தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2

Adhiyamaan and Avvaiyar

அதியமான், அவ்வையார்

First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410)

The Wonder that is Tamil – Part 3

தொல்காப்பிய அதிசயங்கள்

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1513; தேதி 24 டிசம்பர், 2014.

அதிசயம் 11

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதர், தொல்காப்பியத்தைக் கடலாகவும் நேமிநாதம் என்னும் நூலை அக்கடலில் செல்லும் சிறு படகாவும் கொள்வார்:–

தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

பல்காற் கொண்டோடும் படகென்ப

அதிசயம் 12

வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் (தொல். 1367)

நாம் விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமையையும், இறைவன் நம்மை எல்லா வளங்களும் கொடுத்துக் காப்பான் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். பழிதீர் செல்வம் என்ற சொற்றொடர் குறிப்பிடத்த்க்கது. நல்ல வழியில் சம்பாதிக்கும் பொருள்!

tamil poets1

அதிசயம் 13

தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” — என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. மனுஸ்மிருதியில் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். அதைத் தொல்காப்பியரும் தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

என்கிறார்.

அதிசயம் 14

பெரும் பெயர் புலவர்கள்

தமிழில் பெயர்பெற்ற புலவர்களுக்கு சிறப்பு அடைமொழிகள் உள்ளன. கற்றறிந்தோர் எப்போதும் அந்த அடை மொழிகளைப் பயன்படுத்துவர்

ஒல்காப்புகழ் தொல்காப்பியன்

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்

புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்

தெய்வப் புலவன் திருவள்ளுவன்

பல்கலைக் குரிசில் பவணந்தி

உளம்கூர் கேள்வி இளம்பூரணர்

ஆனாப் பெருமைச் சேனாவரையர்

WCTC/Padma Subramaniam

அதிசயம் 15

தொல்காப்பியர் தமிழுக்கு புதிய இலக்கணம் வகுத்தார் என்பதைவிட அவருக்கு முந்தியிருந்த கருத்துக்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்தார் என்பதே பொருந்தும். அவர் மற்றவர் வகுத்த விதிகளை மேற்கோள் காட்டும்போதெல்லாம் என்ப, மொழிப போன்ற வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு 287 இடங்களில் அவர் சொல்கிறார்.

அதிசயம் 16

பாணிணியில் சொற்செட்டை தொல்காபியத்தில் காண முடியாது. சொன்னதையே மீண்டும் சொல்லி நம் பொறுமையைச் சோதிக்கும் இடங்களும் உண்டு:–

ஆறறிவு உயிர்கள் பற்றிய சூத்திரத்தில்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

இதுபோல வேறு சில இடங்களில்

என்ன பெயரும் அத்திணையவ்வே,

மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

paari

பாரி வள்ளல்

அதிசயம் 17

தொல்காப்பியர் 94 சம்ஸ்கிருதச் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். இது சங்க இலக்கியத்தை விட அதிகம் என்று கே கே பிள்ளை போன்றோர் செப்புவர்.

தொல்காப்பியத்தை முதல் முதலில் பிரசுரித்தவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார். 1891ல் முதல் பதிப்பு அச்சிடப்ப்ட்டது. 1610 சூத்திரங்கள் கொண்ட 3 அதிகாரங்களையும் அவர் வெளியிட்டார்.

யாழ்ப்பாணக் கவிஞர் சருப்பதோபத்திரம்

saraswati

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1512; தேதி 24 டிசம்பர், 2014.

 

தமிழ் என்னும் விந்தை! -14

சருப்பதோபத்திரம் – 3

ச.நாகராஜன்

யாழ்ப்பாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-

தேவா நாதா தாநா வாதே            

  வாரா தேதா தாதே ராவா                                        

 நாதே னாகா கானா தேநா                                            

தாதா காயா யாகா தாதா

 

 

இதன் பொருள் :-

தேவா – பிரகாசம் உடையவரே!                                         

நாதா – தலைவரே!                                                

தாநா – வலிமையினை உடையவரே!                                       

தாதா – பிதாவே!                                                      

  வாநா – ஆகாயமானவரே!                                                  

 தேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே!      

கானா – கீதப்பிரியரே!                                                 

தே – தெய்வமே!                                                      

காயா – திருமேனியை உடையவரே!                                     

  யாகா – யாகங்களுக்கு உரியவரே!                                      

தாதா – கொடையாளரே!                                                 

வாது வாராதே – வாது வாராதபடி                                

தேரா – சேர்ந்து                                                  

 நா தா தா – நா வன்மை தந்தருள்க!

இனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:

bandhamnew14

தே வா நா தா தா நா வா தே
வா ரா தே தா தா தே ரா வா
நா தே னா கா கா னா தே நா
தா தா கா யா யா கா தா தா
தா தா கா யா யா கா தா தா
நா தே னா கா கா னா தே நா
வா ரா தே தா தா தே ரா வா
தே வா நா தா தா நா வா தே
               

 

எந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அது தான் சருப்பதோபத்திர பந்தம்!

இனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-

பாகா நாதா தாநா காபா                                                காவே நீகா காநீ வேகா                                                நாநீ தாமா மாதா நீநா                                                 தாகா மாதே தேமா காதா!

இதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இது தான்:-

பா கா நா தா தா நா கா பா
கா வே  நீ கா கா  நீ வே கா
நா நீ தா மா மா தா நீ நா
தா கா மா தே தே மா கா தா
தா கா மா தே தே மா கா தா
நா நீ தா மா மா தா நீ நா
கா வே  நீ கா கா நீ வே கா
பா கா நா தா தா நா கா பா

தமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த எல்லை காண முடியாத ஒன்று. முடிந்த வரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.

-தொடரும்

‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?

tol1

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1509; தேதி 23 டிசம்பர், 2014.

This article is available in English as well.
Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 2

தமிழ் அதிசயம் -6
தமிழ் மொழியில் சில எழுத்துக்களில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியம் தடை விதிக்கிறது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் தமிழர்கள் தங்கள் மொழியை வளர்க்க மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்தது அவர்களுக்குத் தெரியும்!

தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் என்று சான்றோர் கூறுவர். இதை எழுதியவர் “ஒல்காப் புகழ்” தொல்காப்பியன் ஆவார். இவர் விதித்த தடையையும் மீறி ச- என்னும் எழுத்தில் துவங்கும் சுமார் 14 சொற்கள் சங்க இலக்கியத்திலேயே உள்ளன. இவைகள் வடமொழிச் சொற்களே! சகடம், சங்கம், சடை, சமன், சரணம், சருமம், சலதாரி, சலம், சனம், சண்பகம் முதலியன அவை.

tol2

தமிழ் அதிசயம் -7
இதே போல “ஞ” என்னும் எழுத்திலும் சொற்கள் துவங்கக் கூடாது என விதி. ஏன் இப்படி விதித்தனர் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியும் சங்க இலக்கியத்தில் ஞமலி (நாய்), ஞமன் (யமன்) ஆகிய சொற்கள் உண்டு. ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. இதற்கு என்ன காரணம் என்பது எங்கும் இல்லை.

