இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி! (4482)

Date: 12 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-19 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4482

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

இது தான் இந்தியா

 

இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி!

ச.நாகராஜன்

1

 

கல்கத்தாவில் உள்ள ஹிந்து ஸ்கூலின் ஆக்டிங் ஹெட்மாஸ்டரான “வித்யா வைபவ், ஸ்ரீ அபானி ரஞ்சன் சென்குப்தா, இரண்டு தொகுதி அடங்கிய ஒரு புத்தகத்தை வங்க மொழியில் தொகுத்துள்ளார் – ஹிந்துக்களின் புகழோங்கிய பெருமையை விளக்கும் நூல் இது!

அவர் 1942இல் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைத் தொகுப்பில் விவரிக்கிறார். அது இது தான்:

 

 பிரயாகையிலிருந்து ஒரு கனவான் எழுதுகிறார்:

“கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்மணிகளுடன் அமாவாசை புண்ய காலத்தன்று புனித ஸ்நானத்தை  செய்வதற்காக நான் ஒரு படகை (க்விலா அல்லது கோட்டை எனப்படும்) கெல்லா காட்டிலிருந்து வாடகைக்கு எடுத்தேன்.

 

படகோட்டியின் பெயர் மோதிலால்.

 

 

கனவான்:  மோதிலால், காலையிலிருந்து நீ எவ்வளவு சம்பாதித்தாய்?

 

மோதிலால்:- “ஐயா. ஒரு கனவான் சில பெண்மணிகளுடன் என் படகை வாடகைக்கு எடுத்தார். 10 ரூ என்று ஒத்துக் கொண்டோம். சங்கமம் ஆகும் இடத்தில் மொட்டை அடிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.நாங்கள் வர லேட்டாகும். அதற்குள் மற்ற யாரையாவது அழைத்துக் கொண்டு போ என்றார்கள். எட்டு ரூபாய்க்கு இன்னொருவரை அழைத்துச் சென்றேன். ஆனால் வருகிறேன் என்று சொன்ன அந்தக் கனவான் திரும்பவே இல்லை.பின்னர் தான் நீங்கள் வந்தீர்கள்.

 

கனவான்: என்ன? அந்த ஆள் உன்னை ஒரு புனிதமான நாளில் ஏமாற்றி விட்டானா?

 

மோதிலால்:- என்னை அவன் ஏமாற்றியிருக்கலாம்.அது என் தலை விதி. அவனை போன ஜன்மத்தில் நான் ஏமாற்றி இருந்திருப்பேன். அல்லது இன்னொருவனை ஏமாற்றியிருந்திருப்பேன். எனது கெட்ட செயலுக்காக இப்போது அனுபவிக்கிறேன். யாரை நான் குறை கூற முடியும்?

 

கனவான்: மோதிலால், நீ நல்ல மனதைக் கொண்டவன். உன் கதையைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

 

 

 

மோதிலால்: ஐயா, நான் கங்கா, யமுனா மாதாவின் குழந்தை. அவர்களால் தான் என் ஜீவிதமே நடக்கிறது. அவர்களே எனக்கு நல்ல சிந்தனையைத் தருகின்றனர்; சம்பாத்தியத்தையும் தருகின்றனர்.

 

கனவான்: ஆஹா! அற்புதம்!

மோதிலால்: ஒரு முறை என் மனைவி ஒரு ஆபரணம் வேண்டுமென்றாள். நான் யமுனை மாதாவைக் கேட்டேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு பிரபு என் படகை ஐந்து ரூபாய் வாடகைக்கு எடுத்தார். அதை வைத்து ஒரு ஆபரணத்தை வாங்கி என் மனைவியிடம் சொன்னேன் -“ யமுனை அம்மா இதை உனக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள். நமது முன்னோர்கள் பிரபு ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, சீதம்மா மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரை சித்ரகூடத்தை நோக்கி அவர்கள் வருகையில் உதவி புரிந்திருக்கின்றனர். அதனால் எனக்குக் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்திருக்க வேண்டும்.”

 

அந்தக் கனவான் மோதிலாலுக்கு நிறைய பணத்தைப் பரிசாக அளித்து விட்டுச் சொன்னார்:” நீ ரொம்ப நல்லவன். கங்கா மாதா, யமுனா மாதாவின் அருளும் அதே போல மிகவும் அற்புதமாக இருக்கிறது!”

 

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காண்லாம். இது ஆங்கில வார இதழான Truth  இல் 1-12-17 (தொகுதி 85; இதழ் 30) தேதியிட்ட இதழில் வெளி வந்துள்ளது.

நன்றி: Truth

 

 

2

 

Noble Righteous Hindus: Righteous Thinking

 

Vidya Vaibhav, Shri Abani Ranjan Sengupta, Acting Head Master, Hindu School, Calcutta compiled a book (two Volumes) in Bengali– Hindu Suhrid focusing on Hindu Glory.

 

 

He quotes a report of an incident that happened in 1942. A gentleman from Prayag writes – “I hired a country boat from Kella (Fort or Quila) Ghat for bathing in Triveni Sangam with few of ladies from my family during New Moon day of Kumbha Mela. The boatman’s name was Motilal”.

 

 

Gentleman – Motilal, How much did you earn since morning?

 

Motilal – “Sir, in morning one gentleman along with few ladies hired me. We agreed on Rs10. They went to perform the head tonsure ceremony at the sangam and told me. ‘We shall be late. You can make business with other persons meanwhile’. I secured Rs 8 with another party but could not find the gentleman out there on return. Then you came.”

 

 

Gentleman – What? That person cheated you on such an auspicious day?

 

Motilal– He could cheat me because it was my fate. I might have cheated him or someone else in my previous birth. I am suffering due to my own misdeeds. Whom should I blame?

 

 

Gentleman– Motilal, you are noble hearted.

 

It is such a delight to hear your story.

 

 

Motilal– Sir, I am the child of Mother Ganga and Yamuna. I make my living on them only. They only give me noble thinking and earning.

Gentleman – Great!

 

 

Motilal– “Once my wife wanted a garment. I asked Mother Yamuna. A little while after one gentleman hired me for Rs 5. I bought a garment with the same and told my wife. —“Mother Yamuna gifted you this. Our ancestors helped Lord Sri Ramchandra, Mother Sita and Lord Laxman to cross here on their jouney towards Chitrakut. I might have inherited some Punya.”

 

The gentleman tipped him generously and said “You are so Noble. Graces of Mother Ganga and Yamuna are equally great.”

 

*

3

இந்த தேசம் எதனால் இன்னும் ஜீவனுடன் இலங்குகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லல் படும் ஏழைப் படகோட்டி. ஆனால் அவனோ அப்படி அலுத்துக் கொள்ளவில்லை. அவனை ஏமாற்றவும் பல பேர். அதனால் அவன் மனமுடையவில்லை.

கங்கா மாதா, யமுனா மாதாவின் அருள் தன் மீது பொழிகிறது என்பதை அவன் உள்ளார்ந்து நம்புகிறான். அந்த நம்பிக்கையே அவனுக்கு எல்லாமாக இருக்கிறது.

 

அது, அவனை வாழ வைப்பதோடு இந்த தேசத்தையும் உயிர்த்துடிப்புடன் இருக்கச் செய்கிறது.

 

நகர்ப்புறத்தில் ஏமாற்று வேலையையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஃபிராடு கும்பலை இப்போது நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பகீர் என்கிறது.

