ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

Picture  by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 6-34 am

 

 

Post No. 4252

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

கடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.

 

 

கடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.

 

தமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:

 

 

முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?

அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.

–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897

 

திருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம்? உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ? உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ? நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே? அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ?

 

உண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.

Tamarind Tree under which Nammalvar got inspiration

 

இதோ பாடலின் பொருள்:

 

திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?

 

உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?

 

(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)

 

உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

 

நம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.

 

மதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.

‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு

 

இதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:

திருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,

நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி,

வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,

பெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,

வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.

 

கம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.

 

சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்

பேராயிரம்திண் பெரும்புயமாயிரம் பெய்துளவத்

தாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன

ஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே!

-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி

திரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.

 

தகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970

TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி

  1. Nammalvar | Tamil and Vedas

tamilandvedas.com/tag/nammalvar

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, … Bharati used it for political freedom as well.

 

–SUBHAM–

கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா? கோழி பற்றிய பழமொழிகள் (Post No.4240)

Compiled by London Swaminathan

 

Date: 24 September 2017

 

Time uploaded in London-  6-21 AM

 

Post No. 4240

 

Pictures are taken from various sources; thanks.

 

1.கோழி அடிக்கிறதுக்கு குறுந்தடியா?

2.கோழி களவு போக ஆடுவெட்டிப் பொங்கல் இடுகிறதா?

3.கோழி கறுப்பானால் அதன் முட்டையும் கறுப்பா?

4.கோழி கறுப்போ சிவப்போ அதன் முட்டை வெள்ளைதானே?

5.கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குலைத்து விடிகிறதா?

6.கோழி கூவிப் பொழுது விடிந்தது

7.கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா?

8.கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும்,கீரைத் தண்டாணம் அடா சுப்பா கீரைத் தண்டாணம் அடா!

9.கோழிக் கறி கொடுத்து குயில் கறி வாங்கினாற் போல

10.கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடாது

11.கோழிக் குஞ்சுக்குப் பால் கொடுத்தது போல

12.கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பது போல

13.கோழி தட்டிக் கூவுமா?

14.கோழி திருடியும் கூடிக் குலாவுகிறாள்

15.கோழி தின்ற கள்ளனுடன் கூடி நின்று உலாவுகிறான்

 

16.கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது

17.கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

18.கோழி முடத்துக்குக் கடா வெட்டி காவு கொடுக்கிறதா?

19.கோழி முடத்துக்கு கடா வெட்டிப் பலியிட்டது போல

20.கோழி முட்டைக்குத் தலையுமில்லை, கோயிலாண்டிக்கு முறையுமில்லை

 

21.கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குதல்

22.கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்

23.கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுகிறது?

24.குப்பையும் கோழியும் போலக் குருவும் சீடனும்

25.குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கினது போல

26.பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?

27.பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

28.ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்

 

ஒவ்வொரு பழமொழியையும் ஆழ்ந்து படித்தால், தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல, புதுப்புது பொருள்கள் புலப்படும்!

இது தவிர, உங்களுக்குத் தெரிந்த கோழி, சேவல் பற்றிய பழமொழிகளை, கருத்துப் பதிவு செய்யும் (Comments Column) இடத்தில் பதிவு செய்தால் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கும்.

—Subham–

 

31 quotations of Friendship (Post No.4238)

OCTOBER 2017 GOOD THOUGHTS CALENDAR
Compiled by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  14-17

 

Post No. 4238

 

Pictures are taken from various sources; thanks.

 

Festival Days: Oct.1-MUHARAM, 2 GANDHI JAYANTHI, 5- VALMIKI JAYANTHI, 18/19- DEEPAVALI, 25- SKANDHA SASHTI.