‘’ச’’ என்பதன் மீது விதிக்கப்பட்ட தடைதான் வியப்பைத் தருகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ‘’ச’’ சப்தத்துடன் துவங்கும் சொற்கள் ஏராளம். தமிழில் நாம் இன்றும் கூட சங்கு, சங்கம், சமம் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறோம் இவை வட மொழிச் சொற்கள். ஒருவேளை வட மொழியுடன் வேறுபடுத்த இந்த விதியை வைத்தனரோ! ஏனெனில் வடமொழியில் ‘’ச’’ – வர்கத்தில் நான்கு விதம் உண்டு. இது தவிர ஆங்கிலத்திலுள்ள ஸ், ஷ் போன்று சப்தம் உடைய நான்கு வகைகள் வேறு வட மொழியில் இருக்கின்றன. வியாசர் என்னும் மாமுனிவர் அதிகமான ஸ்லோகங்களை ‘’ஸ’’ என்னும் எழுத்தில் துவங்கியதால் அவருக்கு சகாரகுக்ஷி என்று பெயர் எனவும் சான்றோர் கூறுவர். இதனால்தான் தமிழில் ச-வுக்குத் தடை விதித்தனரோ!

ய,ர,ல, ஞ – ஆகிய சில எழுத்துக்களுக்கும் தடை விதித்ததற்குக் காரணம் கூறப்படவில்லை!

06fr_Nagaswamy_boo_1134438g

தமிழ் அதிசயம் -8
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ அஹ்து அஃது, இஹ்து, இஃது

ஆய்த எழுத்தும் ஒரு விநோத எழுத்தே. இதை சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி நாம் அதிகம் பயன்படுத்தவில்லை. இந்த மூன்று புள்ளி உடைய எழுத்து கல்வெட்டுகளில் காணப்படாததால் தொல்காப்பியர் காலத்தை முதல் சில நூற்றாண்டுகளில் வைப்போரும் உளர்.

ஆய்த எழுத்தைக் கண்டு பிடித்ததே தொல்காப்பியரோ என்று எண்ணவும் சில காரணங்கள் உண்டு. வடமொழியில் விசர்க்கம் என்னும் இரண்டு புள்ளி எழுத்து போல இதைப் பயன்படுத்த அவர் எண்ணி இருக்கலாம். வடமொழியில் ராம என்பதற்குப் பின் விசர்க்கம் ‘’ : ’’ (ராம: ) வந்தால் ராமஹ என்பர். ஹரி எனபதற்குப் பின் ‘’ : ‘’ வந்தால் ஹரிஹி என்பர். ஆனால் இது போல தமிழில் ஆய்தம் பயன்படுத்தப்படவில்லை. ஃ என்பது அஹ் என்ற சப்தத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது இல்லாமலேயே தமிழ் மொழி வாழ முடியும் என்று அனைவரும் ஒப்புக் கொள்வர். ஒவ்வொரு மொழியிலும் சில விநோதங்கள் உண்டு. தமிழ் மொழியில் ஃ மற்றும் மொழி முதல் எழுத்துகள் பற்றிய விதிகள் எல்லாம் விநோதமாக உள்ளது.

தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்று பழைய உரைகாரர்கள் கூறுகின்றனர். புதிய புத்தங்களில் அவருடைய பூர்வீகத்தை இருட்டடிப்புச் செய்கின்றனர். அதை இருட்டடிப்பு செய்யாமல் அதை எழுதி அதற்கு மறுப்புரை எழுதினால் தவறில்லை. இவ்வளவு பீடிகை எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆரியதரங்கிணி என்ற புத்தகம் எழுதிய திரு கல்யாணராமன் இந்தோநேஷியாவில் ஒரு அகத்தியர் சிலை அருகே த்ருணபிந்து என்ற பெயரில் தொல்காப்பியர் சிலை இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால் இடத்தின் பெயர் இல்லை. அது சரியானால், அதையே- த்ரி பிந்து என்று படித்தால் முப்புள்ளி என்று ஆகும். இது ‘’ ஃ ’’ கண்டு பிடித்ததால் அவருக்கு இட்ட பெயரோ என்று நான் கருதுவதுண்டு. இது ஒரு கற்பனையே. மேலும் ஆதாரம் கிடைக்கும் வரை கற்பனையாகவே எண்ணல் வேண்டும்.

tolkappiyar

தமிழ் அதிசயம் -9
ஔ- கார மர்மம்
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உயிர் எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒன்று. குறில் எ, ஒ ஆகியன வடமொழியில் இல்லை. அதற்குப்பதில் க்ரு என்ற எழுத்து உண்டு. இருந்தபோதிலும் அரிதாகவே பயன்படுத்தப்படும் ஆனால் இரண்டு அரிச்சுவடியிலும் ‘’ஔ’’ என்னும் எழுத்து இருந்தும் யாரும் பயன்படுத்தவில்லை. சங்க காலப் புலவர் முதல் வள்ளுவன், பாரதி வரை ஔ—வில் பாட்டு துவங்கவில்லை. சங்கப் புலவர் எழுதிய 30,000 வரியிலும் வள்ளுவன் எழுதிய 2660 வரிகளிலும் ‘’ஔ’’ என்ற எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை. ஔவையாரையும் அவ்வை என்றே எழுதினர். ஆனால் அங்கிலத்தில் ‘’ஔ’’ல் (ஆந்தை) போன்ற ஒலிகள், சொற்கள் உண்டு.

தமிழும் சம்ஸ்கிருதமும் வேற்றுமை (விபக்தி), அரிச்சுவடி போன்ற பல விஷயங்களில் ஒத்துப் போவதால் சிந்து சமவெளி ஒலிக் குறிப்புகளும், சொல் துவக்கமும் இதே போலத்தான் இருக்கவேண்டும். அதாவது 25 விழுக்காடு சொற்கள் உயிர் எழுத்தில்தான் துவங்கும். அ என்னும் எழுத்து அதிகமாக இருக்கும் ஆ என்பது குறைவாக இருக்கும். இ என்பது அதிகம் இருக்கும் ஈ என்பது அரிதாகவே இருக்கும். இப்படிப் பல அபூர்வ ஒற்றுமைகளை எனது ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனக்கு சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்க மான்ய உதவி கிடைத்தால் அதை நொடிப்பகுதியில் அலசி ஆராய இது போன்ற பல நூதன உத்திகள் என்னிடம் உள.