அந்த திருட்டுக் கும்பல் இந்த தேசத்தை அரித்துப் பீடித்தாலும் தேசத்தின் ஜீவனை உயிர்மூச்சைத் துடிக்க வைப்பது மோதிலால் போன்ற ஏழைப் படகோட்டிகளே.

 

நன்றாக உற்றுப் பாருங்கள், உங்கள் அருகிலும் கூட ஒரு  மோதிலால் இருக்கக் கூடும். அவனைக் கையெடுத்துக் கும்பிடுங்கள்!

***

ஹிந்து பாரதி! (Post No.4478)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4478

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி இயல்

டிசம்பர் 11 : பாரதி பிறந்த தினம்; அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

ஹிந்து பாரதி!

 

.நாகராஜன்

1

மஹாகவியை கடந்த எண்பது ஆண்டுகளில் ‘எங்களில் ஒருவர்’ ஆக்க பலர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்; தொடரும் முயற்சிகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்.

முதலில் சிலர் பாரதியை ஒதுக்கிப் பார்த்தார்கள். அவனோ விசுவ ரூபம் எடுத்தான்.

பின்னர் சிலர் வெறுத்துப் பார்த்தார்கள். வெறுத்தவர்கள் வெறுக்கப்பட்டதால் மிரண்டு போனார்கள்.

இறுதியாக இருந்த ஒரே வழி புகழ்வது தான்.. அதிலும் அவர் எங்களில் ஒருவர் என்று சொல்லி விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது இல்லையா?

‘ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்ற வரியைக் கையிலே ஏந்திக் களமிறங்கினர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மதத்தைப் பற்றியும், சிவன், முருகன், கண்ணன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களை அவன் மனமுருகித் தொழுததற்கு விபரீத வியாக்யானங்களைத் தந்தனர். ஏனென்றால் மதம் என்பது அபின் இல்லையா அவர்களுக்கு! என்றாலும் எடுபடவில்லை!!

திராவிடப் பிசாசுகளுக்கு பாரதி என்றாலே பாகற்காய். கம்பனைப் புகழ்ந்த வம்பன் அல்லவா அவன்! ஆனால் பாரதிக்குக் கிடைத்த பாரதிரும் புகழ் கண்டு பயந்தவர்கள் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற வரியைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். ஆனால் இவர்களின் இரட்டை வேடத்தைக் காலம் தோலுரித்துக் காட்டியது. கர்த்தரின் ஏஜண்டுகளுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும், தலையில் முக்காடிட்டு நோன்பில் பங்கு கொள்வதும் ஒரு புறம் அவர்களைப் ‘பக்திப் பரவசத்தில்’ ஏற்ற, இன்னொரு புறமோ ராமனையும், கிருஷ்ணனையும் ஏசி, அம்பாள் எந்தக் காலத்திலடா அருள் பாலித்தாள் என்று வீர வசனம் பேசினர். மக்கள் இந்த ஜகஜாலப் புரட்டைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டனர். ஆக அவர்களும் வலுக்கட்டாயமாக பாரதி விழாக்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்க வேண்டி வந்து விட்டது.

சுயநல மதவாதிகளுக்கோ பாரதி கூறிய ஏசு, அல்லா உதவிக்கு வந்தது.

ஆக, பாரதியை ஒரு குழப்பு குழப்பி விட்டு ஒரு பெரிய உண்மையை எல்லோருமாகச் சேர்ந்து மறைக்க முயன்றார்கள்.

என்ன உண்மை அது?

ஹிந்து பாரதி! பாரதி ஹிந்துவாக வாழ்ந்தான்; ஹிந்துத்வத்திற்கு ஏற்றம் தந்தான். அது வாழ்ந்தால் உலகம் வாழும் என்று நம்பினான். அந்த ஹிந்து பாரதியைத் தங்கள் குப்பைக் கொள்கைகளாலும் வீர தீரப் பேச்சுக்களாலும் மூடி மறைத்தார்கள்!

மலையை, சிறு கை மறைக்க முடியுமா?

ஆதவன் ஒளியை, அறை இருட்டு எதிர் கொள்ளுமா?முடியாது.

ஹிந்துத்துவத்தின் அடிப்படையான அன்பால் (அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!) அனைவரையும் கட்டுப் படுத்தலாம் என்று பாரதி ஹிந்து சிந்தனையோடு ஏராளம், ஏராளம் எழுதினான்.

ஹிந்து பாரதி பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், அவனது எழுத்தைக் கொண்டே எழுதுவதாக இருந்தால், பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்தச் சிறு கட்டுரையில் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

ஒரு பானைச் சோற்றில் இவை சில பருக்கைகளே. ஆனால் அனைத்தும் உண்மையில் வெந்த பருக்கைகள்!

சுவையுங்கள். ஹிந்து பாரதியை அனைவருக்கும் சொல்லி ஆனந்தம் அடையுங்கள்.

2

உமையே பாரத தேவி

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களில் களித்திடும் கமலை நீ!

வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ   – வந்தே மாதரம்!

(பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கீதத்தில் பாரதி எப்படி மனதைப் பறி கொடுத்தான், வந்தேமாதரம் பற்றி எப்படியெல்லாம் பாடியுள்ளான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை)

 

ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னை …

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும்,

பாதகர் ஓதினும் மேதகவுற்றிடும் பண்புயர் மந்திரமும்…

மாணுயர் தேவி விரும்பிடும் வந்தேமாதரமே.

 

உபநிடதப் புகழ்

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூலிது போலே

 

 

வேத பூமி

நாரத கான நலந்திகழ் நாடு

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

 

உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!

 

நாவில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

ஹிந்து பாரம்பரியமே தேச பாரம்பரியம்!

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்?

எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்!

 

இப்படி வேத பாரதியின் வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் படித்தும் கூட ஹிந்து பாரதியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன!

ஹிந்துப் பண்பாட்டை, ஹிந்து அடித்தளத்தை வைத்தே சுதந்திரத்தை அடைய எழுச்சியை ஊட்டியவன் ஹிந்து பாரதி!

3

தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் நாயே!

இனி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் வாய்ச் சொற்களாக கம்பீரமான வார்த்தைகளில்  அவன் தரும் சில கருத்துக்கள்:

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

தாய்த்திரு நாட்டைத்  தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வண்மையும்

ஞானமும் அறியா நவைபடு துருக்கர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாட் படைகொணர்ந் தின்னல்செய் கின்றார்

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்.

தாய் பிறன் கைப்படச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?!

காளியும் கனக நல்நாட்டு தேவியும் ஒன்றே!

அடுத்து குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

வ.வே.சு. ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு  எழுந்தது இந்தக் கவிதை.

காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!

 

நீர் அனைவரும் தரும, கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றனையே சார்ந்தோர் ஆவீ ர்.

 

 

ஹிந்து பாரதியின் மனம் இன்னுமா புரியவில்லை?

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் அறிந்திலார் என்று பாரதி கேலி செய்வானே, அந்தக் கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடக் கூடாது.

செகுலரிஸ்டுகளும்  கம்யூனிஸ்டுகளும் போலி மதவாதிகளும் மேலே கூறியது போன்ற பாரதியின் நூற்றுக் கணக்கான வரிகளை எங்குமே மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே பாரதியை நாமே தான், நேரடியாகக் கற்க வேண்டும்.

