ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!

RAMA IDOLS

(Picture from face book: Ramapriya ramanuja dasi)

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2

 

by ச.நாகராஜன்

 

Post No 1635; Dated 9th February 2015

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!

 

தமிழர் தம் நீண்ட வரலாற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால், ராமர் தமிழ் குடும்பங்களின் பின்னணியாகத் திகழ்வது தெரியவரும். அவர் கால் படாத இடம் தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு பல தல புராணங்கள் அவரது பெருமையைச் சுட்டிக் காட்டுகின்றன. இராமேஸ்வரத்தில் சேது அமைத்து இராவணனை வதம் செய்த அவரை தமிழ்க் குடும்பங்கள் வழிபட்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்றே அறநெறி கொண்டவன் அவன்.

துஷ்டர்களுக்கு ஒரே பாணம் – ஒரு வில்!

சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு – ஒரு சொல்!

ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி – ஒரு இல்!

இது தான் அவனது அறநெறி.


rama white

Vishnu with Sridevi and Bhudevi

ராமர் போல துஷ்டர்களிடமிருந்து என்னைக் காத்து, அபயம் என உன்னையே கரம் பிடிக்கும் என்னைப் போற்றி நேசித்து, வாழ்நாள் முழுவதும் என் ஒருத்தியுசடனேயே வாழ வேண்டும் என்ற முப்பெரும் நெறிகளைச் சுட்டிக் காட்டி அதையே நான் விழைகிறேன் என்பதைப் பாடல் மூலம் சொல்ல வேறு எந்த ஒரு சந்தர்ப்பம் தான் கிடைக்கும், ஒரு பெண்ணுக்கு!

ஆக, பெண் பார்க்கும் படலத்தில் ராமரைப் பற்றிப் பாடுவது சரியானது தான் என கவிஞரும், பட இயக்குநரும், வசனகர்த்தாவும் நினைத்திருந்தால் அது சரிதானே!

இந்த வகையில் ராமர் எத்தனை ராமனடி பெண்களின் மனதைக் கவர்ந்த ஒரு பாடல் என்றால் அதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

asokavanam

Sita in Asoka Vana in Sri Lanka

ராஜாராமனும் சீதாராமனும்

 

இதை இயற்றிய சம்பவம் பற்றி கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகையில், “உத்தரகாண்டத்தில் ராஜாவான ராமனின் ஆணைப்படி சீதையைக் காட்டில் விட்டு விட்டு அயோத்திக்குத் திரும்பி வந்த லட்சுமணன் மாளிகையில் ராமர் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து வியந்து, நீங்கள் தானே சீதையைக் காட்டில் விட ஆணையிட்டீர்கள், பின் அழுவது ஏன் என்று கேட்க, ராமர், “அப்படி ஆணையிட்டது ராஜாராமன், இப்போது அழுவது சீதாராமன்” என்று ராமர் பதில் சொல்கிறார். இதைப் படித்து உத்வேகம் பெற்று ராமர் எத்தனை ராமரடி பாடலை இயற்றினேன்” என்று சொன்னாராம்!

வசந்தத்தில் ஓர் நாள்

 

ஆக இந்த வகையில் இன்னும் ஒரு பெண் பார்க்கும் படலத்தில் வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். படம் மூன்று தெய்வங்கள். வெளியான ஆண்டு 1971. படத்தை இயக்கியவர் தாதா மிராஸி. பாடலைப் பாடியவர் பி.சுசீலா. இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இயற்றியதோ கவிஞர் கண்ணதாசன் தான்! ராகம்:தர்பாரி கானடா

பாடலைப் பார்ப்போம்:

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
 வைதேகி காத்திருந்தாளோ              வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
 வைதேகி காத்திருந்தாளோ  வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட           மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
                                தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்                        காவலில் நின்றிருந்தாளோ தேவி
                                     காவலில் நின்றிருந்தாளோ தேவி
         வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
       பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
                                மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே

       பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
                              பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
                              மங்கையை வாழ்த்த வந்தாரோ

அங்கே
  சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி

    தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
          தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ


hanuman or sugreeva

Sugreeva – Vali fighting

காட்சி அமைப்பு அந்தக் காலப் படப்பிடிப்பின் படி மிக பிரமாதமாக அமைந்திருந்தது. நாகேஷ் பிரம்மா. சிவாஜிகணேசன் விஷ்ணு. முத்துராமன் சிவன். அவர்கள் மலையைத் தொட்டுத் தர சிவகுமார் மாலையை சந்திரகலாவிற்கு அணிவிப்பதாக காட்சி அமைகிறது.பாடலைப் படத்தில் பாடுபவர் சந்திரகலா. அந்தக் காலத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என  பல மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தவர். பாடல் காட்சியின் பின்னணியில் தேவ லோகக் காட்சிகள் இடம் பெறுகின்றன. குணசித்திர நடிகரான எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் என காட்சி களை கட்டுகிறது.

 

ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.

-தொடரும்.

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 2

Christ-Yogic aura, buddha

படத்தின் வலது கீழ்க் கோடியில் நமஸ்காரம் செய்வதையும், கை குவித்து

கும்பிடுவதையும் காணலாம். பழங்காலத்தில்— இந்துமுறை வழிபாடே இருந்தது

ஆய்வுக் கட்டுரை எண்: 1632; தேதி : 8 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் கிடையவே கிடையாது, அவர் புத்த மத துறவிதான் என்னும் பொருள்படக்கூடிய ஒரு சுவையான விஷயத்தை சுவாமி விவேகாநந்தர் கூறுகிறார்:

“நான் இங்கிலாந்துக்கு கப்பலில் திரும்பிவந்து கொண்டிருந்தபோது ஒரு விநோத கனவு கண்டேன். ரிஷி போல தோற்றம் உடைய ஒருவர் என் முன்னே தோன்றி நான் தேரபுத்தர் என்னும் புராதன வகுப்பைச் சேர்ந்தவன். நாங்கள் ரிஷி முனிவர்களின் வழிவந்தவர்கள். எங்களுடைய கொள்கைகள், போதனைகளை மக்கள் கிறிஸ்து சொன்னதாகச் சொல்லி பரப்பி வருகின்றனர். உண்மையில் கிறிஸ்து என்று ஒருவர் பிறந்ததே இல்லை. இந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தால் அதற்கான தடயங்கள் கிடைக்கும் என்றார். உடனே நான் எந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தால் அதற்கான தடயங்கள் கிடைக்கும்? என்று திருப்பிக் கேட்டேன். அந்தப் புனித மகான், துருக்கி என்னும் இடத்தை நோக்கிக் கையைக் காட்டினார். இதற்குள் என் கனவு கலைந்துவிட்டது. உடனே நான் கப்பலின் மேல் தளத்திற்கு ஓடிப்போய் கப்பல் எங்கே இருக்கிறது? இது என்ன இடம்? என்று மாலுமியிடம் கேட்டேன். அதோ பாருங்கள். துருக்கி, அதன் அருகில் இருக்கும் தீவு கிரீட் தீவு என்றார். அப்பொழுது கப்பல் மத்திய தரைக் கடலில் சென்று கொண்டிருந்தது”

இந்த சம்பவம் ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட விவேகாநந்தர் சம்பாஷணைகள் என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் விவேகாநந்தர் இந்த விஷயத்தை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

jesus blessing, Hindu gesture

புத்தர் தலையைச் சுற்றி வரையப்படும்

ஒளிவட்டம் — ஏசுவைச் சுற்றறீருப்பதை பழைய ஓவியங்களில் காணலாம்.

பைபிளில் அத்வைதம்!

அத்வைதம் என்பது என்ன? அவ்வையார் அழகாகக் கூறிவிட்டார்: ஒன்றாகக் காண்பதே காட்சி! நாம் அனைவரும் இறைவனின் ஒரு அம்சம். அதை உணரும்போது முக்தி கிட்டும்—அஹம் பிரம்மாஸ்மி! – என்பது அத்வைதம்.

இவ்வளவு பெரிய கொள்கையை – இந்துக்கள் போற்றிவரும் கொள்கையை —பாலைவன ஆட்டிடையர்கள் இடையே சொன்னால் அவர்களுக்குப் புரியாது. கல்லைக் கொண்டு எறிந்து விரட்டி விடுவார்கள். ஆகவே ஏசு தனது சீடர்களின் பக்குவத்தை அறிந்து அவர்களை படிப்படியாக அழைத்துச் செல்வதை விவேகாநந்தர் அழகாக எடுத்துரைக்கிறார்.

முதலில் ஏசு சொன்னார்: பர மண்டலத்தில் இருக்கும் பிதாவை நேசியுங்கள்; அதாவது வானுறையும் தெய்வத்தை வழிபடுங்கள் என்று. பின்னர் பக்குவம் அடைந்த சீடர்கள் இடையே பேசுகையில் நான் தான் மரம்; நீங்கள் அதன் கிளைகள் என்றார். மிகவும் பக்குவம் அடைந்த சிஷ்யர்கள் இடையே பேசுகையில் “ நானும் என் பிதாவும் ஒருவரே என்றார். இது அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி என்ற உபநிஷத மகா வாக்கியங்கள்”

சுவாமி விவேகாநந்தரின் இந்த சொற்பொழிவு, ஏசு, இமய மலைக்கு வந்து குருகுல வாசத்தில் உபநிஷதங்களைக் கற்றதை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்கும்.

மேலும் புத்த மதத்தினர் — பிரசாரகர்களுக்கு என்ன என்ன வழிமுறைகளைப் பின்பற்றினரோ — அதே முறைகளை கான்வெண்டுகள் பயன்படுத்தின. உபநிஷதக் கதைகள் போல பல குட்டிக் கதைகளை ஏசுவும் சொன்னார். குருடன் குருடனை வழி நடத்துவது போல என்ற கடோபநிஷத், திருமந்திர உவமைகளையும், பாலும் தேனும் ஆறாக ஓடும் என்ற சம்ஸ்கிருத சொற்றொடர் களையும் பைபிள், ஏசு உரைகளில் காணலாம்

buddha and chirst

ஏசுவின் சீடர்கள்– புத்த மத வழக்கங்களை மேற்கொண்டனர்.

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னரே மாமன்னன் அசோகன் உலகம் முழுதும் புத்த மதப் பிரசாரகர்களை அனுப்பியதால் பலருக்கும் இவ்வழி முறைகள் பற்றித் தெரியும். நூற்றுக் கணக்கான புத்தமத பழக்க வழக்கங்களை, துவக்க கால கிறிஸ்தவ பிரசாரகர்கள் பயன்படுத்தியதை‘The Original Jesus’ written by E R Gruber and G Kersten என்ற புத்தகத்தில் காணலாம்.

ஏசு கிறிஸ்துவை மீன் என்று அழைத்தது எதனால்?

ஏசு கிறிஸ்துவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவனைக் கூப்பிட்டு மூக்கைத் தொடு என்றால் நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக கழுத்துக்குப் பின் கையை வளைத்துத் தொட முயற்சிப்பதற்கு இது சமம்.

ரோமானிய (இத்தாலி) சாம்ராஜ்யத்தில் ஏசுவுக்கு துவக்க காலத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினர் ஏசுவைக் குறிக்க, மீன் என்று பொருள்படும் கிரேக்க சொல்லைப் பயன்படுத்தினர். இது ஒரு நீண்ட சொற்றொடரின் முதல் எழுத்துக்களால் ஆன சுருக்கச் சொல் என்று ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு பொருள் கண்டனர்.

பானை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்டால் பாலும் நெய்யும் வைக்கும் பாண்டத்துக்கு பால்+நெய்= பானை என்று எட்டுக்கட்டி பொய் சொல்வது போன்றதே இது.

உண்மையில் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத சொல் மீனைக் குறிக்கும். ஜஸானாம் ச மகர அஸ்மி == மீன்களில் நான் மகரமாக இருக்கிறேன் – என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையின் விபூதி யோகத்தில் சொல்லி இருக்கிறார். ஆக ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே (ஜஸ= ஜீஸஸ்) கிறிஸ்தவர்கள் சங்கேதச் சொல்லாக பயன் படுத்தினர் என்று பொருள் கொள்வதே பொருத்த முடைத்தாம்.