Tamil_Brahmi_Potsherd
Pot with Brahmi script near Vadalur (Script writing: Atiyakan)

தமிழ் அதிசயம் -10

அ என்னும் எழுத்தைக் கண்டு பிடித்தது யார்?
உலகில் எல்லா மொழிகளும் அ- வில்தான் துவங்க முடியும் என்ற மாபெரும் உண்மையை, முதல் (1) திருக்குறளில் வள்ளுவனும் வள்ளுவனுக்கு முன் கிருஷ்ண பரமாத்மா கீதையிலும் சொல்லி வைத்தனர். அதற்கு முன் ரிக் வேத முனிவர்கள் சொல்லி வைத்தனர்.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் ‘’அக்னி மீளே புரோஹிதம்’’ என்ற செய்யுளுடன் துவங்கி அக்னி என்னும் செய்யுளுடன் 10,000-க்கு மேலான மந்திரங்களுடன் முடிவடைகின்றன. கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத மந்திரங்கள் எல்லாம் ஓம் என்னும் மந்திரத்துடன் சொல்ல வேண்டும் என்பது விதி. அந்த ஓம் என்னும் ஏக அக்ஷரமும் ‘’அ+உ+ம’’ என்ற அ-வில்தான் துவங்கும். ஆக உலகிற்கு ‘’அ’’ என்னும் எழுத்தைக் கற்பித்து அரிச்சுவடியில் முதல் எழுத்தாக வைத்ததும் நாம் தான். இதை ஏசு பிரானும் பைபிளில் ‘’ஐ ஏம் தெ ஆல்பா அண்ட் ஒமேகா’’ என்று கூறுவதை உலகம் அறியும். அவர் இமயமலையில் முனிவர்களிடம் வேத உபநிஷத் பகவத் கீதையைக் கற்றுச் சென்றதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

kolam painting
Tamil’s wonderful ancient art KOLAM. Only Tamil girls in the whole wide world can draw perfect mathematical diagrams without any instruments!!

சிவ பெருமான், பாணினி என்னும் உலக மகா இலக்கண வித்தகனுக்கு வழங்கிய 14 மாஹேஸ்வர சூத்ரங்களில் முதல் சூத்திரமும் அ-வில் துவங்குவதே! பாணிணியின் உலக மஹாப் புலமையைக் கண்டு வியந்த பாரதி உலகம் நம்ப முடியாத திறன் (நம்பருந்திறல் பாணிணி) என்று பாடுகிறார்.

வாழ்க தமிழ் மொழி! வாழ்க நிரந்தரம்!

அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ்

Tamil-annai
Mother Tamil- Tamil Annai

Research paper written by London Swaminathan
Research article No.1507; Dated 22 December 2014.

Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 1
தமிழ் ஒரு அற்புதமான மொழி. ஏராளமான அதிசயச் செய்திகள் நிறைந்த மொழி. படிக்கப் படிக்கத் தெவிட்டாத செய்திகள் உடைய மொழி. பழமொழிகளும் தனிப் பாடல்களும், நல்ல இலக்கியங்களும் ஆயிரக் கணக்கில் உடைய இம்மொழியை கற்று அனுபவிக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். இதன் சுவையை நுகர ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தமிழ் அதிசயம் -1
எத்தனை மன்னர்கள் அடிபணிந்தனர்?
குலோத்துங்க சோழனின் (1070-1118) வெற்றிகளை எடுத்துரைப்பது ஜயம்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி என்னும் நூல். அதில் குலோத்துங்கன் வெற்றிகொண்ட நாடுகள், இனங்களின் பட்டியலைக் கேளுங்கள்:

தென்னவர் வில்லவர் கூபகர்
சாபகர் சேதியவர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
காடவர் காரிபர் கோசலரே
சங்கர் கராளர் கலிந்தர்
துமிந்தர் கடம்பர், துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர்
விராடர் மயிந்தர் சயிந்தர்களே
சிங்களர் வங்களர் சேகுணரே
சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர்
சவுந்திரர் குச்சரர் கச்சியரே
வத்தவர் மத்திரர் மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர்
துருக்கர் குருக்கர் வியத்தர்களே
அந்தக் காலத்தில் பாரத நாடு 56 தேசங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மன்னன் இவர்கள் எல்லோரையும் வெற்றிகண்டதைப் பட்டியல் கூறுகிறது.

tamil annai 2

தமிழ் அதிசயம் -2 வாய்மை,உண்மை,மெய்மை
இந்து மதம் சத்தியம் என்னும் மாபெரும் அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ளது. கடவுளே ஆனாலும் சத்தியத்தை/ கொடுத்த வாக்கை மீறமுடியாது. இதை பஸ்மாசுரன் கதை முதலிய வேறு பல எடுத்துக்காட்டுகளால் என்னுடைய பல கட்டுரைகளில் விளக்கிவிட்டேன். ஆனால் தமிழர்கள் இந்த சத்தியத்தை விளக்குவது போல வேறு யாரும் அழகாக விளக்கவில்லை.

மனம், மொழி, மெய் (காயேன, மனசேன, இந்த்ரியைர்) ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு, சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களைச் செய்தால், ஒருவர் சித்தராகி அற்புதங்களைச் செய்யலாம். இதற்கு தமிழர்கள் மட்டுமே மூன்று அற்புதமான சொற்களைத் தனித்தனியே சொல்லுகின்றனர்.

மனதால் (உள்ளம்) பின்பற்றப்படும் சத்தியம்= உண்மை
வாக்கால் (வாய்ச் சொல்) பின்பற்றப்படும் சத்தியம்= வாய்மை
உடம்பால் (மெய்) பின்பற்றப்படும் சத்தியம்=மெய்மை

தமிழ் அதிசயம் -3 உண்மையான தமிழ் வாழ்த்து
தமிழர்களின் உண்மையான தமிழ் வாழ்த்து இதுதான். பாரதியின் வாழ்க தமிழ் மொழி, சுந்தரம் பிள்ளையின் நீராரும் கடலுடுத்த ஆகிய இரண்டு பாக்களையும் விட தமிழின் சிறப்புகள் அத்தனையும் கொண்டது கவி யோகி சுத்தானந்த பாரதியாரின் காதொளிரும் குண்டலமும் பாடல். இது தமிழரின் இல்லம் தோறும் நாள்தோறும் முழங்க வேண்டிய பாடல்.
இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஐம் பெரும் காப்பியங்களில் பெயரும், தமிழுக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் திருக்குறளும், நால்வர் மற்றும் ஆழ்வார் பெயரும், சேக்கிழார் கம்பன் பெயரும் இரண்டே பாக்களில் அடங்கிவிடுவதால் ஏறத் தாழ ஆயிரம் ஆண்டுத் தமிழ் வரலாற்றை அறிகிறோம்.

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

475px-Tamil_Culture

தமிழ் அதிசயம் -4
ஒரே அம்பில் ஐந்து
ராமனுடைய ஆற்றல் எவ்வளவுதான் பெரிதானாலும் அதைச் சோதிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சுக்ரீவனும் அனுமனௌம் முடிவு செய்கின்றனர். ஏழு மரா (சால்) மரங்கள் வரிசையாக நின்ற ஒரு இடத்தைத் தேந்தெடுத்து அம்பால் துளைக்கச் செய்தனர். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் எளிதில் துளைத்துச் சென்றது. இது போல தமிழ் இலக்கியத்திலும் ஒரு செய்தி வந்துள்ளது. கடை எழு வள்ளல்களில் ஒருவர் ஓரி. வருடைய பெருமையைப் வன் பரணர் பாடுகிறார்.

