சதுரங்க பந்தம் -2

chaturan

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் -2
ச.நாகராஜன்
Post No.1227; Dated 11th August 2014

சதுரங்க பந்தம் அமைப்பதே ஒரு கடினமான விஷயம். அதில் இன்னும் பல அற்புதங்களைச் செய்து காண்பித்து ஒரு செய்யுளை அமைப்பது என்றால் பிரமிப்பின் உச்சிக்குத் தான் செல்ல முடியும்.

1911ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான நூல் நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து.

“நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து. விளக்கக் குறிப்புரை சித்திர கோட்டங்களுடன் – நகுலேச ஸ்தோத்திரம்” என்ற தலைப்புடன் வெளிவந்துள்ள இதை இயற்றியவர் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதிப் பிரசித்த நோத்தாரி மயிலிட்டி க.மயில்வாகனப் பிள்ளை ஆவார். (இதை மறுபதிப்பாக தேன் பதிப்பகம், மூன்றாவது தெரு, சௌமியா நகர், மேடவாக்கம், சென்னை – 601302, 2004ஆம் ஆண்டு வெளியிட்டு ஒரு போற்றத்தகும் செயலைச் செய்துள்ளது). இந்நூலின் நகலை முனைவர் கி.முப்பால் அணி வழங்க ந;கருணாநிதி பேருதவி புரிய நூலைக் கொண்டு வருவதாக இதன் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்).

செய்யுள் இது தான்:-

நீதா சதாபயனே நீபலர்க்குஞ் சாலாமயற்

றீதார் மனமகற்றச் சீர்நகுலை – யேகலாற்கொன்

னீடார் மிடற்றகலா நீலா கமலபதா

நீதா பலமகலா நீ

இந்த சதுரங்க பந்தத்தை விளக்கும் விதமாக நூல் ஆசிரியர் தரும் விளக்கம் இது:-

“நிரைக்கு எவ்வெட்டாக எட்டு நிரை கொண்ட அறுபத்துநான்கு அறைகளிலே நான்கு பக்கத்து ஈற்று நிரைகளிலு நான்காம் அடி தோன்ற எழுத்துக்கள் பொதுவின்றி அமையப் பாடுவது.”

செய்யுளில் நான்கு பக்கங்களிலும் நீதா பலமகலா நீ என்ற நான்காம் அடி அமையப் பெற்றுள்ளது. (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது)

bandham 2

பாடலை எப்படி சதுரங்க பந்தத்தில் படிப்பது? 1, 2, 10, 9, 17, 18, 19, 11, 3, 4, 12, 20, 28, 27, 26, 25, 33, 34, 35, 36, 37, 29, 21, 13, 5, 6, 14, 22, 30, 38, 46, 45, 44, 43, 42, 41, 49. 50. 51, 52, 53, 54, 55, 47, 39, 31, 23, 15, 7, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 63, 62, 61, 60, 59, 58, 57 என்ற கட்டங்கள் (சதுரங்க அறைகள்) வழியே சென்றால் பாடலைப் படிக்கலாம்.

பாடலின் பொருளை நூலாசிரியர் இப்படி விளக்குகிறார்:-

கொன் நீடு ஆர் மிடற்று அகலா நீலா – பெருமை நீடுதல் பொருந்திய கண்டத்தினிடத்தே நீங்காத நஞ்சக் கறையை உடையவரே!
கமலபதா – தாமரை மலர் போன்ற பாதங்களை உடையவரே!
நீதா – நீதியை உடையவரே!

நீ பலர்க்கும் சால மயல் தீது ஆர் மனம் அகற்றச் சீர் நகுலை ஏகலால் – தேவரீர் பலர்க்கு (அவர்களுடைய) மனத்திற் பொருந்திய மயக்கமாகிய தீமையை மிகவும் நீக்கும் பொருட்டுச் சிறப்பாகிய நகுலேச்சரத்தின் கண் எழுந்தருளலால்

பலம் அகலா நீ – பேறு நீங்காத தேவரீரே!

நீ சதா பயனே தா – தேவரீர் எப்பொழுதும் பேற்றினைத் தந்தருள்க

இந்த சதுரங்க பந்தத்தில் அமைந்துள்ள பல்வேறு சிறப்புக்களை படித்தும் பார்த்தும் மகிழலாம். தமிழ் எத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி என்பதை அறிந்து பெருமிதப் படலாம்.

*******

துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

banu karnan

துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1224; தேதி: 10 ஆகஸ்ட் 2014.

சூதாட்டம் பற்றி இரண்டு சுவையான கதைகள் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் உள்ளன.

துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் ஒரு நாள் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். பாதி ஆட்டத்தில் திடீரென்று பானுமதி எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் பயந்து ஓடப் பார்க்கிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சி செய்தான். கைதவறி பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையில் கர்ணன் கை சிக்கவே மேகலையில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. பானுமதி திடீரென எழுந்ததற்குக் காரணம் அவளது கணவன் துரியோதனன் உள்ளே நுழைந்ததாகும். துரியோதணன் கண் முன்னால், முத்து மேகலை சிதறவே இருவரும் தலை குனிந்து நின்றனர்.

அடுத்தது என்ன நிகழுமோ என்று பானுமதியும் கர்ணனும் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், துரியோதனன் “ எடுக்கவோ கோக்கவோ என்றான். இந்த முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா? என்று அன்போடு வினவுகிறான்.

banu karnan 2

கர்ணனின் நட்பைக் கடவுளுடன் கொண்ட நட்பாகக் கருதுபவன் துரியோதனன். கர்ணனுடைய ஒழுக்கத்தின் மீது அவனுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. கர்ணனே வியப்படையும் அளவுக்கு அவன் நடந்து கொண்டான. அதனால் அல்லவோ, அந்தப்புரத்தில் தன் மனைவியுடன் மாற்றான் ஒருவனை சொக்கட்டான் ஆட அனுமதித்தான். கர்ணனோ துரியோதணனுக்கும் மேலே ஒரு படி சென்று நட்புக்கு இலக்கணம் வகுத்தவன்.

கர்ணன் தனது மூத்த மகன் என்று கூறி குந்தி சொன்ன போதும் கட்சி மாற மறுத்தான் கர்ணன். அப்போது அவன் கூறிய சம்பவம் தான் மேலே கூறப்பட்ட முத்து மேகலை சம்பவம். இதைச் சொல்லி அம்மா! இப்படிப் பட்ட துரியோதணனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே என் வாழ்வின் லட்சியம் என்று சொல்லிவிடுகிறான்.

வில்லிபாரதத்தில் வரும் இந்தக் காட்சியைப் படம்பிடித்துக் காட்டும் பாடல் இதோ:–

sokkattan

மடந்தை பொன் திருமேகலை மணிஉகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடந்தனில் புரிந்தே நானயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவோ என்றான்;
திடம்படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனை சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்குகு இனிப் புகழும், கருமமும் தர்மமும்.
—வில்லி பாரதம்

புறநானூற்றில் பிராமணன் – க்ஷத்ரியன் மோதல்

புறநானூற்றில் பிராமணப் புலவனும் – க்ஷத்ரியனனான சோழ மன்னனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். ஒரு காய் உருண்டோடியதால் சோழ மன்னன் கோபம் கொண்டான். உடனே சோழ மன்னன், சொக்கட்டான் காய்களைப் பிராமணப் புலவன் மீது வீசி எறிந்தான். உடனே புலவர் உன்னுடைய குலத்தில் “பார்ப்பனர் நோவன செய்யலர்” என்று நயமாகக் கூறினார். உடனே அவன் வெட்கித் தலை குனிந்தான்.

