 AM

Post No. 6948

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

முக்கிய தினங்கள் : விநாயக சதுர்த்தி : 2-9-2019 ரிஷி பஞ்சமி 3-9-2019

மாலை மலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகெங்கும் விநாயகர்!

விநாயக சதுர்த்தி வழிபாடு மிகுந்த கோலாகலத்துடன் காஷ்மீரிலிருது கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகை.

நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7வது வெண்பா,

“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.

இதில் ‘ஒரு கை  முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.

இன்றோ தமிழ் நாட்டில் பிள்ளையார் பட்டியில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருக்கும் பிள்ளையாரது வழிபாடும் பெயர்களும் நமக்குப் பிரமிப்பை ஊட்டுகின்றன.

திபெத்தில் அவர் ட்ஸோக்ஸ்டாக். பர்மாவில் அவர் மஹா பியன். மங்கோலியாவில் அவர் பெயர் டாட்கரௌர் காக்ஹன். கம்போடியாவிலோ அவர் ப்ரஹ் கெனெஸ் என வழிபடப்படுகிறார். ஜப்பானியர் அவர் வினாயக்ஸா அல்லது ஷோடென் என்று வழிபடுகின்றனர்.

பசிபிக் மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் கோனா கடற்கரையில் ஒரு சிறிய விநாயகர் விக்ரஹத்தை பக்தர்கள் கும்பிட்டு வருகின்றனர்.

உலகெங்கும் எதை ஆரம்பிக்கும் முன்னரும் விநாயகர் வழிபாடு தான்!

விநாயகரை வழிபடக் காரணம்!

இப்படி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னர் உலகெங்கும் முதல் தெய்வமாக  விநாயகரை வழிபடக் காரணம் என்ன?

எல்லா தெய்வங்களின் சிறந்த அம்சங்களின் பகுதி விநாயகரிடம் இருக்கின்றன.

அவரைத் தொழும்போது எல்லா தெய்வங்களும் திருப்தியுடன் அருளாசியை- அனுக்ரஹத்தை- வழங்குவதால் தான் தடை போக்கும் விக்னேஸ்வரராக அவர் மிளிர்கிறார். இது ஒரு  முக்கியமான இரகசியம்.

இப்படி அனைத்து தெய்வங்களின் அபார வலிமைகளைக் கொண்ட அவரை கணபதியாக – கணங்களின் அதிபதியாக சிவபிரான் ஆக்கியருளினார்.

‘பிடிச்சு வச்சா பிள்ளையாரு’ என்ற மொழிப்படி மஞ்சள் பொடியில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அங்கே அவர் எழுந்தருளுகிறார்.    

  களிமண்ணில் கூட அவர் திருவுருவம் படைக்கப்பட்டால் ஏற்கிறார்; எளியவர் தெய்வம் ஆகிறார்.

   அருகம்புல், எருக்கம் மாலை, மோதகம், கொழுக்கட்டை என நைவேத்தியத்தில் கூட அனைவரும் மனமுவந்து எளிதில் அளிக்கக்கூடிய பொருள்களே அவர் உகக்கும் பொருள்கள்.

     சிவனுக்கும் உமைக்கும் செல்லப் பிள்ளையானதால் பிள்ளையார் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவபிரான் ஒவ்வொரு சமயத்தில் அடியார் நிமித்தம் ஒவ்வொரு பெயரைக் கொண்டது போலவே, தன்னுடைய அடியார் நிமித்தம் வக்கிரதுண்ட விநாயகர், சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்கினராஜர், மயூரேசர், அபரமயூரேசர்,பாலசந்திரர், தூமகேது, கணபதி, மகோற்கடர், உந்தி விநாயகர், வல்லப விநாயகர் என இப்படி பன்னிரெண்டு மூர்த்தங்களைக் கொண்டிருக்கிறார். இப்பெயர்கள் விளக்கும் வரலாறுகள் அற்புதமானவை.

  விநாயகன் என்ற சொல்லின் சப்தார்த்தம் மூன்று 1) துட்டர்களை அடக்குபவன் 2) இடையூறுகளை நீக்குபவன் 3) சுந்தரமுள்ளவன்.