ஓரியின் வில் ஆற்றல் தமிழகம் எங்கும் பரவியதால் அவன் பெயரே வல் வில் ஓரி என்று ஆயிற்று. அவன் கையிலிருந்த வில்லில் இருந்து பாய்ந்த அம்பு ஒரு யானையைத் துளத்து ஒரு புலியைத் துளைத்து, மானை மாளச் செய்து, பன்றியின் உடம்பில் பாய்ந்து இறுதியில் ஒரு உடும்பின் உடலில் சென்று தைத்து நின்றதாம்.(புறம் 152)

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல் தலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

தமிழ் அதிசயம் -5

பாரதிக்கு எத்தனை பெயர்கள், அடை மொழிகள்?
புரட்சிக் கவி பாரதிதாசனின் குரு மஹா கவி சுப்பிரமணிய பாரதியார். குருவின் மீது பாரதிதாசனுக்கு அபார பக்தி. இதோ அவர் பாரதி பற்றி எழுதிய புகழுரையைப் படியுங்கள். எத்தனை அடைமொழிகள்!

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!

tamil

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1500; தேதி 20 டிசம்பர், 2014.

இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.

எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.

sanskrit-letters

இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.

சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்

Devimahatmya_Sanskrit_MS_Nepal_11c

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.

பெரிய ஆதாரம்
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.

‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.

இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.

tamil 3

கீதையும் குறளும்
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை

திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508
மொத்தம் உள்ள குறள்கள் 1330

ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.

குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.

மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.

டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைத் தருகிறேன்.

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!

yogaveshti,indus style

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1498; தேதி 19 டிசம்பர், 2014.

ஒவ்வொரு மொழியிலும் பல அதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழில் 12 உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ என்னும் எழுத்தில் ஒரு சொல் கூட சங்க இலக்கியத்தில் இல்லை! சங்க இலக்கியத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த திருக்குறளிலும் இல்லை. நாம் அறிந்த ஔவையார் என்ற புலவர் பெயரையும் அவ்வையார் என்றே அக்காலத்தில் எழுதினார்கள். தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு ஒரு கட்டுரையில் பட்டியல் போட்டுக் காட்டியுளேன். இன்னும் பல அதிசயங்கள் தமிழ் மொழியில் உண்டு. அதைத் தனியே காண்போம்.

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள் பற்றி மோனியர் வில்லியம்ஸ் என்ற அறிஞர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
“எண்ணிக்கையில் அதிகமான நூல்களைப் படைத்தது மட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர்களுடைய நூல்களின் நீளத்தைப் பாருங்கள்! வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில் 9000 வரிகள்! கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள்! ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள்! இத்தோடு அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சத்தைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்!

அவர்களுடைய இலக்கியத்தில் உள்ள ஞானம், இயற்கை அழகு, குடும்பத்தினர் இடையே நிலவும் அன்பு, வாத்சல்யம், நீதி போதனை ஆகிய எதிலுமே கிரேக்க, ரோமானிய (லத்தீன்) காவியங்களுக்கு அவை சளைத்தவை அல்ல”.

ஹெர்மன் ப்ரமோபர் என்பவர் ஜெர்மானிய அறிஞர் — அவர் கூறுகிறார்: “நமக்குத் தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழிதான இலக்கியச் செறிவுடைய வளமான மொழி. ஆனால் அதில் ஒரு வினைச் சொல் 68 வடிவங்கள் எடுப்பதை நாம் அறிவோம். அது கண்டு வியக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் ‘’க்ரு’’ (செய்ய) என்ற வினைச் சொல் 336 வினை வடிவங்களை உடையது! இதில் இன்னும் எவ்வளவோ சேர்க்க முடியும். அவைகளைச் சேர்க்காமல் 336.

athithi devo bhava

உபநிஷத்துகள் பற்றி மூவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் சம்ஸ்கிருத மொழியீன் ஆழத்தை அளந்து காட்டுகின்றனர்.

“சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. அவைகளை அறிந்துவிட்டால் அவை மூலம் உருவாகும் நூற்றுக் கணக்கான சொற்களை அறிய முடியும். ஒரு எடுத்துக் காட்டு ‘’ராம’’ என்ற சபத்துக்கு வேரான ‘’ரம்’’, ரம்யதி என்பதை எடுத்துக் கொண்டால் அமைதியாக இரு, ஆனந்தமாக இரு, ஓய்வாக இரு, இன்பமாக இரு, மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடு,காதல் செய், விளையாடு, இன்பம் ஊட்டு, சாந்தமாக இரு, நிறுத்து, அசையாமல் நில் எனப் பல பொருள் தொனிக்கும்.

இதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்குக் கீழே உள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:
மூஷ் என்றால் திருடு என்று பொருள். மூஷிகம் என்றால் எலி. எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்லும் பிராணி. மூஷிக ரதி என்றால் பூனை என்று பொருள். இதில் ரம் என்ற இணைப்பு இருக்கிறது அதாவது எலியைத் தடுத்து நிறுத்தும் பிராணி அல்லது எலியினால் மகிழ்ச்சி கொள்ளும் பிராணி என்று பல பொருள் சொல்லலாம்—மூஷிக+ரதி.

இதையே ஆன்மீக விஷயங்களில் கூடப் பயன்படுத்தலாம். மூசிக என்பது ஆத்மா. மூஷிகரதி என்பது ஆன்மஞானம் பெற்றவன்.

இதையே வேத மந்திரங்களுக்கும் நாம் பயன்படுத்திப் பார்க்கலாமம். வேத மந்திரங்களின் பொருள் ஒரு மட்டத்தில் ஏதோ எலி, பூனை கதை சொல்லுவது போல இருக்கும். அதன் அடையாள பூர்வ அர்த்தமோ ஆன்மீக ரகசியமாக இருக்கும். அதன் மந்திர சப்தமோ, மந்திர ஒலியினால் வரும் பலன்களைக் கொடுக்கும்.

four vedas

வேத கால மொழி பல ‘’மறை’’கள் (ரகசியங்கள்) நிறைந்தவை. அது மட்டுமல்ல சொல்லின் இலக்கணம் முக்கியமல்ல. அந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் என்று பார்த்தால் பக்கம் பக்கமாக எழுத முடியும். அந்தக் காலத்தில் குருகுல வாசத்தில் குரு தனது சீடர்களுக்கு இந்த ரகசியங்களை அவரவர் தராதரம் அறிந்து போதிப்பார்.

ரிக் வேதத்தில் 24 பிரிவுகள் இருந்தன. வியாசர் என்னும் மாபெரும் அறிஞர் அவை அழிந்து வருவது கண்டு, வருத்தப்பட்டு அவற்றைக் காப்பாற்ற முயன்றார். பெரிய ‘’கம்பெனி எக்ஸிகியுட்டிவ்’’ மாதிரி திட்டம் எல்லாம் போட்டு, நான்கு உலக மகா அறிஞர்களை அழைத்து வேதத்தை நான்காக வகுத்து அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அப்படியும் நமக்குக் கிடைத்தது ரிக்வேதத்தின் ஒரே பிரிவு மட்டும்தான். பெரும்பகுதி அழிந்துவிட்டன. அந்த ஒரு பகுதியைக் கூட எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு பழமையானது — ரகசியங்கள் நிறைந்தது. சுமேரிய ஜில்காமேஷ் காவியம் போல எளிமையானது அல்ல. அதைப் போல சுவையில் மட்டமானதும் அல்ல. ரிக் வேத மந்திரங்கள் 10,000-க்குமேல் இருக்கின்றன. ரிக் வேத துதிகளின் எண்ணிக்கை 1028. சில துதிகளில் ஒரு மந்திரம் மட்டும் உண்டு. அதிகமாக ஒரே துதியில் 58 மந்திரங்கள் இருப்பதையும் காணலாம்.

