தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com

இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

axis2

இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1406; தேதி 12 நவம்பர், 2014.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். பதினான்கு “ரத்தினங்கள்” கடலில் இருந்து தோன்றின என்பது பாகவதம், மஹாபாரதம் முதலிய புராண, இதிஹாசக் கதைகளில் உள்ளன. கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் கோவிலில் கூட இதைச் சிற்பமாக வடிக்கும் அளவுக்கும், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான சிலை வைக்கும் அளவுக்கும் பிரபலமான கதை இது. தென்கிழக்காசியா முழுதும் இக்கதை பிரசித்தம்.

இதில் ஏதேனும் விஞான உண்மை இருக்கிறதா? இருக்கிறது.
14 ரத்தினங்களில் ஒன்று நிலவு. இதுவும் கடலில் தோன்றியது என்பது விஞ்ஞான உண்மையே. தமிழன் மிகவும் அறிவு வாய்ந்தவன். நிலத்தில் இருந்து – நாம் வாழும் பூமி என்னும் நிலத்தில் இருந்து— அது தோன்றியதால் அதற்கு நில+வு என்று பெயர் வைத்தான் என்பதை முன்னர் நான் எழுதிய நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு என்ற இரண்டு கட்டுரைகளில் எழுதினேன். இதை வடமொழி நூல்கள் கடலில் இருந்து வந்ததாக எழுதின. ஏன்?

நிலவு தோன்றிய இடம் இன்று பசிபிக் சமுத்திரமாக மாறிவிட்டதால் இப்படி எழுதினர். அது என்ன கதை?

பரிணாமக் கொள்கையை நமக்கு அளித்த சார்ல்ஸ் டார்வினின் மகன் ஜார்ஜும் ஒரு விஞ்ஞானி. பரிணாமக் கொள்கை நமது தசாவதாரத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் ஒரு பெரிய கிரஹமோ வால் நட்சத்திரமோ பூமியில் மோதிய போது பூமியில் இருந்த ஒரு பகுதி பிய்த்துக் கொண்டுபோனது. அந்த இடம் நீரால் நிரப்பப்பட்டு பசிபிக் பெருங்கடல் ஆகிவிட்டது. நிலவின் விட்டமும் பசிபிக் மஹா சமுத்திரத்தின் நீள, அகலமும் சரியாகப் பொருந்துகின்றன என்று ஜார்ஜ், 1800 ஆம் ஆண்டுகளில் ஒரு கொள்கை வெளியிட்டார். நிலவைத் தூக்கிவந்து அப்படியே பசிபிக் பெருங்கடலில் வைத்தால் நமக்கு முழு லட்டு கிடைத்த மாதிரி பூமி உருண்டை பூர்த்தியாகும்.

பசிபிக் பெருங்கடலைத் தோற்றுவித்த காரணத்தினால் இப்படி நம்மவர் சொன்னார்கள் என்று கொள்வதில் பசை இருக்கிறது. அது சரி, மற்ற 13 பொருள்களுக்கு விளக்கம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.14 ரத்தினங்கள் வந்ததையும் ஒரே நிகழ்ச்சியாகக் காணாமல், நீண்ட கால மனித குல நாகரீக வளர்ச்சியாக இதைக் காண வேண்டும்.

AB65137

முதலில் 14 ரத்தினங்கள் என்று புராண இதிஹாசம் தரும் பட்டியலில் சில வேறுபாடுகள் இருப்பதை அறிதல் நலம். ஆகையால் நான் கொடுக்கும் பட்டியலில் 14க்கு மேல் இருக்கும். இதுவரை எத்தனையோ பேர் இவைகளுக்கு பலவித விளக்கங்கள் கொடுத்தனர். ஆனால் அவை திருப்தி அளிப்பதாக இல்லை. இவை இந்துக்களின் கடல் கடந்த்த நாகரீக வளர்ச்சியைக் காட்டுகிறது அத்னையும் வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்ததால் இதைக் கடலைக் கடைந்ததாகக் கூறினர் என்றார் ஒருவர்.
இன்னும் ஒருவர் இவைகளுக்கு தத்துவ விளக்கங்களைக் கொடுத்தார். எனது விளக்கம் இதோ:–

14 “ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்

483px-Samudramanthan

மிருகங்களான யானை, குதிரை, பசுமாடு ஆகிய அனைத்தும் வனத்தில் திரிந்தன. மனிதன் அவைகளைப் பிடித்து சாதுவாக்கி பயன்படுத்தத் துவங்கியதையே – பாற்கடலில் இருந்து— வந்ததாகக் கூறுகிறோம் எனக் கொள்ளலாம்.

