பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–

 

 

பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள (Post No 2719)

jatari to muslim

WRITTEN BY S NAGARAJAN

Date: 13 April 2016

 

Post No. 2719

 

Time uploaded in London :–  8-29  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

ச.நாகராஜன்

ganesh muslim

எப்போதுமே மதக் கலவரம் என்ற செய்திகளைக் கேட்டு மனம் நொந்து போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியைப் படிக்கும் போது மனம் மிக மகிழும்.

 

அனைவரின் மனம் மகிழும் ஒரு செய்தி இதோ: –

 

 10th April 2016: Today in Cuddapah, Muslims come to Sri Lakshmi venkateswara perumal Temple and take Ugadi pachadi as prasadam. They treat perumal as son-in-law (bibi nachiar’s husband).

 

This Temple is the first door of bhooloka vaikuntam Tirumala

 

கடப்பா:

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.

 

 

இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினமான நேற்று, பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.

 

பர்தா அணிந்தபடி பல முஸ்லிம் பெண்கள் வந்திருந்தனர். கணிசமான முஸ்லிம் ஆண்களும் வந்திருந்தனர். பக்தர்கள் வரிசையில் நான்கில் ஒரு பங்கினர் முஸ்லிம்கள்தான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

முஸ்லிம் பெண்கள் கைகளில் பூக்கள், வெல்லம், கரும்பு துண்டுகள், மஞ்சள் மற்றும் வேப்பம்பழம் போன்றவற்றை எடுத்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் முஸ்லிம் பெண்களும், ஆண்களும், சுவாமி தரிசனத்திற்காக காத்து நின்றிருந்ததை பார்க்க முடிந்தது.

muslim worship in AP

 

 

ஆந்திராவின் ராயலசீமா மண்டலத்தில் இருந்து அதிகப்படியான சிறுபான்மை மதத்தினர் இக்கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

லட்சுமி நாராயணா என்ற சமூக ஆர்வலர் இதுபற்றி கூறுகையில், ‘சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நாட்டில் எதிரொலிக்கும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமய நல்லிணக்க செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இதே கடப்பா நகரிலுள்ள ‘பெத்த’ (பெரிய) தர்க்காவுக்கு, முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பெரும்பான்மையாக சென்று வழிபாடு செய்கிறார்கள்’ என்றார்.

கடப்பா லட்சுமி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்வது வழக்கமாம். முஸ்லிம்கள் அதிக அளவில் கடப்பா கோயிலுக்கு வர நீண்ட நெடிய வரலாற்று காரணங்கள் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

 

muslim in temple 2

subham

*******

 

கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711)

modi humility

Compiled by london swaminathan

Date: 10 April, 2016

 

Post No. 2711

 

Time uploaded in London :–  8-47

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை

dinamalar humility

ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.

 

அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.

 

Xxxx

 

Park Ave Lady_profile

முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்

கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்

கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!

கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)

 

அடக்கமில்லாப் பெண்!

ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.

உடனே ஜான்சன் சொன்னார்:

“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.

 

–சுபம்–

 

“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?” (Post No 2708)

fire

Compiled by london swaminathan

Date: 9 April, 2016

 

Post No. 2708

 

Time uploaded in London :–  10-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

அடக்கம், பணிவு பற்றி மேலும் சில துணுக்குகளைப் பார்ப்போம்:-

court

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

பிரான்சு நாட்டில் லியோனில் ஒரு வழக்கு நடந்தது. அதைப் பார்க்க நீதி மன்றத்துக்கு வழக்கத்திற்கு மாறாக, நிறைய பெண்கள் வந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் வரும் வாதங்கள் பெண்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது நீதிபதிக்குத் தெரியும். ஆகவே அவர் சொன்னார்: “இன்றைய வழக்கின் போக்கு, தன்மை தெரியாமல் இன்று அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கண்ணியமிக்கப் பெண்கள் அனைவரும் கோர்ட்டின் அறையிலிருந்து வெளியேறுமாரு கேட்டுக் கொள்கிறேன்”.

இப்படிச் சொன்ன பிறகும் ஒரு பெண் கூட வெளியேறவில்லை. நீதிபதிக்கு ஒரே கோபம். மீண்டும் சொன்னார்:

“காவலரே! இங்கு வருக! கண்ணியமான பெண்கள் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். இதோ இங்கே இருக்கிறதே, இதுகளை வெளியே தள்ளுக” என்றார்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் ‘கல்தா’ கிடைத்தது!