ரிக்வேதம் தவிர வேறு மூன்று வேதங்களும் இருக்கின்றன. ஏறத்தாழ 20 வெளிநாட்டு அறிஞர்கள் இவைகளை மொழி பெயர்க்கிறேன் என்று வந்து திக்கு முக்காடித் திணறிப் போனதை அவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் ‘’தமாஷைப்’’ படிப்பவர்களுக்கு விளங்கும். ஒரு சொல்லை ஒருவர் மரம் என்றால் மற்றொருவர் நதி என்பார். இன்னும் ஒருவர் இது இராக்கதர் என்பார். இன்னும் ஒருவர் இது பொருளே விளங்காத பிதற்றல் என்பார். இன்னும் ஒருவர் படி எடுத்தவர் பிழை செய்திருக்கலாம், அந்தச் சொல்லுக்குப் பதில் இந்தச் சொல்லைப் போட்டால் எப்படி இருக்கிறது? என்று இடைச் செருகல் செய்வார். வேத மொழி பெயர்ப்புகளை அருகருகே வைத்துக் கொண்டு ஒப்பீட்டுப் பார்ப்பவர்களுக்கு நிறைய ‘’ஜோக்’’குகள் கிடைக்கும்.

classical skt

அந்தக் காலத்தில் இவர்கள் காசியில் உள்ள பண்டிதர்களை அழைத்தபோது வேதத்தின் புனிதத்தை உணர்ந்தவர்கள் மொழிபெயர்க்க உதவிசெய்ய மறுத்துவிட்டனர். பிராமணர்களில் மூன்றாந்தர ஆட்கள், காசுக்காக ஆசைப்பட்டு இவர்களுக்கு அரைக்குறை அர்த்தத்தைச் சொல்ல, ஆங்கிலமும் தெரியாமல் உளர, அவர்கள் சம்ஸ்கிருதமும் தெரியாமல் திணற, எல்லாம் கோளாறாகப் போயிற்று.

இப்பொழுது அமெரிக்காவில் சில புதுரக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். வேதத்தில் எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று சொன்னால் நன்றாகப் புத்தகம் விற்கும் என்று ஒரு சிலர் எழுதி பெரிய புத்தகக் கம்பெனிகள் மூலம் அவைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்னும் சிலர் இந்து மதத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று ‘’சமுத்ரம்’’ என்றால் அது ‘’கடல்’’ அல்ல, அது வெறும் குளம், ‘’புரம்’’ என்றால் சிந்து சம்வெளிக் ‘’கோட்டை’’கள் என்றெல்லாம் தத்துப் பித்து என்று எழுதி வருகின்றனர். இவர்கள் எல்லார் வங்கிக் கணக்குகளிலும் சேரும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதைப் பார்த்தால் இவர்களின் பின்னால் இருக்கும் ஆட்களையும் சூழ்ச்ச்சிகளையும் சதிகளையும் நாம் அறியலாம்.

வெற்றி எட்டும் திக்கும் எட்ட கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே! — பாரதி

புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள்

roses-thorns5b15d
புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1495; தேதி 18 டிசம்பர், 2014.

சூரியனையும், சந்திரனையும், தாமரையையும், ரோஜாவையும் உவமையாகக் கையாள எந்தக் கவிஞராலும் முடியும். ஆனால் முள், புல், ஊசி, கண்ணாடி முதலிய உவமைகளை அதிகம் காண முடியாது. மஹாபாரதத்தில் உள்ள மூவாயிரத்துக்கும் மேலான உவமைகளில் எள்ளும் முள்ளும் புல்லும் இடம் பெறுகின்றன.

எள் என்பது தானியங்களில் சிறியது ஆகையால் சின்னப் பொருட்களை ஒப்பிடவும், பிறரை சிறுமைப் படுத்தி மட்டம் தட்டவும் எள் உவமை பயன்படுகிறது. தமிழில்கூட அவனை ‘’எள்’’ளி நகையாடினர் என்று இளப்பமாகக் கூறுவதுண்டு. இதே போல கடுகு, வெண் கடுகு ஆகியவற்றையும் ஒப்பிடுவர்.

சீதையைப் பற்றிக் கூறும் இராட்சசர்கள், அவளை எள் அளவுக்குக் கிழித்து விழுங்குவோம் என்று பயமுறுத்துகின்றனர் (3-231-5).

மஹாபாரதத்தில் ராமர், சீதை கதைகள் உண்டு. ஆனால் ராமாயணத்தில் மாபாரத கதபாத்திரங்களின் பெயர்கள் வாரா.

சகுந்தலை ஆகாய மார்கமாகவும் அரசன் துஷ்யந்தன் தரை மார்கமாகவும் பயணம் செய்வது மஹா மேருவுக்கும் கடுகுக்கும் உள்ள அளவுக்குப் பெரிய வித்தியாசம் ஆகும் என்பது இன்னும் ஒரு உவமை (1-69-3)

புல்
எலும்பும் தோலுமாக இருந்த சாணக்கியனைப் பார்த்து நந்த வம்ச அரசர்கள் சிரித்தனர். அதற்குக் காரணம் அவர் ஒரு புல் தடுக்கி விழுந்ததாகும். உடனே அவர் அந்தப் புல்லைப் பிடுங்கி இது போல உன் வம்சத்தையும் வேரறுப்பேன் என்று சபதம் செய்தார். தனது உச்சுக் குடுமியை அவிழ்த்து சபதம் செய்த அவர், நந்த வம்சத்தை வேருடன் சாய்க்கும் வரை குடுமியை முடியேன் என்றும் சபதம் செய்ததாக வரலாறு. இறுதியில் சொன்னபடியே நந்த வம்சத்தை ஒழித்து மௌரிய வம்சத்தைப் பதவியில் அமர்த்தினார்.

பாரதியாரும் கூட காலா! என் காலருகே வாடா! உன்னை சிறு புல் என மதிக்கிறேன் – என்று புல் பற்றிப் பாடுவார்.

மாபாரதப் போர் நிகழாமல் தடுக்கும் முயற்சியை ஒரு கை அளவு புல் கொண்டு இமயமலையை மறைப்பதற்குச் சமம் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் சொல்லுவதாக ஒரு உவமை 3-36-22

சீதையுடன் ராவணன் பேச வந்தபோது அவள் —- இருவர் இடையேயும் ஒரு புல்லைப் போட்டாள். ராவணனை சிறு புல் என என மதிப்பதாகப் பொருள். இது வால்மீகி, துளசி, அத்யாத்ம ராமாயணங்களிலும் வருகிறது.