   வடலூர் வள்ளலார் பெருமான் கணபதி பூஜை செய்யும் விதத்தை நன்கு விளக்கி, கணபதியைத் துதி செய்பவன் அடையும் சிறந்த பேறுகள் இரண்டு என விளக்குகிறார் : 1) கணபதியை பூஜிப்பதால் பரமாசாரியர் கிடைப்பார் 2) சிவானுபவம் சித்திக்கும். நல்ல குரு வந்து வழிகாட்டி பேரின்பம் அடையச் செய்வார் என்பது அவரது அருள் வாக்கு.

கபிலர் கூறும் இரகசியங்கள்!

   சங்க கால மகானாக விளங்கிய கபில தேவ நாயனார் திரு இரட்டை மணி மாலை என்ற தனது அற்புதமான நூலில் பிரமிக்க வைக்கும் இரகசியங்களை விண்டுரைக்கிறார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரு செய்யுளை மட்டும் இங்கு பார்க்கலாம்:

திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால்  வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை

இந்தப் பாடல் சாதாரணப் பாடல் அல்ல.

“நுட்பம் என்பது நுழைபொருள் யாவும்

திட்ப மாகத் தெளியக் கூறல்” என்ற விதியின் படி ஏராளமான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள பாடல்.

 ஐஸ்வரியத்தைப் பெருக்கும்.

தொடங்கிய தொழில்களைத் தடையின்றி நிறைவேறச் செய்யும்.

நல்ல செல்வாக்கைப் பரவச் செய்யும்.பெருமையை அபிவிருத்தி அடையச் செய்யும்.

சாரூப பதவியை அளிக்கும்.

இப்படி தன்னை வணங்கியோருக்கு அனைத்தையும் அளிப்பதனால் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மிகுந்த விருப்பத்துடன், கணபதியைத் தங்கள் தங்கள் கைகளை கூப்பி வணங்குவர் என்பது பாடலின் பொருள்.

    ஆனால் திரு என்ற மங்கலச் சொல்லை முதலில் வைத்து கை கூட்டும் என்பதால் செல்வம் வந்தாலும் கூட, செய்ய முனையும் தொழில் சீருடன் வெற்றி பெற வேண்டும் என்பதையும், செஞ்சொல் என்பதால் செல்வாக்கும் அத்துடன் சேர வேண்டும் என்பதையும் பீடு என்பதால் அதில் பெருமையும் கூடவே சேர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, இந்த நான்கின் பயனை உருவாக்கும் தெய்வம் விநாயகரே என்பதையும் வலியுறுத்துகிறார் கபிலர்!

    சிறிது காலம் வாழ்ந்து மறையும் மானுடர் ஒரு புறம் இருக்க தேவர்களும் கூட காதலுடன் கை கூப்பித் தொழும் தெய்வம் விநாயகர் என்பதையும் சொல்லி அவர் வியக்கிறார்.

     அத்துடன் திரு ஆக்கும் என்பதை திரு, வாக்கு என்று பிரித்தால் மேலும் ஒரு பொருள் வரும்; அதே போல கூட்டும் பெருக்கும் என்ற சொற்களை மற்ற சொற்களுடன் சேர்த்துப் பார்த்து பல்வேறு சிறப்பு அர்த்தங்களையும் காணலாம்.

   அத்தோடு அனைவருக்கும் எப்பொழுதும் உற்சாகத்தைத் தருவதால் அவன் ‘களியான்’. அதிசயிக்கத் தக்க பிரகாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் ‘ செம்பொன் ஒளியான்’. பூவுலகில் வாழும் அனைவருக்கும் வித்தியாசமின்றி அருள் பாலித்து அனைத்தையும் வழங்குவதால் அவன் ‘பாரோர்க்கு உதவும் அளியான்’!

    இப்படிப்பட்டவனின் அடியைப் பற்றுவது நல்லார் கடமை எனக் கூறி மனிதர்களின் தலையாய கடமையை கபில தேவ நாயனார் விண்டுரைக்கிறார்.

பிரபஞ்சமே ஆற்றல், அதிர்வு, அலைஎண் மயம் தான்!

    ஆனைமுகத்தோன் என்று கூறி ஓங்காரத்தை நினைவு படுத்தி அவன் ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன் என்று முன்னோர்கள் கூறும் போது அதில் அதிசயமான பேருண்மையை வைத்திருக்கின்றனர். அவனை வணங்கினால் ஓம்கார சக்தியைப் பெறலாம் என்பதே அந்த உண்மை!