4

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். முடிவே இருக்காது.

இறுதியாக ஒரு கட்டுரைப் பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

“ஆதி முதல் அந்தம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டு பண்ணி அவர்களில் தேசத் துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய  வீரத் தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோஹங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறே தான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம்.”

 

“ஆகாயத்தினின்று விழும் எல்லா ஜலங்களும் எப்படிக் கடலையே போய்ச் சேருமோ அவ்வண்ணம் எல்லா மதஸ்தர்கள் செய்யும் ஆராதனைகளும் ஒரே ப்ரஹ்மத்தைத் தான் சேரும் என்னும் வேதாந்த சமரஸ புத்தியை அடைந்து இனியாகிலும் ஒத்து வாழ வேண்டும்.”

 

மேற்கண்ட கட்டுரைப் பகுதிகள், “ இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்தக் கட்டுரை புதுவை சூரியோதயம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை பாரதியின் கட்டுரை அல்ல என்று அபிப்ராயப்படுகிறார் சீனி.விசுவநாதன். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டு. 1) நூலில் எங்கும் பாரதியின் பெயர் இல்லை. 2) நூலின் நடையும் பாரதியினுடையதாகத் தோன்றவில்லை.

 

அதாவது இந்தக் கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை.

ஆனால் ‘பாரதிக்குத் தடை’ என்ற நூலை எழுதியுள்ள வி.வெங்கட் ராமன் தனது நூலில் இது பாரதி எழுதியது தான் என்று ஆய்ந்து நிறுவியிருக்கிறார்.

சூரியோதயத்தில் பாரதியின் பணி குறிப்பிடத்தகுந்தது. ஆகவே இந்தக் கட்டுரையின் கருத்துகள் அவர் எழுதினாரோ இல்லையோ அவரது குழுவினரின் ஏகோபித்த கருத்து என்பதில் ஐயமில்லை.

“பிற தேச எதிரிகளுடைய வஞ்சக வேலையென்று முன்னமே தெரிவித்திருக்கிறோம்” என்ற கட்டுரை வரியை வைத்து இதர பாரதியின், “முன்னமே தெரிவித்திருக்கிற” பெயரிடப்பட்ட கட்டுரைகளை ஒப்பிட்டால் இது அவர் எழுதியதே என்ற முடிவுக்கு வர முடியும்.

5

 

பாரதிக்குச் சங்கடங்கள் ஏராளம். வெள்ளையரால் மட்டுமல்ல; நம்மவராலும் கூடத் தான். அவரைத் தன் மனதிற்கு ஏற்றபடி எல்லாம் ஒவ்வொருவரும் டிசைன் செய்யப் பார்ப்பதால் அவர் படும் அல்லல் ஏராளம்.

அவர் வாயில், தனக்குக் கெட்டது என்று தோன்றும் “கெட்ட வார்த்தைகள்” (செகுலர் அல்லாத என்று கொள்க) எதையும்  வந்து விட்டதாகச் சொல்லி விடக் கூடாது என்ற “பாரதியின் மீது கொண்ட கருணையால்” அந்த வார்த்தைகளை சென்ஸார் செய்த அறிஞர்களும் உண்டு.

சின்னச் சின்ன மாற்றங்களை – வார்த்தைகளை மாற்றி – சில்மிஷம் செய்த அறிஞர்களும் உண்டு.

ஆய்வுப் பதிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலோ, அவர்கள் அரசுக்குப் பயந்து இப்படியும் இருக்கலாம்; அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்ற பாணியில் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக மஹாகவிக்கு வாழ்ந்த நாளிலும் சங்கடம்; மறைந்த பிறகும் சங்கடம்.

இந்த சுயநலமிகளின் பதிப்புப் பணியில் ஹிந்து பாரதி மறைந்து விட்டார்.

நண்பர்களே, தேடிக் கண்டு பிடியுங்கள். உண்மை பாரதி தோன்றுவார்.

அப்படித் தோன்றும் பாரதி, ‘ஹிந்து பாரதி’ என்பதை அறிந்து மகிழலாம்.

***

பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471)

WRITTEN by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-52

 

 

Post No. 4471

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 92

மனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது

 

93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

 

94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு

யக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா?

 

95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.

  1. அசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.

97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.

 

98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட  அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.

 

99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.

 

100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.

 

101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா     ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவர்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.

  1. அந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.

103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.

  1. இதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.

106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.

 

  1. இந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.

 

108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.

 

109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்

 

110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.

எனது கருத்து

இந்தப்  பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்

 

“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும்,  ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.

 

ஆயினும் 26ஆவது (தம்மபதம்)  அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை  என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.

 

வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள்  30, 134, 543, 560, 28, 8).

ஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.

 

மநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

 

மனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.

 

இறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.

அவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.

 

சுபம்–

 

ஹிந்து வரலாற்று அதிசயம்: 28வது வியாஸர்! (Post No.4469)

Date: 7 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4469

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஹிந்து வரலாற்று அதிசயம்

28வது வியாஸர்!

 

ச.நாகராஜன்

 

1

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காகப் பகுத்தவர் வியாஸ்ர் என்பதை நாம் அறிகிறோம்.

வியாஸர் என்பது ஒரு பதவியின் பெயர்.

வேதத்தைப் பகுப்பவர் வியாஸர்.

கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களில் வேதம் ஒன்றாகவே இருக்கும்.

கலி யுகத்திலோ மனித ஆயுள் குறைவு. புத்தி சக்தி குறைவு. ஒன்றாக உள்ள வேதத்திலிருந்து ம்ந்திரம், பிரம்மாணம், சாமம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க மனிதர்களுக்கு சக்தி இருக்காது.

ஆகவே பிரம்மாண்டமான புத்தி உடைய ஒருவர் (வியாஸோ விசால புத்தே) மனித குலத்திற்கு உதவி செய்வதர்காக இப்படி வேதங்களை எளிது படுத்தி வகைப் படுத்தித் தருகிறார்.

கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கிறது.வேதோகிலோ தர்ம மூலம்.

தர்மத்தின் அடிப்படை வேதமே.

ஆகவே வேதத்தைப் பாதுகாத்தால் தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் ஆகிறோம்.

பாரத பூமிக்கு ஹிந்து ராஷட்ரம் என்று பெயர் சூட்ட வேண்டியது இயல்பான ஒன்று. ஆனால் இன்று இந்தியா என்கிறோம்.

செகுலரிஸ்டுகளுக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ!

ஹிந்து ராஷட்ரம் என்று சொல்ல வேண்டாமென்றால் தர்ம ராஷ்ட்ரம் என்று சொல்லலாம். தர்ம ராஷ்ட்ரம் என்றால் வேத ராஷ்ட்ரம் என்று பொருள்.

வேதம் உடையதிந்த நாடு என்றார் பாரதியார்.

அது தான் நமக்குப் பெருமை!

அது ஒன்றே தான் நமக்கு அடிப்படைப் பெருமை.

இதர நாடுகளுக்கு இல்லாத அஸ்திவாரம் நம்மிடம் தான் இருக்கிறது.

இதை யுகம் யுகமாகக் காப்பாற்றுவதற்கென்றே வேத வியாஸர் அவதரிக்கிறார்.

இப்போது 28வது கலியுகம் நடக்கிறது.

இதற்கு முன் நடந்த 27 சதுர்யுகங்களிலும் 27 வியாஸர்கள் இருந்திருக்கின்றனர்.