தொல்லை கொடுப்போரையும், தொல்லைகளையும் முள்ளுக்கு ஒப்பிடுவது வழக்கம். இடும்பி என்பவளை ஒழிக்க சூளுரைக்கும் பீமன், அந்தக் காட்டையே முள்கள் இல்லாமல் செய்வதாகக் (3-12-72) கூறுகிறான். தமிழில்கூட முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்ற பழமொழி உண்டு.
Sewing_needle

ஊசி
மஹாபாரதத்தில் முக்கிய மேற்கோள் பஞ்ச பாண்டவர்களுக்கு ‘’ஊசி முனை இடத்தைக் கூட கொடுக்க முடியாது’’ — என்று துரியோதணன் கூறுகிறான்.
யயாதி என்னும் மன்னன் சர்மிஷ்டையின் அழகைப் பாராட்டும் போது ஊசி அளவுக்குக் கூட மாசு மருவற்ற அழகி அவள் என்று புகழ்கிறான்(1-77-14).

கண்ணாடி உவமை
கண்ணாடி உவமை எல்லா மொழி இலக்கியங்களிலும் இருக்கும். மஹாபாரதத்தில் சகுந்தலை அதைப் பயன்படுத்துகிறாள். தன்னை மறந்துவிட்ட துஷ்யந்தனைக் கண்டிக்கும்போது, ஒவ்வொருவனும் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கும் வரை தானே உலக அழகன் என்று நினைக்கிறான் என்று சொல்லி ஒரு இடி இடிக்கிறாள்.

Beautiful Classic Patterned Design Luxury Wall Mirrors Ideas

இவ்வாறு மாபாரதத்தில் 232 பொருட்கள் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
(உவமை வரும் ஸ்லோகங்கள் வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையில் அவற்றைக் காண்க)

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

valmiki2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

அப்பய்ய தீக்ஷிதரின் உவமை பற்றிய ஸ்லோகத்தை பரிதிமாற்கலைஞர் என்ற பெயர்கொண்ட பேராசிரியர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்:–

உவமை என்னும் வலருங் கூத்தி
பலவகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கிற் கவின்பெறத் தோன்றி
யாப்பு அறி புலவர் இதயம்
நீப்பு அறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.

பொருள்:–உவமை என்பவள் ஒப்பற்ற நாட்டிய மங்கை. அவள் பலவேறு கோலங்களைக் கொண்டு காவியம் என்னும் மேடையிலே அழகுபொலியத் தோன்றி, பாட்டின் சுவையை அறியும் ரசிகர் மனத்தில் நீங்காத இன்பம் மலர நடிக்கிறாள்
(காளிதாசன் உவமைகள் —- என்னும் நா.வரதஜுலு நாயுடு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது)

கம்பன் அவனது ராமாயணத்தில்

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர்
ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்

—என்பான். எல்லோரும் உவமைக்குப் பயன்படுத்துவது சீதை என்னும் பேரழகியை— குணத்தில் பெண்மைக்கெல்லாம் இலக்கணம் வகுத்தாளை – அப்படிப்பட்ட சீதையை நான் எதைக் கொண்டு உவமை சொல்ல முடியும் – என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு உவமை சீதையே!
Valmiki's-Ramayana-

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே ‘’உபமா’’ என்ற சொல் இருப்பதாக (5-34-9; 1-31-15) வேதத்தை ஆராய்ந்தோர் (ஆர்.எஸ்.டே) கூறுவர். கி.மு. 800-க்கு முன் வாழ்ந்த யாஸ்கர் என்பவர் கார்க்யர் எழுதிய இலக்கணப் புத்தகத்தில் ‘’உபமா’’ என்பதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதை மேற்கோள் காட்டுவார்.

மஹாபாரதத்தில் 232 பொருட்கள் அல்லது உபமானங்கள் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுவதால் 2299 ஸ்லோகங்களில் அவை திரும்பத் திரும்ப வருகின்றன என்று மஹாபாரத உவமைகள் பற்றிய ஆய்வுகள் (ராம் கரன் சர்மாவின் நூல்) காட்டுகின்றன. உவமைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர் இந்திரன். 247 முறை ஒப்பிடப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் வேத கால தெய்வங்களான இந்திரன், சூரியன், அக்னி, யமன் ஆகியோருக்கும் பின்னரே வருவதால் (எண்ணிக்கையின் படி), மஹாபாரதம் மிகவும் பழைய நூல் என்பது தெளிவாகும்.

புராணங்களில் சிவனையும், விஷ்ணுவையும் பெரிய தெய்வங்கள் எனக் கொண்டாடுவர். அதற்கும் முந்தியவை ராமாயண மஹாபாரதம் என்பது உவமை ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

உலகத்திலேயே காளிதாசன் போல உவமைகளைத் திறம்படப் பயன்படுத்திய கவிஞன் எவனும் இலன். இதனால் ‘’உபமா காளிதாசஸ்ய’’ — என்ற சொற்றொடர் வழங்குகிறது. உவமைக்கு காளிதாசன் என்பது இதன் பொருள். அவனுடைய ஏழு படைப்புகளில் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளைப் படுத்தியதால் இந்தப் பெயர் என்பதல்ல. தகுந்த இடத்தில் தகுந்த உவமைகளைக் கையாண்டதே அவன் சிறப்பு.

abhijnanasakuntalam

காளிதாசன் புள்ளிவிவரம்

உலகப் பெரும் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவன். அவனுடைய உவமைகளை ஆராய்ந்தோர் தரும் பட்டியல் இதோ:
காளிதாசர் பயன்படுத்திய உவமைகள் –1250
ஏழு நூல்களில் பயன்படுத்திய சொற்கள் – 40,000 -க்கு மேல்!
அவருடைய ஏழு படைப்புகளில் மூன்றுக்கு மட்டும்
எழுதப்பட்ட உரைகள் – 93
ரகு வம்சத்தில் இவன் வரலாறு
சொல்லும் அரசர்களின் எண்ணிக்கை – 29

நாடகம், கவிதை, காவியம், சிறு நூல்கள் எனப் பல எழுதி ஷேக்ஸ்பியருக்கும் மேலான இடம் பிடித்த இந்தியன். ஈரான் முதல் இந்தோநேசியா வரை வருணித்தவன் காளிதாசன். அது மட்டுமல்ல மேக தூதம் என்னும் பயண நூல் மூலம் உலகின் முதல் ‘’டூரிஸ்ட் கைடு’’ என்னும் பெயரையும் பெற்றான். இவனுக்கு இணையான கவிஞன் இதுவரை இந்தியாவில் தோன்றியது. இனி தோன்றப் போவதும் இல்லை! இல்லை. பாரதியால் புகழப்பட்ட கவிஞன்!

வடமொழி அறிஞர்களும், நாணயங்கள் சிலைகளை ஆராய்ந்த டாக்டர் சிவராமமூர்த்தி போன்றோரும் இவன் கி. மு. முதல் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ வழ்ந்ததை உறுதிபடக் கூறுவர். காலத்தாலும் முந்திய கவிஞன்!

காளிதாசனின் ரகுவம்சத்தைப் பின்பற்றி இலங்கை வரலாற்று நூலுக்கு மஹாவம்சம் என்று பெயரிட்டனர். காளிதாசனின் உவமைகளை காதா சப்த சதி என்னும் பிராக்ருத நூலில் ஊர் பேர் தெரியாத கவிஞர்கள் அப்படியே கையாண்டனர் (களவாடினர்!)