அது போலவே சங்கு, அப்சரஸ் பெண்கள் முதலியவற்றை இசை, நடனம் முதலிய கலைகளை மனிதன் வளர்த்த கட்டம் எனக் கொள்ளலாம்.

தோடு, கௌஸ்துப மணி என்பன மனித குலம் – பாஷன்- முதலியவற்றை ஏற்ற நிலை.
வெண்கொற்றக் குடை என்பது மனிதர்கள், தங்களுக்குள் அரசன் என்று ஒருவனை நியமித்த கால கட்டம். அதாவது முதல் மனு.

லெட்சுமி என்பவள் உழைப்பின் பலன் – வைஸ்யர்கள் தோன்றி கடல் கடந்து வணிகம் செய்த கட்டம். இதைச் செய்யாதவர்களுக்கு கிடைப்பது ஜ்யேஷ்டா (மூதேவி). இது சோம்பேறித் தனமான கட்டம்.
தன்வந்திரி என்பது ஆயுர்வேதம், சித்தா முதலிய மருத்துவ வளர்ச்சி ஏற்பட்ட கட்டம்.
அழகான பூக்கும் மரங்கள் பாரிஜாதம், கற்பக விருட்சம் ஆகியன மனிதன் மரங்களைப் பயன்படுத்தி தோட்டம், நந்தவனம் ஆகியவற்றை ஏற்பத்திய நிலை ஆகும்.
59802-Bright-Moon

இறுதியாக விஷம் — அமிர்தம் என்ற இரண்டும் உலகில் நடக்கும் எந்த ஒரு பணியிலும் நல்லதும் கெட்டதும் தோன்றும் என்பதைக் காட்டும். அத்தகைய சூழ்நிலையில் சிவ பெருமான் போல தியாக சிந்தனை உடையவரால் – விட்டுக்கொடுக்கும் போக்கு உடையவரால் – மனித குலம் தழைக்கும் என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

இந்த பாற்கடல் கடைந்த வரலாறு – சமுத்ர மதனம் – மனித குலத்துக்கு தரும் செய்தி யாது?

உலகில் எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் ( தேவ + அசுர) இருக்கும். இரு சக்திகளையும் ஒரு சேர அணைத்து பணிகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது நல்லதும் கெட்டதும் (அமிர்தம்+ விஷம்) – இரண்டும் வரும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளினால் மனித முலம் செழிக்கும், தழைக்கும். அசுரர்கள் தேவர்களாக மாற அமிர்தம் ( நற்செயல்கள்) உதவும். ஆயினும் எப்போதுமே உலகில் பாஸிட்டிவ், நெகட்டிவ் – ஆக்கபூர்வ/ அழிவுமிக்க சக்திகள் இருக்கத்தான் செய்யும். எப்படி மின்சாரம் பாய இரண்டும் அவசியமோ அப்படி இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை. கடலைக் கடைவதைப் போல நல்லதைக் கடைந்தெடுப்பது நம் கடமை.

இதில் இரண்டு இரண்டாக பாசிட்டிவ் – நெகட்டிவ் ஜோடிகளைக் காணலாம்: தேவர்/அசுரர், அமிர்தம்/ விஷம், பால்/ மது, லெட்சுமி/மூதேவி, ஆகவே உலகம் இரண்டு வகையான செயல்களால் ஆனது. நம் மனமும் அப்படித்தான்!

மனம் எனும் கடலைக் கடைந்தும் அமிர்தம் எடுக்கும் வழி உண்டு. அது ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகியோர் திவ்யப் பிரபந்த, தேவார, திருவாசகத்தில் காட்டிய வழி!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை நாமும் வழிபட்டு அமிர்தம் எடுப்போம்!!

samudra-mandhan

contact swami_48@yahoo.com

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

pen painting

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1404; தேதி 11 நவம்பர், 2014.

உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!