அருள் புரிந்திருக்கின்றனர்.

 

2

28 வேத வியாஸர்களின் பட்டியல் இதோ:

 

ஸ்வாயம்புவ மனு (த்வாபரத்தில் அவதரித்தார்.) அவரே முதல் வியாஸர்.

ப்ரஜாபதி இரண்டாவது வியாஸர்

உசநஸ் மூன்றாவது வியாஸர்

பிருஹஸ்பதி நான்காவது வியாஸர்

சூரியன் ஐந்தாவது வியாஸர்

ம்ருத்யு ஆறாவது வியாஸர்.

இந்திரன் ஏழாவது வியாஸர்.

வஸிஷ்டர் எட்டாவது வியாஸர்

ஸாரஸ்வதர் ஒன்பதாவது வியாஸர்

திரிதாமா பத்தாவது வியாஸர்

திரிவிருஷர் பதினொன்றாவது வியாஸர்

பரத்வாஜர் பன்னிரெண்டாவது வியாஸர்

அந்தரிக்ஷர் பதிமூன்றாவது வியாஸர்

தர்மர் பதிநான்காவது வியாஸர்

த்ரய்யாருணி பதினைன்ந்தாவது வியாஸர்

தனஞ்சயர் பதிறாவது வியாஸர்

மேதாதிதி பதினேழாவது வியாஸர்

விரதி பதினெட்டாவது வியாஸர்

அத்ரி பத்தொன்பாவது வியாஸர்

கௌதமர் இருபதாவது வியாஸர்

ஹர்யாத்மா இருபத்தொன்றாவது வியாஸர்

வாஜச்ரவஸ் இருபத்தியிரண்டாவது வியாஸர்

ஸோம ஆமுஷ்யாயணர் இருபத்திமூன்றாவது வியாஸர்

த்ரிணபந்து இருபத்திநான்காவது வியாஸர்

பார்க்கவர் இருபத்திஐந்தாவது வியாஸர்

சக்தி இருபத்தியாறாவது வியாஸர்

ஜாதுகர்ண்யர் இருபத்தியேழாவது வியாஸர்

இப்போதுள்ள கலியுகத்தில் இருபத்தெட்டாவது வியாஸராக நாராயணனே அம்சாவதரமாக அவதரித்துள்ளார்.

வேத வியாஸரின் மஹிமை பற்றி மஹாபாரதத்தில் காணலாம்.

அடுத்த வியாஸராக – இருபத்தொன்பதாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தில் – வரப்போவது அஸ்வத்தாமா.

 

3

ஹிந்துக்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. வரலாறுத் தொகுப்பையே நாம் தான் கற்றுத் தந்திருக்கிறோம் என்று பல மேலை நாட்டு அறிஞர்கள் பெருமிதமாகக் கூறுவது வழக்கம்.அதை அப்படியே எழுதியுள்ளனர்.

ஆனால் 28 சதுர் யுக சரிதத்தையும் விளக்கியுள்ள ஒரே மதம் ஹிந்து மதம் தான்.

வேறு எந்த ஒரு மதமும், நாகரிகமும் இப்படி ஒரு காலக் கணக்கைத் துல்லியமாகத் தந்ததில்லை.

ஆகவே தான் காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலக மதங்களையெல்லாம், உலக நாகரிகங்களையெல்லாம் முற்றிலுமாக ஆராய்ந்து விட்டு பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் ரீதியிலாகக் கணக்கிட்டுச் சொல்லும் அதே கால அளவை ஹிந்து மதம் ஒன்று மட்டுமே தருகிறது என்று கூறி தன் தொடரின் முதல் காட்சியில் சிதம்பரம் நடராஜரைக் காட்டினார்.

அத்துடன் அவர் சிதம்பரத்திற்கு வருகை புரிந்து நடராஜரைத் தரிசித்தார்.

ஆக பிரபஞ்ச வரலாறையே தந்துள்ள ஹிந்து மதம், முகலாய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் தன் இயல்புத் தன்மையில் ஒரு பங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது உண்மை.

பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப நாம் ஓவொருவரும் முயற்சி எடுத்தால் பொற்காலம் தோன்றும்.

 

4

நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்த போது “ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

“என்ன விஷயம்”, என்றேன்.

“நம் மதத்தை எடுத்துக் கொண்டால் பல விவரங்கள் குழப்பமாக உள்ளன. இதோ பாருங்கள், சப்த  ரிஷிகள் என்று இரண்டு பட்டியல் உள்ளன. இதில் எது உண்மை?” என்று அவர் கேட்டார்.

அதை வாங்கிப் பார்த்த நான், “இரண்டுமே உண்மை” என்றேன்.

“என்ன, இன்னும் அதிகமாகக் குழப்புகிறீர்கள்?” என்றார் அவர்.

“ஒரு குழப்பமும் இல்லை. பல லட்சம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்டுள்ளோம் நாம். சப்தரிஷி பட்டியலைப் பார்க்கும் போது இது எந்த சதுர்யுகத்திற்கானது, எந்த மன்வந்தரத்திற்கானது என்று கேட்டால் விடை சுலபமாக வந்து விடும்.

27 மன்வந்தரம் கடந்தவர்கள் நாம். ஆக இந்த இரண்டு பட்டியலுமே உண்மை. வெவ்வேறு மன்வந்தரத்திற்கு உரிய சப்த ரிஷிகள் இவர்கள்” என்றேன்.

“அடடா, இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! இதைச் சொல்வதற்கு ஆள் இல்லையே” என்றார் அவர்.

 

5

புராண, இதிஹாஸம் மிகவும் பரந்தது. சுலபமாக அதைக் கற்றுக் கரை சேர முடியாது.

ஆகவே தான் சமீப காலம் வரை மண்டபங்களிலும் கோவில்களிலும் பிரவசனகர்த்தாக்கள், இதிலேயே ஊறி அனைத்தையும் அறிந்த நிபுணர்கள் – பல்வேறு விஷயங்களை மால நேரத்தில் கூறுவார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில்..

நாமே குழுவை அமைத்து இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

படித்தும் தெரிந்து கொள்ளலாம் – தமிழ் அண்ட் வேதாஸ் டாட் காம் (www.tamilandvedas.com) கட்டுரைகளைப் படிக்கலாம்; பயன் அடையலாம்.

****

 

 

 

 

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6 (Post No.4458)

Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-34

 

 

Post No. 4458

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இதற்கு முந்தைய ஐந்து பகுதிகளைப் படித்துவிட்டு இதையும் படிப்பது பொருள் விளங்க உதவும்.

எனது விமர்சனத்தை இறுதியில் கொடுத்துள்ளேன்.

 

ஸ்லோகம் 71: தேவர்களுக்கு ஒரு யுகம் என்பது 12,000 தேவ வருடங்கள்; அதாவது நாலு யுகங்கள்.

 

72.தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மனின் ஒரு நாள். இதே போல இரவும் ஆயிரம் யுகம்.

 

73.பிரம்மனுடைய பகல் புண்ணிய காலம்; இரவு சொப்பன காலம். ஆயிரம் யுகங்களுப் பின்னர் பிரம்மனின் ஆயுள் முடிகிறது.

74.பிரம்மா விழித்துக்கொண்டவுடன் பூர், புவ, சுவர் லோகங்களை மீண்டும் படைக்கிறார். ஏனெனில் தினப் பிரளயத்தில் அழிவது இந்த மூன்று உலகங்கள் மட்டும்தான். இதுவே சத், அசத் (நல்லது, கெட்டது).