EKADASI -1, 15, FULL MOON- 5, NEW MOON- 19

AUSPICIOUS DAYS- 27, 30

OCTOBER 1 SUNDAY

Friendship with those whose minds are not open-hearted sours to enmity – Kalidasa’s Sakuntala 5-24

 

OCTOBER 2 MONDAY

Imbibe only the merits of a companion and never the demerits- KR 186

 

OCTOBER 3 TUESDAY

Befriending a cruel serpent tantamount to extinction of the frog community– Panchatantra

 

OCTOBER 4 WEDNESDAY

Abusive language spells the death knell of friendship – Panchatantra 5-72

OCTOBER 5 THURSDAY

Live up to the words of a friend –Satopadupadesa prabandha

OCTOBER 6 FRIDAY

Do not disrespect a friend’s words – Sakunatalam ,first act

 

OCTOBER 7 SATURDAY

A friend indeed is a friend in need -Panchatantra 2-115

 

OCTOBER 8 SUNDAY

Better cordiality with a helpful foe than with a faithless friend – Hitopadesam 4-16

 

OCTOBER 9 MONDAY

Friendship begets help, and an enemy is known by disservice – Valmiki Ramayana 4-8-21

 

OCTOBER 10 TUESDAY

The pure hearted strike friendship at first sight –Yogavasistha 3-78-35

OCTOBER 11 WEDNESDAY

When sad or glad, a friend alone is a sanctuary – – Valmiki Ramayana

 

OCTOBER 12 THURSDAY

Ever avoid a foolish friend – Sushasitavali

 

OCTOBER 13 FRIDAY

The one with a companion achieves his objects-  Panchatantra 2-26

 

OCTOBER 14 SATURDAY

A traitor of a friend is the worst of men – Mahabharata

 

OCTOBER 15 SUNDAY

A friend who is angry without justification does create anxiety -– Valmiki Ramayana 15-32-6

OCTOBER 16 MONDAY

Elephants do not ever befriend foxes – Kiratarjuniya 14-2

 

OCTOBER 17 TUESDAY

Betraying friends never yields prosperity – Jataka mala

 

OCTOBER 18 WEDNESDAY

Friends alone do not make for joy nor enemies alone for sorrow- Mahabharata

 

OCTOBER 19 THURSDAY

 

The sin of betraying a friend is erased not even in a hundred births- BKM

 

OCTOBER 20 FRIDAY

It is declared that comradeship of the noble commences with seven steps walked together – Panchatantra 2-47, Rig Veda, Sangam Tamil Literature

OCTOBER 21 SATURDAY

Friends and foes originate only in transactions – Hitopadesam 1-72

 

OCTOBER 22 SUNDAY

Friendship- easy to build, difficult to sustain – Valmiki Ramayana 4-32-7

 

OCTOBER 23 MONDAY

Friendship blooms between those of the same loom and gloom – Panchatantra 1-285

 

OCTOBER 24 TUESDAY

Bond with those of the same melancholy – Satopadesaprabandha

 

OCTOBER 25 WEDNESDAY

Proximity, though it be to the inanimate, leads to companionship- Valmiki Ramayana 2-8-28

OCTOBER 26 THURSDAY

Enemies scorch when they meet and friends too when they depart -SRB 3-110

 

OCTOBER 27 FRIDAY

Attachment to friends makes prosperity, not so with women! Katha sarit Sagara

 

OCTOBER 28 SATURDAY

Comradeship occurs in communion – Valmiki Ramayana 4-127-47

 

OCTOBER 29 SUNDAY

In prosperity, all are one’s friends -Kahavatratnakar

 

OCTOBER 30 MONDAY

Share your grief with your buddies – Satopadesaprabhandha

OCTOBER 31 TUESDAY

He is friend who sees you through woe – Panchatantra 1-341

xxx

Source – Suktisudha, Chinmaya International Foundation, Ernakulam, Kerala, 2010

For original Sanskrit sentences, please see the book.

 

–SUBHAM–

 

தமிழ்ச் சுவடி மர்மம்- Part 2! (Post No.4169)

Written by S.NAGARAJAN

 

Date: 28 August 2017

 

Time uploaded in London- 5-37am

 

Post No. 4169

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

 

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2

 

ச.நாகராஜன்

****

 

 

மாயச் சதுரத்த்தை அமைக்கும் மூன்றாவது வகை ஒரு கூட்டு எண்ணை கொடுக்கப்பட்டு அதற்காக சதுரத்தை அமைப்பதாகும்.

ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

கப்பலெண் மிகாமல் இரண்டோர் எட்டில்

    கருதிய பதினொன்றில் பதிமூன் றாக்கிச்

செப்பமுடன் நவமாக்கிப் பக்க மாக்கிச்

    சேர்ந்ததோர் நான்காறில் செய்த பின்பு

ஒப்பிய இலக்கத்தைப் பாதி யாக்கி

    ஒன்று தள்ளி ராசியின்மேல் பதினா லாக்கி

எப்படியும் முதலேழில் மூன்றில் ஐந்தாம்

    ஈரைந்தில் பதினாறாம் இயம்ப லாமே

         (சுவடி எண்  1475)

 

 

இரண்டு படிகளில் சொல்லப்பட்டுள்ள இக்கணக்கின் வழிமுறையில் முதலில் 2,8,11,13,9,15,4,6 ஆகிய சிறு சதுரங்களில் முறையே 1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பதினாறு சதுரங்களை எண்களுடன் காண்போம்:

 

 

 

1 2 3 4
5 6 7 8
9 10 11 12
13 14 15 16
       

 

 

இதில் இரண்டாம் கட்டத்தில் 1, எட்டாம் கட்டத்தில் 2 என்று இப்படி முறையே எண்களைப் பதிக்க வேண்டும்.

வருகின்ற சதுரம் முதல் படியில் இப்படி இருக்கும்

  

  1   7
  8   2
5   3  
4   6  

 

நவம் என்றால் ஒன்பது. ரா – இங்கு பன்னிரெண்டு.

பஷீகம் – 15 நாட்கள் கொண்டது. இங்கு 16. இவ்வாறாகச் சதுரத்தை அமைத்துக் கொண்ட பின்னர்க் கூட்டுத் தொகையில் பாதியில் ஒன்றைக் கழிக்க வேண்டும். பின்பு முறையே 12,14,1,7,3,5,10,16 ஆகிய கட்டங்களில் முன் கூறப்பட்ட எண்ணில் ஒன்றைக் குறைத்து இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.

 

சான்றாக சுவடியில் தரப்பட்டிருந்த மாயச் சதுரத்தின் கூட்டுத் தொகை 64. 64இல் பாதி 32.

ஒன்றைக் கழிக்க வருவது 31.

 

முன்னர் அமைத்த மாயச் சதுரத்தில் நிறைவு செய்யப்படாத கட்டங்களில் (12,14,1,7,3,5,10,16) முறையே 31,30,29,28,27,26,25,24 ஆகிய எண்களை நிரப்ப வேண்டும்.

 

 

  

29 1 27 7
26 8 28 2
5 25 3 31
4 30 6 24

 

மாயச் சதுரம் இப்போது அமைந்து விட்டது.

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 64!

 

 

போனஸாக இன்னொரு விந்தையும் இதில் உண்டு!

நான்கு மூலைகளில் உள்ள கட்டங்களில் அமைந்துள்ள எண்களைக் கூட்டினாலும் வருவது 64 தான்!!

 

    இப்படி இந்தச் சுவடி தரும் விந்தை பல!

இவற்றை நன்கு ஆராய்ந்த திருமதி சத்தியபாமா ஆய்வின் முடிவில் தரும் முடிவுகள் ஐந்து.

 

 

  • அறிவிற்கு விருந்தூட்டும் தமிழரின் சிறந்தப் பொழுது போக்குக் கணித விளையாட்டுக் குறித்து அறிந்து கொள்ள இந்த மாயச் சதுரங்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அமைப்பதற்கான இத்தகைய பாடல்கள் வேறு எந்தக் கணித நூல்களிலும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த நிலையில் இவை அரிதானவையாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஒரு சில கணக்குகள், கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை முதலான நூல்களில் காணப்படுகின்றன.
  • மாயச் சதுரங்களை உருவாக்கும் மேலை நாட்டினரின் கணிதச் செய்முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யக் கூடிய ஆய்வுக் களமாக இவை விளங்குகின்றன.
  • காலம் குறித்த செய்திகள் கூறப்படவில்லை என்றாலும் காலத்தில் பழமையானவையாகப் பழந்தமிழரின் கணித அறிவை உலகிற்குப் பறை சாற்றுவனவாக இவை விளங்குகின்றன.