Seattle_Skyline_2112
That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

gujarati

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)

most-beautiful-cities-101
This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

–சுபம்–

காளிதாசன் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

1.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13-9-2014)
2.நால்வகைப் படைகள்:மஹாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை (13-8-2014)
3.தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (22-7-2014)
4.அரசனின் குண்நலன்கள்: கம்பனும் காளிதாசனும் (21-7-2014)
5.அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் (7-7-2014)
6.ராவணந்-பாண்டியர் சமாதான உடன்படிக்கை (24-6-2014)
7.மாரி, பாரி, வாரி:காளி, கம்பன், கபிலன் (23-6-14)
8.ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே! (18-6-2014)
9.கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் (16-6-2014)
10.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் (8-5-2014)
11.காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழ்லும் உண்டு
12.கடலில் மர்மத் தீ – பகுதி 2
13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் (29-1-2012)

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5.Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle (June 24, 2014)
8.Agastya in Jataka Tales and Kalidasa June 13, 2014.

contact swami_48@yahoo.com

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்!

Lion seems to be symbol of Pallava Dynasty
Pallava symbol lion in Mamallapuram (Narasimha Pallavan has lion in his name)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.

நாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.

ஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.

nahapana newwwww

சிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.

2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.

3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.
தமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்

4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.

(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)

5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.

6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).

7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.

yali

யாளி என்ற விநோத விலங்கு

8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்
வ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.

9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.

iran flag

வேதத்தில் சிங்கக் கதைகள்

10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.

11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.

12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).
சுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ!” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.

13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை!! காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ!— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ!!!

LAKSHMI-NARASIMHA_statue_at_Hampi
Narasimha from Hampi (Picture from Wikipedia)

14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்!

15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.

16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.

17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.

18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.
simhasanam
Lion Throne (Simha Asanam) at Louvre Museum, France;photo by london swaminathan.

19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-

சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.

20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்!!

srilankan coins
–சுபம்–

contact swami_48@yahoo.com

யாழ்ப்பாணம் மயில்வாகனப் பிள்ளை சதுரங்க பந்தம்

jaffna_maptamil

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1389; தேதி நவம்பர் 4, 2014.

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 7

யாழ்ப்பாணம் மயில்வாகனப் பிள்ளை என்னும் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் 1911ஆம் ஆண்டு ஒரு அற்புதமான கவிப் பூங்கொத்தை வெளியிட்டுள்ளார்.

‘நகுலேச்சுர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதிப் பிரசித்த நொத்தாரி மயிலிட்டி க.மயில்வாகனப் பிள்ளை இயற்றின’ என்று இயற்றியவரின் பெயரைக் குறிப்பிட்டு 1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ‘நாவலம்’ அச்சுக்கூடத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவர் 1906ஆம் ஆண்டு Notaryயாக வலிகாமம் மேற்குப் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.1907ஆம் ஆண்டு நகுலேச்சுரரைத் துதி செய்து இந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிடுகிறார். ஏராளமான சித்திரக் கவிகளைக் கொண்டுள்ள இந்த நூலை 2004ஆம் ஆண்டு மறு பதிப்பாக சென்னை மேடவாக்கம் தேன் புத்தக நிலையம் வெளியிட்டுத் இந்த நூல் மறையாமல் காத்து தமிழுக்குப் பெரும் சேவையைப் புரிந்துள்ளது.

நூலில் இடம் பெற்ற சதுரங்க பந்தத்தை மட்டும் இங்கு காண்போம்:
நீதா சதாபயனே நீபலர்க்குஞ் சாலமயற்
றீதார் மனமகற்றச் சீர்நகுலை – யேகலாற்கொன்
னீடார் மிடற்றகலா நீலா கமலபதா
நீதா பலமகலா நீ

இதன் பதவுரையும் நூலில் தரப்பட்டுள்ளது:

கொள் நீடு ஆர் மிடற்று அகலா நீலா – பெருமை நீடுதல் பொருந்திய கண்டத்தினிடத்தே. நீங்காத நஞ்சக் கறையை உடையவரே!

கமலபதா – தாமரை மலர் போன்ற பாதங்களை உடையவரே!
நீதா – நீதியை உடையவரே!