புறநானூற்றுப் பாடல் 43 இந்த சம்பவத்தை விளக்குகிறது. சோழன் நலங்கிள்ளி யின் தம்பி மாவளத்தானும் பார்ப்பனப் புலவர் தாமப் பல் கண்ணனாரும் வட்டு விளயாடுகையில் இது நடந்தது.
((வட்டு ஆடுதல் பற்றி அதிக தகல் இல்லை. இதை ஒரு வகை சொக்காட்டான் ஆட்டம் என்றே நான் கருதுகிறேன்)).
mahabharata-game-of-dice

புலவர் தாமப்பல் கண்ணனார் கூறுகிறார்:
கதிரவனைச் சுற்றி வரும் முனிவர்களும் வியப்படையும் வண்ணம் புறாவுக்காக உயிர்தர முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த தேர்வண் கிள்ளியின் தம்பியே! உன் பிறப்பில் ஐயம் கொள்கிறேன். ஆத்திமாலை சூடிய சோழ மன்னன் எவரும் பிராமணர் வெறுக்கும் செயலைச் செய்யத் துணியார். நீ எப்படிச் செய்தாய்? என்று நான் வெகுண்டேன். இப்படி நான் சொன்னவுடனே உடனே என் மீது கோபிக்காமல் வெட்கப்பட்டாய். சோழர்குடியின் பெருமையை நிலை நாட்டிவிட்டாய். இப்போது நானே தவ்று செய்தேன் என்று தோன்றுகிறது. காவிரி ஆற்றின் மணலை விட நீ நீண்ட காலம் வாழ்வாயாக என்று தாமப்பல் கண்ணனார் வாழ்த்துகிறார்:

ஆர்புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் (புறம் 43)

மேற்கண்ட இரண்டு கதைகளும் விளக்கும் கருத்துகள் அற்புதமானவை.
–சுபம்–

தமிழ் என்னும் விந்தை!

love-poems-do-they-still-exist-14

சதுரங்க பந்தம் -1
ச.நாகராஜன்
Post No 1223; Dated 9th August 2014.

சதுரங்க துரக கதி பந்தம்
உலகில் உள்ள சில மொழிகளில் மட்டுமே சித்திர கவிகளை அமைக்க முடியும். தமிழில் அற்புதமான சித்திர கவிகள் ஏராளம் உண்டு. இவற்றில் ஒன்று சதுரங்க பந்தம். இந்த சதுரங்க பந்தங்களிலும் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று சதுரங்க துரக கதி பந்தம். சதுரங்க விளையாட்டில் ஒரு குதிரை எப்படித் தாவி தாவி கட்டம் விட்டுக் கட்டம் மாறுமோ அது போல அந்தந்த கட்டங்களில் சொற்கள் வருமாறு அமைக்க வேண்டும். அதே சமயம் கவிதையின் இலக்கணமும் மீறக் கூடாது; நல்ல பொருளும் அமைந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான விதிகளுக்கு உட்பட்டு கவிதை இயற்றுவது மிகவும் கடினம். பெரும் தமிழ்ப் புலவரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இப்படிப்பட்ட பந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர் இவர்.
சித்திர கவி விளக்கம் என்ற அரிய தமிழ் நூலைப் படைத்து அதில் 22 வகை சித்திர கவிகளை விளக்கியுள்ளார். அதில் இந்த பந்தமும் ஒன்று.

சதுரங்க துரக கதி பந்தப் பாடல் இது தான்:-

தேரினெந் நெஞ்ச நீ திரித லென்கொலோ

நாரொடும் வியன்றமி ணயந்து தூவிய

காரெனும் பரிதிமால் கணங்கொள் பூவரா

ரீரடி யேழைசூட் டியையப் போற்றுவாம்

இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்களைக் குதிரை பாயும் போக்கில் அமைக்க ஆரம்பித்தால் அது கீழ்க்கண்ட விதமாக சதுரங்கத்தின் 64 கட்டங்களில் அமையும்.

bandham chathur

சதுரங்க விளையாட்டில் குதிரை எப்படிப் பாயும் என்பதை அறியாதவர்கள் கீழ்க்கண்ட கட்டங்களில் வரிசையாகப் பாடலின் எழுத்துக்கள் அமைவதைக் கண்டு மகிழலாம்:-

1, 11, 28, 34, 17, 2, 19, 4
21, 15, 5, 20, 10, 25, 35, 29
39, 56, 62, 52, 42, 57, 51, 41
58, 43, 49, 59, 53, 38, 32, 47,
64, 54, 37, 31, 48, 63, 46, 61
44, 50, 60, 45, 55, 40, 30, 36
26, 9, 3, 13, 23, 8, 14, 24
7, 22, 16, 6, 12, 27, 33, 18

மிகவும் கஷ்டமான இந்தப் பாடல் அமைப்பில் பரிதிமால் கலைஞர் இன்னும் இரண்டு அரிய விஷயங்களை அமைத்துள்ளார். கட்டங்களின் வலது கோடியிலிருந்து குறுக்காக இடது கோடி வரை உள்ள எட்டு கட்டங்களில் (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது) தனது பெயரான சூரிய நாராயணன் என்பதை அமைத்துள்ளார். அத்தோடு பாடலில் தனது தமிழாக்கப் பெயரான ‘பரிதிமால்’ என்பதை மூன்றாம் வரியில் அமைத்துள்ளார்!
பாடலின் பொருளை அவரே தனது சித்திர கவி விளக்கம் என்ற நூலில் கொடுத்துள்ளார். 1939ஆம் ஆண்டு இந்த நூல் வெளியானது.

BasicShapepoetry

அவர் விளக்கும் பொருளைப் பார்ப்போம்:-
தேரின் – ஆராயுமிடத்து
எம் நெஞ்சம் – எம் நெஞ்சமே!
நீ திரிதல் என் கொலோ – நீ கண்ட இடங்கள்தோறும் சென்று திரிதல் யாது கருதியோ?
நாரொடும் – அன்போடு
வியன் தமிழ் நயந்து தூவிய – (மாணாக்கர்க்கு) பெருமை வாய்ந்த தமிழினை விரும்பிச் சொரியும் (போதிக்கும்)
கார் எனும் பரிதி மால் – மேகத்தினை ஒத்த சூரியநாராயணப் பெயர் கொண்ட ஆசிரியனது
கணம் கொள் பூவர் ஆர் இரண்டு அடி – கூட்டமாகப் பொருந்திய உபய பாதங்களும்
ஏழை சூட்டு இயைய போற்றுவாம் – எளியேமாகிய எமது உச்சியிற் பொருந்துமாறு அவற்றை வணங்குவோம்

“பலவேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியிற் கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலில், நெஞ்சமே! நீ பல விஷயங்களிலும் போய்ப் பயனின்றித் திரிவதை விட்டு எம்மோடு கூட வணங்க வருவாய்” என்று நெஞ்சை விளித்துக் கூறியதாம் இச்செய்யுள்.
என் கொல் ஓ! – கொல், ஓ இரண்டும் அசை. தமிழ் நயந்து என்பது தமிணயந்து என்று ஆனது. வீரசோழியம் சந்திப்படலத்து “ஐம்மூன்றதாம்” என்ற கட்டளைக் கலித்துறையில், “மெய்ம்மாண்ப தாநவ்வரின் முன்னழிந்து பினிக்கணவ்வாம்” என்ற விதியால் அமைந்தது. அன்றி மரூஉ மொழியுமாம். பூவர் – மொழி இறுதிப் போலி

இப்படி விளக்கவுரையையும் அவரே தந்துள்ளார்.
அத்தோடு வல்லி பரிணய நாடகத்தில் இது ஆசிரிய வணக்கச் செய்யுள் என்ற குறிப்பையும் தருகிறார்.

அற்புதமான கவிதையைப் படைத்த தமிழ்ப் புலவரைப் போற்றுவோம்; சதுரங்க பந்தம் கண்டு வியப்போம்!

***********

தமிழ்ப் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி?

yaha1

ஆராய்ச்சிக் கட்டுரை : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1219; தேதி 7 ஆகஸ்ட் 2014

சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்தில் ஒரு அதிசய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் இரண்டு இடங்களில் சொல்லிச் சொல்லி வியப்படைகிறார்.

யவனர்களைப் பிடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, (மொட்டை அடித்து) தலையில் நெய்யை ஊற்றி அவமானப் படுத்தியவன் இமயம் வரை சென்று விற்கொடி நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுடைய தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன். இவன் மீது கவிபாடியவர் பாலைக் கௌதமனார். அவன் 25 ஆண்டுகள் அரசாட்சி செய்தான்.