சங்க இலக்கியத்தில் காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் இருப்பதை நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன். காளிதாசன், விக்ரமாதித்தன் என்ற புகழ் பெற்ற மன்னன் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் கி.மு 56-ல் அவன் பெயரில் ஒரு சஹாப்தத்தையே துவங்கிய பெருமை உடையவன். சகரர், யவனர், ஹூணர்களை ஓட ஓட விரட்டியவன்.

மேற்கூறிய தகல்களை உவமைகள் பற்றிய மூன்று ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இருந்து திரட்டினேன்.
dr nagaswami

தொல்காப்பியத்தில் உவம இயல்

உவமை என்பது சம்ஸ்கிருதத்தில் ‘’உபமா’’ எனப்படும். தொல்காப்பியரும் கூட இதைத் தமிழ்ப் படுத்தி உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘’போல’’ என்பதாகும். ரோஜா மலர் போல இதழ், ஆப்பிள் பழம் போலக் கன்னம் என்றெல்லாம் சினிமா வசனங்களில் கேட்கிறோம். ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்:–

அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வென்ற, வெல்ல. இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும் சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

15FR-_TOLKAPPIYAM__1120361e

–சுபம்–

எட்டு விதமாக வாசிக்கும் விசித்திர தமிழ் கவிதை!!

Saraswati_Maa

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1487; தேதி 15 டிசம்பர், 2014.

தமிழ் என்னும் விந்தை! -12
சருப்பதோபத்திரம் – 1

சதுரங்க பந்த விந்தையைத் தொடர்ந்து இன்னொரு விசித்திரமான சித்திர கவி சருப்பதோபத்திரம். இதைப் பற்றி அழகுற தனது ‘சித்திர கவி விளக்கம்’ நூலில் பேரறிஞர் பரிதிமால் கலைஞர் விளக்குவதைப் பார்ப்போம்:

சருப்பதோபத்திரம் என்பது, நான்கு புறத்தும் வாயில்களை உடையதாய் ,நினைத்த வழியால் செல்லத் தக்கதாய்ச் சமைக்கப்படும் ஒரு வீடு. அது போல எப்பக்கத்திலே தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே ஆகும் படி எவ்வெட்டெழுத்து உடைய நான்கு அடிகள் உடையதாய் அறுபத்து நான்கு அறைகளிலே முதல் அறை தொடங்கி ஒரு முறையும், இறுதி அறை தொடங்கி ஒரு முறையுமாக இரு முறை எழுதி இயையுமாறு பாடப்படும் செய்யுள் சருப்பதோபத்திரம் என்னப்படும்.

‘ஸர்வதோபத்ரம்’ என்பது சருப்பதோபத்திரம் எனத் தற்பவமாய் நின்றது. ஸர்வதஸ் – எப்பக்கத்தும்
பத்ரம் – வாயில் என்பது அவயவப் பொருள்

இதன் இலக்கணத்தை,

“இரு திறத் தெழுதலு மெண்ணான் கெழுத்துடை
யொருசெய்யு ளெண்ணென் ணரங்கினு ளொருங்கமைத்
தீரிரு முகத்தினு மாலை மாற்றாய்ச்
சார்தரு மாறியுஞ் சருப்பதோ பத்திரம்”

என்னும் மாறனலங்காரச் சூத்திரத்தால் உணர்க.
சர்ப்பதோபத்திரத்தின் உதாரணமாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா”

இதன் பொருள் :- மாவா – பெருமையை உடையவனே! நீதா – நீதியை உடையவனே! தா நீவா மாவா – வலிமை நீங்காத செல்வம் உடையவனே! யாவாமே மேவா யாவா (மே வாயாவா யா ஆமே) – சேரக் கடவாய் வாயாதனவாக எவை தாம் ஆகும்? நீ வா – நீ வருதி ராமா மாரா – இராமனை ஒப்பவனே; மன்மதனை ஒப்பவனே! ஆ – காமதேனுவை ஒப்பவனே! (அன்றி இடபம் போன்றவனே!) ஆமா – ஒழுங்குடையவனே! மேதா – நல்லுணர்வு உடையவனே! மே மார் ஆர் – மேன்மை பொருந்திய நின் மார்பில் உள்ள ஆத்தி மாலையை நீ தா – நீ தருதி
ஆமன் – ஒழுங்குடையவன்; மேதன் – அறிவுடையவன்; நீதன் – நீதியை உடையவன்; தா – வலிமை; மார் – மார்பு என்பதன் கடைக்குறை விகாரம்

இனி செய்யுளை 64 அறை கட்டங்களில் அடைத்துப் பார்ப்போம்:

bandhamnew12

இந்தச் செய்யுள் ஒரு அற்புதமான செய்யுள். இதை எட்டு விதமாகப் படிக்க முடியும். எழுத்துக்கள் அப்படி அமைந்து நிற்கின்றன.

1) நான்கு நான்கு வரிகளாக முதல் அறையிலிருந்து வலப்பக்கமாக வாசித்தல்
2) வாசித்தவாறே இறுதியிலிருந்து முதல் வர வாசித்தல்
3) முதல் அறையிலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்
4) வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்
5) முதல் வரியின் இறுதிக் கட்டத்திலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்
6) வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்
7) இறுதி வரியின் முதல் தொடங்கி இடப்பக்கமாக வாசித்தல்
8) அப்படியே இறுதியிலிருந்து முதல் வரை வாசித்து முடித்தல்

saraswati 01
Saraswati Devi

ஆக இப்படி எட்டு விதமாக எந்தப் பக்கம் வாசித்தாலும் பாடல் அமைகிறது. வாயிலாக எதைக் கொண்டு நுழைந்தாலும் செய்யுளைப் படிக்க முடியும்.

இந்த எட்டு வழி வாயில் கவிதை தமிழின் விந்தைகளில் ஒன்று அல்லவா!

மேலும் சில சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் காண்போம்.
– தொடரும்

ஐரோப்பாவில் ஓம் சின்னம்! 4000 ஆண்டுக்கு முந்தையது!

220px-Om.svg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1481; தேதி 13 டிசம்பர், 2014.

ஓம், சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவையும் கொல்லு.
ஒம், சக்தி அருளால் உலகில் ஏறு- ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன்னருளே என்று மனது தேறு — சுப்பிரமணிய பாரதி

ஓம்காரத்துக்கும் எண் மூன்றுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் புரிந்து கொள்ள பேரறிஞராக இருக்க வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த சின்னத்தைப் பார்த்த உடனேயே மூன்று என்பது அதில் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவர். நீங்களே கீழ்கண்ட படங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

முதலில் இந்து மதத்தில் ஓம்காரத்தின் சிறப்பைக் காண்போம். இது ஆன்மீகக் கட்டுரை இல்லை- வெறும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகவே மூன்று தொடர்புள்ள இடங்களை மட்டும் காண்போம்.

இந்தப் பிரபஞ்சத்தில் முதலில் இருந்த நாதம் ஓம்கார நாதம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அதுவே பிரம்மன், அதாவது கடவுள். அதுவே பிரம்மா, விஷ்ணு, சிவனாக பரிணமித்தது. சத்வ, ரஜோ, தாமஸ குணத்தின் சின்னம் அது. அதே நேரத்தில் குணங்களைக் கடந்த நிலையும் அதற்கு உண்டு. அ+உ+ம என்ற மூன்று எழுத்துக்களால் உருவான சின்னம் அது. தமிழ் ஓமாக இருந்தாலும் சம்ஸ்கிருத ஓமாக இருந்தாலும் இந்த அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துகளும் அதில் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இருப்பதையும், மூன்று என்ற எண் அதில் இருப்பதையும் காணலாம்.

