மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15 (Post No.3434)

Written by S NAGARAJAN

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 5-10 am

 

Post No.3434

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15

விஜயா பாரதியின்

‘பாரதியாரின் Annotated Biography  (With a National Historical Background)’

 

by ச.நாகராஜன்

 

 

விஜயா பாரதி

 

பாரதியாரின் மூத்த புதல்வி தங்கம்மா பாரதி. இவரது மகள் விஜயா பாரதி. இப்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். தாத்தாவின் அனைத்து படைப்புகளையும் ஆழமாக ஆராய்ந்து தேறியவர். அது மட்டுமின்றி பல்வேறு பதிப்புகள் பாரதியாரின் படைப்புகளைச் சரியாக வெளியிடவில்லை என்பதைக் கண்ட இவர் தானே நான்கு பாகங்களில் பாரதியின் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 

இவர் 13 பக்கங்களில் ஆங்கிலத்தில் Annotated Biography  (With a National Historical Background)  என்ற சிறு வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புக் குறிப்பை வெளியிட்டுள்ளார். http://subramaniabharati.com/annotated-biography-3/

என்ற தளத்திலிருந்து இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

 

பாரதி வரலாற்றுக் குறிப்பு

 

1882இல் ஆரம்பித்து 1921 முடிய வ்ருட வாரியாக பாரதியார் பற்றிய நிகழ்ச்சிக் குறிப்புகள் சுருக்கமாக இதில் தரப்பட்டுள்ளது.

பாரதியார் பற்றி முழுமையாகத் தெரிந்து  கொள்ளவும்  உடனடியாக தேதி பற்றித் தெரிந்து  கொள்வதற்கான விவரங்களைத் தரும் குறிப்பேடு ஆகவும் இது பயன்படும்.

இதில் உள்ள சில பகுதிகள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது:. முழு விவரத்திற்கு இந்த வரலாற்றுத் தொகுப்புக் குறிப்பைத் தரவிறக்கம் செய்து கொண்டு படிக்கலாம்.

 

Ettayapuram

 

1882 Dec.11: Born in Ettayapuram, Tirunelveli Dist.

Mother: Lakshmi Ammal Father: Chinnasamy Iyer

 

1887 Loss of Mother.

 

1893 At the age of eleven, the title “Bharati” was conferred upon him at the Court of the Maharajah of Ettayapuram.

 

1894-97 Educated at the Hindu College High School in Tirunelveli, from Form III to Form V (Standard 8 to 10).

 

1897 Jun Married to Chellamma from the village of Kadayam, Tirunelveli Dist. Bharati was 14 and Chellamma was 7.

 

1898 Loss of Father.

 

1898-1902 Lived with aunt Kuppammal in Benares (Varanasi); educated in the Hindu College, Benares.

 

1902-1904 Jul When the Maharajah of Ettayapuram visited Benares, on his way back from the Delhi Durbar (conducted by Lord Curzon) he invited Bharati to come back to Ettayapuram and work for him in his Samastana. Bharati agreed and came to his birth place to work for the Maharajah. His job was to read newspapers, magazines, and poetry and to spend time with the Maharajah.

 

1904 Aug.1 Tamil (pundit) teacher at the Sethupati High School, for 3 months in Madurai.

 

Nov.10-1904 First daughter Thangammal was born.

 

 

Chennai

1904 Nov. – Life in Chennai.

 

1906 Aug, Bharati joined Swadesamitran, as its sub-editor. G. Subramania Iyer, a staunch member of the Indian national Congress, published Swadesamitran from Chennai. He was a founder of “The Hindu,” the English newspaper in Chennai originally.

 

1905 Aug. –  1906 Aug.  Editor Chakravartini  Tamil Monthly, Chennai Proprietor: P. Vaidyanatha Iyer

 

 

*1905 Dec. Bharati attended Congress at Benares.

 

1906 Aug. Bharati quit both Swadesamitran and Chakravartini in order to join India as its Editor.

 

1906 Sep.- Editor (unnamed) “India”

 

1906 Nov.- ? Editor: The Bala Bharat English weekly

 

*1906 Dec. Attended Calcutta Congress; met Nivedita Devi.

 

1907 Bharati’s 3 national poems were first published by V. Krishnasamy Iyer, the leader of the Moderate Party in the province of Madras..

 

*1907 Dec. Surat Congress. Bharati and his friends arranged for delegates and visitors of the Extremist Party from the province of Madras to travel and attend the Surat Congress.

 

1908 Bharati published a collection of his National songs, Swadesa Githangal.

 

*1908 March 9 The day that Bibin Chandra Pal was freed from prison was pronounced as Swarajya Day, by Bharati and friends.

 

1908 Sep. 5 The India magazine in Chennai was stopped by the British Government and the legal editor M. Srinivasan was arrested

 

Pondicherry (1908 – 1918)

 

1908 Sep. Bharati moved to Pondicherry.

 

1908 Oct. 10 India magazine was started again from Pondicherry.

 

1908 When Bharati was in Pondicherry, his second daughter Shakuntala was born.

 

1909 Janma Boomi (Swadesa Githangal – 2nd part) was published.

 

1908 Oct.10 – Bharati became the editor (unnamed) of India

 

1910 Mar 12 magazine (Tamil weekly) again, in Pondicherry. Administrator: Mandayam Srinivasachariar

 

1909 Sep. 7- Also, he became the editor for the daily newspaper

 

1910 Apr.7 Vijaya, in Pondicherry. Propreitor: Mandayam Srinivasachar

 

1910 Jan.-? Editor for Karma Yogi, a Tamil monthly. This was Bharati’s own journal.

 

1910 Mar. Proscription in British India for India and Vijaya.

 

1910 Mar. – Apr. Both India and Vijaya stopped publication from Pondicherry.

 

*1910 Apr. 4 British issued a warrant to arrest Sri Aurobindo for writing an article in his magazine Karma Yogin. Sri Aurobindo escaped to Chandranagur, stayed there for a month, and finally went to Calcutta in disguise and came to Pondicherry by the ship S. S. Duplex. Bharati and Sri Aurobindo became good friends. They read Hindu scriptures together and did an extensive research on the “more than two and half millennia-old” Vedas.

 

1910 Kanavu (Dream), Bharati’s autobiographical poem, was published. It was proscribed later in 1911, with his short story called Aril Oru Pangu.

 

*1910 Sep./Oct. V. V. S. Iyer came to Pondicherry. Iyer was a reporter for Bharati’s India magazine from London. Iyer was involved in the National Movement while he was studying in London for his law degree to become a barrister.

 

*1911 Jul. 17 Murder of Collector Ash. Vanchi Iyer, who was an Extremist, murdered Collector Ash and then killed himself.

 

1911 Warrant issued for all Nationalists who lived in Pondicherry. There was also an announcement in British India that one thousand rupees will be awarded to people who could help to capture the Nationalists in Pondicherry.

 

1912 Panchali Sabatham –Part 1, Bharati’s epic poem, was published.

 

1913 Bharati performed the “sacred thread” ceremony to a harijan boy, named Kanakalingam.

 

 

1914 Maada Manivachagam, a collection of Bharati’s poems, was published in Durban, South Africa by Saraswati Printing Press.