பல்யானை செல்கெழுகுட்டுவன் பற்றிப் பதிற்றுப் பத்து சொல்கிறது:

ati rudra
Sri Sathya Sai Baba performing Ati Rudra Maha Yajna

அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை வரிசையாக யானைகளை நிறுத்தி வைத்து இரு கடல் நீரையும் ஒரு பகலில் நீராடியவன். அகப்பா என்னும் கோட்டையைப் பிடித்து ஒரே பகலில் தீயிட்டுக் கொளுத்தியவன். அயிரை மலையில் உள்ள துர்க்கையை அனுதினமும் வழிபட்டவன். அவனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர் வானப் ப்ரஸ்தம் செய்யக் காட்டுக்குச் சென்றார். உடனே இவனும் அரச பதவியை விட்டு காட்டுக்குத் தவம் செய்யப் போய்விட்டான்.

இதை எல்லாம் விடப் பெரிய அதிசயம்!!! பாலைக் கவுதமனார் என்ற பிராமணப் புலவன், அவர் மீது கவி பாடினான் —(காண்க பதிற்றுப்பத்து—மூன்றாம் பத்து). —–புலவரே! உமக்கு என்ன வேண்டும், கேளும், கொடுக்கிறேன் ——– (நீர் வேண்டியது கொண்மின்) ——– என்றான் மன்னர் மன்னன்.

பிராமணப் புலவன் பாலைக் கௌதமன் சொன்னான்: “யானும்என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்”

மன்னன் அசந்தே போனான். உடனே பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவெள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர் ——- என்று பதிற்றுப் பத்து பதிகம் பகரும்.
elijahchariot
Elijah going by Fire Chariot

அதாவது பெரிய பிராமண அறிஞர்களைக் கலந்தாலோசித்து பத்து யாக யக்ஞங்களுக்கு மன்னன் ஏற்பாடு செய்தான். ஒன்பது வேள்வி முடிந்தது. பத்தாவது வேள்வியில் பார்ப்பனப் புலவன் கௌத்தமன், அவனுடைய மனைவியுடன் மாயமாய் மறைந்து விட்டான். 2000 ஆண்டுக்கு முன் எழுந்த சங்க இலக்கியம் தரும் தகவல் இது.

( ஒரே பகலில் நான்கு கடல்களின் நீரைக் கொண்டு குளிப்பது தமிழ் மன்னர்களுக்குப் பிடித்த விளையாட்டு —- இது சாத்தியமா?——– இது பற்றி முன்னரே நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். மாயா இன மக்கள் எப்படி ஓடி, ஓடி செய்தி பரப்பினர், மாரத்தன் வீரன் எப்படி 26 மைல் ஓடிவந்து செய்தி சொன்னான், வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி திருச்செந்துரில் தீவாரதனை ஆனவுடன் சாப்பிட்டான் என்பனவற்றை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். வானப் பிரஸ்தம் என்பது இந்துக்களின் மூன்றாவது கட்ட வாழ்க்கை என்பதையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். கண்டு மகிழ்க!)

பாலை கௌதமனார் பாடிய மூன்றாம் பத்து:

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டை தன்கோல் நிறீ இ
அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீ இக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்துக்
கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி
அயிரை பரை இ ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும் பாரதாயனார் முந்துறக் காடு போந்த
–பதிற்றுப் பத்து பதிகம்

சிலப்பதிகாரச் செய்தி

பிற்காலத்தில் யாரும் இதை பொய் என்றோ இடைச் செருகல் என்றோ சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இளங்கோவும் இதை கட்டுரைக் காதையிலும் நடுகற் காதையிலும் பாடிவைத்தார்:

நான்மறையாளன் செய்யுட்கொண்டு
மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
(—வரிகள் 137-137, நடுகற் காதை)

வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு
(—வரிகள் 63-64, கட்டுரைக் காதை)

elijah
Elijah fed by Ravens!

கோவலனும் கண்ணகியும் விசேஷ விண்கலத்தில் சுவர்க்கம் சென்றதையும் சிலப்பதிகாரம் கூறும். ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில் இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் செய்தி ஆதாரத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அதே போல விமானி இல்லாத விமானம், பெரியோர்களை அழைத்துச் செல்ல, சுவர்க்கத்தில் இருந்து வரும் செய்தியை புற நானூற்றுப் புலவன் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாட்டில் இருந்து நாம் அறிகிறோம் (புற. 27).

இதே போல பைபிளிலும் ஒரு கதை உண்டு.

பைபிளில் விமானம்
பைபிளில் வரும் ஒரு கதை: எலிஜா என்பார் ஒரு தீர்க்கதரிசி. அவர் விக்கிரக ஆராதனையை எதிர்த்தும் ஜெஹோவாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தவர். அவருக்கு வறட்சிக் காலத்தில், அண்டங் காக்கைகள் உணவு கொண்டு வந்தன. திரவுபதி வைத்திருந்த அட்சய பாத்திரம் போல, ஒரு விதவைப் பெண்ணிடம் இருந்த பாத்திரத்தில் இருந்து ரொட்டிக்கான பொருட்களை வரவழைத்தார். அவளுடைய இறந்துபட்ட குழந்தையை அப்பர், பெருமான, திருஞான சம்பந்தர் ஆகியோர் குழந்தைகளை உயிர்ப்பித்துத் தந்தது போல உயிர்ப்பிக்கிறார். அவருக்கு சொர்கத்துக்குப் போவதற்கு தீ கக்கும் ஒரு ரதம் வருகிறது. அதை இழுக்கும் குதிரைகளும் ஜோதி ரூபத்தில் இருந்தன. அவர் ஒரு சூறாவளியால் தூக்கப்பட்டு அந்த ரதத்தில் சென்று மறைந்தார்.

elijah ascent to heaven
Place where Elijah ascended in Jordan

ஆக, யாகத் தீயில் மாயமாய் மறைந்த பார்ப்பனன், பார்ப்பனி, ஜோதி ரதத்தில் மறைந்த எலிஜா ஆகியோர் கதைகள் சுவையான பல விஷயங்களைத் தருகின்றன. இன்றுவரை அவைகளை உண்மையே என்று நம்புவோர் இருப்பதையும் காண்கிறோம்.

வாழ்க வண்டமிழ் மறையோர் = தமிழ் பிராமணர்கள்!!

–சுபம்–

கவிதையை ரஸிப்போமா?

tamil poets

By ச.நாகராஜன்

Post No.1217; Dated 6th August 2014.

காவியத்தின் பயன்

பாரத தேசம் வலியுறுத்தும் புருஷார்த்தங்கள் நான்கு: தர்ம, அர்த்த, காம மோக்ஷம். இலக்கியமோ, இசையோ, நடனமோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைவனை அடைய வழி வகை செய்ய வேண்டும்; செய்யும் என்பது அறநூல்கள் நமக்குத் தரும் அறிவுரை, அன்புரை! அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையின் படி வாழ்ந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தால் வீட்டுப் பேறு தானே வந்து எய்தும் என்ற அடிப்படையிலேயே திருவள்ளுவர் முப்பாலை வகுத்தார் போலும்!

இறைவனுடன் ஒன்றச் செய்யும் கவிதைகள்
முதல் காவியமான வால்மீகி ராமாயணத்தில் அதைப் படித்தவர் தீர்க்க ஆயுள், செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் பெற்று முக்தியையும் அடைவர் என்று காவியத்தின் பயனாக இறுதியில் சொல்லப்படுகிறது.