நீ பலர்க்கும் சால மயல் தீது ஆர் மனம் அகற்றச் சீர் நகுலை ஏகலால் – தேவரீர் பலர்க்கும் (அவர்களுடைய) மனத்திற் பொருந்திய மயக்கமாகிய தீமையை மிகவும் நீக்கும் பொருட்டுச் சிறப்பாகிய
நகுலேச்சுரத்தின் கண் எழுந்தருளுதலால்,
பலம் அகலா நீ – பேறு நீங்காத தேவரீரே!
நீ சதா பயனே தா – தேவரீர் எப்பொழுதும் பேற்றினைத் தந்தருள்க.

இந்தப் பாடலை சதுரங்க பந்தமாக அமைக்கும் விதம் பற்றிய குறிப்பைப் பின் வருமாறு கவிஞர் தருகிறார் :

சதுரங்க பந்தம்

“அது நிரைக்கு எவ்வெட்டாக எட்டு நிரை கொண்ட அறுபத்து நான்கு அறைகளிலே, நான்கு பக்கத்து ஈற்று நிரைகளிலும் நான்காம் அடி தோன்ற, எழுத்துகள் பொதுவின்றி அமையப் பாடுவது”
இந்தக் குறிப்பில் நாம் அறிவது : 64 எழுத்துக்கள் 8 x 8 கட்டங்களில் அமைக்கப்படும் போது ஒவ்வொரு பக்கத்திலும் கடைசி அறைகளில் நான்காம் அடியாகிய ‘நீதா பலமகலா நீ’ என்பது தோன்றும் என்பதே!
இனி பாடலை சதுரங்கக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:

new bandham7

இந்தப் பாடலை எப்படிப் படிப்பது?
பாடல் செல்லும் கட்டங்களின் வழியைக் காண்போம்: 1,2,10,9,17,18,19,11,3,4,12,20.28.27.26.25.33,34,35,36,37,29,21,13,5,6,14,22,30,38,46,45,44,43,42,41, 49,50,51,52,53,54,55,47,39,31,23,15,7,8,16,24,32,40,48,56,64

பாடல் முழுதுமாக அமைந்து விட்டது. அத்துடன் நான்கு பக்கங்களிலும் “நீதா பலமகலா நீ” என்ற கடைசி அடியும் அமைந்து விட்டது. (ஈற்றடி மேலே சதுரங்க அறைகளில் மஞ்சள் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஈற்றடி மேலே இடமிருந்து வலமாகவும் கீழே வலமிருந்து இடமாகவும் அமைந்திருக்கிறது. அதே போல வலப்பக்கம் மேலிருந்து கீழாகவும் இடப்பக்கம் கீழிருந்து மேலாகவும் அமைந்துள்ளது.

251px-Sri_Lanka_map
பாடலை அமைத்த கவிஞரின் கவிதைத் திறன் கண்டதால் ஏற்பட்ட வியப்புடன் தமிழ் காட்டும் விந்தை ஒன்றை அறிந்ததால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது!
Written by my brother S Nagarajan for nilachara.com:– swami
*****************

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

chinese drums from incredipedia
Drum in China

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)

எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.

???????????????????????????????
Drums in Japan

பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.

மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:

‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
garo tribals of meghalaya
Drums in Meghalaya, India

வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.

(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)

ஆடம்பரம் – தோன்றிய வரலாறு

வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.

துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.

chenda vadhya
Chenda Mela in Kerala

போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்

வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.
kollam
Drums in Kollam, Kerala

‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!
jaffna
Drum in Jaffna Temple, Sri Lanka

contact swami_48@yahoo.com

மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?

krishna war

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.

மஹாபாரதப் போர் நடந்ததா? பகவத் கீதை உண்மையா? போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா? 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா? இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை? தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா? அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா? இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்?

இதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- குதர்க்க வாதிகளை – மிதிப்போம் – கால்களால் அல்ல!!—சொற்களால் மட்டும் !!!

( பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon? பிரம்மாஸ்திரம் உண்மையா? என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது! வாழ்க நம் வாசகர் வட்டம்)

krishna-bhishma

அக்குபங்சர் உத்திகளைப் பயன்படுத்தி 58 நாட்களுக்கு பீஷ்மர் இருந்தார்.

உண்மையில் நடந்தது

பாரபட்சமின்றி மஹாபாரதத்தைப் படிப்போர், அதில் உள்ள அத்தனையும் உண்மையில் நடந்தது என்பதை அறிந்து, படித்துச் சுவைத்து ரசித்து, மகிழ்வர். அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் எத்தனை பொருள் பொதிந்தது என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவர். அந்த ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

பாரதப் போரின் காலம் என்ன?