மீன் சின்னம் அதிர்ஷ்ட சின்னம் என்பதால் உலகம் முழுதும் – அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பயன்படுத்தினர்.

இதுவரை சொன்ன விஷயங்களில் இருந்து ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை, அவர் தேர புத்தர்- ஈசான்ய வகுப்பைச் சேர்ந்த ஒரு துறவி என்றும், இந்து மதக் கருத்துக்களைக் கற்று- பாலை வன ஆட்டு இடையர் களுக்குப் புரியும் வகையில் அவர் சொன்னார் என்றும், இந்துக்களைப் பொறுத்தவரையில் அவருடைய போதனைகள் வெறும் அரிச்சுவடி என்றும் துணிய முடிகிறது

இந்தக் கட்டுரை மூன்றாம் தொடரில் நிறைவு பெறும்.

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1

most of the pictures Yogic white

ஆய்வுக் கட்டுரை எண்: 1630; தேதி : 7 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்து மதத்தின் மூன்று சிறப்புகள்:

1.உலகின் எந்தப் பகுதியிலும் சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள், புனிதர்கள் தோன்ற முடியும். அவர்கள் அவதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்து மதம் ஒப்புக் கொள்கிறது

2.ஏனைய மதத்தினரை ‘காபிர்’ (KAFIR) என்றோ, ‘பேகன்’ (PAGAN) என்றோ ஏசுவதில்லை. எல்லோரையும் ‘அம்ருதஸ்ய புத்ராஹா’, ‘திவ்யாத்ம ஸ்வரூபலாலா’ (ஏ! இறைவனின் புதல்வர்களே) என்று அழைப்பர்.

3.உலகின் பழைய மதம் என்றாலும் பின்னர் வந்த தத்துவ ஞானிகள், இறைவனின் தூதர்கள், மத ஸ்தாபகர்கள் ஆகிய அனைவர் சொன்னதும் இந்து மத நூல்களில் ஏற்கனவே உள்ளன. இதன் காரணமாக யாரையும் மதம் மாற்றியதும் (PROSELYTISATION)  இல்லை; யாருடனும் மதம் தொடர்பாக “புனிதப் போர்” (CRUSADES, JIHADS) நடத்தியதும் இல்லை.

இந்து மத நூல்கள் கடல் போலப் பரந்து விரிந்தவை; அதில் இல்லாதது ஏதும் இல்லை.எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, சுமேரிய பழங்கதைகளைப் படிப்போருக்கு, அட! நம்மைக் காப்பி அடித்து எழுதி இருக்கிறார்களே! –என்று நினைக்கத் தோன்றும். அத்தோடு அவ்விலக்கியங்களில் காண முடியாத உயரிய கருத்துக்களும் இந்துமத நூல்களில் இருக்கும். (உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் கடைசி பாடல் கருத்து பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்).

இன்ன பல சிறப்புகளால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசு கிறிஸ்து இந்தியாவில் இமயமலைக்கு வந்து குருகுல வாசத்தில் அமர்ந்து உபநிஷதங்களைக் கற்று, ஆட்டு இடையர்களுக்கும், சடங்குகளை மட்டும் அர்த்தம் இன்றிப் பின்பற்றியோருக்கும் உபதேசம் செய்தார். அவர் பிறவியிலேயே ஞானி. இதற்குக் காரணம் அவர் பிறந்த யூதமதப் பிரிவான ஈசன்னியர் (ESSENES) பிரிவு இந்து மத யோகியர் போன்ற நடை,உடை,பாவனை உடையதொரு ஒரு பிரிவு (கட்டுரைக்குள் இவர்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களை நாடலாம்).

ஜீசஸ் கிரைஸ்ட் (JESUS CHRIST)  இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர். அதற்கு சில மறுப்புரைகளும் வந்து விட்டன. ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டாத சில விஷயங்களை நான் தொகுத்து — “பைபிளில் சம்ஸ்கிருதம்” (SANSKRIT IN BIBLE, PART 1 AND PART2 ) என்ற இரண்டு பகுதி கட்டுரையை மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டேன். சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி (JESUS MYSTERY: DID HE LEARN AT HINDU GURUKULA?) என்று இன்னொரு கட்டுரையும் எழுதினேன். அதன் சுருக்கத்தை தமிழில் சிறு சிறு பகுதிகளாகத் தருகிறேன்.

ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் (GOSPELS OF MARK, MATEW, LUKE AND JOHN) ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு (NEW TESTAMENT) நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர். இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க.

christ and krishna

ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம். அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும். இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு- உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது. வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி துவைத்து பாடத்தையும் படி — என்று குருகுல வாசம் செய்ய ஏழு வயதில் அனுப்பிவிட்டனர். பின்னர் 20 வயதில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டனர். இதற்குப் பின் கெட்ட வழியில் செல்வது கடினம். மேலும் வாத்தியார் வீட்டில் 13 ஆண்டுகளுக்கு தினமும் மிலிட்டரி ட்ரில் (MILITARY DRILL)  போல செய்துவந்தது அதே நல்ல வழியில் செல்லவும் உதவியது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” (HABITS DIE HARD) — என்பது தமிழ் பழமொழி. நல்லதானாலும் கெட்டதானாலும் சின்ன வயதில் படித்தது அவ்வளவு எளிதில் மாறாது.

அந்தக் காலத்தில் ஒரே குருவிடம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். அததகைய குருமார்களை குலபதி என்று பட்டம் கொடுத்து அழைப்பர். அது மட்டுமின்றி ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தட்சசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இந்திய நகரங்களில் மாபெரும் பல்கலைக் கழகங்களும் நடந்துவந்தன.