ஒரு லக்ஷம் ஸ்லோகம் அடங்கிய வியாஸர் வகுத்த மஹாபாரதத் தைப் படிக்க முடியாதவர்கள் அதன் இறுதியில் வரும் பாரத ஸாவித்திரியில் உள்ள நான்கு ஸ்லோகங்களைச் சொன்னாலேயே பெரும் பேறு பெற்று பரப்ரஹ்மத்தை அடைவர் என்று வியாஸர் அருளியிருக்கிறார். அப்பர் ஞானசம்பந்தர் உள்ளிட்ட மகான்களின் பாடல்களிலும் கடைசியில் அதைக் கூறுவதால் ஏற்படும் பயன்கள் தெள்ளத் தெளிவாக் கூறப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத அதிசய வேறுபாடு இப்படி பலனைச் சொல்லி நம்மை ஊக்குவிப்பது தான்!– முக்கியமாக இறைவனை இப்படி இலக்கியம் மூலம் அடைய முடிவதை வலியுறுத்துவது தான்!

கவிஞனாகத் தகுதிகள்
காவியம் இயற்றப் புகும் ஒரு கவிஞன் சகல கலைகளிலும் வல்லவனாக இருக்க வேண்டும். மனிதனை உன்னதமான உயரத்திற்கு ஏற்ற வல்லவனாக இருக்க வேண்டும், ஒவ்வொரு சொல்லின் முழு அர்த்தத்தையும் அது தரும் பயனையும் அறிந்திருக்க வேண்டும், என்று இப்படி ஏராளமான தகுதிகளை யாப்பு நூல்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட கவிஞன் இயற்றும் காவியங்களை ரஸிப்பதும் ஒரு சிறந்த விஷயமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.

barathiyar r creations
ரஸிகனாகத் தகுதி
ஒரு காவியத்தை அல்லது கவிதையை ரஸிக்க சஹ்ருதயனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. சஹ்ருதயன் என்றால் நல்ல இதயம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே ரஸிக்கவும், விமரிசிக்கவும் முடியும் என்பது அறிஞர்களின் துணிபு.

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “

என்று மகாகவி பாரதியார் கூறுவதில் எத்தனை பொருள் பொதிந்துள்ளது. கவிஞன் எதை வலியுறுத்திக் கூறியுள்ளான் என்று அந்தக் கவியுள்ளத்தை அறிவதே கவிதை அல்லது காவியத்தைப் படிப்பதன் முக்கிய நோக்கம். கவிஞன் எல்லாவற்றையும் வெளிப்படையாக்க் கூறி விட மாட்டான். பல விஷயங்களை உள்ளடக்கி சொல் சிக்கனத்தின் மூலம் பெரும் பொருளை உணரவைக்க முயல்வான். அணுவைத் துளைத்து ஏழ் கடலை அதற்குள் நுழைவிப்பான்!அதை அறிந்து ரஸிப்பதே தேர்ந்த ரஸிகனின் வேலை.

வார்த்தை ஜாலங்கள், சொல் அடுக்குகள், உவமைகள், அணி அலங்காரங்கள், ஓசை நயம் இவற்றை எல்லாம் ரஸித்து அதையும் தாண்டி உண்மைப் பொருளை அறிவது என்பது பெரிய காரியம் தானே!

கவிஞனும் ரஸிகனும்

கவி கரோதி காவ்யானி
ரஸம் ஞானானி பண்டித:
சுதாசுரத சாதுர்யம்
ஜாமாதா வெட்டி நோ பிதா;

என்ற ஸ்லோகம் அற்புதமாக கவிஞனையும் ரஸிகனையும் பற்றிக் கூறுகிறது.

இதன் பொருள் :- ஒரு கவிஞன் காவ்யத்தை இயற்றத் தான் முடியும். அதன் ரஸத்தை அறிந்தவனே அதை ரஸிக்க/விமரிசிக்க முடியும். எப்படி ஒரு தந்தை தன் பெண்ணின் சாதுர்யமான லீலைகளை அறிய முடியாதோ அவளது லீலைகளை எப்படி அவனது மருமகன் மட்டுமே அறிய முடியுமோ அது போலத் தான் கவிஞனும் அவன் ரஸிகனும்!

எப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை இந்த ஸ்லோகம் தருகிறது, பாருங்கள். படைப்பவன் கவிஞன். அந்தப் படைப்பை நன்கு அனுபவிப்பவன் ரஸிகன்!

Tiruvalluvar Tamil poet

இன்னொரு ஸ்லோகம் மூன்று மாநிலங்களின் பெண்களோடு கவிஞனின் வார்த்தைகள் மற்றும் பொருள் அமைப்பை ஒப்பிடுகிறது.
ஸ்லோகம் இதோ:-

அர்த்தோ கிராமபிதிதா: பிஹிதாஸ்ச கச்சித்
சௌபாக்யமேதி மாராஹட்டவதுகுசாபாஹா;
நோ கேரளிஸ்தன இவாதிதரம் பரகாசோ
நோ கூர்ஜரிஸ்தன இவத்தராம் நிகுதா:

ஒரு யுவதியின் அழகும் கவர்ச்சியும் அவள் மார்பகத்தில் வெளிப்படும், இல்லையா! அதை உவமையாகக் கொண்டு கவிஞனின் படைப்பு அமைய வேண்டிய விதத்தைக் கூற வருகிறார் ஒரு கவி!
ஒரு கவிஞன் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தத்தில் பாதியையே வெளிப்படுத்துவான். பாதியை மறைத்து வைத்திருப்பான்! அதுவே மிக அழகு! எப்படி மஹராஷ்டிரத்தில் உள்ள பெண்கள் மார்பகங்களை பாதி மறைத்து பாதி வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்கள் அது அல்லவா அழகு! கேரளத்துப் பெண்கள் மார்பகங்களை முழுவதுமாக மறைப்பதில்லை. அது அழகல்ல! அல்லது குஜராத் மங்கையர் முழுவதுமாக கச்சை இறுகக் கட்டி மறைக்கிறார்களே அதுவும் அழகல்ல!

சொல்ல வந்ததை சிருங்கார ரஸம் ததும்பச் சொல்லி விட்டார் இந்தத் தனிப்பாடல் கவிஞர்.

காவியங்களில் சஞ்சரிப்பவன் சரஸ்வதி
கவிகளின் தெய்வமான சரஸ்வதியை “புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம்” – புராணங்கள், நாடகங்கள் மற்றும் மஹா காவியங்களில் சஞ்சரிப்பவள் அதாவது உள்ளுறைந்திருப்பவள் என்று சரஸ்வதி தியான ஸ்லோகம் கூறுகிறது.

காவியத்தில், இந்த உள்ளுறை தெய்வத்தை ஒரு சஹ்ருதயனே அறிய முடியும் என்பதே கவிதையை ரஸிக்க வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை.

Manickavasagar Tamil Poet
Image of Tamil poet Manikkavasagar.

உலகம் போற்றும் ஒரே ஒரு கவிதை
இப்படி ஒரே ஒரு கவிதையை மட்டும் எடுத்து ரஸித்துப் பார்ப்போம் – உதாரணத்திற்காக!

மஹாகவி காளிதாஸன் இயற்றிய குமார சம்பவத்தில் ஐந்தாம் காண்ட த்தில் 24வது செய்யுளாக அமைந்திருப்பது இது!

ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேத சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:

இதன் பொருள் இது தான்:- மழையின் முதல் துளிகள் அவளது கண் இமைகளில் சிறிது தங்கின. பின்னர் அவள் மார்பகங்களில் சிதறின. பின்னர் இறங்கி அவள் வயிற்று சதை மடிப்பு வரிகளில் தங்கின. வெகு நேரத்திற்குப் பின்னர் அவள் நாபிச் சுழியில் கலந்தன!
இதை உலகெங்கும் உள்ள அறிஞர்கள் இன்று வரை புகழ்ந்து பாராட்டுகின்றனர். சம்ஸ்கிருத கவிதைகளைத் தொகுத்த டேனியல் ஹெச்.ஹெச். இங்கால்ஸ் இதன் புகழைச் சொல்லிச் சொல்லி உருகுகிறார்!

ஏராளமான கருத்துக்களை சிறு சிறு வார்த்தைகளின் சங்கமம் பிரவாகமாக்க் கொண்டு வந்து தள்ளி நம்மைப் பிரமிக்க வைத்துப் பரவசப்படுத்துகின்றன!