 

 

இந்த ஒரு சுவடியிலேயே இவ்வளவு அரிய பாடல்களைக் காணும் போது இன்னும் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை போன்ற நூல்களை ஆராய்ந்தால் நாம் பெறக் கூடிய விந்தைகள் எவ்வளவோ.

 

திருமதி சத்தியபாமா அவர்களின் முழு ஆய்வையும் பதிப்பிக்க தமிழ் உலகம் முன் வர வேண்டும்.

 

தமிழின் பெருமை எல்லயற்றது.

தமிழரின் அறிவு நுட்பமானது; பரந்து பட்டது.

இதை உலகம் அறிய வழி செய்ய வேண்டும்.

              ***                                 (குறிப்பு: திருமதி

 

சத்தியபாமா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவரை இந்தத் துறையில் நன்கு தூண்டலாம். அவரது ஆய்வு பற்றி மேலும் கூடுதல் தகவல்களை இந்தத் தளத்திற்கு அனுப்பச் சொல்லலாம். எனக்கு அறிமுகமில்லாத நிலையில் அவரைப் பாராட்டி அவரையும் அவரது ஆய்வையும் நமது தளத்தின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.)

–Subham– 

பாரதியார் நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர் கவிதைகள்! (Post. 4157)

Written by S.NAGARAJAN

 

Date: 24 August 2017

 

Time uploaded in London- 4-59 am

 

Post No. 4157

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

 

ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் என்று நாடறியும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

திராவிட மாயையில் வீழாது தனது சமச்சீர் தன்மையைக் கொண்டிருக்கும் அபூர்வ தமிழர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர்.

அவர் காந்தியைப் பாடினார்; உலகம் வேண்டும் சாந்தியைப் பாடினார். இவரது பாடல்களுள் பெரும்பாலானவை காந்தியைப் போற்றிப் பாடியதே என்று கூறலாம்.

ஆரிய-திராவிட வாதம் என்பதெல்லாம் பொய் என்று உரக்கக் கூவியவர் என்பதாலும் அதைப் பற்றி அருமையான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதாலும் இவர் தமிழருள் தலை சிறந்து நிற்கிறார்.

தேசமும் தெய்வமும் ஒன்று என்ற கொள்கையை உடைய இவர் ஒரு சிறந்த பாரதி பக்தர்.

பாரதியாரைப் போற்றி இவர் பாடிய ஏழு சிறந்த பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தொகுப்பில் அடங்கி உள்ளன.

மூன்று பாகங்களைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலில் மொத்தம் 251 கவிதைகள் உள்ளன.

முதல் பாகத்தில் பாரதி பாட்டு மற்றும் உலகம் வாழ்க ஆகிய இரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் பாரதி ஓர் ஆசான், பாரதிக்கு வெற்றி மாலை, பாரதி நினைவு, பாரதி எனும் பெயர் ஆகிய நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

எளிய சொற்களால் அரிய பெரிய கருத்துக்களைச் சொல்லும் வன்மை படைத்தவர் நாமக்கல் கவிஞர்.