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’, ‘அடியாத மாடு படியாது’ என்பன தமிழ்ப் பழமொழிகள். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

Xxx

 

முதல் வரிசையில் எந்த ‘சீட்’?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

 

சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.

 

“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.” ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

ஆய கலைகள் 64 எவை? முழு விளக்கம், விவரங்கள் (Post No.2696)-1

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 5 April, 2016

 

Post No. 2696

 

Time uploaded in London :–  14-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

 

 

 

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்.

 

அறுபத்து நான்கு கலைகள் எவை, என்ன என்பது பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இது வரை யாரும் முழு விவரங்களை வெளியிடவில்லை; வெறும் பட்டியலை மட்டுமே வெளியிட்டனர். எனது பிளாக்கிலும் ஐந்து ஆண்டுகளாக பல கட்டுரைகள் உள்ளன. இது தவிர பெர்fயூம் கட்டுரை, இந்திரஜால் என்னும் மாஜிக் பற்றிய கட்டுரை, அவதானம் பற்றிய கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் முதல் தடவையாக 64 கலைகள் குறித்தும் 1918 ஆம் ஆண்டில் பி,வி,ஜகதீச ஐயர் எழுதிய நூலிலிருந்து முழு விவரங்களும் கிடைத்துள்ளன.  உ.வே.சாமிநாத அய்யர் எழுதிய கலைகள் என்ற கட்டுரையில் பல தமிழ் நூல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மணிமேகலையில் ஆடலில் வல்ல பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய கலைகள் பற்றி வந்துள்ள பாடலை அவர் தந்துள்ளார். இதோ ஜகதீச அய்யர் நூல் தரும் தகவல்கள்; இது வேறு எந்த என்சைக்ளோபீடியாவிலும் இல்லாதவை:–

 

64 art-1

64 art-2

64 art-3

64 art-4

 

64 art-5

64-art-6

 

64 art-7

 

64 art-8

64 art-9

 

64 art-10

64 art-11

64 art-12

தொடரும்—–

 

 

 

 

 

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்! (Post No. 2683)

alauddin 3a

Compiled  by london swaminathan

Date: 1 April, 2016

 

Post No. 2683

 

Time uploaded in London :–  11-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடக் கண்டோம். சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில்  பாய்ந்ததையும் எழுதிவிட்டேன். ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் படிக்கையில் உடம்பில் புல்லரிக்கும்.

 

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

 

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

 

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

 

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

 

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

 

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

 

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!

-சுபம்-

எனது முந்தைய கட்டுரை:

1.சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

 

-subham–

பெண்களை எங்கே, எங்கே பார்த்தால் குற்றமாகாது? (Post No 2671)

996_Brides_Kashmir

Compiled and Translated by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2671

 

Time uploaded in London :– 7-20 AM

 

(Pictures are taken from various sources. Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 2

bengali bride

22.நார்யோ ஹரந்தி ஹ்ருதயம் ப்ரசபம்

நராணாம் – ரத்ன சமுச்ச

ஆண்களின் இருதயத்தை எளிதில் கவர்கிறார்கள் பெண்கள்.

Xxx

23.நிர்தர்பா நாசதீ பவேத் – கதா சரித் சாகரம்

துடுக்கற்ற பணிப்பெண்களே நல்லவர்கள்.

Xxx

  1. நிர்தோஷ த்ருஸ்யா ஹி பவந்தி நார்யோ யக்ஞே விவாஹே வ்யசனே வனே ச – ப்ரதிமாநாடக 1-29

யாகத்திலே, விவாஹத்திலே,துக்கத்திலே, ஆரண்யத்திலே –பெண்கள் பார்க்கப்பட்டால் தவறில்லை. (வேள்வி, திருமணம், காடு, துக்கம் நிகழ்ந்த இடத்தில் பெண்களைப் பார்க்கலாம்; பேசலாம்)

Xxx

25.நிசர்க நிபுணா: ஸ்த்ரிய: – மாளவிகாக்னிமித்ரம்

இயற்கையிலேயே, பெண்கள் நிபுணர்கள்(திறமைசாலிகள்)

Xxx

26.நீதி மாத்ரம் அஹம் மன்யே ஸ்த்ரீணாம் ரக்ஷானியந்த்ரணம் – கதா சரித் சாகரம்

பெண்களைப் பாதுகாப்பதற்கானக் கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றே நான் நினைக்கிறேன்.