இந்த குருகுலவாசம் பற்றி ஈசன்னிகளுக்குத் தெரியும். அதனால் ஏசுவை இங்கே அனுப்பிவைத்தனர்.ஈசன்னிகள் என்பது ஈச, ஈச்வர (இறைவன்) என்னும் மூலத்தில் இருந்து பிறந்த சொல் என்பது எனது துணிபு. இந்த யூதமதப் பிரிவு பற்றி பிளினி (கி.பி.70 PLINY THE ELDER), ஜோசபஸ் முதலியோர் கொஞ்சம் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது: இந்தப் பிரிவினர் தினமும் குளிப்பார்கள் (இது பாலஸ்தீனத்தில் ஒரு அதிசயம்!!). இவர்கள் இறை நாட்டம் உடைய யோகியர். இவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து கொள்வதில்லை (பிரம்மசாரி). சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்து யோகிகள் பற்றி என்ன என்ன சொல்வோமோ அததனையும் ஈசன்னிகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன. இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் ஏசு. ஆகையால் அவர் குருகுல வாசத்துக்கு இமயமலைக்கு வந்ததில் வியப்பதற்கு ஒன்றுமிலை.

மேலும் காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் (JEWS) உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் உண்டு. கி.மு 1000 ஆண்டில் இருந்த சாலமன் (SOLOMON THE WISE) காஷ்மீருக்கு வந்ததாக செவிவழிக் கதைகள் உள்ளன. அவன் விக்ரமாதித்தன்போல பெரிய அறிவாளி. இது தவிர சிலுவையில் அறைபப்பட்ட மூன்றாம் நாள் ஏசு உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து 120 வயது வரை யோகி போல வாழ்ந்தார் என்றும் காஷ்மீரில் அவரது சமாதி உள்ளது என்றும் ஒரு புத்தகம் வேறு வெளியாகி இருக்கிறது. யூதர்களின் 12 பிரிவுகளில் ஒன்று காஷ்மீருக்கு வந்தது என்ற ஐதீகமும் உண்டு.

Jesus-Christ-and-Krishna1

பைபிள்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

இந்து மதப் புராணங்களில் எப்படிப் பல இருக்கின்றனவோ இப்படி ஏசு பற்றி புராணங்களும் ( மாறுபட்ட பைபிள் பதிப்புகள்) ஏராளமாக இருந்தன. துரு கியில் இருந்த கான்ஸ்டன் டைன் (EMPEROR CONSTATNTINE 272-337 CE) என்ற மன்னன் ஒரு பைபிள் மகாநாடு கூட்டி எல்லா பைபிள்களையும் எரித்துவிட்டு ஒரே பைபிள் மட்டும் வைத்துக் கொண்டார். அதனால் ஏசு 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் என்ன செய்தார், எங்கே இருந்தார் என்பதெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது. அது இப்பொழுதும் தூய ஏசுவின் வாழ்வில் ஒரு ஓட்டை போல, கறை போல பைபிளில் உள்ளது. பைபிளை யாரும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது, யாரும் மொழி பெயர்க்கக் கூடாது, வாரம்தோறும் சர்ச்சுக்கு வந்துதான் கேட்க வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார். இதை மீறிய பலர் மரண தண்டணைக்குள்ளான சோக சம்பவங்களை பைபிளின் கதை என்ற (The Story of the Bible) புத்தகத்தில் காணலாம். எல்லாம் நூல் வடிவிலும் இந்தெர்நெட்டில் கட்டுரை வடிவிலும் உள்ளன.

இப்பொழுது பலவிதமான பைபிள்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் பூசி மெழுகிவருகின்றனர். சாக்கடல் பகுதியில் (Dead Sea Scrolls) கிடைத்த சுவடிகள் பற்றி பலவிதமான செய்திகள் வருகின்றன. லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் மாஸ்கோ, ஜெர்மனி முதலான இடங்களிலும் துண்டு துண்டாக இருந்த கிரேக்க மொழி பைபிளை (Sinai Bible) அனைத்து நூலகங்களும் இணைந்து, துண்டுகளை ஒட்டுப்போட்டு இப்பொழுது இணைய தளத்தில் வெளியிட்டுவிட்டன. ஆனால் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வில்லை. சினாய் பைபிள் (Codex Sinaiticus)  என்ற இதை யார் வேண்டுமானாலும் கிரேக்க மொழியில் படிக்கலாம். இதற்கும் கிறிஸ்தவ பைபிளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதாக பைபிள் மோசடி (The Bible Fraud by Tony Bushby)  என்ற நூல் கூறுகிறது.

இனி வரும் கட்டுரையின் தொடர்ச்சியில் ஏசு கிறிஸ்து பற்றி விவேகாநந்தரின் விநோதக் கனவு, பைபிளில் அத்வைதம் எப்படி படிப்படியாக மலர்கிறது என்ற விவேகாநந்தரின் சொற்பொழிவு, ஏசுவின் ஒரு மண்டல கால விரதம், மாதா கோவில்களில் புத்தமத வழக்கங்கள், ஏசுவுக்கு மீன் பெயர் வந்தது ஏன்?, பகவத் கீதையும் பைபிளும், கிறிஸ்துவும் கிருஷ்ணரும், விதுர நீதியும் ஏசு உபதேசமும், உபநிஷத் கதைகளும் ஏசுவின் கதைகளும், ஏசு பக்தர்கள் போட்ட நமஸ்தேயும் நமஸ்காரமும், துரதிருஷ்ட எண் 13, ஏசு செய்த பாதபூஜை ஆகிய விஷயங்களைக் காண்போம்.

தொடரும்…………………………..

சிங்கள மொழி அதிசயங்கள்!

sri lanka

ஆய்வுக் கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண்: 1627; தேதி: 6 பிப்ரவரி 2015

இலங்கையில் பேசப்படும் சிங்கள மொழி பல புதிர்களின் உறைவிடமாக விளங்குகிறது. இந்தப் புதிர்களுக்கு மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை சரியான விடைகள் கிடைக்கவில்லை. “ரிக் வேதம்- ஒரு வரலாற்று ஆய்வு” — என்ற (The Rig Veda – A Historical by Shrikant Talageri) புத்தகத்தில் ஸ்ரீகாந்த் தலகரி என்பவர் இதை எடுத்துக்காட்டி சம்ஸ்கிருத மொழி இந்தியாவில் தோன்றி வெளி நாடுகளுக்குப் பயணம் செய்தது; அவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இம்மொழியை இறக்குமதி செய்யவில்லை என்று வலியுறுத்துகிறார்.