0m-in-Various-Scripts

ஓம்காரம் மிகவும் அபூர்வமான மந்திரம் என்பதால் கிருஷ்ணன் பகவத் கீதையில் மூன்று முறை அதன் பெருமைதனை எடுத்துரைக்கிறார். இதற்கு ஏக அக்ஷரம் = ஓரெழுத்து என்று பெயர். பிரபஞ்சம் மஹா பிரளயத்தில் ஒடுங்கும்போது அது ஓம்காரத்தில் கலந்து விடும். சப்தத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்ளும்.

படைத்தது—படைக்கப்பட்டது எல்லாவற்றையும் குறிப்பது ஓம். முக்காலத்தையும் குறிப்பது ஓம்காரம்.

மூன்று என்ற எண்ணில் உள்ள சொற்கள் (த்ரி குணம், த்ரி காலம் முதலியன) சம்ஸ்கிருதத்தில் மட்டும் 203 உள்ளன. தமிழில் உள்ள முத்தமிழ், முக்கனிகள் என்ற சொற்களைச் சேர்த்தால் இன்னும் நூறு சொற்கள் கிடைக்கலாம். மற்ற கலாசாரங்களில் உள்ள மூன்றுகளையும் சேர்த்தால் இன்னும் நூறு கிடைக்கலாம்.

Towriepetrosphere
Towrie petrosphere, Aberdeenshire, 3200 BCE

பகவத் கீதையில் ஓம்காரம்

இனி கண்ணன் சொல்வதைக் காண்போம்:
1.நான் எழுத்துகளில் ஓம் – ஆக இருக்கிறேன், அதாவது ஏகாக்ஷரமாக இருக்கிறேன் (10-25)
2.”ஆகையால் ஓம் என்று உச்சரித்து வேதியர்களின் வேள்வி, தானம், தவம் முதலியன துவங்குகின்றன” (17-24)

வேதத்தின் முதல் சொல் ஓம். இது இல்லாமல் எந்த மந்திரமும் சொல்லப்படமாட்டாது. வெறும் பூஜ்யங்களை ஆயிரம் முறை வரிசையாக எழுதினாலும் அது பூஜ்யமே. ஆனால் அதற்கு முன் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எதை எழுதினாலும் அதன் மதிப்பு அபரிமிதமாகப் பெருகும். அது போலவே ஓம் என்னும் மந்திரத்துடன் மற்ற மந்திரங்களை சேர்க்கையில் அதில் உயிர்ச் சக்தி =பிராண சக்தி பாய்கிறது. இதனால் ஓம்காரத்துக்கு பிரணவம் என்று பெயர்.

(இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியின் பெயர் பிரணவ குமார முகர்ஜி. ஓம்காரம் என்பதைப் பலர் பெயர்களில் சூட்டிக்கொள்வர்)

3.பிரணவத்தை உச்சரித்து, என்னையும் சிந்தித்து உயிர் விடுவோர் மிக உயர்ந்த நிலையை அடைவர் என்று (8—13) மற்றொரு இடத்தில் சொல்லுகிறார்.
Omega_uc_lc.svg.hi
Omega of Greek Alphabet

கிரேக்க நாட்டில் ஓம்காரம்

கிரேக்க லிபியின் கடைசி எழுத்து ஒமெகா அதாவது மெகா + ஓ= பெரிய ஓ. ஓம்காரத்தின் பெருமையைத் தெரிந்து இதை இப்படி வைத்தனரோ என்று எண்ணுகிறோம். இன்னொரு காரணம் அந்த ஊர் பழங்காலப் பானைகளில் மூன்று சுழி சின்னத்தைக் காண முடிகிறது. ஒமேகா என்பதும் கிட்டத்தட்ட ஓம் போலவே எழுதப்படுகிறது.

newgrange.jpg
New Grange Spirals, Ireland

அயர்லாந்து நியூகிரேஞ்ச்

அயர்லாந்து நாட்டில் நியூகிரேஞ்ச் என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கல்லறைகள் இருக்கின்றன. அதன் முன்னால் வைக்கப்பட்டுள பாறையில் மர்மமான மூன்று சுழிச் சின்னங்கள் இருக்கின்றன. “என்னை நினைத்து ஓம்காரத்தைச் சொல்லி உயிர் விடுபவன் பரம கதியை அடைகிறான்” — என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதை உறுதிபடுத்தும் வகையில் இச்சின்னத்தைக் கல்லறையில் காண்கிறோம். இதன் காலம் கி.மு 2000 முதல் 3000 என்று பல கணிப்புகள் உள்ளன.

மால்டா என்ற தீவு நாட்டிலும், அயர்லாந்தில் மேலும் பல இடங்களிலும் பிரான்ஸில் பிரிட்டனி என்னும் இடத்திலும் இதே போல மூன்று சுழிச் சின்னங்கள் உளது. ஆயினும் நியூகிரேஞ்ச் சின்னம் தெள்ளத் தெளிவானது. அதில் ஏழு வளைவுக் கோடுகள் கடிகார முறையிலும் எதிர்திசையிலும் செல்லும்படி வரைந்துள்ளனர். இதன் காரணமாக, இதில் உட்பொருள், மறை பொருள் உண்டு என்றே தொல்பொருட்த் துறை அறிஞர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

இதே போல கெல்டிக் ஆர்ட் எனப்படும் ஐரிஷ் கலாசாரம் பரவிய நாடுகளில் கை போன்ற மூன்ற வளைவுகள் உடைய சின்னம் —ட்ரஸ்கெலியான் எனப்படும்—சின்னம் காணப்படுகிறது.

Jug with Triple Spirals
Ancient Greek Jar

இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் பாஸிட்டிவ் = ஆக்கபூர்வ சக்தி உண்டாக்கும் சின்னங்கள். ஏனெனில் “ஐல் ஆப் மேன்” எனப்படும் தீவில் மூன்று கால்கள் சுற்றும் சின்னம் இருக்கிறது. அதில் எழுதி இருக்கும் வாசகம்:– ‘’இதை எங்கே தூக்கி எறிந்தாலும் இது நிமிர்ந்தே நிற்கும்’’.

இதிலிருந்தே இத்தகைய சின்னத்தை உருவாக்கியவர்களின் மனநிலை நமக்குப் புரிகிறது. எல்லாம் ஓம்காரம் போல ஆக்கபூர்வமான சக்தியைக் குறிப்பதே. மற்றொரு அபூர்வ ஒற்றுமை எல்லாம் மூன்று என்ற எண்ணின் அடிப்படையில் அமைந்த சின்னங்கள்!!

isla of man
Emblem of Isle of Man

ஓம் ஓம் என்று உரைத்தனர் தேவர்- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
நாமும் கதையை முடித்தோம் – இந்த
நாநிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க! – பாஞ்சாலி சபதம், பாரதியார்

triskailion
traiskelion
–சுபம்—