Xxx

27.பரஸ்த்ரியம் ந அபிகாங்க்ஷேத – சதோபதேச ப்ரபந்த

பிறர் மனைவியை விரும்பாதே.

Xxx

 

IMG_4358

28.ப்ரத்யய: ஸ்த்ரீஷு முஷ்ணாதி விமர்சம் விதுஷாமபி – கதா சரித் சாகரம்

கற்றவர்களும் கூட பெண்களை நம்பி முட்டாள் ஆகிவிடுவர்.

Xxx

29.ப்ரத்யுத் உத்பன்னம் மதி ஸ்ரேணம்-சாகுந்தலம்

பெண்கள் புத்திசாலிகள்

 

Xxx

30.ப்ரிய: கோ நாம யோஷிதாம் –சாந்திசதக

யார்தான் இப்பெண்ணுக்கு விருப்பமானவர்?

Xxx

31.பத்த மூலஸ்ய மூலம் ஹி மஹத்வைரதரோ: ஸ்த்ரிய: – சிசுபாலவதம்

பகைமை என்னும் மரத்தின் ஆணிவேர் ( மூல காரணம்) பெண்கள்தான்.

Xxx

32.பீஜம் யுத்தஸ்ய யோஷித: – ப்ருஹத் கதா கோச 69-16

போர்களின் வித்து/விதை பெண்களே

Xxx

33.பவதி விக்லவதா குணோ அங்கனானாம் – சிசுபாலவதம்

பெண்களுடைய குணம் பயப்படுவதே.

Xxx

34.மத்தா நதீ ச நாரீ ச நியந்தும் கேன பார்யதே – கதா சரித் சாகரம்

வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியையும், பெண்களையும் யார் கட்டுப்படுத்த முடியும்?

Xxx

35.மானனீயா ஹி யோஷித: – பாரத மஞ்சரி

பெண்களை மதிக்க வேண்டும்

Xxx

36.முக்த: கலு  அபலாஜன: –

விரைவில் பெண்கள் மிரண்டு/ மருண்டுவிடுவர்

Xxx

IMG_4527

37.முக்தமானசம் ரமந்தே நஹி யோஷித:

முட்டாளுடன் பழகுவதை பெண்கள் விரும்புவதில்லை.

தொடரும்…………………………………….

(ஏற்கனவே நான் எழுதிய 25-க்கும் மேலான பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள், பழமொழித் தொகுப்புகள், இந்த பிளாக்கிலுள்ளன.)

 

 

பெண்களுக்கும் மலர் மாலைக்கும் என்ன ஒற்றுமை? (Post No. 2665)

IMG_4530

Translated by london swaminathan

 

Date: 26 March 2016

 

Post No. 2665

 

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 1

மான் கூட்டத்தில் காணாமற்போன பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாதென்கிறார் வால்மீகி! என்ன அழகான கற்பனை! தொடர்ந்து படியுங்கள்.

 

1.அதீரம் லலநா மன: – ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் சலனமான மனத்தைக் கொண்டவர்கள்

 

Xxx

2.அநாதா க்ருச்ரபதிதா விதேசே ஸ்த்ரீ கரோதி கிம் – கதா சரித் சாகரம்

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட, உதவியற்ற, துயரமுடைய ஒரு பெண் என்ன செய்வாள்?

Xxx

3.அப்ரதிஷ்டம் மன: ஸ்த்ரீணாம் — கதா சரித் சாகரம்

பெண்கள் மனது நிலையற்றது.

Xxx

4.அவத்யா:  சர்வபூதானாம் ப்ரமதா: – வால்மீகி ராமாயணம்

உயிர்வாழும் எல்லா இனங்களிலும் மென்மையான பெண்களைக் கொல்லக்கூடாது

Xxx

5.அசஹ்யம் ஹி புரந்த்ரீணாம் ப்ரேம்ணோகாதஸ்ய கண்டனம் – கதா சரித் சாகரம்

ஆழ்ந்த காதலில் சிக்கிய பெண்கள், பொறுக்கமுடியாத துன்பம் அடைகின்றனர்.

IMG_4880 (2)

Xxx

6.அஹோ ஸ்த்ரீ சரிதம் சித்ரம் – கதா சரித் சாகரம்

பெண்களின் செயல்கள் மிக விநோதமானவை

Xxx

7.ஆனுகூல்ய கதயா ஹி நராணாம் ஆக்ஷிபந்தி ஹ்ருதயானி தருண்ய: -சிசுபாலவதம்

அனுகூலமாக நடந்து, மனிதர்களின் இதயங்களை ஆட்கொள்வர் பெண்கள்.