 

1917 Kannan Pattu 1st edition was published by Parali Su. Nellaiyappar, a friend of Bharati, Editor of Lokopakari.

 

1918 Nattuppattu 1st edition was published by Parali Su. Nellaiyappar.

 

1918 Nov. Bharati left Pondicherry, was arrested in Cuddalore, the Indian territory, and imprisoned.

 

 

1918 Dec. Bharati was released from Cuddalore jail after twenty days, with the help of his friends. He went directly to the village of Kadayam, Tirunelveli Dist., the birth place of his wife Chellamma.

 

1919 Kannan Pattu 2nd edition was published by Parali Su. Nellaiyappar.

 

1919 Mar. Bharati’s meeting with Mahatma Gandhi in Chennai.

 

1919 Apr.- May A few days in Ettayapuram to visit relatives and friends.

 

1919 Jun. Bharati’s elder daughter Thangammal was married.

 

1920 Jun 6-10 Again, he spent a few days in Chetty Nadu.

 

 

Chennai

1920 end of – Again, life in Chennai.

 

1921 Sep. 11 Sub-Editor of “Swadesamitran,”Chennai.

 

 

1921 Bharati was living in Tripplicane, at Thulasinga Perumal Koil Street, near Parthasarathy temple. One morning, as his daily routine, Bharati, went to the Parthasarathy temple. As his usual custom, he went to visit the temple elephant first. The elephant, as he had become “mad” and disoriented, was tied and kept inside the fence. Bharati jumped inside the fence, in spite of people warning and shouting at him. As Bharati approached closer to the elephant to feed him the bananas that he had brought, he pushed him down with his trunk. Bharati fell under the four legs of the elephant and became unconscious. In the mean time, Kuvalai Krishnamachari, Bharati’s disciple, jumped inside the fence, carried Bharati on his shoulders, and brought him out of the fence.

 

1921 Sep.11 Bharati was affected by a stomach ailment; he refused to take any medicine. Eventually, he became very weak and his bodily existence came to an end.

 

  • Events in the Indian National Movement

விஜயா பாரதியின் பணி

 

விஜயா பாரதியின் பணி பாராட்டுக்குரிய ஒன்று. அவரது தளத்திற்கு வருகை புரிந்து அவரது பாரதி இயல் பணிகளை அறியலாம்; பாராட்டலாம்.

 

இந்த சிறிய வரலாற்றுக் குறிப்பைப் படிக்கும் போது ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் குறிப்பை முடிந்த அளவு தினவாரியாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் அருமையான புத்தகம் நினைவுக்கு வருகிறது.

 

இப்போது கிடைத்திருக்கும் ஏராளமான குறிப்புகளை வைத்து அது போல பாரதியாருக்கும் ஒரு வரலாற்றுக் குறிப்புத் தயர்ரிக்கப்பட்டால் அது மிகச் சிற்நத நூலாக அமையும்!

 

********

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14 (Post No.3431)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 5-35 am

 

Post No.3431

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் தொகுப்புகள்

 

ச.நாகராஜன்

 

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

‘பாரதியை ஒட்டிய சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் தினமணி சுடரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

பாரதியும் திலகரும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இதர சில கட்டுரைகளின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

அறிவியல் கோணத்தில் 1 (6-9-1981 சுடர் இதழில் ஆரம்பம்)

சரசுவதி தேவியின் புகழ் 1 (22-11-1981 சுடரில் ஆரம்பம்)

பாரதியும் பிற மொழிகளும் 13-12-1981, 20-12-1981 சுடர் இதழ்கள்

பாரதி பாடும் தனிப்பாணி 1,2 (7-2-1982, 14-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதியின் நாட்டுப் பற்று 1,2 (21-2-1982,28-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதி பிரசுராலயம் 1,2,3,4 (21-3-1982,28-3-1982,4-4-198211-4-1982 சுடர் இதழ்கள்)

இந்தக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலேயே பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றி எத்தனை தகவல்களை அளித்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.

தனது நினைவிலிருந்தே இந்தத் தகவல்களை அவர் அளித்திருப்பதால், சில இடங்களில் தனக்கு நினைவு சரியாக வரவில்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.

 

அறிவியல் கோணத்தில்

 

இந்தக் கட்டுரைத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நேரில் பழகாத குறை தான், ஆயினும் தொடர்புகள் பல. ஆகையால் பாரதியை நேரில் காணாமலும், அவருடைய குரலை நேரில் கேட்காமலும் இருந்த போதிலும் அவரைப் பற்றி எழுத எனக்கு உரிமை உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

 

 

பின்னர் வந்தே மாதரம் கீதத்தை பாரதியார் இரு முறைகள் மொழிபெயர்த்த நயத்தைப் பாராட்டுகிறார்.

உணர்ச்சி வேகத்தில் புதுமைப் பெண் என்ற பாடல் பாரதியார் வாயிலிருந்து எப்படி எழுந்தது என்ற சம்பவத்தைப் படிக்கச் சுவையாக இருக்கும்.

 

 

சாது கணபதி பந்துலு என்னும் தேசபக்தர் திருநெல்வேலி வீரராகவபுரத்தில் வாழ்ந்தவர். அவர் வீட்டில் சில காலம் பாரதி தங்கியதுண்டு.

 

அந்த வீட்டில், ஒரு நாள் மாலை ‘அதோ பார் புதுமைப் பெண்ணை, அதோ நிற்கிறாளே தெரியவில்லையா’ என்று கூறி நிமிர்ந்த நன்னடை,நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்ணைப் பற்றிய பாடலை பாரதியார் பாட நண்பர்கள் அதை எழுதிக் கொண்டனராம்.

 

சரசுவதி தேவியின் புகழ்

 

இந்தத் தொடரில் பாரதி ஸரஸ்வதி தேவியின் புகழ் என்ற பாரதி பாடலை அவர் எப்பொழுது பாடினார் என்பது பற்றித் தனக்குத் தெரிந்த ஒரு தகவலை  முன் வைக்கிறார்.

 

 

பாரதியும் பிற மொழிகளும்

 

பாரதியாரின் பன்மொழிப் புலமையை விரிவாக இந்தத் தொடரில் தருகிறார் பெ.நா.அப்புஸ்வாமி

இயல்பாகவே எட்டயபுரத்தில் இருந்த சங்கீத சூழ்நிலையில் தமிழும் தெலுங்கும் பாரதியாருக்கு இயல்பான மொழிகளாக இருந்தன. இந்துக் கல்லூரியில் பயின்றதால் ஆங்கிலத்தில் வல்லமை பெற்றார்

காசியில் வடமொழியில் தேர்ந்தார். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழியில் தேர்ந்தார்.

ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் கவிதைகள், கட்டுரைகள் புனைந்துள்ளார்.

 

பாரதி பாடும் தனிப்பாணி

 

பாரதி வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த இசை மேதை சுப்பராம தீக்ஷிதர். அவர் காலமான போது பாரதியார் அவரைப் பற்றிய கவிதை ஒன்றைப் புனைந்தார்.

 

பாரதியார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனிப்பாணியுடன் தன் பாடல்களை இசைப்பதையும், அதைத் தான் நேரில் கேட்கவில்லை என்றாலும் பாரதியாரின் (ஒன்று விட்ட) தம்பி விசுவநாதையர் பாடிக் கேட்டிருப்பதாகவும் பெ.நா.அப்புஸ்வாமி இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார்.