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.
தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

Chakra vyuha
ஹலபேடு என்னும் இடத்தில் சக்ர வ்யூஹம் கல்லில் செதுக்கப்படுள்ளது

முஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.

இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.

இனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

mbh-war cambodia
கம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

Ellora - Mahabhatara
எல்லோரா குகைக் கோவிலில் இருந்து

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

arjuna
அர்ஜுனன் அல்லது பகீரதன் தவம், மாமல்லபுரம்

மார்கசீயவாதிகள் இதை ஒரு வர்க்கப் போராட்டம் என வருணிப்பர். ஆகையால் இடது சாரிகள், இதை ஒரு சிறிய உள்ளூர் சண்டையாகக் காண்பர். எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.

halebedu
ஹலபேடு சிற்பங்கள்

சரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.

contact swami_48@yahoo.com

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

harappa2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.

ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.

கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.

Rigvedic_geography

நகரமா? நதியா?

ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.

லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.

இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.
harppa mohanjo

போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.

யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10
Samudra-4787v-280.50

Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.

ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!

ujjain333
Ujjain coin with Yupa post

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

harappa
Harappa buildings
Contact swami_48@yahoo.com

இலங்கைத் தீவு உண்டானது எப்படி? வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

CIS:IM.368-1923

இலங்கைத் தீவு உண்டானது எப்படி? வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1380; தேதி அக்டோபர் 31, 2014.

வாயு பகவான் பற்றிய பல அரிய பெரிய செய்திகளை ரிக் வேதம் முதல் வாயு புராணம் வரை பல சம்ஸ்கிருத நூல்கள் தருகின்றன. இதில் ஒன்று இலங்கைத் தீவு உருவான கதை. சில விஷயங்களைக் காண்போம்:

1.வெள்ளைக் காரர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். இப்போது வாயு பகவானை யாரும் வழிபடுவதில்லை என்று எழுதி இருந்தனர். அது தவறு. பிராமணர்கள் அனுதினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் அக்னி, வாயு, அர்க்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வேதேவா என்று ஏழு வேத கால கடவுளரை வணங்குகின்றனர்.

2.பிராமணர்களோடு மற்றவர்களும்கூட வீடுகளில் திருமணம், கிரகப்பிரவேசம், பூமி பூஜை முதலிய நிகழ்ச்சிகளில் செய்யும் ஹோமங்களிலும், கோவில்களில் செய்யும் யாகம் முதலியவற்றிலும் ஹோம குண்டத்தில் வடமேற்குத் திக்கில் வாயு பகவானை ஸ்தாபித்து வழிபடுவர். அவர் எண்திசைக் காவல் தெய்வங்களில் ஒருவர்.

3.மேலும் குருவாயூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை வாயுலிங்கம் போன்ற எண்ணற்ற கோவில்களில் வாயு பகவான் தொடர்பு உண்டு.

4.வாயு பற்றி, ரிக் வேதம் என்னும் உலகின் மிகப் பழைய நூலில் சில துதிகள் உள்ளன. அதனுடன் புயற்காற்று என்னும் பொருள்படும் ‘’மருத்’’ பற்றிய துதிகளும் உண்டு. இதன் பெயரை ‘’மருத்’’ என்று இந்திய விமானப்படையின் குண்டுவீசி விமானங்களுக்குச் சூட்டியிருப்பது சாலப் பொருத்தமே.

5.மருத் என்னும் சொல்லில் இருந்து வாயு புத்ரனான அனுமனுக்கு ‘’மாருதி’’ என்ற பெயரும் வந்தது. பீமனும் வாயு அம்சத்தில் பிறந்தவர். அதாவது வாயு என்றால் ‘’பலம், புயல் வேகம், அதிரடி’’ என்னும் பொருள் தொனிக்கும். வாயுவின் புதல்வர்களான பீமனையும் அனுமனையும் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

6.வாயுவுக்கு உலகின் முதல் நிகண்டு/அகராதியான அமரகோசம் இருபது வடமொழிப் பெயர்களைத் தருகிறது. ஒவ்வொன்றின் விளக்கமும் நிறைய புதிய செய்திகளைத் தரும்.
அவையாவன:

Vayu

வாயு — வீசுபவன்
மருத் – (புயல்) அவன் இல்லையேல் ம்ருத்யு (மரணம்)
ஸ்வாசன — சுவாசத்துக்கு உதவுபவன்
ஸ்பர்சன – நம்மைத் தொடுவது மூலம் உணர வைப்பவன்
சதாகதி – எப்போதும் சென்றுகொண்டே இருப்பான்
மாதரிஸ்வான் – வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருப்பவன்
ப்ருஷதஸ்வ – மழைத் துளிகளைத் தெளிப்பவன்
கந்தர்ப: — வாசனையை சுமந்து செல்பவன்
கந்தவாஹன: — வாசனையை வாஹனமாக உடையவன்
அநில — நிலையற்றவன்
ஆசுக – வேகமானவன் — (வேகமாகக் கவிதை மழை பொழியும் புலவர்களை ஆசு கவி என்பர்; சிவ பெருமான் வேகமாக திருப்தி அடைந்து எல்லோருக்கும் வரம் கொடுப்பதால் அவனை ஆசு தோஷ் என்பர். அதாவது விரைவில் மகிழ்பவன்/ சந்’தோஷ’ம் அடைபவன். வங்காளத்தில் புகழ்பெற்ற ஒருவர் ஆசு தோஷ் முகர்ஜி )
சமீர – விரைவில் பரவுபவன்
சமீரன — விரைவில் பரவுபவன்
ஜகத்ப்ராண – உலகின் உயிர் மூச்சு; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது
மாருத – உயிர்வாழ உதவுவோன்
நபஸ்வான் – ஆகாயத்தில் சஞ்சரிப்பவன்
வாத — வீசுபவன்
பவன – தூய்மைப் படுத்துவோன்
பவமான — தூய்மைப் படுத்துவோன்
ப்ரபஞ்சன – தனது வேகத்தால் அழிப்பவன்

birla-museum

7.வேதத்தில் மருத்

ரிக் வேதத்தில் ருத்ரனின் புதல்வர்களாகவும், இந்திரனின் உதவியாளர்களாகவும், அக்னியின் நண்பனாகவும், த்வஷ்ட்ரியின் மாப்பிள்ளையாகவும் வாயு போற்றப்படுகிறான். புருஷசூக்த துதுயில் ஆதி புருஷனின் மூக்கில் இருந்து உதித்தவன் என்றும் வருணிக்கப் படுகிறான். அவனை புயல் என வருணிக்கும் வேத சூக்தங்கள் (துதிகள்) அவனுடைய எண்ணிக்கை 27 என்றும் ‘’மூன்று அறுபது’’ என்றும் பகரும். ராமயனத்தில் இந்திரனின் வஜ்ராயுதம் ஒரு சதைப் பிண்டத்தை 49 கூறு போட்டதாகவும் அதுவே மருத்துகள் என்றும் வருகிறது. மா ரோதி (அழாதே, வருந்தாதே) என்பதே ‘’மருத்’’ ஆனதாகவும் வேத இலக்கியம் சொற்சிலம்பம் ஆடும். இவைகளை எல்லாம் மருத்துவ, பூகர்ப்பவியல் குறிப்புகள் எனக் கொண்டால் பொருள் விளங்கும்.

vayu in nilali shobaneswara tem
Vayu at Nilali Shobaneswara Temple

8.இலங்கைத் தீவு உண்டானது எப்படி?

பாகவத புராணம் இலங்கை உருவான வரலாறு பற்றி சுவை மிகு செய்தி தருகிறது. நாரதர் வேண்டுதலுக்கு இணங்க மேரு மலையின் சிகரத்தை வாயு பகவான் தகர்த்து எறிந்ததாகவும் அது கடலில் விழுந்து ஸ்ரீ லங்கா தீவு ஆனதாகவும் கூறப்படுகிறது. இதையும் புவியியல் குறிப்பு – பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு– எனவே கொள்ளல் வேண்டும்.