 

Xxx

8.ஆசய: ஸ்த்ரீணாம் துர்விக்ஞேய: சுரைரபி – ப்ருஹத் கதா மஞ்சரி

தேவர்களுக்கும் புரியாதது பெண்களின் எண்ணம்!

Xxx

9.ஷ்டா ஹி ஸ்த்ரீணாம் அன்யா அசஹிஷ்ணுதா – கதா சரித் சாகரம்

பெண்கள் மற்ற பெண்களை சகிக்கமுடியாதது வருந்தக்கூடிய விஷயம்.

Xxx

10.குதூஹலவானபி நிச்சர்கசாலீன: ஸ்த்ரீஜன:

-மாளவிகாக்னிமித்ர

ஆடிப்பாடி ஓடினாலும் பெண்கள், இயற்கையில் தைரியமற்றவர்கள்.

Xxx

 

IMG_4885 (2)

11.கோ ஹி வித்தம்  ரஹஸ்யம் வா ஸ்த்ரீஷு சக்னோதி கூஹிதும் – கதா சரித் சாகரம்

ஒரு பெண்ணிடமிருந்து ரகசியத்தையோ, செல்வத்தையோ யாரால் காப்பாற்ற முடியும்?

 

Xxx

12.க்ருஹாந்தா ப்ரபுதா ஸ்த்ரிய:

வீட்டிற்குள்தான் பெண்களின் ஆட்டபாட்டமெல்லாம்.

 

Xxx

13.தூரஸ்தா ஏவ சோபந்தே புஷ்ப மாலா இவ அங்கனா: – ராமாயண மஞ்சரி

பெண்களின் வசீகரம்/கவர்ச்சியானது,மலர் மாலைகளைப் போல தூரத்தில் இருக்கும்போது மட்டுமே.

Xxx

14.திக் ஜன்ம ந்ருபயோஷிதாம் – விக்ரமசரிதா

ராணிகளின் பரிதாப வாழ்க்கை முடியட்டும்

Xxx

15.ந பரஸ்பர்சமாத்ரம் ஹி ஸ்தீணாம் ஆபதி தூஷணம் – கதா சரித் சாகரம்

ஆபத்தில் சிக்கிய பெண்ணைத் தொட்டால் தப்பில்லை; அதை யாரும் கண்டிப்பதில்லை.

 

Xxxx

 

16.ந புன: சர்வதா சர்வா துர்வ்ருத்தா ஏவ யோஷித: – கதா சரித் சாகரம்

எல்லா பெண்களும் எப்போதும் கெட்டவர்கள் இல்லை.

Xxx

17.நவ அங்கனானாம்  நவ ஏவ பந்தா:

–சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

இளம் பெண்கள், புதுப்புது பாதைகளை (பாஷன்) நாடுவர்.

 

Xxx

18.ந சக்யம் ப்ரமதா நஷ்டா ம்ருகீஷு பரிமார்கிதும் -– வால்மீகி ராமாயணம்

மான்களிடையே காணாமற்போன பெண்ணைக் (மான்விழியாளை) கண்டுபிடிப்பது அரிது!

Xxx

19.ந ஹி நார்யோம் வினேஷ்ர்யயா —சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

பொறாமையில்லாத பெண்கள் இல்லை.

IMG_4412

Xxx

20.நஹி அதிசம்மானயேத் ப்ரமதாம் – சதோபதேசப்ரபந்த

இளம் பெண்ணை அதிகம் புகழாதே.

 

Xxx

21.நாரீணாம் பரமோ தர்மோ நிஜசீலஸ்ய பாலனம் –விக்ரம சரிதம்

ஒரு பெண்ணின் தலையாய கடமை, கற்பைப் பாதுகாப்பதே.(தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்)

தொடரும்……………………………

Source: Suktisudha- The Elixir of Adages, Chinmaya International Foundation, Ernakulam, Kerala

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்? லண்டன் பத்திரிக்கை கேள்வி (Post No 2644)

India-stamp5722mother-teressa

Compiled by london swaminathan

 

Date: 18 March 2016

 

Post No. 2644

 

Time uploaded in London :–  18-15

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

India-MotherTeresa

அன்னை  தெரசாவை ஒரு செயின்ட் , அதாவது புனிதர் என்று செப்டம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப் போவதாக தற்போதைய போப்பாண்டவர் ப்ரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்றைய லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. வழக்கமாக பத்திரிகைக்கு எழுதும் டான் ஜோன்ஸ் என்பவர்தான் இதையும் எழுதியுள்ளார்.