 

பாரதியின் நாட்டுப் பற்று

 

இந்தத் தொடரில் பாரதியாரின் நாட்டுப் பற்றைப் பற்றி விவரிக்கும் பெ.நா.அப்புஸ்வாமி மதுரையில் சேதுபதி பள்ளியில் பாரதியார் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய கோபால கிருஷ்ணய்யரைத் தான் சந்தித்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாரதியார் வந்தேமாதரம் கீதம் வரும் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த ம்டத்தை மொழி பெயர்த்த மஹேசகுமார் சர்மாவைப் புகழ்ந்து எழுதியது ஒரு அருமையான செய்தி.

அரவிந்தரும் வந்தேமாதரத்தை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கீதத்தின் முதல் அடி

Rich with thy hurrying streams, Bright with thy Orchard gleams’  என்பதாகும்.

 

பாரதி பிரசுராலயம்

 

பாரதி பிரசுராலயம் தோன்றிய விதத்தையும் விசுவநாதையர் பெரு முயற்சி எடுத்து பாரதியின் பல நூல்களைப் பதிப்பித்ததையும் இந்தத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி எடுத்துரைக்கிறார். பல்வேறு செய்திகளை அவர் பகிர்ந்து கொள்ளும் போது பல புதிய விஷயங்கள் பாரதியாரைப் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.

 

இந்தத் தொடர் கட்டுரைகள் பாரதி அன்பர்களுக்கு ஒரு வர பிரசாதம் தான்.

 

பல செய்திகள் நினைவிலிருந்தே எழுதப்பட்டிருப்பதால் இவற்றை  மேலும் ஆராய்ந்து பல விஷயங்களில் பாரதி ஆர்வலர்கள் தெளிவு பெற முடியும்.

தினமணியும் தினமணி சுட்ரும் பாரதி பற்றிய பல செய்திகளை ஆரம்ப காலத்தில்ருந்தே சேகரித்து வந்திருக்கிறது. பயன் தரும் விதத்தில் அவற்றைத் தமிழர்கள் பெற பிரசுரித்திருக்கிறது.  தமிழுக்குச் சேவை செய்த தினமணி பாரதியைப் பற்றிய பல புதிய விஷயங்களைத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு பெரிய விஷயம்.

 

பெ.நா.அப்புஸ்வாமியின் எழுத்துக்கள் புத்தக வடிவில் முழுமையாக வந்ததாகத் தெரியவில்லை.

அவற்றைத் தமிழ் உலகம் பெறுமானால் அது ஒரு பொக்கிஷமாகவே அமையும்!

*********

தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429)

Research Article Written by London swaminathan

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 9-03 am

 

Post No.3429

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தொல்காப்பியர் காலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்நாட்டின் வடக்கு எல்லை மாறவே இல்லை. தமிழன் இந்தியா முழுவதையும் ஆண்டான் என்பதற்கு இலக்கியச் சான்றும் இல்லை, வரலாற்றுச் சான்றும் இல்லை. ஆனால் புனிதமிக்க இமயமலை வரை சென்று அதன் மீது முத்திரை பொறிக்கும் வழக்கம் இருந்தது உண்மையே.

 

முதலில் இலக்கியச் சான்றுகளையும் பின்னர் மொழி இயல் சான்றுகளையும் காண்போம்

 

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு

…………………

 

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

 

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை. இது பற்றி 56 தேசங்கள் கட்டுரையில் முன்னரே எழுதிவிட்டேன். பஞ்ச திராவிடர்கள் என்பது 5 வகை பார்ப்பன மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதையும் தந்து விட்டேன்.

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்திலும் தென் பகுதியில் உள்ள பாண்டிய மன்னரை மட்டுமே குறிப்பிடுகிறான். சேர சோழர்கள் இல்லை!!

 

கம்பன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்; தொல்காப்பிய காலத்துக்கு மிகவும் பின்னால் வந்தவன் கம்பன். அவனும் வட வேங்கட மலையே (திருப்பதி-திருமலை) தமிழ் நாட்டின் எல்லை என்பான்:-

 

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

 

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்

 

சீதையை த் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.

ஆக, கம்பனும் வட வேங்கட மலையையே தமிழ் மொழி பேசும் நில எல்லையாகக் காட்டுகிறான். வடக்கில் உள்ள வேங்கட மலை எல்லோரும் அறிந்ததே. ஆயினும் தெற்கிலுள்ள குமரி முனை கடலுக்குள் போய் இப்போது கன்யாகுமரியே நமது தென் எல்லையாக இருக்கிறது.

 

 

தமிழ் மொழி திருப்பதியைத் தாண்டி ஒலித்ததே இல்லை!

 

அதீத அன்பினாலும் தமிழ் ஆர்வத்தாலும் —- தமிழ் மொழி பற்றிப் பலரும், இதுதான் உலகின் பழைய மொழி என்றும் இந்தியா முழுதும் இம்மொழி பேசப்பட்டது என்றும் புகழ்வர். ஆயினும் இதற்குச் சான்றுகள் இல்லை.

 

 

தமிழன் இமயம்வரை சென்று புலி, வில், மீன் முத்திரைகளைப் பதித்திருக்கலாம். அதெல்லாம் போகும் வழியில் இருக்கும் மன்னர்களிடம் முன் கூட்டியே சொல்லி வைத்து  விடுவர். மிகவும் அபூர்வமாக ஓரிருவர் எதிர்த்து சண்டைக்கு வருவர்.

 

சதகர்ணி என்ற சக்திவாய்ந்த ஆந்திர மன்னர் உதவியுடன், சேரன் செங்குட்டுவன் இமயம் சென்றான். ஊர் பேர் தெரியாத இரண்டு சில்லுண்டி சிற்றரசர்கள் — கனகனும் விஜயனும் — சேரனை எதிர்க்கவே அவர்கள் தலையில் அவன் கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான் என்று நாம் சிலப்பதிகாரத்தில் படிப்போம். இப்படி இரண்டு அரசர்கள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆக இவர்கள் இருவரும் ஏதோ ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசர்களாக இருக்கலாம்.

வடக்கில் திராவிட மொழிகள் இல்லையா?

இப்போது ஒரு கேள்வி எழும். வடக்கிலுள்ள சில மொழிகள், தமிழுக்கு நெருக்கமானவை என்றும் அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்துள்ளனரே. அது எல்லாம் பொய்யா?

 

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூல மொழியிலிருந்து உருவனவை. அவைகளின் எச்ச சொச்சங்களை எல்லா இந்திய மொழிகளிலும் காணலாம். இப்படி திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுவோர் ஒரு நூறு சொற்களைக்கூட காட்டமுடியவில்லை. குறிப்பாக வடமேற்கு இந்தியவிலுள்ள பிராஹுய் மொழியைப் பற்றி எழுதி அது, சிந்து சமவெளியில் தமிழ் இருந்ததற்குச் சான்று என்றெல்லாம் பிதற்றுவார்கள். உண்மையில் வியாபாரத்துக்காக சிந்துவெளிக்கு மிகவும் பிற்காலத்தில் சென்ற தமிழ்    மக்கள்    விட்டுச் சென்ற சில சொற்கள் உள்ளன. அவ்வளவுதான்.