9.சுமேரிய, கிரேக்க, புத்த, பாரசீக கலாசாரங்களில், மதங்களில் வாயு பகவான் போற்றப்படுகிறார். மர்து என்ற மொசபொடோமியன் புயல் தெய்வம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று கலைக்களஞ்சியங்கள் செப்பும். உண்மையில் இது மருத் என்ற வேத காலக் கடவுளே. கிரேக்கர்கள் ‘’இயோலஸ்’’ என்ற தெய்வமாக வாயுவை வணங்குவர். ராமாயண, மஹாபாரதக் கதைகள் வாயு புத்ரர்களான அனுமன், பீமன் ஆகியோரின் வீரப் ப்ரதாபங்களை எடுத்துரைக்கும்

10.வாயு பகவான் பற்றிய புராண விவரங்கள்:
வாயு புராணம் என்பது சிவனின் மகிமைகளை விதந்தோதும்;
வாயுவின் நிறம் நீலம்; வாகனம் ஒருவகை மான்;
தாய் தீதி;

vayu in NY
Vayu at Brooklyn Museum, New York

11.ஐந்து வகை காற்றுகள் உடலில் உண்டு:
பிராணன் = நெஞ்சில்/ இருதயத்தில் இருந்து வரும் காற்று

அபானன்= அடிப் பகுதியில் இருந்து வரும் காற்று
வியானன் = உடல் முழுதும் வியாபித்து இருப்பவன்
உதானன் = வயிற்றில் இருந்து வரும் காற்று
சமானன் = கழுத்தில் இருந்து வரும் காற்று

கடவுளுக்கு உணவுபடைக்கையில் இந்த ஐந்து வாயுக்களின் பெயரில் ஸ்வாஹா சொல்லி அர்ப்பணிப்பர். இது தவிர மேலும் ஐந்து வாயுக்களையும் சேர்த்து தச வாயு என்றும் அழைப்பர்.

aeolus2-1027
Aeolus, Greek God of Wind

12.ஏழுவகைக் காற்று
மாஹாபாரத சாந்தி பர்வத்தில் ஏழுவகைக் காற்று பற்றிய விஜ்ஞானத் தகவல் கிடைக்கிறது:

ஆவாஹன் = உயிர் வாயு / ஆக்சிஜன்
ப்ரவாஹன் = மழை பொழியும் மேகம் கொணர்வோன்
உத்வாஹன் = மேகத்தை மழையாக மாற்றும் குளிர்க் காற்று

சம்வாஹன் = பாலைவன வறண்ட காற்று

விவாஹன் = வானத்தில் உள்ள நீரைத் தாங்குபவன் (இப்போது நாஸா போன்ற விண்வெளி ஆய்வு அமைப்புகள் வானத்து நீர் பற்றிப் பேசி வருகின்றன; அறிவியல் வளரும் போது இச் சொல்லுக்குப் புதுப் பொருள் காணலாம்)

பரிவாஹன் = சூரிய, சந்திரர்களைத் தாங்கும் காற்று — (மின் காந்த வீச்சு, அகச் சிவப்பு , புற ஊதா கதிர்களாக இருக்கலாம்; யாம் அறியோம் பராபரமே!!!)
பரவாஹன் = எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது; தஙகு தடையின்றி வழங்குவது
IAF MARUT
Marut, IAF Bomber

13.மேற்கண்ட மஹாபாரத பகுப்பு, உடலில் உள்ள தச வாயு பகுப்பு, காற்றுக்கான பல்வேறு பெயர்கள் ஆகியன உணர்த்தும் அபூர்வ விஷயம் என்ன தெரியுமா?

1.சம்ஸ்கிருத மொழி உலகின் வளமிக்க மொழிகளில் ஒன்று; எதை எடுத்தாலும் பல நூறு ‘’டெக்னிக்கல்’’ சொற்கள் கிடைக்கும்

2.காற்றையும் மேகத்தையும், மூச்சையும் கூடப் பிரிக்கவேண்டும் என்ற விஞ்ஞான அணுகு முறை!!! உலகில் மற்ற மொழியினர் சிந்திக்காத பல விஷயங்களைச் சிந்தித்து அதைச் செயல் முறையில் கொண்டு வந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் வைத்துள்ள அற்புதமே அற்புதம். நான் தினமும் உணவு சாப்பிடுகையில் ‘’பிராணய ஸ்வாஹா’’ முதல் ஐந்து வாயுக்களின் பெயர் சொல்லி உள்ளே இருக்கும் இறைவனுக்கு நெய் கலந்த சோறு கொடுத்து வணங்குகிறேன் ஆகவே இன்றும் அனைத்தும் நடைமுறையில் உள்ளன.