முதலில் ஒரு ராஜகுமாரி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.செல்வச் செழிப்பில் ஊறிய ஒரு அழகிய யுவதி தியானத்தில் இருப்பது மெல்லிய உணர்வுகளை நம்முள் எழுப்புகிறது.உலகிற்கெல்லாம் தேவி அவள்! அடடா! கீதை கூறும் யோக நிஷ்டையில் அல்லவா அவள் இருக்கிறாள்! நீர்த் திவலைகள் அவள் கண்களில் சிறிது தங்க வேண்டுமென்றால் அது நீண்டு அழகியதாய் வளைந்து இருக்க வேண்டும். துளிகள் மார்பகங்களில் சிதற வேண்டுமென்றால் அவை பெரிதாக இருக்க வேண்டும்.அவை இரண்டும் திரண்டு உருண்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்க வேண்டும். (உத்தம அழகிகளின் லட்சணப்படி!) இல்லையேல் மழைத் துளிகள் மார்பகங்களின் இடைவெளி வழியே உருண்டோடி அல்லவா இருக்கும்! திரட்சியான மார்பகங்கள் திடமாக இருப்பவை என்பதை மழைத் துளிகள் தெறித்துச் சிதறியதால் உணர்கிறோம். அவை பின்னர் வயிற்றில் உத்தம பெண்களுக்கே அமைந்திருக்கும் மூன்று வயிற்று மடிப்புகளின் வழியாக இடுப்பு என்னும் ஏணியின் வழியே இறங்கி நாபி கமலத்தை அடைந்து அந்தச் சுழியில் சங்கமிக்கின்றன!
என்ன அற்புதமான த்வனி அல்லது suggestion அல்லது ஏராளமான உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு செய்யுள் இது.
poetry

கவிகளுள் மஹாகவி காளிதாஸன் என்பதை எடுத்துக் காட்ட இந்த ஒரு செய்யுள் உலகளாவிய அளவில் எடுத்துக் காட்டப்பட்டு வருகிறது!

நல்ல கவிதைகளை நாடித் தேடி ரஸிப்போம்
ஒரு சஹ்ருதயனின் ரஸிகத் தன்மை வளர வேண்டுமெனில் இது போன்ற லட்சக் கணக்கான சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் கவிதைகளைத் தேடிப் பாடி ரஸிக்க வேண்டும்.
உன்னதமான உணர்வுகளை மேம்படுத்தி ரஸிகனை இது பிரபஞ்ச லயத்துடன் ஒன்று படுத்தி விடும், இல்லையா?!

*********************

நிலாச்சாரல் (www.nilacharal.com) 600வது இதழில் வெளியான சிறப்புக் கட்டுரை

பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்!

meenakshi close
Madurai Meeakshi Temple is considered as one of the 100 Wonders of the World

சிலப்பதிகாரக் கோவில்கள்

ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. 1800 ஆண்டுகளுக்கு முன் ‘’தமிழ் கூறு நல்லுலகம்’’ எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல் இது. படிக்கப் படிக்கத் தெவிட்டாது. இதில் இல்லாத விஷயங்கள் இல்லை. இது ஒரு இந்துமத கலைக் களஞ்சியம். இதற்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரை ஆசிரியரும் எழுதிய உரைகளைப் பயிலுவோருக்கு இசை, நடனம், சமயம், கலை, பண்பாடு, ஒழுக்க சீலங்கள், கோவில்கள், இந்திர விழா, நாட்டுப் புறப் பாடல்கள், யாழ், தமிழ் நாட்டுக் கதைகள், நம்பிக்கைகள், வரலாறு, புவியியல், இசைக் கருவிகள் முதலியன பற்றி ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்று 38,000 கோவில்கள் உள்ளன. தமிழ் மொழி தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மாறிவிட்டன!

சேரன் செங்குட்டுவன் மஹா சிவ பக்தன். தலையில் சிவனின் பாதங்களைச் (காலணிகள்) சுமந்து கொண்டிருக்கையில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி (பெருமாள்) கோவில் பட்டர்கள் ஓடிவந்து பிரசாதம் கொடுத்தனர். உடனே அதைத் தோளில் சுமந்தார். இதைப் பாடிய இளங்கோ, தலையில் சிவனின் பாதங்கள் இருந்ததால் தோளில் பெருமாள் பிரசாதத்தை வைத்தார் என்று சொல்வதில் இருந்து ஹரியையும் சிவனையும் ஒன்று என்று உணர்ந்த பெருந்தகை செங்குட்டுவன் என்பது விளங்கும்.

சிலப்பதிகாரத்தில், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றி ஐந்தாறு இடங்களில் அற்புதமான தகவல்கள் வருகின்றன. அவற்றில் எதுவும் இப்போது இல்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றால் அவை எல்லாம் கட்டப்பட்டன. அவை கால வெள்ளத்திலும் கறையான் வாயிலும் விழுந்து அழிந்துவிட்டன. சில வழிபாடுகள் காலப் போக்கில் மறந்தும் மறைந்தும் போயின.
இளங்கோவின் பட்டியலில் எங்குமே பிள்ளையார் வழிபாடோ, கோவில்களோ குறிப்பிடப்படவில்லை என்பது இந்தக் காவியத்தின் காலத்தைக் கணிக்க உதவுகிறது. நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் யாத்த காவியம் இது.

srirangam kuthirai veera
Srirangam Temple pillars

சில கோவில்களின் பட்டியலை இளங்கோவின் வாய் மொழியாகவே கேட்போம்:

கோவில் பட்டியல் 1 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை)
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
……………………………………………………………..
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும் (கிருஷ்ணனின் சகோதரன்), 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

temple side view

கோவில் பட்டியல் 2 (கனாத் திறம் உரைத்த காதை)

அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்
புகார் வெள்ளை நாகர்-தம் கோட்டம், பகல் வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற் கோட்டம்
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம் என்று மேவி
பாசண்டச் சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு

பொருள்: 1)கற்பக மரம் உள்ள கோயில்,
2)ஐராவதம் (இந்திரன் வாகனம் வெள்ளையானை) உள்ள கோயில், 3)பலதேவன் கோயில்,
4)சூரியன் கோயில்,
5)சந்திரன் கோயில்,
6)ஊர்த் தேவதை கோயில்,
7)முருகன் கோயில்,
8)இந்திரனின் வஜ்ராயுதம் உள்ள கோயில்,
9)ஐயனார் கோயில்,
10)அருகன் கோயில்,
11)பாசண்டச் சாத்தன் கோயில்.

lepakshi multihead
Lepakshi Temple sculpture

கோவில் பட்டியல் 3 (நாடுகாண் காதை)

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திர்ருமொழி
அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழ் உடன் போகி—
………………………….
ஐவகை நின்ற அருக தானத்து

பொருள்: 1)ஐந்து கிளை போதி மரத்தின் கீழ் உள்ள புத்ததேவனின் இந்திரவிகாரங்கள் ஏழு, 2)பஞ்ச பரமேஷ்டிகள் நிற்கும் அருகன் இடம்.

கோவில் பட்டியல் 4 (காடுகாண் காதை)

காடுகாண் காதையில் திருவரங்கம், திருப்பதி கோயில்கள் வருகின்றன.

1)ஸ்ரீரங்கத்தில்
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்

2)திருப்பதியில்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
காணப் புறப்பட்டதாக மாங்காட்டு மறையோன் என்னும் பிராமணன் வாயிலாக இளங்கோ பாடுகிறார்.

3)ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்
கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் என்ற சமண மதப் பெண் துறவி மூவரும் ஒரு துர்க்கை கோவிலில் ஓய்வு எடுத்தனர்.

தங்க கோபுரம்
Gold Towers are in Madurai, Tirupati, Srirangam, Chidambaram and several other temples

கோவில் பட்டியல் 5 ( ஊர் காண் காதை)
மதுரை நகரில் உள்ள கோவில்கள்

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்லை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

பொருள்: 1)நெற்றிக் கண்ணன் (சிவன்) கோயில், 2)கருடக் கொடி வைத்திருப்பவன் (விஷ்ணு) கோயில், 3)கலப்பை வைத்திருப்பவன் (பலராமன்) கோயில், 4)கோழிக் கொடி வைத்திருப்பவன் (முருகன்) கோயில், 5)சமணர் பள்ளிகள், ராஜாவின் அரண்மனை (மன்னவன் கோயில்).