இந்திய-ஆர்ய (Indo-Aryan) மொழிகள் என்னும் பிரிவின் கீழ் சிங்கள மொழி வைக்கப்பட்டபோதிலும் பல பொருந்தாத விஷயங்களும் இம் மொழியில் இருப்பதை வில்லியம் கெய்கர்(Wilhelm Geiger 1856-1943) முதலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வில்லியம் கெய்கர் சொன்னதாவது: நெடில் வர வேண்டிய இடத்தில் குறிலும் , குறில் வர வேண்டிய இடத்தில் நெடில் எழுத்துக்களும் வந்து புதிர் போடுகின்றன. மற்ற இந்திய ஆரிய மொழிகளைப் போலல்லாது வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. சிங்கள மொழி இலக்கணப் புதிர்களை என்னால் விடுவிக்க இயலவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.”

king batiya abhya 19 bce

King Batiya Abhaya inscription (19 BCE)

பெல்லா, ககுலா, களுவா, ஒளுவா

சிங்கள மொழியில் உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் எந்த மொழியில் இருந்து வந்தவை என்றே தெரியவில்லை. தமிழ், சம்ஸ்கிருதம், வெட்டா ஆகிய மொழிகளில் வந்த சொற்களே சிங்கள மொழியில் இருக்க வேண்டும். ஆனால் தலை, கழுத்து, கால், தொடை என்னும் சொற்களைக் குறிக்கும்  ஒளுவா, பெல்லா, ககுலா, களுவா, என்ற சொற்கள் எங்கிருந்து வந்தன என்பது புரியவில்லை.

மேலும் மஹாவம்ச நூலின் மூலம் சிங்கள மக்களின் முதல் மன்னன் விஜயன் என்றும் , இந்தியாவின் கலிங்க-வங்க தேசப் பகுதியில் இருந்து வந்து பாண்டிய மன்னனின் மகளையும், ஒரு யக்ஷர் குலப் பெண்ணையும் மணந்து கொண்டான் அவன் என்றும் அறிகிறோம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் சிங்கள மக்களின் மூதாதையர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதில் இருந்து வந்தவர்கள் என்று காட்டுகின்றன. இந்தியாவின் வட மேற்கு மூலையான ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குடியேறிய காலத்தில் அப்பகுதிகள் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும்.

6-Sinhala-ConsonantsS

எம்.டபிள்யூ. எஸ். டி சில்வா என்பவர் சிங்கள மொழி பற்றி எழுதிய கட்டுரையில், மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு அமசங்கள் இதில் இருப்பதானது மிகவும் உற்சாகமாக ஆய்வு நடத்த உந்துகிறது. தற்போதைய மொழிக் கொள்கைகள் சரியா, இல்லையா என்ற சவாலையும் இது வீசுகிறது. நாம் அறிந்த வரை தற்கால இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் இதற்கு ஒரு இடம் ஒதுக்குவது கடினமாகவே உள்ளது – என்று எழுதியுள்ளார்.

சிங்கள மூதாதையர்கள், வட மேற்கு இந்தியாவில் இருந்து குஜராத்தில் உள்ள லாட தேசத்தில் வந்து தங்கி,  பின்னர் இலங்கையில் குடியேறினர் என்றும் டி சில்வா கூறுகிறார். கெய்கர், பரனவிதான போன்ற அறிஞர்களும் இது பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

தண்ணீர், தண்ணீர்

தண்ணீர் என்ற பொருள்படும் வடுரா என்ற சிங்களச் சொல் ஜெர்மானிய மொழிக் குடும்பத்தில் உள்ள “வாட்டர்” என்ற சொல்லுக்கு இணையானது பற்றியும் சர்ச்சை நீடிக்கிறது. ஹிட்டைட் மொழியிலும் ‘வதர்’ உள்ளது. ஆனால் இந்தோ ஆரிய மொழிக் குடும்ப விதிகளின்படி இப்படி வர முடியாது என்றும் ஏற்கனவே விக்ரமசிங்க என்ற அறிஞர் கூறியது போல் ‘வரதுக’ என்னும் சம்ஸ்கிருத மூலத்தில் இருந்து இச் சொல் வருவது சாத்தியமல்ல என்றும் கெய்கர் கூறுகிறார். ஆனால் பி.குணசேகர கூறியது போல விஸ்தார (பரவுதல்) என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குத் தொடர்புடையது இது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

தலகாரி இது பற்றிக் கூறுவதாவது: இந்திய- ஆரிய மொழிக் குடும்பத்தில் சேராத , இப்பொழுது வழக்கொழிந்த ஒரு இந்திய-ஐரோப்பிய (Indo – European) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது இது என்று ஏன் அவர்களுக்குத் (மேற்படி ஆராய்ச்சியாளர்களுக்கு) தோன்றவில்லை. மேலும் இந்திய மொழிகள் இந்த பூமியில் இருந்து வெளியே சென்று பரவின என்பதே உண்மை. வெளியில் இருந்து இந்திய மொழி பேசுவோர் பாரதத்தில் குடியேறவில்லை என்பதையும் இது காட்டுகிறது. (இதற்கு முந்தைய ‘பாரா’க்களில் பங்கானி என்னும் வேறு ஒரு மொழி பற்றி ஆராய்ந்ததன் அடிப்படையில் அவர் இந்த முடிவை வெளியிட்டார்)

pgss_sinhala_image1

என் கருத்து: 200 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு “அறிஞர்கள்” எழுதிய இந்திய வரலாறு, இந்தோ ஆரிய மொழிக்கொள்கைகள் அனைத்தும் தவறானவை. திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும் எழுந்த தவறான கொள்கைகள் இவை. இதை மாற்றி எழுதும் இன்றியமையாத கடமை நமக்கு உள்ளது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

Contact swami_48@ yahoo.com

தமிழ் திரைப்படங்களில் ராமர்! -1

rama_sita_lakshman_and_hanuman

Research article written by S Nagarajan

Research Article No. 1626: dated 6th February 2015

 

by ச.நாகராஜன்

பாரதத்தின் தேசீய வீரனாகவும் தெய்வமாகவும் திகழ்பவர் ஸ்ரீ ராமர்.

தமிழ் திரைப்படங்கள் பாரதப் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தமிழ் திரையுலகில் ராமர் சித்தரிக்கப்பட்டிருப்பதை ஏராளமான படங்களும் பாடல்களும் சுட்டிக் காட்டுகின்றன.