75.பிரம்மாவின் மனதில் தோன்றிய ஆசை முதலில் ஆகாயத்தைப் படைக்கிறது; அதன் குணம் சப்தம் (ஒலி)

76.அந்த ஆகாயத்திலிருந்து நறுமணம் நிரம்பியதும், தூய்மையுமானதும், வலிமை நிரம்பியதாகவும் காற்று உண்டாகிறது. இதன் குணம் ஸ்பரிசம்; அதாவது தொடும் உணர்ச்சி.

 

  1. அந்த வாயு என்னும் காற்றிலிருந்து ஒளிமிகுந்த தேயு, அதாவது தீ உண்டாகிறது. அதன் குணம் உருவம் (ரூப). அது இருளைப் போக்கும்

 

78.தேயு எனப்படும் தீயிலிருந்து அப்பு எனப்படும் தண்ணீர் உண்டாகிறது. அதன் குணம் ருசி (சுவை). அதிலிருந்து பிருதுவி என்பப்படும் பூமி தோன்றுகிறது; அதன் குணம் (இயல்பு) வாசனை (கந்தம்).

இதுதான் தினப் பிரளயம் என்பது; அதாவது பிரம்மாவின் ஒரு நாள்

 

  1. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு தேவ யுகம் என்று சொல்லப்பட்டதல்லவா? அது போல 71 முறை நடந்தால் ஒரு மனுவின் அதிகாரம் முடிந்ததாகிவிடும்; அதைத்தான் மன்வந்தரம் என்கிறோம்.

 

80.இவ்வாறு அளவற்றதான மன்வந்தரங்களின் சிருஷ்டியும் சம்ஹாரமும் (படைப்பும் அழிப்பும்) பரம்பொருளின் விளையாட்டு போல நிகழ்கிறது’

 

  1. (முதல் யுகமான) கிருத யுகத்தில் தருமமும் சத்தியமும் நான்கு கால்களுடன் நிற்பதால் மனிதர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது.

82.மற்ற யுகங்களில் களவு, பொய், வஞ்சகம் ஆகியவற்றால், அறவழியில்லாத வகையில் சம்பாதிக்கப்பட்ட பொருள், கல்வி அறிவால், தர்மம் என்பது ஒவ்வொரு காலாக (பகுதியாகக் ) குறைகிறது.

 

83.கிருத யுகத்தில் மனிதனின் ஆயுள் 400 வருஷம். நோய் நொடிகள், துன்பம் இராது. அவர்கள நினைத்தது நடக்கும்; கிடைக்கும்; தவ வலிமையால் ஆயுளை அதிகரிக்கவும் இயலும்.இதற்கு அடுத்தடுத்த யுகங்களில் வயது நூறு நூறாகக் குறைந்து கொண்டே வரும்

 

84.மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், நினைத்ததை முடிக்கும் வல்லமையும், பிராமணர்களின் சாபங்களும் அனுக்கிரகங்களும் யுகத்திற்கேற்றவாறு பலன் தரும்

  1. .கிருத யுகத்தின் தர்மம் வேறாகவும் திரேதா யுகத்தின் தர்மம் வேறாகவும் துவாபர யுகத்தின் தர்மம் வேறாகவும் கலி யுகத்தின் தர்மம் வேறாகவும், யுகத்திற்குத் தக்கவாறு குறைவாக வரும்.

 

86.கிருத யுகத்துக்குத் தவமும், திரேதா யுகத்துக்கு ஆத்ம ஞானமும், துவாபர யுகத்துக்கு யக்ஞம் எனப்படும் வேள்வியும், கலியுகத்துக்கு தானம் எனப்படும் கொடுத்து உதவுதலும் முக்கிய தர்மமாக இருக்கும்

 

87.அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக,  தனது முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றிலிருந்து முறையே பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர வருணத்தாரைப் படைத்து அவரவர்களுக்கு உரிய தொழில்களை தனித் தனியாக வகுத்தார்.

 

88.பிராமணர்களுக்கு ஆறு தொழில்களைக் கொடுத்தார்; வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்

 

89.க்ஷத்ரியர்களுக்கு வேதம் ஓதுதல், குடிமக்களைக் காத்தல், தானம் கொடுத்தல், வேள்விகள் இயற்றல் முதலிய கருமங்களைக் கொடுத்தார். அத்தோடு பாட்டு, கூத்து, பெண்கள் ஆகியவற்றில் ஈடுபடவும் தடை போட்டார் (கேட்பதற்கோ காண்பதற்கோ, ஆதரவு தருவதற்கோ தடை இலை. தானே அந்தத் தொழிகளில் ஈடுபடுவதற்கே தடை)

 

90.வஸ்யர்களுக்குப் பசுவைக் காத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பூமியிலுண்டான இரத்தினம், நெல் தானியங்களில் வியாபாரம் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

 

 

  1. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்யும் தொழிலை ஏற்படுத்தினார்.

xxxx

 

எனது கருத்து

 

மனு நீதி நூலைக் குறை கூறுவோர் அதிலுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்பதானால்தான் அதைக் குறை கூற  முடியும். மனு தன்னுடைய நீதி த்ருஷத் வதி– சரஸ்வதி நதி தீரத்துக்கு இடைப்பட்ட நீதிகள் என்று சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? அதாவது வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்குவது இதுதான்

 

மனு, கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மக்களின் வயது என்றும் ஒவ்வொரு யுகத்திலும் 100 வயது வீதம் குறைந்து கொண்டே வரும் என்றும் சொல்கிறார். மற்ற விஷயங்களில் மனுவின் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வோர் இது பற்றி இயம்புவது யாதோ?

 

குறை கூறுவோரை ஒதுக்கிவிட்டு நாம் இதை (400 ஆண்டுகள் மக்களின் வயது) ஆராயப் புகுந்தால், இதுவரை அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் சண்டை சச்சரவு, நோய் நொடியில்லாத அமைதியான வாழ்க்கை வாழ்வோர் 120 முதல் 150 ஆண்டுவரை வாழ்ந்ததற்கு சான்று உண்டு.

 

மனு தர்மமோ, பகவத் கீதையோ வர்ண ஆஸ்ரமம் பற்றிப் பேசும்போது அது தொழில் முறைப் பகுப்பு என்றே சொல்கின்றன. ஆயினும்  புரோகிதர் மகன் புரோகிதனாகவும் மன்னர் மகன் மன்னனாகவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஐயர் மகன், ஐயராக இருப்பது தப்பு என்று சொல்லுவோர்,  உ லகம் முழுதும் மன்னன் மகன் மன்னனாக — பரம்பரைத் தொழிலாக — இருந்ததை ஏன் குறை கூறுவதே இல்லை. அது சரி என்றால் புரோகிதர் மகன் புரோகிதனாக இருந்ததைப் பற்றிக் கவலைப் படவோ ஆதங்கப்படவோ உரிமை இல்லை.

 

 

இப்போது அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகவும், சினிமா நடிகர் மகன் சினிமா நடிகராகவும் இருப்பதை ஏன் குறை கூறுவதில்லை; ஒவ்வொரு து றையிலும் இப்படிப் பார்க்கிறோம். ஆகவே, அந்தக் காலத்தில் இப்படி இருந்ததில் என்ன வியப்பு? என்ன குறை?