2alakarkoil
Alagarkoil near Madurai
Tamilnadu_02
Jain centres of Tamil Nadu

கோவில் பட்டியல் 6 ( குன்றக் குரவை)
முருகன் கோவில்கள்
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே—
பாரிரும் பௌவத்தினுள் புக்குப், பண்டொருநாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே

பொருள்: 1)திருச்செந்தூர், 2)திருச்செங்கோடு, 3)சுவாமிமலை, 4)திருவேரகம் ஆகிய தலங்களை முருகன் ஒருபோதும் விட்டுப் பிரிவது இல்லை.முன்னொரு காலத்தில் கடல் நடுவில் மாமர வடிவில் நின்ற சூரனை வென்ற சுடர்மிகு வேல் அவன் கையில் உள்ளது!

கோவில் பட்டியல் 7 ( கால்கோட் காதை)
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த
ஆடக மாடம்= திருவந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்
நீர்ப்படைக் காதையிலும் வேறு சில இடங்களிலும் புத்த விஹாரங்கள் பாடப்படுகின்றன.

வாழ்க ‘தருமமிகு’ தமிழ் நாடு! வளர்க தெய்வத் தமிழ்!!

–சுபம்–

Temples of Ancient Tamil Nadu

meenakshi close

Research article written by London Swaminathan
Post No.1214; Dated:- 4th August, 2014

Ancient Tamil Nadu had lot of Temples. Though Sangam literature mentioned about temples, images, painting of Gods etc. we did not have any archaeological evidence for temples. The reason is that all he old temples were constructed with bricks, wood and mortar. They could not have withstood the onslaught of time and weather. Only from the Pallava period we have temples built of stones. Today, Tamil Nadu can boast of 38,000 temples, big and small. Most of them belong to the later Chozas and later Pandyas.

Tamil epic Silappadikaram gives a better picture of temples that existed in second century CE in three major towns Pukar, Madurai and Vanji. It also mentioned other temples at Srirangam, Alagar koil, Lord Skanda shrines and Tirupati. It is very interesting to get all the information from one book. Ilango, author of the epic gives the lists at least in four places. Some of the temples have disappeared. Some of the worships (such as Balarama,Vajra,Indra) are also gone into history books! Nowhere Ilango mentioned the temple or worship of Lord Ganesh. It shows the antiquity of the epic.

Silappadikaram is an encyclopaedia of Hinduism. It gives details about Vahanas of gods (mounts of Gods), flags of gods, folk dances of gods and goddesses, Punya Theerthas/holy waters and the methods of worship.

2alakarkoil
Alakarkoil near Madurai

First List of Temples
Let me give some lists as produced by Ilango:-
The first list comes from ‘Indra Viza Uretutta Katai’. Joy prevailed everywhere on account of Indra’s festival in the temples of

1.Lord who was never born (Siva)
2.Temple of Six Faced Red Lord (Skanda)
3.Temple of Valiyon (Baladeva), with the complexion of conch shell
4.Temple of Netiyon (Vishnu)of the dark colour
5.Temple of Indra of the victorious umbrella and the pearl garland
6.Jaina Temples
7.Dharma institutions (Buddhist or Jain or Hindu)
(These are the temples of Pumpukar)

srirangam kuthirai veera

Temples of Pumpukar
In the Kana Tiram Uraitta Katai, Ilango gives a list of 11 temples of Ancient Tamil Nadu:
1.Temple of Kalpaka Vriksha (Divine Tree)
2.Temple of white elephant (Indra’s Airavata)
3.Temple of beautiful white god (Balarama)
4.Temple of the Sun
5.Temple of City God (one interpretation is Shiva Temple)
6.Temple of Vajra (Indra’s shrine or temple for his weapon)
7.Temple of Spear (of Murukan/Skanda)
8.Temple of Deity who dwells outside the city (Ayanar/Sastha)
9.Temple of Nigranthas (Jaina Temple)
10.Temple of the Moon
11.Temple of Sattan learned in the Pasanta sastras
12.Temple at Cremation ground (may be Yakshini or Chakravala Kottam of Manimekalai)
13.In the Natukan Katai Kovalan and Kannaki circumambulated the temple of Manivannan (Vishnu) at Srirangam and they passed by
14.Seven Viharas made by Indra (Buddhist Viharas).

Srirangam, Tirupati,Alakarkoil Ujjain (Madya Pradesh) and Madurai are mentioned.
15.Madurai temple is mentioned in Purancheri Irutta Katai.
temple side view

Temples of Madurai
Urkan Katai gives another list of Temples in Madurai:
1.Temple of Siva with the forehead eye
2.Temple of Vishnu with Garuda flag
3.Temple of Baladeva with plough
4.Temple of Subramanya with cock flag
5.Jain centres

Temples of Lord Skanda Kartikeya
In the chapter Kundrakuravai, he gives the list of Murukan (Skanda) temples:
1.Sentil — Tiruchenthur
2.Senkotu_- Thiruchengotu
3.Venkunram – Swamimalai
4.Erakam – Tiruverakam

lepakshi multihead
From Lepakshi Temple

Temple at Tiruvananthapuram

1.Adaka madam (Anantha Padmanabha Swamy Temple)
–Kalkot Katai,Silappadikaram
2.Buddha vihara
3.Indra vihara (Buddhist) in Neerpadaik Katai

One must remember that Silappadikaram is not a religious scripture and yet we find so much information about religion, particularly about Hinduism. For the first time, places of worship of Jains and Buddhists are also described in detail.
தங்க கோபுரம்

Contact swami_48@yahoo.com

கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !!

SriNarayani2
image of Narayani

Research paper written by London Swaminathan
Post No.1213; Dated :- 4 August 2014.

சிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !! இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சிதர், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.

சிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.

சங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.

கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–
durga mahisa

சான்று ஒன்று:–
குழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.

இதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ! அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக? வடதிசை சென்று புண்ணியம் தேட! அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.

இங்கே காலவழுவமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது!!

DurgaS

சான்று இரண்டு:–
கோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)
இதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ!!

pallava
Mahishasuramardani in Mahabalipuram

சான்று மூன்று:–
1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.
சமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்
தத்துவன், சாதுவன், சாரணன் காரணன்
……………………………………………
சங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்

dance mahisa

சான்று நான்கு:–
வேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார் இளங்கோ:

அமரி, குமரி,கவுரி, சமரி
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)
ஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை

இதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.

சர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

என்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.

‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:

ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-
வானோர் வணங்க, மறைமேல், மறையாகி
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

வரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-
அரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்!
–வேட்டுவ வரி
mahisa1

இதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.

–சுபம்–

Ilango and Kovalan were Sanskrit Scholars!!

mahisa1

Research paper written by London Swaminathan
Post No.1212; Dated :-3rd August 2014.

Who is Ilango? The author of Tamil Epic Silappadikaram
Who is Kovalan? The hero of the epic Silappadikaram.

Silappadikaram is the most popular Tamil epic. It is a Hindu encyclopaedia. There are three Kandams (cantos): Pukar Kandam, Madurai Kandam and Vanji Kandam, all named after three great cities. These cantos have 30 sections (Kaathai in Tamil) in addition to the foreword and concluding part. Every section gives amazing information about music, dance, Tamil Hindu folklore, Hindu religious and cultural beliefs, temples, history and geography of India in the context of Tamils.

The hero Kovalan was shown as a Master of Sanskrit language. The author of the epic shows his erudition in Hindu scriptures throughout the epic. His translations of Mahishasura Mardhani Sloka and Ardhanaree sloka and Durga sloka are excellent. His ‘namavalees’ of Jainism and Hindu Goddess serves as proofs for his knowledge in Sanskrit. He praised Rama and Krishna sky high in the ‘Aychiar Kuravai’, Lord Skanda/ Muruga in Kundra Kuravai and Goddess Durga in the ‘Vettuva Vari’. He also quoted Bhagavad Gita indirectly. All these led some scholars to state that he must have lived in the seventh century CE. But I strongly believe that the epic belongs to 4th or 5th century CE. The incidents in the epic happened during the second century CE.

pallava
Pallava sculpture from Mahabalipuram, Tamil nadu.