 

 

இவர்கள் எதை எதையெல்லாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுகின்றனரோ அங்கெல்லாம் தமிழ் இல்லாத சொற்கள் 70 முதல் 90 சதவிகிதம் வரை உள்ளன. இது பற்றிக் கேட்டால் பிற்காலத்தில் இந்த மொழி கலந்துவிட்டது என்றும் பிதற்றுவர். பூசி மெழுகுவர். துருக்கியில் கி.மு 1400 வாக்கிலேயே சம்ஸ்கிருதச் சொற்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இது போலக் கல்வெட்டுகள் இருந்தால் உண்மையில் அந்த மொழி அங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

 

மேலும் இவர்கள் கூறும் எந்த திராவிட மொழிக்கும் எழுத்தும் கிடையாது, இலக்கணமும் கிடையாது, அகராதி, நிகண்டும் கிடையாது. பொய்ப் பித்தலாட்டத்திலேயே இந்த வாதம் நிற்கிறது. ஆழமாக ஆராய்ந்தால் பிராஹுய் மொழி, திரவிட மொழி என்ற வாதமெல்லாம் அடிபட்டுப் போகும். ஆகவே பிற்காலத்தில் வந்த இந்த மொழிகள் — தமிழனுக்கும் வடக்கிற்குமுள்ள தொடர்பை நிலைநாட்டப் போதுமானவை அல்ல.

பழங்குடி மக்களின் நாகரீகத்தை — குறிப்பாக தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் வாழும் பழங்குடி மக்களின் நாகரீகத்தைப் படித்தால் ஆயிரக் கணக்கான பழக்க வேறுபாடுகள் இருப்பதை அறிய முடியும். ஆக இவர்கள் ஒரே இன மக்கள் இல்லை என்பதும் தெளிவு.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஒளிர்க தமிழ்!!!

 

 

ஜெயலலிதா சொன்ன யானைக் கதை(Post No.3422)

Compiled by London swaminathan

 

Date: 6 December 2016

 

Time uploaded in London: 5-58 am

 

Post No.3422

 

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Jayalalitha’s Strange Elephant Story (Dinamani 6-12-2016)

 

காலஞ்சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்ட கதை தினமணி பத்திரிகையில் வெளியானது. இது போல யானைகளின் அபார, அபூர்வ அறிவு பற்றிய கதைகளை நான் வெளியிட்டுள்ளேன். உ. வே.சாமிநாத அய்யர் எழுதிய கதையையும், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் யானையை சமாதானப் படுத்திய கதையையும் வெளியிட்டேன். ஆகவே இந்தக் கதையில் உண்மை இருக்கும்:–

 

யானைகளின் மனதையும் அறிந்தவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டார். யானைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறித்து ஜெயலலிதாவே கூறியதாவது:
நீரும் நெருப்பும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக முதுமலை காட்டுக்குச் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். நாங்கள் இருவரும் நடித்த ஒரு காதல் காட்சியில் நிறைய யானைகள் இடம் பெற்றன. முதுமலைக் காட்டில் மரங்களை வீழ்த்துவது, அந்த மரங்களை வெட்டும் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது, வெட்டிய மரத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பது, பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்டு மிகவும் சாதுவாக இருந்தன. அங்கே அவற்றில் மிகப்பெரிய யானை ஒன்று என் கவனத்தைஈர்த்தது.

 
அந்த யானை குறித்து பாகன் சொன்னவை:
அந்தப் பாகனுக்கு மிகவும் அழகான இளம் மனைவி இருந்தாளாம். ஆனால், அவள் மிகவும் முன் கோபியாம். அண்மையில் பாகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதோ மனப் பூசல் ஏற்பட, இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை வலுத்தது. இதனால், கோபம் அடைந்த பாகனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறி, தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்காக எத்தனையோ முறை அங்கு சென்று பாகன் அவளைத் தன்னுடன் திரும்பி வருமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக வர மறுத்துவிட்டாள். இதனால், சோகத்துடன் பாகன் இருந்து வந்துள்ளான்.
ஓர் இரவு எப்படியோ அந்த யானை, பூட்டப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல், 15 மைல் தொலைவில் இருக்கும் பாகனின் மனைவி ஊருக்குப் புறப்பட்டுவிட்டது. நேராக அந்த ஊருக்குச் சென்று, பாகன் மனைவி இருக்கும் வீட்டை உடைத்து, அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதாம்.
யானை என்பது அதிசயப் பிறவி. விலங்குகளில் ராஜா யானைதான் என்று குறிப்பிட்டார்ஜெயலலிதா.
குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகளை முதல்வர் ஜெயலலிதா தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

TRUE ELEPHANT STORIES posted by me in my blogs

திருமூலர் சொன்ன யானைக் கதை: தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்! Posted on 14-3-2014

ஒரு யானையின் சோகக் கதை!(Post No.3379)-posted on 22-11-2016

செய்நன்றி:- நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்! Posted on 12 July 2015

யானையின் பெயர்கள் Posted on 25-11-2014

மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”  Posted on 12 Sept.2014

யானை பற்றிய நூறு பழமொழிகள் (posted on 5 June 2012)

யானையை விழுங்கிய மலைப்பாம்புகள் 7 மார்ச் 20114

 

Elephant Miracles

 

45 Words for Elephant

 

xxxxx

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20 (Post No.3414)

 

Article Written by S NAGARAJAN

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 5-43 AM

 

Post No.3414

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20

ச.நாகராஜன்

 

Picture sent by Dr Carani Sanjeevi

சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை என்று

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்த அங்கு அமைதி நிலவியதைத் தொடர்ந்து ஸு யுன் சாந்தமாக வூவைப் பார்த்தார்.

 

 

 

வூவின் ஆவேசமான உரைக்கு பதிலாக ஸு யுன் கூறலானார் : “தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து  கொள்ள வேண்டாம்.மத்திய அரசின் முக்கியமான அதிகாரி டாங். அவருக்கு உங்களுடன் சமாதானம் பேச எல்லா அதிகாரமும் உண்டு. அப்படி சமாதானம் எற்பட்டால் பீஜிங்கின் அதிகாரபூர்வமான அதிகாரிகளுள் ஒருவராக நீங்களும் ஆகி விடுவீர்கள். இது வரை இறந்து போன உங்களின் வீரர்களைப் பற்றி என்னால் செய்ய முடிவது அவர்களுக்கு உரிய  முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்வது தான். சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பற்றி டாங்குடன் பேசி அவர்களை விடுவிக்கச் சொல்கிறேன். இந்த என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்றால் பகை இன்னும் தொடரும். உங்களிடமும் படைபலம் உண்டு.டாங்கிடமும் அது இருக்கிறது.

உங்களுடைய பலம் குறைவு என்பதால் டாங்கின் பண பலம், படைபலம் இவற்றுடன் பீஜிங்கின் அதிகார பலத்தின் துணையும் டாங்கிற்கு வரும். என்னிடம் அதிகார பலம் இல்லை. ஆனால் என் சொல்லின் மூலம் பகையை முடித்து நாட்டிற்கும்  மக்களுக்கும் நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.”

இந்த ஸு யுன்னின் உரையைக் கேட்டு வூவும் அவனது சகாவும் நெகிழ்ந்து போனார்கள்.

 

 

வூ  தன் சார்பில் ஸு யுன் பேசலாம் என்று கூறினான்.

தனது சார்பில் ஆறு நிபந்தனைகளைச் சொல்ல வேண்டுமென்று வூ சொல்ல அதை கவனமாக ஸு யுன் கேட்டார்.

1)சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் வூவின் ஆட்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.2) வூவின் படையைக் கலைக்க நிர்ப்பந்திக்கக் கூடாது. 3) வூவின் ராணுவ அந்தஸ்தைக் கீழிறக்கக் கூடாது 4) தனது படையை கமாண்ட் செய்ய வூவுக்கு உரிமை உண்டு 5) கடந்த காலச் செயல்களைப் பற்றி எந்த விதமான் விசாரணையும் செய்யக் கூடாது  6) இரண்டு படைகளும் சம உரிமை பெற்றவையாக் இருத்தல் வேண்டும்.