வால்மீகி முனிவர் ராமரின் சரித்திரத்தை 24000 ஸ்லோகங்களில் விவரித்து ராமாயணமாகப் படைத்தார். அதை பாரதம் தேசீய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. ராமரின் வரலாறை அன்றாடம் கேட்பதே ஒரு பாக்கியம் என்பது தான் ஒரு சாதாரண இந்தியனின் மனோபாவமாக இருந்து வருகிறது.

‘ஏகைகம் அக்‌ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்’ – அதில் ஒரு எழுத்தைச் சொன்னாலும் கூட அது மஹா பாதகத்தையும் போக்கி விடும் என்பதே வால்மீகி முநிவரின் வாக்கு. அதுவே நம் அனைவரது நம்பிக்கையும் கூட.

ஒரு ஸ்லோகம் என்பது நான்கு பாதங்களைக் கொண்டிருக்கும். இப்படி அமைக்கப்பட்டுள்ள 24000 ஸ்லோகங்களில் ஒரு  பாதத்தையும் கூட மாற்ற முடியாது, இடைச் செருகல் செய்ய முடியாது என்பதை அதில் ஊறி அனுபவித்த மஹாகவி கம்பன் கூறுகிறான் இப்படி:


sita rama

“வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்       ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்”

மாற்ற முடியாதபடி சொற்கள் உள்ள வால்மீகியின் பாதங்கள் அமைந்த ராமாயணத்தை அவன் இனிய கவிதைகளால் தேவரும் பருகும்படி செய்தான். அப்படிப்பட்ட மஹாமுனி புகழ்ந்த கோசல நாட்டை அன்பெனும் கள்ளைக் குடித்து விட்டு ஊமை உளறுவது போல மொழிய ஆரம்பித்து விட்டேன் என்பது இதன் திரண்ட பொருள்.

எப்படிப்பட்ட உலகின் தலையாய மஹாகவி கம்பன்! அவனது அவையடக்கச் செய்யுள் இது! அவனே வியக்கும் அரும் கவி வால்மீகி.

பாரத மக்கள் அனைவருடைய லட்சிய புருஷராக ஒருவரை வால்மீகி மையப்படுத்திக் காட்டுவது சாதாரண விஷயமல்ல. அந்த ராம சரித்திரம் இன்று வரை மங்காமல் நாளுக்கு நாள் மெருகேறிப் புகழோங்கி வழங்கப்பட்டு வருகிறது.

அதைத் தமிழ் திரையுலகம் தமிழ் மக்களின் மேன்மைக்காகவும் ரசிப்பிற்காகவும் அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லக்ஷ்மி கல்யாணம். ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெற்றது. சிவாஜி கணேசன். எஸ்.வி.ரெங்காராவ், பாலாஜி, சோ, சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா என ஏராளமான நட்சத்திரங்கள். எம்.எஸ். விசுவநாதன் இசை அமைத்த இந்தப் படத்தில் பெண் பார்க்கும் படலம் ஒன்றில் அழகிய வீணையை மீட்டி வெண்ணிற ஆடை நிர்மலா பாட அதை பெண் பார்க்க வந்த பாலாஜி மெய்மறந்து கேட்க அருகில் சிவாஜி கணேசன்,வி.எஸ்.ராகவன். வி.கே.ராமசாமி, பழம் பெரும் காமடி  நடிகர் கருணாநிதி, சோ  உள்ளிட்ட அனைவரும் ரசிக்க பாடல் மலர்கிறது.

பாடலை எழுதியவர் ராம பக்தியில் தோய்ந்த ஒருவர் – கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:

rama-lakshmana-sita-and-hanuman-HF35_l

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடிஅவன்
நல்லவர் வணங்கும் தேவனடிதேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்டகல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்தசீதாராமன்
அரசாள வந்த மன்னன்ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்தசுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்றகோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்டதசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும்கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும்ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

 



வம்சத்திற்கொருவன்ரகுராமன்
மதங்களை இணைப்பவன்சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன்ஸ்ரீராமன்
முடிவில்லாதவன்அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

 
அற்புதமான இந்தப் பாடலின் ஏற்றத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன்,  சுந்தரராமன்,  கோசலராமன்,தசரதராமன்,கோதண்டராமன்,


ramasita

ஸ்ரீஜெயராமன்,ரகுராமன்,சிவராமன் என்று அடுக்கிக் கொண்டே போன கவிஞர் எண்ணிக்கையற்ற தன்மையை நினைத்து அனந்தராமன் என ராமன் அனந்தம் என்று முத்தாய்ப்பாகக் கூறுவது நூல்களின் முடிந்த முடிபல்லவா!  ராமஜெயத்தை நம்பியோர்க்கு ஏது பயம் என்றும் கூறி அனைவரும் அவரது அபய்மாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் கவிஞர். பி.சுசீலா தனக்கே உரித்த மென்மைக் குரலில் உருகிப் பாடும் இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்!

ஏராளமானோர் பங்கு பெறும் இந்தக் காட்சியில் பெண்பார்க்கும் படலத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை சிருஷ்டித்து விட்டனர் கலைக் குடும்பத்தினர்.

இப்படிப்பட்ட ராமர் பாடல்களைப் பாடுவது நமது வாழ்க்கை முறை என்பதைப் படம் சித்தரிக்கிறது!

இந்த ராமனை மனதில் ஏற்றிக் கொண்டு தமிழ் திரைப்படங்களில் ராமரைத் தேடி யாத்திரயைத் தொடங்குவோம்.

 

            -தொடரும்

 

swami_48@yahoo.com

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 2

Karnan2

by ச.நாகராஜன்

Post No 1624: Date 5th February 2015

 

திரைப்படங்களில் சுபாஷிதம்

தமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக் கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒரு ஸ்லோகம் இது:

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம் கதம் I                           அதவா புநராயேன ஜீரண ப்ரஷ்ட ண்ட II

புஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால் போனது போனது தான்! திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும் என்பது இதன் திரண்ட பொருள்!

கர்ணனில் கீதை

பகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப் படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒரு படத்தை எடுத்துக் காட்டலாம்.