Proof 1: Kovalan read Sanskrit sloka
A Brahmin lady killed a mongoose by mistake thinking that it killed her child. Her husband became very angry. Before leaving the city, he wrote something in Sanskrit and asked her to show it to a well informed person and take it further. With this palm leaf in her hand the Brahmana lady went through the bazaars and cried loudly. At once Kovalan called her and relieved her of pain and worry by doing the atonement mentioned in the palm leaf.

VR Ramachandra Dikshitar who translated Silappadikaram in 1939 comments on this episode: “It bears testimony to the fact that Kovalan possessed a sound knowledge of Sanskrit. Atiyarkku nallar, the commentator gives a Sanskrit sloka from Panchatantra in this context, which was said to be on the palm leaf.

DurgaS

Proof 2: List of Jain Names

Ilnago was very familiar with ‘sahasranamam’ which means 1008 names of any god or goddess. In the Indra Festival 1008 kings bore on their heads gold pots filled with holy water and performed the bathing of Indra.
In the ‘Natukan Katai’ section Jain nun Kavunti says, “ my tongue will not say anything other than the 1008 names”. The Hindu concept of 1008 names is used for Jains here.
In the ‘Urkan Katai’, the poet sings of 1008 gold coins.
Most of the Jain names listed earlier are Sanskrit terms, some are common to Saivite Gods: Jinendra, Siddha, Bhagavan, Dharma, Punya, Purana, Deva, Sivgathi Nayaka, Thathva, Sarana, Karana, Kumara, Sankara, Isa, Swayambhu, Chathurmuka, Arka, Veda with the Tamil suffix ‘an’ (Eg. Nayaka will be Nayakan in Tamil).

mahisa foreign

Proof 3: Kovalan recites Durga Mantra

In the ‘Katukan katai’, Ilango talks about Vedic mantras of five letters – Namasivaya and eight letters – Om Namo Narayana. While Kovalan and Kannaki were passing through the jungle, a forest deity appeared before them in the guise of Vasantamala, Matavi’s friend in Pumpukar. Since the Brahmin who gave information about the dangers in the forest forewarned them, Kovalan immediately recited a mantra of Durga. This mantra was called ‘’Pay Kalai Pavai Mantra’’ meaning the mantra of the lady who rides a deer. Immediately the forest spirit disappeared. Durga worship was practised by all the hunting tribes throughout India. Here the author used the Sanskrit word Mantra. This verse shows us how well versed was Kovalan in Mantras. Eariler the Brahmin also spoke about Panchakshara (namasivaya) and Astakshara (Namo Narayana) Mantra.

SriNarayani2
Image of Narayani

Proof 4: Sanskrit Names of Durga Devi
In the Vettuva Vari section, Durga’s names are recited which are in Sanskrit: Amari, Kumari, Gowri, Samari, Suli, Neeli, Arya (Ayai). Other terms are translations of Sanskrit terms:
She who wore moon in her coiffure
She with Unwinking Eye in her forehead
Whose Throat darkened by poison (Neelakanthi)
Serpent Vasuki is her girdle
Her upper garment was lion or tiger skin
Holder of trident
Holding a sword
Riding a deer
Her left foot with Silambu (woman), right with Kazal (man)
Lady who stood on the head of the double bodied broad shouldered Asura

(Mahisasuramardani= demon with buffalo head, human body)

This section shows that Ilango was very familiar with the story of Ardhanareeswara and Mahisasuramardani.

Then the author describes her form as Narayani (goddess as Narayana holding conch and the wheel (Sanga, Chakra) riding a lion.

dance mahisa
Mahisasuramaradani Dance

Ilango says in Tamil,

How is it that you, who receive the worship of all gods and stand undaunted as the sprouting wisdom in the Veda of all the Vedas, once stood upon the dark head of the wild buffalo, clad in a tiger’s skin and covering yourself with an elephant’s skin?

How is it that you, who stand as the shining light spreading its rays over the lotus heart of Hari, Hara and Brahma, also stood upon the stag with the dark twisted horns, after slaying Mahisasura, holding your sword in your bangled hands?

How is it that you, who stand praised by the Vedas as the consort of him who has an eye in his forehead and the Ganges in his coiffure, stood upon a fierce red eyed lion, holding a conch and discuss in your lotus hands?

The above three stanzas of Ilango are an imitation or translation of Sanskrit verses.

Sarva mangala mangalye Sive sarvartha sadike
Saranye Tryambake Devi Narayani Namostute (Durga Sapta sati)

One who reads ‘Vettuva vari’ of Ilango, will be reminded of Mahishasuramardani sloka and other Durga stotras. This section is a translation of Sanskrit slokas similar to the following two stanzas:

ravanaphadi cave
Sculpture at Ravanaphadi Cave

Ayi giri nandini, nandhitha medhini,
Viswa vinodhini nandanuthe,
Girivara vindhya sirodhi nivasini,
Vishnu Vilasini Jishnu nuthe,
Bhagawathi hey sithi kanda kudumbini,
Bhoori kudumbini bhoori kruthe,
Jaya Jaya hey Mahishasura mardini,
Ramya kapardini, shaila Suthe. 1

Victory and victory to you,
Oh darling daughter of the mountain,
Who makes the whole earth happy,
Who rejoices with this universe,
Who is the daughter of Nanda,
Who resides on the peak of Vindhyas,
Who plays with Lord Vishnu,
Who has a glittering mien,
Who is praised by other goddesses,
Who is the consort of the lord with the blue neck,
Who has several families,
Who does good to her family.
Who has captivating braided hair,
Who is the daughter of a mountain.
And who is the slayer of Mahishasura.

durga mahisa

Jaya Jaya hey japya jayejaya shabda ,
Parastuti tatpara vishvanute ,
Bhana Bhanabhinjimi bhingrutha noopura,
Sinjitha mohitha bhootha pathe,
Nadintha nataartha nadi nada nayaka,
Naditha natya sugaanarathe,
Jaya Jaya hey Mahishasura mardini ,
Ramya kapardini, shaila Suthe. 9

Victory and victory to you,
Oh darling daughter of the mountain,
Oh Goddess , whose victory is sung,
By the whole universe,
Which is interested in singing her victory,
Oh Goddess who attracts the attention of Lord Shiva,
By the twinkling sound made by her anklets,
While she is engaged in dancing,
Oh Goddess who gets delighted ,
By the dance and drama by versatile actors,
Even while she is half of Lord Shiva’s body,
Oh Goddess who has captivating braided hair,
Who is the daughter of a mountain.
And who is the slayer of Mahishasura.

(Two stanzas from Mahishasuramardani Sloka)

V R Ramachadra Dikshitar has poined out that Tamil name Kovalan is the Tamil form of Gopala (cowherd) in Sanskrit. It is Lord Krishna’s name.
I will write separately about the number of Sanskrit words and the influence of Bhagavad Gita in Silappdikaram.

The best translation available on Silappadikaram is the one by VR Ramachandra Dikshitar: The Cilappadikaram, 1939.

Contact swami_48@yahoo.com

சாமியார் வேடத்தில் உளவாளிகள்!

The Spy Who Loved Me

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1209; தேதி ஆகஸ்ட் 2, 2014.

இந்தியாவில் சாமியார் வேடத்தில் உளவாளிகள் இருப்பதை எல்லோரும் அறிவர். வெளி நாட்டுக்காரர்களில் உண்மையான பக்தர்களும் உண்டு. ஆனால் பலர் சமயத்தைப் பயன்படுத்தி எளிதாக உளவு வேலைகளில் ஈடுபடுவது வள்ளுவர் காலத்தில் இருந்து நடக்கிறது. வடமொழி நூல்களில் உலகப் பிரசித்தி பெற்ற அர்த்த சாஸ்திரமும் ஒன்று. அதை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன், உளவுக் கலை பற்றி விரிவாக எழுதி இருப்பதை அறிஞர் உலகம் அறியும். ஆனால் மனு, வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரும் பல சுவையான தகவல்களைத் தருவதை சிலரே அறிவர்.