    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நிகோலா டெஸ்லா (தோற்றம் 10-7-1856 மறைவு 7-1-1943) என்ற பெரிய  விஞ்ஞானி, “பிரபஞ்சத்தின் ரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் ஆற்றல் அலைஎண், அதிர்வு என்ற அடிப்படையில் பாருங்கள்” (If you want to find the secrets of the Universe, think in terms of energy, frequency and vibration – Nikola Tesla) என்று வியக்கத்தக்க விதத்தில் ஒரு வரையறுப்பை நிர்ணயிக்கிறார்.

பெரும் ஆற்றலை உருவாக்கி ஒரு நொடிப் பொழுதில் பெரும் கட்டிடத்தை அழித்த, வல்லமை மிக்க விஞ்ஞானியான இவர் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பின் ரகசியத்தைக் கூறினால் தீயோர் அதை உலக அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடும் என எண்ணி அதைக் கூற மறுத்து விட்டார்.

   உலகத்தின் ஆதி நாதமாக அமைவது ஓம் என நம் முன்னோர்கள் உள்ளுணர்வால் கண்டு அதற்கு உரிய தெய்வமாக விநாயகனை ‘ஓம்’கார நாயகன் எனப் போற்றுகின்றனர்.

 அறிவியல் விளைவித்த அற்புதமாக விண்ணில் பறந்த நாஸா ஏவிய சாடலைட் விண்ணில் இடையறாது ஒலிக்கும் ஒலியைப் பதிவு செய்துள்ளது. அது ஓம்கார நாதமாகவும், கூட்டிசை (தேவாலயத்தில் இசைக்கப்படும் கூட்டிசை அல்லது பஜனையின் போது அனைவரும் சேர்ந்து பாடும் இசையொலி) போலவும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிசயத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஓங்காரம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விதங்களில் ஓதப்படுவதை எடுத்துரைக்கும்   அன்னிபெஸண்ட் அம்மையார் ஒவ்வொன்றிற்கும் அபூர்வப் பலன்கள் உண்டு என அதிசயித்துக் கூறுகிறார்.

வானில் விநாயகர் தோற்றம்!

  இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளின் உருவம் பெரு வயிறுடனும் தும்பிக்கையுடனும் இருக்க அவரது வாகனமாக மூஞ்சூறு அமைகிறது.  இவர் பிறந்த நாளை ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாம் கொண்டாடுகிறோம். இதன் காரணம் என்ன? இதில் பொதிந்துள்ள வானவியல் இரகசியம் பிரம்மாண்டமானது.

   செப்டம்பர் துவக்கத்தில் தொடு வானத்தில் வட திசையில் ஊர்ஸா மேஜர் (Ursa Major) எனப்படும் சப்தரிஷி மண்டலம்  எழுகிறது. காஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர்,ஜமதக்னி, பாரத்வாஜர் என்ற ஏழு  பிரகாசமான நட்சத்திரங்கள் பூமியின் சுழற்சியால் தொடுவானில் காணப்படுகின்றன. ஆண்டில் முதன் முதலாகத் தோன்றப்படும் இந்த நாளை வானவியலார் ஹெலிகல் ரைஸிங் (Helical Rising) அல்லது வான்பொருள் எழுச்சி என்று கூறுகின்றனர். இதை ரிஷி பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். அன்று ஆண்களும் பெண்களும் புனித நீராடி சப்த ரிஷிகளைத் துதித்து தூய்மை பெறுகின்றனர்.

இதற்கு முந்தைய நாள் விநாயக சதுர்த்தியாக (அதாவது பஞ்சமிக்கு முதல் நாளாக அமையும் சதுர்த்தி நாளன்று) கொண்டாடப்படுகிறது.

அன்று வானில் தோன்றும் ‘கணேச நட்சத்திரங்களைக்’ கற்பனைக் கோடுகளால் இணைத்தால் தோன்றுவது பெரு வயிறும் தும்பிக்கையும் கொண்ட விநாயகர் திரு உருவம். அவர் அமர்ந்திருப்பது மூஞ்சூறு போன்ற உருவத்தின் மேல்! இதையே விநாயகர் பிறப்பாக நாம் கொண்டாடுகிறோம்.