 

 

ஸு யுன் கூறினார்: “இதற்கு டாங் சம்மதிப்பார் என்றே நம்புகிறேன். அவருடன் நான் பேசிய பின் அவரது பிரதிநிதிகள் இது  பற்றி முழுவதுமாக உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.”

வூ : “பூஜ்யரே! உங்களைத் தகாத விதத்தில் நடத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த விஷயத்தை  மட்டும் நீங்கள் கூறியபடி முடித்து வைத்தால் உங்களுக்கு எப்போதுமே நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்.”.

 

 

ஸு யுன் : “ஐயோ அந்தப் பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். எனக்கும் இது நன்மையைச் செய்வ்தால் தானே நான் இதைச் செய்கிறேன்.”

 

வூவும் அவனது ச்காவும் மிகுந்த மரியாதையுடன் ஸு யுன்னை நடத்தினர். சில நாட்கள் தங்களுடன் இருக்குமாறு அவர்கள் கூறியதை பணிவுடன் ஸு யுன் மறுத்தார்.

பயணத்திற்கான பணம், உணவு, வண்டி, கூட வழிகாட்டி துணைக்கு வருவதற்கான படை வீரர் ஆகிய அனைத்திற்கான ஏற்பாடுகளையும் வூ செய்வதாகக் கூற் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிய் ஸு யுன் கொஞ்சம் உணவை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

 

 

அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட ஸு யுன் தன் வழியில் பயணப்பட்டார்.

சிறிது தூரத்தில் வூவின் ஆட்களில் பலர் ஸு யுன்னை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினர்.

அவர்கள் தான் முதலில் ஸு யுன்னைப்  பிடித்து அடித்தவர்கள்.

அவர்க்ள் கண்களில் இப்போது கண்ணீர். “போதிசத்வர் எங்களை மன்னிப்பாரா” என்று அவர்கள் புலம்ப ஸு யுன் அவர்களுக்கு ஆறுதல் அளித்துத் தேற்றினார்.

 

 

குன்மிங் நகருக்கு வந்த ஸு யுன்னுக்கு வரவேற்பு பிரமாதமாக் இருந்தது.டாங் அவரை  ம்டாலயம் வந்து சந்தித்தார்.

“உங்களைப் பல காலமாகச் சந்திக்கவில்லை.எனது பாட்டி, தந்தை,மனைவி, சகோதரன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். நான் மிகுந்த மனச்சோர்வுட்ன் இருக்கிறேன்.போதாதற்கு நாடெங்குக் கொள்ளைக்காரர்கள் பெருகி விட்டனர். “ என்று டாங் கூறினார்

 

 

 

அதைக் கேட்ட ஸு யுன், “இறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய புத்தமத இறுதிச் சடங்குகளை நடத்தித் தருதல்,  யுயான் டாங்கில் உள்ள மடாலயத்தை விரிவுபடுத்திப்  பெரிதாக்குதல், புத்த தர்மத்தைப் ப்ரப்பி துயர்படுவோரின் துயரை நீககுதல் ஆகிய மூன்று பணிகளையும் தான் செய்ய விழைவதாகக் கூறினார்.

டாங்  ஸு யுன்னிடம், “முதல் மற்றும் கடைசி பணியைச் செய்வது சுலபம். இரண்டாவது பணிக்கு அரசின் நீதித் துறையின் ஆணை வேண்டும்” என்றார்.

 

 

“நீதித் துறையுடன் நீங்கள் பேசினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தக் கொள்ளைக்காரகள் பற்றிய விஷயத்திற்கு வருவோம். அந்தக் கூட்டத்தின் இரு தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்க்ள் சமாதானத்திற்குத் தயார். அவர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்” என்று ஆரம்பித்த ஸு யுன் அனைத்து விஷயங்களையும் விவரமாகக் கூறினார்.

 

 

இதையெல்லாம் கேட்ட டாங் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

உடனே உரிய அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது.

எல்லாம் சுபமாக முடிந்தது. கொள்ளையடிப்பதும் போர் நடப்பதும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

அந்த வருடமோ முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஷாங்காயில் உள்ள தர்ம மையத்திற்கு நிது திரட்டுவதும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

குன்மிங் நகரில் ஸு யுன் தன் புது வருட ஆரம்ப நாளைக் கழித்தார்.

ஸு யுன்னுக்கு 79ஆம் வயதும் முடிந்தது.

******* தொடரும்

 

 

 

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404)

டிசம்பர் 2016  காலண்டர்

Compiled by london swminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 22-09

 

Post No.3404

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

December 2016  ‘Good Thoughts’ Calendar

டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி,  25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13;  அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9

 

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்

xxx

டிசம்பர் 1 வியாழக்கிழமை

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

xxx

டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை

உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

xxx

டிசம்பர் 3 சனிக்கிழமை

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ச்சுடரே

 

xxx

டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை

 

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

xxxx

டிசம்பர் 5 திங்கட்கிழமை

 

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவந்தாள் வனங்கி

xxxx

 

டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

—சிவபுராணம்

 

xxx

 

டிசம்பர் 7  புதன்கிழமை

 

மன்னு மாமலை மகேந்திரமதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

–கீர்த்தித் திரு அகவல்

xxxx

டிசம்பர் 8 வியாழக்கிழமை

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

–திருவண்டப்பகுதி

 

xxx

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை

சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க

பக்தி வலையிற் படுவோன் காண்க

–திருவண்டப்பகுதி

xxxx

டிசம்பர் 10 சனிக்கிழமை

 

ஆறுகோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

–போற்றித் திரு அகவல்

xxx

 

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

மிண்டியமாயாவாதம் என்னும்

சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 12 திங்கட்கிழமை

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 14  புதன்கிழமை

 

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி

 

கருங் குருவிக் கன்றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 15 வியாழக்கிழமை

நாடகதாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றே

–திருச்சதகம்

xxxx

 

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை

 

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவனடியாரடியாரோடு

மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 17 சனிக்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடும் இரண்டும் அறியேனையே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 19 திங்கட்கிழமை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

–திருவெம்பாவை

xxx

டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்

–திருவம்மானை

xxx

 

டிசம்பர் 21  புதன்கிழமை

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்

திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி

–திருப்பொற்சுண்ணம்

xxxx

டிசம்பர் 22 வியாழக்கிழமை

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்

திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ

–திருத்தெள்ளேணம்

xxx

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ

–திருச்சாழல்

xxx

டிசம்பர் 24 சனிக்கிழமை

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

–திருப்பூவல்லி

xx

டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை

பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற

–திருவுந்தியார்

xxx

 

டிசம்பர் 26 திங்கட்கிழமை

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

—–திருத்தோணோக்கம்

xxxx

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேயிது கேள் நீ

வான் பழித்திம் மண்புகுந்து

மனிதரை  யாட்கொண்ட வள்ளல்

—குயிற்பத்து

xxxx

டிசம்பர் 28 புதன்கிழமை

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது என்பால்

–கோயில் திருப்பதிகம்

xxxx

டிசம்பர் 29 வியாழக்கிழமை

பவளத் திருவாயால்

அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே

–ஆசைப்பத்து

xxxx

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை

 

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக்கனியைத் தேனைப் பாலை

நிறையின் அமுதை அமுதின் சுவையை

–புணர்ச்சிப்பத்து

xxxx

 

டிசம்பர் 31 சனிக்கிழமை

 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா

பரகதி கொடுத்தருள் செய்யும்

சித்தனே

–அருட்பத்து

xxx

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே

–கண்டபத்து

xxxx

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

–கண்டபத்து

xxxx

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

பிறைசேர் சடையாய் முறையோவென்

றழைத்தால் அருளா தொழிவதே

அம்மானேயுன் அடியேற்கே

–குழைத்தபத்து

 

xxx

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டியென்னைப் பணி கொண்டாய்

–குழைத்தபத்து

xxx

 

மற்றுமோர் தெய்வந்தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

–அச்சப்பத்து

xxx

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்

பிரான் தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

–திருப்பாண்டிப் பதிகம்

xxxxx

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே

—திருப்புலம்பல்

xxx

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்

–திருவெண்பா

xxxx

இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….