பாரதியின் பாட்டு என்ற கவிதையில் பாரதியாரின் சொல் வன்மையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

 

காந்தியடிகளின் சிறந்த பக்தரான நாமக்கல் கவிஞர் அவரைப் பற்றி உரிய விதத்தில் கவி பாட கம்பனோ, காளிதாஸனோ தியாகராஜரோ அல்லது பாரதியோ இல்லை என்று அங்கலாய்க்கிறார் இப்படி:
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

     தேசீய பாரதியின் திறமும் இல்லை

“இமயம் முதல் குமரி முனை” வரை உள்ள இந்திய நாட்டின் ஒற்றுமையை பாரதியார் வலியுறுத்தினார். அதை நாமக்கல் கவிஞர் தன் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

     ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

                               (பாரதி ஓர் ஆசான் என்ற பாடல்)

தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதியின் புகழை நாமக்கல் கவிஞர் பாடும்போது அந்தப் பாட்டில் நம் உள்ளம் குளிர்கிறது:

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

     கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
(பாரதிக்கு வெற்றி மாலை என்ற பாடல்)

பாரதி நினைவு என்ற பாடலில் பாரதி என்று நினைத்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் கவிஞர் கூறுகிறார்:

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;

இந்தியன்நான்என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரியதமிழன்எனும் உவகை ஊறும் ;

     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

தமிழர்களுக்கு நாமக்கல் கவிஞரின் அறிவுரை இது தான்:

சுப்ரமண்ய பாரதியின் பாட்டுபாடிச்

    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.

                     (பாரதி எனும் பெயர் என்னும் பாடல்)

சுப்பிரமணிய பாரதியின் நாமம் பற்றிச் சொல்ல வரும் கவிஞர் அது கவலையை நீக்கும் சூத்திரம் என்கிறார்:

அனுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!
         (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்னும் பாடல்)

பாரதியைப் போற்றும் அன்பர்களுக்கு நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தேன் வந்து பாயுது காதினிலே என்ற ரகத்தைச் சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களாகும்.

நாமக்கல் கவிஞரின் பாடல்கள் கீழ்க்கண்ட இணைய தளத் தொடுப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.72,73,85 ஆகிய தொடர் எண்களில் நாமக்கல் கவிஞரின் கவிதைகள் உள்ளன.

 

இதே தளத்தில் பாரதியாரின் அனைத்துக் கவிதைகளும் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

www.projectmadurai.org

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36 (Post No.4144)

Written BY S NAGARAJAN

 

Date: 10 August 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4144

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

பாரதிதாசன் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.

 

புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.

 

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.

அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.

அதில் வரும் வரிகள் வைர வரிகள்:

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’                   தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

 

இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!

“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,

மேலவர் கீழவர் இல்லைஇதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

 

என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.

 

கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.

 

ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

    நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்

போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

    புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே

தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்

  ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்

கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்

  கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்

 

என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.

 

பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.

 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.

 

மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!

 

 

திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.

ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.

 

 

நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.

ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.

 

 

அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.

 

பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.

 

பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!

***

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்! (Post No.4136)

Date: 7 August 2017

 

Time uploaded in London:- 6-51 am

 

 

Post No.4136

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

புனித கங்கை

 துக்ளக், அக்பர் ஆகியோர் போற்றிப் பயன்படுத்திய கங்கை நீர் பற்றிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளி வருகிறது.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் ஹிந்து பண்பாட்டையும் ஹிந்துக்களையும் அதிகமாக வெறுத்த ஒரு மன்னன் ஔரங்கசீப் (பிறப்பு :14-10-1618 – மறைவு : 20-2-1707).

 

ஹிந்துக்களுக்கு இஸ்லாமின் பெயரால் அவன் ஆற்றிய கொடுமைகளை எழுத கை நடுங்கும். படித்தாலோ உள்ளம் பதறும்.

அப்படி ஒரு கோரமான பிறவி.

 

அவன் காலத்தில் பிரான்ஸை சேர்ந்த வைத்தியரும் யாத்ரீகருமான பெர்னியர் (Francois Bernier  பிறப்பு: 25-9-1620  மறைவு: 22-9-1688) இந்தியாவில் சுமார் 12 வருட காலம் தங்கி இருந்தார்.

ஔரங்கசீப்பைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை அவர் தனது நூலான ‘டிராவல்ஸ் இன் தி முகல் எம்பயர்’ (Travels in the Mughal Empire) என்ற நூலில் தந்துள்ளார்.