contact swami_48@yahoo.com

கல்வி பற்றிய 30 தமிழ் பாடல் மேற்கோள்கள்

classroom1

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 நவம்பர் மாத காலண்டர்

Post No. 1378; Date: 30 அக்டோபர் 2014
Prepared by London swaminathan (copyright)

முக்கிய நாட்கள்: நவம்பர் 4 முஹர்ரம்; அமாவாசை:22;
சுபமுஹூர்த்த நாள்:– 2, 9, 12, 13, 21; பௌர்ணமி – 6; ஏகாதசி- 3, 18;

நவம்பர் 1 சனிக் கிழமை
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் – கொன்றை வேந்தன்

நவம்பர் 2 ஞாயிற்றுக் கிழமை
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி – கொன்றை வேந்தன்

நவம்பர் 3 திங்கட் கிழமை
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் — உலக நீதி

நவம்பர் 4 செவ்வாய்க் கிழமை
இளமையிற் கல்; ஓதுவது ஒழியேல்; வித்தை விரும்பு – ஆத்திச்சூடி

நவம்பர் 5 புதன் கிழமை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை

Class_Room2

நவம்பர் 6 வியாழக் கிழமை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்

நவம்பர் 7 வெள்ளிக் கிழமை
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – புறநானூறு

நவம்பர் 8 சனிக் கிழமை
தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு – நான்மணிக் கடிகை

நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை
கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் – நான் மணிக்கடிகை

நவம்பர் 10 திங்கட் கிழமை
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் – வெற்றி வேற்கை

vedapatasala
Picture of Rajaveda patasama

நவம்பர் 11 செவ்வாய்க் கிழமை

கல்லாத மூத்தானைக் கைவிட்டுக் கற்றவன் இளமை பாராட்டும் உலகு – நான் மணிக்கடிகை

நவம்பர் 12 புதன் கிழமை
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கல்வியழகே அழகு – நாலடியார்

நவம்பர் 13 வியாழக் கிழமை
பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே – இனியவை நாற்பது

நவம்பர் 14 வெள்ளிக் கிழமை
கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை – திரிகடுகம்

நவம்பர் 15 சனிக் கிழமை
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து — திருக்குறள்

balavedapatasala
Picture of Bala Veda Patasala

நவம்பர் 16 ஞாயிற்றுக் கிழமை
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்

நவம்பர் 17 திங்கட் கிழமை
எண் அவன் காண் எழுத்து அவன் காண்
இன்பக் கேள்வி இசை அவன் காண் – அப்பர் தேவாரம்

நவம்பர் 18 செவ்வாய்க் கிழமை
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் – பாரதி பாடல்

நவம்பர் 19 புதன் கிழமை
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாதவருள்
அறிவுடையோனால் அரசுஞ் செல்லும் –புறநானூறு

நவம்பர் 20 வியாழக் கிழமை
தேடு கல்வியிலாதொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் எம் அன்னை கேண்மைகொள்ள வழி இவை கண்டீர்–பாரதியார்

shantiniketan

நவம்பர் 21 வெள்ளிக் கிழமை
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) –

நவம்பர் 22 சனிக் கிழமை
கல்வி கரையில, கற்பவர் நாள் சில – நாலடியார்

நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே – புறநானூறு

நவம்பர் 24 திங்கட் கிழமை
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமற் பாகம் படும் — பழமொழி

நவம்பர் 25 செவ்வாய்க் கிழமை
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – திருக்குறள்

shantiniketan2
Picture of Shantiniketan, West Bengal

நவம்பர் 26 புதன் கிழமை
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – வாக்குண்டாம்

நவம்பர் 27 வியாழக் கிழமை
கேள்வி முயல்; நூற் பல கல்; எண் எழுத்து இகழேல் – ஆத்திச்சூடி

நவம்பர் 28 வெள்ளிக் கிழமை
கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார்

நவம்பர் 29 சனிக் கிழமை
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின்காழ் இனியதில் — இனியவை நாற்பது

நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –– நீதிநெறிவிளக்கம்

-Study-Under-Bridge
Picture of school under Delhi bridge

In each month’s calendar you can read beautiful Tamil quotations!
Contact swami_48@yahoo.com

school_under_bridge_02