 

யாரும் யாரையும் முன்னேற விட முடியாமல் தடுத்தால் தவறு. அப்படி ஒரு சான்றும் இல்லாமல் பிராமணர்களும் கூட மன்னனாகவும், மன்னர்களும் கூட பிராமணனாகவும் மாறியதை புராண, இதிஹாசங்களில் படிக்கிறோம்.

 

பெரும்பாலும் குலத்தொழில் முறைதான் இருந்தது. தமிழ் மன்னரின் மகன்தான் தமிழ் மன்னரானான். பாமரன் ஆகவில்லை! இதில் ஏன் குறை காண்பது இல்லை?

பிராமணர்- சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள் மட்டுமே இருப்பதாக திராவிட அரசியல்வாதிகள் கிளப்பியதும் பொய்; ஆரியர்- திராவிடர் என்ற இரண்டே இனங்கள்தான் உண்டு என்று வெளிநாட்டினர் பரப்பியதும் பொய்; பிறப்பு மட்டுமே ஜாதியை நிர்மாணிக்கும் என்பதும் தவறு என்பதை புராண, இதிஹாசங்களைப் படிப்போருக்கு நன்கு விளங்கும்.

நான் ஐந்தாம் பகுதியில் சொன்னது போலவே வெவ்வேறு காலக் கணக்கீடு உள்ள பல வெளி உலகங்கள் இருப்பதும் மேற்கூறிய ஸ்லோகங்கள் மூலம் தெரிகிறது.

யுகங்களைப் பற்றிய மநுவின் வர்ணனை மிகவும் அழகானது. கிருதயுகத்தை ஒரு பசுமாடாக கற்பனை செய்தால் அதற்கு 4 கால்கள்; அடுத்தது த்ரேதா யுகம் அதற்கு மூன்றே கால்கள்; அடுத்தது த்வாபர யுகம் அதற்கு இரண்டே கால்கள்; அடுத்தது கலியுகம்; அதற்கு ஒரே கால்; நாம் வாழும் காலம்!

 

யுகங்கள் இறங்கு வரிசையில் பெயர் இடப்பட்டதும் இந்த பசு அல்லது ஒரு டேபிள் (Table or Chair) என்ற கற்பனையில்தான் போலும்! த்ரே=3, த்வா=2; பின்னர் கலியுகம்.

 

நான்கு வருணத்தாரும் உண்டான விதம் ரிக் வேதத்தில் புருஷ சூக்த துதியில் (10-90) வருகிறது. அருமையான கற்பனை; பிராமணன் வாயினால் பிழைப்பதால் (வேதம் ஓதி) முகத்திலிருந்து வந்தான் என்றும் போர்வீரன் தோள் பலத்தால் பிழைப்பதால் தோளிலிருந்து க்ஷத்ரியன் வந்தான் என்றும் உழுதும் வியாபாரம் செய்தும் பிழைப்பதால் வைஸ்யன் தொடையில் இருந்து வந்தான் என்றும் உடல் உழைப்பால் பிழைப்பதால் சூத்திரன் காலில் இருந்து வந்தான் என்றும் சொல்லும்; இந்த உடலில் எந்த உறுப்பு இல்லாவிடிலும் அது மனிதன் இல்லை. அது போல சமுதாயத்தில் இந்த நான்கு உறுப்புகள் இல்லாவிடில் அது சமுதாயம் இல்லை. இன்றும் கூட இந்த நான்கு தொழில்கள்தான் உலகின் மிகப்பெரிய தொழில்கள்: கல்வி; படைகள், வணிகம், உடலுழைப்பு வேலைகள்.

2600-க்கும் மேலான பாடல்கள் அடங்கிய மனுநீதியில் இப்போதுதான் 91 ஸ்லோகங்களை முடித்துள்ளோம்.

 

தொடரும்—————-

 

புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’ (Post No.4444)

Written by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-38 am

 

 

Post No. 4444

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler  (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

அவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில்  அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

 

இசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்

விலை என்ன? இதன் விலை என்ன? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.

 

ஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.

பிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக? என்றார்.

 

நீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.

அடக் கடவுளே! நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.

“ஏ, மாப்ளே! அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம்   கடைக்குளதான் நடந்தது. கடையின்  மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.

 

ஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.

பெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம்? லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது!

 

xxxxx

 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!

“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா!”

 

டாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா! நீ பெரிய மேதை டா! என்றார்.

பூ, ச்சீ, மேதையா? என்ன சொன்னாய்?

உனக்குத் தெரியுமா? புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.

உடனே சாரசதே சொன்னார்:

“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா? 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்!!!”

 

(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?)

இசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.

 

xxxxx

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!

“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்!”– பெடெரெவ்ஸ்கி

 

போலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:

நான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.

 

நான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து  பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்! என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்!

 

TAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்

–SUBHAM–

பெண்டாட்டி தாசன், ராமானுஜ தாசனாக மாறிய சுவைமிகு கதை (Post No.4440)

 

COMPILED by London Swaminathan 

Date: 28 NOVEMBER 2017 

Time uploaded in London- 6-43 am

Post No. 4440

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளை உறங்காவில்லியார் சரிதத்தை கண்ணபிரான் பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டில் அழகான தமிழ் நடையில் எழுதியுள்ளார். ஆகையால் அதை அப்படியே இணைப்பாகக் கொடுக்கிறேன். பெண்டாட்டிதாசனாக இருந்த உறங்காவில்லி, ராமானுஜ தாசனாக மாறிய கதை மிக உருக்கமான கதை. சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் போல வைணவ மரபில் இவர் ஒரு வேடர் குல அடியார் ஆவார்.

இரண்டாவது பகுதியில் ஜாதியில் உயர்ந்ததாக நினைத்த அடியார்களுக்கு ராமானுஜர் தன் வழியில் பாடம் கற்பித்த ஒரு சம்பவமும் வருகிறது.

.இரண்டு சம்பவங்களும் மிக உருக்கமான சம்பவங்கள். அனைவரும் படித்து ஆனந்தமடைய வேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

—Subham–

 

 

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)


Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 11-55 AM

 

 

Post No. 4437

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

டிசம்பர் மாத (ஹேவிளம்பி- கார்த்திகை/மார்கழி) காலண்டர், 2017

இந்த மாதக் காலண்டரில், 31 அபூர்வ ராமன் இருக்கும் இடத்தில் இடம்  பெறுகின்றன.

 

முக்கிய நாட்கள்:  – டிசம்பர் 2 -கார்த்திகை தீபம்; 3- ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம், பாஞ்சராத்ர தீபம்; 11-பாரதியார் பிறந்த நாள்; 16- மார்கழி/ தனுர் மாத துவக்கம்; 25-கிறிஸ்துமஸ்; 29-வைகுண்டஏகாதசி;

அமாவாசை – 17; ஏகாதசி – 13, 29; பௌர்ணமி—  3

முகூர்த்த நாட்கள்: 7, 13

 

XXXXXXXXXXXX

டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை

யத்ர ராமோபயம் நாத்ர நாஸ்தி தத்ர பராபவஹ — வால்மீகீ ராமாயணம் 4-49-15

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை; தோல்வியும் இல்லை

XXXXXX

 

டிசம்பர் 2 சனிக்கிழமை

அமோகோ தேவதானாஞ்ச ப்ரஸாதஹ கிம் ந சாதயேத்?