சிலப்பதிகாரம் தரும் சுவையான தகவல்கள்

1.நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன். உடனே அழும்பில் வேல் எழுந்து மன்னர் மன்னா ! அதற்குத் தேவையே இல்லை. இந்த ஜம்பூத்வீப நாட்டின் எல்லா பகுதி உளவாளிகளும் நம் தலை நகர் வஞ்சியில் இருக்கின்றனர். நகர் எங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி பறந்து விடும் என்கிறான்.

நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப
–(காட்சிக் காதை சிலப்பதிகாரம்)

இதிலிருந்து தெரிவதென்ன? அக்கலத்தில் உளவுத் துறை மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. இன்றும் கூட டில்லியில் உலக நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள் எல்லோரும் இருப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன.
THE-SPY-WHO-LOVED-ME-POSTER

2.இரண்டாவது விஷயம் கீரந்தை என்னும் பிராமணன் கதையில் வருகிறது. அந்தப் பிராமணன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக பாண்டிய மன்னன் கையையே இழந்தான். பொற்கைப் பாண்டியன் கதை எல்லோரும் அறிந்ததே. மன்னரே மாறுவேடத்தில் நாட்டை உளவு பார்த்தது இக்கதையில் தெரிய வருகிறது–(கட்டுரை காதை, சிலப்பதிகாரம்)

ராமாயணம் தரும் சுவையான தகவல்கள்
3.வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் ராவணன் அனுப்பிய சுகன், சாரன் என்ற இரண்டு உளவாளிகள் பற்றி விரிவான பகுதி உள்ளது. யுத்த காண்டத்தில் கம்பன் இதற்கு ஒரு பெரிய படலத்தையே ஒதுக்கி உளவுக் கலை பற்றி அலசுகிறான். அந்த இரண்டு உளவாளிகளும் குரங்கு வேடம் போட்டு நடித்த போதும் விபீசணன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து ராமனிடம் ஒப்படைக்கிறான். ராமனோ அவர்களை மன்னித்து, படை பலம் பற்றிய முழு தகவல்களையும் அளித்து ராவணனிடம் போய்ச் சொல்லுங்கள் என்கிறான். இறுதி வெற்றி ராமனுக்கே என்பது அவனுக்குத் தெரியும்!
asceticdog

புறநானூறு தரும் சுவையான தகவல்கள்

4.சங்க இலக்கிய நூலான புற நானூற்றில் (பாடல் 47) சுவையான சம்பவம் வருகிறது. இளந்தத்தன் என்ற புலவன் நெடுங்கிள்ளியிடம் வந்தான். அவன் அதற்கு முன் நலங்கிள்ளியிடம் பாடிப் பரிசில் பெற்றவன். நலங்கிள்ளியோ அவனுடைய எதிரி. ஆகையால் இந்தப் புலவன் உளவு பார்க்க வந்தான் என்று சொல்லி நெடுங்கிள்ளி, மரண தண்டனை விதித்து விடுகிறான். உடனே புத்திசாலிப் புலவர் கோவூர் கிழார் வந்து உண்மையை எடுத்துரைத்துப் புலவன் உயிரைக் காப்பாற்றுகிறார். “பழுமரம் நாடி ஓடும் பறவைகளைப் போல உன் போன்றவரை நாடி வரும் அப்பாவிப் புலவன் இவன். மறு நாளைக்குக் கூடச் சேர்த்து வைக்காமல் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழும் ஜாதி புலவர் ஜாதி. இவன் உனக்குத் தீங்கு செய்வானா? இல்லவே இல்லை. இவனை விடுவி” என்கிறார் கோவூர்க் கிழார்.
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ? இன்றே.

6228-000541
வள்ளுவர் தரும் சுவையான தகவல்கள்

5.ஒற்றாடல் என்னும் 59 ஆம் அதிகாரத்தில் பத்தே குறள்களில் இருபதே வரிகளில் உளவுக்கலை விஷயங்களைச் சாறு பிழிந்து கொடுக்கிறான் வள்ளுவன். “புல்லட் பாயிண்ட்” வள்ளுவன் கூறுவது:–
1.துறவி வேடத்தில் நாட்டு எல்லைகளைக் கடந்து உளவு பார் –(குறள் 586)
துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
2.மூன்று ஒற்றர்களை நியமி; ஒருவருக்கு மற்றவர் பற்றித் தெரியக் கூடாது. மூவரும் ஒரே மாதிரி சொன்னால் அதை நம்பு —(குறள் 589)
3.எல்லோருக்கும் முன்னால் ஒற்றர்களைப் பாராட்டாதே. உன் குட்டு வெளிப்பட்டு விடும். ‘’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்ற கதை ஆகிவிடும்!! —(குறள் 590)
4.நன்றாக வேஷம் போட வேண்டும். யாராவது சந்தேகமாகப் பார்த்தாலும் சமாளிக்க வேண்டும். ரகசியம் வெளியாகக் கூடாது. அவன் தான் நல்ல ஒற்றன் —(குறள் 585)
5.அரசு அதிகாரிகள், அரசனின் சொந்தக்காரர்கள், வேற்று நாட்டுப் பகைவர் அத்தனை பேரையும் வேவு பார்க்க வேண்டும் –(குறள் 584)
இப்படி முத்து முத்தாக உதிர்க்கிறான் வள்ளுவன்.

220px-Noor_Inayat_Khan
Noor Inayat Khan was Moscow born Indian Muslim, worked as a British agent and executed by Hitler

மனு தரும் சுவையான தகவல்கள்

மனு ஸ்மிருதியில் ஏழாவது ஒன்பதாவது அத்தியாயங்களில் ஒற்றாடல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மனு சொல்லும் விஷயங்கள்:
1.ஒவ்வொரு ஊரிலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஒற்றர் மூலம் தகவல் திரட்ட வேண்டும்
2.அந்தப்புரத்திலும், ரகசிய ஒற்றர் விஷயத்திலும் நடப்பனவற்றை நாள்தோறும் ஆராய வேண்டும்.
3.சந்தியாகால பிரார்த்தனைக்குப் பின்னர் ஒற்றர்களை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று ‘’ரிப்போர்ட்’’ வாங்க வேண்டும்.
4.அரசனுக்கு இரண்டு கண்கள் ஒற்ற்ர்கள்தான். தெரிந்த திருடர்கள், தெரியாத திருடர்கள் ஆகியவர்களைப் பிடிக்கும் கண்கள் இவை.
5.குற்றவாளிகளை குற்றம் செய்யுமாறு உளவாளிகள் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அவர்களை வகையாகப் பிடித்து விடலாம்.
6 தன் வலி, மாற்றான் வலி – இரண்டையும் அறிய ஒற்றர்களப் பயன்படுத்த வேண்டும்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் எழுதியது இன்றும் சாலப் பொருந்தும். தூதர் விஷயத்திலும், உளவுக் கலை விஷயத்திலும் நாம்தான் உலகிற்கே முன்னோடி. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்திலும் உள்ளதைப் போல உலகில் வேறு எங்கேயும் இல்லை. அவர் நூல் எழுதி 2300 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
mata hari executed in 1917
Most famous woman spy executed in 1917 during First World War.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் போர்வைகளிலும் அறிஞர்கள் போர்வையிலும் உளவாளிகள் ஒளிந்திருப்பர். —-பத்திரிக்கையாளர்களில் பலர் உளவாளிகள்! —மடங்களில் நிறையவே உளவாளிகள் உண்டு. எளிதில் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அறியும் இடம் மத அமைப்புகள்தான்.— அரசியல் அலுவலகங்களில் உண்மையை உளறுபவர்கள் அதிகம் என்பதால் உளவாளிகளின் சொர்க்க பூமி அது.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு!! ராத்திரியில் அதுவும் பேசாதே !! என்று சும்மாவா சொன்னான் தமிழன்!!
–சுபம்–