 

அதில் ஒன்று ஔரங்கசீப் கங்கை நீரைப் பயன்படுத்தியது பற்றியது:

 

He (Aurangzeb) keeps in Delhi and Agra…. Kitchen apparatus, Ganges water and all the other articles necessary for the camp, which the Moghal has always about him, as in his capital, things which are not considered necessary in our kingdoms in Europe”

 

டெல்லியோ ஆக்ராவோ, அவர் (ஔரங்கசீப்) சமையலறை உபகரணங்கள், கங்கை நீர் மற்றும் இதர முகாமிற்குத் தேவையான சாமான்களை தலைநகரில் இருக்கிறார் போலவே தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்கிறார். அவை ஐரோப்பாவில் உள்ள நமது அரசுகளில் தேவை என்று கருதப்படாதவை.

 

பெர்னியரும் கூட கங்கை நீரைப்  பயன்படுத்தியவரே. அதைப் பற்றி அவர் தனது பயண நூலில் தரும் தகவல்கள் இவை:

 

I shall not be exposed to any of these inconveniences and dangers, as my Nawab has with marked kindness ordered that a new loaf of his own household bread and a Sourai of Ganges water (with which, like every person attached to the court, he has laden several camels) should be presented to me every morning. A Sourai is that tin flagon of water covered with red cloth which a servant carries before his master’s horse.”

356ஆம் பக்கத்தில் அவர் கூறுவது இது:

 

“எனக்கு இது போன்ற அசௌகரியங்களோ அல்லது அபாயங்களோ வராது. ஏனெனில் நவாப் அதீதமான அன்புடன் எனக்கு அவருக்குத் தயாரிக்கப்படும் ரொட்டியையும் ஒரு சௌராய் கங்கை நீரையும் எனக்கு ஒவ்வொரு நாள் காலையும் தருமாறு ஆணையிட்டுள்ளார்.(அரசவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல ஒட்டகங்கள் உள்ளன) ஒரு சௌராய் என்பது தனது எஜமானனின் குதிரைக்கு முன்னால் ஒரு வேலையாள் ஏந்திச் செல்லும் சிவப்புத் துணியால் மூடப்பட்ட குவளையாகும்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது ஔரங்கசீப் மட்டுமல்ல, அவனது அரசவையில் இருந்த பிரபுக்கள் அனைவருமே கங்கை நீரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தான்.

 

லாகூரிலிருந்து 1665ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி எழுதிய தனது கடிதத்தில் பெர்னியர் மீண்டும் கங்கை நீரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

அவரது குறிப்பு:

 

The fruits, the sweet meats, the Ganges water, the saltpetre with which it is cooled and the betel are kept in four other tents.”  (page 365)

 

“பழங்கள், இனிப்பூட்டிய மாமிசம், கங்கை நீர், அதைக் குளிர வைக்கும் வெடியுப்பு மற்றும் வெற்றிலை ஆகியவை இதர நான்கு கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 

ஹிந்து கலாசாரம். ஹிந்து மதம், ஹிந்துக்கள் – ஆகிய இவற்றை அறவே வெறுத்த முகலாயர்கள் – துக்ளக் முதல் ஔரங்கசீப் வரை – கங்கை நீரை விரும்பினார்கள்.

அதைத் தாங்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றார்கள்.

 

 

தங்கள் சமையலுக்கு அதை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும், பிரபுக்களும், உயர் அதிகாரிகளும் கூட கங்கை நீரையே பயன்படுத்தினர் என்பது மேற்கூறிய பல குறிப்புகளினால் தெரிய வருகிறது.

 

காலம் காலமாகத் தொன்று தொட்டு ஹிந்துக்கள் போற்றி வரும் கங்கா மாதாவை கடுமையான விதிகளை அனுசரிக்கும் இஸ்லாமியர்களும் போற்றி பயன்படுத்தினார்கள் என்பது சரித்திரம் தரும் உண்மை!

 

கங்கை போன்ற ஒரு புனித நதி உலகில் வேறெங்கும் இல்லை என்பதும் உண்மையே!!

***

 

 

 

 

 

துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–

தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-