 

இந்திய அரசு இதுவரை அன்னை தெரசாவுக்கு மூன்று தபால்தலைகளை வெளியிட்டது. காங்கிரஸ் அரசு இப்படிச் செய்தபோது, மதமாற்றம் செய்யும் தெரசாவுக்கு எதற்கு இவ்வளவு தபால்தலைகள் என்று இந்து இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. ஆனால் டான் ஜோன்ஸ் இந்த மாதிரி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஒருவரை செயிண்ட் என்று அறிவிக்க வேண்டுமானால் அவர் செய்த இரண்டு அற்புதங்களாவது இருக்க வேண்டும் என்பது ரோமன் கதோலிக்க கிறிஸ்தவ மத மரபு. அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் ஹோமியோபதி வைத்தியமே யன்றி அற்புதங்கள் அல்ல.அவை சரியான நொண்டிச் சாக்கு என்று அவர் எழுதியுள்ளார்.

 

இதோ அவரது வாசகங்கள்:

“செப்டம்பர் 4ஆம் தேதி அன்னை தெரஸா, புனிதர் ஆக்கப்படுவார் என்று வாடிகன் அறிவித்துள்ளது. இது கதோலிக்க அன்பர்களுக்கு ஆனந்தமளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் “உப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை” என்ற கதையாக உள்ளன.

 

அந்தக் காலத்தில் புனிதர்கள், வாக்கிங் ஸ்டிக் எனப்படும் ஊன்றுதடியை மரமாக்கிக் காட்டினார்கள் (செயிண்ட் பாட்ரிக்).

பிராணிகளை மனிதர்கள் பேசுவது போல பேசவைத்தார்கள் (புனித எட்மண்ட்).

ஏசுபிரானுக்கு ஏற்பட்டது போல உடலில் காயங்களைத் தோன்றவைத்து அதிலிருந்து ரத்தம் வரச் செய்தார்கள் (அசிசி நகர புனித பிரான்ஸிஸ் மற்றும் பலர்).

வானத்தில் பறந்து காட்டினார்கள் (குபெர்டினோவின் புனித ஜோசப்).

எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவித்தார்கள் (புனித மலாசி).

 

துடைப்பதற்கு துணியில்லாமலேயே ஈரமான பொருள்களை காயவைத்து அற்புதம் செய்தார்கள் ( ஸ்காட்லாந்தின் புனித மார்கரெட்).

இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

மதர் தெரசாவின் பெயரில் இரண்டே அற்புதங்கள் உள்ளன. அவர் யாரோ ஒருவரின் அடிவயிற்றில் தோன்றிய நோயைப் போக்கினாராம்; இன்னொருவர்க்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை குணப்படுத்தினாராம். மரியாதையுடந்தான் சொல்லுகிறேன் (கிண்டலோ பகடியோ அல்ல); இது அற்புதமல்ல; ஹோமியோபதி சிகிச்சைதான்”

 

இவ்வாறு லண்டன் பத்திரிக்கையில் டான் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.

rs 20 theresa

10,000 புனிதர்கள்!

ரோமன் கத்தோலிக்க மதத்தில் குறைந்தது 10,000 புனிதர்கள் இருக்கிறார்கள். முன்னர் 40 அல்லது 70 பேரை ஒரே நாளில் புனிதர் ஆக்கியபோதே பலரின் புருவங்கள் உயர்ந்தன. தற்போதைய போப், 800க்கும் மேலானோரை ஒரே நாளில் புனிதராக்கியவுடன் பலரின் புருவங்களும் நெளிந்தன. இவர் என்ன புனிதத்தன்மையே இல்லாமல், கிலோ கணக்கில், லிட்டர் கணக்கில் புனிதர்களை அளப்பார் போலிருக்கிறதே என்று பலரும் அங்கலாய்த்தார்கள். ஆனால் ஒரே இதாலிய நகரத்தைச் சேர்ந்த, அந்த 800 பேரும் மதம்மாற மறுத்தமைக்காக முஸ்லீம்களால் சிரச் சேதம் செய்யப்பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் புனிதராக்கப்பட்டனர் என்று வாடிகன் விளக்கமளித்தது.

 

-சுபம்-