உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 1 (Post No 2728)

todu spare1

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2728

 

Time uploaded in London :– 21-02

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

toduspare2

 

toduspare3

 

toduspare4

 

todu5

 

todu6

 

todu7

 

todu8

 

todu9

 

todu10

 

todu11

 

todu12

 

 

தொடரும்………………….

இரண்டாம் பகுதிக்குச் செல்க.

–சுபம்–

 

 

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 2 (Post No 2727)

todu12

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2727

 

Time uploaded in London :– 17-26

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

todu13

 

todu14

 

todu15

 

todu16

 

todu17

 

todu18

 

todu19

 

todu20

 

todu21

 

todu22

-subam–

யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா (Post No.2725)

4bb116e0a41af94e-Krishnamacharya_Anjali_Mudra

WRITTEN BY S NAGARAJAN

Date: 15 April 2016

 

Post No. 2725

 

Time uploaded in London :–  9-38  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

 

இதற்கு முந்தைய மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் நான்காவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -4

(யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா)

 

.நாகராஜன்

 jnanayoginet_whois3

யோகம் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதை எட்டிய பெரியவர் யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா.

1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

 

 

யோகா முறையை அதன் அற்புத பலன்களை நிரூபித்து எங்கும் பரப்பிய இவரது வாழ்க்கை முழுவதும் அதிசயமான சுவையான சம்பவங்கள் நிறைந்த ஒன்றாகும்.

 

 

மைசூர் மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் (1884-1840) தன் தாயாரின் 60வது பிறந்த தினத்தைக் கொண்டாட காசி சென்றார். அங்கு யோகி கிருஷ்ணமாசார்யாவின் பெருமையைக் கேட்டறிந்து அவரைச் சந்தித்தார். தம்முடன் மைசூர் வருமாறு அவரை அழைத்தார். அதை ஏற்ற கிருஷ்ணமாசார்யா மைசூருக்குக் குடியேறினார். மைசூர் அரண்மனையில் யோகம் கற்பிக்க ஆரம்பித்தார்.

 

 

யோகத்தின் அபூர்வ ஆற்றல்களைப் பரப்பும் விதமாக தானே ப்ல நேர்முக செய்முறை விளக்கங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் செய்து காண்பித்தார்.

தனது நாடித்துடிப்பை அவர் நிறுத்திக் காட்டினார். உலகமே அதிசயித்தது.

 

 

வெறும் கையினால் ஓடுகின்ற காரை நிறுத்திக் காட்டினார். தனது பற்களால் கனமான பொருள்களைத் தூக்கிக் காட்டினார்.

மைசூர் மஹாராஜாவின் மறைவுக்குப் பின்னர் சென்னையில் குடியேறிய அவர் அங்கு யோகா பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார்.

 

 

ஆயுர்வேதத்திலும் மிகுந்த பயிற்சி உடையவராதலால் பல நோய்களைக் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றலும் அவருக்கு இருந்தது.

 

 

யோக மகரந்தம், யோக ரகஸ்யம் உள்ளிட்ட பல் நூலகளை அவர் இயற்றியுள்ளார்.

 

 

1935ஆம் ஆண்டில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தெரீஸ் ப்ராஸ் என்ற கார்டியாலஜிஸ்ட்   (There Brosse) முன்னர் அவன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டினார். தனது கருவி மூலம் அவரது இதயத்துடிப்பைக் கண்காணித்த ப்ராஸ் அது ஜீரோவைக் காட்டவே திகைத்துப் போனார். மருத்துவ ரீதியாக யோகி கிருஷ்ணமாசார்யா‘இறந்து விட்டதாகவே’கூற வேண்டும் என்றார் அவ்ர். பல வினாடிகள் இந்த நிலை நீடித்தது. பின்னர் இயல்பான நிலைக்கு அவர் வர இதயத்துடிப்பு வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது!

1961ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இப்படி இதயத்துடிப்பை நிறுத்துவோரை ஆராய வந்த ஒரு குழுவினர் முன்னும் அவர் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். உலகமே யோகத்தின் அற்புத ஆற்றலைக் கண்டு வியந்தது!

 

 

96ஆம் வயதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் மறுத்து விட்டார். படுக்கையில் இருந்தவாறே பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை குணப்படுத்திக் கொண்ட அவர் நூறாண்டு நிறை வாழ்வை வாழ்ந்தார்.