–திருவெண்பா

xxxxxxxxxxx

முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்

–திருவெண்பா

 

xxx

உய்யுநெறி காட்டுவித்திட்

டோங்காரத் துட்பொருளை

ஐயனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே

—அச்சோப்பதிகம்

 

 

 

—subham—

ஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)

Compiled by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 10-30 AM

 

Post No.3400

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் பல உள்ளன. ரங்கூனிலிருந்து வெளியான தமிழ்ப் பிரகாசிகை நூலிலுள்ள மூன்று பக்கங்களை இங்கு வெளியிடுகிறேன்.

 

 

 

-SUBHAM–

 

கண்ணே! கண்மணியே! காளிதாசன் உவமைகள் (Post No.3388)

Written  by London Swaminathan

 

Date: 25 November 2016

 

Time uploaded in London:18-59

 

Post No.3388

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதிலிருந்தும், குழந்தைகள்ளைக் “கண்ணே! கண்மணியே!” என்று கொஞ்சுவதிலிருந்தும் கண்ணின் முக்கியத்துவத்தைத் த்மிழர்கள் நன்கு அறிவர். வள்ளுவன் என்ன சலைளைத்தவனா?

 

கல்லாதவர் அனைவரும் குருடர்களுக்குச் சமம் என்று சொல்லிக் கல்வி அறிவைக் கண்ணுக்கு நிகராக்கினார்:

கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (குறள் 393)

 

திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் ஏராளமான இடங்களில் கண் என்ற சொல் கையாளப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களின் கண், பார்வை என்று காமப் பகுதிப் பாடல்களில் போய்விடுகின்றன.

 

காளிதாசனின் சில அருமையான கண் உவமைகளைப் பார்ப்போம்:-

 

சிவனை நோக்கி பார்வதி கடுமையான தவம் நோற்கிறாள். அதை குமார சம்பவத்தில் வருணிக்கும் காளிதாசன் சொல்கிறான்:-

 

சிலாசயாம் தாமநிகேத வாசினீம்நிரந்தராசு அந்தரவாத வ்ருஷ்டிசு

வ்யலோகயன் உன்மிஷிதை: தடின்மை: மஹாதப: சாக்ஷ்ய இவ ஸ்திதா: க்ஷபா: (5-25)

 

இரவும் பகலும் பாராது பாறை மீது நின்று, பார்வதி தவம் செய்கிறாள்; அப்பொழுது மின்னல் ‘பளிச் பளிச்’ என்று அடிக்கிறது. அது பார்வதியின் தவத்தைப் பார்க்க விண்ணுலகமே கண் திறந்து பார்ப்பது போல இருந்ததாம். இயற்கையில் நடக்கும் மின்னல் வெட்டை காளிதாசன் அழகாகப் பயன்படுத்தும் போது அவள் இரவு பகல் பாராது, இடி மின்னல் பாராது கடும் தவம் இயற்றிய காட்சி நம் கண்ணுக்கு முன்னே வந்துவிடுகிறது!

 

 

இன்னொரு இடத்தில் இரவு நேரத்தில் இதழ் மூடிய தாமரையைநிலவின் கண் என்றும் அவை இரவு நேரத்தை முத்தமிடுகின்றன என்றும் வருணிக்கிறான். இரவு என்னும் காதலியை நிலவு என்னும் காதலன் முத்தமிடுகிறான் என்று சொல்லுவதோடு மேலும் சில காட்சிகளையும் புகுத்துகிறான். நிலவின் கிரணங்கள் இருளில் ஊடுருவிப் பாய்ந்தது, பெண்ணின் தலை முடியைக் கோதி விடுவது போலும் அங்கே இருந்த இதழ் மூடிய தாமரை, இக்காட்சியைக் கண்டு ரசிக்கும் கண் என்றும் சொல்லுவான்.

அங்குலீபி: இவ கேச சஞ்சயம்சன்னிக்ருஹ்ய திமிரம் மரீசிபி:

குட்டமலீக்ருத சரோஜ லோசனம் சும்பதி இவ ரஜனிமுகம் சசி (8-63)

 

உன்னைப் பார்த்து, நதிக் காதலி கண் அடிப்பாள்!

 

மேக தூதத்திலும் பல இடங்களில் கண் உவமை வருகிறது.

 

கம்பீராயா: பயசி சரித சேதசீவ ப்ரசன்னே

சாயாத்யாமபி ப்ரக்ருதி சுபகோ லப்ய்ஸ்யதே தே ப்ரவேசம்

தஸ்மதஸ்யா குமுத விசதான்யர்ஹசி த்வம் ந திர்யதி

மோகிகர்தும் சடுல சபரோ (40)

மேகமே! நீ செல்லும் வழியில் கம்பீரா என்ற நதி வரும். அவள் உன் காதலி. அவளிடம் ஜம்பத்தைக் காட்டாதே. அவள் காதலை பகிரங்கமாக புலப்படுத்த மாட்டாள். ஆனால் அதில் துள்ளி ஓடும் சபரம் என்ற வெள்ளி நிற மீன்கள்தான் அவளுடைய கண்கள். அவற்றின் மூலம் உன்னைப் பார்ப்பாள்; அவள் மிகவும் தெளிவான நதி. ஆகையால் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் நிழல் அந்த நதியில் விழும். அத்ன் மூலம் நீ அவள் மனதை ஊடுருவிச் செல்லலாம். வாய்ப்பை நழுவ விடாதே (மேகதூதம் 40)

போர்க்கள உருவகம்: பரணரும் காளிதாசனும்! (Post No.3384)

Written by London Swaminathan

 

Date: 24 November 2016

 

Time uploaded in London: 9-05 AM

 

Post No.3384

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

போர்க்களத்தையும் ஏர்க்களத்தையும் ஒப்பிடும் அருமையான ஒரு பாடல் புற நானூற்றில் (369) உள்ளது. அதைப் பாடியவர் பரணர். இது போல சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் உள்ளன. காளிதாசனின் காவியங்களிலும் உள்ளன. இப்படி த் தொடர்ந்து பல விஷயங்களைக் கோர்வையாக ஒப்பிடுவது கிரேக்கப் புலவர் ஹோமரின் காவியங்களிலும் காணப்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஹோமரிக் உவமை என்று சொல்லுவர்.