1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும் எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து னைவரின் பாராட்டையும் பெற்ற படம் இது.

அதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும் போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:

 

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!

மரணத்தின் தன்மை சொல்வேன்;

மானிடர் ஆன்மா மரணமெய்தாது,

மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!

வீரத்தில் அதுவும் ஒன்று;

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,

வெந்து தான் தீரும் ஓர் நாள்.

 

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,

எனதென்றும் அறிந்து கொண்டாய்;

கண்ணன் மனது கல் மனதென்றோ

காண்டீபம் நழுவ விட்டாய்

காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,

மரம் செடி கொடியும் நானே;

சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;

துணிந்து நில் தர்மம் வாழ.

 

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே.

 

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;

கண்ணனே கொலை செய்கின்றான்.

காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!

இக்களமெலாம் சிவக்க வாழ்க!

karna

கண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.

நல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:

 

பரித்ராணாய சாதூனாம்,

விநாசாய துஷ்க்ருதாம்;

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,

சம்பவாமி யுகே யுகே.  (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)


papanasam

பாபநாசம் சிவனின் அமர கீதங்கள்

இனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோ அங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை

நாம் காண முடியும்:

பாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையான பாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்ற கவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில் திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத் தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்து வருகிறார்.

என்ன தவம் செய்தனையசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரது பாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இது போல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.

papanasam2

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரது பாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.

1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில் அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும் ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:

பிரேமையில் யாவும் மறந்தேனே

பிரேமையில் யாவும் மறந்தேனே  .. பிரேமையில் ஜீவனம் உனதன்பே ஜீவனம் உனதன்பேஎன்

அன்பே வானமுதும் விரும்பேனே

பிரேமையில் யாவும் மறந்தோமோ   ..பிரேமையில்

பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி  . . என் உள்ளம்

பரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி

என்னை மறந்தேன் மதனமோகனா

என்னை மறந்தேன் மதனமோகனா

இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்து அமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.


haridas

எம் கே டி பாடிய பாடல்கள்

கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர் சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள் தவறாமல் கேட்கும் பாடல் இது.

எம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்ல முடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அது ஒரு தனி நூலாக விரியும்.

 

ஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

நம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும் சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களை காலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது

krishna mkt

தமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்

நமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.

தமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதை ஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம் வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில் சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்ற வைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதே கொள்கையைக் கடைப் பிடிப்போம்!

********* முற்றும்

contact swami_48@yahoo.com

சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

suzi kulam 1

தமிழ் என்னும் விந்தை! -22

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1542; தேதி 3 January, 2015.

 

சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே                                                

விலையரு மாநற்பா                                           

முயல்வ துறுநர்                                                    

திருவழிந்து மாயா”

 

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே                                        விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;   முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்

திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா                                                

 தநத சகாவே நீவா                                                

 நததந தாதா வேகா                                                  

 விசந விரோதா காரா”

 

 

இந்தச் செய்யுளின் பொருள்:-                                      மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!            வாமா – ஒளியை உடையவனே!                                    தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!                                நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!          விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே!  (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)                                                     நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

இந்தச் செய்யுள் அமைந்த சித்திரத்தைக் கீழே காணலாம்:

suzikulam 2

கிடைமட்டமாக செய்யுளின் நான்கு அடிகளும் வருவதை முதலில் காணலாம். பின்னர் எட்டு செங்குத்தான வரிசைகளில் மேலிருந்து கீழாக முதல் வரிசையிலும் அடுத்து கீழிருந்து மேலாக எட்டாம் வரிசையிலும் இப்படி மாறி மாறி 2,7,3,6,4,5 ஆகிய வரிசைகளில் செய்யுள் அமைவதைக் கண்டு இன்புறலாம்.

இன்னும் சில சுழி குள வகைப் பாடல்களை மேலே காண்போம்

  • தொடரும்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

conch_4

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1538; தேதி 2 January, 2015.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே – அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே! – — பாரதியார்

பாரத மண்ணில் தோன்றி பாரத மண்ணிலேயே வாழ்ந்து மறைந்தவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கும். தமிழர்களின் சிந்தனையும் வடக்கத்திய அறிஞர்களின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர்களது பழைய பாடல்களே காட்டுகின்றன. ஆனால் ஒவ்வொருவரும் அதைச் சொல்லும் முறை தனி அழகு படைத்தவை.

1.சான்றோர் இல்லாத இடத்தில் வசிக்காதே என்று வெற்றி வேற்கை பாடிய அதிவீரராம பாண்டியன் கூறுகிறார்:

சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன்றேர் குறவர் தேயம் நன்றே — வெற்றி வேற்கை

 

பொருள்:– பெரியோர் இல்லாத பழைய நகரில் வசிப்பதை விட தேன் சேகரித்து வாழும் குறவர் வாழும் மலை நாடு நல்லதே!

அவரே இன்னும் ஒரு பாடலில் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது; தங்கத்தை எவ்வளவு புடம் போட்டு தீயில் சுட்டாலும் அதன் ஒளி குன்றாது. சந்தனத்தை எவ்வளவு அரைத்தாலும் அதன் வாசனை குறையாது. கரிய அகில் கட்டைகளை எவ்வளவு புகைபோட்டாலும் அது மணம் குன்றாது; கடலைக் கலக்கினாலும் அது சகதியாகாது; சேறாகாது. அதே போல பெரியோர்களுக்கு எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவர்கள் நன்மையே செய்வர்.

milk

Boiling milk

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

sandal paste

அவரே இன்னொரு பாடலில் சொல்லுவார்:

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அன்னதானப் பெருமை பற்றிச் சொற்பொழிவு ஆற்றுகையில் இதே கருத்தைச் சொல்கிறார். பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு இலவசமாக சாப்பாடு போடுவது – அன்னதானம் செய்வது — சோம்பேறிகளை வளர்க்காதா என்று நினைக்கலாம். அந்த ஆயிரக் கணக்கான மக்களில் ஒரு பெரிய மகான் இருந்து வாழ்த்தினாலும் ஊரே பயன் அடையும் என்பார்.