கடவுளின் கருணை இருந்தால் எது சாத்யமில்லை? –கதாசரித் சாஹரம்

 

XXXXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை

அசிந்தனீயோ மஹிமா பரேசிதுஹு –கஹாவத்ரத்னாகர்

கடவுளின் மஹிமை அளபற்கரியது

XXXXXX

 

டிசம்பர் 4 திங்கட்கிழமை

லோகோ ஹி சர் வோ விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை

 

ஈஸ்வராணாம் ஹி விநோதரஸிகம் மனஹ  — கிராதர்ஜுனீய

கடவுளரின் மனது விநோதரசனையில் திளைக்கிறது.

XXXXXX

டிசம்பர் 6 புதன்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 7 வியாழக்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை

ந ஹி ஈஸ்வரவ்யாஹ்ருதயஹ கதசித்புஷ்னந்தி லோகே விபரீதமர்தம் – — குமார சம்பவம் 3-63

இந்த உலகில் இறைவனின் சொற்கள் பொய்த்ததில்லை

XXXXXX

 

டிசம்பர் 9 சனிக்கிழமை

தாதுஹு கிம் நாம துர்கதம் –ப்ருஹத்கதாமஞ்சரி

படைத்தவனுக்கு இயலாதது என்ன?

XXXXXX

 

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை

ந சந்தி யாதார்த்யவிதஹ பிநாகினஹ –குமார சம்பவம் 5-77

சிவனின் உண்மை நிலையை அறிந்தவர் எவருமிலர்

XXXXXX

டிசம்பர் 11 திங்கட்கிழமை

மதுரவிதுரமிஸ்ராஹா ஸ்ருஷ்டயஹ சம்விதாதுஹு –பிரஸன்ன ராகவ `

இனிப்பையும் கசப்பையும் கலந்தளிப்பவன் இறைவன்

XXXXXX

 

டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமை

லோகோ ஹி சர்வே விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

 

 

டிசம்பர் 13 புதன்கிழமை

த்வந்த்வாத்மகோஅயம் சம்சாரஹ விதினா நிர்மிதோ அத்புதஹ

பிரம்மாவின் படைப்பில்தான் எத்தனை முரண்பாடுகள்? –கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 14 வியாழக்கிழமை

ந சக்யம் லோகஸ்யாதிஷ்டானபூதம் க்ருதாந்தம் வஞ்சயிதும்— பாலசரித

மரணதேவனை ஏமாற்ற எவராலும் முடியாது. உலகின் ஆதாரமே அவன்தான்

XXXXXX

 

டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை

நாராயணபராஹா  சர்வே ந குதஞ்சன பிப்யதி — பாகவதபுராண 6-17-28

நாராயண பக்தர்கள் அஞ்சுவது யாதொன்றுமில

XXXXXX

டிசம்பர் 16 சனிக்கிழமை

ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து- விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

நாராயணன் என்ற நாமம் கேட்ட உடனே துக்கங்கள் பறந்தோடும்

XXXXXX

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிசர்கோ அதிகாதிகஹ——– கதாசரித் சாஹரம்

பிரம்மாவின் படைப்புகள் அற்புதம், அதி அற்புதம்!

XXXXXX

 

டிசம்பர் 18 திங்கட்கிழமை

நித்யம்ப்ரயதமனானாம் சஹாயஹ பரமேஸ்வரஹ

கடமையைச் செய்பவனின் வலதுகை ஆண்டவன்

XXXXXX

டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை

பதஹ ச்ருதேர்தர்ஸயிதார ஈஸ்வரா மலீமசாமாத்ததேந பத்ததீம்

 

குறுக்கு புத்தி கொண்டவர்களின் சதிகளை இறைவன் மூடிமறைப்பதில்லை அவர்களே,  வேதம் சொல்லும் அறவழிப்பாதையில் செல்லக் கட்டளையிடுபவர்கள் –காளிதாஸரின்  ரகுவம்சம் 3-46

 

XXXXXX

டிசம்பர் 20 புதன்கிழமை

 

ப்ராஜானாம் தைவதம் ராஜா பிதரௌ தைவதம் சதாம்-

ராமாயண மஞ்சரி

மக்களுக்கு தெய்வம் போன்றவர் ராஜா;  நல்லோருக்கு தெய்வம் போன்றவர் அவரவர் பெற்றோர்.

XXXXXX

டிசம்பர் 21 வியாழக்கிழமை

 

ப்ரசன்னே ஹி கிம் ப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஆண்டவன் மகிழ்ந்தால், நாம் அடைய முடியாததுதான் என்ன? —–கதாசரித் சாஹரம்

XXXXXX

 

டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை

விஷமப்யம்ருதம்கஸ்சித்பவேதம்ருதம் வாவிஷ்மீஸ்வரேச்சயா– காளிதாஸரின்  ரகுவம்சம் 8-46

ஆண்டவன் நினைத்தால் விஷம் அமுதமாக மாறும்; அமுதம், விஷமாக மாறும்

XXXXXX

டிசம்பர் 23 சனிக்கிழமை

அஹம் த்யாகி ஹரிம் லபேத்

அஹம்காரத்தை விட்டவன் கடவுளை அடைவான் -கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஷ்ணேன தேஹோத்தரணாய சேஷஹ —-குமார சம்பவம்  3-13

ஆதி சேஷன் எனும் பாம்பு பூமியையே தாங்குவதைப் பார்த்த கிருஷ்ணன், அதைத் தனக்கு மெத்தையாகப் போட்டுக்கொண்டான்

XXXXXX

 

டிசம்பர் 25 திங்கட்கிழமை

சுதுஷ்கரமபி கார்யம் ஸித்யத்யனுக்ரஹவதீஷ்விஹ தேவதாசு -கதாசரித் சாஹரம்

ஆண்டவன் அருள் இருந்தால் நடக்கமுடியாத செயல்களும் நடந்துவிடும்

XXXXXX

 

டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை

சுசிகாமா ஹி தேவதாஹா—– பாரதமஞ்சரி 3-32

சுத்தம் விஷயத்தில் தெய்வங்கள் மிகவும் அலட்டிக்கொள்ளும்

XXXXXX

 

 

டிசம்பர் 27 புதன்கிழமை

ஸ்வல்பகாரணமாஸ்ரித்ய விராட் கர்ம க்ருதம் மஹத் – கஹாவத்ரத்னாகர்

சொல்பத்தைக் கொண்டு மஹத்தானவைகளைப் படைத்துவிட்டார் பிரம்மா

XXXXXX

 

டிசம்பர் 28 வியாழக்கிழமை

தேவோ துர்பலதாதகஹ —– சுபாஷித ரத்ன பாண்டாகார 3-136

பலவீனமானவருக்கு இறைவன் உதவமாட்டான்

XXXXXX

 

டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கோ தேவதா ரஹஸ்யானி தர்கயிஷ்யதி

இறைவனின் லீலைகளை அறிபவர் யார் ?—— விக்ரமோர்வஸீயம்

XXXXXX

 

டிசம்பர் 30 சனிக்கிழமை

சர்வதா சத்ருசயோகேஷு நிபுணஹ கலு ப்ரஜாபதிஹி – பாததாதிதக 115-2

ஒருமித்த கருத்துடையோரை ஒன்று சேர்ப்பதில் இறைவன் திறமைசாலி

XXXXXX

டிசம்பர் 31  ஞாயிற்றுக்கிழமை

ஸர்வதேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

நாம் செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனை அடைகிறது

 

First January MONDAY 2018,  Happy New Year

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

sex கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி (Post No.4436)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-28 am

 

 

 

Post No. 4436

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கியம் : பெண்களின் நுட்பமான அறிவு

 

மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

 

ச.நாகராஜன்

 

1

நள தமயந்தியின் சரித்திரம் பாரதம் முழுவதும் தெரிந்த அற்புதமான ஒரு சரித்திரம். இதை வெண்பா பாக்களினால் தமிழில் புகழேந்திப் புலவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

வடமொழியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் நைஷதம் என்ற மஹாகாவியத்தை இயற்றியுள்ளார். இது ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.