 

பரணர் ஒப்பீட்டை முதலில் காண்போம்:-

போர்க்களமும் ஏர்க்களமும் ஒப்பீடு

 

யானை = மேகம்

வாள் வீச்சு = மின்னல்

முரசு முழ்க்கம் = இடி முழக்கம்

குதிரை = காற்று

அம்பு = மழை

போர்க்களம் = வயல் களம்

தேர் = ஏர்

வேல்/கணையம் = விதைகள்

பிணம் = பயிர்கள்

பேய்கள் மொய்க்கும் பிணக்குவியல்= நெற் போர்வை

 

 

சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன் மீது பரணர் பாடிய பாடல்

 

இருப்புமுகம் செறிந்த ஏந்தெழில் மருப்பின்

கருங்கை யானை கொண்மூ வாக

நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த

வாள் மின்னாக, வயங்கு கடிப்பு அமைந்த

குருதிப் பலிய முரசுமுழக்காக

அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்

வெவ்விசைப் புரவி வீசு வளியாக

விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த

கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை

ஈரச்செறுவயின்  தேர் ஏராக

விடியல் புக்கு, நெடியல் நீட்டி, நின்

செருப்படை மிளிர்ந்த  திருத்துறு பைஞ்சால்,

பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,

விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்

பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு  பல் போர்பு

கணநரியோடு கழுது களம் படுப்பப்

பூதம்காப்பப் பொலிகளந்தழீஇப்,

பாடுநர்க்கு இருந்த பீடுடையாள!

தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி

வேய்வை காணா விருந்தின் போர்வை

அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்

பாடி வந்திசின் பெரும; பாடான்று

எழிலி தோயும் இமிழிசை யருவிப்

பொன்னுடை நெடுங்கோட்டு , இமையத்தன்ன

ஓடைநுதல், ஒல்குதல் அறியாத்

துடியடிக்குழவிய பிடியிடைமிடைந்த

வேழமுகவை நல்குமதி

தாழா ஈகைத் தகை வெய்யோயே!

–புறநானூறு 369

 

 

சங்க இலக்கியத்தில்

 

புறம் -370-  ஊன்பொதி பசுங்குடையார்

 

புறம் -373 கோவூர்க் கிழார்

 

புறம் -373 மாங்குடிக் கிழார்

 

பதிற்றுப் பத்து- 14-17, 15-1-15

 

பொருநராற்றுப்படையிலும் (4-17) ஹோமரிக் உவமை உளது

 

காளிதாசனில்

ரகுவம்சம் 7-49, 10-44,10-48, 4-62, 11-29

 

ரகுவம்சம் 7-49

 

யுத்த பூமி- மிருத்யு தேவதையின் பான பூமி

தலைகள் – பழங்கள்

குல்லாய்கள் – பான பாத்திரங்கள்

ரத்தம் = மது

 

ரகுவம்சம் 10-44

ராவணன் தலை = தாமரை

யுத்த பூமி பூஜைக்கானது

ரகுவம்சம் 10-48

விஷ்ணு – மேகம்

ராவணன் – வ ட்சி

தேவர் – பயிர்

பேச்சு – நீர்

மகிழ்ச்சி – மழை

விஷ்ணுவை மேகமாகவும் ராவணனை வர்றட்சியாகவும், அவனால் துன்புறுத்தப்பட்ட தேவர்களை வாடிய பயிராகவும், விஷ்ணு கூறிய சொற்கள் மழையாகவும் மகிழ்ச்சியாகவும் உருவகப்ப்படுத்தப் பட்டுள்ளது.

 

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை நிலவியதற்கு முந்தைய பல காளிதாசன் பற்றிய கட்டுரைகளில் எடுத்துக்காட்டுகளைத் தந்தேன். சங்க இலக்கியத்துக்கு முன்னரே காளிதாசன் வாழ்ந்ததை இவைகளும் நிரூபிக்கின்றன.

–subahm-

அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமை! (Post No.3381)

Written by S NAGARAJAN

 

Date: 23 November 2016

 

Time uploaded in London: 5-37 AM

 

Post No.3381

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஜெயந்தி தினம் நவம்பர் 23ஆம் தேதி வ்ருகிறது. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமை !

 

ச.நாகராஜன்

 

உலகப் போர் இப்போது வராது!

 

சென்ற நூற்றாண்டில் அவதரித்து இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்து உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கோடிக் கணக்கான மக்களை அன்பு மூலம் ஆட்படுத்தி சேவை செய்யத் தூண்டி இறையருளைப் பெற வைத்த அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயி அவதாரம்!

சாயி அன்பர்கள் அவர் எப்படி அற்புதங்களை நிகழ்த்தினார் ஏன் இன்னும் பல ஆண்டுகள் வாழவில்லை என்பன போன்ற கேள்விகளை எல்லாம் கேட்பதில்லை.

 

 

ஏனெனில் அவரது உரையைப் பல ஆண்டு காலம் கேட்டு அதில் ஊறி அருளில் திளைப்பவர்கள் அவர்கள். மிக சுலபமாக எந்த ஒரு கஷ்டமான கேள்விக்கும் அவர்களால் ஒரே வரியில் பதில் அளிக்க முடியும்.

அது தான் ஸங்கல்ப மஹிமை!

 

 

அவரது ஸங்கல்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.

தேவையான காலத்தில் தேவையானோருக்கு தேவைப்பட்ட இடத்தில் அவரது ஸங்க்ல்ப மஹிமையால் தேவைப்பட்ட அருளாசி கிடைக்கும் இது திண்ணம். ஆகவே அவர்கள் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை.

 

 

இன்றும் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் அதே அமைதி தவழ அவரது சமாதியின் சாந்நித்தியத்தில் சாந்தி பெற முடிகிறது என்றால் அதுவும் அவரது ஸ்ங்கல்பமே

பிரபல கம்யூனிஸ்டாக இருந்து மும்பையிலிருந்து ப்ளிட்ஸ் பத்திரிகையை நடத்தி வந்த ஆர்.கே.கராஞ்சியா பாபாவின் அன்பினால் கவரப்பட்டார். அவரது அருளுக்குப் பாத்திரமானார். ஏராள்மான விளக்கங்களை அவரிடமிருந்து பெற்ற அவர் தனது பத்திரிகையில் பாபாவிற்கென தனி ஒரு காலமே (Column)தந்தார்.

 

   1976 செப்டம்பரில் நட்ந்த சம்பவம் இது. அப்போது உலகெங்கும் ஒரு  குளிர் யுத்த நிலைமை நிலவியது. ரஷியா அமெரிக்கா என வல்லரசுகள் போர் மேகத்தை நிலவ விட்டு உலகினரைத் தவிப்பில் ஆழ்த்திய காலம் அது. உலகில் வாழ்ந்த அனைத்து ராஜதந்திரிகளும் கூட போர் வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்றே கூறினர்.  

ஆர்.கே.கராஞ்சியா பாபாவைத் தரிசித்தார். பேட்டியும் கிடைத்தது. அப்போது அவர் உலகப் போர் மூண்டு விடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டி போர் வந்து விடுமோ என்று கேட்டார்.

 

 

பாபா அந்தக் கேள்வியை எளிதாக எடுத்துக் கொண்டு, ‘வரவே வராது’ என்று பதிலளித்தார்.

திகைத்துப் போன கராஞ்சியா, “ஏன், என்ன காரணம்?” என்று கேட்டார்.

ஸ்வாமி, “என் ஸங்கல்பம் இல்லை. உலக்ப் போர் வராது” என்றார்.