தசரதன் நாட்டில் வறட்சி நிலவவே எல்லோரும் மான்கொம்பு முளைத்த – ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை ( கலைக் கோட்டு முனிவர்) அழைத்து வாருங்கள்; அவர் நாட்டிற்குள் நுழைந்தவுடன் மழை பெய்யும் என்று சொல்கின்றனர். அவர் வந்தவுடன் நாடு செழித்தது என்று வால்மீகி ராமாயணம் சொல்லும்.

இவ்வாறு மேன் மக்களின் பெருமைதனை விளக்கும் பாடல்கள் தம்ழில் நூற்றுக் கணக்கில் உள.

சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு – குறள் 987

தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்யாவிட்டால் சான்றோர் என்ற பெயருக்கு என்ன பொருள்?

பெரியோர் என்று பெயர் உடையவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய்க் கூடாது என்றும் வள்ளுவர் கட்டளி இடுகிறார்:

1.கொல்லா நலத்தது நோன்மை – பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே நோன்பு.

2.பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு –பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாமல் இருப்பதே பெருந்தன்மை

3.குண நலம் சான்றோர் நலனே – பெரியோரின் சிறப்பு எல்லாம் அவருடைய குணங்களே

4.தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் – சமமாக இல்லாரிடத்தும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் பண்பு வேண்டும்.

Chandala_and_Sankara_

Chandala and Adi Shankara

ஆதி சங்கரரிடம் தோற்ற மண்டணமிஸ்ரரும், சரச வாணியும் தோல்வியை ஒப்புக் கொண்டனர். நாய்களுடன் வந்த புலையனை, “தள்ளிப் போ” என்று கோபத்தில் கத்திய ஆதிசங்கரரை ஆத்மாவை நகரச் சொல்கிறாயா?, உடலையா? என்று புலையன் திருப்பிக் கேட்டவுடன் அடிபணிகிறார் உலக மகா தத்துவ வித்தகர் சங்கரர்.

பல தமிழ்ப் புலவர்களும் வாக்குவாதத்தில் தோற்றவுடன் தோல்வியை ஒப்புக் கொண்டு தண்டனைகளை ஏற்றனர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் என்ற சிறுவனுடன் வாதிட்டுத் தோற்ற 8000 சமணர்களும் தானே சென்று கழுவில் ஏறினர்.

மிதிலை நகர கசாப்புக் கடைக்காரன் தர்மவியாதனிடம் கௌசிகன் என்ற பிராமணன் பாடம்கற்றுக் கொண்டான். பெற்றோர்களைக் கவனித்துப் போற்றுவதே ஒருவரின் தலையாய கடமை என்பதை மாமிசம் விற்பவன் போதிக்கிறான் என்று மஹாபாரதம் சொல்லும்.

Contact swami_48@yahoo.com

மாலைமாற்று – 2

jaimala

கட்டுரையை எழுதியவர் :– By ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1537; தேதி 1 January, 2015.

 மேலும் சில மாலைமாற்று செய்யுள்களை இனி இங்குக் காண்போம்.

மாறனலங்காரம் தரும் அழகிய பாடல் இது:-

 

“வாமனாமானமா                                        

 பூமனாவானவா                                               

வானவானாமபூ                                             

  மானமானாமவா”

 

 malai matru

இதன் பொருள்:-

வாமனா – வாமனனே!                                      

வானவாவானவானாம – தேவர்களால் விரும்பி சொல்லுவதாய பெரிய திரு நாமத்தை உடையவனே!       மானமாபூ – பெருமையை உடைய திரு மகளுக்கும் பூமி தேவிக்கும்,

பூமானமனா – பூமானாகிய மன்னனே!                            

மானாம – மாலாகிய திரு நாமத்தை உடையவனே!                    

வா – என் முன்னே வந்து தோன்றுவாய்!

இது இரண்டு விகற்பத்தால் வந்த வஞ்சித்துறை.

யாப்பருங்கல விருத்தி தரும் அழகிய மூன்று மாலமாற்றுப் பாடல்கள் பின் வருமாறு:-

“நீமாலை மாறாடி நீனாடு நாடுனா

நீடிறா மாலைமா நீ”

“பூமாலை காரணீ பூமேத வேதமே                                 

பூணீர காலைமா பூ”

 

“காடாமாதா வீதாகா                                       

காதாவீதா மாடாகா

 

யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றியுள்ள இரு மாலைமாற்றுச் செய்யுள்களில் ஒன்று குறள்வெண்பாகவும் இன்னொன்று வஞ்சிவிருத்தமாகவும் அமைந்துள்ளது.

 flower-garlands-1

குறள் வெண்பா

“காயாதி யாதிநீ காநாத வேதநா                                          

காநீதி யாதியா கா”

இதன் பொருள் : –

ஆதி! வேத நாத நாகா! நீதியா! தியாகா!  நீ காயாதி கா என்று பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

வேத நாத நாகா – வேதத் தொனி (நிறைந்த கீரி) மலையை உடையவரே! காயாதி கா – கோபியாது காத்து அருள்க

வஞ்சி விருத்தம்

“வேக மாகமு னோடிவா   

 வான வாகன மேறுநா                                                

 நாறு மேனக வானவா                                                  

வாடி னோமுக மாகவே

இதன் பொருள்:-

ஆன் அ வாகனம் ஏறுநா – இடபமாகிய அந்த வாகனத்தில் ஏறுபவரே!    நாறும் மேல் நக வானவா – காணப்படுகின்ற மேலாகிய (கீரி) மலையில் (எழுந்தருளிய) கடவுளே!                                             வாடினோம் முகமாக – வாடினோமாகிய எம்மை நோக்கி,                முன் வேகமாக ஓடி வா – எதிரே விரைவாக ஓடி வந்தருள்க!

pair-of-pink-orchids

இப்படி மாலைமாற்றுச் செய்யுள்கள் ஆங்காங்கே பற்பல கவிஞர்களால் இயற்றப்பட்டு ஓலைச்சுவடிகளிலும் அச்சிடப்பட்ட பழங்காலப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கின்றன.

தமிழ் விந்தைகளுள் மாலைமாற்றும் ஓன்று!

contact swami_48@yahoo.com

****************************