 

 

அவருக்கு யோகாவில் பல சிஷ்யர்கள் உருவாயினர். அவர்கள் அவர் காட்டிய வழியில் யோக முறையைப் பரப்பும் நற்பணியை மேற்கொண்டனர்.

 

 

நவீன அறிவியல் யுகத்தில் யோகாவின் ஆற்றலையும் பெருமையையும் உலகிற்குக் காண்பித்த அவர், யோகா நெறியின் படி வாழ்ந்தால் நூறு என்ற பூரண வயதை எட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

yogi

வேத வழியில் வாழ்ந்த பெரியோர்களின் பட்டியலில் யோகி கிருஷ்ணமாசார்யாவுக்குத் தனியிடம் உண்டு.

*****                                                           (அடுத்த கட்டுரையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும்)

 

 

 

 

கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711)

modi humility

Compiled by london swaminathan

Date: 10 April, 2016

 

Post No. 2711

 

Time uploaded in London :–  8-47

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை

dinamalar humility

ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.

 

அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.

 

Xxxx

 

Park Ave Lady_profile

முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்

கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்

கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!

கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)

 

அடக்கமில்லாப் பெண்!

ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.

உடனே ஜான்சன் சொன்னார்:

“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.

 

–சுபம்–

 

ஆய கலைகள் 64 முழு விவரம் – பகுதி-2 (Post No 2699)

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 6 April, 2016

Post No. 2699

Time uploaded in London :–  8-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நேற்று இதன் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதில் முதல் 21 கலைகளின் விவரங்கள் உள்ளன.

 

முந்தைய கட்டுரைகள்

Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

64 art-13

 

64 art-14

 

 

64 art -15

64 art-15

 

64 art-16

64 art-17

64 art-18

64 art-19

 

64 art-20

 

64 art-21

 

64 art-22

 

64 art-23

 

64 art-24

64 art-25

64 art-26

–சுபம்–

 

 

ஆய கலைகள் 64 எவை? முழு விளக்கம், விவரங்கள் (Post No.2696)-1

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 5 April, 2016

 

Post No. 2696

 

Time uploaded in London :–  14-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

 

 

 

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்.

 

அறுபத்து நான்கு கலைகள் எவை, என்ன என்பது பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இது வரை யாரும் முழு விவரங்களை வெளியிடவில்லை; வெறும் பட்டியலை மட்டுமே வெளியிட்டனர். எனது பிளாக்கிலும் ஐந்து ஆண்டுகளாக பல கட்டுரைகள் உள்ளன. இது தவிர பெர்fயூம் கட்டுரை, இந்திரஜால் என்னும் மாஜிக் பற்றிய கட்டுரை, அவதானம் பற்றிய கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் முதல் தடவையாக 64 கலைகள் குறித்தும் 1918 ஆம் ஆண்டில் பி,வி,ஜகதீச ஐயர் எழுதிய நூலிலிருந்து முழு விவரங்களும் கிடைத்துள்ளன.  உ.வே.சாமிநாத அய்யர் எழுதிய கலைகள் என்ற கட்டுரையில் பல தமிழ் நூல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மணிமேகலையில் ஆடலில் வல்ல பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய கலைகள் பற்றி வந்துள்ள பாடலை அவர் தந்துள்ளார். இதோ ஜகதீச அய்யர் நூல் தரும் தகவல்கள்; இது வேறு எந்த என்சைக்ளோபீடியாவிலும் இல்லாதவை:–

 

64 art-1

64 art-2

64 art-3

64 art-4

 

64 art-5

64-art-6

 

64 art-7

 

64 art-8

64 art-9

 

64 art-10

64 art-11

64 art-12

தொடரும்—–

 

 

 

 

 

சுப்புடுவுக்கே சுப்புடு! (Post No 2695)

subbudu 2

விபரீத விமரிசனம்

சுப்புடுவுக்கே சுப்புடு!

 

 

Written by S NAGARAJAN

Date: 5 April 2016

 

Post No. 2695

 

Time uploaded in London :–  7-58  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ச.நாகராஜன்

 

subbudu

உலகத்திலேயே சுலபமான வேலை எது என்று கேட்டால் குற்றம் குறைகளைச் சொல்லுவது தான்!

 

இதற்கு நவீன காலப் பெயர் விமரிசனம்!

பத்து வருடங்களுக்கு முன்னர் சுப்புடுவை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

 

மனுஷனைக் கண்டாலே சங்கீத வித்வான்களுக்கு அலர்ஜி!