 

 

அந்தப் பதிலால் ஸ்வாமியின் மஹிமையை அனைவரும் உணர்ந்து கொண்டனர். நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் கணித்துக் கூறிய உலகப் போர் மூளவே இல்லை.

அவதார ஸங்கல்பம்

ஒரு அவதாரம் ஏன் இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்பதைக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பதை பாபா மிகத் தெளிவாகத் தனது உரையில் கூறி இருக்கிறார்.

 

 

1976ஆம் ஆண்டு நீலகிரியில் கோடை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் தினமும் உரையாற்றிப் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர்ர் பாபா.

அப்போது ஆறாவது நாள் கருத்துரையில் அவர் கூறியது:

“ஒரு அவதார புருஷர் எல்லாக் காலங்களிலும் எல்லாவற்றையும் செய்யக் கூடியவராக இருந்தாலும் அவர் எல்லாக் காலங்களிலும் தன் சக்திகளை எடுத்துக் காட்டும் செயல்களைச் செய்ய மாட்டார். தகுதியுள்ள மனிதரிடம் மட்டுமே தன் கருணையைப் புரிவார்.சில சூழ்நிலைகளில் விதிமுறைகளின் படி குறிப்பிட்ட காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டி மனித நிலையில் வந்து அத்த்கைய செயல்கள் செய்யப்பட இருக்கின்றன”

 

 

 

பகவானின் தெளிவான உரையைக் கேட்ட பின்னர் அவரது ஸ்ங்கல்பம் இருந்தால் மட்டுமே ஒரு செயல் செயல்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

பீஷ்மரின் சபதமும் திரௌபதியின் பிரார்த்தனையும்

அவதாரத்தின் ஸங்கல்ப மஹிமையை விளக்க ஏழாம் நாள் கருத்துரையில் மஹாபாரத சம்பவம்  ஒன்றை அவர் விளக்கிக் கூறினார் இப்படி:

 

 

பாரத யுத்தத்தின் ஒன்பதாம் நாளனறு துரியோதனனும் துச்சாதனனும் பாண்டவர்களைக் கொல்ல வேண்டிய அவசியத்தை பீஷ்மரிடம் வலியுறுத்திய் போது ஆவேசத்துடன் மறு நாள் சூரிய அஸ்தமனத்திற்குள் அவர்களை வதம் செய்வதாக் பீஷம்ர் உறுதி கூறினார்.

அந்தச் செய்தியைக் கேட்ட திரௌபதி திடுக்கிட்டாள். பீஷமர் போட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்கான வல்லமை கொண்ட வீரர் அல்லவா?

 

 

வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ணரை அவள் பிரார்த்தித்தாள். அவரது பாதங்களில் விழுந்து சரணமடைந்தாள்.

“சகோதரி! பயப்படாதே, உன்னால் முடிந்ததை நீ செய்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்” என்றார் கிருஷ்ணர்.

அன்று நள்ளிரவில் திரௌபதியிடம் வந்த அவர், “கிளம்பு,
ஏன், எங்கு என்று கேட்காதே! என்னைப் பின் தொட்ர்ந்து வா”
என்றார்.

 

 

 

யுத்த களத்தில் தன்னை யாரும் அறியக் கூடாது என்பதற்காக ஆடையால் தன்னைப் போர்த்திக் கொண்ட திரௌபதி கிருஷ்ணரைப் பின் தொடர்ந்தாள்.

நேராக பீஷ்மரின் கூடாரத்தின் அருகே சென்றார் கிருஷ்ணர். செருப்புகளைக் கழட்டுமாறு திரௌபதியிடம் சைகை காட்டிய கிருஷ்ணர் பீஷ்மரியின் காலடியில் விழுந்து வணங்குமாறு பணித்தார்.

 

(அந்தக் காலத்தில் பணக்காரப் பெண்மணிகள் போட்டிருக்கும் செருப்பு பலத்த சப்தத்தைக் கிளப்புமாம் – பாபா)

அதன்படி செருப்புகளை அவிழ்த்து விட்டுச் சென்ற திரௌபதி பீஷ்மரின் காலடியில் விழுந்து வணங்கினாள்.

“தீர்க்க சுமங்கலி பவ! நீண்ட காலம் சுமங்கலியாய் வாழ்வாயாக” என்று வாழ்த்தினார் பீஷ்மர். மனம் குளிர்ந்தாள் திரௌபதி.

 

 

வணங்கி வாழ்த்துப் பெற்றது திரௌபதி என்பதை அறிந்த பீஷ்மரின் மனம் சஞ்சலத்திற்குள்ளானது.

“இப்படி ஒரு திட்டத்தை இந்த நள்ளிரவு நேரத்தில் உனக்கு வகுத்துத் தந்தது யார்” என்று வினவினார் பீஷ்மர்.

அப்போது ஒரு துணிமூட்டையுடன் சிரித்தவாறே உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். திட்டத்தை வகுத்தவர் யார் என்பதற்கு விடை கிடைத்து விட்டது!

 

 

 மூட்டையில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலுற்ற பீஷ்மர் அதை அவிழ்த்துக் காண்பிக்க வேண்டினார்.

அநத மூட்டையை அவிழ்த்த போது அதில் திரௌபதியின் செருப்புகள் இருந்தன.

 

தன் பக்தர்களுக்காக அவர்களது செருப்பைக் கூடச் சுமக்கத் தயார் என்பதை அவரது செயல் மூலம் அறிந்து கொண்ட பீஷ்மர் இறைவனின் ஸங்கல்பமே வெல்லும் என்று மன அமைதி அடைந்தார்.

 

விதிர்விதிர்த்துப் போன  திரௌபதியோ அவதாரத்தின் எல்லையற்ற கருணையைக் கண்டு ஆனந்த பாஷ்பம் பொழிந்தாள்.

 

துரியோதனனுக்குக் கொடுத்த வாக்குறுதியா, திரௌபதிக்குக் கொடுத்த ஆசீர்வாதமா எது பலிக்கப் போகிறது. என்று உள்ளம் ஊசலாட இரவு முழுவதும் உறங்காத பீஷ்மருக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது. “அவதார புருஷரின் ஸங்கல்பப்படியே அனைத்தும் நடக்கும்” என்று.

மறு நாள் போரில் பீஷ்மர் விழுந்து பட்டார். ஆனால் அவர் கிருஷ்னரின் எல்லையற்ற அருளைப் புரிந்து கொண்டவராக ஆகி இருந்ததால் துயரப்படவில்லை. ஸங்கல்ப மஹிமையை உணர்ந்தவராக அமைதியாக அம்புப் படுக்கையில் இருந்து உரிய காலத்தில் உயிரை விட்டார்.

 

 

பாபா இந்தக் கதையை மிகவும் விரிவாக விளக்கிய போது அனைவரும், ‘அவதாரத்தின் நோக்கத்தையும் அது ஆற்றும் செயலையும் அவதாரம் மட்டுமே அறிய முடியும்; அதை அவதாரம் விளக்கத் தேவையில்லை; அதை முழுதுமாக அறியவும் யாராலும் முடியாது’ என்பதை விளங்கிக் கொண்டனர்.

சாயியின் லீலை சொல்லுக்குட்படாதது. அற்புதமானது. விளக்க முடியாதது.

 

 

எல்லையற்றை அன்பின் உருவான ஸ்ரீ சத்யசாயிபாபாவின் மலரடிகளில் நமஸ்கரித்து அவரது ஸங்கல்ப மஹிமையால் அருள் பெற்று உயரிய நிலையைப் பெறுவோமாக!

*****