இந்தக் காவியத்தின் அழகில் ஈடுபட்டான் தமிழ் மன்னன் ஒருவன்.

 

 

அவர் பெயர் அதிவீர ராம பாண்டியர்; பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர். கொற்கையிலிருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பெரும் கவிஞர். வடமொழியில் விற்பன்னர். சிற்றின்பப் பிரியர். தமிழில் கொக்கோகத்தை எழுதியவரும் இவரே.

 

இவரது மனைவியாரும் சிறந்த தமிழ் அறிஞர்.

 

வடமொழிப் புலமையால் அதில் இருந்த நூல்களில் புலமை கொண்ட அதிவீர ராம பாண்டியன் நைஷத காவியத்தில் மனதைப் பறி  கொடுத்து அதைத் தமிழில் இயற்றினார். இதில் 1172 செய்யுள்கள் உள்ளன.

 

இதை அரங்கேற்றம் செய்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்குக் காணலாம்

2

நைடத காவியம் அரங்கேற்றம் ஆரம்பமானது. புலவர்கள், ரஸிகர்கள் அவையில் கூடினர். அதிவீர ராம பாண்டியன் தன் காவியத்தை அரங்கேற்றும் செய்யும் விதமாகச் செய்யுள்களைப் படித்து அதை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

 

முதல் படலமான நாட்டுப் படலம் முடிந்தது. அடுத்து நகரப் படலம் ஆரம்பமானது.

அதில் தான் இயற்றிய செய்யுளைப் படிக்கலானார் அதி வீர ராம பாண்டியன்.

 

வாய்ந்த மின்னைம டந்தைய ராக்கிவிண்

பேர்ந்தி டாமலன்  றோமலர்ப் புங்கவன்

சாந்த ணிந்தத மனியக் குன்றென

ஏந்து வெம்முலைப் பாரமி யற்றினான்

 

 

நகரத்தை வர்ணிக்க வந்த போது அமைந்த பாடல் இது.

இதன் பொருள் :-  தாமரைப் பூவில் இருக்கின்ற  நான்முகக் கடவுள் (புங்கவன்) மேகத்தின் கண் பொருந்திய மின்னற் கொடிகளை மங்கையராக்கி மீண்டும் அம்மேகத்தினிடத்தே போகாமல் இருத்தற்கன்றோ  சந்தனத்தைப் பூசி அமைக்கப்படுகின்ற, விருப்பம் செய்கின்ற, பாரமாகிய பொன்மலையைப் போல (தமனியக் குன்று)  அந்த நன்முலைகளை (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்) அந்த மங்கையருக்கு  உண்டாக்கினான்.

 

பிரம்மா மங்கையருக்கு ஏன் முலைகளை அமைத்தான் என்பதைக் கற்பனை நயம் படப் பாண்டியன் கூறி முடித்தார்.

இதைப் பாண்டியன் கூறி முடித்தவுடன் அவையிலிருந்த புலவர் ஒருவர் எழுந்தார்.

 

“அரசே! மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம்? இது பொருத்தமற்றதாக அல்லவா உள்ளது. இதை விளக்க வேண்டும்” என்றார்.

 

மங்கையரின் கொங்கைகளை ஏன் பிரமன் அமைத்தான் என்பதைச் சொல்லப் போய் வம்பில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்த பாண்டியன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அந்தச் செய்யுளுடன் அன்றைய அரங்கேற்றத்தை முடித்து, “நாளை இதைத் தொடருவோம்” என்றான்.

 

 

அரண்மனைக்கு மீண்ட மன்னன் ஓயாத சிந்தனையில் ஆழ்ந்தான். இந்தப் பாடலுக்கு எப்படிப் பொருள் சொல்வது. மேகத்தில் தோன்றி மறையும் மின்னலுக்கும் மலைக்கும் எப்படி ஒரு சம்பந்தத்தை உருவாக்குவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.

அந்தப்புரம் வந்த மன்னன் படுக்கையில் உறக்கமின்றி முகம் வாடிப் படுத்தான்.

 

மஹாராணியார் பெரும் புலமை வாய்ந்தவர். நல்ல கவிஞர். அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்து காலையில் நடந்த அரங்கேற்ற சம்பவத்தையும் நினைத்து அவனது முகம் வாடி இருக்கும் காரணத்தை அறிந்தாள்.

 

மெல்ல மன்னரிடம் பேச்சை ஆரம்பித்தாள். “நீங்கள் பாடிய பாடல் மிக அருமை” என்றாள்.

 

மன்னனோ, “அது எப்படி? மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் கூறுவது?” என்றான்.

 

“அது சுலபம். அது இயல்பாய் அமைந்த ஒன்று தானே” என்றாள் சர்வ சாதாரணமாக ராணி.

 

ஆர்வம் மேலோங்க, “எங்கே, அர்த்தம் சொல்லேன்” என்றான் பாண்டியன்.

 

ராணி விளக்கலானாள் : “ மின்னலுக்கும் மலைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால் கூட இயைபு உண்டாக்கவன்றோ சூசுகமாகிய இருப்பு ஆணியை விதியோன் அடித்தான்” என்றாள் ராணி.

மன்னன் முகம் மலர்ந்தது. ராணி என்ன சொன்னாள் என்பதை கண நேரத்தில் அவன் புரிந்து கொண்டான்.

 

அதாவது மின்னல் போன்ற ஒடிந்த இடையை உடைய மங்கையருக்குக் கணத்தில் மறைகின்ற தன்மையை உடைய மின்னல் மறையாது இருக்க, அம்மலை முலைகள் மீது, ‘முலைக் கண்களாகிய’ இருப்பு ஆணிகளை பிரமன் அடித்தான் என்றாள் ராணி.

 

மறு நாள் அவை கூடியது. பாண்டியன் பெருமிதம் பொங்க (ராணியாரின்) விளக்கத்தைக் கூற அனைவரும் அதைச் சிறப்பான விளக்கம் என்று பாராட்டி ஏற்றுக் கொண்டனர்.

காவியம் தொடர்ந்தது.

 

பாண்டியன் தன் மஹராணியை எப்படிப் போற்றி இருப்பான் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை, அல்லவா!

3

பாரதம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இது போல ஆணுக்குச் சமமாக அறிவில் பெண்கள் ஓங்கி இருந்த வரலாறுகள் ஏராளம் உண்டு. தொகுப்பின் பெருகும். அத்தோடு மட்டுமின்றி செக்ஸ் எனப்படும் பாலியலில் – தாம்பத்ய உறவில் – அவர்களின் அறிவு மிகவும் நுட்பமாக இருந்தது என்பதையும் அறிய முடியும்.