கிழி கிழி என்று கிழித்து விடுவார்.

 

இந்தக் ‘கிழிப்பைப் போடப் பத்திரிகைகள் அணி வகுத்துத் தயாராய் நிற்கும்.

 

எதிர்பாராத விதமாக ஓஹோ என்று சிலருக்குப் புகழ் மாலையும் சூட்டப்படும். அன்று அவர்கள் சாதகம் செய்தார்களோ இல்லையோ சாமியைக் கும்பிட்டார்களோ இல்லையோ நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும் அல்லது சுப்புடுவின் மூடைக் கெடுக்காமலாவது இருந்திருக்க வேண்டும்.

ஆனால் சுப்புடுவுக்கே சுப்புடு இருந்திருக்கிறார்கள், காலம் காலமாக!

 

 

பட்டென்று சம்யோசிதமாக விமரிசனம் செய்வது, பதிலடி கொடுப்பது, சாமர்த்தியமாக நிலைமையைக் கையாளுவது, நையாண்டி செய்யும் அதே சமயம் பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது என்று இப்படி பல ரகங்களிலும் பெரும் மேதைகள், சாமர்த்தியசாலிகள் இருந்திருக்கிறார்கள்.

சில உதாரணங்களை மட்டும் பார்த்து மகிழலாம்.

ரிச்சர்ட் அட்லிங்டன் என்று ஒருவர். சுப்புடுவுக்கே சுப்புடு இவர்!

விமரிசனங்களை அள்ளித் தெளிப்பார். ஜனங்கள் ரசிப்பார்கள். விமரிசனத்திற்குள்ளான்வர்கள் நெளிவார்கள்.

 

ஒரு சமயம் இவரிடம் ஒரு கவிதை விமரிசனத்திற்காக வந்தது.

வந்த கவிதை இது தான்:

 

A  B   C  D  E  F

G   H   I   J   K  L

M   N  O  P  Q   R

S    T   U  V  W X

Y   Z

 

பார்த்தார் மனிதர். இதற்கு என்ன விமரிசனம் செய்வது?

இப்படி எழுதினார் விமரிசனத்தை:

 

 

1   2   3   4    5

6   7   8   9   10

 

“I still think that was the most snappy review I ever wrote; but unfortunately, “The Times’ refused  to print it” என்று எழுதியிருக்கிறார் அவர்..

பிரபல பத்திரிகையான டைம்ஸ் இதழே இதைப் பிரசுரிக்க தயங்கி விட்டது என்றால் அது எப்படிப்பட்ட விமரிசனம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்!

 

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வெளி வந்த விம்ரிசனம் பற்றிய துணுக்கு இது:
ஒரு புத்தகத்தை விமரிசனம் செய்தவர் எழுதிய விமரிசனம் இது:
“இந்தப் புத்தகத்தில் நான் ரசித்த ஒரே அம்சம் இதன் அகலமான மார்ஜின் தான்!”

 

என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ள அது  பயன் படுமே! இந்தப் புத்தகத்தில் என்பதன் உண்மையான அர்த்தம் இந்த   270 பக்க அபத்த புத்தகத்தில் என்பது தான்!

 

என்ன இந்தக் கட்டுரையை சுப்புடு பாணியில் விமரிசிக்க ஆரம்பிக்கிறீர்களா! ஹி..ஹி. வேண்டாமே!

 

************

இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)

harry with kunkum

Written by london swaminathan

 

Date: 22 March 2016

 

Post No. 2654

 

Time uploaded in London :– 12-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

panchakanya 3

நேபாள நாட்டிற்குச் சென்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு ஐந்து இளம்பெண்கள் வரவேற்பு கொடுத்தது பற்றி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் நிறைய படங்களும் விரிவான செய்தியும் வந்துள்ளன. அவைகள் மூலம் பல இந்துமத வழக்கங்களை நேபாளியர், அர்த்தம் தெரியாமலேயே பின்பற்றுவது தெரிந்தது.

 

எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும் ‘பஞ்ச கன்யா’ என்பதை, ‘ஐந்து கன்னிப் பெண்கள்’ என்றும் ‘ஐந்து திருமணமாகாத பெண்கள்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு ஐந்து என்பது நேபாளியருக்கு அதிர்ஷ்டகர எண் என்றும் எழுதியுள்ளன. ஆனால் மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லை.

 

‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

 

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.

இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது.

prince-harry-nepal_3597889b

சங்க இலக்கிய நூலான பரிபாடலில், மதுரை திருப்பறங்குன்றத்துக்கு வந்த கணவன் மனைவி இந்திரன் – அஹல்யை-கௌதம மகரிஷி ஓவியத்தைக் கோவில் சுவரில் கண்டு விவாதித்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

 

இங்கே இந்த ஐந்து பேரின் வரலாற்றை எழுதப்போவதில்லை. இதிலுள்ள இரண்டு சூட்சுமங்களை மட்டும் ஆராய்வோம். பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி – யாருமே கன்னிப் பெண் அல்ல. எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; ‘செக்ஸ்’ என்பதை, சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். அகல்யைகூட இந்திரனால் ஏமாற்றப்பட்டவளே தவிர தானாக அவனை நாடிச் செல்லவில்லை. மேலும் அஹல்யை கதையில், பாபம் செய்தோருக்கும் விமோசனம் உண்டு என்ற தாத்பர்யமும் – உட்கருத்தும் – பொதிந்துள்ளது.

இரண்டாவது சூட்சுமம்- ஆரிய,திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது. இந்துமத புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொன்னபோதிலும், வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு அடிவருடிய திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்தி எழுதிவருகின்றனர். மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச ராவணனின் மனைவி! தாரா என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்கவேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது எல்லாப் பெண்களும் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் பிதற்றல்வாதிகளின் மூஞ்சியில் கரி பூசுகிறது.

 

ஆக, நேபாளத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சகன்யா வரவேற்பு, இது எல்லாவற்றையும் நினைவுபடுத்தும். நேபாளத் தலைநகரான காட்மண்டில் ஒரு புத்தர் கோவில் உட்புறம் முழுதும் தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளதால் அதையும் பொற்கோவில் என்றழைப்பர் (எல்லோரும் அறிந்த பொற்கோயில் சீக்கியர்களின் அமிர்தசரஸில் உளது; அதைவிட அதிக தங்கம் உடைய கோவில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவில்; என் முந்தைய கட்டுரைகளில் விவரம் காண்க). நேபாளத்தில் இந்த புத்தர் கோவிலுக்கும் ஹாரி சென்றுவிட்டு மஞ்சள் துண்டு, செங் குங்குமப்பொட்டு ஆகியவறுடன் கூர்க்கா வீடுகளுக்குச் சென்றார்.

ஆக இளவரசர் ஹாரியின் விஜயம், பஞ்சகன்யா பெருமையை அனைவருக்கும் நினைவுபடுத்தும்.

 

–சுபம்–

 

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

சாமிநாத சாஸ்திரி கோர்ட்டுக்கு வராததற்கு காரணம்! (Post No. 2621)

sleep1

 

Compiled  by london swaminathan

 

Date: 11 March 2016

 

Post No. 2621

 

Time uploaded in London :–  16-29

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்மன் அனுப்பியும் சாமிநாத சாஸ்திரி கோர்ட்டுக்கு வராததற்கு ஜோதிடமே காரணம்!

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் 1923 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ‘தனபாக்கியம் அல்லது அகட விகட பொக்கிஷம்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். அதில் ஒரு நகைச்சுவை (ஹாஸ்ய) கட்டம். சாமிநாத சாஸ்திரி என்பவர், நீதிமன்ற சம்மன் கிடைத்தும் ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை என்று சாக்குப்போக்கு சொல்லுகிறார். இது அந்தக் காலத்தில் இருந்த ஜோதிட, சகுன சாஸ்திர நம்பிக்கைகளைக் காட்டுவதால், அந்தப் பக்கங்களை மட்டும் கீழே கொடுக்கிறேன். இப்பொழுதும், பஞ்சாங்கத்திலும் சில நாட்காட்டி காலண்டர்களிலும் இந்த விஷயங்கள் இருக்கின்றன. பலருக்கும் புரிவதில்லை; பலர் நம்புவதில்லை; இன்னும் பலர் நம்பினாலும் செயல் ரீதியில் பின்பற்றுவது சாத்தியப்படுவதில்லை:

புத்தகத்தை எழுதியவர்- காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு

இதோ கோர்ட் விசாரணை:–

 

vikata1 (2)

 

 

vikata2 (2)

hold-pose-court-artist

 

vikata3 (2)

vikata4 (2)

 

vikata5 (2)

 

vikata6 (2)

 

–subham–