அந்த ஒளியிலும் அதிர்விலும் (Vibration) ஆற்றலிலும் (Energy) அலைஎண்ணிலும் (Frequency) நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதன் சக்தியைப் பெறுகின்ற நாளாக அது அமைகிறது. ஓம் எனும் மந்திர ஒலி தரும் ஆற்றலையும் அன்று நாம் பெறுகிறோம்.

வானில் அமையும் ராசி, நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுத் தொகுத்தவர் வானியல் அறிஞரான ஏ.பி.கிரிமால்டி (A.B. Grimaldi) என்பவர். (A Catalogue of Zodiacs and Planisheres published by M/s Gall and Inglis of London). இவர் தனது நட்சத்திரத் தொகுப்பில் விருச்சிகம், துலாம் (தராசு) போன்ற பல்வேறு ராசிகளின் உருவ அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதில் யானை உருவமும் அதன் கீழ் இருக்கும் எலி உருவமும் விநாயகரையும் மூஞ்சூறையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது வியப்புற்குரியது.

இதைக் கற்பனைக் கோடுகளால் நட்சத்திரங்களை இணக்கும் போது தோன்றும் உருவத்தைப் படத்தில் காணலாம். வானியல் நிபுணருடன் இணைந்து அவர் உதவியுடன் வானத்திலும் பார்க்கலாம்!

தோப்புக்கரணம் போடுவதன் பயன்!

அடுத்து விநாயகரை வணங்கும்போதெல்லாம் இரு கைகளையும் மாற்றி வலது இடது காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதோடு நெற்றிப் பொட்டுகளையும் குட்டிக் கொள்கிறோம்.

இந்தப் பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சொல்லி வந்தவர் வியக்கும்படி அறிவியல் ஆய்வுகள் இதன் நன்மைகளை இப்போது எடுத்து வைக்கின்றன.

யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளைத் தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

இந்தப் பயிற்சியைச் செய்து  முடித்த பின்னர் எடுக்கப்பட்ட இசிஜி (எலக்ட்ரோ என்செபலோக்ராஃபி) முடிவுகளை டாக்டர் ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கிணையச் செய்கிறது.

இந்தப் பயிற்சியைப் புகழ்ந்து அவர் மேலும் கூறுகையில் மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது.

இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இதை இந்த காது மடல் பிடிக்கும் எளிய் பயிற்சி உறுதிப்படுத்துகிறது என்று கூறிப் புகழ்கிறார்.

    லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), “பாதங்களை நேராக வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொண்டு வலது காதை இடது கைக்கட்டை விரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும்.இதேபோல இடது காதை வலது கைக் கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி உட்கார்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் தொடர்ந்து திருப்பித் திருப்பிச் செய்தால் கூரிய மூளை ஆற்றலைப் பெறலாம்” என்கிறார்.

    நமது தோப்புக்கரணத்தை அப்படியே விவரிக்கும் இந்த அறிவியல் ஆய்வு நமது முன்னோர்களின் கூரிய அறிவுத் திறனையும் பிள்ளையார் வழிபாட்டையும் எண்ணி வியக்க வைக்கிறது.

    பிரபஞ்ச ஆற்றலையும் உடல் மற்றும் உள்ள ஆற்றலையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விநாயக சதுர்த்தி பூஜை எளியவரும் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆம், “பிடிச்சு வச்சா பிள்ளையாரு” தான்!

  அதிசய ஆற்றலைத் தரும் விநாயகரை வழிபடுவோம். வானத்து இரகசியங்களை வசமாக்குவோம்!

குறிப்பு : நாஸா பதிவு செய்த ஓம் பற்றிய பதிவை https://www.youtube.com/watch?v=hFdWxnPCvSs

என்ற தொடுப்பில் கேட்கலாம்.

–subham–

மன்னர் வருகிறார்! கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு; மதுரையில் 3 நாள் தங்கல் (Post 6947)

WRITTEN  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-50

Post No. 6947

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு (Post No.6915)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-02 am

Post No. 6915

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

மஹாபாரத ரகசியம் – 14 ஜன்மங்கள்,6 பேர் வாழ்நாள் வீணானவை (Post No..6690)

WRITTEN by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 28 JULY 2019


British Summer Time uploaded in London – 6-47 am

Post No. 6690


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் பல ரகசியங்களில் இவையும் முக்கியமான ரகசியங்களாக விளங்குகின்றன.

****